காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்

kaathal-copya2வழக்கம் போலவே வந்துவிட்டது காதலர் தினம் பெப்ரவரி 14கையில் ரோசாக்களோடு பச்சை நிற உடைகளில் அலைந்து கொண்டிருப்போரை அலுவலகம், ரயில் நிலையங்கள்,பேருந்துகளில் என எங்கும் காணலாம்.பன்னாட்டு மூலதனத்தின் வரவால் இறக்குமதியான கலாச்சார சீரழிவுகள் காதலை தேடச்சொல்கின்றன படுக்கையறையில்.

தன் துணையை தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட காதல் தற்போது பாலுறவுத்தேவையை தீர்க்கும் நோக்கோடு புதைகுழிக்கு அனுப்பபடுகிறது. காதல் பாசம் நட்பு என அனைத்தையும் நுகர்பொருளாக்கிவிட்ட உலகமயம் அது உருவாக்கப்பட்ட உருவான நோக்கத்தை திட்டமிட்டே மறைக்கின்றன.அதிலும் குறிப்பாக காதல் என்பது அதன் தன்மையை இழந்து மிக வேக மாக விபச்சார நிலைக்கு தள்ளப்படுகின்றது.

இச்சமுதாயத்தின் உருவாக்கத்தில் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது,பெண்ணினம் தான் தன்னையும் வளர்த்து இந்த சமுதாயத்தையும் வளர்த்து உருவாக்கியது. தாய் வழி சமூகமாக இருந்த மனித இனம் படிப்படியாக தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டது,.ஒன்றாகவே வேட்டைக்கு சென்று வந்த மனித இனத்தில் தாய்மை பெண்ணை தங்குமிடத்தில் இருக்க வைத்தது. அது வரை உடல் பலம் உள்ளிட்ட அனைத்திலும் சமமாக இருந்த பெண் உணவுக்காக ஆணை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றார்,ஆண் தன் பசிக்குப்போக மீதத்தையே பெண்ணுக்கு தந்தான்.

ஓய்வு நேரங்களில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டறிந்தனர்,வழக்கம் போலவே அங்கிருந்த பெண்ணின் ஆளுமை அகற்றப்பட்டு ஆணுடைய ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. தந்தை வழி மாற்றத்துக்குப்பின் பெண் ஆணின் சொத்தாகவே மதிக்கப்படுகின்றார்,அதன் உரிமையாளர் தந்தை,சகோதரன் காதலன் கணவன் மகன் என பல்வேறு அவதாரங்கள் எடுத்துஆணாதிக்கம் தனது பெருமையை நிலை நாட்டுகிறது.

வரைமுறையற்ற பாலுறவினை தனிச்சொத்துரிமையே தகர்த்து ஒருத்திக்கு ஒருவன்(கவனிக்க ஒருவனுக்கு ஒருத்தி அல்ல) என்ற கோட்பாட்டை வைத்து பெண்ணின் மீது வரைமுறையற்ற சுரண்டலை ஏற்படுத்துகிறது.அதை மறுத்து இருவரும் பரஸ்பரம் அன்புடன் வாழும் காதலை பெண்தான் ஏற்படுத்துகிறார்.காதல் உருவானதே ஆணாதிக்கத்திலிருந்து தனது உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே,அதற்கான போராட்டமே. காதலில் பெண் தைச்சொத்தாக மதிக்கப்படுவதில்லை,இருவரும் ஒருவை ஒருவரை மதித்து அனுசரித்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது.

இப்படி தனது துணையை தெரிவு செய்வதற்காக உருவான காதல் ஆனாதிக்கத்தாலும் உலகமயத்தாலும் தன் தன்மையை இழந்து விபச்சாரத்தை நோக்கிய பாதையில் தள்ளப்படுகிறது.

ஒரு ஆணாதிக்க ஆண் தனக்கு மட்டுமே காதலிக்க உரிமை இருப்பதாகவும் அதை பெண் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்பவராகத்தானிருக்க வேண்டுமென எண்ணுகிறான்.அப்பெண் காதலை ஏற்க மறுக்கும் பட்சத்தில் அப்பெண்னை குற்றவாளியாக்குகிறான் ,தான் விருப்பபட்டதால் அப்பொருள் தனக்கே கிடைக்கவேண்டுமென வாதாடுகிறான்.

திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களோ ஆணாதிக்க காதலையே நியாயப்படுத்துகின்றன. மேலும் எறும்பு ஊற கல்லையும் தேய்க்க ஊடகங்கள் சொல்லித்தருகின்றன . முதலில் மாயைகள் சொல்வது போல் காதல் என்பது ஒரு முறை தான் பூக்குமா?காதல் என்பது நிலையானதா? காதலித்து மணந்த கனவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு அல்லது சமுதாயத்தின் பல கீழ்த்த்ரமான செயல்களில் ஈடுபடுகிறான் எனில் அக்காதல் தொடர்ந்து நீடிக்க முடியுமா ? அப்படி நீடித்தால் அது காதலா அல்லது அடிமைத்த்னமா .

ஒரு பெண்ணுக்கு எப்படி துணையை தெரிவு செய்ய உரிமை உல்ளதோ அவ்வாறே தன் உரிமைகள் பாதிக்கப்படும் போது தூக்கிஎறியவும் உரிமை வேண்டும். இப்போது காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் ? காதலிக்கும் வரை ஒரு மாதிரியும்(பெண்ணை மதிப்பதும்) கல்யாணத்துக்கு பிறகு மற்ற பெண்களைப்போல் அடிமையாய் இருப்பதும் தான் இருக்கிறது.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ விரும்பிய யாராவது இறந்து விட்டால் உடனே சாக வேண்டும்.இளவயதில் கணவன் செத்தால் கூட இறுதிவரை காதலுக்கு பெண் கல்லறை கட்டி அதில் விளக்கு பிடிக்கவும் வேண்டும் ,ஆனால் ஆணுக்கு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லை .உரிமைக்கான முதல் படியாக இருந்த காதலை ஆனாதிக்கம் தனக்கேற்றாற்போல் வளைத்து அதனையே அடிமையாக்கி விட்டது

ஏகாதிபத்திய காதலோ தலை கீழ் அதற்கு பேர்தான் காதலே தவிர அது ஒட்டு மொத்த விபச்சாரம் அதற்கு ஒரு பேர் வேண்டும் அது காதலாக சொல்லப்படுகிறது. ஊர் மேய்வதற்கு ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்கிறார்கள் . உண்மையில் ஐடி பீபிஓக்களின் சரிவால் ஊர்மேஞ்சி காதலர்களின் எண்ணிக்கை கண்டிப்பாய் குறையும்.

 

 

———————————————————————————– ————————–

சிறீ ராம் சேனா ,இந்து முன்னணி போன்ற பண்டார பார்ப்பனீயங்கள் மற்றும் மூற்போக்கு பா.ம.க காதலர் தினத்தை எதிர்ப்பதாக கூறுகின்றன,இவர்கள் எதிர்ப்பது ஏகாதிபத்திய காதல்களைஅல்ல .காதலால் வர்ணாசிரமத்தில் சிதைவு ஏற்படும் என்பதே இவர்களின் கவலை.

அந்தகவலை தான் வெறியாக வெளிப்படுகின்றது. நேற்று தின மணியில் வந்த கார்டூனைப்பாருங்கள் இரு கல்லூரிபெண்கள் பேசிக்கொள்கிறார்கள்”எனக்கு யார் காஸ்ட்லியான பரிசு தராங்களோ அவனத்தான் நான் காதலிப்பேன்” விபச்சாரத்தியே காதலாக பார்ப்பன மீடியாக்கள் வர்ணிக்கின்றன.

தெருவில் பெண் ஆனோடு திரிந்தால் கல்யாணம் செய்து வைக்க போவதாய் அறிக்கைவிடும் காலிகள் தான் காதலித்ததால் கல்யாணம் செய்ததால் தீயை வைத்தார்கள் விசத்தை கொடுத்தார்கள், இந்த நாட்டு மக்களுக்கு மறுகாலனியும் பார்ப்பனீயமும் முக்கிய எதிரி என்றால் காதலுக்கும் அதுதான் எதிரி.பார்ப்பனீயமோ பெண்ணை கட்டற்ற வரைமுறையற்ற சுரண்டலுக்கான பொருளாக பெண்ணை மாறக்கோருகிறது ,அதையேத்தான் மறுகாலனியும் கூறுகிறது,இது காதலில் மட்டுமல்ல எந்த ஒரு உரிமைக்கும் சரி பிரச்சினைக்கும் சரி பார்ப்பனீயமும் உலகமயமும் ஒன்றையேதான் கூறுகிறார்கள் . ஏனெனில் உரிமைகளை பெற வேண்டுமெனில் இவை இரண்டையும் எதிர்க்காது தீர்வு இல்லை. காதலர்களே காதலை உரிமையாக கருதுவீர்களானால் போரிடுங்கள் நீங்களும் மக்கள் தானே

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஒரு பதில் to “காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்”

  1. rudhran Says:

    good post

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: