நண்பனுக்கு ஓர் கடிதம்

நவம்பர் 7, 2009 by kalagam

நண்பனுக்கு ஓர் கடிதம்

nov_2 copy

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

நவம்பர் 3, 2009 by kalagam

தீவிரவாதத்தை வேரறுப்போம்
இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.  இப்படிப்பட்ட கருத்துக்களை அள்ளிவீசுபவர்கள் மத்திய அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ அல்ல, இந்த இந்திய திருநாட்டை  நக்சல்பாரி அபாயத்திலிருந்து காப்பாற்ற
முடிவெடுத்து களத்திலும் இறங்கிவிட்டார்கள் நம்ம ப்யூர் கொம்யூனிஸ்டுகளான சிபீஎம் கட்சியினர்.

நாட்டின் முக்கிய சிவப்பு அபாயமான நக்சல்பாரிகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் சீதாராம் எச்சுஊறி. “நாங்கள் தான் இடதுசாரிகள் நாங்கள் மட்டும்தான்,   மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்கி வெறியாட்டம் போடுகிறனர் துணைராணுவப்படையினர் அவர்களுக்கு மொத்தமாய் ஆதரவளிக்கிறார் புத்ததேவ்.அவர்கள் அழிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு என்கிறார்.

“இன்று சட்டீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகளும், பீகாரில் 2 மாவோயிஸ்டுகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” இந்த, இப்படிப்பட்ட செய்திகளை ஊடகங்கள் நாள்தோறும் வெளியிடுகின்றன புழங்காகிதமடைகின்றன.

தொலைக்காட்சி ஊடகங்களோ இன்று கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையை அறிவிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, செய்தி வாசிக்கும் அந்த தொகுப்பாளரைப்பாருங்கள் அப்படி ஒரு பெருமிதம் அவர் முகத்தில். விரைவில் இந்தியா வல்லரசாகிவிடுமாம் அதற்கு தடையாயிருக்கும் மாவோயிஸ்டு/ நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழித்துக்கட்டப்படவேண்டியதின் அவசியத்தை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதிகிழிக்கின்றன.

கடந்த செவ்வாய் அன்று ரயிலினை மறித்த பழங்குடியினமக்களை தீவிரவாதிகளாக அறிவிக்கிறது அரசு. ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள் வண்டியை மறித்து ஓட்டுனர்களை கடத்தியதாகவும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்து தாக்கியவுடன் ரயிலை விட்டு விட்டு ஓடியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டதாக கூறும் நபர் ஒருவர் ஆங்கிலத்தொலைக்காட்சியில் யாரும் எங்களைத்தாக்கவில்லை என்கிறார்.

அரசபயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு குழுவினை மக்கள் உருவாக்கினார்கள் அதன் தலைவர் மகோட்டவை விடுதலை செய்யக்கோரி மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதிகளின் போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது.

மாவோயிஸ்டுகளை/மாவோயிஸ்ட் அமைப்பையும்/ நக்சல்பாரி அமைப்புக்களையும் பத்திரிக்கைகள் இப்போதெல்லாம் குறிப்பிடும் போது தீவிரவாதிகள்/தீவிரவாத அமைப்பான’ என்றே குறிக்கின்றன. இந்திய அரசு மாவோயிஸ்டுகளை தீவிரவாதப்பட்டியலில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றபோதும் திட்டமிட்டே இந்திய அரசால் மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் தீவிரவாதிகளாக்கப்பட்டுவிட்டனர். மக்களிடம் ஏதோ கொள்ளையர்களைப்போல மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த மாதம் மத்திய அரசு நடத்திய சிறப்புக்கூட்டத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். அப்போதிருந்து அடிக்கடி உள்துறை அமைச்சர் சிதம்பரமாகட்டும் மத்திய அரசாகட்டும் மாவோயிஸ்டுகளைப்பற்றிய பொய் புரளிகளை பரப்பிவருகின்றனர், சென்ற மாதம் மாவோயிஸ்டுகள் ஒரு கிராமத்தில் புகுந்து மக்களை சுட்டுக்கொன்றதாக அரசு செய்தி வெளியிட அதை அப்படியே எல்லா செய்தி ஊடகங்களும் தனக்கேற்றவாறு பில்டப் செய்து வெளியிட்டன.

சல்வார்ஜுடூம் போன்ற அரசபயங்கரவாதப்படைகளும், மத்தியப்படைகளும், போலீசும் மக்களை கொன்று வெறியாட்டம் போட்டு மக்களை துவம்சம் செய்கின்றன. மக்களை கொன்று விட்டு மாவோயிஸ்டுகள் மீது பழியினை தூவுகின்றன, அச்செய்தி அப்படியே இந்தியா ஏன் உலகம் முழுக்க பரப்பப்படுகின்றது. மாவோயிஸ்டுகளுக்கு பல மனித உரிமை அமைப்புக்கள் உதவுவதாக / ஆதரவளிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களின் நோக்கம் என்னவெனில் தன்னுடைய அரச பயங்கரவாதத்துக்கு தடையாக உள்ள யாரும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.

மேற்குவங்கத்தில் டாடாவுக்கு நிலம் கொடுத்த விவகாரத்திலும் சரி மற்ற பிரச்சினைகள் மூலமாகவும் நந்திகிராம், சிங்கூர்,  மிதுனாப்பூர் என மக்கள் சீபீஎம்க்கு செருப்படி கொடுத்து அரசை புறக்கணித்தார்கள். சீபீஎம் நாறிப்போனது. தனது அணிகளிடம் கூட நிலையை விளக்குவதற்கு திணறி வேறு வழியின்றி பயங்கரவாதம் , தீவிரவாதம் என்றபடி கூச்சல் போட ஆரம்பித்தது. சீபீஎம் காங்கிரசு கட்சியப்போன்று சிறந்த கேப்புமாறிகட்சியாக மாறிவருவதற்கு அவர்களின் கூற்றுக்களே தக்க உதாரணம். முன்பு மாவோயிஸ்டுகள் அரசியல் ரீதியில் மட்டுமே அகற்றப்பட வேண்டுமென்ற சீபீஎம் தற்போது கடுமையான எந்த நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று அறிவிக்கிறதெனில் என்ன வகையாக மாற்றம் கட்சியில் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை நாம் கம்யூனிஸ்டு கட்சி என்று தன் கட்சியினரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமிருந்தது. ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லை. புரட்சியா அது எப்படி இருக்கும் ஸ்வீட்டா இல்லை காரமா என்று கேட்ககூடிய அளவுக்கு சீபீஎம் தொண்டர்கள் வந்து விட்டதால் மொத்தமாய் அவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாய் நாங்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் என்று திமிராய் சொல்லுகிறார்கள். இந்திய நாட்டையே அடிமையாக்கிய காட் ஒப்பந்தம் முதல் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் வரை எதை நாடாளுமன்ற முறை மூலம் போராடி தடுத்தார்கள். நாடாளுமன்றத்தை பயன்படுத்த லெனின் சொன்னார் என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் லெனின் சொன்னார் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி அதை அம்பலப்படுத்தவேண்டும் என்று அதைத்தான் செய்து வருகின்றோம் என்கிறார்கள்

தயவு செய்தி பேரண்புமிக்க பொறுக்கிகளே அந்த சின்னத்தை பயன்படுத்தாதீர்கள். அது உங்களைப்போன்ற ஆளும் வர்க்கத்திற்கெதிராக உழைக்கும் மக்களால் உருவானது. நீங்கள் “நம்ம” தேசியக்கொடியையே பயன் படுத்திக்கொல்ளலாம்,  அரசு கூட அப்ஜெக்சன் தெரிவிக்காது என நம்புவோம். நாங்கள் இனி போலிகள் என்று கூட அழைக்கமாட்டோம். ஒரு வேளையும் மிச்சம்.

கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இந்திய தேசத்தில் காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் நடத்தப்படும் சுயநிர்ணய போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ன? அவ்விசயங்களில் இந்திய அரசின் வாலாக செயல்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒன்று சேலையை துவைப்பது அல்லது வேட்டியை துவைப்பது என்று வேறுவேலை இன்றி மாமாவேலை செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள இந்த சீபீஎம் எங்கத்த புரட்சி பண்ணப்போகிறது?  நாங்கள் இல்லாமல் எம்ஜிஆர் இல்லை, ஜெயா இல்லை, கருணாநிதியும் இல்லை, விட்டால் ஒபாமா கூட நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாதென்று முழங்கிக்கொண்டே போவார்கள்.

கேரளாவில் முல்லைப்பெரியார் அணை விசயத்தையே எடுத்துக்கொள்வோம். சீபீஎம் கட்சித்தலைமை ஏதாவது வாய் பேசியதா என்ன? பெங்களூருவில் மாநாடுகூட்டி தீவிரவாதத்துக்கெதிராக பேச முடிகிறது ஆனால் பெரியாறு பிரச்சினையைப்பற்றி ஏன் பேச முடியவில்லை ? ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது ஒரு தலைமை எதனால் பாதிக்கப்படுகிறதோ அதற்கு எதிராக, யாருக்காக , யாருடைய தேவைக்காக அதற்காகத்தானே போராடும். அதன் படி தன் வளர்ச்சிக்கு தடையாயிருக்கும் மாவோயிஸ / நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்  தான் போராடுகிறது. தன்னுடைய சேக்காளிகளான டாடா, பிர்லா, அம்பானிமற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும்தான் போரிடுகிறது.

சீபீஎம்முக்கும் ஏனைய ஓட்டுப்பொறுக்கிகட்சிகளுக்கும் ஏதேனும் வித்யாசமிருக்கிறதா? முன்னராவது மற்றவர்கள் சிரச்சேதம் செய்யச்சொன்னால் சீபீஎம் கட்சி பாலிடால் கொடுக்கசொல்லும் (அவ்வளவு மனித நேயமாம்). மொத்தத்தில் மக்கள் ஒடுக்கப்பட வேண்டும் அவ்வளவுதான்.

இந்த உலகமயம்-தனியார்மயம் – தாராளமயம் சூழலில் சீபீஎம்-ல் தனது போலி வேசத்தைக்கூட நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடித்தே தீரவேண்டும் , எல்லோரும் கொல்ளையடிக்க வந்துவிட்டார்கள், சும்மா வெறும்கையை முழம் போட சீபீஎம் கேனப்பயலா என்ன?  நம் முகமுடியை மக்கள் அறிந்துவிட்டார்களென்ற பின்னே இனி பாசிஸ்டாக பரிணமிப்பதைத்தவிர வேறு என்ன வழி?

இந்த நாட்டின் எதிரி மாவோயிசமா அல்லது ஏகாதிபத்தியமா?

நீர் நிலம் காற்று என அனைத்தும் மக்கள் ஒப்புதலின்றியே பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுவிட்டன. அம்பானி, மிட்டல், டாடா என தரகு முதலாளிகள் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீபீஎம், காங்,பீஜேபீ உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகள் மாமா வேலை பார்ப்பதையே முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டு விட்டன. உலகமயம்-தனியார்மயம் – தாராளமயத்தால் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழந்துவிட்டார்கள், காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் துரத்தப்படுகிறாகள். விவசாயத்தை லாபமற்ற தொழிலாக திட்டமிட்டு மாற்றி, உரங்கள் மூலமாகவும் பன்னாட்டு விதைகள் மூலமாகவும் விளை நிலத்தை நாசம் செய்து பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் நாடெங்கிலும் இதற்கெதிராக போராடி வருகிறார்கள், இந்த அரசும் அதன் தாங்கிகளான ஓட்டுப்பொறுக்கிகளையும் பாசிசத்தின் கருவிகளாகியிருப்பதை உணர்கிறார்கள்.

தன்னெழுச்சியாகவும் மாவோயிஸ்டு / நக்சல்பாரி அமைப்புக்கள் மூலமாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக அரசு தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது, போராடும் மக்களை ஒழித்துக்கட்ட முயல்கிறது. தன்னுடைய அமெரிக்க எஜமானனுக்கும் ஏனைய பன்னாட்டு எஜமானர்களுக்கும் சேவை செய்வதை தடுக்கும் யாரையும் முறியடிக்கிறது. கிராமங்கள் சூறையாடப்படுகின்றன.

மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் போராடி குரல் கொடுக்கின்றன. ஆயுத தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆங்காங்கே மக்களே ஆயுதந்தரிக்க வேண்டியதன் கட்டாயம் ஏற்படுகிறது. தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோமோ அவர்களுக்கு மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறர்கள்.சீபீஎம்ற்கு ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியாக, பாஸிஸ்டுக்கு பாதந்தாங்கியாக இருந்ததன் அவசியம் இனியும் தேவையில்லை. போலிகம்யூனிச முகமுடியினை தூக்கிபோட்டுவிட்டு மக்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு உரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் டாடாவுக்கு உழைக்கும் மக்களின் நிலத்தை அபகரித்துத்தருவது  மறுபக்கம் மக்களுக்காக பரிந்து பேசுவதென்ற வாய்ஜாலமும் இனி தேவைஇல்லை.

நாட்டையே கூறு போட்டு தூக்கிச்செல்ல காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாதம் அல்ல, மதத்தால்பிளவுபடுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஆர் எஸ் எஸ் பார்ப்பனபாசிசம் அதுவும் பயங்கரவாதமல்ல, தொழிலாளர்களை சுரண்டி சக்கையாய் தூக்கியெறிந்து தன் லாபத்திற்காக தொழில்களையே ஒழிக்கும் முதலாளித்துவம் பயங்கரவாதம் அல்ல, இந்த அரசும் சீபீஎம்மும் கூறுவது போல நாட்டை மீண்டும் மறுகாலனியாக்குவதற்கு எதிராக போராடும் மக்கள் தான் பயங்கரவாதிகள். வேறு வழியே இல்லை பயங்கரவாதிகளாகிய உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் இந்த யோக்கிய சிகாமணிகளுக்கு சாவுமணி அடிப்போம்.


இணைப்புக்கள்

1.விடுதலையின்  அரசியல் கருத்துப்படங்கள்
போலிகளை வீழ்த்தும் ஆயுதங்கள்

2மார்க்சிஸ்டுகளின் பரிணாம வள்ர்ச்சி

3.சாயம் வெளுத்துப்போன போலிகள்

4.வாடா வாடா வாடா  தோழா – ஒரு காம்ரேடு  ரசிகன் ஆன கதை

5.மாவோயிஸ்டுகள் மீதான தடை
டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை

 

மவுனம்

அக்டோபர் 26, 2009 by kalagam

மவுனம்pesu copy

நான் இப்போதேதும்
பேசப்போவதில்லை பேசுவதற்கு
என்னிடம் வார்த்தைகள் இருக்கின்றன
ஆனாலும் நான் இப்போது
பேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்…….

நான் பேசாமலிருப்பது
பலருக்கும் மகிழ்ச்சியைத்
தரலாம்
பேசாமலிருப்பது கோழைத்தனமாம்
பேசவிடாமல் செய்வது வீரமாம்
நான் கோழையாகவே
இருந்து விட்டுப் போகிறேன்
ஆனால் அது நிரந்தரமல்ல…….

படிப்பிற்காக வேலைக்காக
நான்  செல்லும் இடங்களிலெல்லாம்
பதவியும் பணமும்
என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன

நான் மறுத்தாலும்
ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்
தானாய் கக்கத்தில் ஏறுகின்றன
தேனீர்க்கடைகள் என்னை
பிளாஸ்டிக் டம்ளர்களோடு
வரவேற்கின்றன

என் துயரங்கள் வேதனைகள்
எல்லாம் நினைவலைகளாய்
என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன
எல்லாம் உள்ளே வெடித்துக்
குமுறிக்கொண்டிருக்கின்றன
பயமாய் இருக்கின்றது
எங்காவது தப்பித்தவறி
பேசிவிடுவோமோ என்று…….

என்னதான் முயன்றாலும் முடிவதில்லை
சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்
கனவுகளில்

எல்லாம் பணத்தால்
மதிப்பிடப்படும் போது
நானும் மதிப்பிடப்பட்டிருக்கிறேன்
செல்லாக்காசாக

செல்லாக்காசுகளின் மீதேறி
சிலர் கலசங்களாய்
அமர்ந்திருக்கின்றார்கள்
கலசங்களுக்கு தங்க முலாம்
பூசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது
அவை புனிதமானவையாம்…….

நான் எப்போதும் பேசாமல்
இருக்கப்போவதில்லை
நான்
மட்டுமல்ல நான் நாமாக
நாங்களாக பேசுவோம்
பேசுவோம்

இப்போது பேசுபவர்களெல்லாம்
அப்போது வாய் திறந்துகிடப்பார்கள்
உளுத்துப்போன சன நாயகத்தின்
எச்சில்கள் ஆறாய் ஓட
மொய்க்க வந்த ஈக்களோ
நிலையறிந்து பின்னங்கால்
பிடறியிலடிக்க ஓடும்

பேசுவோம் பேசுவோம்
பேசிக்கொண்டே இருப்போம்
அதிகாரத்தின் விம்மல்கள்
அடங்கும் வரை
உங்களின் மவுனங்கள்
நிரந்தரமாகும் வரை பேசிக்கொண்டே இருப்போம்

நோபல் பரிசு – புனிதப்பசுக்களின் அரிதாரங்கள்

அக்டோபர் 19, 2009 by kalagam

நோபல் பரிசு
புனிதப்பசுக்களின் அரிதாரங்கள்obama copy

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் மாயாவதி ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல ஏன் அகில உலகமே பெருமைப்பட வேண்டிய விசயமாக இது கூறப்படுகிறது. பில் கிளிண்டன் உட்பட பலர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் போது ஒபாமாவின் தனிப்பட்ட திறமைக்கு கிடைத்த இந்த பரிசு உண்மையிலே உயர்ந்தது தான். இந்திய மதிப்பில் ஏழு கோடி ரூபாய்களும் பட்டயமும் கிடைக்கும். உலகம் முழுக்க இவர் தான் அதுக்கு நோபல் பரிசு வாங்கினார், இதுக்கு வாங்கினார் என்று பத்திரிக்கைகள் புளங்காகிதம் அடையச்
சொல்கின்றன.

வேதியியலின் ஆராய்ச்சிக்கான விருது ஒரு தமிழருக்கு கிடைத்திருக்கிறதாம். பத்திரிக்கை, ஊடகங்கள் எல்லாம் தமிழ் நாடே  புண்ணியம் செய்ததாய் அறிவிப்பினை வெளியிட்டன. எல்லா நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் முதல் செய்தியாய் மிளிர்ந்தது. முதலில் அவர் தமிழரா? அவர் எதைக்கிழித்தார்? அதற்கு நான் ஏன் பெருமைப்படவேண்டும்? அமெரிக்காவில் குடியுரிமை வாங்கி அமெரிக்காக்காரனாகவே வாழ்ந்து வருகின்றவர் எப்படி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்று தான் புரியவில்லை. அமெரிக்காவிற்கு வேலைப்பார்க்கப்போன கல்பனா சாவ்லா, அமெரிக்க நாய்க்கு மணியாட்டப்போனவன் என யாராவது எதையாவது செய்தால் உடனே எல்லோரும் பெருமைப்பட வேண்டுமாம்.

எப்படி இந்தியாவினை சுரண்டுகின்ற, மக்களை ஏய்த்து பிழைக்கின்றவர்களுக்கு பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷண்,பத்ம விபூஷண் விருதுகள் கொடுக்கப்படுகின்றதோ அப்படித்தான் உலக அளவில் எப்படி முதலாளித்துவத்துக்கு சேவை செய்யலாம், எப்படி மக்களை சுரண்டலாம், இற்றுப்போன முதலாளித்துவத்தை எப்படி தூக்கி நிறுத்தலாம்  என  ஐடியா தருபவர்களுக்கு விருதுகள் குவிகின்றன.

எல்லாவற்றிற்கும் ஒரு முத்தாய்ப்பாக நம்ம ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு எதற்காக கொடுக்கப்பட்டதென்று அவருக்கும் அந்தக்கமிட்டிக்கும் தெரிகிறதா என தெரியவில்லை. ஈராக்கிலே தினமும் நடந்து வரும் குண்டு வெடிப்புக்கள், தானாய் முன்வந்து போராளியாகும் மக்கள் என எல்லாவகை காட்சியும் மாறவில்லை. ஈராக்கிலும், ஆப்கனிலும் படிபடிப்படியாக படைகளை வாபஸ் வாங்குவோம் என தேர்தலின் போது உதார் விட்ட ஒபாமா தற்போது எப்படி அமைதியை நிலை நாட்டுகிறார் என உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அணுஆயுத பரவல் தடைசட்டத்துக்கு பாடுபட்டதாக விருது தரப்பட்டிருக்கிறதாம். ஆப்கனில் தினமும் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் கொத்துக்கொத்தாய் குண்டு வீசும் ஒபாமாவின் ஏகாதிபத்திய அமெரிக்க அரசு எதை தடை செய்தது? கொல்லப்படும் மக்களின் என்ணிக்கையோ பல்லாயிரக்கணக்கில் பெருகிக்கொண்டே போக  இருக்கிற எண்ணைவளத்தினையும் தின்ன முடியாது திணறுகிறார் ஒபாமா. இசுலாமிய நாடுகளுக்குப்பயணம் செய்து நல்லெண்ணத்தை பரப்புகிறாராம் இந்த நவீன மகாத்மா. தேவைப்பட்டால் மகாத்மா தனது மறு உருவத்தைக்  காட்டவும் தயாராகவே இருக்கிறார். அது நல்லெண்ணத்தை பரப்புவதல்ல, இசுலாமிய மக்களிடம் உள்ள அமெரிக்க எதிர்ப்பு உணர்வை மழுங்கடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதுதான் இசுலாமிய நாடுகளுக்கு ஒபாமாவை கட்டி இழுத்து வந்திருக்கிறது. ஜார்ஜ் புஷ்க்கும் ஒபாமாவுக்கும் என்ன வித்யாசம் ? பீஜேபிக்கும் நம்ம காங்கிரசுக்கும் உள்ள வித்யாசம் தான் அது. இவ்விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதன் பெருமை புஷ் யையே சாரும். அவர்   நேராய் போட்ட சாலையை ஒபாமா சற்று வளைந்து நெளிந்து கட்டியிருக்கிறார் அவ்வளவுதான். ஒபாமா என்பது தனி நபராக இருந்தாலும் அமெரிக்க அதிபர் என்பது தனி நபர் அல்ல. முதலாளித்துவ ஏகாதிபத்தியம் பிரச்சினைகளிலிருந்து மாறு வேசம் போட்டிருக்கிறது. வேசங்கள் மாறும் தேவைக்கேற்ப.

சீர்கெட்டுப்போன அமெரிக்க பொருளாதாரம் புழுத்து நாறிப்போய்விட்டது. முதலாளித்துவத்தின் சொர்க்கத்தில் பஞ்சை பராரிகள் உலவ ஆரம்பித்து விட்டார்கள். உலகிற்கே பொருளாதாரத்தை சொல்லிக்கொடுத்த நாட்டில் ரொட்டிக்கு கியூ வரிசையின் நீளம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
மாற்றத்திற்கான நபராக சொல்லப்பட்ட நபரான ஒபாமாவால் எதையும் செய்ய முடியவில்லை.  என்ன செய்ய முடியும் இழவு வீட்டில் குத்தாட்டம் போடுவதைத்தவிற. குத்தாட்டம் போடும் இந்த ஆடுகாலிக்குத்தான் அமைதிக்கான நோபல் என்ற அரிதாரம் பூசப்பட்டிருக்கிறது.

எப்படி பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதற்கும், நிலவில் சந்திராயன் அஸ்தமானதற்கும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டானோ அப்படி ஒபாமாவின் விருதுக்காக அமெரிக்கர்கள் பெருமைப்பட்டாக வேண்டும். அவர்கள் மட்டுமல்ல உலகப்போலீசின் தலைமை அதிகாரி பதக்கம் வாங்கியதற்கும் நாமும் சேர்ந்து பெருமைப்பட்டாக வேண்டும். ஏனெனில் ஒபாமா தனிப்பட்ட அமெரிக்காவுக்கானவரா என்ன? அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளை உலகமே எதிர்பார்க்கிறது. அடுத்த முதலாளியை எதிர் நோக்கி சுரண்டல்காரர்கள் காத்திருப்பது ஒன்றும் புதிதல்ல, ஆனால் மக்களையும் அப்படி பழக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஒபாமாவை அவன் என்று சொன்னால் போதும் பலருக்கும் அப்படி ஒரு கோபம் என்னதான் இருந்தாலும் அமெரிக்க அதிபர் மரியாதையாக பேசுங்கள் என்கிறார்கள். நமது ஆயிரக்கணக்கான நெல் வகைகளை கொள்ளையடித்து விவசாயிகளை தற்கொலைக்குத்தூண்டி,  நெசவாளர்களின் கழுத்தினை நெறித்து, தொழிலாளார்களின் வாழ்வினை முடக்கிய முதலாளித்துவத்தின் தலைமை பீடத்தின் அதிபரை நான் ஏன் மரியாதையாக பேச வேண்டும் ?

ஒபாமா பதவியேற்றவுடன் ஏன் அவர்தான் ஆட்சியை பிடிக்கப்போவதாக சொன்னவுடனே  நம்ம ஊர் பத்திரிக்கைகள் அவரின் சுய சரிதயை எழுதித்தள்ளின. அவரின் வாழ்க்கைக்குறிப்பு தேவையான ஒன்றாக மாற்றப்பட்டது. அவருக்கு மகாத்மான்னா ரொம்பபிடிக்கும், இந்தியாவ ரொம்ப லைக்பண்ணுவாரு என்று கிறுக்கித்தள்ளின. ஒரு கறுப்பினர் இப்போது தான் முதன் முறையாக ஆட்சியை பிடித்தார் என புகழ்ந்து தள்ளிய ஊடகங்கள் எல்லாம் அவரின் பொருளாதார தகதிமியை பார்த்து வாய் மூடிக்கிடக்கின்றன. முதலாளித்துவ பயங்கரவாதத்தால் அமெரிக்காவின் முதலாளித்துவம் நாறிக்கிடக்கிறது. கருப்பினத்தவரின் வாழ்க்கையை சிறிதும் அனுபவிக்காத ஒபாமா கருப்பினத்தவரின் பிரதி நிதியாக முன்னிறுத்தப்படுகின்றார். தாழ்த்தப்பட்டவர்களின் பிரதி நிதியாக மாயாவதி முன்னிறுத்தப்படுவதைப்போல.

ஈராக், ஆப்கனில் நேரடியான போரினை இன்னமும் அதிதீவிரப்படுத்தியும், உலக நாடுகளை சுரண்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் நாட்டின் அதிபருக்கு தேவைதான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு. புவி வெம்புதலுக்கு (global warming)அமெரிக்கவிலிருந்து வெளியாகும் வாகனப்புகை அதிக பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சரி ,அணு ஆயுதங்களை போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து
உலகை கொள்ளையடிக்க கிளம்பியுள்ள ஏகாதிபத்திய தலைமைக்கு கொடுத்த இந்த பதக்கம் அது உலகின் எந்த ஒரு நாட்டையும் கொள்ளையடிக்க ஏக போக உரிமை அளிக்கப்பட்டதையே காட்டுகிறது.

தன் மக்களை  முன்பு நுகர்வியல் போதையில் ஆழ்த்தி பொருட்கள் வாங்கி குவிக்கவைக்கப்பட்டதைப் போன்று இப்போது ஏதும் செய்ய முடியவில்லை. தன்னுடைய நிலையை சீர் செய்ய ஈராக்கில் ரத்த கவுச்சியில் எண்ணை¨யில் ஒரு சொட்டினை நக்கக்கூட முடியாது விழி பிதுங்கி நிற்கும் அமெரிக்கா, தன் மக்களை ஏமாற்ற செய்யும் புது தந்திரம் தான் இந்த நோபல் பரிசு.  புஷ், ஒபாமா, இன்னும் மபாமா என யார் வந்தாலும் ஏகாதிபத்தியம் மோதி வீழ்த்தப்படாத வரை அதுதன் வேலையை காட்டிக்கொண்டுதானிருக்கும். மக்களின் எதிர்ப்பு வரும் போது புஷ் முகமுடி போய் ஒபாமா முகமுடி வரும். தன் அதிபரின் புகழைப்பாடிய படியே மக்களை இருக்கச்சொல்கிறார்கள். வயிற்றில் பசி இருக்கும் வரை எதைப்பாடுவார்கள் “முதலாளித்துவம் ஒழிக” என்பதைத்தவிர.

செருப்பு

அக்டோபர் 14, 2009 by kalagam

செருப்பு

செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?
அஃறிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்?

பல்லாயிரக்கணக்கான  நினைவுகளை
தாங்கி வந்த அந்த செருப்பின்
உணர்ச்சிகள் எல்லாம்
ஏகாதிபத்திய முகத்தில் பயத்தின்
வடுக்களாய் பரவி கிடக்கிறது…..

வந்தது கட்டளை செல்லும்
இடமெல்லாம் செருப்புக்குத்தடை
தடைகளுக்குத்தான்
எப்போதும் தடையேதும் இல்லையே…..

தடைபட்ட செருப்புக்கள்
மீண்டும் பேசின
தேவையான போது
அவை பேசிக்கொண்டே இருந்தன

“வழி தவறிய மீனவர்களை பாதுகாக்கிறோம்”,
“தமிழர்கள் நலமுடன் இருக்கிறார்கள்”
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின்
ஊளையினை செருப்புக்களால்
தாங்கி கொள்ள முடியவில்லை
துடித்தன
காலைக்கடித்தன
கேட்டவர்கள் பிஸ்கெட்டினை
கடித்தபடி செருப்புக்கு விடை கொடுததார்கள்

அமைதியாய்
அம்சாவின் அம்சமான
நினைவுகளில் நீந்திக்கொண்டிருந்தார்கள்…..

சிறைபட்ட செருப்புக்களால்
இப்போது பேசமுடிவதில்லை
மானமில்லாதவனுக்கு வாழ்க்கைப்பட்டதால்
அவை அமைதியாயிருக்க வைக்கப்பட்டிருக்கின்றன

செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?
அ·றிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்?

கண்டிப்பாய் இருக்கும்
அது அஃறிணையாய் இருப்பதனால் தான்

அதன் உணர்ச்ச்சிகள் மரத்துப்போக
அது மனிதத்தோலில் ஒன்றும் செய்யப்படவில்லையே.

ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்

அக்டோபர் 8, 2009 by kalagam

ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்

mao__2_copy

 1927ம் ஆண்டு சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கெதிரான செயல் பாடுகள் குறித்தும் தோழர் மாசேதுங் தெளிவாக விளக்குகிறார்.

கோமிண்டாங்கைத்திருப்தி படுத்த விவசாயவர்க்கத்தை கைவிட்டு தொழிலாளிவர்க்கத்தை தனிமைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப்பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்ட அனுபவபூர்வமான அறிக்கையே இந்த ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 ஹூனானில் வளர்ந்த விவசாய இயக்கத்தினை இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் 1926 ஜனவரிமுதல் செப்டம்பர் வரையிலானது.

அக்கட்டம் அமைப்பைக்கட்டும் காலகட்டம். அதில் ஜனவரி முதல் ஜூன் வரை தலைமறைவாக செயல்பட்டது.புரட்சிகர ராணுவம் சாவோ ஹெங் டியை (யுத்த பிரபு) விரட்டிய காலமே வெளிப்படையான காலமாகும். (ஜூலை முதல் செப் வரை). இந்த முதல் காலக்கட்டத்தில் 3 முதல் 4 லட்சம் வரைதான் உறுப்பினர்கள் இருந்தது. அமைப்பின் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தினைத்தாண்டவில்லை. ஆனால் இரண்டாவது காலகட்டமான 1926 அக்டோபர் முதல் 1927 ஜனவரி வரையில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தினைத்தாண்டியது.அதன் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கையோ 1 கோடிக்கும் அதிகமானது. விவசாயிகள் தங்களின் பலத்தினை சார்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு புரட்சியைத்தோற்றுவித்தனர். மாபெரும் ஈடு இணையில்லா சாதனை இது.

விவசாயிகளின் முக்கியத்தாக்குதல் இலக்காய் இருந்தவை உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். ஆனால் நிலபிரபுக்களை வீழ்த்துகிற போகிற போக்கில் வம்சா வரிக்கோட்பாடு, ஊழல் அமைப்புக்களுக்கெதிராக, மூட நம்பிக்கைக்கெதிராக தங்கள் போராட்டத்தினை கட்டியமைத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலபிரபுக்களின் வாரிசாய் , தகுதியாய், வளர்ந்த சலுகைகள் தூள் தூளாக்கப்பட்டது. நிலபிரபுக்களின் அதிகாரத்தை பறித்து அங்கு விவசாய சங்கம் அமர்கிறது. இது வரை மக்களை ஒடுக்கியே வந்த அதிகாரம் இப்போது ஒடுக்கியவர்களை ஒடுக்கப்பட்டவர்களால் அடக்கப்போகிறது. மாபெரும் முழக்கம் உதயமாகிறது அது தான் ” அனைத்து அதிகாரமும் விவசாய சங்கங்களுக்கே “ அது நடைமுறையிலும் சாத்தியமாக்கப்படுகின்றது.

உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் பேசுவதற்கான எல்லா உரிமையும் மறுக்கப்படுகின்றது. பணத்தினைக்கொடுத்து சங்கத்தில் சேர முயற்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கு பதிலாய் தெறிக்கின்றன வார்த்தைகள் “தூ யாருக்கு வேண்டும் உன் எச்சில் காசு “.

 நான்கு மாதங்களுக்கு முன் மந்தையாக இருந்த (அழைக்கப்பட்ட) சங்கம் தான் இப்போது மிக மிக மதிப்புக்குரியது.நகரத்திற்கு தப்பி வந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் உச்சரிக்கும் இது “பயங்கரமானது” என்ற சொல் முதலாளித்துவாதிகள் மட்டுமல்ல புரட்சிகர எண்ணம் கொண்டோரையும் பிடித்தாட்டியிருக்கிறது அதற்கு தெளிவாய் பதில் சொல்கிறார் மாவோ “இது அருமையானது”. ஆம் மக்களை கொன்று குவித்த நிலப்பிரபுக்களின் மீது இந்த பயங்கரமானது எத்தனை முறை விழுந்திருக்கும் ?

ஆனால் மக்கள் கிளர்ந்தெழுந்து நிலப்பிரபுக்களுக்கெதிராக போராடும் போது திருப்பி தாக்கும் போது பயங்கரமானது என்றவார்த்தைகள் மக்களை பாய்ந்து கடித்து குதறுகிறது. இதே போலத்தான் “சங்கம் தேவைதான் ஆனால் அத்து மீறுகிறார்கள்” என்ற போர்வையும்.

அத்துமீறிய உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளம்பாத வார்த்தை மக்களுக்கெதிராக கிளம்புகிறது. (இதை அப்படி நம்முடைய லால்கர், நந்திகிராமிற்கு பொருத்தியும் பார்க்கலாம் . அரச பயங்கவாதத்தினை பற்றி பேசாத வாய்கள் எல்லாம் மக்கள் நிலபிரபுக்களை விரட்டியவுடன் சொன்னது “அறிவில்லாத மக்கள் போலீஸ் ஸ்டேசனை கொளுத்தறாங்க, சீபீஎம் ஆபீசை கொளுத்தறாங்க, நிலப்பிரபுவை கொல்றாங்க “)

யாரை கீழ் மக்கள் என பணக்கார விவசாயிகள் இகழ்ந்தார்களோ அவர்கள் தற்போது பேரரசர்களாகிவிட்டார்கள் ஆம் மக்களின் ஆணைக்கிணங்க நிலப்பிரபுக்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள். இப்புரட்சியின் முன்னணியாளர்கள் யார் தெரியுமா? ஏழை விவசாயிகள். மொத்த மக்கள் கிராமப்புற தொகையில் ஏழை விவசாயிகள் 70%, நடுத்தர விவசாயிகள்20%, பணக்கார விவசாயிகள் 10% இருக்கிறார்கள். அதிலும் அந்த 70 % ஏழை விவசாயிகளில் மிகமிக வறிய விவசாயிகள் 20%-ம் வறுமையில் வாடும் விவசாயி 50% பேரும் இருக்கிறார்கள். இந்த ஏழை விவசாயிகள் தான் நம்முடைய இலக்கு அவர்கள்ள்தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள், இந்த இலக்கு தான் அந்த இலக்கினை (உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள்) தாக்கி அழிக்கும் என்கிறார் தோழர் மாவோ.

விவசாய சங்கம் குற்றம் இழைத்துவிட்டதாக கூறுபவர்களிடம் மாவோ சொல்கிறார் “உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கெதிரான உழைக்கும் மக்களின் போர் இது . இது எவ்விதத்திலும் குறை கூறத்தக்கதல்ல .” என்று தான் பயணம் செய்த போது விவசாய சங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.

மாபெரும் 14 சாதனைகளை கூறும் மாவோ இப்புரட்சி சரியான திசை வழியில் செல்வதை தெளிவாக அறிகிறார்.மக்களை அமைப்பாக்கியதே மாபெரும் சாதனை . ஹூனான் மத்திய மாவட்டத்தில் எல்லா விவசாயிகளும், தெற்கு ஹூனானில் பாதி விவசாயிகளும், மேற்கு ஹூனானில் தற்போது அமைப்பாக்கும் நிலையிலும் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர். ஆனால் சில மாவட்டங்களை அமைப்பு இன்னும் சேரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினைத்தாக்கும் விவசாய சங்கம் தன் பலத்துக்கேற்றவாறு செயல் பாட்டில் இறங்குகிறது. அரசியல் ரீதியாக தாக்க கணக்குகளை சரி பார்ப்பது , அதாவது பொதுப்பணத்தினை கையாடல் செய்த தீய மேட்டுக்குடிக்கெதிரான நவடிக்கை, பணத்தினை மீட்பதோடு அந்தஸ்தினை அடித்து வீழ்த்தவும் பயன்படுகிறது. ஒழுங்கீனக்களுக்கெதிராக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அவன் தன் மானம் மரியாதையை முற்றிலும் இழக்கவும் வைக்கிறது சங்கம். நன்கொடைகள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.

 உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சியாங்டன்-ல் 15000 விவசாயிகள் தீய மேட்டுக்குடியினரின் வீட்டில் நுழைந்து துவம்சம் செய்து 4 நாட்கள் தங்கி தின்று தீர்க்கின்றனர். பின்னர் வழக்கமான அபராதம் வேறு. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோரை தெருவில் காகிதத்தொப்பி அணிந்து இழுத்து வரும் இந் நிகழ்வு மக்களிடையே மிகவும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. முன்னர் நிலபிரவின் ஆணைக்கிணங்க சிறையில் தள்ளிய நீதிபதி தற்போது விவசாய சங்கம் காலையில் சொன்னால் மதியம் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறார். மிக மோசமான குற்றங்கள் புரிந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தன் வசதிக்கேற்றவாறு தப்பி ஓடுகின்றனர்.

 சிலர் திருப்பி அரசால் திருப்பி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மிக மிக மோசமான கொடுங்கோலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புக்கள், மற்றும் அவன் இழைத்த குற்றங்கள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளை வறுமையால் கொன்றவன், பிச்சைக்காரர்களை கொன்று ஆரம்பிக்கின்றேன் என சொன்னவன் என முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஹூனான் மாகாணத்தில் விவசாய சங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளில் எல்லாம் எங்குமே தானிய பதுக்கலோ, வெளியே அனுப்புவதோ, விலையேற்றம் செய்வதோ முற்றிலும் இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது. குத்தகையை காரணமின்றி அடிக்கடி உயத்தி கொள்ளை அடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. டூ எனப்படும் மாவட்டமும் டூவான் எனப்படும் மாவட்ட நிர்வாகமும் தற்போது அமைதியாய் ஒதுங்கியிருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது.

மக்களை சித்திரவதை செய்யும் போலீசு இப்போது ஒதுங்கிச்செல்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுதப்படைய தூக்கியெறிந்துவிவசாயிகள் தங்களின் படைகளை நிறுவியிருக்கிறார்கள். சியாங் சியாங்-ல் 100000 ஈட்டிகளும்,மற்ற மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஈட்டிகளும் இருக்கின்றன. “ஈட்டியை கண்டு உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தான் பயம் கொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் அல்ல” சீனாவில் மதிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் ஆதிக்கம் (மாகாண அமைப்பு முறை), குல ஆதிக்கம், கடவுளாதிக்கம் என 3 வகையான ஆதிக்கத்தின் கீழ்தானிருக்கின்றனர். ஆனால் பெண்கள் இந்த மூன்றையும் சேர்த்து கணவன் ஆதிக்கத்திலும் உழல்கின்றனர்.

நிலபிரபுத்துவத்துக்கெதிரான இப்போராட்டம் நான்வகை ஆதிக்கத்தையும் தகர்க்கிறது. பெண்களுக்கு சம உரிமை என சுதந்திரம்ஜனனாயகம், சமத்துவம் என அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. இந்தப்புரட்சி மாபெரும் கல்வி அறிவினை மக்களுக்கு கொடுத்திருக்கிறது, அன்னியப்பாணி கல்வியினை வெறுத்த மக்கள் சீனப்பாணி கல்விமுறையை ஆவலோடு கற்கிறார்கள்.அரசியல் கல்வில் இரு குழந்தைகள் விளையாடும் போது கூட ஒன்று ஏகாதிபத்தியம் ஒழிகஎன முழக்கமிடுவதன் மூலம் மக்களிடம் ஆழமாக வேறூன்றியுள்ள அரசியலை அறியமுடிகிறது. தீய பழக்கங்கள் சூதாட்டம்,ஆபாச நடனம், அபின் புகைத்தல், சாராயம் காய்ச்சுதல் தடை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டு விட்டது.

எருதுகள் கொல்வதற்கும் தடையும், கோழிகள், வாத்துகள், பன்றிகள், வளர்க்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடித்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கொள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிக அதிகமான நன்கொடை கூட தடை செய்யப்பட்டிருப்ப்து என்பது பணக்கார விவசாயிகள் மத்தியில் கூட நல்லபெயரை கொடுத்து இருக்கிறது. கடனுக்காக கூட்டுறவு இயக்கம், தானியத்துக்கான கூட்டுறவு என பலவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளாக போடப்படாத சாலை, தூர்வாரப்படாத குளங்கள் என அனைத்தும் சாத்தியமாகி இருக்கின்றன அதுவும் நான்கு மாதங்களில்……….

இது மக்களின் போராட்டமே உழைக்கும் விவசாயிகளின் புரட்சியே என்பதனை ஆணித்தரமாக நிறுவுகிறார் தோழர் மாசேதுங். இதை ஆதரிக்கவேண்டியது நம் கடைமை என்றும் அப்போதிருந்த வலது தலைமை புரட்சியை புறக்கணித்தது தவறு என்பதயும் தெளிவிக்கிறார். இப்புத்தகத்தினை படிக்கும் போதே கவர்ந்த விசயம் என்னவெனில் அந்த எழுத்து நடை நம்மை அவருடனே (மாவோ) பயணிக்கவைக்கிறது.

 

புத்தகம் முடிந்தவுடன் அவரின் வார்த்தைகள் ஆழமாய் பதிகின்றன

” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறிவதாகும். இது ஒரு பலாத்த்கார நடவடிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பலத்தை பிரயோகிக்காது சாத்தியமில்லை. சக்திமிக்க எழுச்சி மட்டுமே லட்சக்கணக்கான விவசாயிகளை தட்டி எழுப்பி பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்க முடியும்”

 

கேடயம் வெளியீடு,

விலை 20/- தற்போது மிகவும் கிடைப்பதற்கு தட்டுப்பாடான நூல்

மஹா ஸ்ரீ ஸ்ரீ ல ஸ்ரீ காந்திப்பெருமானின் ஜெயந்தியை முன்னிட்டு

அக்டோபர் 2, 2009 by kalagam

மஹா ஸ்ரீ ஸ்ரீ ல ஸ்ரீ காந்திப்பெருமானின் ஜெயந்தியை முன்னிட்டு

காந்தியின்
கனவைநம்பி
தன்னந்தனியாய்இரவில்
இரவில் செல்லத்துணிந்திடாதே
பெண்ணே

காந்தியின்வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்கையில்
கத்தியோடு.

பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை – முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு

செப்டம்பர் 28, 2009 by kalagam

பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை

முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு

“சிறுதுளி” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோவையில் வனிதா மோகன் என்ற முதலாளி நாட்டு மக்களின் மீது திடீர் கரிசனம் வந்து நாட்டை மாற்ற அதனை முன்னேற்ற ஒரு தன்னார்வ நிறுவனத்தை தொடங்கினாராம். பல கோடிகளில் புரளும் இந்த இந்த சிறு துளிக்கு பணம் பிரிக்காலில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமிருந்தும் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பெறப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு முதலாளியால் சிறந்த மனிதராக இருக்கமுடியுமா? முடியும் என்றவாறு தான் பொள்ளாச்சி மகாலிங்கம் முதல் வனிதா மோகன் வரை வேசம் கட்டிக்கொண்டி திரிகிறார்கள். ஆனால் என்ன செய்வது அரிதாரங்கள் தான் பல நாட்கள் நீடிப்பதில்லையே. இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகளின் உண்மைமுகம் டார் டாராய் கிழிந்து தொங்குகிறது. இல்லையில்லை நான் யோக்கியன் என்றபடி ஒப்பாரிவைத்தாலோ அல்லது சபதம் போடும் காலம் எல்லாம் மலை ஏறி விட்டது , வனிதா அறிவித்துவிட்டார் கோவையில் இனி எந்த முதலீடும் இல்லை.

முதலாளியே சொல்லிவிட்டார் தாங்குமா அரசு அய்யய்யோ சாமீ தெரியாம தப்பு நடந்து போச்சு என்றவாறு போலீசு படைகள் ஆலையின் வாசலில் குவிக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கிமுனையில் அரசும் முதலாளித்துவமும் சொல்லித்தருகின்றன நீ தொழிலாளி இல்லை அடிமை, உனக்கு உரிமை கிடையாது, அதை மீறினால் உனக்கு வேலை கிடையாது.

கோவையின் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள பிரிக்கால் என்ற நிறுவனத்தில் மூன்றாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.அவர்கள் அந்த ஆலையினால் கடுமையாகவும் கொடூரமாகவும் கசக்கிப்பிழியப்பட்டார்கள். அங்கே சில தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அந்த துரோகத்தலைமைக்கு எதிராக தொழிலாளர்கள் புதியதோர் தொழிற்சங்கத்தை தொடங்கினார்கள் அதுதான் ஏஐசிசிடியூ. இது சிபிஐ(எம்.எல்) liberationஇன் தொழிற்சங்கமாகும். இச்சங்கத்தில் சுமார் 90 % தொழிலாளர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை இச்சங்கத்துக்கு நிறுவனத்தால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

மேலும் சிறு துளி அமைப்பிற்காக கட்டாயமாக தொழிலாளர்களின் 1 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது அவர்களின் அனுமதி இன்றியே. ஊரை அடித்து உலையில் போடும் முதலாளிகள் இப்படித்தான் கடைத்தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து நல்லபேர் வாங்கிக்கொள்கிறர்கள்.

சுமார் ஈராண்டுகளாக தொழிலாளர்கள் தங்கள்பிரச்சினைகளுக்காக போராட்டத்தினை பல வடிவங்களில் எடுத்தனர்.சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய போராட்டத்தை சீர்குலைக்க பல வகையில் முயன்று தோற்றுப்போன நிர்வாகம் தொழிற்சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டிய நிர்பத்தத்தில் மாட்டிக்கொண்டது. சென்ற ஆண்டில் நடைப்பெற்ற போராட்டத்தின் முன்னணியாளர்கள் 40 பேரை தனியாக பிரித்த ஆலை நிர்வாகம் அவர்களை தனியாக புதிதாக ஆரம்பித்த யூனிட்டுக்கு மாற்றியது. பின்னர் சில மாதங்கள் கழித்து அந்த ஆலையில் உற்பத்தியை குறைத்து நட்டமென்று சொல்லி ஆலையை (அதாவது அந்த யூனிட்டை) மூடிவிடுவதாக அறிவித்துஅனைவரையும் பணி நீக்கம் செய்து விட்டது நிர்வாகம். அதற்கு எதிராகத்தான் கிளர்ந்தெழுந்தனர் தொழிலாளர்கள்.

பல கட்ட போராட்டங்களுக்குப்பிறகு மசியாத அந்த நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ பண்ணையின் காவல்காரனான மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்னர் உயிரிழந்திருக்கிறார். தற்போது ஆலையில் ஆயிரக்கணக்கான போலீசார் காவல் காக்கிறார்கள் தொழிலாளர்கள் சரியாக வேலையை மட்டும் செய்கிறார்களா என்று.

மேலும் அந்நிறுவனத்தில் பிரச்சினையை யாராவது ஏற்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமென மாவட்ட எஸ்பி அறிவித்திருகிறார். ஆலையின் நிர்வாக இயக்குனர் வனிதா மோகனோ அமைதியாக இருந்த தொழிற்சாலையில் திட்டமிட்டே ஏஐசிசிடியூ பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகிறார். அக்குற்றங்கள் 1. 5 ஆண்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு 2.தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் என ஆசை. மேலும் அவர்கள் போராட்டத்தில் குதிக்க அச்சங்கமே காரணமென்றும் ஜார்ஜை கொன்றதோடு மட்டுமல்லாது பல உயரதிகாரிகளின் உயிருக்கும் அச்சங்கம் ஆபத்தாயிருக்கிறது என அறிவித்திருக்கிறார்.

90 கோடி நட்டமடைந்து விட்டதால் இனி கோவையில் எந்த முதலீடும் கிடையாதென சொல்லி முதலாளியை, அவனை நம்பித்தான் தொழிலாளியென மிரட்டியிருக்கிறார். இப்பிரச்சினையில் முக்கியமாக கூறப்படுவது ” என்னதான் இருந்தாலும் ஹெச் ஆரை கொன்னது தப்பு, அது மனித உயிரா பாருங்க ஏன் முதலாளியோட கையாளா பார்க்கறீங்க” கண்ணீரில் கூட இருக்கும் வர்க்கம் உயிரில் இருக்காதா என்ன? இந்த ஜார்ஜ் உண்மையியிலே யோக்கியனா? அவருக்காக மக்கள் கண்ணீர் வடிக்க வேண்டுமா? தொழிலாளிவர்க்கம் முதலாளிவர்க்கத்திடம் செய்த தவறுக்காக பாவ விமோசனம் பெறவேண்டுமா?

ஏற்கனவே இருந்த மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் தொழிலாளர்களின் பிரச்சினையால் ஓடிப்போய்விட கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நம்ம கதாநாயகனாக சித்தரிக்கப்படும் ஜார்ஜ் துணிந்து வந்தார். தொழிலாளர்களை அடிமையாக்கியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு வந்தவர் கடைசியில் தன் வாயில் துணிக்கட்டிக் கொள்ள வேண்டிய நிலை. மூன்று மாதத்தில் அதாவது செப்30க்குள் தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்டுவேனன சபதம் போட்டு கடுமையாக தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி துவம்சம் செய்தவர் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். முதலாளிவர்க்கத்துக்காக ஓயாமல் குரைத்துக்கொண்டிருந்த அவரது உயிர் முதலாளிகளுக்காகவே பிரிந்தது.

சட்ட ரீதியான, நியாயமான போராட்டங்கள் தான் எப்போதும் தொழிலாளர்கள் மேற்கொள்கிறார்கள், ஆனால் முதலாளித்துவம் எப்போது சட்ட ரீதியாக நியாயமாக நடந்து கொண்டிருக்கிறது? தொழிலாளிகளின் மீதான முதலாளிகளின் தாக்குதல் எல்லை மீறும் போது தொழிலாளர்களும் எல்லை மீறுவது இயற்கைதானே. நியூட்டனின் விதிப்படி ஒவ்வொரு வினைக்கு ஒரு எதிர் வினை உண்டு என்பது போலத்தான் இது நடந்தேறியிருக்கிறது. உடனே மத்திய தொழிற்துறை தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது.

ஒரு முதலாளியின் கையாள் செத்துப்போனதற்காக கண்ணீர்வடிக்கும் பத்திரிக்கைகளே அதிகாரவர்க்கமே என்றாவது உன்னால் வேலையைவிட்டு துரத்தப்பட்ட பல லட்சக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்வு கேள்விக்குறியானதை நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? கோவையில் எத்தனை தொழிலாளிகள் ஆலைகள் மூடப்பட்டதால் தற்கொலை செய்திருக்கிறார்கள், ஓட்டாண்டியாக்கப்பட்டிருக்கிறார்கள். கோவையில் நகைக்கடை ஊழியர்கள் எத்தனை பேர் குடும்பத்தோடு சயனைட் தின்று இறந்திருக்கிறார்கள். அப்போது இந்த பத்திரிக்கைகளோ அல்லது அரசாங்கமோ எதைப்பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்?

லட்சம் விவசாயிகள் செத்தபிறகுதான் அது தேசிய அவமானம் என்று மண்மோகனால் சொல்லப்படுகின்றது. ஆனால் டாட்டாவின் ஓட்டலுக்கு பாதிப்பு என்றால் உடனே அது தேசியத்தின் மானப்பிரச்சினை, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தால் கொல்லப்பட்ட, தினம் கொல்லப்படுகின்ற மக்களின் எண்ணிக்கைகளை எண்ணமுடியுமா என்ன? காலையில் தொழிலாளியாயிருந்து காரணமின்றி மாலையில் வெட்டியாக்கப்படும் கொடூரம் கண்டிப்பாய் கண்களில் கண்ணீரை வரவழைக்காது. ஆனால் ஜார்ஜ் செத்துப்போனாலோ, டாட்டாவுக்கு முதுகுவலித்தாலோ, அம்பானிகளின் சொத்துப்பிரச்சினைகள் நம் கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆம் ஆணையிடுகிறது முதலாளித்துவம் அழு அழு அழு நன்றாய் அழு முதலாளித்துவத்தின் முதுகெலும்பினை அசைக்க நினைத்ததற்காக அழுதே பாவத்தினைப்போக்க வேண்டும். ஆனால் அழுதுகொண்டும் வெட்கித்தலைகுனிந்து கொள்வதற்கு தொழிலாளி வர்க்கம் தவறொன்றும் செய்யவில்லை, முதலாளிகளின் வரன்முறையற்ற சுரண்டலுக்கான எதிர்விளைவே இது. ஏஐசிசிடியூ-ன் அனந்தநாரயணன் சொல்வது போல இச்சம்பவத்துக்கு தொழிலாளிகள் பொறுப்பேற்க முடியாது, முதலாளிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

முதலாளிகளால் கசக்கி பிழியப்படும் தொழிலாளி வர்க்கத்துக்கு இது ஒரு எச்சரிக்கைமணி. சங்கம் ஒன்றே தீர்வு நம் உரிமைகளைப்பெற, உரிமைகளைப்பாதுகாக்க. அது சாத்தியமாகாத வரை முதலாளித்துவ வெறிநாய்கள் நம்மீது பாய்ந்து கொண்டுதானிருக்கும். நம்முடைய ஒற்றுமை ஒன்றே முதலாளித்துவத்திற்கு சாவு மணியடிக்கும்.

கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை

அன்றாடம் தொழிலாளர்கள் மீது பயங்கரவாத முதலாளிகள் செய்து வரும் சித்திரவதை கொடுமைகளின் எதிர் விளைவே இது

தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ தேவை இல்லை

பிரிக்கால் ஆலைத்தொழிலாளிகளின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்

தமிழக அரசே!! நாள் தோறும் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கொடுமைகள் செய்து வரும் பயங்கரவாத முதலாளிகளை கைது செய்

முழக்கங்கள் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

நினைவுகள்

செப்டம்பர் 21, 2009 by kalagam
நினைவுகள்
அந்தப்படங்களை பார்த்தீர்களா
நீங்கள் ?
ஏதாவது தோன்றுகிறதா
உங்களுக்கு? எனக்குள்
தோன்றுமென் நினைவுகளை
புதைத்துக்கொண்டே இருக்கிறேன்……
நினைவுகளா அவற்றை
குப்பையில் போடுங்கள் – ஆம்
அவைகள் தான் ஆணையிட்டன
கிடைத்து விட்டது ஈழம்
இந்திய இறங்கி விட்டது
நார்வே கிறங்கிவிட்டது
புளங்காகிதம் அடைந்தோம்
இல்லையில்லை
அடையச்சொன்னார்கள் ……
இனிய நினைவுகளில்
மூழ்கிப்போனோம்
கொஞ்சம்
தள்ளிப்போய்விட்டது நாளை கண்டிப்பாய்
கிடைக்கும் ரெட்டை இலைக்கு
குத்துங்கள் ஈழம் மலருமென்றார்கள்
வாய் பிளந்தன கல்லறைகள்
அதன் பாதாள வாய்க்குள்
கொத்து கொத்தாய்
மக்கள் இறக்கப்பட்டார்கள்
இன்னும் மேடைகள் உறுமுகின்றன
அடுத்தகட்டம் இறுதிக்கட்டம்
வருவார்  பறித்து
தருவார் ஈழம்……
நினைவுகள் மீண்டும் என்னை
எழுப்புகிறது இதோ பார்
இது சீமான்கள் பொழுதுபோக்கும்
காடுகளல்ல  மக்கள் வாழும்
சுடுகாடுகள்
ஆகா எவ்வளவு அழகாயிருக்கு
சிரிக்கிறான் இந்து ராம்
மூன்று லட்சம் மனிதங்கள்
கம்பிகளுக்குள்
தினம் காக்கைகளாய்
சுடப்படும் மனிதர்கள்…..
மீண்டும் நினைவுகளை
கிளப்புகிறார்கள்
தயாராயிருக்கிறது படை
சிங்களனை உடை
பொறிபறக்கிறது வசனங்கள்
கிளிசரின் போடாத கண்ணீர்த்துளிகள்
எதுவும் எதையும் என்னுள்
மாற்றத்தை ஏற்படுத்தவில்லை
குப்பைகள் இன்னும்
என் இதயத்தில் ஒட்டியிருக்கின்றன
மாற்றத்தை நான் எனக்கல்ல
கோர நினைவுகளுக்கு இனிய
மேக்கப்போட்டு தெருவில்
திரியவிட்டவர்களுக்கு
தர நினைக்கிறேன்
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

ஈழத்தமிழனா? ஈழ இந்துவா? -சிவாஜிலிங்கத்தின் திருவிளையாடல்

செப்டம்பர் 16, 2009 by kalagam
ஈழத்தமிழனா? ஈழ இந்துவா? -சிவாஜிலிங்கத்தின் திருவிளையாடல்118vinayakerselaibox-01_ad
ஒவ்வொரு ஆண்டு வினாயகர் சதூர்த்தி விழாவிலேயும் புதுப்புது அவதரம் எடுத்து வருவார் வினாயகர். கையிலே பூ, லட்டு, கையில் துப்பாக்கி, ஏ.கே47, பீரங்கி இப்படி எத்தனையோ அப்புறம் ரெண்டு பேரை தொடையில் வைத்துக்கொண்டு, பக்காவாய் சீன் காட்டிக்கொண்டு வருவார் நம்ம கணேசு.
இந்த ஆண்டோ ஈழப்பிள்ளையார், பிரபாகரன் பிள்ளையாரென  மேலும் தன் பங்குக்கு அவதாரம் எடுத்து இருக்கிறார். கோவையில் நடந்த இந்து மக்கள் கட்சி என்ற பாசிச சேக்காளிகளின் சதூர்த்தி விழாவுக்கு கொடியசைத்து துவக்கியும் வைத்திருக்கிறார்.
அண்ணார் சிவாஜிலிங்கத்தின் (M.P) உதிர்ந்த முத்துக்கள்

// இலங்கையில் வாழும் தமிழர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனர். இவர்களை இனவெறி சிங்களர்கள் இன்று நேற்றல்ல, 1958 முதல் அழித்து வருகின்றனர்.
இதுவரை 2,000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பவில்லை. 2000ம் ஆண்டு, கோவிலில் இருந்த விநாயகரை பெயர்த்தெடுத்து, அருகில் உள்ள குளத்துக்கு இழுத்துச் சென்று மூழ்கடித்தனர்…………………………………………………………
இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் இருந்தும், ஈழத் தமிழர்களை காப்பாற்ற இயலவில்லை என்பது வேதனை அளிக்கிறது.//
——————————————————————————————————————————————————————————–
இப்படி பார்ப்பன பாசிசத்தின் அரவணைப்பில் பெறப்போகும் இந்து ஈழத்தில் தாழ்த்தப்பட்ட, பிறமத மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு இடம் இருக்குமா என்ன?
இல்லையில்லை ஒரு அகதியின் ஆதரவு முயற்சிதான் இதை கொச்சை படுத்தக்கூடாதென்பவர்களுகளே ,நியாயமாய் பதில் சொல்லுங்கள் இது வரையிலான பாரியப்பின்னடைவுக்கு  முக்கிய காரணமான இந்தியாவை நீங்கள் மக்களிடம் அம்பலப்படுத்தினீர்களா? காங்கிரசு தவிர வேறு கட்சி வந்தால் ஈழத்தை பறித்து கையில் தருவார் என நீங்கள் சொல்லி சொல்லி இந்திய மேலாதிக்கப்போரை காங்கிரசின் தனிப்பட்ட போராக மாற்றினீர்களே. இது ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்துவதாக ஆகாதா?
தமிழ்தேசியம் என்ற பதத்தின் முழுமைக்குமே எதிரானதுதான் பார்ப்பனீயம். அது ஈழம் அமைய ஆதரவு தரும் என நீங்கள் நம்புங்கள். அதைப்பொதுக்கருத்தாக்க முயல்வதற்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா இந்த தமிழ்தேசியம் பேசுவோருக்கும், சிவலிங்கத்துக்கும். யார் கிடைத்தாலும் அவர்களின் முதுகில் ஏறி பறிக்க இது என்ன பலாப்பழமா? மக்களைத்தவித்த இந்த சுய நலமிகளின் கூத்தினையே போராட்டமாக சித்தரித்துக்கொள்கிறார்கள்.

ஈழத்தில் நடந்த நடக்கும் இனப்பிரச்சினையை மதப்பிரச்சினையாக முலாம் பூசுகிறார் அய்யா சிவாஜிலிங்கம். இது ஏதோ புதிதல்ல,  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அர்ஜுன் சிங்காலையும், “காஞ்சி மகா பெரியவரையும்” சந்தித்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்துக்களுக்கு  அருளாசி வேண்டினார்.

தமிழினவியாதிகளெல்லாம் பார்ப்பன செயாவின் சுருக்குப்பையில் ஈழத்தினைத்தேட அதையே கொஞ்சம் ஹை லெவலில் செய்தார் நம்ம லிங்கம். இது வரை நாமெல்லாம் நினைத்தது போலல்ல ஈழத்தினர் எல்லாம் தமிழர்கள் அல்லவாம் அவர்கள் இந்துக்கள் என புதிதாய் கோடு போட்டுக்காட்டினார். அப்போதிருந்து இப்போது வரை இந்து மதவெறி பாசிஸ்டுகளிடம் அவருக்கு இருக்கும் பாசத்தின் பொருள் மட்டும்தான் விளங்க வில்லை.

ஒரு வேளை சூடு சொரணையற்று தமிழர்களுக்கு இந்த வழியிலும் இனப்பற்றினை ஊட்டுகிறார் போலும்.இந்து மத பர்ப்பனீயத்தின் வரலாறு அவருக்குத்தெரியாதா ? இல்லை நமக்கு தெரியாதென நினைக்கிறாரா?

அதிகம் இல்லை என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் எப்போதாவது நீங்கள் மக்கள் பக்கம் இருந்திருக்கிறீர்களா?

வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்

செப்டம்பர் 13, 2009 by kalagam

வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்

மாதங்கள்
உருண்டோடிவிட்டன
ரணங்களை  இன்னும்
அழிக்கமுடியவில்லை என்னால் ……
ealam_b
கர்ப்பிணி பெண்களின் வயிற்றினை
கிழித்து சூக்குமம் தேடின
குண்டுகள்
செத்த தமிழரின்
உடலையும் துளைத்தன சிங்கள
வெறி வண்டுகள்….
தலையில் கட்டு போட்டபடி
அம்மாவும் மகளும்
அழுது கொண்டிருந்த
அக்காட்சி போய்விட்டதா மனதில்
ealam_c
பிணத்தோடு பிணமாய்
பிணமாவதற்கு தயாராகிக்
கொண்டிருக்கும் அவரின்
கண்களில் கேள்விகள் தெறிக்கின்றன
என்ன பாவம் செய்தோம்…..
அவர் வருவார், இல்லையில்லை
இவர் வருவார் ஒரே நாளில்
அதிசயம் நடக்கும் – கனவுகள்
தான்  நடப்பதில்லையே
வந்த படங்களைவிட வராதபடங்கள்
வராதவையாகவே இருக்கட்டும்
இருபதினாயிரம் பேர்
இன்னும் ஐம்பதாயிரம் பேர்
எண்ணிக்கைகளுக்கு
எண்ணத்தெரியவில்லை……
அப்பன், மாமன், மனைவி, கணவன்,
மச்சான் எல்லோரையும் இழந்து
விசத்தை கேட்கும் அந்த மனம் இனி
யாரை நம்பும்,
நம்பிக்கையாய்
இருக்க என்ன செய்தோம்
ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்பதைத்தவிர…..
கம்பிதாண்டி போனவர்கள்
கருகிப்போய் கிடக்கிறார்கள்
வாழ்க்கையில் உதிக்காது
சோத்துக்கு நிற்கயில்
உள்ளங்காலில் சூரியன் தகிக்க
அதை விட சுடுமா
துப்பாக்கியின் ரவைகள்….
ealam_e
விடுதலையின் வெப்பம்
குறைந்திடுமா என்ன
தெறிக்கும் ரத்தத்தில்
மரண சத்தத்தில்
ஜீவிப்பார்கள் நாளைய புதல்வர்கள்

இது என்ன ஜோசியமா
இல்லை-வரலாறு
ஆம் ஜாலியன் வாலாபாக்
பகத்சிங்கை பெற்றெடுத்தது
பூங்காவில் சுற்றிவளைக்க
பரங்கியர் தலையுடைத்து சரித்திரம்
சொன்னான் எங்கள் தோழன் ஆசாத்…..

தேடுதல் வேட்டைகள் தேடத்தேட
விழுந்த பிணங்களோ ஆயிரமாயிரம்
தியாகம் அள்ள அள்ள வற்றாத நதி
எங்கள் நக்சல் பரி

பாரிஸ் புரட்சி தோல்வி தான்
ஆனால் முடிந்து விட்டதா
போராட்டம் ?
செத்த பின்னும்
பிணங்களை கண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறது
ஆளும் வர்க்கம் -  இன்று வரை
அது  பயந்தோடுகின்ற
சொல் எது  தெரியுமா?
மக்கள்………ealam_d

ஆம்
கைகோர்ப்போம் இங்கு
வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் !
கண்ணீரைதுடைத்து
கட்டியமைப்போம் மக்கட் படைகளை
உரத்து முழங்குவோம்
ஏகாதிபத்தியம் ஒழிக !
இந்திய மேலாதிக்கம் ஒழிக ! !
சிங்களபேரினவாதம் ஒழிக ! ! !
சிவப்பு பயங்கரவாதத்தில்
மூழ்கிப்போகட்டும் பேரினவாதம்,
சின்னாபின்னமாகட்டும் மேலாதிக்கம்
ஏகாதிபத்தியத்தை பிணமாய்
ஏற்றுமதி செய்வோம்….french_revolt
சிவப்பு அது பட்டு போகாது
சுத்தியலும் அரிவாளும்
இனி அறுவை சிகிச்சையின்
கருவிகளாகட்டும்.

நான் வெறி பிடித்தவன்

செப்டம்பர் 7, 2009 by kalagam

nepal copyநான் வெறி பிடித்தவன்

ஏனிந்த மாற்றம் என்னில்
எப்போதும் போல
இல்லை இன்று
அவ்வப்போது இப்படித்தான்
சில செய்திகள் என்னுள்
சந்தோசத்தில் மிதக்கின்றன
ஏனென்று தெரியவில்லை
ஆனாலும் இவற்றுக்காக
 சந்தோசப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன், இருப்பேன்….
 
பல செய்திகளுக்கு நானே
வருந்துவது  சில
செய்திகளுக்கு
வலிந்து மகிழ்வதும் ஏனென்று
புரியவில்லை……
 
எப்போதும் எரிச்சலுடன் தொடங்கும்
என் காலை  
இன்று நாளிதள்களை
புரட்டியவுடன் காணாமல்
போனது

நேற்று  ஆந்திரத்தில் விவசாயிகள்
தற்கொலை, முந்தா நாள்
கயர்லாஞ்சியில்
கொல்லப்பட்ட எம் மக்கள்
முந்தா நாளுக்கு முந்தி
மார்பு அறுக்கப்பட்ட தாய் மார்கள்…..

எல்லாம்  கவலையாய்
என்னுள் அடைத்து எங்காவது
எப்போதாவது  வெடிக்கும்
அப்படித்தான் இன்றும்…..

 
பல்லாயிரம் மைல்களுகளுக்கு
அப்பால் நேபாளத்தில்
ஒரு பார்ப்பன வெறியனின் பூணூல்
அறுக்கப்பட்டதாம், ஆடைகள்
கிழிக்கப்பட்டதாம்
அவன் முகம்
சிதைக்கப்பட்டதாம்….

அறுக்கப்பட்ட இடத்தில் தான்
நாங்கள் துளிர்க்கிறோம்
கிழிக்கப்பட்ட இடத்தில்
நாங்கள் மலர்கிறோம்
சிதைக்கப்பட்ட இடத்தில்
பிறக்கிறோம்….

அவர்களைப்போல
எல்லாம் கடவுள் செயல்,விதியென்று
சொல்வதில்லை,

இது தண்டனை
பூணூல் கொழுப்பில்
நான் விபச்சாரியின்
மகன் ஆனதற்கு
ஆக்கவைக்கப்பட்டதற்கு தண்டனை…..
 
இதென்ன கொடுமை வெறிபிடித்தவனே
தூற்றலாம் என்னை
அவன் அழுதால்
உனக்கு மகிழ்ச்சியா கேட்கலாம்

 

 
பூணூல் அறுபட்டால், எம் மக்கள்
கோயிலில் நுழைந்தால் துடிக்கும்
உன் தசைக்கு  தெரியுமா
 அந்த உணர்ச்சிக்கு பேர் என்னெவென்று? 
நீ சொல்லலாம் அது மனிதாபிமானம்….

நான் பெருமையாய் சொல்லுவேன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்

 

 

பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

ஆகஸ்ட் 26, 2009 by kalagam

பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி
அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

பழ.கருப்பையா. மிகச்சிறந்த கட்டுரையாளர். எந்த ஒரு விசயத்தையும் தேன் போல அருமையாக எழுதுவார். அவரின் சில கட்டுரைகள் நந்தனில் கூட வந்ததாக கேள்வி. கடந்த புதன் கிழமை பார்ப்பன பாதாளச் சாக்கடையின் புழுவாக தன்னை வெளிக்காட்டிய போது பத்திரிக்கை உலகம் அவரை உச்சி முகர்ந்திருக்கும். அப்படி ஒரு சேவை பார்ப்பனிய பாதத்துக்கு.

கருப்பையா எழுதிய கட்டுரை ” ஏன் இந்த நோய்ச்சிந்தனை?” ஆம் அந்தக் கட்டுரைதான் அவரின் பார்ப்பன நோயை வெளியே எடுத்துக்காட்டியிருக்கிறது. கருணாநிதி சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவின் போது  சொன்ன வார்த்தைகள் தினமணியியின் பாதத்தில்  முள்ளாக குத்த  மணியின் முக்கிய  விருந்தாளியான அவருக்கோ அது இதயத்தையே குத்தி விட்டதாம். முன்னேறுவதற்கு சாதி தடை இல்லை அது ஒரு கற்பனை, பிழைப்புவாதமென்கிறார்.

கருணாநிதி ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பது தெரிந்த விசயமே. ஆனால் அவர் பிழைப்புவாதியென்பதை பார்ப்பனரை விமர்சனம் செய்தவுடன் தான் புரிந்து கொண்டு வெம்பியிருக்கிறார் அன்ணன் தினமணிக்கு தட்டாத தம்பி. சமீப காலமாக தின மணிக்கு தமிழர்கள் மீதும் திராவிட இயக்கம் மீதும் அளவில்லா பற்று, அய்ய்யோ திராவிட இயக்கம், தமிழகம் இப்படி சீரழிகிறதே என ஒப்பாரி வைத்து, தான் நினைப்பதை தன் விருந்தாளிகள் (நெடுமாறன், பழ.கருப்பையா, நடராஜ், விஜயன்,)
மூலம் பொதுக்கருத்தாக்க முனைகிறது.

சர்வக்ஞர்  பிற்படுத்த சாதியை சேர்ந்தவரென்பதால் புகழ் பெற முடியவில்லை என்றார் கருணாநிதி. உடனே பார்ப்பன பதர்கள் பொங்கியெழ அதற்கு தடை போட்டு நானே இறங்குகிறேன் என இறங்கி விட்டார் கருப்பையா . அவரின் வாதமெல்லாம் உதாரணமெல்லாம் எதற்கு ஏன் எல்லாம் ஒன்றை  மட்டுமே சொல்லுகின்றன ஒன்றை நீரூபிக்க “சாதி வேறுபாடில்லை” என்ற பொய்யை மெய்யாக்க.  வள்ளுவன் என்ன மேல் சாதியா அவன் முன்னேற புகழ்பெற எந்த சாதி தடையாய் இருந்தது?

தமிழகத்தை அதன் போக்கை மாற்றிய அன்ணா முற்பட்ட சாதியா?  எல்லாவற்றையும் விட கருணாநிதி என்ன மேல் சாதியா கீழ் சாதி தானே, அவர் 5 முறைமுதல்வராக வில்லை அவரை எந்த சாதி தடுத்தது?  இத்தனைக்கும் அவர் சாதி சிறுபான்மை. பாரதி பார்ப்பான் என்பதால் மட்டும் புகழ்பெறவில்லை அவனுடைய அறிவே அவனின் புகழுக்கு காரணம் அப்படிப்பார்த்தால் பாரதிதாசன் கூட பிற்பட்ட சாதிதானே?

உயர் சாதியான பார்ப்பனர்கள் தொன்று தொட்டு வழிபட்டு பின்பற்ற அதை எழுதியவர்களின் சாதி தடுக்க வில்லையே? திருமூலர் கூட இடையன் தானே அவர் புகழடையவில்லையா? ஆக சாதி எப்போதும் ஒருவன் முன்னேர தடையாய் இல்லை.

மொத்தமாய் அவர் சொல்லவருவது பார்ப்பனர்கள் சாதி பார்ப்பதில்லை கீழ் சாதிக்காரன் எழுதிய புத்தகத்தை தனது வேத நூலாக பயன் படுத்துகிறார்கள். ஆனால் கீழ் சாதியிலிருந்து போன கருணாநிதி போன்றவர்கள் தான் சாதியை தினம் வளர்க்கிறார்கள். சாதியை கடந்த சமுதாயத்தில் சாதிப்பிரச்சினை வேண்டுமென்றே புகுத்தப்படுகின்றது.

இது சாதி இல்லாத சமுதாயமா?

கேட்கும் போது இனிப்பாகத்தான் இருக்கிறது? ஆனால் உண்மைகள் காதில் அறைந்து சொல்கின்றன , உறைக்கவைக்கின்றன. பாரதி பார்ப்பனன் என்பதனைத்தவிர எதனால் புகழ்பெற்றான்?. மதிமாறன்  எழுதிய பாரதிய ஜனதா பார்ட்டியிலும் தோழர் மருதையன் எழுதிய அது குறித்த கட்டுரையிலும் தெளிவாய் கோடிட்டு காட்டினார்கள். பறையர்கள் இந்துக்களை அடித்துவிட்டார்களே ஏன் இன்னும் சும்மா இருக்கிறீர்கள் என இந்துக்களை திமிறி எழச்சொல்கிறார் பாரதி. பறையர்களுக்கும் பூணூல் அணிவித்துவிட்டு  அவர்களை இந்துக்களை கொண்டு தாக்க  சொன்ன ஒரு கிரிமினல் பேர்வழி யாரால் தூக்கிப்பிடிக்கப்படுகிறான் பார்ப்பனீய கருத்துக்களை தூக்கிப்பிடிப்பவர்களைத் தவிர?

பிறப்புச்சாதிக்குண்டான தொழிலை செய்யவேண்டுமென்று சட்டம் போட்ட ராஜாஜி என்ற சாதி வெறி பிடித்த அயோக்கியன் மூதறிஞர் எப்படி ஆனார் தன் பிறப்புத்தகுதியைத்தவிர?  ஏன் நம்முடைய சங்கராச்சாரியை எடுத்துக்கொள்ளுங்கள் சொர்ணமால்யாவோடு கும்மாளம், பெண் எழுத்தாளரை மானபங்க படுத்த முயற்சி, கொலை வழக்கில் முக்கியபுள்ளி என இத்தனை கேடித்தனங்கள் இருந்தாலும்  அவன் ஜெகத் குருவாக நீடிக்க நீட்டிக்க வைப்பது எது அந்த பூணூலைத் தவிர.

மற்ற சாதியில் பிறந்த யாரும் குற்றமே செய்யவில்லையா எனலாம் அப்படி சொல்லவில்லை எல்லா சாதியிலும் அயோக்கியன் இருக்கலாம் . ஆனால் அயோக்கியனாய் இருந்தாலும் பார்ப்பனன் என்பதற்காகவே மேற்கண்ட “தலைவர்களெல்லாம்” புகழப்பட்டார்கள் , புகழப்படவுமிருக்கிறார்கள் என்பது உண்மையா பொய்யா? அதற்கு பார்ப்பன சமூகமே முன் வந்து ஆதரவளிப்பதும் பொய்யா?

சட்டசபையில் நான் பாப்பாத்தி என சூளுரைத்த செயலலிதாவை கண்டித்ததா தினமணி, மடத்தைவிட்டு ஓடிப்போன காமேஸ்வரனின் லீலைகளை விமர்சித்ததா தினமணி, சர்வக்ஞர் விழாவில் பேசிய கருணநிதிக்கு தனது அல்லக்கை மூலம் விமர்சனம் செய்யும் திணமணி இப்படி செயாவை சாதி ரீதியாக ஒப்பிட்டு எழுதுமா ஒருவேளை(!!!!!!!) வந்தாலும் நம் கருப்பையாதான்  எழுதிவிடுவாரா என்ன?

என்ன சாதி தடை இல்லையா? நிகழ்காலம் கொஞ்சமல்ல ரொம்பவே கசக்கிறது. அகற்றப்படாத ரெட்டைக்குவளைகள், ஒதுக்கப்படும்குடியிருப்புக்கள்,மறுக்கப்படும் ஆலய வழிபாட்டு உரிமை இப்படி எத்தனையோ இருக்க சாதி ஒரு தடை இல்லை என்கிறது பார்ப்பனீயம், கருப்பு பார்ப்பனன் பழ.கருப்பையாவோடு கும்மியடித்தவாறே.

வள்ளுவனுக்கு குறுக்கே நிற்காத சாதி எதற்கு நந்தனை மறித்து எரித்தது?  வேதம் எழுத தடை விதிக்காத சாதி ஏன் ஏகலைவன் விரலை வெட்டியது.  திருமூலரின் புகழை தடுக்காத  சாதி நிகழ் காலத்தில்   ஆறுமுக சாமியை எதற்கு  அடித்து வெறியாட்டம் போட்டது?

அன்ணாதுரையும் கருணாநிதியும் முதல்வரானது சாதி இறந்ததற்கு அடையாளமாம். அப்படியாயின் கயர்லாஞ்சி பாலியல் கொலைகளும் , பாப்பாப்பட்டி கீரிப்பட்டி கொடுமைகளும் எதை உணர்த்துகின்றன?தமிழ் நடராசனின் காதில் விழாமலிருக்க ஊளையிட்ட தீட்சிதர்களின் ஆணவம் எதை காட்டுகிறது? ஒரு வேளை இவையெல்லாம் மாயையாக தெரிகிறதா தினமணிக்கும் கருப்பையாவுக்கும்.

மாயையாகத்தெரியலாம் ஆனால் பாதிக்கப்படபோவது பாதிக்கப்பட்டது உழைக்கும் மக்களல்லவா?பூணூலை மாட்டிக்கொண்டு டேய் சூத்திரப்பசங்களா நான் மேல் சாதி என்று  கிளம்பும் பார்ப்பனத்திமிர்தான்  திராவிட சித்தாந்தம் சீரழிவதை பற்றிகவலைப்படுகின்றது. அதுவே ஒப்பாரியும் வைக்கிறது எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று.

இளையராசா மேல்  தாழ்த்தப்பட்டவரென்பதால் சொல்கிறது ஏன் அவர் முன்னேறிவரலை திறமை இருந்தா நீ வா ! உன்னை எது தடுக்குது? இளையராசா கும்பாபிசேகத்துக்கு காசுகொடுத்தாலும் உள்ளே வரவிடாமல் எது தடுத்ததோ? எது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வழக்குப்போடு முடக்கியதோ,  மகாமகத்தின் போது தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை  எது மாற்றியதோ அதுதான் பார்ப்பானை பார்ப்பானவே நீட்டிக்கவும் வைக்கிறது  தாழ்த்தப்படவனை பிற்படுத்தப்பட்டவனை அப்படியே இருக்கச்செய்கிறது.

என்னதான் பணக்காரனாயிருந்தாலும் கருவறைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை பிறப்புதானே தீர்மானிக்கிறது. கோயிலை அரசுவசமாக்கிக்கொண்டால் சாமிக்கு நைவேத்தியம் பண்ணமுடியுமா  என கவலைப்படும் தினமணி  அந்தக்கோயிலுக்கு தன் உழைப்பை பொருளைகொடுத்தவனுக்கு கருவறையில் நுழைய அதிகாரம் இல்லை என்கிறது .

பழ.கருப்பையா மூலம் தனது பார்ப்பன அரிப்பை தீர்த்துக்கொண்ட தினமணிக்கு  நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும்  அஞ்சத  நெறிகளும் எதற்காக யாருடைய தேவைக்காக?  எதற்கு? பூணுலுக்கு மேக்கப் போடுவதைத் தவிர.

 

 

ஆகத்து 15

ஆகஸ்ட் 15, 2009 by kalagam

aug15இந்திய சுதந்திரத்திற்கு
பிறந்த நாளாம்
இந்தியாவே
நீ பிறந்த நாள்தான்
எம் மக்களுக்கு துக்க நாள்…..

இந்தியர்களின் ரத்தம்
கொதிக்கலாம் இன்னும்
எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
கொதிக்கட்டும் மானத்தை
இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்குமாம்
ஆனால் இங்கு
நடப்பதே வேறு
மனிதத்தை,சுயமரியாதையை
பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
கொதிக்கிறதோ இந்தியம் ….

ஆயிரம் செண்ட் அடித்தாலும்
துரோகத்தின் ரத்த கவுச்சி
போவதில்லை – உழைக்கும் மக்களின்
ரத்தத்தை நக்கிக்கொண்டே
உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
பிறந்த நாள் சரி
பிறக்காமலே இறந்து
போன கதை தெரியுமா?

ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
நாளை வெளியுலகம்
பார்க்க ஆவலாயிருந்ததாம்
கரு
மருத்துவச்சியாய் ஆட்லெறி
குண்டுகள் மாற
தாயும் சிசுவும் பரந்த வெளியில்
சிதிலங்களாய்
பிணதிண்ணியாய்
இந்திய மேலாதிக்கம்…..
ஆகத்து 15

எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்

ஈழத்தில் பிறந்த நாளை
இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
அன்று தான் பிறந்த நாள்

அவன் கதை முடிக்க
ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
பறையடித்து சொல்லுவோம்
ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.

எய்ட்ஸ் விளம்பரங்கள் – மனிதனைத்தின்னும் தொற்று நோய்கள்

ஆகஸ்ட் 10, 2009 by kalagam

எய்ட்ஸ் விளம்பரங்கள் மனிதனைத்தின்னும் தொற்று நோய்கள் aids copy

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கே.கே நகருக்கு நானும் எனது நண்பர்கள் சிலரும் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தோம். காலையில் வந்த வேலை முடிந்து போகவே அப்படியே டீக்கடையில் ஒதுங்கினோம். அப்போது ஒரு குரூப் வந்து கொண்டிருந்தது, ஒரு ஆண் கோமாளி வேசம், மற்ற படி மூன்று பெண்கள். கழைக்கூத்தாடிகள் போல உடையணிந்து கொண்டு வந்திருந்தார்கள். டீக்கடைக்கு முன்தான் பஸ் ஸ்டாப் மற்றும் பெரிய நிழல் தரும் மரமிருந்தது.

 

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு நாலு டீ ஒரு பால் என்றவாறு ஆர்டர் செய்தோம். நண்பர் கேட்டார் யாருங்க இது? பதில் தரும் வகையில் கோமாளி வேசம் போட்டவர் ஒரு பேனரை விரித்து வைத்தார். அதில் “பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையே சிறந்தது” “வெளியில் போனாலும் சரி யாரிடம் போனாலும் சரி ஆணுறை பயன்படுத்துங்கள்” என்றிருந்தது. கொடுத்த டீயை விட வசனம் சூடாக இருந்ததால் கோதாவில் இறங்கினோம்.

 

முதலில் நான் ஆரம்பித்தேன் கோமாளியிடம் சென்று “எனக்கு ஒண்ணுமே புரியலை அங்க என்ன போட்டு இருக்கு” என்றபடியே பேனரை சுட்டினேன். கோமாளிக்கோ ஒரு சந்தோசம். என்னை வைத்து அரசியல் பண்ண ஆரம்பித்தார். நான் அவரை வைத்து அரசியல் பன்ண வந்திருக்கிறேனென்று தெரியாமல்.

 

“எல்லோரும் இங்க வாங்க அண்ணன் என்னவோ கேள்வி கேக்குறாரு? அண்ணே இன்னொருவாட்டி கேளுங்க” மறுபடியும் கேட்டேன் அவர் சொன்னார்”அதாவதுன்னா உடலுறவு மூலமாத்தான் எய்ட்ஸ் பரவுது, நீங்க யார்கிட்ட போனாலும் சரி ஆணுறைய மட்டும் மறக்காம போடுங்க” பெருமிதத்தோடு, கூட இருந்த பெண்களுக்கும் அப்படி ஒரு சந்தோசம். நான் ஆரம்பித்தேன் “ஏங்க ஆணுறை போட்டுக்கிட்டா எய்ட்ஸ் வராதா?” “ஆமா கண்டிப்பா வராதுண்ணா” தனக்கே உரிய ஏற்ற இரக்கங்களோடு.

 

“அது வேற மேட்டர், சரி அது என்ன யாரிடம் போனாலும் சரி, வெளியில் போனாலும் சரின்னு போட்டு இருக்கு” “அது வந்து ……..எச்சில் முழுங்கியபடி ஆரம்பித்தார் அது ஒரு எழுத்து நடைக்காக போடுறது சரின்னா கரெக்ட்ன்னு அர்த்தம் இல்லை சும்மா. நண்பர் கேட்டார் “சும்மாவா அது என்ன சும்மா வெளியில் போறது சரின்னு எழுதி விட்டு சும்மான்னா என்ன அர்த்தம்?”

 

அவர்கள் ஏதோ எழுத்து நடைக்குள் திசை திருப்புவதை உணர்ந்து மீண்டும் கேட்டேன் ” அய்யா ஒரு சந்தேகம் வெளிய விபச்சாரிகிட்ட போனா ஆணுறை போடுறது சரி, தேவைன்னு சொல்லுறீங்க இல்லைன்னா எய்ட்ஸ் வரும் அப்புடீங்கறீங்க, ஆனா அது சரியா? தவறா?ன்னு சொல்ல மாட் டேங்குறீங்களே? இது என்ன அயோக்கியத்தனம்? யார் யார்கிட்ட வேணுமினாலும் போங்க ஆணுறை போட்டுகிட்டு போன்னா என்ன அர்த்தம்நீங்க எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்ய வந்தீங்களா இல்ல ஆணுறை கம்பெனிக்கு விளம்பரம் தேட வந்தீங்களா இல்ல ஆள் பிடிக்க வந்தீங்களா என்றவாறு அந்த கோமாளியையும் பெண்களையும் கேட்டேன். அமைதியாய் இருந்தார்கள்.

 

நண்பர் சொன்னார்”வாய் மூடி இருக்கறதுல்ல பலனில்லை பதில் சொல்லியே ஆகணும்”. பகிரங்கமாய் கொஞ்சம் சத்தமாக நடந்த இவ்விவாதத்தை பார்க்க டீ குடிக்க, பேருந்து நிறுத்தத்திற்கு வந்த வர்களென ஒரு கூட்டமே கூடிவிட்டது. ஒரு டிப்டாப் ஆசாமி மட்டும் ஏதும் பேசாது கவலைகளின் ரேகைகள் ஓட நண்பரின் அருகில் நின்று கொண்டிருந்தான்.

 

கோமாளி கொஞ்சம் காட்டமாய் சொன்னார்”எவன் எவன் யார்கிட்ட வேணுமினாலும் போலாம் அது தனி மனித உரிமை அத நாங்க தடுக்க முடியாது, அது எங்க வேலையும் இல்லை, ஆணுறை போடுன்னுதான் சொல்ல முடியும் அவுசாரிகிட்ட போறவனை தடுக்கவாமுடியும்”. ரொம்ப சந்தோசம் ஆணுறை போடுன்னு சொல்லுற வாயால கூடா உறவுன்னு சொன்ன என்ன குறஞ்சு போவீங்களா?”

 

மீண்டும் சொன்னார் கோமாளி”அது தனிமனித உரிமை அதை கேக்க வேண்டிய அவசியம் இல்லை” ” என்னது? தனிமனித உரிமையா? ஒரு கனவன் தன் மனைவியிடம் உறவு கொள்வது வேண்டுமானாலும் தனிமனித உரிமையாயிருக்கலாம். ஆனால் இன்னொரு மணமானவர் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்வது தனிமனித உரிமைன்னு சொல்றத இப்பத்தான் கேள்விப்படுறேன், அப்படீன்னா இந்த நாட்டுல விபச்சாரியிடம் உறவு கொள்வதும், கள்ளகாதலும் தப்புன்னு சட்டம் சொல்லுது, கைதுன்னு தினம் பேப்பர்ல வருது, ஆனா இப்படி சொல்லுறீங்களே?

 

ஆணுறை விளம்பரத்துக்காக வந்தீங்களா? இல்லை உண்மையாவே எய்ட்ஸ் தடுக்குற நோக்கத்தோடு வந்தீங்களா? ஆமா நீங்க எல்லாம் யாரு? தாங்கள் தன்னார்வக்குழுவினர் என்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணவிற்காக வந்ததாகவும் கூறினார்கள் அப்பெண்கள். முடிவாய் சொன்னோம்

 

 ”உங்கள் பிரச்சாரம் கள்ள உறவினை தடுப்பதாக, பெண்ணை ஒரு பண்டமாக மாற்றுவதினை எதிர்க்க வேண்டுமே தவிர ஆணுறைக்கு ஆள் பிடித்து த ருவதாய் அமையக்கூடாது”. “ஒரு தன்னாவர்வ குழுவான நீங்கள் மக்களுக்கு உண்மையை சொல்வதற்காக உருவாகவில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கிக்கொண்டு மக்களிடம் அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்காகத்தானே.

அவன் அதிரடியாய் சொல்வதை நீங்கள் மென்மையாய் சொல்கிறீர்கள்” வேறு வழியின்றி கோமாளியும் கூட்டத்தப்பார்த்து இனிமேல் நாங்க அப்படியும் சொல்லுறோம் என்றவாறு கூத்தடிக்காமலே சென்றார்.

 

 தன் குழுவைப்பற்றியோ எங்கிருந்து பணம் வருகிறதென்பதைப்பற்றியோ கோமாளிக்கோ மற்ற பெண்களுக்கோ தெரியவில்லை. கூட இருந்த அந்த டிப்டாப் ஆசாமி உடனே அக்கூட்டத்தோடு எஸ்கேப் ஆனார். பின்னர் தான் தெரிந்தது அவர்தான் அந்த குழுவுக்கு ஆர்கனைசர்.அவன் பேசியிருந்தால் இன்னும் நன்றாக அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஆள் பார்த்து இந்த என் ஜீ ஓ ஆசாமிகளெல்லாம் பேசுவார்கள்.

 

அவர்களை சரியாய் அம்பலப்படுத்தியபோதே தெரிந்து கொண்டு விட்டான் அந்த ஆசாமி அதனால் தான் அமைதியாய், பின் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 

 

இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் வரை பேருந்தினுள்ளே இருக்கும் ஆணுறை விளம்பரங்களை (எய்ட்ஸ் விழிப்புணவு பிரச்சாரமாம்!!) கிழித்துக்கொண்டிருந்தேன். ———————————————————————————————————————————————————————————— கடந்த மாதம் வரை அடிக்கடி ஒரு விளம்பரம் எப்.எம் -ல் ஒலிபரப்பாகிக்கொண்டு வந்தது. வீட்டு வேலைக்காரியிடம் அண்ணி துணி எடுத்து போடுவாள் (என்ன மரியாத இவளுக்கெல்லாம்) துவைக்கச்சொல்லி, அதில் கணவனின் தம்பியின் பேண்ட் பாக்கெட்டில் ஆணுறையை பார்த்துவிட்ட வேலைக்காரி சொல்ல அதற்கு அண்ணி காண்டம் தான தப்பு ஒண்ணும் இல்லையே.

 

 கார் சாவியை எடுத்ததை விட காண்டம் பயன் படுத்துவது தவறில்லை என்கிறாள். மேலும் இன்னொரு விளம்பரத்தில் கிளிக்கு,நாய்க்கு காண்டம் என பெயர் வைப்பது என்று காண்டம் என கூறுவது தப்பில்லைஎன கிழவி வந்து சொல்கிறது.

 

இதன் மூலம் முதலாளித்துவம் மாபெரும் உண்மையை சொல்லித்தருகின்றது. தவறை நான் சொல்வது போலச்செய் அது தவறே அல்ல. கட்டற்ற பாலியல் உறவுகளை கோருகிறது ஏகாதிபத்தியம், முதலாளித்துவம்.

மனிதனை தன் சுயமரியாதையை, தன் நிலமையை எதிர்த்து போராடுவதற்கு எதிரான எல்லாவற்றையும் எளிதாக தருகிறது. அதன்படி தான் இந்த “யார்கிட்ட வேண்டுமானாலும் போ ஆணுறையை யூஸ் பண்ணு”. இதையே தன்னாவக்குழுக்கள், அரசு என அனைவரும் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால் பெண்ணை கட்டற்ற பாலுறவின் நோக்கத்துக்கான இந்த பல விளம்பரங்களில், பிரச்சாரங்களில் நடிக்கும்பல பெண்கள் என்னவோ நாட்டுக்கு சேவை செய்வதைப்போல பெருமையாய் நடிக்கின்றனர்.

 கண் முன்னே நாடு பற்றி எரிவதைப்பற்றி, விவசாயம் அழிவதப்பற்றி, கைத்தறி நசிந்ததைப்பற்றி துளிவார்த்தை பேசாது தினவெடுத்து திரிபவனுக்கு பாதிப்பு வருமாம் ஆணுறையை பயன்படுத்தச் சொல்லி பிரச்சாரம் வேறு. சற்று யோசித்துப்பாருங்கள் யார் இதற்கெல்லாம் பனத்தை வாரி வழங்குவது?

 

நம் வாழ்வினை , கோவணத்தையும் சேர்த்து பறித்த அதே முதலாளிகள் தான் ஆணுறயை போட்டுக்கொள்வதற்காக பல கோடிகளை வாரி கொடுக்கின்றனர். சும்மா கொடுக்கவில்லை ஆணுறைகள் ஒரு விற்பனைப்பொருள், ஆணுறை மட்டுமல்ல பாலியல் சார்ந்துள பல பொருட்களை விறபனை செய்வதற்கு புதிய யுக்தி தேவைப்படுகின்றது.ஒரு பொருளை விற்க முதலாளி செய்யும் பல டிரிக்குகளில் இதுவும் ஒன்று. தான் போட்டதை விட பல பல மடங்காய் லாபம் தேவை அவனுக்கு. ஏன் நாளை ஆனுறை வாங்காதவர்கள் எல்லாம் கைது செய்யப்படலாம் யார் கண்டது மக்களுக்காகவா அரசாங்கம்?

 

இந்த விளம்பரங்கள் மனிதனை விழுங்கும் தொற்று நோய்கள், மனிதன் தன் சுயமரியாதைக்காக, தன் அடிமைத்மத்தனத்துக்கெதிராகா போராடும் வரை இவ்வகை தொற்று நோய்கள் நம்மை ழுங்கிக்கொண்டே இருக்கும். வர்க்கப் போராட்டம் என்ற அறுவை சிகிச்சை ஒன்றே அதற்கு சரியான மருந்து.

நாத்திக வெங்காயம் – வீரமணியும் பக்தர்களும்

ஆகஸ்ட் 3, 2009 by kalagam

நாத்திக வெங்காயம்
வீரமணியும் பக்தர்களும்veeramani_a copy

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் அம்மனிதரே பார்ப்பன ஆதிக்கத்தையும் அது ஏன் தகர்க்க வேண்டும் என்பதையும் விரிவாக அவரே பேசுவார். அவர் பெயர் பெரியார் ராமசாமி. செருப்பினை வீசினால் கூட அதை பொருட்படுத்தாது தன் கருத்தை வலியச்சென்று மக்களின் மனதில் பதித்து அதை வடித்ததால் தான் அவர் பெயர் பெரியார்.

தந்தை பெரியாரின் காலகட்டத்தை கண்டிப்பாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது முழுக்க முழுக்க பார்ப்பனீயம் தன் அகலக்கால் பரப்பி வந்த காலம், துணிவாய்பேசினார், சமுதாயத்தின்சாதிய, பார்ப்பன ஆதிக்க கொடுங்கோன்மையை நீக்கும் வேலையை தன் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றவர் அவர்.தமிழகத்திலே இன்னும் பார்ப்பன, பார்ப்பனீய எதிர்ப்பு இருக்கிறதெனில் அதற்கு முழுச்சொந்தக்காரர் தந்தைபெரியார்.

தன் கொள்கைக்கு நேர்மையாய், பார்ப்பன, இந்துமத மூடனம்பிக்கைய தகர்க்க ஓடி  ஓடி தன் உயிரைக்கூட சென்னை தி. நகரில் பொதுக்கூட்டத்தில்  பேசியபின் உயிரைவிட்டார். அந்த கடைசிப்பேச்சினை கேட்டுப்பாருங்கள் அல்லது அப்புத்தகத்தை படித்தால் தெரியும். அதில் உரையின் இடையிடையே அய்யோ அய்யோ என வலியின் வேதனையால் என அலறுவார், ஆயினும் உரையை நிறைவு செய்து தன் வாழ்க்கையையும் நிறைவு செய்தார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பன பாதந்தாங்கியாய் சேவை செய்ய விரும்பாது, மக்களுக்காக பலவற்றையும் இழந்து சாதி, மூடனம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு பலமாய் சவுக்கடி தந்த அந்த பகுத்தறிவு பகலவன் 94 வயதில் இறந்து விட்டார். அவர் எழுந்து வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரின் கல்லறையின் மீது ஏறி குதியாட்டம் போடுகின்றது வீரமணி கும்பல்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை (சுமார் 15 ஆண்டுகளுக்கு) சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்”கல்விக்கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகள் ஏன்?” “மலமள்ளும் பாப்பாத்தியயை கண்டதுண்டா?”போன்ற வரிகளெல்லாம் பல சுவர்களில் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துக்கொண்டு போகும் போது சிறு பள்ளி வயது மாணவனான எங்களுக்கெல்லாம் பெரியாரை முழுமையாய் தெரியாது, வீரமணியைத்தெரியாது ஆனால் அது உண்மைஎன்று மட்டும் புரியும்.

பின்னர் திகவிலிருந்து பெரியார்திகவினை சிலர் ஆரம்பித்து பின்னர் கொளத்தூர் மணிதலைமையிலான த.பெ.தி.க வும் இணைந்து பெ.தி.க ஆனது. தந்தை பெரியார் ஆரம்பித்த திகவும் அதன் சொத்துக்களும் வீரமணிவசம் சிக்கி குட்டிபோட்டு  குட்டிபோட்டு மிகப்பெரிய மூலதனமாகிவிட்டது. சாகும்வரை மூத்திரவாளியோடு அலைந்து கொண்டிருந்த அந்தக்கிழவர் கனவிலும் நினைத்திருப்பாரா தான் வாங்கி சேர்த்தப்பணம் இப்படி கல்லாக்கோட்டையாகுமென்று.

பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என சாகும்வரை சொல்லிச்செத்த அந்தக் கிழவரின் தளபதியோ பாப்பாத்தி செயாவுக்கு ஒரு காலத்தில் சேவகன். புலிக்கு தான் தான் மட்டும் தான் ஜவாப்தாரி என உதார் விட்ட திக கும்பல் ராஜீவ் கொலைக்குப்பிறகு அடுப்படிக்கு போன பூனைதான் பிறகு போன நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தது.(?)
அதுவரை செயாவுக்கு ஜால்ரா போட்டது, கருணாநிதி  கைதின் போது “சண்டித்தனம் செய்கிறார் கலைஞர்” அறிக்கைவிட்டது எல்லாம் என்ன ஆனது? போலிகம்யூனிஸ்டுகளைப்போல அடிக்கடி அணிமாறி நாங்கள் மாறவில்லை அவர்கள்தான் மாறிவிட்டார்கள் என ஒப்புக்குகூட உதார் விடத்தெரியாது. பார்ப்பன பாசிசத்தினை தமிழ் நாட்டில் வளர்க்க செயாதான் முக்கிய காரணம் எனில் அக்காலகட்டத்தில் செயாவோடு ஹோமபூஜையில் ஒன்றிரங்கி நெய் விட்டது வீரமணி சுவாமிகள்.

இன்றுவரை பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்புக்கு ஆதாரம் என்றால் சுயமரியாதை நிறுவனபுத்தகங்கள் தான் மிகச்சிறப்பானவை, ஏன் வீரமணியின் பேச்சு எவ்வளவு சிறப்பானது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காமல், அவரின் புத்தகங்கள் எத்துணை ஆராய்ச்சி மிகுந்தது? ஆனால் சொல் ஒன்று செயல் ஒன்றென விளங்கும் அயோக்கியத்தனத்தை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

யாரிடம் சென்றாலும் குழைந்து குழைந்து தன் சுயமரியாதையத்தான் வெளிப்படுத்தினார் வீரமணி. ஆம் செயாவிடம் இருக்கும் போது அவருக்கென்றுதனி ஒளிவட்டம் போட்டு, இடஒதுக்கீடு வீராங்கனை பட்டம் கொடுத்து, செயாவுக்கு ஏற்ற  அரசியல்ஜோடிகளை தேடிப்பிடித்து எவ்வளவு  வேலைகளைசெய்தார் அய்யா வீரமணி. இதற்கு அவருக்கு என்ன பட்டம் கொடுக்க வேண்டும்? மாமாமணி என்றால் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது அவரின் பக்தர்களுக்கு.

தன்னை கேவலப்படுத்தி தலைவனை உயர்த்துவான் பக்தன் அப்படிதான் வினவில் பெரியார் விடுதலை கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த வீரமணியின் பக்தர்கள் வானளாவ அவரை புகழ்கிறார்கள். “அந்தக்காலத்துல பெரியார் அய்யாவபத்தி என்ன சொன்னார் உனக்கு தெரியுமா” எதிர் கேள்வி போடுகிறார்கள் திக குட்டிகள். இது தான் பகுத்தறிவா? பெரியார் சொன்னார்” நான் சொல்றேன்னு எதையும் நம்பாதே நீயே யோசிச்சு பகுத்தறிஞ்சு பேசு” ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் சொன்னதை இப்போதும் யோசிக்காது எடுத்து விளக்கம் கூற வந்த திராவிட சிகாமணிகள் எப்படி பார்ப்பனீயத்தை விரட்டுவார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன் வந்த பெரியார் ஆண்டு விழா மலரில் விளம்பரத்திற்காக ஒரு சாமியாரின் விளம்பரத்தையும் போட்டிருந்தார்கள். இதற்கு பெயர்தான் பகுத்தறிவா? மதுவினை காந்தி எதிர்த்தார் என்பதற்காக நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் எங்கே? சாமியார்பயலிடம் காசு வாங்கி  கல்லாவை நிரப்பி காரில் வந்து கொடியேற்றும் வீரமணி எங்கே?

செயாவை விட்டு வந்து கருணாநிதியிடம் வீரமணி ஒட்டிக்கொண்ட சம்பவம் குறித்து திகவின் ஒரு நிர்வாகியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள் அவர் சொன்னார் “இப்போதுதான் சேர்ந்துவிட்டார்களே” அப்படிஎன்றால் இது வரை கருணாநிதியை  நீங்கள் விமர்சித்தது எல்லாம் மறந்து விடவேண்டுமா? அல்லது பாப்பாத்திக்கு சோப்பு போட்டதையெல்லாம் மனதிலிருந்து அழித்து விடவேண்டுமா?
கண்டிப்பாய் எல்லாம் அழியாது இது தந்தை பெரியாரின் மண் சுயமரியாதை பூமி உங்களை போன்ற பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம்? உங்கள் வாய்கள் சொன்னதை உங்களின் காதுகள் மறந்து போகலாம். மறப்பதற்கு மக்கள் ஒன்றும் முன்னாள் போயஸ்கார்டன், இன்னாள் கோபாலபுரத்து  நாய்கள்  இல்லையே?

சட்டமாவது வெங்காயம் என சுயமரியாதைக்கு தடையாக வரும் எதையும் செருப்பால் அடித்த தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கு உரிமை கோருவதினை  சட்டம் தவறு என சொல்கிறது. மேல்முறையீட்டில் வேறு நீதி கூட கிடைக்கலாம். பெரியாரின் எழுத்துக்கள் வீரமணிகும்பலுக்கு சொந்தமாகிவிட்டால் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தலைவரின் வாழ்க்கையும் விற்பனை சரக்காகிவிடும். சுந்தரராமசாமியின் புத்தகங்களை நாட்டுடமையாக்க நினைக்கும் அரசு(கண்ணன் எதிர்ததால் பின்னர் கைவிடப்பட்டது) தந்தை பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க தடுப்பது எது? பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு தகுதியற்றதா?

அதை தடுப்பதுதான் நாத்திக வெங்காயம், கருனாவுக்கு நாயாக இருக்கும்வரை அப்புறம் அடுத்தபடியாக யாருக்காவது வாலாட்டிக்கொண்டே இருந்து அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு சப்பை கட்டு கட்டியே வாழ்ந்து விடலாம். மலத்தில் விழுந்தாலும் காசு காசு தானே.  நாங்க சிடி தயாரித்து விட்டோம் வெளியிடுவதற்குள் பெரியார் திக குறுக்கு வழியில் கைப்பற்றிவிட்டார்கள்  பணம் பேரிழப்பாக அமையும் இதையும் கொஞ்சம் கவனியுங்கள் என்கிறார் வீரமணி மேல்முறையீட்டில். சொல்லப்போனால் பணம் போட்டாச்சு கையைகடிக்குமாம்.

உரிமை அது எல்லோருக்கும் பொது என சொன்னவ்ரின் எழுத்துக்கள் தனியார்மயம்.பகுத்தறிவு தேய்ந்து தேய்ந்து பணம் சம்பதிக்க வந்த கதையும் இதுதான். பணம் சம்பாதிக்க அய்யா வீரமணி அவர்களே பேசாமல் கோயிலைதிறந்து விடுங்கள் சீக்கிரம் கல்லா நிரம்பிவிடும்.அதைவிட்டு விட்டு…….
தந்தை பெரியாருக்கு, அவரின் எழுத்துக்களுக்கு தாங்கள் மட்டும் தானென உரிமை கொண்டாடுங்கள்.அதற்கு பகுத்தறிவு சாயம் மட்டும் பூசாதீர்கள். அது பெரியாருக்குத்தான் மாபெரும் அவமானம். அதைப்பற்றி உங்களுக்கென்ன அக்கறை காசு வந்தால் சரிதானோ.
தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்க

 

http://www.youtube.com/watch?v=QaVmEiQ1jTU

 

http://www.esnips.com/_t_/periyar+speeches?q=periyar+speeches

பிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் – ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்

ஜூலை 23, 2009 by kalagam

பிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்

ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை பார்த்தேன். அப்போதே சேமித்து விட்டு பிறகு அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.

மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது:

நடிகை அமலா “ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள்.

அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. நான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்”……….

உழவுக்கு மாடுகளை பயன் படுத்தக்கூடாது. இது அமலாவின் கோரிக்கை, விலங்குவதைகளை தடுத்து காக்க வேண்டு இது மேனகாகாந்தியுடைய கொள்கை, இன்னும் சிலர் வெறி நாய்க்கடியான ரேபீஸ்க்கு மருந்து ஆட்டின் மூளையிலிருந்து எடுப்பதால். அவற்றைகொல்லக்கூடாது.

 இவ்வளவு அபிமானமா விலங்குகள் மீது. இந்த விலங்கின அன்பர்கள் மீது தவறா ? அமலாவுக்கு மாட்டின் மீது காதல் வந்து மாட்டை அடிக்கக்கூடாது , உழவுக்கு பயன் படுத்தக்கூடது என்கிறார். தெருவில் விலங்குகள் அடிபட்டுகிடக்கின்றன யாருக்குமே விலங்கின் மீது பாசம் இல்லையா என கதறி சட்டையை பிடிக்கிறார் மேனகா காந்தி. இன்னும் சிலர் விலங்குகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என ஊளையிடுகிறார்கள்.

அப்படி அமலா ஊளையிட்ட இடம் எது தெரியுமா ஆந்திராவில் கர்னூல்…. அமலாவுக்கு மாட்டை உழவுக்கு பயன் படுத்தக்கூடாது எனச்சொல்லத்தெரியும் ஆனால் ஆந்திராவுக்கு அருகில் உள்ள மகாராட்டிர மாநிலம் விதர்பாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் செத்ததை, செத்துக்கொண்டிருப்பதை பற்றித்தெரியுமா ? ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து கொண்டது பற்றித்தெரியுமா என்ன?  மாட்டை பற்றி தெருவில் அடிபடும் நாயைப்பற்றி பேசலாம் கேள்விகேட்க ஒரு நாயும் இல்லை இன்னொரு விசயம் அந்த நாய்க்கோ, ஏனைய விலங்குகளுக்கோ வாயும் இல்லை. ஆனால் வாயுள்ள இந்த மனிதனைப்பற்றி பேசுவார்களா இந்த நாய்கள்( நாயைத்தான் ரொம்ப மதிக்குறாங்களே ).

கண்டிப்பாய் பேசமாட்டார்கள் பேசுவதற்கான அடித்தளம் என்ன இருக்கிறது? விலங்குகளை பாவம் என்பவர்கள் மனிதர்களை என்ன சொல்கிறார்கள்? நாடு முழுக்க பரவி விரவிக்கிடக்கும் இந்த விலங்கினங்கள் மற்ற விலங்குகளை பற்றி கவலைப்படுகிறார்களே ஒழிய. மனிதர்கள்? அவர்களைப்பற்றி கவலைப்பட்டால் நேரடியாக அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவசாயம் நசிந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி எதனால் அம்முடிவை எடுத்தார்.

முதல் குற்றவாளியாய் அரசு அங்கு வந்து நிற்கிறது. வெள்ளிப்பட்டறை தொழிலாளி கடன் சுமைதாங்காது சயனைட் தின்று குடும்பத்தோடு மாண்டு போகிறார். இங்கு எதுதான் காரணம்? உலகமயம் எந்திரங்கள் மூலம் ஆபரண நகைகளை குவிக்கிறது. வேலை செய்த தொழிலாளிக்கு வேலைஇல்லை. முன்னர் செய்து வந்த வேலையும் இல்லை . இங்கு யார் குற்றவாளி . உலகமயம், அதை அனுமதித்த அரசு.

பூனைக்கு கால்வலிக்க மேனாகாவுக்கோ அதுதான் இதய வலி. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று தின்று ரத்தம் குடித்த பாஜக எம்.பி, RSS -ன் சகாவுக்கு நாயின் மேல்பாசமாம்!!!! இதை எப்படி நம்புவது ? கண்டிப்பாய் நம்பித்தான் ஆகவேண்டும். வருண்காந்தி முசுலீம்களை வெட்டுவேன் என கழிவறை வாயால் கொட்டியதை கையில் எடுத்து தொட்டுப்பாருங்கள். அஹிம்சையெல்லாம் என் மகனுக்கு தெரியாதென வாலாட்டியவராயிற்றே. தெரிந்தோ தெரியாமலோ காந்தியின் வாரிசாய் மிளிரும் ஆத்தாளும் மகனும் மனிதாபிமானத்தையே குத்தகை எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

பையனுக்கு இந்து மனிதாபிமானம், ஆத்தாளுக்கு இந்து மனிதாபிமானம்+விலங்குகளின் மீது பாசம். இவர்கள் மட்டுமல்ல ஏறக்குறைய விலங்குகளின் காதலர்கள் பலரும் மனிதர்களின் வாழ்வினைப் பார்ப்பாதில்லை என்பதை விட பார்க்க மறுக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காது எப்படி மக்களை சார்ந்து வாழும் விலங்குகளை பற்றி சிந்திக்கமுடிகிறது?. ஏனெனில் அவர்களைப்பொறுத்தவரை வறுமையில் உழலும் விவசாயி, தொழிலாளி, வேலையில்லா இளைஞன் ,உழைக்கும் மனிதன், என யாருமே இன்னும் விலங்குகளுக்கு ஒப்பாகவில்லை.

வெடித்துப்போன வயல்வெளிகள், ஒட்டிப்போன மார்பகங்கள், சுருங்கிப்போன தசைகள் என எல்லாவற்றையும் தாண்டி அந்த மாடு எலும்பாய் இருக்கிறதே? அது தெரிகிறதா. தனக்கு சோறில்லைஎன்றால் கூட இருக்கும் காசுக்கு மாட்டுக்கு தீவனம் வாங்கிப்போடுவான் விவசாயி. தன் உழவுக்கு பல்லாண்டாய் உழைத்து செத்துப்போன மாடுகளுக்காக கண்ணீர்விட்டு கதறியழும் விவசாயிக்கு கண்டிப்பாய் விலங்கினநேசத்தினைப்பற்றி தெரியாது.

 

வளர்ப்புபிராணிகளை தன் வீட்டின் பிள்ளையாக கருதி வளர்க்கும் உழைக்கும் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் “ஏய்!!! விலங்கினை வதைக்காதே” விலங்கினை வதைப்பது இருக்கட்டும் எங்களை வதைக்கும் இந்த தனியார்மயத்துக்கும், தாராளமயத்துக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்? பிராணிகளுக்கு துடிக்கும் வாய்கள் மக்கள் பிணமாவதினை பேச மறுக்கிறது.

ரேபீஸ் தடுப்பு மருந்து ஆட்டுமூளையிலிருந்து எடுக்கப்படுவதை எதிர்க்கும் யோக்கிய சிகாமணிகள், வெறி நாயைக்கொல்லக்கூடாது அவற்றை பத்திரமாக அரசே பராமரிக்க வேண்டும் என கதறுபவர்கள்தான் உலகெங்கும் வறுமையால் மக்கள், குறிப்பாக ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பாசிச பேயாட்டம் போட்டு மக்களை வதை முகாமில் சிறையிலிட்டு கொன்று குவிக்கும் போது கூடநாயைப்பற்றியே பேசச்சொல்கிறார்கள்.

 

விலங்குகளைபற்றி பேசவே வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் மனிதாபிமானம் வேசம் போடும் இந்த பிணந்தின்னிகள் உண்மையாகத்தான் பாசம் வைத்திருக்கிறார்களா அந்த விலங்குகள் மீது? இல்லை என்பதுதான் உண்மை. ஆடுகளை வனப்பகுதியில் மேயவிட்டால் குற்றம் என அறிவித்தது அரசு. அதன் விளைவு வெள்ளாடு வளர்ப்பு முற்றிலுமாக அழிந்துபோனது. ஒரே சட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆடுகளின் வாழ்வினைப்பறித்தது யார் ? விவசாயத்தை நொடித்து மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பியது யார் ? புதிய வகை உற்பத்தி எனக்கூறி பிராய்லர்களை திட்டமிட்டு உருவாக்கி நாட்டுக்கோழியினத்தை முற்றிலும் உடைத்தெறிந்தது யார்?

உழைக்கும் மக்களா? இந்த அரசு, உலகமயம் ,தாராளமயத்தின் விளைவா? பேசித்தான் பாருங்களேன் கொஞ்சம் இதைப்பற்றியும், ஏன் உங்கள் வாய்கள் பேசமறுக்கின்றன? பேச மறுக்கிறது என்பதனை இன்னொருவிதமாக சொல்லலாம். எப்படி பேசும்? மக்களை கொன்று அவர்களின் வாழ்வுக்கான உரிமையை பிடுங்கி மொத்தமாய் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ள வர்க்கம் எப்படி பேசும் மக்களுக்காக?

இப்படி ஒரு தெரு நாயை காப்பாற்றப்போவதாய் பல வெறி நாய்கள் வந்துவிட்டன. அவைகளால் மனிதனுக்குமட்டுமல்ல….பாவம் அந்த நாய்க்கும்தான் ஆபத்து. ஒருபக்கம் மக்களை தின்பது மறுபக்கம் விலங்குகளுக்காக ஒப்பாரி வைப்பது? என அதிக நாள் இந்த டபுள் ரோல் நீடிக்காது. மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் ஆளும் வர்க்கம் தகர்க்கப்படும் போது இந்த நாய்கள் பேய்களாகியிருக்கும்.

தில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்

ஜூலை 15, 2009 by kalagam

தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
அடிவருடிகளின் ஒயிலாட்டம்

பல நாட்கள் கழித்து தில்லைக்கு சென்றிருந்தேன்.ஆரம்பத்திலிருதே தில்லையை பிடிக்காது அதற்கு நான் சொன்ன காரணம் “இங்க பாப்பானும் பன்னியும்தான் அதிகமா இருக்கு” , பின்னர் தேவையின் கருதியும், ம க இ க வின் போராட்டங்களுக்கு என பலமுறை வந்தாயிற்று . ஆனால் பல நாட்கள் கழித்து சென்ற எனக்கோ பார்ப்பன சதிராட்டமும் அடிவருடிகளின் கோலாட்டம், ஒயிலாட்டம் ……. என பலவும் காத்திருந்தது.

காலையில் வேலையினை முடித்துவிட்டிருந்தேன். நண்பர் கேட்டார் “இன்னைக்கு தேர் தரிசனம் வரீங்களா போலாம்”.வேண்டாங்க அந்த பாப்பான் மூஞ்சில முழிச்சாலே” என இழுத்தேன். கூட இருந்த இன்னொருவரோ “அப்ப எப்பத்தான் இத தெரிஞ்சுக்கப்போறீங்க” என்ற படி கிளம்பினோம்.

சிதம்பரம் மேல வீதி முழுக்க போலீஸ் பந்தோபஸ்து மிகஅதிகமாகவே இருந்தது. ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் செட் செட்டாக கிளம்பிக்கொண்டிருந்தனர்.சிறியவர், பதின்வயது பெண்கள் , ஆண்கள், பெரியவர்கள்  என குரூப் குரூப்பாக சென்று கொண்டிருந்தனர்.  தனது சொந்தக்கதை சோகக்கதையை பெரியவர்களும் , பெண்கள் ஏதோ சிரித்தபடி செல்ல அவர்களை பார்ப்பதற்காக பொறுக்கிகளென எப்படியோ சாமியை பார்க்கும் சாக்கில் இத்தனையும் நடந்து கொண்டிருந்தது.
செல்லும் வழியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன”தீட்ஷிதர்களுக்கு சொந்தமான சபா நாயகர் திருக்கோயில் தேர் ஆனித்திருமஞ்சனம் “. பார்த்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது . என்னடா அரசு கோயிலை பொதுவாக்கப்போறோமுன்னு உண்டியலை வச்சிருக்கு .

“இவன் என் கோயில்னு எப்பவும்
போல ஒட்டிருக்காணுங்க” இதே புரட்சிகர அமைப்புக்கள் போஸ்டர் ஒட்டினால் கழுதை வேலையை சிறப்பாய் செய்யும் அரசாங்கம்  ஒட்டிய பசையில் பார்ப்பன நாற்றத்தை கண்டு பயந்தே போனது.

மேலும் பல அடிகள் நோக்கி நடக்க தரிசன கடைகள் பலவும் முளைத்திருந்தன வந்த கூட்டமெல்லாம் கடைகளில்தான் முக்கால் வாசி மொய்த்திருந்தன. அம்பாசடர் காரில் வந்த நபரோ “தங்களுடைய பொருட்களையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை ” சொல்லிக்கொண்டிருந்தார். ஏற்ற படி பார்ப்பன தீட்ஷிதர்கள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தனர்.திருட்டுக்கோட்டைக்கு அருகில் அப்படி சொல்ல அவருக்கு அதிகம் தைரியம் வேண்டும்.

கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்”  என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா? கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.

தேவாரம் திருவாசகம் மிக மெல்லியதாக ஒலித்துக்கொண்டு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது. எல்லோரும் சிவ சிவ என நடராசன் ஆடல் வல்லானின் புராணம் பாடிய கும்பல் தெருவில் பாராயிரம் பாடிக்கொண்டு செல்ல பாவம் பக்தர்கள்தான்  நின்று கூட பார்க்கவில்லை. அட சிவப்பழங்களே உங்க பக்திய நீங்கதானய்யா மெச்சனும். தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என தீர்ப்பு வழங்கிய போது எங்கயா போனீங்க? ஒரு வெங்காயத்தானும் வரவில்லையே. நாத்திகர்கள் தானே பாடினார்கள்.

எல்லாம் எங்கே போனீர்கள்? பாப்பான் வீட்டு கழிவுகளை சுவைக்கவா? என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு  அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு? சீந்த ஆளின்றி தெருவில் பாடுமுனக்கு பாடலோடு சிவனை நடராசனை காப்பாற்றுங்கள் என கதற என்னத்தடை?

ஆம் மிகப்பெரிய தடை இருக்கிறது அது பொருளாதாரத்தடை.பார்ப்பானை ஒட்டி சோப்பு போட்டு அவன் மனம் நோகாது அவன் தின்றுபோட்ட எலும்பினை நக்கிகொண்டிருக்கும் ஆதினங்கள் தானே அடுத்த குறி.சாமியை வைத்து பார்ப்பான் செய்வதைத்தானே நீயும் செய்து கொண்டு இருக்கிறாய்?

எப்படி உலகின் ஏதாவது ஒரு மூலையிலுல்ள முதலாளிக்கு எதிராக பேசினால் லோக்கல் முதலாளி அவனுக்கு வக்காலத்து வாங்குவார்களோ.அப்படித்தான் பார்ப்பனீயத்துக்கு வாலாட்டி தமிழை வைத்து சம்பாதித்து, திருடி, தின்று செரித்து விடுகிறார்கள்.அடுத்தது தான் என்பதால்தான் பெரிய திருடனுக்கு சின்னதிருடன் சப்பைகட்டு கட்டுகிறான்

தானம் கொடுத்த திருடனின் விசயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். யார் சொத்தினை யார் தானம் கொடுப்பது? மக்களின் தங்கள் பணத்தினால் அவர் ரத்தத்தால் நிமிர்ந்த கோயிலும் அந்த சாமியும் பார்ப்பான் சிக்னல் காட்டினால் தான் தரிசனம் கிடைக்கும். எங்களின் சொத்தை திருடி சோறு செஞ்சு வச்சுருக்கேன் வந்து வழிச்சு நக்கிட்டு போங்க என்கிறான் தீட்சித பார்ப்பனன்.

மக்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது, எங்கே போனது இத்தனை கூட்டம் பெரியவர் ஆறூமுகசாமி தேவாரம் இசைக்கும்  போது. கண்டிப்பாய் இருக்கும் அவர் பார்ப்பானாய் இருந்திருந்தால். அவன் திருடன் , இந்தக்கோயிலில் தான் விபச்சாரம், மூர்த்தி தீட்சிதன் பணப்பங்கு பிரிக்கும் போது பார்ப்பனதீட்சித ரவுகளாலேயே கொல்லப்பட்டான், இவன் தான் தமிழை  நீச பாசை என்கிறான், தமிழர்களை தே..மவன் என்கிறான் எனத்தெரியாதா என்ன?

எல்லாம் தெரிகிறது. நாம் சொன்னால் அதற்கு மேலும் கதை சொல்கிறார்கள்”  வேற என்னங்க பண்றது” என்ற தீர்ப்போடு. இதுதான் மதத்தின், மத நம்பிக்கையின் அவலம். கடவுள் நம்பிக்கை சொல்லித்தருகிறது ” ஒன்ணும் செய்ய முடியாது, விபச்சாரமே செஞ்சாலும் அவன் பிராமணன், அவன் தான் சாமியோட எல்லாம் பண்ணனும்.
தேவாரமோ திருவாசகமோ  ஏன் இன்னும்  நடராசனின் காதில் ஒலிக்கவில்லையா? கண்டிப்பாய் ஒலித்தாலும் புரியாது! பார்ப்பன ஆதிக்கத்தில் புழுங்கி அழும் அந்த நடராசனின் சத்தம் இன்னும் கேட்காததற்கு காரணம் அவன் இன்னும் சமஸ்கிருதத்தில்  புலம்பிக்கொண்டிருப்பதாலயோ என்னவோ!

தன்னை நல்லபடியாய் காப்பாற்றும் அல்லது காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு  கடவுளோ அல்லது தன்னை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் கடவுளுக்கு பக்தர்களாளோ கண்டிப்பாய் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மத அவலத்திலிருந்து, மதத்திலிருந்து மீளாத வரை.

———————————————————————————————————————————

கடந்த வியாழன் அன்று  மீண்டும் அரசு சார்பில் 3 உண்டியல்கள் தில்லையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்ற முறை  உண்டியல் திறப்பின் போது உண்டியலில்  அதில் எண்ணையை ஊற்றினார்கள்.இந்த முறை புதிய உண்டியல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 31 பார்ப்பன அடிவருடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

——————————————————————————–

சிவனடியாரை கொல்ல முயற்சித்த 6 பேர் மீது வழக்கு

சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினார்.

இதற்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் கோவிலுக்கு அவ்வப்போது சென்று தேவாரம், திருவாசகத்தை தொடர்ந்து பாடிவந்தார்.

அப்போது ஆறுமுக சாமிக்கும், தீட்சிதர்களுக்கும் மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தார்.

அப்போது அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அதில் காயமடைந்ததாகவும் கூறி சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தாக்குதல் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலை யத்தில் ஆறுமுகசாமி அளித்துள்ள புகார் மனுவில்,

நேற்று நடராஜர் கோவில் நான் உட்கார்ந்திருந்தபோது 6 தீட்சிதர்கள் என்னிடம் வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்கள், உன்னால் தான் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நிம்மதி கெட்டு விட்டது என்று கூறி ஆபாசமான வார்த்தை களால் திட்டினர். மேலும் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.

ஆறுமுகசாமி புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்(??????)

——————————————————————–

மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்-தூக்கி நிறுத்தும் தூண்களும்-

ஜூலை 6, 2009 by kalagam

மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்தூக்கி நிறுத்தும் தூண்களும்2008-272V--Scales-of-Justice-today

இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று வரும் சிங்கள பேரினவாதத்துக்கெதிராகவும், போரினை நடத்தி ரத்தம் குடித்த இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைகட்சியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுக்க இந்திய தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன் படி எரிக்க முயன்ற போது 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய (அ)நீதிமன்றம் ஒருவாரம் தேசியக்கொடியை வீட்டின் முன் ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

அதை ஏற்காத மூவர் நிபந்தனையை தளர்த்தக்கோரியவர்களுக்கு நாட்டாமையாக ஆணையிட்டிருக்கிறார் நீதிபதி.

 

அதில்’’தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த முடியாது. இதை ஏற்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கட்டும். இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். RopePull-lg

அரசியல் அமைப்பு சட்டம் 5-வது பிரிவில் தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி கூறுகிறது.

