நவம்பர் 23, 2009 by kalagam
ஆண் என்ன? பெண் என்ன?
இன்றைக்கு ஒரு மீட்டிங் அசோக் நகர்ல இருக்கு வரீங்களா என்றேன் அலுவலகத்தில். ஆளாளுக்கு ஒரு சாக்கை சொன்னார்கள். அதில் ஒருவர் “உங்களால முடியுது பாருங்க எப்படித்தான் எப்படி மேனேஜ் பண்றீங்களோ”. “என்னங்க நான் என்னவோ சாகசம் பண்ணப்போறமாதிரி பேசறீங்க. மக்களோட பிரச்சினை சம்பந்தமா ஒரு மீட்டிங் அதை பாக்கறதுக்கோ அல்லது கேக்கறதுக்கோ தயராயில்லை அப்படித்தானே. உங்களோட நிகழ் கால பிரச்சினைகளை முகமுடி போட்டுகிட்டுதான் பாக்குறீங்க அது எத்தனை நாள் தாங்கும்?”
நான் பர்மிசனை வாங்கிவிட்டு கிளம்பினேன், வருகிறேன் என்றவர்களை போய்க்கேட்டேன். “என்னபண்றது ஜாப் இருக்குல்ல”என்றார்கள். அன்று ஜாப் வரத்து குறைவு என்று எனக்கும் தெரியும். கார்டை ஸ்வைப் செய்து விட்டு லிப்டில் ஏறினேன். அதில் என்னுடன் பணி புரியும் ஒரு பெண், ஒரு ஆண் வந்திருந்தார்கள். அவன் “என்னப்பா சீக்கிரம் கிளம்பிட்டே”என்க,
“ஒரு வேளை அவசரமா இருக்கு” என்றேன். ஏய் ஏதாவது டேட்டிங்கா வித்……… என்று இழுக்க எனக்கு சுளீரென்று கோபம் வந்தது. அருகில் வந்த பெண்ணோ சாதாரணமாக நின்று கொண்டு வந்தார். அவருக்கு கோபம் வந்த மாதிரி தெரியவில்லை.
நேரம் இப்பவே ஆகிவிட்டது. இவனிடம் அதிகம் பேசிக்கொண்டிருக்க முடியாது, சுருக்கமாய் சொன்னேன் “டேட்டிங் இல்லப்பா மீட்டிங்க அங்க இப்படி எவனாவது பேசினா பீட்டிங்” . அவன் சிரித்தான். அடித்து பிடித்துக்கொண்டு கூட்டத்துக்கு போய்விட்டு வந்தேன். அடுத்தநாள் அப்பெண்ணிடம் கேட்டேன் “ஏங்க அவன் டேட்டிங் போறியான்னு என்னை கேக்குறான் உங்களுக்கு கோவமே வரலீயா? டேட்டிங் அப்படிங்குற பேர்ல ஊர்மேயப்போறீயாங்குறான் பெண்களை இழிவுபடுத்துறான் உங்களுக்கு ஏன் கோவம் வரல ?” அவர் அமைதியாய் இருந்தார்.
“பேசாம இருக்காதீங்க பேசுங்க” “அவர் சாதாரணமாத்தான சொன்னாரு அதை ஏன்?…….” “என்னது சாதாரணமா சொன்னானா? சரி அவனோ இல்லை வேற யாராவது பசங்க ஒரு பெண்ணைப்பத்தி உங்க கிட்ட கிண்டலடிச்சா என்ன பண்ணுவீங்க? ” ” அவர் அமைதியாய் இருந்தார். “எவனுமே இது வரைக்கும் நான் அவளைபார்த்தேன் மூஞ்சு அப்படி இருந்துச்சு உங்ககிட்ட சொல்லி ஜோக் அடிச்சதே இல்லையா? அப்ப என்ன பண்ணுவீங்க?” “நான் எதுவுமே பேசமாட்டேன் அமைதியாயிருப்பேன் என்னால என்ன பண்ண முடியும்?” “என்ன பண்ண முடியுமா உங்க பாலியல்இனத்தை சேர்ந்த ஒருவரை ஒருத்தன் கேவலப்படுத்துறான் உங்களுக்கு அது ஏன் உரைக்கல? எனக்கு இருக்குற தன் மான உணர்ச்சி உங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது? சரி திட்டத்தான் தைரியம் இல்லை அங்க எந்த வெங்காயத்துக்கு இருக்குறீங்க குறைந்தபட்சம் அடுத்து வர நாட்களில அவன் கிட்ட பேசாம இருக்கவாவது முயற்சி செஞ்சுஇருக்கீங்களா என்ன?”
“எல்லாரும் உங்கள மாதிரி இருக்க முடியாது? நீங்க வாழ்ந்துவந்த சூழல் அப்படி” “தெளிவா சொல்லுங்க நான் சொல்றதே தப்பு அப்படிங்குறீங்களா? ஊர் மேயக்கூடாது ஆனால் அது தப்புன்னு ஊர்மேயரவனை விமர்சிக்கவும் மாட்டேன். இது தான் உங்க கொள்கையா? அருமைங்க” “என்ன பண்ண சொல்லுறீங்க?”
“உங்க பதில் நான் உங்களை கட்டாயப்படுத்துற மாதிரி இருக்குது. எப்படி வேணுமினாலும் வாழலாம் அது உங்க விருப்பம், ஒரு மனிதன் இப்படித்தான் வாழணுமின்னு கிடையாது அதுக்காக எது சுதந்திரம் எது விபச்சாரம்ன்னு கூடவா தெரியாது.
அதை விடுங்க போன மாசம் ஒரு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் வரேன் சொல்லிட்டு கடைசியில போனை எடுக்க வே இல்லை. புரிஞ்சுக்கோங்க உங்க கலாச்சாரம் எதையுமே வெளிப்படையா முன்வைக்காத ஒரு நபரா உங்களை மாத்தியிருக்கு, கேட்டதுக்கு சினிமாவுக்கு போய்ட்டேன்னீங்க. அவசராவசரமா அடிச்சு புடிச்சு தியேட்டருல சீட் வாங்கி சினிமா பார்க்கத்தெரியுது ஆனா உங்களோட பிரச்சினையப்பத்தி மக்கள் பிரச்சினையப்பத்தி பேசத்தோணமாட்டேங்குது இல்லையா? அதுக்குப்பேர் என்னங்க எதுக்காக வாழறோம்ன்னு கூடத்தெரியாம வாழ்க்கைய ஓட்டிக்கிடு இருக்கமா இல்லையா? டிரஸ்ல இருந்து செருப்பு வரைக்கும் மேட்சிங்கா போடத்தெரியுற உங்களால டிரெஸ்ஸே இல்லாம இருக்குறவங்களப்பத்தி ஏன் சிந்திக்க முடியல?”
“ஏதோ என்னால முடிஞ்ச உதவியை நான் பன்ணிட்டுதான் வரேன்” “என்ன உதவி?” “பிச்சைக்காரங்களுக்கு காசு போடுவேன் அப்புறம்……..” “பிச்சைகாரனுக்கு காசு போடுறதால நம்ம நாடு அடிமைத்தனத்துல இருந்து மாறிடுமா? விவசாயத்தை திட்டமிட்டு அழிச்சாங்களே அது கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணுனா மாறிடுமா?பெண்களை கிண்டலடிக்குறவனெல்லாம் திருந்திவானா என்ன?”
“புதுசா சினிமாபோட்டா போகத்தெரியுது? இது ஏங்க தெரியமாட்டேங்குது?, தெரியாம இல்லைங்க எல்லாம் தெரியும் தான் சாவறதப்பத்தி தெரிஞ்சுக்கக்கூடாதுன்னு நினைக்குறீங்க, நீங்க பாதிக்கப்படுறதப்பத்தி பேச ஆரம்பிச்சா உங்க நண்பர்கள் வட்டாரம் குறஞ்சுபோயிடும் அப்புறம் சினிமாவுக்கு அல்லது ஊர் சுத்தவோ போகமுடியாது இதுதான உங்க கவலை. மத்தப்பொண்ணுங்களைபத்தி கிண்டலடிச்சா அங்க சிரிச்சுக்கிட்டு நிக்குறது அப்புறம் அவனே நம்மகிட்ட தப்பா நடந்துகிட முயற்சி பண்ணுனா அவன் கிட்ட மட்டும் பேசாம மத்தபடி அதே பேச்சு அதேவகை மத்தவங்களோட தொடங்குறது. நாமும் சேப்டியா இருக்கணும் மத்தபடி ஊர் சுத்தியும் ஆகணும் இல்லையா?
வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. மற்றவன் சாவும் போது அதைபத்தி பேசாதவனுடைய சாவை பாரும் பேசப்போறதில்லை. எவ்வளவோ பேசுறீங்க அந்தப்படம் நல்லா இருந்துச்சு ஏய் உன் டிரஸ் நல்லா இருக்கு இந்த சுடி எங்க தைச்ச எவ்வளவோ விவாதம் பன்ணுறீங்க வெட்டியா ஜோதிகாவுக்கு கல்யாணம் நடக்குமான்னு தொடங்கி சிம்புவோட காதலி வரைக்கும், என்னைக்காவது உங்களப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா? ஒரு பெண்ணுக்குரிய,மனிதனுக்குரிய சுயமரியாதையோட வாழ்ந்து இருக்கீங்களா? ஆணாதிக்கத்தைப்பத்தி, சாதீயத்தைபத்தி, உங்களை நாயிலும்கீழா நினைக்குறானே இந்த கம்பெனி அவனைப்பத்தி,பாதிக்கப்பட்ட பெண்ணைப்பத்தி பேசியிருக்கீங்களா?
“அப்படி பேசவிடாம எது தடுக்குது உங்க அடிமைத்தனத்தை தவிர, எதுக்கெடுத்தாலும் சொல்லுறீங்க நான் அடிமை இல்லை எனக்காகத்தான் வாழறேன் எனக்கென்னவோ அப்படித்தெரியலையே உங்க உரிமைக்காகவே பேசாத நீங்க மத்தவங்களுக்காகவா பேசப்போறீங்க ” அவர் அமைதியாகவே இருந்தார் “உங்க அமைதி உங்களுக்கு எப்போதும் நல்லது இல்லை, அதுதான் உங்களை கேவலப்படுத்தும் போதும் உங்களை அடங்கிப்போக வைக்குது” அவர் மீண்டும் அமைதியாகவே இருந்தார். “உங்களுக்கு இந்த மானங்கெட்ட கலாச்சாரத்தோடு நுகர்வியலும் தேவை உங்களையும் பாதுகாத்துக்கணும், உங்க வாழ்க்கையை நீங்க தீர்மானிச்சுட்டீங்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால்ன்னு கண்டிப்பா ஒருநாள் மூஞ்சில சேறு பூசி நிக்கப்போறீங்க. ஒண்ணும் மட்டும் உண்மைங்க அடிமையில ஆண் என்ன பெண் என்ன?”
குறிச்சொற்கள்: அடிமைத்தனம் X ஆணாதிக்கம், பெண், பெண்ணியம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
நவம்பர் 7, 2009 by kalagam
நண்பனுக்கு ஓர் கடிதம்

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….
ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….
இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே
என் அன்பு நண்பா,
நீ அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக
அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”
என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை
பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்
ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்
குறிச்சொற்கள்: அடிமைத்தனம், கவிதைகள், நட்பு, புரட்சி நாள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 மறுமொழிகள் »
நவம்பர் 3, 2009 by kalagam
தீவிரவாதத்தை வேரறுப்போம்
இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்
மாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். இப்படிப்பட்ட கருத்துக்களை அள்ளிவீசுபவர்கள் மத்திய அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ அல்ல, இந்த இந்திய திருநாட்டை நக்சல்பாரி அபாயத்திலிருந்து காப்பாற்ற
முடிவெடுத்து களத்திலும் இறங்கிவிட்டார்கள் நம்ம ப்யூர் கொம்யூனிஸ்டுகளான சிபீஎம் கட்சியினர்.
நாட்டின் முக்கிய சிவப்பு அபாயமான நக்சல்பாரிகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் சீதாராம் எச்சுஊறி. “நாங்கள் தான் இடதுசாரிகள் நாங்கள் மட்டும்தான், மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்கி வெறியாட்டம் போடுகிறனர் துணைராணுவப்படையினர் அவர்களுக்கு மொத்தமாய் ஆதரவளிக்கிறார் புத்ததேவ்.அவர்கள் அழிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு என்கிறார்.
“இன்று சட்டீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகளும், பீகாரில் 2 மாவோயிஸ்டுகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” இந்த, இப்படிப்பட்ட செய்திகளை ஊடகங்கள் நாள்தோறும் வெளியிடுகின்றன புழங்காகிதமடைகின்றன.
தொலைக்காட்சி ஊடகங்களோ இன்று கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையை அறிவிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, செய்தி வாசிக்கும் அந்த தொகுப்பாளரைப்பாருங்கள் அப்படி ஒரு பெருமிதம் அவர் முகத்தில். விரைவில் இந்தியா வல்லரசாகிவிடுமாம் அதற்கு தடையாயிருக்கும் மாவோயிஸ்டு/ நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழித்துக்கட்டப்படவேண்டியதின் அவசியத்தை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதிகிழிக்கின்றன.
கடந்த செவ்வாய் அன்று ரயிலினை மறித்த பழங்குடியினமக்களை தீவிரவாதிகளாக அறிவிக்கிறது அரசு. ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள் வண்டியை மறித்து ஓட்டுனர்களை கடத்தியதாகவும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்து தாக்கியவுடன் ரயிலை விட்டு விட்டு ஓடியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டதாக கூறும் நபர் ஒருவர் ஆங்கிலத்தொலைக்காட்சியில் யாரும் எங்களைத்தாக்கவில்லை என்கிறார்.
அரசபயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு குழுவினை மக்கள் உருவாக்கினார்கள் அதன் தலைவர் மகோட்டவை விடுதலை செய்யக்கோரி மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதிகளின் போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது.
மாவோயிஸ்டுகளை/மாவோயிஸ்ட் அமைப்பையும்/ நக்சல்பாரி அமைப்புக்களையும் பத்திரிக்கைகள் இப்போதெல்லாம் குறிப்பிடும் போது தீவிரவாதிகள்/தீவிரவாத அமைப்பான’ என்றே குறிக்கின்றன. இந்திய அரசு மாவோயிஸ்டுகளை தீவிரவாதப்பட்டியலில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றபோதும் திட்டமிட்டே இந்திய அரசால் மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் தீவிரவாதிகளாக்கப்பட்டுவிட்டனர். மக்களிடம் ஏதோ கொள்ளையர்களைப்போல மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
கடந்த மாதம் மத்திய அரசு நடத்திய சிறப்புக்கூட்டத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். அப்போதிருந்து அடிக்கடி உள்துறை அமைச்சர் சிதம்பரமாகட்டும் மத்திய அரசாகட்டும் மாவோயிஸ்டுகளைப்பற்றிய பொய் புரளிகளை பரப்பிவருகின்றனர், சென்ற மாதம் மாவோயிஸ்டுகள் ஒரு கிராமத்தில் புகுந்து மக்களை சுட்டுக்கொன்றதாக அரசு செய்தி வெளியிட அதை அப்படியே எல்லா செய்தி ஊடகங்களும் தனக்கேற்றவாறு பில்டப் செய்து வெளியிட்டன.
சல்வார்ஜுடூம் போன்ற அரசபயங்கரவாதப்படைகளும், மத்தியப்படைகளும், போலீசும் மக்களை கொன்று வெறியாட்டம் போட்டு மக்களை துவம்சம் செய்கின்றன. மக்களை கொன்று விட்டு மாவோயிஸ்டுகள் மீது பழியினை தூவுகின்றன, அச்செய்தி அப்படியே இந்தியா ஏன் உலகம் முழுக்க பரப்பப்படுகின்றது. மாவோயிஸ்டுகளுக்கு பல மனித உரிமை அமைப்புக்கள் உதவுவதாக / ஆதரவளிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களின் நோக்கம் என்னவெனில் தன்னுடைய அரச பயங்கரவாதத்துக்கு தடையாக உள்ள யாரும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.
மேற்குவங்கத்தில் டாடாவுக்கு நிலம் கொடுத்த விவகாரத்திலும் சரி மற்ற பிரச்சினைகள் மூலமாகவும் நந்திகிராம், சிங்கூர், மிதுனாப்பூர் என மக்கள் சீபீஎம்க்கு செருப்படி கொடுத்து அரசை புறக்கணித்தார்கள். சீபீஎம் நாறிப்போனது. தனது அணிகளிடம் கூட நிலையை விளக்குவதற்கு திணறி வேறு வழியின்றி பயங்கரவாதம் , தீவிரவாதம் என்றபடி கூச்சல் போட ஆரம்பித்தது. சீபீஎம் காங்கிரசு கட்சியப்போன்று சிறந்த கேப்புமாறிகட்சியாக மாறிவருவதற்கு அவர்களின் கூற்றுக்களே தக்க உதாரணம். முன்பு மாவோயிஸ்டுகள் அரசியல் ரீதியில் மட்டுமே அகற்றப்பட வேண்டுமென்ற சீபீஎம் தற்போது கடுமையான எந்த நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று அறிவிக்கிறதெனில் என்ன வகையாக மாற்றம் கட்சியில் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை நாம் கம்யூனிஸ்டு கட்சி என்று தன் கட்சியினரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமிருந்தது. ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லை. புரட்சியா அது எப்படி இருக்கும் ஸ்வீட்டா இல்லை காரமா என்று கேட்ககூடிய அளவுக்கு சீபீஎம் தொண்டர்கள் வந்து விட்டதால் மொத்தமாய் அவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாய் நாங்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் என்று திமிராய் சொல்லுகிறார்கள். இந்திய நாட்டையே அடிமையாக்கிய காட் ஒப்பந்தம் முதல் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் வரை எதை நாடாளுமன்ற முறை மூலம் போராடி தடுத்தார்கள். நாடாளுமன்றத்தை பயன்படுத்த லெனின் சொன்னார் என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் லெனின் சொன்னார் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி அதை அம்பலப்படுத்தவேண்டும் என்று அதைத்தான் செய்து வருகின்றோம் என்கிறார்கள்
தயவு செய்தி பேரண்புமிக்க பொறுக்கிகளே அந்த சின்னத்தை பயன்படுத்தாதீர்கள். அது உங்களைப்போன்ற ஆளும் வர்க்கத்திற்கெதிராக உழைக்கும் மக்களால் உருவானது. நீங்கள் “நம்ம” தேசியக்கொடியையே பயன் படுத்திக்கொல்ளலாம், அரசு கூட அப்ஜெக்சன் தெரிவிக்காது என நம்புவோம். நாங்கள் இனி போலிகள் என்று கூட அழைக்கமாட்டோம். ஒரு வேளையும் மிச்சம்.
கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இந்திய தேசத்தில் காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் நடத்தப்படும் சுயநிர்ணய போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ன? அவ்விசயங்களில் இந்திய அரசின் வாலாக செயல்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒன்று சேலையை துவைப்பது அல்லது வேட்டியை துவைப்பது என்று வேறுவேலை இன்றி மாமாவேலை செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள இந்த சீபீஎம் எங்கத்த புரட்சி பண்ணப்போகிறது? நாங்கள் இல்லாமல் எம்ஜிஆர் இல்லை, ஜெயா இல்லை, கருணாநிதியும் இல்லை, விட்டால் ஒபாமா கூட நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாதென்று முழங்கிக்கொண்டே போவார்கள்.
கேரளாவில் முல்லைப்பெரியார் அணை விசயத்தையே எடுத்துக்கொள்வோம். சீபீஎம் கட்சித்தலைமை ஏதாவது வாய் பேசியதா என்ன? பெங்களூருவில் மாநாடுகூட்டி தீவிரவாதத்துக்கெதிராக பேச முடிகிறது ஆனால் பெரியாறு பிரச்சினையைப்பற்றி ஏன் பேச முடியவில்லை ? ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது ஒரு தலைமை எதனால் பாதிக்கப்படுகிறதோ அதற்கு எதிராக, யாருக்காக , யாருடைய தேவைக்காக அதற்காகத்தானே போராடும். அதன் படி தன் வளர்ச்சிக்கு தடையாயிருக்கும் மாவோயிஸ / நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் தான் போராடுகிறது. தன்னுடைய சேக்காளிகளான டாடா, பிர்லா, அம்பானிமற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும்தான் போரிடுகிறது.
சீபீஎம்முக்கும் ஏனைய ஓட்டுப்பொறுக்கிகட்சிகளுக்கும் ஏதேனும் வித்யாசமிருக்கிறதா? முன்னராவது மற்றவர்கள் சிரச்சேதம் செய்யச்சொன்னால் சீபீஎம் கட்சி பாலிடால் கொடுக்கசொல்லும் (அவ்வளவு மனித நேயமாம்). மொத்தத்தில் மக்கள் ஒடுக்கப்பட வேண்டும் அவ்வளவுதான்.
இந்த உலகமயம்-தனியார்மயம் – தாராளமயம் சூழலில் சீபீஎம்-ல் தனது போலி வேசத்தைக்கூட நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடித்தே தீரவேண்டும் , எல்லோரும் கொல்ளையடிக்க வந்துவிட்டார்கள், சும்மா வெறும்கையை முழம் போட சீபீஎம் கேனப்பயலா என்ன? நம் முகமுடியை மக்கள் அறிந்துவிட்டார்களென்ற பின்னே இனி பாசிஸ்டாக பரிணமிப்பதைத்தவிர வேறு என்ன வழி?
இந்த நாட்டின் எதிரி மாவோயிசமா அல்லது ஏகாதிபத்தியமா?
நீர் நிலம் காற்று என அனைத்தும் மக்கள் ஒப்புதலின்றியே பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுவிட்டன. அம்பானி, மிட்டல், டாடா என தரகு முதலாளிகள் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீபீஎம், காங்,பீஜேபீ உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகள் மாமா வேலை பார்ப்பதையே முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டு விட்டன. உலகமயம்-தனியார்மயம் – தாராளமயத்தால் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழந்துவிட்டார்கள், காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் துரத்தப்படுகிறாகள். விவசாயத்தை லாபமற்ற தொழிலாக திட்டமிட்டு மாற்றி, உரங்கள் மூலமாகவும் பன்னாட்டு விதைகள் மூலமாகவும் விளை நிலத்தை நாசம் செய்து பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் நாடெங்கிலும் இதற்கெதிராக போராடி வருகிறார்கள், இந்த அரசும் அதன் தாங்கிகளான ஓட்டுப்பொறுக்கிகளையும் பாசிசத்தின் கருவிகளாகியிருப்பதை உணர்கிறார்கள்.
தன்னெழுச்சியாகவும் மாவோயிஸ்டு / நக்சல்பாரி அமைப்புக்கள் மூலமாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக அரசு தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது, போராடும் மக்களை ஒழித்துக்கட்ட முயல்கிறது. தன்னுடைய அமெரிக்க எஜமானனுக்கும் ஏனைய பன்னாட்டு எஜமானர்களுக்கும் சேவை செய்வதை தடுக்கும் யாரையும் முறியடிக்கிறது. கிராமங்கள் சூறையாடப்படுகின்றன.
மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் போராடி குரல் கொடுக்கின்றன. ஆயுத தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆங்காங்கே மக்களே ஆயுதந்தரிக்க வேண்டியதன் கட்டாயம் ஏற்படுகிறது. தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோமோ அவர்களுக்கு மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறர்கள்.சீபீஎம்ற்கு ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியாக, பாஸிஸ்டுக்கு பாதந்தாங்கியாக இருந்ததன் அவசியம் இனியும் தேவையில்லை. போலிகம்யூனிச முகமுடியினை தூக்கிபோட்டுவிட்டு மக்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு உரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் டாடாவுக்கு உழைக்கும் மக்களின் நிலத்தை அபகரித்துத்தருவது மறுபக்கம் மக்களுக்காக பரிந்து பேசுவதென்ற வாய்ஜாலமும் இனி தேவைஇல்லை.
நாட்டையே கூறு போட்டு தூக்கிச்செல்ல காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாதம் அல்ல, மதத்தால்பிளவுபடுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஆர் எஸ் எஸ் பார்ப்பனபாசிசம் அதுவும் பயங்கரவாதமல்ல, தொழிலாளர்களை சுரண்டி சக்கையாய் தூக்கியெறிந்து தன் லாபத்திற்காக தொழில்களையே ஒழிக்கும் முதலாளித்துவம் பயங்கரவாதம் அல்ல, இந்த அரசும் சீபீஎம்மும் கூறுவது போல நாட்டை மீண்டும் மறுகாலனியாக்குவதற்கு எதிராக போராடும் மக்கள் தான் பயங்கரவாதிகள். வேறு வழியே இல்லை பயங்கரவாதிகளாகிய உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் இந்த யோக்கிய சிகாமணிகளுக்கு சாவுமணி அடிப்போம்.
இணைப்புக்கள்
1.விடுதலையின் அரசியல் கருத்துப்படங்கள்
போலிகளை வீழ்த்தும் ஆயுதங்கள்
2மார்க்சிஸ்டுகளின் பரிணாம வள்ர்ச்சி
3.சாயம் வெளுத்துப்போன போலிகள்
4.வாடா வாடா வாடா தோழா – ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை
5.மாவோயிஸ்டுகள் மீதான தடை
டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை
குறிச்சொற்கள்: சீபீஎம், சீபீஐ, நக்சல்பாரி, போலிகம்யூனிஸ்டு, மாவோயிஸ்டு, மேற்கு வங்கம், CPI, CPM
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 மறுமொழிகள் »
அக்டோபர் 26, 2009 by kalagam
மவுனம்
நான் இப்போதேதும்
பேசப்போவதில்லை பேசுவதற்கு
என்னிடம் வார்த்தைகள் இருக்கின்றன
ஆனாலும் நான் இப்போது
பேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்…….
நான் பேசாமலிருப்பது
பலருக்கும் மகிழ்ச்சியைத்
தரலாம்
பேசாமலிருப்பது கோழைத்தனமாம்
பேசவிடாமல் செய்வது வீரமாம்
நான் கோழையாகவே
இருந்து விட்டுப் போகிறேன்
ஆனால் அது நிரந்தரமல்ல…….
படிப்பிற்காக வேலைக்காக
நான் செல்லும் இடங்களிலெல்லாம்
பதவியும் பணமும்
என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன
நான் மறுத்தாலும்
ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்
தானாய் கக்கத்தில் ஏறுகின்றன
தேனீர்க்கடைகள் என்னை
பிளாஸ்டிக் டம்ளர்களோடு
வரவேற்கின்றன
என் துயரங்கள் வேதனைகள்
எல்லாம் நினைவலைகளாய்
என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன
எல்லாம் உள்ளே வெடித்துக்
குமுறிக்கொண்டிருக்கின்றன
பயமாய் இருக்கின்றது
எங்காவது தப்பித்தவறி
பேசிவிடுவோமோ என்று…….
என்னதான் முயன்றாலும் முடிவதில்லை
சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்
கனவுகளில்
எல்லாம் பணத்தால்
மதிப்பிடப்படும் போது
நானும் மதிப்பிடப்பட்டிருக்கிறேன்
செல்லாக்காசாக
செல்லாக்காசுகளின் மீதேறி
சிலர் கலசங்களாய்
அமர்ந்திருக்கின்றார்கள்
கலசங்களுக்கு தங்க முலாம்
பூசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது
அவை புனிதமானவையாம்…….
நான் எப்போதும் பேசாமல்
இருக்கப்போவதில்லை
நான்
மட்டுமல்ல நான் நாமாக
நாங்களாக பேசுவோம்
பேசுவோம்
இப்போது பேசுபவர்களெல்லாம்
அப்போது வாய் திறந்துகிடப்பார்கள்
உளுத்துப்போன சன நாயகத்தின்
எச்சில்கள் ஆறாய் ஓட
மொய்க்க வந்த ஈக்களோ
நிலையறிந்து பின்னங்கால்
பிடறியிலடிக்க ஓடும்
பேசுவோம் பேசுவோம்
பேசிக்கொண்டே இருப்போம்
அதிகாரத்தின் விம்மல்கள்
அடங்கும் வரை
உங்களின் மவுனங்கள்
நிரந்தரமாகும் வரை பேசிக்கொண்டே இருப்போம்
குறிச்சொற்கள்: கவிதை, மவுனம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
அக்டோபர் 19, 2009 by kalagam
நோபல் பரிசு
புனிதப்பசுக்களின் அரிதாரங்கள்
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் மாயாவதி ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல ஏன் அகில உலகமே பெருமைப்பட வேண்டிய விசயமாக இது கூறப்படுகிறது. பில் கிளிண்டன் உட்பட பலர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் போது ஒபாமாவின் தனிப்பட்ட திறமைக்கு கிடைத்த இந்த பரிசு உண்மையிலே உயர்ந்தது தான். இந்திய மதிப்பில் ஏழு கோடி ரூபாய்களும் பட்டயமும் கிடைக்கும். உலகம் முழுக்க இவர் தான் அதுக்கு நோபல் பரிசு வாங்கினார், இதுக்கு வாங்கினார் என்று பத்திரிக்கைகள் புளங்காகிதம் அடையச்
சொல்கின்றன.
வேதியியலின் ஆராய்ச்சிக்கான விருது ஒரு தமிழருக்கு கிடைத்திருக்கிறதாம். பத்திரிக்கை, ஊடகங்கள் எல்லாம் தமிழ் நாடே புண்ணியம் செய்ததாய் அறிவிப்பினை வெளியிட்டன. எல்லா நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் முதல் செய்தியாய் மிளிர்ந்தது. முதலில் அவர் தமிழரா? அவர் எதைக்கிழித்தார்? அதற்கு நான் ஏன் பெருமைப்படவேண்டும்? அமெரிக்காவில் குடியுரிமை வாங்கி அமெரிக்காக்காரனாகவே வாழ்ந்து வருகின்றவர் எப்படி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்று தான் புரியவில்லை. அமெரிக்காவிற்கு வேலைப்பார்க்கப்போன கல்பனா சாவ்லா, அமெரிக்க நாய்க்கு மணியாட்டப்போனவன் என யாராவது எதையாவது செய்தால் உடனே எல்லோரும் பெருமைப்பட வேண்டுமாம்.
எப்படி இந்தியாவினை சுரண்டுகின்ற, மக்களை ஏய்த்து பிழைக்கின்றவர்களுக்கு பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷண்,பத்ம விபூஷண் விருதுகள் கொடுக்கப்படுகின்றதோ அப்படித்தான் உலக அளவில் எப்படி முதலாளித்துவத்துக்கு சேவை செய்யலாம், எப்படி மக்களை சுரண்டலாம், இற்றுப்போன முதலாளித்துவத்தை எப்படி தூக்கி நிறுத்தலாம் என ஐடியா தருபவர்களுக்கு விருதுகள் குவிகின்றன.
எல்லாவற்றிற்கும் ஒரு முத்தாய்ப்பாக நம்ம ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு எதற்காக கொடுக்கப்பட்டதென்று அவருக்கும் அந்தக்கமிட்டிக்கும் தெரிகிறதா என தெரியவில்லை. ஈராக்கிலே தினமும் நடந்து வரும் குண்டு வெடிப்புக்கள், தானாய் முன்வந்து போராளியாகும் மக்கள் என எல்லாவகை காட்சியும் மாறவில்லை. ஈராக்கிலும், ஆப்கனிலும் படிபடிப்படியாக படைகளை வாபஸ் வாங்குவோம் என தேர்தலின் போது உதார் விட்ட ஒபாமா தற்போது எப்படி அமைதியை நிலை நாட்டுகிறார் என உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது.
அணுஆயுத பரவல் தடைசட்டத்துக்கு பாடுபட்டதாக விருது தரப்பட்டிருக்கிறதாம். ஆப்கனில் தினமும் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் கொத்துக்கொத்தாய் குண்டு வீசும் ஒபாமாவின் ஏகாதிபத்திய அமெரிக்க அரசு எதை தடை செய்தது? கொல்லப்படும் மக்களின் என்ணிக்கையோ பல்லாயிரக்கணக்கில் பெருகிக்கொண்டே போக இருக்கிற எண்ணைவளத்தினையும் தின்ன முடியாது திணறுகிறார் ஒபாமா. இசுலாமிய நாடுகளுக்குப்பயணம் செய்து நல்லெண்ணத்தை பரப்புகிறாராம் இந்த நவீன மகாத்மா. தேவைப்பட்டால் மகாத்மா தனது மறு உருவத்தைக் காட்டவும் தயாராகவே இருக்கிறார். அது நல்லெண்ணத்தை பரப்புவதல்ல, இசுலாமிய மக்களிடம் உள்ள அமெரிக்க எதிர்ப்பு உணர்வை மழுங்கடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதுதான் இசுலாமிய நாடுகளுக்கு ஒபாமாவை கட்டி இழுத்து வந்திருக்கிறது. ஜார்ஜ் புஷ்க்கும் ஒபாமாவுக்கும் என்ன வித்யாசம் ? பீஜேபிக்கும் நம்ம காங்கிரசுக்கும் உள்ள வித்யாசம் தான் அது. இவ்விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதன் பெருமை புஷ் யையே சாரும். அவர் நேராய் போட்ட சாலையை ஒபாமா சற்று வளைந்து நெளிந்து கட்டியிருக்கிறார் அவ்வளவுதான். ஒபாமா என்பது தனி நபராக இருந்தாலும் அமெரிக்க அதிபர் என்பது தனி நபர் அல்ல. முதலாளித்துவ ஏகாதிபத்தியம் பிரச்சினைகளிலிருந்து மாறு வேசம் போட்டிருக்கிறது. வேசங்கள் மாறும் தேவைக்கேற்ப.
சீர்கெட்டுப்போன அமெரிக்க பொருளாதாரம் புழுத்து நாறிப்போய்விட்டது. முதலாளித்துவத்தின் சொர்க்கத்தில் பஞ்சை பராரிகள் உலவ ஆரம்பித்து விட்டார்கள். உலகிற்கே பொருளாதாரத்தை சொல்லிக்கொடுத்த நாட்டில் ரொட்டிக்கு கியூ வரிசையின் நீளம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
மாற்றத்திற்கான நபராக சொல்லப்பட்ட நபரான ஒபாமாவால் எதையும் செய்ய முடியவில்லை. என்ன செய்ய முடியும் இழவு வீட்டில் குத்தாட்டம் போடுவதைத்தவிற. குத்தாட்டம் போடும் இந்த ஆடுகாலிக்குத்தான் அமைதிக்கான நோபல் என்ற அரிதாரம் பூசப்பட்டிருக்கிறது.
எப்படி பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதற்கும், நிலவில் சந்திராயன் அஸ்தமானதற்கும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டானோ அப்படி ஒபாமாவின் விருதுக்காக அமெரிக்கர்கள் பெருமைப்பட்டாக வேண்டும். அவர்கள் மட்டுமல்ல உலகப்போலீசின் தலைமை அதிகாரி பதக்கம் வாங்கியதற்கும் நாமும் சேர்ந்து பெருமைப்பட்டாக வேண்டும். ஏனெனில் ஒபாமா தனிப்பட்ட அமெரிக்காவுக்கானவரா என்ன? அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளை உலகமே எதிர்பார்க்கிறது. அடுத்த முதலாளியை எதிர் நோக்கி சுரண்டல்காரர்கள் காத்திருப்பது ஒன்றும் புதிதல்ல, ஆனால் மக்களையும் அப்படி பழக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஒபாமாவை அவன் என்று சொன்னால் போதும் பலருக்கும் அப்படி ஒரு கோபம் என்னதான் இருந்தாலும் அமெரிக்க அதிபர் மரியாதையாக பேசுங்கள் என்கிறார்கள். நமது ஆயிரக்கணக்கான நெல் வகைகளை கொள்ளையடித்து விவசாயிகளை தற்கொலைக்குத்தூண்டி, நெசவாளர்களின் கழுத்தினை நெறித்து, தொழிலாளார்களின் வாழ்வினை முடக்கிய முதலாளித்துவத்தின் தலைமை பீடத்தின் அதிபரை நான் ஏன் மரியாதையாக பேச வேண்டும் ?
ஒபாமா பதவியேற்றவுடன் ஏன் அவர்தான் ஆட்சியை பிடிக்கப்போவதாக சொன்னவுடனே நம்ம ஊர் பத்திரிக்கைகள் அவரின் சுய சரிதயை எழுதித்தள்ளின. அவரின் வாழ்க்கைக்குறிப்பு தேவையான ஒன்றாக மாற்றப்பட்டது. அவருக்கு மகாத்மான்னா ரொம்பபிடிக்கும், இந்தியாவ ரொம்ப லைக்பண்ணுவாரு என்று கிறுக்கித்தள்ளின. ஒரு கறுப்பினர் இப்போது தான் முதன் முறையாக ஆட்சியை பிடித்தார் என புகழ்ந்து தள்ளிய ஊடகங்கள் எல்லாம் அவரின் பொருளாதார தகதிமியை பார்த்து வாய் மூடிக்கிடக்கின்றன. முதலாளித்துவ பயங்கரவாதத்தால் அமெரிக்காவின் முதலாளித்துவம் நாறிக்கிடக்கிறது. கருப்பினத்தவரின் வாழ்க்கையை சிறிதும் அனுபவிக்காத ஒபாமா கருப்பினத்தவரின் பிரதி நிதியாக முன்னிறுத்தப்படுகின்றார். தாழ்த்தப்பட்டவர்களின் பிரதி நிதியாக மாயாவதி முன்னிறுத்தப்படுவதைப்போல.
ஈராக், ஆப்கனில் நேரடியான போரினை இன்னமும் அதிதீவிரப்படுத்தியும், உலக நாடுகளை சுரண்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் நாட்டின் அதிபருக்கு தேவைதான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு. புவி வெம்புதலுக்கு (global warming)அமெரிக்கவிலிருந்து வெளியாகும் வாகனப்புகை அதிக பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சரி ,அணு ஆயுதங்களை போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து
உலகை கொள்ளையடிக்க கிளம்பியுள்ள ஏகாதிபத்திய தலைமைக்கு கொடுத்த இந்த பதக்கம் அது உலகின் எந்த ஒரு நாட்டையும் கொள்ளையடிக்க ஏக போக உரிமை அளிக்கப்பட்டதையே காட்டுகிறது.
தன் மக்களை முன்பு நுகர்வியல் போதையில் ஆழ்த்தி பொருட்கள் வாங்கி குவிக்கவைக்கப்பட்டதைப் போன்று இப்போது ஏதும் செய்ய முடியவில்லை. தன்னுடைய நிலையை சீர் செய்ய ஈராக்கில் ரத்த கவுச்சியில் எண்ணை¨யில் ஒரு சொட்டினை நக்கக்கூட முடியாது விழி பிதுங்கி நிற்கும் அமெரிக்கா, தன் மக்களை ஏமாற்ற செய்யும் புது தந்திரம் தான் இந்த நோபல் பரிசு. புஷ், ஒபாமா, இன்னும் மபாமா என யார் வந்தாலும் ஏகாதிபத்தியம் மோதி வீழ்த்தப்படாத வரை அதுதன் வேலையை காட்டிக்கொண்டுதானிருக்கும். மக்களின் எதிர்ப்பு வரும் போது புஷ் முகமுடி போய் ஒபாமா முகமுடி வரும். தன் அதிபரின் புகழைப்பாடிய படியே மக்களை இருக்கச்சொல்கிறார்கள். வயிற்றில் பசி இருக்கும் வரை எதைப்பாடுவார்கள் “முதலாளித்துவம் ஒழிக” என்பதைத்தவிர.
குறிச்சொற்கள்: ஒபாமா, நோபல் பரிசு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
அக்டோபர் 14, 2009 by kalagam
செருப்பு
செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?
அஃறிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்?
பல்லாயிரக்கணக்கான நினைவுகளை
தாங்கி வந்த அந்த செருப்பின்
உணர்ச்சிகள் எல்லாம்
ஏகாதிபத்திய முகத்தில் பயத்தின்
வடுக்களாய் பரவி கிடக்கிறது…..
வந்தது கட்டளை செல்லும்
இடமெல்லாம் செருப்புக்குத்தடை
தடைகளுக்குத்தான்
எப்போதும் தடையேதும் இல்லையே…..
தடைபட்ட செருப்புக்கள்
மீண்டும் பேசின
தேவையான போது
அவை பேசிக்கொண்டே இருந்தன
“வழி தவறிய மீனவர்களை பாதுகாக்கிறோம்”,
“தமிழர்கள் நலமுடன் இருக்கிறார்கள்”
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின்
ஊளையினை செருப்புக்களால்
தாங்கி கொள்ள முடியவில்லை
துடித்தன
காலைக்கடித்தன
கேட்டவர்கள் பிஸ்கெட்டினை
கடித்தபடி செருப்புக்கு விடை கொடுததார்கள்
அமைதியாய்
அம்சாவின் அம்சமான
நினைவுகளில் நீந்திக்கொண்டிருந்தார்கள்…..
சிறைபட்ட செருப்புக்களால்
இப்போது பேசமுடிவதில்லை
மானமில்லாதவனுக்கு வாழ்க்கைப்பட்டதால்
அவை அமைதியாயிருக்க வைக்கப்பட்டிருக்கின்றன
செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?
அ·றிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்?
கண்டிப்பாய் இருக்கும்
அது அஃறிணையாய் இருப்பதனால் தான்
அதன் உணர்ச்ச்சிகள் மரத்துப்போக
அது மனிதத்தோலில் ஒன்றும் செய்யப்படவில்லையே.
குறிச்சொற்கள்: செருப்பு, eazham, india
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
அக்டோபர் 8, 2009 by kalagam
ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்

1927ம் ஆண்டு சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கெதிரான செயல் பாடுகள் குறித்தும் தோழர் மாசேதுங் தெளிவாக விளக்குகிறார்.
கோமிண்டாங்கைத்திருப்தி படுத்த விவசாயவர்க்கத்தை கைவிட்டு தொழிலாளிவர்க்கத்தை தனிமைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப்பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்ட அனுபவபூர்வமான அறிக்கையே இந்த ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 ஹூனானில் வளர்ந்த விவசாய இயக்கத்தினை இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் 1926 ஜனவரிமுதல் செப்டம்பர் வரையிலானது.
அக்கட்டம் அமைப்பைக்கட்டும் காலகட்டம். அதில் ஜனவரி முதல் ஜூன் வரை தலைமறைவாக செயல்பட்டது.புரட்சிகர ராணுவம் சாவோ ஹெங் டியை (யுத்த பிரபு) விரட்டிய காலமே வெளிப்படையான காலமாகும். (ஜூலை முதல் செப் வரை). இந்த முதல் காலக்கட்டத்தில் 3 முதல் 4 லட்சம் வரைதான் உறுப்பினர்கள் இருந்தது. அமைப்பின் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தினைத்தாண்டவில்லை. ஆனால் இரண்டாவது காலகட்டமான 1926 அக்டோபர் முதல் 1927 ஜனவரி வரையில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தினைத்தாண்டியது.அதன் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கையோ 1 கோடிக்கும் அதிகமானது. விவசாயிகள் தங்களின் பலத்தினை சார்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு புரட்சியைத்தோற்றுவித்தனர். மாபெரும் ஈடு இணையில்லா சாதனை இது.
விவசாயிகளின் முக்கியத்தாக்குதல் இலக்காய் இருந்தவை உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். ஆனால் நிலபிரபுக்களை வீழ்த்துகிற போகிற போக்கில் வம்சா வரிக்கோட்பாடு, ஊழல் அமைப்புக்களுக்கெதிராக, மூட நம்பிக்கைக்கெதிராக தங்கள் போராட்டத்தினை கட்டியமைத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலபிரபுக்களின் வாரிசாய் , தகுதியாய், வளர்ந்த சலுகைகள் தூள் தூளாக்கப்பட்டது. நிலபிரபுக்களின் அதிகாரத்தை பறித்து அங்கு விவசாய சங்கம் அமர்கிறது. இது வரை மக்களை ஒடுக்கியே வந்த அதிகாரம் இப்போது ஒடுக்கியவர்களை ஒடுக்கப்பட்டவர்களால் அடக்கப்போகிறது. மாபெரும் முழக்கம் உதயமாகிறது அது தான் ” அனைத்து அதிகாரமும் விவசாய சங்கங்களுக்கே “ அது நடைமுறையிலும் சாத்தியமாக்கப்படுகின்றது.
உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் பேசுவதற்கான எல்லா உரிமையும் மறுக்கப்படுகின்றது. பணத்தினைக்கொடுத்து சங்கத்தில் சேர முயற்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கு பதிலாய் தெறிக்கின்றன வார்த்தைகள் “தூ யாருக்கு வேண்டும் உன் எச்சில் காசு “.
நான்கு மாதங்களுக்கு முன் மந்தையாக இருந்த (அழைக்கப்பட்ட) சங்கம் தான் இப்போது மிக மிக மதிப்புக்குரியது.நகரத்திற்கு தப்பி வந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் உச்சரிக்கும் இது “பயங்கரமானது” என்ற சொல் முதலாளித்துவாதிகள் மட்டுமல்ல புரட்சிகர எண்ணம் கொண்டோரையும் பிடித்தாட்டியிருக்கிறது அதற்கு தெளிவாய் பதில் சொல்கிறார் மாவோ “இது அருமையானது”. ஆம் மக்களை கொன்று குவித்த நிலப்பிரபுக்களின் மீது இந்த பயங்கரமானது எத்தனை முறை விழுந்திருக்கும் ?
ஆனால் மக்கள் கிளர்ந்தெழுந்து நிலப்பிரபுக்களுக்கெதிராக போராடும் போது திருப்பி தாக்கும் போது பயங்கரமானது என்றவார்த்தைகள் மக்களை பாய்ந்து கடித்து குதறுகிறது. இதே போலத்தான் “சங்கம் தேவைதான் ஆனால் அத்து மீறுகிறார்கள்” என்ற போர்வையும்.
அத்துமீறிய உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளம்பாத வார்த்தை மக்களுக்கெதிராக கிளம்புகிறது. (இதை அப்படி நம்முடைய லால்கர், நந்திகிராமிற்கு பொருத்தியும் பார்க்கலாம் . அரச பயங்கவாதத்தினை பற்றி பேசாத வாய்கள் எல்லாம் மக்கள் நிலபிரபுக்களை விரட்டியவுடன் சொன்னது “அறிவில்லாத மக்கள் போலீஸ் ஸ்டேசனை கொளுத்தறாங்க, சீபீஎம் ஆபீசை கொளுத்தறாங்க, நிலப்பிரபுவை கொல்றாங்க “)
யாரை கீழ் மக்கள் என பணக்கார விவசாயிகள் இகழ்ந்தார்களோ அவர்கள் தற்போது பேரரசர்களாகிவிட்டார்கள் ஆம் மக்களின் ஆணைக்கிணங்க நிலப்பிரபுக்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள். இப்புரட்சியின் முன்னணியாளர்கள் யார் தெரியுமா? ஏழை விவசாயிகள். மொத்த மக்கள் கிராமப்புற தொகையில் ஏழை விவசாயிகள் 70%, நடுத்தர விவசாயிகள்20%, பணக்கார விவசாயிகள் 10% இருக்கிறார்கள். அதிலும் அந்த 70 % ஏழை விவசாயிகளில் மிகமிக வறிய விவசாயிகள் 20%-ம் வறுமையில் வாடும் விவசாயி 50% பேரும் இருக்கிறார்கள். இந்த ஏழை விவசாயிகள் தான் நம்முடைய இலக்கு அவர்கள்ள்தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள், இந்த இலக்கு தான் அந்த இலக்கினை (உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள்) தாக்கி அழிக்கும் என்கிறார் தோழர் மாவோ.
விவசாய சங்கம் குற்றம் இழைத்துவிட்டதாக கூறுபவர்களிடம் மாவோ சொல்கிறார் “உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கெதிரான உழைக்கும் மக்களின் போர் இது . இது எவ்விதத்திலும் குறை கூறத்தக்கதல்ல .” என்று தான் பயணம் செய்த போது விவசாய சங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.
மாபெரும் 14 சாதனைகளை கூறும் மாவோ இப்புரட்சி சரியான திசை வழியில் செல்வதை தெளிவாக அறிகிறார்.மக்களை அமைப்பாக்கியதே மாபெரும் சாதனை . ஹூனான் மத்திய மாவட்டத்தில் எல்லா விவசாயிகளும், தெற்கு ஹூனானில் பாதி விவசாயிகளும், மேற்கு ஹூனானில் தற்போது அமைப்பாக்கும் நிலையிலும் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர். ஆனால் சில மாவட்டங்களை அமைப்பு இன்னும் சேரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினைத்தாக்கும் விவசாய சங்கம் தன் பலத்துக்கேற்றவாறு செயல் பாட்டில் இறங்குகிறது. அரசியல் ரீதியாக தாக்க கணக்குகளை சரி பார்ப்பது , அதாவது பொதுப்பணத்தினை கையாடல் செய்த தீய மேட்டுக்குடிக்கெதிரான நவடிக்கை, பணத்தினை மீட்பதோடு அந்தஸ்தினை அடித்து வீழ்த்தவும் பயன்படுகிறது. ஒழுங்கீனக்களுக்கெதிராக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அவன் தன் மானம் மரியாதையை முற்றிலும் இழக்கவும் வைக்கிறது சங்கம். நன்கொடைகள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.
உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சியாங்டன்-ல் 15000 விவசாயிகள் தீய மேட்டுக்குடியினரின் வீட்டில் நுழைந்து துவம்சம் செய்து 4 நாட்கள் தங்கி தின்று தீர்க்கின்றனர். பின்னர் வழக்கமான அபராதம் வேறு. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோரை தெருவில் காகிதத்தொப்பி அணிந்து இழுத்து வரும் இந் நிகழ்வு மக்களிடையே மிகவும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. முன்னர் நிலபிரவின் ஆணைக்கிணங்க சிறையில் தள்ளிய நீதிபதி தற்போது விவசாய சங்கம் காலையில் சொன்னால் மதியம் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறார். மிக மோசமான குற்றங்கள் புரிந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தன் வசதிக்கேற்றவாறு தப்பி ஓடுகின்றனர்.
சிலர் திருப்பி அரசால் திருப்பி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மிக மிக மோசமான கொடுங்கோலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புக்கள், மற்றும் அவன் இழைத்த குற்றங்கள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளை வறுமையால் கொன்றவன், பிச்சைக்காரர்களை கொன்று ஆரம்பிக்கின்றேன் என சொன்னவன் என முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
ஹூனான் மாகாணத்தில் விவசாய சங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளில் எல்லாம் எங்குமே தானிய பதுக்கலோ, வெளியே அனுப்புவதோ, விலையேற்றம் செய்வதோ முற்றிலும் இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது. குத்தகையை காரணமின்றி அடிக்கடி உயத்தி கொள்ளை அடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. டூ எனப்படும் மாவட்டமும் டூவான் எனப்படும் மாவட்ட நிர்வாகமும் தற்போது அமைதியாய் ஒதுங்கியிருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது.
மக்களை சித்திரவதை செய்யும் போலீசு இப்போது ஒதுங்கிச்செல்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுதப்படைய தூக்கியெறிந்துவிவசாயிகள் தங்களின் படைகளை நிறுவியிருக்கிறார்கள். சியாங் சியாங்-ல் 100000 ஈட்டிகளும்,மற்ற மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஈட்டிகளும் இருக்கின்றன. “ஈட்டியை கண்டு உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தான் பயம் கொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் அல்ல” சீனாவில் மதிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் ஆதிக்கம் (மாகாண அமைப்பு முறை), குல ஆதிக்கம், கடவுளாதிக்கம் என 3 வகையான ஆதிக்கத்தின் கீழ்தானிருக்கின்றனர். ஆனால் பெண்கள் இந்த மூன்றையும் சேர்த்து கணவன் ஆதிக்கத்திலும் உழல்கின்றனர்.
நிலபிரபுத்துவத்துக்கெதிரான இப்போராட்டம் நான்வகை ஆதிக்கத்தையும் தகர்க்கிறது. பெண்களுக்கு சம உரிமை என சுதந்திரம்ஜனனாயகம், சமத்துவம் என அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. இந்தப்புரட்சி மாபெரும் கல்வி அறிவினை மக்களுக்கு கொடுத்திருக்கிறது, அன்னியப்பாணி கல்வியினை வெறுத்த மக்கள் சீனப்பாணி கல்விமுறையை ஆவலோடு கற்கிறார்கள்.அரசியல் கல்வில் இரு குழந்தைகள் விளையாடும் போது கூட ஒன்று ஏகாதிபத்தியம் ஒழிகஎன முழக்கமிடுவதன் மூலம் மக்களிடம் ஆழமாக வேறூன்றியுள்ள அரசியலை அறியமுடிகிறது. தீய பழக்கங்கள் சூதாட்டம்,ஆபாச நடனம், அபின் புகைத்தல், சாராயம் காய்ச்சுதல் தடை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டு விட்டது.
எருதுகள் கொல்வதற்கும் தடையும், கோழிகள், வாத்துகள், பன்றிகள், வளர்க்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடித்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கொள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிக அதிகமான நன்கொடை கூட தடை செய்யப்பட்டிருப்ப்து என்பது பணக்கார விவசாயிகள் மத்தியில் கூட நல்லபெயரை கொடுத்து இருக்கிறது. கடனுக்காக கூட்டுறவு இயக்கம், தானியத்துக்கான கூட்டுறவு என பலவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளாக போடப்படாத சாலை, தூர்வாரப்படாத குளங்கள் என அனைத்தும் சாத்தியமாகி இருக்கின்றன அதுவும் நான்கு மாதங்களில்……….
இது மக்களின் போராட்டமே உழைக்கும் விவசாயிகளின் புரட்சியே என்பதனை ஆணித்தரமாக நிறுவுகிறார் தோழர் மாசேதுங். இதை ஆதரிக்கவேண்டியது நம் கடைமை என்றும் அப்போதிருந்த வலது தலைமை புரட்சியை புறக்கணித்தது தவறு என்பதயும் தெளிவிக்கிறார். இப்புத்தகத்தினை படிக்கும் போதே கவர்ந்த விசயம் என்னவெனில் அந்த எழுத்து நடை நம்மை அவருடனே (மாவோ) பயணிக்கவைக்கிறது.
புத்தகம் முடிந்தவுடன் அவரின் வார்த்தைகள் ஆழமாய் பதிகின்றன
” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறிவதாகும். இது ஒரு பலாத்த்கார நடவடிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பலத்தை பிரயோகிக்காது சாத்தியமில்லை. சக்திமிக்க எழுச்சி மட்டுமே லட்சக்கணக்கான விவசாயிகளை தட்டி எழுப்பி பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்க முடியும்”
கேடயம் வெளியீடு,
விலை 20/- தற்போது மிகவும் கிடைப்பதற்கு தட்டுப்பாடான நூல்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
அக்டோபர் 2, 2009 by kalagam
மஹா ஸ்ரீ ஸ்ரீ ல ஸ்ரீ காந்திப்பெருமானின் ஜெயந்தியை முன்னிட்டு
காந்தியின்
கனவைநம்பி
தன்னந்தனியாய்இரவில்
இரவில் செல்லத்துணிந்திடாதே
பெண்ணே
காந்தியின்வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்கையில்
கத்தியோடு.
குறிச்சொற்கள்: காந்தி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
செப்டம்பர் 28, 2009 by kalagam
பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு
“சிறுதுளி” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோவையில் வனிதா மோகன் என்ற முதலாளி நாட்டு மக்களின் மீது திடீர் கரிசனம் வந்து நாட்டை மாற்ற அதனை முன்னேற்ற ஒரு தன்னார்வ நிறுவனத்தை தொடங்கினாராம். பல கோடிகளில் புரளும் இந்த இந்த சிறு துளிக்கு பணம் பிரிக்காலில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமிருந்தும் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பெறப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு முதலாளியால் சிறந்த மனிதராக இருக்கமுடியுமா? முடியும் என்றவாறு தான் பொள்ளாச்சி மகாலிங்கம் முதல் வனிதா மோகன் வரை வேசம் கட்டிக்கொண்டி திரிகிறார்கள். ஆனால் என்ன செய்வது அரிதாரங்கள் தான் பல நாட்கள் நீடிப்பதில்லையே. இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகளின் உண்மைமுகம் டார் டாராய் கிழிந்து தொங்குகிறது. இல்லையில்லை நான் யோக்கியன் என்றபடி ஒப்பாரிவைத்தாலோ அல்லது சபதம் போடும் காலம் எல்லாம் மலை ஏறி விட்டது , வனிதா அறிவித்துவிட்டார் கோவையில் இனி எந்த முதலீடும் இல்லை.
முதலாளியே சொல்லிவிட்டார் தாங்குமா அரசு அய்யய்யோ சாமீ தெரியாம தப்பு நடந்து போச்சு என்றவாறு போலீசு படைகள் ஆலையின் வாசலில் குவிக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கிமுனையில் அரசும் முதலாளித்துவமும் சொல்லித்தருகின்றன நீ தொழிலாளி இல்லை அடிமை, உனக்கு உரிமை கிடையாது, அதை மீறினால் உனக்கு வேலை கிடையாது.
கோவையின் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள பிரிக்கால் என்ற நிறுவனத்தில் மூன்றாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.அவர்கள் அந்த ஆலையினால் கடுமையாகவும் கொடூரமாகவும் கசக்கிப்பிழியப்பட்டார்கள். அங்கே சில தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அந்த துரோகத்தலைமைக்கு எதிராக தொழிலாளர்கள் புதியதோர் தொழிற்சங்கத்தை தொடங்கினார்கள் அதுதான் ஏஐசிசிடியூ. இது சிபிஐ(எம்.எல்) liberationஇன் தொழிற்சங்கமாகும். இச்சங்கத்தில் சுமார் 90 % தொழிலாளர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை இச்சங்கத்துக்கு நிறுவனத்தால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
மேலும் சிறு துளி அமைப்பிற்காக கட்டாயமாக தொழிலாளர்களின் 1 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது அவர்களின் அனுமதி இன்றியே. ஊரை அடித்து உலையில் போடும் முதலாளிகள் இப்படித்தான் கடைத்தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து நல்லபேர் வாங்கிக்கொள்கிறர்கள்.
சுமார் ஈராண்டுகளாக தொழிலாளர்கள் தங்கள்பிரச்சினைகளுக்காக போராட்டத்தினை பல வடிவங்களில் எடுத்தனர்.சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய போராட்டத்தை சீர்குலைக்க பல வகையில் முயன்று தோற்றுப்போன நிர்வாகம் தொழிற்சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டிய நிர்பத்தத்தில் மாட்டிக்கொண்டது. சென்ற ஆண்டில் நடைப்பெற்ற போராட்டத்தின் முன்னணியாளர்கள் 40 பேரை தனியாக பிரித்த ஆலை நிர்வாகம் அவர்களை தனியாக புதிதாக ஆரம்பித்த யூனிட்டுக்கு மாற்றியது. பின்னர் சில மாதங்கள் கழித்து அந்த ஆலையில் உற்பத்தியை குறைத்து நட்டமென்று சொல்லி ஆலையை (அதாவது அந்த யூனிட்டை) மூடிவிடுவதாக அறிவித்துஅனைவரையும் பணி நீக்கம் செய்து விட்டது நிர்வாகம். அதற்கு எதிராகத்தான் கிளர்ந்தெழுந்தனர் தொழிலாளர்கள்.
பல கட்ட போராட்டங்களுக்குப்பிறகு மசியாத அந்த நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ பண்ணையின் காவல்காரனான மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்னர் உயிரிழந்திருக்கிறார். தற்போது ஆலையில் ஆயிரக்கணக்கான போலீசார் காவல் காக்கிறார்கள் தொழிலாளர்கள் சரியாக வேலையை மட்டும் செய்கிறார்களா என்று.
மேலும் அந்நிறுவனத்தில் பிரச்சினையை யாராவது ஏற்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமென மாவட்ட எஸ்பி அறிவித்திருகிறார். ஆலையின் நிர்வாக இயக்குனர் வனிதா மோகனோ அமைதியாக இருந்த தொழிற்சாலையில் திட்டமிட்டே ஏஐசிசிடியூ பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகிறார். அக்குற்றங்கள் 1. 5 ஆண்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு 2.தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் என ஆசை. மேலும் அவர்கள் போராட்டத்தில் குதிக்க அச்சங்கமே காரணமென்றும் ஜார்ஜை கொன்றதோடு மட்டுமல்லாது பல உயரதிகாரிகளின் உயிருக்கும் அச்சங்கம் ஆபத்தாயிருக்கிறது என அறிவித்திருக்கிறார்.
90 கோடி நட்டமடைந்து விட்டதால் இனி கோவையில் எந்த முதலீடும் கிடையாதென சொல்லி முதலாளியை, அவனை நம்பித்தான் தொழிலாளியென மிரட்டியிருக்கிறார். இப்பிரச்சினையில் முக்கியமாக கூறப்படுவது ” என்னதான் இருந்தாலும் ஹெச் ஆரை கொன்னது தப்பு, அது மனித உயிரா பாருங்க ஏன் முதலாளியோட கையாளா பார்க்கறீங்க” கண்ணீரில் கூட இருக்கும் வர்க்கம் உயிரில் இருக்காதா என்ன? இந்த ஜார்ஜ் உண்மையியிலே யோக்கியனா? அவருக்காக மக்கள் கண்ணீர் வடிக்க வேண்டுமா? தொழிலாளிவர்க்கம் முதலாளிவர்க்கத்திடம் செய்த தவறுக்காக பாவ விமோசனம் பெறவேண்டுமா?
ஏற்கனவே இருந்த மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் தொழிலாளர்களின் பிரச்சினையால் ஓடிப்போய்விட கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நம்ம கதாநாயகனாக சித்தரிக்கப்படும் ஜார்ஜ் துணிந்து வந்தார். தொழிலாளர்களை அடிமையாக்கியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு வந்தவர் கடைசியில் தன் வாயில் துணிக்கட்டிக் கொள்ள வேண்டிய நிலை. மூன்று மாதத்தில் அதாவது செப்30க்குள் தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்டுவேனன சபதம் போட்டு கடுமையாக தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி துவம்சம் செய்தவர் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். முதலாளிவர்க்கத்துக்காக ஓயாமல் குரைத்துக்கொண்டிருந்த அவரது உயிர் முதலாளிகளுக்காகவே பிரிந்தது.
சட்ட ரீதியான, நியாயமான போராட்டங்கள் தான் எப்போதும் தொழிலாளர்கள் மேற்கொள்கிறார்கள், ஆனால் முதலாளித்துவம் எப்போது சட்ட ரீதியாக நியாயமாக நடந்து கொண்டிருக்கிறது? தொழிலாளிகளின் மீதான முதலாளிகளின் தாக்குதல் எல்லை மீறும் போது தொழிலாளர்களும் எல்லை மீறுவது இயற்கைதானே. நியூட்டனின் விதிப்படி ஒவ்வொரு வினைக்கு ஒரு எதிர் வினை உண்டு என்பது போலத்தான் இது நடந்தேறியிருக்கிறது. உடனே மத்திய தொழிற்துறை தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது.
ஒரு முதலாளியின் கையாள் செத்துப்போனதற்காக கண்ணீர்வடிக்கும் பத்திரிக்கைகளே அதிகாரவர்க்கமே என்றாவது உன்னால் வேலையைவிட்டு துரத்தப்பட்ட பல லட்சக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்வு கேள்விக்குறியானதை நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? கோவையில் எத்தனை தொழிலாளிகள் ஆலைகள் மூடப்பட்டதால் தற்கொலை செய்திருக்கிறார்கள், ஓட்டாண்டியாக்கப்பட்டிருக்கிறார்கள். கோவையில் நகைக்கடை ஊழியர்கள் எத்தனை பேர் குடும்பத்தோடு சயனைட் தின்று இறந்திருக்கிறார்கள். அப்போது இந்த பத்திரிக்கைகளோ அல்லது அரசாங்கமோ எதைப்பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்?
லட்சம் விவசாயிகள் செத்தபிறகுதான் அது தேசிய அவமானம் என்று மண்மோகனால் சொல்லப்படுகின்றது. ஆனால் டாட்டாவின் ஓட்டலுக்கு பாதிப்பு என்றால் உடனே அது தேசியத்தின் மானப்பிரச்சினை, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தால் கொல்லப்பட்ட, தினம் கொல்லப்படுகின்ற மக்களின் எண்ணிக்கைகளை எண்ணமுடியுமா என்ன? காலையில் தொழிலாளியாயிருந்து காரணமின்றி மாலையில் வெட்டியாக்கப்படும் கொடூரம் கண்டிப்பாய் கண்களில் கண்ணீரை வரவழைக்காது. ஆனால் ஜார்ஜ் செத்துப்போனாலோ, டாட்டாவுக்கு முதுகுவலித்தாலோ, அம்பானிகளின் சொத்துப்பிரச்சினைகள் நம் கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்ய வேண்டும்.
ஆம் ஆணையிடுகிறது முதலாளித்துவம் அழு அழு அழு நன்றாய் அழு முதலாளித்துவத்தின் முதுகெலும்பினை அசைக்க நினைத்ததற்காக அழுதே பாவத்தினைப்போக்க வேண்டும். ஆனால் அழுதுகொண்டும் வெட்கித்தலைகுனிந்து கொள்வதற்கு தொழிலாளி வர்க்கம் தவறொன்றும் செய்யவில்லை, முதலாளிகளின் வரன்முறையற்ற சுரண்டலுக்கான எதிர்விளைவே இது. ஏஐசிசிடியூ-ன் அனந்தநாரயணன் சொல்வது போல இச்சம்பவத்துக்கு தொழிலாளிகள் பொறுப்பேற்க முடியாது, முதலாளிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
முதலாளிகளால் கசக்கி பிழியப்படும் தொழிலாளி வர்க்கத்துக்கு இது ஒரு எச்சரிக்கைமணி. சங்கம் ஒன்றே தீர்வு நம் உரிமைகளைப்பெற, உரிமைகளைப்பாதுகாக்க. அது சாத்தியமாகாத வரை முதலாளித்துவ வெறிநாய்கள் நம்மீது பாய்ந்து கொண்டுதானிருக்கும். நம்முடைய ஒற்றுமை ஒன்றே முதலாளித்துவத்திற்கு சாவு மணியடிக்கும்.
கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை
அன்றாடம் தொழிலாளர்கள் மீது பயங்கரவாத முதலாளிகள் செய்து வரும் சித்திரவதை கொடுமைகளின் எதிர் விளைவே இது
தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ தேவை இல்லை
பிரிக்கால் ஆலைத்தொழிலாளிகளின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்
தமிழக அரசே!! நாள் தோறும் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கொடுமைகள் செய்து வரும் பயங்கரவாத முதலாளிகளை கைது செய்
முழக்கங்கள் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 மறுமொழிகள் »
செப்டம்பர் 21, 2009 by kalagam
நினைவுகள்
நினைவுகளா அவற்றை
குப்பையில் போடுங்கள் – ஆம்
அவைகள் தான் ஆணையிட்டன
கிடைத்து விட்டது ஈழம்
இந்திய இறங்கி விட்டது
நார்வே கிறங்கிவிட்டது
புளங்காகிதம் அடைந்தோம்
இல்லையில்லை
அடையச்சொன்னார்கள் ……
இனிய நினைவுகளில்
மூழ்கிப்போனோம்
கொஞ்சம்
தள்ளிப்போய்விட்டது நாளை கண்டிப்பாய்
கிடைக்கும் ரெட்டை இலைக்கு
குத்துங்கள் ஈழம் மலருமென்றார்கள்
வாய் பிளந்தன கல்லறைகள்
அதன் பாதாள வாய்க்குள்
கொத்து கொத்தாய்
மக்கள் இறக்கப்பட்டார்கள்
இன்னும் மேடைகள் உறுமுகின்றன
அடுத்தகட்டம் இறுதிக்கட்டம்
வருவார் பறித்து
தருவார் ஈழம்……
நினைவுகள் மீண்டும் என்னை
எழுப்புகிறது இதோ பார்
இது சீமான்கள் பொழுதுபோக்கும்
காடுகளல்ல மக்கள் வாழும்
சுடுகாடுகள்
ஆகா எவ்வளவு அழகாயிருக்கு
சிரிக்கிறான் இந்து ராம்
மூன்று லட்சம் மனிதங்கள்
கம்பிகளுக்குள்
தினம் காக்கைகளாய்
சுடப்படும் மனிதர்கள்…..
மீண்டும் நினைவுகளை
கிளப்புகிறார்கள்
தயாராயிருக்கிறது படை
சிங்களனை உடை
பொறிபறக்கிறது வசனங்கள்
கிளிசரின் போடாத கண்ணீர்த்துளிகள்
எதுவும் எதையும் என்னுள்
மாற்றத்தை ஏற்படுத்தவில்லை
குப்பைகள் இன்னும்
என் இதயத்தில் ஒட்டியிருக்கின்றன
மாற்றத்தை நான் எனக்கல்ல
கோர நினைவுகளுக்கு இனிய
மேக்கப்போட்டு தெருவில்
திரியவிட்டவர்களுக்கு
தர நினைக்கிறேன்
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
செப்டம்பர் 16, 2009 by kalagam
ஈழத்தமிழனா? ஈழ இந்துவா? -சிவாஜிலிங்கத்தின் திருவிளையாடல்
ஒவ்வொரு ஆண்டு வினாயகர் சதூர்த்தி விழாவிலேயும் புதுப்புது அவதரம் எடுத்து வருவார் வினாயகர். கையிலே பூ, லட்டு, கையில் துப்பாக்கி, ஏ.கே47, பீரங்கி இப்படி எத்தனையோ அப்புறம் ரெண்டு பேரை தொடையில் வைத்துக்கொண்டு, பக்காவாய் சீன் காட்டிக்கொண்டு வருவார் நம்ம கணேசு.
இந்த ஆண்டோ ஈழப்பிள்ளையார், பிரபாகரன் பிள்ளையாரென மேலும் தன் பங்குக்கு அவதாரம் எடுத்து இருக்கிறார். கோவையில் நடந்த இந்து மக்கள் கட்சி என்ற பாசிச சேக்காளிகளின் சதூர்த்தி விழாவுக்கு கொடியசைத்து துவக்கியும் வைத்திருக்கிறார்.
அண்ணார் சிவாஜிலிங்கத்தின் (M.P) உதிர்ந்த முத்துக்கள்
// இலங்கையில் வாழும் தமிழர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனர். இவர்களை இனவெறி சிங்களர்கள் இன்று நேற்றல்ல, 1958 முதல் அழித்து வருகின்றனர்.
இதுவரை 2,000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பவில்லை. 2000ம் ஆண்டு, கோவிலில் இருந்த விநாயகரை பெயர்த்தெடுத்து, அருகில் உள்ள குளத்துக்கு இழுத்துச் சென்று மூழ்கடித்தனர்…………………………………………………………
இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் இருந்தும், ஈழத் தமிழர்களை காப்பாற்ற இயலவில்லை என்பது வேதனை அளிக்கிறது.//
——————————————————————————————————————————————————————————–
இப்படி பார்ப்பன பாசிசத்தின் அரவணைப்பில் பெறப்போகும் இந்து ஈழத்தில் தாழ்த்தப்பட்ட, பிறமத மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு இடம் இருக்குமா என்ன?
இல்லையில்லை ஒரு அகதியின் ஆதரவு முயற்சிதான் இதை கொச்சை படுத்தக்கூடாதென்பவர்களுகளே ,நியாயமாய் பதில் சொல்லுங்கள் இது வரையிலான பாரியப்பின்னடைவுக்கு முக்கிய காரணமான இந்தியாவை நீங்கள் மக்களிடம் அம்பலப்படுத்தினீர்களா? காங்கிரசு தவிர வேறு கட்சி வந்தால் ஈழத்தை பறித்து கையில் தருவார் என நீங்கள் சொல்லி சொல்லி இந்திய மேலாதிக்கப்போரை காங்கிரசின் தனிப்பட்ட போராக மாற்றினீர்களே. இது ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்துவதாக ஆகாதா?
தமிழ்தேசியம் என்ற பதத்தின் முழுமைக்குமே எதிரானதுதான் பார்ப்பனீயம். அது ஈழம் அமைய ஆதரவு தரும் என நீங்கள் நம்புங்கள். அதைப்பொதுக்கருத்தாக்க முயல்வதற்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா இந்த தமிழ்தேசியம் பேசுவோருக்கும், சிவலிங்கத்துக்கும். யார் கிடைத்தாலும் அவர்களின் முதுகில் ஏறி பறிக்க இது என்ன பலாப்பழமா? மக்களைத்தவித்த இந்த சுய நலமிகளின் கூத்தினையே போராட்டமாக சித்தரித்துக்கொள்கிறார்கள்.
ஈழத்தில் நடந்த நடக்கும் இனப்பிரச்சினையை மதப்பிரச்சினையாக முலாம் பூசுகிறார் அய்யா சிவாஜிலிங்கம். இது ஏதோ புதிதல்ல, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அர்ஜுன் சிங்காலையும், “காஞ்சி மகா பெரியவரையும்” சந்தித்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்துக்களுக்கு அருளாசி வேண்டினார்.
தமிழினவியாதிகளெல்லாம் பார்ப்பன செயாவின் சுருக்குப்பையில் ஈழத்தினைத்தேட அதையே கொஞ்சம் ஹை லெவலில் செய்தார் நம்ம லிங்கம். இது வரை நாமெல்லாம் நினைத்தது போலல்ல ஈழத்தினர் எல்லாம் தமிழர்கள் அல்லவாம் அவர்கள் இந்துக்கள் என புதிதாய் கோடு போட்டுக்காட்டினார். அப்போதிருந்து இப்போது வரை இந்து மதவெறி பாசிஸ்டுகளிடம் அவருக்கு இருக்கும் பாசத்தின் பொருள் மட்டும்தான் விளங்க வில்லை.
ஒரு வேளை சூடு சொரணையற்று தமிழர்களுக்கு இந்த வழியிலும் இனப்பற்றினை ஊட்டுகிறார் போலும்.இந்து மத பர்ப்பனீயத்தின் வரலாறு அவருக்குத்தெரியாதா ? இல்லை நமக்கு தெரியாதென நினைக்கிறாரா?
அதிகம் இல்லை என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் எப்போதாவது நீங்கள் மக்கள் பக்கம் இருந்திருக்கிறீர்களா?
குறிச்சொற்கள்: ஈழம், சிவாஜிலிங்கம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 மறுமொழிகள் »
செப்டம்பர் 13, 2009 by kalagam
வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்
மாதங்கள்
உருண்டோடிவிட்டன
ரணங்களை இன்னும்
அழிக்கமுடியவில்லை என்னால் ……
கர்ப்பிணி பெண்களின் வயிற்றினை
கிழித்து சூக்குமம் தேடின
குண்டுகள்
செத்த தமிழரின்
உடலையும் துளைத்தன சிங்கள
வெறி வண்டுகள்….
தலையில் கட்டு போட்டபடி
அம்மாவும் மகளும்
அழுது கொண்டிருந்த
அக்காட்சி போய்விட்டதா மனதில்
பிணத்தோடு பிணமாய்
பிணமாவதற்கு தயாராகிக்
கொண்டிருக்கும் அவரின்
கண்களில் கேள்விகள் தெறிக்கின்றன
என்ன பாவம் செய்தோம்…..
அவர் வருவார், இல்லையில்லை
இவர் வருவார் ஒரே நாளில்
அதிசயம் நடக்கும் – கனவுகள்
தான் நடப்பதில்லையே
வந்த படங்களைவிட வராதபடங்கள்
வராதவையாகவே இருக்கட்டும்
இருபதினாயிரம் பேர்
இன்னும் ஐம்பதாயிரம் பேர்
எண்ணிக்கைகளுக்கு
எண்ணத்தெரியவில்லை……
அப்பன், மாமன், மனைவி, கணவன்,
மச்சான் எல்லோரையும் இழந்து
விசத்தை கேட்கும் அந்த மனம் இனி
யாரை நம்பும்,
நம்பிக்கையாய்
இருக்க என்ன செய்தோம்
ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்பதைத்தவிர…..
கம்பிதாண்டி போனவர்கள்
கருகிப்போய் கிடக்கிறார்கள்
வாழ்க்கையில் உதிக்காது
சோத்துக்கு நிற்கயில்
உள்ளங்காலில் சூரியன் தகிக்க
அதை விட சுடுமா
துப்பாக்கியின் ரவைகள்….
விடுதலையின் வெப்பம்
குறைந்திடுமா என்ன
தெறிக்கும் ரத்தத்தில்
மரண சத்தத்தில்
ஜீவிப்பார்கள் நாளைய புதல்வர்கள்
இது என்ன ஜோசியமா
இல்லை-வரலாறு
ஆம் ஜாலியன் வாலாபாக்
பகத்சிங்கை பெற்றெடுத்தது
பூங்காவில் சுற்றிவளைக்க
பரங்கியர் தலையுடைத்து சரித்திரம்
சொன்னான் எங்கள் தோழன் ஆசாத்…..
தேடுதல் வேட்டைகள் தேடத்தேட
விழுந்த பிணங்களோ ஆயிரமாயிரம்
தியாகம் அள்ள அள்ள வற்றாத நதி
எங்கள் நக்சல் பரி
பாரிஸ் புரட்சி தோல்வி தான்
ஆனால் முடிந்து விட்டதா
போராட்டம் ?
செத்த பின்னும்
பிணங்களை கண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறது
ஆளும் வர்க்கம் - இன்று வரை
அது பயந்தோடுகின்ற
சொல் எது தெரியுமா?
மக்கள்………
ஆம்
கைகோர்ப்போம் இங்கு
வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் !
கண்ணீரைதுடைத்து
கட்டியமைப்போம் மக்கட் படைகளை
உரத்து முழங்குவோம்
ஏகாதிபத்தியம் ஒழிக !
இந்திய மேலாதிக்கம் ஒழிக ! !
சிங்களபேரினவாதம் ஒழிக ! ! !
சிவப்பு பயங்கரவாதத்தில்
மூழ்கிப்போகட்டும் பேரினவாதம்,
சின்னாபின்னமாகட்டும் மேலாதிக்கம்
ஏகாதிபத்தியத்தை பிணமாய்
ஏற்றுமதி செய்வோம்….

சிவப்பு அது பட்டு போகாது
சுத்தியலும் அரிவாளும்
இனி அறுவை சிகிச்சையின்
கருவிகளாகட்டும்.
குறிச்சொற்கள்: ஈழம், கவிதைகள், போராட்டம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
செப்டம்பர் 7, 2009 by kalagam
நான் வெறி பிடித்தவன்
ஏனிந்த மாற்றம் என்னில்
எப்போதும் போல
இல்லை இன்று
அவ்வப்போது இப்படித்தான்
சில செய்திகள் என்னுள்
சந்தோசத்தில் மிதக்கின்றன
ஏனென்று தெரியவில்லை
ஆனாலும் இவற்றுக்காக
சந்தோசப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன், இருப்பேன்….
பல செய்திகளுக்கு நானே
வருந்துவது சில
செய்திகளுக்கு
வலிந்து மகிழ்வதும் ஏனென்று
புரியவில்லை……
எப்போதும் எரிச்சலுடன் தொடங்கும்
என் காலை
இன்று நாளிதள்களை
புரட்டியவுடன் காணாமல்
போனது
நேற்று ஆந்திரத்தில் விவசாயிகள்
தற்கொலை, முந்தா நாள்
கயர்லாஞ்சியில்
கொல்லப்பட்ட எம் மக்கள்
முந்தா நாளுக்கு முந்தி
மார்பு அறுக்கப்பட்ட தாய் மார்கள்…..
எல்லாம் கவலையாய்
என்னுள் அடைத்து எங்காவது
எப்போதாவது வெடிக்கும்
அப்படித்தான் இன்றும்…..
பல்லாயிரம் மைல்களுகளுக்கு
அப்பால் நேபாளத்தில்
ஒரு பார்ப்பன வெறியனின் பூணூல்
அறுக்கப்பட்டதாம், ஆடைகள்
கிழிக்கப்பட்டதாம்
அவன் முகம்
சிதைக்கப்பட்டதாம்….
அறுக்கப்பட்ட இடத்தில் தான்
நாங்கள் துளிர்க்கிறோம்
கிழிக்கப்பட்ட இடத்தில்
நாங்கள் மலர்கிறோம்
சிதைக்கப்பட்ட இடத்தில்
பிறக்கிறோம்….
அவர்களைப்போல
எல்லாம் கடவுள் செயல்,விதியென்று
சொல்வதில்லை,
இது தண்டனை
பூணூல் கொழுப்பில்
நான் விபச்சாரியின்
மகன் ஆனதற்கு
ஆக்கவைக்கப்பட்டதற்கு தண்டனை…..
இதென்ன கொடுமை வெறிபிடித்தவனே
தூற்றலாம் என்னை
அவன் அழுதால்
உனக்கு மகிழ்ச்சியா கேட்கலாம்
பூணூல் அறுபட்டால், எம் மக்கள்
கோயிலில் நுழைந்தால் துடிக்கும்
உன் தசைக்கு தெரியுமா
அந்த உணர்ச்சிக்கு பேர் என்னெவென்று?
நீ சொல்லலாம் அது மனிதாபிமானம்….
நான் பெருமையாய் சொல்லுவேன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்
குறிச்சொற்கள்: பார்ப்பன வெறியன்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஆகஸ்ட் 26, 2009 by kalagam
பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி
அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்
பழ.கருப்பையா. மிகச்சிறந்த கட்டுரையாளர். எந்த ஒரு விசயத்தையும் தேன் போல அருமையாக எழுதுவார். அவரின் சில கட்டுரைகள் நந்தனில் கூட வந்ததாக கேள்வி. கடந்த புதன் கிழமை பார்ப்பன பாதாளச் சாக்கடையின் புழுவாக தன்னை வெளிக்காட்டிய போது பத்திரிக்கை உலகம் அவரை உச்சி முகர்ந்திருக்கும். அப்படி ஒரு சேவை பார்ப்பனிய பாதத்துக்கு.
கருப்பையா எழுதிய கட்டுரை ” ஏன் இந்த நோய்ச்சிந்தனை?” ஆம் அந்தக் கட்டுரைதான் அவரின் பார்ப்பன நோயை வெளியே எடுத்துக்காட்டியிருக்கிறது. கருணாநிதி சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவின் போது சொன்ன வார்த்தைகள் தினமணியியின் பாதத்தில் முள்ளாக குத்த மணியின் முக்கிய விருந்தாளியான அவருக்கோ அது இதயத்தையே குத்தி விட்டதாம். முன்னேறுவதற்கு சாதி தடை இல்லை அது ஒரு கற்பனை, பிழைப்புவாதமென்கிறார்.
கருணாநிதி ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பது தெரிந்த விசயமே. ஆனால் அவர் பிழைப்புவாதியென்பதை பார்ப்பனரை விமர்சனம் செய்தவுடன் தான் புரிந்து கொண்டு வெம்பியிருக்கிறார் அன்ணன் தினமணிக்கு தட்டாத தம்பி. சமீப காலமாக தின மணிக்கு தமிழர்கள் மீதும் திராவிட இயக்கம் மீதும் அளவில்லா பற்று, அய்ய்யோ திராவிட இயக்கம், தமிழகம் இப்படி சீரழிகிறதே என ஒப்பாரி வைத்து, தான் நினைப்பதை தன் விருந்தாளிகள் (நெடுமாறன், பழ.கருப்பையா, நடராஜ், விஜயன்,)
மூலம் பொதுக்கருத்தாக்க முனைகிறது.
சர்வக்ஞர் பிற்படுத்த சாதியை சேர்ந்தவரென்பதால் புகழ் பெற முடியவில்லை என்றார் கருணாநிதி. உடனே பார்ப்பன பதர்கள் பொங்கியெழ அதற்கு தடை போட்டு நானே இறங்குகிறேன் என இறங்கி விட்டார் கருப்பையா . அவரின் வாதமெல்லாம் உதாரணமெல்லாம் எதற்கு ஏன் எல்லாம் ஒன்றை மட்டுமே சொல்லுகின்றன ஒன்றை நீரூபிக்க “சாதி வேறுபாடில்லை” என்ற பொய்யை மெய்யாக்க. வள்ளுவன் என்ன மேல் சாதியா அவன் முன்னேற புகழ்பெற எந்த சாதி தடையாய் இருந்தது?
தமிழகத்தை அதன் போக்கை மாற்றிய அன்ணா முற்பட்ட சாதியா? எல்லாவற்றையும் விட கருணாநிதி என்ன மேல் சாதியா கீழ் சாதி தானே, அவர் 5 முறைமுதல்வராக வில்லை அவரை எந்த சாதி தடுத்தது? இத்தனைக்கும் அவர் சாதி சிறுபான்மை. பாரதி பார்ப்பான் என்பதால் மட்டும் புகழ்பெறவில்லை அவனுடைய அறிவே அவனின் புகழுக்கு காரணம் அப்படிப்பார்த்தால் பாரதிதாசன் கூட பிற்பட்ட சாதிதானே?
உயர் சாதியான பார்ப்பனர்கள் தொன்று தொட்டு வழிபட்டு பின்பற்ற அதை எழுதியவர்களின் சாதி தடுக்க வில்லையே? திருமூலர் கூட இடையன் தானே அவர் புகழடையவில்லையா? ஆக சாதி எப்போதும் ஒருவன் முன்னேர தடையாய் இல்லை.
மொத்தமாய் அவர் சொல்லவருவது பார்ப்பனர்கள் சாதி பார்ப்பதில்லை கீழ் சாதிக்காரன் எழுதிய புத்தகத்தை தனது வேத நூலாக பயன் படுத்துகிறார்கள். ஆனால் கீழ் சாதியிலிருந்து போன கருணாநிதி போன்றவர்கள் தான் சாதியை தினம் வளர்க்கிறார்கள். சாதியை கடந்த சமுதாயத்தில் சாதிப்பிரச்சினை வேண்டுமென்றே புகுத்தப்படுகின்றது.
இது சாதி இல்லாத சமுதாயமா?
கேட்கும் போது இனிப்பாகத்தான் இருக்கிறது? ஆனால் உண்மைகள் காதில் அறைந்து சொல்கின்றன , உறைக்கவைக்கின்றன. பாரதி பார்ப்பனன் என்பதனைத்தவிர எதனால் புகழ்பெற்றான்?. மதிமாறன் எழுதிய பாரதிய ஜனதா பார்ட்டியிலும் தோழர் மருதையன் எழுதிய அது குறித்த கட்டுரையிலும் தெளிவாய் கோடிட்டு காட்டினார்கள். பறையர்கள் இந்துக்களை அடித்துவிட்டார்களே ஏன் இன்னும் சும்மா இருக்கிறீர்கள் என இந்துக்களை திமிறி எழச்சொல்கிறார் பாரதி. பறையர்களுக்கும் பூணூல் அணிவித்துவிட்டு அவர்களை இந்துக்களை கொண்டு தாக்க சொன்ன ஒரு கிரிமினல் பேர்வழி யாரால் தூக்கிப்பிடிக்கப்படுகிறான் பார்ப்பனீய கருத்துக்களை தூக்கிப்பிடிப்பவர்களைத் தவிர?
பிறப்புச்சாதிக்குண்டான தொழிலை செய்யவேண்டுமென்று சட்டம் போட்ட ராஜாஜி என்ற சாதி வெறி பிடித்த அயோக்கியன் மூதறிஞர் எப்படி ஆனார் தன் பிறப்புத்தகுதியைத்தவிர? ஏன் நம்முடைய சங்கராச்சாரியை எடுத்துக்கொள்ளுங்கள் சொர்ணமால்யாவோடு கும்மாளம், பெண் எழுத்தாளரை மானபங்க படுத்த முயற்சி, கொலை வழக்கில் முக்கியபுள்ளி என இத்தனை கேடித்தனங்கள் இருந்தாலும் அவன் ஜெகத் குருவாக நீடிக்க நீட்டிக்க வைப்பது எது அந்த பூணூலைத் தவிர.
மற்ற சாதியில் பிறந்த யாரும் குற்றமே செய்யவில்லையா எனலாம் அப்படி சொல்லவில்லை எல்லா சாதியிலும் அயோக்கியன் இருக்கலாம் . ஆனால் அயோக்கியனாய் இருந்தாலும் பார்ப்பனன் என்பதற்காகவே மேற்கண்ட “தலைவர்களெல்லாம்” புகழப்பட்டார்கள் , புகழப்படவுமிருக்கிறார்கள் என்பது உண்மையா பொய்யா? அதற்கு பார்ப்பன சமூகமே முன் வந்து ஆதரவளிப்பதும் பொய்யா?
சட்டசபையில் நான் பாப்பாத்தி என சூளுரைத்த செயலலிதாவை கண்டித்ததா தினமணி, மடத்தைவிட்டு ஓடிப்போன காமேஸ்வரனின் லீலைகளை விமர்சித்ததா தினமணி, சர்வக்ஞர் விழாவில் பேசிய கருணநிதிக்கு தனது அல்லக்கை மூலம் விமர்சனம் செய்யும் திணமணி இப்படி செயாவை சாதி ரீதியாக ஒப்பிட்டு எழுதுமா ஒருவேளை(!!!!!!!) வந்தாலும் நம் கருப்பையாதான் எழுதிவிடுவாரா என்ன?
என்ன சாதி தடை இல்லையா? நிகழ்காலம் கொஞ்சமல்ல ரொம்பவே கசக்கிறது. அகற்றப்படாத ரெட்டைக்குவளைகள், ஒதுக்கப்படும்குடியிருப்புக்கள்,மறுக்கப்படும் ஆலய வழிபாட்டு உரிமை இப்படி எத்தனையோ இருக்க சாதி ஒரு தடை இல்லை என்கிறது பார்ப்பனீயம், கருப்பு பார்ப்பனன் பழ.கருப்பையாவோடு கும்மியடித்தவாறே.
வள்ளுவனுக்கு குறுக்கே நிற்காத சாதி எதற்கு நந்தனை மறித்து எரித்தது? வேதம் எழுத தடை விதிக்காத சாதி ஏன் ஏகலைவன் விரலை வெட்டியது. திருமூலரின் புகழை தடுக்காத சாதி நிகழ் காலத்தில் ஆறுமுக சாமியை எதற்கு அடித்து வெறியாட்டம் போட்டது?
அன்ணாதுரையும் கருணாநிதியும் முதல்வரானது சாதி இறந்ததற்கு அடையாளமாம். அப்படியாயின் கயர்லாஞ்சி பாலியல் கொலைகளும் , பாப்பாப்பட்டி கீரிப்பட்டி கொடுமைகளும் எதை உணர்த்துகின்றன?தமிழ் நடராசனின் காதில் விழாமலிருக்க ஊளையிட்ட தீட்சிதர்களின் ஆணவம் எதை காட்டுகிறது? ஒரு வேளை இவையெல்லாம் மாயையாக தெரிகிறதா தினமணிக்கும் கருப்பையாவுக்கும்.
மாயையாகத்தெரியலாம் ஆனால் பாதிக்கப்படபோவது பாதிக்கப்பட்டது உழைக்கும் மக்களல்லவா?பூணூலை மாட்டிக்கொண்டு டேய் சூத்திரப்பசங்களா நான் மேல் சாதி என்று கிளம்பும் பார்ப்பனத்திமிர்தான் திராவிட சித்தாந்தம் சீரழிவதை பற்றிகவலைப்படுகின்றது. அதுவே ஒப்பாரியும் வைக்கிறது எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று.
இளையராசா மேல் தாழ்த்தப்பட்டவரென்பதால் சொல்கிறது ஏன் அவர் முன்னேறிவரலை திறமை இருந்தா நீ வா ! உன்னை எது தடுக்குது? இளையராசா கும்பாபிசேகத்துக்கு காசுகொடுத்தாலும் உள்ளே வரவிடாமல் எது தடுத்ததோ? எது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வழக்குப்போடு முடக்கியதோ, மகாமகத்தின் போது தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை எது மாற்றியதோ அதுதான் பார்ப்பானை பார்ப்பானவே நீட்டிக்கவும் வைக்கிறது தாழ்த்தப்படவனை பிற்படுத்தப்பட்டவனை அப்படியே இருக்கச்செய்கிறது.
என்னதான் பணக்காரனாயிருந்தாலும் கருவறைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை பிறப்புதானே தீர்மானிக்கிறது. கோயிலை அரசுவசமாக்கிக்கொண்டால் சாமிக்கு நைவேத்தியம் பண்ணமுடியுமா என கவலைப்படும் தினமணி அந்தக்கோயிலுக்கு தன் உழைப்பை பொருளைகொடுத்தவனுக்கு கருவறையில் நுழைய அதிகாரம் இல்லை என்கிறது .
பழ.கருப்பையா மூலம் தனது பார்ப்பன அரிப்பை தீர்த்துக்கொண்ட தினமணிக்கு நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சத நெறிகளும் எதற்காக யாருடைய தேவைக்காக? எதற்கு? பூணுலுக்கு மேக்கப் போடுவதைத் தவிர.
குறிச்சொற்கள்: கருணாநிதி, கருப்பையா, தலித், தினமணி, பார்ப்பனீயம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஆகஸ்ட் 15, 2009 by kalagam
இந்திய சுதந்திரத்திற்கு
பிறந்த நாளாம்
இந்தியாவே
நீ பிறந்த நாள்தான்
எம் மக்களுக்கு துக்க நாள்…..
இந்தியர்களின் ரத்தம்
கொதிக்கலாம் இன்னும்
எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
கொதிக்கட்டும் மானத்தை
இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்குமாம்
ஆனால் இங்கு
நடப்பதே வேறு
மனிதத்தை,சுயமரியாதையை
பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
கொதிக்கிறதோ இந்தியம் ….
ஆயிரம் செண்ட் அடித்தாலும்
துரோகத்தின் ரத்த கவுச்சி
போவதில்லை – உழைக்கும் மக்களின்
ரத்தத்தை நக்கிக்கொண்டே
உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
பிறந்த நாள் சரி
பிறக்காமலே இறந்து
போன கதை தெரியுமா?
ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
நாளை வெளியுலகம்
பார்க்க ஆவலாயிருந்ததாம்
கரு
மருத்துவச்சியாய் ஆட்லெறி
குண்டுகள் மாற
தாயும் சிசுவும் பரந்த வெளியில்
சிதிலங்களாய்
பிணதிண்ணியாய்
இந்திய மேலாதிக்கம்…..
ஆகத்து 15
எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்
ஈழத்தில் பிறந்த நாளை
இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
அன்று தான் பிறந்த நாள்
அவன் கதை முடிக்க
ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
பறையடித்து சொல்லுவோம்
ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.
குறிச்சொற்கள்: இந்தியா, கவிதைகள், சுதந்திர நாள், துரோகம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
ஆகஸ்ட் 10, 2009 by kalagam
எய்ட்ஸ் விளம்பரங்கள் மனிதனைத்தின்னும் தொற்று நோய்கள் 
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கே.கே நகருக்கு நானும் எனது நண்பர்கள் சிலரும் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தோம். காலையில் வந்த வேலை முடிந்து போகவே அப்படியே டீக்கடையில் ஒதுங்கினோம். அப்போது ஒரு குரூப் வந்து கொண்டிருந்தது, ஒரு ஆண் கோமாளி வேசம், மற்ற படி மூன்று பெண்கள். கழைக்கூத்தாடிகள் போல உடையணிந்து கொண்டு வந்திருந்தார்கள். டீக்கடைக்கு முன்தான் பஸ் ஸ்டாப் மற்றும் பெரிய நிழல் தரும் மரமிருந்தது.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு நாலு டீ ஒரு பால் என்றவாறு ஆர்டர் செய்தோம். நண்பர் கேட்டார் யாருங்க இது? பதில் தரும் வகையில் கோமாளி வேசம் போட்டவர் ஒரு பேனரை விரித்து வைத்தார். அதில் “பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையே சிறந்தது” “வெளியில் போனாலும் சரி யாரிடம் போனாலும் சரி ஆணுறை பயன்படுத்துங்கள்” என்றிருந்தது. கொடுத்த டீயை விட வசனம் சூடாக இருந்ததால் கோதாவில் இறங்கினோம்.
முதலில் நான் ஆரம்பித்தேன் கோமாளியிடம் சென்று “எனக்கு ஒண்ணுமே புரியலை அங்க என்ன போட்டு இருக்கு” என்றபடியே பேனரை சுட்டினேன். கோமாளிக்கோ ஒரு சந்தோசம். என்னை வைத்து அரசியல் பண்ண ஆரம்பித்தார். நான் அவரை வைத்து அரசியல் பன்ண வந்திருக்கிறேனென்று தெரியாமல்.
“எல்லோரும் இங்க வாங்க அண்ணன் என்னவோ கேள்வி கேக்குறாரு? அண்ணே இன்னொருவாட்டி கேளுங்க” மறுபடியும் கேட்டேன் அவர் சொன்னார்”அதாவதுன்னா உடலுறவு மூலமாத்தான் எய்ட்ஸ் பரவுது, நீங்க யார்கிட்ட போனாலும் சரி ஆணுறைய மட்டும் மறக்காம போடுங்க” பெருமிதத்தோடு, கூட இருந்த பெண்களுக்கும் அப்படி ஒரு சந்தோசம். நான் ஆரம்பித்தேன் “ஏங்க ஆணுறை போட்டுக்கிட்டா எய்ட்ஸ் வராதா?” “ஆமா கண்டிப்பா வராதுண்ணா” தனக்கே உரிய ஏற்ற இரக்கங்களோடு.
“அது வேற மேட்டர், சரி அது என்ன யாரிடம் போனாலும் சரி, வெளியில் போனாலும் சரின்னு போட்டு இருக்கு” “அது வந்து ……..எச்சில் முழுங்கியபடி ஆரம்பித்தார் அது ஒரு எழுத்து நடைக்காக போடுறது சரின்னா கரெக்ட்ன்னு அர்த்தம் இல்லை சும்மா. நண்பர் கேட்டார் “சும்மாவா அது என்ன சும்மா வெளியில் போறது சரின்னு எழுதி விட்டு சும்மான்னா என்ன அர்த்தம்?”
அவர்கள் ஏதோ எழுத்து நடைக்குள் திசை திருப்புவதை உணர்ந்து மீண்டும் கேட்டேன் ” அய்யா ஒரு சந்தேகம் வெளிய விபச்சாரிகிட்ட போனா ஆணுறை போடுறது சரி, தேவைன்னு சொல்லுறீங்க இல்லைன்னா எய்ட்ஸ் வரும் அப்புடீங்கறீங்க, ஆனா அது சரியா? தவறா?ன்னு சொல்ல மாட் டேங்குறீங்களே? இது என்ன அயோக்கியத்தனம்? யார் யார்கிட்ட வேணுமினாலும் போங்க ஆணுறை போட்டுகிட்டு போன்னா என்ன அர்த்தம்நீங்க எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்ய வந்தீங்களா இல்ல ஆணுறை கம்பெனிக்கு விளம்பரம் தேட வந்தீங்களா இல்ல ஆள் பிடிக்க வந்தீங்களா என்றவாறு அந்த கோமாளியையும் பெண்களையும் கேட்டேன். அமைதியாய் இருந்தார்கள்.
நண்பர் சொன்னார்”வாய் மூடி இருக்கறதுல்ல பலனில்லை பதில் சொல்லியே ஆகணும்”. பகிரங்கமாய் கொஞ்சம் சத்தமாக நடந்த இவ்விவாதத்தை பார்க்க டீ குடிக்க, பேருந்து நிறுத்தத்திற்கு வந்த வர்களென ஒரு கூட்டமே கூடிவிட்டது. ஒரு டிப்டாப் ஆசாமி மட்டும் ஏதும் பேசாது கவலைகளின் ரேகைகள் ஓட நண்பரின் அருகில் நின்று கொண்டிருந்தான்.
கோமாளி கொஞ்சம் காட்டமாய் சொன்னார்”எவன் எவன் யார்கிட்ட வேணுமினாலும் போலாம் அது தனி மனித உரிமை அத நாங்க தடுக்க முடியாது, அது எங்க வேலையும் இல்லை, ஆணுறை போடுன்னுதான் சொல்ல முடியும் அவுசாரிகிட்ட போறவனை தடுக்கவாமுடியும்”. ரொம்ப சந்தோசம் ஆணுறை போடுன்னு சொல்லுற வாயால கூடா உறவுன்னு சொன்ன என்ன குறஞ்சு போவீங்களா?”
மீண்டும் சொன்னார் கோமாளி”அது தனிமனித உரிமை அதை கேக்க வேண்டிய அவசியம் இல்லை” ” என்னது? தனிமனித உரிமையா? ஒரு கனவன் தன் மனைவியிடம் உறவு கொள்வது வேண்டுமானாலும் தனிமனித உரிமையாயிருக்கலாம். ஆனால் இன்னொரு மணமானவர் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்வது தனிமனித உரிமைன்னு சொல்றத இப்பத்தான் கேள்விப்படுறேன், அப்படீன்னா இந்த நாட்டுல விபச்சாரியிடம் உறவு கொள்வதும், கள்ளகாதலும் தப்புன்னு சட்டம் சொல்லுது, கைதுன்னு தினம் பேப்பர்ல வருது, ஆனா இப்படி சொல்லுறீங்களே?
ஆணுறை விளம்பரத்துக்காக வந்தீங்களா? இல்லை உண்மையாவே எய்ட்ஸ் தடுக்குற நோக்கத்தோடு வந்தீங்களா? ஆமா நீங்க எல்லாம் யாரு? தாங்கள் தன்னார்வக்குழுவினர் என்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணவிற்காக வந்ததாகவும் கூறினார்கள் அப்பெண்கள். முடிவாய் சொன்னோம்
”உங்கள் பிரச்சாரம் கள்ள உறவினை தடுப்பதாக, பெண்ணை ஒரு பண்டமாக மாற்றுவதினை எதிர்க்க வேண்டுமே தவிர ஆணுறைக்கு ஆள் பிடித்து த ருவதாய் அமையக்கூடாது”. “ஒரு தன்னாவர்வ குழுவான நீங்கள் மக்களுக்கு உண்மையை சொல்வதற்காக உருவாகவில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கிக்கொண்டு மக்களிடம் அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்காகத்தானே.
அவன் அதிரடியாய் சொல்வதை நீங்கள் மென்மையாய் சொல்கிறீர்கள்” வேறு வழியின்றி கோமாளியும் கூட்டத்தப்பார்த்து இனிமேல் நாங்க அப்படியும் சொல்லுறோம் என்றவாறு கூத்தடிக்காமலே சென்றார்.
தன் குழுவைப்பற்றியோ எங்கிருந்து பணம் வருகிறதென்பதைப்பற்றியோ கோமாளிக்கோ மற்ற பெண்களுக்கோ தெரியவில்லை. கூட இருந்த அந்த டிப்டாப் ஆசாமி உடனே அக்கூட்டத்தோடு எஸ்கேப் ஆனார். பின்னர் தான் தெரிந்தது அவர்தான் அந்த குழுவுக்கு ஆர்கனைசர்.அவன் பேசியிருந்தால் இன்னும் நன்றாக அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஆள் பார்த்து இந்த என் ஜீ ஓ ஆசாமிகளெல்லாம் பேசுவார்கள்.
அவர்களை சரியாய் அம்பலப்படுத்தியபோதே தெரிந்து கொண்டு விட்டான் அந்த ஆசாமி அதனால் தான் அமைதியாய், பின் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் வரை பேருந்தினுள்ளே இருக்கும் ஆணுறை விளம்பரங்களை (எய்ட்ஸ் விழிப்புணவு பிரச்சாரமாம்!!) கிழித்துக்கொண்டிருந்தேன். ———————————————————————————————————————————————————————————— கடந்த மாதம் வரை அடிக்கடி ஒரு விளம்பரம் எப்.எம் -ல் ஒலிபரப்பாகிக்கொண்டு வந்தது. வீட்டு வேலைக்காரியிடம் அண்ணி துணி எடுத்து போடுவாள் (என்ன மரியாத இவளுக்கெல்லாம்) துவைக்கச்சொல்லி, அதில் கணவனின் தம்பியின் பேண்ட் பாக்கெட்டில் ஆணுறையை பார்த்துவிட்ட வேலைக்காரி சொல்ல அதற்கு அண்ணி காண்டம் தான தப்பு ஒண்ணும் இல்லையே.
கார் சாவியை எடுத்ததை விட காண்டம் பயன் படுத்துவது தவறில்லை என்கிறாள். மேலும் இன்னொரு விளம்பரத்தில் கிளிக்கு,நாய்க்கு காண்டம் என பெயர் வைப்பது என்று காண்டம் என கூறுவது தப்பில்லைஎன கிழவி வந்து சொல்கிறது.
இதன் மூலம் முதலாளித்துவம் மாபெரும் உண்மையை சொல்லித்தருகின்றது. தவறை நான் சொல்வது போலச்செய் அது தவறே அல்ல. கட்டற்ற பாலியல் உறவுகளை கோருகிறது ஏகாதிபத்தியம், முதலாளித்துவம்.
மனிதனை தன் சுயமரியாதையை, தன் நிலமையை எதிர்த்து போராடுவதற்கு எதிரான எல்லாவற்றையும் எளிதாக தருகிறது. அதன்படி தான் இந்த “யார்கிட்ட வேண்டுமானாலும் போ ஆணுறையை யூஸ் பண்ணு”. இதையே தன்னாவக்குழுக்கள், அரசு என அனைவரும் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.
கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால் பெண்ணை கட்டற்ற பாலுறவின் நோக்கத்துக்கான இந்த பல விளம்பரங்களில், பிரச்சாரங்களில் நடிக்கும்பல பெண்கள் என்னவோ நாட்டுக்கு சேவை செய்வதைப்போல பெருமையாய் நடிக்கின்றனர்.
கண் முன்னே நாடு பற்றி எரிவதைப்பற்றி, விவசாயம் அழிவதப்பற்றி, கைத்தறி நசிந்ததைப்பற்றி துளிவார்த்தை பேசாது தினவெடுத்து திரிபவனுக்கு பாதிப்பு வருமாம் ஆணுறையை பயன்படுத்தச் சொல்லி பிரச்சாரம் வேறு. சற்று யோசித்துப்பாருங்கள் யார் இதற்கெல்லாம் பனத்தை வாரி வழங்குவது?
நம் வாழ்வினை , கோவணத்தையும் சேர்த்து பறித்த அதே முதலாளிகள் தான் ஆணுறயை போட்டுக்கொள்வதற்காக பல கோடிகளை வாரி கொடுக்கின்றனர். சும்மா கொடுக்கவில்லை ஆணுறைகள் ஒரு விற்பனைப்பொருள், ஆணுறை மட்டுமல்ல பாலியல் சார்ந்துள பல பொருட்களை விறபனை செய்வதற்கு புதிய யுக்தி தேவைப்படுகின்றது.ஒரு பொருளை விற்க முதலாளி செய்யும் பல டிரிக்குகளில் இதுவும் ஒன்று. தான் போட்டதை விட பல பல மடங்காய் லாபம் தேவை அவனுக்கு. ஏன் நாளை ஆனுறை வாங்காதவர்கள் எல்லாம் கைது செய்யப்படலாம் யார் கண்டது மக்களுக்காகவா அரசாங்கம்?
இந்த விளம்பரங்கள் மனிதனை விழுங்கும் தொற்று நோய்கள், மனிதன் தன் சுயமரியாதைக்காக, தன் அடிமைத்மத்தனத்துக்கெதிராகா போராடும் வரை இவ்வகை தொற்று நோய்கள் நம்மை ழுங்கிக்கொண்டே இருக்கும். வர்க்கப் போராட்டம் என்ற அறுவை சிகிச்சை ஒன்றே அதற்கு சரியான மருந்து.
குறிச்சொற்கள்: எய்ட்ஸ், கதை, தன்னார்வகுழு, பாலியல்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
ஆகஸ்ட் 3, 2009 by kalagam
நாத்திக வெங்காயம்
வீரமணியும் பக்தர்களும்
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் அம்மனிதரே பார்ப்பன ஆதிக்கத்தையும் அது ஏன் தகர்க்க வேண்டும் என்பதையும் விரிவாக அவரே பேசுவார். அவர் பெயர் பெரியார் ராமசாமி. செருப்பினை வீசினால் கூட அதை பொருட்படுத்தாது தன் கருத்தை வலியச்சென்று மக்களின் மனதில் பதித்து அதை வடித்ததால் தான் அவர் பெயர் பெரியார்.
தந்தை பெரியாரின் காலகட்டத்தை கண்டிப்பாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது முழுக்க முழுக்க பார்ப்பனீயம் தன் அகலக்கால் பரப்பி வந்த காலம், துணிவாய்பேசினார், சமுதாயத்தின்சாதிய, பார்ப்பன ஆதிக்க கொடுங்கோன்மையை நீக்கும் வேலையை தன் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றவர் அவர்.தமிழகத்திலே இன்னும் பார்ப்பன, பார்ப்பனீய எதிர்ப்பு இருக்கிறதெனில் அதற்கு முழுச்சொந்தக்காரர் தந்தைபெரியார்.
தன் கொள்கைக்கு நேர்மையாய், பார்ப்பன, இந்துமத மூடனம்பிக்கைய தகர்க்க ஓடி ஓடி தன் உயிரைக்கூட சென்னை தி. நகரில் பொதுக்கூட்டத்தில் பேசியபின் உயிரைவிட்டார். அந்த கடைசிப்பேச்சினை கேட்டுப்பாருங்கள் அல்லது அப்புத்தகத்தை படித்தால் தெரியும். அதில் உரையின் இடையிடையே அய்யோ அய்யோ என வலியின் வேதனையால் என அலறுவார், ஆயினும் உரையை நிறைவு செய்து தன் வாழ்க்கையையும் நிறைவு செய்தார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பன பாதந்தாங்கியாய் சேவை செய்ய விரும்பாது, மக்களுக்காக பலவற்றையும் இழந்து சாதி, மூடனம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு பலமாய் சவுக்கடி தந்த அந்த பகுத்தறிவு பகலவன் 94 வயதில் இறந்து விட்டார். அவர் எழுந்து வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரின் கல்லறையின் மீது ஏறி குதியாட்டம் போடுகின்றது வீரமணி கும்பல்.
சில ஆண்டுகளுக்கு முன்வரை (சுமார் 15 ஆண்டுகளுக்கு) சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்”கல்விக்கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகள் ஏன்?” “மலமள்ளும் பாப்பாத்தியயை கண்டதுண்டா?”போன்ற வரிகளெல்லாம் பல சுவர்களில் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துக்கொண்டு போகும் போது சிறு பள்ளி வயது மாணவனான எங்களுக்கெல்லாம் பெரியாரை முழுமையாய் தெரியாது, வீரமணியைத்தெரியாது ஆனால் அது உண்மைஎன்று மட்டும் புரியும்.
பின்னர் திகவிலிருந்து பெரியார்திகவினை சிலர் ஆரம்பித்து பின்னர் கொளத்தூர் மணிதலைமையிலான த.பெ.தி.க வும் இணைந்து பெ.தி.க ஆனது. தந்தை பெரியார் ஆரம்பித்த திகவும் அதன் சொத்துக்களும் வீரமணிவசம் சிக்கி குட்டிபோட்டு குட்டிபோட்டு மிகப்பெரிய மூலதனமாகிவிட்டது. சாகும்வரை மூத்திரவாளியோடு அலைந்து கொண்டிருந்த அந்தக்கிழவர் கனவிலும் நினைத்திருப்பாரா தான் வாங்கி சேர்த்தப்பணம் இப்படி கல்லாக்கோட்டையாகுமென்று.
பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என சாகும்வரை சொல்லிச்செத்த அந்தக் கிழவரின் தளபதியோ பாப்பாத்தி செயாவுக்கு ஒரு காலத்தில் சேவகன். புலிக்கு தான் தான் மட்டும் தான் ஜவாப்தாரி என உதார் விட்ட திக கும்பல் ராஜீவ் கொலைக்குப்பிறகு அடுப்படிக்கு போன பூனைதான் பிறகு போன நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தது.(?)
அதுவரை செயாவுக்கு ஜால்ரா போட்டது, கருணாநிதி கைதின் போது “சண்டித்தனம் செய்கிறார் கலைஞர்” அறிக்கைவிட்டது எல்லாம் என்ன ஆனது? போலிகம்யூனிஸ்டுகளைப்போல அடிக்கடி அணிமாறி நாங்கள் மாறவில்லை அவர்கள்தான் மாறிவிட்டார்கள் என ஒப்புக்குகூட உதார் விடத்தெரியாது. பார்ப்பன பாசிசத்தினை தமிழ் நாட்டில் வளர்க்க செயாதான் முக்கிய காரணம் எனில் அக்காலகட்டத்தில் செயாவோடு ஹோமபூஜையில் ஒன்றிரங்கி நெய் விட்டது வீரமணி சுவாமிகள்.
இன்றுவரை பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்புக்கு ஆதாரம் என்றால் சுயமரியாதை நிறுவனபுத்தகங்கள் தான் மிகச்சிறப்பானவை, ஏன் வீரமணியின் பேச்சு எவ்வளவு சிறப்பானது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காமல், அவரின் புத்தகங்கள் எத்துணை ஆராய்ச்சி மிகுந்தது? ஆனால் சொல் ஒன்று செயல் ஒன்றென விளங்கும் அயோக்கியத்தனத்தை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
யாரிடம் சென்றாலும் குழைந்து குழைந்து தன் சுயமரியாதையத்தான் வெளிப்படுத்தினார் வீரமணி. ஆம் செயாவிடம் இருக்கும் போது அவருக்கென்றுதனி ஒளிவட்டம் போட்டு, இடஒதுக்கீடு வீராங்கனை பட்டம் கொடுத்து, செயாவுக்கு ஏற்ற அரசியல்ஜோடிகளை தேடிப்பிடித்து எவ்வளவு வேலைகளைசெய்தார் அய்யா வீரமணி. இதற்கு அவருக்கு என்ன பட்டம் கொடுக்க வேண்டும்? மாமாமணி என்றால் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது அவரின் பக்தர்களுக்கு.
தன்னை கேவலப்படுத்தி தலைவனை உயர்த்துவான் பக்தன் அப்படிதான் வினவில் பெரியார் விடுதலை கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த வீரமணியின் பக்தர்கள் வானளாவ அவரை புகழ்கிறார்கள். “அந்தக்காலத்துல பெரியார் அய்யாவபத்தி என்ன சொன்னார் உனக்கு தெரியுமா” எதிர் கேள்வி போடுகிறார்கள் திக குட்டிகள். இது தான் பகுத்தறிவா? பெரியார் சொன்னார்” நான் சொல்றேன்னு எதையும் நம்பாதே நீயே யோசிச்சு பகுத்தறிஞ்சு பேசு” ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் சொன்னதை இப்போதும் யோசிக்காது எடுத்து விளக்கம் கூற வந்த திராவிட சிகாமணிகள் எப்படி பார்ப்பனீயத்தை விரட்டுவார்கள்?
சில ஆண்டுகளுக்கு முன் வந்த பெரியார் ஆண்டு விழா மலரில் விளம்பரத்திற்காக ஒரு சாமியாரின் விளம்பரத்தையும் போட்டிருந்தார்கள். இதற்கு பெயர்தான் பகுத்தறிவா? மதுவினை காந்தி எதிர்த்தார் என்பதற்காக நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் எங்கே? சாமியார்பயலிடம் காசு வாங்கி கல்லாவை நிரப்பி காரில் வந்து கொடியேற்றும் வீரமணி எங்கே?
செயாவை விட்டு வந்து கருணாநிதியிடம் வீரமணி ஒட்டிக்கொண்ட சம்பவம் குறித்து திகவின் ஒரு நிர்வாகியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள் அவர் சொன்னார் “இப்போதுதான் சேர்ந்துவிட்டார்களே” அப்படிஎன்றால் இது வரை கருணாநிதியை நீங்கள் விமர்சித்தது எல்லாம் மறந்து விடவேண்டுமா? அல்லது பாப்பாத்திக்கு சோப்பு போட்டதையெல்லாம் மனதிலிருந்து அழித்து விடவேண்டுமா?
கண்டிப்பாய் எல்லாம் அழியாது இது தந்தை பெரியாரின் மண் சுயமரியாதை பூமி உங்களை போன்ற பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம்? உங்கள் வாய்கள் சொன்னதை உங்களின் காதுகள் மறந்து போகலாம். மறப்பதற்கு மக்கள் ஒன்றும் முன்னாள் போயஸ்கார்டன், இன்னாள் கோபாலபுரத்து நாய்கள் இல்லையே?
சட்டமாவது வெங்காயம் என சுயமரியாதைக்கு தடையாக வரும் எதையும் செருப்பால் அடித்த தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கு உரிமை கோருவதினை சட்டம் தவறு என சொல்கிறது. மேல்முறையீட்டில் வேறு நீதி கூட கிடைக்கலாம். பெரியாரின் எழுத்துக்கள் வீரமணிகும்பலுக்கு சொந்தமாகிவிட்டால் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தலைவரின் வாழ்க்கையும் விற்பனை சரக்காகிவிடும். சுந்தரராமசாமியின் புத்தகங்களை நாட்டுடமையாக்க நினைக்கும் அரசு(கண்ணன் எதிர்ததால் பின்னர் கைவிடப்பட்டது) தந்தை பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க தடுப்பது எது? பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு தகுதியற்றதா?
அதை தடுப்பதுதான் நாத்திக வெங்காயம், கருனாவுக்கு நாயாக இருக்கும்வரை அப்புறம் அடுத்தபடியாக யாருக்காவது வாலாட்டிக்கொண்டே இருந்து அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு சப்பை கட்டு கட்டியே வாழ்ந்து விடலாம். மலத்தில் விழுந்தாலும் காசு காசு தானே. நாங்க சிடி தயாரித்து விட்டோம் வெளியிடுவதற்குள் பெரியார் திக குறுக்கு வழியில் கைப்பற்றிவிட்டார்கள் பணம் பேரிழப்பாக அமையும் இதையும் கொஞ்சம் கவனியுங்கள் என்கிறார் வீரமணி மேல்முறையீட்டில். சொல்லப்போனால் பணம் போட்டாச்சு கையைகடிக்குமாம்.
உரிமை அது எல்லோருக்கும் பொது என சொன்னவ்ரின் எழுத்துக்கள் தனியார்மயம்.பகுத்தறிவு தேய்ந்து தேய்ந்து பணம் சம்பதிக்க வந்த கதையும் இதுதான். பணம் சம்பாதிக்க அய்யா வீரமணி அவர்களே பேசாமல் கோயிலைதிறந்து விடுங்கள் சீக்கிரம் கல்லா நிரம்பிவிடும்.அதைவிட்டு விட்டு…….
தந்தை பெரியாருக்கு, அவரின் எழுத்துக்களுக்கு தாங்கள் மட்டும் தானென உரிமை கொண்டாடுங்கள்.அதற்கு பகுத்தறிவு சாயம் மட்டும் பூசாதீர்கள். அது பெரியாருக்குத்தான் மாபெரும் அவமானம். அதைப்பற்றி உங்களுக்கென்ன அக்கறை காசு வந்தால் சரிதானோ.
தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்க
http://www.youtube.com/watch?v=QaVmEiQ1jTU
http://www.esnips.com/_t_/periyar+speeches?q=periyar+speeches
குறிச்சொற்கள்: தந்தை பெரியார், திக, பெ.தி.க, வீரமணி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 17 மறுமொழிகள் »
ஜூலை 23, 2009 by kalagam
பிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்
ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை பார்த்தேன். அப்போதே சேமித்து விட்டு பிறகு அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.
மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது:
நடிகை அமலா “ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள்.
அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. நான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்”……….
உழவுக்கு மாடுகளை பயன் படுத்தக்கூடாது. இது அமலாவின் கோரிக்கை, விலங்குவதைகளை தடுத்து காக்க வேண்டு இது மேனகாகாந்தியுடைய கொள்கை, இன்னும் சிலர் வெறி நாய்க்கடியான ரேபீஸ்க்கு மருந்து ஆட்டின் மூளையிலிருந்து எடுப்பதால். அவற்றைகொல்லக்கூடாது.
இவ்வளவு அபிமானமா விலங்குகள் மீது. இந்த விலங்கின அன்பர்கள் மீது தவறா ? அமலாவுக்கு மாட்டின் மீது காதல் வந்து மாட்டை அடிக்கக்கூடாது , உழவுக்கு பயன் படுத்தக்கூடது என்கிறார். தெருவில் விலங்குகள் அடிபட்டுகிடக்கின்றன யாருக்குமே விலங்கின் மீது பாசம் இல்லையா என கதறி சட்டையை பிடிக்கிறார் மேனகா காந்தி. இன்னும் சிலர் விலங்குகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என ஊளையிடுகிறார்கள்.
அப்படி அமலா ஊளையிட்ட இடம் எது தெரியுமா ஆந்திராவில் கர்னூல்…. அமலாவுக்கு மாட்டை உழவுக்கு பயன் படுத்தக்கூடாது எனச்சொல்லத்தெரியும் ஆனால் ஆந்திராவுக்கு அருகில் உள்ள மகாராட்டிர மாநிலம் விதர்பாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் செத்ததை, செத்துக்கொண்டிருப்பதை பற்றித்தெரியுமா ? ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து கொண்டது பற்றித்தெரியுமா என்ன? மாட்டை பற்றி தெருவில் அடிபடும் நாயைப்பற்றி பேசலாம் கேள்விகேட்க ஒரு நாயும் இல்லை இன்னொரு விசயம் அந்த நாய்க்கோ, ஏனைய விலங்குகளுக்கோ வாயும் இல்லை. ஆனால் வாயுள்ள இந்த மனிதனைப்பற்றி பேசுவார்களா இந்த நாய்கள்( நாயைத்தான் ரொம்ப மதிக்குறாங்களே ).
கண்டிப்பாய் பேசமாட்டார்கள் பேசுவதற்கான அடித்தளம் என்ன இருக்கிறது? விலங்குகளை பாவம் என்பவர்கள் மனிதர்களை என்ன சொல்கிறார்கள்? நாடு முழுக்க பரவி விரவிக்கிடக்கும் இந்த விலங்கினங்கள் மற்ற விலங்குகளை பற்றி கவலைப்படுகிறார்களே ஒழிய. மனிதர்கள்? அவர்களைப்பற்றி கவலைப்பட்டால் நேரடியாக அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவசாயம் நசிந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி எதனால் அம்முடிவை எடுத்தார்.
முதல் குற்றவாளியாய் அரசு அங்கு வந்து நிற்கிறது. வெள்ளிப்பட்டறை தொழிலாளி கடன் சுமைதாங்காது சயனைட் தின்று குடும்பத்தோடு மாண்டு போகிறார். இங்கு எதுதான் காரணம்? உலகமயம் எந்திரங்கள் மூலம் ஆபரண நகைகளை குவிக்கிறது. வேலை செய்த தொழிலாளிக்கு வேலைஇல்லை. முன்னர் செய்து வந்த வேலையும் இல்லை . இங்கு யார் குற்றவாளி . உலகமயம், அதை அனுமதித்த அரசு.
பூனைக்கு கால்வலிக்க மேனாகாவுக்கோ அதுதான் இதய வலி. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று தின்று ரத்தம் குடித்த பாஜக எம்.பி, RSS -ன் சகாவுக்கு நாயின் மேல்பாசமாம்!!!! இதை எப்படி நம்புவது ? கண்டிப்பாய் நம்பித்தான் ஆகவேண்டும். வருண்காந்தி முசுலீம்களை வெட்டுவேன் என கழிவறை வாயால் கொட்டியதை கையில் எடுத்து தொட்டுப்பாருங்கள். அஹிம்சையெல்லாம் என் மகனுக்கு தெரியாதென வாலாட்டியவராயிற்றே. தெரிந்தோ தெரியாமலோ காந்தியின் வாரிசாய் மிளிரும் ஆத்தாளும் மகனும் மனிதாபிமானத்தையே குத்தகை எடுத்துவிட்டிருக்கிறார்கள்.
பையனுக்கு இந்து மனிதாபிமானம், ஆத்தாளுக்கு இந்து மனிதாபிமானம்+விலங்குகளின் மீது பாசம். இவர்கள் மட்டுமல்ல ஏறக்குறைய விலங்குகளின் காதலர்கள் பலரும் மனிதர்களின் வாழ்வினைப் பார்ப்பாதில்லை என்பதை விட பார்க்க மறுக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காது எப்படி மக்களை சார்ந்து வாழும் விலங்குகளை பற்றி சிந்திக்கமுடிகிறது?. ஏனெனில் அவர்களைப்பொறுத்தவரை வறுமையில் உழலும் விவசாயி, தொழிலாளி, வேலையில்லா இளைஞன் ,உழைக்கும் மனிதன், என யாருமே இன்னும் விலங்குகளுக்கு ஒப்பாகவில்லை.
வெடித்துப்போன வயல்வெளிகள், ஒட்டிப்போன மார்பகங்கள், சுருங்கிப்போன தசைகள் என எல்லாவற்றையும் தாண்டி அந்த மாடு எலும்பாய் இருக்கிறதே? அது தெரிகிறதா. தனக்கு சோறில்லைஎன்றால் கூட இருக்கும் காசுக்கு மாட்டுக்கு தீவனம் வாங்கிப்போடுவான் விவசாயி. தன் உழவுக்கு பல்லாண்டாய் உழைத்து செத்துப்போன மாடுகளுக்காக கண்ணீர்விட்டு கதறியழும் விவசாயிக்கு கண்டிப்பாய் விலங்கினநேசத்தினைப்பற்றி தெரியாது.
வளர்ப்புபிராணிகளை தன் வீட்டின் பிள்ளையாக கருதி வளர்க்கும் உழைக்கும் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் “ஏய்!!! விலங்கினை வதைக்காதே” விலங்கினை வதைப்பது இருக்கட்டும் எங்களை வதைக்கும் இந்த தனியார்மயத்துக்கும், தாராளமயத்துக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்? பிராணிகளுக்கு துடிக்கும் வாய்கள் மக்கள் பிணமாவதினை பேச மறுக்கிறது.
ரேபீஸ் தடுப்பு மருந்து ஆட்டுமூளையிலிருந்து எடுக்கப்படுவதை எதிர்க்கும் யோக்கிய சிகாமணிகள், வெறி நாயைக்கொல்லக்கூடாது அவற்றை பத்திரமாக அரசே பராமரிக்க வேண்டும் என கதறுபவர்கள்தான் உலகெங்கும் வறுமையால் மக்கள், குறிப்பாக ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பாசிச பேயாட்டம் போட்டு மக்களை வதை முகாமில் சிறையிலிட்டு கொன்று குவிக்கும் போது கூடநாயைப்பற்றியே பேசச்சொல்கிறார்கள்.
விலங்குகளைபற்றி பேசவே வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் மனிதாபிமானம் வேசம் போடும் இந்த பிணந்தின்னிகள் உண்மையாகத்தான் பாசம் வைத்திருக்கிறார்களா அந்த விலங்குகள் மீது? இல்லை என்பதுதான் உண்மை. ஆடுகளை வனப்பகுதியில் மேயவிட்டால் குற்றம் என அறிவித்தது அரசு. அதன் விளைவு வெள்ளாடு வளர்ப்பு முற்றிலுமாக அழிந்துபோனது. ஒரே சட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆடுகளின் வாழ்வினைப்பறித்தது யார் ? விவசாயத்தை நொடித்து மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பியது யார் ? புதிய வகை உற்பத்தி எனக்கூறி பிராய்லர்களை திட்டமிட்டு உருவாக்கி நாட்டுக்கோழியினத்தை முற்றிலும் உடைத்தெறிந்தது யார்?
உழைக்கும் மக்களா? இந்த அரசு, உலகமயம் ,தாராளமயத்தின் விளைவா? பேசித்தான் பாருங்களேன் கொஞ்சம் இதைப்பற்றியும், ஏன் உங்கள் வாய்கள் பேசமறுக்கின்றன? பேச மறுக்கிறது என்பதனை இன்னொருவிதமாக சொல்லலாம். எப்படி பேசும்? மக்களை கொன்று அவர்களின் வாழ்வுக்கான உரிமையை பிடுங்கி மொத்தமாய் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ள வர்க்கம் எப்படி பேசும் மக்களுக்காக?
இப்படி ஒரு தெரு நாயை காப்பாற்றப்போவதாய் பல வெறி நாய்கள் வந்துவிட்டன. அவைகளால் மனிதனுக்குமட்டுமல்ல….பாவம் அந்த நாய்க்கும்தான் ஆபத்து. ஒருபக்கம் மக்களை தின்பது மறுபக்கம் விலங்குகளுக்காக ஒப்பாரி வைப்பது? என அதிக நாள் இந்த டபுள் ரோல் நீடிக்காது. மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் ஆளும் வர்க்கம் தகர்க்கப்படும் போது இந்த நாய்கள் பேய்களாகியிருக்கும்.
குறிச்சொற்கள்: அமலா, தற்கொலை, நாட்டுக்கோழி, புளூ கிராஸ், மேனகா காந்தி, விவசாயி, வெள்ளாடு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 15, 2009 by kalagam
தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
அடிவருடிகளின் ஒயிலாட்டம்
பல நாட்கள் கழித்து தில்லைக்கு சென்றிருந்தேன்.ஆரம்பத்திலிருதே தில்லையை பிடிக்காது அதற்கு நான் சொன்ன காரணம் “இங்க பாப்பானும் பன்னியும்தான் அதிகமா இருக்கு” , பின்னர் தேவையின் கருதியும், ம க இ க வின் போராட்டங்களுக்கு என பலமுறை வந்தாயிற்று . ஆனால் பல நாட்கள் கழித்து சென்ற எனக்கோ பார்ப்பன சதிராட்டமும் அடிவருடிகளின் கோலாட்டம், ஒயிலாட்டம் ……. என பலவும் காத்திருந்தது.
காலையில் வேலையினை முடித்துவிட்டிருந்தேன். நண்பர் கேட்டார் “இன்னைக்கு தேர் தரிசனம் வரீங்களா போலாம்”.வேண்டாங்க அந்த பாப்பான் மூஞ்சில முழிச்சாலே” என இழுத்தேன். கூட இருந்த இன்னொருவரோ “அப்ப எப்பத்தான் இத தெரிஞ்சுக்கப்போறீங்க” என்ற படி கிளம்பினோம்.
சிதம்பரம் மேல வீதி முழுக்க போலீஸ் பந்தோபஸ்து மிகஅதிகமாகவே இருந்தது. ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் செட் செட்டாக கிளம்பிக்கொண்டிருந்தனர்.சிறியவர், பதின்வயது பெண்கள் , ஆண்கள், பெரியவர்கள் என குரூப் குரூப்பாக சென்று கொண்டிருந்தனர். தனது சொந்தக்கதை சோகக்கதையை பெரியவர்களும் , பெண்கள் ஏதோ சிரித்தபடி செல்ல அவர்களை பார்ப்பதற்காக பொறுக்கிகளென எப்படியோ சாமியை பார்க்கும் சாக்கில் இத்தனையும் நடந்து கொண்டிருந்தது.
செல்லும் வழியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன”தீட்ஷிதர்களுக்கு சொந்தமான சபா நாயகர் திருக்கோயில் தேர் ஆனித்திருமஞ்சனம் “. பார்த்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது . என்னடா அரசு கோயிலை பொதுவாக்கப்போறோமுன்னு உண்டியலை வச்சிருக்கு .
“இவன் என் கோயில்னு எப்பவும்
போல ஒட்டிருக்காணுங்க” இதே புரட்சிகர அமைப்புக்கள் போஸ்டர் ஒட்டினால் கழுதை வேலையை சிறப்பாய் செய்யும் அரசாங்கம் ஒட்டிய பசையில் பார்ப்பன நாற்றத்தை கண்டு பயந்தே போனது.
மேலும் பல அடிகள் நோக்கி நடக்க தரிசன கடைகள் பலவும் முளைத்திருந்தன வந்த கூட்டமெல்லாம் கடைகளில்தான் முக்கால் வாசி மொய்த்திருந்தன. அம்பாசடர் காரில் வந்த நபரோ “தங்களுடைய பொருட்களையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை ” சொல்லிக்கொண்டிருந்தார். ஏற்ற படி பார்ப்பன தீட்ஷிதர்கள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தனர்.திருட்டுக்கோட்டைக்கு அருகில் அப்படி சொல்ல அவருக்கு அதிகம் தைரியம் வேண்டும்.
கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்” என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா? கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.
தேவாரம் திருவாசகம் மிக மெல்லியதாக ஒலித்துக்கொண்டு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது. எல்லோரும் சிவ சிவ என நடராசன் ஆடல் வல்லானின் புராணம் பாடிய கும்பல் தெருவில் பாராயிரம் பாடிக்கொண்டு செல்ல பாவம் பக்தர்கள்தான் நின்று கூட பார்க்கவில்லை. அட சிவப்பழங்களே உங்க பக்திய நீங்கதானய்யா மெச்சனும். தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என தீர்ப்பு வழங்கிய போது எங்கயா போனீங்க? ஒரு வெங்காயத்தானும் வரவில்லையே. நாத்திகர்கள் தானே பாடினார்கள்.
எல்லாம் எங்கே போனீர்கள்? பாப்பான் வீட்டு கழிவுகளை சுவைக்கவா? என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு? சீந்த ஆளின்றி தெருவில் பாடுமுனக்கு பாடலோடு சிவனை நடராசனை காப்பாற்றுங்கள் என கதற என்னத்தடை?
ஆம் மிகப்பெரிய தடை இருக்கிறது அது பொருளாதாரத்தடை.பார்ப்பானை ஒட்டி சோப்பு போட்டு அவன் மனம் நோகாது அவன் தின்றுபோட்ட எலும்பினை நக்கிகொண்டிருக்கும் ஆதினங்கள் தானே அடுத்த குறி.சாமியை வைத்து பார்ப்பான் செய்வதைத்தானே நீயும் செய்து கொண்டு இருக்கிறாய்?
எப்படி உலகின் ஏதாவது ஒரு மூலையிலுல்ள முதலாளிக்கு எதிராக பேசினால் லோக்கல் முதலாளி அவனுக்கு வக்காலத்து வாங்குவார்களோ.அப்படித்தான் பார்ப்பனீயத்துக்கு வாலாட்டி தமிழை வைத்து சம்பாதித்து, திருடி, தின்று செரித்து விடுகிறார்கள்.அடுத்தது தான் என்பதால்தான் பெரிய திருடனுக்கு சின்னதிருடன் சப்பைகட்டு கட்டுகிறான்
தானம் கொடுத்த திருடனின் விசயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். யார் சொத்தினை யார் தானம் கொடுப்பது? மக்களின் தங்கள் பணத்தினால் அவர் ரத்தத்தால் நிமிர்ந்த கோயிலும் அந்த சாமியும் பார்ப்பான் சிக்னல் காட்டினால் தான் தரிசனம் கிடைக்கும். எங்களின் சொத்தை திருடி சோறு செஞ்சு வச்சுருக்கேன் வந்து வழிச்சு நக்கிட்டு போங்க என்கிறான் தீட்சித பார்ப்பனன்.
மக்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது, எங்கே போனது இத்தனை கூட்டம் பெரியவர் ஆறூமுகசாமி தேவாரம் இசைக்கும் போது. கண்டிப்பாய் இருக்கும் அவர் பார்ப்பானாய் இருந்திருந்தால். அவன் திருடன் , இந்தக்கோயிலில் தான் விபச்சாரம், மூர்த்தி தீட்சிதன் பணப்பங்கு பிரிக்கும் போது பார்ப்பனதீட்சித ரவுகளாலேயே கொல்லப்பட்டான், இவன் தான் தமிழை நீச பாசை என்கிறான், தமிழர்களை தே..மவன் என்கிறான் எனத்தெரியாதா என்ன?
எல்லாம் தெரிகிறது. நாம் சொன்னால் அதற்கு மேலும் கதை சொல்கிறார்கள்” வேற என்னங்க பண்றது” என்ற தீர்ப்போடு. இதுதான் மதத்தின், மத நம்பிக்கையின் அவலம். கடவுள் நம்பிக்கை சொல்லித்தருகிறது ” ஒன்ணும் செய்ய முடியாது, விபச்சாரமே செஞ்சாலும் அவன் பிராமணன், அவன் தான் சாமியோட எல்லாம் பண்ணனும்.
தேவாரமோ திருவாசகமோ ஏன் இன்னும் நடராசனின் காதில் ஒலிக்கவில்லையா? கண்டிப்பாய் ஒலித்தாலும் புரியாது! பார்ப்பன ஆதிக்கத்தில் புழுங்கி அழும் அந்த நடராசனின் சத்தம் இன்னும் கேட்காததற்கு காரணம் அவன் இன்னும் சமஸ்கிருதத்தில் புலம்பிக்கொண்டிருப்பதாலயோ என்னவோ!
தன்னை நல்லபடியாய் காப்பாற்றும் அல்லது காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு கடவுளோ அல்லது தன்னை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் கடவுளுக்கு பக்தர்களாளோ கண்டிப்பாய் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மத அவலத்திலிருந்து, மதத்திலிருந்து மீளாத வரை.
———————————————————————————————————————————
கடந்த வியாழன் அன்று மீண்டும் அரசு சார்பில் 3 உண்டியல்கள் தில்லையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்ற முறை உண்டியல் திறப்பின் போது உண்டியலில் அதில் எண்ணையை ஊற்றினார்கள்.இந்த முறை புதிய உண்டியல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 31 பார்ப்பன அடிவருடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
——————————————————————————–
சிவனடியாரை கொல்ல முயற்சித்த 6 பேர் மீது வழக்கு
சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினார்.
இதற்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் கோவிலுக்கு அவ்வப்போது சென்று தேவாரம், திருவாசகத்தை தொடர்ந்து பாடிவந்தார்.
அப்போது ஆறுமுக சாமிக்கும், தீட்சிதர்களுக்கும் மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தார்.
அப்போது அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அதில் காயமடைந்ததாகவும் கூறி சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தாக்குதல் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலை யத்தில் ஆறுமுகசாமி அளித்துள்ள புகார் மனுவில்,
நேற்று நடராஜர் கோவில் நான் உட்கார்ந்திருந்தபோது 6 தீட்சிதர்கள் என்னிடம் வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்கள், உன்னால் தான் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நிம்மதி கெட்டு விட்டது என்று கூறி ஆபாசமான வார்த்தை களால் திட்டினர். மேலும் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்(??????)
——————————————————————–
குறிச்சொற்கள்: ஆறுமுகசாமி, தில்லை, தீட்சிதன் ம க இ க, பார்ப்பனன், பு ம இ மு, புஜதொமு, HRPC
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
ஜூலை 6, 2009 by kalagam
மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்தூக்கி நிறுத்தும் தூண்களும்
இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று வரும் சிங்கள பேரினவாதத்துக்கெதிராகவும், போரினை நடத்தி ரத்தம் குடித்த இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைகட்சியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுக்க இந்திய தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.
அதன் படி எரிக்க முயன்ற போது 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய (அ)நீதிமன்றம் ஒருவாரம் தேசியக்கொடியை வீட்டின் முன் ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
அதை ஏற்காத மூவர் நிபந்தனையை தளர்த்தக்கோரியவர்களுக்கு நாட்டாமையாக ஆணையிட்டிருக்கிறார் நீதிபதி.
அதில்’’தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த முடியாது. இதை ஏற்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கட்டும். இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். 
அரசியல் அமைப்பு சட்டம் 5-வது பிரிவில் தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி கூறுகிறது.
இந்த கடமையை மக்கள் எப்படி நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் எப்படி இதில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழகஅரசு குழு ஒன்றை அமைத்து விசாரித்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’என்று தீர்ப்பில் கூறினார்” 3 பேரும் தேசியக்கொடியை ஏற்றவில்லையெனில் ஜெயிலிலேயே கிட என்கிறார்.
அதுமட்டுமில்லாது மக்கள் எப்படி இக்கடைமையை நிறைவேற்றவேண்டுமென அறிக்கை தாக்கல் செய்யவும் சொல்லியிருக்கிறார். இதை படிப்பவருக்கு என்ன புரியும் ஆகா “கடமை தவறாத நீதிபதி இன்னொரு அப்துல் கலாம்”வந்துவிட்டாரென்று.
ஆனால் உண்மை என்ன? மத்திய அமைச்சர் மிரட்டினார் என்னிடம் மன்னிப்பு கேட்க வில்லையெனில் அவரின் பேரை சொல்லி புகார் செய்வேன் என்பவர் கட்டாயமாக ஏற்று இல்லையேல் சாகு என்கிறார். அவ்வளவு நீதிமானெனில் அந்த அமைச்சரின் பேரைச்சொல்லி அவருக்கு தண்டனை கொடுத்துப்பார்க்கட்டும். ஒரு வாரம் வேண்டாம் ஒரு நாள் அமைச்சரின் வீட்டில் கொடியை ஏற்றச்சொல்லி சொல்ல தீர்ப்பு வழங்கட்டுமே. ஏன் அவரின் பேரை சொன்னால் என்ன எது குறையும். ஏதாவது குறையலாம் வசதி, வாய்ப்புகள், பதவி உயர்வு……..
ஏதோ இந்த நீதிபதிமட்டுமல்ல நீதிமன்றங்கள் பலவழக்குகளை தானாக முன்வந்து எடுத்து தீர்ப்பு சொல்லுகிறது, கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் மக்களின் பிரச்சினைகள் எதும் நீதி மன்றங்களுக்கு புலப்படாமலேயே போய்விடுகின்றன. ஒருவேளை அவைகள் போட்டிருக்கும் கண்ணாடியின் ஆளும் வர்க்கசாயல் அப்பியிருக்கும்.
ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறர்கள், தாய்மார்கள், குழந்தைகள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள் ஒருதாஇன் வயிற்றை கிழித்த ஆட்லெறிகுண்டு அந்த சிசுவின் தலையை பிய்த்துப்போட்டது தெரியாதா நீதி மன்றமே உனக்கு.
இதை தானாக வழக்கு பதிவு செய்ய என்ன கேடு? ஆம் கேடு தான் தன்வர்க்கத்துக்கு தானே ஏதாவது கேடுண்டாக்கிக்கொள்ளுமா? என் இனமக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்திய அரசுதான் போரை நடத்துகிறது எனத்தெரிந்தும் அமைதியாய் கவிந்து படுத்துக்கொண்டு மானாட மயிலாட பார்க்கமுடியுமா? பார்க்கிறார்கள் பல சூடு சொரணை கெட்டவர்கள் அப்படித்தான் எல்லோரும் வாழவேண்டுமா? 
ஆம் அப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிறது நீதிமன்றம்.தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொல்லும் போது, அகதியெனக்கூறி அலைக்கழிக்கும்போது, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை இனமக்கள் பாதிக்கப்படும் போது, தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படு சுடுகாடு நோக்கி தள்ளபடும் போது மூடிகிடக்கும் நீதி மன்றம் வாயைத்திறக்கிறது “தேசியக்கொடியை ஏற்று இல்லை உள்ளயே கிட” அட போலீசுக்காரர்கள் உங்கள் மண்டையை பிளந்தபோது கூட நீதிபதிகளே இப்படி கடினமாக பேசவில்லையே.
அவ்வளவு தேசியத்தின் மீது பற்றா? தேசியத்தின் மீது இருக்கும் பற்றினை விட ஆளும் வர்க்கத்தின் மீது இருக்கும் பற்று அளவிடமுடியாதது. சென்னை நீதிமன்றத்தில் நுழைந்து கொலைவெறியாட்டம் போட்டவர்களுக்கு பூச்செண்டு அடிவாங்கியவர்களுக்கு அறிவுரை.
அடடா இதுக்கு பெயர் தான் நடு நிலைதவறாத சனநாயகமா? தான் செத்தாலும் தன் வர்க்கத்துக்கு சேவை செய்வதைத்தான் பெருமையாக திறமையாக கருதுகிறார்கள். அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?
எதுவய்யா கருத்து சுதந்திரம்? முதலாளிகள், ஆளும் வர்க்கபிரதிநிதிகளின் கருத்துக்கு வரவேற்பு, ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்கு வாய்ப்பூட்டு, நாளை அமெரிக்காவின் கொடியை எரித்தால் கூட கடுமையான சட்டம் கொண்டு தண்டிப்பார்கள். அதற்கும் பலவித காரணங்களை சொல்லி சப்பை கட்டுகட்டி வாயை அடைப்பார்கள்.
அவர்களின் தேவை ஆளும் வர்க்கத்தின் சேவைதானே தவிர மக்களுக்காக அல்ல. நாளை ஆளும்வர்க்கம் கொடியை பீத்துணி என அறிவித்தால் கூட அப்படியே துடைத்து விட்டு போவார்கள், பெயர்கள் தான் காவல்துறை, ராணுவம், நீதித்துறை……..
இதற்கு பெயர் தான் மாபெரும் இந்திய சனனாயகமாம் !!!!! நம்பாதவர்களுக்கு களி நிச்சயம் என்பது மட்டும் உண்மை.
குறிச்சொற்கள்: இந்தியம், சனநாயகத்தூண், தேசியம், நீதிபதி, மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும், மூவர்ணகொடி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
நவம்பர் 14, 2008 by kalagam
சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2
நேற்று முன்தினம் நடந்த சென்னை சட்டகல்லுரி மாணவர்கள் “மோதல்” தான் இரு ணாட்களாக பரபரப்பாக பேசப்படுகின்றது.தமிழகமெங்கும் சட்டகல்லுரி தேர்வுகள் ரத்து, காலவரையின்றி மூடல் .அக்கல்லூரியின் முதல்வர் இட நீக்கம்,போலீசார் சிலர் இடை மற்றும் பணி மாற்றம் என தமிழக அரசு அறிவிதாலும் ஓட்டு பொறுக்கிகள் வழக்கம் போல ஆதிக்க சாதி வெறிக்கு துதி பாடுகின்றன.சிலர் நினைக்கலாம் நடந்து
முடிந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புகிறர்கள் என்று.ஆனால் நேற்று தமிழகம் முழுவதும் தேவர் சாதி வெறியர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.மேலும்
தக்க பதிலடி கொடுக்கப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றார்கள்.வழக்கம் போல வைகோ,விஜயகாந்த்,சரத்,போன்றோர் அரசை பதவி விலக சொல்கின்றனர்.எதிரிகள் ஆரம்பிப்பதாலேயே நாமும் தொடங்கியிருக்கிறோம்.
மோதலின் வேர்கள்
இம்மோதலுக்கு காரணத்தை நாம் தோண்டியெடுக்க சில ஆண்டுகள் பின்னோக்கி
பார்க்க வேண்டும்.தென்,வடமாவட்டங்களில் நடந்த சாதி கலவரமே இதன் வேர்.கொடியங்குளம்,ஊஞ்சனை,மேவளவு,போன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட
மக்களி¢ன் பயமாய், கோபமாய், இன்னும் ஆறாமல் இருக்கின்றது.மீண்டுமொரு தாக்குதலுக்கு தருணம் பார்த்து ஆதிக்க சாதி வெறியர்களும் காத்து கொண்டிருக்கின்றார்கள்.பலரும் சொல்வதை போல் என்ன தான் “இருந்தாலும் அந்த
பையனை விட்டிருக்கலாம்”இவர்கள் விடாததற்கு காரணம் இருக்கின்றது.தன் ரத்த
சொந்தங்கள் எல்லாம் தூங்கும் போது கழுத்தறுப்பட்டும்,இதை விட இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாக கெஞ்சி கதறிய போதும் கொலை செய்யப்பட்டார்களே அது தான்
அந்த காரணம்.தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகளிரண்டாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன.1.தாழ்த்தப்பட்ட மானவர் விதி 2.மற்ற சாதி மாணவர்களின் விடுதி. தாழ்த்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலும் மிக ஏழை பிரிவை சேர்ந்தவர்கள்.
எப்படி மூத்திர மற்றும் சாக்கடை நாற்றத்தில் வாழ்ந்தார்களோ அதே நிலை துளியும்
மாறாது தாழ்த்தப்பட்ட மாணவர் விதிகளில் வாழ்கின்றனர்.இது முற்றிலும் உண்மை
ஒருமுறை தாழ்த்தப்பட்ட மாணவர் விதிக்கு சென்றிருந்தேன். அறைக்கு வெளியில்
சோறு இறைந்து கிடந்தது.ஒரு மாணவனிடம் இது குறித்து கேட்டேன்.அவர் பதிலேதும்
பேசாது ஒரு தட்டில் சோற்றை போட்டு தந்தார்.அப்போது தான் தெரிந்தது தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு சோறு தாழ்ந்த நிலையில் தான் படுகின்றது இந்த சமத்துவ அரசால் என்று.
தமிழகத்தில் எந்த கல்லூரியில் தான் சாதி பார்ப்பதில்லை ? ஒரு விடுதியில் (அ) கல்லூரியில்
சேர்ந்தவுடனே பேரை கேட்ட சில நிமிடத்திலேயே சாதிகேட்கபடுகிறதா இல்லையா?
இதற்கு இப்போ யாரு சாதி பார்க்குறா என்பவர்கள் கண்டிப்பாய் பதில் சொல்ல வேண்டும்.
நாங்க எல்லாம் பங்காளிங்க என்று கும்பலாக சுற்றுவது நடக்கிறதா இல்லையா? அரசு கல்லூரிகளில் தான் ஆதிக்கசாதி மானவர்களுக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மாணவர் களும் படிக்கின்றனர்.எல்லா கல்லூரிகளிலும் சாதி ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது.சென்னை மட்டுமல்ல் கோவை, நெல்லை,மதுரை,சேலம்,உள்ளிட்ட இடங்களில்
சட்ட கல்லூரியில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மோதல் தொடரதான் செய்கின்றது.மற்ற கல்லூரிகளில் அரசியல் பேச வாய்ப்பு இல்லலை என்றாலும் இவர்களுக்கு அரசியல் தான்
பாடமாக உள்ளது.சட்ட கல்லூரியில் படிக்கும் சுமார் 20% தவிர மீதி பலரும் அரசியல் அங்கீகாரத்துக்கோ, பிற் கால சாதி அரசியல் கட்சியில் சட்ட ஆலோசகர் பதவிக்காக
தான் சேர்கின்றனர்.வேறு எங்கேயும் விட இங்கு தான் சாதி பிரச்சனை உள்ளிட்ட எதுவும்
வெடிக்கும்.இது தான் நியதி.ஆதிக்க சாதியின் வாரிசுகளும் அடக்கப்பட்ட சாதியின்வாரிசுகளும் கல்லூரியில் சந்திக்கின்ற்¡ர்கள். தன் வீட்டு எடுப்ப்பு வேலை செய்த பசங்க என்ற எண்ணத்தில் சாதி வெறியர்கள் ஆதிக்கம் செய்கின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களின் வாரிசுசுகளோதன் பாட்டன் பூட்டன் அப்பன் வரை அடிமையாய் இருந்தது போதும் தானிருக்கவேண்டியதில்லை என எதிர்த்து போராடுகின்றான். ஆதிக்க சாதி வெறி யர்களடிக்கும்போது திருப்பி அடிக்கின்றனர்.இவர்களை சாதி வெறியர்களாக பார்க்கமுடியுமா?¢கண்டிப்பாய் முடியாது.ஒரு எடுத்துகாட்டு.ஒரு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது வேகமாய் ஒரு லாரி சர்ரென்று வருகின்றது.ஓட்டுனரின் அறிவால் அனைவரும் தப்பிக்கின்றனர்.பயணி ஒருவர் அந்த லாரி ஓட்டுனரை அடிக்கிறார்.இதை தவறு என சொல்லமுடியுமா ? ஏன் விபத்து நடந்த இடத்தில் உள்ள மக்கள் ஓட்டுனரை அடிப்பது வழக்கமானது தான்.-னியாமான கோபத்தை எப்படி வெளிபடுத்துவது?இங்கே முக்கிய விசயம் என்னவெனில் பத்திரிக்கைகள் சொல்வது போல தாக்கவந்தவர்கள் கட்டைகளோடும்,தாக்கபட்டவன் கையில் கத்தியோடும் வந்திருக்கின்றான்.அவனை அடித்ததற்கு பதில் எதுவெனில் மேற்கூறிய எடுத்துகாட்டு தான்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு சட்ட கல்லூரியில் நடந்தசம்பவம் இது .ஸ்காலர்ஷிப் வாங்க சென்ற தலித் மாணவர்களை பார்த்து ஒரு சாதிவெறியன் சொன்னான்” ஸ்காலர்ஷிப் வேண்டும்னா
வந்து…………………………………….. “. தலித் மாணவர்கள் இது குறித்து தந்த எந்த புகாருக்கும் இது நடவடிக்கை எடுக்கவில்லை. வன்முறை தான் தீர்வா என கூத்தாடும் பார்ப்பன கோட்சில்லாவே(அடிக்கடி வினவிலும்,ஒரெ ஒருமுறை கலகத்திலும் கெள்வி கேட்ட) பதில் சொல்.அந்த வெறியனை தலித் மாணவர்கள் மண்டையை பிளந்திருந்தால் கண்டிப்பாய் அதுவும் தலைப்பு செய்தியாய் மிளிந்திருக்கும்.
————————————————————————————————————————————————————-
சட்டகல்லுரி குறித்து வினவு எழுதியிந்தமைக்கு சிலர் இப்படிதான் மறு மொழிந்திருக்கின்றார்கள்.
“பாவபட்ட தேவர்கள் ஒன்று படுவோம்.”"இன்று முதல் சாதி வெறியனாகிவிட்டேன்”.இங்கு பாவப்பட்ட என்பதற்கு அர்த்தம் ” நம்ம ஊருல தொடுப்பு வேல செய்யரவனுங்க நாம அடிச்ச திருப்பி அடிக்கற அளவுக்கு ஆயிட்டாங்களா?.அவர்கள் இப்போது மாறவில்லை,எப்போதுமே அப்படிதான் இருந்திருக்கின்றார்கள்.
—————————————————————————————————————————————————————
எரிகின்ற தீயில் எண்ணை
எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுகின்ற வே¨ யைத்தான் இந்த அரசியல் கட்சிகளும் சாதிவெறியர்களும்
செஇகின்றன.¢ செயா எப்போதும் அறிக்கை விடும் ஜெயக்குமாரை விட்டு விட்டு பன்னீர் செல்வத்தை விட்டு சாதி வெறியை கக்குகின்றார்.சன் டிவியோ மனம் பகீனமானவர்கள் வீடியோவை பார்க்கவேண்டாம் என இரு நாட்களாக ஒளிபரப்பியது.இந்த ஊடகங்கள் தாழ்த்தபட்ட மக்கள்
மீதான வன்முறையை மறந்தும் கூட சொன்னது இல்லை.ஒரு நாளாவது வாயில் மலம் திணிக்கபட்ட
ராமசாமியின் பேட்டியை ஒளிபரப்பியிருக்குமா?.இந்த ஊடகங்கள் முதல் ஓட்டு பொறுக்கி அரசியல்வாதி,சாதிவெறியர்ளின் தேவையெல்லாம் ரத்தம்.ஒடுக்கப்பட்ட,உழைக்கின்ற மக்களின்
ரத்தம். ஆம் அதை குடித்தால் தான் அதிகாரம் கிட்டுமென்று பார்ப்பனீயமும் பாசிசமும் சொல்லிதந்திருக்கின்றது.
————————————————————————————————————————————————————-
” சாதி கேக்கறது பாவம் என உதார் விடும் R.S.S,இந்து முன்னணி காலிகள்
பதில் சொல்லட்டும்.இப்படி ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்கும் போது என்னசெய்ய வேண்டும் என்று.
நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் இது போல சம்பவங்கள் நடைபெறாது இருக்க
ஆதிக்க சாதிவெறியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும்.
ஆதிக்கசாதி வெறி கிளை வேர் எனில் பார்ப்பனீயம் தான் ஆணி வேர் அதை பிடுங்கி எறியாது
இது பெரியார் பிறந்த மண் எனச் சொல்லி கொள்வதில் பலன் இல்லை.
குறிச்சொற்கள்: சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
நவம்பர் 18, 2008 by kalagam
வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் வருங்கால சூப்பர் ஸ்டாருமான (பத்திரிக்கை சொன்னபிறகு ) ஏற்கனவே அறிவித்தபடி அவர் சென்னையிலும் அவரது ரசிகர்கள் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களிலும் உண்ணாவிரத போரட்டத்தை நடத்தி முடித்து இருக்கின்றார்.அவ்விழா மேடையில் மற்ற நடிகர்களும்,இயக்குனர்களும், புகழ்ந்து பேசி தள்ளினர்.
அம்மா அப்பா மனைவி யோடு சோகமே உருவெக்க மேடையில் அமர்ந்திருந்தார்.
நடிகர் விஜய்.(ஒரு வேளை வில்லு படம் குருவி மாதிரி ஊத்திக்கும் என நினைச்சாரோ என்னவோ ).
மற்ற நடிகர்கள் ஏற்கனவே ஒரு சுற்று முடிதிருக்க இவரி ந்த போராட்டமும் ஈழத்தமிழர்களுக்காகத்தான் நம்புங்கள்.அதுவும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்காகத்தான் .ஏனெனில் அவர்கள் தான் திரையுலகின் கழிசடை படங்களை அமெரிக்காவிலும்,ஜெர்மனியிலும் 100 நாட்கள் ஓட்டினார்கள்.உள் நாட்டில் படம் ஓடினால் எவ்வளவு கிடைக்குமோ அதை விட இன்னும் அதிகமாக வெளி நாட்டில் வெளியிடப்படுவதால் தயாரிப்பாளருக்கும் கடல் க.டந்த ரசிகர் கூட்டம் நடிகனுக்கும் கிடைக்கின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் “வெளி” வந்த சர்வே ஒன்று ரஜினியை விட விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவரும் தனது ரசிகர்களை மற்ற எவரையும் விட மிக வேகமாக முறை படுத்தியும் வருகிறார்.வருங்கால முதல்வருக்கான ரேசில் விஜயும் களத்தில் இறங்கிவிட்டார். ஒருவனை பழிவாங்க வேண்டுமா இறங்குடா களத்தில் என தேர்தலுக்கு வருகிறார்கள்.இந்த கோமாளி சனநாயகத்தை வெளிக்காட்;டுகின்றனர்.உதாரணத்திற்கு சமீபத்த்¢ வடிவேலு-விஜய்காந்த் மோதலின் போது வடிவேலு சொன்னார்” நீ எங்க நின்னாலும் எதிரா நான் நிப்பேன்”. இப்படி வருபவன் போறவனெல்லாம் தேர்தல்,அரசியல் முறைக்கு வர யார் காரணம்? அதன் துரோக வரலாறு நெடியது. போலி கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது.திமுக விலிருந்து பிரிந்த MGR புது கட்சி ஆரம்பித்தார்.அந்த MGR இப்படி கழிசடைகளுக்கெல்லாம்
ஒரு symbol ஆக மாறினார் எனப்பார்த்தால் அதற்கு இந்த இரு போலிகளுமே காரணம்.கல்யாணசுந்தரம் என்ற “மாமா”
தான் திறம்பட செஇது முடித்துவிட்டார்.தனது நூலில் இதனை மிக விரிவாக எழுதியிருக்கிறார்.கம்யூனிஸ்டு எனில் புரட்சி செய்யவேண்டும்(அ)திட்டமாவது வேண்டும்.கட்சி திட்டத்தையே தரகுக்காக இரு போலிகளுமே வைத்திருக்கின்றார்கள்.¦அண்ணா, கலைஞர் பேச்சுக்காவது கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்தனர்.MGRக்கு இது எதுவும் கிடையாது.கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்ததே பார்பனீயத்துக்கும் அவர் தம் பத்திரிக்கைகளுக்கும் பெரும் ஆபத்தை உண்டு பண்ணின.திமுக விலிருந்து பிரிந்தவுடனே ஒரு மாற்று சக்தியாக MGR ஐ முன்னிருத்தின.அதற்கு திறம் பட அரசியல் முலாம் பூசி வெளியே கொணர்ந்தவர்கள் தான் இந்.த போலிகள். அதன் விளைவாகத்தான் MGR ஐ தொடங்கி செயா வரை தமிழகத்தில் பொற்காலம் ஏற்பட்டது. அதற்காக தமிழ் கூறும் நல்லுலகு போலிகளுக்கு கடமைபட்டிருக்கும்.மீண்டும் MGRக்காக தேடி கடைசியாய் ரஜினியை பிடித்து கொள்கையாவது புடலங்காயாவது ரஜினி நல்ல மனிதர் என சர்டிபிகேட்கொடுத்தார்கள்.அவரோ வரலாமா வேண்டாமா என ஜோசியம் 15 ஆண்டாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்.எவ்வளவு காலம் தான் காத்திருப்பது என தான் தொங்குவதற்கு புது முதுகினை CPM விஜய்காந்த் மூலம் தேடிக்கொண்டிருக்க CPI விஜய்க்கு ரிசர்வ் செய்திருக்கின்றது.
இனி உண்னாவிரத பந்தலுக்கு வருவோம்.
நடிகர் விஜய் மேடையில் யார் கூப்பிட்டாலும்” போகும்” நெடு மாறனோடு அமர்ந்திருக்க ஒரிஜி¢னல் காம்ரேடுகளான C.P.I -ன் தா.பாண்டியன் தன் சகபாடிகளுடன் வந்தார்.நடிகர் விஜய்க்கு பாண்டியன் பாராட்டு தெரிவித்ததும் இங்கு இரு வகையான மன மாற்றங்கள் நடந்தன.1.நடிகன் காம்ரேடாக மாறியது.2.”காம்ரேடு” ரசிகனாக மாறியது.தங்களால் எந்த நாயையும் முதல்வராக்க முடியுமென நிருபித்தவர்கள் போலிகள்.
அப்படி பாரட்டும்,வாழ்த்தும் தெரிவிக்கவில்லை யெனில் என்ன நடந்திருக்கும் இந்திய கம்யூனிச கட்சி புரட்சியை செய்யத் தவறிய பாரிய காரணங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.இனி தா. பாண்டியனை பாண்டி என்றே அழைப்போம்.அப்புடி கூப்பிட்டாத்தான் மச்சிகளுக்கு (ரசிகர்களுக்கு) பிடிக்கும்..தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி 10 அடி பாயும் என்பது போல பாண்டியை விட சக “காம்ஸ்கள்” போட்டோவுக்கு போஸ் கொடுத்தன. நிகழ்ச்சியை முடித்து வைத்து வாழ்த்திப்பேசிய பாண்டி புரட்சியின் தலைவர் விஜய் தான் என்று ரகசியமாய் கோடிட்டு காட்டினார்.ஆதி டைப்பில் எச்சரிக்கையும் விடுத்தார்” ஒன்று போர் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் இந்த அரசு தேவைதானா என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.இது வரை வாய் திறக்காத மத்திய அரசை வாய் திறக்க வைக்கும் மாபெரும் போராட்டத்தை நாளை அறிவிப்போம்.” அய்யா ரொம்ப சிரமப்படாதீங்க புரட்சி தலைவர் விஜய்யின் ஜிகு ஜிகு ஜிகு பாட்டை போட்டாய் வாய் மட்டுமல்ல அனைத்தையும் திறந்து போட்டுக்கொண்டு பார்ப்பார்கள் உங்கள் “காம்ரேடுகள்” உட்பட.
தியாகு தனது பத்திரிக்கையில் பின் வரும் தொனியிலெழுதினார்”இப்பிரச்சினையில் CPI காட்டி வரும் ஆர்வம் பாராட்டுக்குரியது”. ஆர்வம் முத்தி போய் விஜயோடு டேன்ஸ் ஆடி பிறகு “ஒன் இஞ்ச் டூ இஞ்ச் கேப் காட்டிடவா” நடிகையின் இடைகளை அளந்து கொண்டு இருந்தாலும் வியப்பேதும் இல்லை. புரட்சிக்கான வேலைகளை செய்து விட்டு காத்திருக்கும் CPI க்கு இன்னும் நிறைய ஆனந்த தகவல்கள் காத்திருக்கின்றன.அவர்கள் கட்சியில் சிறு
சிறு மாற்றங்கள் செய்தாலே போதும், விஜய் கட்சியின் தேசிய த்லைவராக மாறி ஒரே நாளில் புரட்சியை சாதித்து விடுவார்.காம்ரேடுகள் கண்களில் அனந்தகண்ணீர் தான் வரும்.மாற்றங்கள் அதிகமில்லை கொஞ்சம் தான்.காரல் மாக்ஸ்,எங்கெல்ஸ்,லெனின் போட்டோவை எடுத்து விட்டு பாண்டி,விஜய் போட்டோவை வைப்பது,செங்கொடியை தூக்கிவிட்டு புதிய மன்ற கொடியை தன் கம்பங்களில் பறக்கவிடுவது,ஏதோ ஒண்ணு இடிக்குதே AIYF போர்டுகளில் உள்ள பகத் சிங் படத்தை நீக்கிட்டு புது புது மாடல் விஜய்
படத்தை வைக்கலாம்.”வாடி வாடி கை படாத” சிடிபோன்ற புரட்சிகர வசனங்களை மேலே வாசகம் எழுதலாம்.அறிஞர் அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மாதிரி பாண்டிக்கு விஜயயை
இதய ஆத்மாவாக்கலாம்.பேரு மட்டும் எதுக்கு VIJAYIST PARTY OF INDIA மாற்றி விட்டா போதும்.புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்சி தானே மலர்ந்திடும்.
மன்மோகனை புடிச்சு தொங்குன தொங்குல டர்பன் எல்லாம் அவ்ந்து போச்சு.கேரளாவில் மம்மூட்டி,ஆந்திராவில் சிரன்சீவி, தமிழகத்தில் விஜயகாந்த்,CPM முன்னேறிய பின்னும் தாய் கட்சி லேட்டாக இப்பத்தான் விஜயை பிடித்திருக்கின்றார்கள்.இனி மேல் இன்குலாப் தேவை இல்லை .கொடியை ஏற்றி “தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொழுத்து ‘. என்றால் போதும் புரட்சி அப்படியே பொங்கி வழியும் பீர் வழிவது போல.
நமக்கு முன் உள்ள ஒரே கேள்வி இனியும் போலி கம்யூனிச கட்சியில் இருக்கும் “புரட்சிகர “அணிகளை எவ்வாறு அழைப்பது ? ரசிகர்களே என்றா தோழர்களே என்றா?
குறிச்சொற்கள்: ஒரு காம்ரேடு, வாடா வாடா வாடா தோழா
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 9 மறுமொழிகள் »
நவம்பர் 19, 2008 by kalagam
B.P.O. அடிமை. co.in
வெளியே போய் விட்டு வந்த களைப்பில் சாப்பிடக்கூட முடியவில்லை.உடம்பெல்லாம் ஒரே அடித்து போட்ட மாதிரி இருந்தது..பஸ் ஸ்டாப் லிருந்து ரூமிற்கு தத்தி தத்தி நடை போட்டேன்.கதவை திறந்து ஷ¤ வை கழட்டிவிட்டு முகம் கூட கழுவவில்லை அப்படியே ஒரு வாரமாக பெருக்காமலிருந்த அறையில் குப்பையோடு குப்பையாய் படுத்தேன். நல்ல தூக்கம். செல் போன் சத்தம் தூக்கத்தை கலைத்தது.ஆன் செய்வதற்குள் ரிங் நின்று விட்டது.மொத்தம் 5 மிஸ்டு கால்கள்.ஒன்று வீட்டிலிருந்து
மற்ற நான்கும் சரவணனனிடமிருந்து .சரவணன் ஏர் டெல்லில் FM ஆக இருக்கிறார்.அதற்கு என்னவோ அவர் விளக்கம் சொன்னாலும் நாங்கள் fraud manager என்று தான் சொல்லுவோம். நானும் சரவணனும் அண்ணாமலையில் பி.எஸ்.சி படித்து கொண்டிருக்கின்றோம். தினமும் இரவு அடிக்கடி போன் பேசுவோம்.கடந்த சில வாரமாக அவரும் போன் செய்யவில்லை.வேலைப்பளு காரணமாக நானும் போன் செய்யவில்லை.அப்படியெ வீட்டிற்கு பேசினாலும் பஸ்-ல் போகும் போது தான் பேச வேண்டும். அலுவலகத்தில் போன் பேச அனுமதியில்லை.யோசித்துக்கொண்டிருக்கும் போதே மீண்டு சரவணன் போன் ஆன் செஇதேன்.வணக்கங்க நல்லாயிருகீங்களா என ஆரம்பித்து சுமார் 20 நிமிடங்கள் பேசியிருப்போம். நாளை காலை கிண்டி ரயில்வே ஸ்டேசனில் 8.30-8.45 க்குள் சந்திப்பதென முடிவானது.மீண்டும் தூங்க முயற்சித்தேன் பசி வயிற்றை கிள்ளியது.லுங்கியை மாற்றி விட்டு ஹோட்டலுக்கு போனேன்.எப்போதும் சாப்பிடும் கையேந்தி பவனில் பாத்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தார்கள்.இந்த ஏரியாவில் எல்லா இடத்திலும் விலை ரொம்ப அதிகம்.இங்கு தான் விலை குறைவு. பாக்கெட்டை தடவினேன் 90 ரூபாய் இருந்தது. இன்னைக்கு 3-ம் தேதி 7-ம் தேதி தான் சம்பளம்.தெரிந்த எல்லார்கிட்டேயும் கையை நீட்டியாச்சு.யோசித்தேன் ரெண்டு வாழைப்பழங்களை தின்று விட்டு படுத்தேன்.பசி அடங்கவில்லை.தண்ணீர் கேனும் தீர்ந்து விட்டது.அதற்கு வேற முப்பது ரூபா தரவேண்டும். கவிழ்ந்து படுத்தேன்.
செல்லில் அலாரம் அடித்து மணி 6 என்றது.கண்ணெல்லாம் தகதக வென எரிந்தது. பத்து நிமிசம் என்றவாறே மீண்டு படுத்தேன். ஏதோ திடீரென எழுந்தேன். மணியோ 7.30 தலையிலடித்துக்கொண்டே எழுந்து ஓடினேன்.குளித்தால் கண்டிப்பாய் நேரமாகும்.மகத்தை கழுவிக்கொண்டு முந்தா நாள் போட்ட டிரஸ் மாட்டிக்கொண்டு கிளம்பினேன் அவசராவசரமாக. நான் படுத்துகிடந்தனிடத்தில் பாயும்,போர்வையும் சுருண்டு கிடந்தன.ரெண்டு வாரமாக இப்படித்தான் சுருண்டு கிடக்கிம்றன.அவைகள் என்ன செய்யும் B.P.O -ல் வேலை செய்யும் என்னை போன்ற பிச்சைகாரனுக்கு வாழ்க்கை பட்டதால் குப்பையோடு குப்பையாக இருக்கின்றன்.
பஸ் ஸ்டாப்-ல் நின்றேன்.மணி இங்கேயே 8.00 மேலும் 15 நிமிடங்கள் நின்றேன்.இன்னேரத்தில் 4 ஷேர் ஆட்டோக்களும்,2 வெள்ளை பரதேசியும்(அதாங்க DELUXE) மேலும் 5 நிமிடம் போனது.இனியும் காத்திருந்தால் கட்டாது.ஒரு வெள்ளையில் ஏறினேன்.டிக்கெட் வாங்காம இருக்கலாமா? யோசிப்பதற்குள் நடத்துனர் வந்தார்.50 ரூபாயை நீட்டினேன்.எல்லாரும் 50,100ன்னு கொடுத்தா எஙக போறது என கத்த பதிலுக்கு நானும் கத்தினேன்.என்ன் செய்வது.அவர் அரசிடம் பணிபுரியும் அடிமை. நான் வெள்ளைக்காரனுக்கு சேவகம் புரியும் அடிமை. நேற்று ஒரு நடத்துனரிடம் பேசியது ஞாபகம் வந்தது.” எங்களுக்கெல்லாம் 8 மணி நேர டியூட்டி இல்லை.இதனை தடவை ஒட்டணும்.தினமும் 2 மணி 1மணிக்குதான் வீட்டுக்கு போறாம்”.மீண்டும் நடத்துனர் ஒரு பயணியை திட்டிக்கொண்டு வந்தார்.என்ன செய்வது நாங்கள் அடிமைகள் எங்களின் வேலை பளுவை ஏமாந்தவனிடம் தானே காட்ட முடியும். நல்ல டிராபிக் என் காதில் சங்கூதுவது போல இருந்தது.சூளை மேட்டில் இறங்கி ஒடினேன் தாம்பரம் ரயிலில் செம கூட்டம் கூட்டத்தோடு நானும் ஐக்கியமானேன்.மணி 8.40 சரவணன் வேற காத்திருப்பார்.
நானும் சரவணனும் சுமார் டிப்ளமோ படித்து 7 வருடம் கழித்து தான் பி.எஸ்.சி. சேர்ந்திருந்தோம். ரெண்டு பேருக்கும் அலுவலகத்தில் டிகிரி மேல் பதவி உயர்வுக்கு தேவைபட்டது,சரவணன் குரோம் பேட்டையிலிருக்கிறார்..அங்கிருந்து டிரெயின் பின் பஸ்-ல் சாந்தோம் போக வேண்டும்.சரவணனிடமிருந்து போன் 5 நிமிடத்தில வரங்க பொய் சொல்லிவிட்டு .15 நிமிடத்தில் கிண்டியிலிறங்கினேன்.அதிகம் தேடவில்லை டிக்கெட் கவுண்டர் அருகில் நின்றிருந்தார். நான் கேட்டேன் “என்னங்க உடம்பு இளைச்சுடுச்சு, வேலையிலெ பெண்டு நிமித்தறாங்க.ஆமா பைனல் இயர்க்கு இன்னும் கிளாஸ் ஆரம்பிக்கவேயில்லை.போன் பண்ணி கேட்டாலும் அடுத்த வாரம் வாரம் கத வுடறானுங்க.போன வருசமே பரிட்சாஇக்கும் பத்து நாள் முந்தி தானே பரதேசி நாய்ங்க கொடுத்தாங்க” ” பணம் கட்டலைன்னா” முடிப்பதற்குள் ரயிலின் சத்தம் கேட்டது . அவ்ர் பஸ்க்காக பறந்தார்.ரயில் வந்தது.. நான் ஏறிய கேபினில் 10 பேர் தான் இருந்தார்கள் . பக்கதில் பேபரை கடன் வாங்கி அதி பார்வயை செலுத்தினேன். மனமோ பணத்துக்காக ஏங்கியது.மீதி 70 ரூ இருக்கு .அப்பட சீசன் டிக்கெட் 7-தேதி வரை இருக்கு..கணக்கு முடியவில்லை .அதற்குள் நானிறங்க வேண்ட்ய இடம் வந்தது.மணி 9.54. 10 மணிக்கு அலுவலகம் ஓடினேன் யாரு என்னை பார்க்கவில்லை.அவர்களும் ஓடிகொண்டுதானிருக்கிறார்கள் .
செக்யூரிடியிடம் செல்லை சைலண்ட்-ல் வைத்து விட்டு ஒப்படைத்தேன். டோக்கனை மிக கவனமாக உள்ளே வைத்தேன்.ஏற்கனவே டோக்கனை தொலைத்ததற்காக எத்தனை நாய்களிடம் பேச்சு வாங்க வேண்டியிருந்தது. என்ன்மோ இழக்ககூடாததை இழந்தது போல கேள்வி கேட்டார்கள்.கழுத்தில் சங்கிலியை மாட்டிகொண்டு ( ID CARD) ஸ்வைப்பிங் மிசினில் காட்டினேன் . சிவப்பு விளக்கையே காட்டியது.. இந்த சனியன் இப்படித்தான் பத்து முறை காட்டினாதான் பச்சை விளக்கை காட்டும்.இப்படி இருந்தே மாசத்தில் 7 நாள் வரவில்லை என்று கணக்கு காட்டும்..
போரடி கிரீன் வாங்கி உள்ளே போனேன்.எங்கள் அலுவலகத்தில் என் டீம் மிகச் சிறியது மொத்த்ம் 5 பேர் தான்.நான் சேரும் போது 500 பேர் இருந்தார்கள் . இப்போது மொத்தம் 100 தான்.போன 3 மாசதில் அமெரிக்கா புண்ணியத்தில் 400 பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இன்றும் நான் தான் முதல் ஆள்.பக்கத்து டீம் லீடர் முறைத்தார்.பெருமிதமாக சேரில் உட்கார்ந்தேன்.சக டீம் ஊழியர்கள் வரிசையை வழக்கம் போல பஸ் கிடைக்க லேட். என்றார்கள்..எங்கள் டீம் லீடர் 1 என்ன 3 மணி நேரம் கூட லேட்டாய் வருவார்.யாரும் கேட்க முடியாது. காரணத்தை விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.இரவு ஷிப்ட் முடிந்து பகல் ஷிப்ட் வரும் போது இயல்பாக பகலில் வேலை செஇது இரவில் தூங்குவதால் ரொம்ப பகல் ஷிப்டை எதிர்பார்போம்.அவர்கள் தேவைக்கு எற்ற படி நாங்கள் இரவு ஷிப்ட்-ல் இருக்கவைக்கப்படு வோம். நாங்கள் இன்னாட்டுக்காகவா உழைக்கிறோம்.
அமெரிக்கனுக்கு உழைக்கும் போது அவன் முழிக்கும் போது நாங்களும் முழிக்க வேண்டியிருந்தது, உண்மையை சொன்னால் அமெரிக்க வணிகர்கள் எங்களை மனிதராக கூட மதிப்பதில்லை.ஒரு ஜாப் செய்யச்சொல்வார்கள் சிலர் சரியான தகவல்கள் தரமாட்டார்கள்.கேட்டால் இது கூடவா புரியாது என்பார்கள். நாங்களாவது பரவாயில்லை கால் செண்டரில் வேலை செஇவோருக்கு இங்கிலீசில் “ஆயா,அம்மா” என எத்து விழாத குறை தான்.
காலையில் வேலை ஒன்றும் இல்லை இங்கு மாலை 6 மணி தான் அமெரிக்காவில் காலை 9 மணி .சனிக்கிழ்மை செய்யாமல் விட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தோம். A\Cமிக அதிகமாக இருந்தது. மெக்கானிக் அளவு குறைக்ககூடாது இது HR ஆர்டர் என்றார். என் டீம் நபருக்கு காயிச்சல் அதிகமாகிக்கொண்டே போனதுHR இடம் சொன்னோம்.அவர் “மெக்கானிக்க வர்ச்சொல்லுங்க ” A\C ரூம் டெம்ப்க்கு ஈக்வலா வையுங்க ” அப்படி தான் மேடம் இருக்கு”.எங்களிடம் திரும்பி சொன்னார்”ரூம் டெம்ப்க்கு கீழ குறைக்கமுடியாது கம்ப்யூட்டர் ஹேங் ஆயிடும்”.
கம்ப்யூட்டரை பற்றி ஒரு வெங்காயமும் தெரியாத HR கேட்டு நான் கடுப்பாகிபோனேன்.வேகமாக வேலை செய்ய A\Cயை விட பிராசசர் தான் முக்கியம். வெப்பத்தில் தான் கம்ப்யூட்டர் வேலை செய்யும் எனில் எங்களை அடுப்பில் கூட உட்கார வைப்பார்கள் நாய்கள். வேலை செய்யாதவனுக்கு அதிக சம்பளமும், வேலை செஇகிறவனுக்கு குறைவான சம்பளமும் தருவார்கள் . இது தான் B.P.O.-n நியதி மணி 6.30 பிரேக்கிற்கு போன டீம் லீடர் வரவில்லை.எங்களுக்கு தலா 15 நிமிடம் டீம் லீடர் அப்படி யில்லை போனால் 2 மணி நேரம்.எங்களுடைய work ஐ பார்த்து அவர் தான் ok செய்ய வேண்டும்.clients corrections என உயிரை எடுக்க அதற்கு சரியான விளக்கம் தராது டீம் லீடர் உயிரை எடுப்பார்.கடைசியாஇ 8 மணிக்குவந்தார்.சொல்லிவிட்டு கிளம்பினேன் செல்லை வாங்கி பார்த்தால் 4 மிஸ்டு கால்.ரயில்வே ஸ்டேசனுக்கு ஓட்டமும் நடயுமாஇ அல்ல சோர்ந்து போய் மெதுவாய் நடந்தேன்.ரயில் வந்தவுடன் அதில் உட்கார்ந்தவுடன் அப்பா போன் செய்தார். “ஏண்ட போன் பண்ணினா திருப்பி செய்ய மாட்டியா ?”" இல்லப்ப இப்பத்தான் வெலையை விட்டு வந்தேன் என்ற பொய்யை சொன்னேன்.காசில்லை என சொல்லவில்லை.
ரொம்ப அவமானமாக இருந்தது போன் செய்ய இருந்தது.மதியம் சாப்பாட்டுக்கு 25, டீக்கு 10 என மொத்தம் 35 ரூ காலியாகியிருக்க மீதி 25 இருந்தது.முதலாய் வேலைக்கு சேரும் போது பல பேர் போல நானும் கனவில் மிதந்தேன்” நல்ல பெரிய கம்பெனி,எவ்வளவு செலவு செய்தாலும் 5000 மாவது சேமிக்கலாம்.கம்ப்யூட்ட்ர், பைக் என. நம்மை கனவு காண சொன்ன அப்துல் கலாம்கள் தான் ஏகாதிபத்திய கைகூலிகள் என்று.ஒரு வழியில் பணத்தை கொடுத்து பலவழிகளில் பிடுஙி கொள்கிறார்கள்.தினம் உணவுக்கு,போக்குவரத்து,வீட்டு வாடகை என எங்கள் பணம் ப்றிக்கப்பட்டு கொண்டே வருகிறது..மீண்டும் அதே வெள்ளை பரதேசியில் ஏறினேன்.”யார் கேட்டாங்க இவனுங்களை இந்த பஸ்.சாதா பஸ் ஐ எல்லாம் தூக்கிட்டு
டீலக்ஸ் ஆக்கிட்டாங்க ” அறைக்கு வரும் போதே ரெண்டு பரோட்டாவைவாங்கி கொண்டு வந்தேன். வாட்சை கழட்டிவைத்தேன் மணி 9.30.வீட்டுக்காரம்மா வந்தார் “அடுத்த மாசத்தில இருந்து 1000 ரூபா அதிகமாமா” பிறகு அவர் என்ன பேசினார் என தெரியவில்லை. புரோட்டாவை பிரிக்காமல் முறைத்து பார்த்தேன்.இப்பவே ஆளுக்கு 1800ரூபா.வேற இடத்துல போனா 10 மாசம் அட்வான்ஸ் கேப்பானுங்களே”
நினைக்கும் போதே தலை சுற்றியது.ஒரு உண்மை மட்டும் புலப்பட்டது இந்த IT BPO-ன் நோக்கம் இந்தியாவை வல்லரசாக்கி எங்களை பிச்சைக்காரராக்குவதற்கானதென்று.
குறிச்சொற்கள்: அடிமை, B.P.O. அடிமை
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 மறுமொழிகள் »
நவம்பர் 20, 2008 by kalagam
இந்திரா-பாசிசத்தாய்
நேற்று அன்னை இந்திரா காந்தியின் 92 வது பிறந்த நாளை காங்கிரசார் வழக்கம் போல செட் செட்டாக கொண்டாடினர்.இன்றைய தலைமுறை பலருக்கு அன்னையை பற்றி சரியாகத் தெரியாது. சொல்லித்தந்ததெல்லாம் முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. நமக்கும் கொஞ்சம் அந்தத்தாயின் புகழ் பாட ஆசை தான்.அந்தத்தாயின் புகழினைப்பாட கொல்லப்பட்ட சீக்கியர்களின் கதறல்களும், வித்வையாக்கப்பட்ட மகனை இழந்த தாய்களின் ஒப்பரிகளும் கேட்டுக்கொண்டிருக்கும். நாம் காதுகளில் பஞ்சினை வைத்து அடைத்துக்கொள்வோம்.பிறகு மீண்டு புகழினை பாடுவோம்” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “
நவம்பர் 17 1917-ல் இந்திரா ப்ரியதர்சினி காந்தி மாபெரும் மாப்பிள்ளை நேரு மாமாவுக்கு பெண்ணாகப் பிறந்தார். பெண்கள் வீட்டிலே இருக்க வேண்டுமென்ற பார்ப்பன குடும்பத்தில் பிறந்து லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் படித்தார். அப்பன் இந்திய விடுத்லைக்கு போராடினார்.மகளை
தன் நாட்டை அடிமையாக்கிய லண்டனில் படிக்க வைத்தாரெனில் அந்த தாய் நாட்டுப்பற்றை நாம் பாராட்டித்தானாக வேண்டும்.1941-ல் படித்து கிழித்து விட்டு இந்திய விடுதலையை கொண்டு செல்வதில் நேரு காந்திக்கும் லடாய் இருந்த சமயத்தில் நேருவுக்கு தோள் கொடுக்க வந்தார்.இந்திய மேலாதிக்க கனவில் சீனாவை பிடிக்கும் கனவில் சீன செம்படை மண்னை அள்ளிப்போட்டது.அந்த கவலையில் மண்டையை போட்டார்.பிறகு காமராசர் லால் பகதூர்-ஐ பிரதமராக்கினார்.அவரும் செத்துப்போக. காமராசர் இந்திராவை பிரதமராக்கினார்.அவருக்கு சாகும் தரு வாயில் தான் உணர்ந்திருப்பார். தாம் தேர்தெடுத்துஇ¢ருப்பது பெண் சாதாரண பெண் இல்லை .இநாட்டிற்கே தாய் அதுவும் பாசிசத்தை திறம் பட பேணி வளர்த்த தாய் என்று.
1966-ல் முதல் பெண் பிரதமர் என பேரெடுத்த இந்திரா சில ஆண்டுகளிலேயே தன் பாசிச முகத்தை காட்ட ஆரம்பித்தார்.அவருடைய முதல் ஆட்சி காலத்தில் ரூபாயின் ,மதிப்பு சரிந்தது.1980-ல் இந்திய ரூபாயின் மதிப்பு 40 சதம்சரிந்தது. சர்வாதிகாரமென்றால் என்னவென்று மக்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார்.அரசு உறுப்புக்கள் அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவருக்கு கீழ் படியாத அரசுகள் உடனே கலைக்கப்பட்டது.எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்தியாவின் மாபெரும் சர்வாதிகாரியாக மாறினார்.செத்து போன அப்பனின் ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றினார்..பாகிஸ்தானோடு போர் புரிந்து தேச வெறியை கிளப்பி தன் சர்வாதிகாரத்தை திசை திருப்பினார்.இந்திய மேலாதிக்க போக்கினை வளர்தெடுத்து பங்களாதேசினை உருவாக்கி தான் தான் ரவுடியென நிரூபித்தார்.ஆட்சியை இழந்து மன்றாடினார்.மீண்டும் தான் செய்த தவறுக்காக மெரீனா கடற்கரையில் மன்னிப்பு கேட்டு அழுதார். முன்பு தன் ஆட்சியை கலைத்த இந்திராவை கருணாநிதி பேய் என்றவர் தற்போது இந்திராவின் மகளே வா நிலையான ஆட்சியை தாவென முழங்கினார் . மீண்டும் அரியசானை கீழ் வர முன்னை காட்டிலும் பல அரசுகள் தீவிரமாய் கலைக்கப்பட்டன.தேசிய இனபோராட்டத்தை அழித்தொழித்தார்.
அதில் முக்கியமானது “புளு ஸ்டார்” தேசிய இன போராட்டம் பஞ்சாபில் அதிகமாய் பீறிட்டு கிளம்பியது.அதனை அடக்க வந்ததாய் கூறிகொண்டு ராணுவம் போலீசு ஆகியவை மக்களின் அடிப்படை உரிமயை கூட பறித்தன.பலர் சீக்கியர்கள் என்பதாலேயே கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டனர்.இன்னும் அதிகமாய் இனப்போராட்ட்ம் தீயாய் பற்றியது.பல சீக்கியர்கள் சீக்கியன் என்ற ஒரு காரணத்தாலே கொல்லப்பட்டனர், இதன் விளைவாக பாகிஸ்தானுக்குக்கெதிராக இந்திரா உருவாக்கிய பிந்த்ரன் வாலே தற்போது இந்தியாவுக்கு எதிராக திரும்பினார். தன்னுடைய மேலாதிக்க கனவுக்காக ஈழத்தில் விடுதலைபுலிகள்,வங்கத்தில், பாகிஸ்தான் பஞ்சாப்-ல் பிந்த்ரன் வாலெ என பலரையும் உருவாக்கி அந்நாடுகளை தனக்கு அடிபணிய நிர்பந்தம் கொடுத்தார். இறுதியில் அது அவருக்கே வினையாய் முடிந்தது . பிந்த்ரன் வாலே இனப்பிரச்சனையை பயன் படுத்தி முன்னுக்குக்கு வந்தார்.பார்ப்பன,இந்துக்களுக்கு இக்கலவரம் பெரும் அச்சுறுத்த்லை தந்ததுதனது.பார்ப்பனீயத்துக்கு ஆபத்து என்றவுடன் இறுதிகட்ட தாக்குதலை தொடுக்க முனைந்து “புளு ஸ்டார்” -ல் இறங்கினார். அக் 3 – அக் 6 1983 வரை பொற்கோயில் முற்றுகையிடப்பட்டது.அப்போது சென்ற ராணுவம் 1990-ல் தான் விலக்கி கொள்ளப்பட்டது. கணக்கிலடங்காதோர் சிக்கியர்கள் கொல்லப்பட்டனர்.பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரும் இதில் அடக்கம். 3 நாட்கள் கழித்து கோயிலின் கதவை திறந்த போது உள்ளேயிருந்தவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பபட்ட விசயம் தெரிய வந்தது துப்பாக்கி ரவைகள் வழியே.
1984 -ல் சீக்கிய மெய்காப்பாளரால் இந்திராவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.கண்ணில் பட்டவருக்கெல்லாம் ஆப்ரேசன் செய்து கொண்டிருந்த சஞ்சய் “இறந்த” பிறகு இனாட்டை காக்கும் பொறுப்பு இளந்தலைவர் ராஜீவுக்கு வந்தது.ராஜீவின் தலைமையில் இந்தியா முழுவதிலும் மாபெரும் சீக்கியர்களு,கெதிரான கலவரம் பரப்பப்பட்டது.ராஜீவின் அல்லக்கைகள் ஜகதீஸ் டைட்லர் உள்ளிட்டவர்கள் அதை செய்து முடித்தார்கள்.தலை நகர் டெல்லியில் அப்பாவி சீக்கியர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள்.அதற்கு ராஜீவ் மவுனமாய் பதில் தந்தார்” ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் வரத்தானே செய்யும்”
நாமும் இந்திராவின் பிறந்த நாள் , இறந்த நாள்களை நினைவு கூர்வோம் ராஜீவ் எம்ஜிஆர் செயா போன்ற பாசிச படிமானங்களை பெற்ற பாசிச தாயை புகழ்வதற்காக அல்ல.
பஞ்சாபில் கொல்லப்பட்ட மகனுக்காக கதறிக்கொண்டு இருக்கின்றாரே அந்தத்தாய்க்காக!
——————————————————————————————————————————————————————————————————
.
குறிச்சொற்கள்: இந்திரா, பாசிசத்தாய்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
நவம்பர் 23, 2008 by kalagam
B.P.0.அடிமை.C0M- பகுதி 2
அடிமைத்தனமே சுவாசமாய்
வழக்கம் போல அலுவலகத்துக்கு ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தேன்.என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார்.”நீங்க எங்க வேலை செய்யறிங்க”.நான் விளக்கினேன்.அவர்” இப்படி தினமும் இத்தன பேர வேலயவிட்டு தூக்கறாஙளே என ஆரம்பித்தவர்.அமெரிக்க சந்தை சரிவு ,ஒரு சங்கம் அமைத்தால்….. என இழுத்துக்கொண்டே போக நானிறங வேண்டிய இடம் வந்தது.அலுவகத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.மனதில் பல யோசனைகள்.போன மாதம் தான் நோட்டிஸ் போர்டில் ஒட்டினார்கள்.இனி யாருக்கும் வாகன வசதி கிடையாது(கேப்) .நை ஷிப்ட் உட்பட பணிபுரியும் யாரும் தங்கள் சொந்த பாதுகாப்பிலேயே வரவேண்டும்.
B.P.0 மற்றும் ஐ.டிக்கு நிறைய வித்யாசமிருக்கின்றது.இங்கு ஒரு நாளில் ஏத்தனை ஜாப் செய்கின்றோம் என்பதுதான் கணக்கு..என் மானேஜர் சொன்னர்” நீங்க 20 மணி நேரம் கூட வேல செய்யுங்க அதப்பத்தி யாரும் கவலைப்படமாட்டங்க.குறைந்த நேரத்தில் அதிக ஜாப் செய்ய பழகிகோங்க.”
நிறைய ஜாப் வந்துவிட்டதெனில் எல்லவற்றையும் முத்துவிட்டு தான் செல்ல வேன்டும்.6 மணிக்கு வேல முடியும் நேரதில் 3 மணிநேரத்துக்கு ஜாப் போட்டுவிட்டு டீம் லீடர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். மாதம் ஒரு முறை மீட்டிங் ,கடந்த மாத மேடிங்-ல் மானேஜெர்கள் சொன்னர்கள் ” அப்புடித்தான் தினமும் 2 (அ) 3 மணிநேரம் அதிக நேரம் வேலை செஞுதான் ஆகணு. தேவையின்னா இங்க இரு இல்லேன்னா போய்க்கிட்டே இரு .உனக்கு தர்ற 10000 சம்பளத்துக்கு 5000 க்கு ரெண்டுபேர் தயாரா இருப்பாங்க.இன்னொரு ஊழியர் சொன்னர்” சார் தினமும் இங்கயிருந்து கிளம்பவே 9 மணி ஆகுது வாரத்துக்கு ஒரு மறைதான் குழந்தைகளை பார்க்கமுடியுது.எம் பையன் என்கிட்ட சரியாக்கூட பேச மாட்டென்கிறான்.” அதுக்கு என்ன பண்றது சேகர் வேலைன்னா அப்படித்தான் இருக்கும்.” சொல்லிவிட்டு போனார்கள்.
அலுவலகத்துக்குள் சென்றேன்.எல்லோரும் எதோ ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.கம்பூட்டரை போட்டு விட்டு என்னவென்று விசாரித்தேன்.நேற்று நைட் ஷிப்ட் வந்தவ்ர்களிடம் ஓவர் டைம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றார்கள்.காலையில் 6 மணிக்கு எல்லோரும் சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு கிளம்பிவிட்டார்கள்.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.எங்கள் கம்பனி வரலாறிலேயே முதல் ஸ்ட்ரைக்
மதிய உணவு இடைவேலைக்கு முன் அறிவிக்கப்பட்டது.இன்று மாலை அவசர மீட்டிங் என்று.இடைவேளை போது பலரும் பேசினார்கள்”என்ன கேக்கட்டும்.நான் பேசுற பேச்சுல நீ யாருன்னு என்னை தெரிஞ்சுக்குவீங்க” மீட்டிங் அறையில் வழக்கம் போல சவால் விட்டவர்கள் பேசவில்லை.மீண்டும் தலைமையிடமிருந்து மிரட்டல்.காலையில் தூக்கியிருந்த காலர் அதற்குள் தொங்கிவிட்டது.
அந்த வாரம் முடிந்து அடுத வாரம் நைட் ஷிப்ட்-ல் நான்.ஒருவர் சொன்னார் இன்னைக்கு கண்டிப்பா ஓ.டி.பார்க்க சொன்னா கிளம்பிவிடலாம்.எனக்கு மணி 5 ஆகும் போதே சந்தோசம்.மணி முள் மீது திட்டு விழுந்து கொண்டிருந்தது. மணி 6 ஆனது வேலையோ இன்னும் 2 மணி நேரத்துக்கு அதிகரிக்கப்பட்டது.யாரும் கிளம்பவேயில்லை,கரெக்ட்டா 6 மணிக்கு கிளம்பிடுவாங்களா என்ன ,மணியோ ஆறரை தாண்டியது.
சொன்னவரிடம் கேட்டேன் ” என்ன கிளம்பலீயா”எவனும் வரமாட்டான்”.என்றார்.
அவ்வா முழுக்க இடைவேளையில் நாயகனானவர்கள்.ஓ.டி போது மவுனமானார்கள்.
அடுத்த வாரமும் வந்தது H.R. வந்தார் ” உங்களுக்கு work load கொஞ்சம் அதிகம் தான் அதனால தான்……” புதுசா ஆள் எடுக்கப்போறாங்களா” இது நான். அவர் தொடர்ந்தார்.அதனால எல்லாரும் இந்த வாரம் எக்ஸ்கர்சன் போகப்போறோம்.வெஜ் ஆர் நான் வெஜ் food code உங்க டி.எல்.கிட்ட சொல்லுங்க
நான் எனது டீம்-ல் உள்ளவர்களிடமும் ,பக்கத்து டீம்- உள்ளவ்ர்களிடமு இப்படி சொன்னேன்.” எதுக்கு டூர் ஓ.டிக்கு பணம் இல்லையே அதுக்கா,கேப் கட்பணிணானே அதுக்கா,மனுசன்னா சொரணை வேன்டும் நாய்க்கு பொறை நமக்கு டூரா?.தனிதனியாய் பேசினேன்.சுமார் 20 பேர் போகமாட்டேன் என்றார்கள் .அடுத்த நாள் லீடர் கேட்டார் என்னப்பா பேர் சொல்லவேயில்லை” நான் வரலை சார். பரிட்சை இருக்கு” பொய் சொன்னேன். அருகிலிருந்த்வன் கேட்டான் சார் தண்ணீ இருக்கா? நாட் அலவுட் என்ற படியே கண்ணடித்தார்.
இல்லை நான் போக மாட்டேன் என்றார்கள் பேரை கொடுத்துவிட்டு.சண்டே வந்து விட்டு போனது.எல்லோருக்கும் மெயில் வந்தது.னேத்து நடந்த டூர் போட்டோ,வீடியோ மெயின் சர்வரில் உள்ளது என்றார்கள்.கண்டிப்பாய் 10 பேராவது போயிருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த வீடியோவை பார்த்தேன்.அதில் ஆண்,பெண் பேதமில்லாமில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப சாதுவாய் ஒரு பெண் இருக்கும்.அதுகூட குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.மப்பில் பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ஸ்டிரைக்-ஐ நடத்தினேன் என்றாரே அவர் உட்பட..எனக்கு உடம்பெல்லாம் வெப்பாம் ஏறியது.அந்த சாதுப்பெண் என்னிடம் கேட்டார்”நீங்க வரலை?” நான் பதிலேதும் கூறாமல் அமைதியாயிருந்தேன்.
எனக்கு மாபெரும் உண்மை விளங்கியது.இங்கு பலரும் தன்னை நுகர் பொருளாக்கிகொள்ளவே விரும்புகிறார்கள்.இடுப்புக்கு கீழே பேண்ட்,தலையை சிரைத்துகொள்வது என தன்னால் முயன்றதனைத்தையும் செய்கிறார்கள்..அதன் மூலமே தன் இருப்பை உயர்த்திகொள்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறதே.2000,1000 என பி.பீ.ஓ-ல் வேலையை விட்டு தூக்கப்படுவதாக.ஏன் அவர்கள் இணைவதில்லை.இணையவேண்டுமெனில் ஐக்கியம் தேவை ,நாளை நீ தூக்கப்படுவாய் என சொல்லிப்பாருங்கள் ,எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.
ஒற்றுமை இப்படி எச்சில் இலைக்கு அலைந்து கோண்டிருந்தால் கிடைக்காது.உரிமைகளை மீட்டெடுக்க
சங்கம் தேவை.அது கண்டிப்பாய் நாக்கை தொங்கப்போட்டு கொண்டிருப்பவனால் முடியாது.
நாங்கள் நுகர் பொருளாய் இருக்கும் வரை எங்கள் வாழ்வு சவக்குழிக்கானதாகவேயிருக்கும்.
குறிச்சொற்கள்: adimai, B.P.O.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 மறுமொழிகள் »
நவம்பர் 23, 2008 by kalagam
திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்
கிராமப்புரங்கள் முதல் கல்லூரி வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ கேவலப்படுத்தவோ பயன் படுத்த்ப்படும் முக்கியச் சொல் “பொட்டை, அலி , ஒம்போது” பலருக்கு இந்த கருத்து உண்டு.” இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான”. ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது. முசுலீம் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத இச்சமூகம் பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது.
உண்மையில் திரு நங்கைகள் யார் ? மனித செல்லில் உள்ள 23 குரோமோசோம் இணையில் கடைசி 23 23-வது இணையே ஆணா பெண்ணா என தீர்மானிகின்றது. XX என்ற குரோமோசோம் ஆணாகவும், YY
என்ற குரோமோசோம் பென்னாகவும் பிறக்கின்றது. ஒரு X(or)Y குரோமோசோம் அதிகமாகிவிட்டால்
அவர் திரு நங்கையாகிறார். ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள் சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர்.அவவயதில் தான் ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர்.
மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்
திரு நங்கை நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி யென அழைக்கப்படுகிறனர்..மேற்படியுள்ள அரவாணி யென்ற பெயரே தவறானது.அப்பெயர் திரு நங்கைகள் உருவாக்கப்பட்டதே பாலியல் தேவையின் கடைசி முயற்சி எனக் கூறுகின்றது.பாஞ்சாலியை 5 மணக்க ஐவரும் தலா ஒரு வருடம் என பாஞ்சாலியை பங்கு போட்டுக்கொள்கின்றனர்.மீதி 4 பேரும் பாஞ்சாலியை மீதி 4 பேரும் பார்க்கக்கூடாது.மீறி பார்த்த அர்ச்சுணன் யாத்திரைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒரு பெண் (தாழ்த்தப்பட்டவர்)மூலமாக குழந்தை பிறக்கின்றது அது தான் அரவாண்.
பாரத யுத்தத்தில் கிருஷ்ணன் ஒருவரை பலி கேட்க அது அரவாண் என முடிவு செய்யப்படுகின்றது.அப்போது அரவாண் தான் இல்லற சுகத்தை அனுபவிக்க வில்லை அனுபவிக்க வேண்டும் எனக்கூற கிருஷ்ணன் பெண் உருவில் வந்து அனுபவிக்க வைத்தார்.இது பார்ப்பன புரூடா கதை.
ஆணாதிக்க இந்து மதத்தில் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவரை பொட்டை ஒம்போது அலி போன்ற வார்த்தைகள் எதற்காக சுட்டப்படுகிறது.இவன் ஆண்மையில்லாதாவன்.ஒரு பெண்ணுடன் (அ) ஆணுடன் இல்லறத்தில் ஈடு பட லாயக்கற்றவர்.இந்த சமுதாயத்தில் ஆண்,பெண்,விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை..
ஆங்கிலத்தில் he she it, தமிழில் அவன் அவள் அது திரு நங்கைக்கு இங்கு இடம் இல்லை.அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது வேண்டுமானால் நாயோடு சேர்ந்துகொள்.கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில் பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது ஆணாதிக்கம்.
———————————————————————————————————————————————
பலரும் சொல்கின்றார்கள் “அவங்களை யார் பாலியல் தொழில் செய்யச்சொன்னாங்க உடம்பு நல்லாத்தானே இருக்கு உழச்சு முன்னேற வேண்டியது தானே” இது “சும்மா கத விடாதீங்க அவன் வாயில மூத்திரம் இருக்கின்ற வர இவன் என்னா பண்ணிணான்” என்ற சாதிவெறியனுக்கு ஒப்பானது.யாரையும் கட்டி போட்டு இழுத்து வந்து பாலியல் தொழில் செய்ய சொல்ல வில்லை. இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள்,பெண்களின் கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாது இருக்க முடிகிறதா.
இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் ரீதியிலான கடு நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும்செய்கின்றனர் .பாலியல் தொழிலாளியை ஆணாதிக்கம் உருவாக்கியதோ அப்படித்தான் திரு நங்கைகளை பாலியல் தொழிலாளி ஆக்கியது.தாழ்த்த்ப்பட்ட ஒருவரை எங்கணம் அடையாலம் காட்ட முடியும்.அவரின் சுற்றுபுறத்தை தவிர . ஆனால் திருநங்கைகளுக்கு ?
———————————————————————————————————————————————
திருநங்கைகள் பலரும் சொல்லும் வார்த்தை இது.” நாங்கள் கடவுளிலிருந்து வந்தவர்கள்.வட நாட்டில் எல்லா விழாவுக்கும் எங்களுக்குத்தான் மரியாதை” திருநங்கைகள் தங்களை கடவுளின் வாரிசாக்கி அதன் மூலம் கேலிப்பொருளுமாக்கிவிட்ட பார்ப்பனீய இந்து மதத்தை முதலில் எதிர்க்காது தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும்.நியமன உறுப்பினர் போன்ற கோரிகைகள் எல்லாம் இனி பயனற்றதாகி போய் விட்டது.இந்த மறுகாலனியாக்க,பார்பபன மதவெறி சூழலில் தனியாய் போராடினால் கிடைக்கது வெற்றி.உழைக்கும் மக்களுக்காக அவர்களுக்காக களத்திலிறங்குவோம்.இழந்த,வாழ்வாதாரத்திற்கான உரிமைகளை பெறுவோம்.இனியும்தாலியறுத்து ஒப்பாரி வைத்து கொண்டிருந்தால் ஒப்பாரி வைக்க வைத்தவனை
எப்போது தான் ஒப்பாரி வைக்கப் போகின்றோம்.
———————————————————————————————————————————————
மாபெரும் சோசலிச புரட்சி நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சம்பவம் இது.ரசியாவில் ஒரு பாலியல் தொழிலாளி பனிப்பொழிவில் நனைந்து கொண்டிருந்தார்.அங்கு வந்த செம்படை வீரர் சொன்னார்.”தோழர் உள்ளே போங்க” முதன் முதலாய் ”தோழர் “வார்த்தை அவரின் கண்ணில் நீரை கொண்டு வந்தது,ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை கம்யூனிசமே பெற்றுத்தரும்.
போலி சன நாயகப் பாதை அல்ல.

குறிச்சொற்கள்: ஒரு சமூகத்தின் அவலம், திரு நங்கைகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
நவம்பர் 30, 2008 by kalagam
ஜெயமோகன் என்ற தரகன்
படைப்பாளிகளின் பெயரில் உலாவும் மாமாப்பயல்கள்
மாண்பு மிகு இலக்கிய மேதை,சுந்தர ராமசாமிக்கு ப்றகு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்க தகுதியான ஒரே நபர் என வர்ணிக்கப்பட்டும்,அவாளோட புத்தகத்து சைஸ்-ஐ வைச்சே அறிவ தெரிஞ்சுக்கலாம் என பார்ப்பன அம்பிகள் புளங்காகிதமடையும் நபர் திருவாளர் ஜெயமோகன் அவர்கள்.
ஜெயமோகன் உயிர்மை நவம்பர் 2008 இதழில் ஊமை செந்நாய் எனும் கிளுகிளுப் பூட்டும் ஏ சர்டிபிகேட்டுக்கு தகுத்யான நெடுங்கதையை எழுதியிருக்கின்றார்.ஆபாசப்படம் எடுக்கத்திட்டமிடும் தயாரிப்பளர்கள் நேரே அண்ணாரிடம் சென்றால் போதும் ஷகிலா என்ன அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இலக்கியத்தோடு பாலீஷ் போட்டுத்தருவார்.அதை யூ சர்டிபிகேட் என்று வெளியிட்டு காசு சம்பாதிக்கலாம்.அழகியலின் ரசனைக்குள் புகுந்து ரசிக்கும் ரசிக சிகாமணிகள் இதை ரசித்து ரசித்து மெய்மறந்து கிடப்பார்கள்.
இது வரை பல தரகுவேலை கதைகள் வெளிவந்திருக்கின்றன. “நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு “என ஜெயமோகன் அறிவித்துஇருக்கின்றார்.பிரம்ம சிறீ ஆபாசானந்தா ஜெயமோகன் அவர்களின் லேட்டஸ்ட் ரிலீஸ் “ஊமை செந் நாய்”(இலக்கிய முலாம் பூசப்பட்டு இருப்பதால் குடும்பத்தோடு படிக்கலாம்).ஒரு வெள்ளைக்கார துரைக்கு வேலை செய்யும் வேட்டைதுணைவனின் கதை இது.அறிமுக வரியை படித்தவுடனே ஆகா ஒரு சேவகனின் வாழ்க்கையை அவனின் அவமானங்கள்,வேலைப்பளு,இளக்கார பார்வைகளை இலக்கிய வாசத்தோடு ஜெயமோகன் எப்படி எடுத்துரைக்கப் போகின்றார் என்று நினைத்தால் ஒரு வேட்டைத்துணைவனின் வாழ்வை ஒரு மாமாப்பயலின் கடைவிழிப்பார்வையில் கணகச்சிதமாக எடுத்துக்காட்டி படிப்போரை விரசத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றார்.
வில்சன் துரையை பற்றி “அவன் வாயில் சுருட்டை பற்ற வைத்தான் அது கரிய ஆண் குறி போலிருந்தது”ஆரம்பிக்கிறார்.ஒரு விபச்சார புரோக்கர் பேருந்து நிலையத்திலும்,பொது இடங்களிலும் கிராக்கியை மசியவைக்க எப்படி பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பானோ அதை விட சற்று தூக்கலாக ஒவ்வொரு சந்திலும் அள்ளித் தெளிக்கின்றார். துரையின் தேவைக்கு பெண்களை கூட்டி வருவது முதல் அவரின் வர்ணிப்பு இருக்கின்றதே அதை படிக்கும் இலக்கிய மணிகள் “ஆகா இதை கூட எப்படி ரசிச்சு எழுதியிருக்கா பார்த்தேளா இங்கதான் நம்மாளு நிக்கிறா,ஒரு படைப்பாளி எதை கொடுத்தாலும் இலக்கியப்படுத்தவேண்டும் இலக்கிய உலகம் நமக்கு சொல்லித்தருகின்றது.இதை விமர்சிப்போர் அறிவிலிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்.
ஒரு படைப்பாளி எந்த விசயத்தை வேண்டுமானாலும் எழுதலாம்,எப்படியும் எழுதலாம்,அதிலும் பெண்களை பற்றி எழுழ்தும் போது அவரின் உறுப்புக்களை வர்ணிக்கலம்.ஒரு படத்தின் வசூலுக்கு ஏற்ப படுக்கயறை காட்சிகள் நீளுவது போல,ஒரு படைப்பாளி நீட்டிக்கலாம் எங்கேயும் புகுந்து கொண்டு.பதில் இப்படியும் வரும்”ஒரு படைப்பாளிக்கு ஆபாசம் விரசம் எதுவும் கிடையாது,எல்லாமே உங்கள் பார்வையில் தான் இருக்கின்றது.படைப்பாளியின் நோக்கம் எடுத்துக்கொண்டவிசயத்தை எப்படி உருவகம்,உவமையோடு எழுதுகின்றான் என்பதை பாருங்கள்,இலக்கியப்பார்வை இல்லாதவர்கள் என்ன சொன்னாலும் அதை பற்றி விவாதிக்க தேவையில்லை.
முதலில் படைப்பாளி என்பவன் யார்? தன்னுடைய கதை,கவிதை,ஓவியதிறமைகளை படைப்பவன்.அவன் மக்களிடமிருந்து கற்றவன், மக்களிடமிருந்து சென்றவன்.தன்னுடைய படைப்புக்களை மக்களுக்காக படைப்பவன்.ஒரு படைப்பாளியின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?அது அவன் மக்களுக்காக எப்படிப்பட்ட படைப்புக்களை என்பதை பொறுத்தது.புரட்சிகவி முதல் பல புரட்சிகர கவிஞர்கள் படைத்தார்கள் தங்கள் படைப்புக்களை மக்களுக்காக ,அவர்களுக்கு தன் மான,தேச விடுதலை உணர்வூட்டினார்கள்.குறிப்பாக பாரதிதாசன் தன் படைப்புகள் மூலம் பார்ப்பன ஆதிக்கத்துக்கெதிராக போராடினார்.இறந்த பின்னும்
அவரின் படைப்புகள் அப்பணியயை செய்து வருகின்றன. நமக்கு தெரிந்த இன்னொருவரும் இருக்கின்றார் அவன் பெயர் வாலி தன் பாடல்கள் மூலம் “ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி” வேறு வகையான உணர்வூட்டும் வேலையில் இருக்கின்றார்.பாரதிதாசனையும் வாலியையும் படைப்பாளி என்ற ஒரே தராசில் வைக்கமுடியுமா?
படைப்பாளியின் வெற்றி பார்க்கும் படிக்கும் கேட்பவரிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது தான்.அத்தாக்கம் மக்களின் வாழ்க்கை த்தரதை உயர்த்துவதாய் இருத்தல் வேண்டும்.மக்களுக்கெதிராக,அவர்களின் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் எதுவும் படைப்பாகாதுதைனியும் சிலர் கேட்கலாம்.” ஒரு படைப்பாளியை இதைத்தான் இப்படித்தான் சிந்திக்கவேண்டுமென கூற முடியாதே”.கண்டிப்பாய் கூறமுடியாது.ஆனால் ஒவ்வொரு படைப்பாளியும் “இப்படி,இவர்களுக்காகத்தான்னென சிந்திக்கின்றார்கள்.ஜெயமாகனைப் போல பலரும் தனது சொறிபிடித்த கருத்தை பொது கருத்தாக்க முனைகின்றனர்.அதில் வெற்றியும் பெற்று தனக்கு ஒரு கூட்டத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
நாம் மீண்டும் அந்த மாமாபயலின் கதைக்குள் செல்லத்தேவையில்லை,அதனுள் சென்றால் அவரின் “கீழ்த்த்ரமான உவமைகளை ” நாமும் பதிய வேண்டி இருக்கும்.
————————————————————————————————————-
அடிக்கடி எழும்பூரில் ஓவியக் கண் காட்சி நடை பெறுவதுண்டு, அங்கு பல பெண்களின் அரை,முழு நிர்வாண ஓவியங்களை பார்க்கலாம்.அழகியலை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதல்ல,எதற்காக இதனால் எப்படிப்பட்ட தாக்கம் எற்படப்போகின்றது
என்பதுதான் தேவை.இந்த ஆபாச ஒவியங்களை பார்க்க ரசிக்க இளைஞர் பட்டாளங்கள் வருவதும் உண்டு.ஒவியனுக்கு ஆபாசம் உண்டா என தெரியாது,ஆனால் பார்வையாளர்களிடம் உண்டா என ஓவியர்கள் தான் சொல்ல வேண்டும்.

குறிச்சொற்கள்: ஜெயமோகன், தரகன், மாமாப்பயல்கள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 10 மறுமொழிகள் »
நவம்பர் 30, 2008 by kalagam
என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……
வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”
போதைதலைக்கேறாது கண்டதையும்
குடித்து புரள்கின்றன
மெத்தைகள்….
தெரியும் இடத்திலெல்லாம்
மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்
இலவசமாய்
துரோகத்தனத்தையும் சேர்த்து…..
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..
சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?
உலகமயம் ஆணையிட்டப்படி
நுகர் பொருட்களால்
நுகரப்படுகின்றாயா இல்லையா?
நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”
நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..
தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……
இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.
குறிச்சொற்கள்: "என்னபண்றது", கவிதைகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
டிசம்பர் 3, 2008 by kalagam
மும்பை தாக்குதல்கள்-எது பயங்கரவாதம்?
மும்பாயில் கடந்த 26-ம் தேதி நடந்த இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சம் தேசம் முழுவதும் கிளறி விடப்பட்டு இருக்கின்றது.”பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக போட் மூலம் தீவிரவாதிகள் வந்தனர்.அங்கிருந்து சென்று ஓபராய்,தாஜ், நாரிமன் போன்ற கலாச்சார பெருமை மிக்க வெளினாட்டினருக்காகவே சேவை செய்து கொண்டிருந்த பாரம்பரிய சின்னங்களை குறி வைத்து தாக்கி,9 அமெரிக்கர்கள் உட்பட சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.NSG படை வீரர்கள் தான் இந் நாட்டின் பாரம்பரியமிக்க வீரத்தை காட்டி மானத்தை கட்டிக்காத்தனர்.” இவை தான் ஊடகங்களில் வந்த செய்தி.
தாக்குதல் நடந்து 4 நாட்களாகியும் பத்திரிக்கைகள்,t.vக்கள்” நாடு இப்படி அவமானப்பட்டு விட்டதே ,அதுக்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தீவிரமாய் இருக்கின்றன.இத்தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில்,மகாராட்டிர முதல்வர் ,துணை முதல் வர் ஆகியோர் பதவி விலகி யுல்ளனர்.ஆனால் ஊடகங்களோ “இது பத்தாது இன்னும் வேணும்” என ஒப்பாரி வைக்கின்றன நம்மையும் ஒப்பாரி வைக்க சொல்கின்றன.பார்ப்பன ஊடகங்கள் வழக்கம் போல தொடர்ந்து தலையங்கங்களை தீட்டி வருகின்றன.இத்தாக்குதலுக்கு காரணங்களையும் தீர்வுகளையும் வைக்கின்றன.அதன் படி செயலிழந்த நிர்வாகம்,பொறுப்பற்ற தலைமை போன்றவையே இதற்கு காரணம்,தீர்வுகளாக தனி புலனாய்வு அமைப்பு, நாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு,தயவு தாட்சண்யமின்றி விசாரணைக்கு உட்படுத்துதல் ஆகியன வைக்கப்படுகின்றன.மேலும் பங்கு சந்தை சரிவு முதல் சுற்றுலா ஹோட்ட்ல் வளர்ச்சி பாதிப்பு வரை “எல்லவற்றுக்கும் பயங்கரவாதமே காரணம் , நாட்டை முன்னேற்ற பயங்கரவாத்தை வேரறுக்கவேண்டும்.
பயங்கரவாதத்தை வேரறுக்க ஒரே வழி பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும் அல்லது அங்கே உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.அமெரிக்கா எப்படி தனது “இறையாண்மையை காக்க ஆப்கன் மீது போரிட்டதோ அது போல இந்தியாவும் போரில் இறங்க வேண்டும்” என்ற பார்ப்பன கோட்பாட்டினை பொது கருத்தாக்கும் பணியில் பத்திரிக்கைகளும்,பண்டாரங்களும் ஈடுபட்டிருக்கின்றன.
பயங்கரவாதத்தை வேரறுக்கவேண்டும் என்பதில் நமக்கும் வேறு கருத்துஇல்லை.ஆனால் எது பயங்கரவாதம்? . நாட்டையே அச்சுறுத்திவரும் மாபெரும் பயங்கரவாதம் பார்ப்பன மதவெறி பயங்கரவாதமே .நாட்டில் மதவெறி பயங்கரவாதம்,மறு காலனிபயங்கரவாதம்,அரசு பயங்கரவாதம் போன்றவைகள் நிகழ்த்தபடாத ஒரு நாளை கூட காண முடியாது.
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிர்க்கப்படவேண்டியதே.இதற்கு மூலக்காரணத்தை தோண்டியெடுக்காமல் தீர்வை தேடுவதி பலனில்லை.
1947க்குமுன் இருந்ததை விட 1947 aug 15க்குப்பின் சிறுபான்மைமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை பல தாக்குதல்கள், நடந்து கொண்டிருக்கின்றன.இதற்கு பலியான அம்முசுலீம் மக்களே சிறையிலடைக்கப்பட்டனர்.தொடர்ச்சியான பகல்பூர்,அயோத்தி,கோவை போன்ற சிறுபான்மைமக்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு
சில இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் தோன்றின.வினைக்கு எதிர் வினை என்ற வகையில் சில செயல்களில் ஈடுபட்டனர்.இதுவே இசுலாமிய மக்கள் மீதான வரைமுரயற்ற தாக்குதலுக்கு சாக்கு காட்டி இந்து பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.கோவை,மும்பை குண்டு வெடிப்புக்களில் சற்றும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.பலருக்கும் கைது செஇது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான் தான் ” தான் தீவிரவாதி” என தெரிந்தது.1948 காந்தியை பார்பான கோட்சே கொன்றிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் , பார்ப்பன வெறியர்கள் திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தினர் அன்று முதல் தற்போது நடந்து வரும் பாசிச வெறியாட்டங்கள் வரை அரசின் பாதுகாப்போடு இவை திட்டமிட்டு நடக்கின்றன. கோவை வழ க்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அன்சாரி உள்ளிட்ட பலரும் ஆயுள் தண்டனைகளில் இருக்க,பாபர் மசூதி வழக்கின் முக்கிய குற்றவாளியான அத்வானி துணை பிரதமராகவும், உமா பாரதி ம.பி.முத்ல்வராகவும் ஆகிவிட்டனர்.இப்படி சிறுபான்மைமக்களின் மீது தாகுதல் தொடுக்கும் அமைப்புகள் அரசை கைப்பற்றிவிட்டன,மீண்டும் கைபற்றவும் முயல்கின்றன.
—————————————————————————————————————————————————————————
டாடா இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளி வந்தது.டாடா மட்டுமல்லபிற பார்ப்பன ஊடகங்களுக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் வந்திருக்கின்றது.இந்திய உழைக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பின்மையை நாள்தோறும் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.டாடாவின் ஹோட்டல் குழுமத்தின் 50% லாபத்தை தாஜ் தந்தது.அதை 5 நாட்கள் மூட வேண்டி வந்தவுடன் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கும் அளவுக்கு கொண்டுசென்றதை நாம் உணரலாம்.
“ஒரு முதலாளி தன் மூலதனத்தின் பாதிப்பை தேசத்தின் பாதிப்பாகவும்,தன் இழப்பை தேசத்தின் இழப்பாகவும் மாற்றுகின்றான்.”டட நந்திகிராமில் கார் ஆலையைதொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கொல்லப்பட்டார்களே அதை விட அந்த ஆலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதுதான் தேசிய அவமானமாக கருதப்பட்டது.அப்போது ஊடகங்கள் கீழ் கண்டவாறு எழுதின”ஒரு நாட்டின் முன்னேற்றம் தடை படுகின்றது”. ஒரு முதலாளியின் வளர்ச்சி தடை படுமெனில் அது நாட்டின் வளர்ச்சியை தடை செய்ய்யப்படுவதற்கு சமம்”.மிட்டல் ஆர்சிலரை வளைத்தபோது “இந்தியா கண்டிப்பாய் வல்லரசு ஆயிடும் என் பத்திரிக்கைகள் புளங்காகிதம் அடைந்தன.மூலதன நலனுக்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நலனும் தேசிய நலனுக்கானதே. ஹோட்டல் பற்றி எறிந்தவுடன் நாடே பற்றி எறிவது போல் கனவு கண்ட டாடா நாட்டுக்கே தீப்பற்ற வைக்கச்சொல்கிறார்.உடனே தேசிய பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளறியிருக்கின்றன. .இந்த ஊடகங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியதில்லை.
நந்திகிராமில் நடந்த கார் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது முடிவாகவில்லை,தோண்டுவது மீண்டும் தொடங்கினால் எண்ணிக்கை அதிகமாகும்.மார்க்சிஸ்டு குண்டர்கள் செய்த கொலையும்,
பாலியல் வன்முறைகளும் மக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை உண்டு பண்ண வில்லை.ஆனால் கோத்ரா சம்பவம் தேசிய அளவிலான இந்துக்களின் பாதுகாப்பை புதியதாய் கோரியது.கோத்ராவை வெற்றிகரமாக நடத்திய ஆர்.எஸ்.எஸ் கும்பல் குஜராத்தில் 3000 முசுலீம் மக்களை கொன்று குவித்தது.அப்போது மருந்துக்குகூட முசுலீம் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழவேயில்லை.
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருப்பதால் இதுவரை லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டிருக்கின்றார்கள்.விதர்பாவில் கோடை காலம்,மழை காலம் போல “போஸ்ட்மார்டம் சீசன் ” என்று ஒன்று இருக்கின்றது.அது பருத்தி பூ பறிப்பு காலம்.அக்காலத்தில் விவசாயிகளின் பிணங்கள் போஸ்ட்மாடர்த்திற்காக மருத்துவமனையில் இறைந்து கிடக்கும்.இது என்றாவது பத்திரிக்கைகளில் விவாத பொருளாகியிருக்குமா?வாரந்தோறும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிடுங்கி எறியப்பட்டு கொண்டிருக்கின்றார்களே அது தான் தேசிய விவாதமாகியிருக்குமா?இல்லை செத்து போன மாட்டின் தோலை உரி¢த்ததற்காக 5 தலித்துகள் கொல்லப்பட்டார்களே அப்போது ஒருவன் சொன்னான்”கோமாதாவை விட 5 தலித்துகள் உயிர் பெரிதல்ல”என்றானே அப்போதும் கயர்லாஞ்சி,மேலவளவு,உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மீதான் வன்முறைகள் எப்போது தான் தேசிய அளவிலான பாதுகாப்பு குறித்த விவாதமாகியிருக்குமா?மாலேகானி குண்டு வைத சாமியாரை விடுதலை செய்ய சொல்லும் பிஜேபி-ன் மீது குறைப்த பட்சம் நம்பிக்கயை குறித்த சந்தேகமாவது எற்பட்டிருக்குமா என்ன?
இப்படி எத்தனை பேர் செத்தாலும் அது தேசிய விவாதமாகியிறாது.அவைஅதற்கான தகுதியை பெறாது.அதன் தகுதியை நிர்ணயிப்பது பார்ப்பன பணியாக்களே.
—————————————————————————————————————————————————————————–
மும்பைதாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தமைக்காக ராணுவ, NSG வீரர்களுக்காக நாம் பெருமைப்படமுடியுமா? பெருமைப்பட முடியுமெனில் குஜராத்தில் 3000 முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்காக நாம் அவமானப்பட்டே ஆக வேண்டும்.ராணுவம், NSG எப்போதும் மக்களுகெதிராகவே இருக்கின்றன. இவை தான் இந்த பாசிச அரச உறுப்புக்கள்.அரசின் கூலிப்படைகள் .அசாம்,காசுமீரிகளை கொன்று அப்பெண்களை பாலியல் வன்முறை செய்ததற்காகவும்,மனோரமாவின் உடலெங்கும் குண்டுகளை பதித்தற்காகவும் அவைகள் பரிசுகளை வாங்கி குவித்தன.மும்பை தாக்குதலில் தனது வீரத்தை காட்டியவர்கள் தான் மேற்கண்ட வேலைகளையும் செய்தனர்.இப்பாதக செயல்களுக்காக ,அரசோ வெட்கி தலைகுனியவில்லை,மாறாக தலையை நிமிர்த்தி வெற்றிக்களிப்பில் மிதந்தன.பத்திரிக்கைகளோ வாயே திறக்கவில்லை.ஆம் ஆளும் வர்ர்கங்களின் எச்சில் எலும்புகளுக்கு அலையும்
இவர்களால் எப்போதும் பாசிசத்தை எப்படி நேர்த்தியாக கொண்டு செல்ல முடியும் என்று ஆலோசனைதானே கூறமுடியும்.
————————————————————————————————————————————————————————-
26/11 என்ற புது code அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எப்படி 9/11 என்ற முத்திரை உருவாக்கப்பட்டு ஆப்கன்,ஈரக் மீது போரின ஏவப்பட்டதோ அதே நோக்கத்தோடு இந்த புது முத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.எப்படியும் பாகிஸ்தான் மீது போர் வெறியூட்டி
மீண்டும் ஆட்சியை பிடிக்க பார்ப்பன கும்பல்கள் பரபரப்பாய் செயல் படுகின்றன.செத்துபோன உழைக்கும் மக்களை விட அயல் நாட்டினர் இழப்பு,கலாச்சார சின்னங்களின் மீதான் பாதிப்பே பேரழிவாக முன்னிருத்தப்படுகின்றது.புது ஆண்டான் ஒபாமாவோ பச்சை கொடி காட்டி விட்டார்”தனது பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு”.பார்ப்பன பாசிஸ்டுகளோ நாக்கை தொங்கபோட்டபடி காத்திருக்கின்றார்கள்.
மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது போல மறுகாலனியும்,பார்ப்பனபாசிசமும் வாசிப்பை தொடர்கின்றன.மறுகாலனிக்கும்,பார்ப்பனபாசிசத்திற்கு தடையை இருப்பது கூட பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகின்றன.மதவெறியை மறுப்பவர்களும் எதிர்த்து எழுதுபவர்களும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.போதாகுறைக்கு வலைத்தளங்களில் சைபர் கிரைமிற்கு புகார் தரச் சொல்லி சிபாசிசு வேறு. நம்புங்கள் இது தான் உலகின் மாபெரும் சன நாயகம்.
குறிச்சொற்கள்: பயங்கரவாதம், மும்பை
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 மறுமொழிகள் »
டிசம்பர் 6, 2008 by kalagam

மசூதி இடிக்கப்பட்டது
முசுலீம்களின் மண்டைகளோடு…
அம்பேத்கர் நினைவு நாள்
புதைக்கப்பட்டது தாழ்த்தப்பட்டோரின்
உரிமைகளோடு சேர்த்து……
பூத்து குலுங்கும் மாபெரும்
சனநாயகம் வாழ்க இந்தியா
ஜெய் ஹிந்த்.
குறிச்சொற்கள்: ஜெய் ஹிந்த், டிசம்பர் 6, பார்ப்பன பாசிசம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
டிசம்பர் 13, 2008 by kalagam
வேர்ட் பிரஸ்-ல் புதிய வலையை தொடங்கியுள்ள
தோழர்
செங்கொடியை கலகம் வாழ்த்திவரவேற்கின்றது
http://senkodi.wordpress.com/
கிடைப்பதனைத்தையும்
ஆயுதமாக்குவோம்
பட்டொளிவீசி பறக்கட்டும்
செங்கொடி
பார்ப்பனீயத்தை
வேரறுக்க
மறுகாலனியை
உடைக்க
வர்க்கப்போரில்
களம் புகுவோம்.
குறிச்சொற்கள்: செங்கொடி, வாழ்த்து
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
டிசம்பர் 15, 2008 by kalagam
செருப்பின் புனிதம்
நேற்று வரை
நினைத்திருந்தேன்
புனிதங்கள் புதைக்கப்பட
வேண்டியவை என்று…..
எனக்கு
சொல்லப்பட்ட
புனிதமெல்லாம்
பறையனை ஒடுக்கும்
நால்வர்ணம்
சங்கரனின்
மலங்கழித்த இலை
பஞ்சைக்கு கிடைக்காத
அதிகாரம்
கேள்விகளுக்கு
பதில் சொல்லும்
துப்பாக்கியின் ரவைகள்
வறுமையின் வயிற்றை
பார்த்து எக்காளச்
சிரிப்புகள்
மூடிய ஆலையின்
முன்னால்
உண்ணாவிரதத்தில்
அமர்ந்திருந்த
தொழிலாளிகள்
“ஐந்து விரல்களும்
ஒன்றாய்
இருக்கமுடியாது”
எப்போதும்
புனிதங்களுக்காக
வக்கீல்கள்
வாதாடிக்கொண்டே
இருந்தனர்….
அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
அழிக்கப்படவேண்டியவை என்று….
பாசிசத்தை புனிதத்தால்
பாயாசமாக்கி
தந்தன பத்திரிக்கைகள்
அதிகாரத்தை
ஆப்பம் என்றனர்
செய்தியாளர்கள்
ஒவ்வொரு முறையிலும்
என் கோபத்துக்கு
பதிலளித்தார்கள்
அது தான் விதி
அது புனிதம் என்று…..
அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
மட்டுமல்ல புனிதர்களும்
ஒடுக்கப்படவேண்டியவர்கள் என்று….
ஈராக்கிய
எண்ணை வயல்கள்
பற்றி எரிய
அம்மண்ணெங்கும்
ரத்தத்தால்
சிவந்திருக்க
அமெரிக்க நாய்களால்
அம்மணமாய்
வைக்கப்பட்ட
கைதிகள்
சிதைக்கப்பட்ட
தாய்மார்கள்
அவன்
பெருமையாய்
சொன்னான்
” அப்படி செய்திருக்க
மாட்டார்கள்
நான் அறிந்த அமெரிக்கர்கள்
புனிதமானவர்கள்”….
ஒரு
புனிதர்
புனிதத்தால்
அந்த
புனிதக்காட்சியை
செய்தார்….
இறுதியில்
நானும் ஒத்துக்
கொண்டேன்
புனிதம் இருப்பதாக
ஆம் தன்
புனித செருப்பால்
“அத்துமீறி
நுழைந்த நாயே”
என்ற புனித
வார்த்தையால்
அந்தப் புனிதர்
அந்தப்பாவியை
செருப்பாலடித்தார்
அவனோதான்
குனிந்து தன்
நாட்டுகொடிக்கு
செருப்படி
விழ வைத்தான்
” தம்மை
இப்படியெல்லாம்
மிரட்ட முடியாது,
அவரினெண்ணம்
புரியவில்லை”
என்றான்தன் முகத்தின்
பயந்து போன
வடுக்களோடு…
பாவிகளின்
பாவங்கள்
அந்த புனிதச்
செருப்படியால்
மட்டும் தீராது.
குறிச்சொற்கள்: ஈராக், கவிதைகள், செருப்பு, புனிதம், புஷ்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
டிசம்பர் 20, 2008 by kalagam
சீமான் - மணி கைது
அரச பயங்கரவாதத்துக்கு தாளம் போடும் வீடணர்கள்
நேற்றைய தினம் இயக்குனர் சீமான்மற்றும் த.பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் சட்ட விரோதக்கருத்துக்களை பரப்பியும் வந்ததால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.மணியரசனை தேடி வருவதாகவும் காவல் துறை அறிவித்து பின்னர் அவரையும் கைது செய்து விட்டது.கடந்த ஞாயிற்று கிழமை த.தே.பொ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறிகைது செய்யப்பட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல.இலங்கையில் போரை நடத்திக்கொண்டிருக்கும் இந்தியா தமிழகத்தில் தன்னை அம்பலப்படுத்தும் நபர்களை தொடர்ச்சியாக கைது செய்கின்றது.கடந்த நான்கு நாட்களாகவே உண்மையான இந்தியர்களான காங்கிரசு கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரிப்பதும் ,அவரையும் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவாய் பேசுவோரை தேசத்துரோகிகளாகவும் கூறிவருகின்றனர்.சீமானின் வீட்டில் புகுந்து காரை எரிக்கவும் முயன்றிருக்கின்றனர்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் பேசுவதே இப்பொழுது தேசவிரோதமாகிவிட்டது.அங்கே களத்தில் இருப்பது பாரதம் அது என்ன செய்தாலும் ஆதரிக்கவேண்டும்.எதிர்ப்பாய் பேசும் எல்லோருக்கும் காத்திருக்கின்றது பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம் சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது.
யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யுமா அப்படி எங்கேயாவது செய்திருக்கின்றதா?இந்தியாவின் மேலாதிக்க வெறி இன்னொறு நாட்டை கூறு போடுகின்றது.தான் கூறு போடுவதற்கு தடையாய் இருக்கும் புலிகளை அழிக்க சிங்களப்படையுடன் சேர்ந்து களத்தில் நிற்கின்றது என்பது தான் உண்மை.ராஜீவ் கொலைக்கு முன் தேனாய் இனித்த ஈழம் தற்போது கசப்பது ஏன்?தனது மேலாதிக்க வெறிக்காக மட்டுமே ஈழப்பிரச்சினையை கையிலெடுத்தது.தனது காரியம் முடிந்தவுடன் வேண்டாத விசயமாகவும் தேசவிரோதமாகவும் ஆக்கப்பட்டு விட்டது.
தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலு “எங்கள் தலைவன் ராஜீவை பழிப்பவர்களை சும்மா விடமாட்டோம் அவனை தூக்கி உள்ளே போடு ” என்றெவுடனே தமிழ்த்தாயை மொத்த குத்தகை எடுத்திருக்கும் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணி¢யையும் கைது செய்து இருக்கின்றார்.ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்காக சமாதானப்புறாவாகவும் மறு புறம் இந்திய தேசியத்தின் நாயகனாகவும் டபுள் ஆக்சனில் நடித்துக்கொண்டிருக்கின்றார் தானே கதை வசனம் எழுதி.தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளவது காங்கிரஸ் தயவின்றி நடக்காது.குரங்காட்டியாக காங்கிரசும் குரங்காக கருணாநிதியும் நமக்கு வித்தை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.சிங்கள தளபதி சொன்னதை தனது செயல் மூலம் கருணாநிதி நிரூபித்து இருக்கின்றார்.ஏற்கனவே வைகோ கைதின் போது “தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவு தவறில்லை ” என்று உச்ச மன்றம் சொன்னபின்னும் செல்லாத வழக்காக மாறும் எனத்தெரிந்தே தமிழக அரசு கைது வேலையை செய்கின்றது.மானங்கெட்ட கோழை மணியோ வாயே திறப்பதில்லை பெரியாரின் சொத்துக்களை தின்றுக்கொண்டிருக்கும் அந்த வாய் எப்போதும் மக்களின் உரிமைக்காக பேசாது.
இவர்களின் நோக்கம் ஈழப்பிரச்சனை மட்டுமல்ல இந்திய சிறைகூடத்தில் அடைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை உட்பட எதுவாக இருந்தாலும் அதை பற்றி பேசக்கூடாது.ஏன் மக்கள் பிரச்சினையை பற்றி பேசினால் கூட அது தேசவிரோதமாகிவிடுகின்றது. நாடு சுபிட்சமாக இருக்கின்றது.அமைதியாக இருக்கின்றது அதில் “இல்லாத “பிரச்சினையை தீர்க்க முன்னெடுத்து செல்பவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளே.கருத்துரிமைக்காக போராடு யாவரும் சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.
பாபர் மசூதியை சர்ச்சைகுரிய கட்டிடமாக அறிவித்த நீதிமன்றம் தீர்ப்புவரும் வரை அங்கு எவ்வித் நடவடிக்கையும் மேற்கொள்ளகூடாது என அறிவித்தது.அங்கு கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஜரூராக நடைப்பெற்று வருகின்றது.அதனை முன்னெடுத்து செல்லும் VHP RSS ஐ தேசவிரோத சக்திகளுக்கு அரசே அடிகல்லை கொடுக்கின்றது.குஜராத்,ஒரிசா,பெங்களூர் என திட்டமிட்டு பார்ப்பன இந்து மத்வெறி பாசிசத்தை ஏவி வருகின்றனர்.கரசேவைக்கு போன வெறியர்களை பார்த்து தேச விரோத சட்டங்கள் பல்லளித்தன.அவர்கள் மீது பாயாத இந்த தேச பாதுகாப்பு சட்டங்கள் சனனாயக புரட்சிகர சக்திகள் மீது மட்டும் ஏன் பாய்கின்றன?ஏனன்றால் இது அவர்களின் நாடு இந்து பாசிச அரசு இதில் சூத்திரன் பஞ்சமன் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் யாவரும் இங்கு பயங்கர வாதிகளே ..பயங்கரவாதிகளின் ஆட்சியில் புனிதர் பட்டம் தேடிவராது.
“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”
தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலுவை முக்கால் வாசி காங்கிரஸ்காரனுக்கே தெரியாது.தொண்டர்கள் ஏதும் இல்லாது முழுக்க முழுக்க தலைவர்களின் கட்சி காங்கிரஸ் பேரியக்கம் .எல்லோரும் இன் னாட்டு மன்னர் என்பது போல காங்கிரஸ்-ல் எல்லோரும் தலைவர்கள்.திடீரென தங்கபாலுவுக்கு காங்கிரஸ் பேரியக்கம் மேல் காதல் பிறந்து காமராசர் ஆட்சியை பிடிக்க பறந்து செல்கின்றார்.வாசனோ அதே காமராசர் ஆட்சி அமைக்க சைக்கிளில் வருகிறார்,ஈவிகேஎஸ் இளங்கோவனோ பாரின் சரக்கில் வருகிறார். நாளைக்கு காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியமைத்தால் அமைச்சரே இருக்க மாட்டார்கள் எல்லோரும் முதல்வர்.
இப்படி போகும் கட்சி கூட்டத்திலெல்லாம் வேட்டியை உறுவிவிட்டு அனுப்பினாலும் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் “காங்கிரஸ் பேரியக்கம் கட்டுக்கோப்பானது” மறுத்துபேசினால் இதுகூட சட்டவிரோதக்கருத்தாக மாற்றப்பட்டு ராத்திரியில் கைது செய்ய போலீசு கதவை தட்டும்.
வெள்ளையனால் பெற்று துரோகிகளால் வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம் சொல்கிறது”ஈழமக்களுக்காக தன் உயிரையே தந்தார் தலைவர் ராஜீவ்” இந்திரா அண்டு கோ தனது மேலாதிக்கத்திற்காக பாக்கை கூறுபோட்டு பிரித்தது போல ஈழமக்களின் துயரத்தை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.தாய்க்கு பின் அமைதிப்படையை அனுப்பி அங்கு தமிழர்களை கொன்று தமிழச்சிகளை பாலியல் சித்த்ரவதை செய்தது தனயன் அரசு.அதற்கு பரிசாக சொர்க்கம் அனுப்பப்பட்டார். இப்போது மானம் பொத்துக்க்கொண்டு வரும் இந்த புடுங்கிகளுக்கு அரசால் கொல்லப்பட்ட லட்ச விவசாயிகளின் சீரழிந்த வாழ்வுக்கோ,sezஆல் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பற்றியோ,இந்து பாசிச பயங்கரவாதிகள் பற்றியோ பேசவாய்வராது.மாலேகானில் குண்டு வைத்த லே (கே)டிபெண் சாமியாரை தேசிய பாது காப்பு சட்டத்தில் போட சொன்னதா காங்கிரசு.குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி பற்றி கூட தப்பித்த்வறி பேசுவதில்லை.
பாஜக,காங்கிரஸ் ரெண்டிற்கும் பேரில் தான் வேறு பாடு உள்ளதே தவிர செயலில் இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமானை கைது செய்யக்கோரி மனு கொடுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தொண்டர்கள் நரேந்திரமோடியை பற்றி எந்த வாயிலும் மூச்சு விட மாட்டார்கள்.
“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”
ஆகா என்ன அருமையான வார்த்தை அய்யா காங்கிரஸ் பேரியக்கத் தலைவரே நீங்கள் கொஞ்சம் அழிந்ததால் தானே நாங்கள் கொஞ்சம் நல்லாயிருக்கின்றோம்.மொத்தமாய் அழிந்து போங்கள் ! மக்களின் எதிரிப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையாவது குறையும்.
இனியும் “என்ன ஒரு சனனாயகம் என்று இந்த சாக்கடையை நுகர்வோருக்கு நாம் பதிலேதும் சொல்லத்தேவையில்லை.
குறிச்சொற்கள்: காங்கிரசு, கைது, சீமான், தங்கபாலு, பயங்கரவாதம், விடுதலைப்புலிகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 மறுமொழிகள் »
டிசம்பர் 22, 2008 by kalagam
காங்கிரஸ் என்றொரு கட்சி
கருமாதி இழவுக்கு காலம் தான் வருமா?
1991,மே மாதம் 22-ம் தேதி காலை 6 மணி கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஓட்டினேன் கையில் பாத்திரத்தோடு. பாலை ஊற்றிய படியே பால் காரர் பக்கத்துவீட்டுக்கார அம்மாவிடம் சொன்னார் “ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்”.எனக்கு ஒரே சந்தோசம் ராஜீவ் செத்ததை எங்கள் வீட்டில் யாரும் பொருட் படுத்தவே இல்லை.எனக்கு நன்றாய் நினைவிருக்கின்றது காலையிலிருந்து மாலை வரை அப்படி ஒரு ஆட்டம் எனக்கு தேவையெல்லாம் ஒரு நாள் விடுமறை. அப்போது நான் சிறுவன்.டிடியில் பாத்திமா பாபு கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்தார்.எங்கள் தெருவில் யாரும் அழுததாய் தெரியவில்லை.பல ஆண்டுகளுக்கு பின் தான் தெரிந்தது “ராஜீவிற்காக இந்தியாவே அழுதது” என்று. அப்படி அழுததாய் எங்களுக்கும் ஞாபகம் இல்லை.
கடந்த வாரம் சீமான்,கொளத்தூர் மணி,மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே எதிர்ப்பு,காங்கிரசோ வரவேற்பு “திருமாவளவனையும் கைது செய்”என்ற முழக்கத்தோடு ஆரம்பித்து விடுதலை சிறுத்தைகளிடம் செருப்படி வாங்கி பிளிறிக்கொண்டிருக்கின்றார்கள்.பார்ப்பன ,சூத்திர பத்திரிக்கைகளோ “சத்திய மூர்த்தி பவன் போலீசார் கண்முன்னே தாக்கப்பட்டது” “காங்கிரசார் தாக்கப்பட்டனர்”.”தங்க்க”பாலுவோ புனிதமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்டதை எந்த காங்கிரஸ் காரனும் பொறுத்துக்கொள்ள மாட்டான்” பேரரசர் சொல்லுவதற்கு முன்னேயே ம்ற்ற அரசர்கள் சீமான்,திருமாவின் பொம்மைகளை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்க இல்லேன்னா திமுக ஆட்சியே இல்லை தெரியுமா? என தமிழக சாலைகளில் சீன் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.சாலைகளில் மறியல் செய்த வெள்ளை வேட்டிகள் தனது பின்புறத்தில் அழுக்கு படிய வைத்து விட்டர்களே என்ற கோபத்தில் உளறுகின்றன.இளங்கோவன் பாலுவும் சொல்வதை போல சத்திய மூர்த்தி பவன் புனிதமான இடமா,அங்கே நடந்த தாக்குதல் வரலாற்றுப்பிழையா?
சத்தியமூர்த்தி பவன் என்பது துரோகத்தின் கலங்கரை விளக்கம். மகாத்மாகாந்தி முதல் செத்துப்போன ராஜீவ் காந்தி வரை ஏன் தற்போது குட்டிகுட்டி தலைவர்களாக பரிணமிக்கும் எல்லோரும் துரோக கம்பெனியின் பங்கு தாரர்கள்.இந்த துரோக கம்பெனியின் தலைவர் பதவிக்காக சத்தியமூர்த்திபவனுக்கு விழுந்த செருப்படிகளும் அர்ச்சனைகளும் கணக்கிலடங்காது.இந்திய நாட்டை எப்படி தொடர்ந்து தம் காட்டுப்பாட்டில் வைப்பது என்ற பிரிட்டிசாரின் கவலைக்கு மருந்தாய் வந்தவர் தான் மஹாத்மா. நீங்கள் இங்கு இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கல் எப்போதும் உங்கள் அடிமைதான் என உறுமியவர்தான்மஹாத்மா.மாவீரன் பகத்சிங்கை தூக்கில் எப்போது போடுவது என வெள்ளையர்கள் கேட்டபோது,லாகூர் மானாட்டுக்கு முன்னே போடுங்க என்று தன் தேச பக்தியை உலகறியச்செய்தார்.ஒவ்வொரு முறையும் போராட்டத்தை ஆரம்பித்து விட்டு அது மக்களின் கைக்கு சென்ற வுடனே உடனே வாபஸ் வாங்கி ” ,வெள்ளையன் அடித்தால் வாங்க வேண்டும் திருப்பி அடித்த மக்களை (சவுரி சவுரா) காட்டுமிராண்டிகளென்று கண்டித்தார் இந்தப் “பீ”தா.அந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மஹாத்மா செய்த மாபெரும் துரோகம் தான் அவர் கண்டு பிடித்த அரிசன்.உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை தே…….மகன்களாக்கியது தான் தேசத்தந்தையின் செயல்.ராமராஜ்யமும் பசுகொல்லாமையும் இரு கண்கள் என்ற மஹாத்மா மாபெரும் பித்தலாட்ட பேர்வழி. எதற்கெடுத்தாலும் ராம ராஜ்யம் தான் என் கனவு சொல்லிக்கொண்டிருந்தார்.உடனே மாபெரும் பகுத்தறிவாளர் குத்தூசியார் அவர்கள் ராமனின் லீலைகளை அவிழ்த்து விட அந்த ராமன் வேற நான் மனசிலே நினைச்ச ராமன் வேற என்றார் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் மஹாத்மாவும் அவரது சத்தியசோதனையும் உணமையென்று ஏனென்றால் அவர் தேசப்பிதா.
மகாஆத்மாவுக்கு பிறகு ரெண்டு காந்திகள் மக்களின் உயிரை எடுத்தார்கள் அம்மாளும் பையனும் சோடியாக.அம்மாளுக்கு பஞ்சாப்,பையனுக்கோ ஈழம்.இருவரின் கையிலும் பஞ்சாபும் ஈழமும் பிழியப்பட்டன.1983-ல் பொற்கோயிலுக்குள் புகுந்த ராணுவம்சாமி கும்பிடவந்த சீக்கியர்களையெல்லாம் சொர்க்கம் அனுப்பியது.பஞ்சாபின் இனப்போராட்டம் துப்பாக்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டது.ஆயிரக்கணக்காண சீக்கியர்கள் வரன் முறையின்றி கொல்லப்பட்டனர்.எல்லாவற்றுக்கும் இப்போது போலவே இந்திரா பதில் சொன்னார் கச்சிதமாய் “அவர்கள் தீவிரவாதிகள்”இந்திரா காந்தி கொலைக்கு பின்னோ ராஜீவ் சீக்கியர்களின்மேல் அளவற்ற தாக்குதல் தொடுத்தார்.அரச கலவரங்களை ஏற்படுத்தி சீக்கியர்களை கொன்று விட்டு மவுனமாய் பதில் சொன்னார்”ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தானே செய்யும்”.ஒரு இந்திரா ஆலமரம் செத்துப்போன மக்கள் எல்லாம் அதிர்வுகளா?
தன் கட்டுக்குள் கொண்டுவர போராளிக்குழுக்களை முறைகேடாக பயன்படுத்தி இலங்கையை அச்சுறுத்திய ராஜீவ்.இலங்கை மண்டியிட்ட வுடனே IPKF என்ற அமைதிப்படை இலங்கை அனுப்பினார்.ஆயிரக்கணக்காண போராளிகளுக்கு எதிராக லட்சக்கணக்காண இந்திய ராணுவம் தனது முப்படைகளோடு முகாமிட்டது.சிங்கள மற்றும் தமிழ்மக்களை கொன்று குவித்தது.தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது.அதற்குதான் அந்த பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.அதுவே ரா குல் காந்தி வரை பிரதமர் அதிகாரத்திற்கு வருவதற்கான தகுதியாகிவிட்டது.
இப்போது அலறுகிறார்களே அய்யோ எங்கள் தலைவன் எங்கள் தலைவன், சத்திய மூர்த்திபவனை தாக்கிய தேசத்துரோகிகள் என்று என்று.செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டை அரிவாளோடு மண்டையை பிளந்தார்களே,மூப்பனார் தமாகா ஆரம்பித்த போது அம்மணமாக்கி துரத்திவிட்டார்களே அப்போதெல்லாம் எங்கே போனது இந்த முழக்கம்.கர்னாடகா,கேரளா,ஆந்திராவில் காங்கிரசு அரசுகள் இருக்கும் போது ஏன் தன்ணீர்பிரச்சினையின் போது சொன்னார்கள்”3 மாநிலம் மட்டும் போதாது இந்த தமிழகமும் எப்போது காங் வசம் வருகிறதோ அப்போது தான் காவிரி,பெரியாறு,பாலாறு பிரச்சினை தீரும்”
.இப்படி எந்த ஒரு தமிழகப்பிரச்சினைக்கும் “அவர் நல்ல முடிவைஎடுப்பார் என நம்பிக்கை இருக்கின்றது” எனும் பெருச்சாளிகள்.இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் எனில் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவு தரவேண்டுமெனில் அது கண்டிப்பாய் அமைதிப்படையை அனுப்பியது சரியா தவறா என்ற விவாதத்தில் தான் முடியும் .அந்த முடிவில் ராஜீவ் கொல்லப்பட்டது சாதாரணமாகிப்போகும்.பிறகு யார் பேரை சொல்லி ஆட்சியைப்பிடிப்பது.மீண்டும் யாராவது செத்தால் தான் ஆட்சியை பிடிக்கக் முடியும். .அது தான் ஒரு முத்திரை அதன் மேலேயே கைவைத்த்தால் நோகாமலா இருக்கும்.
தங்க பாலு சொல்கிறார்” பாஜக கூட இப்படி செய்ததில்லை”எப்படி செய்வார்கள் காங் காட் ஒப்பந்தம் அமுல் படுத்திய போடு தான் திட்டமிட்டே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.ஏன் தற்போது நாட்டை அடிமையாக்கும் அணு சக்தி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டபோது ராமர் பால பிரச்சினையை கையிலெடுத்தார்கள்.இரண்டு பெயரும் தான் வேறே தவிர உள்ளே இருப்பது அதே பார்ப்பன பாசிசமும் அமெரிக்க அடிமைப்புத்தியும் தான்.
ராஜீவ் என்ற அந்த முத்திரை சிதைக்கப்படவேண்டும் துரோகத்தின் வரலாறான காங்கிரஸ் விரட்டப்படவேண்டும்.காங்கிரஸ் குட்டிதலைவர்களுக்கு விழுந்த செருப்படி காங்கிரசுக்கும் விழவேண்டும்.செத்துப்போனவன் என்பதால் ஹிட்லர் யோக்கியனாகிவிடுவானா?ஒரு பாசிஸ்ட் செத்தப்பின்னும் உயிர்த்தெழுகிறான் அவனை அம்பலப்படுத்தாத வரை.அதனால் தான் காந்தி தேசப்பிதாவாகவும் பஜாரி அம்மாவாகவும் நீட்டிக்க முடிகிறது.அதற்கான முயற்சியை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் வந்த மகஇக வின் பாடல்”காங்கிரஸ் என்றொரு கட்சி அதன் கருமாதி இழவுக்கு காலம் வந்தாச்சு” அமைதியாய் இருந்தால் மக்களுக்கு அவர்கள் கருமாதி வைத்து விடுவார்கள்.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 15 மறுமொழிகள் »
டிசம்பர் 24, 2008 by kalagam
I.T-ன் ஆணாதிக்கம்
தொடரும் ஆணாதிக்கமும் அடங்கிப்போன பெண்ணியமும்
நம் சமுதாயத்தில் பெண்கள் போலீசு , நர்சு வேலைக்கு செல்வதை அருவறுப்பாகவே நீண்டகாலமாக பார்த்து வந்தனர்.அவர்களை பற்றி மோசமான கருத்தினை பதிவு செய்து உலாவ விட்டு விட்டார்கள்.மாப்பிள்ளைக்கு பெண் தேடும் போது கூட சொல்வார்கள் “பொண்ணு வேலைக்கு போனா நல்லதுதான் ஆனா நர்சு வேலைன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்”"வேற வழியில்ல அவங்களுக்கு மேலதிகாரிகளுக்கு இணங்கித்தான் நடந்தாகவேண்டும்”.
“ஹவுஸ் நர்ஸ் அப்படீனாவே அது விபச்சார தொழில்தான்”இது ஒரு எம்.டி.படித்த மருத்துவர் உதிர்த்த வார்த்தை,ஆணாதிக்க ஆணோ அல்லது பெண்ணோ தான் செல்லும் இடமெல்லாம் ஆணாதிக்க சிந்தனையை பரப்பி அதை பொது கருத்தாக்குகின்றனர்.அதில் வெற்றியும் பெறுகின்றனர்.இவர்களின் வாய்க்கு கிடைத்த புது அவல் தான் “ஐ.டி பெண்கள்”.ஐடியில் பணிபுரியும் பென்களை பற்றி சில கருத்துக்கள் தூவப்படுகின்றன”ஐடி இருக்கிறவ ஒருத்திகூட யோக்கியமா இருக்கமாட்டாளுக,பொட்ட கழுதங்க கையில காசு வந்தவுடன் ஆட்டம் போடறாங்க “இந்த கூற்றுகள் ஒரு புறம் இருக்க,வினவு எழுதியிருந்த ஐடி கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த கோமாளிகள்” நீ என்னா சொல்லற,இங்கே யாரும் பார்சியாலிட்டி பார்க்குறதுல்ல தெரியுமோ? மனிதனை இங்கே தான் மதிக்கறாங்க. உண்மையில் நான் பழகிய பல பேரிடம் ஒருவர் கூட “எங்களை மனுசனா மதிக்கறாங்க என்று சொன்னதே இல்லை” ஒரு பெண் தொழிலாளி கூட மனம் திறந்து கூறியதில்லை”இங்கெ பாகு பாடு இல்லாமத்தான் நாங்க இருக்கோம்” என்று.
உண்மையை சொன்னால் மற்ற இடத்தில் விட ஐடி,பிபீஓக்களில் பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப்படுகின்றது.இதுவே ஆணாதிக்க அரிப்புக்கு மூக்கிய காரணம்.சம்பளம் மட்டும் தான் இணையாக இருக்கின்றதே தவிர மற்ற படி வெளியே தொடரு அதே”பாலியல் ரீதியிலான தொல்லைகள்,கேலிகள்,ஆபாசப்பேச்சுக்கள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன ஐடி,பிபீஓ பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள்.”ஐடி,பிபீஓவந்த பிறகு பெண்கள் ரொம்பவே முன்னேறிட்டாங்க” என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது,அந்த ஒலியில் பெண்களின் மெல்லிய விசும்பல் சத்தம் மறைந்து போகின்றது.
ஐடி,பிபீஓ-ல் சங்கம் கட்ட உரிமை யில்லாத காரணத்தால் இங்கு மற்ற தொழிலகங்களை போலன்றி தொழிலாளர்கள் உரிமைகளை பேசாது பெருமைகளையே பேச வேண்டும்.எதையும் பழகிக்கொள்,பழக்கிக்கொள் இது தான் ஐடி,பிபீஓக்களின் தார்மீகக்கட்டளை.எப்படி பள்ளி கல்லூரியில் ஆண்களை விட பெண்கள் குறைவாயிருக்கின்றார்களோ அதைப்போலவே ஐடி,பிபீஓ லும் இருக்கின்றது.எப்படி ஒரு ஆண்பள்ளி,கல்லூரிகளில் பெண்ணை நுகரத்துணிந்தானோ அதையே இங்கேயும் தொடர்கின்றான்.
ஐடி,பிபீஓ-ல் பெண்ணுக்கு உரிமையெல்லாம் கிடையாது. இருக்கும் முக்கிய கடமை “மற்றவர்கள் நுகர்வதற்கு தன்னை தயார் செய்வதே. இனி கதைக்குள் சென்று மீண்டும் கட்டுரையை தொடருவோம்.
—————————————————————————————————————————————————————————–
நல்லதூக்கம் ஹாஸ்டல் ரூம் மேட் எழுப்பினாள்”ஏய் எந்திரிடீ மணி 7.30 ஆயிடுச்சு”. .பஸ் 8.30 க்கு ஒண்ணு இருக்கு அதை விட்டா 9 மணிக்கு தான் பேரு வைச்சிருக்கானுங்க ஐடி ஹைவே என்று என முனகியபடியே எழுந்தேன்.கண்ணெல்லாம் ஒரே எரிச்சல் .அப்பா அம்மவிடம் போனில் இரவு 2 வரை சண்டை”என்னா எப்ப பார்த்தாலும் ரொம்ப அடம் புடிக்கற மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து திங்க கிழமை வராங்க நீ லீவு போட்டுட்டு ஊருக்கு வா,ஏண்டி நீ கல்யானம் பன்னிக்குவியா மாட்டியா”இப்படி வசைகள் வாரத்துக்கு இருமுறையாவது நடக்கும்.அடுத்த நாள் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல பேசுவார்கள். நான் ஊரிலிருந்து வந்து ரெண்டு வருச மாகுது காலேஜ் முடிந்தவுடனே வந்தேன்.அண்ணன் இங்கே தான் எச் சி ல்-ல வேலை செய்யறான்.கடந்த ஆறு மாசமா அப்பாவும் அண்ணனும் மாறி மாறி “சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணு” நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஒரு வேளை அண்னனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சோ என்னவோ என்ன கல்யாணம் பண்னச் சொல்லறான்.வாரத்தில் ஆறு நாள் வேலை ஞயிறு மட்டும் தான் விடுமுறை காலையிலேயே அண்ணன் போன் செய்வான் இன்னைக்கு எங்கேயெல்லாம் போற சொல்லு சினிமாவுக்கா நான் கூட்டிடு போறேன் ,கடைக்கா நான் கூட்டிட்டு போறேன்,இன்னைக்கு நீ போகாதே நான் வெளிய போறேன்.சொல்லாமல் எங்கேயாவது சென்று விட்டு வந்தால் எங்கே போனேன் என்று லிஸ்ட் ஒப்பிக்க வேண்டும்.ஆரம்பத்தில் பாசம் என நினைத்தேன் பின்னாளில் தான் தெரிந்தது அவன் தான் இலவச போலீசு என்று.
குளித்து விட்டு சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு தெருவில் பேருந்து நிலையத்தை நோக்கி நடைப்போட்டேன்.வழக்கமாய் தெரிந்த முகங்கள் தெருவில் பட்டன. நின்று கொண்டிருந்த பஸ்-ல் ஏறினேன்.மகளிர் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்து இருந்தனர். நடத்துனர் எதுவும் பேசாது டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.யாராவது கேட்பார்கள் என்று பேருந்தில் இருந்த பெண்கள் எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தோம்.யாரும் கேட்கவில்லை பேருந்து நகரத்தொடங்கியது அப்படியே என் நினைவுகளும்.இந்த கம்பெனியில் சேர்ந்து 1 வருடம் இருக்கும் அடிக்கடி மிஸ்டு கால் வருகின்றது.கால் வந்தவுடன் எடுத்து ஹலோ என்றதுமே கட்செய்கிறார்கள்
போன மாதம் ஒரு கால் அவன் என்னோடு வேலை செய்யும் சீனியர் அவனிடம் தான் சந்தேகங்களை கேட்பேன் .”ஹலோ “என்றேன்.
நான்தான் முகில் என்றபடி பேசிக்கொண்டிருந்தான் தேவையில்லாமல். இறுதியில் பயந்த படியே ” நான்………….” என்றான் . நான் “இப்படியெல்லாம் பேசறமாதிரியி ¢£ருந்தா என்கிட்ட பேசாதீங்க ” அவனோ தொடர்ந்து கொண்டே இருந்தான் டக்கென போனை ஆப் செய்தேன் .எனக்கு பயமாய் இருந்தது நாளைக்கு ஆபீசில் என்ன பேசிக்கிட்டு இருப்பானோ?.அடுத்த நாள் முதல் அவன் என்னிட நேராய் பேசாது அவனின் நண்பர்களிடம் பேசுவது போல ஜாடையாக பேசி வந்தான்…..
யாரோ நெருக்குவது போலிருந்தது ஒரு எருமை என்மேல் உரசிக்கொண்டிருந்தான். நான் முறைத்தபடியே நகர்ந்து சென்றேன்.அந்த எருமையோ வெற்றி பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தது.அதற்குமேல் அவனின் முகத்தை பார்க்கவில்லை.பஸ் ஸ்டாப் வர பொறுமையாக இறங்கினேன்.பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டு படிக்கட்டை நோக்கி வரும் போதே சிரிப்புக்களும் கேலிகளும் அதிகமாகிவிடும். நாங்கள் எதையும் கேளாமல் செவிடர்களாய்தானிருக்க வேண்டும்.சமூகம் சொல்லித்தந்திருக்கின்றது நாங்கள் பெண்மையாம் அதிர்ந்து பேசினால் கூட வாயாடியாக்கப்படுவோம்.
அலுவலகத்துக்குள் வந்தேன் ஹாய் சொல்லிவிட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். சரியாக ஒரு மணி நேரம் ஆன உடன் சிலர் ஒவ்வொரு வராய் வந்து அருகிலுள்ளவரிடம் பேசுவது போல ஆபாசக்கதைகளையும்,அந்தப்பொண்ணை பார்த்தேன் என்று கதைஅளந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவுக்கு பெண் ஊழியர்களோடு உணவருந்தினேன்.சினிமா முதல் எல்லா கதைகளையும் பேசிக்கொண்டிருப்போம்.மறந்து மருந்துக்குகூட எங்களின் பாதிப்புக்களை பேசியதில்லை.மீண்டும் வேலை தொடர்ந்தது.சுமார் ஆறு மணிவாக்கில் பக்கத்து டீம் சூப்பர் வைசர் வந்தார் அருகில் உட்கார்ந்துக் கேட்காமலேயே சாப்வேர் டவுட்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிறகு தேவையில்லாமல் மொன்னை ஜோக்குகளை அல்ளிவிட்டு சிரித்து கொண்டு இருந்தார்.மணியோ 7.30 ஆனது “என்னங்க நீங்க கிளம்புலயா?” என்ற படி அவர் கிளம்பினார். இது வாரத்துக்கு 3 முறையாவது நடக்கும்.அலுவலகத்தில் இப்படி பல பெண்களிடத்தில் தன்னை அறிவாளியாக காட்டிக்கொண்டு திரிபவர்கள் ஆண்களிடத்தில் பெருமைக்குரியவர்களாகின்றனர். நாங்கள் இப்படி சூப்பர் வைசர் போல மேலதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் பஸ்ஸில் செய்ததை போல் விலகிக்கூட செல்லமுடியாது சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
பஸ்ஸில் இருந்த பொறுக்கிகளால் எங்களை சிரிக்க வைக்க முடியாது எத்தனை ஜோக்குகளை சொன்னாலும்.மேலதிகாரிகளிடம் சிரிப்பே இல்லை யென்றாலும் கூட சிரித்துதான் ஆக வேண்டும்.இவர்களின் தூண்டிலில் மாட்டிய, தானாய் மாட்டிக்கொள்கிறவர்கள் யாரும் எப்பொதும் பெண்களாகிய எங்களுக்குள் இதைப்பற்றீ பேசியதே இல்லை.பேசவும் முடியாது.அதை பேசினால் கூட இந்த சமூகம் எங்களை குற்றவாளியாக்கிவிடும்.பிரச்சினையை எதிகொள்ளும் நாங்கள் அமைதியாக பொறுமையாக ஊமையாகத்தான் இருக்கின்றோம்.எங்களை கேலி செய்யும் போது நாங்கள் வாய்மூடி இருப்பது போலவே நன்றாக பழகு ஆண் ஊழியர்களும் இருக்கின்றார்கள்.எங்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கின்றது ஆண்களின் உரிமை ஆதிக்கம் செய்வது,பெண்களின் உரிமை அமைதியாய் இருப்பது.
————————————————————————————————————————————————————————
ஆணாதிக்கம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது குறிப்பாக ஐடி பிபீஓவில் பெண்கள் மூன்று நிலையாக வகைப்படுத்திக்கொள்கிறார்கள்.ஆணாதிகத்தை எதிர்கொள்ளாமல் விலகிச்செல்லல்,ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொல்லல்,அதை எதிர்த்து போராடுவது-இது மிகசொற்பமே.முதல்வகை பெண்கள் தான் இங்கு ஆகப்பெரும்பாலும்,சக ஊழியன் அனாகரீகமாக நடந்துகொண்டான் என்பதை வெளிப்படுத்துவதில்லை,இதனால் தங்கள் மானம் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள்.அதற்காக அவர்களை குற்றம் சொல்ல முடியாது.கற்பு என்பதற்கான வரையரையை ஆணாதிக்கம் விரிவு படுதிக்கொண்டே போகின்றது.
பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும்? ஆண் ஒருவன் பார்க்கும் போது தலையை குனியவேண்டும்,பேருந்தில் என்வனாவது உரசினால் விலகிப்போகவேண்டும்.எதுக்குடா இப்படி இடிக்குற என்றால் பெண்மையின் புனிதம் கெட்டு விடும்.பள்ளி,கல்லூரி சலைகள்,பணிபுரியுமிடம் எங்கும் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பலருக்கும் ஆணாதிக்கம் என்றாலே கோபம் பொத்துக்கொண்டு கோபம் வருகின்றது. தனியாக சக பெண் ஊழியரை ஆபாசமாக பேசுவது,அப்பெண்ணிடம் இயல்பாக பேசுவது இப்படி செய்பவர்கள் பொறுக்கிகள் எனில் அதை அமைதியாகவோ அல்லது களிப்படைந்து கேட்டுக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் தவிர வேறென்ன.உன் தாயை ஒருவன் விபச்சாரி எனும் பொருள் படும் படி பேசினால் வரும் கோபம் உனக்குஏன் சக ஊழியரை அப்படி கீழ்த்தரமாக பேசும் போது கோபம் வரவில்லை.அதற்கு பேரென்ன?தன்னுடன் வேலை செய்யும் பெண் பாதிக்கப்பட்கிறார் மற்றவனால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் எனில் உன்னை அமைதியாய் இருக்க வைப்பது எது?
ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொள்ளல்-
இவ்வகைப்பெண்களிடம் பெண்ணுரிமை பூத்தா குலுங்குகிறது? இது பென்ணடிமைத்தனத்தின், ஆணாதிக்கத்தின் மறு முகம்.ஒரு ஆண் எப்படி மற்றவரை கவர்வத்ற்காக திரிகின்றானோ அதைப் போலவே இப்பெண்ணும் திரிகின்றார்.தொடர்ச்சியான ஆணாதிக்கத்தின் தாக்குதல்கள் படிபடியாக இனிக்க ஆரம்பித்து விடுகின்றது.அதற்கு ஏற்ற படி த்ப்பாமல் தாளம் போடுகின்றனர்..இங்கும் ஆண்களின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றிக்கொள்வதால் விசும்பல்கள் எழாது பெருமையே கொள்கின்றனர்.இதையே சாக்காக வைத்து ஆணாதிக்க வாதிகள் கூக்குரலிடுகிறார்கள்”இவளுங்க கையில பனம் வந்த வுடனே எப்படி ஆடறாங்க ,இதுக்குதான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கணும்.”
ஐடி,பிபீஓ -ன் இந்த மிகச்சிறு கும்பலின் மானங்கெட்ட நடத்தைதான் ஒட்டு மொத்த ஐடி,பிபீஓபெண்களின் நடத்தையாக காட்டப்படுகின்றது.
இப்படிப்பட்டவர்களின் பெண்ணுரிமை என் முன்னால் பலமுறை அரங்கேறியிருக்கின்றது.
அதில் ஒன்று
HR ஆக பணிபுரியும் அவர் ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டவர், ஏதாவது ஒரு function எனில் தன் பதவியையும் மறந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பார்.சனிக்கிழமையெனில் free dress codeஅலுவலகம் அனுமதித்திலேலே முடிந்த அளவுக்கு ஆபாசமான ஆடையை அணிந்திருந்தார்.சீனியர் அக்கவுண்டன்ட் சொன்னான்”இங்க பாரு……… இது மாதிரி டிரெஸ் போட்டுட்டு வந்தா ரெண்டு புள்ள பெத்த எனக்கே ஒரு மாதிரி இருக்கு”.இதைக்கேட்ட எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது.அப்பெண்ணோ தனக்கு அங்கீகாரம் கிடத்தமாதிரி சிரித்தார்.
இந்த ஆணாதிக்கத்திலிருந்து எப்படித்தான் விடுதலை பெறுவது?ஆண்டுக்கொரு தரம் பெண்கள் தினம் கொண்டாடி கேக் தின்று தண்ணீர் குடித்தால் மட்டும் வராது உரிமைகள்.அது போராட்டம் இன்றி கிடைக்காது.போராட்டத்திற்கு தேவை பெண்களிடம் ஐக்கியம்.அரசியல் ரீதியிலான ஐக்கியம் மட்டுமே நீடிக்கும்.ஆபரணம்,அழகு,ஆதிக்கம்,மதம் என அனைத்தாலேயும் கட்டிப்போட்டிருக்கின்றது ஆணாதிக்கம். இவற்றை தூக்கி எறியாமல் பேசும் நம் பேச்சுக்கள் ஆணாதிக்கத்துக்கு முதுகு சொறிவதாகவே இருக்கும்
குறிச்சொற்கள்: ஆணாதிக்கம், சங்கம், பாலியல், பெண்ணியம், I.T
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 13 மறுமொழிகள் »
டிசம்பர் 28, 2008 by kalagam
B.P.O அடிமை .காம் பகுதி-3
அடிமைகளின் சொர்க்கம்
டிசம்பர் மாதம் என்றாலே பீபிஓ கம்பெனிகளில் ஜாப் வரத்து வெகுவாக குறைந்து விடும்.கிறிஸ்துமஸ் முடியும் வரை அதிக ஜாப்கள் வராது. அந்த மாதம் கூட சரியான நேரத்துக்கு எங்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். பக்கத்து டீம் ஜாப் ஐ வாங்கி செய்ய சொல்வார்கள்.
இன்னைக்கும் பக்கத்து டீம் ஜாப் ஐ வாங்கி செய்யசொல்லிட்டானுங்க.மெதுவாக செய்ய ஆரம்பித்தேன் மணி பனிரெண்டுதான் ஆகுது .காலையில வந்த வுடனே டி.எல் கிட்டேசொன்னேன்”இன்னைக்கு பர்மிசன் வேணும்” பார்க்கலாம் ஜாப் வரத்தை பார்த்துட்டு சொல்லுறேன். கடந்த ரெண்டு மாசமா நான் பர்மிசனே போடவில்லை,இது தான் கடைசி வாரம் இப்போ போடலேன்னா 3 வது மாசம் ஆயிடும்.இன்னும் டி.எல் வரலை.அவரு பிரேக் போனாலே எப்படியும் 1 மணி நேரம் ஆயிடும். கதைஅடித்துக்கொண்டு இருந்தோம்.
நான் “எங்க தாத்தா ராஜராஜ சோழன்கிட்டே படைத்தளபதியா வேலைசெஞ்சாரு” கதை விட்டேன்.உடனே ஒருவ்வர் சொன்னார்”ந்£ங்க என்ன கம்யூனிட்டின்னு சொல்லுங்க உண்மையா பொய்யான்னு சொல்லுறேன்”.
மிகவும் சாதரணமாக மற்றவர்கள் இருந்தார்கள். “எனக்கு என்ன சாதின்னு தெரியாது ஆனா ஒண்ணுமட்டும் தெரியும் பாப்பான் தான் தான் நம்மையெல்லாம் வைப்பாட்டி மக்களா மாத்தினான்.என்னோட சாதிய நான் சொன்னேனா அவன் சொன்னது உண்மைன்னு ஆயிடும்” என்றேன்.அருகில் இருந்த சுரேஷ் “சும்மா அதையே சொல்லாதீங்க எந்த பாப்பான் உங்களை படிக்கவேண்டாமுன்னு சொன்னான்,திமிரெடுத்துப்போயி நீங்க படிக்கலேன்னா அதுக்கு அவனா பொறுப்பு அவன் பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான் அவனை புடிச்சு ஏன் நோண்டுறீங்கதிமுக ஆட்சியில முதலியாருங்க எல்லாம் எல்லாம் வளந்தாஙளே அப்புடி எந்த பாப்பான் பணக்காரனா இருக்கான்? என வெடித்தார். “அப்புடியா எல்லாம் முதலியாரு பணக்காரனாயிட்டான்னு சொல்லுறீங்களே எங்க ஊரில் பக்கம் கஞ்சி தொட்டி திறந்தப்ப கியூ வுல நின்னது முக்காவாசி அவுங்க தான் திமுக ஆட்சியில இருந்தப்ப கூட சிலபேர் பொறுக்கி தின்னுறுப்பான் அதுக்காக முதலியார் சமூகமே முன்னேரிடுச்சா என்ன?சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன் பாதிப்பேர் தன் கண்களில் எனக்கு ஆதரவாய் பார்வை பார்த்தனர். மற்றொரு பெண் ஊழியரோ “எங்க சாதியில கூட அப்ப்டி இருக்காங்கன்னு சொன்னா நான் கோபப்பட மாட்டேன் அப்படியும்கூட பன்னலாம்”சந்தடி சாக்கில் தான் ஆதிகக சாதி என்பதை எடுத்துவிட்டார். அதற்குள் மதிய உணவுக்கு சென்றோம்.
சாப்பிடு போது கூட கடுமையான விவாதம் நானும் சுரேஷ¤ம் பேச அருகிலிருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உங்களை எந்த வகையில முன்னேற்றத்தை தடுத்தாங்க? .”தமிழகத்தில எதனை கிராமத்தில ரெட்டை குவளை முறை இருக்குன்னு தெரியுமா.வயதான தலித்தை கூட் மேல்சாதிகாரன் பயன் வாடா போடான்னு கூப்பிட்டு பார்த்து இருக்கீங்களா?”
எல்லாம் பார்த்து இருக்கோம் அப்புறம் என்னா இதுக்கு அவன் அங்கே இருக்கான் வேற இடத்துக்கு போக வேண்டியது தானே ரசிகர் மன்றம் வைக்கின்றது யார் ? கள்ளச்சாராயம் குடிக்கிறது யார் ? தலித்துங்க தானே முதல்ல தன் முதுகுல இருக்குற அழுக்க துடைச்சுட்டு வரசொல்லுங்க என்னமோ தலித்து எல்லாம் யோக்கியம் மாதிரி பேசுறீங்க,உமா சங்கர் என்ன சாதின்னு தெரியுமா அவரு படிச்சு முன்னேறுல இவனுக எல்லாம் சோம்பேறி”என்றார்.சற்று நேரத்துக்கு முன் எனக்கு ஆதரவாய் இருந்த கண்கள் எல்லாம் இப்போது சுரேஷ் பக்கம் சாய்ந்திருந்தது. நான் தீர்க்கமாய் சொன்னேன் எல்லோரு ரசிக்குறாங்களே இளையராசா அவரு ஊருக்கே ராசான்னாலும் பண்ணைபுரத்துல அவரு சொந்தக்காரனுக்கு ரெண்டாவது டம்ளர் தான் அதை விடுங்க மேல்சாதி மேல்சாதி
ந்னு பீத்திக்கிறீங்களே உன்னை ஏன் கோயிலுக்குள்ள மூலஸ்தானத்துக்குள்ள விட மாட்டேங்குறான் கேட்டா அது அவன் சுத்தமானவன் சொல்லுவீங்க ஏன் நீ உன் குடும்பத்துல யாருமே சுத்தம் இல்லையா ? இவ்வலவு ஏன் ஐஐடியில மாடுமேய்க்குற பயலுக வந்தா படிப்போட தரம் குறையும்னு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துனானுங்களே அப்பமட்டும் உங்களோட எல்லா வாயையும் மூடிக்குறீ…………. நேரம் ரொம்ப ஆகிவிட்டது .கைகள் காய்ந்திருந்தது.
மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தேன் டி.எல் பக்கத்து டீமிலிருந்து வாங்கி நிறய ஜாப் கொடுத்தார்.எல்லாம் முடித்தேன்.கைகள் வேலை செய்தாலும் மனமோ சரியா பதில் சொன்னோமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றது.என்ன செய்யலாம் ஆபிஸ் விட்டவுடனே சுரேஷ் கிட்ட நிறய பேசனும் அவன் எப்படி யெல்லாம் கேள்விகேப்பாருன்னு மனதுக்குள்ளயே யோசித்து பதிலும் சொல்லிப்பார்த்தேன். இந்த யோசனையில் பர்மிஸன் கேட்டதை மறந்து போனேன்.மணி 4.30 ஆனது கிட்டதட்ட இது 6 து முறை சரியான நேரத்துக்கு கிளம்புவது. திரும்பி பார்த்தேன் சுரேஷ் சென்று கொண்டிருந்தார்.ஓடிப்போய் அவரோடு நடக்க ஆரம்பித்துவிட்டேன்.எதேச்சையை அவரின் கையை பார்த்தேன் கையில் கேடயம் வாள் மற்றும் தனியாக மீன் பச்சை குத்த்ப்பட்டு இருந்தது.இந்த சின்னத்தை எங்கேயோ பார்த்த நினைவு, அவர் ஆரம்பித்தார்” நானெல்லாம் எங்க சாதிக்காக எத்தனை கேஸ் விழுந்திருக்குன்னு தெரியுமா தஞ்சாவூரில ஒருத்தனை ஓட வீட்டு குத்துனேன் எதுவும் வேண்டாமுன்னு விட்டுட்டு வந்துட்டேன்
எனக்கு பி சிகளை கண்டாவே புடிக்காது.எங்க ஊர் தஞ்சாவூர் மன்னாகுடி அடுத்த கிராமம் பிசிங்க அடிச்சா திருப்பி அடிதான்.சுத்தி 108 கிராமம் இருக்குது எங்க ஊர் மாதிரி எங்கேயும் இல்லை நான் ஸ்டேட் கபடி பிளேயர் பக்கது ஊரில எங்க டீம் போனாலே பைனலில பிராடு பண்ணி தோக்கடிச்சுருவானுங்க தான் ஆதிக்க சாதியிடம் எப்படியெல்லாம் அடிப்பட்டதை விவரித்தார். கிண்டி ரயில்வே ஸ்டேசனில் உட்கார்ந்த படி பேசிக்கொண்டிருந்தோம்.என்ன தான் தீர்வு என்றேன் . நான் வரலை மற்றவனும் வரவேண்டியது தானே எல்லோரும் படித்தா சாதி ஒழிஞ்சுடும்” சொல்லிவிட்டு நேரமாச்சு என்ற படி கிளம்பினார்.
நான் யோசித்தேன்”ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து இப்படி அம்மக்களுக்கே எதிராக பேச வைப்பது எது? ஒருவேளை அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டதால் இப்படி பேசுறாரோ.மறு நாள் காலையில் டீ பிரேக்கின்போது மீண்டும் ஆரம்பித்தது சுரேஷ் பேச ஆரம்பித்தார்”என்ன விவசாயம் பண்ணுறாங்க மாடர்ன் உலகத்துல அமெரிக்காவுல எப்படி முன்னேறுறானு பாக்குறத விட்டுட்டு இன்னும் நிலத்தை புடிச்சு தொங்குறானுங்க என ஆரம்பித்து நேத்து போல் தாழ்த்தப்பட்டோர் மீது சேற்றை வாரி இறைத்தார்.
நானும் பதிலுக்கு பேசினேன் பிறகுதான் புரிந்தது இவன் பாதிக்கப்பட்டதால் பேசவில்லை அடிமைப்புத்தி அவனை பேச வைக்கின்றது
நாலு பேர் இருக்கும் போது தன்னை மேல்சாதியாக காட்டிக்கொள்வது தனியே என்னிடம் பேசும் போது தலித்தாக காட்டிக்கொள்வது என தன் பச்சோந்தி தனத்தை காட்டிக்கொண்டு இருந்தான். இவனின் தேவை எல்லம் தன்னை மற்றவர்கள் ரசிக்கவேண்டும் என்பது தான்.
நான் வெறுத்துப்போனேன் இப்படியும் ஒரு மனிதனா? பிரேக் முடிந்து வரும் போது நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள் “New year celebration contest ” நடனம் பாட்டு என சகல கலைகளும் அடங்கியிருந்தன. டி.எல் சொன்னார் எல்லாத்துலேயும் கலந்துக்கோங்க.என்னோட டீம் -ல் இது சம்பந்தமாக பேச ஆரம்பித்துவிட்டேன். நை ஷிப்ட்க்கும் ஓடிக்கும் அலவன்ஸ் தரதில்ல போட்டி வக்குறானுங்களாம் போட்டி.என் டீமிலிருந்த பெண்ணை கேட்டேன்” நீங்க கலந்துக்க போறீங்களா” ” நல்லா டேன்ஸ் பண்ணுவேன் ஆணா வேண்டாம்” என்றார்.
மூன்று நாட்கள் போனது நடன போட்டிக்கு இன்சாஜ் இருவர் மணிக்கொருதரம் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர் அப்பென்ணிடம்”கலந்துக்கோங்க”.கடைசியாய் விபி வந்தார் என்ன கேர்ள்ஸ் யாரும் கல்ச்சுரல் புரோகிராம்ஸ்ல கலந்துக்கவே இல்லீயா ஏன்? எல்லாம் பேர் கொடுத்துருங்க சரியா ?சொன்னவுடனே பணிபுரியும் பெண்களில் பாதிபேர் பேரை கொடுத்தார்கள் என் டீமிலிருக்கும் பெண் உட்பட. மாலை 6 மணி ஆனது திடீரென நிறைய ஜாப் வந்திருந்தது செய்து கொண்டிருந்தோம்.ஒருவர் லைட்டாக என்னிடம் கேட்டார்” நீங்க இந்த புரோகிராம் பத்தி என்ன நினைக்குறீங்க?”
மெதுவாய் சொன்னேன் ” சொறி நாய்கள் ஆடுகின்றன வெறி நாய்கள் வேடிக்கை பார்க்கப்போகின்றன” அவ்வளவுதான் ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் ” எப்படி சொல்லலாம் ,இதை ஏன் ஒரு எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் ஆக நினைக்ககூடாது,டேன்ஸ் ஆடுற எல்லாரும் கீழ்த்தரமானவங்களா? அந்தப்பெண் சொன்னார்” நடனத்திறமை எங்கிட்ட இருக்கு இதை எப்படி கேவலமா சொல்லலாம் என்றார் மூக்கு விடைத்தபடி.
” அதாவதுங்க நீங்க எங்க வேணும்னாலும் ஆடலாம் இங்கே எதுக்கு ஆடறீங்க உண்மையாலுமே நடனத்து மேல அவ்வளவு பற்று அப்படீன்னா நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்களா. நீங்க சொல்லுற எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் அப்படீங்குறது இப்ப எதுக்கு பயன் படுதுன்னு சொல்லுங்க மற்றவரிடமிருந்து தன்னை வித்யாசப்படுத்தி காட்டறதுக்குதானே.அதுக்கு பல வழிமுறை இருக்கு எந்த வழியா தன்னை வெளிப்படுத்துறீங்க என்பதுதான் முக்கியம்.நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்கன்னா யாரும் உங்களை கேலிப்பொருளா பார்க்க மாட்டாங்க ஒருவேளை போலீசு அடிகூட கிடைக்கலாம் நீங்க் தயாரா.ஆனா இங்க எப்படி? ஓடி பார்த்தா பணம் கிடையாது, நைட் ஷிப்ட்ல food கிடையாது தினமும் ஓ.டி ஓ.டி ன்னு நம்மள ஓடவச்சுட்டானே அதுக்கு ஆடறீங்களா அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?ஸ்கூல்,காலேஜ்ல ஆடறதுக்கும் ஆபீஸ் ல ஆடறதுக்கும் வித்யாசம் இருக்கு நீ நேரடியா பாதிக்கப்படுறயா இல்லையா? இதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லி தான் ஆடறீங்களா. அப்படித்தான் மத்தவங்களுக்காக என்னை எல்லோரும் ரசிக்கணும்கறதுக்காக ஆடுவேன்னு சொல்லுங்க அதை விட்டுட்ட்டு நடனத்திறமை அது இதுன்னு கதை அளக்காதீங்க.ஆனா ஒண்ணு இங்க நீங்க ஆடறது மூலமா தொழிலாளியான நீங்க கேள்வி கேட்குற உரிமையைஇழந்து அடிமையா மாறுவீங்க என்பது மட்டும் நிச்சயம்.”
ஒரு வாரம் கழிந்தது function க்கு நாளும் இடமும் குறித்துவிட்டார்கள்,ஆரம்பத்தில் போககூடாது என நினைத்த நான் கோமாளிகள்
என்னதான் செய்கிறார்கள் என்பதற்காகவே சென்றேன். நான் போவதற்கு பல நேரம் முன்னே நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டார்கள், நான் போகும் போது சுரேஷ் ஆடிக்கொண்டு இருந்தார்.அடுத்து அந்தபெண் கும்பலாக ஆடியது.ஜோக் என்று சொன்ன படி எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் உம்மனாமூஞ்சியாகவே இருந்தேன்.இறுதியாக பேசிய பிரசிடெண்ட்”அடுத்த வருசம் நிறய ஜாப் வரும் எல்லோரும் அதிகமா ஓடி பார்க்கவேண்டிவரும் இந்த function ஒரு புத்துணர்வு தான் இந்த வருசம் வேலை செஞ்ச மாதிரி அடுத்த வருசம் 10 மடங்கு வேலை செய்யனும் சரியா லெட்ஸ் என்ஜாயென்றார்” வுடனே விசில் பறக்க அடுத்த பாட்டு ஆரம்பித்துவிட்டது.அவன் வெளிப்படையாகத்தான் சொல்கிறான்.இவர்கள் தான் தொழிலாளி என்பதை மறந்து அடிமைகளாய் வரிசையில் நிற்கிறார்கள்.அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை அவசராவசரமாய் வெளியேறினேன்.ய்யரு என்னை கவனிக்கவில்லை.அடிமைப்போதையில் ஆடிக்கொண்டிருப்போரால் எதையும் கவனிக்க முடியாது ஆண்டானின் கட்டளையை தவிர.
குறிச்சொற்கள்: அடிமை, சாதி, சொர்க்கம், டிசம்பர் மாதம், புத்தாண்டு, B.P.O.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
டிசம்பர் 31, 2008 by kalagam
ஹேப்பி நியூ இயர்
ஒரு வாரம் முன்னிலிருந்தே
செல்பேசிகள்
சொல்லத்தொடங்கி
விட்டன ஹேப்பி நியூ இயர்……..
நடந்தவைகளை
மறப்போம் பத்திரிக்கைகளின்
காலச்சுவடுகள்
மெல்ல பதிந்து விட்டு
செல்கின்றன……
நடந்தவைகளை
மறக்கமுடியுமா என்னால்
நிம்மதியாய் உறங்கத்தான்
முடியுமா இனி
நடக்கப்போவதை நினைத்தால்……
கயர்லாஞ்சியின்
கொடுமைகள் எப்படி
மறையும்
அது மறையாத
வரை என் கனவுகளின்
நடுக்கங்களும் குறையப்போவதில்லை……..
என் காதுகள்
இசையை கேட்காமலே
மூடிக்கொள்கின்றன……
எப்படி என்
காதுகள் திறக்கும்
பறையை அடித்ததற்காக
பீயை வாயில் திணித்தவன்
மேல்சாதியாய் நீடிக்கும்
வரை
என் காதுகள்எப்படி கேட்கும்
ஹேப்பி நியூ இயரை……
என் வாய்
குழறிக்கொண்டிருக்கின்றது
வெட்டுப்பட்டு
சாகும் போது மேலவளவு
முருகேசனின் குரல்
குழறியதை விட இன்னும் அதிகமாக
நான் எப்படி சொல்வேன்
ஹேப்பி நியூ இயர்……..
என் பாதங்கள்
ஆட
மறுக்கின்றன பாதணிகள்
கக்கத்தில் ஏறுவது
நிற்காதவரை
என்னால் ஆட
முடியாது………
ரெட்டை டம்ளர்
பாலியல் வன்முறை
கொல்லப்படும் விவசாயிகள்
நெசவாளிக்கு
தூக்கு கயிறான கைத்தறி
இப்படி எதுவுமே
மாறவில்லை
ஹேப்பி நியூ இயரும் கூடத்தான்……
“மாற்றம்
ஒன்றே மாறாதது”
ஆம்
மாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றத்தினை கொண்டுவருவோம்
மக்களோடு மக்களாக
சாவது தெரியாமல்
ஊளையிடுபவர்கள்
தொடரட்டும்
நாம் தொடங்குவோம்
நமக்காக
அங்கு
பலரின் முடிவுகள்
காத்திருக்கின்றன .
குறிச்சொற்கள்: கவிதைகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஜனவரி 1, 2009 by kalagam
சாயம் வெளுத்துப்போன போலிகள்
போர்ஜரி கம்யூனிஸ்டுகள்
ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்ட்.மணி , ஞாயிறு என்பதால் பேருந்தும் அதிகமில்லை ரொம்ப நேரம் காத்திருந்து ஏறினேன் .நகர பேருந்தில் கூட்டம் அதிகமில்லை . ஒரு சென்ட்ரல் கொடுங்க என்றேன் .ரொம்ப பொறுமையாக அவ்ர் இந்தாங்க என்ற படி சில்லரையை கொடுத்தார்.கூட்டம் இல்லாதபோதுதான் அவர் முகத்தில் சிரிப்பும் சந்தோசமும் இருக்கும்.மிக விரைவாக வந்து சேர்ந்தது.வெளியே பலகை தெரிந்தது சென்னை சென்ட்ரல் . அப்படியே இறங்கி ரயில்வே நிலைத்துக்குள் சென்றேன்.கியூ ரொம்ப நீளமாக இருந்தது,அரை மணி நேரம் காத்திருந்து டிக்கெட்ட் ஐ வாங்கினேன் . நான் 2வது பிளாட்பாரம் செல்வதற்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.. அப்பெட்டியில் நான் தான் முதல் ஆள் மற்ற நாளில் அன்ரிசர்வு பெட்டிகலில் ஏற வேண்டுமெனில் தற்காப்பு கலை தெரியமல் உள்ளேயே செல்ல முடியாது .இன்னும் அரை மணினேரம் இருக்கின்றது. மெதுவாய் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். சரியாய் 30 நிமிடம் ஆக ரயில் கிளம்பியது.
எதிரில் ஒருவர் பொறியியல் புத்தகத்தை வைத்து கொண்டிருந்தார் ஒரு கல்லூரியின் புரபசர் என்றார்.அவருக்கு அருகி சுமார் நாலு மலையாளிகள்.மற்றவர்கள் யாரென தெரியவில்லை.அந்த மலையாளிகள் தொன தொன என்று பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சு கேரளாவை மிதமிஞ்சி புகழ்ந்து கொண்டே வந்தார்கள்.இந்தியத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டு வந்தார்கள் . அங்கு எல்லோரும் படித்த்வர்கள்,எல்லோரும் அறிவாளிகள்என்று, பேசுவது மலையாளமாக இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.ரயில் கிளம்பி 1.30 மணி நேரம் ஆகிவிட்டது. என்னால் தாங்க முடியவில்லை ,களத்திலிறங்க முடிவு செய்து விட்டேன்.
அதிலே அதிகம் பேசிய நபரிடம் கேட்டேன் ” நீங்க பாலக்காடா ? இங்கேயிருந்து போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்”, நாங்க பாலக்காடில்ல,திருவனந்தபுரம் எப்படியும் போக 8 அவர்ஸ் ஆகும். சம்பிரதாயமாக சடங்கு கேள்விகளை கேட்டு இப்போது ஆரம்பித்தேன்.”ஆமா,னீங்க என்ன கட்சி ஒருவர் ” நாங்கள் எல்லோரும் CPM,ஒருவரை சுட்டிக்காட்டி இவர் தான் டைபி நகரச்செயலாளர்”.”ரொம்ப வசதியாய் போச்சு என்ற படியே “கேரளாவுல கோக்குக்கு எதிரா – நீங்க தான போராட்டம் செஞ்சீங்க? “ ஆமாம் நாங்க தான், எப்பவுமே மக்களோட பிரச்சினைக்காக நாங்க தான் போராடுறோம்.அப்படியா பிளாச்சிமடா வில போராடுனது red flag ன்னு படிச்சேன். நீங்களோ மார்க்ஸிஸ்டுன்னு சொல்லுறீங்க.”இல்ல அவங்க மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் டெர்ரெர்ரிஸ்ட், நக்சலைட்ஸ்.”என்ன நக்சலைட்ன்னு சொல்லுறீங்கபோலீசு காரன் கிட்ட அடிவாங்கி மண்ட உடஞ்சு நிக்கறாங்க,உண்ணாவிரதமெல்லாம் இருக்காங்க.உலகத்திலேயே உண்ணாவிரதம் இருந்து அட்வாங்கி திருப்பி அடிக்காத பயங்க வாதி அவங்க தனோ” என்றேன்.அந்த இரு வரிசையில் இருந்தவர்களும் விவாதத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அத நானும் அவர்களும் உணர்ந்தனர்.உடனே அவர் ” நீங்க ரெட் பிளாக்கா?”என்றார். அதுவரை ரசித்த் ஆமோதித்த அருகிலிருந்தவர்களோ நான் தீவிரவாதியா என பார்க்க் ஆரம்பித்தார்கள்.
நான் ரெட் பிளாக் இல்லை அப்படியே இருந்தாலும் சொல்லறதுக்கு எனக்கு தயக்கம் இல்லை.சொல்லுங்க உங்க மார்க்சிஸ்டு அரசாங்கத்தால் ஏன் கோக்கை தடை செய்ய முடியவில்ல? ” அது சென்ட்ரல் கையில் இருக்கு நாங்க என்ன செய்ய முடியும்.
“அப்படியா சரி பெரியாறு பிரச்சினை என்னங்க? என்றேன். ஆக்சுவலா கேரளா மன்னருக்கு சொந்தமான இடம் அங்கே தமிழ் தன்ணீ கேட் தொல்ல பண்ணறாங்க. கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்னா கேரளாவுக்கு சொந்தமானதா,அப்படீன்னாஒரு காலத்துல சேர மன்னன் கேரளாவை ஆண்டான்னு சொல்லுறாங்க,அதுக்காக கேரளாவை தமிழன் சொந்தம் கொண்டாட முடியுமா. (அப்போதுபு.ஜ வில் பெரியாறு சம்பந்தப்பட்ட கட்டுரை வந்திருந்தது) .கையிலிருந்த புத்த்கத்தை எடுத்து புள்ளி விவரத்தோடு பெரியாறு அணை குறித்து சொல்ல ஆரம்பித்தேன்.அவர் வாய் திறக்க முடியவில்லை.
அது சரி அணையோட நீர் மட்டத்தை உயர்த்தலாம்ன்னு supreme court சொன்ன பிறகும் உங்களால சட்டசபையில சட்டம் போட்டு தடுக்க முடியுது? ஆனா 1 லி கோக் கழிவால 8 லி நல்ல தண்ணீ பாதிக்கப்படுது,விளை நிலமெல்லாம் அழிஞ்சு போகுது அதை சட்டசபை கூட்டி தடுக்க முடியாதா? . அட ஆமா என்றார்கள் பெட்டியிலிருந்தவர்கள். “டைபி கோக் பேக்டரிய உடைச்சதா பெருமை பட்டீங்கன்னா அதே டைபி தானே த்மிழ் நாட்டுக்கு தண்ணீ தரக்கூடாதுன்னு மறியல் செஞ்சங்க? அங்க ஒண்ணு பேசற்து,கர்னாடகாவுல தமிழகத்துக்கு நீர் தரக்கூடாதுன்னு சொல்லறது.இங்கேயும் தண்ணீ கொடுன்னு போராடுறதுன்னா? நீங்க எல்லாம் ஒரே கட்சின்னு சொல்லிக்குறீங்க எதுக்கு இந்த பித்தலாட்டம்.இப்படி இனவெறியோட செயல் படுற முதல்வரை மார்க்சிஸ்டு தன் கட்சியிலிருந்து நீக்கியிருக்கணுமா வேண்டாமா? நீக்க மாட்டாங்க ஏனா அது போர்ஜரி பார்ட்டி ஆப் இந்தியா.
” நீங்க சொல்றது சரி தான் நாமெல்லாம் இந்தியர்கள் மொழி இன பேதம் இருக்கக்கூடாது ஆமா நாங்க தப்புதான் பண்ணறோம்”வேறு வழியின்றி உண்மையை ஒத்துக்கொண்டார்”. நான் தீர்க்கமாய் சொன்னேன் “தோழர் லெனின் சொல்லியிருக்கின்றார் கம்யூனிஸ்டுக்கு நாடு மொழி எல்லை கிடையாது என்று நீஙக்ள் பேரை மாற்றிக்கொள்ளுங்கள்”கம்யூனிசத்தை கேவலப்படுத்தாதீர்கள் என்றேன். அவரை தன் வாயாலேயே சொல்ல வைத்தேன் போர்ஜரி கம்யூனிஸ்டு என்று.
இந்த விவாதத்தின் போது என்னுடன் பயணம் செய்த சுமார் 15 பேர் எனக்கு அதிகமாய் உதவினார்,பல ஆங்கில வார்த்தைகளை கல்லூரி பேராசிரியர் சொல்லிக்கொடுத்தார்.,சேலத்திலிருந்து திருப்பூர் நான் செல்லும் வரை அந்த நான்கு” தோல”ர்களும் வாய் திறக்கவேயில்லை.
—————————————————————————————————————————————————————————–
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இருக்கும் . அவரிடம் நான் கேட்ட கேள்விகளை விடுதலை,சந்திப்பு போன்ற போலிகளிடம் இப்போது கேட்டால் கூட பதில் சொல்ல மாட்டார்கள்.அந்த ரயிலில் வந்த நால்வராவது கொஞ்சம் நாணயமாக அரசியல் பேசினார்கள் .இவர்களோ தன்னை அறிவாளி என்று கூறிக்கொள்கிறார்கள் . வினவோ,மற்ற தோழர்களோ கேட்ட கேள்விக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க திராணியற்ற்வர்கள் எழுப்பிய முழக்கம் தான் மருதையன் பார்ப்பனன் என்பது.பார்ப்பனன் என்று சொன்னதாலே மனம் புண்பட்டு சித்ம்பரத்தில் கழன்று கொண்டவர்கள் சொல்கிறார்கள் மருதையன் பார்ப்பனன் . இதற்கு ஏற்கனவே தோழர் பதில் சொல்லிவிட்டிருந்தாலும் நாமும் சொல்வோம் “அவரின் நடைமுறை வாழ்வில் பார்ப்பனீயத்தை இம்மி அளவாவது காட்ட முடியுமா”.அவரின் பேச்சில் உள்ள பார்ப்பனீய எதிர்ப்பை எந்த சி.பி.எம் காரனின் பேச்சில் கேட்க முடியும்?.
கிடாவெட்டு தடை சட்டம்,சிறீ ரங்கம் கோயிலில் நுழைதல் ,சிதம்பரம் கோயில் பிரச்சினை போன்ற பல போராட்டங்கள் பார்ப்பனீய எதிர்ப்பை பறை சாற்றியிருக்கின்றன.போலிகளின் பார்ப்ப்ன தலைமயோ என்ன சொல்கிறது ” நான் முதலில் பிராமணன் அப்புறம் கம்யூனிஸ்டு”.போலிகளில் இனியும் புரட்சிகர அணிகள் இருந்தார்கள் எனில் பதில் சொல்லுங்கள்”தூய்மையின் வடிவம் என்று இப்போது பாராட்டும் நிரூபன் சக்கரவர்த்தியை பைத்தியக்காரன் ஆக்கியது யார்?,” “எம்ஜிஆர் செயாவுக்கு தரகு வேல பார்ப்பதயே வேலையாக வைத்துக்கொண்டு திரிவது யார்” இந்த கேள்விகளுக்கு உங்கள் தலைமை கண்டிப்பாய் பதில் தராது, நாங்கள் சொல்கிறோம் ஏனெனில் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
வினவு,கலகம், உள்ளிட்டோரின் கேள்விக்கு உங்கள் தலைமை சொல்லும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? புரட்சி கர அமைப்புகளின் முகவரிகளை அளித்த் பின்னும் எதற்கெடுத்தாலும் மறைமுகத்தலைமை என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பது எதை காட்டுகின்றது? போலிகளில் உள்ள புரட்சிகரம் என சொல்லும் அணிகளே உங்களுக்கு அரசியல் சித்தாந்தத்தையும் அவர்கள் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.தனது பித்தலாட்ட கொள்கைகளை மறைக்க பயங்கரவாத பீதியூட்டுகிறார்கள். நீ£ங்களும் உடனே அமைதியாகிவிடுகிறீர்கள் இல்லையா. கடந்த வருடம் லயோலா கல்லூரியில் நடந்த எஸ் எப் ஐ மா நாட்டில் சிவக்குமாரை எதற்காக அழைத்தீர்கள் .R.S.S. கருத்துக்களை உமிழும் அவர் உங்களுக்கு தேனாய் இனிக்கிறார்.புத்த்ககண்காட்சியில் போய் பார்த்தீர்களா மொட்டை சோவின் அல்லயன்ஸ் ல் கையெழுத்து போட்டு சீன் காட்டிக்கொண்டிருந்தார்.போலி விடுதலை சொன்னாரே
R.S.S.BJP ஐ நாங்கள் எதிர்க்கின்றோம் என்று எப்படி சிவக்குமார் உங்களுக்கும், R.S.S.க்கும் வேண்டப்பட்டவராயிருக்கிறார்.
போலிகளுக்கு எதிராய் எழுந்த மாபெரும் நக்சல்பாரி எழுச்சியை “வாதம்” என்று அழைக்கின்றார்கள்.தோழர் ஸ்டாலினின் சோவியத்தை சிதைவுற்ற சோசலிசம் என்று குறிப்பிடுகின்றார்கள்.ரணதிவேவோ தோழர் மாவோ அவர்களை போலி மருத்துவர் என்றார்.இந்த சீபிஎம் சீ பி ஐ போலிகளோ மந்திரம் போட்டே புரட்சியை சாதித்து விடு வார்கள் போலிருக்கின்றது.
சந்திப்பு தனது தளத்தில் “மாமா வேலை செய்பவர்களுக்கு” என எழுதியிருக்கிறார்.அய்யா சந்திப்பு மாமா வேலை செய்வது யார்?
உங்களின் மாபெரும் தரகன் அரிகிஷன் சுர்ஜிட் செஇத காரியங்கள் என்ன? எப்போது பார்த்தாலும் செயாவின் தோட்டத்திலேயே வந்து கழுவிக்கொண்டிருந்தாரே அதை பற்றி என்ன எழுதுவீர்கள் கூட்டணி வேந்தர் என்றா? போலிகளின் இன்னொரு வாதம் எங்கல் பெயரை பயன்படுத்துகிறார்கள்.ஏன் சந்திப்பு உங்களை போல எங்களையும் முட்டாள் என நினைத்தீர்களா? சீபிஎம் பெர்ரை சொன்னாலே மக்கள் செருப்பை கழட்டும்போது அந்த பேரை யார்தான் சொல்வார்கள். ஆனால் ம க இ க வின் பாடல்களின் மெட்டை நீங்கள் பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரியும் .
கலகம் தயார் ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்பின் வேலைகளில் பார்ப்பனீயம் இல்லையென்றும் உங்கள் மாமா வேலைகளை பட்டியலிடவும் , நீ தயாரா? கருத்திலும் களத்திலும் உங்களைப்போன்ற போலிகளை ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் எதிர் கொள்ளாமல் இல்லை.ஆனால் உங்களின் பரிணாம வளர்ச்சி எங்கு தான் போய் முடியும் என்பது தான் தெரியவில்லை.
பின்குறிப்பு : அந்த ரயிலில் வந்த நபர்களின் முகவரியோ கூட வந்தவர்களின் முகவரியோ தெரியாது. அந்த நாலு பேரின் முகவைரியை கொடு என்பார்கள் போலிகள்.
இதைதான் விவாதப் பொருளாய் மாற்றுவார்களே தவிர கண்டிப்பாய் நம் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டார்கள்.
குறிச்சொற்கள்: AIYF, ஒரு காம்ரேடு, கம்யூனிஸ்டுகள், புஜதொமு, புமாஇமு, போர்ஜரி, போலிகள், ம க இ க, மருதையன், விவிமு, CPI, CPM, DYFI
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
ஜனவரி 4, 2009 by kalagam
விடுதலையின் அரசியல் கருத்துப்படங்கள்
போலிகளை வீழ்த்தும் ஆயதங்கள்
விடுதலை அவர்கள் தன்னுடைய தளத்தில் போலிகளை அம்பலப்படுத்தி மூன்று கருத்துப்படங்களை வெளியிட்டுள்ளார்.
போலி கம்யூனிஸ்ட் கட்சியின் பார்ப்பன தலைமை
இந்து மத பார்ப்பன வெறியர்களாய் சீரழிந்து கிடக்கும் சீபிஎம் போலி கம்யூனிஸ்டுகளுடைய ஆடையை உருவி அம்மனமாய் அடித்து துரத்துகின்றது இப்படம்.கேரளாவில் பொம்பள பொறுக்கி சங்கராச்சாரிக்கு அரசு விருந்தினர் பட்டம்,மே வ வில் சிபிஎம் அமைச்சர் “நான் முதல்ல பிராமணன் அப்புறம் தான் கம்யூனிஸ்டு” என்று பறை சாற்றிய விதமும் சரி,ஏன் தமிழகத்தில் சிதம்பரத்தில் தீட்சிதர்களை கண்டித்து நடந்த போது கூட்டத்தில் பார்ப்பனன் என கூறியதால் மனம் புண்பட்டும் அந்த ஒருங்கிணைப்பு குழுவிழுருந்து விலகிய விதமும் தான் தமிழகத்தில் பார்ப்பன பங்காளி என அறிவித்தது. சிதம்பரத்தில் அவர்கள் விலகியதால் தான் முசுலீமாய் இருந்தாலும் கூட சிபீஎம் நகர செயலாளர் மூசாவுக்கு பார்ப்பனர்கள் பரி வட்டம் கட்டி வரவேற்பு கொடுக்கப்பட்டது,அதுமட்டுமல்ல அதன் இளைஞர் அமைப்பான டைபி பல இடங்களிலும் சிதைந்து விட்டு வர்க்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு சீரழிந்து போஇவிட்டது.அவர்களின் முக்கிய வேலையே பொங்கல் விழா ,ஆயுத பூசையை சிறப்பாக நடத்துவது மட்டுமே.
பார்ப்பன மதவெறியர்களின் உறுப்பாக மாறிக்கொண்டு வரும் சிபிஎம் லிருந்து அதில் புரட்சிகர அணிகள் வெளியேறாவிட்டால் வரலாறு கண்டிப்பாய் அவ்ர்களுக்கு துரோகி பட்டியலிலே இடம் தரும்.
போலி கம்யூனிஸ்ட் ராம மூர்த்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
தரகு வேலை பார்ப்பதையே வேலையாக கொண்டுள்ள சீபிஎம் இன் முதல் தர தரகனான ராமமூத்தியின் வேலையை அம்பலப்படுத்துகிறது.
நேரு முதல் பலருக்கு ராம மூர்த்தி தரகு வேலை பாத்ததையே பெருமையாக சீபிஎம் அணிகள் பீற்றிவரும் இவேளையில் அவரி அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது. எம்ஜிஆர் என்ற சாதாரண நடிகனை புரட்சித்தலைவனாக்கிய சாதனையை செய்தது காம்முரேடு ராம மூர்த்தி.இன்று சீபிஎம் எப்படி செயாவின் காலிலும் விசயகாந்து வீட்டு வாசலிலும் விழுந்து கிடக்கின்றார்களோ,சீபிஐ விஜயின் எச்சிலுக்காக நாக்கை தொங்கப்போட்டு திரிகின்ற வேலை தான் போலிகளின் செயல் திட்டம் என்பதை ராம மூர்த்திதான் நிரூபித்தார்.காந்தியிசத்துக்கு வால் பிடித்து கம்யூனிசத்தை குழிதோண்டிபுதைத்த வேலையை நையாண்டித்தனத்துடன் அம்பலப்படுத்திக்றார் விடுதலை.தோழர் ஸ்டாலின் கால சோசலிசத்தை சிதைவுற்ற சோசலிசம் என்கூறி பாட்டாளிவர்க்க புரட்சியை சிறுமைப்படுத்தும் போலிகளுக்கு செருப்படியை தனது ஓவியங்கள மூலம் கொடுத்துள்ளார்.
விடுதலை -ன் தள முகவரி
http://vitudhalai.wordpress.com/
குறிச்சொற்கள்: செருப்படி, விடுதலை, விமர்சனம்.போலிகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஜனவரி 4, 2009 by kalagam
பரப்பிரம்மம்
ஓம் மார்க்சிஸ்ட்டாய நமக
ஓம் பாஸிஸ்டாய நமக
ஓம் பொறுக்கித்தின்னுவோம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
அவனின்றி அணுவும் அசையாது
சிபிஎம் இன்றி அவனும் அசைய
மாட்டான்,அசைவுகள் காத்து
கிடக்கின்றன பொலீட்பீரோவின்
பதில்களுக்காக……….
ஊணக்கண்ணுக்கு தான் நான்முகம்
ஞானக்கண்ணுக்கோ நான்காயிர
முகங்கள்,முகங்கள்
அதிகரிக்கலாம் வரத்துகளின்
எண்ணிக்கைக்கு ஏற்ப…
நாயையும் முதல்வராகும்
பேயையும் பிரதமராக்கும்
சூட்சுமம் தேடித்தேடிதேடலாம்
கடலளவு துரோகத்தில்
கையளவு பருகினால் போதும்…
அன்று -தசாவதாரங்கள் போதாதென
ஆழ்வார்களாக கடவுளர்கள்
அவதரிக்க-இன்று கலியுகம்
பத்தவதாரங்கள் பத்தாதென
பாரயிரம் பாடிவருகின்றனர் போலிகள்….
காந்தியிசம் டாங்கேயிசம்
ரணதிவேயிசம் கல்யாணிசம்
சோதியிசம் புத்ததேவிசம்
புடலங்காயிசம் -ஆயிரம்
இசங்கள் வந்தாலும் இசஙள்
வந்தாலும் பரம்பிரம்மம்
ஒன்றே……
ஞானத்தை தேடி திருமலை
பழனி,சபரிமலை
கோயில்
கோயிலாய் அலைவோரே
கோடிகோடியாய் கோட்டினாலும்
சொர்க்கத்துக்கு கடவு சீட்டு
சீபீஎம் உறுப்பினர் சீடு….
வர்க்கமென்ன வர்க்கம்
வாடத முகமுண்டு
யாரையும் வளைக்கும் திறனுண்டு
அதற்கு மார்க்சிஸ்டு என்றோர் பெயருண்டு
நரியை பரியாக்கியவன்
சிவனெனில் யானையை
எறும்பாக மாற்ற மந்திரம்
ஓதிக்கொண்டிருக்கிறார்
தலைமை பூசாரி பிரம்மசிறீ காரட்ஜீ….
சாதுகடவுளென நினைத்தயோ
அற்பனே நக்சல் பரி
நந்திகிராம்,காரப்பட்டென
தேவையெனில் ஆங்கார தரிசனமும்
உண்டு
சோதிபாசு, நாயனார்,நம்பூதிரி
சுர்ஜிட்,டாங்கே என ஆயிரம்
பூசாரி வந்தாலும்
மாறாத துரோகத்துக்கு
காரணம் கண்டறிந்தாயோ
புழுவே அதுதான் பிரம்மம்
பரப்பிரம்மம்
இன்னும் புரியவில்லையா
புரியும் படி
செப்புகின்றேன் அதுதான்
சீபீஎம்.
குறிச்சொற்கள்: கவிதைகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஜனவரி 11, 2009 by kalagam
வினவு
ஒரு பார்வை
வினவு – இது மிகவும் பிரபலமான வலைத்தளம், கடந்த ஆறு மாதத்தில் 90 கட்டுரைகள் இடப்பட்டிருக்கின்றன ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்திருக்கின்றனர்,ஆயிரக்கணக்கானோர் பின்னூட்டமிட்டுருக்கின்றனர். வினவு கட்டுரைகள் ஆறு புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.உண்மையில் இது மகிழ்ச்சிகரமான விசயம் தான்.நான் கவனித்ததிலிருந்து பலமாதங்கள் வேர்ட்பிரஸ்ன் மேலோங்கும் பதிவுகளில் வினவின் பெயர் இடம் பெறாத நாளை மிக மிக சில நாட்கள் எனலாம்.பலரும் கூறலாம் .இதிலென்ன பெரிய விசயம் எழுதுவதில் நேர்த்தி என்பது இருந்தால் யாரும் இந்த இடத்தை பிடிக்கலாம்,எழுத்து நேர்த்தி என்பது பதிவர்க்கு தேவையானது தான் என்றாலும் வினவின் தளத்தை அந்த ஒரு சிறப்பில் மட்டும் ஆழ்த்திவிட முடியாது,புரட்சிகவியையும் காமக்கவிஞன் வாலியையும் ஒரே தட்டில் வைத்து படைப்பாளி என்று சொல்வது எவ்வளவு கடுமையான தவறோ அதைப்போன்றதே வினவின் இந்த வளர்ச்சியையும் மற்ற கழிசடை தளங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது.
இசைஞானி என எல்லோராலும் புகழப்படும் இளையராசாவின் இசை எதை எந்த கருத்தை தாங்கி வருகிறது என்பதை பொறுத்தே அவரின் திறமையை புகழ்வதா இல்லை இகழ்வதா என தீர்மானிக்க முடியும்.ஒரு படைப்பாளி என்பவனின் கடமை யாது?மக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்காது இல்லை அதை பற்றி சிந்திக்காது இருப்பவன்,மக்களின் பிரச்சினைகளை தன் கலை மூலமாக வெளிப்படுத்தாது இருப்பவன் எப்படி
ஆகமுடியும்.. ஆசான்கள் சொன்னது போல “வர்க்கத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை”,வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எழுத்தாளனோ அல்லது ஒரு படைப்பாளியோ இருக்கவே முடியாது.
பல படைப்பாளிகள் இருக்கிறார்கள் எதையுமே சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் கதையாக,கவிதையாக,கட்டுரையாக,இசையாக இப்படி பல வழிகளில்,கண்ணதாசன் வயிரமுத்தன்களி¢ன் கவிதைகளை படித்து பலரும் இப்படி சொல்வதுண்டு”எதை கொடுத்தாலும் அந்த ரெண்டு பேரும் அப்படியே கவிதையா வடிப்பாங்க” அப்படித்தான் “ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே” என்று பாட்டெழுதிய வைரமுத்து தான் “ஆண் தொடாத பெண்மையா” என்றும் எழுதினார்.ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்றான் எனில் எப்படி ஒரே கையால் ஏழையின் வறுமையை பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப்பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித்துவத்தின் பெருமையை படைப்பதற்க்ககவே ஏழையின் வறுமையை படிக்கின்றான் . எந்த படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான் அவனின் தேவைக்கு ரசிப்புக்கு ஏழையின் கண்ணீரும் தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.
இந்த மாடர்ன் உலகத்திலே உலகமே கையளவாக சுருங்கி போய்விட்டது, தினசரி பத்திரிக்கைகள் போல புற்றீசலாய் இணையத்தில் பல வலைத்தளங்கள் உள்ளன,எப்படி மஞ்சள் பத்திரிக்கைகளும் ஆபாச எழுத்தாளர்களும் வெளியில் குவிந்து கிடக்கின்றார்களோ அதை விட இணையத்தில் மிக அதிகமாகவே நிரம்பியிருக்கின்றார்கள்,”பெண்களை வளைக்க என்ன செய்வது,கடலை போடுவது எப்படி போன்ற சிறப்பு பாடங்கள் வலைத்தளங்களில் இன்றைய சூடாட இடுக்கைகளில் நிரம்பி வழிகின்றன.சைதப்பேட்டையில் வட நாட்டினர் எப்படி குளிக்கின்றார்கள் என்பதைபற்றி ,ஒரு பதிவர் அதை தடுக்க கோரி அரசுக்கு தன் பதிவை பதிக்கின்றார் அதற்கு தலைப்பே அம்மண குளியல். தன் தளத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் எழுதுவது என இப்டித்தான் இருக்கின்றது வலைப்பூக்கள்.
அவர்கள் எப்படி தன் வர்க்கத்துகாக எழுதுகின்றார்களோ அப்படித்தான் வினவின் படைப்புக்களும் உழைக்கும் வர்க்கத்துக்காக எழுதப்படுகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் மக்களின் வாழ்வாதரம் எப்படி தொடர்புடையதென்பதை நிரூபிக்கும் அவரின் எழுத்துக்கள்.வினவின் எழுத்துக்களை படிக்கும் ஒவ்வொரு வரும் கண்டிப்பாய் நழுவ முடியாது பதில் சொல்லியே தீர வேண்டும்,மறுமொழிகளை படித்தாலே புரியும் பின்னூட்டமிடும் யாருமே தான் எந்த சார்பை சார்ந்தவரென்பதை தெளிவாக எடுத்துவைக்கவேண்டிய முடிவுக்கு தள்ளப்படுகின்றார். குறிப்பாக சாதி வெறிக்கட்டுரையில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராய் ஊடகங்கள் செய்த மோசடியை அம்பலப்படுத்தி மாணவர்கள் தாக்கியது சரியே என்ற கருத்தை வைத்தது.எதையும் நடு நிலைமையாய் பேசுவோம் எனக்கூறி ஈனத்தனமாய் முடிவெடுத்த பலருக்கும் சவுக்கடி கொடுத்தது,அதனால் தால் குழலி எழுத நேர்ந்தது”செய்தியாளர்களை குறை சொல்லும் பதிவர்களே…..”.
கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில் வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.
குறிச்சொற்கள்: படைப்பாளி, வினவு, வேர்ட்பிரஸ்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஜனவரி 11, 2009 by kalagam

பெண்களும் விளம்பரங்களும்
நுகத்தடியில் அழுந்தி கிடக்கும் பெண்மை
இப்போது ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கின்றது, திரும்பிய இடங்களிளெல்லாம்விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றது.அது “எப்போதும் சளைக்காதவர்களுக்கு”அதில் ஒரு கிழவன் ஓரக்கண்ணால் ஒரு இளம்பெண்ணை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கின்றான் கீழே போட்டிருக்கின்றார்கள் “சில எஞ்சின்கள் எப்போதும் சளைப்பதில்லை எப்போது சளைக்காதவர்களுக்கு ELF OIL ” விளம்பரம் முடிகின்றது.சாதரன ஆயில் விளம்பரத்துக்கு இவ்வளவு மோசமான உவமை காட்டப்பட்டு இருக்கின்றது.இந்த விளம்பரம் ஒரு மிக மிக சாதாரண விசயமாகிவிட்டது,சாலையில் வரும் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட யாவரிடமுமே எந்த கோபத்தையுமே சொல்லிக்கொள்ளும் படி ஏற்படுத்த் வில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரம் மழை வந்து கொண்டிருக்கிறது ஒரு பெண் குடையில் இருக்க மற்றொருவனோ குடைக்கக காத்து பின்னர் பிஸ்கெட்டை காட்டுகிறான் உடனே அப்பெண் அவனோடு சிரித்துக்கொண்டு ஒன்று சேர்வதை போல் முடிகிறது,ஆணின் பெருமையானது பெண்களை கவர்வதாகவே காட்டப்படுகின்றது. பெண்ணின் பெருமையானது ஆண்களை கவர்வதற்காகவே என்று காட்டப்படுகின்றது.பேர் அண்டு லவ்லி விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரே பல்லவி தான் நீ கருப்பாய் இருக்கிறாய் தன்னம்பிக்கை கிடையாது,மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாய் நாட்டுக்கு ஆண்களுக்கு தேவை.
ஒரு எஞ்சினின் தரத்தை நிரூபிக்க , ஒரு வண்டியின் தரத்தை நிரூபிக்க பெண்ணின் உடல் தேவைப்படுகின்றது,பலவிளம்பரங்களின் தன்மையே ஆண்மையை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றன.சமயல் எண்ணை முதல் பெனாயில் வரை பெண் தான் விளம்பர மாடல்.பிஸ்கெட் தந்தால் போதும் வண்டியின் அழகை பார்த்தால் போது ஒரு பெண் தன்னையே தந்து விடுவாள் அவளுக்கு தேவை எல்லாம் ஒரு ஆண் தன் ஆண்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும். உன் வாய் நாறாமல் வாசமடித்தால் பெண் போலீசு கூட உன் வலையில் தான்…………..
விளம்பரம் மற்றும் சினிமாக்கள் நாடகங்களில் இம்மாதிரியான கருத்துக்கள் தானாய் தோன்றிடவில்லை.சமூகத்தில் நடப்பதே ஊடகங்களிலும் தொடர்கின்றது.பெண்ணடிமைத்தனத்தை பேசும் பத்திரிக்கையின் ஒரு பக்கம் மறுபக்கமே ஆபாசபடங்களை போட்டு தனது பெண்ணுரிமை பேணும் விதத்தை சொல்கிறது,கேரள அமைச்சர் ஒருவர் நடிகையிடம் தொந்தரவு செய்ததை சமீபத்தில் கண்டோம் .சில மாதத்துக்கு முன் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது. காதலிக்க மறுத்த மாணவியின் மீது ஆசி ஊற்றிய மாணவன்,காதலிக்க மறுத்த் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூரன்,ஏன் கயர் லாஞ்சி உள்ளிட்ட சாதிவெறித்தாக்குதலில் கூட பெண்கள் தான் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டனர்.
சினிமாக்களில் பெண் என்பவர் ஒன்று அடக்க ஒடுக்கமாக அல்லது திமிர் பிடித்த பெண்னாகத்தான் கதானாயகி காட்டப்படுகிறார்.கதானாயகியின் கொட்டத்தை அடக்கி தன் ஆண்மயை நாயகன் நிரூபிக்கிறான்.”அவ கிட்ட பிடிச்சதே திமிர் தாண்டா”. இப்படி ஆணின் ரசிப்புக்காக பெண்மைகள் படைக்கப்படுகின்றன.ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள் நடத்தை கெட்டவர்களாக சித்த்ரிக்கப்படுகின்றனர்.எப்படி இந்த சுமூகத்தில் “பொய் சொல்லக்கூடாது,திருடக்கூடாது சாமியை பழிக்கக்கூடாது” போன்றவை சனனாயகமாக காட்டப்பட்டதோ அப்படித்தான் ஆணுக்கு பெண் அடிமையாய் இருப்பது நியதியாக்கப்படுகின்றது. ஒரு பேருந்து முழுக்க செல்லும் பெண்களை கூட சாலையில் உள்ள மூவர் கத்தி சத்தமாக கிண்டலடிக்கமுடியும்.ஆனால் அது எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகாது.வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சாலையோரத்தில் நிற்கும் பெண்ணின் செயல் பரிகாசிக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலாக மற்ற ஆண்கள் கொடுமைகள் செய்யும் போது பெண்களை அமைதியாய் இருக்க வைத்தது எது?சாதிவெறியை தாண்டி பெண்ணடிமைத்தனம் நீடிக்கிறது. அது தான் சினிமாவில் பெண்கள் ஆபாசப்படுத்தப்படும் போதும் ஊடகங்களில் மோசமான விளம்பரத்தையும் கண்டு அமைதியாயிருக்கிறது இருக்க வைக்கிறது. ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான்.இப்படித்தான் தன் ஆண்மையின் பலத்தினை அக்கிழவன் பெண்ணிடம் காட்ட விரும்புவதே அந்த ஆயிலின் த்குதியாக மாற்றப்பட்டது. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.
எல்ப் ஆயிலின் விளம்பரம் தான் முதல் பெண்ணடிமைத்தனமான விளம்பரம் எனில் தானே எதிர்ப்புகள் புதியதாய் கிளம்புவதற்கு,பல்லாண்டுகளாக பெண் நுகர்பொருளாக நீடிப்பது இன்று வரை தொடர்கின்றது இன்று வரை . ஆணாதிக்கம் வரன்முறையின்றி பெண்கள் மேல் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது பெண்ணியம் பேசும் பலரும் அழகீயலின் ரசவாதத்துக்குள் புகுந்து அதில் மறைந்தே போய்விட்டனர்.அரசின் ஆதரவு ஆணாதிக்கத்துக்கு நீடிக்கும் வரை பெண்ணடிமைத்தனம் ஓயப்போவதில்லை.
அரசின் ஆதரவினை எதிர்க்காது சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போடாது சிலரைப்போல் குடும்பக்கதையையும் பக்கத்து வீட்டுகதையையும் பேசி கொண்டிருப்பதால் ஒருபய னும் ஏற்படப்போவதில்லை.பெண்கள் அரசியல் ரீதியிலான ஐக்கியம் சாத்தியமாகும் வரை,பெண்கள் இப்போது சொல்லப்படும் பெண்மையாய் நீடிக்கும் வரை ஆணாதிக்கத்தின் நுகத்தடி பெண்ணினத்தை அழுத்திக்கொண்டே இருக்கும்.
குறிச்சொற்கள்: ஆணாதிக்கம், ஐக்கியம், நுகத்தடி, பெண் போலீசு, பெண்ணடிமைத்தனம், விளம்பரம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
ஜனவரி 16, 2009 by kalagam

சன நாயக தேவதை
முண்டச்சியாய் மூலையில்
நிற்க கைம்பெண் ஆனது
பெண்னெனில் பரவாயில்லை
தேவதையே தாலியறுத்தால்
தாங்குமா நெஞ்சு
கண்டிப்பாய் தாங்காது இது
நெஞ்சுக்கு நீதியின் ஐந்தாம் பாகம்……………
கதை எழுதி கவிதை
படைத்து வசனம் சொல்லி
போரடித்து விட புதியதாய்
கலைஞர் எடுத்தார்
அவதாரம் அது இயக்குனர்
அவதாரம்
சிகரம்,இமயம்
என எல்லாம் ஒரே நாளில்
தூள் தூளாய் போனது
ரிலீஸ் ஆன முதல் நாளே
பிய்த்துக்கொண்டு போக
கலை உலகமே கயிற்றில்
தொங்கப்போகிறது
பட்டம் வைக்க பேர் கிடைக்காமல்……….
கத்தியும் அறுவாளும்
காவியம் படைக்க
சன நாயக தேவதைக்கு
செய்து வைக்கப்
பார்த்தார்கள் மறு கல்யாணம்.
நானா நீயா என
போட்டிகளோ எராளம்
பிச்சுவாளும் கம்பும்
மட்டும் சீதனமாய் கொடுத்தால்
வந்திடுமா தேவதை
அது மயங்கும்
ஒரே மருந்து காந்தி……..
எல்லோரும் மருந்து கொண்டுவர
தேவதையோ சொல்லிவிட்டாள்
யாரிடம் அதிக காந்தியோ
அவர்களுக்கு தான் நானென்று
போனமுறை எதிர்க்கட்சியாய்
வீற்றிருந்தபோது
செங்கோல் தப்பாமல்
செய்ததை அப்படியே பிசகாமல்
செய்தார்
கண்டிப்பாய் பிசகியிருக்கும்
தனயனை தனியாய்
விட்டிருந்தால் – கருங்கற்களை
பெற்றிருந்தால் தானே
தனியாய் விட, பெற்றதோ
அங்குசம்
சதிராடும் யானையை அடக்க
ஒரே வழியாய் அதுவே கடைசி
ஆயுதமாய் எடுத்து விட…….
அங்குசமோ அணுகுண்டாய் மாறாது
அகிம்சையாய் போய்விழ
பதிந்த சுவடுகளெல்லாம்
காந்தியின் நிழல்கள்
ஓட்டுயந்திரத்தின் எல்லா
பொத்தான்களிலும்
காந்தியின் புன்னகை
ஒன்றில் 1000 காந்தி
இன்னொன்றில் 2000 காந்தி
இன்னொன்றில் 5000 காந்தி………..
திமுக அதிமுக
தேமுதிக சமக
மார்க்சிஸ்டு முமூக
இப்படி எல்லாம் காந்திராஜ்யாமாய்
மாறிப்போனதினால்
திகைத்து போன மக்களோ
யாருக்கு அமுக்கினாலும்
காந்திக்கு போவதினால் மொத்தமாய்
காந்திக்கு வாழ்க்கைப்பட்டார்கள்
காந்தியோ தேவதைக்கு
வாழ்க்கை கொடுத்தார்
முண்டச்சி மகாலட்சுமியாய்
மாற
தயா நிதி வந்து சுபம்
போட
படம் முடிந்து விட்டதாம்
யாரும் எழவில்லை
ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்
எங்க தொகுதியில
எப்ப இடைத்தேர்தல் வரும்?
குறிச்சொற்கள்: அதிமுக, இடைத்தேர்தல், கவிதைகள், காந்தி, சமக, தயா நிதி, திமுக, தேமுதிக, மார்க்சிஸ்டு, முமூக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
ஜனவரி 19, 2009 by kalagam

இற்று வீழும் முகமுடிகள்
சாயம் பூசும் தேசம்
பல முறை தேசிய விருதுகளைப்பெற்று உழைப்பால் உயர்ந்த உத்தமன்கள் வரிசையில் முன்வரிசையில் முண்டியடித்து கொண்டிருந்த நாமலிஙக ராஜு தப்பை ஒத்துக்கொண்டு வாரம் ஒன்றாகிவிட்டது..கடந்த வெள்ளிகிழமை ராஜுவின் மனுவை விசாரித்த வழக்காடு மன்றமோ தள்ளி வைத்திருக்கின்றது. பத்திரிக்கைகளோ பாவம் ராஜுவும் அவரது சகோதரரர்களும் ஏனைய முக்கிய அதிகாரிகளும் திறந்த வெளி கழிப்பறையில் காலைக்கடனை கழிக்கிறார்கள்.சாதாரண கைதி போலவே நடத்தப்படுகின்றார்,
இப்படி அந்த கிரிமினலின் வாழ்க்கையில் ஏதோ தெரியாமல் நடந்த தவறுக்காக இப்படி ஆகிவிட்டதே என்றபடி நம்மையும் பீலிங்கில் ஆழ்த்துகின்றன. ஒன்றல்ல ரெண்டல்ல எட்டாயிரம் கோடிகளை (கண்ணுக்கு தெரிந்து மட்டும்) அமுக்கிய ராஜு இன்னும் ஊடகங்களாலும் மற்றோர்களாலும் “அவர்” என்று மதிக்கப்படுகிறார்,சாதாரண பிக்பாக்கெட் திருடன் அவன் என்று ஏசப்படுகிறார்.ஏற்கனவே ராஜுவின் மீது பாலியல் சம்பந்தப்பட்ட புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது,அப்போதெல்லாம் அவன் மீது கையை வைக்காத போலீசு தற்போது மட்டும் லாக்கப்பில் தள்ளியது ஏன்?
ஒரு முதலாளியே தன் தவறை ஒப்புக்கொண்டு விட்டதால் அது கண்டிப்பாய் உண்மையாய் தானிருக்கும்,ஏனெனில் எப்படி டாடா நாட்டுக்காக உழைத்து மிகக்குறைவான லாபத்தில் மக்களுக்காக லட்சரூபாய் கார்தர வந்தாரோ ,அப்படித்தான் இவரும் வந்தார்,ரொம்ப தூரம் வந்தவர் கொஞ்சம் கால்தடுக்கி விழுந்து விட்டார்.அவ்வளவுதான் , “நான் தப்பு செய்து விட்டேன் “அதற்காக சட்டம் த்ரும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளேன்” கடைசியாய் கம்பெனிக்கு எழுதிய கடிதம் இது. ஒரு குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டதால்……………. என இதை எடுத்துக்கொள்ள முடியுமா?
கண்டிப்பாய் முடியாது,சத்யம் டாடா,இன்போசிஸ் மட்டுமல்ல பல சிறு ஐடி பீபீஓ நிறுவனங்கள் தங்களின் கம்பெனியை சந்தையில் வைத்திருக்கின்றன.பங்குகளை அதிகம் வாங்கும் யாரும் அவர் நினைத்த எடுப்பிலேயே கம்பெனியை மூடக்கூட முடியும்,ஒரு தொழிலாளியின் உழைப்பை முதலாளி விற்று காசாக்குகிறான்.அதையே வைத்து தற்போது சூதாடிக்கொண்டிருக்கின்றான். இப்படி சூதாடும் ஆட்டத்தில் அரசு நிறுவனங்கள் பலவும் மக்களின் பணத்தை சத்தியம் டாடா போன்ற நிறுவனத்தில் பங்குகளை வாங்கிகுவித்தன.SBI-n காப்பீடு திட்டத்தின் விளம்பரத்தில் இப்படிவரும்” நாங்கள் தேர்ந்தெடுத்த கம்பெனிகளில் முதலீடு செய்கிறோம்”. தனியார் முதலாளிகள்,அரசு, நடுத்த்ர வர்க்கத்தின் சிறு பிரிவினர் ஆகியோர் சூதாட்ட்டத்தில் குவித்தனர்,ஒரு நிறுவனத்தை பற்றி எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ,ஆனாலும் நீ காலையில் ஒரு கம்பெனிக்கு பங்குதாரன் பிடிக்க வில்லையா மறுனாள் டிசிஎஸ்க்கு பங்குதாரன்,இப்படி சுற்றும் உலகை விட வேகமாய் சுற்றினார்கள்.
போட்டதை விட பல நூறு மடங்கு தரும் தங்க சுரங்கம் தான் பங்கு சந்தை என்பதை உணர்ந்த முதலாளிகள் என்னைப்பார் என் அழகைபார் என்றபடியே வரவுக்கணக்கை தாறுமாறாய் ஏற்றிக்காண்பித்து அதன் மூலம் பங்கு வருவாய்களை அதிகப்படுத்தினர்.மேலும் போலியாக கம்பெனிகளை உருவாக்கி அதிகமாக வாங்குவதற்கு வரவேற்பு இருப்பதாக செட்டப் செய்தார்கள்.மக்களின் பணத்தை தின்று குடித்த முதலாளிகளோ பல கம்பெனிகளை புதிதாய் உருவாக்கி அதையும் சந்தையில் இறக்கினர்கள்.
இப்படி சூதாட்டம் தேசப்பாதுகாப்பாக மாறியதால் சூதாடிகள் அரசின் பட்டங்களையும் மொத்தமாய் அள்ளினார்கள். இப்படி எல்லாரும் கமுக்கமாய் சுரண்டிக்கொண்டிடுந்த போது தான் அமெரிக்க பொருளாதார சுனாமி வந்தது.அதனால் தான் பங்கு சந்தையில் மாபெரும் தேக்கம் ஏற்பட்டும் ரொம்பவும் மண்மோகன் முன்முயற்சி எடுத்து சாக்கடையின் அடைப்பினை எடுத்துவிட்டதாக கூறினார்.அதையும் மீறி இந்தியாவில் ஐடி பீபீஓ நிறுவனங்கள் மூடத்தொடங்கின. சூதாடிகளோ தங்கள் கம்பெனிக்கு மேக்கப் போட்டு கொள்ளைஅடித்துக்கொண்டே போனார்கள்.
ஒருக்கட்டத்தில் தணிக்கை விசயத்தில் முதலில் மாட்டிய சத்தியம் திடீரன கம்பெனி நட்டத்தில் போவதாக அறிவித்து அதன் தலைவனும் கொள்ளைக்காரனுமான ராஜு “இப்ப என்னபண்ணறது” என்ற படி தெனாவட்டாயிருக்கிறான்.
53 ஆயிரம் பேரின் கதி என்ன என்பது இப்போது பங்கு சந்தை சூதாடிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படப்போகின்றது.எத்தனை பேர் சாகவேண்டும் என்பதும் செத்தார்கள் என்பதும் காலையில் பங்கு சந்தைப்போல ஏறி இறஙகவும் நேரலாம்.உணவுப்பொருளை வைத்து சூதாடி விலைவாசியை விசம் போல் ஏற்றியது போல் மனித உழைப்பும் பங்கு சந்தையில் ஏற்றப்பட்டு இருக்கின்றது. இது என்னவோ ராஜு மட்டுமே குற்றவாளி இல்லை.இந்த அரசு தான் முக்கிய குற்றவாளி.சூதாட்டத்தில் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட முதலாளிகளௌக்கு எப்படியும் தண்டனை கிடைக்கப்போவதில்லை,அர்சத் மேத்தா பல்லாயிரம் கோடி ஊழல் செதான் தீர்ப்புக்கு முன்னரே அவன் சொர்க்கலோகம் பத்திரமாக போய்விட்டான்.
அவனால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னு நரகத்தில் துடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இப்போது சொல்லப்படுகிறதே “சத்யத்துக்கு அரசு 2000 கோடி த்ர வாய்ப்புண்டு ” என்ற இது கூட 53 ஆயிரம் பேருக்காக இல்லை. அண்ணிய செலாவணி மேற்கொண்டு வரவேண்டும் ஐடி பீபீஓ கம்பெனிகள் தங்கு தடையின்றி நாட்டையே சுடுகாடாக்கவேண்டும் அதுதான் இப்போதிருக்கும் காங்கிரசுக்கும் பீஜேபி போலிகள் உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளின் எண்ணம். மக்களின் பணத்தை இந்த நாய்கள் பிச்சையாய் அல்ல உரிமையாக கேட்கிறார்கள் எப்படி அமெரிக்காவில் செய்தார்களோ அதையே இங்கேயும் கோருகிறார்கள்.மக்களின் பணத்தில் வரிசலுகைகள் அவர்களின் நிலஙகளை பறித்து லட்சக்கணக்கானோரை கொத்தடிமையாக மாற்றிவிட்டு தன்னுடைய சொகுசுக்கு குறவு வந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை சாகவும் சொல்கிறார்கள். இதைத்தான் டாடா,இன்போசிஸ் நாரயணன் மூர்த்தி மற்றும் ஏனைய கம்பெனி கிரிமினல்களும் அரசின் ஆசியுடன் மேற்கொள்கின்றனர். தேவையென் ஆட்குறைப்பு நடவடிக்கை , தன் தேவைக்காக வேலையில்லா கூலிப்பட்டாளத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த விலைக்கு அடிமைகளை உருவாக்குதல் போன்றவை ஒரு முதலாளி மனசை கல்லாக்கிக் கொண்டு செய்யும் காரியங்களாக சித்தரிக்கப்படுகின்றன.
ஆனால் ஒரு முதலாளி எல்லாம் திட்டம் போட்டே அடிமைகளை உருவாக்குதலையும்,ஆட்குறைப்பையும் மேற்கொள்கிறான். அப்போது தான் அவன் முதலாளியாக நீடிக்க முடியும். கண்ணா இது தான் டிரைலர் முழுப்படத்த பார்த்த….. இப்போது ராஜுதான் ஆரம்பமே இன்னும் பலரின் முகமுடிகள் இற்று விழ ஆரம்பித்து விட்டன,அவை கண்டிப்பாய் தேசத்தின் சோகமான முடிவுகளாக காட்டப்படும்,அம்முதலைகளின் கண்ணீருக்கு பதிலாய் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்படும் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் வேரோடு பிடுங்கப்பட்டு எறிபப்படும்.
கடந்த சனியன்று ராஜு இருக்கும் சிறைக்கு வெளியில் பூங்கொத்து கொடுத்து வைத்து அவர் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக சூதாடிகள் ஆணவமாய் சொல்லுகிறார்கள்.இனியும் அமைதியாய் இருந்தால் கண்டிப்பாய் அரச பயங்கரவாதிகளும் முதலாளித்துவ பயங்கரவாதிகளும் சாயம் பூசுவார்கள் நம் கல்லறைகளுக்கு. மார்க்ஸ் சொன்னாரே”இழப்பதற்கு ஏதுமில்லா வர்க்கம்” என்று அந்த தொழிலாளி வர்க்கத்தால் மட்டும் தான் இந்த பாசிசப்பயங்கர வாதிகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் அவர்களுக்கு கல்லறை கட்டமுடியும். நாம் பாட்டாளிகள் என்பதை நாங்கள் முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டோம்.
என்னருமை ஐடி பீபிஓ ஊழியனே அடிமை வர்க்கமா இல்லை ? இல்லை தொழிலாளி வர்க்கமா?முதலாளிய பயங்கர வாதத்துக்கு கல்லறை கட்டப்போகிறாயா இல்லை உனக்கு நீயே சாவு மணி அடித்துக்கொள்ளப்போகிறாயா நீயே முடிவு செய் முடிவு உன்கையில்.
டிசம்பெர் 25 முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு கல்லறை கட்டுவோம்.வர்க்கமாய் ஒன்றிணைவோம்.
குறிச்சொற்கள்: ஐடி பீபிஓ, கல்லறை, மார்க்ஸ், முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, B.P.O., I.T, infosis, satyam computers, share market, TATA
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
ஜனவரி 21, 2009 by kalagam

சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு,கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்?
உலகமயமாக்கலினால் தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்,ஐடி,பி.பீ.ஒ,ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள்.முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான் தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கிஎறிந்து விட்டான்.பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு கம்பெனி தாவுகிறோம்.நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை.முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.
ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்த்ப்படுவது இல்லையா?பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள் ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,இன்னும் ஆறு மாதத்தில் 50000பேர் ஐடி,பிபீஓ வில் மட்டும் பணிநீக்கம் செய்யப்படப்போகின்றனர், இப்படிப்பட்ட நிலைக்கு தான் நம்மை இக்கம்பெனிகள் தள்ளிவிட்டன,நம் திறமைகள் முதலாளியின் தேவைக்காக குழிதோண்டி தோண்டி புதைக்கப்பட்டன .இப்போது அவனின் தேவைக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். தொழிலாளர்களை முடியாக நினைத்து வதைத்த ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது.அங்கு வெற்றியை வரலாறாக்கிகாட்டிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இம் மாநாட்டில் திரளாய் பங்கேற்போம்..நம்முடைய பிரச்சினக்காக இனியும் போராடாது இருந்தால் வருங்காலம் தற்கொலை பாதைக்கு ஒப்பானதே.
தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம்.தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.
——————————————————————————————————————-
என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……
வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..
சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?
நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”
நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..
தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……
இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.
————————————————————————————————————————————————————————————————-
முதலாளித்துவ பயங்கரவாதத்தினை பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
———————————————————————————-
இம்மாநாடு போலிகளுக்கு சாவு மணிஅடிக்க வாழ்த்துகிறோம்
கலகம்
குறிச்சொற்கள்: ஐடி, பி.பீ.ஒ, முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, B.P.O., I.T, infosis, NDLF, SATYAM, TATA
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
ஜனவரி 28, 2009 by kalagam
ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்
ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

சனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.
பலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று? ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன.
கம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான இந்தியாவை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில இங்கே ,கண்டிப்பாக பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம்.
முதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான் தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம் தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட தேசியத்தை அச்சம்பவத்தை நேரில் கண்டவர் என்ற முறையில் பெருமையோடு பதிக்கிறோம்.
சனவரி-26,காலையில் பனகல் மாளிகை நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும் ,அவர்தம் காலில் கிடக்கும் ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில் வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.
ரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும் தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள்
அரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில் வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.
“இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போகுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.
கடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள் இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா ?அந்தக்குழந்தயோட பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு?”
ஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.
அதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”
இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,
அம்முழக்கங்களால் எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள் உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர் செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.
போராட்டவீடியோ காட்சிகள்
நன்றி : வினவு
http://vinavu.wordpress.com/2009/01/29/eelam12/
குறிச்சொற்கள்: ஈழம், குடியரசு தினம், தோழர், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, பெரியார்திக, ம க இ க, CPI, CPM, NDLF, PALA, RSYF
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
ஜனவரி 30, 2009 by kalagam
சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்

