நாட்டின் பெருமை

நாட்டின் பெருமை

பந்துகள் விளாசப்பட்டன
இரட்டை சதங்களோ
நாட்டுக்கு அர்ப்பணம்
பாரதரத்னாக்கள் வரிசையில்
நிற்கின்றன – பாராட்டுக்கள்
பாராட்டிக்கொண்டே போகின்றன

எங்கும்
அல்ல அல்ல
எங்கெங்கும் இதே
பேச்சு
பேசித்தான் ஆக வேண்டுமாம்
இது நாட்டின் பெருமையாம்…..

ஒண்ட இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டன
இல்லை இல்லையில்லை
எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
இதோ இன்னொரு
பெருமையைப்பார்த்தீர்களா
இங்கேயும் ஏழு சதங்கள்

இதுவும் இந்திய தேசியத்திற்கு
தானே அர்ப்பணம்

இங்கும்
மட்டைகள் விளாசப்படுகின்றன
ஓடுகின்றன பந்துகள்
அவைகள் இடைஞ்சலாய்
இருக்கின்றனவாம்

அடிவாங்கிய பந்துகளால்
அமைதியாயிருக்க முடியவில்லை
அடிமையாய் இருக்க முடியவில்லை
திருப்பி அடிக்க தீர்மானித்துவிட்டன
உடைந்து போன பந்துகள்

கைதட்டியே பழக்கப்பட்ட கைகளே
இப்போது சொல்லுங்கள்
யாருக்கு கைதட்டப்போகிறீர்கள்?
தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , ,

2 பதில்கள் to “நாட்டின் பெருமை”

  1. amrudha Says:

    எளிமையான கவிதை வாழ்த்துக்கள்

  2. நாகரீகக்கோமான்கள் தொடுக்கும் போர் « கலகம் Says:

    […] 4.நாட்டின் பெருமை […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: