ஏப்ரல் 28, 2011
மாற்றங்களும் சில கற்களும்

பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்
முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன
வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி
நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ
மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்
டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்
சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்
வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன
இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.
குறிச்சொற்கள்: அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 17, 2011
தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
எம் வாயில்
பீயைத் திணிக்கவும்
ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்
ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்
உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்
ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்
என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை
ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி
பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !
அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி நக்சல்பாரியே உன் வழி
குறிச்சொற்கள்: அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 9, 2011
இது பதினாலாவது தேர்தல்
காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..
இது பதினாலாவது
தேர்தல்
எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி
பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன
நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்
உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன
ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்
முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்
சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்
உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?
படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்
உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?
சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?
இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு
உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்
குறிச்சொற்கள்: அதிமுக, ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கருத்துப்படங்கள், கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, புஜதொமு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 3, 2011
புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன் 
புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்
எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்
சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு
இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா
போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா
அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு
ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு
ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க
மாஞ்சோலையில மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி
கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா
திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா
இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை
தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி
அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி
டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு
இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!
ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு
புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்
குறிச்சொற்கள்: அதிமுக, எம், ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக, CPI, CPM
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
மார்ச் 24, 2011
வழிகளும் விழிகளும்
அன்று நீங்கள்
கொல்லப்பட்டிருக்கலாம்
மகாத்மாக்களின் ஆசியோடு….
உங்கள் குரல் வளைகளை
யுடைத்த அதே அன்னியச் சுருக்குகள்
எம் விடுதலையை யுடைக்க
காத்திருக்கிறது….
மார்ச் 23
மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டதாம்
இல்லை
இல்லை
இல்லவே இல்லை
உடல்கள் விதைகளாக
விண்மீண்களாக
எங்களின் குருதியாக
உணர்வாக
மாறிய நாள்
கைராட்டைகளின் முகமூடி
கிழித்து வஞ்சகர் தம்
குலை நடுங்க
தூக்குக்கயிற்றை
முத்தமிட்ட
தியாகத்தின் விழிகளே!
அன்னியனுக்கு அடிபணிய
மறுத்த
விதையின் வழிகளே
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்
குறிச்சொற்கள்: கவிதை, கவிதைகள், சுகதேவ், பகத் சிங், மார்ச் 23, ராஜ குரு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
பிப்ரவரி 28, 2011
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!
” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு ”
23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?
மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.
இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.
ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.
கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.
தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.
அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.
இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.
இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.
ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.
———————————————————————————————————————————————————–
ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் ” எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.
பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.
பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.
இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.
அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.
காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?
ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.
உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.
இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.
NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.
மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.
மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.
இதோ !!!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?
பு.மா.இ.மு
சென்னை
குறிச்சொற்கள்: கருணாநிதி அரசு, சென்னையில் பறக்கும் ரயில், தடியடி, பச்சையப்பன் கல்லூரி. கல்லூரி, பஸ் டே, பு மா இ மு, போராட்டம், போலீசு, போலீசுத் தாக்குதல், மாணவப் போராட்டம், மாணவர்கள், மெட்ரோ ரயில் திட்டம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 31, 2010
கவிதைகள்-ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர்
ஒரு வாரம் முன்னிலிருந்தே
செல்பேசிகள்
சொல்லத்தொடங்கி
விட்டன ஹேப்பி நியூ இயர்……..
நடந்தவைகளை
மறப்போம் பத்திரிக்கைகளின்
காலச்சுவடுகள்
மெல்ல பதிந்து விட்டு
செல்கின்றன……
நடந்தவைகளை
மறக்கமுடியுமா என்னால்
நிம்மதியாய் உறங்கத்தான்
முடியுமா இனி
நடக்கப்போவதை நினைத்தால்……
கயர்லாஞ்சியின்
கொடுமைகள் எப்படி
மறையும்
அது மறையாத
வரை என் கனவுகளின்
நடுக்கங்களும் குறையப்போவதில்லை……..
என் காதுகள்
இசையை கேட்காமலே
மூடிக்கொள்கின்றன……
எப்படி என்
காதுகள் திறக்கும்
பறையை அடித்ததற்காக
பீயை வாயில் திணித்தவன்
மேல்சாதியாய் நீடிக்கும்
வரை
என் காதுகள்எப்படி கேட்கும்
ஹேப்பி நியூ இயரை……
என் வாய்
குழறிக்கொண்டிருக்கின்றது
வெட்டுப்பட்டு
சாகும் போது மேலவளவு
முருகேசனின் குரல்
குழறியதை விட இன்னும் அதிகமாக
நான் எப்படி சொல்வேன்
ஹேப்பி நியூ இயர்……..
என் பாதங்கள்
ஆட
மறுக்கின்றன பாதணிகள்
கக்கத்தில் ஏறுவது
நிற்காதவரை
என்னால் ஆட
முடியாது………
ரெட்டை டம்ளர்
பாலியல் வன்முறை
கொல்லப்படும் விவசாயிகள்
நெசவாளிக்கு
தூக்கு கயிறான கைத்தறி
இப்படி எதுவுமே
மாறவில்லை
ஹேப்பி நியூ இயரும் கூடத்தான்……
“மாற்றம்
ஒன்றே மாறாதது”
ஆம்
மாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றத்தினை கொண்டுவருவோம்
மக்களோடு மக்களாக
சாவது தெரியாமல்
ஊளையிடுபவர்கள்
தொடரட்டும்
நாம் தொடங்குவோம்
நமக்காக
அங்கு
பலரின் முடிவுகள்
காத்திருக்கின்றன .
குறிச்சொற்கள்: கவிதைகள்
குறிச்சொற்கள்: இயக்கம், ரெட்டை டம்ளர் பாலியல், வன்முறை, விவசாயிகள், ஹேப்பி நியூ இயர்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
திசெம்பர் 5, 2010

கடப்பாரைகளும் சில கனவான்களும்
மை லார்ட்!!!
ஆர்டர்! ஆர்டர்!! ஆர்டர்!!!
இடித்த கடப்பாரைகள்
அமைதியாய் சொல்கின்றன
“சுத்தியலிருக்க இனி நமக்கு வேலை இல்லை”
குரல்வளையை அறுத்த
கட்டாரிகள் சொல்கின்றன
“வேந்தே! உமது பேனாக்கள்
எம்மை விட கூரானவை”
கருப்பு அங்கி காவியாய்
முழுமையடையும் நேரமிது
இனி கரசேவை தேவை இல்லை
யாத்திரைகள் தேவையே இல்லை
அத்துவானியும் மோடியும் தேவை இல்லை
கருப்புச்சட்டை கனவான்கள் போதும்
கச்சிதமாய் காரியம் முடிக்க
திண்ணியம்
மேலவளவு
அரியானா
மகாராட்டிரக்கொடுமைகள் எல்லாம்
இனி பைசல் செய்யப்படும்
கவனத்தில் கொள்ளுங்கள்
கருப்பு அங்கி காவியாய்
முழுமையடையும் நேரமிது
குறிச்சொற்கள்: கவிதை, கவிதைகள், டி.6
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
நவம்பர் 8, 2010
பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!
எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்”
அதோ அங்கே பாருங்கள், வறண்ட , நெடிய கண்மாயில் பெண்கள் எல்லாம் போர் போட்டு குடி நீர் எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள். என்னங்க செய்யறது? கண்மாய் வத்திப்போய் பல வருசம் ஆச்சு, ஓட்டு கேக்க வருவானுங்க எப்பயாவது.மண்ணை பொன்னாக்குறேன்ன்னு சொல்லுவான் ஒருத்தன், நாயை பேயாக்குறேன்னு சொல்லுவான் ஒருத்தென் இப்புடியேஎல்லாம் கருமாந்திரம் புடிச்ச பயலுவலும் சொல்லிகிட்டு திரியும் , எங்க தண்ணீ பிரச்சினைய எவனும் தீக்குற மாரி தெரியல.
அன்னக்கி தண்ணி எடுக்க வந்த பெரியாத்தா கூட சொல்லுச்சி “ஏய் மாரியம்மா இந்த பூமிய அழிச்சுப்புடு தாயீ , புதுசா கொண்டா ஆத்தா, நாங்க தெனமும் சாவுறோம் ஆத்தா” கண்ணீர் வுட்டு கதறுச்சி. எல்லாம் இச்சு கொட்டிட்டு போய்ட்டாங்க.
அடச்சே நாம எதுக்கோ வந்துட்டு எதைப்பத்தியோ பேசிகிட்டு இருக்கோம், நாம பேச வந்ததே நம்ம மாணிக்கத்தை பத்திதான், வயசு 35. அவுங்க தாத்தா துரையன் அந்த காலத்துலயே கம்யூனிஸ்டு கட்சியில இருந்தாராம். வெள்ளக்காரன்
காலத்துல துரையன் இருந்த ஜெயில்ல பக்கத்து ரூமிலதான் நல்லக்கண்ணு இருந்தாராம். கட்சி ரெண்டா உடைஞ்சப்பகூட துரையன் நகரலை. ” சாகுற வரைக்கும் தோலர் நல்லக்கண்ணுக்காகத்தான் அவுரு கட்சியிலத்தான் இருப்பேன்“ன்னாரு. அவரு போட்ட சபதத்த மாணிக்கம் காப்பாத்துறாரு. ஆமா அவரும் சிபிஐ கட்சியிலதான் இருக்குறாரு. அவுங்க அப்பாவுக்கு ஒரு நல்லக்கண்ணுன்னா? மாணிக்கத்துக்கு வானவராயன்தான்.
போன முறை கோயம்புத்தூர் எம்பியா நின்னப்ப மாணிக்கம் செஞ்சவேலை என்ன? மாடாட்டம் வேல செஞ்சான். நாளைக்கு தேர்தல்ன்னா இன்னைக்கு வரைக்கும் தோரணம் கட்டுறதுகொடிபுடிக்குறதுன்னு அவன் தெருவையே கலக்கிப்புட்டான் போங்க.
வானவராயன் செயிச்சவொடனே மாணிக்கத்த கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாரு அப்புறம் சொன்னாரு “என்ர மாணிக்கம் இருக்குற வரைக்கும் எனக்கு கவலையே இல்லை” ஆமா அவரு வீடு எங்க இருக்குன்னு தெரியலீங்களே! யாரை கேக்கலாம்………………… அதோ அந்த வெள்ளசீலை ஆயாவை கேக்கலாங்களா ? “ஆயா இங்க துரையன் பேரன் மாணிக்கம் வீடு எங்க இருக்குதுங்க? ” ” நம்ம மாணிக்கம் வீடா? தா அந்த முக்குல போய் சோத்தாங்கை பக்கம் திரும்புங்க”
அதோ வெளிய கயித்துக்கட்டல்ல இருக்குறாரே அவருதான் மாணிக்கம். திரைக்கதையெல்லாம் போதும் இனி கதைக்குள்ள போவோம்.
…………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………..
மாணிக்கத்துக்கு ஒரு சந்தோசமாய் இருந்தது, இருக்காதா என்ன? சிபிஐ மாநில செயலாளர் ” நில மீட்பு போராட்டம்” அறிவிச்சதை பார்த்தவுடனே அப்படி ஒரு சந்தோசம். எல்லா கட்சியும் எப்படியெல்லாம் எங்களை கேவலப்படுத்துனீங்க நாய்ங்களா? வர்ரண்டா டேய்! சிங்கம் மாரி எங்க தோலர் கிளம்பிட்டார்டா………………….. அவன் மனசுக்குள் பல்லாயிரம் வாலா பட்டாசுகள் வெடித்தன. மாணிக்கத்தோட மாமன் வெள்ளையன் பக்கத்து வீடுதான்.
மாமன் வெள்ளையன் சிபிஎம் கட்சியில இருக்குறாங்க. அவருகிட்ட சோலியா போறப்ப எல்லாம் சிபிஐ கட்சியை குத்தி குத்தி காட்டுவாரு. மனசு வலிக்கும், ஏன் போன வருசம் எங்க கட்சி மூத்த தலைவர் ஒருத்தரு சிபிஐ, சிபிஎம் ரெண்டு கட்சியும் இணையனும்ன்னு சொன்னவுடனே சிபிஎம் காரர் ஒருத்தரு “அதெல்லாம் முடியாது, பழச மறக்க முடியாது, எங்களை துரோகின்னு சொல்லி வெளியேத்துனீங்களே”ன்னு மைக்குல பேச எங்க தலைவருங்க மூஞ்செல்லாம் எவ்வளவு கவலையாஇருந்துச்சு தெரியுமா?
அதை பேப்பர்ல பாத்தவுடனே மாமங்காரன் சொன்னான் “டே மாப்புள! உங்கட்சியே ஒண்ணுமில்லாம போயிடுச்சு, செயலாளர் பதவிக்கு ஆள் இல்லாம ஓடிப்போன பாண்டியை புடிச்சுகிட்டு வந்தீங்க, இப்ப எங்க கட்சிக்கே மேட்டர் போடுறீங்களா? எங்க கட்சிய வளச்சுக்கிட்டு ஆள்புடிக்கப்போறீங்களா? அப்புடியே சொத்தப்புடுங்க பாக்குறீங்க”
வேற யாராவது சொல்லியிருந்தா அவன் சாவறதுக்கு கருப்பண்ணன் கோயில்ல கோழியை தலை கீழா தொங்கவுட்டுருப்பான் மாணிக்கம், மாமாங்குற ஒரே காரணத்துக்காக மனசுக்குளேயே புழுங்குனான். அவன் சொல்றது உண்மையா இருக்குமோ? ஏன் நம்ம கட்சியில யாருமே சேர மாட்டேங்குறாங்க! நமக்கு பின்னாடி பொறந்தவன் சிபிஎம், அவன்கூட கேரளாவுலயும் மேற்குவங்கத்துலயும் ஆட்சிய புடிச்சுட்டான். எச்சிப்பாலை (கொள்கையில்) குடிச்சு வளந்தவனுக்கே அவ்வளவு திமிறா?
ரொம்ப டென்சன் ஆகிப்போனான் மாணிக்கம். ” வொக்காளி என்ன திமிரு ஆளாளுக்கு ஆடுறானுங்க, நேத்து முளச்ச விஜயகாந்து புரச்சி பண்ணப்போறேங்குறான், நாங்க தாண்டா கம்யூனிசத்த இந்த நாட்டுக்கே அறிமுகப்படுத்துனோம், இப்ப எவன் பாத்தாலும் மதிக்க மாட்டேங்குறானுங்க, எம்பி சீட் கொடுத்தாலும் சரி, எம்மெலே சீட்கொடுத்தாலும் சரி எச்சிப்பாலு குடிச்சவனுக்குத்தான் எச்சா தராங்க” கவலையிலே சாயங்காலம் படுத்தவன்தான்,
ராத்திரி அவன் மனைவி ரத்தினம் எழுப்பிய போது அழுது அழுது அவன் கண்கள் வீங்கியிருந்தது, கேட்டாள் ” ஏ மாமா அழுவுற “, அவன் காலையில் மாமங்காரன் திட்டியதை சொன்னான்.
“அட கெரகம் புடிச்சவனே! இதுக்கா அழுவுற , கருப்பண்ண சாமிக்கு கெடா வெட்டறன்னு நேந்துக்கோ எல்லா
சரியாயிடும்” மனைவியின் சொல் இதமாயிருந்து. சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்தான். கண்கள் சொக்கின, கூடவே ஒரு கவிதையும் வந்தது.
சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு
அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென தூற்றப்படலாம்
கலங்காதே மனமே!
புரட்சி ஒன்றே தீர்வு
விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி
போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும் எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை
சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்
அப்போதுதான் சன் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது, இப்போதுதான் அந்த செய்தி வந்தது ” சிபிஐ மாநிலச்செயலர்அறிவிப்பு, நிலமற்ற மக்களுக்கு நிலத்தை வழங்கக்கோரி நில மீட்பு போராட்டம்”. என்ன ஒரு சந்தோசம். போன வாரம்கூடசன் டிவியில வந்துச்சே சேதி,
“தில்லையில 4 ஆயிரம் ஆண்டுகளாய் பூட்டு போட்டிருக்கிறார்கள் அதை அரசு அகற்றாவிடில் நாங்கள் அகற்றுவோம்” நம்ம பாண்டி தோலர் பேசும் போது எப்படி சிங்கம் மாரி பேசினார். அந்த ம.க.இ.க காரனுங்க என்னமோ 8 வருசமா போராட்டம் பண்ணுறாங்களாம். நம்ம பாண்டி தோலர் எப்பவுமே உசாரு!!! எட்டு வருசமா போராடுறவனுக்கு பேர் கிடைக்க வுட்டுடுவாரா என்ன ? சிபிஎம் காரணெல்லாம் பேசும் போது எங்களுக்கு பேச உரிமை இல்லையா என்ன? எவன் எட்டு வருசம் போராடி மண்டை உடஞ்சா நமக்கென்ன? நமக்கு பேர் வரணும் அவ்வளவுதான்? இதுல என்ன தப்பு? அவனுக்குள்ளே கேள்விக்கேட்டுக்கொண்டே தூங்கிப்போனான்.
—————————————————————————————————————————————————————
யாரோ எழுப்பியது போல் இருந்தது . மணியைப்பார்த்தான் அது 4 என பல்லைக்காட்டியது. மாவட்டப்பொறுப்பாளர் நேரே வந்திருந்தார் “ஏப்பா மாணிக்கம் இங்க வா” தனியாக அழைத்தார். காலங்காத்தால தோலர் வந்திருக்காரே குழப்பத்தோடுபின்னே சென்றான். ” ஏப்பா நேத்து நியூஸ் கேட்டியா “.
” கேட்டேன் தோலர், நம்ம பாண்டித்தோலரோட பேட்டியில நில மீட்பு போராட்டம்ன்னு சொன்னாரே” என்றான்
“கரெக்டா விசயத்துக்கு வந்துடுறேன். நேத்து பாண்டித்தோலரோட பேட்டியைப்பாத்த மொத்த தமிழ் நாடே ஆடிப்போயிடுச்சு, குறிப்பா அரசாங்கம் ரொம்பவே கலங்கிப்போயிடுச்சு, தலைவர் கலைஞர் நம்ம தோலருக்கு ராத்திரி 10 மணிக்கு போன் பண்ணி “தயவு செஞ்சு உங்க போராட்டத்த ஒத்திவையுங்கன்னு” கெஞ்சிப்பாத்தாரு நம்மாளு கேக்கவே இல்லை.”
“ஒரு சாதாரண போராட்டத்துக்கு ஏன் முதல்வர் போன் பண்ணியிருக்காரு தெரியுமா?” சஸ்பென்சோடு மாணிக்கத்தைப்பார்த்தார். நில மீட்பு போராட்டம்ங்குறது புரட்சி செய்யறதுக்கான அறிகுறி !!!!. எல்லா கட்சியும் நம்மள எப்படியெல்லாம் திட்டுனாங்க, அதுக்கு பதிலா யாருக்குமே தெரியாம புரட்சியை செஞ்சு முடிக்கறதுன்னு மேல்கமிட்டியில தீர்மானம் போட்டிருக்கோம்.”
மாணிக்கத்தின் முகம் கலவரமடைந்தது. அந்த பனி கொட்டும் வேளையில் முகத்தில் பூத்திருந்த வியர்வையை வேட்டியில் துடைத்துக்கொண்டான். தோலர் தொடர்ந்தார் “அந்த விசயம் எப்படியோ உளவுத்துறை மூலமா லீக் ஆயிடுச்சு, அதனால தான் கலைஞர் போன் பன்ணியிருக்காரு.” “அப்படியா” என வாயைப்பிளந்தான் மாணிக்கம்.
“இதுக்கே திகைச்சுட்டியே, நைட்டு 12 மணிக்கு பிரதமர் போன் செஞ்சு புரட்சியை ப்ளீஸ் ஒத்தி வையுங்கன்னு கெஞ்சி இருக்காரு, அப்புறம் சோனியா காந்தி, அத்வானின்னு எத்தனையோ பேர் சொல்லியும் பாண்டித்தோலர் கேக்கல. வேற வழி இல்லாம நைட்டு 1 மணிக்கு அம்மா போன் பண்ணி புரட்சிய ஒத்தி வையுங்க இன்னைக்கு நாள் சரியில்லைன்னு சொல்ல அதுக்கு நம்ம தோலரோ ‘ நாளைக்குத்தான் நல்ல நாள் என் ராசிக்கு நாளைக்கு குரு உச்சத்துல இருக்கான், கண்டிப்பா
நாளைக்கு புரட்சி செய்யணும்னு மேல் கமிட்டியில தீர்மானம் போட்டுட்டாங்க அதுக்கு முன்னாடி ஆவி ஆவி ஆரதா மூலமா ரணதிவே கிட்ட கூட ஆசி வாங்கியாச்சு”ன்னு ஆணித்தரமா சொன்னாராம். அம்மா கம்முன்னு ஆப் ஆயிடுச்சாம்”
மணிக்கத்துக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ” தோலர் நான் என்ன செய்யணுன்னு சொல்லுங்க? “. ” இப்ப மணி 4.இன்னும் சரியா ரெண்டு மணி நேரத்துல விடிஞ்சிடும் அதுக்குள்ள நம்ம ஊருல இருக்குற எல்லா ஸ்கூல், பீடிஓ ஆபீஸ், அப்புறம் அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் , கொடிக்கம்பங்கள் எல்லாத்துலயும் நம்ம கதிர் அறிவாள் கொடியை ஏத்துனா போதும்,
நம்ம தோலர் பாண்டிக்கு அவர் ராசிப்படி காலையில 8.50 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பமாகுது, அவர் சரியா 9 க்கு டிவி ஸ்டேசனுல முறைப்படி புரட்சி நடந்து முடிந்ததை அறிவிப்பார். அதுக்கு முன்னாடி மக்கள் எழக்கூடாது. அவங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் வேணுமில்ல , அதால காலையில மக்கள் முழிக்கறதுக்கு காரணமான சேவல்களை எல்லாம் இப்பவே நாம கொல்லணும். அதுக்கு தனியா ரெண்டு தோலர்களை அனுப்பிட்டேன். அவங்க எல்லா சேவலையும் கொன்னுட்டதா எனக்கு மெசேஜ் அனுப்பிட்டாங்க”.
மாணிக்கம் தன் வீட்டு சேவல்கள் கொல்லப்பட்டு கிடப்பதை அப்போது பார்த்தான். அவன்
கண்ணீர் கசிந்தது. புரட்சிக்காகத்தான சேவல்கள் செத்தன என்பதை நினைத்து மனதை தேற்றிக்கொண்டான்.
” தோலர் 7 மணிக்கு காலையில சங்கு ஊதுவானே ?” ” நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க, அவருக்கு கொஞ்சம் பணத்தைக்கொடுத்து 8.45 க்கு சங்க ஊத சொல்லிட்டேன், நீங்க விடியறதுக்குள்ள எல்லா கொடிக்கம்பத்துலயும் கொடியை ஏத்துனா போதும், காலையில எட்டே முக்கால் மணிக்கு மக்கள் எல்லாம் எந்திரிப்பாங்க, சுத்தியும் சிவப்பு கொடியை பார்ப்பாங்க, ஆச்சரியமா டிவி பெட்டியப் போடுவாங்க. அப்ப நம்ம தோலர் புரட்சி நடந்து முடிந்ததை முறைப்படிஅறிவிப்பார்.” என்ற படி தோலர் கிளம்ப மாணிக்கம் “ஒரு சந்தேகம்” என்று நிறுத்தினான் அவரை,
“தோலர் புரட்சின்னா அவ்வளவுதானா? யார்கிட்டயேயும் சண்டை போடவேண்டியதில்லையா?, இப்படி யாருக்குமே தெரியாம புரட்சி பண்ணிட்டமே தோலர், வேற கட்சிக்காரங்க சண்டைக்கு வரமாட்டாங்களா? ”
தோலர் புன்சிரிப்போடு சொன்னார் ” சில விசயங்களை சொல்ல முடியும் பல விசயங்களை சொல்ல முடியாது, புரட்சி என்பது மண்ணுக்கேற்றவகையில் இருக்கணும், ஒவ்வொரு நாட்டுலேயும் , பிரதேசத்துலேயும், பகுதியிலேயும் வேற மாதிரி தான் நடக்கும். புரட்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிஞ்சிடுச்சு, நைட்டு 1 மணிக்கு மேல் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லக்கூடாது அது கட்சி ரகசியம், அதை காலையில டிவியில தோலர் சொல்லுவார், நீங்க கொடியை ஏத்தி முடிக்குற நேரம் எல்லா ஊரிலேயும் இருக்கிற நம்ம தோலர்கள் கொடியை ஏத்தி முடிச்சிருப்பாங்க. உங்க தாத்தா காலத்துல இருந்து நீங்க பார்ட்டியில இருக்கறதால தான் உங்களுக்கு இந்த பாக்கியம், சரி கிளம்பறேன், வேலையை முடிச்சவுடனே எனக்கு போன் பண்ணி சாப்பிட்டாச்சுன்னு சங்கேதமா சொல்லுங்க நான் புரிஞ்சிக்குவேன்.”
உடனே அவர் கொடுத்த கொடித்துணிகளையெல்லாம் வண்டியில் வைத்துக்கொண்டு பறந்தான், எல்லா இடத்திலும் கொடிகளை கட்டினான். கடிகாரத்தைப்பார்த்தான் அது 8.15 என்றது, போனை எடுத்து பேசப்போகும் போது நினைவு வந்தது, அந்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்குல கட்டவே இல்லையே !!! வண்டியை ஸ்டார்ட் செய்தான், பெட்ரோல் இல்லை,
வண்டியை தள்ளி விட்டு ஓடினான், ஒரு மைல் தூரத்தை 20 நிமிடத்தில் ஓடி வந்திருந்தான் மணி 8.40 என்றது. காலையில்சங்கும் ஊதவில்லை, சேவல்களும் கூவாததால் யாரும் எழ வில்லை. பெட்ரோல் பங்கில் கொடியை கட்டிவிட்டு இறங்கினான். பல சிராய்ப்புக்கள் உடலெங்கும், ஓடிவந்ததன் காரணமாம நெஞ்சு அடைத்தது. மாசெக்கு போன் செய்யணுமே. மணி 8.45 என்றது.
நாம் போன் செய்ய வில்லை என்றால் ஒரு வேளை புரட்சி டிக்ளேர் செய்யப்படாமல் போய்விடுமோ? அந்த என்ணம் அவன் உடம்புக்குள் சக்தியை கொடுத்தது, ஒரு தேஜஸ் அவனுள் இறங்கியது போலிருந்தது, ஒரு வேளை இதுதான் “வர்க்கதேஜஸ்”ஆக இருக்குமோ? போன் செய்து சொன்னான். எதிர் முனையில் “என்ன தோலர் இவ்வளவு லேட்டாசொல்லுறீங்க, 5 நிமிசம் லேட்டாயிருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா? புரட்சி பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போயிருக்கும் , எனக்கு உங்க கிட்ட ஓரியாட நேரம் இல்லை சங்கூதறவனுக்கு போன் செஞ்சு சொல்லிடுறேன், சீக்கிறம் வீட்டுக்கு போய் டிவியைப்போடுங்க”என்றார்.
மாணிக்கம் ஓடினான் ” மணி 8.59 என்றது வீட்டில் , அதற்குள் சங்கூதி முடித்திருக்க, மக்கள் எல்லாம்
பதறியடித்துக்கொண்டி எழுந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு கொடியாயிருக்க, அவர்களுக்குபுரியவில்லை. எல்லோரும் டிவியப் போட்ட நேரத்தில் மாணிக்கமும் போட்டிருந்தான். சன் டிவியில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது “புரட்சி நடந்து முடிந்தது சிபிஐ கட்சி தமிழகத்தை கைப்பற்றியது, தோலர் பாண்டியின் உரை பின்னும் சிறிது நேரத்தில்ஒளிப்பப்படும்”
தோலர் பாண்டி டிவியில் தோன்றினார். அவர் சிவப்பு நிறம் கொண்ட சட்டை, சிவப்பு பேண்ட், ராணுவ
வீரனைப்போல உடை யணிந்து மார்பில் பல பதக்கங்களை அணிந்திருந்தார்.டிவியில் பேச ஆரம்பித்தார் பாண்டி ” நில மீட்பு போராட்டம் என்ற பெயரில் புரட்சி நடந்து முடிந்து விட்டது, பொதுமக்களும்
தோலர்களும் எல்லோரும் இதை கொண்டாட வேண்டும் இது உங்களுக்கான புரட்சி. நேற்று இரவு 10 மணிக்கு முன்னாள்முதல்வர் கலைஞரும் பின்னர் 12 மணிக்கு அம்மாவும், 1 மணிக்கு மன்மோகன், அத்வானி, சோனியா என எத்தனையோ பேர்சொல்லியும் நான் கேட்கவில்லை, காரணம் என் உள்மனது என்னை வழி நடத்தியது, நேற்று முன் தினம் மத்திய கமிட்டி ஆவிஆரதா மூலமாக ரணதிவேயிடம் குறி கேட்கப்பட்டது, அவரும் இன்று புரட்சிக்கான நாளை குறித்தார். ஆயிரம் தடைகள்
வந்தாலும் புரட்சிக்கான சரியான நாளை தேர்வு செய்பவனே புரட்சியின் தலைவன், அவ்விதத்தில் நான் புரட்சியின் தலைவனாகிறேன்.
அதிகாலை இரண்டு மணிக்கு வேறு வழியின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையை நமது கட்சி உருவாக்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கடைசியாக சிபிஎம் போன்ற அனைத்து கட்சி MLAக்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து தங்களை சிபிஐ கட்சியில் இணைத்துக்கொண்டனர், மேலும் கடவுளின் அனுக்கிரகம் போல சில சம்பவங்கள் நடந்தன.கலைஞர், புரட்சித்தலைவி, ராமதாசு, திருமாவளவன், வரதுக்குட்டி,புரட்சிக்கலைஞர், வாண்டையார், பச்சமுத்து உடையார், பெஸ்ட் ராமசாமி, தனியரசு, கிருஷ்ணசாமி ஆகிய அனைத்துக்கட்சி
தலைவர்களும், நமீதா, குஷ்பூ, மனோரமா, ரஜினி, விஜய், ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிக நடிகையர்களும் தங்களை சிபிஐயில் இணைத்துக் கொண்டனர், இது நடந்தது அதிகாலை மூன்று மணிக்கு. பின்னர் புரட்சியின் திட்டப்படி அதிகாலையில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்கு அவர்கள் காலை 8.50 வரை உறங்கவைக்கப்பட்டார்கள், அவர்கள் காலையில் நல்ல செய்தியை கேட்க வேண்டுமென்பதற்காகவே. தற்போது ஆளுனர் மாளிகையை நோக்கி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர செல்லப்போகிறோம்.”
மாணிக்கத்துக்கு அடடா நேத்துதான புரட்சி வராதான்னு யோசிச்சோம், இன்னைக்கே வந்துடுச்சே, அதுக்குள்ளே முடிஞ்சு போச்சே, புரட்சிக்கு முக்கியமான காரணமே நாம ஏத்துன கொடிதான், 5 நிமிசம் லேட்டாயிருந்தாலும் என்னா ஆயிருக்கும்.சன் டிவியில் சிறப்பு செய்திகள் போட்டார்கள் “வணக்கம்” “முக்கிய செய்திகள்…………….. புரட்சி நடந்து முடிந்தது, பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் பாண்டியை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைத்ததை அடுத்து, தமிழக முதல்வராக தோலர்பாண்டி பதவியேற்பு, கம்யுனிசம் முறைப்படி மலர்ந்ததாக அறிவிப்பு……………………… நிதித்துறை அமைச்சராக கலைஞரும், போலீஸ்துறை அமைச்சராக அழகிரியும், திரைப்பட நல்வாழ்வுத்துறை அமைச்சராகசெயலலிதாவும், போக்குவரத்து துறை அமைச்சராக விஜய காந்தும், இளைஞர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இளையதளபதி விஜயும் முதல் கட்டமாக பதவி யேற்றனர். மேலும் பொதுத்துறை சீரமைப்பிற்கான அமைச்சர் பதவி புதியதாக ஏற்படுத்தப்பட்டு அது பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு தரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.”
மாணிக்கத்துக்கு தன்னை நம்பவே முடியவில்லை. ஆகா புரட்சி நடந்து முடிஞ்சுடுச்சே, அந்த கருமாந்திரம் புடிச்சவெள்ளையன் எங்க போனான் தெரியலையே? சரி அவனை தேடுறது இருக்கட்டும். காலையில சீக்கிரமே எழுந்தாச்சு,புரட்சிக்காக இவன் பட்ட பாடு கொஞ்சமா என்ன எத்தனை கம்பங்களில் ஏறி சிராய்ப்புக்காயங்களுடன், ரொம்பவேகளைத்துப்போய்விட்டான், கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றவாறு படுத்தான்.
ஒரே அழுகை சத்தம், மாணிக்கத்தின் 6 வயது மகள் “புரட்சி” வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். மாணிக்கம் கண்ணை விழித்தான். சுற்றியும் பார்த்தான், அவன் கட்டிய சிவப்புக்கொடிகளை காணவில்லை, அட ! எங்க போச்சு தெரியலையே ? பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான். சமையல் செய்து கொண்டிருந்த அவன் மனைவி “ஏ மாமா புத்தி கீது கெட்டுப்போச்சா உனக்கு இப்புடி முழிக்குற! புள்ள அழுவுதே என்னன்னு பாக்கமாட்ட” என்றாள். மாணிக்கத்தின் முதல் மகன் ட்ராட்ஸ்கி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.
புரட்சியை இந்த புரட்சி கெடுத்துடுச்சே!!!!!!!!. கவலையோடு அவன் புரட்சியை தூக்கினான். அடச்சே இது கனவா? அடச்சே இது கனவா? அவனுக்கு அவனே பதில் சொன்னான் “கனவாயிருந்தது நனவானா எப்பூடி இருக்கும் ? ” சப்பு கொட்டியபடி பல் விளக்க சென்றான்.
” இது கூட புரட்சி தானே?, பின்ன கனவில புரட்சிய சாதிச்சதை பாராட்டுனுமா இல்லையா ? எங்க எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்”
குறிச்சொற்கள்: கதை, கதைகள், கலகம், குருசேவ், சிபிஐ, தா.பாண்டியன், பு மா இ மு, புஜதொமு விவிமு, புதிய ஜன நாயகம், புரட்சி, மகஇக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 3, 2010
நோக்கியா வழங்கும் தீபாவலி கொண்டாட்டம்
ஒன்றாம் தேதி நக்கீரன் இணையதளத்தில் பார்த்துக்கொண்டிருந்த போது ரோபோ தாக்கி இளம்பெண் பலி- திருப்பெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில் பெண் பலி என போட்டிருந்தது. இரண்டாம் தேதி காலை நாளிதழ்கள் எதிலுமே எந்த நிறுவனம் என்று போடவில்லை. பெட்டி செய்தியாக விபத்தில் பலி என்றே செய்தியாக்கப்பட்டிருந்தது.
என்ன நடந்தது என்பதை வினவில் படித்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இரண்டாம் தேதில் மாலையில் தான் அப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கிடைக்கும் என ஒரு நண்பர் சொன்னார். இருந்தாலும் காலையில் செல்வதென தீர்மானித்து காலையிலேயே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். பிணவறையை தேடிக் கண்டுபிடித்து அருகில் செல்லும் போது ,
ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனை சுற்றி 40 உளவுப்பிரிவு போலீசார்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர். யாராவது வந்தால் அவர்களை நோட்டம் விடுவது அவர்களுக்கு வேலையாய் இருந்தது. ஆட்டோக்காரரிடம் விசாரித்தேன்” நோக்கியாவுல செத்துச்சே அந்தப்பொண்ணு பாடி எப்ப வரும்?” “தெரியலப்பா, இப்ப ஒரு குடிகாரன் வூட்டுலயே கதவ சாத்திகிட்டான் அதான் நடக்குது என்றார்”
பிணவறைக்கு அருகிலிருந்த மரங்களுக்கு கீழே சில ஆண்கள் இருந்தார்கள். சில பெண்களும் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் மிகத்தீவிரமாய் எதையும் விவாதிக்கவில்லை, ஆனால் மெதுவாய் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திலே உடல் வந்தது. அந்த ஆண்களும் பெண்களும் அந்த உடலின் அருகே சென்றார்கள். நானும் அருகில் சென்று பார்த்தேன் நோக்கியாவில் கொல்லப்பட்ட அதே அம்பிகா தான் அது. ஒரு துளி சத்தம் கூட இன்றி, கண்ணீரின்றி அந்த உடன் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டது. சில ஆண் தொழிலாளிகள் அந்த ஆம்புலன்ஸில் ஏறிப்போனார்கள்.
உளவுத்துறையோ வாகனத்தில் பறந்தது. மீதியிருந்த தொழிலாளிகள் கிளம்பிப்போனார்கள். ஒரு ஆண் தொழிலாளியிடம் பேச்சுக்கொடுத்தேன்.”எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, நாளை எங்களுக்கும் நடக்கும், அந்த மெஷின்ல சென்சார் ஒழுங்கா வேலை செய்யல. திமுக தொழிற்சங்கம் கம்பெனிக்குத்தான் வக்காலத்து வாங்குது. நாங்க எல்லாம் நிரந்தர தொழிலாளிகள். நாங்க இன்னைக்கு யாரும் வேலைக்குப்போக வில்லை. சவ ஊர்வலத்துக்கு நாங்க போகப்போறோம்
சிலரிடம் பேசியபோது வேறு சில விபரங்கள் தெரியவந்தது. நோக்கியாவின் அந்தப் பெண் தொழிலாளி சிக்கி மருத்துவவமனைக்கு எடுத்து செல்லப்பட்டவுடன், அந்த இயந்திரம் துடைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்பெண்ணின் சவ ஊர்வலத்திற்கு ஒப்பந்த தொழிலாளிகள் செல்லக்கூடாதென்று நிர்வாகத்தின் சார்பில் மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆதலால் எந்த ஒப்பந்தத்தொழிலாளியும் வரவில்லை.
அந்த இயந்திரத்தில் சுமார் இருபது நிமிடமிருந்த அப்பெண்ணின் உடல் , அவரின் கதறல்கள் எல்லாம் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு ஆதாரங்கள். ஏன் மூன்று மாதங்களுக்கு முன் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 300க்குமேற்பட்டோர் விசவாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டபோது அது விரதத்தால் வந்த வினை என்றான் நோக்கியா. இப்போது எட்டாம் தேதிக்கு பஞ்சாயத்து ஒத்தி வைக்கப்படுகிறது.
தொழிலாளி தன் உரிமைகளைப்போராடித்தான் பெற வேண்டுமே ஒழிய இப்படி பஞ்சாயத்தில் அல்ல. தினம் நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்த அப்பெண்ணின் உயிர் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்யும் பன்னாட்டு நிறுவனத்தின் ஊடாக நிறுத்தப்பட்டது. முதலாளித்துவத்தின் உலகளாவிய இந்தப்பயணம் இன்னும் பல தொழிலாளர்களின் உயிரைக்கோருகின்றது.
வெளி நாட்டுக்காரனாயிருந்தாலும் நோக்கியா நம் நாட்டு விழாக்களுக்கு தவறாமல் காவு கொடுக்கிறான். முன்னர் ஆகத்து 15 ஐ ஒட்டி 300 தொழிலாளிகளுக்கு வாந்தி ,மயக்கம். தீபாவளியை ஒட்டி அம்பிகாவின் கொலை. தொழிலாளிவர்க்கம் என்பது மிகப்பெரிய வெடிகுண்டின் திரி. நெருப்புதான் வர்க்க உணர்வு. உணர்வு வரும் போது தானாய் வெடிக்கும், வெடிக்க வைக்கப்படும் போது முதலாளித்துவ சாம்ராஜ்யம் தூளாகும்
பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் போது சில தொழிலாளிகள் தனக்குள் பேசிக்கொண்டார்கள் “கொடுமை”. அப்பெண் முதலாளித்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டது தெரிந்தும் அதற்கெதிராக போராடாது இருப்பதல்லவா கொடுமை!
குறிச்சொற்கள்: தொழிலாளி, நோக்கியா, பலி, முதலாளித்துவம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஒக்ரோபர் 29, 2010
பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்? – கதை
நான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், மூச்சிலும் சாதியத்தை , பார்ப்பனீயத்தை பரப்புகிறார்கள் , இவர்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து தனது கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றேன்.
அவர்களின் பார்ப்பன வெறியை பார்ப்பன குழந்தைகள் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். இதனை நான் புரிந்து கொள்ளவே இல்லை அப்பொழுது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து நான் “அட அந்த நாய் எப்புடி பேசியிருக்கான்” என நினைப்பதுண்டு.
——————————
————————————————————–
கதை – 1
இப்போது நான் ஏழாவது படிச்சுக்கிட்டுருக்கிறேன். என்னோட க்குளோஸ் நண்பன் விஷ்ணு. நானும் விஷ்ணுவும் அரைக்கிளாஸ்ல இருந்து நண்பர்கள். அரைக்கிளாஸ்ல அவன் தன்னோட பேனாவை விட்டுட்டு போயிட்டான். அடுத்த நாள் நான் அவனுக்கு அதைத்தந்தேன் அப்படித்தான் நானும் அவனும் பிரண்டானான். நானும் அவனும் சில வருடங்கள் வேற வேற செக்சனில் படிச்சாலும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போவோம், ஜாலியா விளையாடிகிட்டு இருப்போம்.
அவனோட அப்பா, அம்மா எல்லாருமே எனக்குத்தெரியும். எங்க வீட்டுக்கு போகணுமின்னா அவங்க வீட்டத்தாண்டித்தான் போகனும். பையன் நல்லா வெள்ளையா கொழுக் மொழுக்குன்னு இருப்பான். ஐந்தாவது படித்து முடிக்கறதுக்குள்ள அவனுக்காக பல பேர்கிட்ட நான் சண்டை போட்டிருக்கேன், அடி கொடுத்துட்டும் பல சமயம் அடி வாங்கிட்டும் வருவேன்.
5 வது வரைக்கும் ஒண்ணா படிச்ச எங்களை 6-ம் வகுப்புக்கு மேல் நிலைப்பள்ளிக்கு போனதால அவனும் நானும் வேற வேற பிரிவுக்கு மாத்தி போட்டுட்டு பிரிச்ச்சுப்புட்டாங்க. 7-ம் வகுப்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல போட்டுட்டாங்க. எனக்கு அவாஅளவு சந்தோசம் சரி பழைய பிளாஷ் பேக்குக்குள்ள ரொம்ப நேரம் போகாம நேரா கதைக்குள்ள வந்துடறேன்.
நான், ஜான், சுரேஷ், அப்புறம் என் உயிர் நண்பன் விஷ்னு எல்லோரும் ஒரே குரூப். விளையாடுனாலும் சரி என்ன பண்ணினாலும் ஒரே மாதிரிதான். நாங்க எல்லோரும் அவன வெள்ளையான்னுதான் கூப்பிடுவோம், இல்லை “பாப்பா” ன்னு தான் கூப்பிடுவோம். பாக்குறதுக்கு பையன் குழந்தை மாதிரி வெள்ளையா கொழுக்மொழுக்குன்னு இருக்கறதால அந்தப்பெயர்.
திடீர்ன்னு ஒரு நாள் சுரேஷ்க்கும் விஷ்ணு வுக்கும் சண்டை வந்துடுச்சு. இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருந்தங்க. என்ன சண்டை? ஓடிப்புடிச்சு விளையாடறதுல இருந்த தப்புதான். திடீர்ன்னு விஷ்ணு டீச்சர்கிட்ட போனான் என்னவோ சொன்னான். டீச்சர் சுரேஷை கூப்பிட்டாங்க, குச்சி உடையற வரைக்கும் அடிச்சாங்க. அப்புறாம் உன்னோட பிரண்ட்ஸ்களை கூப்பிடுன்னு விஷ்ணு கிட்ட சொன்னாங்க.
நாங்க எல்லாம் பயந்துகிட்டே போய் நின்னோம்.
“டேய் சுரேஷ் உன்னை என்னடா சொன்னான்?” அப்படீன்னு டீச்சர் கேட்டாங்க? அதுக்கு விஷ்ணு சொன்னான் “டீச்சர் என்னை பாப்பான் பாப்பான்னு கூப்பிட்டன் டீச்சர், என் சாதிப்பேரை சொல்லறான் டீச்சர்”.
உண்மையில் எங்கள் யாருக்கும் அய்யரை பார்ப்பான் என்றூ கூப்பிடுவார்கள் என்ற விசயமே தெரியாது. குழந்தையை பாப்பா என்பார்கள் அப்படித்தான் அவனை அழைத்தோம். ஆனால் அவன் விளையாட்டுப்பிரச்சினையில் சாதியை இழுத்து அடி வாங்கிக் கொடுத்துவிட்டான்
இந்த சம்பவத்தை நினைக்கும் போது இப்போது கூட ஆச்சரியமாய் இருக்கிறது. பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்?
இது மாதிரி நிறைய கதைகள் இருக்கிறது பிறகு ஒவ்வொண்ணா வரும்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
ஒக்ரோபர் 20, 2010
அம்மணம், டாஸ்மாக் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்
மாலை வேலை
ஒரு வேளையாய் நான்
தெருவிலிருக்க தெரு நாய்க்கும் எனக்கும்
போட்டி யார் வேகமாய் செல்வதென ?
போட்டி ஒன்று தான்
போட்டியாளர்கள் பெருகி விட்டார்கள்
தெருவில் இருக்கும் அனைவருக்கும்
நான் போட்டியாளன்
ஆடு மாடு குதிரை
எருமை பன்றியென அனைத்தும்
என்னோடு தெருவில்
நடப்பதும் ஓடுவதுமாய்
ஒன்றை நான் முந்த மற்றொன்று
என்னை முந்த என்னிதழ்
விரித்த புன்னகை
காணாமல் போனது
”டேய் வாடி, ஏண்டி நீ வாடா”

பாலினம் மாறுபடுகிறதே
என்று நான் திரும்ப
அது பாலினம் மறந்து
நின்றது ஒன்று
பிறந்த நாட்டில் பிறந்த ஊரில்
பிறந்த மேனியாய் நிற்பது தவறா?
அவனுக்குள் கேள்விகள் முளைத்திருக்கலாம்
போதையில் ஒரு குத்தாட்டத்தோடு
மல்லார்ந்து வீழ்ந்தான்
சூரியனுக்கு குத்திய குத்து
தெருவே இனி டாஸ்மாக் சொத்து

மாதம் மும்மாரி பொழிந்ததாம்
ஒருகாலத்தில்
பாலாறும் தேனாறும் ஓடியதாம்
ஒரு காலத்தில்
அந்த ஒரு காலத்தைக் கொண்டு வர
காங்கிரசு முதல் போலிகள்
வரை போட்டியோ போட்டி
போட்ட போட்டியில்
கிழிந்தது விட்டது தமிழனின் வேட்டி
வந்து விட்டது டாஸ்மாக் புட்டி
சாக்கடை நீர் ஒதுங்கியோடுகிறது
இவன் எச்சில் படாதவாறு
பன்றிகளின் இடம் இப்போது
பச்சைத்தமிழனுக்கு
என் போட்டியை விடுங்கள்
தமிழனுக்கு போட்டியில்லை
கலைஞர் புண்ணியத்தில்
அவனுக்கு போட்டியும் இல்லை

அம்மணமாய் நிற்கிறான் ராஜாதி ராஜ
ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க
ராஜகுல திலக்க்க்க்க்க்க்க………
அவண்தாண்டா
தமிழன்
குறிச்சொற்கள்: அம்மணம், கலைஞர், கவிதை, கவிதைகள், சாராயம், டாஸ்மாக்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஒக்ரோபர் 12, 2010
சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு
ஆணாதிக்கத்தின் உச்சம் இல்லை இல்லை அதுதான் ஆரம்பம்
அதோ அந்தக்குழந்தை சிரித்துக்கொண்டிருக்கிறது பாருங்கள்!. அதோ அக்குழந்தையைத்தான் அங்கு அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்கள். உறவினர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். ஏதாவது விசேசமா? ஆம் விசேசம் தான் அக்குழந்தை இன்று முதல் பெண்ணாகப்போகிறாள். அக்குழந்தையின் தாய் அந்த அறைக்குள் அக்குழந்தையை அழைத்துக்கொண்டு செல்கிறாள். அக்குழந்தைக்கு விபரீதம் நேரப்போவது புரிந்து கத்துகிறது, வீறிட்டு அலறுகிறது.
இதோ இன்னமும் இருவர் வந்து விட்டார்கள். அக்குழந்தையின் ஆடைகளை கழட்டி அதை பென்ணுறுப்பை கையிலிருந்த பழைய பிளேடால் அறுத்து எடுக்கிறார்கள். அப்புறம் ஊசியில் நூல் கோர்க்கப்பட்டு அக்குழந்தையின் உறுப்பு தைக்கப்படுகிறது. பல மடங்கு ரத்தம் வெளியேறிவிட்டது. அக்குழந்தையால் அழ முடியவில்லை. இப்போது கால்கள் கட்டப்படுகின்றன. சில நாட்கள் இப்படித்தான் வைத்திருக்க வேண்டும். வெளியே மகிழ்ச்சி உறவினர்களிடையே பரவுகிறது “ஆயிஷா பெண்ணாகிவிட்டாள்”. குடி கும்மாளம் கரை புரண்டோடுகிறது. கேளிக்கைச்சத்தங்களில் பென்ணின் விம்மல் சத்தம் மெல்ல மெல்ல அடங்கிப்போகிறது.
——————————
—————————————————————————————————————————————
அநேகமாக ஓராண்டுக்கு மேல் இருக்கும் ஒரு புத்தகத்தைப்படித்து, அது காலச்சுவடா அல்லது உயிமெய் இதழா என்று மறந்து விட்டது. அவ்விதழை பத்திரமாய் வைத்திருந்தேன் இருந்தும் தொலைந்துவிட்டது. அவ்விதழைத்தேடி பல இடங்களில் அலைந்துக்கொண்டிருக்கிறேன். என் மனதில் கொஞ்ச நஞ்சமல்ல ஏகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திச்சென்றது. அக்கட்டுரைக்கதையை படிக்கும் பலருக்கும் கண்களில் கன்ணீரை முட்ட வைத்த அந்த மாடலின் பெயர் கூட மறந்து விட்டது.
ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் ஒரு செயல் நடைபெறுவதை அப்போதுதான் முதல் முதலாகப் படித்தேன். அவர் ஒரு புகழ்பெற்ற விளம்பர மாடல், அவருக்கு மிகச்சிறிய வயதில் அவருடைய பாலுறுப்பினை சிதைத்து அதில் தையலைப்போடும் நிகழ்ச்சி நடந்து விட்டது. அன்று முதல் சிறுநீர் கழிப்பதென்பது அவருக்கு நரகம்.
எல்லோரும் ஒரு கணம் தற்போது சிறு நீர் கழிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். ச்சீசீ ! என்று யாராவது முகத்தை சுழிப்பீர்களாயின் , அதைப்பற்றி பிறகு பேசலாம். பலமணி நேரமாய் அடக்கி வைத்திருக்கிறீர்கள் உங்கள் சிறு நீரை, இப்போது சிறு நீரைக்கழித்து விட்டு வரும் போது உங்கள் முகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கும்?
ஆனால் அதற்கு பதில் சிறு நீர் கழிக்கும் போது குத்தி குத்தி வலிக்கிறதெனில், சிறு நீர் பாய்வதற்கு சிறு துளை மட்டுமே இருக்கிறதெனில், சிறு நீர் பாய்ந்து வரும் கணங்களில் எரிச்சலோடு அய்யோ அம்மா என்று கதற வேண்டியத்தேவை இருக்கிறதெனில் யாராவது சிறு நீர் கழிப்பதை நினைத்துப்பார்ப்போமா என்ன? நாம் நினைத்துப்பார்க்கவே தயங்கும் அந்த சம்பவம் அந்த கதறல் ஆப்பிரிக்க பெண்களுக்கு சொந்தமானவை என்பதை நாம் அறிவோமா? இதோ இன்று நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலுறுப்பினை சிதைத்து கட்டி விட்டார்கள். நாளை என்று போய்க்கொண்டே இருக்கிறது.
சிறு நீர் கழிப்பதே நரக வேதனையாக, தாங்க முடியாத வலியோடு, அதுவும் சொட்டு சொட்டாகத்தான் இருக்க வேண்டுமென்றால் அதை நினைத்துப்பார்க்க முடிகிறதா நம்மால்? ஆனால் அப்படித்தான் ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் பல கோடிக்கணக்கான ஆப்பிரிக்க பெண்கள். ஆங்கிலத்தில் Female Genitial Multilation என்றழைக்கப்படும் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் நிகழ்ச்சி ஆப்பிரிக்க நாடுகளில் புனித சடங்காக பெண்களின் மீது ஏவப்படுகிறது.
பெண்ணின் பாலுறுறுப்பை வெட்டியெடுப்பது மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது.
1. பாலுணர்வினைத்தூண்டும் பெண்ணுறுப்பின் ஒரு பகுதியை வெட்டியெடுப்பது
2. பென்ணுறுப்பின் பெற்புறத்தை வெட்டி எடுப்பது
3.ஒட்டு மொத்த பெண்ணுறுப்பினையே வெட்டி யெடுத்து விட்டு சிறு துளையை மட்டும் விட்டு விட்டு நூல் மூலம் தையல் போடுவது.
ஏன் பாலுறுப்பு சிதைக்கப்படுகிறது?
“பெண்கள் சைத்தானின் வடிவங்கள், அவர்களைப்பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும் . அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள், ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் / குறைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாயிருப்பார்கள்.”
ஒரு பெண் தான் ஒழுக்கத்தோடு வாழ்வதற்கு தன் உறுப்புக்களை இழந்து ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆணாதிக்கம் பெண்ணுறுப்பின் மீதான சிதைப்பை சரி என்கிறது. தான் பிறந்து வந்து அந்த பாதை மூடப்பட்டிருக்கும் வலியை ஒரு மனிதனால் உணர முடியாதா என்ன?
பாலுறுப்பு சிதைப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த என்னுடைய நண்பர் ஒருவர் “தயவு செய்து முடியவில்லை, நிறுத்துங்க” என்றார். அவர் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.இனி ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் இந்த நினைவுதான் வருமென்று சிலர் கவலைப்படலாம். நினைவுகளை
சுமப்பதற்கே கவலைப்படும் நாம் அந்த நினைவுகளை நடத்திக்கொண்டிருக்கும் அப்பெண்களின் உணர்வை புரிந்து கொண்டால் கண்டிப்பாய் இது கடினமாய் இராது.
———————————————————————————————————————————————————————–
ஆயிஷாவுக்கு இப்போது பருவ வயதாகி விட்டது. தினமும் சிறு நீர்கழிக்கும் துக்க காரியத்தை செய்து முடிக்கும்
வேதனையோடு காலத்தை கழித்துவிட்டாள். அவளின் தாய் அடிக்கடி சொல்லுவாள் “கல்யாணம் ஆனால் சரியாகிடும்”. அவளின் திருமணத்தின் பின்னர் பெண்ணுறுப்பின் மீதான் தையல் பிரிக்கப்பட்டது, மாப்பிள்ளைக்கென்றே புதிய சரக்கு அன்று படைக்கப்பட்டது. இனி அவளால் முன்னைப்போல அல்ல சற்று வலி குறைவாக சிறு நீர்கழிக்கலாம், ஆனால் வலி, வலிதானே! ஊனம் ஊனம்தானே. பிறந்த அவளின் செல்ல மகளின் பெண்ணுறுப்பை ஆவலாய் பார்க்கிறாள். தன் பெண்ணுறுப்பினை அவளுக்கு பார்த்ததாய் நினைவே இல்லை, “நம்முடைய உறுப்பும் இப்படித்தான் இருந்திருக்குமோ?”
—————————————————————————————————————————————————————————
வலைத்தளங்களில் “போர்னோ”ஈஸ்வரனை அன்றாடும் தரிசிக்கும் இளவட்டங்கள், இதோ இந்த பெண்ணுறுப்பினை பார்க்கத்துணிவார்களா? இந்த வீடியோக்களை 18+ என்றோ வயது வந்தவர்களுக்கென்றோ மிகவும் உங்கள் மனதை பாதிக்குமென்றோ குறிக்கப்பட போவதில்லை. காரணம் பாதிக்கட்டும் உங்கள் மனம் / நம் மனம்.
என்ன சிறு நீர் கழிக்கப்போகிறீர்களா? அதற்கு முன் இந்த வீடியோக்களையும் பார்த்து விடுங்கள்.
இங்கே தொடுப்பிற்காக தோழர் தமிழச்சியின் கட்டுரை உள்ளது. ஈராண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரை அது. நான் தேடி களைத்த நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் கேட்டவுடன் அக்கட்டுரைத்தொடுப்பை தந்த அவருக்கு நன்றி!!!
குறிச்சொற்கள்: ஆணாதிக்கம், ஆபாசம், ஆப்பிரிக்கா, பெண், பெண்ணுறுப்பு, போர்னோ, வெட்டப்படும் யோனி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
செப்ரெம்பர் 27, 2010
சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு
அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென தூற்றப்படலாம்
கலங்காதே மனமே!
புரட்சி ஒன்றே தீர்வு
விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி
போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும் எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை
சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்
குறிச்சொற்கள்: கதை, கதைகள், கலகம், கவிதைகள், குருசேவ், சிபிஐ, தா.பாண்டியன், பு மா இ மு, புஜதொமு விவிமு, புதிய ஜன நாயகம், புரட்சி, மகஇக
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
செப்ரெம்பர் 9, 2010
Incredible India ! – பெருமைப்படு இந்தியனே !
தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பலவகை வருவதுண்டு. ஒவ்வொன்றும் ஓவ்வொரு தினுசாக, பல விளம்பரங்கள் மக்களை மடையர்களாக நிலைநிறுத்தும், குறிப்பாக பெண்ணடிமைத்தனத்தை தூக்கி நிறுத்தும் சாதனங்களாகவே இருக்கின்றன. முக்கியமாக ஒரு விளம்பரம் அனைத்து ஊடகங்களிலும் வருகின்றது, அதுதான் Incredible india. “இந்தியாவுக்கு வாருங்கள், அதன் அழகை ரசியுங்கள் ” என்று
வெளிநாட்டினரை அழைப்பதை மட்டுமல்ல அவர்கள் வரத்தை மக்கள் அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென்று கூறுகிறது.
1. இரு வெளிநாட்டு பெண்மணிகள் இந்தியாவுக்கு வருகின்றார்கள், அவர்கள் பொருட்கள் வாங்குமிடத்தில் இந்திய ரவுடிகள் பிரச்சினை செய்ய ஆமீர்கான் வந்து “இவங்களால தான் உங்க பாக்கெட் நிறையுது, அவங்க நம்மளப்பத்தி தப்பா சொன்னா யாரும் வரமாட்டாங்க, நம்ம விருந்தாளிங்கள கேவலப்படுத்தறாங்க நீங்க என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க?” என கீதை ஓதுகிறார் உடனே பின்னர் மக்களுக்கு
ஞானம் பிறந்து இந்திய ரவுடிகள் அடித்து விரட்ட வெள்ளைக்காரப்பெண்மணிகள் நன்றி சொல்கின்றனர்.
2.ஆமீர்கான் தலைப்பிலேயே வருகிறார் ” நம்ம நாடு வளர்ந்துகிட்டு இருக்கு, மத்த நாடுகள் பார்க்குது, நம்ம நாட்டை நாமளே கேவலப்படுத்தலாமா?” ஆரம்பிக்கிறது விளம்பரம். வெள்ளைக்கார ஜோடி விமான நிலையத்திலிருந்து இறங்குகிறது, இறங்கியவுடன் ஒருவன் பாக்குபோட்டு எச்சிலை கீழே துப்புகின்றான், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம். அப்புறம் அந்தஜோடி இந்திய வானுயர்ந்த கட்டிடங்களை
படம் எடுக்க முனையும் போது ஒரு இந்தியக்காரி தின்று விட்டு வாழைத்தோலை வீசுகிறாள், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . அப்புறம் அவர்கள் காரில் பயணம் செய்யும் போது ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கிறான் அதை பார்த்து அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . மறுபடியும் நம்ம ஹீரோ ஆமீர் வந்து ” நம்ம மானத்தை நாமதான் காப்பாத்தணும் என்கிறார்”

இன்கிரெடிபிள் இந்தியாவின் அனைத்து விளம்பரங்களிலும் ஒரு சுலோகன் இருக்கிறது அதுதான் “அதிதி தேவோ பவ” அதாவது விருந்தினர்கள் கடவுளைப்போன்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். அம்மொழி சமஸ்கிருதம் என்பதால் பார்ப்பனர்கள் ஆதிகாலத்தில் வந்தேறிகளாக குடியேறும் போதும் திராவிடர்கள் எதிர்த்து போராடும் போது நாங்கள் உங்கள் விருந்தாளிகள், நாங்கள்தான் கடவுள் என்று பீலாவோடு ஆரம்பித்திருக்கலாம் தங்கள் புரூடாக்களை, அவ்வாக்கியத்தையே இன்னமும் தொடரச்சொல்கிறார்கள். அதற்காக இப்போது ஊர்
சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினரெல்லாம் ஆக்கிரமிக்க வந்திருக்கிறார்களா? என்பதல்ல .

Incredible India – இந்தியனென்பதில் பெருமை கொள்
Incredible India என்பதற்கு அகராதியில் hard to believe, unbelievable, absurd, inconceivable என பல அர்த்தங்கள் வருகின்றன, நாம் சுருக்கமாக ” வியத்தகு இந்தியா “ என எடுத்துக்கொள்ளலாம். வியக்கத்தக்க வகையில் என்ன இருக்கிறது இந்தியாவில் ? “வெளிநாட்டினரால்தான் நாடு முன்னேறுகிறது, அவர்கள் சுற்றிப்பார்க்க வருவதால் பெரும் வருவாய் நாட்டிற்கு கிடைக்கிறது, அதனால் அவர்கள் நமது கடவுளைப்போன்றவர்கள்” . இந்தியா என்பது நாடே அல்ல , அது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடம் சில அறிவிலிகள்
அறிந்ததே, பல அறிவாளிகளுக்கு தெரியாததே.
ஒரு நாட்டிற்கு எதனால் வருவாய் வரவேண்டும்? குறிப்பாக இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு வேளாண்மை முக்கியம்.அடுத்தாக ஆலைத்தொழில்கள் மூலமாக வருவாய் வரவேண்டும். வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றுவதனூடாகவே விவசாயிகள் வாழமுடியும். அதற்கு விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பது விவசாயியாக இருக்கும் நிலை தேவை. எண்ணை முதல் சிமெண்ட் வரை எல்லாப்பொருளுக்கும் முதலாளியால் விலை நிர்ணயிக்கப்படும் இந்தியாவில் தானியத்தை விளைவிப்பவன் அதற்கு விலையை நிர்ணயம் செய்யமுடியாது. இது வியக்கத்தக்கசெயல் அல்லவா?

இந்த பாரதநாட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆலைகள் இழுத்து மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் உதிரிகளாக திரிந்து கொண்டிருக்கிறர்கள். அடுத்த நாள் சோற்றுக்கு உத்திரவாதமின்றி நாளை வேலை கிடைத்தால்தான் சோறு நிச்சயம் என்ற அளவில் தொழிலாளி சென்று கொண்டிருக்கிறான். முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் வேலையை
விட்டு நீக்கப்படுகிறார்கள், அதற்கெதிராக போராடினால் போலீசு மண்டையை உடைக்கிறது. சென்னையில் உள்ள நோக்கியாவில் பணி புரியும் பல தொழிலாளிகள் நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட போது, அவர்கள் ஆடிவிரதம் இருந்ததால்தான் மயக்கமடைந்தார்கள் என நோக்கியா தனது கூற்றை உலகத்திற்கு பறைசாற்றியதை காணும் போது நமக்குத்தோன்றுகிறது , உண்மையிலேயே இது வியக்கத்தக்க இந்தியாவே!
பட்டினிக்கொடுமையில் இந்த லோகத்திலேயே முதலிடமும் நம்ம இந்தியத் திருநாட்டுக்கே (இதுலயாவது நெம்பர் 1 ஆச்சுன்னு சந்தோசப்படவேண்டியதுதான்). பசியினால் நஞ்சானது தெரியாமல் மாங்கொட்டைகளை தின்று செத்துப்போன பழங்குடிகள் ஏராளம். அதற்கு அரசு சொன்னது “மாங்கொட்டையில் சத்து அதிகம்” இப்படி ஒரு கருத்தை வியக்கத்தக்க நாட்டில்தானே தெரிவிக்க முடியும். இன்னும் எத்தனையோ வியக்கத்தக்க விசயங்கள் இருக்கின்றன இந்தியாவில். கனிமவளங்களை சூறையாடுவதற்காக, அதை பன்னாட்டு
நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொண்டு கொல்ல எத்தனிக்கும் இந்த வியத்தகு இந்தியாவில் பிறக்க இந்தியர்கள் பெருமைப்பட்டுத்தானே ஆக வேண்டும்.
டெள கெமிக்கல் நிறுவனம் அமெரிக்காவில் எண்ணை எடுக்கும் போது நடந்த விபத்தில் செத்துப்போன நீர் நாய்களுக்கு நட்ட ஈடாக கொடுக்கப்பட்ட தொகையானது, டெள கெமிக்கல் நச்சுவாயுவால் பல்லாயிரக்கணக்கில் செத்துப்போன போபால் மக்களுக்கு தூக்கியெறியப்பட்ட நட்டஈடைப்போல இருமடங்காகும். கோக், பெப்சி போன்ற குளிர்பான கம்பெனிகள் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குளிர்பானத்தின் மீது எவ்வளவு சதம் பூச்சிக்கொல்லியை கலந்திருக்கிறோம் என குறிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும்
தங்கள் குளிர்பானங்களில் குறிக்கவேண்டிய அவசியமில்லை என்று பதில் சொல்ல முடிகிறது. இப்படி ஒரு பதிலை, இப்படி ஒரு கேவலத்தை , இப்படி ஒரு அடிமைத்தனத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது ஆனால் ராமர் பிறந்த புண்ணிய பூமி ஏற்றுக்கொண்டிருக்கிறதெனில் இது வியக்கத்தக்க இந்தியா இல்லையா ? ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணானோரை கொன்று அவர்கள் ரத்தத்தை நக்கிக்குடிப்பதும் இந்தியாதான்.
நேபாளத்தில் மக்களாட்சி மலருவதற்கெதிராக தன் பார்ப்பன நரித்தனத்தை நிகழ்த்துவதும் இந்தியாதான்.
இந்தியாவில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா?
பச்சைப்பசேலெசன்ற காடுகள், அகன்ற புல்வெளிகள், புலிகள் விளையாடும் சுந்தரவனக்காடுகள், எது கானல் எது உண்மை எனத்திணறவைக்கும் பாலைவனங்ங்கள், இடி போல் தலையில் கொட்டும் அருவிகள், சிலுசிலுவென வீசும் தென்றல், கற்களை முகங்களாய் கொண்ட மலைகள், மலைகளின் சுனைகள் , சுனைகளில் இருக்கும் இனிக்கும் தண்ணீர்…………………..
………….. இது மட்டுமா?
நாம் அடிக்கும் விசிலுக்கு பதில் குரல் கொடுக்கும் குருவிகள், “காட்டுமிராண்டிப்பயலுங்க” என நம்மை வேடிக்கைப்பார்க்கும் குரங்குகள், வேலையே செய்யாத ஆண் சிங்கங்கள், கூட இருக்கும் பாவத்திற்காக இரையை தேடிவரும் பெண்சிங்கங்கள், தன் குட்டியை யாராவது புகைப்படம் எடுப்பது தெரிந்தால் கூட அவர்களை பல கிலோமீட்டர் ஓட விரட்டும் யானைகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், சண்டையிடும்
கிளைமான்கள், விரட்டினால் மிடுக்காய் நிற்கும் கடத்திகள் ……………………………… எல்லாம் இருக்கிறது இந்தியாவில்,
ஆனால் இந்தியர்களுக்கு இருக்கிறதா? இல்லை எல்லாம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. காத்துக்கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு முதலைகள்.
காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்படும் இந்தியாவின் காட்டாட்சி அதனூடாக ராணுவம் செய்யும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் நாசவேலைகளை எதிர்த்து போராடும் மக்களின் போர்க்குணம், நியாம்கிரி மலையின் ஒரு கல்லைக்கூட பெயர்க்க விடமாட்டோம் என போரிடும் தண்டகாரண்ய பழங்குடியின மக்கள் , அவர்களுடன் இணைந்து போரிடும் மாவோயிஸ்டுகள், இந்தியா முழுக்க மக்களுக்காக போரிடும் போராளிகள் என அனைத்தும் உண்மையிலே வியக்கத்தக்கது மட்டுமல்ல பெருமைப்படத்தக்கது . நாட்டை சுற்றிப்பார்க்க வரும் வெள்ளையினத்தவர்கள் இம்மக்களை பார்க்க முடியாது.
வெள்ளையினத்தவர்களின் வருகைக்காக, அன்னிய மூலதனத்தின் வருகைக்காக மக்கள் அழிக்கப்படவிருக்கிறார்கள். ஆனால் போராடும் மக்கள், போராளிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், அவர்கள் ராவணனின் வாரிசுகள். ஒவ்வொரு துளி ரத்தம் கீழே விழும் போதும் ஆயிரம் போராளிகள் பிறப்பார்கள்.
“அதிதி தேவோ பவ” – வெளி நாட்டு விருந்தினர்களே! வாருங்கள் சுற்றிப்பாருங்கள், இந்திய அரசின் கோரமுகங்களை உலகிற்கு எடுத்துக்கூறுங்கள். இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாய் களத்திலிறங்குங்கள் இல்லையெனில் உங்கள் நாட்டு முதலாளிகளை பத்திரமாக இருக்கச்சொல்லுங்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தைப்பார்க்கும் போது நீங்கள் அடுத்த முறை வரும் போது அவர்களின் பிணங்களுக்கு
மலர்ச்செண்டு வரக்கூட நேரலாம்.
குறிச்சொற்கள்: "அதிதி தேவோ பவ", அசாம், இந்திய அரசு, இந்திய ராணுவம், இந்தியா, காஷ்மீர், கிளர்ச்சி, கேவலம், தற்கொலை, பிணம், போராட்டம், மணிப்பூர், மன்மோகன், மறுகாலனியாதிக்கம், வறுமை, வல்லரசு, விருந்தினர்கள், விவசாயம், விவசாயி, வெட்கம், வெளி நாட்டினர், வெள்ளையினத்தவர்கள், Incredible India
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஓகஸ்ட் 30, 2010

2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு டிவியைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைகழக மாணவ, மாணவிகள் வந்த பேருந்து அதிமுக குண்டர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த 3 மாணவிகளையும் வேண்டுமென்றே திட்டமிட்டு கொளுத்தி கொன்று போட்டார்கள் அந்த அதிமுக பாசிஸ்டுகள்.
அடுத்த நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது ஆங்காங்கே பேருந்துகள் அதிமுக குண்டர்களால் மறிக்கப்பட்டது, பல குண்டர்கள் பேருந்துகளை சேதப்படுத்தினார்கள். ஒருவன் கருணாநிதி தே……….மவன் என்று பேருந்தில் எழுத , மற்றொருவன் கருணாநிதியின் தாயை மிகவும் கொச்சையாக திட்டிக்கொண்டு
போனான். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.
நாங்கள் கல்லூரிக்கு பயணமானோம், வகுப்பில் எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். வேதியியல் ஆசிரியர் வந்தார். அவர் எப்போதும் 60 நிமிட வகுப்பு நேரத்தில் கடைசி 10 நிமிடம் அன்றைய செய்திகளை கேட்பார் மாணவர்களிடம். அவர் அன்று பாடம் எதுவும் எடுக்க வில்லை, ” மாணவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு கொடூரம், நாய்கள், பரதேசிப்பசங்க என்றார், இந்த பாழாப்போன அரசியல் மாணவர்களை கொன்றுவிட்டது, நமக்கு அரசியலே வேண்டாம்” என்றார். சற்று நேரத்தில் அலுவலக உதவியாளர் சுற்றறிக்கையை கொடுக்க, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
அன்றும் அடுத்த சில நாட்கள் இதேதான் செய்தியாய் தொடர்ந்தது ஊடகங்களில், பல மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் சோகமாய் என்ன செய்வதென்று தெரியாமல் சடங்குக்காக என்று மவுன ஊர்வலம், அமைதிப் போராட்டம் என நடத்தினார்கள். ஆனால் எனக்குத்தெரிந்து எந்த அதிமுக கொடிக்கம்பமோ, அதிமுக அலுவலகங்களோ தாக்கப்படவில்லை.
மக்கள் தாரைதாரையாக கண்ணீர்விட்டார்கள். அதிமுகவின் ஜெயா டிவியோ எல்லாம் டூப் என்றது, சன் டிவி தனது ஆட்களை வைத்து எடுத்த சினிமா என்றார்கள் அதிமுகவினர். கோகிலவாணியின் தந்தை உட்பட பலியான அனைத்து மாணவிகளின் பெற்றோர்களும் ஊடகங்களில் தீனிக்காக காட்டப்பட்டார்கள். யாரும் இதற்கு காரணமான அதிமுகவை தடை செய்யக்கோரவில்லை, பல நடு நிலை நாயகர்கள் சொன்னார்கள் “யாரோ செஞ்ச தப்புக்கு கட்சி என்ன செய்ய முடியும்?”
வழக்கு சேலம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது 3 பேருக்கு தூக்கும் 25 பேருக்கு சிறையும் கொடுத்தது நீதித்தாய். பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். அங்கு 2007-ல் தூக்கு உறுதி செய்யப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றமும் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.
கடைசியில் நீதி வென்றிருக்கிறதா?
கடைசியில் மட்டுமல்ல முதலில் கூட மக்களுக்கான நீதி வெல்வதில்லை, ஏதோ சாராயத்திற்கு ஊறுகாய் போல தவிர்க்க இயலாத தீர்ப்புக்கள் இப்படி வெளிவருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படும் போது மக்களின் மீது வன்முறை ஏவிவிடப்படுகிறது. மக்கள் குடி நீருக்காக, விவசாயம் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போது அவர்ளின் மண்டையை பிளக்கும் போலீசு மக்கள் மீது வன்முறையை ஏவிவிடும் இந்த பாசிச ரவுடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. “தயவு செய்து” கைதாக சொல்கிறது. மாவோயிஸ்டு கட்சியைச்சேர்ந்த சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை தரப்படுகிறது. ஏன் என்றால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாய் என பதில் வருகிறது.
யார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது? கருணா ஆட்சிக்கு வந்தால் செயாவை பிடித்து உள்ளே போடுவது, செயா வந்தால் கருணாவை தூக்கி போட்டு மிதிப்பது, இந்த தெரு நாய்ச்சண்டையில் மக்கள் தலைகள் உடைக்கப்படுவதில்லையா? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற மோடி அத்துவானி கூட்டணி இன்று அரியணையில் ரத்தம் குடிக்க நாக்கைத்தொங்கபோட்டு கொண்டு அலைகிறதே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? அரிசிவிலை, பருப்பு விலை, பெட்ரோல் விலை எல்லாம் ஏகத்துக்கும்
எகிறிக்கிடக்கிறதே ! இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் நொடிந்து தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டார்களே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?
இந்நாட்டின் கனிமவளங்களை சூறையாட இந்திய அரசால் நடத்தப்படும் போரினால் எத்தனை மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள் ? கொல்லப்படவிருக்கிறார்கள்? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?பட்டினியில் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறதே இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? இவ்வளவு ஏன் 26 வருடம் கழித்த வந்த போபால் தீர்ப்பின் யோக்கியதையை நாடறியும், 20000க்கும்
மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆண்டர்சனுக்கு விடுதலை, காரணமான எந்த அதிகாரியும் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. இதுதான் இந்த நீதியின் யோக்கியதை.
ஏன் போலீசு வெறியன் பிரேம்குமாரால் பாதிக்கப்பட்ட நல்லகாமனின் வழக்கின் கதை சுபமாக உச்ச நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது, ஆம் “ யோவ், 25 வருசத்துக்கு மேல எதுக்குயா இந்த கேச இழுத்துகினு இருக்கீங்க” என்ற பொருமலோடு பிரேம் குமார் , நல்லகாமன் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மனித உரிமை போராளி அய்யா நல்லகாமனின் போராட்ட வரலாற்றை நாம் அறிவோம். இத்தனை ஆண்டு காலம் தன் குடும்பசொத்தையெல்லாம் விற்ற அந்த நல்லகாமனுக்கும், அவரின் வழக்கை ஏற்று நடத்திய மனித உரிமை பாதுகாப்பு மையமும் கடந்து வந்த பாதை நெடியது.
அது சொல்வது இதுதான் ” இது மக்களுக்கான நீதி அல்ல, அதிகாரவர்க்க ,பார்ப்பன பனியா, முதலாளிக்கானது”
தெருவிலிறங்கி தண்டனை கொடுப்போம் !
இப்போது வந்திருக்கும் இந்த பேருந்து எரிப்பு தீர்ப்பினை பற்றி பேசுவோம். 3 மாணவிகள் திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டிருக்கிறார்கள். அச்சம்வத்தில் ஈடுபட்ட எல்லோருக்குமே மூவர் உள்ளே இருப்பது தெரிந்துது இருக்கிறது. அக்கட்சியின் பாசிசத்தலைவி இதை திமுகவினர் செய்ததாக சொன்னார், அக்கட்சியினரும், அவர்களின் தொலைக்காட்சியோ இதை நாடகம் என்றது. குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? என்பது கேள்விக்குறியே? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மன்னிக்க, ஓட்டைகளில் உள்ள சட்டங்கள் வழியே அவர்கள் கருணை மனு, இதர வெங்காய மனுக்களை நீட்டிக்கொண்டி திரிவார்கள்.
இப்படியே இழுத்தடிக்கப்பட்டு அவர்கள் தண்டனை காலத்திற்கு முன்னரே செத்தும் போகலாம் அல்லது எதுவும் நடக்கலாம்.மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மட்டுமல்ல, இந்த பாதகத்திற்கு தலைமை தாங்கிய புரட்சித்தலைவியும்தான். அதிமுக என்ற பாசிசக்கூடாரமே தடை செய்யப்பட வேண்டும்.
அப்சல் குரு, அஜ்மல் கசாப் என்ற இரு பலியாடுகளை உடடே தூக்கிலேற்றக்கோரி, முசுலீம் கட்சிகளை தடை செய்யத் துடிக்கும் தேசியத்தின் வாய்கள் இப்போது இந்தியா முழுக்க வேண்டாம் தமிழகத்தின் ஏதாவதொரு மூலையில் அதிமுகவை தடை செய்யவும், 3 பேரை உடனே தூக்கில் போடக்கோருவார்களா? பல்லாயிரக்கணக்கான ஆண்டர்சனை அன்று மக்கள் கையில் கொடுத்திருந்தால் அவர்கள்
அவனை அப்போதே நரகத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்திருப்பார்கள், ஆனால் காங்கிரசோ அவனை அமெரிக்க சொர்க்கத்திற்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்தது. இவர்கள் இதை செய்வார்கள் என்றால் அது குருட்டு நம்பிக்கையாகவே இருக்கும்.
குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஎச்பி போன்ற அகில இந்திய பாசிஸ்டு கட்சிகளும், தமிழகத்தை பார்ப்பன மயமாக்குவதையே லட்சியமாக கொண்டுள்ள இந்து முன்னணி, அதிமுக ……………………கட்சிகளும், இந்திய விவசாயத்தினை , தேசிய தொழில்களை வேரறுக்கும் ஆளும் வர்க்க கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு தலைமை தாங்கும் அனைத்து பாசிச பயங்கரவாதிகளுக்கும் அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும். இதை நாம் தெருவிலிறங்கி வாளேந்தித்தான் சாதிக்க முடியுமே தவிர வேறெதாவது வழி இருக்கிறதா என்ன?
குறிச்சொற்கள்: அதிமுக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கலகம், கொலை, கோவை, செயலலிதா, தர்மபுரி வழக்கு, நக்சல் சுந்தரமூர்த்தி, நல்லகாமன், மனித உரிமை பாதுகாப்பு மையம், மரண தண்டனை, மாணவிகள் எரிப்பு, வேளாண் கல்லூரி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஓகஸ்ட் 30, 2010
குறிச்சொற்கள்: 1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஓகஸ்ட் 12, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5
தூணிலும் துரும்பிலுமேன்?
மனித ஜீனிலும் திணிக்கப்பட்ட
லாபம்
குறிச்சொற்கள்: 1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 10, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4

கருத்துப்படங்கள் - 4
பாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்
மக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்?
குறிச்சொற்கள்: 1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 3, 2010
போபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்
கருத்துப்படங்கள் -3

கருத்துப்படங்கள்-3
சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்
இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்?
குறிச்சொற்கள்: 1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 30, 2010
போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

போபால் விசவாயுப் படுகொலை-2
தாயே !
உன் குரல் என்னை சுடுகிறது
எங்கள் அடிமைத்தனத்தை
இன்னும் சுட்டுப்பொசுக்கு
குறிச்சொற்கள்: 1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 26, 2010
போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

போபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1
ஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம் அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா?
குறிச்சொற்கள்: 1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 21, 2010
தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல
அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள் வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. சுமர் 2000 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிற்சாலை என்றாலே தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்றாலே சச்சரவு என்றிருக்கும் பல
லட்சக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இதுவொன்றும் விதிவிலக்கல்ல. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலைக்கு செல்லும் ரோடு அது வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அரிவாள் போலவே இருக்கும்.
இந்த தொழிற்சாலையில் பெரிய சங்கம் என்றால் அது சிஐடியூ(மத்திய சங்கம்) சங்கம் தான். தொழிலாளர்களின் பிரச்சினை என்றாலே மத்திய சங்கம் தான் முன் வந்து பைசல் செய்யும். ஏதாவது பிரச்சினை அதிகமென்றால் போதும் “தொழில் அமைதியை கெடுக்காதே” மத்திய சங்கத்தால் போஸ்டர்
ஒட்டப்படும். அவ்வளவுதான் முதலாளிகள் “ஆடி”ப்போய் விடுவார்கள். சங்கத்தின் தலைவர் அடிக்கடி சொல்லுவார் நம்ம சங்கம் இங்க வலுவா இருக்குறதால தான் நமக்கும் முதலாளிக்கும் அதிகமா பிரச்சினை வரதே இல்லை”.
தீபாவளி காலங்களில் போஸ்டர்கள் மத்திய சங்கத்தால் ஒட்டப்படும். வர்க்கமாய் தொழிலாளர்களை அணிதிரட்டச்சொல்லி அழைப்பு விடுக்கும். கடந்த முறை கூட போனஸ் பேச்சு வார்த்தையின் போது நம்ம தோலர் தானே சிறப்பாக செய்து முடித்தார். ஓவ்வொருமுறையும் பண்டிகைகளின் போதுபோனஸ் கோரி தோலர்களின் பணி சிறப்பாக இருக்கும். நான் கூட இந்த சங்கத்துல தான் இருக்கேன்.எனக்கு வயது 30 தான்
ஆகுது. நான் கேட்பேன் மத்திய சங்க தோலர்கள் கிட்ட “வித்யாசமா போராட்டம் பண்ணக்கூடாதா?” அதுக்கு பொறுப்புத்தோலர் சொல்வார் ” தோழர் உங்க வயசுதான் என்னோட அனுபவம், எதுக்கும் அவசரப்படக்கூடாது”.
கடந்த முறை போனஸ் பிரச்சினையின் போது சுமுகமாய் முடித்து விட்டு வந்த போது என்னிடம் சொன்னார் “அவசரப்பட்டா வெற்றிய சாதிச்சு இருக்க முடியுமா?” எப்பவாவது வேலை நிறுத்தம் என்று மத்திய சங்கம்
சொன்னால் கூட சிஐடியூ-ன் பல தோலர்கள் தவறாமல் வேலைக்கு வந்து விடுவார்கள். ஆரம்பத்தில் நான் எல்லா போராட்டங்களில் கலந்து கொள்வேன். மற்ற தோலர்களின் வர்க்க உணர்வு எல்லைக்குள் இருப்பதை அறிந்து நானும் அளவோடு இருக்கிறேன். “எதுவா இருந்தாலும் அளவோடுதான்ன்னு சும்மாவா சொன்னாங்க?”
அன்னைக்குகூட பேருந்தில் நானும் சங்கத்தோலரும் பயணித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிறுத்தத்தில்ரெண்டு பசங்க ஏறினார்கள் பேருந்தில் கையில் புத்தகங்களோடு.”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………..” என ஆரம்பித்த அந்த ஒல்லியான, கருத்தப்பையன் உலக நடப்பு, இந்துமதம், போலி கம்யூனிசம் என்று எனக்கு புரியாத பலவற்றையும் பேசிக்கொண்டே போனான் கடைசியாக புதிய ஜனநாயகம்ன்னு ஒரு புத்தகம் அதையும் வித்தாங்க. அந்தப்பபையன் என்கிட்ட கேட்ட போது நான் 7 ரூவா கொடுத்து அப்புத்தகத்தை வாங்கினேன்.
பேருந்து நகர்ந்தது. என்னவோ தோலர் செமக்கடுப்பில் இருந்தார். நான் கேட்டதுக்கெல்லாம் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தார். புத்தகத்தின் தலைப்பில் போலிக்கம்யூனிஸ்டுகளின் துரோகம் என்று போட்டிருந்தது. அட நம்ம தோலர்(அச்சுதானந்ந்தன்) படம் போட்டிருந்தது. நான் தோலரிடம் கேட்டேன்”தோலர் அவங்க யாரை போலி கம்யூனிஸ்டுன்னு சொல்றாங்க?” “தெரியலை ” என்றார். “என்னா தோலர் இப்புடி சொல்றீங்க? நம்ம அச்சு தோலர் போட்டோவை போட்டுருக்காங்களே”
” நீங்க மொதல்ல எதுக்கு அந்த புக்க வாங்குனீங்க, அவங்க நக்சலைட்ஸ், அவங்க கருத்த ஏன் நீங்க புடிச்சுகிட்டு தொங்கறீங்க?”,
“தீவிரவாதிங்க எல்லாம் பகிரங்கமா பேசுறாங்களா, போலீசு இவங்கள பிடிக்காம இருக்கு, அவன் சொல்றபடி பார்த்தால் கேரளாவில அச்சு தோலர் இனவெறி பிடிச்ச நபரா?,ஈழப்பிரச்சினையில இந்திய போலி சனநாயகத்தை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் கூட பண்ணல” நான் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன்.
மிகவும் குழப்பமான தோலர் சொன்னார் “முதல்ல சங்கத்த மதிக்க பழகுங்க, ஏதோ ரெண்டு தீவிரவாதிங்க கொடுக்கற புத்தகத்த வச்சு பேசாதீங்க? நீங்க ஈழத்துக்கு ஆதரவா என்ன பண்ண முடியும்? அதுக்கு நம்ம கட்சி சீபீஎம் இருக்கு. அவங்களுக்குத் தெரியாததா உங்களுக்கு தெரியும்? “. இந்த ஜனநாயகத்தில நம்பிக்கையில்லாதவங்க அவங்க, லால்கரில கூட மாவோயிஸ்டுங்க மக்களை பகடைக்காயா பயன் படுத்துனாங்களே, தெரியாதா? என்ன?”
“போன வாரம் ஒரு பையன் பஸ்ஸில சொல்லிக்கிட்டு இருந்தான் “மார்க்சிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களை கொன்று நிலங்களை இந்தோனேஷியாவின் சலீம் குழுமத்திற்கு கொடுக்க நினைக்கிறது, மக்கள் போராட்டத்தை பாசிசமாய் அடக்குகிறது……………….
”
நான் முடிப்பதற்குள் அவர் சொன்னார் “முதல்ல இதுமுதலாளித்துவ நாடு சோசலிச நாடு அல்ல, இதுக்கேத்தபடி தான் வாழ வேண்டும், உங்களுக்கு போனஸ் வாங்கி கொடுத்தது யார் அந்த மாவோயிஸ்டா ,சங்கமா?,” அவர் கடைசியாய் கேட்ட கேள்வி என் வாயை அடைத்தது.அப்புறம் தோலரிடம் அது சம்பந்தமாக எதுவும் கேட்பதில்லை.
ஆனால் இப்போது அந்த தீவிரவாத புத்தகங்களை அதிகமாய் என்னோடு வேலை செய்யும் ராஜா படித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகமாய் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வேறு சிலர் சொன்னார்கள். என்னிடம் கூட பலமுறை கேள்வி கேட்டிருக்கிறான். நான் உட்பட பலரும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டோம். அவன் இப்போது தனியாளாக ஆலை நுழைவாயிலில் புத்தகமெல்லாம் விற்கிறான். சிலர் வாங்குவார்கள். பொறுப்புத்தோலருக்கு அவனைப்பார்த்தாலே செம எரிச்சலாக இருக்கும் அவனை பற்றி எங்களிடம் திட்டிவிட்டுதான் வருவார். ஆனால் மற்ற சங்கங்களின் தலைவர்களோடு நம்ம தோலர் நெருக்கமாக இருப்பார். ஏன் பி.எம்.எஸ் (bharathiya masthur union) சங்க மாநாட்டுக்கு தோலர்தான்
வாழ்த்துரை சொன்னார்.
திடீரென்று எங்கள் ஆலையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். சுமார் 60 பேர் வரை தூக்கி விட்டனர், அந்த ராஜாவுக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.அதில் நம்ம தோலருக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எல்லா சங்க நிர்வாகிகளும் கூடினார்கள். வழக்கம் போல இதற்கும் மத்திய சங்கம் தலைமை வகிக்க, அல்லும் பகலும் என்ன வகையான போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. வந்திருந்த ஒருவர் சொன்னார்
”
ஓசூர்- ல யாரோ துடைப்பக்கட்டை, செருப்பு எடுத்துக்கிட்டு போராடுனாங்களாமே அப்புடி பண்ணுவமா தோலர்”
பொறுப்புத்தோலர் சொன்னார்”சட்டம் ஒழுங்க பாதிக்குற மாதிரி எதுவும் செய்யக்கூடாது, என்ன செய்தால் முதலாளி பயப்படுவானோ அப்படி போராடணும். நான் எதுக்கும் சீபீஎம் மாவட்டச்செயலாளர் கிட்ட கலந்து
ஆலோசனை பண்ணிக்குறேன்”. என்றபடி கிளம்பியவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்.
” நாளைக்கு நாம நடத்துற போராட்டம்,இந்த முதலாளிக்கு மட்டுமில்ல, உலக முதலாளித்துவத்துக்கே குலை நடுங்கும், அகில உலக பாட்டாளி வர்க்கமே பெருமைப்படுற மாதிரி ஒரு சிறப்பான போராட்டத்தை நாளைக்கு முன்னெடுக்கப்போறோம். இப்ப நான் சொன்னா முதலாளிக்கு தெரிஞ்சுடும், தோலர்களே நீங்க நாளைக்கு தயாரா வாங்க எதுக்கும் ” நான் எப்போதுமே தோலரின் கண்களில் அப்படி ஒரு நெருப்பைபார்த்ததில்லை”
சின்னதாய் கவிதை தோன்றியதெனக்கு
உன் கண்கள்
நாளை வெடிக்கும் எரிமலை
உடைபடட்டும் முதலாளித்துவ பணமலை
தொழில் அமைதியே தொழிலாளர் நலன்
உயர்த்துவோம் செங்கொடி
சுத்தியலறிவாள் நட்சத்திரத்தோடு
ஆண்டவனே கருணைக்காட்டு
அழிந்து போகட்டும் அடக்குமுறைகள்
எனக்குத்தூக்கம் வரவில்லை, நாளைக்கு என்ன வகையான போராட்டம் நடக்கும்” ஒரு வேளை ஆலையை இழுத்து மூடுவாரா தோலர்? இல்லை முதலாளிக்கு அடிவிழுமா? ச்சே ச்சே அவர் அப்படி சட்டத்துக்குவிரோதமாக செய்ய மாட்டார். யோசனையிலேயே தூங்கிப்போனேன். காலையில் பூஜை புணஸ்காரங்களை முடித்தபடி மனைவியிடம் சொன்னேன். அவளோ “பாத்துங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு தள்ளி நின்னுக்கோங்க, போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணுனா நான் பஸ்ஸ¤க்கு வந்தேன்னு பொய் சொல்லுங்க,
அரெஸ்ட் ஆயிடாதீங்க, யார் எப்புடி நாசமா போனா நமக்கென்ன? சொல்றத நல்லா புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்க என் மனமோ தோலரின் வித்யாசமான போராட்டத்தைப்பற்றியே லயித்துப்போனது.
பேருந்திலிருந்து இறங்கினேன், ஆலைக்கு செல்லும் வழியெங்கும் போஸ்டர்கள் முளைத்திருந்தன. அதில் நூதன போராட்டம் என்று இருந்தது. நான் நினைத்தேன் “நம்ம தோலர் உஷார் தான் எதிலேயும்”.
போராட்டத்தை ஆரம்பித்து வைப்பவர் என்று சீபீஎம் மாவட்டச்செயலாளர் பெயர் போட்டிருந்தது. “சரி இன்னைக்கு எப்படியோ போர்க்களமாகிவிடும்”
ஆலையை நெருங்கினேன், போராட்டம் இன்னும் அரை மணி நேரத்தில் துவங்கப்போவாதாய் பொறுப்புத்தோலர் சொன்னார். எனக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது. அவர் என்னிடம் வந்து “இங்க பாருங்க தோழர், இது முதல் கட்டப்போராட்டம் தான் இதிலே மொத்தம் 30 பேர் மட்டும் தான்
கலந்துக்கப்போறோம், அதில நீங்களும் ஒண்ணு” எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
நான் மறுப்புச்சொல்ல வாயெடுத்தேன் . “மறுக்காதீங்க தோழர், இப்படி மறுத்தா எப்படி புரட்சி வரும் , இப்படி தயங்குனா எப்படி ரஷ்யாவில லெனின் புரட்சிய நடத்திக்காட்டி இருப்பார்? நாம் தொழிலாளர் வர்க்கம் என்ற படி அவர்
மைக்கில் 30 பேர் பேரையும் அறிவித்து விட்டார்.எங்கள் 30 பேருக்கும் மாலைகள் போடப்பட்டன. நாங்கள் பந்தலின் முன்னே வந்து கோஷங்கள் போட்டோம்.
மாவட்டசெயலாளர் கட்சி அவருக்கு ஒதுக்கியிருக்கும் சுமோவில் வந்தார். எங்களை பெருமிதத்தோடு பார்த்துவிட்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிகர நடடிக்கைகளைப்பற்றி கனல் தெறிக்க பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்”இப்போராட்டம் உலக முதலாளித்துவத்துக்கு மரணத்தைப் பரிசாய்
தரும்”நாங்கள் 30 பேரையும் சுற்றி கோஷம் போட்டபடி இருந்தார்கள். முதலில் நான் தான் நின்றுகொண்டிருந்தேன். நான் என் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவேன், ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது?
சீபீஎம் மாசெ வந்தார் என்னிடம் “பரவாயில்லையே தோழர் சின்ன வயசில ரொம்ப துணிச்சலான முடிவு” என்றபடி கையில் சிறிய கத்தியை எடுத்தார். என் தலைக்கருகில் கொண்டு வந்தார்.அய்யோ என்ன நடக்கப்போகிறதெனக்கு? ஒருவேளை ரத்தம் சிந்தபோகிறேனா? இல்லை என் ரத்தத்தை அவர் வெற்றித்திலகமாக இட்டுக்கொள்ளப்போகிறாரா? இல்லை கையை கிழித்துக்கொள்ளும் போராட்டமா?
அய்யோ எனக்கு பயம் அதிகமாகி நடுங்கினேன், கண்களை இறுக்கி மூடினேன். அவ்வளவு தான் இவ்வுலகத்தைகடைசியாய் பார்க்கிறேன் என நினைத்துக்கொண்டேன். மாசெ தோலர் என் தலையின் கையை வைத்தார். தலையில் தன்ணீர் தெளிக்கப்பட்டது. “அய்யோ என்ன நடக்கபோகிறது”
மாசெ தோலர் சிறிய கத்தியால் என் தலையில்………………………………………… …….எடுத்தார். கண்ணைத்திறந்தேன். ரத்தத்துளிகள் கத்தியில் இருந்தது. எனக்கு டெட்டால் வைத்தார்கள்.முழக்கங்கள் திமிறின, பொறுப்புத்தோலர் பேசினார்”இதோ இந்த முதலாளித்துவத்துக்கெதிராக புரட்சிகரமான முறையில் நமது தோழர்கள்………………….. போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்கு இந்த ஆலை நிர்வாகம்
குறிச்சொற்கள்: ஆலை, கதை, கதைகள், கவிதைகள், சிஐடியூ, சிபிஎம், சுமோ, நக்சல், புஜதொமு, புதிய ஜனநாயகம், போராட்டம், போலி கம்யூனிஸ்டுகள், மொட்டையடிக்கும் போராட்டம், CPI, CPM, DYFI
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
ஜூலை 13, 2010
இது ஒரு காதல் கதை
காதலனா ? தாலியா?
நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. எங்களில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக அப்படி ஒரு நெருக்கம். சொல்லப்போனால் நாங்கள் எல்லாருமே அரசியலறிவில் புதியதாய் நுழைந்திருந்தோம். நாம்இப்போது பார்க்கப்போவது மற்ற இருவரைப்பற்றியல்ல அதோ அவர்தான் கதிர் . அவருக்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது ஆனாலும் நாங்கள் “வாங்க” மரியாதையாகவே பேசிவந்தோம்.
நால்வரும் ஒரு ஞாயிறு காலை ஒரு வேலையினை முடித்து விட்டு ஜூட் விட ஆரம்பமானோம்.
மற்ற இருவரும் எங்களை இறக்கிவிட்டுவிட்டு வடபழனி சிக்னலிலிருந்து வேறுதிசையில் செல்ல நானும் குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். சரியான வெயில், மண்டையைப்பிளந்தது. கதிர் சொன்னார். ” ஏங்க கரும்பு ஜூஸ்……….” கடைக்குப்போய் குடித்தோம்.
நான் கிளம்பும் வேளையில் ” ஒரு பொண்ணுகிட்ட கல்யாணம் பண்ணிக்குறீங்ளான்னு கேக்கலாம்னு இருக்கேன் “என்றார் கதிர் . “என்ன சொன்னீங்க , தெளிவா சொல்லுங்க” என்றேன். “இல்ல என் கூட ஆபிஸ்ல ஒருத்தர் வேலை செய்யறாங்க அவங்கிட்ட காதலிக்கறதா சொல்லிடலாம்னு இருக்கேன்”. எனக்கு அதிர்ச்சி, இருக்காதா ஒரு மாதத்திற்கு முன் கதிருக்கும் எனக்கும் கடுமையான விவாதம் காதலைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை காதல் அது தன் துணையை தெரிவு செய்வதற்கான வழி. நிலபிரபுத்துவ காலத்தில் பெண்ணும் பொருளாக மாற்றப்பட்டனர். கடுமையான ஆணாதிக்க சுரண்டலின் தவிர்க்க இயலாத வகையில் பெண் தன் துணையை தெரிவு செய்யத்துணிகிறார், அதுதான் காதல்.
ஆணாதிக்க சமுதாயத்தை மீறி என் துணையை நான் தெரிவு செய்வேன் என்பது ஒரு முற்போக்கான சுதந்திரமான முடிவு அது வரவேற்கதக்க முடிவும் கூட. வருகின்ற துணையைப்பற்றி ஏதும் அறியாது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு வழியின்றி வாழ்வதெல்லாம் நல்லபடியாக வாழ்வை கொண்டு போகாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து பின்னர் செய்யும் மணம் நீடித்திருக்கும் என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருக்கும்.
ஆணும் பெண்ணும் தன் துணையை தெரிவு செய்வதற்கு காதலைத்தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?ஒரு பெண்ணோ ஆணோ தன் துணையை தெரிவு செய்ய விடாமல் தடுப்பது எது? சாதி, மதம், பணம், குலம், கவுரவம், அந்தஸ்து போன்றவை தானே. பெரும்பான்மை காதல் திருமணங்களில் இவற்றில் ஏதாவதொன்று உடைபடுகின்றது. ஆனால் கதிரைப் பொறுத்தவரை காதல் என்பதே பொய் அது பெண் சுதந்திரத்திற்கான முதல் படி அல்ல, ஒரே சாதியில் தான், சொந்தத்தில்தான் என் அலுவலகத்தில் காதலிக்கிறார்கள் என்பார். காதலைப்பற்றிய இவ்விவாதம் சில நாட்கள் நீடித்தது. கடைசியாக காதல் முற்போக்கின் ஒரு அம்சம் என்ற அளவில் மட்டும் அவர் ஒத்துக்கொண்டார்.
அவர் இப்படி கேட்பார் நான் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. விசாரித்தேன் பெண்ணைப்பற்றி அவரிடம். அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் அப்பெண்ணும் வேலை செய்வதாகவும் சொந்தஊர் சென்னையிலிருந்து 150 கி.மீ தள்ளி இருப்பதாகவும் கூறினார். அப்பெண் மறைமுகமாக காதலிப்பது போல் தெரிவதால் தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். தன்னுடைய சாதி மறுப்புக்கொள்கைகள் அவருக்குத்தெரியுமென்றும் கூறினார்.
” உங்களுக்கு எதிரி யாருங்க” என்றேன். “இந்த நாட்டை சூறையாடுற உலக வங்கி ஏகாதிபத்தியம் அப்புறம் ஏகாதிபத்திய கைக்கூலிகள் ” என்றார். ” அந்தப் பொண்ணைக் கேட்டுப்பாருங்க எதிர்த்த வீட்டு பிரமிளாவோ அல்லது பக்கத்து வீட்டு அனிதா இல்லைன்னா கூட வேலை செய்யுற தாரிணின்னு சொல்லுவாங்க. உழைக்கும் மக்களை ஒடுக்குறவன பத்தி நீங்க பேசுறீங்க ஆனா அந்தப் பொண்ணு கவலை என்னவாயிருக்கும்? அவ முடி நெறயா வளர்த்திருக்கா, அவ குத்திக்காட்டி பேசுறவ, அவ அன்னைக்கு புது ட்ரெஸ் போட்டுகிட்டு ரொம்ப பந்தா காட்டுறா இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்கப்போவுதா என்ன? ”
“அந்தப்பொண்ணு மட்டுமில்ல பையனோ பொண்ணா இந்தக்காலத்துல எப்புடி இருக்காங்க? இந்த நாட்டு மக்கள் மேல அக்கறையா இருக்காங்களா என்ன? இந்த மக்கள் மேல அக்கறை வச்சு அதுக்குன்னு போராடுற நீங்களும் மக்களை மதிக்காத ஒருத்தரும் எப்படி இணைஞ்சு வாழ முடியும்? ”
“அவங்கள மாத்தவே முடியாதுன்னு சொல்லுறீங்களா?” இது கதிர் .
“நான் அப்புடி சொல்லலை மாற்றம் ஒன்றே மாறாததுன்னு ஆசான்கள் சொல்லியிருக்காங்க, மக்களை மாற்ற முடியுமின்னுதான் நாம இப்ப வரை பேசறோம். முதல்ல அந்தப்பெண் கிட்ட உங்களைப்பத்தி பேசுங்க அரசியலை கொண்டு போங்க புத்தகங்களை படிக்கச்சொல்லுங்க, என் திருமணம் இப்படித்தான்னு, என் வாழ்க்ககை இப்படின்னு உங்கள் மீது ஒரு கருத்தை ஏற்படுத்துங்க, அப்புறம் உங்க காதலை தெரிவியுங்க , அவங்களே முடிவு செய்யட்டும், உங்களை வாழ்க்கைத்துணையா ஏத்துக்கறதா வேண்டாமா என்று”
“சரிங்க” என்றபடி சென்றவரை சில நாட்கள் கழித்து கேட்டேன். தான் காதலை தெரிவித்து விட்டதாகவும் மனசு கேக்கவில்லை என்றும் அப்பெண்ணும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.”முட்டாள்த்தனமான முடிவென்று நினைத்துக்கொண்டு என்னுடைய சந்தேகம் அவரிடமே கேட்டேன் “எப்புடிங்க அன்னைக்கு அப்புடி பேசுனீங்க அதுக்குள்ள காதல் வலையில விழுந்துட்டீங்க”.
“நீங்கதான சொன்னீங்க காதல்ங்குறது உரிமைன்னு பெண்சுதந்திரத்திற்கானதுன்னு அதான் யோசிச்சு என் கருத்தை மாத்திகிட்டேன் என்றார் ” ஆக சும்மா கிடந்த சங்கை நான்தான் ஊதி விட்டிருக்கிறேன்.
சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அவர் சொல்லுவார் அந்தக்கூட்டத்துக்கு வரச்சொன்னேன் வந்திருந்தாங்க” சில மாதங்கள் ஓடின. அப்பெண் தன் வீட்டில் காதலை சொல்லி விட்டதால் அவருடைய தந்தை கதிரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.
“சரி போய்ட்டு வாங்க” என்றோம். அவர் மட்டும் அப்பெண் வீட்டிற்கு சென்றிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம் தான். பொண்ணு வீட்டுக்காரனுங்க ஏதாவது செய்திடுவார்களோ என்று. அன்று இரவு வந்த அவர் அப்பெண்ணின் வீட்டில் போய் பேசி விட்டதாகவும் சொன்னார்.
அப்பெண் ஒரு மாதம் கழித்து தன்னுடைய தந்தை கண்டிப்பாக தாலி கட்டவேணடுமென்று சொல்லி விட்டதாகவும் அப்பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் தி.க என்றும் அவர் தாலி கட்டிவிட்டதால் நீங்களும் தாலி கட்ட வேண்டுமென்று கதிரிடம் சொல்ல ஆரம்பித்தார். பார்ப்பானை வைத்துதான் சாங்கியமென்றும் கண்டிசன் ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது.
பார்ப்பன இந்து முறையில் பெண்ணை கேவலப்படுத்ததான் தாலி என்றும் பார்ப்பனனின் மந்திரமே பெண்ணை விபச்சாரியாக்குவதுதான் என்று பல முறை சொல்லியும் அப்பெண் கேட்கவேயில்லை. அப்பெண்ணின் அப்பாவுக்கு பணிஓய்வு பெற 4 மாதங்களிருப்பதால் அதற்குள் திருமணம் நடத்த ஏதுவாக விரைவாக பதில் சொல்லுமாறு அப்பெண் கூறினார்.
இந்த சம்பவமெல்லாம் எங்களுக்கு முன்னே நடந்தேறுகிறது. ஒருகட்டத்தில் அப்பெண் “தாலி கட்டுனா என்னை கல்யாணம் பண்ணு………….” என்க ,குமாருக்கும் அப்பெண்ணிற்கும் சண்டையில் முடிந்திருக்கிறது. நாங்கள் எடுத்த சமாதான முயற்சிகள் பயனற்றுப்போயின. அப்பெண்ணின் ஒரே பதில் “தாலிகட்டி சம்பிரதாயத்தோடுதான் கல்யாணம் அப்படீன்னா பேசுங்க….”
“குறைந்தபட்சம் தாலிகட்டுறது தப்புன்னு தெரியாத அளவுக்கு என்ன வெங்காயம் காதலிச்சீங்களோ ஒரு இழவும் தெரியல, இப்ப என்ன பண்றது” என்றேன்.
“இல்ல நான் தாலியப்பத்தி யல்லாம் பேசியிருக்கேன், சுயமரியாதையா இருக்கணுமுன்னு பேசியிருக்கேன்” என்றார் கதிர்.
“அப்பன் கிட்ட பேசி காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தற அளவுக்கு தைரியம் இருக்கு ஆனா தாலிகட்டாம கல்யாணம் பண்ண முடியலை இல்லையா? வரதட்சணை வேண்டாமெனில் கசக்குதா? அடிமைத்தனம் புடிக்குது உனக்கு சுதந்திரம் கொடுக்குறவன் பிடிக்கலையா? எவன் உன்னை விபச்சாரியா (பார்ப்பன இந்து மதம்) ஆக்குறானோ அவன் மேல வைக்குற நம்பிக்கையை ஒரு சதவீதம் இந்தக்காதலன் மேல வைக்க முடியலேன்னா இதுக்குப்பேர் காதல் கிடையாது. ரெண்டு பேரும் உணர்வுகளுக்கு அடிமையாயிட்டீங்க “என்றேன்.
இன்னொரு நண்பர் சொன்னார் “கடைசியா அந்தப்பெண்கிட்ட பேசிப்பாருங்க, அரசியலை சொல்லிட்டு பக்குவமடைஞ்ச பிறகு காதலிச்சிருக்கணும். இப்ப என்ன பண்றது. எல்லாம் அப்பெண்ணோட கையில்தான் இருக்குது.”
எனக்கோ நம்பிக்கையில்லை கதிர் மீது ” தாலிகட்டிகிட்டுதான் வரப்போறாரென நினைத்தேன்”
அப்பெண் கடைசி வரை தன் முடிவில் தெளிவாயிருந்து அடிமைத்தனத்தில் இல்லற வாழவென உறுதியாயிருக்க , கதிரோ அந்தக்காதலை விட்டார். கதிர் விட்டார் என்பதை விட அப்பெண் தன் முடிவில் மிக உறுதியாயிருந்தார் என்பது தான் உண்மை. ஒரு மாதம் கழித்து அப்பெண் முதல் அவர்கள் வீட்டிலிருப்பவர் வரை பலரும் கதிரை கெஞ்சிப்பார்த்து விட்டார்கள், தயவு செஞ்சு “தாலி கட்டுங்க” என்று.
அப்பெண் ஆரம்பத்தில் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு பின்னர் காதலித்தால் மீள மாட்டான் என்று கட்டளைகள் விதித்து இருக்கிறார் . அப்பெண்ணின் கண்ணீர், கோபம் ” எல்லாம் தாலி கட்டுங்க” என்றமைந்திருந்தது. பின்னர் வேறு நபருடன் பார்ப்பன முறைப்படி திருமணமும் செய்து ஈராண்டுகளாகிவிட்டன.
இந்த பார்ப்பன இந்து சமூகத்தின் மேல் அப்பெண் வைத்த நம்பிக்கையில் கொஞ்சம் கூட தன் குடும்பத்தை மீறி மணக்கத் துணிந்த காதலன் மீது இல்லை. அப்படியயனில் அந்தப்பெண் பொய்யாய் காதலித்தாரா? இல்லை அவர் உண்மையாக கூட காதலித்திருக்கலாம் ஆனால் தாலிகட்டாமல் சாதி சொல்லாமல் வாழ்ந்தால் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அந்தக்காதலைலையே தின்று விட்டது. தாலி பெரியதா? காதலன் பெரியதா? என்றபோட்டியில் அப்பெண் கடைசியில் தாலியை கட்டிக்கொண்டு போய்விட்டார்.காதலிப்பது பெரிய விசயமல்ல, இந்த மூடநம்பிக்கை சமுதாயத்தை எதிர்த்து இயங்குவதுதான் பெரியது.
பெண்ணுரிமையை வைத்துக்கொள் என்றால் எனக்குத்தேவையில்லை நான் இடிமையாய்தான் இருப்பேன், அடிமைத்தன வாழவில் அடிமைத்தன பிள்ளையை பெற்று அடிமைக்குழந்தையை அடிமைத்தனமான முறையில் வளர்ப்பேனென்றால் இங்கு என்னதான் செய்ய முடியும். கொண்ட காதலுக்காக கடைசி வரை சுயமரியாதையை கொண்ட அரசியலை இழந்து வாழமுடியுமா என்ன?
இல்லை நீ மக்களை பற்றி சிந்தித்துதான் ஆக வேண்டும். சுயமரியாதையோடுதான் வாழ வேண்டும். நீ சிந்திப்பதற்கு எல்லாமிருக்கிறது, இவ்வுலகே எனக்கு சொந்தம். சுயமரியாதைக்கு, உழைக்கும் மக்கள் உரிமைக்கு , முக்கியமாக பெண்ணுரிமைக்கு உன்னால் முடிந்ததை எதுவேண்டுமென்றாலும் செய். பெண் ஆணைப்போல சுயேச்சையான பொருளாதாரத்துடன் வாழ அனுமதி அளிப்பதை விட வேறு ஏது சுதந்நிரம்?
ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம் வாரதிற்கொருமுறை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும் எனில் தாலி கட்டித்தான் ஆக வேண்டுமென்று அடிமை விலங்கை ஆசையாய் மாட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு சுயமரியாதையும் , கம்யூனிசமும் கசக்கத்தான் செய்யும் .
சிலருக்குத் தோன்றலாம் தாலிங்குறது ,பார்ப்பானை வச்சு கல்யாணம் பண்றது சாதாரண விசயம் அதுக்கு காதலை விடலாமா? தாலி என்பதோ பார்ப்பன மந்திரமோ ஒரு செயல் மட்டுமல்ல. தாலி ஏன் உருவாக்கப்பட்டது? இது என்னுடைய பொருள் என்று கணவன் சொல்லுவதற்காக, ஆம் திருமணத்திற்கான அடையாளமாய் பெண்ணுக்கு இருக்கும் தாலி ஆணுக்கு ஏன் இருப்பதில்லை?
ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள ஒரு கூட்டத்தில் மணமான பெண்களை கண்டறியமுடியும். ஆனால் ஆண்களை முடியுமா என்ன? அவனே சொன்னால் தான் தெரியும். சரியான விசயமெனில் அது ஏன் ஆணுக்கில்லை. பெண்ணை பொருளாக்கும் எதையும் ஏற்பதற்கில்லை. எனும் போது எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பெண்ணை வைப்பாட்டியாக்கும் மந்திரத்தை ஏற்க முடியும்.
பெண்ணுக்கு விடுதலை தர நினைத்த கதிரின் உண்மையான சுயமரியாதையுள்ள அரசியல் அடிமைத்தனத்திற்கு கிஞ்சித்தும் விலை போகாமல் நின்றது. சுயமரியாதை அது தனக்குமட்டுமல்ல மற்றவர்களையும் சுயமரியாதையாகவே இருக்கக்கோருகிறது. நாத்திகர்களாக கூறிக்கொள்ளும் பலர் மறு அழைப்பின்போது தாலி கட்டிக்கொள்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் எதுவும் புரியாதது போல் நடிக்கும் ஒரு அடிமையை திருமணம் செய்வது ஒரு உண்மையான பகுத்தறிவுவாதியால் இயலாது.
இப்பாது காதல் என்று நான் பேச ஆரம்பித்தாலே கதிரின் கதைக்கு சென்று விடுகிறேன். அந்த அளவுக்குகாதல் பற்றிய பெரிய படிப்பினையாகிப்போனது கதிரின் காதல். காதல், பாசம்,வீடு,நட்பு,அப்பா,அம்மா,
உறவினர்கள் இதில் எதுவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு அரசியலில் இருக்கும் நேர்மை இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிப்பது சாத்தியம்தான். அதற்கு முதலில் நேர்மையாக இருத்தல் வேண்டும்.
கதிர் என் நண்பன் என்பதில் மிகவும் பெருமைதான்.
மக்களைப்பிளக்கும் சாதியை
மாதரை வதைக்கும் தாலியை
சித்தத்தையே அழிக்கும் சாத்திரத்தை
மொத்தமாய் புதைப்போம்
மகஇக, புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களின் புரட்சிகர மணவிழா பத்திரிக்கையில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற வாசகம்.
கதை
குறிச்சொற்கள்: இந்து மதம், கதை, கலகம், காதல், சாதி, சுயமரியாதை, சுயமரியாதைத்திருமணம், தாலி, தோழர், பார்ப்பன முறை, பார்ப்பனன், புஜதொமு, புமாஇமு, புரட்சிகர மணவிழா, பெண் விடுதலை, பெண்ணியம், மகஇக, மார்க்சிய லெனினியம், விபச்சாரி, விவிமு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஜூலை 6, 2010
டேய் கடைய மூட்றா”
ஓட்டுப்பொறுக்கிகளின் அழகான அரசியல்
ஒரு நண்பரின் கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனது பழைய நண்பர், பொதுவாக தனிப்பட்ட விசயங்களிலிருந்து அரசியலை நோக்கிப்போய்க்கொண்டிருந்தது. நான் பெட்ரோல் விலை உயர்வு என்பது திட்டமிட்ட சதி என்று சொல்லிக்கொண்டும் அதற்கான எடுத்துக்காட்டாக நான்கு வருடம் முன்பு பீப்பாய் என்னணை 110 டாலர் என்றும் அதனால் 35 ரூபாயாக பெட்ரோலை விலை உயர்த்திய அரசு தற்போது 70 டாலர் ஆன பின்னும் விலையினை ஏன் உயர்உயர்த்துகிறது என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே தெருவில் கொஞ்ச தூரம் தள்ளி சாலையில் ஒரு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது.
அவர்கள் கையில் அதிமுக கொடிகளை பிடித்திருந்தார்கள். சரி நாளைக்கு பந்த் என்பதால் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அவர்கள் நான் அமர்ந்திருந்த கடைஇயினை ஒட்டிய சாலை வழியாகவே பயணிக்கப்போகிறாகள் போல, அவ்வழியே வந்து கொண்டிருந்தார்கள். அக்கும்பலில் ஒரு நபர் மட்டும் கடைகளில் நோட்டீசினை கொடுத்தார். மற்றவர்கள் நடு சாலையிலிருந்தே என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். சாலையிலிருந்து சொல்லும் அளவுக்கு எவ்வளவு அழகாக அரசியல் செய்கிறர்கள்.
கும்பல் நான் அமர்ந்திருந்த கடைக்கு அருகில் வந்தது. வாய் ஏதும் பேசாமல் ஒருவர் நோட்டீசை வீசிவிட்டு சென்றார். அந்தக்கடைக்கு பக்கத்தில் பேக்கரி ஒன்று இருந்தது. அதிமுகவின் நகர நரவல் ஒன்று கத்தியது “டேய் கடைய ஒழுங்கா நாளைக்கு மூடுடா”. இன்னொருவன் சொன்னான் “ஓய் நாளைக்கு ஷட்டரைக் காணோமுனு சொல்லாத கடை காலியாயிடும் மாப்ளோய்”. இன்னொரு கைத்தடி கத்தியது “பர்தா போட்டுடு நாளைக்கு ஒரு கண்ணாடி மிஞ்சாது”.
கடையிலிருந்தவர்களையெல்லாம் மிரட்டிவிட்டு சிரித்தபடியே அக்கும்பல் போய்க்கொண்டே இருந்தது. அடுத்ததாக சிபிஎம் ஐச் சேர்ந்த அய்யோ பாவம் என்றபடி ஒரு நபர் வந்தார். கையில் நோட்டீசை கொடுத்துவிட்டு ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்கள் என நினைத்தாரோ என்னவோ பறந்து பறந்து நோட்டீஸ் சப்ளை செய்தார். சிபிஎம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ பிரச்சரத்தில் ஒருவர் தனக்கே கூட கேட்காத அளவுக்கு சத்தம் போட்டு பேசிக்கொண்டு போனார். இப்படியே வரிசையா எல்லா உருப்படிகளும் வந்து போயின.
——————————————————————————————
பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை தாக்கிக்கொலை செய்து வருவதை, அதை மக்கள் எளிமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.”எவன் வந்தாலும் இதைத்தான் செய்யுறான் ” ஒரு சாதாரண திமுக பாமக தொண்டன் கூட எவனும் யோக்கியமில்லை என்ற படி இந்த அரசாங்கம் நமக்கானதில்லை என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள்.
அந்த விலை வாசி உயர்வுக்கு யார் காரணம்? பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகள், பங்குசந்தையில் சூதாட்டத்தின் உணவுப்பொருட்கள் அடமானம் வைக்கப்பட்டது குறித்து மக்களிடம் விளக்கி அதற்கு மூலக்காரணம் யார் என்றும் அதை ஒழிக்க இந்த அடிமை முறையையே புரட்ட வேண்டிய நிர்பந்தம் இருப்பதையும் சொல்லி, அதை இந்த அரசால் மாற்ற முடியாது. ஏனெனில் இந்த அரசாங்க மக்களுக்கானதல்ல, அது பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கானதென்று விளக்கமுடியாதா என்ன?
இத்தனையும் விட “டேய் கடைய மூட்றா என்பது தான்” தெளிவான அரசியல். ஆம் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களின் எதிரிகள் குறிப்பாக இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை. கருணாவிடம் பணம் சேருவதை எதிர்த்தே போராடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே அம்மாவான செயா திருடும் போது ஏதாவது விழும் அதை எப்போது நக்கலாம் என்ற ஆவலாய் திரிகிறர்கள்.
அதிமுக உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை, மக்களுக்காக போராடுவதாகக் கூறி மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் வேலை. அவர்களின் எதிரி உழைக்கும் மக்கள் தானே தவிர முதலாளிகள் அல்லவே!!!!
Related topic
குறிச்சொற்கள்: அதிமுக, அரிசி, ஓட்டுப்பொறுக்கிகள், சிபிஎம், சிபிஐ, செய, டீசல், திமுக, பருப்பு, பாரத் பந்த், பெட்ரோல், விலைவாசி உயர்வு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஜூலை 1, 2010
டேய் ! இது செம்மொழி மாநாடு
செம்மொழியான தமிழ்மொழியே!
ஓடித்திரிந்த
சாலைகள் எல்லாம் வெள்ளை
வெளேரென்று மின்னுது
உள்ளுக்குள்ளே தமிழ்த்தாய்
என்னை விதவையாக்கி
விட்டானென விம்மி விம்மி அழுகுது
யாராடா தமிழ்த்தாயின் மூத்த மகன்?
கல்லுடைக்கும் தொழிலாளியும்,
கதிரறுக்கும் ஆத்தாளும் அல்லவா
தமிழ்வாரிசுகள்
பீத்த மகனெல்லாம்
மூத்த மகனென்று பீற்றித்திரிவது
கண்டு தமிழ்த்தாய் ஒப்பாரி வைக்குது
ரஹ்மானின் பாப் இசையில் எல்லாமே அடங்குது
தமிழ்மொழியே!! தமிழ்மொழியே!!
கோவையில் செம்மொழிக்கு
கொண்டாட்டமாம்
கொங்கு நாட்டானுக்கு
நாலு நாள் வேலையில்லை- சோத்துக்கு
திண்டாட்டமாம்
கலைஞர் அவர் வாழும்
வரலாறு , வாயைத் திறந்தால்
வருமாம் தமிழ் ஆறு அதில்
கழக குஞ்சுகள் நீச்சலடிக்க
நக்கிப்பார்தால்
அட ! இது
டாஸ்மாக்கு பீரு
பண்டாரங்க வெளியே விக்குது
பகவத் கீதை உள்ள போனா
டான்ஸ் ஆடுது பணக்கார கீதை
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
பறையனுக்கு மந்திரி
பதவியாம்!!
சமத்துவம் வந்து புல்லரிக்குது
அடிச்ச கொள்ளைக்கோ
கையரிக்குது
ஈழத்தின் பிணநாற்றம்
தாங்காமல் ஓடி வந்த சிவத்துக்கு
பொன்னோடு
ஈழத்தமிழனுக்கு திருவோடு
கடலில் துப்பாக்கி சூடு
சாதி மாறி காதலிச்சா ஒரே போடு
பாலாறு திரிஞ்சு போக
பெரியாறு பொரிஞ்சு போக
எதைப்பிடுங்க மாநாடு ?
போலீசு சொல்லுது
டேய் ! இது செம்மொழி மாநாடு
———————————————————————————————————————————————————————————————தமிழ்த்தாயை
தமிழ்த்தாயை காணவில்லை…….
இங்லீஸ்ல பேசுங்க ஈஸியா!
இங்கிலீஸ்ல பேசி இம்ப்ரஸ் பண்ணுங்க
இங்கிலீஸ்ல படிச்சா அறிவு வரும்
“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாருமில்ல”
திரும்பிய பக்கமெல்லாம்
இங்கீலீசு கப்’அடிக்க
தேடி வந்த தமிழ்த்தாய்க்கு
வெடிகுண்டு செக்கப்’
யாரோ தூய தமிழில்
ஆத்தா! ஆத்தா!
என்றழைக்க,
இங்கேயாவது இருக்குதே வாஞ்சையோடு
போனாள் தமிழத்தாய்
கண்மணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்
டேய் “ங்கோத்தா” “ங்கோத்தா”……
பின்னங்கால் பிடரியிலடிக்க
ஓடிய தமிழ்த்தாயை காணவில்லை
கண்டு பிடித்து தருவோருக்கு
அடுத்த செம்மொழி மாநாட்டில்
பொற்கிழியும் பன்னாடையும்
ச்சீ ச்சீ !!! ச்சீ !!!
பொன்னாடையும் நிச்சயம்.
குறிச்சொற்கள்: அழகிரி, ஆலைகள், கருணாநிதி, கவிதை, கவிதைகள், கொங்கு, கோவை, சிவத்தம்பி, செம்மொழி மாநாடு, தமிழ், தமிழ்த்தாய், தொழிலாளி, பாராட்டுதல், பொற்கிழி, ஸ்டாலின்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஜூன் 29, 2010
செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்
அவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன். முந்தைய நாள் பயணக்களைப்பின் காரணமாக தாமதமாகிவிட்டது. பேருந்துகள் வரிசையாய் கோயம்புத்தூருக்கு நின்றிருந்தன. நான் நோட்டம் விட்டேன். மூன்று பேருந்துகள் கழித்து “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு பேருந்து ” ஒன்று மிக மிக பரிதாபமாய் நின்று கொண்டிருக்க, அதில் ஏறி உட்கார்ந்தேன். செம்மொழி மாநாட்டிற்கு பயணக்கட்டணம் 5 ரூபாய் என்றும் அருகிலிருந்தவர் சொன்னார். சரி 23 ரூபாய் மிச்சம் என்றபடி அந்த டப்பாவில் ஏறி அமர்ந்தேன். என்ன செய்வது 23 ரூபாய் சம்பாதிப்பது சாதாரண விசயமா என்ன?
நடத்துனர் வந்தார் ” கோவை மட்டும் உட்காரு, கோவை மட்டும் உட்காரு”” ஒரு பயணி கேட்டார் ” மாநாட்டுக்கு போவுங்களா ?, எத்தனை மணிக்கு போவும்?” ” எனக்கு எதுவும் தெரியாது, வண்டியை எடுக்க சொன்னா எடுப்பேன் , அவ்வளவு தான், உன்ன மாதிரிதான் நானும்” பிறகு யாரும் அவரிடம் கேட்க வில்லை. என்னருகில் அமர்ந்திருந்த பயணி முணுமுணுத்தார் “திமிர்பிடிச்சவன்”.
பேருந்து கிளம்பியது, பயணச்சீட்டுக்காக ரூ 28 வசூலிக்கப்பட்டது. நடத்துனரிடம் கேட்ட போது ” எனக்குத் தெரியாது” அதே பழைய பல்லவியை பாடினார் . ஒருவர்ர் சொன்னார் “நான் மட்டும் தான் இளிச்சவாயன்னு நெனச்சேன், எல்லாரும் துணைக்கு இருக்காங்க நெம்ப சந்தோசம் “ நாங்கள் சேர்ந்து இளித்தோம், இளிச்சவாயர்களல்லவா.
கடைசி நாளில் எல்லா பேருந்திலும் அதே அளவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களிடம் பேருந்துக்கட்டணம் குறைவு என்று சொல்லி கூட்டம் கூட்டுவது , பின்னர் வண்டி புறப்பட்டபின் விலையைச் சொல்வதென திட்டமிட்ட பிராடு வேலை நடந்திருக்கிறது. இன்னொருவர் சொன்னார் “அங்க எல்லா பஸ்ஸூக்கும் 1 ரூபாயாம் ”
பேருந்து அநியாயத்திற்கு ஊர்ந்து சென்றது, சரி 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய நாம் அரை மணி நேரம் அதிகமாகுமென நினைத்தேன். அவினாசியிலிருந்து ஒவ்வொரு 1/4 கி.மீட்டருக்கும் போலீசு படையாக இருந்தது. செல்லும் வழியயல்லாம் திமுகவினர் தங்கள் சொந்த விழாவினை சிறப்பித்து டிஜிட்டல் தட்டிகளால் நிரப்பியிருந்தார்கள். இப்பகுதியில் அழகிரிக்கு இடமில்லை போலும். காலையில் 9.20க்கு எடுக்கப்பட்ட பேருந்து எப்படியோ தட்டு தடுமாறி 11.30 க்கு கருமத்தம்பட்டியை அடைந்தது. எனக்கு ஒரு சந்தோசம் ” இன்னும் அரை மணி நேரம் தானே, நாம கணக்கு போட்ட மாதிரியே அரை மணிநேரம் தாமதம்”. ஆனால் நாம் ஒரு கணக்கைப்போட்டால் ஆண்டுகொண்டிருப்பவன் வேறொரு கணக்கைப் போட்டு விட்டார்.
திடீரென பேருந்துகள் கருமத்தம்பட்டிக்குள் திருப்பிவிடப்பட்டன, அன்னூர் சாலையில் பயணித்த பேருந்து சிறிது தூரம் சென் பின் வாகராயம்பாளைம் வழியாக புகுந்தது. அது சரியாக 10 அடி ரோடு, எதிரில் வண்டி வந்தார் சாலையை விட்டு இறக்கிதான் வைக்க வேண்டும். ஆனால் பிரச்சினை இல்லை கடைசி வரை எந்த நான்கு சக்கர மற்றும் பேருந்துகளோ அவ்வழியே வரவில்லை. நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் வழியே தெரியவில்லை. அப்பகுதியிலிருந்த மக்கள் போய் சேரும் வரை வழியைச் சொன்னார்கள். அருகிலிருந்த பயணி சொன்னார் “கண்டக்டர் அப்பலேர்ந்து சரித்தானுங் சொன்னாரு, எனக்குத்தெரியாது , எனக்குத்தெரியாதுன்னு , நமக்குத்தானுங் புத்தி சுவமில்ல” எல்லாரும் சிரித்தோம்.
பேருந்து செல்லும் வழியியல்லாலம் மக்கள் இந்த நேரத்தில் பேருந்துகள் இவ்வழியே செல்வதை ஆச்சரியமாகப்பார்த்தார்கள் . குழந்தைகள் ஆர்வமாய் கைகாட்டின. வழியெங்கும் வறண்டு போன பூமி பரிதாபமாய் காட்சியளித்தது. காடுகள் பிளந்து வறண்டு கிடந்தன. கோவை மாநகரம் வெள்ளையடிக்கப்பட்டு இருப்பதாய் பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள், ஒரு எட்டு இப்பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.
வாகராயம்பாளையத்தில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நின்றிருந்தார்கள். பேருந்து செல்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள், பேசிக்கொண்டிருந்தார்கள். செல்லும் வழியெல்லாம் செப்பனிடப்படாத சாலைகளும், வறண்டு போன பூமியுமாய் இருந்தது. ஒரு மணி நேரம் சுற்றிய பின் சத்தியமங்கலம் சாலைக்கு பேருந்து வந்தது. கோவைக்கு 15 கி.மீ எனப்பல்லைக் காட்டியது பலகை. சிவானந்தா, கணபதி வழியாக பேருந்து செல்ல, வழியெங்கும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருக்க, கோவை மாநகரமே மானமிழந்து அசிங்கமாக
வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. நான்கு நாட்களாய் முடக்கப்பட்டிருக்கின்றது கோவை மாவட்டத்தின் தொழில்கள் அனைத்தும், இருந்தாலும் பொய்யாய் மினுக்கியது, வறுமை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்பு பார்த்த கிராமங்களோ போலியாக அல்லாது வறுமையின் அழகை அழகாய் எடுத்தியம்பின.
முழுதாய் 3.30 மணிநேரம் தின்ற பின்னர் ஒரு வழியாக காந்திபுரத்தில் இறங்கினேன். அங்கிருந்து கொடீசியா செல்லும் பேருந்தொன்றை தேடிப்பிடித்தேன். அது ஒரு டீலக்ஸ் பேருந்து பயணச்சீட்டு 7.00 ரூபாய்(பத்திரிக்கைளில் 1 ரூபாய் தானென படித்ததாக ஒரு நபர் கூறினார்).கொடீசியாவில் இறக்காமல் 2 கி.மீ தள்ளி பாலத்திற்கருகில் இறக்கி விட்டார்கள். ஆயிரக்கணக்காணோருடன் நானும் பயணித்தேன். காவல்துறை “அங்க போங்க, இங்க போங்க” என்று கத்திக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் எங்கு போகிறோம் என்று தெரியவில்லை . ஒரு போலீசுக்காரர் மக்களைப்பார்த்து ” போங்கடா போங்கடா” பாத்துப்போங்கடா”” என்றார். இன்னொரு போலீசுக்காரர் ஒருவரை அடிக்க லத்தியைத் தூக்கிகொண்டு ஓடி வந்தார்.
நான் நினைத்தேன் “ ஒருத்தன் வாங்கடா வாங்கடாங்குறான் இவன் போங்கடா போங்கடாங்குறான்”. சில போலீசெல்லாம் பல்லைக்கடித்தபடியே “சார் போங்க ” என்றார்கள். ஓ இதுதான் இன்முகத்துடன் வரவேற்கிறதா!!!!!!. சுற்றி சுற்றி சென்றோம், ஆங்காங்கு போலீசார் வழி காண்பித்தார்கள(சுற்றி சுற்றி அலையவிட்டார்கள் 20 நிமிடம் நடக்க வேண்டிய தூரமெனில் 40 நிமிடம் பாதுகாப்பு கருதி அலையவிட்டார்கள் ). மாநாட்டுக்கு வரவேற்பு பந்தல் வரவேற்றது. அதில் “செம்மொழியாரே வருக” என்றிருந்தது. உள்ளே கும்பலோடு சென்றவுடன் அது தனியாக முக்கால் கி.மீட்டர் இருக்கும். உணவகம், பொருட்காட்சி எங்கும் கூட்டமாக இருந்தது. மக்களுக்கு சுற்றிப்பார்க்க ஒரு இடம் கிடைத்தது போல சாரைசாரையாக வந்திருந்தார்கள்.
மாநாட்டுப்பந்தலை நெருங்கினேன். ஆடுமாடுகளை பட்டியில் அடைத்தது போல தடுத்து வைத்திருந்தார்கள். ஒரு நுழைவாயிலில் கூட்டமாக நானும் நிற்கஆரம்பித்ததேன். சுமார் 15 நிமிடங்களுக்குப்பிறகு பட்டியை திறந்தார்கள். ஒவ்வொருவரும் பரிசோதனை செய்யப்பட்டார்கள். உள்ளே நுழைந்தேன். திருச்சி செல்வேந்திரன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நடிகர் சிவக்குமார் விழாவினை முடித்து வைத்துக்கிளம்பினார். முன்மேடையை நோக்கி பலரோடு நானும் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். காவல்துறையினர் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்று வழிகாட்டிக்கொண்டு இருந்தனர். வளைந்து வளைந்து சென்றோம். கடைசியாய் மாநாட்டிற்கு வெளியில் வந்து விட்டேன்.
மறுபடியும் உள்ளே செல்லவேண்டுமென்றால் அரை கி.மீ நடக்க வேண்டுமே!. சரி நாய் வேசம் போட்டால் குரைச்ச்தான ஆக வேண்டும். வேறு ஏதோ வரிசை ஒன்றிருக்க அது எங்கே ஆரம்பிக்கிறதென்று சென்றால் அது ஒரு கி.மீ ஆனது, போகும் வழியில் இஸ்கான் கோயில் இருந்தது. அவர்களுக்கு கூட்டம் ஒரு வாய்ப்பாகி விட்டது. வரிசையில் நின்றவர்களிடம் பகவத்கீதையை பண்டாரங்கள் விற்றுக்கொண்டிருந்தன, அவர்களில் 99% மலையாளப்பார்ப்பனர்கள். நானே நால் வர்ணத்தையும் உருவாக்கினேன் என்ற பார்ப்பன கொடுங்கோன்மையின் மொத்த குத்தகையான பகவத்கீதை விற்க அனுமதி இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் தோழர்கள் போஸ்டர் ஒட்டினால் கைது செய்யப்படுகிறார்கள்.
பார்ப்பன வெறியை நிலைநிறுத்துவோருக்கு இடமுண்டு சாதியை எதிர்ப்போருக்கு இடமில்லை அல்லவா. இதல்லவா பகுத்தறிவு. வாழும் வள்ளுவராம், நல்ல வேளை வள்ளுவர் உயிரோடு இல்லை. மணி 2.30 ஆகி விட்டது. உணவு எங்கே வாங்கலாமென்று திரிந்து கொண்டிருந்தேன். அங்கும் பகவத்கீதை கடை போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். விற்பவர் “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய புனிதம்” என்றார், உடனே திமுக குலக்கொழுந்துகள் பவ்யமாய் வாங்கின. குடிநீருக்காக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பெரிய தொட்டியில் அருகில் அரசு மானியத்துடனான மிகக்குறைவான உணவு என்று போட்டிருக்க,
“ஹோட்டல் வஸந்தபவனின்” அந்த வண்டியில் 30 ரூபாய் கொடுத்து உணவை வாங்கினேன். மீண்டும் அரைமணி நேரம் கழித்து பரிசோதனைக்குப்பின் மாநாட்டு வளாகத்திற்குள் சென்றேன். உள்ளே கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். முன்பு வரும் போது கூட்டம் அவ்வளவாக இல்லை, கலை நிகழ்ச்சிக்கு அதிக அளவில் கூட்டம் மொய்த்தது.
அடித்துப்பிடித்து ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.வாங்கிய உணவுப்பொட்டலத்தை பிரித்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஒரு சிறிய டப்பாவில் புளிசோறு, ஒரு சிறிய டப்பாவில் எலுமிச்சை, கின்லே தண்ணீர்,குர்குரே, சின்னீஸ் ஊறுகாய். சோறு மொத்தமாய் 5 ரூபாய்க்கூட போகாத அளவுக்கு கேவலம். கின்லேவையும் குர்குரேவையும் தூக்கி வீசினேன். மொத்தமாய் கணக்குப்போட்டால் 30 ரூபாய் கூட போகாத இதற்கு எதற்கு மானியம்? அதற்கு எத்தனை கோடிகள் அமுக்கினார்களோ தெரியவில்லை. மக்களின் பணத்தை வாரியிறைக்கப்படும் இவ்விழாவில் முடிந்த அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதற்கு சாட்சி இந்த உணவே போதும்.
கலைநிகழ்ச்சி முடிந்து சுமார் 30 நிமிடம் ஒன்றும் இல்லை, சரியார் 3.52 க்கு கருணாநிதி வந்தார். வந்தவுடன் அவருக்கு வாழ்த்துப்பா பாடினார்கள். ஆகவேண்டிதெல்லாம் ஆனது. கருணா பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அளவில் கலை நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்த்த பலர் கிளம்பினார்கள். 6.00 மணிக்கு விழா முடிந்தது. இது திமுக விழா அல்ல என்றார் கருணாநிதி, எனக்குத்தெரிந்து வந்திருந்தவர்களில் திமுவினர்தான் மிக அதிகப்பங்கு. போலீசு பொதுமக்களை திட்டிக்கொண்டிருந்தது.திமுவி
னரோ போலீசைத்திட்டிக்கொண்டிருந்தார்கள். மாநாட்டிற்கு வெளியே திமுக சம்பந்தமான புத்தகங்கள், படங்கள், கேசட்டுகள் அழகிரியின் படங்கள் குறிப்பாக விற்பனை செய்யப்பட்டன.
வேறு கட்சிப்புழுக்கையைகூட காணமுடியவில்லை.
மக்கள் கூட்டம் என்பது திட்டமிட்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது, உள்ளே வரும் கூட்டத்தை வெளியே அனுப்பி மீண்டும் உள்ளே வரவைத்துக்கொள்ளப்பட்டது. உள்ளே செல்வதற்கு மிகக்குறைந்த அளவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வளவு கெடுபிடி இல்லையயன்றால் கண்டிப்பாக இவ்வளவு கூட்டம் உள்ளே இருந்திருக்க வாய்ப்பில்லை,. முத்தமிழறிஞரின் பேச்சைக்கேட்காமல் ஓடிய தமிழ்க்கூட்டத்தை பார்த்த போது இது மெய்யயன்றானது. மாநாட்டு வளாகத்திலிருந்து வெளியே வந்தேன் , பல்லாயிரக்கணக்கானேரோடு நடந்தேன், நடந்து கொண்டே இருந்தேன். கொடீசியாவிலிருந்து காந்திபுரத்திற்கு பேருந்து இல்லை.
விஐபிக்களுக்காக முடக்கப்பட்டிருந்தது சாலை நடந்து செல்ல மக்களுக்கு மிகக்குறைவான இடம் ஒதுக்கியது காவல்துறை மக்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்களோடு நானும் நடந்தேன். நடக்க ஆரம்பித்தபோது காந்திபுரம் 7 கி.மீ என்றிருந்த பலகை இப்போது 1.கி.மீ என்றாகிவிட்டது. நான் மட்டுமே நடந்து கொண்டிருந்தேன், அப்படியே பேருந்து நிலையம் சென்று கிளம்பினேன். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 3 பேருந்துகள் மட்டுமே என்னைக்கடந்தன அதுவும் கடுங்கூட்டத்தோடு ,காலையிலிருந்த அளவுக்கு மாலை வெளியூர்களுக்கோ உள்ளுரூக்கோ பேருந்து வசதி இல்லை. மக்கள் பிதுங்கிக்கொண்டு பயணித்தார்கள், விழாவிற்கு வந்த பின்னர் அம்போவென விட்டுவிட்டார் கருணாநிதி. இந்நிலையில் கருணாவை கடலில் கட்டுமரமாக பயன்படுத்தினால் அவ்வளவுதான். செம்மொழி மாநாட்டிற்கு வந்ததற்கு என் கால்கள் வெம்பிப்போனதுதான் மிச்சம்.

வறண்டு போன கவிதை

தமிழகத்தின் கிராமங்களின் அதே நிலை, மறைக்கமுடியாத வறுமை, செம்மொழித்தமிழனுக்கு வாழவே வழியில்லை, மாநாட்டுக்கு 500 கோடி

ஈழத்தின் பிணநாற்றம் போவதற்குள் மக்களின் பணத்தில் கச்சேரி, சாவு வீட்டில் ரகுமானின் பாப் மியூசிக்

வெளியே பார்ப்பன பாகவதம் , உள்ளே பணக்கார பாகவதம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் யார் அந்த ஒருவன் ? சிறீமன்மத பாகவதத்தை பக்தியோடு மொய்த்த கழககண்மணிகள்

மலிவு விலையில் மானிய சோறு கொள்ளைஅடிக்க புது டெக்னிக்

30 ரூபாயில் 10 ரூபாய் கின்லே 5 ரூ குர்குரே செம்மொழித்தமிழனின் வாழ்வை அழித்த கோககோல கம்பெனியின் கின்லே, செம்மொழி மாநாட்டுக்கு தமிழனுக்கு தரப்பட்ட பாலிடாயில்

பன்னாட்டு பாகாசுரக்கம்பெனிக்கு வரவேற்பு, வறுமைத்தமிழனுக்கு குர்குரே தரும் கொடூரம், பெப்ஸியால் வேலை இழக்கவைக்கப்பட்ட மக்களுக்கு அதையே தந்து கொள்ளையடிக்கும் அற்புதம்
குறிச்சொற்கள்: கருணாநிதி, கருத்துப்படங்கள், கலைஞர், காந்திபுரம், கால்வலி, கோவை, செம்மொழி மாநாடு, தமிழ், நடைபயணம், நினைவுகள், பயணங்கள், வள்ளுவர்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 13 Comments »
ஜூன் 22, 2010
நக்சல் சவால் – புத்தகப்பார்வை
மொட்டைத்தலையன் விகடன் பிரசுரம் சார்பில் கடந்த செப்டம்பர் 2009 வெளிவந்த புத்தகம் தான் நக்சல் சவால். தண்டகாரண்யா பகுதிகளில் அரசு நடத்தும் போருக்கு முன்னோடியாக வெளிவந்த புத்தகம். 200 பக்கங்களுடைய இப்புத்தகம் மிகவும் எளிய மொழி நடையில் ஆளும் வர்க்க கருத்துக்களை சுமந்து வந்திருக்கிறது. உலக அளவில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை என்ற வழிமுறையே தீவிரவாதம் என்ற அளவில் ஆளும் வர்க்கத்தின் மிகச்சிறந்த பிரச்சாரக்கருவி இது. முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி கேட்டால் தனது வாயை முடிக்கொள்ளும் ஆளும் வர்க்க ஊடகங்கள் நக்சல்பாரிகள் மீதும் மாவோயிஸ்டு இயக்கத்தினரின் மீதும் அவதூறினை அள்ளி வீசுகின்றன.
இப்புத்தகத்தில் ஒவ்வொரு கட்டுரையாளாரும் தனக்கு பிடித்தமான வகையில் தீர்வினை சொல்கிறார்கள் எப்படி நக்சலிசத்தை ஒழிப்பதென்று.ஆசிரியர் தனது முன்னுரையில் நக்சல்பாரிகள் குறித்து “ரத்தத்தை கண்டு பயப்படுவோரை பணிய வைக்க அதையே ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள்”, என்கிறார். “வேலையின்மையால் வறுமை ஏற்படுகின்றாது, வறுமையால் அவ நம்பிக்கை, அதிருப்தி பரவுகின்றது. கடைசியில் அது வன்முறையில் போய் முடிகிறது.” வேலையில்லாத்திண்டாட்டமும் மக்கள் தொகைப்பெருக்கமும் தான் நாட்டை எதி நோக்கியுள்ள தீவிரவாதத்திற்கு அடிப்படை என்கிறார் விகடன் ஆசிரியர்.
வேலையில்லா திண்டாட்டம் தான் நக்சலிசம் வளரக்காரணம் என்று கூறினால், நக்சல் அமைப்பில் பலகோடி வேலையற்ற இளைஞர்கள் சேர்ந்திருக்க வேண்டும், மக்கள் தொகைப்பெருக்கமோ வேலையில்லா திண்டாட்டமோ நக்சல்பாரியை வளர்க்க வில்லை, ஆளும் வர்க்க பயங்கரவாதமே மாவோயிஸ்டு இயக்கத்தை வளர்க்கிறது. “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டோடு இருக்கிறாய்” என்று கட்டளையிடுகிறது. ஒன்று என்னுடன் சண்டை போடு இல்லையேல் அடிமையாயிரு என தீர்வுகளை முன் வைக்கிறது.
ஏன் இந்த அறிவு ஜீவிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்திற்கும் வேலையில்லாதிண்டாட்டத்திற்கும், மக்கள் தொகைக்கும் முடிச்சு போடுகிறார்கள்?
அரசு பயங்கரவாதத்தை மூடி மறைப்பதற்கான அழகான வழி இது. ஏனென்றால் இந்த போலி சனனாயக அரசால் கடைசிவரை வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கமுடியாது அது மட்டுமல்ல, “உழுபவனுக்கு நிலம் உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற தத்துவத்திற்குத்தான் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்ற உண்மையை மறைப்பதற்கு தேவையான உத்தி இது.
இந்த புத்தகத்தை தொகுத்து வெளியிட்டவர் பி.வி.ரமணா, இவர் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்,”இந்தியப்பாதுகாப்பில் ராணுவத்தின் பங்கு, ராணுவ ஆராய்ச்சிகள்” என்ற தலைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆக இந்திய ராணுவ கைக்கூலியால் தயாரிக்கப்பட்ட இத்தொகுப்பு அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தினால் 2005ஜனவரி 25 &29 ஆகிய நாட்களில் பயிலரங்கமாக நடத்தப்பட்டது.
இதன் முதல் கட்டுரையாளர் டி.ராஜா(சிபிஐ , தேசியச் செயலாளர்) பொறுத்தவரை “நக்சலைட் தீவிர வாதம் ஒழிக்கப்படவேண்டிய / வெல்லப்படவெண்டிய ஒரு குழப்பம், இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகமே அரசாங்கம் என்னும் கட்டுப்பாடு வளர்ந்து நிலைப்பெற்றுவிட்டது,ஆகவே தேர்தல்களில் விலகியிருந்தால் தொலைந்து போக நேரிடும், நாட்டைப்பிடிக்க தேர்தலைத்தவிர சிறாந்த வழி ஏதுமில்லை என்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு விசாலமான திட்டங்களே இதை ஒடுக்கும் வன்முறை, அடக்குமுறைக்கு நிரந்தரமாக முடிவுகட்டப்பட வேண்டும்”
ஆயுதம் அது மாவோயிஸ்டுகள் தூக்கினால் அது தீவிரவாதம் அதுவே போலி மார்க்சிஸ்டு குண்டர்கள் எடுத்தால் பாதுகாப்பா? சந்தடி சாக்கில் கேரளாவைப்பாருங்கள், மேற்கு வங்கத்தைப்பாருங்கள் என்கிறார். அந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்ததால் தான் கேட்க வேண்டியிருக்கிறது, மாவோயிஸ்டை விட்டுத்தள்ளுங்கள் பாசிசமாய் மக்களைக் கொல்லும் போலி கம்யூனிஸ்ட் கட்சியை எப்போது தடை செய்யப்படும்?
நக்சல்பாரி இயக்கங்களின் மீது இப்புத்தகத்தினை திருப்பும் பக்கமெல்லாம் அவதூறுகள் நிறைந்திருக்கின்றன. சிஆர்இசட்(compact revolution zone) என்ற அமைப்பை ஏற்படுத்த தீவிரமாய் நக்சலைட் தீவிரவாதிகள் முயல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கொலைகாரப்படையான சல்வார் ஜுடூம் இப்புத்தகத்தில் நக்சலைட்டுகளுக்கெதிரான பகுதி மக்களின் படை என்ற பொய்யும் ஆணித்தரமாக நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல நேபாளத்தின் மாவோயிஸ்டுகளும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். நேபாளத்தின் மகத்தான மக்கள் எழுச்சி , நேபாள மன்னராட்சி அழிக்கப்பட்டதும் கவலையைத்தருகின்றன அறிவு ஜீவிக்கப்பட்டவர்களுக்கு. இப்புத்தகத்தில் ருசி கர்க் என்பவர் எழுதிய கட்டுரையில் மட்டும் தான் பழங்குடிகள் மக்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டது குறித்து சற்று விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையில் பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள், அவர்களின் கலாச்சாரம் அழிப்பட்ட விதம், தண்டகாரண்ய மக்கள் பல்லாண்டுகாலமாய் போராளிகளாக இருந்திருப்பது குறித்தும் தெளிவாக இருக்கிறது.
மாவோயிஸ்டு இயக்கமும் நேபாளா மாவோயிஸ்டு கட்சியும் இணைந்து இந்தியாவை ஆக்கிரமிக்கப்போகின்றன, மாவோயிஸ்டுகளுக்கு உல்பா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ போன்ற அமைப்புக்கள் நிதியுதவி அளிக்கின்றன போன்றா புருடாக்களை வழி நெடுக காணமுடிகின்றது. மேலும் ஒவ்வொரு மாவோயிஸ்டுக்கும் 1500 ரூபாய் நிதி வழங்கப்படுவதாகவும் அதுவும் கூட மாவோயிஸம் நிலைக்க காரணம் என்கிறார் இன்னொரு கட்டுரையாளர்.
அப்படியே 1500 ரூபாய் அல்ல 15000 ரூபாய் கொடுப்போம் இந்த புத்தி ஜீவிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தேசத்தை காக்க களத்திலிறங்கட்டும்.
எப்படி நக்சல்பாரி இயக்கத்தை இந்த நாய்களால் கொச்சைப்படுத்த முடிகிறது? உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்துபவனின் அர்ப்பணிப்பு 1500 ரூபாயில் அடங்கிவிடுமா என்ன?
கிருஷ்ணா ஹச்சேத்து என்பவர் நேபாள மாவோயிஸ்டு புரட்சிக்காரர்கள் என்ற கட்டுரையில் ஒட்டுமொத்தமாக நாங்கள் யார் என்பதை தனது தீர்வினைக்கூறி அவிழ்த்துப்போட்டு காட்டுகிறார்.
“1. மன்னரே, மாவோயிஸ்டையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது, அரண்மணையிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவது, மாவோயிஸ்டு கொரில்லாக்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வது.
2.புது அரசியலமைப்பில் மன்னராட்சியையும் வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு பொது புரிந்துணர்தலை ஏற்படுத்துவது
3.அரசியலைப்பில் எதையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள உகந்த தீர்வு.”
நேபாள மக்கள் கொடிய மன்னராட்சியை எதிர்த்து களத்தில் நிற்க ஏசி ரூமில் கழிந்து கொண்டிருக்கும் அரசாங்க கூஜா தூக்கிகளான இந்த அறிஜீவிக்கப்பட்ட கைத்தடிகள் இங்கிருந்து வழிகாட்டுகிறார்கள் “மன்னன் தேவையென்று”
இந்த புத்தி ஜீவிக்கப்பட்ட அறிவு ஜீவிகள் எப்போதும் மக்களுக்காக பேச மாட்டார்கள் அவர்கள் ஏகாதிபத்திய, ஆளும் வர்க்க பயங்கரவாத அரசின் கைக்கூலிகள் அதை இதோ எழுத்தாளர் அருந்ததி ராய் இதோ அம்பலப்படுத்துகிறார் “எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.எ.ஏ-ல் வரவில்லை. இந்த சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடம் காணலாம். நாட்டின் மிகப்பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களை நிறூவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடமிருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிபார்க்க முடியும் “
புத்தகத்தின் பெயர் : நக்சல் சவால் ( நக்ஸல் சவால் )
விலை : 80/-
விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600002
விற்பனை பிரிவு தொலை பேசி எண் : 044-42634283/84
குறிச்சொற்கள்: அருந்ததி ராய், நக்சல் சவால், நக்சல்பாரிகள், நக்ஸல், நேபாள மாவோயிஸ்டு, புத்தகப்பார்வை, மாவோயிஸ்டு, மாவோயிஸ்டுகள், விகடன் பிரசுரம், Green Hunt
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜூன் 14, 2010
சோறு
சோறு நடத்திய பாடம்
அது ஒரு கிராமம். ஆம் கிராமம் தான். இங்கு பாரதிராஜா படத்தில் வருவது போல் பச்சை பசேலென்ற வயல் வெளிகளை நான் பார்க்க வில்லை. அது மேட்டாங்காடு என்று சொல்லப்படும் அதாவது மழை வந்தால்தான் பிழைப்பென்ற பகுதி.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே……………. பெருமை வாய்ந்த தமிழச்சமூகத்தின் கூடப்பிறந்த பிறப்பான சாதி ஆதிக்கம் கடையைப்பரப்பி தாழ்த்தப்பட்டோரின் ரத்தத்தை குடிக்கும் நிகழவுகள் தவறாது நடக்கும் கிராமம் அது. என்னுடன் வேலை செய்த இருவர் இந்த ஊரில் தானிருக்கிறார்கள். அவர்களை பார்க்கத்தான் நானும் தோழரும் வந்திருக்கிறோம்.
அந்த நண்பர்கள் தன் ஊரின் சாதிக்கட்டுமானத்தைப்பற்றி சாதி ஆதிக்கத்தின் விளைவை அவ்வப்போது சொல்லுவார்கள். சில சமயம் இருவரும் ஒரே நாளில் விடுமுறை எடுத்து விட்டு ஊர்ல பிரச்சினை என்பார்கள். என்னைப்பொறுத்தவரை இதையல்லாம் அதிகம் கவனிப்பேன் அவர்களிடம் பேசுவேன். அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்கசாதிப்பிரச்சினையை இங்த நிறுவனத்தில் காது கொடுத்து கேட்டு ஆவேசமாக பேசும் நபர் நான்.
நானும் தோழரும் எங்கள் ஊரிலிருந்து அந்த கிராமத்திற்கு செல்வதற்கு அவர்களிடம் வழிகேட்டபோது இரண்டு முதல் மூன்று பேருந்து பிடிக்க வேண்டும் என்றார்கள். இவ்வொரு பேருந்துக்கும் அரை மணி நேரம் என ஒரு வழியாய் வந்து சேர்ந்து நண்பர் சொன்ன படி வந்து கொண்டிருக்கிறோம்.
அக்கிராமம் சரியாய் இரண்டாய் பிரிக்கப்பட்டிருக்கிறது. மெயின் ரோட்டுக்கு இருபுறமும் குடியிருப்பு பகுதிகள் அநியாயத்துக்கு வறண்டு போன நிலங்கள் அதற்கெதிராக போராடாத மக்களின் மீது அனற்காற்றை வீசிக்கொண்டிருந்தது. நண்பரின் செல் “not reachable ” என்றது. அவர் முன்னரே மேப் போட்டு கொடுத்திருந்தார் எப்படி வருதென்று. முதலில் ஓட்டு வீடுகளாகவும் தார்ஸ் போட்ட வீடுகளும் அந்த சிறு வீதிக்கு இருபுறமும் இருந்தது. கொஞ்ச தூரம் நடந்தவுடன் சந்திக்க வேண்டிய நபர் ராஜா வந்தார் . அவருடனே பயணித்தோம்.
அவர் சொன்னார் ” நீங்க முன்னாடி பார்த்த அந்த வூடுங்கெல்லாம் அந்த சாதிக்காறங்க ” ,அந்த வீடுகள் சுமார் 150 இருக்கும் அப்புறம் வறண்ட பாலைவனம் போல இருந்த அந்தப்பகுதியில் நடந்து சென்றோம். அனல் வெகுவாய் அடித்தது. நண்பர் சொன்னார் “இதுதான் எங்க ஊர் வாய்க்கால் ஆத்துல தண்ணீ வந்தா மழை வந்தா இங்கேயும் வரும்”. வரும் வழியில் கோயில் இருந்தது. “இதுதான் அவுங்க கோயில்” என்றார். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம். ஊர் வந்தது. ஊரை முதன் முறையாக யார் வந்து பார்த்தாலும் சொல்லிவிடுவார்கள். இது தாழத்தப்பட்டவர்களின் ஏரியாவென்று.
முன்னர் பார்த்த வீடுகளுக்கருகில் இருந்ததைப்போல அல்ல, 90 சதவிகிதம் குடிசை வீடுகள், சிலர் இப்போதுதான் கட்டிடங்கள் சிறியதாய் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ராஜாவின் நண்பர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். பேசிக்கொண்டிருந்தோம். மதிய வேளை நெருங்க நெருங்க நான் தோழரிடம் கிளம்பலாம் கிளம்பலாம் என்றபடி கிசுகிசுத்தேன். கிளம்பும் போது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டுமென்று பிடித்து கொண்டார்கள்.
யார் வீட்டிலும் அதிகம் சாப்பிட்டு பழகாதவன் நான். அது வரை ஹோட்டலில் மொத்தமே 15 தடவை கூட சாப்பிட்டு இருக்க மாட்டேன். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவேன். எங்கு போனாலும் சரி மதிய நேரம் நெருங்கும் போது ஏதாவது ஒரு பொய்யைச்சொல்லி கிளம்பிவிடுவேன். தவிர்க்க இயலாமல் சாப்பிட வேண்டிவரும் போது தர்ம சங்கடத்தோடு சாப்பிட்டு எழுவேன். தாழத்தப்பட்ட உழைக்கும் கிராமத்து மக்களின் அவர்களின் உணவு முறை எப்படி இருக்கும் அதைப்பற்றி நினைத்ததேயில்லை. ஏன் நினைக்கிறேன் ? அவசியமே அதுவரை எழவில்லை.
என் மனதிற்கு தெரிந்ததெல்லாம் வீட்டில் தான் கரெக்டா இருக்கும். வீட்டில் என்றால் கொதிக்க வைத்த குடிநீர் சுத்தமாக வடிகட்டி அப்படி இப்படி என்று அதுவரை எனக்குத்தவறாக தெரியவில்லை. எப்போதும் எங்கு சென்றாலும் உணவிற்கு முன் கிளம்பும் நான் தோழரோடு வந்திருப்பதால் பேசிக்கொண்டிருந்ததில் நேரத்தை விட்டுவிட்டேன். சில மாதங்களாகத்தானே தோழரே அறிமுகம் . அவரிடம் முன்னரே சொல்லவும் தவறி விட்டேன். ஒரு வழியாக சாக்கு சொல்லிவிட்டு தோழரை இழுத்துச்செல்லாத குறையாக கிளம்பினேன்.
கிளம்பும் போது என்னுடன் பணிபுரியும் இன்னொருவர் ” அதெல்லாம் முடியாது சாப்பிட்டுட்டுதான் போயாகணும்” என்றபடி கைகையை இழுத்துக்கொண்டு சென்றார். அருகில் அவர் வீடு. அது ஒரு குடிசை பனை இலையால் வேயப்பட்டிருந்தது. . அக்குடிசைக்கு வெளியே ஒரு கட்டிலைப் போட்டார்கள் . அது கயிற்றுக்கட்டில் வெள்ளைக்கயிறு பழுப்பு நிறமாய் பல்லைக்காட்டியது. அதற்கு எதிரில் இரு ஸ்டூல்களை போட்டார்கள் இரண்டிலும் இரு தட்டுக்கள் வைக்கப்பட்டன.
தட்டு நிறைய சோறு போட்டார்கள். எங்களை உட்காரச்சொன்னார்கள். வேறு வழியின்றி தயக்கத்தோடு சங்கடத்தோடு உட்கார்ந்தேன். தட்டிலிருந்த சோற்றைப்பார்ர்தேன். என் வாழக்கையில் இந்த கலரில் (லைட் பழுப்பு) சோறு இருப்பதே இப்போது தான் தெரிகிறது. ஏதோ குழம்பு ஊற்றினார்கள். பார்ப்பதற்கே வழவழப்பாக அருவருப்பாக இருந்தது. “ உட்கார்ந்தாயிற்றே இனி எழுந்திருக்கவும் முடியாதே”. தோழர் தயக்கமின்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
குழம்மில் கைகை வைத்தேன், எனக்கு என்னபோல் இருந்தது. மனதை திடமாக்கிக்கொண்டு சோற்றைப்பிசைந்தேன் குழம்போடு, “அய்யோ!!!!!! எந்திரிச்சும் ஓட முடியாதே” பிசைந்த சோற்றில் ஒரு கவளத்ததை வாயில் போட்டேன். என் வாழ்வில் அவ்வளவு கேவலமான சுவை அது. வயிற்றைக் குமட்டியது வாந்தி வந்துவிடுமோ பயம் எனக்கு, எதிரில் எல்லோரும் நிற்கிறார்கள். வேறு வழியே இல்லை.
கண்ணை இறுக்க மூடினேன். பிசைந்த சோற்றுக்கவளங்கள் எப்படி என் வாய்க்குள் போயின என்பது எனக்குத்தெரியவில்லை. ஒரு பெருமிதம் எனக்கு ” அப்பாடா ஒரு வழியா முடிச்சாச்சு” கிளம்பினேன் அங்கிருந்து. பேருந்தில் வரும் போது கூட தோழரிடம் எதுவும் பேச வில்லை. பேருந்து நிறுத்தத்தில் பேசிவிட்டு அவரும் நானும் கிளம்பிவிட்டோம்.
வீட்டில் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஹோட்டலில் சாப்பிட்டதாய் சொன்னேன். தோழர் கொடுத்த புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு கடுமையான செயலை செய்தது போல குழம்பினேன். இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்கள் உண்ணும் உணவு எனக்கு கேவலமாய்த் தெரிந்திருக்கிறது. அதைத்தின்றால் வயிறு குமட்டுகிறது. பச்சைத்தண்ணீர் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
எவ்வளவு கேவலமான வாழ்வை வாழந்திருக்கிறேன் எனில் அது எவ்வளவு கேவலமானது, நான் எவ்வளவு கேவலமானவன். அந்த சோற்றை தின்றுவிட்டுதான் இதோ இந்த சாலையை உழைக்கும் மக்கள் செப்பணிட்டார்கள். இதோ நான் படுத்திருக்கிறேனே இந்தக்கட்டிலை செய்தார்கள். வீட்டைக் கட்டினார்கள். அதில் சொகுசாய் வாழும் நான் அவர்களின் உணவை குற்றம் சொல்லிக்கொண்டு வாழும் போது , நான் இந்த மக்களிடமிருந்து எவ்வளவு அந்நியமாய் இருக்கிறேன்.எவ்வளவு கேவலமானவன்? எவ்வளவு கேவலமானவன்? எவ்வளவு கேவலமானவன்? நான் வெறுப்பாய் தின்ற சோற்றில் எவ்வளவு பெரிய பாடம் கற்றிருக்கிறேன்.
எப்படியும் பல ஆண்டுகளை கடந்து போன அந்த சம்பவம் என் நினைவில் அகலாத ஒன்றாகி விட்டது. எதிர்பாராத அந்நிகழ்ச்சி என்னுடைய நடுத்தர வர்க்கத்துக்கே உரித்தான டீசண்ட் -ஐ புரட்டிப் பிய்த்து எறிந்துவிட்டது.
https://kalagam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/
குறிச்சொற்கள்: அடிமைத்தனம், அவமானம், ஆதிக்க சாதி, கதை, கேவலம்.கதைகள், சோறு, டீசண்ட், தலித், தாழ்த்தப்பட்டோர், நடுத்தர வர்க்கம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஜூன் 9, 2010
இது பதினோராவது தாள்
உண்மையில் நான்
என்னதான் எழுதப்போகிறேன்
இது பதினோராவது தாள்
எதுவும் பிடிக்கவில்லையயனக்கு
எழுத்துக்கள் தடுமாறுகின்றன
நேற்றிலிருந்து எழுதிக்கொண்டேயிருக்கின்றேன்
தாள்களை கிழிப்பது அனிச்சையாய்
கொண்டேயிருகிறது….

என்னால் சிந்திக்க முடியவில்லை
நெஞ்சடைத்து செத்துப்போன
இருபதினாயிரம் குரல்கள் என்னை
நெருக்குகின்றன
ஒப்பாரிக்குரல்கள் செவியை
கிழிக்கின்றன
இரண்டு வருடம் தண்டனை
லட்சம் ரொக்க ஜாமீன்
வந்து விட்டது தீர்ப்பு
முதலாளி குற்றவாளியல்ல
சிரிக்கிறான் ஆண்டர்சன்

குடித்த மூத்திரம் வழிகிறது
(அ)நீதி மன்ற படிகளில்
மனதில் பதிய வை
இதுதான் சனநாயகமாம்
காந்தி கெ(V)டுத்த விடுதலையாம்
ராமனுக்கு மலச்சிக்லென்றால்
சோனியாவுக்கு சளுக்கென்றால்
கருணாவுக்கு வலிப்பென்றால்
செயாவுக்கு கொழுப்பென்றால்
எரியும் நாடு
அமைதியாயிருக்கிறது
இந்த அமைதியை சுவாசிப்பதற்கு
அந்த மீத்தைல் ஐசோ சயனைட்டை
சந்தோசமாய்சுவாசித்திருப்பேனே…….

கவிதையயழுதுவதற்கு பதில்
ஆயுமெடுத்து பழகியிருந்தாலாவது
எனக்கு நிம்மதி கிடைத்திருக்கும்
அதனாலென்ன
காலம் ஒன்றும் கடந்து விடவில்லையே.
போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!
குறிச்சொற்கள்: 1984, ஆண்டர்சன், காங்கிரஸ், பாஜக, போபால், விசவாயு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஜூன் 2, 2010
வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?
அட்ரா சக்கை,அட்ரா சக்கை
வினவில் வெளியான நர்சிம் குறித்த கட்டுரை மிகுந்த குற்ற உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது. சந்தன முல்லை எனும் பதிவரை நர்சிம் மிகக்கேவலமாக வர்ணித்திருக்கிறான். இச்சம்பவம் வினவினைப் படித்தபோதுதான் அறிய முடிந்திருக்கிறதெனில் பதிவுலகை விட்டு நாம் தள்ளிப்போயிருக்கிறோம் என்பது சூடு வைத்தாற்போல உறைக்கிறது.
ஒரு பெண் பதிவர் மட்டுமல்ல பலர் பாதிக்கப்பட்டு சிலர் எழுதுவதைக்கூட நிறுத்தியிருப்பதை அறியும் போது குற்றவுணர்ச்சிதான் ஏற்படுகிறது. காரணம் ஒரு பெண்ணோ ஆணோ பாதிக்கப்படும் போது/ ஒடுக்கப்படும் போது பேசாமல் அமைதியாயிருப்பது அல்லது கண்டுகொள்ளாமலிருப்பது மறைமுகமாக ஒடுக்குவதற்கு துணை போகிறது. நர்சிம் சந்தன முல்லையை மிகக்கேவலமாக பிறப்பைப்பற்றியயல்லாம் பேசிவிட்டு அதுவும் கதையாக வடித்து விட்டு அவரே மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டும் இடத்தை காலிசெய்து விட்டார்.
பார்ப்பன ஆணாதிக்க வெறிபிடித்த நர்சிமை விமர்சித்து வினவில் கட்டுரை வருகிறது. உண்மைத்தமிழனோ வினவைப் புறக்கணிக்க அறைகூவலிடுகிறார். ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? சாதிப்பிரிவினையை நமக்குள் துVண்டிவிட்டதுதான் காரணம் என்கிறார். இதுவரை சாதிபாராது நட்பு பாராட்டி வந்ததாகவும் வினவு இதை திட்டமிட்டு சீர்குலைப்பதாகவும் கூறும் உ.த “”எதாயிருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ பேசாதே”என்று தீர்ப்பு வழங்க மொக்கைக் குழுவினர் அங்கு சதிராட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
எல்லாவற்றையும் நாங்களே பேசிக்கொள்வோம் நீ தலையிடாதே
இது ஏதோ ஒரு குடும்பத்துக்குள் வெளியாள் மூக்கை நுழைத்தது போல பதறுகிறார் உண்மைத்தமிழன். அப்படியெனில் உ.த.வும் சந்தனை முல்லையும் ஒரே குடும்பம். சரி ஏண்ணே உங்க குடும்பத்து பபொண்ணான அப்புடி கேவலமா நர்சிம் பேசியிருக்காரு. நாங்களே பேசி தீர்த்துக்குவோம்னு சொல்றீங்குளே. இதுத்தாண்ணே புரியமாட்டேங்குது. நேத்து முளைத்த காளான் எனக்கே சுர்ர்ன்னுனுனுனு ஏறுதே ஏன்ணே உனக்கு கோவமே வரலீயா? சூடு சொரண இல்லாம கிடக்க நீ சரி சொரண தரலாம்னு வினவு பேசுனா எங்க பிரச்சின நீ தலையிடாதேங்குற.
உங்க பிரச்சினைன்னா அது உங்கள் (நர்சிம்& உ.த) தொடர்புடையதாக மட்டும் இருந்தால் தான். இப்பிரச்சினை அதை தாண்டி வந்து விட்டது.ஐமீன் வூட்டுக்கு வெளிய வந்துடுச்சு, ஸோ இது பொதுப்பிரச்சினை. உ.த அண்ணன் மாதிரி சொரணைக்கெட்டு கிடக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.
நீ தலையிடாதே
இதைக் கொஞ்சம் ஆராய்வோம் . என் மனைவியை நான் கொல்லுவேன் அடிப்பேன் அதை கேக்க நீயார்? என் தங்கச்சி அந்த கீழ்சாதிப் பையனை காதலிச்சா நான் மிதிப்பேன் அதைகேக்க நீயார்? தலித்துங்களும் நாங்களும் ஒண்ணாத்தான் இருக்கோம் நாங்க அடிச்சுக்குவோம் அதை கேக்க நீயார்? இந்த ஆத்து தண்ணிய விலை கொடுத்து நான வாங்கியிருக்கேன அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்?
கோக் நிறுவனம் தாமிரவருணியை வாங்கிய போது பு.ஜவில் ஒரு அட்டைப்படம் வந்திருந்தது. அதில் ஒரு குழந்தை தன் உடலெல்லாம் கொப்பளங்களோடு காட்சியளிக்கும். அப்போது படிக்கத்தெரியாத தாய்மார்கள் கூட படத்தைப்பார்த்து செய்தியை அறிந்து கண்ணீர் விட்டார்கள் தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக வசவுகளை பொழிந்தார்கள். உ.த.வின் பார்வையில் அந்தத்தாய்மார்களெல்லாம் கங்கைகொண்டான் கிராமக்களுக்கும் கோக் கம்பெனிக்கும் இருந்த உறவை கெடுத்தவர்களா என்ன?
ராஜபக்ஷே சொல்கிறான் இது எங்களுடைய பிரச்சினை நீ தலையிடாதே என்று? க.பிரியா போன்றவர்கள் சொல்வார்கள் ” பாத்தீயா நார்சீமைப்பத்தி பேசுனா ரா பக்¼ க்கு போயிட்டான்”. இது ஆதிக்கவாதிகளின் குரல். தங்களின் ஆதிக்கம் நீடித்துக்கொண்டே இருக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்கிறோம், நீ தலையிடாதே!!!
பாதிக்கப்படுவோர் வாய் திறந்து பேசிட உரிமை இல்லை. நாங்கள் நண்பர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ விசத்தை விதைக்காதே என்கிறார்கள். இந்த நாங்கள் என்றால் என்ன? நீங்கள் என்றால் என்ன?
உ.த தெளிவாக சொல்லிவிட்டார் க.பிரியா அழகாக கும்மியும் அடித்துக்கொண்டுமிருக்கிறார், நாங்கள் நபர்கள் எங்களுக்குள் யாரையும் அடிப்போம் நீ வந்து கேட்காதே என்று.அய்யா உ.த அப்படியயல்லாம் சொரணைக்கெட்டு எங்களால் இருக்க முடியாது. ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதைகேட்க உறவு முறை அவசியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதாபிமானம் , அவனும் பாதிக்கப்படுகிறான் நானும் பாதிக்கப்படுகிறேன் என்ற உணர்வு இருந்தால் போதும் , நக்சலைட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?
அட்ரா சக்கை,அட்ரா சக்கை
ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? தன்னுடைய ஆணாதிக்க சிந்தனையை பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்பதால் அதை புறக்கணிக்க வேண்டும். போரிலே / மக்கள் பாதிக்கப்படும் போது / சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருக்காதே போராடு, அந்த நாயை அடித்து விரட்டு என்பதால் அவர்களில் குடும்பம் போல் வாழும் உறவு சிதையுமாம். சிதையட்டுமே அந்த மானங்கெட்ட உறவுகள்!!!!
சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருத்தலை கற்றுக்கொடுக்கும் அந்த உறவு முறைக்குப்பேர் என்ன? “அவனைத்திட்டினால் அவன் கோவித்துக்கொண்டு விடுவான், அப்புறம் யார் மச்சி நமக்கு தண்ணி வாங்கி கொடுப்பா? என்ற ஊதாரியின் / பொறுக்கியின் பேச்சுக்கும் உங்களுக்கும் வித்யாசமிருக்கிறதா? இது வரை சாதிவெறிப்பதிவுகள்/மதவெறிப்பதிவுகள்/ஆணாதிக்கவெறிப்பதிவுகள் இல்லாத இடமாக தமிழ் வலை இருந்ததாகவும் வினவு அதை வலிந்து ஏற்படுத்துலது போலவும் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
வினவை புறக்கணிக்கச்சொல்வதன் நோக்கமே அவர்கள் எல்லாவிதமான ஆதிக்கத்தை எதிர்க்க மட்டும் செய்யவில்லை எதிர்க்கவும் சொல்கிறார்கள், அதுதான் இவர்களுக்கு வலிக்கிறது. எனக்கு விடுதலை வேண்டும் ஆனால் நான் போராட மாட்டேன் என்ற சுயநலவாத ஊற்றுக்கண்ணே இவர்களின் மூதாதையன். அது அப்படியே பரவி நீ எதுக்கு போராடுகிறாய் , அவர்கள் எல்லாவற்றையும் திட்டுவார்கள், நம்மைப்பிரிப்பார்கள் என்று பஜனை பாட ஆரம்பித்து விட்டார்கள். வினவை திட்டுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. வினவில் தனிநாபர் தாக்குதல் என்று கிழிய பேசுபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவிலிருக்கும் எழுத்துக்களை பார்ப்பது நலம்.
உண்மைத்தமிழன் & அங்கே கும்மியடிப்போரின் கவனத்திற்கு
மொக்கைமார்களே !!!
மீண்டும் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே வதைத்துக்கொள்ளுங்கள் யாரும் கேட்க வில்லை, மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களோடு தோள் கொடுக்காமல் எங்களால் இருக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மனிதர்கள், சொரணையுள்ளவர்கள். அப்புறம் இன்னொரு கும்மி சொல்கிறார் ” இப்படி திட்டுகிறீர்களே நர்சிம் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? ” இந்த பூச்சாண்டியெல்லாம் சொரணையற்றவர்களின் கண்களில்தான் கண்ணீரை வரவழைக்கும்.
நர்சீமின் யோக்கியதையை ஏன் அவரின் தெருக்களுக்கு கொண்டு செல்லக்கூடாது? இது லீனாவுக்கும் பொருந்தும். உன் கருத்து சரி என்று தானே சொல்கிறாய் மக்கள் மன்றத்தில் உரத்து முழங்கு உன் கருத்துக்களை, எமக்கும் மக்களுக்கும் இடைவெளி எப்போதும் இருந்ததில்லை, இவர்களைப்போல் அங்கு ஒரு பேச்சு இங்கு ஒரு பேச்சு என்று மொள்ளமாறித்தனம் எங்களால் செய்ய இயலாது. ஆணாதிக்கவாதிகளை தனிமைப்படுத்துவது மட்டும் போதாது, அவர்களை அடித்து விரட்டுவோம். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வினவுக்கு தோள் கொடுப்போம்.
- ஆணாதிக்க பொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியப்போம் !
-
- பெண்களை நுகர்பொருளாக்கும் எழுத்து புரோக்கர்களுக்கு பதிலடி கொடுப்போம் !!
-
- தமிழ்மணத்திலிருந்து ஆணாதிக்க பொறுக்கிகளை தூக்கியறியவைப்போம் !!!
குறிச்சொற்கள்: ஆணாதிக்கம், உண்மைத்தமிழன், கலகம், கார்க்கி, சந்தனமுல்லை, செங்கொடி, செருப்படி, நர்சீம், பொறுக்கிகள், வினவு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 9 Comments »
மே 31, 2010
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா………..
நேற்று நடந்த திமுகவின் உயர்நிலைசெயற்குழு கூடி 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாமக வுக்கு ஒரு மாநிலங்களவை பதவி அளிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. கடந்த நாடாளுமன்றதேர்தலின் போது ஈழமக்களை வைத்து வியாபாரம் செய்யும் போட்டியில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய ராமதாசு, தன் மகன் அன்பு மணிக்கு பதவி வாங்கும் நோக்கில் நாக்கை தொங்க விட்டுக்கொண்டு காத்திருந்ததில் உடனடி ஏமாற்றமும் பிற்காலத்தில் சில எலும்புத்துண்டுகளும் கிடைப்பது தெளிவாகி விட்டது.
கருணாவும் ராமதாசும் மானங்கெட்டவர்கள் என்பதற்கு கருணாவின் இந்த பதிலே சிறந்த எடுத்துக்காட்டு
“கேள்வி: பா.ம.க. சில நாட்களுக்கு முன்பு வரை உங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென்று அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?
பதில்: உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள்? யார் யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக் குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.”
அரசியல் கொள்கை கொண்ட கொள்கைக்கு நேர்மை இதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு ராமதாசு கருணா மட்டுமல்ல அவர்களின் சேவையாளர்களும்(தொண்டர்களும்) மாறிப்போயிருக்கிறார்கள். இது வியக்கத்தக்க முன்னேற்றம், மக்கள் தன்னுடைய எதிரியான ஆளும் வர்க்கதின் புரோக்கர்கள் யார் என்பதை அறியாமல் கிடக்கும் சூழலில் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளெல்லாம் ஒவ்வொன்றாய் வந்து “நான் தான் நான் தான் ” என்று போட்டி போடுகின்றன.
அணி மாறுவது என்பது சாதாரணவிசயம் என்று ராமதாஸ் கூறுவதும் அதை அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு திரிவதும் அரசியலுக்கு தேவையான ஒன்றாகி விட்டது. கவுண்டமணி சொல்வது போல “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
ஏன் உங்க தலைவர் அணி மாறுகிறார் என்ற கேள்விக்கு அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் ஒரே பதிலை சொல்லுகின்றன முக்கியமாக பாமக கட்சி சேவையாளிகளை சொல்கிறர்கள்”ஏன் எங்க அய்யா மட்டும் தான் மா
னாரா? ஏன் அவன் மாறல? இவ மாறுல? “
யாரும் யோக்கியமில்லை என்ன கேள்வி கேட்கக்கூடாது என்பதுதான் இவர்கள் வாதம். இவர்கள் கடந்த சில மாதங்களில் அவர்கள் மறந்தாலும் நம்மால் மறக்க முடியவில்லை. இந்த இரண்டு மானங்கெட்டவர்களின் கடந்த சில அறிக்கையின் முக்கிய சாரம்சங்கள். கடைசியாக திமுகவிற்கு ராமதாஸ் எழுதிய கெஞ்சல்
கடிதமும் உள்ளது.
——————————————————————————————————————————
காலம் நெருங்குகிறது என்று கருணாநிதி கூறியுள்ளது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், 14.8.2007 ல் காலம் நெருங்குகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை. ஆனால் அதற்கு கருணாநிதி காரணம் கூறியிருப்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன்.
வியாழன், 16 ஆகஸ்ட் 2007
———————————————————————————————————————————-
சென்னை ஆக-07.(டிஎன்எஸ்)
முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும், அது சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்வதுமாக பொழுதைக் கழிக்கிறார்., இதனால் கோட்டையில் ஒரு லட்சத்துக்கும் மேல் கோப்புகள் தேங்கியிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் உச்சநீதிமன்ற கண்டனத் துக்கு ஆளான விவகாரம் அரசின் நிர்வாக சீர்கேடு சம்பந்தப்பட்டதாகும். நீதிமன்ற கட்டளையை ஏற்று உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது. இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும். இதில் அப்பாவி வழக்கறிஞர்கள் பலிகடா ஆகியுள்ளனர். அதே சமயம் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் 3 மாதத்துக்குள் அறிக்கை பெறப்பட்டு வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதியும், அவரது அரசும் ஆடம்பர விழாக்களை நடத்து வதில் காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி விழாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாக புகார் எழுந்து உள்ளது.
மூன்று நாட்கள் கோட்டையை விட்டு 12 அமைச்சர்களும் விழாவுக்கு சென்று உள்ளனர். இந்த விழாவை சென்னையி லிருந்தே துவக்கியிருக் கலாம். மற்றொரு விழா மதுரையில் நடந்துள்ளது. இதில் 10 அமைச்சர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் முகம் சுழிக்கும் வகையில் போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன?
கோட்டையில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக என்னிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார். அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும், கோட்டைக்கு செல்வதில்லை. கோட்டைக்கு சென்றாலும் கோப்புகள் பார்ப்பதில்லை.
முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும், சின்ன சின்ன சினிமா விழாக்களை பலமணி நேரம் அமர்ந்து கண்டு களிப்பதிலும் பொழுதைக் கழித்திருக்கிறார். (எந்தெந்த நாளில் எந்தெந்த விழாக்களில் கலந்துகொண்டார் என பட்டியலை வெளியிட்டார்).
சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என கூறமாட்டேன். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்பதே எனது கருத்தாகும். இதுவரை 29 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறியிருக்கிறார்கள். இதுபற்றிய புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
———————————————————————————————————————————
Dinamlar 2009-04-11
காட்பாடி : “”அடிமையாக வாழ்வதை விட, சன்னியாசம் வாங்கிக் கொண்டு சாமியாராகப் போகலாம்,” என முதல்வர் கருணாநிதி பற்றி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அரக்கோணம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் வேலுவை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. வேட்பாளர் வேலு தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:கடந்த சட்டசபை, உள்ளாட்சி….
——————————————————————————————————
பெரும் பொய்யை நம்புபவர் கருணாநிதி – ராமதாஸ் காட்டம்!
சனி, 27 மார்ச் 2010 21:33 சின்னமுத்து Politics
“சிறு பொய்யை விட பெரும் பொய்களை நம்புபவர் தான் முதல்வர் கருணாநிதி” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார். “தமிழகத்தில் நடந்த மற்ற இடைத்தேர்தல்களின்போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில், பாமகவுக்கு 2வது இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதைக்கூட முதல்வர் கருணாநிதியால் ஏன் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்காக வருத்தப்படுவதாகவும், கவலைப்படுவதாகவும் பேசிய முதல்வர் கருணாநிதி, அக்கட்சிக்காக பென்னாகரத்தில் வாக்கு சேகரித்து பாமக மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்த மற்ற இடைத்தேர்தல்களின்போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?
கடந்த 4 ஆண்டுகளில் பாமக எத்தகைய வன்முறையில் ஈடுபட்டது என்பதை முதல்வரால் கூறமுடியுமா? 1977-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது, திமுகவினர் கலவரத்தை தூண்டிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஒரு மூத்த அமைச்சரே முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சாட்சியம் அளித்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தை கடுமையாக விமர்சித்த திமுக, பின்னர் அக்கட்சியுடன் தேர்தல் உறவு கொண்டது. மூதறிஞர் ராஜாஜியைப் பற்றி இழிவாக பேசிவிட்டு, பின்னர் அவர் வீடு தேடிச்சென்று கூட்டணி வைத்தது திமுக. சிறு பொய்யைக் காட்டிலும், பெரும் பொய்யையே நம்புபவர் தான் முதல்வர் கருணாநிதி” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
———————————————————————————————————————————–
|
தன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 03:45.49 AM GMT +05:30 ] |
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர் ஒவ்வொருவரின் காதிலும் பூ சுற்றிவிட்டது திமுகவின் செயற்குழு முடிவு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். |
வேலூரில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-தமிழக அரசை நடத்தி வரும் கருணாநிதி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதியாக விளங்குவதால், அவருடைய கட்சி இலங்கைத் தமிழர் பிரச்னையில் எடுக்கும் முடிவால் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் நிறைவு செய்யும் வகையில் திமுக செயற்குழுவின் முடிவு இல்லை.
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம், இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம்.
இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண்டுகளுக்கு …………………………………………………………………
போர்நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தி 3 முறை சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது அந்த கோரிக்கையை திமுக கைகழுவிவிட்டது. போர்நிறுத்தம் குறித்து செயற்குழுவில் ஒரு வார்த்தை கூட வலியுறுத்தவில்லை……………ராஜபக்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்படையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்.
————————————————————————
இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2009,——————————————————————————————–
மதுக்கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ் |
கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ் திருச்சி, ஆக. 17: மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்றார் பாமக நிறுவனர் ச. ராமதாஸ். திருச்சியில் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியது: “மதுவை ஒழிப்பது……………….————————————————————————————-
by janani on Mon Mar 22, 2010 7:08 am
…………………………………………………………………………..
தேர்தல் பொறுப்பாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி உள்ளது. இந்ததேர்தலில் அதிக ஓட்டுக்களை பெற்று தரும் பொறுப்பாளர்களுக்கு ராமதாஸ் மூலம் தங்கச் சங்கிலி, மோதிரம் வழங்கப்படும்.இந்த தேர்தலில் ஜெயித்தே வேண்டும். எனக்கு வெறி பிடிச்சிருக்கு, நம்மை வமானப்படுத்திய தி.மு.க.,வை
தோற்கடிக்க வேண்டும். எனக்கு பிடித்த வெறி உங்களிடமும் இருக்க வேண்டும்.தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. பா.ம.க., தொண்டர்களால் வெற்றிஎனும் பயிர் நட்டு, தண்ணீர் ஊற்றி, வளர்த்து, அறுவடைக்கு தயாராக உள்ளது.அது நல்லமுறையில் வீடு வந்து சேர வேண்டும்.
பா.ம.க.,வுக்கு மூன்றாவது இடம் என
கூறுகின்றனர். 1991, 1996, 2001ல் என மூன்று சட்டசபை தேர்தல்களிலும் தி.மு.க.,வுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. 2006ல் கூட்டணியில் இருந்ததால்
நாம் விட்டுக் கொடுத்தோம். அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில்பா.ம.க., வெற்றி உறுதியாகி விட்டது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,வினரே,
‘நாங்கள் பா.ம.க.,வுக்கு ஓட்டு போடுகிறோம். தி.மு.க., எப்படியாவது தோற்கவேண்டும்’ என, கூறுகின்றனர்.கருணாநிதி பிரச்சாரத்துக்கு ஏன் வருகிறார்?
உளவுத்துறை அறிக்கை படி பென்னாகரத்தில் பா.ம.க., வெற்றி பெறும் என தகவல்
கிடைத்துள்ளது. அதற்கு பயந்தே பிரச்சாரத்துக்கு வருகிறார். எல்லா சமுதாயமக்களையும் சந்தித்து பா.ம.க.,வினர் ஓட்டு கேட்க வேண்டும்.
செக்போஸ்ட்டுகளில் நிறுவனர் ராமதாஸ் காரை மட்டும் சோதனை நடத்தி, வேண்டுமென்றே அவமானப்படுத்தி வருகின்றனர்.
தி.மு.க., அமைச்சர்களுக்கு சல்யூட் அடிக்கின்றனர். யலலிதா, கருணாநிதிபிரச்சாரத்துக்கு வரும்போது, அவர்களது காரை சோதனையிடுவரா? திருச்செந்தூர்
இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். இங்கு படிக்காத
ஜனங்களாக இருப்பதால், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றுகின்றனர். லோக்சபா தேர்தலில் எந்த சமுதாய பெயரைச் சொல்லி தோற்கடிக்க செய்தனரோ, அவர்களுக்கு
இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
‘ராமசாமி, முனுசாமி’ பா.ம.க.,வில் சூசகம் :
பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளவர்களை
ராமசாமி என்றும், உள்ளூர் நபர்களை முனுசாமி என்றும் ராமதாஸ்
குறிப்பிடுகிறார். ”ராமசாமிகள் தேர்தல் விதிப்படி 25ம் தேதி வரை மட்டுமே
இருப்பர். உள்ளூர் முனுசாமிகள் தான் வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்லும் முயற்சியை எடுக்க வேண்டும். 25ம் தேதிக்கு மேல் தி.மு.க.,வைச் சேர்ந்த எந்த ராமசாமி இருந்தாலும் அவனை மரத்தில் கட்டிவைத்து அடியுங்கள், போலீஸில் ஒப்படையுங்கள். அவர்கள் ‘ஏசி’யில் படுத்து உறங்கியவர்கள். நாம் கலப்பை பிடித்தவர்கள். நமது வெற்றி நிச்சயமான ஒன்று.வெறியுடன் தேர்தல் பணியாற்றுங்கள்,” என, அன்புமணி ராமதாஸ் வீராவேசமாகபேசினார்.
————————————————————-
பீனிக்ஸ் பறவை போல் எழுந்து நிற்கிறது பாமக – ராமதாஸ்
புதன், 31 மார்ச் 2010 12:57 வெற்றி Politics
பாமக தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஒரு சக்தி என்பது பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பென்னாகரம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அந்த அறிக்கையில் பென்னாகரம் தொகுதியில் ஜனநாயகம் தோற்கடிக்கப் பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது .பென்னாகரம் இடைத் தேர்தலில் வலுவான கூட்டணியுடனும் , அனைத்து அதிகார வசதி வாய்ப்புகளுடனும் ஆளும் கட்சி தேர்தலை சந்தித்தது. முக்கிய எதிர்க்கட்சியும் நான்கு கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தேர்தலை சந்தித்தது.
ஆளும் கட்சி போன்று பணபலம் இல்லாத நிலையில் மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி களமிறங்கிய பாமகவின் நம்பிக்கை வீண்போகவில்லை. பணபலத்தையும் ஆளும் கட்சியும் அதிகாரப் போக்கையும் எதிர்த்து தனியாகப் போட்டியிட்டு 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளோம் . இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, தார்மீக ரீதியில் இது பாமகவுக்கு மகத்தான வெற்றியாகும்.
செல்வாக்கு இல்லாத பாமக என்ற சிலரின் கணிப்பை, பென்னாகரம் வாக்காளப் பெருமக்கள் பொய்யாக்கி தமிழக அரசியலில் பாமக அசைக்க முடியாத சக்தி என தீர்ப்பு வழங்கியுள்ளனர் . பீனிக்ஸ் பறவை போல பாமக எழுச்சியுடனும், உயிர்த் துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்க பாமகவுக்கு ஓட்டளித்த பென்னாகரம் வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணம் கொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டால் ஒழிய, ஜனநாயகத்தை வீழ்த்திக் கொண்டிருக்கும் பணநாயகத்தை ஒழிக்க முடியாது.இதற்கான சட்ட திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உரத்த குரல் கொடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
———————————————————————————————————
–
|
|
|
|
———————————————————————————————————————————–
கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை திமுகவுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை.
தோழமை கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஆதரவை விலக்கிக்கொண்டாலும், பாமக உறுதியாக இருந்தது.
இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம்.
முன்பு அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைக்கப்பட்ட சட்ட மேலவை கொண்டுவரப்படுவதற்கு, பாமக ஆதரவு தெரிவித்து வாக்களிப்பில் கலந்து கொண்டது. இந்த இணக்கம் தொடர பாமக விரும்புகிறது.
2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமைய பாமக விரும்புகிறது. அதனால் திமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்புகிறது.
2006ல் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட சிபிஐக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 2008ல் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.
அதேபோல் 2010ல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்
————————————————————————————————————————————
கடைசியாக ஒரு சந்தேகம்
இப்போது ராமதாசு கருணாவை பிடித்துப்போனதற்கு காரணம் என்னவாக இருக்கும் ?
1. ராஜபக்ஷேவும் கருணாவும் ஒன்று என்று இருந்தது போய் கருணா ஈழத்தின் மீட்பாளராகி விட்டாரா?
2. வன்னியர்களின் துரோகி இப்போது வன்னியத்தந்தை ஆகிவிட்டாரா?
3. டாஸ்மாக் இழுத்து மூடப்பட்டுவிட்டதா?
4.சட்டம் ஒழுங்கு மோசமாகி இருந்தது இப்போது பரிசுத்தமாகி விட்டதா?
5…………………………………………………………………………………………….
அட போங்கப்பா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…………

பச்சோந்தி எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா????
படிக்க வேண்டிய பதிவுகள்
1.
படிக்க வேண்டிய பதிவுகள்
1.
2.
3.
குறிச்சொற்கள்: அணிமாறி, ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கலைஞர், கேப்மாறி, திமுக, பச்சோந்தி, பாமக, ராமதாஸ்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 19, 2010
விளங்காத படிப்பும்
விளங்கவைக்கும் அரசியலும்
கடந்த வாரம் வெள்ளியன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. பத்திரிக்கைகளில் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக முதலிடம் வென்ற மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் மின்னுகின்றன. மாநில தகுதி பெற்ற நபர்களின் செவ்விகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டன. “நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன், இஞ்சினியராகுவேன், ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்”
அதிக மதிப்பெண் பெற்றோரை வாழ்த்த நான் என்னளவில் தயராயில்லை, காரணம் ஏன்பலர் குறைவான மதிப்பெண் வாங்கினார்கள் எனும் போது, அதிக மதிப்பெண்களைக்காணும் போது என்னையறியாமல் அதன் மீது வெறுப்புதான் வருகிறது. பக்கத்து வீட்டிலோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிலோ உள்ள பிள்ளைகள் தன் மகன்/மகளை விட அதிக மதிப்பெண் வாங்கும் போது நடக்கின்ற விசயம் எல்லோரும் அறிந்ததே.
காரணம் தவறு செய்து விட்டான் / ள். அது மன்னிக்க முடியாத தவறு. ஆம் அப்படி ஒரு தவறு. சரியாக மனப்பாடம் செய்யத் தெரியாததால் நேர்ந்த தவறு அது. உருத்தட்ட தெரியாததால் நேர்ந்த தவறு அது. இங்கே தவறு செய்ய நேர்ந்ததால் இனி அவ்வளவுதான் வாழ்க்கை. தகுதியற்றவர்களெல்லாம் அறிவுரைக்கு வரிசையாய் நிற்பார்கள். தேர்வுகளில் தோல்வியுற்றவர்களை விட மதிப்பெண் குறைவாக வாங்குவோரின் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
தோல்வியடைந்து விட்டால் வேறு வழியில்லை மறு தேர்வுதான் வழியில்லை. இப்போதுதான் உடனே நடக்கிறது மறுதேர்வு, முன்பெல்லாம் ஒரு வருடத்தை தொலைக்க வேண்டியதுதான். இம்ப்ரூவ்மெண்ட் என்பது கூட 12 வகுப்பில்தான். பத்தாம் வகுப்பின் தேர்வு முடிவுகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆம் மதிப்பெண் குறைவெனில் முதல் பிரிவு கிடைக்காது, பள்ளியே பார்த்து ஏதாவதென்று பிச்சை போடும்.
தேர்வில் தோல்வியடைந்தவர்கள் நாளிதழ்களைப்பார்த்தவுடன் தெரிந்துவிடும் என்பதால் வெளியே வரமாட்டார்கள். மதிப்பெண் குறைவானவர்களோ அவர்கள் தகுதி பள்ளியில் ஒட்டியிருக்கும் மார்க் லிஸ்டை பார்த்தவுடந்தான் தெரியும். மதிப்பெண் குறைவு என்றவுடன் தெரிந்த முகங்கள் யாராவது தெரிந்தால் ஓடி ஒளியும். யாராவது மார்க் கேட்டால் என்ன சொல்வது தெரியாது? மனம் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்துகிடக்கும்.
அதிக மார்க் வாங்கிய ஜீவிகள் பள்ளிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். தெரிந்தவனையெல்லாம் பார்த்து மதிப்பெண் விசாரித்து கொண்டிருப்பார்கள். மதிப்பெண்ணை கூட்டி சொன்னால் இதுதானே உன் மதிப்பெண் என்று எழுதி வைத்திருப்ப்பதை சொல்லுவார்கள். இப்படி தலை கவிழ்ந்த எத்தையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.
வீட்டிலோ நிலைமை நிலை பூடாகரமாகிக்கொண்டிருக்கும். தந்தை சொல்லுவார்”ஏன் நாயாட்டம் தின்னத்தெரியுதுல்ல என்னடா மார்க் வாங்கியிருக்க, அய்யோ என் பேரை கெடுத்துட்டு வந்து நிக்குதே, தாய் தல்யில் அடித்துக்கொண்டு அழுவார் பக்கத்து வீட்டு முருகேசன் உன்னமாதிரிதாண்டா ஸ்கூலுக்கு போறான், அவன் என்னடா மார்க்கு? அவன் எப்புடிடா மார்க் வாங்குனான்? அவன் மூத்திரத்தை வாங்கிகுடி”.
அவன் மூத்திரத்தை வாங்கிக்குடி இது புகழ்பெற்ற வாசகம், ஊர் கடந்து, மாவட்டம் கடந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக்கிடக்கின்ற வார்த்தை. அவ்வார்த்தையை பத்து பேர் முன் சொல்லும் போது வருகின்ற அவமானம் அதுதான் பலருக்கும் முதல் அவமானமாக இருக்கும். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும், , வெடிக்கும் அழுகையை கைகள் பொத்தி பொத்தி அடக்கும். ஏதும் செய்ய இயலாமையால் தலை குணிந்து கிடக்கும் முகம் .
ஆதரவாய் சொல்பவர்கள் கூட ஒன்றை அழுத்திச்சொல்லுவார்கள்”என்ன பண்றது தப்பு பண்ணிட்டே”. இப்போது நீ மேற் கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பது முடிவு செய்யும் அதிகாரம் உனக்கு இல்லை. சொந்தக்காரன் வந்து தன் மகனின் பெருமை பீற்றிக்கொள்ளுவான். வீட்டிலே காரியக்கமிட்டி கூட்டம் கூடும் இந்த தண்டத்தை என்ன மேற்கொண்டு படிக்க வைக்கலாம்? ஆலோசனைகள் வெளியார்களிடமிருந்தும் வரவேற்கபடும்.பின்னர் எடுத்த முடிவின் படி ஏதோ ஒன்றில் சேர்க்கவைக்கப்படுவான்/ள்.
பத்தாவது மற்றும் பணிரெண்டாவதில் அதிக மதிப்பெண் எடுத்ததாலேயே அவன் உயர்ந்தவனாகிவிட்டானா? குறைவான மதிப்பெண் வாங்கியதாலே தாழ்ந்தவனாகிவிடுவானா? மேற்கொண்டு படிக்கப்போகும் இடத்தில் முதல் நாள் ஆசிரியர் கேட்பார்.”யார் எவ்வளவு மார்க் சொல்லுங்க?” மறுபடியும் ஆரம்பித்துவிடும் வேதனை.
பத்தாவதிலேயே அதிக மதிப்பெண் எடுத்த அனைவராலேயும் +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, +2-ல் அதிக மதிப்பெண் எடுத்த அனைருமே பட்டப்படிப்புகளில் / பட்டயப்படிப்புக்களில் அதிகம் சாதித்து விடுவதில்லை. அறிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மனனம் செய்யும் திறமை தான் இதை தீர்மானிக்கிறது.
முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அரிசி விலை கிலோ எவ்வளவென்றால் தெரிவதில்லை.கான்வெண்டில் கிழித்த மாணவனுக்கு கடைக்கு போய் மீன் வாங்கிவிட்டு வர தெரிவதில்லை. ஏன் அரிசி விலை ஏறியது, ஏன் விவசாயம் அழிந்து போனது என எதுவுமே தெரியாமல் / தெரியவைக்கப்படாமல் தான் அனைத்து மாணவர்களுமே வளர்க்கப்படுகிறார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாத சமூகம் அடிமைத்தனமான சமூகம் உருவாக்கப்படுகின்றது.
இதில் அதிக மார்க் எடுத்தவன் உயர்ந்தவன் குறைந்த மார்க் எடுத்தவன் தாழ்ந்தவன் என்பதுதான் வேடிக்கை. இந்தக் கல்விமூறையால் எதை மாற்ற முடியும் உன்னால்? ஏன் உன்னுடைய வாழ்வுக்கான செலவை உன் கல்விமூறையால் மாற்ற முடியுமா? அழிந்து போன விவசாயத்தை மாற்ற முடியுமா ? எதையுமே மாற்ற முடியாத இந்தப்படிப்பு முறை உயர்ந்ததா என்ன? இப்படி மனிதனின் வாழ்வுக்கு தம்புடி அளவுக்குக்கூட பயன் படாத இந்தப்படிப்பு முறையில் அதிக மதிப்பெண் எடுத்தால் என்ன?
குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக இக்கல்விமுறை மீது வராத கோபம் தனிப்பட்ட மாணவர் மீது வருகிறது. லட்சக்கணக்கானோரில் சிலர்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிகிறதெனில் அது யாருடைய தவறு கல்விமுறாஇயின் மீதா? அல்லது அதை படித்த மாணவர்கள் மீதா ? சிஅல்ர் கேட்பார்கள் அவன் எப்படி படித்தான். அந்த அவனோ அல்லது அவளோ நூற்றிலே எத்தனை பேர். ஆக நூற்றுக்கு அல்லது ஐம்பதிற்கு ஒரு மாணவன்தான் அதிக மதிப்பெண் பெற முடியுமெனில் அக்கல்வி முறை வகுப்பில் நூற்றுக்கு 10 பேருக்கா அல்லது 90 பேருக்கா?
பத்தாவதெனில் 375 மதிப்பெண்தான் பார்டர் பணிரெண்டாவதில் 950 தான் பார்டர் அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்ததெல்லாம் வேஸ்ட் இதுதான் சமூகத்தின் பார்வை. என்னுடன் படித்த மாணவன் பத்தாவதில் மதிப்பெண் குறைவு ஆனால் டிப்மோவில் 92 % மதிப்பெண் வாங்கினான். பின்னர் பி.இ. முடித்தும் விட்டான். அதனால் அவன் உயர்ந்தவனல்ல காரணம் அவன் இன்னமும் அடிமையில் சுகம் காணுபவன். அவன் இன்னமும் மக்களைப்பற்றி கவலைப்படாதவன். ஆக படிப்பிற்கும் வாழ்வுக்கும் சுயமரியாதைக்கும் துளியும் சம்பந்தமிருப்பதாய் தெரியவில்லை.
எது தகுதிக்குறைவு?
இந்த முறை தேர்வு முடிவுகள் வந்ததுமே சிலர் ஆங்காங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்கொலை எனபது “அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்ற சிந்தனை” மதிப்பெண் குறைவையும் தோல்வியடைவதையும் மாபெரும் குறையாக காட்டும் சமூகம் தான் முதல் குற்றவாளி. மதிப்பெண் குறைவு/ தோல்வி எனில் வெளியில் தலை காட்ட முடியாது என்ற நிலைமைக்கு என்ன காரணம்? மாணவர்களுக்கு சமூகத்தைப்பற்றிய அறிவு புகட்டப்படாமலிருப்பதே இதன் காரணம். சின்ன மருது புலியை அடக்கியதான் மூன்றாம் வகுப்பு பாடங்களில் வந்தது. அவரின் திருச்சிபிரகடனம் வாத்தியாருக்கே தெரிவதில்லை. இங்கு ஆசிரியரை இழுக்கக் காரணம் அந்த 3-ம் வகுப்பு படித்த மாணவன் தானே பிற்காலத்தில் ஆசிரியராகிறான்.
மாபெரும் துரோகி காந்தி இந்த நாட்டின் தேசத்தந்தையாக மாணவர்களின் மனதில் பதியவைக்கப்படுகிறது. புரட்சியாளன் பகத்சிங் புறக்கணிக்கப்படுகிறார்.அண்ணா, கருணா நிதி, கூத்தாடி எம்ஜிஆர் செயா பாடங்கள் படிப்பாக வருகின்றன. ஆதிகால சங்க இலக்கியங்கள் என்ற பேரில் எது தேவை எது தேவையில்லை என்பதெல்லாம் தெரிவதில்லை. மனப்பாடம் செய், மனப்பாடம் செய் இதுதான் தேர்வில் வெற்றி பெற உத்தி.
பத்தாவதில் பீட்டர் கையை வைத்து சுவற்றில் வழியும் நீரை அடைப்பான். அது ஒரு கதை. அந்தக்கதையை கதையாக எப்படி எழுதுவதென்று யாரும் சொல்லித்தரவில்லை. மனப்பாடம் செய்,மனப்பாடம் செய் இதை த்தா சொன்னார்கள். மனிதனின் மூளையை சிந்திக்கச் சொல்லவில்லை. மனப்பாடம் செய்ய மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள். போராட்டம் தவறென்றார்கள். அரசியல் தவறென்றார்கள்.
என் அன்பு மாணவனே,
போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும் துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.
அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள் நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது
படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்? உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்?
பணமின்றி படிப்பதற்கு படிப்பொன்று இருக்கிறது. ஆம் மக்களைப்படி, அவர்களிடமிருந்து கல், அவர்களுக்கே கற்றுக்கொடு, அதற்காக உன்னை படிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த விளங்காத படிப்பை விளங்க வைக்க மக்களையும் சேர்த்துப்படி. மதிப்பெண் குறைவென்றும் தேர்வில்தோல்வியுற்றனென்றும் உன்னை கிண்டலடித்தவர்களை எதிர்த்து , போராத அடிமைகளே என்று நீ எள்ளி நகையாடு. இனி நீ தான் ஆசிரியன்.
(தாலி – இதைப்புனிதமாக கூறவில்லை, பலர் கடைசியாய் வேறு வழியின்று வைக்கும் ஒரு பொருள் என்ற அளவில் மட்டும்)
குறிச்சொற்கள்: +2 தேர்வு முடிவுகள் .10தேர்வு முடிவுகள், எது தகுதிக்குறைவு?, எம்ஜிஆர், கருணாநிதி, சின்ன மருது, செயா, தவறு, திருச்சிபிரகடனம், தேர்வுகளில் தோல்வி, பி.இ.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
மே 11, 2010
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதாவது 2009ம் ஆண்டு செப்டம்பர் 17 பெரியார் திராவிடர் கழகம் நான்கு புத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பினை வெளியிட்டிருக்கிறது. அதில் அதிமுக்கியமான புத்தகம் ஒன்று இருக்கிறது. அதுதான் ரசியாவின் வெற்றி.
அப்புத்தகத்தில் குடி அரசு ஏட்டில் 23.07.1933 அன்று பெரியார் ரசிய பொருளாதார வளர்ச்சி பற்றி எழுதிய ஒரு கட்டுரையும், ரசியாவின் கூட்டுறவு அமைப்புக்கள் குறித்து அவர் ஈரோட்டில் ஆற்றிய உரையும், ,இராசிபுரத்தில் நடைபெற்ற சேலம் மாவட்ட ஜமீன்தாரல்லாதார் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும், திருமணத்தைப்பற்றி பெரியார் எழுதிய கட்டுரையும் இடம் பெற்று இருக்கின்றன.
அதில் ருசியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன் என்ற கட்டுரையை மட்டும் வெளியிடுகிறோம். 77 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்த எழுத்துக்களின் தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாயிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் களில் ஒருவரான தோழர்.ஸ்டாலின் மீதான அவதூறுகள் இன்றல்ல,
அப்போதே தொடங்கி விட்டது முதலாளித்துவம்.
பாட்டாளிகளால் படைக்கப்பட்ட பொன்னுலகை தனக்கேயுரிய பாணியில் வளக்குகிறார் தந்தை பெரியார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவையற்றது, ஸ்டாலின் காலம் என்பது சிதைவுற்ற சோசலிமென்று கூறும் புரட்டல்வாதிகளின் செவிட்டில் அறையும் பெரியாரின் எழுத்துக்கள் இதோ………………….
—————————————————————————
ருசியாவின் வெற்றி
ஐந்து வருட திட்டத்தின் பலன்
ருசியாவில் 1917Šல் நிகழ்ந்த புரட்சிக்குப்பின்னர் அந்நாடு உலகமக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பமும் ஏழைமக்களும் ரசிய சமதர்ம திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப்புகுத்தி மிகுந்த தீவிரமாய் பிரச்சாரஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாது உண்டு வரும் சோம்பேறி செல்வான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும், அவர்தம் பத்திரிக்கைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்க பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருசியாவைப் பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலகமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ்சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந்திருக்கின்றனவென்று கூறியும்வேறு பல தீய முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
ருசியாவின் சமதர்மக் கொள்கை ஒரு போதும் நடைமுறையில் சாத்தியமாகனாது என்று புகன்ற ராஜதந்திரிகளும், ருசியாவில் தனியுடமையயாழிந்து பொதுவுடமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சியும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்கரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்று தவறென்று தானே ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரசியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரசிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலகமெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங்காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பாழுது ரசியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக்கொண்டிருக்கிறதென்றே கூற வேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாட்சண்யமாக தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும் தவறென்று கூறத்துணியார். ரசியாவில் மனிதனுக்கு சுதந்திரம் அதிகமில்லையயன்று கூறப்படுகின்றது.
தனிமனிதனுடைய சுதந்திரத்திற்கு போதிய இடமிருப்பதாக கூறப்படும் நாட்டிலுள்ள மக்களை விட ரசிய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையுமிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும் உடுக்க உடையும், ஒண்ட நிழலும் , படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய் இல்லை லட்சக்கணக்காய் பட்டினியாலும் நோயாலும் மடிந்த ருசியா நாட்டிலே பட்டினியயன்றால் இன்னதென்று எவரும் அறியாதபடி, நோய்என்றால் , இன்தென்பதை எவரும் உணராதபடியும் நாளைக்கு உணவிற்கு என் செய்வது, வியாதியால் இரண்டுநாள் படுத்துக்கொண்டால் நமது நிலையயன்ன? நமது குடும்பத்தின் கதியயன்ன ? என்ற கவலையே அறியாத மக்களாய் வாழும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் திடுக்கிட செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.
ஐந்து ஆண்டுத் திட்டம்
பஞ்சத்தாலும் பொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிமைமையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரசியா உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத் திட்டமொன்றைத் தயாரித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்து விட வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தனர். வேலையற்று , தொழில்முறைக்கொள்ளையும் விபச்சாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில்முறையில் ஈடுபட்டு தங்களின் துற்செயலை ஒழித்து நாட்டின் நலனைக்கோரி உழைக்க ஆரம்பித்து விட்டனர். பொருள் உற்பத்தி 5 வருட திட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றுவிட்டது.
தங்கள் ஆட்சி முறையைப்பற்றி பெருமை பேசிக்கொண்ட ஐரேப்பாவும் , அமெரிக்காவும் உலக வர்த்தகத்தில் ரசியாவை எதிர்த்து போராட முடியவில்லை. உலகத்து மார்க்கெட்டிலெல்லாம் ரசியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி தானங்களையயல்லாம் திடுகிடுக்கும் படி செய்து விட்டது.
“பசி வந்திடப் பத்தும் பரந்து போம் ” என்னும் பழமொழியைப்பொல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப்பற்றி கதை கூறுவதில் பயனென்ன ? பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் வயிறு நிரம்பும்படியான கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துடமையை ஒழித்து பொதுஉடைமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிறதேசங்கள் உயவுப்பொருளை கொடுத்து ஒரு போதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத்திற்குள் உணவுப்பொருள்களை பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர்.
5 வருடத்திற்குள் இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள் , இவ்வளவு ஆடுமாடுகள் ,
இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும்,
இத்தனை மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்கவேண்டுமென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்கு வருடத்திலே ஐந்து வருடத்திட்டத்திற்கண்ட பெரும்பாலானவைகள் பூர்த்தியாகிவிட்டதால்திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர்.
இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப்பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகைய திட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலைசெய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்து வருகின்றன.
ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியாகி, உற்பத்தியான பொருட்கள் விலையாகாமல் பலவிதத் தொல்கைள் ஏற்படுவது நிச்சயம். இதையே ரசியாவும் எதிர்பார்க்கின்றது.
தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரை வயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரணமென்ன என்பதை ஏழைமக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுது தான் முதலாளிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியால் தியங்கும் படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடை மலையயனத்துலங்கும்.
ருசிய சமுதாய அமைப்பு
உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன ? கோடிக்கணக்கான மக்கள் தினசரி 8 மணி நேரம், 10 மணிநேரம் வேலை செய்து வருகின்றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக் கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச்செல்ல ஒரு குதிரை பூட்டிய வண்டி போதுமானது. தன்னிடம் ஏராளமான பணம் இருக்கிறதென்ற திமிரினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டியோடும் படியான வண்டியைச்செய்து அதற்கென்று பல மனிதர்களை குறைந்த சம்பளத்தில் வேலையாளாக வைத்துக்கொள்கிறான். உண்மையான உணவுப்பொருளை உண்டாக்க வேண்டிய பல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கெள்கிறான். இவன் தன் அவசியத்திற்குமேற்பட்ட குதிரைகளை உபயோகித்துக்கொள்வதால் குதிரை விலை அதிகமாகி விடுகிறது.
இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து உடலைக் கெடுத்து, ஒண்ட இடமின்றி கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத்துறங்கும் தொழிலாளி குதிரை வண்டியைத் தானே இழூக்க வேண்டியதிருக்கின்றது.
பணக்காரன் வண்டியில் பூட்டிய தேவைக்கதிகமான குதிரை ஒன்றை இந்தத் தொழிலாளிக்குப் பூட்டினால் தொழிலாளிக்கு எவ்வளவு உதவியாயிருக்கும். இதன் நுண்பொருளை ஆய்ந்து தான் ரசிய சமதர்மம் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவுடமைத்தத்துவம்
உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்து வரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலேயே இன்று காணத்திடைக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத்திண்டாட்டம் உண்டாயிராதென்பதே பொது உடைமை இயக்கத்தினரின் எண்ணம்.
ரசிய பொதுஉடைமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையான நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பதெற்கென்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலககில் தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழ முடியும்.
பொதுவுடமை என்றால் என்ன ?
“எல்லாப்பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனுசீகத்தன்மையை விருத்தி செய்து கொள்ள முடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவேயாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாக பங்கிட்டுக் கொள்வதென்பதே இதன் பொருள். வயிற்றுப் பசிக்கு உணவு தேடுங்காலமும் தூங்கும் காலமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாக வாழுங்காலம். அது மக்கள் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்துவம். ” என்று பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய்துள்ளார்.
இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொதுவுடமைக் கொள்கையை ஒப்புக் கொண்டு நடந்தால் தான் முடியும். இந்த நோக்கத்துடன் தான் இன்றைய ரசிய ஆட்சி நடந்து வருகிறது. இந்நோக்கம் வெற்றிபெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சதிகாரமுள்ள பிரதிநிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரசியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளனர்.
முதலாளிகளென்போர் யார்?
ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம், அறிவுவிருத்தி முதலான பெருக்க பெரிதும் திட்டங்ள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருட்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிறநாடுகளில் விற்பனை செய்தனர். சில தொழிலில் இலாபமும் சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும் சர்க்காரே முதலாளியாக இருப்பதால் நட்டத்தை லாபம் வரக்கூடிய பொருட்களிலிலிருந்து ஈடு செய்து கொள்ள முடிகிறது.
உற்பத்தி செலவுகளை யயல்லாம் காத்து 100க்கு 10 அல்லது 100க்கு 20 பாகம் தொழிலாளிகளின் அபிவிருத்திக்காக செலவழித்து வருகிறார்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிகளிலும் . தொழிலாளர்களுக்கு விளையாடுமிடம், வாசகசாலை, குழந்தைகளுக்கு பால்கொடுக்கவும் , தாலாட்ட அறைகளும், தொட்டிலும் இன்னும் பல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு ஆகாயவசனி (ரேடியோ) மூலம் சோவியத் ஆட்சி முறையைப்பற்றி பிரசங்கங்கள் மூலம் அறிவுவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
சோவியத் அட்சியினர் எதையும் ஆராய்ந்தே செய்வர். ஆய்ந்து நலமென்று கண்டால் இன்னதை இவ்வளவு காலத்திற்குள் முடிக்கவேண்டுமேன்ளு திட்டம் போட்டுக்கொள்கின்றனர். உடனே அமலுக்கு கொண்டு வருகின்றனர். உற்பத்தி நோக்கத்தை அதிகப்படுத்துவதென்றால் அதன் நோக்கத்தை விளக்கிக்கூறி அவர்களுக்கு உற்சாகமூட்டி எளிதில் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்து கொள்கிறார்கள்.
விவசாயம்
ரசியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சிலபாகம் சர்க்கார் பண்ணைகள், சிலபாகம் குடியானவர்கள் கூட்டுறவாக பயிரிடும் பண்ணைகள், மற்றொரு பாகம் தனிவிவசாயிகள் தனியாக பயிரிடும் நிலம் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இயந்திர கலப்பைகளை உபயோகித்தால்தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு நிலங்களாக இருந்தால் இயந்திரக்கலப்பையால் உழ முடியாது.
எனவே தான் சர்க்கார் பொருளாதாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனங்களும் பொதுவாக இருக்க வேண்டுமென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆகவேதான் ஐந்தாண்டு திட்டம் ஏற்படுத்தி 1928-1933 அதற்குள் நிலத்தில் 100Šல் 20 பாகத்தை கூட்டுறவு விவசாயமாக்கி சிற சிறு வயல்களாக ஏற்படுத்தியிருந்த வரப்புகளையயல்லாம் வெட்டி ஒரு சமமான பாகமாக்கி இயந்திர விவசாயத்திற்கு ஏற்ற விதமாக்கி விடவேண்டுமென்று திட்டம் போட்டார்கள்.
4 ஆண்டுகளுக்குள் 100Šல் 60 பாகம் கூட்டுறவு விவசாயத்திற்கு முன் வந்து விட்டது. விவசாயம் விருத்தியாக வேண்டும் விருத்தியாக வேண்டும் என்ற வீண் வெற்றுரைகளை அங்கு காண முடியாது. இன்ன 4ல்லாவில் இவ்வளவு கோதுமைகளை விளைவிக்க வேண்டுமென்று சர்க்கார் திட்டம் போடுவார்கள். உடனே அதை அமலுக்கு கொண்டு வர ஸ்தல சோவியத்திற்கு உத்தரவு கொடுக்கப்படும். அதை அவர்கள் உடனே நடத்த முனைந்து விடுவார்கள். இதன் பயனாக 100க்கு 80 பாகம் விவசாயம் சர்க்கார் பண்ணையாக இயந்திரங்களின் முலம் நடைபெற்று வருகின்றது. 40,000 இயந்திர விவசாயக்கலப்பைகள் வேலை செய்து வருகின்றன.
ரசியா, விவசாயத்தைப்போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலை செய்து விருத்தி செய்து வருகின்றது. அதன் கைத்தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கு அறியலாம்.
தண்டவாளத்தில் ஓடும் கார்கள் 12,000 என்று திட்டம் போட்டார்கள். 1931 க்குள்ளாக 20,000 தயாராகிவிட்டன. 1933 க்குள் 825 ரயில் வண்டிகள் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார்கள். 1932க்குள் 812 வண்டிகள் செய்யப்பட்டு விட்டன. 1913ம் வருடத்தில் 170லட்சம் ஜோடுகள் தயாராயின. 1931 ல் 768 லட்சம். இது திட்டத்திலிருந்து 167 லட்சம் அதிகம். 1913ல் 94,000 டன் சோப் உற்பத்தி செய்து விட்டனர். 1931 ல்1,89,000 டன் உற்பத்தி செய்து விட்டனர்.
முன்னேற்றம்
உலகத்திலுள்ள பெரிய இரும்புத்தொழிற்சாலைகளில் ஒன்று ரசியாவிலிருக்கிறது. அதன் பிரதம அதிகாரியாய் ஒரு இந்தியரே இருந்து வருகிறார். இங்கிலாந்தில் இரும்பு உற்பத்தி 40 லட்சம் டன்னிலிருந்து 95 லட்சம் டன் ஆக 35 வருடம்மாயிற்று. அமெரிக்காவில் இத்தகைய முன்னேற்றம் அடைய 8 வருடமாயிற்று. ஜெர்மனியில் 10 வருடமாயிற்று. ஆனால் ரசியா 1 வருடத்தில் இந்த முன்னேற்றத்தையடைந்து விட்டது. நிலக்கரியில் 530 லட்சம் டன் உற்பத்தியைச் செய்யத்திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தது, வெற்றியும் கண்டுவிட்டது. ரசியாவில் 1930 ம் ஆண்டு புகைரதங்கள் 9 மோட்டார்கள் 0 செய்யப்பட வில்லை. 8,550 கார்களுக்கு தனி பாகங்கள் பொருத்தி வண்டியாக செயல் பட்டன.
இப்பொழுது நாள் ஒன்றிற்கு 65 மோட்டார்கள் ரசியாவிலே உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயத்திலே 100க்கு 20 பாகம் தவிர மற்றவைகள் சர்க்காருக்கே உரியது. சர்க்காரைத்தவிர தனி மனிதர்கள் கடன் கொடுத்து வாங்கினாலும் , வியாபாரஞ் செய்தாலும் கிரிமினல் குற்றமாக ரசியாவில் கருதப்படுகிறது.
எண்ணை உற்பத்தி செய்யும் தேசங்களில் ரசியா இரண்டாவது ஸ்தானத்தையும் , இயந்திர உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும், விவசாய எந்திரக் கருவிகளில் முதல் இடத்தையும் பெற்று விளங்குகின்றது.
தங்க உற்பத்தியின் மதிப்பு அவர்கள் திட்டத்திற்கு ஒன்றரை மடங்கு அதிகமாக கிடைத்து விட்டது.
கல்வி
1914-ல் 70,00,000 குழந்தைகள் கல்வி பயின்றனர். 1928Šல் 1,50,00,000 படிக்க வேண்டுமென்றும் 1933Šல் 1,70,00,000 படிக்க வேண்டுமென்றும் திட்டம் போட்டு வேலை செய்து வெற்றி பெற்று விட்டனர்.
ரசியாவில் முதியோர்களுக்கும் கல்வி கற்பிக்கப்படுகின்றது. 1928Šல் வாசக சாலை 22,000 இருந்தன. 1933 ல் 34,000 ஆக்கி விட்டார்கள். ஊர் ஊராய்க் கொண்டு போகும் லைபரெரிகள் 40,000 ஆக்கி விட்டார்கள். ரேடியோவின் மூலம் பல இடங்களில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. 1928Šல் 3,50,000 ரேடியோக்கள் இருந்தன. 8,250 சினிமா நிலையங்களிருந்ததை இப்பொழுது 50,000 மாக அதிகப்படுத்தப் போகின்றார்கள்
ரசியாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் தாங்கள் செய்யப்போகும் காரியத்தை முதலில் திட்டமிட்டுக்கொண்டு அதில் தொழீலாளர்களுக்கு போதிய ஊக்கமும் கொடுக்கும்படி தங்கள் நேரத்தைக்கூறி அவர்களை உற்சாகமாக விடுவதால் தொழிலாளிகட்கு என்ன கஷ்டம் நஷ்டம் இருந்த போதிலும் வேலையையே கருத்தாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
இந்திய நாடு
பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும் பொழுது இந்தியா வாளா விருக்குமேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடியயன்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடும் மென்பது நிட்சயம்.
சில மாதங்களுக்கு முன் ரசியா தோழர் ஒருவர் கவி. ரவிந்திநாத் தாகூருக்கு நிருபம் ஒன்ற எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடைய காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எவைகள் ? என்று வினாவியிருந்தார்.
அதற்கு கவிŠதாகூர் ” தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லா பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பது தான் உங்கள் ரசிய நாட்டின் வெற்றிக்கு காரணம், சமுதாய விசயங்களில் முயற்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திகு முட்டுக்கட்டையாய் இருகிறது” என்று பதில் எழுதியிருந்தார்.
தந்தை பெரியார்
குடி அரசு 23.07.1933
ŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠ
சோவியத் ரசியா குறித்த பெரியாரின் பார்வை மிகச்சிறப்பானது. இப்புத்தகத்தின் ஏனைய கட்டுரையும், பேச்சுக்களும் பெரியார் மாபெரும் சிந்தனையாளர் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கின்றது. முக்கியமாக கூட்டுறவு குறித்த பெரியாரின் பேச்சு நமக்கு கிடைத்த ஆவணம் என்றே சொல்லலாம்.
பாமரருக்கும் புரியும் மொழியில் இருக்கும் பெரியாரின் இந்த எழுத்துக்களை பல்லாண்டுகள் கழித்து புத்தகமாய் கொண்டு வந்திருக்கும் (அதுவும் மிகக் குறைவான விலையில்) பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
———————————————————————
நன்கொடை ரு10/
வெளியீடு
பெரியர் திராவிர் கழகம்
29, இதழியலாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர் – திருவான்மியூர்
சென்னை – 600 041
———————————————————————-
நூல் கிடைக்குமிடம்
பெரியார் படிப்பகம், பேருந்து நிலையம் அருகில், மேட்டூர் அணை. 9786316155
பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம் அருகில்பெரியார் படிப்பம், காந்திபுரம்பெரியார் படிப்பம், கோவை. 9843323153
குறிச்சொற்கள்: சோவியத் ரசியா, தந்தை பெரியார், புத்தகம், பெதிக. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், மாபெரும் சதி, ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார் ருசியாவின் வெற்றி, ஸ்டாலின்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 4, 2010
கண்டிப்பாய் வருவீர்களா தோழரே?
புதுவையில் போர்க்கோலம்
இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன். காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை. விழுப்புரம் பேருந்து நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்க, பேருந்திற்காக காத்திருந்தேன் வரிசையாய் தனியார் பேருந்துகள். அரை மணி நேரம் கழித்து வந்த அரசுப்பேருந்தில் ஏறினேன். வெளியூர் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களை போராட்டங்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது.
கடைசியாய் நாங்கள் தோழர் பசந்தா கருத்தரங்கில் பார்த்ததுதான். அப்புறம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும் போதும் எப்படி இருக்கீங்க என்பதில் தொடங்கி, சுவையான நிகழ்வுகள் என போய்க்கொண்டு இருக்கும். இம்முறை முக்கியமாக அங்காடித்தெருவைப் பற்றி பேசலாம் என எண்ணியிருந்தேன். பேருந்து விழுப்புரம் டவுனை கடக்கும் போது ஒரு கண் கொள்ளாக்காட்சியைப் பார்த்தேன்.
சிஐடியூ தோலர்கள் கும்பலாக பேனர் பிடித்தபடி பேரணியில் சென்று கொண்டிருக்க, முன்னே பேண்ட் வாத்தியம் சென்று கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டிருக்க, சிஐடியுவோ அதில் வர்க்கப்பார்வையை தேடிக்கொண்டிருந்தது. புதுவையை அடைந்தேன் மணி 12 ஆனது. பேருந்து நிலையத்தில் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதியாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்தேன்.
நண்பர்கள் இருவருக்கும் போன் செய்து கேட்டேன் இருவரும் ஒரே மாதிரி சொன்னார்கள் லேட் ஆயிடுச்சு, எப்புடியும் 3 மணி ஆயிடும். சரி என்ன பண்ணலாம் என்று யோசித்தபடியே அருகிலிருந்த நபரிடம் பேச்சுக்கொடுக்க, புதுவையில் பீச் இருப்பது தெரிந்தது. சரி பீச்சுக்குத்தான் நடந்து போவோமே என்று கிளம்பினேன். வேடிக்கைப்பார்ப்பதற்கு அல்ல, நேரம் கடக்க ஒரு வழி.
பேருந்து நிலையம் விட்டு நேராய் போய்க்கொண்டிருந்தேன், யாரையும் கேட்க வில்லை, ஆங்காங்கே போர்டுகள்பல்லைக்காட்டின” பீச்-க்கு செல்லும் வழி”. செல்லும் வழியில் தெருக்களின் பெயர்களைப்பார்த்தேன். முதலில் தமிழ், பின்பு ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சு என மும்மொழிகளில் இருந்தன. காலனியின் எச்சங்கள் பெருமையாய் படர்ந்திருந்தன.கடற்கரைக்கென செல்லும் அந்த பிரத்யேகமான அந்த சாலைதான் மினிஸ்டர் ரெசிடென்சியல் ஏரியாவாம். பல புதிய கட்டிடங்கள் கூட பிரெஞ்சுமுறையில் இருந்தன.
அமைதியாக இருந்தது. பீச்சை நெருங்கிய போது மற்றொரு கிளைச்சாலையில் ஏதோ கூட்டமாய் இருந்தது.
நெருங்கிபார்த்தேன் அது சினிமா பட சூட்டிங், கொரியாகாரர் போல இருந்த அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைகாட்சிகளை தெளிவான தமிழில் இயக்கிக்கொண்டிருந்தார். சூட்டிங்கை பார்த்தேன் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அதில் சில முகமூடி அணிந்த நபர்கள் , வெயிலில் துணை நடிகர்கள் பைக்கில் நால்வர், எங்கடா நாயகனைக்காணவில்லைஎன்று தேடியபோது ஜீவா வந்தார். மற்ற துணை நடிகர்களெல்லாம் வெயிலில் நனைந்து வியர்வையில் ஊறிப்போயிருக்க. ஜீவா செயற்கையாக ஒரு டப்பாவிலிருந்து வியர்வையை தெளித்துக்கொண்டிருந்தார்.
பார்த்தால் உண்மையான வியர்வைவிட ஜீவாவின் மேல் போடப்பட்ட வியர்வை அதிகமாய் இருந்தது,எப்போதும் போலிகள் தான உண்மைகளைத் தின்கின்றன. அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன், அம்பேத்கார் மணி மண்டபம் இருந்தது. கடற்கரையை இரண்டு ரவுண்ட் சுற்றினே. பிரெஞ்சுகாரர்கள் பலர் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நம்மவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன் “அவனோட ஊர்ல போய் என்னன்னு சொல்லுவான், நம்ம காலனி நாட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுவானா”
மீண்டும் கிளம்பினேன். வரும் வழியில் கம்பன் அரங்கத்தில் விழாவாம், கவர்னர், முதல்வர், எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்களாம். இன்றுதான் திறக்கப்படப்போகிறதாம். அதைக்கடக்கும் போது ஒருவர்என்னிடம் கேட்டார்”இன்னைக்கு திறக்கப் போறாங்களாமா?” “ஆமா இன்னிக்கே போயிடுங்க அப்புறம் உடமாட்டாங்க” என்ற படியே கிளம்பினேன். ஆபாசக்கவிஞனுக்கு கோடிக்கணக்கில் அரங்கம், உழைக்கும் மக்களுக்கோ பட்டை நாமம்.
மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எதிர்பார்த்த நண்பர்கள் வந்து சேர , பேருந்து நிலையத்தில் திரும்பியபக்கமெல்லாம் சிவப்பு நிறமாயிருக்க, நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசித்தது, எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை, இறுதியாக
ஒரு ஹோட்டலில் நுழைந்து ஆளுக்கொரு தோசை சொன்னோம், சாப்பிட ஆரம்பித்த வேளையில் பறைசத்தம் கேட்டது. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினோம்.
தோழர்கள் பறையடித்தவாறே இருக்க, மற்ற தோழர்கள் பேருந்து நிலையத்தில் இரு பக்கங்களையும் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து ஒருபக்கத்தை மட்டும் விட்டு மற்ற பக்கத்தை முற்றுகையிட்டு தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு பொறுமையாய் வந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். அனைத்து பேருந்துகளும் முடங்கிப்போயின.
தோழரின் மைக்கைப் பிடுங்கினார் ஒரு அதிகாரி, மைக்கிலிருந்து முழக்கம் வருகிறதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அந்த மெத்தப்படித்தவர். தோழர்கள் தங்கள் போர்க்குரலைத்தொடர
கடுமையான டிராபிக் ஜாம். தோழர்கள் பேருந்து போக்குவரத்தை வரிசைப்படுத்தினர். போலீசு வேடிக்கைப்பார்த்தது. கைது செய்ய வரும் வேனை தோழர்கள் டிராபிக் ஜாமிலிருந்து மீட்டு முன்னே கொண்டு வந்தனர். (என்னன்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது !!!!!)
நடுவில் ஒரு சீபீஎம் கொடி கட்டிய ஆட்டோ வந்தது அதில் எம்ஜியார்படத்து வர்க்கப்பாடல்களை ஒலிபரப்பியபடி சென்றார் ஒரு தோலர்.அவர் பார்வையில் அவர் வர்க்கப்போராட்டத்தை சினிமாப்பாட்டுக்கள் மூலம் நடத்திக்கொண்டிருந்தார்.
போலீசின் வண்டிகள் வரிசையாய் நிரம்பின, அவர்களிடம் போதிய வண்டிகள் இல்லை. தனியார் பேருந்துகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு பேருந்துக்கும் அளவுக்கு ஏற்ற தோழர்களை தோழர்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வண்டியில் ஏறினர்.சீறிய முழக்கம் ஆளும் வர்க்கத்தின் காதை கண்டிப்பாய் கிழித்திருக்கும். இப்போது கலைக்குழு தோழர்களிடமிருந்து பறை வேறு தோழர்களிடமிருந்தது.
அவர்கள் ஆரம்பித்தார்கள். அந்த இசை இறுதிவரை குறையவே இல்லை. அதிலும் மிகவும் ஒரு குட்டித்தோழர் ஆர்வமாக பறையடித்தார். அவரைபார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. இந்த வயதில் நான் என்ன செய்திருப்பேன் என நினைத்தேன்” விளையாடவும் வயிறு முட்டத்தின்னவும் தவிர எதுவும் நினைவில் இல்லை ” வெட்கம் பிடுங்கித்தின்றது.
உன் விரல்களில் இன்னும்
உரமேற்று தோழனே
மரத்துப்போன எங்கள்
அடிமைத்தோல்களை
அடித்துக் கிழி
காவல் வண்டியில் ஏற்றவே 6 மணிக்குமேல் ஆனது. தோழர்கள் காவல் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்பட்டார்கள். அங்கேயே பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியாவும் நடந்தேறியது. 8 மணிக்கு போலீசு விடுதலை செய்தது நாங்கள் கிளம்பினோம், ஆளுக்கொரு திசையாய். மறுபடியும் அடுத்த போராட்டத்தில் தானே பார்க்க முடியும்.
மீண்டும் பேருந்தில் ஏறிசென்ற போது வழியில் பல சிஐடியூ போர்டுகளுக்கு சந்தனம் பொட்டு வைத்திருந்தார்கள். பூசையெல்லாம் காலையிலேயே முடிந்திருக்கும் போல.அதிமுக மேதின விழா சாலையில் நடந்து கொண்டிருந்தது. தோலர் குண்டு கல்யாணம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவார் தொழிலாளர் உரிமைகள் செயாவின் சுருக்குப்பையில் இருப்பதை விளக்குவார். ஒருவகையில் புதுவையின் இப்போராட்டம் ஒரு தொடக்கமே. “நம்முடைய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்”
உண்மைதான் புதுவையிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால் இவ்வளவு சிரமம் போலீசுக்கே இருந்திருக்காது. பாசிசம் எவ்வளவு கொடூரமானதாயிருந்தாலும் அது முட்டாள்தனமானது. ஆசான் மார்க்ஸ் சொன்னாரே “முதலாளித்துவம் தன் புதைகுழியை தானே தோண்டிக்கொள்கிறதென்று” எத்துணை உண்மை. இந்த முட்டாள் பாசிசம் தானே நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தது. அது இதனால் எதை மூடி மறைக்க நினைத்ததோ அது தானாய் வெடித்து விட்டதல்லவா, “மகிழ்ச்சி என்பது போராட்டமே”, இனி போராட்டங்களை மகிழ்ச்சியாய் தொடர்வோம்.
அடுத்தப்போராட்டத்தில் அந்த குட்டித்தோழரை பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறேன். கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? இன்னமும் எங்கள் தோல்கள் கிழிக்கப்படவில்லையே.









1.ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!
2.ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!
குறிச்சொற்கள்: கடற்கரை, கலகம், தோழர், பு மா இ மு, புஜதொமு, புதுவை, ம க இ க, மறியல், மே1, வி வி மு, வினவு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
ஏப்ரல் 26, 2010
மே நாள் சூளுரை!
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!
நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!
நிகழ்ச்சி நிரல்:
மே 1 – 2010
பேரணி துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.
பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
பொதுக்கூட்டம்
மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி
தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்
உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
சிறப்புரை:
முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
புரட்சிகரக் கலை நிகழ்ச்சி
மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு
குறிச்சொற்கள்: உலகமயம் தொழிலாளி, உலகவங்கி, உழைக்கும் வர்க்கம், தொழிலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், புதுவை, மீனவர்கள், மே 1, விவசாயிகள், kalagam
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 22, 2010
கண் சிவந்திருந்தார்கள்
ரிஷிகள், மாமுனிகள்
டாட்டாக்கள், பிர்லாக்கள்
அம்பானிக்கள்
வே(தா)தாங்கள் ஓதப்பட்டன
ஆயிரக்கணக்கில்
புஷ்பக விமானங்கள்
லக்ஷத்தில் தேவ குமாரர்கள்
அசுரர்களின் கோடித்துணிக்கோ
ஏழாயிரத்து முன்னூறு கோடி ஒதுக்கீடு
கல்வியை, மருத்துவத்தை,
போக்குவரத்தை – எதையுமே
தராதவர்கள் நாகரீகத்தை
கற்றுக்கொடுக்கப் போகிறார்களாம்
ஆம் இது நாகரீகமற்றவர்களின் மீது
நாகரீகக்கோமான்கள் தொடுக்கும்
போர்
வேண்டாமென்றால் விடுவதாயில்லை
உன் உயிரைக்கொடுத்தேனும்
நாகரீகம்
வாங்கித்தானாகவேன்டும்
முதல் பலி நியாம்கிரியின்
அரக்கத்தலைவன்
நியாம்கிரி அரக்கன்
கொல்லப்படபோகிறானாம்
அசுர வாரிசுகள்
கலங்கினார்கள் ஆனால்
ஒதுங்கவில்லை
தவித்தார்கள் ஆனால்
தவிக்கவிடவில்லை
போரிட்டு செத்தார்கள்
செத்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் சாகவிடவில்லை………….
பாசிச பேய்கள்
கர்ப்பிணியின் வயிற்றை
குறிவைக்கின்றன
அட முட்டாள்களே!
உங்களுக்குத்தெரியுமா
இதோ இந்த
இந்தக் கருக்குழிதான்
உங்களுக்கு சவக்குழியென்று
பாட்டன்,முட்டான்
அப்பன், மாமன், ஆத்தாள்,
பாட்டி, பூட்டி, அத்தை
எல்லாம் எதற்கு ஏந்தினார்களோ
அதற்காக
அதை
ஏந்த காத்திருக்கிறது
கருப்பையில்
சிசு
நாளைய வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்
அவர்கள் கொண்டு செல்வார்கள்
அரக்கத்தலைவனை யாரும் நெருங்க
முடியாத இடத்திற்கு
அப்போது
அவர்கள்
உங்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்
எது நாகரீகமென்று
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: அம்பானி, ஆதிவாசிகள், கவிதைகள், டாடா, நக்சல் ஒழிப்பு போர், நியாம்கிரி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 14, 2010
காக்க காக்க லீnaவைக் காக்க
சன நாயகத்தூண்கள்
எல்லாம் அம்மணமாய்
இக்சாவில்
கருத்து சுதந்திரத்தை காக்க
காக்க காக்க லீnaவைக் காக்க
பேட்டிகள் வெடித்துக்
கிளம்புகின்றன வலதுசாரியம்
இடது சாரியம் எல்லாம் குத்துவதாய்
பொறுமுகின்றன
லெனின் பிராயிடை
புணரவேண்டும் – அது கருத்து சுதந்திரம்
லெனின் காரல்மார்க்ஸ்
சே பிடல் ஏங்கெல்ஸ்
எல்லாம் பேசலாம்
அது கருத்து சுதந்திரம்
ராமேசுவரம் செங்கடல்
தீபக் முதலாளித்துவ வெறி
அடி உதை குத்து – இதுவும் சுதந்திரம்
ஏன் அடித்தாய் ?
தொழிலாளியை ஏன் வதைத்தாய்?
கேள்விகளுக்கு
யோனிகள் பதில் சொல்லுகின்றன
அய்யோ அய்யய்யோ
உரிமையைப்பறிக்காதே
இது கருத்து சுதந்திரம்
அதிகாரவர்க்க ஆண்குறியையை
தடவிக்கொடு
எம்மைகட்டி வைத்து உதை
உனக்கிருக்கும் சுதந்திரம்
எமக்கில்லாதது வருத்தம் தான்
(எம்மை,எமக்கு – தொழிலாளி)
—————————————————————————————————————————————————————-
சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.
எது சுதந்திரம்?
எது கவிதை?
உழைக்கும் மக்களின் விடுதலைக்கே
சுதந்திரம்
உழைக்கும் மக்களின் உணர்வே
கவிதை
அதை
சொல்ல நீ யார்?
யோனியிலும் ஆண்குறியிலும்
தூங்கிக்கிடக்கிறது விடுதலை
கிடைத்து விட்டது பட்டம்
“கலை இலக்கியத்தின் போலீசு”
யோனிகளை அரிந்து வைத்துக்கொண்டும்
பீய்ச்சியடிக்கப்படும் விந்துவிலிருந்தும்
துடிக்கும் உறுப்புக்களிலும்
கிடைக்குமா பெண்ணின் விடுதலை?
ஆளும் வர்க்கத்தை
அடக்க அரிவாளை எடுக்க சொன்னால்
நீ ஆணுறையை கழட்டிக்
கொண்டிருக்கிறாய்
ஒரு வேளை உன் விடுதலை
அதிலிருந்து கூட கிடைக்கலாம்
அந்தோணிசாமியின் மந்திரங்கள்
ஜெபிக்கப்படட்டும் -சோபாக்கள்
வேதம் ஓதுகிறார்கள்
“கர்த்தரின் ஆட்டுக்குட்டிகளே
உங்களின் விடுதலை
தொடையிடுக்கில் இருக்கிறது”
ஆரம்பிக்கட்டும் சுதந்திர வேட்கை
சப்பிக்குடிக்க சொல்லுங்கள்
கால்களை அகட்டி வைத்துக்கொண்டே
பீய்ச்சி அடியுங்கள்
கிடைத்து விடும் சுதந்திரம்
சுதந்திரம்
உங்களுக்கு மட்டும்.
15.04.10. இக்சா அரங்கம், பாந்தியன் சாலையில் கருத்துக்களை புணர்வதற்கான சுதந்திரம் குறித்த அரங்கக்கூட்டம்.யார் யாரைப் புணர்ந்தால் கருத்தை பெற முடியும் எனும் நீதி சொல்லும் லீனாதிபதி, இகூட்டத்தில் சோபாவும் ஏனையோரும் யாரைப்புணர்ந்தால் கம்யூனிசம் கற்க முடியும் என்பதையும் சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும், மற்ற படி கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் : -)
தொடர்புள்ளவை
குறிச்சொற்கள்: அ.மார்க்ஸ், கவிதைகள், சோபா சக்தி, தமுஎச, புணர்ச்சி, பெண்ணியம், யோனி, லீனா மணிமேகலை, வாழ்த்துக்கள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 3, 2010
பெண் – சில கேள்விகள்
“ஏங்க நீங்க இந்த உலகத்துல நடக்குறதைப்பத்தி தெரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க ? ” நான் சந்திக்கும் பலரிடமும் தன்னைப்பற்றி / இவ்வுலகத்தைப்பற்றி கவலைப்படாதவர்களிடம் இக்கேள்வியை கேட்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக இக்கேள்விக்கு பெண்களிடம் ( நடுத்தர வர்க்க,மேட்டுக்குடி) வரும் பெரும்பாலான பதில்களோ ஊமையாகவே இருக்கின்றன.
பெண் என்ற வகையில் அவர் ஒடுக்கப்பட்டவருள் ஒடுக்கப்பட்டவர். ஏதாவது ஒரு படி நிலையில் அழுந்திக்கிடப்பவர் என்பது தான் உண்மை. பெண்கள் சரளமாக படிக்கிறர்கள், வேலைக்குப்போகிறார்கள் என்பது மட்டுமே உரிமையாக பார்க்கப்படுகிறது. வேலைக்குப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?
ஒரு பெண் தனக்காக, தன்னுரிமைக்காக சுயேச்சையாக வாழ முடிகிறதா? தான் எந்தப்படத்திற்கு போக வேண்டும், தான் எந்த நகையை விரும்பி அணிய வேண்டும்? தன் கணவனுக்கு எந்த சமையலை விரும்பி செய்ய வேண்டும் ? தன் கணவன் மனம் கோணாது எப்படி நடக்க வேண்டும்? என்பனவற்றை முடிவு செய்யும் பெண்ணால் ஒரு ஆணைப்போல் சுயேச்சையாக வாழ முடிகிறதா?
ஒரு ஆண் திருமணம் ஆகாமலிருந்தால் அது பிரம்மச்சாரி(பெருமை) அதுவே ஒரு பெண் திருமணம் ஆகாமலிருந்தால் அது கன்னி கழியாதவள்(அவமானம்). யாராவது வம்பு செய்தால் எதிர்த்து கேட்கும் போது / தன்னுரிமையை பேசும் போது “ஆம்பிளை மாதிரி நடந்துக்குறா”. ஒரு பெண் ஆண் மாதிரி இருக்கிறாள் என்பது கேவலம். அதைப்போலவே ஒரு ஆணைக்கேவலப்படுத்த பெண்ணைப்போல இருக்கிறாய் என்கிறது சமூகம். ஒரு பெண் எப்படி விமர்சிக்கப்படுகிறார் இங்கு?
செயா ஒரு பாசிஸ்ட் பெண் தான் அவரை நடத்தைகெட்டவள் என விளிக்கும் திமுகவினர் தன் தலைவன் நடத்தைகெட்டுப்போனதை பேசுவார்களா? அல்லது அதிமுகவினர்தான் கருணா ஒரு விபச்சாரி என்று பேசுவார்களா என்ன? ஆண் எனில் அது அவனது திறமை, பெண்ணெனில் அது விபச்சாரம்.
ஒரு பாலினத்தை மாற்றிக்கூறுவது கேவலபடுத்துவதாகவே கூறப்படுகிறது. அதில் கூட எவ்வளவு நயவஞ்சகம்? பெண்ணே நீ அடக்க ஒடுக்கமாக இரு இல்லையேல் அது கேவலம் (அடிமைத்தனத்தோடு இரு). ஆணே நீ நெஞ்சை நிமிர்த்தி குடும்பத்தை அடக்கி ஆள் (அடக்கு) இல்லை என்றால் அது கேவலம்.
ஆக அவரவர்கள் அவரவர் இடத்திலே இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆண் எதற்கும் கோபப்பட வேண்டும், பெண்ணை அடிக்க வேண்டும், ஊர் மேய வேண்டும், யாருக்கும் பதில் சொல்லாமல் வாழ வேண்டும். அவன் அதை மீறி நான் ஏன் ஒரு பெண் கவரும் படி நடந்து கொள்ள வேண்டும்? எனக் கேட்டால் “டேய் இது ஆம்பிளைங்க சமாச்சாரம்”.
பல வருடங்களுக்கு முன் வேலை செய்த இடத்தில் பெண்கள் ஒடுக்கப்படுவதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன் என்னைத்தவிர மற்ற நால்வரும் எனக்கு எதிராக பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண்ணும் அடக்கம். அந்தப்பெண் சொன்னார்”என்னவோ நீங்க ஒரு பொண்ணைக்கூட சைட் அடிச்சதே இல்லையா?”. நான் கொஞ்சம் பேசி விட்டு சொன்னேன்” நீங்க பெரிய யோக்கியமா பேசுறீங்களே நீங்க எத்தனை பேரை பார்க்குறீங்க தினமும் ? ” உடனே அப்பெண் அழ ஆரம்பித்தார். ” என்னப்பார்த்து இப்படி கேக்குறீங்களே” என்றவுடன்
நான்
சொன்னேன் “ஆம்பிளை சைட் அடிக்குறது சரின்னு சொல்லுற உங்களால ஏன் பொம்பளை ஆணை ரசிக்குறது சரின்னு சொல்ல முடியல?”
பெண்ணை ஒடுக்கு!! அப்போதுதான் நீ ஆண் ஏதோ ஒரு வகையில். எதிரில் பெண் வந்தால் பார்க்க வேண்டும், நாயைப்போல பின்னாலேயே அலைய வேண்டும், அவரை கவர்வதற்கு என்னவெல்லாமோ அனைத்தையும் செய்ய வேண்டும். ஆண் என்றால் பெண்ணை “கரெக்ட்” செய்ய வேண்டும். ஒருவரையா? “இல்லையில்லை பார்க்கும் அத்தனை பேரையும் ” திருமணம் ஆனால் மனைவிக்கு பூ அல்வா எல்லாம் வாங்கித் தரலாம் சுதந்திரத்தைத் தவிர. அதுதான் ஆம்பிளைக்கு அழகு.
கல்லூரிக் காலத்தில் ஒருவன் சொல்வான் ” பையன்னா எல்லா பொம்பளைங்களையும் பார்க்கவேண்டும் ? கல்யாணம் ஆனாலும் சரி ஆகலைனாலும் சரி பார்க்கணும் இல்லைன்னா அவன் ஆம்பிளை இல்லை ” . இப்போதும் அவன் தன் மனைவியோடு தான் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். அவன் சொன்னது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
எது அழகு ? எது நல்லது ? எது தேவை ? எல்லாவற்றையும் இந்த ஆணாதிக்க சமுதாயமே முடிவு செய்யும். அப்படியெல்லாம் சொல்ல முடியாது, எல்லாம் மாறிகிட்டே வருது. எது மாறிவிட்டது. வேலைக்குப்போனாலும் தாலி செயினாக மாறியிருக்கிறது என்பதைத்தவிர வேறெதாவது
மாற்றத்தைக்காட்ட முடியுமா? மாறிப்போன காலத்தில் ஏன் தாலி? எதற்கு மெட்டி? இந்தக்கேள்விகள் எங்கே எழுகிறது ? படிப்பிற்கும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. பள்ளியிலே , கல்லூரிகளிலே, அலுவலங்களில் பெண்ணடிமைத்தனம் நடக்காமலா இருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் பார்வை ஆணாதிக்கமாக இருக்கும் போது மேற்கண்ட இடங்களில் மட்டும் எப்படி இல்லாமல் இருக்கும்?
” கல்யாணம் ஆகியும் தாலிக்கட்டாமல் வாழ்ந்தால் அது விபச்சாரியாகத்தான் இருக்க முடியும் ” இது மெத்தப்படித்த ஐந்திலக்கவாதியின் பேச்சு. சொல்லப்படுகிறதே கல்வியில் முன்னேறிவிட்டால் எல்லாம் மாறிவிடுமென்று. மாறிவிட்டதா பெண்ணடிமைத்தனம்.நான் திருமணம் செய்து கொண்டேன் என்பதை ஏன் இன்னொருவனுக்கு தெரிவிக்க வேண்டும்? தெரிவிக்க வேண்டும், தெரிவித்தே ஆக வேண்டும் இல்லையென்றால் பாதுகாப்பு இல்லை. ஆணைப்பார்த்து திருமணம் ஆனவனா இல்லையா என்பதை கண்டறிய முடியாதே? அப்படியெனில் பாதுகாப்பு அவனுக்கு வேண்டாமா? பாதுகாப்பை நிர்ணயம் செய்பவனே அவன் தானே.
தான் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறோம் என்பதை பல பெண்களும் உணர்வதாயில்லை / உணர்ந்தாலும் அதை தெரிவிப்பதாயில்லை. பிறப்பு முதல் பார்ப்பான் ஓதும் மந்திரத்திலிருந்து
ஒவ்வொன்றையும் எவ்வளவு அழகாய் பெண்ணை அடிமையாக்குவதற்கு வைத்திருக்கிறார்கள் ? தெரிந்திருந்தும் இது ஏன் உனக்குபுரியவில்லை?
“இந்த உலகத்தைப்பத்தி நான் ஏன் தெரிஞ்சிக்கணும்? தெரிஞ்சி என்ன ஆகப்போவுது? ஒண்ணும் மாத்த முடியாது. என்னோட கணவர் நான் துணிய துவச்சா அவர்தான் காயப்போடுவார், கடைக்கு அவர்தான் போவார், இவ்வளவு பண்றாங்க இல்ல” உரிமை என்றால் என்னவென்றே தெரியாமலிருக்கும் உன்னைப்பார்த்து சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை.
எனக்கு பிடிச்சுருக்கு அதான் புர்கா போடுறேன் எனக்கு பிடிச்சுருக்கு அதான் தாலி கட்டிக்குறேன்,தோடு போடுறேன், கொலுசு மாட்டிக்குறேன் எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு. ஏன் உனக்கு பிடித்தது? எல்லாம் உனக்கு பிடிக்கவைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பிடித்திருக்கிறது என எல்லாப்பொருளையும் ஏற்கலாம், இவனைப்பிடித்திருக்கிறது என காதலனை சொல்லும் போதுதான் எது இனி உனக்கு பிடிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுவார்கள்.
” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக ” என்று பலரும்தான் சொல்கிறார்கள். செயலில் ஈடுபட என்னத்தயக்கம்? இந்தக்காலத்திலும் பல பெண்கள் பள்ளிகளுக்குப்போனதில்லை, வெளியே போக அனுமதியில்லை. ஆனால் நீ அவ்விசயத்தினை பொறுத்த மட்டில் கொஞ்சம் சுதந்திரமாகத்தானே இருக்கிறாய்? உன் விடுதலையை அறிய / பெற தடுப்பது எது? உன் பாதிப்பை உரக்கச்சொல்வதை எது தடுக்கிறது?
” அப்படி சொன்னால் இந்த சமுதாயம் எங்களை விமர்சிக்கும் எங்கள் பாதிப்பை சொன்னால் கேலி செய்யும்” நீ இந்த அளவுக்கு உரிமைகளைபெற்றிருக்கிறாயே அதைப்பெற பாடுபட்டவர்களை இந்தச்சமுதாயம் எப்படி கேலி பேசியிருக்கும்? மனதை வதைத்திருக்கும்? அவர்கள் போராட வில்லையா? உனக்கு உரிமைகளைப்பெற்றுத்தரவில்லையா?
நீ பயப்படுகிறாயே அந்த பயம் தான் அந்த சங்கிலி அதன் கண்ணிதான் அடிமைத்தனம் . உன்னைக் கேலி பேசுவார்கள் நீயும் திருப்பி பேசு, கேள்வியைக்கேள், தன் தாயை தன் சகோதரியை தன் மனைவியை அடிமையாய் நடத்தும் இச்சமுதாயத்தை கேலி செய். பெண்ணிற்கென்று தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. செல்லும் ஒவ்வொரு அங்குலத்திலும் வதைக்கப்படுகிறார். இதை எப்படித்தான் தீர்ப்பது?
அமைதியாய் இதைப் பேசாமாலே இருந்தால் போதுமா?
” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக………. ஆனால் எங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர் ” உன் உரிமையைப்பற்றி பேசுவது நீ சுதந்திரமாக வாழ்வது உன் அப்பனின் கண்டிப்புக்கு ஆளாகுமா?
அப்படியெனில் நீ கண்டிப்பாய் பேசித்தான் ஆக வேண்டும். உன் அப்பன், சகோதரன் ,கணவன் எல்லோரையும் நீ கண்டித்துதான் ஆக வேண்டும். போராடாமல் எதும் கிடைத்ததாய் சரித்திரம் இல்லை. போராடுவதற்கு முன் அதற்கு தயாராகவாவது இருக்க வேண்டும் இல்லையேல் அதைப்பற்றி கேட்கவாவது தயாராயிருக்க வேண்டும்.
ஒன்றை இழக்காமல் ஒன்றைப்பெற முடியாது. நம் அடிமைத்தனத்தை இழக்காது உரிமைகளைப்பெற முடியாது. சாதி என்ன சொல்லும் ? வீட்டில்என்ன சொல்லுவாங்க ? என சாக்கு சொல்லிக்கொண்டிருந்தால் எதையாவது பெற முடியுமா என்ன? சினிமாவுக்கு போகலாம், பார்க்கிற்கு போகலாம் ஆனால் உன் உரிமையைபேசும் ஒரு பத்திரிக்கையை படிக்கமாட்டேன், பெண் உரிமையைச்சொல்லும் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அடிமைத்தனத்தைத்தவிர
தொடர்புள்ள பதிவுகள்
குறிச்சொற்கள்: அடிமைத்தனம், உழைக்கும் பெண்கள், கலகம், பெண்கள், பெண்ணியம், போராடு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
மார்ச் 30, 2010
அழுகின்ற
குழந்தையே!