நேற்று காலை சுமார் 11 மணியளவில் முத்துக்குமார் எனும் இளைஞர் தன் உடலில் தானே தீயை வைத்துகொண்டார்.ஈழத்திலே கொத்து கொத்தாய் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் போது தன்னால் மட்டும் எப்படி இவ்வுயிரை கையில் வைத்திருக்க முடியும் என்ற படி செத்து விட்டார் அவ்விளைஞர், அவர் நமக்கு கோடிட்டு காட்டிய செய்தி ஈழத்தமிழர் தினமும் சிங்கள ஓநாய்களால் கொல்லப்படுகிறார்கள் என்பதும் ,செம்மணி புதையல் போல பல புதையல் கள் வெளிவர இருக்கின்றன என்பது மட்டுமல்ல,வேறொரு முக்கிய செய்தியும் இருக்கிறது.”ஆமா இலங்கையில குண்டு போட்டுட்டாங்க என்ன பணறது நேரமாச்சு \கோலங்கள் வையுடா” என பூச்சாண்டிகள் பலருக்கும் தான் செத்தாலாவது மானம் வருமா என உயிரை விட்டார் முத்துக்குமார், ஆனால் மானம் வந்த பாடில்லை.
ஒரு மனிதன் தனது கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக,தமிழர்களுக்கு சொரணை கொடுப்பதற்காக தன் உயிரை கொடுத்தாக வேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறான்.உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன,இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன .டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும்,தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை.தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
செத்துப்போன முத்துக்குமார் மட்டுமல்ல தாளமுத்து நடராசன் போன்றோரும் சும்மா சாகவில்லை,சும்மா தான் செத்துப்போனதாக இன்றைய பொடுசுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன, முத்துக்குமாரின் மரண வாக்கு மூலத்தை படித்துப்பாருங்கள்.எவ்வளவு சிந்திருத்திருந்தால் அப்படி ஒரு கடிததை எழுத முடியும்.பலரு சொல்வதுண்டு தற்கொலை ஒரு முட்டாள் தனம் .
ஆனால் ஒரு தற்கொலை ஒட்டு மொத்த தமிழகத்தை அவமானத்தால் கூனிகுறுக வைத்திருக்கிறது,அமைப்புகள் நடத்தும் கூட்டத்துக்கு 10,20 என நன்கொடை வழங்கிவிட்டு நானும் ஈழத்தமிழனின் துக்கத்தில் பங்கு கொண்டேன் என கண்ணை கசக்குவதால் கிடைத்திடுமா விடுதலை,ஈழத்தமிழனின் சாவுச்செய்திகளோடு நடிகையின் படுக்க்யறை செய்திகளைகலந்து தந்த பத்திரிக்கைகள் எவ்வித இடையூருமிலாமல் தனது சர்க்குலேசனை உயர்த்திக்கொண்டே போகின்றன . ஈழத்தமிழன் இப்போது பிணமாகிவிட்டான் அவன் விற்பனைக்கு ஒரு நாளுக்கு மேல் உதவமாட்டான்.தனது தன் மானத்தை இழந்து வாழும் மானங்கெட்ட தமிழர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க.
செங்கல் பட்டு சட்டகலூரி,சேலம் சட்டகல்லூரி மாணவர்கள் என சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மாணவர்களோ தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்,ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழரை காப்பாற்று என முழங்கியாயிற்று..ஆனால் இது ஏன் நடைமுறைக்கு வரவில்லை? இலங்கைக்கு சென்ற பிரணாபோ தனது முழு ஆதரவை தெரிவித்து விட்டார்.கருணவோ முதுகுவலி என்று குப்புறக்கிடக்கிறார்,மத்திய அரசோ மிக வருத்தத்துடன் கவனிக்கிறது,னம் செஇதிகளை வருத்ததுடன் கவனிக்கும் அதே கண்கள் தான் சிங்கள வெறியன் ஈழத்தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் போதும் ரசிக்கின்றன.
இந்த நிலையில் நம்முடைய போராட்டங்கள் எப்படி இருக்கின்றன.இன்னும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் அதுவும் “இந்திய அரசே தலையிடு”. வெங்கட்ராமன் செத்துப்போனதற்கு ஒரு வாரம் துக்கம் கொண்ட மத்திய அரசு கொத்து கொத்தாய் கொல்லப்படும் தமிழர்களின் பிணங்களை பார்த்து முகத்தை திருப்பிக்கொள்கிறது.நமது போராட்டங்கள் பலனளிக்காததற்கு காரணமே ஈழப்போரின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தாதே..இந்திய அர்சு ஈழத்தில் தலையிட்டு போரினை நடத்திக்கொண்டிருப்பதால் தால் சிங்களன் கொலைவெறியாட்டம் போட முடிகிறது.
இந்திய அரசை எதிர்க்காத நமது போராட்டங்கள் ஈழத்தமிழனுக்கு வாய்க்கரிசியாகவே மாறும்.
எந்த ஓட்டு கட்சியும் இந்தியத்தை அம்பலப்படுத்த மாட்டார்கள் ஏனெனில் இவர்கள் தான் இந்த அரசை தூக்கி தாங்கி பிடிப்பவர்கள்,
முன்னரே சொன்னது போல முத்துக்குமார் சொல்லாத முக்கிய செய்தி எது தெரியுமா ?. இனியும் கெஞ்சி கொண்டிருப்பதால் இந்திய அரசு கேட்காது,காது கேட்காதவன் அல்ல அப்படி நடிப்பவன் அவனுக்கு செவுளில் அறைந்து தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்.1965 களில் தீவிரமான மக்கள் போராட்டமே இந்தியை செருப்பால் அடித்து துரத்தியது.மத்திய அரசினை உண்ணாவிரதத்துக்கும் ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் கவனத்தை திருப்ப முடியாது.எப்போது பாதிக்கப்படுகிறானோ அப்போது தான் அவனும் திரும்புவான் .மத்திய அரசு பாதிக்கப்படுமாறு எவ்வித போராட்டமும் இன்னும் துவக்கப்படவில்லை.அப்படி துவக்கப்படுமெனில் அது போராட்டமாகயிராது,போராக மாறும்.
ஆம் போர்
தான் தேவை இப்போது இந்தியை எதிக்க பெரியார் செய்தாரே கிளர்ச்சி அப்படிப்பட்ட கலகம் தான் தேவைதானே தவிர கண்ணீர் துளிகளுக்கு இங்கு இடமில்லை.போர் இந்திய தேசியத்துக்கு மட்டமல்ல இன்னும் கிரிக்கெட்ட் பார்த்து பல்லைகாட்டுபவனுக்கும்,தியேட்டர் வாசலில் கால் கடுக்க நிற்பவனுக்கும்,டாஸ்மாக்கில் முதல் ஆளாய் போணி செய்பவர்களுக்கும்,இன்னமும் “மேச ராசி நேயர்களே” என ஊளையிடுபவர்களுக்கும் எதிராகத்தான் தொடங்க வேண்டும்.போரை நம்மிடமிருந்தே தொடங்குவோம். முடிவாய் தெரிவியுங்கள் நீங்கள் யார் பங்காளியா? பகையாளியா?
குறிச்சொற்கள்: இந்தி, ஈழம், கலகம், கிளர்ச்சி, தமிழ், தற்கொலை, பு மா இ மு, பெரியர், போர், ம க இ க, மாணவர்கள், முத்துக்குமார்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
பெப்ரவரி 3, 2009 by kalagam
பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்!
தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுகசாமி எனும் ஒரு கிழவர் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் கோயிலுக்கு நீதிமன்ற அனு மதியுடன் சென்றார் போலீசு பாதுகாப்புடன்,அடுத்த நாள் போலீசு ஸ்டேசனில் வந்து சொன்னார்” பாதுகாப்புக்கு வாங்க!” ” ஏன் சாமி நீதான் நீதி மன்ற ஆணைய வச்சுருக்கியே தைரியமா போ சாமி” தைரியமாகத்தான் போனார் தேவாரம் பாடி முடிப்பதற்கு முன்னரே தீட்சித பார்ப்பன ரவுடிகளால் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில் வீசப்பட்டார். சாலையில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் .
பிறப்பால் பார்ப்பனராய் பிறக்காததால் தான் சந்தித்த கொடுமைகளுக்கு தன்னந்தனியாய் கையளவு நோட்டீசுகளுடன் மக்களிடம் முறையிட்டார் அவர்கள் கூடுமிடங்களில்,பின்னர் மனித உரிமை பாதுகாப்புமையத்தை நாடி ம.க.இ.க,மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சீறிய முயற்சியால் தற்போது தினமும் அவரின் கடவுளை தமிழால் வழிபடுகிறார்,தீட்சிதப்பார்ப்பனர்களோ வயிறெரிந்து சாபமிடுகிறார்கள் ,சாமியார் ஆறுமுக சாமியோ வெற்றிநடைப்போட்டு கோயிலுக்கு வருகிறார்.
கோயிலை இந்து அறனிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பபட வேண்டும் என்று இன்று வந்த தீர்ப்பால் தீட்சிதர்களோ வீட்டுக்கு மூட்டை முடிச்சை கட்டலாமா மேல்முறையீடு செய்யலாமா எனக் காத்திருக்கிறார்கள்.
புதியதாய் இதை படிக்கும் பலருக்கும் அண்ணாமலை படப்பாணியை நினைவிருக்கலாம்,இந்த நீண்ட நெடிய வரலாறு 2 மணிநேரத்தில் முடிந்து விடவில்லை,பல்லாண்டுகளாக போராடியது மனித உரிமை பாதுகாப்புமையம் , ம க ,இ க அதன் தோழமை அமைப்புகள்,
முதலில் மனித உரிமை பாதுகாப்புமையம் உள்ளூரில் உள்ள சனனாய சக்திகளை திரட்டியது,ஆரம்பத்தில் ஆகா ஓகோ என முண்டியடித்து வந்தவர்களெல்லாம் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராய் கழண்டு போனார்கள்.அதிலும் முக்கியமாக முதல் கூட்டத்தில் சீபீஎம் மட்டும்தான் இதை சாதிக்கும் என பேஇய அக்கட்சியின் மா செ அடுத்த மீட்டிங் முதல் தாங்கள் விலகுவதாக அறிவித்தார் . கேட்டதற்கு சொன்னார்கள் நீங்கள் “பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை திட்டுகிறீர்கள்” அன்று பார்ப்பான் என்று சொன்னதால் ஓடிப்போன சூரப்புலிகள் தான் இன்று ம க இ க வை பார்ப்பனீயம் என அழைக்கிறார்கள்,
பிறகு சிதம்பரத்தில் ஆறுமுக சாமி தேவாரம் பாடுவது தொடர்பாக வழக்கு நடைப்பெற்றது,அதற்கு திர்ப்பு வழங்கிய அம்பேத்கார்”ஆறுமுக சாமி தமிழில் பாட நிரந்தர தடை விதித்தார்,மேலும் இவர்கள் நுழைந்தால் கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்”
ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனை வாய்தாக்கள் எத்தனை துரோகிகள் துவளவில்லை மனித உரிமை பாதுகாப்புமையம்.தொடர்ந்து போராடினார்கள்.சாதித்து விட்டார்கள், மக இ க ,பு மா இ மு, பு ஜ தொ மு, ஆகிய அமைப்புகள் மக்களிடையே வழக்கினை கொண்டு சென்றன.முதல் கட்டமாக தமிழ் நுழைந்தது, அந்த தமிழ் நுழைவதற்குதான் மாபெரும் போர் நடத்த வேண்டியிருந்தது..அவ்வரலாறை சொல்லுவதற்கு ஆயிரம் பக்காங்கள் போதாது .
அக்கோயிலில் நடந்த கொள்ளை பற்றியும் கொலை பற்றியும் விசாரிக்க வழக்கு தொடர்ந்தது மனித உரிமை பாதுகாப்புமையம்.இன்று (திங்கள்) கோயி லை அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கோரும் மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்”
இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்
ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,
சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின் குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன் நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.
பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல் கோயிலை விட்டு முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ அதுதான் “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம் வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படும். நந்தனுக்காக போடப்பட்ட சுவர் தூள் தூளக்கப்பட வேண்டும்.தீண்டாமை அறவே அழிக்கப்படவேண்டும்.தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?
இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவுக்கு…..
http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/
குறிச்சொற்கள்: ஆறுமுக சாமி, சிதம்பரம், தில்லை, தீட்சிதர், பார்ப்பனர், பு மா இ மு, புஜா தொ மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்பு மையம், வி வி மு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 16 மறுமொழிகள் »
பெப்ரவரி 13, 2009 by kalagam
வழக்கம் போலவே வந்துவிட்டது காதலர் தினம் பெப்ரவரி 14கையில் ரோசாக்களோடு பச்சை நிற உடைகளில் அலைந்து கொண்டிருப்போரை அலுவலகம், ரயில் நிலையங்கள்,பேருந்துகளில் என எங்கும் காணலாம்.பன்னாட்டு மூலதனத்தின் வரவால் இறக்குமதியான கலாச்சார சீரழிவுகள் காதலை தேடச்சொல்கின்றன படுக்கையறையில்.
தன் துணையை தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட காதல் தற்போது பாலுறவுத்தேவையை தீர்க்கும் நோக்கோடு புதைகுழிக்கு அனுப்பபடுகிறது. காதல் பாசம் நட்பு என அனைத்தையும் நுகர்பொருளாக்கிவிட்ட உலகமயம் அது உருவாக்கப்பட்ட உருவான நோக்கத்தை திட்டமிட்டே மறைக்கின்றன.அதிலும் குறிப்பாக காதல் என்பது அதன் தன்மையை இழந்து மிக வேக மாக விபச்சார நிலைக்கு தள்ளப்படுகின்றது.
இச்சமுதாயத்தின் உருவாக்கத்தில் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது,பெண்ணினம் தான் தன்னையும் வளர்த்து இந்த சமுதாயத்தையும் வளர்த்து உருவாக்கியது. தாய் வழி சமூகமாக இருந்த மனித இனம் படிப்படியாக தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டது,.ஒன்றாகவே வேட்டைக்கு சென்று வந்த மனித இனத்தில் தாய்மை பெண்ணை தங்குமிடத்தில் இருக்க வைத்தது. அது வரை உடல் பலம் உள்ளிட்ட அனைத்திலும் சமமாக இருந்த பெண் உணவுக்காக ஆணை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றார்,ஆண் தன் பசிக்குப்போக மீதத்தையே பெண்ணுக்கு தந்தான்.
ஓய்வு நேரங்களில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டறிந்தனர்,வழக்கம் போலவே அங்கிருந்த பெண்ணின் ஆளுமை அகற்றப்பட்டு ஆணுடைய ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. தந்தை வழி மாற்றத்துக்குப்பின் பெண் ஆணின் சொத்தாகவே மதிக்கப்படுகின்றார்,அதன் உரிமையாளர் தந்தை,சகோதரன் காதலன் கணவன் மகன் என பல்வேறு அவதாரங்கள் எடுத்துஆணாதிக்கம் தனது பெருமையை நிலை நாட்டுகிறது.
வரைமுறையற்ற பாலுறவினை தனிச்சொத்துரிமையே தகர்த்து ஒருத்திக்கு ஒருவன்(கவனிக்க ஒருவனுக்கு ஒருத்தி அல்ல) என்ற கோட்பாட்டை வைத்து பெண்ணின் மீது வரைமுறையற்ற சுரண்டலை ஏற்படுத்துகிறது.அதை மறுத்து இருவரும் பரஸ்பரம் அன்புடன் வாழும் காதலை பெண்தான் ஏற்படுத்துகிறார்.காதல் உருவானதே ஆணாதிக்கத்திலிருந்து தனது உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே,அதற்கான போராட்டமே. காதலில் பெண் தைச்சொத்தாக மதிக்கப்படுவதில்லை,இருவரும் ஒருவை ஒருவரை மதித்து அனுசரித்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது.
இப்படி தனது துணையை தெரிவு செய்வதற்காக உருவான காதல் ஆனாதிக்கத்தாலும் உலகமயத்தாலும் தன் தன்மையை இழந்து விபச்சாரத்தை நோக்கிய பாதையில் தள்ளப்படுகிறது.
ஒரு ஆணாதிக்க ஆண் தனக்கு மட்டுமே காதலிக்க உரிமை இருப்பதாகவும் அதை பெண் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்பவராகத்தானிருக்க வேண்டுமென எண்ணுகிறான்.அப்பெண் காதலை ஏற்க மறுக்கும் பட்சத்தில் அப்பெண்னை குற்றவாளியாக்குகிறான் ,தான் விருப்பபட்டதால் அப்பொருள் தனக்கே கிடைக்கவேண்டுமென வாதாடுகிறான்.
திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களோ ஆணாதிக்க காதலையே நியாயப்படுத்துகின்றன. மேலும் எறும்பு ஊற கல்லையும் தேய்க்க ஊடகங்கள் சொல்லித்தருகின்றன . முதலில் மாயைகள் சொல்வது போல் காதல் என்பது ஒரு முறை தான் பூக்குமா?காதல் என்பது நிலையானதா? காதலித்து மணந்த கனவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு அல்லது சமுதாயத்தின் பல கீழ்த்த்ரமான செயல்களில் ஈடுபடுகிறான் எனில் அக்காதல் தொடர்ந்து நீடிக்க முடியுமா ? அப்படி நீடித்தால் அது காதலா அல்லது அடிமைத்த்னமா .
ஒரு பெண்ணுக்கு எப்படி துணையை தெரிவு செய்ய உரிமை உல்ளதோ அவ்வாறே தன் உரிமைகள் பாதிக்கப்படும் போது தூக்கிஎறியவும் உரிமை வேண்டும். இப்போது காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் ? காதலிக்கும் வரை ஒரு மாதிரியும்(பெண்ணை மதிப்பதும்) கல்யாணத்துக்கு பிறகு மற்ற பெண்களைப்போல் அடிமையாய் இருப்பதும் தான் இருக்கிறது.
ஒரு பெண்ணோ அல்லது ஆணோ விரும்பிய யாராவது இறந்து விட்டால் உடனே சாக வேண்டும்.இளவயதில் கணவன் செத்தால் கூட இறுதிவரை காதலுக்கு பெண் கல்லறை கட்டி அதில் விளக்கு பிடிக்கவும் வேண்டும் ,ஆனால் ஆணுக்கு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லை .உரிமைக்கான முதல் படியாக இருந்த காதலை ஆனாதிக்கம் தனக்கேற்றாற்போல் வளைத்து அதனையே அடிமையாக்கி விட்டது
ஏகாதிபத்திய காதலோ தலை கீழ் அதற்கு பேர்தான் காதலே தவிர அது ஒட்டு மொத்த விபச்சாரம் அதற்கு ஒரு பேர் வேண்டும் அது காதலாக சொல்லப்படுகிறது. ஊர் மேய்வதற்கு ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்கிறார்கள் . உண்மையில் ஐடி பீபிஓக்களின் சரிவால் ஊர்மேஞ்சி காதலர்களின் எண்ணிக்கை கண்டிப்பாய் குறையும்.
———————————————————————————– ————————–
சிறீ ராம் சேனா ,இந்து முன்னணி போன்ற பண்டார பார்ப்பனீயங்கள் மற்றும் மூற்போக்கு பா.ம.க காதலர் தினத்தை எதிர்ப்பதாக கூறுகின்றன,இவர்கள் எதிர்ப்பது ஏகாதிபத்திய காதல்களைஅல்ல .காதலால் வர்ணாசிரமத்தில் சிதைவு ஏற்படும் என்பதே இவர்களின் கவலை.
அந்தகவலை தான் வெறியாக வெளிப்படுகின்றது. நேற்று தின மணியில் வந்த கார்டூனைப்பாருங்கள் இரு கல்லூரிபெண்கள் பேசிக்கொள்கிறார்கள்”எனக்கு யார் காஸ்ட்லியான பரிசு தராங்களோ அவனத்தான் நான் காதலிப்பேன்” விபச்சாரத்தியே காதலாக பார்ப்பன மீடியாக்கள் வர்ணிக்கின்றன.
தெருவில் பெண் ஆனோடு திரிந்தால் கல்யாணம் செய்து வைக்க போவதாய் அறிக்கைவிடும் காலிகள் தான் காதலித்ததால் கல்யாணம் செய்ததால் தீயை வைத்தார்கள் விசத்தை கொடுத்தார்கள், இந்த நாட்டு மக்களுக்கு மறுகாலனியும் பார்ப்பனீயமும் முக்கிய எதிரி என்றால் காதலுக்கும் அதுதான் எதிரி.பார்ப்பனீயமோ பெண்ணை கட்டற்ற வரைமுறையற்ற சுரண்டலுக்கான பொருளாக பெண்ணை மாறக்கோருகிறது ,அதையேத்தான் மறுகாலனியும் கூறுகிறது,இது காதலில் மட்டுமல்ல எந்த ஒரு உரிமைக்கும் சரி பிரச்சினைக்கும் சரி பார்ப்பனீயமும் உலகமயமும் ஒன்றையேதான் கூறுகிறார்கள் . ஏனெனில் உரிமைகளை பெற வேண்டுமெனில் இவை இரண்டையும் எதிர்க்காது தீர்வு இல்லை. காதலர்களே காதலை உரிமையாக கருதுவீர்களானால் போரிடுங்கள் நீங்களும் மக்கள் தானே
குறிச்சொற்கள்: இந்து முன்னணி, ஐடி, காதல், சிறீ ராம் சேனா, பாமக, பார்ப்பனீயம், பீபிஒ, பெண்ணடிமை
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
பெப்ரவரி 17, 2009 by kalagam
தில்லையை மீட்போம் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்போம்.

இது ஏற்கனவே கேட்டது ,படித்தது போலத்தெரியலாம்,பழைய விசயங்களை புதிய விசயமாக்குவது காலமே தீர்மானிக்கிறது.அப்படித்தான் தில்லைக்கோயிலில் தமிழை நுழைக்கவும் அதை அரசின் கட்டுக்குள் கொண்டுவரவும் போராடிய புரட்சிகர அமைப்புக்களின் பணி இன்னும் பலமடங்கு கூடியுள்ளது.வெற்றி என்பது ஒரு காரியம் நிகழ்த்தப்பட்டதால் மட்டுமல்ல தொடர்ந்து அதை தக்க வைப்பதிலேயே இருக்கிறது.மீண்டும் பல நிகழ்வுகளை நினைவு கூற வேண்டிய கட்டாயத்தில் எதிரிகளும் துரோகிகளும் நம்மை தள்ளியிருக்கிறார்கள்.
கடந்த 2000-ம் ஆண்டு திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாட முனைந்த சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சித ரவுடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்டார்.அதற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மக இக,புஜதொமு,புமாஇமு,விவிமு மற்றும் உள்ளூர் சனனாயக சக்திகளுடன் இணைந்து போராடியது
தீட்சிதர் ஆதிக்கத்திற்கு எதிராக உண்மையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் போராட்டங்களால் தில்லையே பரபரப்புக்குள்ளாகியது.
உள்ளூர் சனனாய சக்திகள் முக்கியமாக முன்னாள் அமைச்சர் விவி சாமிநாதன் மற்றும் வி.எம்.எஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.தீட்சிதர்களின் சில்லுவண்டித்தனமெல்லாம் சிதம்பரம் முழுக்க நாறிக்கிடந்தது.
அவ்வூர் வழியாக பயணம் செய்ய நேர்ந்தது.அப்போது சிதம்பரத்தில் ஏறிய பயணியிடம் தீட்சிதர்களின் அட்டூழியத்தினை சொன்னேன்.அவர் பொறுமையாய் சொன்னார்” எங்களுக்கு அது நடக்குறது எப்பவோ தெரியுமே”.மக இ க வின் பிரச்சாரத்துக்கு முன் பலரும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடம் தீட்சித ரவுடிகளை யாராலும் அடக்க முடியாது.
கோயிலில் அசைவ உணவுகளை தின்பது,கோயிலில் நகைகளை கொள்ளையடிப்பது ,கோயிலிலே விபச்சாரத்தனத்தில் ஈடுபடுவது எல்லாம் பட்டவர்த்தனமாகியிருந்தது,யாரும் முன் வரவில்லை காரணம் எல்லாம் கடவுளின் பெயரால் நடைபெற்றதும் முக்கிய காரணம்.
இப்போது வரும் சனியன்று நடக்கப்போகின்றதே அந்த பெரியார் சிலை அருகில் தான் முதல் பொதுக்கூட்டம் நடந்தது.அதில் பேசிய திரு.வி எம்.எஸ்.தனக்கு சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து வந்த கடிதத்தை படித்துக்காட்டினார்,அதில் தீட்சிதர்களி அயோக்கியத்தனம் குறித்து எழுதப்பட்டிருந்தது.அக்கூட்டத்தில் பேசிய CPM மாவட்ட செயலாளர் சொன்னார்” உரிமைக்காக “இந்தியா முழுவதும் மார்சிஸ்ட் கட்சி மட்டுமே போராடும் அதில் வெற்றியும் பெறும் என வீராப்பாய் பேசினார்.
அடுத்த வாரமே பார்ப்பனர் என்ற சொல்லால் பிராமணர் உரிமை அவமதிக்கப்படுவதாக கூறி வெளியேறினர்.பிறகு தனியாய் போராடுவதாய் கூறி பார்ப்னீயத்திற்கெதிரான போராட்டத்தை தங்கள் தலைமி போலவே சிதைக்க முயற்சி செய்தனர்.
தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியும் அதன் வெக்கங்கெட்டராமனும் வெளிப்படையாகவே தீட்சித்ர்க்கு ஆதரவாய் திரிந்தனர். சேக்கிழார் விழாவில் தீட்சிதரை அருளாசி வழங்க அழைத்தனர்.அவ்விழாவில் ம.க.இ.க இந்த புரட்டல் வாதிகளை அம்பலப்படுத்தி துண்டறிக்கை வெளியிட்டது.பின்னர் அரசியல் விபச்சாரி நெடுமாறனை கூட்டிவந்து கூட்டம் போடார்கள் .அதில் ஒப்புக்குகூட பார்ப்பனர் எனும் வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை.ஆனால் போராட்டத்தில் பங்கு கொண்டிருந்த புரட்சிகர அமைப்புக்களை கிண்டலடித்தார்கள் . ஆனால் இந்த நாய்களின் ஊளையை சற்றும் மதிக்காது மனித உரிமை பாதுகாப்பு மய்யம் தொடர்ந்து போராடியது.
தில்லையில் அதன் தோழர்கள் குருதி சிந்தி தமிழை கொண்டு சென்றார்கள்.தமிழை நீச பாசை எனகூறி ஒதுக்கிய தீட்சிதக்கும்பலால் ம க இ க தோழர்கள் நுழைந்த போது வாய் மூடி மவுனம் சாதிக்கவே முடிந்தது. அப்போது நடந்த சம்பவங்களோ கொடுமையிலும் கொடுமை பல ஊடகங்கள் மக இ க -இன் பெயரை திட்டமிட்டே மறைத்தன.
அரசியல் மாமா கட்சியான சீபீஎம் தனது போராட்டத்தாலே தமிழ் நுழைந்தாக போஸ்ட்டர் ஒட்டியது.அப்போராட்டத்தையே சிதைக்க முயன்ற நாய்கள் வாய் கூசாது பல்லைகாட்டின,சொந்தம் கொண்டாடின.
சென்னையில் பல இடங்களில் போஸ்ட்டர் ஒட்டிய த மு எ ச தமிழக அரசுக்கு நன்றி சொன்னது.
அக்கோயிலை அரசுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கோரி அரசு நடத்தாமல் கிடந்த வழக்கினை ஆறுமுகசாமி பெயரில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மனுத்தாக்கல் செய்தது.இத்தனை ஆண்டுகளாக தூங்க வைக்கப்பட்ட வழக்கினை தட்டி எழுப்பி அரசின் வழக்கு மன்றத்தின் மூலம் கோயிலை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வரும் உத்த்ரவு பெறப்பட்டது,வழக்கம் போல திகவோ தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறது,மற்ற கட்சிகளோ பத்திரிக்கை மற்றும் ஊடகங்களோ திட்டமிட்டு மக இ க புஜதொமு பு.ம.இ.மு,விவிமு ஆகிய அமைப்புக்களின் பெரும் பங்கினை மறைத்தன.
சென்ற ஆண்டு நடந்த வெற்றி விழ பொதுக்கூடத்தில் பேசிய வேல் முருகன் கூட ம க இ க தான் இவ்வெற்றிக்கு காரணம் என தெளிவாக கூறினார்,ஆனால் திக ஏன் பல அமைப்புக்கள் புரட்சிகர அமைப்புக்களின் பெயரை திட்ட மிட்டு மறைக்கின்றன.
ஆனால் தில்லை மக்கள் தெரிந்து கொண்டார்கள் ம க இ க வும் அதன் தோழமை அமைப்புகளாலேயே இவ்வெற்றி ஈட்டப்பட்டதென்பதை ஆம் அன்று முதல் வரும் சனி வரை நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான நிதியை மக்கள் தான் வழங்குகின்றனர்.நெருப்பை பொட்டலம் கட்டி வைக்க முடியாது அப்படித்தான் போராட்டத்தையோ அதன் வெற்றியையோ அதிக நாள் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
பார்ப்பன பாசிஸ்டுகள் ஓரணி
கோயிலோ கையை விட்டு போய்விட்டது அதை மீட்டே தீருவோம் என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்,பார்ப்பன மீடியாக்களோ அதற்கு ஒத்து ஊதி அதன் ஊது குழலாய் செயல் படுகின்றன. கடந்த வாரம் “ஈஸ்வர ரக்சது” எனும் பெயரில் தலையங்கம் தீட்டிய பார்ப்பன மணி கோயிலை அரசு எடுத்துக்கொண்டது இது வரை இருந்த கோயில் புனஸ்காரங்களும் தடையாகும் என்பதாக சித்தரிக்கிறது,இது வரை யோக்கியமாக இருந்ததாகவும் தற்போது அரசியல் வாதிகள் கெடுத்து விடுவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கிறது,அதற்கு கருத்து சொல்லுகிறார் பார்ப்பன கொழுந்து”அண்ணாவோட போட்டோவை மாட்டுறாங்க ஆனா அரங்கனுடைய போட்டோவ மாட்டுறான்க இதுக்கு என்ன காரணம் திருச்சி ரெங்க நாதன் அரசுவசமிருப்பதே,ஆனாலும் நாம் பொறுமையாயிருப்போம்” என்னவோ தமிழக கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தன் சொந் உழைப்பால் கட்டியதைப்போலவும் அது பார்ப்பனர்களி பரம்பரை சொத்து அது அரசு தட்டி பறிக்க முயல்வதாக பார்ப்பன மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.
என்னுடைய உழைக்கும் மக்கள் ரத்தத்தில் நிமிர்ந்த கோயில்கள் அம்மக்களுக்கு திறப்பதில்லை,அன்று பார்ப்பன ஆதிக்கத்தில் கேள்வி கேட்ட உழைக்கும் மக்கள் எரிக்கப்பட்டு நாயன்மாராக்கப்பட்டனர்.என் மக்களால் உருவாக்கப்பட்ட கோயிலுக்கு நீ என்ன காவலிருப்பது என் சாமியை வழிபட என் மொழியில் அழைக்க கூடாது அப்படி செய்தால் தீட்டு படுமெனில் அதற்கு அந்த சிவ்னும் உடந்தையெனில் அவனும் தண்டனையை பெறவேண்டும்.ஆனால் ஊடகங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பற்றியோ,சிதம்பரம் போலீசு தீட்சிதன்களுக்கு வாலாட்டுவதை பற்றியோ,பங்கு பிரிக்கும் போது கொல்லப்பட்ட மூர்த்தி தீட்சிதனைப்பற்றியோ வாய்திறப்பதில்லை,பாவம் அவர்கள் எங்கெ போவார்கள் ? என கேள்வி எழுப்புகிறது ?
காடுகள் அழிகிறது என்ற பொய்யாக குற்றச்சாட்டு கூறி ஆடு மேய்ச்சல் தடைசெய்யப்பட்டிருக்கிறதே அதை நம்பி வாழ்ந்த மக்களைபற்றியோ,தினசரி செத்துக்கொண்டிருக்கும் விவசாயி பற்றியோ,கங்கை கொண்டான் நீர் மக்களுக்கின்றி கோலா கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, சீனப்பட்டால் தூக்கில் தொங்கும் கைத்தறி பற்றியோ வாய்திறவாத திறந்தாலும் என்ன செய்யறது எனக்கூறிய பத்திரிக்கைகள் தற்போது தீர்ப்பே கூறுகின்றன”அரசு ஏற்றது தவறு என்று”
அவர்களுக்கு தேவை எல்லாம் சொர்ண மால்யாக்கள் அவிழ்த்துப்போட்டு ஆட வேண்டும் .அதுவும் தில்லையில் புனிதமாக கருதப்பவேண்டும் கோயிலில் பார்ப்பனன் வாய்வைத்தவுடன் பீரும் பான்பராக்கும் புனிதமாகிவிடுகின்றன.
கள்ளக்காதலை பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் பார்ப்பன மீடியாக்கள் தில்லை தீட்சிதன்கள் படுத்து எந்திரிக்கும் கதையை எப்போதும் எழுத மாட்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ்,இந்து முண்ணனி,இந்துமக்கள் கட்சி போன்ற பயங்கரவாதிகள் சிதம்பரத்தில் களமிறங்கி விட்டார்கள்,சுப்பிரமணிய சாமியோ உங்களுக்கு நான் கோயிலை மீட்டே தருவேன் எனக் கூறுகிறார். வேதாந்தியின் வருகைக்கு கூட நாள் குறிக்கப்படலாம்.எல்லாம் நடக்கலாம் .நாம் என்ன செய்யப்போகிறோம் . இனியும் பார்ப்பனனின் காலைக்கழுவி குடிப்பதற்கு வரிசையில் நிற்கப்போகிறோமா அடிமை பக்தர்களாக இல்லை, என் கடவுளை வழிபட நீயார் அந்த உரிமையை தடுக்க நீ யார் என கேள்வி கேட்கப்போகிறோமா?
திரள்வோம்
தில்லையில் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்.
ஆர்.எஸ்.எஸ் ,பிஜேபி பார்ப்பன கும்பலை களத்தில் முறியடிப்போம்.
பிப்ரவரி 21.மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ,
பேரணி துவங்கும் இடம் அயோக்கியன் காந்திசிலை
பொதுக்கூட்ட இடம் : பகுத்தறிவு சூரியன் பெரியார் சிலை அருகில்
குறிச்சொற்கள்: ஆர்.எஸ்.எஸ், சிதம்பரம், தில்லை, பிஜேபி, பெரியார், பேரணி மற்றும் பொதுக்கூட்டம், மக இ க, HRPC, NDLF, PALA
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 8 மறுமொழிகள் »
பெப்ரவரி 24, 2009 by kalagam
கடைசி ஆஸ்கர்

ஆகா நாம் என்ன புண்ணியம் செய்தோம்
இது வரைக்கும் உலக வரலாற்றிலேயே
அதுவும் முதல் முறையா எப்படி
சொல்லுறது
பத்திரிக்கைகள் திண்டாடுகின்றன
டிவிக்களோ கொண்டாடுகின்றன…..
இப்போது மட்டுமல்ல
எப்போதும் இப்படித்தான்
கொழும்பில் நடந்த டெஸ்ட் தொடரை
இந்தியா கைப்பற்றியது
பங்கு சந்தை கொஞ்சம்
ஏறிவிட்டது
நாட்டின் வளர்ச்சி விகிதம்
உயர்ந்து விட்டது
கொண்டாட்டங்களும் திண்டாட்டங்களும்
கூடி கும்மியடிக்கின்றன எங்களின்
இழவு வீட்டில்…..
தின்ன சோறில்லை
ரெண்டுபக்கமும் குண்டுமழை
தத்தி தத்தி
கள்ளத்தோணி ஏறும் போது
போய்விட்டது உயிர்…..
முகத்தின் சுருக்கங்கள்
சொல்லும் முதுமையை
நிலத்தின் சுருக்கங்களோ
அறிவித்தது மண்ணின்
மரணித்தலை
ஆனாலும் வழியில்லை
தோண்டுகிறோம்……..
அழுகிறது குழந்தை
தூக்கம் கெட்டுப்போகவில்லை
பலநாளாய் போகவில்லை
தொண்டைக்குழிக்குள் எதுவும்-
ஆத்தாளோ பறிக்க
போயிருக்கிறாள் ஒடுவந்தலையை….
வேலையில்லை
இருந்த கம்பெனிகள்
முடிக்கொள்ள
பூட்டுகள் மீண்டும்
சொல்கின்றன வேலையில்லை
வேலையில்லை…..
தண்ணீர்,சோறு எல்லாம்
கானல் நீராய்ப்போக
சாக்கடை தண்ணீர் மட்டும் தான்
மிச்சமிருக்கிறது…..
என்ன இருந்தாலும் எல்லா
விரலும் ஒரே மாதிரியா
இருப்பதில்லை உண்மைதான் யாரும்
சுண்டு விரலாய் இருக்கவிரும்புவதில்லை
நாங்கள் கூட சோத்துக்கு
லாட்டரி அடிக்க விரும்பியதில்லை
ஆனால் இன்று வரை
அடித்துக்கொண்டே இருக்கிறோம்
விழாத பரிசுச்சீட்டை சுரண்டிக்கொண்டே இருக்கிறோம்……..
எப்படி இருந்தாலும் பெருமைப்பட்டே
ஆகவேண்டுமாம்
ஒன்பது ஆஸ்கர் விருது
கிடைத்ததற்காக
ஒவொவொரு நாளும் ஒவ்வொரு
பெருமைகள் எங்களை
கர்வமாயிருக்கச்சொல்கின்றன…..
போட்டியிடாமலே விருதுகள்
எங்களுக்கு குவிகின்றன
பதவிகள் கனக்கின்றன
பாதையோ கருமையாய் இருக்கின்றது….
எல்லோரும் பெருமைப்படுங்கள்
நாங்களும் பெருமையோடு
செத்துப்போகிறோம்
கண்டிப்பாய் எங்களுக்கு சொர்க்கம் கிடைக்காது
உழைக்காத ஊதாரிகள் எங்களுக்கு தந்த
கடைசி ஆஸ்கர் விருதுதான் நரகம்.
குறிச்சொற்கள்: ar rahman, ஆஸ்கர், இழவு, கவிதை, சாவு, விவசாயி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 13 மறுமொழிகள் »
மார்ச் 6, 2009 by kalagam
ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் “கோபா”
1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு “டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது” என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.
1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் “தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு” என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு “இரும்பு மனிதன்” எனும் பொருள் கொண்ட “ஸ்டாலின்” என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் “ஸ்டாலின்” என்ற பெயர் இணைக்கப்பட்டது.
தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.
1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.
முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி ” இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றார். உடனடியாக குழந்தைகள் “ஆறுமாதம் சிறை கிடைக்கும்” என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.
உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.
…..
நாடுகள் ———–1929 —- 1930 —– 1931 —— 1932 ——1933
..
அமெரிக்கா ———–100 —–. 80.7 —- 63.1 ——- 59.3 ——-64.9
பிரிட்டன் ———–100 —— 92.4 —— 83.8 —— 83.8 ——– 86.3
ஜெர்மனி ———-100 ——- 88.3 ——- 73.7 —– 59.8 ——– 66.8
பிரான்ஸ் ————100 —— 100.7 —- 89.2 ——- 99.3 – ——- 77.4
சோவியத் யூனியன் —–100 —- 129.2 —— 161.9 —- 184.7 — —– 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் – நூல்கள் தொகுதி 13 பக் 293)
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.
‘கிரெம்ளினைக் கைப்பறுவேன்’ என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.
இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!
ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .
ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.
ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.
1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.
உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.
சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.
எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.
மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.
உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.
நன்றி
தோழர் இரும்பு
முதலாளித்துவ பயங்கரவாதிகளால் கொடுங்கோலன் என்றும் வெறியர் என்று தூற்றப்படும் பாட்டளி வர்க்கத்தின் ஆசானும் மார்க்சிய லெனினியத்தின் முன்னோடியுமான தோழர் ஸ்டாலினின் நினைவு தினத்தை ஒட்டி (05.03.1953) இக்கட்டுரை ஈராண்டுகளுக்கு முன் தோழர் இரும்பு அவர்களின் தளத்தில் வந்த இக்கட்டுரை காலத்தேவையினை கருதி மீண்டும் மறு பிரசுரம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.
வர்க்கப்போரில் பகலவனாய் இருக்கும் தோழரின் மீதும் சோசலிச ரசியாவை இரும்புத்திரை நாடென்றும் இகழ்ந்த ஓனாய்களின் முகமுடியை இக்கட்டுரை கிழிக்கிறது.
குறிச்சொற்கள்: கம்யூனிசம், குருச்சேவ், சோவியட், பாஸிஸ்ட், ஸ்டாலின்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
மார்ச் 9, 2009 by kalagam
நான் கடவுள்-சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்

சுமார் மூன்றாண்டுகளாக இழுத்து இழுத்து கடைசியாக பிணந்தின்னிகளின் கோவணத்தை காட்டாது மாடர்ன் உலகத்திலே ஜட்டியை மாட்டி விட்டு “அட நம்புங்கப்பா இவன் நொம்ப நல்லவன், அவன் என்ன பண்ணுனான் இந்த உலகத்த விட அவனுக்கு கடவுள் உலகம்தான் புடிச்சிருக்கு” என்கிறார் பாலா.இனி கதைக்குள் செல்வோம்.
தொடர்ந்து தன் வீட்டில் பல பேர் செத்து போவதால் ஜோசியக்காரனிடம் போய் குறி கேட்கிறார் ஒருவர்.அதற்கு அந்த ஜோசியனோ உன் பையன் தான் இதற்கு காரணம். அவனை விட்டு பிரிந்து வாழ்வது மட்டுமே இதற்கு தீர்வு என்கிறார்.உடனே தன் மகனை காசியில் கொண்டு போய் விட்டு விட்டு பல ஆண்டுகளுக்குப்பின் மகனை பார்க்க திரும்புகிறார்.வந்தவருக்கோ மிக்க அதிர்ச்சி தன் மகன் அகோரியாகி இருக்கிறான்.அவனின் குருவிடம் கெஞ்சி கூத்தாடி தன் ஊருக்கே அழைத்து வருகிறான்.
குருவோ அகோரிக்கு சொந்தம் பந்தம் இருக்க கூடாது நீபோய்விட்டு ஏதும் இல்லாது வா என்க, எல்லாவற்றையும் இல்லாததாக்குவதற்கு அப்பனுடன் செல்கிறான் ருத்ரன் அகோரி.
யார் அகோரி : இவர்கள் முற்று துறந்தவர்கள்,முக்காலமும் அறிந்தவர்கள்,ஒருவருக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதையா என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அதே போல் ஒருவரை பார்த்தவுடனே அவனின் கர்ம பாவங்களை அறிந்து விடுவார்கள்,தேவையெனில் தீர்ப்பும் வழங்குவார்கள்
தன் வீட்டுக்கு வரும் அகோரி ருத்ரன் எதுவுமே சாப்பிடாது கஞ்சா குடித்த படி வீட்டில் உள்ளவர்களை ஆபாசமாக திட்டிகொண்டும் இருக்கின்றான்.ஆத்தாளிடம் சன்டை போட்டுக்கொண்டு தான் சுயம்பு எனக்கூறிக்கொண்டு கஞ்சா இருக்கும் மலைதேடி சென்று அங்கே குடிகொள்கிறான்,மற்ற சாமியார்களெல்லாம் கஞ்சா அடித்து விட்டு படித்து விட இவன் மட்டும் கஞ்சா அடித்து தியானம் செய்து கொண்டிருக்கின்றான்.இங்கு இயக்குனர் சொல்லுகிறார் ஒரு தத்துவத்தை கஞ்சா போதைப்பொருளல்ல அது கடவுளை வழிபடுவதற்கான ஒரு வழி, அவ்வழியை மற்றவர்கள் பயன் படுத்துவது குற்றமென்றாலும் சாமியார்கள் பயன்படுத்துவது குற்றமாகாது.ஏனினில் ஒரு தவறு உலக நன்மைக்காக பயன் படுத்தும் போது அது குற்றமாகாது.
இதோடு பிச்சைக்காரர்காளாக்கப்பாட்ட உடல் ஊனமுற்றோர் வாழ்வின் கொடுமையும் சேர்கிறது ஆனால் அவர்களின் இன்னல்களோடு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவே சித்தரிக்கப்படுகின்றது,ஆனால் கண்தெரியாத பெண் கடத்தி கொண்டுவரப்ப்ட்டதுமே நிலமை மேலும் சீரியசாகிறது,ஊனமுற்றோரை தன் கட்டுப்பாட்டில் வைத்தி இருக்கும் தாண்டவனுக்கு இந்த கண் தெரியாத பெண்ணை பாலியல் தொழிலுக்கு அனுப்ப மாமா ஒருவன் ஆலோசனை கூற அப்பெண்ணை தூக்கி கொண்டுபோவதற்காக மாமா வருகிறார் பிறகு வேறென்ன நம்ம ரஜினி படம் போலவே கதானாயகி கற்புக்கு எவ்வித பாதிப்பும் வராது ருத்ரன் காப்பாறுகிறான் .
ஒரு பத்து பேரை அடித்து விட்டு வெளியே வரும் ருத்ரன் அந்த விபச்சார புரோக்கரை பாத்தவுடனே தன்னுடைய முக்கால அறிவால் அவன் தீய சக்தி என்பதை அறிந்து மக்கள் முன்னிலையில் அடித்து கொன்றுவிடுகிறான்.தக்க சாட்சி இல்லாதால் வழக்காடுமன்றம் அவனை விடுவிக்கிறது.
மீண்டும் கதாநாயகிக்கு தாண்டவன் மூலம் மண்டை உடைக்கப்பட்டு கைகால்கள் நொறுக்கப்படுகின்றது. கதானாயகி தவழ்ந்து தவழ்ந்து மலை மீது வந்து அகோரி ருத்ரனிடம் கேட்கிறாள் “சாமி என்ன கொன்னுடுங்க எங்களால இந்த வாழ்க்கய வாழ முடியல என்ன விபச்சாரியாக்கி விடுவாங்க”.
இந்து தர்மத்தின் படி ஒரு பெண் கற்பை இழந்து வாழ்வதை விட சாவது தான் உசித மானது என்பதனால் அகோரி கதாநாயகிக்கு மோட்சம் கொடுத்து விட்டு காசிக்கு செல்கிறார்.
——————————————————————————-
படம் இவ்வளவுதான் “நான்கடவுள்” இது கடவுள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதால் கொஞ்சம் லேட்டாகவே அகோரி உட்பட அனைவரின் பாத்திரமும் புரிகிறது.அப்புறம் தான் விளங்கியது எவனோ ஒருவன்,ரஜினி விஜய் மசாலா பாணியில் இது ஒரு ஆன்மீகப்படம்.கதானாயகியின் சேயையை தொட்டால் பறந்து பறந்து கதானாயகன் அடிப்பான் இங்கேயும் மெய்யாலும் தாவிதாவி அடிக்கிறான்.அங்கேயும் கற்பு காக்கப்படுகிறது,இங்கேயும் கற்புகாக்கப்படுகிறது.
அந்த கதாநாயகன் தம் கொஞ்சம் தண்ணீ,இவனோ எப்போதும் கஞ்சா என்ன இருந்தாலும் ரெண்டு பேரு கற்ப காப்பாத்திட்டாங்கல்ல.
கல்கி பகவான் லோகத்த காக்க வந்துட்டார்.
ஆனால் உண்மையில் அகோரி எனப்படும் காட்டுமிரண்டிகளின் வாழ்வு முக்திமட்டும் தருவதல்ல,அவர்களின் வேலையே பிணத்தை எரிப்பது காசு வாங்கிகொண்டு அப்பிணம் சொர்க்கத்துக்காக செல்ல விசா வங்கிதருவது தான்,பிணத்தை எரித்தவுடன் அந்த மண்ட ஓட்டினை உடைத்து அதையே தட்ட்டாக்கி வைத்து சாப்பிடுவார்கள்.பிணத்தின் சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு அம்மணமாய் திரிவார்கள்.
அப்புறம் தான் முக்கிய வேலையையே தொடங்கும் ஆத்தங்கரையோரத்தி தியானம் செய்த படி காத்திருப்பார்கள். எதாவது பிணம் புனித கங்கையில் மிதந்து வருமல்லவா அதை எடுத்து தக்க மந்திரங்கள் செய்து புனிதமாக்கி எந்த பகுதி யாருக்கு வேண்டுமோ அவர்கள் வெட்டி தின்னுவார்கள்.சிலர் அதை தீயில் சுட்டும் தின்கிறார்கள்.
அப்படி தின்னும் பிணந்தின்னிகளின் ஒருவன் சொல்லுகிறான் “எனக்கு கோழிக்கும் மனிதனுக்கும் வித்யாசம் தெரியவில்லை”
இந்த அகோரிகளின் வேலையைத்தான் பாசக ஆர் எஸ் எஸ் கும்பல் நாடெங்கும் செய்து கொண்டு வருகிறது,முசுலீம்களின் உடல்களை வெட்டித்தள்ளியது.இந்த அக்கோரிகள் தான் பாபர் மசூதி இடிப்பின் போதும் படைபடையாய் முன்னணியில் நின்றார்கள்,ராம ராஜ்யத்தில் பிணந்திண்ணிகளுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படலாம்.
பிணங்கள் கிடைக்காத பட்சத்தில் முசுலீம்கள் கிறித்துவர்கள் பின்ன தாழ்த்தப்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அந்த மோட்சம் தரும் புண்ணியவாண்களுக்கு புசிக்கதரப்படலாம்.
இது மிகையான கூற்று அல்ல.இந்த 2009 ஆண்டில் மனிதனை அந்தப்பிணத்தை தின்னும் ஒரு கூட்டம் உண்டெனில் அது இந்தியாவில் இந்த அகோரிகள் தான் .இப்படி வெட்ட வெளிச்சமாய் பிணத்தை தின்னும் மிருகங்களை கைது செய்து முட்டியை பெயர்க்காது சுட்டுக்கொள்ளாமல் சாமி சாமி என்று புனிதம் என்று போற்றி வருகின்றனர்.இப்படி ஒரு பிணந்திண்ணிகளின் கட்சியான பாசகவோ ஏனைய மற்ற கட்சிகளோ இதை கண்டு கொள்வதில்லை,காரணம் மதம்.மக்களின் மத உணர்வுகளில் யாரும் தலையிடக்கூடாது கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் எல்லோரும் சொல்லு கின்றனர்.
மதம் ஒரு அபின் என்றார் ஆசான் மார்க்ஸ்.அது எவ்வளவு உண்மை.செத்துப்போன பிணத்தை குறிப்பிட்ட நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால் கைது செய்யும் போலீசு,பிணந்தின்னிகளை ஒன்று செய்வதில்லை,ஒன்று செய்யாது,ஏன் பலரும் இதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. போராடும் மக்களுக்கெதிராக தூக்கப்படும் லத்திக்கம்புகள் பிணந்திண்ணிகளுக்கு கால் துடைக்கக்கூட பயன் படுவதில்லை என்பது தான் உண்மை.
இப்போது சொல்லுங்கள் மார்க்ஸ் சொன்னாரே மதம் ஒரு அபின் அது எத்துணை உணமை.
குறிப்பு
இது இந்துத்துவ பிரச்சாரப்படம்தான் ,கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவதாக காட்டுவதெல்லாம் ஆபாச நாயகன் செயமோகனுக்கு கைவந்த கலை.அவரால் தனிமனிதனை ஆபாசமாக வர்ணிக்கும் போதுதான் அவருக்கு மோட்சம் கிட்டுமோ என்னவோ? யாருக்கு தெரியும் ஒரு வேளை அந்த அகோரிக்கு தெரிந்தாலும் தெரியலாம்.
குறிச்சொற்கள்: ஆர்யா, இந்துத்வா, சினிமா, நான் கடவுள், பார்ப்பனீயம், பாலா, பிணந்திண்ணிகள், விமர்சனம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
மார்ச் 14, 2009 by kalagam

தூரிகைகளின் துயரப்பதிவுகள்
கண்டது முதல்
என்னிடம் சொல்வதற்கு
ஏதுமில்லை
மக்களின் மவுனம் என்னை கொல்லுகின்றது….
ஓட்டுப்பொறுக்கிகளின் சிரிப்புக்கள்
மகிந்தாவின் சிரிப்போடு
ஒத்துப்போய் சிரிப்புக்கள்
பெருஞ்சிரிப்பாகி விட்டன
அலைகளெல்லாம் ஒன்றாய் சேர்ந்து
சுனாமியானது போல்
எங்களின் துயரங்கள்
அவர்களின் சிரிப்புக்கள்
சந்தோசங்கள், ஆர்ப்பரிப்புக்கள்
சச்சின் சிக்ஸர் அடித்த வேளையில்
மகிந்தாவோ பிணங்களின் சதங்களை
எண்ணிக்கொண்டிருக்கின்றான்……………
கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது
மனமோ தட்டி தட்டி
தடுக்கிறது
மனிதனின்
உடல்கள் பாஸ்பரசு குண்டுகளால்
எரிந்து கொண்டிருக்க
இரவு பத்து மணிக்கு மேல்
டாஸ்மாக்கை ஒரு கும்பல்
தட்டிக்கொண்டிருக்கிறது…..
என்னைப்போலவே பலரிடமும்
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை
ஆம் உண்மைதான்
சொல்வதற்கு வார்த்தைகள்
இல்லை
இருக்கின்ற வார்த்தைகள்
எல்லாம்
சொல்லுகின்றன
திமுக அதிமுக பாமக
பாஜக காங்கிரஸ்,கலைஞர் ,
செயா,ரஜினி,விஜய்,அஜீத்,
சில்க்,நமீதா………
வார்த்தைகள் அடமானம்
வைக்கப்பட்டிருக்கின்றன
உலக வங்கியில் அல்ல
உள்ளூர் தேசியத்தில்……
உன்னில் தூங்கி கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப
இன்னும் எத்தனை பேர்
கருகிப்போகவேண்டும்……
வேறு வழியே இல்லை
இன்று ஈழம்
நாளை உன் இல்லம்
கண்டிப்பாய் நீயும்
கருக்கத்தான் படப்போகிறாய்
போராட்டத்தை தவிர வேறு
வழி இல்லை இல்லவே இல்லை
இனியும்
குப்புறப்படுத்து கிரிக்கெட்
ஸ்கோருக்காக நீ காத்திருந்தால்
நாங்கள் காத்திருக்கப்போவதில்லை
இந்தியத்தை முறியடிக்க
கூடவே உன்னையும் சேர்த்து.
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதை, போராடு, போர், மகிந்தா, மக்கள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
மார்ச் 19, 2009 by kalagam
“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?
” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
“வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,
வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
“அப்படியானால் என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”
“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது
“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”
“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”
“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”
“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”
“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள் என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!
இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம் ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”
“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்
வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
தோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்
http://vinavu.wordpress.com/2009/03/31/elec0903/
குறிச்சொற்கள்: இந்தியா, ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், தேர்தல், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மருதையன், விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
மார்ச் 25, 2009 by kalagam
B.P.O.அடிமை.காம்-பகுதி 5
அடிமைகளின் ஆசை மொழி

வழக்கம் போலவே காலையில் பஸ்ஸை பிடித்து ரயில்வே ஸ்டேசன் வந்து அப்புறம் சைதாப் பேட்டையில் இறங்கி பிறகு 19 Bக்காக காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. பக்கத்தில் ஒருவர் கேட்டார்.19 B வரலியா? “பரதேசி நாய்ங்க எங்க பஸ்ஸ உடறானுங்க? வாரம் ஆனா அத்தன பஸ் உட்டோம் இத்தன பஸ் உட்டோம்ன்னு சொல்லுறானுங்க இந்த ரூட் பஸ் மட்டும் அப்படியே இருக்குதே” என புலம்ப ஆரம்பித்தேன்.அவரும் சில கெட்ட வார்த்தைகளோடு ஆரம்பித்தார் முடிப்பதற்குள் வந்துவிட்டது
பஸ் எங்கேயிருந்துதான் அவ்வளவு கூட்டமோ சட சடவெனெ ஏறினார்கள் . எனக்கு பத்திரமாக நிற்பதற்கு இடம் கிடைத்தது. மெதுவாக மாட்டு வண்டிபோல இயங்க ஆரம்பித்தது . ஒரு நான்கு ஸ்டாப்தான்சென்றிருக்கும் மத்தியகைலாசத்துக்கு சற்று முன் வண்டியை நிறுத்திவிட்டார்கள். நடத்துனர் மெதுவாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.ஆளாளுக்கு கத்திக்கொண்டிருந்தோம்.எதையும் காதில் போடவில்லை.15 நிமிட இடைவேளைக்கு பிறகு கிளம்பியது. கொஞ்ச நேர பயணம். நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கினேன். வெயிலோ பட்டய கிளப்ப தலையில் கர்ச்சீப்பை கவிழ்த்துக்கொண்டு ஓடினேன்.
செய்ய வேண்டிய சம்பிரதாய வேலைகளை செய்து விட்டு அலுவலகம் உள்ளே சென்றிருந்தேன். ரொம்ப நாள் கழித்து டே ஷிப்ட்-ல் வந்திருந்தேன். எல்லோரையும் விசாரித்து விட்டு அமர்ந்தேன். என்னுடைய டீமைச்சேர்ந்த பெண் வந்து அமர்ந்தார்.அவரிடம் ஏதோ ஒரு மாற்றம். தெரிந்து விட்டது கண்ணாடியை மாற்றிவிட்டு லென்ஸ் போட்டிருந்தார். வேண்டுமென்றே கேட்டேன்” என்னங்க மூஞ்செல்லாம் வீங்கியிருக்கு வரவழியில விழுந்துட்டீங்களா? இல்ல உடம்பு சரியில்லயா?” “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே. லென்ஸ் போடிருக்கேன் ” என்றபடியே அவர் வார்த்தையில் ஒரு பெருமிதம். எனக்கு ஒரு சந்தேகம்” எதுக்காக லென்ஸ் போட்டிருப்பார்?”.
அடுத்த இரு நாட்கள் முழுவதும் வேறு வேலைகளில் மூழ்கிப்போனதால் அதைப்பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆனால் வந்து அப்பெண்ணிடம் பேச இதை ஒரு சாக்காக வைத்து கொண்டு “இது நல்லாயிருக்கு”ஏன் மாத்தீட்டீங்க” என்ற பலரின் கேள்விகள் என் காதில் விழுந்து கொண்டே இருந்தன.
அன்று மாலை வேலை முடிந்து செல்லும் போது கேட்டேன் “எதுக்குங்க லென்ஸ் போட்டீங்க?”. “கண்ணாடி போட்டிருக்கிற்து அன் ஈஸியா இருந்துச்சு அதான்” தய்வு செய்து தப்பா எடுத்துக்காதீங்க அன் ஈஸின்னா கொஞ்சம் புரியல சொல்லுங்க”. “வேல செய்ய கஸ்டமா இருக்கு.” “அப்புடியா ஆமா நீங்க என்ன வேல செய்யுறீங்க” என்றேன். ஏன் தெரியாதா என்றபடி பேரைச் சொன்னார். “வேல செய்ய அந்தக்கண்ணாடி என்ன தொந்தரவா இருந்துச்சு நீங்க என்ன மரம் ஏறப்போறீங்களா? இல்ல ஒட்டப்பந்தய வீராங்கனையா? உங்க வேலைக்கு எந்தவிதத்துல அது தடயா இருந்துச்சு? ஒரு விசயத்த செய்யுறீங்கன்னா எதுக்குன்னே தெரியாமவே செய்யுறீங்களே எப்புடீங்க?”என்றேன்.
“அப்படி எப்படி சொல்லுறீங்க பத்து வருசம் முன்னாடி கிஷ்கிந்தா போனோம் அப்ப கண்ணாடி கீழ விழுந்துச்சு ,அப்புறம் எங்க அண்ணன் கூட சொன்னான் அதான் மாத்துனேன்”. “அப்ப உங்க தேவைக்கு மாத்துல உங்க அண்ணன் தேவைக்காக மாத்துனீங்களா?இல்ல பத்து வருசமா அந்த விசயத்த நினச்சுகிட்டேயிருந்து லென்ஸ் போட்டீங்களா? பதில் சொல்லுங்க” என்றேன் அதற்கு பதில் இல்லை.
அறிவியலின் எந்த கண்டுபிடிப்பிற்கும் நான் எதிரா பேசலை அறிவியல் தான் கம்யூனிசம் . தன்னுடைய தேவை என்பதை மீறி மற்றவர்களின் தேவைக்காக தன்னை மாற்றிகொள்வது அப்படீங்குற விசயத்துல தான் எல்லோரும் தீவிரமா இருக்காங்க” ஏன் ஒரு விசயத்த செஞ்சீங்கன்னு கூட அதுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்ககுறீங்களே அதுதான் முதலாளித்துவத்தோட வெற்றி”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னோட தேவைக்குதான் நான் வாழறேன்” என்ற படி கிளம்பினார். அவ்வாரம் முழுவதும் வேலைப்பளு காரணமாக அவ்விசயத்தப்பற்றி பேசமுடியவில்லை.
அவ்வாரம் முடிந்து அடுத்த வாரம் நைட் ஷிப்ட்ல் இருந்தேன். எல்லோருக்கும் மெயில் வந்திருந்தது. அலுவலகத்தில் பெண்கள் எல்லோரும் பெண்கள் தின கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டார்களாம்.அந்த புகைப்படங்கள் மெயின் சர்வரில் போட்டிருந்தார்கள். விபி,மேனேஜர் ஹெச்.ஆர்.மற்ற பெண் தொழிலாளர்கள் உட்பட சமமாய் உட்கார்ந்து போஸ் கொடுத்திருதார்கள்.இன்னொரு போட்டோவில் கேக் சாப்பிட்டுக்கொண்டிருதார்கள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர் நோக்கினேன்.
எதிர்பார்த்த வாரமும் வர நேரமும் கைகூட நான் ஆரம்பித்தேன்” போட்டோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன அவ்வளவு ஜாலியா இருந்தீங்க, எல்லோரும் புடவைக்கட்டீருக்கீங்களே? எப்புடி முன்னாடியே சொன்னாங்களா?” ஆமா முன்னாடி நாள் எல்லோரையும் ஹெச் ஆர் கூப்பிட்டு சொன்னாங்க”.
“அப்புடியா சொன்ன வுடனே புடவைய கட்டீட்டு வந்துட்டீங்களா பெண்கள் தினம்னா என்னன்னு தெரியுமா ? அமெரிக்காவுல பெண்கள் தன்னோட கொத்தடிமைத்தனத்த எதிர்த்து போராடினாங்க ஆனா நீங்க எல்லாம் நவீன கொத்தடிமை பீபிஓவில அடிக்கவோ திட்டவோ வேண்டாம் சொன்னாவே செஞ்சுடுறீங்க இல்லயா?”.
” புடவை கட்டுறது என்ன தப்பு ?. “புடவை கட்டுறதப்பத்தி பேசல உங்களுக்கு எது தேவையோ அதை உடுத்த உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா மற்றவங்களோட கட்டளைய இன்பமா ஏற்று அடிமையா வாழறீங்கன்னுதான் சொல்லுறேன்,
அதாவது நீங்க உழைக்குற உழைப்புக்கு இங்க சம்பளம் இருக்கா இல்ல, காலையில வந்துட்டு தினமும் குறஞ்சது ரெண்டு மணி நேரம் ஓ.டி பாக்குறீங்களே அதுக்கு ஏதாவது அலவன்ஸ் தராங்களா? இல்ல நீங்க ஒரு பெண் அப்புடீங்கறதால எத்தன பிரச்சினய சந்திச்சு இருப்பீங்க அதப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா?இல்ல நவீன கொத்தடிமையா மாறிக்கிட்டு வர நமக்கு மகளிர் தினம் நாளைக்கு சேலை கட்டிட்டு வான்னு சொன்னா எதுக்கு வரணும் என்ன அவசியம்?
சுரண்டுகிற வி.பியும், ஹெச்.ஆரும். சுரண்டப்படுகிற எங்களோட எப்புடி மகளிர் தினம் கொண்டாடமுடியும்ன்னு ஏன் பேசல?”…………………….
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன் ” அதே சீனியர் ஹெஆர் பசங்கள கூப்பிட்டு ஏப்பா எல்லோரும் வேட்டி கட்டிட்டு வாங்கன்னு சொன்னா எல்லோரும் கட்டிட்டு வருவாங்களா என்ன? ஆனா புடவை கட்டிட்டு வான்னு பெண்கள்கிட்ட சொன்னா உடனே தன்னோட தேசியக்கடமையா செய்யுறீங்க ஆனா ……………….”என்றேன்
அதற்குள் அவர் இடை மறித்தார் ” உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்களே எனக்கு பிடிச்சுருக்கு அதான் போட்டேன், எனக்கு பிடிச்சதான் நான் செய்யுறேன்.மத்தவங்களுக்காக வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” .
சரிங்க ” என்ன சைக்கிள் வச்சுருக்கீங்க?” .”லேடிபேர்ட்”என்றார். “ஏன் ஹீரோ சைக்கிள் வாங்கல அது லேடி பேர்ட விட தாங்கும் விலையும் குறைவுதான”. “எனக்கு பிடிக்கல” என்றார்.” எனக்கு பிடிக்குது பிடிக்கல என்பத யார் தீர்மானிக்குறா நீங்களா இல்ல அந்த சைக்கிள் கம்பெனிக்காரனா? ஏன்னா முதலாளி தீர்மானிக்குறான் இதுக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்தா இப்படி வியாபாரம் ஆகும் என்று.
ஒரு காலத்துல கண்ணாடிக்குன்னு அத்தன விளம்பரம் வந்துச்சு மருத்துவமனைகள் மூலமா ஆனா இப்ப அதே மருத்துவ மனைகள் என்ன சொல்லுது கண்ணாடி போடுறது கண்ணுக்கு விலங்கு மாட்டுறது போலவாம். லென்ஸ் போடுங்க லேசர் சிகிச்சை செய்யுங்க என்று இப்ப சொல்லுங்க நீங்க உண்மையாகவே உங்க நல்லதுக்குதான் லென்ஸ் போட்டீங்களா? “
“நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்குறோம் இந்த சைக்கிள் தான் வாங்கணும் ஏன்னா அது லேடிஸ்க்குன்னு உருவானது, என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன கண்ணாடின்னு கூப்புடுறாங்க ,டூர்க்கு போனப்ப என் பிரண்ட் சொன்னா ஏன் இன்னும் கண்ணாடி போட்டிருக்க லென்ஸ் போடலியான்னு?.இது மட்டுமல்ல பேர் அண்ட் லவ்லியில இருந்து அடிக்குற செண்ட் வரைக்கும் மனிதனை ஒரு பொருளா மாத்தி இருக்கு . கருப்பா இருந்தா தன்னம்பிக்கை போயிடும், வாழ்க்கையே நாசமாபோயிடும் பேர் அண்ட் லவ்லி போடுன்னு சொல்லுறான்.அந்த விளம்பரம் புடிக்குதோ இல்லையோ ஏதாவது கிரீமை வாங்கி பூசிக்கிறது.”
“இப்படி ஒண்ணு ரெண்டு இல்ல வாழ்க்கயில எல்லா விசயத்தையும் ஏன் வாழ்க்கையையே மத்தவங்களுக்காகத்தான் வாழறோம். உங்களுக்காக உண்மையிலே ஒண்ணு பண்ணனுன்னு நினச்சீங்கன்னா போராடுங்க , பெண்கள் அடக்கப்படும் போது, உழைக்கிற மக்கள் பாதிக்கப்படும்போது ஏன் நீங்க பாதிக்கப்படும்போதும் போராடுங்க.ஆனா பலரும் அதப்பத்தி பேசவே தயாராயில்லை அப்படீங்கற்துதான் உண்மை. நல்லா யோசிச்சுப்பாருங்க தியேட்டர் வாசல்ல கால்கடுக்க நிக்கத்தெரியுது,
கல்ச்சுரல் புரோகிராம்ல ஆடத்தெரியுது,ஆனா மக்களோட நம்மளோட பிரச்சனயப்பத்தி ஏன் பேச முடியல எது தடுக்குது ?.எது உங்கள மக்களை பத்தி பேசவிடாம தடுக்குதோ அதுதான் உங்கள தியேட்டர் வாசலில நிக்கவும் , உங்க முன்னாடியே கூட வேல செய்யுறவன் ஒரு பெண்ணை பத்தி கிண்டலடிச்சு பேசுனா அமைதியா இருக்கவும் செய்யுது. யோசிச்சு பாருங்க யாருக்காகத்தான் நீங்க வாழறீங்க?அது ஒண்ணுதான் விடுதலையை பெற்றுத்தரும்.அதில்லாம நீங்க செய்யுற எந்த வேலையும் உங்களை அடிமையாக நீடிக்கவே உதவும்.”
அப்பெண் அப்போது பேசவில்லை.பின்வரும் நாட்களில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.இது நடந்து எப்படியும் ஒன்றரையாண்டுகள் இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன் பேச நேர்ந்த போது கூட அந்த அடிமைத்தனத்தின் சாயல் அவரிடமிருந்து துளியும் விலகவில்லை என்பதனை அவரின் மவுனமே காட்டிக்கொடுத்தது.
ஒரு வேளை மவுனங்கள் தான் அடிமைகளின் ஆசைமொழியோ என்னவோ?
குறிச்சொற்கள்: ஐடி, நுகர்வியல், பீபிஓ, பெண்ணியம், B.P.O., derss code, fair and lovely, I.T
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 8 மறுமொழிகள் »
ஏப்ரல் 7, 2009 by kalagam
இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்
யார் சொன்னது போலிகள்
புரட்சி பண்ணவில்லையென்று
“பன்னினார்கள்” எத்தனையோ
சொல்ல சொல்ல வாய் வலிக்கும்
வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….
சிபிஎம் சிபிஐ பேரை
கேட்டதால் தான் என்னவோ
புடலங்காய்க்கும் புரட்சி வந்து
முறுக்கிகொண்டதுவோ…..
ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து
கூடவே துரோகத்தனத்துக்கும்
தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து
நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி
இன்னமும் அடங்க மறுக்கிறது
குறுதியின் வெப்பம்……
கண்காட்டும் தலைவருக்கு தாசனாகி
உழைக்கும் மக்களுக்கு நீசனாகி
மாமா வேலை செய்து செய்து
பாசிஸ்டாக பல்லிளித்து
செயாவின் காலுக்கு பாத பூசை
ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை
தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….
ஆயிரம் தரகு வேலை
ஆயிரம் பூசைகள் செய்து
களைத்து போயிருக்கும்
நல்லோரே வல்லோரே உங்களுக்கு
மொத்தமாய் பூசை செய்கிறோம்
கூடவே நிரந்தர ஓய்வையும்
இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்
நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்
ஓட்டுப்பெட்டியும் உங்களின்
புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் …….
குறிச்சொற்கள்: ஓட்டுப்போடாதே, கருணாநிதி, கவிதைகள், சிங்கூர், சிபிஎம், சிபிஐ, செயா, தேர்தல் 2009, நக்சல்பாரிகள், நந்திகிராம், போலி கம்யூனிஸ்டு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஏப்ரல் 10, 2009 by kalagam
சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு
பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால் சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்
கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன
நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்
உயிர் வாழ
ஒரே தீர்வு தான் உழைத்து வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்
ஏனெனில் உழைப்பைவிட
சாவது உங்களுக்கு
-நரக வேதனையை தராது
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஏப்ரல் 10, 2009 by kalagam
செருப்புகள் காத்திருக்கின்றன……
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……
ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……
செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……
பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..
யார் காலை யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..
செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், சிதம்பரம், செருப்படி செருப்புகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 மறுமொழிகள் »
ஏப்ரல் 17, 2009 by kalagam
உண்மைகள் கரிக்கின்றன
உண்மைகள் கரிக்கின்றன
எத்தனை சொம்பு
தண்ணீர் குடித்தாலும்
உண்மைகள் கரிக்கத்தான் செய்யும்….
பொய்கள் இனிக்கும்
தின்று கொழுத்து வீங்கிய
வயிறுகள் பொய்களை குறைக்க
அணிவகுக்கின்றன சுகர் ப்ரீ சென்டருக்கு…..
இனிப்பதனால் பொய்கள்
உண்மையாகிவிடாது கரிப்பதனால்
உண்மையும் பொய்யாகிவிடாது……
என்னதான் முக்கினாலும்
பொய்களால் கரிப்பை ஜெயிக்க முடிவதில்லை
ஆதிக்கசாதியின் மூத்திரத்தில்
தொடங்கி விவசாயியை குடித்த
யூரியா வரை எல்லாம் கரிக்கத்தான்
செய்கிறது………
என்ன செய்வது
வாயில் கரிப்பை வைத்துக்கொண்டு
எங்களால் பொய்யாய்
சிரிக்கத்தெரியவில்லை…..
எலிமருந்தில் மூவர்ண தேனைத்தடவி
வருகிறார்கள்
ம்!
எல்லோரும் நாக்கை நீட்டுங்கள்
நக்காதவன் எல்லாம் தேசத்துரோகிகள்.
தோழர் குருத்து அவர்களின் கவிதையை படித்தவுடன் எழுதிய கவிதை இது
http://socratesjr2007.blogspot.com/2009/04/2009.html
குறிச்சொற்கள்: கவிதைகள், தேர்தல் 2009
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஏப்ரல் 23, 2009 by kalagam
தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்
ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும் அதில்பெரியார் தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும் முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.
அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.
எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.
இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.
மக இ கவின் தோழர் பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது. மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம் பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.
யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?
ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.
ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.
ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி தற்போதுதான் ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.
எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார். அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.
நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 20000 சிங்கள வீரர்களைபிடித்து வைத்திருந்தார்கள் புலிகள் அப்போதைய வாஜ்பாய் அரசு அவர்களை விடுவிக்க வில்லையெனில் இந்தியா தாக்குதல் நடத்தும்
என எச்சரித்து அவ்வீரர்களை விடுவித்தது.
அப்போது மத்திய பஞ்சணையில் படுத்திருந்த வைகோவுக்கோ ராமதாசுக்கோ ஏன் எந்த நாய் கூப்பிட்டாலும் வக்காலத்து வாங்கும் நெடுமாறனுக்கு தெரியாதா இது தூரோக அரசு என்று .என்னவொ இது நாள் வரை ஈழத்துக்காக எல்லா ஓட்டு பொறுக்கிகளும் பாடுபடுவதைப்போலவும் காங்கிரசு மட்டும் திருடன் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.
தலைமைத்திருடன் இந்திய தேசியமே அதன் வல்லாதிக்கப்போக்கே என்பது உரைக்கிறதா அல்லது உரைக்காதது போல் நடிக்கிறார்களா. காங்,பிஜேபி,திமுக அதிமுக மதிமுக பாமக,விசி என எல்லாருமே ஈழமக்கள் பிணத்தி பிரியாணி தின்னப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வைகோ டெல்லியில் அத்வானியை கூட்டிவந்து மீட்டிங் போடுகிறார், நேத்துவரை மத்திய அரசில் பொறுக்கி தின்றுவிட்டு தற்போது ஈழமக்களுக்காக கண்ணீர்விடும் ஓநாய் ராமதாசுஈழத்தியாகியா?பிரபாகனை தூக்கில் போடச்சொன்ன செயா பெதிகவுக்கு தியாகியாக காட்சியளிக்கிறாரல்லவா?
கொளத்தூர் மணி ஜூவிக்கு தந்த பேட்டியில் மேலும் சொல்கிறார்“கருப்பனை கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் இது எப்படி சாத்தியம் என்பதனைபெதிகவினர் விளக்க வேண்டும். செயா 1991-96 வரை சதிராட்டம் போட்ட அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வியதால் 2001-2006 வரை பொற்கால ஆட்சி நடத்தினாரா. இல்லை தற்போது கருணா நிதி தற்போதைய ஆட்சியில் தவறு செய்கிறாராம் அதை தேர்தல் முறையில் பெதிகவினர் தண்டிப்பார்களாம் அடுத்த முறை அவர் தன் தவறினை திருத்திக்கொள்வார்களாம்.அடேங்கப்பா இது என்ன திருவிளையாடல் கத மாதிரி அல்லவா இருக்கிறது.அய்யா சுயமரியாதை சிங்கங்களே இதை திமுக அதிமுக கட்சிகாரன் கூட நம்பமாட்டானய்யா.
இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.
அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.
ஆனால் பெண் சங்கராச்சாரி செய்த திராவிட சேவைகளுக்காக தற்போது ஆதரிக்கிறதோ என்னவோ.தன்னை விமரிசனம் செய்யும் ஒரு அமைப்பினை பார்ப்பன என்ற ஒரு சொல் கொண்டு அடக்கலாம் எனில் இப்படி பார்ப்பனீயத்துக்கு சேவை செய்யும் பெதிகவினை என்ன வென அழைப்பது?
தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.
தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி “ இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்ய கிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.
குறிச்சொற்கள்: அதிமுக, செயா, திமுக, துரோகிகள், தேர்தல் 2009, நெடுமாறன், பாமக, பெ.தி.க, பெரியார், ம க இ க, மதிமாறன், மதிமுக, மருதையன், விசி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 மறுமொழிகள் »
ஏப்ரல் 28, 2009 by kalagam

சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.
இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.
…………………………………………………………………………………….
“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்……………
http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/
சரணடை … சரணடைந்து விடு
சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு
பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால் சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்
கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன
நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்……
உயிர் வாழ
ஒரே தீர்வு தான்
உழைத்து வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்
ஏனெனில் உழைப்பைவிட
சாவது உங்களுக்கு
-நரக வேதனையை தராது
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டு பொறுக்கிகள், தமிழர், தேர்தல் 2009, பு ஜ தொ மு, பு ம இ மு, பெவிமு, ம க இ க, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
மே 5, 2009 by kalagam
தேர்தல் புராணம் – 2009
பிடுங்கப்பட்ட மின்சாரம்
பியூஸ் போன தெருவிளக்கு
போடப்படாத சாலை
உடைந்துபோன பள்ளிக்கனவுகள்……
புதைக்குழிக்குள் விவசாயம்
பாலிடாலுக்கு தலையை
அடகு வைத்த விவசாயி
நெய்வதற்கு நூலில்லை
சொல்லுவதற்கு நெசவாளி
யென்ற பேரும் சொந்தம் இல்லை
இந்தியா முன்னேருகிறது
வசனங்கள் காதை கிழிக்க
இத்தாலி மருமவளும்
பஞ்சாப் வைப்பாட்டியும்
ஓட்டு கேக்க வருவார்கள் கைக்கு…….
சாதாரண கையா இது
நன்றாக பார்த்தால் தானே
தெரிகிறது காந்தியின்
பொக்’கை’
கண்ணன் வாயைதிறந்தால்
உலகமே தெரிந்ததாம்
அடேங்கப்பா
காந்தி வாய் திறந்தாலோ
அந்தக்கவலை காந்திக்கு வந்ததில்லை
எல்லாவற்றிக்கும் சிரிப்பு
அழகான புன்னகை
எப்படிப்பட்ட புன்னகை தெரியுமா
தாழ்த்தப்பட்டோரின் தோலினை
உரிக்க உரிக்க -முசுலீம்களை
எரிக்க எரிக்க வந்த சிரிப்பல்லவா இது…..
காந்திக்கு பிறக்காவிட்டாலும்
தப்பாமல் காந்தியின் வாரிசாய்
மிளிர்ந்த அன்னை இந்திராவைத்தெரியுமா
என்ன செயலலிதா அவளின் ஆத்தாளே
இந்திராவுக்கு மல்லு கட்ட முடியுமா
மல்லு என்ன லுங்கியை தூக்கி
கட்டியவனுக்கெல்லாம் 3 கிலோ
அரிசி தந்து அறுத்து விட்ட கதை
சொன்னால்தான் தங்கபாலுவுக்கு தெரியுமா…
சீக்கியர் பிணத்தை தின்று
போராளிக்குழுக்களை ‘கை’யில்
வளைத்து சீன் காட்டி சல்லடையாய்
நாயைப்போல குப்புறக்கிடந்த போது
ஆத்தா போலவே மகனும்
எது முன்
எது பின்
எனத்தெரியாமல் பிதுங்கி கிடந்தபோது
தாய் மண்ணும் கூட அழுதிருக்கும்
கண்ட கண்ட நாயெல்லாம்
என் மேல் விழுந்து சாவுறாங்களே என்று….
‘கை’கதை தெரியாதென
வருகிறார்களோ இல்லை
தெரிந்தால் தான் என்னவென
வருகிறார்களோ
மறவாதீர் வாக்காளரே
கைக்கு ஓட்டு போட்ட
உங்கள் கையை பத்திரமாய்
வைத்துக்கொள்ளுங்கள்
ராகுல் காந்தியும் சேர்ந்து வருகிறாராம்……
ஒருபக்கம் கை என்றால்
மறுபக்கம் தாமரை
மலரினும் மெல்லிய
ஆனால் தாமரை எவ்வளவு மெல்லியது
தெரியுமா குஜராத்தில் கர்ப்பிணியின்
வயிற்றை கிழித்து சிசுவை அறுத்த
அதன் இதழ்களின் மென்மையை
பண்டாரப்பரதேசியெல்லாம்
வாய்மணக்க பாடுதே
சேற்றில் முளைத்த செந்தாமரை தெரியும்
அது என்ன பாரத மாதாவின் தாமரை
இது முளைக்க ரத்தசேறுதான் வேண்டும்
அதுவும் முசுலீம் ரத்தமென்றால் அலாதிபிரியம்
மாதாவின் ஒருகையில்
தாமரை மறுகையிலோ சூலம்
சாதா சூலமல்ல
ஸ்பெஷல் திரிசூலம்
முசுலீம் கிருத்துவன் கடைசியாய்
உழைக்கும் இந்துவென எல்லோருக்கும் வரிசையாய்
இருக்கிறது ஆப்பு…..
இலவசம்
இலவசம் இலவசம் எல்லாமே இலவசம்
பாக்க கலர் டிவி பொங்கித்தின்ன சோறு
மானக்கேடு கூட இலவசம்
கருணாவின் ஆட்சியில்
ஏன் தினவெடுத்து திரிபவனுக்கு
காண்டம் கூட மலிவு விலையில்
சிரிக்கிறான் சங்கராச்சாரி
கடவுளுக்கு காண்டமா?
அவனின் நாத்தச்சிரிப்பில்
ஓடுகிறாள் பாரதமாதா
நேத்து பாடுபட்ட மாதாவுக்கு
தானே தெரியும்
கள்ள சிரிப்பின் அர்த்தம்…..
நாயாகி பேயாகி
மலந்தின்னும் பன்னியாகி
எல்லாமும் எல்லாமுமாகி
கடைசி அவதாரம் தான்
அம்மா சாதா அம்மாஅல்ல
ஈழத்தம்மா – ஈழத்தை
பிரசவிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மடல்
பிரசவம் பார்க்க மருத்துவர் அய்யா
மூத்திரம் அள்ளிப்போட
போட்டியோபோட்டி
அட எட்டிப்பார்த்தால்
பாண்டிக்கும் வாண்டிக்கும்
குடுமிப்புடி சண்டை
புயலண்ணன் கையை பிசைய
மருத்துவர் சொன்னார்
ஆண் குழந்தை பொறந்திருக்கு
ஆச்சரியமாய் உள்ளே போனால்
அடேங்கப்பா பொறந்திருப்பது
ராஜ பக்சேவாம்
யாரிடமும் சொல்லாதீர்கள்
பிரசவத்திற்கு இலவசமென
ஓசியாய் ரிக்சாவில்
கூட்டிவந்த பெரியார் தி க
வாரிசுகளோ ஓரமாய் உட்கார்ந்து
விம்மி விம்மி அழ – மணியரசன் நெடுமாறனெல்லாம்
மருமகன் பொறந்ததுக்கு
குத்தாட்டம் போட
கதை கேட்டவர் என்னை திருப்பி கேட்டார்
ஏப்பா மொட்டத்தலைக்கும்
முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுற?
எது மொட்டை? எது முழங்கால்?
காந்தி மொட்டை ராஜபக்ஷே முழங்காலா?
தெளிவாய் விளக்கினேன்
” காங்கிரசு, பிஜேபி,பாமக,
வி.சி,திமுக,ம்திமுக,அதிமுக,
சிபிஎம்,சிபிஐ,ஆயிரம் பேர் வந்தாலும்
எல்லாவற்றிற்கும் ஆன்மாவும் ஒன்றுதான்
உயிரும் ஒன்றுதான்
அதுதான் அகிம்சை
அதுதான் காந்தி
காந்திகள் சிரித்துக்கொண்டிருக்கும் வரை
மக்களின் பிணங்கள்
எரிந்து கொண்டே இருக்கும்
தேர்தல் நடந்து கொண்டே இருக்கும்
“என்ன இருந்தாலும் ஓட்டு போடாம
இருக்க முடியுமா” கோபம் கொப்பளித்தார்
நான் பொறுமையாய் சொன்னேன்
பிணங்களுக்கு உயிரில்லை என்பது தெரியும்
ஆனால் அவைகளுக்கு தன்மானமிருப்பது
தெரியுமா-ஏனென்றால் அவைகள் ஓட்டு போடுவதில்லை.
குறிச்சொற்கள்: ADMK.MDMK, அதிமுக, காங்கிரசு, சிபிஎம், சிபிஐ, திமுக, தேர்தல் புராணம் - 2009, பாமக, பிஜேபி, பெரியார் தி க, ம்திமுக, விசி, CPI, CPM, DMK
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
மே 13, 2009 by kalagam
ட்ரிங் ட்ரிங்-ஹலோ
திணிக்கப்படும் விளம்பரங்கள்

திணிக்கப்படும் விளம்பரங்கள் மதிய வேளை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். செல்போன் ,மணி அடிக்க எடுத்தவுடன்”வணக்கம் நான் தான் மு.கருணாநிதி பேசுகிறேன். ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி , அனைவருக்கும் கலர் டிவி, 16000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தோம். நல்லாட்சி தொடர ஆதரிப்பீர் உதய சூரியன் ,கை, நட்சத்திரம். ” அன்று மாலையே “வணக்கம் நான் ஜெயலலிதா பேசுகிறேன்” என ஆரம்பிக்கிறது. ஓட்டு அரசியல் பிரச்சாரம் அனைவரையும் எட்டுவதற்காக ரெக்கார்டு செய்யப்பட்ட வார்த்தைகள் செல்போன்களில்ஒலிபரப்பப்படுகின்றன.
இது வெறும் பிரச்சார உத்தி என விட முடியுமா? இந்த சிந்தனையை கொஞ்சம் கிளறிப்பார்த்தோமாயின் நம்மை மனிதர்களாக கூட மதிக்காத இந்த முதலாளித்துவத்தின் கோர முகம் தெரியும். ஒரு பொருளை விற்பதற்காக செய்யப்படும் விளம்பரங்கள் பலவகையில் இருக்கிறது. செய்தித்தாள்விளம்பரம்,தொலைக்காட்சி விளம்பரம், நோட்டீஸ், டிஜிட்டல் போர்டுகள். ஒரு முதலாளி தன்னுடைய பொருளின் சேவையினை அதன் சிறப்பம்சத்தினை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுமென விரும்புகிறான். இவ்வகையில்தான் மேற்கண்ட பிரிவுகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இருந்தாலும் தன்னுடைய பொருளை கண்டிப்பாக எல்லோரும் பார்த்தார்களா? எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து யோசிக்கும் போதுதான் செல்போன் அதற்கு மாபெரும் வரப்பிரசாதமாய் அமைகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக செல்போனின் பயன்பாடு மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளது. ஆம் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பொருளின் சிறப்பம்சத்தை கொண்டு செல்லலாம். அதற்கு அவர்களின் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படியும் ஒரு குறுந்தகவல் வருகிறது எனில் கண்டிப்பாக அதை அதை திறந்து பார்ப்போம் அதன் மூலம் அப்பொருளை நேரடியாக எல்லோருக்கும் கொண்டு வருகிறான் முதலாளி.
நுகர்வியல் தான் இங்கு அடிப்படை. உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ என் விளம்பரத்தை நீ கண்டிப்பாய் நுகரத்தான் வேண்டும். நுகராதன் மனிதன் இல்லை. இப்படி நம்மை கேட்காமலே நாம் விரும்பாமலே அனைத்து கம்பெனிகளின் விளம்பரங்கள் காதில் போடப்படுகிறன. “உங்களுக்கு கடன் வேண்டுமா? சார் எங்க லைப் இன்ஸ¥ரன்ஸ்ல நல்ல நல்ல திட்டம் இருக்கு நீங்க ட்ரைபண்ணுங்க” . தினந்தோறும் இவ்வார்த்தைகளை கேட்காமல் இருக்க முடியாது” இல்லைங்க எனக்கு வேண்டாம் என்றால் கூட சார் நிறைய ஆப்சன் இருக்கு என அவர்களை இழுக்க வைத்து விட்டனர்.
முதலாளியின் லாப வெறி பேசும் ஊழியன் எத்தனைதிட்டு வாங்கினால் என்ன எத்தனை ஆபாச அர்ச்சனை வாங்கினால் என்ன ஒரு நாளைக்கு இத்தனை பேரிடம் பேச வேண்டும் பேசித்தான் ஆக வேண்டும் என கட்டளையிடுகிறது. வேலையில்லாத்திண்டாட்டம் யார் யாரிடமோ திட்டுவாங்கிக்கொண்டு சிலரை நுகர்வோனாக்குவதில் மகிழ்ச்சிகொள்ள சொல்கிறது அல்லது சமாதானம் கொள்ள செய்கிறது . அது ஒரு புறம் இருக்க, பலர் போன் செய்தவுடன் பெயரையும் சேர்த்து சொல்கின்றனர். “என் செல்போன் எண் உங்களுக்கு எப்படி தெரியும் என்றால் நாங்க மொத்தமா கம்பெனியில் வாங்குவோம் என்கிறார்கள்.
என்னுடைய பெயரை என்னுடைய எண்ணை எனக்குதெரியாமல் மற்றவருக்கு தெரிவிக்க ஒரு முதலாளிமுடிவு செய்து விட்டான் எனில் அவ்வளவுதான் நான் வேண்டாம் என்றால் கூட எனக்கு கடன் தேவை குறித்த கால்கள் வந்து கொண்டே இருக்கும். இது தனி மனிதபிரச்சினையா இல்லையா? .இது என்னுடைய உரிமையை சிதைக்கிறதா இல்லையா? என்னுடைய தகவல்களை எனக்கு தெரிவிக்காது மற்றவனுக்கு அளிக்க நீயார் என கேட்டால் சிரிக்கிறான் முதலாளி காற்று நீர் வானம் பூமி ஏன் அந்த நிலவைக்கூட பார்ட் பார்ட் ஆக விற்று விட்ட இந்த சமூகத்தில் தனிமனித உரிமை ஒரு கேடா என்றவாறு.
“உனக்கென உரிமைகள் இல்லை அது நீயே காசு போட்டு வாங்கிய பொருளாயிருந்தாலும் எனக்காகத்தான் இயங்கப்படுகிறது.” அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். பலருக்கும் இது ஒரு தவறாகத்தெரிவதில்லை. “sms வந்தா வந்துட்டு போவுது அதுக்கு என்ன அது அவங்க வேலை” என சாக்கு சொல்கிறார்கள். அவர்கள் வேலை சாவு வீட்டில் இருக்கும் போதும் “உங்க காதலை வெளிப்படுத காதல் கவிதைகள் மாதம் வெறும் 30 ரூபாய்தான்” என்றுதான் வருகிறது.தொலைக்காட்சி ,டிஜிட்டல் விளம்பரம் போலன்றி நான் விரும்பாமலே அவைகளை நான் நுகரத்தான் வேண்டும் .
என்னுடைய நேரம் என்பது போய் நான் ஒரு24 மணி நேர சந்தையாகிவிட்டேன் எப்போது வேண்டுமானாலும் பொருளை என்னிடம் அறிமுகப்படுதலாம் அதற்கேதும் தடையில்லை நான் ஒரு உணர்வுகளுள்ள, உரிமைகளுள்ள மனிதன் அல்ல . என்னிடம் எதை மற்றவர் பேசவேண்டுமென்பதை இனி முதலாளியே தீர்மானிப்பார். அவரின் தேவைக்கேற்ப லாபத்திற்கேற்ப எனக்கு நேரம் ஒதுக்கப்படும். இது தனிமனித உரிமைகளை மட்டும் பாதிக்கிறதா என்றால் அது மட்டுமல்ல முதலாளித்துவம் ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானதென்ற போது அனைத்தையும் கடைசரக்காக்கி விற்பனை செய்யாமல் ஓயாது.
ரிலையன்ஸ் தொலை பேசி வைத்திருப்போருக்கு இந்த அனுபவம் இருக்கும்”என்னங்க இன்னுமா ரீசார்ஜ் செய்ய மாட்டேங்குறீங்க சீக்கிரம் பண்ணுங்க” என ஒரு பெண் குழைவதைப்போல, அது ஏன் இந்த துறைக்கு ஆணைவிட பெண்கள் அதிகம் பயன்படுத்தபடுகிறார்கள்?
பெண்களின் குரல் frequency அதிகமாக தெளிவாக இருக்குமென்பதை விட அவர்கள் விற்பனை சரக்காக்காகமாற்றப்பட்டு விட்டார்கள்.இந்த சமூகம் பல்விளக்கும் பற்பசை முதல் கழிவறை கழுவும் விளம்பரம் வரை பெண் தான் மூலதனம்.அந்த் பெண்ணின் உரிமைகளை மறுத்து அவரை ஒரு விற்பனை பொருளாக மாற்றி அதை ஏற்று கொள்ள வைத்ததுதான் முதலாளித்துவம் செய்த மாபெரும் வெற்றி. அதே பார்முலாதான் மனித சமூகமனைத்தையும் வியாபாரப்பொருளாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
————————————————————————————————————————————–
கடந்த மாதம் நடந்த சம்பவம் இது எனக்கு போன் செய்த நண்பர்கள் சொன்னார்கள் “உனக்கு போன் பண்ணினா பாட்டு வருது”. இது குறித்து அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு உடனே தொடர்பு கொண்டு புகார் சொன்னேன் . பலனில்லை சுமார் 5 தடவை இப்படி புகார் செய்தும் பலனில்லைஒருவாரம் கழித்து போன் செய்தேன் “ஏற்கனவே 5 முறை புகார் பண்ணிட்டேன் பாட்டை எடுக்க முடியுமா இல்லையா ? “அப்படிங்களா முன்னாடியே எடுத்துருப்பாங்களே ” உங்ககிட்ட ஒரியாடவேண்டிய வேலை எனக்கில்லை.
யாரைக்கேட்டு எனக்கு பாட்டை போட்டீங்க நான் உங்களை கேட்டனா? ” சார் அதுக்கு காசு இல்லை ப்ரீ தான் எந்த சர்ர்ஜ் இல்லை ஒரு மாசம் பாட்டு வரும் வேணுமினா காசு கொடுத்து எக்ஸ்டண்ட் பன்ணிக்கலாம்” ப்ரீ என்பதை அழுத்தி சொன்னார். “என்னப்பார்த்தா உனக்கு பிச்சக்காரன் மாதிரி தெரியுதா என்னமோ ப்ரீ ப்ரீ சொல்லுற, என்னகேக்காம எனக்கு ஆபாசப்பாட்ட போடு உட்டுவீங்க வாடா மாப்புள வெங்காயமாப்புளன்னு வரும் நான் கேட்டுட்டு வாயமூடிக்கிட்டு இருக்கணுமா? உங்ககிட்ட எல்லாம் எத்தன முற சொல்லி இழவெடுக்கிறது.
இப்ப பாட்ட எடுக்க முடியுமா இல்லையா? கொஞ்ச அமைதிக்கு பின் பேசினார்” சாரி சார் கண்டிப்பா பாட்டை எடுத்துடுவோம் என்றபடி இணைப்பை துண்டித்தார். ஆனால் பலர் சும்மாதானே வருது என்றபடி, ஒரு மாசம் பாட்டுதான பாடிட்டு போவுது புல்லரித்து மகிழ ஆரம்பித்து விடுகின்றனர்.
முதலாளித்துவத்தின் எந்த ஒரு இலவசமும் நம்மை அடிமையாக்குவதற்கே.அது இலவசம் அல்ல அதுதான் நம்மை அவன் திருடிக்கொண்டு போவதற்கான முதல் கடவு சீட்டு. நம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான முதல் அறிவிப்பு.
குறிச்சொற்கள்: கம்யூனிசம், சந்தை, செல்போன், தனிமனித உரிமை, நுகர்வியல், முதலாளி, முதலாளித்துவம், விளம்பரம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
மே 20, 2009 by kalagam
ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்
கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் விடுவிக்கப்பட்டுள்ளது,இலங்கையில் மத,இன,குல பேதம் எதுவு இல்லை என்று தமிழில் உரையாற்றி தனது நாட்டு மக்களுக்கு அரச கொண்டாட்டத்தை அறிவித்தார்.இலங்கை தெருக்களில் கட்டாயமாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதையும், தமிழ் மக்கள் கூனிக்குறுகி நின்று மீண்டுமொரு 1983 வந்து விடுமோ என்ற பயத்தில் நிற்பதையும் பல செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று , தின்று எல்லோரையும் முடித்து விட்டோம். பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை செய்யப்பட்டுவிட்டது.மக்களே இனி நம் நாட்டில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என தமிழர்களின் ரத்த சகதியில் தோய்த்த பூவினை சிங்கள மக்களுக்கு காதில் சுற்றுகிறான் மகாத்மா மகிந்தா. புலிகளிடம் சிக்கியிருந்த, பாதிக்கப்பட்டிருந்த , கைதிகளாய் பிடிக்கப்பட்டிருந்த எனக்கூறி மக்களுக்கு சொர்க்கத்தினை ஆட்லெறி குண்டுகள் மூலமும் ரசாயன குண்டுகள் மூலமும் பாஸ்பரஸ் குண்டுகள் மூலமும் வழியனுப்பி வத்துவிட்டு தமிழ் மக்களின் ரத்தம் குடித்த வாயினை கூட துடைக்காமல் நான் தான் தமிழர்களுக்கு காவலன்” என ஆணவத்தோடு அறிவித்துவிட்டான் மகிந்தா.
கடந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பாசிசம் புலிகள் ஒழிப்பு என்ற பேரில் ஒரு இனத்தினையே ஒழித்திருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்கு பின் மாபெரும் இன அழித்தொழிப்பு யுத்தம் இலங்கையில் உலக நாடுகளின் மறைமுக உதவியோடும் இந்தியா, சீனா,ரஷ்யா உல்ளிட்ட நாடுகளின் நேரடி உதவியோடு நடைபெற்று வருகிறது.
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும் முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும் என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.
காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே. இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும் செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது, அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்படி வகைதொகியின்றி அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்கள்.பல பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து மூலதனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. தெருவில் சுற்றித்திரியும் சொறி நாய்களை ,வெற் ந்¡ய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டு என ஒப்பாரிவைக்கு இந்த மூலதனத்தின் கருணை கனிந்தபார்வை எப்போதும் மக்களின் பக்கம் திரும்புவதில்லை. வெறிநாயினை கொல்லும் போது அதற்குவலிக்கும் என வாதிடும் மூலதனம் மக்கள் தலையில் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி அழிக்கிறது.இது எப்படி சாத்தியம் ஒன்றே அழிவையும் உயிரையும் நேசிக்குமா? நேசிக்கும் என்பதுதான் வரலாறு மூலதனத்தின் தேவைக்குத்தான் நாய்க்கு கருத்தடை பரவலாக பரப்புரை செய்யப்படுகிறதே தவிர அதற்கு வலிக்கும் என்பதற்காக அல்ல,அதே பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது மூலதனத்தினைபெருக்குவதற்காகன தேவையாய் அமைகிறது. மூலதனம் தன் தேவைக்காக எதையும் செய்யும்,ஆனால் அதில் துளியும் மக்கள் நலனுக்காக இராது.
தற்போது போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றகதையும் அதோடு மூடப்படுகின்றது. நேபாள மன்னன் மக்கட்புரட்சியினால் அரண்மனையை விட்டு துரத்தப்பட்ட போது தனது உடற்துளைகளின் வழியே அழுத ஊடகங்கள் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண விசயமாக்கின.தற்போது பிரபாகன் மற்றும் அவரது மகன் இறந்ததாக இலங்கை அரசும்,இல்லை தமிழீழத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என புலிகளும் சொல்லிவருகின்றனர்.
இலங்கைஅரசின் இந்தப்பிரச்சாரம் எதற்காக? கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும் அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.
பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.
——————————————————————————————————————————————————————————-
தமிழகத்தினைப்பொறுத்தவரை தேர்தலில் ஈழப்பிரச்சினையை உண்மையாக முன்னிறுத்த எந்த அரசியல்ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.மக்கள் கொல்லப்படும் போது கருணாநிதி போர் நின்றதாகஅறிவித்தார்.மீண்டும் தொடர்கிறதே எனகேட்டதற்கு மழை நின்றவுடன் துவானம் போல என இலக்கியம் பேசினார். பார்ப்பன பாசிச செயாவோ ஈழத்தை பெற்று தரப்போவதாக சவடால் விட்டார். ராமதாசு தனது தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஈழப்படுகொலைகளை ஒளிபரப்பி தனக்கு ஓட்டு பொறுக்கினார்.திருமாவோ சோனியா அம்மையார் வாழ்க என உரத்து முழங்கி கெஞ்சி மன்றாடி ஈழமக்களின் உரிமைகளை கேட்டார்.
இதைவிட ஈழப்பிரச்சினைக்கு பெதிகவும் சீமானும் தமிழினவாதிகளும் செயாவுக்கு மட்டுமே வழிதெரியுமென கூறி ஈழத்தின் மக்களை கொச்சை படுத்தினர். இந்த தேர்தலில் செயா ஜெயித்து கண்டிப்பாக ஈழத்தினைத்தருவார் என மாய்மாலத்தினை ஏற்படுத்தினர்.கருணா செய்தது துரோகம் எனில் மக்களின்
போராட்டத்தை சிறுமை படுத்தி செயாவிடம் ஈழச்சாவியை கொடுத்தது சரியா தவறா?
செயா ஒரு பாசிச சித்தாந்தவாதி,இதை அதிமுக காரன் கூட ஒத்துக்கொள்வான்.ஆனால் அந்த செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்தியது துரோகமா? இல்லையா?
நேற்றுவரை செயா பிராபாகரன் குற்றவாளி என சொன்னபோது ஆமாம் சாமி போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஈழம் மலர அம்மாவுக்கு ஓட்டு போடுங்கள் என சீமான் சொன்ன போது விசிலடித்தனவே
அய்யோ,
ஈழமக்களின் போராட்டத்தை இந்த நாய்களின் காலடியில் அர்ப்பணித்த உங்களை என்னவென்று
சொல்வது?
—————————————————————————————————————————————————————————————
பாசிசம் ஓரு போதும் வென்றது இல்லை, மக்களின் போராட்டமும் வீழ்ந்ததில்லை. யார் வீழ்ந்தாலும்எல்லாம் பறிக்கப்பட்டாலும் பறிக்கமுடியாதது ஒன்று இருக்கிறது அதுதான் சுதந்திர வேட்கை. இன்றைய தவறுகள் நாளைய பாடங்கள்.
கண்டிப்பாய் மீண்டும் போர் மூளும் எதிரிகள் நாளை வீழ்த்தப்படலாம், நாம் எந்தப்பக்கம் இருக்கிறோம்? பிரபாகரனின் மரணசெய்தியைகேட்டு, கொத்து கொத்தாய் கொல்லப்படும் மக்களை பார்த்து விடப்படும் நமது வெற்றுகண்ணீர் அம்மக்களை சுட்டெரிக்கவே செய்யும். சிங்கள இனவெறி பாசிசத்துக்கு துணை போகும் இந்தியத்தை முறியடிக்காது ஈழத்தில் வெற்றி மலரப்போவதில்லை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவாமலிருந்தாலும் பரவாயில்லை உங்கள் இந்திய சாயத்தின் கண்ணீரை விடாதீர்கள்.அவை பட்டுப்போய்விடும்.
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டு, ஓட்டுப்பொறுக்கிகள், சீமான், பு ஜ தொ மு, பு ம இ மு, பெ.தி.க, ம க இ க, மகிந்த, ராஜபக்ஷே, வி வி மு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
மே 29, 2009 by kalagam
ஈழவியாபாரம்
விலைபோகும் சதைப்பிண்டங்கள்
ஆர்குட்டில் பலரும் விஜய் டிவியில் நடந்த அடுத்த பிரபு தேவா யார் என்ற போட்டியின் வீடியோ காட்சியை தங்களுக்கு பிடித்த வீடியோவாக இணைத்திருந்தார்கள். அதிகம் டிவி பார்ப்பதில்லை.அப்படியே பார்த்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தும் சாக்கில் தன்னை விளம்பரப்பொருளாக அறிவித்துக்கொள்ளும் எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை.என்னடா எல்லோரும் (அதுவும் ஆர்குட்டில்தமிழீழ ஆதரவாளர்கள் ) பார்க்கிறார்களே என அந்த லின்க்கை கிளிக் செய்தேன்.
http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ
http://www.youtube.com/watch?v=5rB-atZH_-Y&eurl=http%3A%2F%2Fwww%2Eorkut%2Eco%2Ei
n%2FFavoriteVideoView%2Easpx%3Frl%3Das%26uid%3D3250078639754726720%26ad%3D124
1747530%26uit%3D%2FHome%2Easpx&feature=player_embedded
யார் அடுத்த பிரபுதேவா என்ற விஜய் டீவியின் நடனப்போட்டி அதில் பல சுற்றுக்களில் வெற்றிபெற்ற ஈழத்தினை சேர்ந்த தமிழர் ஒருவர் பெயர் பிரேம் கோபால் ஈழமக்கள் படும் இன்னல்களை மாத்தி யோசி என்ற சுற்றில் “விடை கொடு எங்கள் நாடே” என்ற திரைப்பட பாடல் மூலம் வெளிப்படுத்த…………..
விருந்தினர்பலரும் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியதாக சொன்னார்களே தவிர நடக்கும் போர் சரியா ? யார் நடத்துவது ? யார் எதிரி என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
நிகழ்ச்சியின் விருந்தினர்கள் அப்படியே உணர்வு பூர்வமாகிவிட்டது போல தொகுப்பாளர் சொன்னார்”
ஈழத்தினை சேர்ந்தவர்கள்” எங்கள் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள், நாங்கள் அகதிகள் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீ£ங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்” . நிகழ்ச்சிமுடியும் தருவாயில் பேக்கிரவுண்டில் குரல் ஒலிக்கிறது ” நம் நேச உறவுகளுக்கு அமைதி கிடைக்குமா விடைதெரியாத கேள்விக்கு காத்திருக்கிறார் பிரேம் கோபால்.” பின்னர் அடுத்த நடனப்போட்டியின் சிறப்பினை குறித்து பேசுகிறது.
பிரேம் கோபால் ஈழத்தமிழரின் உணர்வும், கண்ணீர்விட்டு அழுத அந்த பெண்களின் உணர்வுகளும் எப்படி விஜய்டீவியில் ஒளிபரப்பப்ட்டன? கலை என்பது மக்களுக்காகத்தான்.மக்களை தவிர , மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை விடுதலைக்கான கலையை வளர்க்க வேண்டும்.
நான் பார்த்த வீடியோவில் இருந்தவரை பிரேம் கோபாலின் நடிப்பில் அந்த நடன நிகழ்ச்சியில்ஈழமக்களுக்கு யார் எதிரி என்றோ அல்லது எதுதான் இதற்கு காரணம் என்றோஒளிபரப்பப்படவில்லை.அதுதான் விஜய் டீவியை ஒளிபரப்பவைத்தது.
அதே பு.மா.இ.மு நடத்திய நாடகங்களோ அல்லது இந்திய அரசினை திரை கிழிக்கும் நாடகங்களோஆவணப்படமோ விஜய் டீவியில்மட்டுமல்ல அய்யாவின் மக்கள் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பவாய்ப்பில்லை, காரணம் இப்போர் முதலாளிகள் தங்கள் நலனுக்காக ஓட்டு பொறுக்கிகளின் சேவையோடுநடை பெறுவது.
முதலாளிகளின் சொத்து பிரிப்புக்காக நடத்தப்படும் இந்த ஈழப்போரினை ஏதோ போர் நடக்கிறது, எதனால் எனத்தெரியாது ? அங்கு அமைதி வேண்டும் எனகூறுவது எப்படி சரியாக இருக்கும். யார் எதிரி என்பதை அறியாமல் எப்படி? எதை நிறுத்தப்போகிறோம்?
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன் ஒரு தமிழன் உயிரயாவது காப்பாத்துங்க்” என்று அந்த கண்ணீர்விடும் பெண்களின் கேள்விகள் நம்மை சுட்டெரித்தாலும் அவை முழுமை பெறாத நிகழ்ச்சியாகவே இருக்கிறது.
“எங்கள் மக்களை காப்பாத்துங்க” அங்கே ஒலிக்கப்பட்ட அக்குரல்கள் பார்ப்போருக்கு கண்ணீரைவரவழைத்தாலும் விஜய் டீவிக்கு பணத்தை வரவழைத்திருக்கும். அது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுஆனால் தொலைக்காட்சிக்கோ தன்னை வளர்க்க ஒரு வித்யாசம் தேவைப்படுகின்றது. இப்போது மக்களின் அழுகையும் சரக்குதானே.
மக்களை பைத்தியக்காரனாக்கி ஆண் பெண் வேடமிட்டு ஆடுவதும், பெண் ஆண் வேடமிட்டு கொண்டு கணவன் மனைவி சகிதமாக கூத்தாடுவதற்கும் , ” அம்மாடி ஆத்தாடி” என மகன் ஆடுவதை பார்த்து கண்ணீர் விடும் ஒரு பெண்ணின் கண்ணீரும் இந்த ஈழப்பெண்ணின் கண்ணீரும் இங்கு முதலாளிக்கு ஒரே சரக்குதான்.
ஒவ்வொரு காலச்சூழலுக்கும் ஏற்றவாறு தன் பொருளை விற்பதற்கு ஒரு வாய்ப்புதேவைப்படுகின்றது,இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு ஈழப்பிணங்கள் சரக்காகி விட்டன. மக்களின்அழுகைகள் விலையேற்ற காரணிகளாகிவிட்டன.
ஒரு முதலாளி எதையும் , எல்லாவற்றையும் பண்டமாக்குவது போல இப்போது ஈழத்தின் கண்ணீரையும் பண்டமாக்கிவிட்டான். தன்னுடைய ரேட்டிங் ஏறுவதற்கான தூண்டுகோள் தற்போது ஈழம். பாலஸ்தீனத்தின் மீது குதறும் இசுரேலை எதிர்க்காது பாலஸ்தீனத்தில் அமைதி வேண்டும் என முழக்கமிடுவது எவ்வாறு துரோகத்தனமோ அதைவிட ஈழத்தின் உண்மை நிலையை மக்களுக்கு சொல்லாது இன்னல்களைமட்டும் காட்டி எதிரியை சுட்டாத எந்த ஒரு நிகழ்வும் மக்களுக்கு துரோகமானதே.
——————————————————————————————————————-
ஈழமக்களின் பிணத்தினை விற்கும் முன்னணியாளர் என்றால் அது ராமதாஸ்தான். அவருக்குத்தான் அதில்ஏகபோக உரிமை. விஜய் டீவி மக்களின் இன்னல்களை காசு பொருக்க பயன்படுத்தியதோ அது போலஈழமக்களின் பிணத்தினை காட்டி காட்டி மக்கள் தொலைக்காட்சியில் ஓட்டு பொறுக்கினார் ராமதாஸ்.
தேர்தல் நாளன்று தொடர்ந்து ஒளிபரப்பியும் அதற்கு முன்னர்கூட மக்களின் பிணங்களை காட்டி ஓட்டு போடுங்கள் ஓட்டு போடுங்கள் அம்மாவுக்கு அவர் வந்தது தன் சுருக்குப்பையினை திறந்து ஈழத்தினைதருவார் என் கூப்பாடு போட்டார். சாதாஅம்மாவை ஈழத்தம்மாவாக்கி ஒவ்வொரு ஈழத்தமிழனின்இன்னலுக்கு தாயின் சுருக்குப்பையில் தீர்விருப்பதாக தெரிவித்தார்.
நேற்று வரை பாப்பாத்தியாக, ஈழமக்களின் துரோகியாக விளிக்கப்பட்டவர் இன்று ஈழத்தாயாகபரிணமிக்கிறார் எனில் அதை ஏற்றோ ஏற்காமலோ மக்கள் அமைதியாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னும் பெரும்பான்மை மக்கள் பார்வையாளராகத்தான் இருக்கிறார்கள். கேட்கும்கேள்விகளுக்கு அவர்களிடம் வெற்றுக்கண்ணீரே பதிலாய் அமைகிறது.
அதனால் தான் ஈழத்தில் போரும் மக்களின் பிணங்களை வைத்து வியாபாரமும் நடக்கிறது. மக்கள் பார்வையாளர் அந்தஸ்திலிருந்து போராளிகள் பதவிக்கு பரிணாம வளர்ச்சி யடையும் போது ஈழத்தில் போரை நடத்தும் தரகு முதலாளிகளும்,மக்களின் துயரங்களை முதலீடாக்கும் ஓட்டு பொறுக்கிகளும் சொர்க்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவார்கள்.
முதலாளிகளுக்கும் இந்த ஓட்டு பொறுக்கிகளுக்கும் ஈழம் கிடைத்தாலும் அது லாபம் கிடைக்காவிட்டாலும் அந்த இன்னல்களைவைத்து கல்லா கட்டிவிடலாம்,ஓட்டு பொறுக்கலாம். ஆனால் போராட்டம் தான்வெற்றியைத்தரும்.கல்லாக்கள் உடைக்கப்படும் போது விடுதலைதானாய் விடுதலை ஆகும்.
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், பிணங்கள், மக்கள் தொலைக்காட்சி, விஜய் டிவி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 மறுமொழிகள் »
ஜூன் 8, 2009 by kalagam
வெட்டிகள்
அடிக்கடி காதில் விழுகிறது
என்ன வெட்டி முறித்தாய்?
என்ன கிழித்தாய்?
இல்லை – முறிக்கப்பட்டோம்
கழுத்து நெறிக்கப்பட்டோம்…..
அவன் தேவைகளுக்காக
மரத்தை வெட்டினோம்
இப்போதெங்களை வெட்டிக்கொண்டிருக்கிறான்
அதுவும் அவன் தேவைக்காக….
மலைகளைப்பிளந்தோம் ஆழ்
கடல் முத்தையெடுத்தோம் மூச்சை
விட்டோம் – மயிரெல்லாம்
சிலிர்த்ததாக சொன்னார்கள்….
நம்மிடமிருந்து விவசாயத்தை
கைத்தறியை, வேலைகளை
வெட்டிவிட்டு அறிவிக்கிறது அரசு
நீங்கள் வெட்டிகள்…..
நம் வாழ்வுக்கு
அகழியை வெட்டியவனுக்கு
எதை தரப்போகிறோம்?
வெட்டப்பட்டு முறிந்து கிடக்கிறோம்
இனி வெட்டுவதற்கு மரங்கள்
இல்லை
வெட்டப்பட்ட மரங்கள்
நாளை கோடரியை வெட்டும்……
இனி, வெட்டப்படுவோர்
தேவையில்லை., வெட்டிகள்தான்
தேவை
வெட்டுவோம் இந்த வெட்டில்
அவர்கள் மீண்டும் துளிர்க்காதபடி.
குறிச்சொற்கள்: அடிமைத்தனம், கவிதைகள், வெட்டிகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஜூன் 14, 2009 by kalagam
தங்கம்
தங்கக்கட்டி, செல்லத்தங்கம்
எனபல வாழ்த்துரைகளை
கேட்டிருப்போம், கேட்டவர்கள்
பல்லைக்காட்டிக்கொண்டிருக்க
தோண்டியெடுத்தவனின் நிலை….
“திருகாணியெல்லாம் வேஸ்ட்
வளையம்தான் பெஸ்ட்” பேசும்
விளம்பரங்கள் நாளை நம்மையும்
விற்கும் அப்போது – ஏகாதிபத்தியத்தின் காதுகளில்
அல்ல கால்களில் மாட்டிக்கொண்டிருப்போம்…..
லேட்டஸ்ட் மாடல்கள் கேட்கும்
வாய்கள் கோலாரின் லேட்டஸ்ட்
நிலையை பேசுமா? கண்டிப்பாய்
பேசாது “ஆரம்” கழுத்தை நெறிக்கும் போது
என்ன பேச முடியும் “மாடல் சூப்பராயிருக்கு” என்பதை தவிர….
தங்கம் எடுக்கப்போனவர்கள்
தோண்டியெடுக்கப்பட்டார்கள் தங்கத்தோடு
பிணங்களாக – அச்செய்திகள் எப்படி
கேட்கும் காதில் தங்கப்பூட்டினை
மாட்டிக்கொண்டிருக்கும் போது…..
நண்பரிடம் கேட்டேன் எதற்கு தங்கம்?
“எனக்கு பிடித்திருக்கிறது” “தெரியவில்லை”
“அளவுக்கு மீறி இல்லை” “தகுதிக்காக போடவில்லை “
தெறித்தன பதில்கள்…..
மூன்றுகிராமுக்கு ஓராயிரம் கிலோ
மண்ணை தோண்டியெடுப்பவனால்
தொடத்தான் முடியும்…..
யாரும் தப்பிக்க முடியாது,கணக்கு
போடுங்கள் உங்களுக்காக
எத்தனையாயிரம் கிலோ தோண்டப்பட்டிருக்கிறது?
எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள்?
அதிகமாய் பேச வேண்டாம்,
நீங்கள் அணிந்திருக்கும் அளவுக்கு மட்டும்…
குறிச்சொற்கள்: அடிமைத்தனம், தங்கம், முதலாளித்துவம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஜூன் 18, 2009 by kalagam
தங்கப்புராணம்
தங்கம், அடிமைத்தனம்,முதலாளித்துவம்
விவசாயம் நசிய நசிய
கைத்தறி தேய தேய
தங்கத்தொழிலாளி உருக உருக
ஏறுகிறது விலை மட்டும்
கொழுத்தவனின் கடவாய்ப்பற்களில்
இன்னொன்றாய் மின்னுகிறது….
ஒன்றும் புரியவில்லை
தங்கம் விலை ஏறுவதைப்போல….

அரிசி விலை முப்பது ரூபா
பருப்பு விலை அறுபது ரூபா
தங்கவிலையோ ஏறுகிறது ஏறுகிறது
எவெரெஸ்டின் உச்சியைத்தாண்டி
அடேங்கப்பா
பிளந்த வாய்கள்
தப்பாமல் வரிசையில்
நிற்கின்றன திருச்சிக்கும்
வந்துவிட்டதாம் குமரன் தங்க மாளிகை….
பழையது புதியதாக மீண்டும்
அது பழையதாக
புதியதாக முளைக்க
அதெப்படி உழைப்பவனின் வாழ்வு மட்டும்
பழையதாகிக்கொண்டே போக
வலுத்தவன் மட்டும் புதியதாகிக்கொண்டே போக….
வந்து விட்டதாம் ரேட் கார்டு
விலை என்னவென்று சரியாயிருக்குமாம்
அங்கு உலகமயத்தின்
கோரத்தால் சயனைடைத்தின்ற
குடும்பங்களின் மதிப்பு செல்லாததாயிருக்கும்…..
இனியும் உருக்க
தங்கம் இல்லை
இரும்பை உருக்குங்கள்
பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்
நாளை அவனின் உயிரை
எடுப்பதற்கு தேவைப்படும்.
எடுப்பதற்கு தேவைப்படும்.
குறிச்சொற்கள்: அடிமைத்தனம், தங்கம், முதலாளித்துவம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஜூன் 22, 2009 by kalagam
நக்சல்பரியில் துரோகியாய் உருமாறி நந்திகிராமில் பாசிஸ்டாய் பல்லளித்து
அதையும் தாண்டிய பரிணாம வளர்ச்சிக்கு படையெடுத்து மக்களையே இரையாய் தின்னும் போலிகளை பற்றிய சில கருத்து படங்கள்…
வீரஞ்செறிந்த லால்கார் மக்களுக்கு செவ்வணக்கம் !
போலிகம்யூனிஸ்டுகளை தனிமைப்படுத்துவோம்!!
வெல்லட்டும் வெல்லட்டும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.
இனியும் போலிகளில் களையெடுக்கப்போவதாய் சொல்லிக்கொண்டிருக்கும் போலிகளின் புரட்சிகர அணிகளே பதில் சொல்லுங்கள்.புரட்சியை எப்படி செய்வது? இப்படி விவசாயிகளை, உழைக்கும் மக்களை கொன்றபடி புரட்சி செய்யும் போலிகளிலிருந்து வெளியேறாதவரை நீங்கள் எப்படி தோழராய் இருப்பீர்கள்.
துரோகிக்கு , பாசிஸ்டுக்கு தோழனெனில்
எப்படி உழைக்கும் மக்களுக்கும் தோழன் ?.
வழி இரண்டு தான் ஒன்று நியாயமாய் பதில் சொல்லுங்கள், இல்லையேல் நீங்களும் பாசிஸ்டாய் பரிணமிப்பதை தவிர வேறு வழி இல்லவே இல்லை. இனியும் நீங்கள் காக்கும் அமைதி உழைக்கும் மக்களின் சுடுகாட்டுக்கானதே.
குறிச்சொற்கள்: கிளர்ச்சி, சிவப்பதிகாரம், நக்சல்பரி, நந்திகிராம், பரிணாம வளர்ச்சி, பாசிசம், மார்க்சிஸ்டு, மேற்கு வங்கம், லால்கர்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 23 மறுமொழிகள் »