Posts Tagged ‘அதிமுக’

மாற்றங்களும் சில கற்களும்

ஏப்ரல் 28, 2011

மாற்றங்களும் சில கற்களும்


பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்

முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன

வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி

நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ

மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்

டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்

சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்

வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன

இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

ஏப்ரல் 17, 2011

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி


கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.

கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

எம் வாயில்
பீயைத் திணிக்கவும்

ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்

ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்

உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்

ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்

என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை

ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி

பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !

அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி  நக்சல்பாரியே உன் வழி

இது பதினாலாவது தேர்தல்

ஏப்ரல் 9, 2011

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

ஏப்ரல் 3, 2011

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

 

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு

ஓகஸ்ட் 30, 2010


2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு டிவியைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைகழக மாணவ, மாணவிகள் வந்த பேருந்து அதிமுக குண்டர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த 3 மாணவிகளையும் வேண்டுமென்றே திட்டமிட்டு கொளுத்தி கொன்று போட்டார்கள் அந்த அதிமுக பாசிஸ்டுகள்.

அடுத்த நாள்   நான் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது ஆங்காங்கே பேருந்துகள் அதிமுக குண்டர்களால் மறிக்கப்பட்டது, பல குண்டர்கள் பேருந்துகளை சேதப்படுத்தினார்கள். ஒருவன் கருணாநிதி தே……….மவன் என்று பேருந்தில் எழுத , மற்றொருவன் கருணாநிதியின் தாயை மிகவும் கொச்சையாக திட்டிக்கொண்டு
போனான். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.

நாங்கள் கல்லூரிக்கு பயணமானோம், வகுப்பில் எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். வேதியியல் ஆசிரியர் வந்தார். அவர் எப்போதும் 60 நிமிட வகுப்பு நேரத்தில்   கடைசி 10 நிமிடம் அன்றைய செய்திகளை கேட்பார் மாணவர்களிடம். அவர் அன்று பாடம் எதுவும் எடுக்க வில்லை, ” மாணவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு கொடூரம், நாய்கள், பரதேசிப்பசங்க என்றார், இந்த பாழாப்போன அரசியல் மாணவர்களை கொன்றுவிட்டது, நமக்கு அரசியலே வேண்டாம்” என்றார். சற்று நேரத்தில் அலுவலக உதவியாளர் சுற்றறிக்கையை கொடுக்க, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

அன்றும் அடுத்த சில நாட்கள் இதேதான் செய்தியாய் தொடர்ந்தது ஊடகங்களில், பல மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் சோகமாய் என்ன செய்வதென்று தெரியாமல் சடங்குக்காக என்று  மவுன ஊர்வலம், அமைதிப் போராட்டம்  என நடத்தினார்கள். ஆனால்  எனக்குத்தெரிந்து எந்த அதிமுக கொடிக்கம்பமோ, அதிமுக அலுவலகங்களோ தாக்கப்படவில்லை.

மக்கள் தாரைதாரையாக கண்ணீர்விட்டார்கள். அதிமுகவின் ஜெயா டிவியோ எல்லாம் டூப் என்றது, சன் டிவி தனது ஆட்களை வைத்து எடுத்த சினிமா என்றார்கள் அதிமுகவினர். கோகிலவாணியின் தந்தை உட்பட பலியான அனைத்து மாணவிகளின் பெற்றோர்களும் ஊடகங்களில்  தீனிக்காக காட்டப்பட்டார்கள். யாரும் இதற்கு காரணமான அதிமுகவை  தடை செய்யக்கோரவில்லை, பல நடு நிலை நாயகர்கள் சொன்னார்கள் “யாரோ செஞ்ச தப்புக்கு கட்சி என்ன செய்ய முடியும்?”

வழக்கு சேலம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது 3 பேருக்கு தூக்கும் 25 பேருக்கு சிறையும் கொடுத்தது நீதித்தாய். பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். அங்கு 2007-ல் தூக்கு உறுதி செய்யப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றமும் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

கடைசியில்  நீதி வென்றிருக்கிறதா?

கடைசியில் மட்டுமல்ல முதலில் கூட  மக்களுக்கான நீதி வெல்வதில்லை, ஏதோ சாராயத்திற்கு ஊறுகாய் போல தவிர்க்க இயலாத தீர்ப்புக்கள் இப்படி வெளிவருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படும் போது மக்களின் மீது வன்முறை ஏவிவிடப்படுகிறது. மக்கள் குடி நீருக்காக, விவசாயம் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போது அவர்ளின் மண்டையை பிளக்கும் போலீசு மக்கள் மீது வன்முறையை ஏவிவிடும் இந்த பாசிச ரவுடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. “தயவு செய்து” கைதாக சொல்கிறது. மாவோயிஸ்டு கட்சியைச்சேர்ந்த சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை தரப்படுகிறது. ஏன் என்றால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாய் என பதில் வருகிறது.

யார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது? கருணா ஆட்சிக்கு வந்தால் செயாவை பிடித்து உள்ளே போடுவது, செயா வந்தால் கருணாவை தூக்கி போட்டு மிதிப்பது, இந்த தெரு நாய்ச்சண்டையில் மக்கள் தலைகள் உடைக்கப்படுவதில்லையா? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  முசுலீம்களை கொன்ற மோடி அத்துவானி கூட்டணி இன்று அரியணையில் ரத்தம் குடிக்க நாக்கைத்தொங்கபோட்டு கொண்டு அலைகிறதே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? அரிசிவிலை, பருப்பு விலை, பெட்ரோல் விலை எல்லாம் ஏகத்துக்கும்
எகிறிக்கிடக்கிறதே !  இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் நொடிந்து தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டார்களே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?

இந்நாட்டின் கனிமவளங்களை சூறையாட இந்திய அரசால் நடத்தப்படும் போரினால் எத்தனை மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள் ? கொல்லப்படவிருக்கிறார்கள்? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?பட்டினியில் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறதே இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? இவ்வளவு ஏன் 26 வருடம் கழித்த வந்த போபால் தீர்ப்பின் யோக்கியதையை நாடறியும்,  20000க்கும்
மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆண்டர்சனுக்கு விடுதலை, காரணமான எந்த அதிகாரியும் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. இதுதான் இந்த நீதியின் யோக்கியதை.

ஏன் போலீசு வெறியன் பிரேம்குமாரால் பாதிக்கப்பட்ட நல்லகாமனின் வழக்கின் கதை சுபமாக உச்ச நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது, ஆம் “ யோவ், 25 வருசத்துக்கு மேல எதுக்குயா இந்த கேச இழுத்துகினு இருக்கீங்க” என்ற பொருமலோடு பிரேம் குமார் , நல்லகாமன் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  மனித உரிமை போராளி அய்யா நல்லகாமனின் போராட்ட வரலாற்றை நாம் அறிவோம். இத்தனை ஆண்டு காலம் தன் குடும்பசொத்தையெல்லாம் விற்ற அந்த நல்லகாமனுக்கும், அவரின் வழக்கை ஏற்று நடத்திய மனித உரிமை பாதுகாப்பு மையமும் கடந்து வந்த பாதை நெடியது.
அது சொல்வது இதுதான் ” இது மக்களுக்கான நீதி அல்ல,  அதிகாரவர்க்க ,பார்ப்பன பனியா, முதலாளிக்கானது”

தெருவிலிறங்கி தண்டனை கொடுப்போம் !

இப்போது வந்திருக்கும் இந்த பேருந்து எரிப்பு தீர்ப்பினை பற்றி பேசுவோம். 3 மாணவிகள் திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டிருக்கிறார்கள். அச்சம்வத்தில் ஈடுபட்ட எல்லோருக்குமே மூவர் உள்ளே இருப்பது தெரிந்துது இருக்கிறது. அக்கட்சியின் பாசிசத்தலைவி இதை திமுகவினர் செய்ததாக சொன்னார், அக்கட்சியினரும், அவர்களின் தொலைக்காட்சியோ இதை நாடகம் என்றது. குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? என்பது கேள்விக்குறியே? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மன்னிக்க, ஓட்டைகளில் உள்ள சட்டங்கள் வழியே அவர்கள் கருணை மனு, இதர வெங்காய மனுக்களை நீட்டிக்கொண்டி திரிவார்கள்.

இப்படியே இழுத்தடிக்கப்பட்டு அவர்கள் தண்டனை காலத்திற்கு முன்னரே செத்தும் போகலாம் அல்லது எதுவும் நடக்கலாம்.மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மட்டுமல்ல, இந்த பாதகத்திற்கு தலைமை தாங்கிய புரட்சித்தலைவியும்தான். அதிமுக என்ற பாசிசக்கூடாரமே தடை செய்யப்பட வேண்டும்.

அப்சல் குரு, அஜ்மல் கசாப் என்ற இரு பலியாடுகளை உடடே தூக்கிலேற்றக்கோரி, முசுலீம் கட்சிகளை தடை செய்யத் துடிக்கும்  தேசியத்தின் வாய்கள் இப்போது இந்தியா முழுக்க வேண்டாம் தமிழகத்தின் ஏதாவதொரு மூலையில் அதிமுகவை தடை செய்யவும், 3 பேரை உடனே தூக்கில் போடக்கோருவார்களா? பல்லாயிரக்கணக்கான ஆண்டர்சனை அன்று மக்கள் கையில் கொடுத்திருந்தால் அவர்கள்
அவனை அப்போதே நரகத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்திருப்பார்கள், ஆனால் காங்கிரசோ அவனை அமெரிக்க சொர்க்கத்திற்கு தனி விமானத்தில்  அனுப்பி வைத்தது. இவர்கள் இதை செய்வார்கள் என்றால் அது குருட்டு நம்பிக்கையாகவே இருக்கும்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஎச்பி போன்ற அகில இந்திய பாசிஸ்டு கட்சிகளும், தமிழகத்தை பார்ப்பன மயமாக்குவதையே லட்சியமாக கொண்டுள்ள இந்து முன்னணி, அதிமுக ……………………கட்சிகளும், இந்திய விவசாயத்தினை , தேசிய தொழில்களை வேரறுக்கும் ஆளும் வர்க்க கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு தலைமை தாங்கும் அனைத்து பாசிச பயங்கரவாதிகளுக்கும் அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும். இதை நாம் தெருவிலிறங்கி வாளேந்தித்தான் சாதிக்க முடியுமே தவிர வேறெதாவது வழி இருக்கிறதா என்ன?

டேய் கடைய மூட்றா” – ஓட்டுப்பொறுக்கிகளின் அழகான அரசியல்

ஜூலை 6, 2010

டேய் கடைய மூட்றா”
ஓட்டுப்பொறுக்கிகளின் அழகான அரசியல்

ஒரு நண்பரின் கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் எனது பழைய நண்பர், பொதுவாக தனிப்பட்ட விசயங்களிலிருந்து அரசியலை நோக்கிப்போய்க்கொண்டிருந்தது. நான் பெட்ரோல் விலை உயர்வு என்பது திட்டமிட்ட சதி என்று சொல்லிக்கொண்டும் அதற்கான எடுத்துக்காட்டாக நான்கு வருடம் முன்பு பீப்பாய் என்னணை 110 டாலர் என்றும் அதனால் 35 ரூபாயாக பெட்ரோலை விலை உயர்த்திய அரசு தற்போது 70 டாலர் ஆன பின்னும் விலையினை ஏன் உயர்உயர்த்துகிறது  என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே தெருவில் கொஞ்ச தூரம் தள்ளி சாலையில் ஒரு சிறு கும்பல்  வந்து கொண்டிருந்தது.

அவர்கள் கையில் அதிமுக கொடிகளை பிடித்திருந்தார்கள். சரி நாளைக்கு பந்த் என்பதால்  மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அவர்கள் நான் அமர்ந்திருந்த கடைஇயினை ஒட்டிய  சாலை வழியாகவே பயணிக்கப்போகிறாகள் போல, அவ்வழியே வந்து கொண்டிருந்தார்கள். அக்கும்பலில் ஒரு நபர் மட்டும்  கடைகளில் நோட்டீசினை கொடுத்தார். மற்றவர்கள் நடு சாலையிலிருந்தே என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். சாலையிலிருந்து சொல்லும் அளவுக்கு எவ்வளவு அழகாக அரசியல் செய்கிறர்கள்.

கும்பல் நான் அமர்ந்திருந்த கடைக்கு அருகில் வந்தது. வாய் ஏதும் பேசாமல் ஒருவர் நோட்டீசை வீசிவிட்டு சென்றார். அந்தக்கடைக்கு பக்கத்தில் பேக்கரி ஒன்று இருந்தது. அதிமுகவின் நகர நரவல் ஒன்று கத்தியது “டேய் கடைய ஒழுங்கா நாளைக்கு மூடுடா”. இன்னொருவன் சொன்னான் “ஓய்  நாளைக்கு ஷட்டரைக் காணோமுனு சொல்லாத கடை காலியாயிடும் மாப்ளோய்”. இன்னொரு கைத்தடி கத்தியது “பர்தா போட்டுடு  நாளைக்கு ஒரு கண்ணாடி மிஞ்சாது”.

கடையிலிருந்தவர்களையெல்லாம் மிரட்டிவிட்டு சிரித்தபடியே அக்கும்பல் போய்க்கொண்டே இருந்தது. அடுத்ததாக சிபிஎம் ஐச் சேர்ந்த அய்யோ பாவம் என்றபடி ஒரு நபர் வந்தார். கையில் நோட்டீசை கொடுத்துவிட்டு ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்கள் என நினைத்தாரோ என்னவோ  பறந்து பறந்து நோட்டீஸ் சப்ளை செய்தார். சிபிஎம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ பிரச்சரத்தில் ஒருவர் தனக்கே கூட கேட்காத அளவுக்கு சத்தம் போட்டு பேசிக்கொண்டு போனார். இப்படியே வரிசையா எல்லா உருப்படிகளும் வந்து போயின.

——————————————————————————————

பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை தாக்கிக்கொலை செய்து வருவதை, அதை மக்கள் எளிமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.”எவன் வந்தாலும் இதைத்தான் செய்யுறான் ” ஒரு சாதாரண திமுக பாமக தொண்டன் கூட  எவனும் யோக்கியமில்லை  என்ற படி இந்த அரசாங்கம் நமக்கானதில்லை என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த விலை வாசி உயர்வுக்கு யார் காரணம்? பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகள், பங்குசந்தையில் சூதாட்டத்தின் உணவுப்பொருட்கள் அடமானம் வைக்கப்பட்டது குறித்து மக்களிடம் விளக்கி அதற்கு மூலக்காரணம் யார் என்றும் அதை ஒழிக்க இந்த அடிமை முறையையே புரட்ட வேண்டிய நிர்பந்தம் இருப்பதையும் சொல்லி, அதை இந்த அரசால் மாற்ற முடியாது. ஏனெனில் இந்த அரசாங்க மக்களுக்கானதல்ல, அது பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கானதென்று விளக்கமுடியாதா என்ன?

இத்தனையும் விட “டேய் கடைய மூட்றா என்பது தான்” தெளிவான அரசியல். ஆம் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களின் எதிரிகள் குறிப்பாக இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை. கருணாவிடம் பணம் சேருவதை எதிர்த்தே போராடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே அம்மாவான செயா திருடும் போது ஏதாவது விழும் அதை எப்போது நக்கலாம் என்ற ஆவலாய் திரிகிறர்கள்.

அதிமுக உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை, மக்களுக்காக போராடுவதாகக் கூறி மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் வேலை. அவர்களின் எதிரி உழைக்கும் மக்கள் தானே தவிர முதலாளிகள் அல்லவே!!!!
Related topic
வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

தேர்தல் புராணம் – 2009

மே 5, 2009
தேர்தல் புராணம்  – 2009
பிடுங்கப்பட்ட மின்சாரம்
பியூஸ் போன தெருவிளக்கு
போடப்படாத சாலை
உடைந்துபோன பள்ளிக்கனவுகள்……

புதைக்குழிக்குள் விவசாயம்
பாலிடாலுக்கு தலையை
அடகு வைத்த விவசாயி
நெய்வதற்கு நூலில்லை
சொல்லுவதற்கு நெசவாளி
யென்ற பேரும் சொந்தம் இல்லை

இந்தியா முன்னேருகிறது
வசனங்கள் காதை கிழிக்க
இத்தாலி மருமவளும்
பஞ்சாப் வைப்பாட்டியும்
ஓட்டு கேக்க வருவார்கள் கைக்கு…….
சாதாரண கையா இது
நன்றாக பார்த்தால் தானே
தெரிகிறது காந்தியின்
பொக்’கை’

 
கண்ணன் வாயைதிறந்தால்
உலகமே தெரிந்ததாம்
அடேங்கப்பா
காந்தி வாய் திறந்தாலோ
அந்தக்கவலை காந்திக்கு வந்ததில்லை
எல்லாவற்றிக்கும் சிரிப்பு
அழகான புன்னகை

எப்படிப்பட்ட புன்னகை தெரியுமா
தாழ்த்தப்பட்டோரின் தோலினை
உரிக்க  உரிக்க -முசுலீம்களை
எரிக்க எரிக்க வந்த சிரிப்பல்லவா இது…..

காந்திக்கு பிறக்காவிட்டாலும்
தப்பாமல் காந்தியின் வாரிசாய்
மிளிர்ந்த அன்னை இந்திராவைத்தெரியுமா
என்ன செயலலிதா அவளின் ஆத்தாளே
இந்திராவுக்கு மல்லு கட்ட முடியுமா
மல்லு என்ன லுங்கியை தூக்கி
கட்டியவனுக்கெல்லாம் 3 கிலோ
அரிசி தந்து அறுத்து விட்ட கதை
சொன்னால்தான் தங்கபாலுவுக்கு தெரியுமா…

சீக்கியர் பிணத்தை தின்று
போராளிக்குழுக்களை ‘கை’யில்
வளைத்து சீன் காட்டி  சல்லடையாய்
நாயைப்போல குப்புறக்கிடந்த போது
ஆத்தா போலவே மகனும்
எது முன்
எது பின்
எனத்தெரியாமல் பிதுங்கி கிடந்தபோது
தாய் மண்ணும் கூட அழுதிருக்கும்
கண்ட கண்ட நாயெல்லாம்
என் மேல் விழுந்து சாவுறாங்களே
என்று….

‘கை’கதை தெரியாதென
வருகிறார்களோ இல்லை
தெரிந்தால் தான் என்னவென
வருகிறார்களோ
மறவாதீர் வாக்காளரே
கைக்கு ஓட்டு போட்ட
உங்கள் கையை பத்திரமாய்
வைத்துக்கொள்ளுங்கள்
ராகுல் காந்தியும் சேர்ந்து வருகிறாராம்……

 
ஒருபக்கம் கை என்றால்
மறுபக்கம் தாமரை
மலரினும் மெல்லிய
ஆனால் தாமரை எவ்வளவு மெல்லியது
தெரியுமா குஜராத்தில் கர்ப்பிணியின்
வயிற்றை கிழித்து சிசுவை அறுத்த
அதன் இதழ்களின் மென்மையை
பண்டாரப்பரதேசியெல்லாம்
வாய்மணக்க பாடுதே

சேற்றில் முளைத்த செந்தாமரை தெரியும்
அது என்ன பாரத மாதாவின் தாமரை
இது முளைக்க ரத்தசேறுதான் வேண்டும்
அதுவும் முசுலீம் ரத்தமென்றால் அலாதிபிரியம்
மாதாவின் ஒருகையில்
தாமரை மறுகையிலோ சூலம்
சாதா சூலமல்ல
ஸ்பெஷல் திரிசூலம்
முசுலீம் கிருத்துவன் கடைசியாய்
உழைக்கும் இந்துவென எல்லோருக்கும் வரிசையாய்
இருக்கிறது ஆப்பு…..

 

இலவசம்
இலவசம்  இலவசம்  எல்லாமே இலவசம்
பாக்க கலர் டிவி பொங்கித்தின்ன சோறு
மானக்கேடு கூட இலவசம்
கருணாவின் ஆட்சியில்
ஏன் தினவெடுத்து திரிபவனுக்கு
காண்டம் கூட மலிவு விலையில்
சிரிக்கிறான் சங்கராச்சாரி
கடவுளுக்கு காண்டமா?
அவனின் நாத்தச்சிரிப்பில்
ஓடுகிறாள் பாரதமாதா
நேத்து பாடுபட்ட மாதாவுக்கு
தானே தெரியும்
கள்ள சிரிப்பின் அர்த்தம்…..
நாயாகி பேயாகி
மலந்தின்னும் பன்னியாகி
எல்லாமும் எல்லாமுமாகி
கடைசி அவதாரம் தான்
அம்மா சாதா அம்மாஅல்ல
ஈழத்தம்மா – ஈழத்தை
பிரசவிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மடல்
பிரசவம் பார்க்க மருத்துவர் அய்யா
மூத்திரம் அள்ளிப்போட
போட்டியோபோட்டி
அட எட்டிப்பார்த்தால்
பாண்டிக்கும் வாண்டிக்கும்
குடுமிப்புடி சண்டை
புயலண்ணன் கையை பிசைய
மருத்துவர் சொன்னார்
ஆண் குழந்தை பொறந்திருக்கு
ஆச்சரியமாய் உள்ளே போனால்
அடேங்கப்பா பொறந்திருப்பது
ராஜ பக்சேவாம்
யாரிடமும் சொல்லாதீர்கள்
பிரசவத்திற்கு இலவசமென
ஓசியாய் ரிக்சாவில்
கூட்டிவந்த பெரியார் தி க
வாரிசுகளோ ஓரமாய் உட்கார்ந்து
விம்மி விம்மி அழ – மணியரசன் நெடுமாறனெல்லாம்
மருமகன் பொறந்ததுக்கு
குத்தாட்டம் போட
கதை கேட்டவர் என்னை திருப்பி கேட்டார்
ஏப்பா மொட்டத்தலைக்கும்
முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுற?

எது மொட்டை? எது முழங்கால்?
காந்தி மொட்டை ராஜபக்ஷே முழங்காலா?

தெளிவாய் விளக்கினேன்
” காங்கிரசு, பிஜேபி,பாமக,
வி.சி,திமுக,ம்திமுக,அதிமுக,
சிபிஎம்,சிபிஐ,ஆயிரம் பேர் வந்தாலும்
எல்லாவற்றிற்கும் ஆன்மாவும் ஒன்றுதான்
உயிரும் ஒன்றுதான்
அதுதான் அகிம்சை
அதுதான் காந்தி

 
காந்திகள் சிரித்துக்கொண்டிருக்கும் வரை
மக்களின் பிணங்கள்
எரிந்து கொண்டே இருக்கும்
தேர்தல் நடந்து கொண்டே இருக்கும்

 

“என்ன இருந்தாலும் ஓட்டு போடாம
இருக்க முடியுமா” கோபம் கொப்பளித்தார்

 
நான் பொறுமையாய் சொன்னேன்
பிணங்களுக்கு உயிரில்லை என்பது தெரியும்
ஆனால் அவைகளுக்கு தன்மானமிருப்பது
தெரியுமா-ஏனென்றால் அவைகள் ஓட்டு போடுவதில்லை.

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

ஏப்ரல் 23, 2009

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்


ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும்  அதில்பெரியார்  தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும்  முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.

அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.

எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை  சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.

இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை  பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.

மக இ கவின் தோழர்  பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே  அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது.  மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம்  பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.

யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?

ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.

ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.

ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி  தற்போதுதான்  ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.

எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார்.  அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.

நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே  அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி  பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 20000 சிங்கள வீரர்களைபிடித்து வைத்திருந்தார்கள் புலிகள் அப்போதைய வாஜ்பாய் அரசு அவர்களை விடுவிக்க வில்லையெனில் இந்தியா தாக்குதல் நடத்தும்
என எச்சரித்து அவ்வீரர்களை விடுவித்தது.
அப்போது மத்திய பஞ்சணையில் படுத்திருந்த வைகோவுக்கோ ராமதாசுக்கோ ஏன்  எந்த நாய் கூப்பிட்டாலும் வக்காலத்து வாங்கும் நெடுமாறனுக்கு தெரியாதா இது தூரோக அரசு என்று .என்னவொ இது நாள் வரை ஈழத்துக்காக எல்லா ஓட்டு பொறுக்கிகளும் பாடுபடுவதைப்போலவும் காங்கிரசு  மட்டும் திருடன் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.
தலைமைத்திருடன் இந்திய தேசியமே அதன் வல்லாதிக்கப்போக்கே என்பது உரைக்கிறதா அல்லது உரைக்காதது போல் நடிக்கிறார்களா. காங்,பிஜேபி,திமுக அதிமுக மதிமுக பாமக,விசி என எல்லாருமே ஈழமக்கள் பிணத்தி பிரியாணி தின்னப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வைகோ டெல்லியில் அத்வானியை கூட்டிவந்து மீட்டிங் போடுகிறார்,  நேத்துவரை மத்திய அரசில் பொறுக்கி தின்றுவிட்டு தற்போது ஈழமக்களுக்காக கண்ணீர்விடும் ஓநாய் ராமதாசுஈழத்தியாகியா?பிரபாகனை தூக்கில் போடச்சொன்ன செயா பெதிகவுக்கு தியாகியாக காட்சியளிக்கிறாரல்லவா?
கொளத்தூர் மணி ஜூவிக்கு தந்த பேட்டியில் மேலும் சொல்கிறார்“கருப்பனை  கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் இது எப்படி சாத்தியம் என்பதனைபெதிகவினர் விளக்க வேண்டும். செயா 1991-96 வரை சதிராட்டம் போட்ட  அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வியதால்   2001-2006 வரை பொற்கால ஆட்சி நடத்தினாரா. இல்லை தற்போது கருணா நிதி தற்போதைய ஆட்சியில் தவறு செய்கிறாராம் அதை தேர்தல் முறையில் பெதிகவினர் தண்டிப்பார்களாம் அடுத்த முறை அவர் தன் தவறினை திருத்திக்கொள்வார்களாம்.அடேங்கப்பா இது என்ன திருவிளையாடல் கத மாதிரி அல்லவா இருக்கிறது.அய்யா சுயமரியாதை சிங்கங்களே இதை திமுக அதிமுக கட்சிகாரன் கூட நம்பமாட்டானய்யா.

இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு  பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.

ஆனால்  பெண் சங்கராச்சாரி செய்த திராவிட சேவைகளுக்காக தற்போது ஆதரிக்கிறதோ என்னவோ.தன்னை விமரிசனம் செய்யும் ஒரு அமைப்பினை பார்ப்பன என்ற ஒரு சொல் கொண்டு அடக்கலாம் எனில் இப்படி பார்ப்பனீயத்துக்கு  சேவை செய்யும் பெதிகவினை  என்ன வென அழைப்பது?

தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க  கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.

தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி ”  இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்ய கிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.

சன நாயக தேவதை

ஜனவரி 16, 2009

azhagiri-copy

சன நாயக தேவதை
முண்டச்சியாய் மூலையில்
நிற்க கைம்பெண் ஆனது
பெண்னெனில் பரவாயில்லை
தேவதையே தாலியறுத்தால்
தாங்குமா நெஞ்சு
கண்டிப்பாய் தாங்காது இது
நெஞ்சுக்கு நீதியின் ஐந்தாம் பாகம்……………

கதை எழுதி கவிதை
படைத்து வசனம் சொல்லி
போரடித்து விட புதியதாய்
கலைஞர் எடுத்தார்
அவதாரம் அது இயக்குனர்
அவதாரம்
சிகரம்,இமயம்
என எல்லாம் ஒரே நாளில்
தூள் தூளாய் போனது
ரிலீஸ் ஆன முதல் நாளே
பிய்த்துக்கொண்டு போக
கலை உலகமே கயிற்றில்
தொங்கப்போகிறது
பட்டம் வைக்க பேர் கிடைக்காமல்……….

கத்தியும் அறுவாளும்
காவியம் படைக்க
சன நாயக தேவதைக்கு
செய்து  வைக்கப்
பார்த்தார்கள் மறு கல்யாணம்.

நானா நீயா என
போட்டிகளோ எராளம்
பிச்சுவாளும் கம்பும்
மட்டும் சீதனமாய் கொடுத்தால்
வந்திடுமா தேவதை
அது மயங்கும்
ஒரே மருந்து காந்தி……..

எல்லோரும் மருந்து கொண்டுவர
தேவதையோ சொல்லிவிட்டாள்
யாரிடம் அதிக காந்தியோ
அவர்களுக்கு தான் நானென்று
போனமுறை எதிர்க்கட்சியாய்
வீற்றிருந்தபோது
செங்கோல்  தப்பாமல்
செய்ததை அப்படியே பிசகாமல்
செய்தார்
கண்டிப்பாய் பிசகியிருக்கும்
தனயனை தனியாய்
விட்டிருந்தால் – கருங்கற்களை
பெற்றிருந்தால் தானே
தனியாய் விட, பெற்றதோ
அங்குசம்
சதிராடும் யானையை அடக்க
ஒரே வழியாய் அதுவே கடைசி
ஆயுதமாய் எடுத்து விட…….

அங்குசமோ அணுகுண்டாய் மாறாது
அகிம்சையாய் போய்விழ
பதிந்த சுவடுகளெல்லாம்
காந்தியின் நிழல்கள்
ஓட்டுயந்திரத்தின் எல்லா
பொத்தான்களிலும்
காந்தியின் புன்னகை
ஒன்றில் 1000 காந்தி
இன்னொன்றில் 2000 காந்தி
இன்னொன்றில் 5000 காந்தி………..

திமுக அதிமுக
தேமுதிக சமக
மார்க்சிஸ்டு முமூக
இப்படி எல்லாம் காந்திராஜ்யாமாய்
மாறிப்போனதினால்
திகைத்து போன மக்களோ
யாருக்கு அமுக்கினாலும்
காந்திக்கு போவதினால் மொத்தமாய்
காந்திக்கு வாழ்க்கைப்பட்டார்கள்
காந்தியோ தேவதைக்கு
வாழ்க்கை கொடுத்தார்
முண்டச்சி மகாலட்சுமியாய்
மாற
தயா நிதி வந்து சுபம்
போட
படம் முடிந்து விட்டதாம்
யாரும் எழவில்லை
ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்
எங்க தொகுதியில
எப்ப இடைத்தேர்தல் வரும்?