அழுது கொண்டிருக்கிறாயா
அழு நன்றாக அழு
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆனால் நிறுத்திவிடாதே
உன் உரிமைகள்
கிடைக்கும் வரை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே
மார்பறுக்கப்பட்ட
உன் தாய்களைப்பார்
கொன்று குவிக்கப்பட்ட
உன் சகோதரர்களைப்பார்
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஏன்?
எதற்காக?
கேள்வியை கேள்
மூலதனம் சொல்லிவிட்டது
நீ வாழ தகுதியற்றவன்
நீ சாகப்பட வேண்டியவன்
உன் இனம் மட்டுமல்ல
உழைக்கும் இனமே
வாழத்தகுதியற்றதுதான்
அழுகின்ற குழந்தையே!
நன்றாய்க்கேள்!!
தகுதியற்றவர்கள் தான்
அவர்களை தகுதியுடையோராக்கினார்கள்
உழைக்கும் கைகளின்
மீதேறிதான் அவர்கள்
உயர்ந்தவர்களாகியிருக்கிறார்கள்
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே
கேளாத செவிகள்
கிழிந்து போகட்டும்
கருணைகளின் கோட்டைகள்
நொறுங்கட்டும்
தேர்ந்தெடுத்திருக்கிறாய்
உனக்கான ஆயுதத்தை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆம்
அழுகையின் அதிர்வுகளில்
உடைபட காத்திருப்பது
அதிகார பீடங்கள் மட்டுமல்ல
எங்களின் அடிமைத்தனமும் தான்
குறிச்சொற்கள்: அம்பானி, ஆதிவாசிகள், கவிதைகள், டாடா, நக்சல் ஒழிப்பு போர், நியாம்கிரி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
மார்ச் 19, 2010
ஸ்ரீநி & சாநி
அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?
ஒரு காலத்தில் ஸ்ரீநித்யானந்தாவிற்க்கு அல்லக்கையாய் இருந்த நம்ம சாரு நிவேதிதா அவரை கண்டபடி திட்டிக்கொண்டு இருக்கிறார். அவன் நடிகையின் குண்டியை அவன் நக்கினால் அதற்கு நானா பொறுப்பு? ஆங்கில புத்தகங்களை மொழி பெயர்த்ததற்கு இன்னும் பணம் தர வில்லை. கும்பமேளா யாத்திரைக்கு 1 லட்சம் கொட்டினேன். அத்தான் என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே? என்றாடி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அவர் திட்டுவதும், புலம்புவதும் உண்மைதானா? நம்ம சாநி மட்டுமல்ல ஸ்ரீநியின் முன்னாள் அல்லக்கைகள் பலருக்கும் அவனை திட்ட வேண்டிய இப்போது அவசியமிருக்கிறது.
ஸ்ரீநியின் ஆளுயர போட்டோக்கள் மாட்டப்பட்ட மருத்துவமனைகள், ஹோட்டல்கள் இதர எண்ணற்ற அங்காடிகளின் புனித இடங்களெல்லாம் எல்லாம் வெறுமையாய் காட்சியளிக்கின்றன. அவை எப்போதும் வெறுமையாய் இருக்கும் எனறு சொல்ல முடியாது.
எனக்குத்தெரிந்து அந்த விபச்சாரியை (ஸ்ரீநி ) வைத்து பணம் சம்பாதித்த மாமாக்கள் சரக்குக்கான மவுசு குறைந்தவுடன் வேறு ஒரு விபச்சாரிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். குமுதம் மாமாவோ அவனை வைத்து தானும் கல்லா கட்டிக்கொண்டு இப்போது சீக்காளி விலைமகளை மாமாப்பயல் தூற்றுவது போல வைதுக்கெதண்டிருக்கிறது.
ஸ்ரீநியை திட்டும் ஊடகங்களாகட்டும் அல்லக்கைகளாகட்டும் உதிர்க்கும் வார்த்தைகள் என்ன? ஏமாற்றி விட்டார்? புனிதமான காவியுடையை போட்டுக்கொண்டு…….. என்று இழுக்கின்றன. சாநியாகட்டும் மற்ற யாராகட்டும் பார்ப்பன இந்து மதத்துககு எந்த கேடும் வராத தீர்வை கேட்கிறார்கள். ஒன்று அவர் நல்லவராயிருக்க வேண்டும், இல்லையயனில் அவர் தப்பே செய்திருந்தாலும் அவருக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை. ( note this point u’r honourஅவர் நல்லவராயிருந்தால் அது இந்து மதத்தோடு தொடர்புடையது.)
சாநி குமுதம் ரிப்போர்ட்டரில் “”சரசம் சல்லாபம் சாமியார்…..” எனற பெயரில் தொடரினை எழுதி வருகிறார் அதில் 2 வது பாகத்தில் அவர் எழுதுவதைப்பார்க்கும் எல்லோருக்கும் புரியும் சொல்லும் கருத்து “ இதுக்காக அவர் ரொம்ப மோசமில்லை கொஞ்சம் மோசம்”
“”என் மனைவி அவந்திகாவுக்கும் அதே தான் நடந்தது. பழம், அவித்த காய்கறிகள் தவிர எதைச்சாப்பிடடாலும் உடனே அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய நிலையில் இருந்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக அலோபதி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று எந்த வைத்திய முறையிலும் குணமாகவில்லை. இந்த சாமியார் ஏதோ புரியாத கைகளை ஆட்டி நமக்குப்புரியாத வார்த்தகைளைச் சொன்னார்.சரியாகி விட்டது”
அதாவது இன்னமும் ஏதாவது ஒரு மருத்துவமனையிலோ அல்லது லாட்ஜிலேயோ நித்தியின் படத்தை மாட்டி வைத்திருந்தால் என்ன நடக்கும் ? நித்தியின் சிடியினைக்கேட்டு மக்கள் கூட்டம் மொய்க்கும். பேர் கொஞ்சம் டேமேஜ் ஆகும். தனக்கு வியாபாரத்திற்காக பயன் பட்டவன் இப்போது கொஞ்சம் தள்ளி வைக்கப்பபட்டிருக்கிறான். அவ்வளவுதான் அதற்காக அவனை முற்றிலும் அவர்கள் வெறுத்து விட்டார்கள் என்று சொல்லமுடியுமா?
இப்போதுகூட நித்தி பாலியல் ரீதியாக சம்பந்தப்படுத்தப்பட்டு வீடியோ வெளியே வந்திருப்பதால் அவனை திட்டுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். இதே பாலியல் அல்லாது வேறு ஏதாவது பிரச்சினையில் சிக்கியிருந்தால் அது ஒரு குற்றமாகவே இனம் காணப்படாது.
மருத்துவர் ருத்ரன் சொன்னது போல் இவன் மீது கோபம் கொள்ள இப்படி ஒரு படம் தேவைப்படுகிறது. எவ்வளவு கேவலமான அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
போலிச்சாமியார் என்று ஒன்று இல்லை, சாமியார் என்பதே போலிதானே அதில் என்ன தனியாக போலி? நான் கடவுளை நேரடியாக வணங்குகிறேன். அவன் என்னைப் படைத்தது உண்மை என்றால் நான் பேசுவது அவனுக்குப் புரிய வேண்டுமா இல்லையா? அப்படிப்புரியும் போது நடுவில் எதற்கு ஒரு புரோக்கர் ? நான் சொன்னால் கடவுள் கேட்க மாட்டானா? அவனுக்கு புரோக்கர் தேவைப்படுகிறதா? அவன் சொன்னால் தான் ஆண்டவனுக்கு புரியுமா ? நான் சொன்னால் என்னைப்படைத்தவனுக்கு ஏன் புரியாது ? எல்லாவற்றையும் அவன்தான் படைத்தானென்றால் , எல்லாவற்றுக்கும் அவன் சிரத்தை தேவையயனில் ஜெயேந்திரன் சங்கரராமனை கொன்றதற்கும், தேவநாதனின் பாலியல் பூசைக்கும், நித்திக்குட்டியின் “ஆன்மீக” ஆராய்ச்சிக்கும் பரம்பொருளின் சிரத்தை தேவைப்பட்டதா ? பக்தனுக்கு இக்கேள்விகள் எப்போதுமே எழுவதில்லை. எழுகின்றவர்கள் பக்தர்களாக நீடிப்பதுமில்லை. இல்லாத ஒருவனை வைத்து மேற்கொள்ளப்படும் மாய்மலங்கள் தான் மதம்.
மதம் என்ற கஞ்சா செடியும்
ஆன்மீகம் என்ற ஹெராயினும்
இறைவன் இருக்கின்றான். எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவன் தான் இறுதித்தீர்வு. மக்கள் நல்வழிகளில் செல்வதில்லை உலகம் கண்டிப்பாக அழியும் நம்பை கல்கி பகவானோ, அல்லாவோ, இயேசுவோ அல்லது ………….. காப்பாற்றுவார்கள்”
மக்களுடைய பொருளாதார, சமூகப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? அதைத்தீர்கக என்ன வழி? உழைப்பவர்கள் ஒருசாரராகவும் அதைவைத்து பிழைப்பவர்கள் ஒரு சாரராகவும் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக பலமானவர்கள் தங்களின் சுகங்கள் பறிபோகா வண்ணம் சட்டங்களைப்படைக்கிறார்கள். அவர்களின் சுகங்கள் உழைப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றன. அதை எப்படி மாற்றியமைப்பது? இல்லை அதை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் அது இறைவன் கொடுத்தது. யார் இறைவன் தெரியுமா ? உன்னையும் என்னையும் ஏன் இந்த உலகத்தையும் படைத்தான். இப்பூவுலகில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் அவன்தான் காரணம்.
உனக்கென்று ஆண்டவன் என்ன கொடுத்தானோ அதுதான் அதைத்தாண்டி நீ எதையும் பெற முடியாது. உன்னுடைய குறைகளுக்காக ஆணடவனை வணங்கு, தொழு, கண்ணீர் விடு. கருணைக்காட்டுவான். மதமென்ற நிறுவனம் பல கடவுள்களை பெற்றது. மக்களின் கலாச்சாரங்களுக்கேற்றபடி பல தேவர்கள் பிறந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியதாக சொல்லப்பட்ட தேவர்கள் பின்னாளில் ஆளும் வர்க்கத்தின் தூதர்களானார்கள். மக்களின் எல்லாத்தேவைகளுக்கும் கடவுளும் மதமும் காரணமாக அறியப்பட்டன. அவைகளோடு பின்னி பிணைக்கப்பட்டார்கள். எல்லாவற்றிற்கும் கேள், கருணையோடு கேள், கெஞ்சிக்கேள், உன்னை வருத்திக்கேள். ஆண்டவன் தருவார். ஆண்டவனைப்பெற்ற அதிகாரம் தன்னைக்காக்க மதமென்னும் கஞ்சாவை நிறுவனமாக்கி மெல்ல மெல்லக் கொடுத்தது.
உனக்காக நீ போராடுவது தவறு அது ஆண்டவனை கோபம் கொள்ளச்செய்யும், போராடுவது ஆண்டவனை மட்டுமா கோபம் கொள்ளச்செய்யும் ,அதிகாரத்தையும் கூட அல்லவா ? ஆண்டவனிடம் நீ கேள்வி கேட்க முடியாது. அதிகாரத்தையும் நீ கேள்வி கேட்க முடியாது. அவராவது ஏதாவது பார்த்துக்கொடுப்பார். அதுவும் முன்னோர்கள் சரியில்லை யயனில் அதுவும் கிடைக்காது. கேள்விக்கு அப்பாற்பட்டதாய் மதம் விளங்கியது.
இந்த மாடர்ன் உலகில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறக்க புது வழிமுறை தேவைப்படுகிறது. அறிவுஜீவிகள், மேதாவிகள், தின்று செரிக்காத உடல்கள் எல்லாவற்றுக்கும் அமைதிதான் பற்றாக்குறை. அவற்றைத்தேடி அலைகிறார்கள். சாதாரண மனிதனும் பொருளாதார பிரச்சினை ஆனாலும் சரி சமூகபிரச்சினை ஆனாலும் சரி அதற்கும் அமைதிதான் பற்றாக்குறை என நினைக்கிறான்/ நினைக்கவைக்கப்படுகிறான்.
மதத்தில் பாடப்பட்ட அதே ராகங்கள் இங்கேயும் ஒலிக்கின்றன. ஆனால் வேறு வித்யாசமான வழிகளில்….. சமூகத்திலிருந்நு பிரிந்து வாழ், சமூகத்தைப்பற்றி நினைக்காதே .ஆனால் ஒரே தீர்வுதான் போராடாதே எதற்கும் எங்கேயும். எல்லாம் கர்ம வினை தான் காரணம். போதை என்றால் கஞ்சா மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தேவைக்கேற்றபடி அது ஹெராயின், பிரவுன் சுகர் என்றபடி போய்க்கொண்டே இருக்கிறது. பார்ப்பனீயத்தை ஒழிப்பதுதான் என் குறிக்கோள் என்று எந்த சாமியாராவது சொல்லியிருக்கிறாரா?
இல்லை எந்த ஆனந்தமாவது அழிந்து போன விவசாயத்ததை, சிதைக்கபடும் தொழில்களை, உறிஞ்சப்படும் நீர் வளத்தை பற்றி அதற்காக போராடுவதைப்பற்றி பேசியிருக்கிறார்களா? பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் எல்லாவற்றையும் பேசுவார்கள் ஆனால் அதற்கு நடுவில் வாழும் வாழ்க்கையின் போராட்டங்களை பற்றி ஏன் பேசுவதில்லை ? அரிசி, பருப்பு, மிளகாய் என தினமும் விலைவாசி அவர்கள் சொல்கிறார்களே அந்த அண்ட சராசரத்தயைம் தாண்டி போகிறதே அதை குறைக்க என்ன வழி?
ஏன் பேசவில்லை என்பதல்ல நாம் தப்பித்தவறி கூட பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைதிதான் வேண்டுமானால் அது மயானத்திலும் கிடைக்கும். யாருக்குத்தான் அமைதியின் மீது காதலில்லை? அந்த அமைதியை பெற அதிகாரத்தை கைப்பற்றியாக வேண்டும். அதற்கு அமைதியாய் இருக்க முடியுமா என்ன?
அமைதிதான் எல்லாவற்றுக்கும் தீர்வென்பவர்கள் அமைதியாயிருப்பதில்லை. அவர்கள் அமைதியை ஜட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார்கள், சிறு குழந்தைகளின் பேண்ட்களை பிடித்து இழுக்கிறார்கள், அவர்கள்தான் இசுரேலை புனித பூமியன்கிறார்கள், ராமனுக்கு கோயிலைக்கட்டு என்கிறார்கள், செத்த மாட்டுக்காக 5 தலித்துக்களை கொன்றார்கள், அவர்கள்தான் சாட்சாத் பெருமாள் கோயிலுக்குள்ளே புகுந்து கொலையும் செய்கிறார்கள்.
மறுபடியும் சாணியிடம் போவோம்
சாநி போட்டிருக்கும் அந்த சாணியைப்பார்ப்போம் ” எனக்குத் தெரிந்த பெண். கையில் மூன்று மாத குழந்தை . நடு இரவில் அவரை அடித்து உதைத்து கணவன் வீட்டை விட்டு விரட்டு விட்டான். குளிர் காலம். நியூயார்க் நகரம். பாஸ்போர்ட் கணவன் கையில். கையில் காசு இல்லை. ஒரு தோழி தான் உ துணை செய்திருக்கிறார். என்னிடம் அந்தப்பெண் இதைச் சொன்ன போது ஒரு விசயம் ஆச்சர்யமாக இருந்தது. அவள் கணவன் ஐ.ஐ.டியில் தங்கப்பதக்கம் பெற்றவன்.இப்போது அந்த மனிதன் செய்த பாதகச்செயலுக்காக அவன் வாங்கிய தங்கப்பதக்கம் போலியானது என்று சொல்வீர்களா? அதேதான் இந்தச் சாமியாருக்கும் பொருந்தும். இவருடைய சல்லாபங்களை பார்த்து விட்டு “இவர் ஒரு பிராடு”” என்று சொல்லும் போது இதை யோசிக்க வேண்டும். பதஞ்சலி முனிவரிடமிருந்து யோகத்தையும், புத்தனிடமிருந்து ஞானத்தையும் கடன் வாங்கி, அதைத் தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர் நித்யானந்தா.’
அவன் கெட்டவன்தான், ஆனா அவ்வளவு கெட்டவன் கிடையாது. இது தான் ஸ்ரீநிக்கு சாநி போட்ட ஸ்டேட்மெண்ட். சாநியை ஸ்ரீநி வென்ற இடமென்று ஒரு கதையைச்சொன்னதாக இங்கு எழுதியிருக்கிறார். சாநியைப்பொறுத்த வரை நித்யானந்தா பொம்பளை விசயத்தை தவிர சாமியார்தான். சாமியார் செய்த தப்பு அவ்வளவு தான். இதற்காக சாமியாரே இல்லைன்னு சொல்ல முடியுமா? ஸ்ரீநியின் நீலப்படம் வந்த ஒரு நாளுக்குள்ளேயே தன் தளத்தில் அவரை திட்ட ஆரம்பித்திருந்தார். திட்டாமல் இருந்திருந்தால் “ஏன் அமைதியாய் இருக்கிறாய் உனக்கும் அவனுக்கும் வேறு தொடர்பு இருக்கிறதா?” போன்ற கேள்விகள் வரும். தன் இமேஜ் சரிவதை திட்டிக் காப்பாற்றினார்.
ஆனால் அந்த மனசு கேக்குமா? ஆண்டவன் ஒரே மனசை படைச்சுட்டானே. அவர் நினைத்தாலும் அதைமீறி அவர் மனது அவர் சாமியார்தான், எல்லாம் அறிந்தவர் தானென சான்றிதழ் தருகிறது. பாட்சா படத்தில் ஒரு டயலாக் “அய்யா மனசில வர முதல் காதல்ங்குறது முள்ளு மாரி அவங்களை குத்திகிட்டே இருக்கும்”
அப்படித்தான் ஸ்ரீநி மீதான சாநியின் காதல் அவரே நினைத்தாலும் விட மறுக்கிறது போலும். போதையின் சுவை மீண்டும் அவரையறியாமலே கேட்கிறது. ஆமா இவரையயல்லாம் பெரியாரியவாதின்னு போடுகின்ற மாமாப் பத்திரிக்கைகளை எதைக்கொண்டு அடிப்பது?
அமைதியாய் இருக்கக்கூடாத நாம் அமைதியாயிருக்கிறோம். நம் உரிமைகள் ஒவவொன்றாய் பறிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. விதர்பாவில் இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்செத்துப்போய் விட்டார்கள்.
ஒரே வழிதான் மாற்று. சமூகத்தை சார்ந்திருப்போம். மக்களை சார்ந்திருப்போம். மக்களைப்படிப்போம் , மக்களை கற்போம், மக்களிடம் சென்று கற்பிப்போம். அது ஒன்றுதான் உண்மையான ஆனந்தத்தை பெறும் வழி. போராட்டம் ஒன்று தான் சுயமரியாதையைத் தரும். போராட்டம் ஒன்று தான் மகிழ்ச்சியைத்தரும்.
அன்றாடம் பேருந்துகளில், புகைவண்டிகளில் , தெருக்களில் “அன்பார்ந்த உழைக்கும் மக்களே ” என ஆரம்பிக்கும் நக்சல்பாரி தோழரைக் கேளுங்கள் எது ஆனந்தம் என்று, தில்லையிலே தமிழ் முழங்க தம் ரத்தத்ததை சிந்திய தோழர்களைக் கேளுங்கள், தண்டகாரண்யாவிலே அந்நிய ஆதிக்கத்திற்கெதிராக ஆயுதமேந்தும் பழங்குடின மக்களைக் கேளுங்கள் எது மகிழச்சி, எது ஆனந்தம் என்று.
அதை விட்டுவிட்டு இன்னும் கும்மிருட்டில் குண்டலினியை நீங்கள் எழுப்பிக்கொண்டிருந்தால் நீங்கள் மனிதத்தன்மையை மட்டுமல்ல மானத்தையும் இழந்து விட்டீர்கள் என்று பொருள்.
நித்தியிடம் ஆனந்தம் தேடி சென்றவர்களாகட்டும், இனி அவனிடம் பொறுமையாய் காலம் கனிந்தபின் தேடப்போகும் நபர்களாகட்டும், வேறு யாரிடமாவது ஆனந்தம் என்ற ஹெராயினை , பிரவுன் சுகரை சுகிப்பவர்ளாகட்டும் நம்ம சாநி உட்பட,
உங்கள் காதுகளில் கேட்கிறதா புரட்சிக்கவியின் எழுத்தில் எமது குரல் ” பாரடா உனது மானிடப் பரப்பை” “காடுகளைந்தோம்”
related
குறிச்சொற்கள்: அமைதி, ஆனந்தம், உழைக்கும் மக்கள், காஞ்சி ஜெயேந்திரன், சாமியார்கள், சாரு நிவேதிதா, ஜக்கி வாசுதேவ், தேடல்கள், நக்சல்பரி, நித்யானந்தா, பகுத்தறிவு, பார்ப்பனீயம், பாலியல், புஜதொமு, புமாஇமு, பெரியார், பேராட்டம், மஉபாமை, மகஇக, ரஞ்சிதா, விதர்பா, விவசாயம், விவிமு, HRPC, NDLF, PALA, RSYF
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
மார்ச் 11, 2010
பாலியல் காதலர்கள்
நுகர்வியலின் வக்கிர உற்பத்தி
அந்த பேருந்து நிலையம் புதியது எனக்கு, எந்த பஸ் எங்கு நிற்கும் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு ஆளை பிடித்தேன். “ஏங்க ……..ஊருக்கு எந்த பஸ் போகும்?” அவர் ஏதோ ஏற இறங்க பார்த்து விட்டு “தோ அந்த பஸ் தான் நிறைய பஸ் உங்க ஊருக்கு இருக்கு”.
நண்பருடைய திருமணம் எண்பது கிலோ மீட்டர் தாண்டி இருந்தது. பெரும்பாலான ஊர்கள் போலவே இதுவும் ஒரு 5 கிலோமீட்டர் தாண்டினாலே கிராமத்தினை கொண்டிருந்தது. காலையில் வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பினேன். வரும் போது பிளாட்டுகளாக்கப்பட்ட விவசாய நிலங்கள் கண்ணை உறுத்தின. கிராமங்களில் பான் பீடா கடைகள் புதியதாய் முளைத்திருந்தன. விவசாய நிலங்களில் வறுமையின் கவிதை வறண்டு போய் இலக்கியம் எழுதிக்கொண்டிருந்தது. கூட வேலை செய்பவர் என்பதால் கண்டிப்பாக போக வேண்டிய அவசியம். அந்த ஊர் பெரிய நகரம் இல்லை, கிராமமும் டவுனும் கலந்திருந்தது.
கொஞ்சம் பெரிய மண்டபம் தான் ,ஒரு வழியாய் கல்யாணத்தில் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இப்போது பஸ்டாண்டில் நிற்கிறேன்.அந்தப்பெரியவர் காட்டிய பஸ் சென்று கொண்டிருந்தது. நான் செல்ல வேண்டிய ஊருக்கு தொடர்ச்சியாக பல பேருந்துகள், சரி ஒரு டீ சாப்பிடலாம் என்று பேருந்துகளுக்குப் பின்னால் இருந்த டீக்கடைக்கு என் கண்கள் ஓடின.
ஒரு பேருந்துக்குப்பின்னால் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு கல்லூரி படிப்பவர்கள் போல பையினை மாட்டிக்கொண்டிருந்தார்கள்.
டீயினைக்குடித்து விட்டு தயாராக இருந்த பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் முக்கால்வாசி இருந்தது, கண்ணாடி பக்கம் கிடைக்கவில்லை. இருபெரிய்யய மனிதர்களுக்கு மத்தியில் தஞ்சம் புகுந்தேன்.
ஒரு பெண் முன் படி வழியாக பஸ்ஸில் ஏறி வந்து என்னுடைய இருக்கைக்கு இடது புற இருக்கையில் அமர்ந்தார். எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது, அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால பஸ்ஸிற்கு பின்னாடி பாத்தமே அதேதான். யாரோ என் இருக்கைக்கு பின்னிருக்கையில் உட்கார்ந்தது போலிருக்கவே திரும்பினேன். அட வெளியே பார்த்த அந்தப்பையன்.
பஸ் கிளம்ப ஆரம்பித்தது. அந்தப்பெண் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார் ” ஏய் சும்மாவே இருக்கமாட்டியா? ஏன் இப்படி பண்ணுற , உன்னல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல” ஏதோ பெண்ணிடம் தகராறு செய்பவன் என நினைத்துக்கொண்டிருந்தேன். “என்னை நீ மாட்டி வுட்டுருவ, லீவு வேற சொல்லிட்டேன் போடா” என்றபடி அந்தப்பெண் சைகை காட்ட அவன் அப்பெண்ணோடு உட்கார்ந்தான்.
டிரைவர் டிவிடியைப்போட்டார் “அழகாக சிரித்தது அந்த நிலவு” எனப்பாடத்தொடங்கியது அது. ஊர்கதை உலகக்கதை எல்லாம் பேச ஆரம்பித்து அவள் தோள் மீது சாய்ந்து கொண்டான்.
பஸ்ஸில் எல்லோரும் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற மானம் கொஞ்சம் கூட இல்லாமல் சத்தம் போட்டு பேசிக்கொண்டு, கைகளை முறுக்கிக்கொண்டு சேட்டைகளை செய்து கொண்டு வந்தார்கள். மிஞ்சிப்போனால் ரெண்டு பேருக்கும் 17 இல்லைன்னா18 வயசுதானிருக்கும். நான் மேற்கொண்டு இதை பார்க்காது கண்ணைமூடி தூங்குவது போல் இருந்தேன்.
அன்றாடம் பஸ்-ல் இப்படி ஒரு ஜோடியயாவது பாக்கறேன், அன்னைக்கு பஸ்ஸ்டாண்டுல பையன் பக்கத்துல உக்காந்துகிட்டிருக்குற பொண்ணு ………………………………………அப்பெண் சிரிச்சுகிட்டு போன் பேசிகிட்டு இருந்துச்சு. அப்புறம் போன வாரம் பிரவுசிங் சென்டர்ல ஒரு ஜோடி முத்தம் கொடுத்துகிட்டு இருந்துச்சு, நான் பாதியில பிரவுசிங்க விட்டுட்டு வந்தேன். யார் பாத்தா நமக்கென்ன நாய் மாரி ஊர் மேய்ஞ்சுகிட்டு இருக்குங்க. சென்னையில நிறய நடக்கும் ஆனா இப்ப சிறு நகரத்துல கூட சிலதுங்க ஊர் மேய்ஞ்சுகிட்டு திரியுதுங்க.
எந்த நம்பிக்கையில் தான் ஒருபெண் அல்லது ஆண் காதலிக்கிறான்/ள். ஒருவனைப்பற்றி முழுமையாக தெரியாமல் எதைப்பார்த்து, எதை வைத்து ஊர் சுற்றுகிறார்கள். கேட்டால் காதலிக்க உரிமையில்லையா என்கிறார்கள். முதலில் இவர்கள் செய்வது காதலா?
இவர்களில் பெரும்பாலோர் திருமணம் செய்வது இல்லை.
தன் காதலுக்காக போராடுவது கிடையாது. வீட்டிற்கு தெரிந்து விட்டது என்பதெல்லாம் ஒரு சாக்கு, ஒருத்தியை விட்டால் இன்னொருத்தி என்று ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்கு ஒரு விருப்பம் இப்படிப்பட்ட ஜோடியிடம் கேட்க வேண்டும் “காதல் என்பது என்ன?“. ஆனால் இவர்களைப்பார்த்தால் தானாகவே ஒரு அருவறுப்பு வந்து விடுகிறது.
எவன் பார்த்தால் என்ன? நான் முத்தம் கொடுப்பேன், பஸ்ஸில் எல்லா சேட்டையும் செய்வேன் என்பவனை ஒரு காதலனாக பார்க்க முடியுமா?அல்லது ஒரு விபச்சாரியாக பார்க்கமுடியுமா? நாய்களைப்போல தன் உணர்ச்சிக்கு வடிகால் எல்லா இடங்களும் தாராளமாக இருக்கின்றன.
இவர்களெல்லாம் விபச்சாரத்தனத்திற்கு காதலை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தனிமனித ஒழுக்கம் என்பது இல்லாமலே போய்விட்டது , அப்பாவுக்கு தெரிஞ்சா எனக்கவலையுறும் அப்பெண் அப்பாவுக்கு எப்பவுமே தெரியக்கூடாது என்கிறார். ஆனால் தான் செய்யும் செயல் சரியா தவறா?.
பாலுணர்வு மட்டும் சார்ந்தது எப்படி காதலாக இருக்கும் என்பதுதான் கேள்வி. சில மாதங்கள் முன் ஒருவன் என்னருகில் பேருந்தில் செல்லும் 2 மணி நேரமும் காதலியோடு பேசிக்கொண்டே இருந்தான். அப்படி எதைத்தான் பேசுகிறான்?
அந்தக்கதை இந்தக்கதை என்றூ மொக்கைகள் தான் பேச்சுக்களாகின்றன. எனக்கொரு சந்தேகம், ஒரு முறைகூட இந்த சமூகத்தைப்பற்றிய பேச்சு ஏன் உங்களிடம் இருந்ததில்லை. நீங்களும் வயிற்றுக்கு சோறு தானே உண்கிறீர்கள், ஏன் அரிசி, பருப்பு விலை ஏறியது? எதற்காக இவ்வளவு கல்விக்கட்டணம்? ஏன் யோசித்ததே இல்லை? ஏன் இவையெல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?
திரைப்படங்கள் இப்படி ஊர்மேய்வதை கலாச்சாரமாக்குகின்றன, “எதைப்பற்றியும் கவலை இல்லை எனக்கு என் உணர்வுதான் முக்கியம்” மற்றவர்கள் ஏதாவது நினைத்துவிட்டால் என்ற எண்ணம் தேவை இல்லாததாகிவிட்டது. “மனிதனை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்த வேண்டும், அறவுணர்ச்சிகள் அல்ல” இந்த மாபெரும் கருத்தை
லீனாவின் தளத்தில் படித்தது போல ஞாபகம்.
நித்தியானந்தனையும், காஞ்சி சங்கரனையும் ஏன் தேவநாதனையும் கூட உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.பின் நவீனத்துவவாதிகளை எது வேண்டுமானாலும் வழி நடத்தட்டும். உங்களின் உள்ளுணர்ச்சிகள் எங்களின் அறவுணர்ச்சியை பாதிக்கும் போது என்ன செய்வது? உங்களுக்கு அறவுணர்ச்சி தேவை இல்லாமலிருக்கலாம் நாங்களும் அறவுணர்ச்சியற்று இருக்க வேண்டுமென்பது அராஜகமாக இல்லையா?
ஒரு விசயத்தில் பின்நவீனத்துவவாதிகள் பெருமை கொள்ளலாம், இதோ இங்கே இளைஞர்களை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.
சுயநலத்திற்கு யாரைப்பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏன் தன்னைப்பற்றியும் கூட. உன் உரிமைபறிபோகிறதென்றால் உனக்கேன் அக்கறை நான் மானங்கெட்டு வாழ்வது என் உரிமை என்றாகிவிட்டது / இல்லை என்றாக்கப்படுகிறது, /பட்டுவிட்டது.
இவ்வுலைகைப்பற்றி பேசாதே, உழைத்து இந்த சாலையை அமைத்தார்களே அவர்களைப்பற்றிப்பேசாதே, அதோ இந்த ஓட்டுனர் எவ்வளவு பணிச்சுமைக்கிடையில் பேருந்தினை இயக்குகிறார்.அவர் கவலையினை என்றாவது புரிந்து கொண்டிருக்கிறாயா?
“இந்த முதலாளித்துவ உலகம் கற்றுக்கொடுக்கிறது, எல்லாவற்றையும் நுகர்ந்து விடு இம்………….. எல்லாவற்றையும், கருப்பாக இருந்தால் நீ நுகரப்படமாட்டாய், சிவப்பாக மாறு பலரும் உன்னைப்பார்ப்பார்கள், மற்றவர்கள் உன்னை ரசிப்பதுதான் வாழ்வியலின் தேவை உழைப்பு அல்ல, எதைப்பற்றியும் சிந்திக்காதே, இவ்வுலகம் படைக்கப்பட்டதே அனுபவிக்கத்தான் அனுபவி நன்றாக அனுபவி, எத்தனைபேர் மாண்டாலும் உன் சுகத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே.
இது தான் தாரக மந்திரம். உன் அடிமைத்தனத்துக்கு தடையாய் இருப்பவனெல்லாம் உன் எதிரிகள்”
” பொய்யாய் வாழ்வது தான் விருப்பமெனில், உண்மைகள் புரியும் போது பொய்கள் கலையும், அப்போது உங்கள் ” காதலும் ” பறந்து போகும். மறுகாலனியாக்கத்தால் தைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீ உன்னைப்பற்றி என்னப்பேசப்போகிறாய்? ஏன் பேச மறுக்கிறாய்?
நாங்கள்பேசுகிறோம் மக்கள் விடுதலைக்கு உனக்கும் சேர்த்துதான், ஆனால் நீ உன் விடுதலைக்கு கூட பேச மறுக்கிறாய். ஒருவர் தன் துணையை தெரிவு செய்ய காதல் சிறப்பான வழிதான். ஆனால் இந்த காதல் வேசம் போடும் விபச்சாரிகளை என்ன செய்வது?”
கண்விழித்துப்பார்த்தேன் அப்பெண்ணின் மடியில் அவன் படுத்துக்கொண்டிருந்தான், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. அதைப்பார்க்கும் போது ஒரு பிணத்தின் மடியில் இன்னொரு பிணம் படுத்துக்கொண்டிருப்பதைப்போல் இருந்தது.
தொடர்புள்ள பதிவுகள்
குறிச்சொற்கள்: அமைதி. தியானம், ஓஷோ, கவிதை, கவிதைகள், காதல், குருதேவ் பாலியல், ஜக்கி, ஜெயேந்திய சரஸ்வதி ஸ்வாமிகள், நாயன்மார்கள், நித்தியானந்தர், நுகர்வியல்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
மார்ச் 4, 2010
1
ஆனந்தம்
கதவைத்திற
காற்று வரட்டும்
கதவைத்திற
காற்று வரட்டும்
ம்ம்ம்ம்ம்………
கதவைத்திற
……………….வரட்டும்
நித்தியங்கள்
தினமும் ஆனந்தங்களைத்
தேடுகின்றன
நிம்மதியின் சூட்சுமங்கள் படிக்க
முதலில் ஸ்ரீமத் பாகவதத்தைப்
படி
“எல்லாம் மாயை
ஆம் எல்லாமுமே மாயை
ஆண்டவனின் நாடகத்தில்
நாமெல்லாம் நடிகர்கள்”
ரஞ்சிதா மாயை
சொர்ணமால்யா மாயை
சங்கரராமன் மாயை
ஜட்டியோடு படுத்திருந்த நித்தியும் மாயை
ஆண்குறியும் பெண்குறியும் மாயை
ஆனந்தத்தை தேடி
அனுதினமும் அலைவோரே
ஆனந்தம்
உள்ளாடைக்குள்
பத்திரமாய் இருக்கிறதாம்
—————————————————————-
ஆன்மீகத் தேடல்கள் -2
போதும்,
இனி கதவைத்திறக்காதே
ஒஷோ செயேந்திரன்
நித்யா ஜக்கி கொக்கி
பக்கி சொக்கி
“அத்தனைக்கும் ஆசைப்படு”
“கதவைத்திற காற்று வரட்டும்”
கவலைப்பட ஒன்றுமில்லை
சுவாமிகாள்
கிருஷ்ணன் கேட்காததை
சிவன் செய்யாததையா
செய்துவிட்டீர்கள்
அவா அவா சொன்னாள்
இவா இவா நன்னா செய்தாள்
நீங்களெல்லாம்
நான்கு வேதங்களையும்
படித்தேள் அப்படியே
செய்தேள்
நாங்கோ படிக்கலீயே
சுவாமீ
அதாலே தான்
இன்னமும்
மரமண்டைகளாகவே இருக்கோம்
“ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான
இருந்தார்கள்”
“மனுதர்கள் தவறுசெய்வார்கள்”
“இந்து மதத்திற்கும் இதற்கும்
சம்பந்தம் இல்லை”
வக்காலத்துக்கள்
நாக்கை சுழற்றுகின்றன
சிரிக்கிறார்கள்
தில்லை தீட்சிதன்கள்
சங்கரன்கள்
பிரேமானந்தங்கள்
கடவுள் பரிசோதிக்கிறார்
சனிகிட்ட ஆனாளப்பட்ட சிவனே
மாட்டிண்டு முழிக்கும் போது
நம்மவா எல்லாம் எம்மாத்திரம்
“அத்தனைக்கும் ஆசைப்படு”
“கதவைத்திற காற்று வரட்டும்”
போதும் இனி
கதவைத்திறக்காதே
—————————————————————-
ஆன்மீகத்
தேடல்கள் – 3
உங்களை
ஜெயிக்க முடியாது
எங்க சுவாமி அப்படி
அப்படி பண்ணியிருக்க மாட்டார்
எல்லாம் கிராபிக்ஸ்
சித்து வேலை
கங்கையை
காசியை
கேவலப்படுத்தினீர்கள்
இப்போது சுவாமிகளை
ஆனால்
இந்து மதத்தினை உங்களால்
கேவலப்படுத்தி
ஜெயிக்க முடியாது
உண்மைதான்
கேவலங்களை யாராலும்
கேவலப்படுத்திவிட முடியாது
சொல்லத்தான் முடியும்
வீடியோக்கள்
புகைப்படங்கள்
வாக்குமூலங்கள்
வழக்குகள் மட்டும்
உங்கள் பிம்பங்களை உடைத்திடப் போவதில்லை
பக்தர்கள்
பதர்களாய் நீடிக்கும் வரை
முக்தி பெற மூடர்கள்
முண்டியடிக்கும் வரை
யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது
—————————————————————-
ஆன்மீகத்தேடல்கள் – 4
மயான அமைதி
கதவினை மூடு
கும்மிருட்டில்
கால்களை மடக்கி ஆசனமிடு
கைகளை
முத்திரையில் வை
தன்மானத்தை தூக்கிப்போடு
மனிதத்தை மூலையில் போடு
மக்களை மற
துன்பங்களைத் துற
குறைகளை சொல்லாதே
தனித்து இருப்பதில் சுகம் காண்
மக்கட் பிணங்களின் மீதேறி
அமைதியைத்தேடு
அமைதிதான் வேண்டுமா
உனக்கு
உலகம் பற்றி
எரிகையில்
உனக்கு மட்டும் ஸ்பெஷலாய்
அமைதி கிடைக்க
இதென்ன நித்தியாவின் வயாகராவா?
துப்பாக்கியின் சத்தங்களும்
வன்புணர்வின் கதறல்களும்
உன் காதுகளில் விழவில்லையா?
மக்களைத்தவிர்த்த அமைதி
தான் வேண்டுமாயின்
அது மயானத்திலும் கிடைக்கும்
அமைதியை உடை
வர்க்கமென்ற உளியினைக்
கொண்டு உன்னை நீயே செதுக்கு
அமைதிக்கும் அமைதியின்
புரோக்கர்களுக்கும் நிரந்தரமாய் அமைதியைக்கொடு.
—————————————————————-
ஆன்மீகத்
தேடல்கள் – 5
இயற்பகை நாயனார்
நித்தியும் சங்கரனும்
பிரேமானந்தாவும் ஓஷோவும்
மாறவும் இல்லை
மாறப்போவதும் இல்லை
மேக்கப்கள் கலைவதுமில்லை
கலைக்கப்படுவதுமில்லை
நீ மாறிக்கொண்டே இருக்கிறாய்
பக்தனாக
அறிவை இழந்த சிஷ்யனாக
அதிபத்தனாக
அப்பூதியடியாக
கண்ணப்பனாக
இறுதியாய் காத்திருக்கிறது
வேடமேற்க தயாரா?
குறிச்சொற்கள்: அமைதி. தியானம், ஓஷோ, கவிதை, கவிதைகள், குருதேவ் பாலியல், ஜக்கி, ஜெயேந்திய சரஸ்வதி ஸ்வாமிகள், நாயன்மார்கள், நித்தியானந்தர், பகவத் கீதை, யோகா
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 9 Comments »
பிப்ரவரி 28, 2010
நாட்டின் பெருமை

பந்துகள் விளாசப்பட்டன
இரட்டை சதங்களோ
நாட்டுக்கு அர்ப்பணம்
பாரதரத்னாக்கள் வரிசையில்
நிற்கின்றன – பாராட்டுக்கள்
பாராட்டிக்கொண்டே போகின்றன
எங்கும்
அல்ல அல்ல
எங்கெங்கும் இதே
பேச்சு
பேசித்தான் ஆக வேண்டுமாம்
இது நாட்டின் பெருமையாம்…..
ஒண்ட இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டன
இல்லை இல்லையில்லை
எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
இதோ இன்னொரு
பெருமையைப்பார்த்தீர்களா
இங்கேயும் ஏழு சதங்கள்
இதுவும் இந்திய தேசியத்திற்கு
தானே அர்ப்பணம்
இங்கும்
மட்டைகள் விளாசப்படுகின்றன
ஓடுகின்றன பந்துகள்
அவைகள் இடைஞ்சலாய்
இருக்கின்றனவாம்
அடிவாங்கிய பந்துகளால்
அமைதியாயிருக்க முடியவில்லை
அடிமையாய் இருக்க முடியவில்லை
திருப்பி அடிக்க தீர்மானித்துவிட்டன
உடைந்து போன பந்துகள்
கைதட்டியே பழக்கப்பட்ட கைகளே
இப்போது சொல்லுங்கள்
யாருக்கு கைதட்டப்போகிறீர்கள்?
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: அம்பானி, ஆதிவாசிகள், இரட்டை சதங்கள், கவிதைகள், சச்சின், டாடா, நக்சல் ஒழிப்பு போர், நியாம்கிரி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
பிப்ரவரி 14, 2010
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
பிப்பிரவரி 20, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், அசோக் பில்லர் அருகில், சென்னை.

பிப்பிரவரி 20, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், அசோக் பில்லர் அருகில், சென்னை.
நக்சல் பாரி பாதையில் அணிவகுப்போம் !
மக்களைக்கொல்லும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம் !
. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!
. நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
. பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
. போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!
. மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!
. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!
. மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: நக்சல் ஒழிப்பு போர், ம க இ க, மக்கள் கலை இலக்கியக் கழகம், மாவோயிஸ்டுகள், வேதாந்தா, Operation Green Hunt
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
பிப்ரவரி 9, 2010
முத்துக்குமார்
ஷோக்குகளும் ஷேக்குகளும்
ஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் நினைவு தினத்திற்கு ஓட்டுப்பொறுக்கிகள் முதல் போலி இனவாதிகள் வரை எல்லோரும் தன் பங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டனர். அவர்கள் முக்கியமாக ஒன்றை செய்தார்கள் அதுதான் அப்போதும் சரி இப்போதும் சரி செத்துப்போனமுத்துக்குமார் என்ன சொன்னார் என்பதை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும்
ஓட்டுப்பொறுக்கிகள் கடந்த தேர்தலில் இரு பிரிவாக நின்றார்கள் ஒருவர் ஈழமக்களின் துரோகி அணி மற்றொருவர் ஈழமக்களின் எதிரி அணியாக, இனவாதிகளும் ஈழ விடுதலைக்கு தன்னை மட்டுமே அத்தாரிட்டியாக இருந்தவர்களுக்கோ பாரிய சங்கடம். எந்தப்பக்கம் சாய்வது தேர்தலில் முதுகு சொறிந்தே பழக்கப்பட்ட கைகள் தவித்துக்கொண்டிருந்த நேரமது.
பாசிசத்தால் மக்கள் தலைகளில் கொத்துகொத்தாய் குண்டுகள் இறங்கின. “ஆட்லெறி குண்டு” என்பதை தமிழ்ச்சமூகம் ஆயுசுக்கும் மறக்காதென்பதை அப்போர் நிரூபித்துக்காட்டியது. இந்துமாக்கடலில் ஈழத்தமிழரின்குருதி கலந்தபின்னும் அதன் நிறம் மாறவில்லை, மாறவும் விடவில்லை அத்தாரிட்டிகள்.
இந்திய தேசியத்துக்கு பூச்செண்டு கொடுத்தார்கள்.
“இந்திய ஆளும் வர்க்கம் போரை நடத்தவில்லை சோனியா தனக்கு துணை இல்லாத காரணத்தால் தான் இப்போரே, மலையாளிகள் மத்திய அரசை தவறாக வழி நடத்துகிறார்கள்” முடிந்த அளவுக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியாதோ அதை மட்டும் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்தார்கள்.
தில்லியை ஏகாதிபத்தியமாக சொன்னவர்களெல்லாம், தனித்தமிழ் நாட்டை கேட்டவர்களெல்லாம் ஓடினார்கள் ஓடினார்கள் வேகமாக இந்தியத்தை தூக்கி நிறுத்துவதற்காக. ஏன் உன் எதிரிக்கு வாக்கு கேட்க போகிறாய்? இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு உனக்கு தேர்தல்? கேள்விகள் அந்தரத்தில் தொங்கின? பதில்கள் வாய்க்குள் அடங்கின, ஆனால் செத்துவிட்டான் முத்துக்குமார். யார் அந்த முத்துக்குமார் பெரிய தமிழினவாதியா? இல்லை சிறுத்தைப்பட்டாளமா? //
// அண்டையில் பாதிக்கப்படும் மக்களின் குரல் கேட்டு தினம் தூங்காமல் தத்தளித்த ஒரு மனிதன், என்ன செய்வது தெரியாமல் ஏது செய்வது என புரியாமல் அல்ல புரிந்தே தெரிந்தே முடிவெடுத்தான், அவனுக்கு நிச்சயமாய்த் தெரியாது. அவன் சாம்பல் செயா வீட்டிற்கும் கருணா வீட்டிற்கும் பாத்திரம் கழுவத்தான் போகப்போகிறதென்று.
கதறினார் வைகோ , சீறினார் திருமா, கொந்தளித்தார்கள் போலி இனவாதிகள் ஆனால் எல்லோரும் ஒன்றாய்முத்துக்குமாரின் கொள்கைக்கும் கொள்ளி வைத்தார்கள். என் உடலை ஆயுதமாய் ஏந்துங்கள் என்றான்முத்துக்குமார். உடலை ஏந்தியதாய் சொன்னவர்கள் அந்த கொள்கையினை ஏந்த தயாராயில்லை. அங்கே ஒரு இனம் அழிக்கப்படுவதை தாங்கமாட்டாமல் செத்த முத்துக்குமாரை, மக்கள் இறப்பது தாங்க மாட்டாது செயாவுக்கு ஒட்டுபோட சொன்ன தங்களோடு ஒரே தராசில் நிறுத்த முடியவில்லை.
முத்துக்குமார் விரைவில் எரிக்கப்பட வேண்டியதற்கு ஆக வேண்டியதை எல்லாம் செய்தார்கள். சொற்பமானவர்களின் எழுச்சியை அற்பமானவர்களின் சதி வென்றது. தன் உடலை யாரிடம் ஒப்படைக்க்கோரினானோ அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது உடல், இடுகாட்டில் கொள்கைகளோடு அவனும் எரிக்கப்பட்டான்.
கருணாவின் வேட்டில் ஈழம் அடகு வைக்கப்பட்டது, மற்றவர்கள் தன் பங்குக்கு செயாவின் சுருக்குப்பையில் திணித்தார்கள் மீதி ஈழத்தை, பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட சொன்னவர் ஈழத்தை தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் செய்வதாக சொன்னார். ஈழமக்களுக்கு வாக்கரிசி போட்டபடியே வாக்குகள்கோரப்பட்டன. செயா ஈழத்தாயாக பரிணமித்தார்.
கோட்சே ஈழத்திற்கு குரல் கொடுத்தால் அவனுக்கும் ஆதரவு தருவேன் சீமான் சிங்கமாய் பிளிறினார்.கொளத்தூர்மணியோ செயா ஈழம் தந்தாலும் தராவிட்டாலும் இது கருணாவுக்கு தண்டனை என வாத்தியாரானார். மொத்தத்தில் எல்லோருமே வேசம் போட்டார்கள் வேசத்தோடு அழுதார்கள் வேசத்தோடு கதறினார்கள்.இனி தேர்தலில் ஓட்டின் தேவை முத்துக்குமாரால் நிரப்பப்பட்டது. தேர்தல் முடிவும் வந்து விட்டது. ஒரு இனமும் சிதைக்கப்பட்டது. முடிந்து விட்டது ஓராண்டு.
வீரவணக்கங்கள்,அஞ்சலிகள் எல்லாம் வழக்கம் போல தொடர்ந்தன கூடவே வழக்கம் போல முத்துக்குமாரின் பிணத்தை ஆயுதமாக அல்லாது பிணமாக மட்டும் கண்டவர்கள் இப்போதும் உணர்ச்சி மிக்க பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை வாக்கு சீட்டிற்காக மடைமாற்றியவர்கள் எப்போது பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போதும் எல்லோரும் முத்துக்குமாரின் பிணத்தை பேசுகிறார்களே ஒழிய // அவனின் விருப்பத்தை பேசினார்களா?
ஷோக்குகளும் ஷேக்குகளும்
முத்துக்குமாரின் மரணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளைப்போலவே இப்போதும் கேள்விகள்கேட்கப்படுகின்றன. ” நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்கிறீர்களே? எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள்?சாவு வீட்டில் ஆள் பொறுக்க வந்த ஒரே கட்சி நீங்கள் தான், என்னவோ நீங்கள் மட்டும் தான்முத்துக்குமாரி-ன்சாவின் போது எல்லாம் செய்ததாக கூறிக்கொள்கிர்களோ, உங்களின் தேர்தல் புறக்கணிப்பு ஆளும் கங்கிரசுக்குத்தான் உறுதுணையாக இருந்தது.//
புலித்தலைமை பாசிசமாகத்தான் இருந்தது அதை இப்போதும் மறுக்கவில்லை, ஆனால் முத்துக்குமார் புலியாஎன்பதுதான் கேள்வி. முத்துக்குமாரைப்போல பலரும் ஈழமக்களின் பிரதிநிதியாக புலிகளை மட்டுமே பார்க்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான புலிகளின் வரலாறோ அவர்களின் அராஜகப்போக்கோ தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அந்த வாய்ப்பினை தனது வாயால் முடி மறைத்தவர்கள் தான் சென்ற தேர்தலில் செயாவுக்கு ஓட்டுகேட்டார்கள். போலி பெரியாரிய, இனவாதிகளைப்போல உள் இயக்க மற்றும் மாற்று இயக்க படுகொலைகளை முத்துக்குமாரோ அல்லது ஏனையை ஈழ ஆதரவு உழைக்கும் மக்களோ ஆதரித்தார்களா என்ன?//
முத்துக்குமாருக்கு விசுவாசமாய் இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம் ஆனால் அவனின் கொள்கைகளை, விருப்பத்தை கூட இருந்தே குழிபறிப்பீர்கள் என அவன் கண்டிப்பாய் நம்பி இருக்கமாட்டான். என் பிணத்தைபோராடும் மாணவர்களிடம் கொடுங்கள் என்றவனின் பிணத்தை மாணவர்களை தாக்கி விட்டு தூக்கி சென்ற அவலத்தை எந்த மேடையில் நீங்கள் பேசினீர்கள்?
திருமாவின் அயோக்கியத்தனத்தை புரட்சிகர அமைப்புக்களைத்தவிர யார் பேசுகிறார்கள்? உங்களை பேச விடாமல் ம க இ க தான் தடுத்ததா? தடுத்தது புரட்சிகர அமைப்புக்கள் அல்ல, உங்கள் கையாலாகாதத்தனம் தவிர வேறேது இருக்கமுடியும்?
நாங்கள் ஆள் பொறுக்கத்தான் போனோம் இதில் மாற்றுக்கருத்து இல்லை, முத்துக்குமார் சொன்னான் “என்உடலை ஆயுதமாக்குங்கள்” அதற்குத்தான் ஆள் பொறுக்கப்போனோம், மக்களைத்திரட்ட எங்களால் ஆன ஏதோ சில விசயங்களை முடிந்தவரை செய்தோம் எங்களுக்கு உங்களைப்போல போயஸ் தோட்டத்தில் புரட்சியாளர்களைப் பொறுக்கும் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.
எங்கேயும் புரட்சிகர அமைப்புக்கள் மட்டும்தான் செய்தோம் என்று சொல்லவும் இல்லை எழுதவும் இல்லை, ஆனால் ஒன்றை மறக்காது மக்களிடையே சொன்னோம், சொல்வோம், சொல்லிக்கொண்டே இருப்போம் உங்களின் கையாலாகத்தனம்தான் அதுதான் துரோகத்தனத்திற்கு முதுகு சொறிந்தது என்று.
…………………………………………………………………………………………………………………………………………………………………………..
வினவில் வந்த
கட்டுரையை அடுத்து ஒரு முசுலீம் ஷேக் தனது தளத்தில் எழுதிவருகிறார். அதில் அவரது
நோக்கமே “தொடர்ந்து சில காலமாய் முற்போக்கு வேடமிட்டு எல்லா கருத்துக்களையும் எதிர் கொண்டு அதற்கான தகுந்த எதிர்வினை ஆற்றுவோம் என்று பொய் வேடமிட்டு திரிந்து கொண்டிருந்த மாவோயிஸ்டு மரமண்டைகளின் இணையதளமான “வினவு” தன்னுடைய முற்போக்கு வேடத்தை கலைக்க வேண்டிய காலம் கனிந்து விட்டதென்றே எண்ணுகின்றேன்”. //
அவரின் கேள்விகள்
“தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும். இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்……………….இப்படியாகி விட்டன.
//
புரட்சிகர அமைப்புக்கள் எந்த இடத்திலும் தற்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் அத்தற்கொலை எதனால் நிகழ்ந்தது என்பதை ஆராய்வதைத்தான் தடுக்க ஷேக்குக்கோ அல்லா இருக்கிறார், நமக்கு அறிவு இருக்கிறது. மக்களின் பாதிப்பைக்கண்டு மனம் பொறுக்காது, என்னை வைத்து அரசியல் செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு.
செத்தப்போனவனின் அறிவு குறைவுதான் ஷேக்கைபோல, அவரின் நண்பர்கள் போலவும் இருக்காது.அந்த தியாகத்தை மதிக்க வேண்டிய இருக்கிறதா இல்லையா? அந்தப்போராட்டத்தை மக்கள்போராட்டமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?
// அன்புள்ள ஷேக், உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா?
போராட்டக்குணத்தை கொடுத்தாரா? ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத “கடவுள்” தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின் நல்ல மண்டையில் உதித்தது.
எல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.
முத்துக்குமாரை படைத்த அல்லா அவனை ஏன் தற்கொலை செய்து கொண்டு சாகவைத்தான்? அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான்? கடவுள் முக்கியமாக உங்கள் அல்லா இருப்பது உண்மை எனில் உலகமக்களை கொன்று குவித்த அவன்தான் முதல் குற்றவாளி. இதனால் தான் உங்கள் அல்லா மட்டும் அல்லது இந்து, கிறித்துவமத சாமிகளைக்கூட தூக்கியெறிய சொல்கிறோம்.
ஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா? அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு? நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.
ஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம். உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா?
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் புரட்சிகர அமைப்புக்களின் புரட்சி சூடு சொரணையுள்ள உழைக்கும்மக்களுக்கானதுதான். உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கில்லை. உங்களைப்போல் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களை ஆதரிக்கிறோம் மாநாட்டில் உங்களைப்போல் மாறிமாறி மண்டியிட்டு // நாயாய் (குறிப்பு கீழே) இருக்க உழைக்கும் மக்களுக்குத் தெரியாது /அவசியமும் கிடையாது.
( நாங்கள் எல்லாம் வல்ல பேரருளாளன் கருணையால் உங்களால்
பொறுக்கிகள் என விளிக்கப்படும் போது, எங்களது
கம்யூனிச பூதத்தின் எல்லாம் வல்ல அருளால் நீங்கள் நாய்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள் )
//
//
குறிச்சொற்கள்: இனவாதிகள், ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், நக்சல்பாரி, பி.ஜே, பேக்குகள், ம க இ க, முத்துக்குமார், விடுதைப்புலிகள், ஷேக்குகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஜனவரி 28, 2010
தோழர் செத்துட்டீங்களா?
தோழர் நீங்கள்
இறந்து விட்டீர்களாம்
லட்சக்கணக்கானோர் கண்ணீர்
வடித்தனராம்
விடை கொடுத்தனராம்
நானும்
பார்த்தேன் டி.விப்பெட்டியில்
செங்கொடிகள் பட்டொளி
வீசிப்பறந்ததாக நண்பன்
சொன்னான் ஆனால்
எனக்கோ காவிக்கொடியாக
தெரிந்தது தோழர்
என்னுடைய பார்வையில்
எல்லாமே மங்கலாகத்தான் தெரிகிறது போலும்
ஆட்டோ ஊர்ந்து கொண்டு செல்லும்
கணீரென்று
“மேற்கு வங்கத்தில் தொடர்ந்து
மாசுமருவற்ற ஆட்சி நடத்துவது
மார்க்சிஸ்ட் கட்சி,
உழைக்கும் மக்களுக்கு
இலவச நிலம் வழங்கியவர் முதல்வர் ஜோதிபாசு”
அப்போது நூலகத்தில்
யாரும் படிக்காத
முரசொலியையும் தீக்கதிரையும்
தேடிப்படிப்பேன் – சொன்னால்
நம்ப மாட்டீர்கள் தோழர்
எனக்கப்போது 12 வயசு
காலங்கள் உருண்டோடின
முரசொலியின் முரசும்
தீக்கதிரின் சுள்ளியும்
மக்களின் தலைகளுக்கென்று
தாமதமாய்த்தான் புரிந்தது
அதுமட்டுமல்ல இன்னும் என்னனவோ
தெரிந்தது தோழர்
சொன்னால் உங்களுக்கு
கோபம் கூட வரலாம்
அங்கு வெடித்த நக்சல்பரியின்
இடியோசையில் செவிடான உங்கள்
காதுகள் எப்போதும் மக்களின்
கேள்விகளுக்கு பதில் சொல்லவேயில்லையாம்
நீங்கள் சொல்லாத பதிலை
சொன்னார்கள் லால்கரிலும், நந்திகிராமிலும்
உங்கள் வாரிசுகள்
நாங்கள் பாசிஸ்டுகள் என்று
நீங்கள் ரொம்ப நல்லவராம் தோழர்
உங்கள் சாவுக்கு பாஜக
காங்கிரஸ் திமுக அதிமுக ஆர்எஸ்எஸ்
இந்து முன்னணி எல்லாரும்
கலங்கினார்களாம் – கடைசியாய்
மாதவ்குமார் வந்த போதுதான்
எனக்கும் தெரிந்தது
நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவராம் தோழர்
நீங்கள் செத்துப்போய்
விட்டீர்களாம்
நான் மனங்கலங்கவில்லை தோழர்
பாசிசத்தின்
இயக்கவியலும் வரலாறுமாய்
நீங்கள் இருக்கும் போது
எப்படி உங்களுக்கு சாவு வரும் தோழர்
நீங்கள்தான் எங்கேயும்
நிறைந்திருக்கிறீர்களே தோழர்
மே.வங்க ஊழல்களில், மார்ட்டினிடம்
வாங்கிய கோடிகளில், தமிழகத்தின்
காவடிகளில்
தூணிலும் துரும்பிலும் எங்கும் எங்கெங்கும்
பாவம் அழுது
கொண்டிருக்கிறார்கள் தொ(கு)ண்டர்கள்
இன்னொரு தலைவர் கிடைக்காமலா போய்விடும்?
நீங்கள் இருக்கும் போது
எப்படி உங்களுக்கு சாவு வரும் தோழர்
ஆம் தோழர் பாசிசம் ஒருபோதும் சாவதில்லை
அதன் அதிகாரபீடங்கள் தகர்க்கப்படாதவரை
–
சிலர் சொல்லலாம் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது மரபல்ல
ஆம் அது பாசிச, முதலாளித்துவ மரபு. அது மக்களைக்கொல்லும்.
அவர்களின் மரபில் மரத்துப்போன மரபு இது.
எழுதியவிதமோ அல்லது அணூகுமுறையோ தவறாகப்படலாம். ஜோதிபாசுவின் மரணம் என்னுள் என்னுள் எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. பொய்யாய் நான் எப்படி அழ முடியும்.
மார்க்சிஸ்டு கட்சியின் நண்பர் சந்திப்பு அவர்கள் இறந்ததை கேள்விப்படபோது வருத்தத்திற்கு உள்ளானேன். ஆனால் அவ்வருத்தம் ஜோதிபாசு இறப்பின் போது ஏனோ வரவில்லை.
குறிச்சொற்கள்: கவிதைகள், ஜோதிபாசு, தோழர், போலி கம்யூனிஸ்டுகள்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 8 Comments »
ஜனவரி 14, 2010
ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
நான் சொன்னது தவறு தான்
சரியென்று சொல்லவில்லை
என் வார்த்தைகள் தடுமாறின
என்னவென்று உன்னைச்சொல்ல
எல்லாவற்றையும்
ஆடைகளைந்து அம்மணமாய்
நீ பாலியல் வன்புணர்ச்சி
செய்து கொண்டிருக்கும் போது
என்னவென்று உன்னைச்சொல்ல
எல்லோரின் உறுப்புக்களையும்
ஆராய்ச்சி செய்யும் உனக்கு
என்னதான் தேவை?
எனக்கு ஒன்றும் புரியவில்லை
இந்த ஆராய்ச்சியை மருத்துவத்தில்
செய்திருந்தால் பல பட்டங்கள் வாங்கியிருக்கலாமே?
நாங்கள் செய்த “பாவம்”
உன்னுடைய சமூக மருத்துவ கோலம்
விமர்சனங்கள் வந்தன
நான் என்ன செய்வேன்
தோழரைப்போல்
நான் இலக்கியவாதியா என்ன?
என்னால் முடியவில்லை
திட்டினேன்
மக்களின் மொழியில்
அது சரியென்று சொல்லவில்லை
உணர்ச்சிகள் மேலோங்கும் போது
அறிவு கரைந்து விடுகிறது
கரைந்து போன அறிவினை
மீட்டுக்கொண்டேன்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
உனக்குத்தெரியுமா
காலைமுதல் மாலை வரை
ஓடாய் உழைத்து கருத்துப்போன
எங்கள் பெண் பாட்டாளியின்
வியர்வை கரிக்குமென்று
கண்டிப்பாய் வாய்ப்பில்லை
உன் வாய்கள் எதையோ சுவைத்து
அச்சுவைதனை
உலகிற்கு முரசரைந்து கட்டியம் கூறலாம்
வறண்டு போன விவசாயத்தை
இற்றுப்போன ஆடைகளை
ஒடுங்கிப்போன ஆலைகளை
உன் உணர்ச்சிகள் தருமா?
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளை
அம்மணமாய் பாடையில் ஏற்று
உழைக்கும் மக்களின் உறுப்புக்களை
ஆராய்ச்சி செய் – கூடவே அவர்களுக்காக
உழைத்தவர்களையும்
எல்லாவற்றையும்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
உன் அம்மணப்பேனாவுக்கு
நோபல் பரிசுகூட கிடைக்கலாம்
விவசாயம் நொடிந்து
விசம் குடித்து
செத்த பிணங்கள் அம்மணமாய்
பிணவறையில்
பளபளக்கும் ஆடையோடு
விரைந்து செல்
நிர்வாணக்கவிதைகள் எழுது
ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள்
உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்
2.
குறிச்சொற்கள்: கவிதைகள், சுய விமர்சனம், பெண்ணியம், லீனா மணிமேகலை, விமர்சனம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 16 Comments »
ஜனவரி 10, 2010
கட்டாய ஓட்டுப்பதிவு
உழைக்காத ……….களின் ஆலோசனைகள்
ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: லாலு பிரசாத்

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களிலும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடுவதை கட்டயாமாக்கும் சட்ட மசோதா குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதை வரவேற்ற ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலிலும் அனைவரும் ஓட்டு போடுவதை கட்டயாமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
தேர்தல்களில் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் நிலையில், ஜனநாயகம், பாராளுமன்ற நெறிமுறை மற்றும் நாட்டு நலன் கருதி ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்க வேண்டியது அவசியமாகும் என்றும் லாலு தெரிவித்தார்
குஜராத் சட்டசபையில் கடந்த வாரம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்ட திருத்தம்படி, வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
// “இந்தியனாக பிறந்த எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும், யார் ஓட்டுப்போட விலையோ அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பறிக்கவேண்டும் அவர்கள் நாட்டில் வாழவே தகுதியற்றவர்கள், அவர்கள் எல்லாம் பிணத்திற்கு சமமானவர்கள், அந்த நாட்டுல பார்த்தேளா வோட் போடுறத சட்டமாக்கிட்டா ஆனா இங்க ஏப்ப அது நடக்கறதோ அப்பத்தான் இந்தியா வெளங்கும் ” இவை தேர்தல்களின் போது குறைந்து வரும் வாக்குப்பதிவினைக்கண்டு பொங்கியெழும் மாபெரும் சன நாயகம் உதிர்க்கும் வார்த்தைகள். இதைத்தான் பத்திரிக்கைகள் முதல் ஆளும் வர்க்கம் வரை பிரச்சாரம் செய்து வருகின்றன.
” இவனை எல்லாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்து இருக்காங்களே அவங்களத்தான் சொல்லணும் அறிவுகெட்ட ஜென்மங்க” இன்னும் சில புத்தி ஜீவிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் “யாருக்கு ஓட்டு போடணும்னு கூட தெரியாத முட்டாள்கள்” அறிவிக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடுவதெல்லாம் படிப்பறிவில்லாத , கிராமத்து பாமர உழைக்கும் மக்களைத்தான். ஓட்டு போடணும் என்பார்கள் அப்புறம் இவனையெல்லாம் தேர்ந்தெடுத்து இருக்காங்களே என்கிறார்கள். இவர்களுக்கு உண்மையாலுமே அவ்வளவு பாசமா இந்தியா மீது. அவர்களின் பாசத்தை கிளறுவதற்கு முன் ஓட்டு என்ன அவ்வளவு புனிதமான ஒன்றா? அதனால் தெரிந்தெடுக்கப்படும் கலசங்கள் அவ்வளவு தூய்மையானவையா?
இப்போதிருக்கிற இந்த தேர்தல் முறைப்படி என்ன செய்ய முடியும்? கலர் டீவி வாங்கமுடியும், 1 ரூபாய் அரிசி வாங்க முடியும் அப்புறம் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை சாப்பிட்டுவிட்டு மூன்றாவது வேளைக்கு வயிற்றை தடவிக்கொண்டு படுக்க முடியும் அவ்வளவுதான். அந்த நாட்டையே அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தம், விவசாயத்தையே பாழடிக்கும் பிடிக்களின் வரவு, அரிசிவிலை பருப்புவிலை ஏற்றம், ல்விக்கட்டணக்கொள்ளை, வேலையில்லாத்திண்டாட்டம் இப்படி எல்லாவற்றையும் கேள்வி கேட்க முடியாது.
தண்ணீர்வரவில்லையென்றால் சாலையை மறித்தால் அதிகாரி வருவாரா? ரோடு சரியில்லை என்று போராட்டம் நடத்தினால் அதிகாரி வருவாரா? ஸ்கூலில அதிக பீஸ் என்றால் அதிகாரி வருவாரா? அதை விடுங்கள் கழிவறைகட்டிக்கொடு என்றால் அதிகாரி வருவாரா? நாங்கள் ஓட்டுப்போட்ட பிரதி நிதி வரமாட்டார், எல்லாவற்றிற்கும் போலீசு தான் வரும். சரி எல்லவற்றுக்கும் போலீசு தான் வருகிறதென்றால் எதற்கு ஓட்டுப்போட வேண்டும். சரி போலீசு, அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்க அதிகாரம் கொடுங்கள், அதுவும் தர மாட்டார்கள். //
ஏனெனில் அவர்களை இயக்க சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்களாம், போலீசு தப்பு செய்தால் சட்டம் தண்டிக்கும்,பிரதி நிதி தப்பு செய்தால் சட்டம் தண்டிக்கும், சட்டம் தப்பு செய்தால் ம் ஹ¤ம் சட்டம் தப்பு செய்யாது ஏனெனில் பிரதி நிதிகள் தான் அவற்றை உருவாக்குகிறார்கள். சுற்றிவளைத்து பார்த்தால் இந்த சட்டத்தை மாற்ற அதிகாரம் இல்லை, ஏன் எனக்கு வேலையில்லை வேலைகொடு என்று கேட்க உரிமை இல்லை, கல்விக்கட்டணத்தை குறைக்க முடியாது.
சரி மக்களின் பிரச்சினைகளை மாற்ற என்ன செய்யவேண்டும், ஓட்டுப்போட வேண்டும்? அப்புறம் அவர்கள் சட்டம் போடுவார்கள் நல்லது செய்வார்கள், அவர்களும் நல்லது செய்யவில்லை என்றால் 5 வருடம் பொறுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் வேறொருவரை தேர்வு செய்ய வேண்டும், அதுதான் கொள்ளையடித்தவனுக்கு நாம் தரும் ஒரே தண்டனையாம். இவர்கள் வழியிலேயே பார்த்தால் கூடஎத்தனை அரசியல் வாதிகள், போலீசுகள், அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதாரண மனிதன் இன்னொரு மனிதனை கொலைமுயற்சி செய்தால் என்ன தண்டனை? ஆனால் பிரேம்குமாருக்கு நல்லகாமன் தாக்கப்பட்ட வழக்கில் என்ன கிடைத்தது, ஒரு டி.ஐ.ஜி 14 வயது டென்னிஸ் வீராங்கனையை பாலியல் சித்திரவதை செய்திருக்கிறான் அதனால் அப்பெண் தற்கொலை செய்திருக்கிறார் அவனுக்கு 6 மாதம் தண்டனையாம் அதுவும் பல்லாண்டுகள் கழித்து, சட்டத்து முன் எல்லோரும் சமம் என்கிறார்கள்
ஆனால் மக்களுக்கும் பணம் படைத்த, அதிகாரிகளுக்கும் வெவ்வேறாக இயங்கும் இந்த அரசுமுறைக்கு நான் ஏன் ஓட்டுப்போட வேண்டும்.தினமும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த மக்களுக்கு மாட்டுக்கு அல்வா கொடுத்து பல்லாயிரம் கோடிகளை அசைபோட்ட லாலு சொல்கிறார் “கட்டாய ஓட்டு முறை அவசியம்”.
அறுபது ஆண்டுக்குமேல் ஓட்டு போட்டாயிற்று ஏன் இங்கு பணக்காரன் பணக்காரனாகிக்கொண்டும் , ஏழை பரம ஏழையாகிக்கொண்டும் இருக்கிறான், அதை இந்த தேர்தலால் மாற்ற முடியுமா என்ன? இது என்ன கொடுமையாக இருக்கிறது சட்டத்தையும் மாற்றமுடியாது, எனக்கு வேலையும் கேட்க முடியாது, பன்னாட்டு கம்பெனிகள் விவசாயத்தையும், சிறு தொழில்களையும் அழிப்பதை தடுக்க முடியாதெனில் நான் ஏன் ஓட்டுப்போட வேண்டும்.
ஓட்டுப்போடாததைப்பற்றி கவலைப்படும் இந்த ……..வாய் தேசபக்தர்கள் என்றைக்காவது விவசாயம் கருகிப்போனதால் செத்துப்போன லட்சக்கணக்கான விவசாயிகளைப்பற்றீ பேசியிருக்கிறார்களா? நாட்டையே அடிமையாக்கும் மறுகாலனி, தனியார்மயம்-தாராளமயம்–உலகமயத் // தைப்பற்றி மூச்சாவது விட்டிருப்பார்களா என்ன? வாயைத்திறந்தால் “படிக்காத முண்டங்கள்” என்ற வசையத்தவிர என்ன செய்தார்கள்?
உழைக்கும் மக்கள் தான் இந்த சாலையைப்போட்டார்கள் காடு மலைகளை தன்னுயிரையேத்தந்து திருத்தினார்கள், அவர்களைத்தான் புத்தி ஜீவிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்”யாருக்கு ஓட்டு போடணும்னு கூட தெரியாத முட்டாள்கள்”. பலனே இல்லையென்றாலும் ஓட்டுப்போட்டு மக்கள் சாகத்தான் வேண்டும்.அவர்களை விடுங்கள் நீங்கள் சொல்லுங்கள் யாருக்கு ஓட்டு போடவேண்டும்? எவருக்குபோட்டால் இந்த நாட்டை அடிமையாக்குவதிலிருந்து மீட்பார் சொல்லுங்கள்?
யாரும் இல்லை மக்களை நேரடியாக அரசியல்வாதி, அதிகாரிப்படை சுரண்டினால் இந்த புத்தி ஜீவிக்கப்பட்டவர்கள் மறைமுக ஆதரவளிக்கிறார்கள் என்பது தான் உண்மை. எது மாற்று பதில் சொல்லமுடியுமா? பதில் அது அவர்களுக்கு பாடையாய் அமையும் என்பது தான் உண்மை. எப்போது மக்களுக்கான அரசு , மக்களின் அரசு வருகிறதோ அப்போதுதான் தேர்தல் என்பது உண்மையாக இருக்கும், முழுமையானதாகவும் இருக்கும்.
அந்த அரசு சட்டமன்ற,பாராளுமன்ற சாத்தியமில்லை, மக்கள் பாதையில் கிளர்ச்சியாக, புரட்சியாக வெடிக்கும் போதுதான் அது மக்களுக்கானதாயிருக்கும். இரு நூற்றாண்டுகளாக முதலாளித்துவ நாடுகள் சாதிக்கமுடியாத வளர்ச்சியை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் சாதித்துக்காட்டியது. அரசையும் அரசாங்கத்தியும் மக்களே தேர்ந்தெடுப்பார்கள், தவறு செய்தவர்கள திருப்பி அழைக்கும் அதிகாரம் பெற்றவர்கள் மக்கள், நாட்டின் சட்டத்தை திருத்துபவர்கள் மக்கள், அங்கு மக்கள் தான் தலைவர்கள், தலைவர்கள் மக்களின் தொண்டர்கள் அது மக்களின் அரசாங்கம் பாட்டாளிகளின் அரசாங்கம் , பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசாங்கம் ,ஆம் அங்கு உழைப்பவனுக்கு அதிகாரம், உழுபவனுக்கு நிலம். உழைக்காதவனுக்கு சோறில்லை. உழைக்காத பன்றிகளின் ஆலோசனைகள் நமக்குத்தேவை இல்லை.
குறிச்சொற்கள்: அரசியல்வாதிகள், கட்டாய ஓட்டுப்பதிவு, தேர்தல், புரட்சிகர அரசியல்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 9 Comments »
ஜனவரி 1, 2010
ராத்திரி கூத்தில்
முட்டிகள் வலித்தன
அடித்த சாராயத்தின்
நாற்றம் பரவியிருந்தது
படுத்திருந்தான் மகன்
ஓட்டலில்
கருகிப்போன வயலில்
வாங்கிய புட்டியை
மிச்சம் வைக்காமல்
உறிஞ்சி குடித்தான்
அப்பன்
பாலிடாலை
பிறந்து விட்டது புத்தாண்டு
கவிதைகள்-ஹேப்பி நியூ இயர்
குறிச்சொற்கள்: புத்தாண்டு
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »