Posts Tagged ‘ஓட்டுப்பொறுக்கிகள்’

இது பதினாலாவது தேர்தல்

ஏப்ரல் 9, 2011

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

ஏப்ரல் 3, 2011

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

 

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

டேய் கடைய மூட்றா” – ஓட்டுப்பொறுக்கிகளின் அழகான அரசியல்

ஜூலை 6, 2010

டேய் கடைய மூட்றா”
ஓட்டுப்பொறுக்கிகளின் அழகான அரசியல்

ஒரு நண்பரின் கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் எனது பழைய நண்பர், பொதுவாக தனிப்பட்ட விசயங்களிலிருந்து அரசியலை நோக்கிப்போய்க்கொண்டிருந்தது. நான் பெட்ரோல் விலை உயர்வு என்பது திட்டமிட்ட சதி என்று சொல்லிக்கொண்டும் அதற்கான எடுத்துக்காட்டாக நான்கு வருடம் முன்பு பீப்பாய் என்னணை 110 டாலர் என்றும் அதனால் 35 ரூபாயாக பெட்ரோலை விலை உயர்த்திய அரசு தற்போது 70 டாலர் ஆன பின்னும் விலையினை ஏன் உயர்உயர்த்துகிறது  என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே தெருவில் கொஞ்ச தூரம் தள்ளி சாலையில் ஒரு சிறு கும்பல்  வந்து கொண்டிருந்தது.

அவர்கள் கையில் அதிமுக கொடிகளை பிடித்திருந்தார்கள். சரி நாளைக்கு பந்த் என்பதால்  மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அவர்கள் நான் அமர்ந்திருந்த கடைஇயினை ஒட்டிய  சாலை வழியாகவே பயணிக்கப்போகிறாகள் போல, அவ்வழியே வந்து கொண்டிருந்தார்கள். அக்கும்பலில் ஒரு நபர் மட்டும்  கடைகளில் நோட்டீசினை கொடுத்தார். மற்றவர்கள் நடு சாலையிலிருந்தே என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். சாலையிலிருந்து சொல்லும் அளவுக்கு எவ்வளவு அழகாக அரசியல் செய்கிறர்கள்.

கும்பல் நான் அமர்ந்திருந்த கடைக்கு அருகில் வந்தது. வாய் ஏதும் பேசாமல் ஒருவர் நோட்டீசை வீசிவிட்டு சென்றார். அந்தக்கடைக்கு பக்கத்தில் பேக்கரி ஒன்று இருந்தது. அதிமுகவின் நகர நரவல் ஒன்று கத்தியது “டேய் கடைய ஒழுங்கா நாளைக்கு மூடுடா”. இன்னொருவன் சொன்னான் “ஓய்  நாளைக்கு ஷட்டரைக் காணோமுனு சொல்லாத கடை காலியாயிடும் மாப்ளோய்”. இன்னொரு கைத்தடி கத்தியது “பர்தா போட்டுடு  நாளைக்கு ஒரு கண்ணாடி மிஞ்சாது”.

கடையிலிருந்தவர்களையெல்லாம் மிரட்டிவிட்டு சிரித்தபடியே அக்கும்பல் போய்க்கொண்டே இருந்தது. அடுத்ததாக சிபிஎம் ஐச் சேர்ந்த அய்யோ பாவம் என்றபடி ஒரு நபர் வந்தார். கையில் நோட்டீசை கொடுத்துவிட்டு ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்கள் என நினைத்தாரோ என்னவோ  பறந்து பறந்து நோட்டீஸ் சப்ளை செய்தார். சிபிஎம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ பிரச்சரத்தில் ஒருவர் தனக்கே கூட கேட்காத அளவுக்கு சத்தம் போட்டு பேசிக்கொண்டு போனார். இப்படியே வரிசையா எல்லா உருப்படிகளும் வந்து போயின.

——————————————————————————————

பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை தாக்கிக்கொலை செய்து வருவதை, அதை மக்கள் எளிமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.”எவன் வந்தாலும் இதைத்தான் செய்யுறான் ” ஒரு சாதாரண திமுக பாமக தொண்டன் கூட  எவனும் யோக்கியமில்லை  என்ற படி இந்த அரசாங்கம் நமக்கானதில்லை என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த விலை வாசி உயர்வுக்கு யார் காரணம்? பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகள், பங்குசந்தையில் சூதாட்டத்தின் உணவுப்பொருட்கள் அடமானம் வைக்கப்பட்டது குறித்து மக்களிடம் விளக்கி அதற்கு மூலக்காரணம் யார் என்றும் அதை ஒழிக்க இந்த அடிமை முறையையே புரட்ட வேண்டிய நிர்பந்தம் இருப்பதையும் சொல்லி, அதை இந்த அரசால் மாற்ற முடியாது. ஏனெனில் இந்த அரசாங்க மக்களுக்கானதல்ல, அது பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கானதென்று விளக்கமுடியாதா என்ன?

இத்தனையும் விட “டேய் கடைய மூட்றா என்பது தான்” தெளிவான அரசியல். ஆம் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களின் எதிரிகள் குறிப்பாக இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை. கருணாவிடம் பணம் சேருவதை எதிர்த்தே போராடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே அம்மாவான செயா திருடும் போது ஏதாவது விழும் அதை எப்போது நக்கலாம் என்ற ஆவலாய் திரிகிறர்கள்.

அதிமுக உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை, மக்களுக்காக போராடுவதாகக் கூறி மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் வேலை. அவர்களின் எதிரி உழைக்கும் மக்கள் தானே தவிர முதலாளிகள் அல்லவே!!!!
Related topic
வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா………..

மே 31, 2010
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா………..

நேற்று நடந்த திமுகவின் உயர்நிலைசெயற்குழு கூடி 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாமக வுக்கு ஒரு மாநிலங்களவை பதவி அளிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. கடந்த நாடாளுமன்றதேர்தலின் போது ஈழமக்களை வைத்து வியாபாரம் செய்யும் போட்டியில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய ராமதாசு, தன் மகன் அன்பு மணிக்கு பதவி வாங்கும் நோக்கில் நாக்கை தொங்க விட்டுக்கொண்டு காத்திருந்ததில் உடனடி ஏமாற்றமும் பிற்காலத்தில் சில எலும்புத்துண்டுகளும் கிடைப்பது தெளிவாகி விட்டது.
கருணாவும் ராமதாசும் மானங்கெட்டவர்கள் என்பதற்கு கருணாவின் இந்த பதிலே சிறந்த எடுத்துக்காட்டு
“கேள்வி:  பா.ம.க. சில நாட்களுக்கு முன்பு வரை உங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென்று அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?

பதில்:  உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள்? யார் யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக் குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.”

அரசியல் கொள்கை கொண்ட கொள்கைக்கு நேர்மை இதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு ராமதாசு கருணா மட்டுமல்ல அவர்களின் சேவையாளர்களும்(தொண்டர்களும்) மாறிப்போயிருக்கிறார்கள். இது வியக்கத்தக்க முன்னேற்றம், மக்கள் தன்னுடைய எதிரியான ஆளும் வர்க்கதின் புரோக்கர்கள் யார் என்பதை அறியாமல் கிடக்கும் சூழலில் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளெல்லாம் ஒவ்வொன்றாய் வந்து “நான் தான் நான் தான் ” என்று போட்டி போடுகின்றன.
அணி மாறுவது என்பது சாதாரணவிசயம் என்று ராமதாஸ் கூறுவதும் அதை அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு திரிவதும் அரசியலுக்கு தேவையான ஒன்றாகி விட்டது. கவுண்டமணி சொல்வது போல “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

ஏன் உங்க தலைவர் அணி மாறுகிறார் என்ற கேள்விக்கு அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் ஒரே பதிலை சொல்லுகின்றன முக்கியமாக பாமக கட்சி சேவையாளிகளை சொல்கிறர்கள்”ஏன் எங்க அய்யா மட்டும் தான் மா

று

னாரா? ஏன் அவன் மாறல? இவ மாறுல? “

யாரும் யோக்கியமில்லை என்ன கேள்வி கேட்கக்கூடாது என்பதுதான் இவர்கள் வாதம். இவர்கள் கடந்த சில மாதங்களில் அவர்கள் மறந்தாலும் நம்மால் மறக்க முடியவில்லை. இந்த இரண்டு மானங்கெட்டவர்களின் கடந்த சில அறிக்கையின் முக்கிய சாரம்சங்கள். கடைசியாக திமுகவிற்கு ராமதாஸ் எழுதிய கெஞ்சல் 

கடிதமும் உள்ளது.

——————————————————————————————————————————

காலம் நெருங்குகிறது என்று கருணாநிதி கூறியுள்ளது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், 14.8.2007 ல் காலம் நெருங்குகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை. ஆனால் அதற்கு கருணாநிதி காரணம் கூறியிருப்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன்.

வியாழன், 16 ஆகஸ்ட் 2007
———————————————————————————————————————————-
சென்னை ஆக-07.(டிஎன்எஸ்)
முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும்,  அது சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்வதுமாக பொழுதைக் கழிக்கிறார்., இதனால் கோட்டையில் ஒரு லட்சத்துக்கும் மேல் கோப்புகள் தேங்கியிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் உச்சநீதிமன்ற கண்டனத் துக்கு ஆளான விவகாரம் அரசின் நிர்வாக சீர்கேடு சம்பந்தப்பட்டதாகும். நீதிமன்ற கட்டளையை ஏற்று உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது. இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும். இதில் அப்பாவி வழக்கறிஞர்கள் பலிகடா ஆகியுள்ளனர். அதே சமயம் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் 3 மாதத்துக்குள் அறிக்கை பெறப்பட்டு வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதியும், அவரது அரசும் ஆடம்பர விழாக்களை நடத்து வதில் காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி விழாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாக புகார் எழுந்து உள்ளது.

மூன்று நாட்கள் கோட்டையை விட்டு 12 அமைச்சர்களும் விழாவுக்கு சென்று உள்ளனர். இந்த விழாவை சென்னையி லிருந்தே துவக்கியிருக் கலாம். மற்றொரு விழா மதுரையில் நடந்துள்ளது. இதில் 10 அமைச்சர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  மக்கள் முகம் சுழிக்கும் வகையில்  போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

கோட்டையில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக என்னிடம் ஒரு அதிகாரி  தெரிவித்தார். அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும், கோட்டைக்கு செல்வதில்லை. கோட்டைக்கு சென்றாலும் கோப்புகள் பார்ப்பதில்லை.

முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும்,  சின்ன சின்ன சினிமா விழாக்களை பலமணி நேரம் அமர்ந்து கண்டு களிப்பதிலும் பொழுதைக் கழித்திருக்கிறார். (எந்தெந்த நாளில் எந்தெந்த விழாக்களில் கலந்துகொண்டார் என பட்டியலை வெளியிட்டார்).

சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என கூறமாட்டேன். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்பதே எனது கருத்தாகும். இதுவரை 29 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறியிருக்கிறார்கள். இதுபற்றிய புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

———————————————————————————————————————————
Dinamlar 2009-04-11

காட்பாடி : “”அடிமையாக வாழ்வதை விட, சன்னியாசம் வாங்கிக் கொண்டு சாமியாராகப் போகலாம்,” என முதல்வர் கருணாநிதி பற்றி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அரக்கோணம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் வேலுவை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. வேட்பாளர் வேலு தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:கடந்த சட்டசபை, உள்ளாட்சி….
——————————————————————————————————

பெரும் பொய்யை நம்புபவர் கருணாநிதி – ராமதாஸ் காட்டம்!

சனி, 27 மார்ச் 2010 21:33 சின்னமுத்து Politics
E-mailஅச்செடுக்க

“சிறு பொய்யை விட பெரும் பொய்களை நம்புபவர் தான் முதல்வர் கருணாநிதி” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார். “தமிழகத்தில் நடந்த மற்ற இடைத்தேர்தல்களின்போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில், பாமகவுக்கு 2வது இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதைக்கூட முதல்வர் கருணாநிதியால் ஏன் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்காக வருத்தப்படுவதாகவும், கவலைப்படுவதாகவும் பேசிய முதல்வர் கருணாநிதி, அக்கட்சிக்காக பென்னாகரத்தில் வாக்கு சேகரித்து பாமக மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்த மற்ற இடைத்தேர்தல்களின்போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?

கடந்த 4 ஆண்டுகளில் பாமக எத்தகைய வன்முறையில் ஈடுபட்டது என்பதை முதல்வரால் கூறமுடியுமா? 1977-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது, திமுகவினர் கலவரத்தை தூண்டிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஒரு மூத்த அமைச்சரே முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சாட்சியம் அளித்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தை கடுமையாக விமர்சித்த திமுக, பின்னர் அக்கட்சியுடன் தேர்தல் உறவு கொண்டது. மூதறிஞர் ராஜாஜியைப் பற்றி இழிவாக பேசிவிட்டு, பின்னர் அவர் வீடு தேடிச்சென்று கூட்டணி வைத்தது திமுக. சிறு பொய்யைக் காட்டிலும், பெரும் பொய்யையே நம்புபவர் தான் முதல்வர் கருணாநிதி” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

———————————————————————————————————————————–

தன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 03:45.49 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர் ஒவ்வொருவரின் காதிலும் பூ சுற்றிவிட்டது திமுகவின் செயற்குழு முடிவு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வேலூரில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-தமிழக அரசை நடத்தி வரும் கருணாநிதி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதியாக விளங்குவதால், அவருடைய கட்சி இலங்கைத் தமிழர் பிரச்னையில் எடுக்கும் முடிவால் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் நிறைவு செய்யும் வகையில் திமுக செயற்குழுவின் முடிவு இல்லை.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம், இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம்.
இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண்டுகளுக்கு …………………………………………………………………

போர்நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தி 3 முறை சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது அந்த கோரிக்கையை திமுக கைகழுவிவிட்டது. போர்நிறுத்தம் குறித்து செயற்குழுவில் ஒரு வார்த்தை கூட வலியுறுத்தவில்லை……………ராஜபக்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்படையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்.


————————————————————————

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2009,——————————————————————————————–

மதுக்கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ்
கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ் திருச்சி, ஆக. 17: மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்றார் பாமக நிறுவனர் ச. ராமதாஸ். திருச்சியில் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியது: “மதுவை ஒழிப்பது……………….————————————————————————————-

எனக்கு வெறி பிடிச்சிருக்கு…’ : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Post by janani on Mon Mar 22, 2010 7:08 am

…………………………………………………………………………..

தேர்தல் பொறுப்பாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி உள்ளது. இந்ததேர்தலில் அதிக ஓட்டுக்களை பெற்று தரும் பொறுப்பாளர்களுக்கு ராமதாஸ் மூலம் தங்கச் சங்கிலி, மோதிரம் வழங்கப்படும்.இந்த தேர்தலில் ஜெயித்தே வேண்டும். எனக்கு வெறி பிடிச்சிருக்கு, நம்மை வமானப்படுத்திய தி.மு.க.,வை
தோற்கடிக்க வேண்டும். எனக்கு பிடித்த வெறி உங்களிடமும் இருக்க வேண்டும்.தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. பா.ம.க., தொண்டர்களால் வெற்றிஎனும் பயிர் நட்டு, தண்ணீர் ஊற்றி, வளர்த்து, அறுவடைக்கு தயாராக உள்ளது.அது நல்லமுறையில் வீடு வந்து சேர வேண்டும்.

பா.ம.க.,வுக்கு மூன்றாவது இடம் என
கூறுகின்றனர். 1991, 1996, 2001ல் என மூன்று சட்டசபை தேர்தல்களிலும் தி.மு.க.,வுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. 2006ல் கூட்டணியில் இருந்ததால்
நாம் விட்டுக் கொடுத்தோம். அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில்பா.ம.க., வெற்றி உறுதியாகி விட்டது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,வினரே,
‘நாங்கள் பா.ம.க.,வுக்கு ஓட்டு போடுகிறோம். தி.மு.க., எப்படியாவது தோற்கவேண்டும்’ என, கூறுகின்றனர்.கருணாநிதி பிரச்சாரத்துக்கு ஏன் வருகிறார்?
உளவுத்துறை அறிக்கை படி பென்னாகரத்தில் பா.ம.க., வெற்றி பெறும் என தகவல்
கிடைத்துள்ளது. அதற்கு பயந்தே பிரச்சாரத்துக்கு வருகிறார். எல்லா சமுதாயமக்களையும் சந்தித்து பா.ம.க.,வினர் ஓட்டு கேட்க வேண்டும்.

செக்போஸ்ட்டுகளில் நிறுவனர் ராமதாஸ் காரை மட்டும் சோதனை நடத்தி, வேண்டுமென்றே அவமானப்படுத்தி வருகின்றனர்.
தி.மு.க., அமைச்சர்களுக்கு சல்யூட் அடிக்கின்றனர். யலலிதா, கருணாநிதிபிரச்சாரத்துக்கு வரும்போது, அவர்களது காரை சோதனையிடுவரா? திருச்செந்தூர்
இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். இங்கு படிக்காத
ஜனங்களாக இருப்பதால், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றுகின்றனர். லோக்சபா தேர்தலில் எந்த சமுதாய பெயரைச் சொல்லி தோற்கடிக்க செய்தனரோ, அவர்களுக்கு
இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

‘ராமசாமி, முனுசாமி’ பா.ம.க.,வில் சூசகம் :
பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளவர்களை
ராமசாமி என்றும், உள்ளூர் நபர்களை முனுசாமி என்றும் ராமதாஸ்
குறிப்பிடுகிறார். ”ராமசாமிகள் தேர்தல் விதிப்படி 25ம் தேதி வரை மட்டுமே
இருப்பர். உள்ளூர் முனுசாமிகள் தான் வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்லும் முயற்சியை எடுக்க வேண்டும். 25ம் தேதிக்கு மேல் தி.மு.க.,வைச் சேர்ந்த எந்த ராமசாமி இருந்தாலும் அவனை மரத்தில் கட்டிவைத்து அடியுங்கள், போலீஸில் ஒப்படையுங்கள். அவர்கள் ‘ஏசி’யில் படுத்து உறங்கியவர்கள். நாம் கலப்பை பிடித்தவர்கள். நமது வெற்றி நிச்சயமான ஒன்று.வெறியுடன் தேர்தல் பணியாற்றுங்கள்,” என, அன்புமணி ராமதாஸ் வீராவேசமாகபேசினார்.

————————————————————-

பீனிக்ஸ் பறவை போல் எழுந்து நிற்கிறது பாமக – ராமதாஸ்

புதன், 31 மார்ச் 2010 12:57 வெற்றி Politics
E-mailஅச்செடுக்க

பாமக தமிழக அரசியலில்  அசைக்க முடியாத ஒரு சக்தி  என்பது பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது என பாமக  நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பென்னாகரம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த அறிக்கையில் பென்னாகரம் தொகுதியில்  ஜனநாயகம் தோற்கடிக்கப் பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது .பென்னாகரம் இடைத்  தேர்தலில் வலுவான கூட்டணியுடனும் , அனைத்து அதிகார  வசதி வாய்ப்புகளுடனும் ஆளும் கட்சி தேர்தலை சந்தித்தது. முக்கிய எதிர்க்கட்சியும் நான்கு கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தேர்தலை சந்தித்தது.

ஆளும் கட்சி போன்று பணபலம் இல்லாத நிலையில்  மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி களமிறங்கிய பாமகவின் நம்பிக்கை  வீண்போகவில்லை. பணபலத்தையும் ஆளும் கட்சியும் அதிகாரப் போக்கையும் எதிர்த்து தனியாகப் போட்டியிட்டு 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளோம் . இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல,  தார்மீக ரீதியில் இது பாமகவுக்கு மகத்தான வெற்றியாகும்.

செல்வாக்கு இல்லாத பாமக என்ற சிலரின்  கணிப்பை, பென்னாகரம் வாக்காளப் பெருமக்கள்  பொய்யாக்கி  தமிழக அரசியலில் பாமக  அசைக்க முடியாத சக்தி என தீர்ப்பு வழங்கியுள்ளனர் . பீனிக்ஸ் பறவை போல பாமக  எழுச்சியுடனும், உயிர்த் துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்க பாமகவுக்கு ஓட்டளித்த  பென்னாகரம் வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணம் கொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டால் ஒழிய, ஜனநாயகத்தை வீழ்த்திக் கொண்டிருக்கும் பணநாயகத்தை ஒழிக்க முடியாது.இதற்கான சட்ட திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உரத்த குரல் கொடுக்க வேண்டும் என்றும்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

———————————————————————————————————

———————————————————————————————————————————–

ராமதாஸ் எழுதிய கெஞ்சல்

கடிதம்

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை திமுகவுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை.


தோழமை கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஆதரவை விலக்கிக்கொண்டாலும், பாமக உறுதியாக இருந்தது.
இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம்.
முன்பு அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைக்கப்பட்ட சட்ட மேலவை கொண்டுவரப்படுவதற்கு, பாமக ஆதரவு தெரிவித்து வாக்களிப்பில் கலந்து கொண்டது. இந்த இணக்கம் தொடர பாமக விரும்புகிறது.
2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமைய பாமக விரும்புகிறது. அதனால் திமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்புகிறது.
2006ல் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட சிபிஐக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 2008ல் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.
அதேபோல் 2010ல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்

————————————————————————————————————————————

கடைசியாக ஒரு சந்தேகம்

இப்போது ராமதாசு கருணாவை பிடித்துப்போனதற்கு காரணம் என்னவாக இருக்கும் ?

1. ராஜபக்ஷேவும் கருணாவும் ஒன்று என்று இருந்தது போய் கருணா ஈழத்தின் மீட்பாளராகி விட்டாரா?

2. வன்னியர்களின் துரோகி இப்போது வன்னியத்தந்தை ஆகிவிட்டாரா?

3. டாஸ்மாக் இழுத்து மூடப்பட்டுவிட்டதா?

4.சட்டம் ஒழுங்கு மோசமாகி இருந்தது இப்போது பரிசுத்தமாகி விட்டதா?

5…………………………………………………………………………………………….

அட போங்கப்பா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…………


பச்சோந்தி எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா????




படிக்க வேண்டிய பதிவுகள்

1.

படிக்க வேண்டிய பதிவுகள்

1.

2.

3.

முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும்

பிப்ரவரி 9, 2010

முத்துக்குமார்
ஷோக்குகளும் ஷேக்குகளும்

ஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு  வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் நினைவு தினத்திற்கு ஓட்டுப்பொறுக்கிகள் முதல் போலி இனவாதிகள் வரை எல்லோரும் தன் பங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டனர். அவர்கள் முக்கியமாக ஒன்றை  செய்தார்கள் அதுதான்  அப்போதும் சரி இப்போதும் சரி செத்துப்போனமுத்துக்குமார் என்ன சொன்னார் என்பதை மட்டும் விட்டு விட்டு  மற்ற எல்லாவற்றையும்
 
 ஓட்டுப்பொறுக்கிகள் கடந்த தேர்தலில் இரு பிரிவாக நின்றார்கள் ஒருவர் ஈழமக்களின் துரோகி அணி மற்றொருவர் ஈழமக்களின் எதிரி அணியாக, இனவாதிகளும் ஈழ விடுதலைக்கு தன்னை மட்டுமே அத்தாரிட்டியாக இருந்தவர்களுக்கோ பாரிய சங்கடம். எந்தப்பக்கம் சாய்வது தேர்தலில்  முதுகு சொறிந்தே பழக்கப்பட்ட கைகள் தவித்துக்கொண்டிருந்த நேரமது.

பாசிசத்தால் மக்கள் தலைகளில் கொத்துகொத்தாய் குண்டுகள் இறங்கின. “ஆட்லெறி குண்டு” என்பதை தமிழ்ச்சமூகம் ஆயுசுக்கும் மறக்காதென்பதை அப்போர் நிரூபித்துக்காட்டியது. இந்துமாக்கடலில் ஈழத்தமிழரின்குருதி கலந்தபின்னும் அதன் நிறம் மாறவில்லை, மாறவும் விடவில்லை அத்தாரிட்டிகள்.
இந்திய தேசியத்துக்கு பூச்செண்டு கொடுத்தார்கள்.

“இந்திய ஆளும் வர்க்கம் போரை நடத்தவில்லை சோனியா தனக்கு துணை இல்லாத காரணத்தால் தான் இப்போரே, மலையாளிகள் மத்திய அரசை தவறாக வழி நடத்துகிறார்கள்” முடிந்த அளவுக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியாதோ அதை மட்டும் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்தார்கள்.

தில்லியை ஏகாதிபத்தியமாக சொன்னவர்களெல்லாம், தனித்தமிழ் நாட்டை கேட்டவர்களெல்லாம் ஓடினார்கள் ஓடினார்கள் வேகமாக இந்தியத்தை தூக்கி நிறுத்துவதற்காக. ஏன் உன் எதிரிக்கு வாக்கு கேட்க போகிறாய்? இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு  உனக்கு தேர்தல்? கேள்விகள் அந்தரத்தில் தொங்கின? பதில்கள்  வாய்க்குள் அடங்கின, ஆனால் செத்துவிட்டான் முத்துக்குமார். யார் அந்த முத்துக்குமார் பெரிய தமிழினவாதியா? இல்லை சிறுத்தைப்பட்டாளமா? //

 
 

 

// அண்டையில் பாதிக்கப்படும் மக்களின் குரல் கேட்டு தினம் தூங்காமல் தத்தளித்த ஒரு மனிதன், என்ன செய்வது தெரியாமல் ஏது செய்வது என புரியாமல் அல்ல புரிந்தே தெரிந்தே முடிவெடுத்தான், அவனுக்கு நிச்சயமாய்த் தெரியாது. அவன் சாம்பல் செயா வீட்டிற்கும் கருணா வீட்டிற்கும் பாத்திரம் கழுவத்தான் போகப்போகிறதென்று.
கதறினார் வைகோ , சீறினார் திருமா, கொந்தளித்தார்கள் போலி இனவாதிகள் ஆனால் எல்லோரும் ஒன்றாய்முத்துக்குமாரின் கொள்கைக்கும் கொள்ளி வைத்தார்கள். என் உடலை ஆயுதமாய் ஏந்துங்கள் என்றான்முத்துக்குமார். உடலை ஏந்தியதாய் சொன்னவர்கள் அந்த கொள்கையினை ஏந்த தயாராயில்லை. அங்கே ஒரு இனம் அழிக்கப்படுவதை தாங்கமாட்டாமல் செத்த முத்துக்குமாரை, மக்கள் இறப்பது தாங்க மாட்டாது செயாவுக்கு ஒட்டுபோட சொன்ன தங்களோடு ஒரே தராசில் நிறுத்த முடியவில்லை. 

 முத்துக்குமார் விரைவில் எரிக்கப்பட வேண்டியதற்கு ஆக வேண்டியதை எல்லாம் செய்தார்கள். சொற்பமானவர்களின் எழுச்சியை அற்பமானவர்களின் சதி வென்றது. தன் உடலை யாரிடம் ஒப்படைக்க்கோரினானோ அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது உடல், இடுகாட்டில்  கொள்கைகளோடு  அவனும் எரிக்கப்பட்டான்.

கருணாவின் வேட்டில் ஈழம் அடகு வைக்கப்பட்டது, மற்றவர்கள் தன் பங்குக்கு செயாவின் சுருக்குப்பையில் திணித்தார்கள் மீதி ஈழத்தை, பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட சொன்னவர் ஈழத்தை தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் செய்வதாக சொன்னார். ஈழமக்களுக்கு வாக்கரிசி போட்டபடியே வாக்குகள்கோரப்பட்டன. செயா ஈழத்தாயாக பரிணமித்தார்.
 
கோட்சே ஈழத்திற்கு குரல் கொடுத்தால் அவனுக்கும் ஆதரவு தருவேன் சீமான் சிங்கமாய் பிளிறினார்.கொளத்தூர்மணியோ செயா ஈழம் தந்தாலும் தராவிட்டாலும் இது கருணாவுக்கு தண்டனை என வாத்தியாரானார். மொத்தத்தில் எல்லோருமே வேசம் போட்டார்கள் வேசத்தோடு அழுதார்கள் வேசத்தோடு கதறினார்கள்.இனி தேர்தலில் ஓட்டின் தேவை முத்துக்குமாரால் நிரப்பப்பட்டது. தேர்தல் முடிவும் வந்து விட்டது.  ஒரு இனமும் சிதைக்கப்பட்டது. முடிந்து விட்டது ஓராண்டு.

வீரவணக்கங்கள்,அஞ்சலிகள் எல்லாம் வழக்கம் போல தொடர்ந்தன கூடவே வழக்கம் போல முத்துக்குமாரின் பிணத்தை ஆயுதமாக அல்லாது பிணமாக மட்டும் கண்டவர்கள் இப்போதும் உணர்ச்சி மிக்க பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை வாக்கு சீட்டிற்காக மடைமாற்றியவர்கள் எப்போது பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போதும் எல்லோரும் முத்துக்குமாரின் பிணத்தை பேசுகிறார்களே ஒழிய // அவனின் விருப்பத்தை பேசினார்களா?
ஷோக்குகளும் ஷேக்குகளும்

முத்துக்குமாரின் மரணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளைப்போலவே இப்போதும் கேள்விகள்கேட்கப்படுகின்றன. ” நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்கிறீர்களே? எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள்?சாவு வீட்டில் ஆள் பொறுக்க வந்த ஒரே கட்சி நீங்கள் தான், என்னவோ நீங்கள் மட்டும் தான்முத்துக்குமாரி-ன்சாவின் போது எல்லாம் செய்ததாக கூறிக்கொள்கிர்களோ, உங்களின் தேர்தல் புறக்கணிப்பு ஆளும் கங்கிரசுக்குத்தான் உறுதுணையாக இருந்தது.//
புலித்தலைமை பாசிசமாகத்தான் இருந்தது அதை இப்போதும் மறுக்கவில்லை, ஆனால் முத்துக்குமார் புலியாஎன்பதுதான் கேள்வி. முத்துக்குமாரைப்போல பலரும்  ஈழமக்களின் பிரதிநிதியாக புலிகளை மட்டுமே பார்க்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான புலிகளின் வரலாறோ அவர்களின் அராஜகப்போக்கோ தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை,  அந்த வாய்ப்பினை தனது வாயால் முடி மறைத்தவர்கள் தான் சென்ற தேர்தலில் செயாவுக்கு ஓட்டுகேட்டார்கள்.  போலி பெரியாரிய, இனவாதிகளைப்போல உள் இயக்க மற்றும் மாற்று இயக்க படுகொலைகளை முத்துக்குமாரோ அல்லது ஏனையை ஈழ ஆதரவு உழைக்கும் மக்களோ ஆதரித்தார்களா என்ன?//

முத்துக்குமாருக்கு விசுவாசமாய் இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம் ஆனால் அவனின் கொள்கைகளை, விருப்பத்தை கூட இருந்தே குழிபறிப்பீர்கள் என அவன் கண்டிப்பாய் நம்பி இருக்கமாட்டான். என் பிணத்தைபோராடும் மாணவர்களிடம் கொடுங்கள் என்றவனின் பிணத்தை மாணவர்களை தாக்கி விட்டு தூக்கி சென்ற அவலத்தை எந்த மேடையில் நீங்கள் பேசினீர்கள்? 
 
திருமாவின் அயோக்கியத்தனத்தை புரட்சிகர அமைப்புக்களைத்தவிர யார் பேசுகிறார்கள்? உங்களை பேச விடாமல் ம க  இ க தான் தடுத்ததா? தடுத்தது புரட்சிகர அமைப்புக்கள் அல்ல, உங்கள் கையாலாகாதத்தனம் தவிர வேறேது இருக்கமுடியும்?

