தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி
கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
எம் வாயில்
பீயைத் திணிக்கவும்
ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்
ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்
உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்
ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்
என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன
ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை
ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி
பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !
அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி நக்சல்பாரியே உன் வழி