இந்த கடமையை மக்கள் எப்படி நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் எப்படி இதில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழகஅரசு குழு ஒன்றை அமைத்து விசாரித்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’என்று தீர்ப்பில் கூறினார்” 3 பேரும் தேசியக்கொடியை ஏற்றவில்லையெனில் ஜெயிலிலேயே கிட என்கிறார்.

அதுமட்டுமில்லாது மக்கள் எப்படி இக்கடைமையை நிறைவேற்றவேண்டுமென அறிக்கை தாக்கல் செய்யவும் சொல்லியிருக்கிறார். இதை படிப்பவருக்கு என்ன புரியும் ஆகா “கடமை தவறாத நீதிபதி இன்னொரு அப்துல் கலாம்”வந்துவிட்டாரென்று.

 

ஆனால் உண்மை என்ன? மத்திய அமைச்சர் மிரட்டினார் என்னிடம் மன்னிப்பு கேட்க வில்லையெனில் அவரின் பேரை சொல்லி புகார் செய்வேன் என்பவர் கட்டாயமாக ஏற்று இல்லையேல் சாகு என்கிறார். அவ்வளவு நீதிமானெனில் அந்த அமைச்சரின் பேரைச்சொல்லி அவருக்கு தண்டனை கொடுத்துப்பார்க்கட்டும். ஒரு வாரம் வேண்டாம் ஒரு நாள் அமைச்சரின் வீட்டில் கொடியை ஏற்றச்சொல்லி சொல்ல தீர்ப்பு வழங்கட்டுமே. ஏன் அவரின் பேரை சொன்னால் என்ன எது குறையும். ஏதாவது குறையலாம் வசதி, வாய்ப்புகள், பதவி உயர்வு……..

 

 ஏதோ இந்த நீதிபதிமட்டுமல்ல நீதிமன்றங்கள் பலவழக்குகளை தானாக முன்வந்து எடுத்து தீர்ப்பு சொல்லுகிறது, கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் மக்களின் பிரச்சினைகள் எதும் நீதி மன்றங்களுக்கு புலப்படாமலேயே போய்விடுகின்றன. ஒருவேளை அவைகள் போட்டிருக்கும் கண்ணாடியின் ஆளும் வர்க்கசாயல் அப்பியிருக்கும்.

 

ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறர்கள், தாய்மார்கள், குழந்தைகள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள் ஒருதாஇன் வயிற்றை கிழித்த ஆட்லெறிகுண்டு அந்த சிசுவின் தலையை பிய்த்துப்போட்டது தெரியாதா நீதி மன்றமே உனக்கு.

 

இதை தானாக வழக்கு பதிவு செய்ய என்ன கேடு? ஆம் கேடு தான் தன்வர்க்கத்துக்கு தானே ஏதாவது கேடுண்டாக்கிக்கொள்ளுமா? என் இனமக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்திய அரசுதான் போரை நடத்துகிறது எனத்தெரிந்தும் அமைதியாய் கவிந்து படுத்துக்கொண்டு மானாட மயிலாட பார்க்கமுடியுமா? பார்க்கிறார்கள் பல சூடு சொரணை கெட்டவர்கள் அப்படித்தான் எல்லோரும் வாழவேண்டுமா? 001200902200340

ஆம் அப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிறது நீதிமன்றம்.தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொல்லும் போது, அகதியெனக்கூறி அலைக்கழிக்கும்போது, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை இனமக்கள் பாதிக்கப்படும் போது, தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படு சுடுகாடு நோக்கி தள்ளபடும் போது மூடிகிடக்கும் நீதி மன்றம் வாயைத்திறக்கிறது “தேசியக்கொடியை ஏற்று இல்லை உள்ளயே கிட” அட போலீசுக்காரர்கள் உங்கள் மண்டையை பிளந்தபோது கூட நீதிபதிகளே இப்படி கடினமாக பேசவில்லையே.

அவ்வளவு தேசியத்தின் மீது பற்றா? தேசியத்தின் மீது இருக்கும் பற்றினை விட ஆளும் வர்க்கத்தின் மீது இருக்கும் பற்று அளவிடமுடியாதது. சென்னை நீதிமன்றத்தில் நுழைந்து கொலைவெறியாட்டம் போட்டவர்களுக்கு பூச்செண்டு அடிவாங்கியவர்களுக்கு அறிவுரை.

அடடா இதுக்கு பெயர் தான் நடு நிலைதவறாத சனநாயகமா? தான் செத்தாலும் தன் வர்க்கத்துக்கு சேவை செய்வதைத்தான் பெருமையாக திறமையாக கருதுகிறார்கள். அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?

 

எதுவய்யா கருத்து சுதந்திரம்? முதலாளிகள், ஆளும் வர்க்கபிரதிநிதிகளின் கருத்துக்கு வரவேற்பு, ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்கு வாய்ப்பூட்டு, நாளை அமெரிக்காவின் கொடியை எரித்தால் கூட கடுமையான சட்டம் கொண்டு தண்டிப்பார்கள். அதற்கும் பலவித காரணங்களை சொல்லி சப்பை கட்டுகட்டி வாயை அடைப்பார்கள்.

 

 அவர்களின் தேவை ஆளும் வர்க்கத்தின் சேவைதானே தவிர மக்களுக்காக அல்ல. நாளை ஆளும்வர்க்கம் கொடியை பீத்துணி என அறிவித்தால் கூட அப்படியே துடைத்து விட்டு போவார்கள், பெயர்கள் தான் காவல்துறை, ராணுவம், நீதித்துறை……..

 

 இதற்கு பெயர் தான் மாபெரும் இந்திய சனனாயகமாம் !!!!! நம்பாதவர்களுக்கு களி நிச்சயம் என்பது மட்டும் உண்மை.

மாவோயிஸ்டுகள் மீதான தடை அரசாங்க டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை

ஜூன் 29, 2009 by kalagam
மாவோயிஸ்டுகள் மீதான தடை
அரசாங்க டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டு அரசர் சிதம்பரம் மாவோயிஸ்டுகட்சியை அதாவது சிபிஐ(எம்)  கட்சியை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை ஆணையை வெளியிட்டார். இது வரை மாவோயிஸ்டு இயக்கம் இந்தியா முழுமைக்கும்  சுதந்திரமாக செயல்பட்ட மாதிரியும் தற்போதைய ஆணையால் மாபெரும் அதிரடி சாதனையாகவும் பத்திரிக்கைகள் மெச்சுகின்றன.
தினமணியோ ” இந்த தடை அவசியமான ஒன்று, மாவோயிஸ்டுகள் பல மக்களை கொன்றிருக்கிறார்கள். வேலையில்லா இளைஞர்களையும், அப்பாவி பழங்குடி மக்களையும் மூளைச்சலவை செய்து தங்களுடைய படையில் சேர்த்து கொள்கின்றனர். மேலும் மிகப்பெரிய நிலச்சுவாந்தார்களையும், முதலாளிகளையும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.
நேபாளம் முதல் ஆந்திராவரை நீண்டுகிடக்கும் இந்த மாவோயிஸ்டுகள் வழிப்பறி, கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவாயை பெருக்கிக்கொள்கின்றனர். நமது எதிரி நாடான சீனா இவர்களுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து உதவுகின்றது”தினமணி மட்டுமல்ல ஏனைய எல்லா பத்திரிக்கைகளும் மாவோயிஸத்தை ஒழிக்க வேண்டும்,  மாபெரும் இந்திய சனநாயகத்தில்  ஒரு கரும்புள்ளியாக இந்த பயங்கரவாதிகள் இருப்பதால் இத்தடை தேவை.

.இந்த சட்டத்தின் மூலம் அவர்களின் ஆதரவாளர்களையும் கைது செய்யமுடியும் என சந்தோசப்படுகின்றன எல்லா அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும்.

ஆரம்பத்திலிருந்தே மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் மீது பொய் என்று தெரிந்து கூறப்படும் முக்கிய அவதூறு ” சீனா உதவி செய்கின்றது “. நக்சல் பாரி அமைப்பினர் சீனாவை  தற்போது முதலாளித்துவ மேலாதிக்க நாடாகவே வரையறுத்துள்ளனர். இந்தியாமேலாதிக்கம் மற்றும் சீன மேலாதிக்கம் இரண்டும் தகர்க்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து இருப்பதாக தெரியவில்லை.அதேபோல நேபாளத்திலும் மாவோயிஸ்டுகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்காற்றின. எப்படி ஒரு முற்போக்காளன் முசுலீமாயிருந்தால் அவரை அல்கொய்தா ஆக்குவார்களோ அப்படித்தான் திட்டமிட்டே இந்தஅவதூறும்.

என்னவோ படிக்காத அல்லது வேலையில்லாத இளைஞர்களின் விரக்திதான் நக்சல்பாரி அல்லது மாவோயிஸ்டு வளர்ச்சிக்கு உண்மையான காரணம் எனில்  மாவோயிஸ்டுதான் உலகிலேயே அதிக  உறுப்பினர்களை எண்ணிக்கை கொண்டகட்சியாக இருக்கும்.

மாவோஸ்டுகளின் மீதான தடையை ஆராய்வதை விட மாவோயிஸ்டுகளின் மீது தடையை ஏற்படுத்திய அரச பயங்கரவாதத்தையும் அதற்கு பக்கபலமாயிருந்த பார்ப்பன பாஸிச பயங்கரவாதத்தையும் கொஞ்சம் பேசித்தான் ஆகவேண்டும். காசுமீர் மக்களிடம் கேட்டால் தெரியும் இந்தியத்தின் மகிமையை காறி முகத்தில் துப்புவார்கள். சில வாரங்களுக்கு முன்  இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமையால் ராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்து எந்த விசாரணை நடந்தது? ராணுவம் செய்யும் கொலைகளும்  பாலியல் கொடுமைகளையும் பற்றி எந்த பத்திரிக்கை தனது நாய் மூக்கால் மோப்பம் பிடித்து எழுதின?

ஆனால் சில கருப்பாடுகள் என தலையங்கம் வாசிக்கும் பத்திரிக்கைகள் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த பல்லாயிரக்கணக்கான கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் செய்துவரும் ராணுவத்தை கண்டு கொள்வதில்லை.  சங்கர மடத்தில் ஒரு கரப்பான் பூச்சி நுழைந்தால் கூட ஒப்பாரி வைக்கும் இந்த நாய்கள் எப்போது அரச பயங்கரவாதத்துக்கெதிராக எழுதாது. ஏனெனில் தரகு மற்றும் ,முதலாளித்துவமே  ஒருபக்கம் ஆளும் வர்க்கமுகமுடியையும்,  மறுபக்கம் அரசியல் கட்சிகளாகவும் இன்னொருமுனையில் பத்திரிக்கைகளாகவும் செயல் படுகின்றன.

காசுமிர், அசாம்,மணிபூர், வடகிழக்கு மாநிலங்களில் பல பத்தாண்டுகளாக  ராணுவம் லட்சக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிமுனையில் தேர்தலாம், இதை தூக்கி வைத்து கொண்டு ஆடுகின்றன பத்திரிக்கைகள். மாவோயிஸ்டுகள் மக்களை மூலைச்சலவை செய்தார்கள் என கூடவே உட்கார்ந்து பார்த்தது போல எழுதும் பதிரிக்கைகள்  அவர்கள் கண் முன்னே நடந்த இந்து மதவெறிகலவரங்களை,அரச பயங்கரவாதத்தினை வெளிப்படுத்தினார்களா என்ன? தன் தேவையே மக்கள் தேவையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அரச பயங்கவாதத்தால் , முதலாளித்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண விவசாயிகள், தொழிலாளர்கள் கேட்கிறார்கள் முதலாளித்துவத்தையும், இந்த அரசையும் தடை செய்யக்கோரி பத்திரிக்கைகள் உடனே எழுதி ஆதரித்து விடுமா என்ன? கண்டிப்பாய் சீண்டிகூட பார்க்காது காரணம் இந்த தரகுமுதலாளித்துவ அரசாங்கம் தான் இவர்களின் தேவை . ஆளுவர்க்கங்களின் தேவைக்குத்தான் ஊடகங்களே தவிர மக்களின் தேவைக்கா என்ன?

மாவோயிஸ்டுகள் மீதான தடைஇந்து முன்னணி வரவேற்பு


மாவோயிஸ்டுகள் மீதான தடையை வரவேற்று அறிக்கை விட்டுஇருக்கிறார், ராம.கோபாலன். இந்த பார்ப்பன பாஸிஸ்டுகளின் கோரிக்கை மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல ,  நக்சல் பாரிஅமைப்புக்கள், முற்போக்கு இயக்கங்கள் அனைத்தையுமே தடைசெய்ய வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என அறிவிக்கக்கோருகிறது பார்ப்பன பாசிசம், குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று தின்று விட்டு நான் தான் செய்தேன் என அறிக்கை விட்ட பிஜேபி, ஆஎஸ் எஸ், பரிவாரங்களுக்கு பூசையும் வரவேற்பும், மக்கள் இயக்கங்களுக்கு தடையா ?

நாடாளுமன்றத்தில் குண்டு வைத்தவர் எனக்கூறி தூக்கில் போடு, தூக்கில் போடு என முழக்கமிடும் தேசப்பற்றாளர்களே, காசுமீரில், வடகிழக்கு மாநிலங்களில், ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்ற, கொன்று கொண்டு இருக்கும் பயங்கரவாதிகளூக்கு என்னதண்டனை கொடுக்கலாம்? பாரதரத்னா, வீர் சக்ரா, அசோக சக்ரா தந்து கவுரவிக்கலாமா?

ஏன் லால்கரில் சிபிஎம்(மார்க்சிஸ்ட்) சேர்ந்த ஒரு நபரின் வீட்டிலிருந்த இரண்டு லாரி நிறைய வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனவே,  நந்திகிராமில் சிங்கூரில் பாலியல், மக்களை கொன்று  பாசிஸ்டாய் பரிணமித்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன பெயர் பொதுவுடமைவாதியா? மக்களுக்காக போராடும், போராடிய பினாயக்சென் பயங்கரவாதியாம்?

த்தூ!  இந்த மானங்கெட்ட பாசிச சனநாயகத்துக்கு பொட்டு, பூ வைக்கும் வேலையில் பத்திரிக்கைகள் ஈடுபட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.

சமீபத்தில் கோவை மாநாட்டில் பேசிய பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணி ” எங்கள் இயக்கம் மீது ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது, தடை செய்யவும் வாய்ப்பிருப்பதாக” தெரிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை ஏதோ இந்திய ராணுவத்தையே தாக்கி விட்டார்கள் என கூப்பாடு போட்டவர்கள், இந்திய அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண மக்களுக்கு ஆத்மா சாந்தியடைய சாமிகும்பிட சொல்கிறார்கள். எங்களை கொன்று விட்டு சமாதியின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள் எங்கு போய் அழுவது?

இந்தியாவெங்கும் மக்களிடையே மதக்கலவரங்களை தூண்டிவிட்டு, சாதிகலவரங்களை தூண்டிவிடும்  பார்ப்பன பாசிசகட்சிகளும், சாதி வெறிக்கட்சிகளும் தடைசெய்யப்படவேண்டும். மக்களை கொத்து கொத்தாய் கொல்லும் முதலாளித்துவம் நசுக்கப்பட வேண்டும்.

மக்களுக்காக போராடும் போது என்ன டாக்டர் பட்டமா வரும் ?  துரோகிகளின் வாயால் தீவிரவாதி பட்டம் ,
பாசிஸ்டுகளின் வாயால் பயங்கரவாதி பட்டம்,  என்னே பாரதத்தின் பெருமை ஜெய் ஹிந்த்.

சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2

நவம்பர் 14, 2008 by kalagam

சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2

நேற்று  முன்தினம் நடந்த சென்னை சட்டகல்லுரி மாணவர்கள் “மோதல்” தான் இரு ணாட்களாக  பரபரப்பாக  பேசப்படுகின்றது.தமிழகமெங்கும் சட்டகல்லுரி  தேர்வுகள் ரத்து, காலவரையின்றி  மூடல் .அக்கல்லூரியின் முதல்வர் இட நீக்கம்,போலீசார் சிலர் இடை மற்றும் பணி மாற்றம் என தமிழக அரசு அறிவிதாலும் ஓட்டு பொறுக்கிகள் வழக்கம் போல ஆதிக்க சாதி  வெறிக்கு  துதி பாடுகின்றன.சிலர் நினைக்கலாம்  நடந்து
முடிந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புகிறர்கள் என்று.ஆனால் நேற்று தமிழகம் முழுவதும் தேவர்  சாதி வெறியர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.மேலும்
தக்க பதிலடி கொடுக்கப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றார்கள்.வழக்கம் போல வைகோ,விஜயகாந்த்,சரத்,போன்றோர் அரசை பதவி விலக சொல்கின்றனர்.எதிரிகள் ஆரம்பிப்பதாலேயே நாமும் தொடங்கியிருக்கிறோம்.

மோதலின் வேர்கள்
இம்மோதலுக்கு காரணத்தை நாம் தோண்டியெடுக்க சில ஆண்டுகள் பின்னோக்கி
பார்க்க வேண்டும்.தென்,வடமாவட்டங்களில் நடந்த சாதி கலவரமே இதன் வேர்.கொடியங்குளம்,ஊஞ்சனை,மேவளவு,போன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட
மக்களி¢ன் பயமாய், கோபமாய், இன்னும் ஆறாமல் இருக்கின்றது.மீண்டுமொரு தாக்குதலுக்கு தருணம் பார்த்து ஆதிக்க சாதி  வெறியர்களும் காத்து கொண்டிருக்கின்றார்கள்.பலரும் சொல்வதை போல் என்ன தான் “இருந்தாலும் அந்த
பையனை விட்டிருக்கலாம்”இவர்கள் விடாததற்கு காரணம் இருக்கின்றது.தன் ரத்த
சொந்தங்கள் எல்லாம் தூங்கும் போது  கழுத்தறுப்பட்டும்,இதை விட இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாக கெஞ்சி   கதறிய போதும்  கொலை செய்யப்பட்டார்களே அது தான்
அந்த காரணம்.தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகளிரண்டாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன.1.தாழ்த்தப்பட்ட மானவர் விதி  2.மற்ற  சாதி  மாணவர்களின் விடுதி. தாழ்த்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலும் மிக ஏழை பிரிவை சேர்ந்தவர்கள்.
எப்படி மூத்திர மற்றும் சாக்கடை நாற்றத்தில் வாழ்ந்தார்களோ அதே நிலை துளியும்
மாறாது தாழ்த்தப்பட்ட மாணவர் விதிகளில் வாழ்கின்றனர்.இது முற்றிலும் உண்மை
ஒருமுறை தாழ்த்தப்பட்ட மாணவர் விதிக்கு சென்றிருந்தேன். அறைக்கு வெளியில்
சோறு இறைந்து கிடந்தது.ஒரு மாணவனிடம் இது குறித்து கேட்டேன்.அவர் பதிலேதும்
பேசாது ஒரு தட்டில் சோற்றை போட்டு தந்தார்.அப்போது தான் தெரிந்தது  தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு சோறு  தாழ்ந்த நிலையில் தான் படுகின்றது இந்த சமத்துவ அரசால் என்று.

தமிழகத்தில் எந்த கல்லூரியில் தான் சாதி பார்ப்பதில்லை ? ஒரு விடுதியில் (அ) கல்லூரியில்
சேர்ந்தவுடனே பேரை கேட்ட சில நிமிடத்திலேயே  சாதிகேட்கபடுகிறதா இல்லையா?
இதற்கு இப்போ யாரு சாதி  பார்க்குறா என்பவர்கள் கண்டிப்பாய் பதில் சொல்ல வேண்டும்.
நாங்க எல்லாம் பங்காளிங்க என்று கும்பலாக சுற்றுவது நடக்கிறதா இல்லையா? அரசு கல்லூரிகளில் தான் ஆதிக்கசாதி மானவர்களுக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மாணவர் களும் படிக்கின்றனர்.எல்லா  கல்லூரிகளிலும் சாதி ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது.சென்னை மட்டுமல்ல் கோவை,  நெல்லை,மதுரை,சேலம்,உள்ளிட்ட இடங்களில்
சட்ட கல்லூரியில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மோதல் தொடரதான் செய்கின்றது.மற்ற கல்லூரிகளில் அரசியல் பேச வாய்ப்பு இல்லலை என்றாலும் இவர்களுக்கு அரசியல் தான்
பாடமாக  உள்ளது.சட்ட கல்லூரியில் படிக்கும்  சுமார்  20% தவிர மீதி  பலரும் அரசியல் அங்கீகாரத்துக்கோ, பிற் கால சாதி அரசியல் கட்சியில் சட்ட ஆலோசகர்  பதவிக்காக
தான் சேர்கின்றனர்.வேறு எங்கேயும் விட இங்கு தான் சாதி பிரச்சனை உள்ளிட்ட எதுவும்
வெடிக்கும்.இது தான் நியதி.ஆதிக்க சாதியின் வாரிசுகளும் அடக்கப்பட்ட சாதியின்வாரிசுகளும் கல்லூரியில் சந்திக்கின்ற்¡ர்கள். தன் வீட்டு எடுப்ப்பு வேலை செய்த பசங்க என்ற எண்ணத்தில் சாதி வெறியர்கள் ஆதிக்கம் செய்கின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களின் வாரிசுசுகளோதன் பாட்டன் பூட்டன் அப்பன் வரை அடிமையாய் இருந்தது போதும் தானிருக்கவேண்டியதில்லை என எதிர்த்து போராடுகின்றான். ஆதிக்க சாதி வெறி யர்களடிக்கும்போது திருப்பி அடிக்கின்றனர்.இவர்களை சாதி வெறியர்களாக பார்க்கமுடியுமா?¢கண்டிப்பாய்  முடியாது.ஒரு எடுத்துகாட்டு.ஒரு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது வேகமாய் ஒரு லாரி சர்ரென்று வருகின்றது.ஓட்டுனரின் அறிவால் அனைவரும் தப்பிக்கின்றனர்.பயணி ஒருவர் அந்த லாரி ஓட்டுனரை அடிக்கிறார்.இதை தவறு என சொல்லமுடியுமா ? ஏன் விபத்து நடந்த இடத்தில் உள்ள மக்கள் ஓட்டுனரை அடிப்பது வழக்கமானது தான்.-னியாமான கோபத்தை எப்படி வெளிபடுத்துவது?இங்கே முக்கிய விசயம் என்னவெனில் பத்திரிக்கைகள் சொல்வது போல தாக்கவந்தவர்கள் கட்டைகளோடும்,தாக்கபட்டவன் கையில் கத்தியோடும் வந்திருக்கின்றான்.அவனை அடித்ததற்கு பதில் எதுவெனில் மேற்கூறிய எடுத்துகாட்டு தான்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு  சட்ட கல்லூரியில் நடந்தசம்பவம் இது .ஸ்காலர்ஷிப் வாங்க சென்ற தலித்  மாணவர்களை பார்த்து ஒரு சாதிவெறியன் சொன்னான்”  ஸ்காலர்ஷிப்  வேண்டும்னா
வந்து…………………………………….. “. தலித்  மாணவர்கள் இது குறித்து தந்த எந்த புகாருக்கும் இது நடவடிக்கை எடுக்கவில்லை.  வன்முறை  தான் தீர்வா என கூத்தாடும் பார்ப்பன கோட்சில்லாவே(அடிக்கடி வினவிலும்,ஒரெ ஒருமுறை கலகத்திலும் கெள்வி கேட்ட) பதில் சொல்.அந்த வெறியனை தலித்  மாணவர்கள் மண்டையை பிளந்திருந்தால்   கண்டிப்பாய்  அதுவும் தலைப்பு செய்தியாய் மிளிந்திருக்கும்.

————————————————————————————————————————————————————-

சட்டகல்லுரி குறித்து வினவு எழுதியிந்தமைக்கு  சிலர் இப்படிதான் மறு மொழிந்திருக்கின்றார்கள்.
“பாவபட்ட தேவர்கள் ஒன்று படுவோம்.”"இன்று முதல் சாதி வெறியனாகிவிட்டேன்”.இங்கு பாவப்பட்ட என்பதற்கு அர்த்தம் ” நம்ம ஊருல தொடுப்பு வேல செய்யரவனுங்க  நாம அடிச்ச திருப்பி அடிக்கற அளவுக்கு ஆயிட்டாங்களா?.அவர்கள் இப்போது மாறவில்லை,எப்போதுமே அப்படிதான் இருந்திருக்கின்றார்கள்.
—————————————————————————————————————————————————————

எரிகின்ற தீயில் எண்ணை

எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுகின்ற வே¨ யைத்தான் இந்த அரசியல் கட்சிகளும் சாதிவெறியர்களும்
செஇகின்றன.¢ செயா எப்போதும் அறிக்கை விடும் ஜெயக்குமாரை விட்டு   விட்டு பன்னீர் செல்வத்தை விட்டு சாதி வெறியை கக்குகின்றார்.சன் டிவியோ மனம் பகீனமானவர்கள் வீடியோவை பார்க்கவேண்டாம் என இரு நாட்களாக ஒளிபரப்பியது.இந்த ஊடகங்கள் தாழ்த்தபட்ட மக்கள்
மீதான வன்முறையை மறந்தும் கூட சொன்னது இல்லை.ஒரு நாளாவது வாயில் மலம் திணிக்கபட்ட
ராமசாமியின் பேட்டியை ஒளிபரப்பியிருக்குமா?.இந்த ஊடகங்கள் முதல் ஓட்டு பொறுக்கி  அரசியல்வாதி,சாதிவெறியர்ளின் தேவையெல்லாம் ரத்தம்.ஒடுக்கப்பட்ட,உழைக்கின்ற மக்களின்
ரத்தம். ஆம் அதை குடித்தால் தான் அதிகாரம் கிட்டுமென்று  பார்ப்பனீயமும் பாசிசமும் சொல்லிதந்திருக்கின்றது.
————————————————————————————————————————————————————-
” சாதி கேக்கறது பாவம்  என உதார் விடும் R.S.S,இந்து முன்னணி காலிகள்
பதில் சொல்லட்டும்.இப்படி ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்கும் போது என்னசெய்ய வேண்டும் என்று.
நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் இது போல சம்பவங்கள் நடைபெறாது இருக்க
ஆதிக்க சாதிவெறியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும்.
ஆதிக்கசாதி வெறி கிளை வேர் எனில் பார்ப்பனீயம் தான் ஆணி வேர் அதை பிடுங்கி எறியாது
இது பெரியார் பிறந்த மண் எனச் சொல்லி கொள்வதில் பலன் இல்லை.

வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை

நவம்பர் 18, 2008 by kalagam

வாடா வாடா வாடா  தோழா-ஒரு    காம்ரேடு  ரசிகன் ஆன கதை

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் வருங்கால சூப்பர் ஸ்டாருமான (பத்திரிக்கை சொன்னபிறகு ) ஏற்கனவே அறிவித்தபடி அவர்  சென்னையிலும் அவரது ரசிகர்கள் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களிலும் உண்ணாவிரத போரட்டத்தை நடத்தி  முடித்து இருக்கின்றார்.அவ்விழா  மேடையில் மற்ற  நடிகர்களும்,இயக்குனர்களும், புகழ்ந்து பேசி தள்ளினர்.
 அம்மா அப்பா மனைவி யோடு சோகமே உருவெக்க மேடையில் அமர்ந்திருந்தார்.
நடிகர் விஜய்.(ஒரு வேளை வில்லு படம் குருவி  மாதிரி ஊத்திக்கும் என நினைச்சாரோ என்னவோ ).
மற்ற நடிகர்கள் ஏற்கனவே ஒரு சுற்று  முடிதிருக்க இவரி ந்த போராட்டமும் ஈழத்தமிழர்களுக்காகத்தான் நம்புங்கள்.அதுவும் புலம் பெயர்  ஈழத்தமிழர்களுக்காகத்தான் .ஏனெனில் அவர்கள் தான் திரையுலகின் கழிசடை படங்களை அமெரிக்காவிலும்,ஜெர்மனியிலும்  100 நாட்கள் ஓட்டினார்கள்.உள் நாட்டில் படம் ஓடினால் எவ்வளவு கிடைக்குமோ அதை விட இன்னும் அதிகமாக வெளி நாட்டில் வெளியிடப்படுவதால் தயாரிப்பாளருக்கும் கடல் க.டந்த ரசிகர் கூட்டம் நடிகனுக்கும் கிடைக்கின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் “வெளி” வந்த சர்வே ஒன்று ரஜினியை விட விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவரும் தனது ரசிகர்களை மற்ற எவரையும் விட மிக வேகமாக முறை படுத்தியும் வருகிறார்.வருங்கால முதல்வருக்கான ரேசில் விஜயும் களத்தில் இறங்கிவிட்டார். ஒருவனை பழிவாங்க வேண்டுமா  இறங்குடா களத்தில் என தேர்தலுக்கு வருகிறார்கள்.இந்த கோமாளி   சனநாயகத்தை வெளிக்காட்;டுகின்றனர்.உதாரணத்திற்கு சமீபத்த்¢ வடிவேலு-விஜய்காந்த் மோதலின் போது வடிவேலு சொன்னார்” நீ எங்க நின்னாலும் எதிரா நான் நிப்பேன்”. இப்படி வருபவன் போறவனெல்லாம் தேர்தல்,அரசியல் முறைக்கு வர யார் காரணம்? அதன் துரோக வரலாறு நெடியது. போலி கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது.திமுக விலிருந்து பிரிந்த MGR புது கட்சி ஆரம்பித்தார்.அந்த MGR இப்படி கழிசடைகளுக்கெல்லாம்
ஒரு  symbol ஆக மாறினார் எனப்பார்த்தால் அதற்கு இந்த இரு போலிகளுமே காரணம்.கல்யாணசுந்தரம் என்ற “மாமா”
தான் திறம்பட செஇது  முடித்துவிட்டார்.தனது நூலில் இதனை மிக விரிவாக எழுதியிருக்கிறார்.கம்யூனிஸ்டு எனில் புரட்சி செய்யவேண்டும்(அ)திட்டமாவது வேண்டும்.கட்சி திட்டத்தையே தரகுக்காக இரு போலிகளுமே வைத்திருக்கின்றார்கள்.¦அண்ணா, கலைஞர்  பேச்சுக்காவது கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்தனர்.MGRக்கு இது எதுவும் கிடையாது.கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்ததே பார்பனீயத்துக்கும் அவர் தம் பத்திரிக்கைகளுக்கும் பெரும் ஆபத்தை உண்டு பண்ணின.திமுக விலிருந்து   பிரிந்தவுடனே ஒரு மாற்று சக்தியாக MGR ஐ முன்னிருத்தின.அதற்கு திறம் பட அரசியல் முலாம் பூசி  வெளியே கொணர்ந்தவர்கள் தான் இந்.த போலிகள். அதன் விளைவாகத்தான் MGR  ஐ தொடங்கி  செயா வரை தமிழகத்தில் பொற்காலம் ஏற்பட்டது. அதற்காக தமிழ் கூறும் நல்லுலகு போலிகளுக்கு கடமைபட்டிருக்கும்.மீண்டும்  MGRக்காக தேடி கடைசியாய் ரஜினியை பிடித்து கொள்கையாவது புடலங்காயாவது   ரஜினி  நல்ல மனிதர் என சர்டிபிகேட்கொடுத்தார்கள்.அவரோ வரலாமா வேண்டாமா என  ஜோசியம் 15 ஆண்டாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்.எவ்வளவு காலம் தான் காத்திருப்பது என தான் தொங்குவதற்கு புது முதுகினை CPM விஜய்காந்த் மூலம் தேடிக்கொண்டிருக்க CPI விஜய்க்கு ரிசர்வ் செய்திருக்கின்றது.

இனி  உண்னாவிரத பந்தலுக்கு வருவோம்.

நடிகர்  விஜய்  மேடையில்  யார் கூப்பிட்டாலும்” போகும்” நெடு மாறனோடு அமர்ந்திருக்க ஒரிஜி¢னல் காம்ரேடுகளான C.P.I -ன் தா.பாண்டியன் தன் சகபாடிகளுடன் வந்தார்.நடிகர் விஜய்க்கு பாண்டியன் பாராட்டு தெரிவித்ததும் இங்கு இரு வகையான மன மாற்றங்கள் நடந்தன.1.நடிகன் காம்ரேடாக மாறியது.2.”காம்ரேடு” ரசிகனாக மாறியது.தங்களால் எந்த நாயையும் முதல்வராக்க முடியுமென நிருபித்தவர்கள் போலிகள்.
அப்படி பாரட்டும்,வாழ்த்தும் தெரிவிக்கவில்லை யெனில் என்ன நடந்திருக்கும் இந்திய கம்யூனிச கட்சி  புரட்சியை செய்யத் தவறிய பாரிய காரணங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.இனி  தா. பாண்டியனை பாண்டி என்றே அழைப்போம்.அப்புடி கூப்பிட்டாத்தான் மச்சிகளுக்கு (ரசிகர்களுக்கு)  பிடிக்கும்..தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி 10  அடி பாயும் என்பது போல  பாண்டியை விட சக “காம்ஸ்கள்” போட்டோவுக்கு போஸ் கொடுத்தன. நிகழ்ச்சியை முடித்து வைத்து வாழ்த்திப்பேசிய பாண்டி புரட்சியின் தலைவர் விஜய் தான் என்று ரகசியமாய் கோடிட்டு காட்டினார்.ஆதி டைப்பில் எச்சரிக்கையும் விடுத்தார்” ஒன்று போர் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் இந்த அரசு தேவைதானா என்ற முடிவுக்கு  வரவேண்டியிருக்கும்.இது வரை வாய் திறக்காத மத்திய அரசை வாய் திறக்க வைக்கும் மாபெரும் போராட்டத்தை நாளை அறிவிப்போம்.” அய்யா ரொம்ப சிரமப்படாதீங்க  புரட்சி  தலைவர்  விஜய்யின்  ஜிகு ஜிகு ஜிகு பாட்டை போட்டாய் வாய் மட்டுமல்ல அனைத்தையும் திறந்து போட்டுக்கொண்டு பார்ப்பார்கள் உங்கள் “காம்ரேடுகள்” உட்பட.
தியாகு தனது பத்திரிக்கையில் பின் வரும் தொனியிலெழுதினார்”இப்பிரச்சினையில்  CPI  காட்டி வரும் ஆர்வம் பாராட்டுக்குரியது”.  ஆர்வம் முத்தி போய் விஜயோடு டேன்ஸ் ஆடி பிறகு “ஒன் இஞ்ச்  டூ இஞ்ச்  கேப் காட்டிடவா” நடிகையின் இடைகளை அளந்து கொண்டு இருந்தாலும் வியப்பேதும் இல்லை. புரட்சிக்கான வேலைகளை செய்து விட்டு காத்திருக்கும் CPI க்கு இன்னும் நிறைய ஆனந்த தகவல்கள் காத்திருக்கின்றன.அவர்கள்   கட்சியில் சிறு
சிறு மாற்றங்கள் செய்தாலே போதும், விஜய் கட்சியின் தேசிய த்லைவராக மாறி ஒரே நாளில் புரட்சியை சாதித்து விடுவார்.காம்ரேடுகள் கண்களில் அனந்தகண்ணீர் தான் வரும்.மாற்றங்கள் அதிகமில்லை கொஞ்சம் தான்.காரல் மாக்ஸ்,எங்கெல்ஸ்,லெனின் போட்டோவை எடுத்து விட்டு பாண்டி,விஜய் போட்டோவை வைப்பது,செங்கொடியை தூக்கிவிட்டு  புதிய மன்ற கொடியை தன் கம்பங்களில்  பறக்கவிடுவது,ஏதோ ஒண்ணு இடிக்குதே  AIYF  போர்டுகளில் உள்ள பகத் சிங்  படத்தை நீக்கிட்டு புது புது மாடல் விஜய்
படத்தை வைக்கலாம்.”வாடி வாடி கை படாத” சிடிபோன்ற புரட்சிகர வசனங்களை மேலே வாசகம்   எழுதலாம்.அறிஞர் அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மாதிரி பாண்டிக்கு விஜயயை
இதய ஆத்மாவாக்கலாம்.பேரு மட்டும் எதுக்கு VIJAYIST PARTY OF INDIA மாற்றி விட்டா போதும்.புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்சி  தானே மலர்ந்திடும்.
மன்மோகனை புடிச்சு தொங்குன தொங்குல டர்பன் எல்லாம் அவ்ந்து போச்சு.கேரளாவில் மம்மூட்டி,ஆந்திராவில் சிரன்சீவி, தமிழகத்தில் விஜயகாந்த்,CPM முன்னேறிய பின்னும் தாய் கட்சி  லேட்டாக இப்பத்தான் விஜயை பிடித்திருக்கின்றார்கள்.இனி மேல் இன்குலாப் தேவை இல்லை .கொடியை ஏற்றி “தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொழுத்து ‘. என்றால் போதும் புரட்சி அப்படியே பொங்கி  வழியும் பீர் வழிவது போல.

நமக்கு முன் உள்ள ஒரே கேள்வி  இனியும்  போலி  கம்யூனிச கட்சியில் இருக்கும் “புரட்சிகர “அணிகளை எவ்வாறு அழைப்பது  ? ரசிகர்களே என்றா தோழர்களே என்றா?

B.P.O. அடிமை. co.in

நவம்பர் 19, 2008 by kalagam

B.P.O. அடிமை. co.in

வெளியே போய் விட்டு வந்த களைப்பில்  சாப்பிடக்கூட முடியவில்லை.உடம்பெல்லாம் ஒரே அடித்து போட்ட மாதிரி இருந்தது..பஸ் ஸ்டாப் லிருந்து  ரூமிற்கு தத்தி தத்தி நடை போட்டேன்.கதவை திறந்து ஷ¤ வை கழட்டிவிட்டு முகம் கூட கழுவவில்லை அப்படியே ஒரு வாரமாக பெருக்காமலிருந்த அறையில் குப்பையோடு குப்பையாய் படுத்தேன். நல்ல தூக்கம். செல் போன் சத்தம் தூக்கத்தை கலைத்தது.ஆன் செய்வதற்குள் ரிங்  நின்று விட்டது.மொத்தம் 5 மிஸ்டு கால்கள்.ஒன்று வீட்டிலிருந்து
மற்ற   நான்கும் சரவணனனிடமிருந்து .சரவணன்  ஏர் டெல்லில்      FM  ஆக இருக்கிறார்.அதற்கு என்னவோ அவர் விளக்கம் சொன்னாலும்  நாங்கள் fraud manager என்று தான் சொல்லுவோம்.   நானும் சரவணனும் அண்ணாமலையில் பி.எஸ்.சி படித்து கொண்டிருக்கின்றோம். தினமும் இரவு அடிக்கடி போன் பேசுவோம்.கடந்த சில வாரமாக  அவரும் போன் செய்யவில்லை.வேலைப்பளு காரணமாக நானும் போன் செய்யவில்லை.அப்படியெ வீட்டிற்கு பேசினாலும் பஸ்-ல் போகும் போது தான் பேச வேண்டும். அலுவலகத்தில் போன் பேச அனுமதியில்லை.யோசித்துக்கொண்டிருக்கும் போதே மீண்டு சரவணன் போன் ஆன் செஇதேன்.வணக்கங்க நல்லாயிருகீங்களா என ஆரம்பித்து  சுமார் 20 நிமிடங்கள் பேசியிருப்போம். நாளை காலை கிண்டி ரயில்வே ஸ்டேசனில்  8.30-8.45 க்குள் சந்திப்பதென முடிவானது.மீண்டும் தூங்க முயற்சித்தேன் பசி வயிற்றை கிள்ளியது.லுங்கியை மாற்றி விட்டு ஹோட்டலுக்கு போனேன்.எப்போதும் சாப்பிடும் கையேந்தி பவனில் பாத்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தார்கள்.இந்த ஏரியாவில் எல்லா இடத்திலும் விலை ரொம்ப அதிகம்.இங்கு தான் விலை குறைவு. பாக்கெட்டை தடவினேன் 90 ரூபாய் இருந்தது. இன்னைக்கு 3-ம் தேதி 7-ம் தேதி தான் சம்பளம்.தெரிந்த எல்லார்கிட்டேயும் கையை நீட்டியாச்சு.யோசித்தேன் ரெண்டு வாழைப்பழங்களை  தின்று விட்டு படுத்தேன்.பசி அடங்கவில்லை.தண்ணீர் கேனும் தீர்ந்து விட்டது.அதற்கு வேற முப்பது ரூபா தரவேண்டும். கவிழ்ந்து படுத்தேன்.

செல்லில்  அலாரம் அடித்து மணி 6 என்றது.கண்ணெல்லாம் தகதக வென எரிந்தது. பத்து நிமிசம் என்றவாறே மீண்டு படுத்தேன். ஏதோ திடீரென எழுந்தேன். மணியோ 7.30 தலையிலடித்துக்கொண்டே எழுந்து ஓடினேன்.குளித்தால் கண்டிப்பாய் நேரமாகும்.மகத்தை கழுவிக்கொண்டு முந்தா  நாள் போட்ட டிரஸ் மாட்டிக்கொண்டு கிளம்பினேன் அவசராவசரமாக. நான் படுத்துகிடந்தனிடத்தில் பாயும்,போர்வையும் சுருண்டு கிடந்தன.ரெண்டு வாரமாக இப்படித்தான் சுருண்டு கிடக்கிம்றன.அவைகள் என்ன செய்யும் B.P.O -ல் வேலை செய்யும் என்னை போன்ற பிச்சைகாரனுக்கு வாழ்க்கை  பட்டதால்   குப்பையோடு குப்பையாக இருக்கின்றன்.
பஸ் ஸ்டாப்-ல் நின்றேன்.மணி இங்கேயே 8.00 மேலும் 15 நிமிடங்கள் நின்றேன்.இன்னேரத்தில் 4 ஷேர் ஆட்டோக்களும்,2 வெள்ளை பரதேசியும்(அதாங்க DELUXE)  மேலும் 5 நிமிடம் போனது.இனியும் காத்திருந்தால் கட்டாது.ஒரு வெள்ளையில்  ஏறினேன்.டிக்கெட் வாங்காம இருக்கலாமா? யோசிப்பதற்குள் நடத்துனர் வந்தார்.50 ரூபாயை நீட்டினேன்.எல்லாரும் 50,100ன்னு கொடுத்தா எஙக போறது என கத்த பதிலுக்கு நானும் கத்தினேன்.என்ன் செய்வது.அவர் அரசிடம் பணிபுரியும் அடிமை. நான் வெள்ளைக்காரனுக்கு சேவகம் புரியும் அடிமை. நேற்று ஒரு நடத்துனரிடம் பேசியது ஞாபகம் வந்தது.” எங்களுக்கெல்லாம் 8 மணி நேர டியூட்டி இல்லை.இதனை தடவை ஒட்டணும்.தினமும் 2 மணி 1மணிக்குதான் வீட்டுக்கு போறாம்”.மீண்டும்  நடத்துனர்  ஒரு பயணியை திட்டிக்கொண்டு வந்தார்.என்ன  செய்வது நாங்கள் அடிமைகள் எங்களின் வேலை பளுவை ஏமாந்தவனிடம் தானே காட்ட முடியும். நல்ல டிராபிக் என் காதில் சங்கூதுவது போல இருந்தது.சூளை மேட்டில் இறங்கி ஒடினேன் தாம்பரம் ரயிலில் செம கூட்டம் கூட்டத்தோடு நானும் ஐக்கியமானேன்.மணி 8.40 சரவணன் வேற காத்திருப்பார்.
நானும் சரவணனும் சுமார் டிப்ளமோ படித்து 7 வருடம் கழித்து தான் பி.எஸ்.சி. சேர்ந்திருந்தோம். ரெண்டு பேருக்கும் அலுவலகத்தில் டிகிரி மேல் பதவி உயர்வுக்கு தேவைபட்டது,சரவணன்  குரோம் பேட்டையிலிருக்கிறார்..அங்கிருந்து டிரெயின் பின் பஸ்-ல் சாந்தோம் போக வேண்டும்.சரவணனிடமிருந்து போன் 5 நிமிடத்தில வரங்க பொய் சொல்லிவிட்டு .15 நிமிடத்தில் கிண்டியிலிறங்கினேன்.அதிகம் தேடவில்லை  டிக்கெட் கவுண்டர் அருகில்  நின்றிருந்தார். நான் கேட்டேன் “என்னங்க உடம்பு இளைச்சுடுச்சு, வேலையிலெ பெண்டு நிமித்தறாங்க.ஆமா பைனல் இயர்க்கு இன்னும் கிளாஸ் ஆரம்பிக்கவேயில்லை.போன் பண்ணி கேட்டாலும் அடுத்த வாரம் வாரம் கத வுடறானுங்க.போன வருசமே பரிட்சாஇக்கும் பத்து நாள் முந்தி தானே பரதேசி நாய்ங்க கொடுத்தாங்க” ” பணம் கட்டலைன்னா” முடிப்பதற்குள் ரயிலின் சத்தம் கேட்டது . அவ்ர் பஸ்க்காக  பறந்தார்.ரயில் வந்தது.. நான் ஏறிய கேபினில் 10 பேர் தான் இருந்தார்கள் . பக்கதில் பேபரை கடன் வாங்கி அதி பார்வயை செலுத்தினேன். மனமோ பணத்துக்காக ஏங்கியது.மீதி 70 ரூ இருக்கு .அப்பட சீசன் டிக்கெட் 7-தேதி வரை இருக்கு..கணக்கு முடியவில்லை .அதற்குள் நானிறங்க வேண்ட்ய இடம் வந்தது.மணி 9.54.  10 மணிக்கு  அலுவலகம் ஓடினேன் யாரு என்னை பார்க்கவில்லை.அவர்களும் ஓடிகொண்டுதானிருக்கிறார்கள் .
செக்யூரிடியிடம் செல்லை சைலண்ட்-ல் வைத்து விட்டு ஒப்படைத்தேன். டோக்கனை மிக கவனமாக உள்ளே வைத்தேன்.ஏற்கனவே டோக்கனை தொலைத்ததற்காக எத்தனை நாய்களிடம் பேச்சு வாங்க வேண்டியிருந்தது. என்ன்மோ இழக்ககூடாததை இழந்தது போல கேள்வி  கேட்டார்கள்.கழுத்தில் சங்கிலியை மாட்டிகொண்டு ( ID CARD) ஸ்வைப்பிங் மிசினில் காட்டினேன் . சிவப்பு விளக்கையே  காட்டியது.. இந்த சனியன் இப்படித்தான் பத்து முறை காட்டினாதான் பச்சை விளக்கை காட்டும்.இப்படி இருந்தே மாசத்தில் 7 நாள் வரவில்லை என்று கணக்கு காட்டும்..
போரடி கிரீன் வாங்கி உள்ளே போனேன்.எங்கள் அலுவலகத்தில் என் டீம் மிகச் சிறியது  மொத்த்ம் 5 பேர் தான்.நான் சேரும் போது 500 பேர் இருந்தார்கள் . இப்போது மொத்தம் 100 தான்.போன 3 மாசதில் அமெரிக்கா புண்ணியத்தில் 400 பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இன்றும் நான் தான் முதல் ஆள்.பக்கத்து டீம் லீடர் முறைத்தார்.பெருமிதமாக சேரில் உட்கார்ந்தேன்.சக டீம் ஊழியர்கள்  வரிசையை வழக்கம் போல பஸ் கிடைக்க லேட். என்றார்கள்..எங்கள் டீம் லீடர் 1 என்ன 3 மணி நேரம் கூட லேட்டாய் வருவார்.யாரும் கேட்க முடியாது. காரணத்தை விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.இரவு ஷிப்ட் முடிந்து  பகல் ஷிப்ட் வரும் போது இயல்பாக பகலில் வேலை செஇது இரவில் தூங்குவதால் ரொம்ப  பகல் ஷிப்டை எதிர்பார்போம்.அவர்கள் தேவைக்கு எற்ற படி நாங்கள் இரவு ஷிப்ட்-ல் இருக்கவைக்கப்படு வோம். நாங்கள் இன்னாட்டுக்காகவா உழைக்கிறோம்.
அமெரிக்கனுக்கு உழைக்கும் போது  அவன் முழிக்கும் போது  நாங்களும் முழிக்க வேண்டியிருந்தது, உண்மையை சொன்னால் அமெரிக்க வணிகர்கள் எங்களை மனிதராக கூட மதிப்பதில்லை.ஒரு ஜாப் செய்யச்சொல்வார்கள் சிலர் சரியான தகவல்கள் தரமாட்டார்கள்.கேட்டால் இது கூடவா புரியாது என்பார்கள். நாங்களாவது பரவாயில்லை கால் செண்டரில் வேலை செஇவோருக்கு இங்கிலீசில் “ஆயா,அம்மா” என எத்து விழாத குறை தான்.

காலையில் வேலை ஒன்றும் இல்லை இங்கு மாலை 6 மணி தான் அமெரிக்காவில்  காலை 9 மணி .சனிக்கிழ்மை செய்யாமல் விட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தோம். A\Cமிக அதிகமாக இருந்தது. மெக்கானிக்  அளவு குறைக்ககூடாது இது  HR  ஆர்டர் என்றார்.  என் டீம் நபருக்கு காயிச்சல் அதிகமாகிக்கொண்டே போனதுHR இடம் சொன்னோம்.அவர் “மெக்கானிக்க வர்ச்சொல்லுங்க  ” A\C ரூம் டெம்ப்க்கு ஈக்வலா வையுங்க ” அப்படி தான் மேடம் இருக்கு”.எங்களிடம் திரும்பி  சொன்னார்”ரூம் டெம்ப்க்கு கீழ குறைக்கமுடியாது கம்ப்யூட்டர் ஹேங் ஆயிடும்”.

 கம்ப்யூட்டரை பற்றி ஒரு வெங்காயமும் தெரியாத  HR கேட்டு நான் கடுப்பாகிபோனேன்.வேகமாக வேலை செய்ய A\Cயை விட பிராசசர் தான் முக்கியம். வெப்பத்தில் தான் கம்ப்யூட்டர் வேலை செய்யும் எனில் எங்களை அடுப்பில் கூட  உட்கார வைப்பார்கள் நாய்கள். வேலை செய்யாதவனுக்கு அதிக சம்பளமும், வேலை செஇகிறவனுக்கு குறைவான சம்பளமும் தருவார்கள் . இது தான் B.P.O.-n  நியதி மணி 6.30 பிரேக்கிற்கு போன டீம் லீடர் வரவில்லை.எங்களுக்கு தலா 15  நிமிடம்  டீம் லீடர் அப்படி யில்லை  போனால் 2 மணி நேரம்.எங்களுடைய work ஐ பார்த்து அவர் தான்  ok செய்ய வேண்டும்.clients corrections என உயிரை எடுக்க அதற்கு சரியான விளக்கம் தராது டீம் லீடர்  உயிரை எடுப்பார்.கடைசியாஇ 8 மணிக்குவந்தார்.சொல்லிவிட்டு கிளம்பினேன் செல்லை வாங்கி பார்த்தால் 4 மிஸ்டு கால்.ரயில்வே ஸ்டேசனுக்கு ஓட்டமும் நடயுமாஇ அல்ல சோர்ந்து போய்  மெதுவாய் நடந்தேன்.ரயில் வந்தவுடன் அதில் உட்கார்ந்தவுடன் அப்பா போன் செய்தார். “ஏண்ட போன் பண்ணினா திருப்பி செய்ய மாட்டியா ?”" இல்லப்ப இப்பத்தான் வெலையை விட்டு வந்தேன் என்ற பொய்யை சொன்னேன்.காசில்லை என சொல்லவில்லை.

ரொம்ப அவமானமாக இருந்தது போன் செய்ய இருந்தது.மதியம் சாப்பாட்டுக்கு 25, டீக்கு 10 என மொத்தம் 35 ரூ காலியாகியிருக்க மீதி 25 இருந்தது.முதலாய் வேலைக்கு சேரும் போது பல பேர் போல நானும் கனவில் மிதந்தேன்” நல்ல பெரிய கம்பெனி,எவ்வளவு செலவு செய்தாலும் 5000 மாவது சேமிக்கலாம்.கம்ப்யூட்ட்ர், பைக்  என. நம்மை கனவு காண சொன்ன அப்துல் கலாம்கள் தான் ஏகாதிபத்திய கைகூலிகள் என்று.ஒரு வழியில் பணத்தை கொடுத்து பலவழிகளில் பிடுஙி கொள்கிறார்கள்.தினம் உணவுக்கு,போக்குவரத்து,வீட்டு வாடகை என எங்கள் பணம் ப்றிக்கப்பட்டு கொண்டே வருகிறது..மீண்டும் அதே வெள்ளை பரதேசியில் ஏறினேன்.”யார் கேட்டாங்க இவனுங்களை இந்த பஸ்.சாதா பஸ் ஐ எல்லாம் தூக்கிட்டு
டீலக்ஸ் ஆக்கிட்டாங்க ” அறைக்கு வரும் போதே ரெண்டு பரோட்டாவைவாங்கி கொண்டு வந்தேன். வாட்சை கழட்டிவைத்தேன் மணி 9.30.வீட்டுக்காரம்மா வந்தார் “அடுத்த மாசத்தில இருந்து 1000 ரூபா அதிகமாமா” பிறகு அவர் என்ன பேசினார் என தெரியவில்லை. புரோட்டாவை பிரிக்காமல்  முறைத்து பார்த்தேன்.இப்பவே ஆளுக்கு 1800ரூபா.வேற இடத்துல போனா 10 மாசம் அட்வான்ஸ் கேப்பானுங்களே”
 நினைக்கும் போதே தலை சுற்றியது.ஒரு உண்மை மட்டும் புலப்பட்டது இந்த IT BPO-ன் நோக்கம் இந்தியாவை வல்லரசாக்கி எங்களை பிச்சைக்காரராக்குவதற்கானதென்று.

இந்திரா-பாசிசத்தாய்

நவம்பர் 20, 2008 by kalagam

indirapsd2இந்திரா-பாசிசத்தாய்

நேற்று அன்னை இந்திரா காந்தியின் 92 வது பிறந்த நாளை காங்கிரசார் வழக்கம் போல செட் செட்டாக கொண்டாடினர்.இன்றைய தலைமுறை பலருக்கு அன்னையை பற்றி சரியாகத் தெரியாது. சொல்லித்தந்ததெல்லாம்  முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. நமக்கும் கொஞ்சம் அந்தத்தாயின் புகழ் பாட ஆசை தான்.அந்தத்தாயின் புகழினைப்பாட  கொல்லப்பட்ட சீக்கியர்களின் கதறல்களும், வித்வையாக்கப்பட்ட மகனை இழந்த தாய்களின் ஒப்பரிகளும் கேட்டுக்கொண்டிருக்கும்.  நாம் காதுகளில் பஞ்சினை வைத்து அடைத்துக்கொள்வோம்.பிறகு மீண்டு புகழினை பாடுவோம்” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “

நவம்பர் 17 1917-ல்  இந்திரா ப்ரியதர்சினி காந்தி மாபெரும் மாப்பிள்ளை நேரு மாமாவுக்கு பெண்ணாகப் பிறந்தார். பெண்கள் வீட்டிலே இருக்க வேண்டுமென்ற பார்ப்பன குடும்பத்தில் பிறந்து லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் படித்தார். அப்பன் இந்திய விடுத்லைக்கு போராடினார்.மகளை
தன் நாட்டை அடிமையாக்கிய லண்டனில்  படிக்க வைத்தாரெனில் அந்த தாய் நாட்டுப்பற்றை நாம் பாராட்டித்தானாக வேண்டும்.1941-ல் படித்து கிழித்து விட்டு இந்திய விடுதலையை கொண்டு செல்வதில் நேரு காந்திக்கும் லடாய் இருந்த சமயத்தில் நேருவுக்கு தோள் கொடுக்க வந்தார்.இந்திய மேலாதிக்க கனவில் சீனாவை பிடிக்கும் கனவில் சீன செம்படை மண்னை அள்ளிப்போட்டது.அந்த கவலையில் மண்டையை போட்டார்.பிறகு காமராசர் லால் பகதூர்-ஐ பிரதமராக்கினார்.அவரும்  செத்துப்போக. காமராசர் இந்திராவை பிரதமராக்கினார்.அவருக்கு சாகும் தரு வாயில் தான் உணர்ந்திருப்பார். தாம் தேர்தெடுத்துஇ¢ருப்பது பெண் சாதாரண பெண் இல்லை .இநாட்டிற்கே தாய் அதுவும் பாசிசத்தை திறம் பட பேணி வளர்த்த தாய் என்று.

1966-ல் முதல் பெண் பிரதமர் என பேரெடுத்த இந்திரா சில ஆண்டுகளிலேயே தன் பாசிச முகத்தை காட்ட ஆரம்பித்தார்.அவருடைய முதல் ஆட்சி காலத்தில் ரூபாயின் ,மதிப்பு சரிந்தது.1980-ல் இந்திய ரூபாயின் மதிப்பு 40 சதம்சரிந்தது. சர்வாதிகாரமென்றால் என்னவென்று மக்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார்.அரசு உறுப்புக்கள் அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவருக்கு கீழ் படியாத அரசுகள் உடனே கலைக்கப்பட்டது.எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்தியாவின் மாபெரும் சர்வாதிகாரியாக மாறினார்.செத்து போன அப்பனின் ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றினார்..பாகிஸ்தானோடு போர் புரிந்து தேச வெறியை கிளப்பி தன் சர்வாதிகாரத்தை திசை திருப்பினார்.இந்திய மேலாதிக்க போக்கினை வளர்தெடுத்து பங்களாதேசினை  உருவாக்கி தான் தான் ரவுடியென நிரூபித்தார்.ஆட்சியை இழந்து மன்றாடினார்.மீண்டும் தான் செய்த தவறுக்காக மெரீனா கடற்கரையில் மன்னிப்பு கேட்டு  அழுதார். முன்பு தன் ஆட்சியை கலைத்த இந்திராவை கருணாநிதி பேய் என்றவர் தற்போது இந்திராவின் மகளே வா நிலையான ஆட்சியை தாவென முழங்கினார் . மீண்டும் அரியசானை கீழ் வர முன்னை காட்டிலும் பல அரசுகள் தீவிரமாய் கலைக்கப்பட்டன.தேசிய இனபோராட்டத்தை   அழித்தொழித்தார்.

அதில் முக்கியமானது “புளு ஸ்டார்” தேசிய இன போராட்டம் பஞ்சாபில் அதிகமாய் பீறிட்டு கிளம்பியது.அதனை அடக்க வந்ததாய் கூறிகொண்டு ராணுவம் போலீசு ஆகியவை மக்களின் அடிப்படை உரிமயை கூட பறித்தன.பலர் சீக்கியர்கள் என்பதாலேயே கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டனர்.இன்னும் அதிகமாய் இனப்போராட்ட்ம் தீயாய் பற்றியது.பல சீக்கியர்கள் சீக்கியன் என்ற ஒரு காரணத்தாலே கொல்லப்பட்டனர், இதன் விளைவாக பாகிஸ்தானுக்குக்கெதிராக இந்திரா உருவாக்கிய பிந்த்ரன் வாலே தற்போது இந்தியாவுக்கு எதிராக திரும்பினார். தன்னுடைய மேலாதிக்க கனவுக்காக ஈழத்தில் விடுதலைபுலிகள்,வங்கத்தில், பாகிஸ்தான் பஞ்சாப்-ல் பிந்த்ரன்  வாலெ என பலரையும் உருவாக்கி  அந்நாடுகளை  தனக்கு அடிபணிய நிர்பந்தம் கொடுத்தார். இறுதியில் அது அவருக்கே வினையாய் முடிந்தது . பிந்த்ரன் வாலே  இனப்பிரச்சனையை பயன் படுத்தி முன்னுக்குக்கு வந்தார்.பார்ப்பன,இந்துக்களுக்கு இக்கலவரம் பெரும் அச்சுறுத்த்லை தந்ததுதனது.பார்ப்பனீயத்துக்கு ஆபத்து என்றவுடன் இறுதிகட்ட தாக்குதலை தொடுக்க முனைந்து “புளு ஸ்டார்” -ல்  இறங்கினார். அக் 3 – அக் 6 1983 வரை பொற்கோயில் முற்றுகையிடப்பட்டது.அப்போது சென்ற ராணுவம் 1990-ல் தான் விலக்கி கொள்ளப்பட்டது. கணக்கிலடங்காதோர் சிக்கியர்கள் கொல்லப்பட்டனர்.பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரும் இதில் அடக்கம். 3 நாட்கள் கழித்து கோயிலின் கதவை திறந்த போது  உள்ளேயிருந்தவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பபட்ட விசயம் தெரிய வந்தது துப்பாக்கி ரவைகள் வழியே.

1984 -ல் சீக்கிய மெய்காப்பாளரால் இந்திராவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.கண்ணில் பட்டவருக்கெல்லாம் ஆப்ரேசன் செய்து கொண்டிருந்த சஞ்சய் “இறந்த” பிறகு இனாட்டை காக்கும் பொறுப்பு இளந்தலைவர் ராஜீவுக்கு வந்தது.ராஜீவின் தலைமையில்  இந்தியா முழுவதிலும் மாபெரும் சீக்கியர்களு,கெதிரான கலவரம் பரப்பப்பட்டது.ராஜீவின் அல்லக்கைகள் ஜகதீஸ் டைட்லர் உள்ளிட்டவர்கள் அதை செய்து முடித்தார்கள்.தலை நகர் டெல்லியில் அப்பாவி சீக்கியர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள்.அதற்கு ராஜீவ் மவுனமாய் பதில் தந்தார்” ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் வரத்தானே செய்யும்”

நாமும் இந்திராவின் பிறந்த நாள் , இறந்த நாள்களை நினைவு கூர்வோம் ராஜீவ் எம்ஜிஆர் செயா போன்ற பாசிச படிமானங்களை பெற்ற பாசிச தாயை புகழ்வதற்காக அல்ல.

பஞ்சாபில் கொல்லப்பட்ட மகனுக்காக கதறிக்கொண்டு இருக்கின்றாரே அந்தத்தாய்க்காக!

——————————————————————————————————————————————————————————————————

.

B.P.0.அடிமை.C0M- பகுதி2அடிமைத்தனமே சுவாசமாய்

நவம்பர் 23, 2008 by kalagam

B.P.0.அடிமை.C0M- பகுதி 2
அடிமைத்தனமே சுவாசமாய்

வழக்கம் போல  அலுவலகத்துக்கு ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தேன்.என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார்.”நீங்க எங்க வேலை செய்யறிங்க”.நான் விளக்கினேன்.அவர்” இப்படி தினமும் இத்தன பேர வேலயவிட்டு தூக்கறாஙளே என ஆரம்பித்தவர்.அமெரிக்க சந்தை சரிவு ,ஒரு சங்கம் அமைத்தால்….. என இழுத்துக்கொண்டே போக நானிறங வேண்டிய இடம் வந்தது.அலுவகத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.மனதில் பல யோசனைகள்.போன மாதம் தான் நோட்டிஸ் போர்டில் ஒட்டினார்கள்.இனி யாருக்கும் வாகன வசதி கிடையாது(கேப்) .நை ஷிப்ட் உட்பட பணிபுரியும்  யாரும் தங்கள் சொந்த பாதுகாப்பிலேயே வரவேண்டும்.

B.P.0 மற்றும் ஐ.டிக்கு நிறைய வித்யாசமிருக்கின்றது.இங்கு ஒரு நாளில் ஏத்தனை ஜாப் செய்கின்றோம் என்பதுதான் கணக்கு..என் மானேஜர் சொன்னர்” நீங்க 20 மணி நேரம் கூட வேல செய்யுங்க அதப்பத்தி யாரும் கவலைப்படமாட்டங்க.குறைந்த நேரத்தில் அதிக ஜாப் செய்ய பழகிகோங்க.”

நிறைய ஜாப் வந்துவிட்டதெனில் எல்லவற்றையும் முத்துவிட்டு தான் செல்ல வேன்டும்.6 மணிக்கு வேல முடியும் நேரதில் 3 மணிநேரத்துக்கு ஜாப் போட்டுவிட்டு டீம் லீடர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். மாதம் ஒரு முறை மீட்டிங் ,கடந்த மாத மேடிங்-ல் மானேஜெர்கள் சொன்னர்கள் ” அப்புடித்தான் தினமும் 2 (அ) 3 மணிநேரம் அதிக நேரம் வேலை செஞுதான் ஆகணு. தேவையின்னா இங்க இரு இல்லேன்னா போய்க்கிட்டே இரு .உனக்கு  தர்ற 10000 சம்பளத்துக்கு 5000 க்கு ரெண்டுபேர் தயாரா இருப்பாங்க.இன்னொரு ஊழியர் சொன்னர்” சார் தினமும் இங்கயிருந்து கிளம்பவே 9 மணி ஆகுது  வாரத்துக்கு ஒரு மறைதான் குழந்தைகளை பார்க்கமுடியுது.எம் பையன் என்கிட்ட சரியாக்கூட பேச மாட்டென்கிறான்.” அதுக்கு என்ன பண்றது சேகர் வேலைன்னா அப்படித்தான் இருக்கும்.” சொல்லிவிட்டு போனார்கள்.

அலுவலகத்துக்குள் சென்றேன்.எல்லோரும் எதோ ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.கம்பூட்டரை போட்டு விட்டு என்னவென்று விசாரித்தேன்.நேற்று நைட் ஷிப்ட் வந்தவ்ர்களிடம் ஓவர் டைம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றார்கள்.காலையில் 6 மணிக்கு எல்லோரும் சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு கிளம்பிவிட்டார்கள்.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.எங்கள் கம்பனி வரலாறிலேயே முதல் ஸ்ட்ரைக்

மதிய உணவு இடைவேலைக்கு முன் அறிவிக்கப்பட்டது.இன்று மாலை அவசர மீட்டிங் என்று.இடைவேளை போது பலரும் பேசினார்கள்”என்ன கேக்கட்டும்.நான் பேசுற பேச்சுல  நீ யாருன்னு என்னை தெரிஞ்சுக்குவீங்க” மீட்டிங் அறையில் வழக்கம் போல சவால் விட்டவர்கள் பேசவில்லை.மீண்டும் தலைமையிடமிருந்து மிரட்டல்.காலையில் தூக்கியிருந்த காலர் அதற்குள் தொங்கிவிட்டது.

அந்த வாரம் முடிந்து அடுத வாரம் நைட் ஷிப்ட்-ல் நான்.ஒருவர் சொன்னார் இன்னைக்கு கண்டிப்பா ஓ.டி.பார்க்க சொன்னா கிளம்பிவிடலாம்.எனக்கு மணி 5 ஆகும் போதே சந்தோசம்.மணி முள் மீது திட்டு விழுந்து கொண்டிருந்தது. மணி 6 ஆனது வேலையோ இன்னும் 2 மணி நேரத்துக்கு அதிகரிக்கப்பட்டது.யாரும் கிளம்பவேயில்லை,கரெக்ட்டா 6 மணிக்கு கிளம்பிடுவாங்களா என்ன ,மணியோ ஆறரை தாண்டியது.

சொன்னவரிடம் கேட்டேன் ” என்ன கிளம்பலீயா”எவனும் வரமாட்டான்”.என்றார்.
அவ்வா முழுக்க இடைவேளையில் நாயகனானவர்கள்.ஓ.டி போது மவுனமானார்கள்.

அடுத்த வாரமும் வந்தது H.R. வந்தார் ” உங்களுக்கு work load  கொஞ்சம் அதிகம் தான் அதனால தான்……” புதுசா ஆள் எடுக்கப்போறாங்களா” இது நான். அவர் தொடர்ந்தார்.அதனால  எல்லாரும் இந்த வாரம்  எக்ஸ்கர்சன் போகப்போறோம்.வெஜ் ஆர் நான் வெஜ் food code உங்க டி.எல்.கிட்ட சொல்லுங்க

நான் எனது டீம்-ல் உள்ளவர்களிடமும் ,பக்கத்து டீம்- உள்ளவ்ர்களிடமு இப்படி சொன்னேன்.” எதுக்கு டூர் ஓ.டிக்கு பணம் இல்லையே அதுக்கா,கேப் கட்பணிணானே  அதுக்கா,மனுசன்னா சொரணை வேன்டும் நாய்க்கு பொறை நமக்கு டூரா?.தனிதனியாய் பேசினேன்.சுமார் 20 பேர் போகமாட்டேன் என்றார்கள் .அடுத்த நாள்  லீடர் கேட்டார் என்னப்பா பேர் சொல்லவேயில்லை” நான் வரலை சார். பரிட்சை இருக்கு” பொய் சொன்னேன். அருகிலிருந்த்வன் கேட்டான் சார் தண்ணீ இருக்கா? நாட் அலவுட் என்ற படியே கண்ணடித்தார்.

இல்லை நான் போக மாட்டேன் என்றார்கள் பேரை கொடுத்துவிட்டு.சண்டே வந்து விட்டு போனது.எல்லோருக்கும் மெயில் வந்தது.னேத்து நடந்த டூர் போட்டோ,வீடியோ மெயின் சர்வரில் உள்ளது என்றார்கள்.கண்டிப்பாய் 10 பேராவது போயிருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த வீடியோவை பார்த்தேன்.அதில் ஆண்,பெண் பேதமில்லாமில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப சாதுவாய் ஒரு பெண் இருக்கும்.அதுகூட குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.மப்பில் பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ஸ்டிரைக்-ஐ நடத்தினேன் என்றாரே அவர் உட்பட..எனக்கு உடம்பெல்லாம் வெப்பாம் ஏறியது.அந்த சாதுப்பெண் என்னிடம் கேட்டார்”நீங்க வரலை?” நான் பதிலேதும் கூறாமல் அமைதியாயிருந்தேன்.

எனக்கு மாபெரும் உண்மை விளங்கியது.இங்கு பலரும் தன்னை நுகர் பொருளாக்கிகொள்ளவே விரும்புகிறார்கள்.இடுப்புக்கு கீழே பேண்ட்,தலையை சிரைத்துகொள்வது என தன்னால் முயன்றதனைத்தையும் செய்கிறார்கள்..அதன் மூலமே தன் இருப்பை உயர்த்திகொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறதே.2000,1000 என பி.பீ.ஓ-ல் வேலையை விட்டு தூக்கப்படுவதாக.ஏன் அவர்கள் இணைவதில்லை.இணையவேண்டுமெனில் ஐக்கியம் தேவை ,நாளை நீ தூக்கப்படுவாய் என சொல்லிப்பாருங்கள் ,எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.
ஒற்றுமை இப்படி எச்சில் இலைக்கு அலைந்து கோண்டிருந்தால் கிடைக்காது.உரிமைகளை மீட்டெடுக்க
சங்கம் தேவை.அது கண்டிப்பாய் நாக்கை தொங்கப்போட்டு கொண்டிருப்பவனால் முடியாது.
நாங்கள் நுகர் பொருளாய் இருக்கும் வரை எங்கள் வாழ்வு சவக்குழிக்கானதாகவேயிருக்கும்.

திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்

நவம்பர் 23, 2008 by kalagam

திரு  நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்

கிராமப்புரங்கள் முதல் கல்லூரி வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ கேவலப்படுத்தவோ  பயன் படுத்த்ப்படும் முக்கியச் சொல் “பொட்டை,  அலி , ஒம்போது” பலருக்கு இந்த கருத்து உண்டு.” இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான”. ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது. முசுலீம் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத இச்சமூகம்  பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது.

உண்மையில் திரு நங்கைகள் யார் ?  மனித செல்லில் உள்ள 23 குரோமோசோம் இணையில் கடைசி 23 23-வது இணையே ஆணா பெண்ணா என தீர்மானிகின்றது. XX என்ற குரோமோசோம் ஆணாகவும், YY
என்ற குரோமோசோம்  பென்னாகவும் பிறக்கின்றது. ஒரு X(or)Y  குரோமோசோம்  அதிகமாகிவிட்டால்
அவர் திரு நங்கையாகிறார். ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள்  சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர்.அவவயதில் தான் ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர்.

மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக  கூறப்படுகிறது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்
திரு நங்கை நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி யென அழைக்கப்படுகிறனர்..மேற்படியுள்ள அரவாணி யென்ற பெயரே தவறானது.அப்பெயர் திரு நங்கைகள் உருவாக்கப்பட்டதே பாலியல் தேவையின் கடைசி முயற்சி எனக் கூறுகின்றது.பாஞ்சாலியை 5 மணக்க ஐவரும் தலா ஒரு வருடம் என பாஞ்சாலியை பங்கு போட்டுக்கொள்கின்றனர்.மீதி 4 பேரும் பாஞ்சாலியை மீதி 4 பேரும் பார்க்கக்கூடாது.மீறி பார்த்த அர்ச்சுணன் யாத்திரைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒரு பெண் (தாழ்த்தப்பட்டவர்)மூலமாக குழந்தை பிறக்கின்றது அது தான் அரவாண்.

பாரத யுத்தத்தில்  கிருஷ்ணன் ஒருவரை பலி கேட்க அது அரவாண் என முடிவு செய்யப்படுகின்றது.அப்போது அரவாண் தான் இல்லற சுகத்தை அனுபவிக்க வில்லை   அனுபவிக்க  வேண்டும் எனக்கூற கிருஷ்ணன் பெண் உருவில் வந்து  அனுபவிக்க வைத்தார்.இது பார்ப்பன புரூடா கதை.

ஆணாதிக்க இந்து மதத்தில் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல  திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவரை பொட்டை ஒம்போது அலி போன்ற வார்த்தைகள் எதற்காக சுட்டப்படுகிறது.இவன் ஆண்மையில்லாதாவன்.ஒரு பெண்ணுடன் (அ) ஆணுடன் இல்லறத்தில் ஈடு பட லாயக்கற்றவர்.இந்த சமுதாயத்தில் ஆண்,பெண்,விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை  திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை..

ஆங்கிலத்தில் he she it, தமிழில் அவன் அவள் அது  திரு நங்கைக்கு இங்கு இடம் இல்லை.அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது வேண்டுமானால் நாயோடு சேர்ந்துகொள்.கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில்  பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது ஆணாதிக்கம்.

———————————————————————————————————————————————

பலரும் சொல்கின்றார்கள் “அவங்களை யார் பாலியல் தொழில் செய்யச்சொன்னாங்க உடம்பு நல்லாத்தானே இருக்கு உழச்சு முன்னேற வேண்டியது தானே”   இது “சும்மா கத விடாதீங்க அவன் வாயில மூத்திரம் இருக்கின்ற வர இவன் என்னா பண்ணிணான்” என்ற சாதிவெறியனுக்கு ஒப்பானது.யாரையும் கட்டி போட்டு இழுத்து வந்து பாலியல் தொழில் செய்ய சொல்ல வில்லை. இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள்,பெண்களின்  கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாது  இருக்க முடிகிறதா.

இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் ரீதியிலான கடு  நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு  பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும்செய்கின்றனர் .பாலியல் தொழிலாளியை  ஆணாதிக்கம் உருவாக்கியதோ அப்படித்தான் திரு நங்கைகளை பாலியல் தொழிலாளி ஆக்கியது.தாழ்த்த்ப்பட்ட ஒருவரை எங்கணம் அடையாலம் காட்ட முடியும்.அவரின் சுற்றுபுறத்தை தவிர  .  ஆனால் திருநங்கைகளுக்கு ?

———————————————————————————————————————————————

திருநங்கைகள் பலரும் சொல்லும் வார்த்தை இது.” நாங்கள் கடவுளிலிருந்து வந்தவர்கள்.வட நாட்டில் எல்லா விழாவுக்கும் எங்களுக்குத்தான் மரியாதை” திருநங்கைகள்  தங்களை கடவுளின் வாரிசாக்கி அதன் மூலம் கேலிப்பொருளுமாக்கிவிட்ட பார்ப்பனீய இந்து மதத்தை முதலில் எதிர்க்காது தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும்.நியமன உறுப்பினர் போன்ற கோரிகைகள் எல்லாம்  இனி பயனற்றதாகி போய் விட்டது.இந்த மறுகாலனியாக்க,பார்பபன மதவெறி சூழலில்  தனியாய் போராடினால் கிடைக்கது வெற்றி.உழைக்கும் மக்களுக்காக அவர்களுக்காக களத்திலிறங்குவோம்.இழந்த,வாழ்வாதாரத்திற்கான உரிமைகளை பெறுவோம்.இனியும்தாலியறுத்து ஒப்பாரி வைத்து கொண்டிருந்தால்  ஒப்பாரி வைக்க வைத்தவனை
எப்போது தான்  ஒப்பாரி வைக்கப் போகின்றோம்.

———————————————————————————————————————————————

மாபெரும் சோசலிச புரட்சி நடந்த சில நாட்களில்  நிகழ்ந்த சம்பவம் இது.ரசியாவில் ஒரு பாலியல் தொழிலாளி பனிப்பொழிவில் நனைந்து கொண்டிருந்தார்.அங்கு வந்த செம்படை வீரர் சொன்னார்.”தோழர் உள்ளே போங்க” முதன் முதலாய் ”தோழர் “வார்த்தை அவரின் கண்ணில் நீரை கொண்டு வந்தது,ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை கம்யூனிசமே பெற்றுத்தரும்.
போலி சன நாயகப் பாதை அல்ல.

aravaanipsd2

ஜெயமோகன் என்ற தரகன்

நவம்பர் 30, 2008 by kalagam

ஜெயமோகன்  என்ற தரகன்
படைப்பாளிகளின் பெயரில் உலாவும் மாமாப்பயல்கள்

மாண்பு மிகு இலக்கிய மேதை,சுந்தர ராமசாமிக்கு ப்றகு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்க தகுதியான ஒரே நபர் என வர்ணிக்கப்பட்டும்,அவாளோட புத்தகத்து சைஸ்-ஐ வைச்சே அறிவ தெரிஞ்சுக்கலாம் என பார்ப்பன அம்பிகள் புளங்காகிதமடையும் நபர் திருவாளர் ஜெயமோகன் அவர்கள்.
ஜெயமோகன் உயிர்மை நவம்பர் 2008 இதழில் ஊமை செந்நாய் எனும் கிளுகிளுப் பூட்டும் ஏ சர்டிபிகேட்டுக்கு தகுத்யான நெடுங்கதையை எழுதியிருக்கின்றார்.ஆபாசப்படம் எடுக்கத்திட்டமிடும் தயாரிப்பளர்கள் நேரே அண்ணாரிடம் சென்றால் போதும் ஷகிலா என்ன அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இலக்கியத்தோடு பாலீஷ் போட்டுத்தருவார்.அதை யூ சர்டிபிகேட் என்று வெளியிட்டு காசு சம்பாதிக்கலாம்.அழகியலின் ரசனைக்குள் புகுந்து ரசிக்கும் ரசிக சிகாமணிகள்  இதை ரசித்து  ரசித்து மெய்மறந்து கிடப்பார்கள்.

இது வரை பல தரகுவேலை கதைகள் வெளிவந்திருக்கின்றன. “நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு “என ஜெயமோகன்  அறிவித்துஇருக்கின்றார்.பிரம்ம சிறீ ஆபாசானந்தா ஜெயமோகன்  அவர்களின் லேட்டஸ்ட் ரிலீஸ் “ஊமை செந் நாய்”(இலக்கிய முலாம் பூசப்பட்டு இருப்பதால் குடும்பத்தோடு படிக்கலாம்).ஒரு வெள்ளைக்கார துரைக்கு வேலை செய்யும் வேட்டைதுணைவனின் கதை இது.அறிமுக வரியை படித்தவுடனே ஆகா ஒரு சேவகனின் வாழ்க்கையை அவனின் அவமானங்கள்,வேலைப்பளு,இளக்கார பார்வைகளை இலக்கிய வாசத்தோடு ஜெயமோகன் எப்படி எடுத்துரைக்கப் போகின்றார் என்று நினைத்தால்  ஒரு வேட்டைத்துணைவனின் வாழ்வை ஒரு மாமாப்பயலின் கடைவிழிப்பார்வையில் கணகச்சிதமாக  எடுத்துக்காட்டி படிப்போரை விரசத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றார்.

 வில்சன் துரையை பற்றி  “அவன் வாயில் சுருட்டை பற்ற வைத்தான் அது கரிய ஆண் குறி போலிருந்தது”ஆரம்பிக்கிறார்.ஒரு விபச்சார புரோக்கர் பேருந்து நிலையத்திலும்,பொது இடங்களிலும்  கிராக்கியை மசியவைக்க  எப்படி  பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பானோ அதை விட சற்று தூக்கலாக ஒவ்வொரு சந்திலும்  அள்ளித் தெளிக்கின்றார். துரையின் தேவைக்கு பெண்களை கூட்டி வருவது முதல்  அவரின் வர்ணிப்பு இருக்கின்றதே  அதை படிக்கும் இலக்கிய மணிகள் “ஆகா இதை கூட எப்படி ரசிச்சு எழுதியிருக்கா பார்த்தேளா இங்கதான் நம்மாளு நிக்கிறா,ஒரு படைப்பாளி எதை கொடுத்தாலும்  இலக்கியப்படுத்தவேண்டும் இலக்கிய உலகம் நமக்கு சொல்லித்தருகின்றது.இதை விமர்சிப்போர் அறிவிலிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்.

ஒரு படைப்பாளி எந்த விசயத்தை வேண்டுமானாலும் எழுதலாம்,எப்படியும் எழுதலாம்,அதிலும் பெண்களை பற்றி எழுழ்தும் போது அவரின் உறுப்புக்களை  வர்ணிக்கலம்.ஒரு படத்தின் வசூலுக்கு ஏற்ப படுக்கயறை காட்சிகள் நீளுவது போல,ஒரு படைப்பாளி நீட்டிக்கலாம் எங்கேயும் புகுந்து கொண்டு.பதில் இப்படியும் வரும்”ஒரு படைப்பாளிக்கு ஆபாசம் விரசம் எதுவும் கிடையாது,எல்லாமே உங்கள் பார்வையில் தான் இருக்கின்றது.படைப்பாளியின் நோக்கம் எடுத்துக்கொண்டவிசயத்தை எப்படி உருவகம்,உவமையோடு எழுதுகின்றான் என்பதை பாருங்கள்,இலக்கியப்பார்வை இல்லாதவர்கள்  என்ன சொன்னாலும்  அதை பற்றி விவாதிக்க தேவையில்லை.

முதலில் படைப்பாளி என்பவன் யார்? தன்னுடைய கதை,கவிதை,ஓவியதிறமைகளை படைப்பவன்.அவன் மக்களிடமிருந்து கற்றவன், மக்களிடமிருந்து சென்றவன்.தன்னுடைய படைப்புக்களை மக்களுக்காக படைப்பவன்.ஒரு படைப்பாளியின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?அது அவன் மக்களுக்காக எப்படிப்பட்ட படைப்புக்களை என்பதை பொறுத்தது.புரட்சிகவி முதல் பல புரட்சிகர கவிஞர்கள் படைத்தார்கள் தங்கள் படைப்புக்களை மக்களுக்காக  ,அவர்களுக்கு தன் மான,தேச விடுதலை உணர்வூட்டினார்கள்.குறிப்பாக பாரதிதாசன் தன் படைப்புகள் மூலம் பார்ப்பன ஆதிக்கத்துக்கெதிராக போராடினார்.இறந்த பின்னும் 
அவரின் படைப்புகள் அப்பணியயை செய்து வருகின்றன. நமக்கு தெரிந்த இன்னொருவரும் இருக்கின்றார் அவன் பெயர் வாலி தன் பாடல்கள் மூலம் “ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி” வேறு வகையான உணர்வூட்டும் வேலையில் இருக்கின்றார்.பாரதிதாசனையும் வாலியையும் படைப்பாளி என்ற ஒரே தராசில் வைக்கமுடியுமா?

படைப்பாளியின் வெற்றி பார்க்கும் படிக்கும் கேட்பவரிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது தான்.அத்தாக்கம் மக்களின் வாழ்க்கை த்தரதை உயர்த்துவதாய் இருத்தல் வேண்டும்.மக்களுக்கெதிராக,அவர்களின் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் எதுவும் படைப்பாகாதுதைனியும் சிலர் கேட்கலாம்.” ஒரு படைப்பாளியை இதைத்தான் இப்படித்தான் சிந்திக்கவேண்டுமென கூற முடியாதே”.கண்டிப்பாய் கூறமுடியாது.ஆனால் ஒவ்வொரு படைப்பாளியும் “இப்படி,இவர்களுக்காகத்தான்னென சிந்திக்கின்றார்கள்.ஜெயமாகனைப் போல பலரும் தனது சொறிபிடித்த கருத்தை பொது கருத்தாக்க முனைகின்றனர்.அதில் வெற்றியும் பெற்று தனக்கு ஒரு கூட்டத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

நாம் மீண்டும் அந்த மாமாபயலின் கதைக்குள் செல்லத்தேவையில்லை,அதனுள் சென்றால் அவரின் “கீழ்த்த்ரமான உவமைகளை ” நாமும் பதிய வேண்டி இருக்கும்.
————————————————————————————————————-

அடிக்கடி எழும்பூரில்  ஓவியக் கண் காட்சி நடை பெறுவதுண்டு, அங்கு பல பெண்களின் அரை,முழு நிர்வாண ஓவியங்களை பார்க்கலாம்.அழகியலை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதல்ல,எதற்காக இதனால் எப்படிப்பட்ட தாக்கம் எற்படப்போகின்றது
என்பதுதான் தேவை.இந்த ஆபாச ஒவியங்களை பார்க்க ரசிக்க இளைஞர் பட்டாளங்கள் வருவதும் உண்டு.ஒவியனுக்கு ஆபாசம் உண்டா என தெரியாது,ஆனால் பார்வையாளர்களிடம்  உண்டா என ஓவியர்கள் தான் சொல்ல வேண்டும்.

 
mok_copy

என்ன பண்றது?-கவிதைகள்

நவம்பர் 30, 2008 by kalagam

என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……

வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

போதைதலைக்கேறாது கண்டதையும்
குடித்து புரள்கின்றன
மெத்தைகள்….

தெரியும் இடத்திலெல்லாம்
மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்
இலவசமாய்
துரோகத்தனத்தையும் சேர்த்து…..
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

உலகமயம் ஆணையிட்டப்படி
நுகர் பொருட்களால்
நுகரப்படுகின்றாயா இல்லையா?

நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..

தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……

இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.

மும்பை தாக்குதல்கள்-எது பயங்கரவாதம்?

டிசம்பர் 3, 2008 by kalagam

mumbai-copyமும்பை தாக்குதல்கள்-எது பயங்கரவாதம்?

மும்பாயில் கடந்த 26-ம் தேதி நடந்த இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சம் தேசம் முழுவதும் கிளறி விடப்பட்டு இருக்கின்றது.”பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக போட் மூலம் தீவிரவாதிகள் வந்தனர்.அங்கிருந்து சென்று ஓபராய்,தாஜ், நாரிமன் போன்ற கலாச்சார பெருமை மிக்க வெளினாட்டினருக்காகவே சேவை செய்து கொண்டிருந்த பாரம்பரிய சின்னங்களை  குறி வைத்து தாக்கி,9 அமெரிக்கர்கள் உட்பட சுமார் 150 பேர்  கொல்லப்பட்டனர்.NSG படை வீரர்கள் தான் இந் நாட்டின் பாரம்பரியமிக்க வீரத்தை காட்டி மானத்தை கட்டிக்காத்தனர்.” இவை தான் ஊடகங்களில் வந்த செய்தி.

தாக்குதல் நடந்து 4 நாட்களாகியும் பத்திரிக்கைகள்,t.vக்கள்” நாடு இப்படி அவமானப்பட்டு விட்டதே ,அதுக்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தீவிரமாய் இருக்கின்றன.இத்தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில்,மகாராட்டிர முதல்வர் ,துணை முதல் வர் ஆகியோர் பதவி விலகி யுல்ளனர்.ஆனால் ஊடகங்களோ “இது பத்தாது இன்னும் வேணும்” என ஒப்பாரி வைக்கின்றன நம்மையும் ஒப்பாரி வைக்க சொல்கின்றன.பார்ப்பன ஊடகங்கள் வழக்கம் போல தொடர்ந்து தலையங்கங்களை தீட்டி வருகின்றன.இத்தாக்குதலுக்கு காரணங்களையும் தீர்வுகளையும் வைக்கின்றன.அதன் படி செயலிழந்த  நிர்வாகம்,பொறுப்பற்ற தலைமை போன்றவையே இதற்கு காரணம்,தீர்வுகளாக தனி புலனாய்வு அமைப்பு, நாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு,தயவு தாட்சண்யமின்றி விசாரணைக்கு உட்படுத்துதல் ஆகியன வைக்கப்படுகின்றன.மேலும் பங்கு சந்தை சரிவு முதல் சுற்றுலா ஹோட்ட்ல் வளர்ச்சி பாதிப்பு வரை “எல்லவற்றுக்கும் பயங்கரவாதமே காரணம் , நாட்டை முன்னேற்ற பயங்கரவாத்தை  வேரறுக்கவேண்டும்.
பயங்கரவாதத்தை வேரறுக்க ஒரே வழி பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும் அல்லது அங்கே உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.அமெரிக்கா எப்படி தனது “இறையாண்மையை காக்க ஆப்கன் மீது போரிட்டதோ அது போல இந்தியாவும் போரில் இறங்க வேண்டும்” என்ற பார்ப்பன கோட்பாட்டினை பொது கருத்தாக்கும் பணியில் பத்திரிக்கைகளும்,பண்டாரங்களும் ஈடுபட்டிருக்கின்றன.

பயங்கரவாதத்தை வேரறுக்கவேண்டும் என்பதில் நமக்கும் வேறு கருத்துஇல்லை.ஆனால்  எது பயங்கரவாதம்? . நாட்டையே அச்சுறுத்திவரும் மாபெரும் பயங்கரவாதம் பார்ப்பன மதவெறி பயங்கரவாதமே .நாட்டில் மதவெறி பயங்கரவாதம்,மறு காலனிபயங்கரவாதம்,அரசு பயங்கரவாதம் போன்றவைகள் நிகழ்த்தபடாத  ஒரு நாளை கூட காண முடியாது.
மும்பையில் நடத்தப்பட்ட  தாக்குதல் எதிர்க்கப்படவேண்டியதே.இதற்கு மூலக்காரணத்தை தோண்டியெடுக்காமல் தீர்வை தேடுவதி பலனில்லை.

1947க்குமுன் இருந்ததை விட 1947 aug 15க்குப்பின் சிறுபான்மைமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை பல தாக்குதல்கள், நடந்து கொண்டிருக்கின்றன.இதற்கு  பலியான அம்முசுலீம் மக்களே சிறையிலடைக்கப்பட்டனர்.தொடர்ச்சியான பகல்பூர்,அயோத்தி,கோவை போன்ற சிறுபான்மைமக்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு
சில இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் தோன்றின.வினைக்கு எதிர் வினை என்ற வகையில் சில செயல்களில் ஈடுபட்டனர்.இதுவே இசுலாமிய மக்கள் மீதான வரைமுரயற்ற தாக்குதலுக்கு சாக்கு காட்டி இந்து பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.கோவை,மும்பை குண்டு வெடிப்புக்களில் சற்றும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.பலருக்கும் கைது செஇது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான் தான் ” தான் தீவிரவாதி” என தெரிந்தது.1948 காந்தியை பார்பான கோட்சே கொன்றிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் , பார்ப்பன வெறியர்கள் திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தினர் அன்று முதல் தற்போது நடந்து வரும் பாசிச வெறியாட்டங்கள் வரை அரசின் பாதுகாப்போடு இவை திட்டமிட்டு நடக்கின்றன. கோவை வழ க்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அன்சாரி உள்ளிட்ட பலரும் ஆயுள் தண்டனைகளில் இருக்க,பாபர் மசூதி வழக்கின் முக்கிய குற்றவாளியான அத்வானி துணை பிரதமராகவும், உமா பாரதி ம.பி.முத்ல்வராகவும் ஆகிவிட்டனர்.இப்படி சிறுபான்மைமக்களின் மீது தாகுதல் தொடுக்கும் அமைப்புகள் அரசை கைப்பற்றிவிட்டன,மீண்டும் கைபற்றவும் முயல்கின்றன.

—————————————————————————————————————————————————————————

டாடா இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளி வந்தது.டாடா மட்டுமல்லபிற பார்ப்பன ஊடகங்களுக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் வந்திருக்கின்றது.இந்திய உழைக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பின்மையை நாள்தோறும் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.டாடாவின் ஹோட்டல் குழுமத்தின் 50% லாபத்தை தாஜ் தந்தது.அதை 5 நாட்கள் மூட வேண்டி வந்தவுடன் இந்தியாவின் பாதுகாப்பு  குறித்து சிந்திக்கும் அளவுக்கு கொண்டுசென்றதை நாம் உணரலாம்.
“ஒரு முதலாளி தன் மூலதனத்தின் பாதிப்பை தேசத்தின் பாதிப்பாகவும்,தன் இழப்பை தேசத்தின் இழப்பாகவும் மாற்றுகின்றான்.”டட நந்திகிராமில் கார் ஆலையைதொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கொல்லப்பட்டார்களே அதை விட அந்த ஆலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதுதான் தேசிய அவமானமாக கருதப்பட்டது.அப்போது ஊடகங்கள் கீழ் கண்டவாறு எழுதின”ஒரு நாட்டின் முன்னேற்றம் தடை படுகின்றது”. ஒரு முதலாளியின் வளர்ச்சி தடை படுமெனில் அது நாட்டின் வளர்ச்சியை தடை செய்ய்யப்படுவதற்கு சமம்”.மிட்டல் ஆர்சிலரை வளைத்தபோது “இந்தியா கண்டிப்பாய் வல்லரசு ஆயிடும் என் பத்திரிக்கைகள் புளங்காகிதம் அடைந்தன.மூலதன நலனுக்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நலனும் தேசிய நலனுக்கானதே. ஹோட்டல் பற்றி எறிந்தவுடன் நாடே பற்றி எறிவது போல்  கனவு கண்ட டாடா நாட்டுக்கே தீப்பற்ற வைக்கச்சொல்கிறார்.உடனே தேசிய பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளறியிருக்கின்றன. .இந்த ஊடகங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியதில்லை.

நந்திகிராமில் நடந்த கார் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது முடிவாகவில்லை,தோண்டுவது மீண்டும் தொடங்கினால் எண்ணிக்கை அதிகமாகும்.மார்க்சிஸ்டு  குண்டர்கள் செய்த கொலையும்,
பாலியல் வன்முறைகளும்  மக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை உண்டு பண்ண வில்லை.ஆனால் கோத்ரா சம்பவம் தேசிய அளவிலான இந்துக்களின் பாதுகாப்பை புதியதாய் கோரியது.கோத்ராவை வெற்றிகரமாக நடத்திய ஆர்.எஸ்.எஸ் கும்பல் குஜராத்தில்  3000 முசுலீம் மக்களை கொன்று குவித்தது.அப்போது மருந்துக்குகூட முசுலீம் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழவேயில்லை.
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருப்பதால் இதுவரை லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டிருக்கின்றார்கள்.விதர்பாவில் கோடை காலம்,மழை காலம் போல “போஸ்ட்மார்டம் சீசன் ” என்று ஒன்று இருக்கின்றது.அது பருத்தி பூ பறிப்பு காலம்.அக்காலத்தில் விவசாயிகளின் பிணங்கள் போஸ்ட்மாடர்த்திற்காக மருத்துவமனையில் இறைந்து கிடக்கும்.இது என்றாவது பத்திரிக்கைகளில் விவாத பொருளாகியிருக்குமா?வாரந்தோறும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிடுங்கி எறியப்பட்டு கொண்டிருக்கின்றார்களே அது தான் தேசிய விவாதமாகியிருக்குமா?இல்லை செத்து போன மாட்டின் தோலை உரி¢த்ததற்காக 5 தலித்துகள் கொல்லப்பட்டார்களே அப்போது ஒருவன் சொன்னான்”கோமாதாவை விட 5 தலித்துகள்  உயிர் பெரிதல்ல”என்றானே அப்போதும் கயர்லாஞ்சி,மேலவளவு,உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மீதான் வன்முறைகள் எப்போது தான் தேசிய அளவிலான பாதுகாப்பு குறித்த விவாதமாகியிருக்குமா?மாலேகானி  குண்டு வைத சாமியாரை விடுதலை செய்ய சொல்லும் பிஜேபி-ன் மீது குறைப்த பட்சம் நம்பிக்கயை குறித்த சந்தேகமாவது எற்பட்டிருக்குமா என்ன?

இப்படி எத்தனை பேர் செத்தாலும் அது தேசிய  விவாதமாகியிறாது.அவைஅதற்கான தகுதியை பெறாது.அதன் தகுதியை நிர்ணயிப்பது பார்ப்பன பணியாக்களே.

—————————————————————————————————————————————————————————–

மும்பைதாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தமைக்காக ராணுவ, NSG வீரர்களுக்காக நாம் பெருமைப்படமுடியுமா? பெருமைப்பட முடியுமெனில் குஜராத்தில் 3000 முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்காக நாம் அவமானப்பட்டே ஆக வேண்டும்.ராணுவம், NSG எப்போதும் மக்களுகெதிராகவே இருக்கின்றன.   இவை தான் இந்த பாசிச அரச உறுப்புக்கள்.அரசின் கூலிப்படைகள் .அசாம்,காசுமீரிகளை கொன்று அப்பெண்களை பாலியல் வன்முறை செய்ததற்காகவும்,மனோரமாவின் உடலெங்கும் குண்டுகளை பதித்தற்காகவும் அவைகள் பரிசுகளை வாங்கி குவித்தன.மும்பை தாக்குதலில் தனது வீரத்தை காட்டியவர்கள் தான் மேற்கண்ட வேலைகளையும் செய்தனர்.இப்பாதக செயல்களுக்காக ,அரசோ வெட்கி தலைகுனியவில்லை,மாறாக தலையை  நிமிர்த்தி வெற்றிக்களிப்பில் மிதந்தன.பத்திரிக்கைகளோ வாயே திறக்கவில்லை.ஆம் ஆளும் வர்ர்கங்களின் எச்சில் எலும்புகளுக்கு அலையும்
இவர்களால்  எப்போதும் பாசிசத்தை எப்படி நேர்த்தியாக கொண்டு செல்ல முடியும்  என்று ஆலோசனைதானே கூறமுடியும்.

————————————————————————————————————————————————————————-

26/11 என்ற புது code அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எப்படி 9/11 என்ற முத்திரை உருவாக்கப்பட்டு ஆப்கன்,ஈரக் மீது போரின ஏவப்பட்டதோ அதே நோக்கத்தோடு இந்த புது முத்திரை  உருவாக்கப்பட்டுள்ளது.எப்படியும் பாகிஸ்தான் மீது போர் வெறியூட்டி
மீண்டும் ஆட்சியை பிடிக்க பார்ப்பன கும்பல்கள் பரபரப்பாய் செயல் படுகின்றன.செத்துபோன உழைக்கும் மக்களை விட அயல் நாட்டினர் இழப்பு,கலாச்சார சின்னங்களின் மீதான் பாதிப்பே பேரழிவாக முன்னிருத்தப்படுகின்றது.புது ஆண்டான் ஒபாமாவோ பச்சை கொடி காட்டி விட்டார்”தனது பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு”.பார்ப்பன பாசிஸ்டுகளோ நாக்கை தொங்கபோட்டபடி காத்திருக்கின்றார்கள்.

மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது போல மறுகாலனியும்,பார்ப்பனபாசிசமும் வாசிப்பை தொடர்கின்றன.மறுகாலனிக்கும்,பார்ப்பனபாசிசத்திற்கு தடையை இருப்பது கூட  பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகின்றன.மதவெறியை மறுப்பவர்களும் எதிர்த்து எழுதுபவர்களும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.போதாகுறைக்கு வலைத்தளங்களில் சைபர் கிரைமிற்கு  புகார் தரச் சொல்லி சிபாசிசு வேறு. நம்புங்கள் இது தான் உலகின் மாபெரும் சன நாயகம்.

டிசம்பர் 6-தொடரும் பார்ப்பன பாசிசம்

டிசம்பர் 6, 2008 by kalagam

dec6_copy

மசூதி இடிக்கப்பட்டது
முசுலீம்களின் மண்டைகளோடு…

அம்பேத்கர் நினைவு நாள்
புதைக்கப்பட்டது தாழ்த்தப்பட்டோரின்
உரிமைகளோடு சேர்த்து……

பூத்து குலுங்கும் மாபெரும்
சனநாயகம் வாழ்க இந்தியா
ஜெய் ஹிந்த்.

செங்கொடி

டிசம்பர் 13, 2008 by kalagam

வேர்ட் பிரஸ்-ல் புதிய வலையை தொடங்கியுள்ள

தோழர்

செங்கொடியை கலகம்  வாழ்த்திவரவேற்கின்றது

http://senkodi.wordpress.com/

கிடைப்பதனைத்தையும்
ஆயுதமாக்குவோம்
பட்டொளிவீசி பறக்கட்டும்
செங்கொடி
பார்ப்பனீயத்தை
வேரறுக்க
மறுகாலனியை
உடைக்க
வர்க்கப்போரில்
களம் புகுவோம்.

செருப்பின் புனிதம்

டிசம்பர் 15, 2008 by kalagam

punithamசெருப்பின் புனிதம்

நேற்று வரை
நினைத்திருந்தேன்
புனிதங்கள் புதைக்கப்பட
வேண்டியவை என்று…..

எனக்கு
சொல்லப்பட்ட
புனிதமெல்லாம்
பறையனை ஒடுக்கும்
நால்வர்ணம்
சங்கரனின்
மலங்கழித்த இலை
பஞ்சைக்கு கிடைக்காத
அதிகாரம்
கேள்விகளுக்கு
பதில் சொல்லும்
துப்பாக்கியின் ரவைகள்
வறுமையின் வயிற்றை
பார்த்து எக்காளச்
சிரிப்புகள்
மூடிய ஆலையின்
முன்னால்
உண்ணாவிரதத்தில்
அமர்ந்திருந்த
தொழிலாளிகள்
“ஐந்து விரல்களும்
ஒன்றாய்
இருக்கமுடியாது”
 எப்போதும்
புனிதங்களுக்காக
வக்கீல்கள்
வாதாடிக்கொண்டே
இருந்தனர்….

அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
அழிக்கப்படவேண்டியவை என்று….

பாசிசத்தை புனிதத்தால்
பாயாசமாக்கி
தந்தன பத்திரிக்கைகள்
அதிகாரத்தை
ஆப்பம் என்றனர்
செய்தியாளர்கள்
ஒவ்வொரு முறையிலும்
என் கோபத்துக்கு
பதிலளித்தார்கள்
அது தான் விதி
அது புனிதம் என்று…..

அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
மட்டுமல்ல புனிதர்களும்
ஒடுக்கப்படவேண்டியவர்கள் என்று….
ஈராக்கிய
எண்ணை வயல்கள்
பற்றி எரிய
அம்மண்ணெங்கும்
ரத்தத்தால்
சிவந்திருக்க
அமெரிக்க நாய்களால்
அம்மணமாய்
வைக்கப்பட்ட
கைதிகள்
சிதைக்கப்பட்ட
தாய்மார்கள்
அவன்
பெருமையாய்
சொன்னான்
” அப்படி செய்திருக்க
மாட்டார்கள்
நான் அறிந்த அமெரிக்கர்கள்
புனிதமானவர்கள்”….
ஒரு
புனிதர்
புனிதத்தால்
அந்த
புனிதக்காட்சியை
செய்தார்….

இறுதியில்
நானும் ஒத்துக்
கொண்டேன்
புனிதம் இருப்பதாக
ஆம் தன்
புனித செருப்பால்
“அத்துமீறி
நுழைந்த நாயே”
என்ற புனித
வார்த்தையால்
அந்தப் புனிதர்
அந்தப்பாவியை
செருப்பாலடித்தார்
அவனோதான்
குனிந்து தன்
நாட்டுகொடிக்கு
செருப்படி
விழ வைத்தான்
” தம்மை
 இப்படியெல்லாம்
மிரட்ட முடியாது,
அவரினெண்ணம்
புரியவில்லை”
என்றான்தன் முகத்தின்
பயந்து போன
வடுக்களோடு…

பாவிகளின்
பாவங்கள்
அந்த புனிதச்
செருப்படியால்
மட்டும் தீராது.

சீமான் – மணி கைது

டிசம்பர் 20, 2008 by kalagam

seeman-copyசீமான் -  மணி  கைது
அரச பயங்கரவாதத்துக்கு தாளம் போடும்  வீடணர்கள்

நேற்றைய தினம் இயக்குனர் சீமான்மற்றும் த.பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி  ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் சட்ட  விரோதக்கருத்துக்களை பரப்பியும் வந்ததால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை அறிவித்துள்ளது.மணியரசனை தேடி வருவதாகவும் காவல் துறை அறிவித்து பின்னர் அவரையும் கைது செய்து விட்டது.கடந்த ஞாயிற்று கிழமை த.தே.பொ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறிகைது செய்யப்பட்டிருந்தாலும்  உண்மை அதுவல்ல.இலங்கையில் போரை நடத்திக்கொண்டிருக்கும்  இந்தியா தமிழகத்தில்  தன்னை அம்பலப்படுத்தும்  நபர்களை  தொடர்ச்சியாக கைது செய்கின்றது.கடந்த நான்கு நாட்களாகவே  உண்மையான இந்தியர்களான காங்கிரசு கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரிப்பதும் ,அவரையும் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவாய் பேசுவோரை தேசத்துரோகிகளாகவும் கூறிவருகின்றனர்.சீமானின் வீட்டில் புகுந்து காரை எரிக்கவும் முயன்றிருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் பேசுவதே இப்பொழுது தேசவிரோதமாகிவிட்டது.அங்கே களத்தில் இருப்பது பாரதம் அது என்ன செய்தாலும் ஆதரிக்கவேண்டும்.எதிர்ப்பாய் பேசும் எல்லோருக்கும் காத்திருக்கின்றது பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம்  சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது.

யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யுமா அப்படி எங்கேயாவது செய்திருக்கின்றதா?இந்தியாவின் மேலாதிக்க வெறி இன்னொறு நாட்டை கூறு போடுகின்றது.தான் கூறு போடுவதற்கு தடையாய் இருக்கும் புலிகளை அழிக்க சிங்களப்படையுடன் சேர்ந்து களத்தில் நிற்கின்றது என்பது தான் உண்மை.ராஜீவ் கொலைக்கு முன் தேனாய் இனித்த ஈழம் தற்போது கசப்பது ஏன்?தனது மேலாதிக்க வெறிக்காக மட்டுமே ஈழப்பிரச்சினையை கையிலெடுத்தது.தனது காரியம் முடிந்தவுடன் வேண்டாத விசயமாகவும் தேசவிரோதமாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலு “எங்கள் தலைவன் ராஜீவை பழிப்பவர்களை சும்மா விடமாட்டோம் அவனை தூக்கி உள்ளே போடு ” என்றெவுடனே  தமிழ்த்தாயை மொத்த குத்தகை எடுத்திருக்கும் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணி¢யையும் கைது செய்து இருக்கின்றார்.ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்காக சமாதானப்புறாவாகவும் மறு புறம் இந்திய தேசியத்தின் நாயகனாகவும் டபுள் ஆக்சனில்  நடித்துக்கொண்டிருக்கின்றார் தானே கதை வசனம் எழுதி.தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளவது காங்கிரஸ் தயவின்றி நடக்காது.குரங்காட்டியாக காங்கிரசும் குரங்காக  கருணாநிதியும் நமக்கு வித்தை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.சிங்கள தளபதி சொன்னதை தனது செயல் மூலம் கருணாநிதி நிரூபித்து இருக்கின்றார்.ஏற்கனவே வைகோ கைதின் போது “தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவு தவறில்லை ” என்று உச்ச மன்றம் சொன்னபின்னும் செல்லாத வழக்காக மாறும் எனத்தெரிந்தே தமிழக அரசு கைது வேலையை செய்கின்றது.மானங்கெட்ட கோழை மணியோ வாயே திறப்பதில்லை பெரியாரின் சொத்துக்களை தின்றுக்கொண்டிருக்கும் அந்த வாய் எப்போதும் மக்களின் உரிமைக்காக பேசாது.

இவர்களின் நோக்கம் ஈழப்பிரச்சனை மட்டுமல்ல இந்திய சிறைகூடத்தில் அடைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை உட்பட எதுவாக இருந்தாலும் அதை பற்றி பேசக்கூடாது.ஏன் மக்கள் பிரச்சினையை பற்றி பேசினால் கூட அது தேசவிரோதமாகிவிடுகின்றது. நாடு சுபிட்சமாக இருக்கின்றது.அமைதியாக இருக்கின்றது அதில் “இல்லாத “பிரச்சினையை  தீர்க்க முன்னெடுத்து செல்பவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளே.கருத்துரிமைக்காக போராடு யாவரும்  சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.

 

பாபர் மசூதியை சர்ச்சைகுரிய கட்டிடமாக அறிவித்த நீதிமன்றம் தீர்ப்புவரும் வரை அங்கு எவ்வித் நடவடிக்கையும் மேற்கொள்ளகூடாது என அறிவித்தது.அங்கு கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  வேலைகள் ஜரூராக நடைப்பெற்று வருகின்றது.அதனை முன்னெடுத்து செல்லும் VHP RSS ஐ தேசவிரோத சக்திகளுக்கு அரசே அடிகல்லை கொடுக்கின்றது.குஜராத்,ஒரிசா,பெங்களூர் என திட்டமிட்டு பார்ப்பன இந்து மத்வெறி பாசிசத்தை ஏவி வருகின்றனர்.கரசேவைக்கு போன வெறியர்களை பார்த்து தேச விரோத சட்டங்கள் பல்லளித்தன.அவர்கள் மீது பாயாத இந்த தேச பாதுகாப்பு சட்டங்கள் சனனாயக புரட்சிகர சக்திகள் மீது மட்டும் ஏன் பாய்கின்றன?ஏனன்றால் இது அவர்களின் நாடு இந்து பாசிச அரசு  இதில் சூத்திரன் பஞ்சமன் உள்ளிட்ட உழைக்கும் மக்கள்  யாவரும் இங்கு பயங்கர வாதிகளே ..பயங்கரவாதிகளின் ஆட்சியில் புனிதர் பட்டம் தேடிவராது.

 

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலுவை முக்கால் வாசி காங்கிரஸ்காரனுக்கே தெரியாது.தொண்டர்கள் ஏதும் இல்லாது முழுக்க முழுக்க தலைவர்களின் கட்சி  காங்கிரஸ் பேரியக்கம் .எல்லோரும் இன் னாட்டு மன்னர் என்பது போல காங்கிரஸ்-ல் எல்லோரும் தலைவர்கள்.திடீரென தங்கபாலுவுக்கு காங்கிரஸ் பேரியக்கம் மேல் காதல் பிறந்து  காமராசர் ஆட்சியை பிடிக்க பறந்து செல்கின்றார்.வாசனோ அதே காமராசர் ஆட்சி அமைக்க சைக்கிளில் வருகிறார்,ஈவிகேஎஸ் இளங்கோவனோ பாரின் சரக்கில் வருகிறார். நாளைக்கு காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியமைத்தால் அமைச்சரே இருக்க மாட்டார்கள் எல்லோரும் முதல்வர்.
இப்படி போகும் கட்சி கூட்டத்திலெல்லாம்  வேட்டியை உறுவிவிட்டு அனுப்பினாலும்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் “காங்கிரஸ் பேரியக்கம் கட்டுக்கோப்பானது” மறுத்துபேசினால் இதுகூட சட்டவிரோதக்கருத்தாக மாற்றப்பட்டு ராத்திரியில் கைது செய்ய போலீசு கதவை தட்டும்.

வெள்ளையனால் பெற்று துரோகிகளால் வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம்  சொல்கிறது”ஈழமக்களுக்காக தன் உயிரையே தந்தார் தலைவர் ராஜீவ்” இந்திரா அண்டு கோ தனது மேலாதிக்கத்திற்காக பாக்கை கூறுபோட்டு பிரித்தது போல ஈழமக்களின் துயரத்தை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.தாய்க்கு பின்  அமைதிப்படையை அனுப்பி அங்கு தமிழர்களை கொன்று தமிழச்சிகளை பாலியல் சித்த்ரவதை செய்தது தனயன் அரசு.அதற்கு பரிசாக  சொர்க்கம் அனுப்பப்பட்டார். இப்போது மானம் பொத்துக்க்கொண்டு வரும் இந்த புடுங்கிகளுக்கு   அரசால் கொல்லப்பட்ட லட்ச விவசாயிகளின் சீரழிந்த வாழ்வுக்கோ,sezஆல் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பற்றியோ,இந்து பாசிச பயங்கரவாதிகள் பற்றியோ பேசவாய்வராது.மாலேகானில் குண்டு வைத்த லே (கே)டிபெண் சாமியாரை தேசிய பாது காப்பு சட்டத்தில் போட சொன்னதா காங்கிரசு.குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி பற்றி கூட தப்பித்த்வறி பேசுவதில்லை.
பாஜக,காங்கிரஸ்  ரெண்டிற்கும் பேரில் தான் வேறு பாடு உள்ளதே தவிர செயலில் இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமானை கைது செய்யக்கோரி மனு கொடுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தொண்டர்கள் நரேந்திரமோடியை  பற்றி எந்த வாயிலும் மூச்சு விட மாட்டார்கள்.

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

ஆகா என்ன அருமையான வார்த்தை அய்யா  காங்கிரஸ் பேரியக்கத் தலைவரே நீங்கள் கொஞ்சம் அழிந்ததால் தானே நாங்கள் கொஞ்சம் நல்லாயிருக்கின்றோம்.மொத்தமாய் அழிந்து போங்கள் ! மக்களின் எதிரிப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையாவது குறையும்.

இனியும் “என்ன ஒரு சனனாயகம் என்று இந்த சாக்கடையை  நுகர்வோருக்கு நாம் பதிலேதும் சொல்லத்தேவையில்லை.

காங்கிரஸ் என்றொரு கட்சி

டிசம்பர் 22, 2008 by kalagam

congகாங்கிரஸ் என்றொரு கட்சி
கருமாதி இழவுக்கு காலம் தான் வருமா?

1991,மே மாதம் 22-ம் தேதி காலை 6 மணி கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஓட்டினேன் கையில் பாத்திரத்தோடு. பாலை ஊற்றிய படியே  பால் காரர் பக்கத்துவீட்டுக்கார அம்மாவிடம்  சொன்னார் “ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்”.எனக்கு ஒரே சந்தோசம் ராஜீவ் செத்ததை எங்கள் வீட்டில் யாரும்  பொருட் படுத்தவே இல்லை.எனக்கு நன்றாய் நினைவிருக்கின்றது காலையிலிருந்து மாலை வரை அப்படி ஒரு ஆட்டம் எனக்கு தேவையெல்லாம் ஒரு நாள் விடுமறை. அப்போது நான் சிறுவன்.டிடியில் பாத்திமா பாபு கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்தார்.எங்கள் தெருவில் யாரும் அழுததாய் தெரியவில்லை.பல ஆண்டுகளுக்கு பின் தான் தெரிந்தது “ராஜீவிற்காக இந்தியாவே அழுதது” என்று. அப்படி அழுததாய் எங்களுக்கும் ஞாபகம் இல்லை.

கடந்த வாரம் சீமான்,கொளத்தூர் மணி,மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே எதிர்ப்பு,காங்கிரசோ வரவேற்பு “திருமாவளவனையும் கைது செய்”என்ற முழக்கத்தோடு ஆரம்பித்து விடுதலை சிறுத்தைகளிடம் செருப்படி வாங்கி  பிளிறிக்கொண்டிருக்கின்றார்கள்.பார்ப்பன ,சூத்திர பத்திரிக்கைகளோ “சத்திய மூர்த்தி பவன் போலீசார் கண்முன்னே தாக்கப்பட்டது” “காங்கிரசார் தாக்கப்பட்டனர்”.”தங்க்க”பாலுவோ புனிதமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்டதை எந்த காங்கிரஸ் காரனும் பொறுத்துக்கொள்ள மாட்டான்” பேரரசர் சொல்லுவதற்கு முன்னேயே ம்ற்ற அரசர்கள் சீமான்,திருமாவின் பொம்மைகளை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்க இல்லேன்னா திமுக ஆட்சியே இல்லை தெரியுமா? என தமிழக சாலைகளில் சீன் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.சாலைகளில் மறியல் செய்த  வெள்ளை வேட்டிகள் தனது பின்புறத்தில் அழுக்கு படிய வைத்து விட்டர்களே  என்ற கோபத்தில் உளறுகின்றன.இளங்கோவன் பாலுவும்  சொல்வதை போல சத்திய மூர்த்தி பவன் புனிதமான இடமா,அங்கே நடந்த தாக்குதல் வரலாற்றுப்பிழையா?

சத்தியமூர்த்தி பவன் என்பது துரோகத்தின் கலங்கரை விளக்கம். மகாத்மாகாந்தி முதல் செத்துப்போன ராஜீவ் காந்தி வரை ஏன் தற்போது குட்டிகுட்டி தலைவர்களாக பரிணமிக்கும் எல்லோரும்  துரோக கம்பெனியின் பங்கு தாரர்கள்.இந்த துரோக கம்பெனியின் தலைவர் பதவிக்காக சத்தியமூர்த்திபவனுக்கு விழுந்த செருப்படிகளும் அர்ச்சனைகளும் கணக்கிலடங்காது.இந்திய நாட்டை எப்படி தொடர்ந்து தம் காட்டுப்பாட்டில் வைப்பது என்ற பிரிட்டிசாரின் கவலைக்கு மருந்தாய் வந்தவர் தான் மஹாத்மா. நீங்கள் இங்கு இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கல் எப்போதும் உங்கள் அடிமைதான் என  உறுமியவர்தான்மஹாத்மா.மாவீரன் பகத்சிங்கை தூக்கில் எப்போது போடுவது என வெள்ளையர்கள் கேட்டபோது,லாகூர் மானாட்டுக்கு முன்னே போடுங்க என்று தன் தேச பக்தியை உலகறியச்செய்தார்.ஒவ்வொரு முறையும்  போராட்டத்தை ஆரம்பித்து விட்டு அது மக்களின் கைக்கு சென்ற வுடனே உடனே வாபஸ் வாங்கி ” ,வெள்ளையன் அடித்தால் வாங்க வேண்டும் திருப்பி அடித்த மக்களை (சவுரி சவுரா) காட்டுமிராண்டிகளென்று கண்டித்தார் இந்தப் “பீ”தா.அந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மஹாத்மா செய்த மாபெரும் துரோகம் தான் அவர் கண்டு பிடித்த அரிசன்.உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை தே…….மகன்களாக்கியது தான் தேசத்தந்தையின் செயல்.ராமராஜ்யமும் பசுகொல்லாமையும் இரு கண்கள் என்ற மஹாத்மா மாபெரும் பித்தலாட்ட பேர்வழி. எதற்கெடுத்தாலும் ராம ராஜ்யம் தான் என் கனவு சொல்லிக்கொண்டிருந்தார்.உடனே மாபெரும் பகுத்தறிவாளர் குத்தூசியார் அவர்கள் ராமனின் லீலைகளை அவிழ்த்து விட அந்த ராமன் வேற நான் மனசிலே  நினைச்ச ராமன் வேற என்றார்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் மஹாத்மாவும் அவரது சத்தியசோதனையும் உணமையென்று ஏனென்றால் அவர் தேசப்பிதா.

மகாஆத்மாவுக்கு பிறகு ரெண்டு காந்திகள் மக்களின் உயிரை எடுத்தார்கள் அம்மாளும் பையனும் சோடியாக.அம்மாளுக்கு பஞ்சாப்,பையனுக்கோ ஈழம்.இருவரின் கையிலும் பஞ்சாபும் ஈழமும் பிழியப்பட்டன.1983-ல் பொற்கோயிலுக்குள் புகுந்த ராணுவம்சாமி கும்பிடவந்த சீக்கியர்களையெல்லாம்  சொர்க்கம் அனுப்பியது.பஞ்சாபின் இனப்போராட்டம் துப்பாக்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டது.ஆயிரக்கணக்காண சீக்கியர்கள்  வரன் முறையின்றி கொல்லப்பட்டனர்.எல்லாவற்றுக்கும் இப்போது போலவே இந்திரா பதில் சொன்னார் கச்சிதமாய் “அவர்கள் தீவிரவாதிகள்”இந்திரா காந்தி கொலைக்கு பின்னோ  ராஜீவ் சீக்கியர்களின்மேல் அளவற்ற தாக்குதல் தொடுத்தார்.அரச கலவரங்களை ஏற்படுத்தி சீக்கியர்களை கொன்று விட்டு மவுனமாய் பதில் சொன்னார்”ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தானே செய்யும்”.ஒரு இந்திரா  ஆலமரம் செத்துப்போன மக்கள் எல்லாம் அதிர்வுகளா?

தன் கட்டுக்குள்  கொண்டுவர போராளிக்குழுக்களை முறைகேடாக பயன்படுத்தி இலங்கையை அச்சுறுத்திய ராஜீவ்.இலங்கை மண்டியிட்ட வுடனே IPKF என்ற அமைதிப்படை இலங்கை அனுப்பினார்.ஆயிரக்கணக்காண போராளிகளுக்கு எதிராக லட்சக்கணக்காண இந்திய ராணுவம் தனது முப்படைகளோடு முகாமிட்டது.சிங்கள மற்றும் தமிழ்மக்களை கொன்று குவித்தது.தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது.அதற்குதான் அந்த பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.அதுவே ரா குல் காந்தி வரை பிரதமர் அதிகாரத்திற்கு வருவதற்கான தகுதியாகிவிட்டது.

இப்போது அலறுகிறார்களே அய்யோ எங்கள் தலைவன்  எங்கள் தலைவன், சத்திய மூர்த்திபவனை தாக்கிய தேசத்துரோகிகள் என்று என்று.செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டை  அரிவாளோடு  மண்டையை பிளந்தார்களே,மூப்பனார் தமாகா ஆரம்பித்த போது அம்மணமாக்கி துரத்திவிட்டார்களே அப்போதெல்லாம் எங்கே போனது இந்த முழக்கம்.கர்னாடகா,கேரளா,ஆந்திராவில் காங்கிரசு அரசுகள் இருக்கும் போது ஏன் தன்ணீர்பிரச்சினையின் போது சொன்னார்கள்”3 மாநிலம் மட்டும் போதாது இந்த தமிழகமும் எப்போது காங் வசம் வருகிறதோ அப்போது தான் காவிரி,பெரியாறு,பாலாறு பிரச்சினை தீரும்”
.இப்படி எந்த ஒரு தமிழகப்பிரச்சினைக்கும்  “அவர் நல்ல முடிவைஎடுப்பார் என நம்பிக்கை இருக்கின்றது” எனும் பெருச்சாளிகள்.இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் எனில் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவு தரவேண்டுமெனில் அது கண்டிப்பாய் அமைதிப்படையை அனுப்பியது சரியா தவறா என்ற விவாதத்தில் தான் முடியும் .அந்த முடிவில் ராஜீவ் கொல்லப்பட்டது சாதாரணமாகிப்போகும்.பிறகு யார் பேரை சொல்லி ஆட்சியைப்பிடிப்பது.மீண்டும் யாராவது செத்தால் தான் ஆட்சியை பிடிக்கக் முடியும். .அது தான் ஒரு முத்திரை அதன் மேலேயே கைவைத்த்தால் நோகாமலா இருக்கும்.
தங்க பாலு சொல்கிறார்” பாஜக கூட இப்படி செய்ததில்லை”எப்படி செய்வார்கள் காங் காட் ஒப்பந்தம் அமுல் படுத்திய போடு தான் திட்டமிட்டே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.ஏன் தற்போது நாட்டை அடிமையாக்கும் அணு சக்தி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டபோது ராமர் பால பிரச்சினையை கையிலெடுத்தார்கள்.இரண்டு பெயரும் தான் வேறே தவிர உள்ளே இருப்பது அதே பார்ப்பன பாசிசமும் அமெரிக்க அடிமைப்புத்தியும் தான்.
ராஜீவ் என்ற அந்த முத்திரை சிதைக்கப்படவேண்டும்  துரோகத்தின் வரலாறான காங்கிரஸ்  விரட்டப்படவேண்டும்.காங்கிரஸ் குட்டிதலைவர்களுக்கு விழுந்த செருப்படி  காங்கிரசுக்கும் விழவேண்டும்.செத்துப்போனவன் என்பதால் ஹிட்லர் யோக்கியனாகிவிடுவானா?ஒரு பாசிஸ்ட் செத்தப்பின்னும்  உயிர்த்தெழுகிறான் அவனை அம்பலப்படுத்தாத வரை.அதனால் தான் காந்தி தேசப்பிதாவாகவும் பஜாரி அம்மாவாகவும்  நீட்டிக்க முடிகிறது.அதற்கான முயற்சியை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் வந்த மகஇக வின் பாடல்”காங்கிரஸ் என்றொரு கட்சி அதன் கருமாதி இழவுக்கு காலம் வந்தாச்சு” அமைதியாய் இருந்தால் மக்களுக்கு அவர்கள் கருமாதி வைத்து விடுவார்கள்.

I.T-ன் ஆணாதிக்கம்

டிசம்பர் 24, 2008 by kalagam

it1I.T-ன் ஆணாதிக்கம்
தொடரும் ஆணாதிக்கமும் அடங்கிப்போன பெண்ணியமும்

 நம் சமுதாயத்தில்  பெண்கள் போலீசு , நர்சு வேலைக்கு செல்வதை  அருவறுப்பாகவே நீண்டகாலமாக பார்த்து வந்தனர்.அவர்களை பற்றி மோசமான கருத்தினை பதிவு செய்து  உலாவ விட்டு விட்டார்கள்.மாப்பிள்ளைக்கு பெண் தேடும் போது கூட சொல்வார்கள் “பொண்ணு வேலைக்கு போனா நல்லதுதான் ஆனா நர்சு வேலைன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்”"வேற வழியில்ல அவங்களுக்கு மேலதிகாரிகளுக்கு இணங்கித்தான் நடந்தாகவேண்டும்”.

“ஹவுஸ்  நர்ஸ் அப்படீனாவே அது விபச்சார தொழில்தான்”இது ஒரு எம்.டி.படித்த மருத்துவர் உதிர்த்த வார்த்தை,ஆணாதிக்க ஆணோ அல்லது பெண்ணோ தான் செல்லும் இடமெல்லாம் ஆணாதிக்க சிந்தனையை பரப்பி அதை பொது கருத்தாக்குகின்றனர்.அதில் வெற்றியும் பெறுகின்றனர்.இவர்களின் வாய்க்கு கிடைத்த புது அவல் தான் “ஐ.டி பெண்கள்”.ஐடியில் பணிபுரியும் பென்களை பற்றி சில கருத்துக்கள்  தூவப்படுகின்றன”ஐடி இருக்கிறவ  ஒருத்திகூட யோக்கியமா இருக்கமாட்டாளுக,பொட்ட கழுதங்க கையில காசு வந்தவுடன் ஆட்டம் போடறாங்க “இந்த கூற்றுகள் ஒரு புறம் இருக்க,வினவு எழுதியிருந்த ஐடி கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த கோமாளிகள்” நீ என்னா சொல்லற,இங்கே யாரும் பார்சியாலிட்டி பார்க்குறதுல்ல தெரியுமோ? மனிதனை இங்கே தான் மதிக்கறாங்க. உண்மையில் நான் பழகிய பல பேரிடம் ஒருவர் கூட “எங்களை மனுசனா மதிக்கறாங்க என்று சொன்னதே இல்லை” ஒரு பெண் தொழிலாளி கூட மனம் திறந்து கூறியதில்லை”இங்கெ பாகு பாடு இல்லாமத்தான்  நாங்க இருக்கோம்” என்று.

உண்மையை சொன்னால் மற்ற இடத்தில் விட ஐடி,பிபீஓக்களில் பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப்படுகின்றது.இதுவே ஆணாதிக்க அரிப்புக்கு மூக்கிய காரணம்.சம்பளம் மட்டும் தான் இணையாக இருக்கின்றதே தவிர மற்ற படி வெளியே தொடரு அதே”பாலியல் ரீதியிலான தொல்லைகள்,கேலிகள்,ஆபாசப்பேச்சுக்கள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன ஐடி,பிபீஓ பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள்.”ஐடி,பிபீஓவந்த பிறகு பெண்கள் ரொம்பவே முன்னேறிட்டாங்க” என்ற குரல்கள் ஒலித்துக்