நாங்கள் ஆள் பொறுக்கத்தான் போனோம் இதில் மாற்றுக்கருத்து இல்லை, முத்துக்குமார் சொன்னான்  “என்உடலை ஆயுதமாக்குங்கள்”  அதற்குத்தான் ஆள் பொறுக்கப்போனோம், மக்களைத்திரட்ட எங்களால் ஆன ஏதோ சில விசயங்களை முடிந்தவரை செய்தோம் எங்களுக்கு உங்களைப்போல போயஸ் தோட்டத்தில் புரட்சியாளர்களைப் பொறுக்கும் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.

எங்கேயும் புரட்சிகர அமைப்புக்கள் மட்டும்தான் செய்தோம் என்று சொல்லவும் இல்லை எழுதவும் இல்லை, ஆனால் ஒன்றை மறக்காது மக்களிடையே சொன்னோம், சொல்வோம், சொல்லிக்கொண்டே இருப்போம் உங்களின் கையாலாகத்தனம்தான்  அதுதான் துரோகத்தனத்திற்கு முதுகு சொறிந்தது என்று.
 
…………………………………………………………………………………………………………………………………………………………………………..
 
 
வினவில் வந்த கட்டுரையை அடுத்து ஒரு முசுலீம் ஷேக் தனது தளத்தில் எழுதிவருகிறார். அதில் அவரது
நோக்கமே  “தொடர்ந்து சில காலமாய் முற்போக்கு வேடமிட்டு எல்லா கருத்துக்களையும் எதிர் கொண்டு அதற்கான தகுந்த எதிர்வினை ஆற்றுவோம் என்று பொய் வேடமிட்டு திரிந்து கொண்டிருந்த மாவோயிஸ்டு மரமண்டைகளின் இணையதளமான “வினவு” தன்னுடைய முற்போக்கு வேடத்தை கலைக்க வேண்டிய காலம் கனிந்து விட்டதென்றே எண்ணுகின்றேன்”. //
 
 
அவரின் கேள்விகள்
 
“தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும். இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்……………….இப்படியாகி விட்டன.

//
புரட்சிகர அமைப்புக்கள் எந்த இடத்திலும் தற்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் அத்தற்கொலை எதனால் நிகழ்ந்தது என்பதை ஆராய்வதைத்தான் தடுக்க ஷேக்குக்கோ அல்லா இருக்கிறார், நமக்கு அறிவு இருக்கிறது. மக்களின் பாதிப்பைக்கண்டு மனம் பொறுக்காது, என்னை வைத்து அரசியல் செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு.

செத்தப்போனவனின் அறிவு குறைவுதான் ஷேக்கைபோல, அவரின் நண்பர்கள் போலவும் இருக்காது.அந்த தியாகத்தை மதிக்க வேண்டிய இருக்கிறதா இல்லையா? அந்தப்போராட்டத்தை மக்கள்போராட்டமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?

 
 

 

// அன்புள்ள ஷேக், உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா?

போராட்டக்குணத்தை கொடுத்தாரா? ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத  “கடவுள்”  தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின்  நல்ல மண்டையில் உதித்தது. 

எல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.

முத்துக்குமாரை படைத்த அல்லா அவனை ஏன் தற்கொலை செய்து கொண்டு சாகவைத்தான்? அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான்? கடவுள் முக்கியமாக உங்கள் அல்லா இருப்பது உண்மை எனில் உலகமக்களை கொன்று குவித்த அவன்தான் முதல் குற்றவாளி. இதனால் தான் உங்கள் அல்லா மட்டும் அல்லது இந்து, கிறித்துவமத சாமிகளைக்கூட தூக்கியெறிய சொல்கிறோம்.
 
ஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா? அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு?  நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.
 
ஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம். உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு  நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா?

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்  புரட்சிகர அமைப்புக்களின் புரட்சி  சூடு சொரணையுள்ள உழைக்கும்மக்களுக்கானதுதான். உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கில்லை. உங்களைப்போல் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களை ஆதரிக்கிறோம் மாநாட்டில் உங்களைப்போல் மாறிமாறி  மண்டியிட்டு // நாயாய் (குறிப்பு கீழே) இருக்க உழைக்கும் மக்களுக்குத் தெரியாது /அவசியமும் கிடையாது.

( நாங்கள் எல்லாம் வல்ல பேரருளாளன் கருணையால் உங்களால் பொறுக்கிகள் என  விளிக்கப்படும் போது, எங்களது கம்யூனிச பூதத்தின் எல்லாம் வல்ல அருளால் நீங்கள் நாய்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள் )

//

 
 
 
 
 
 
 
 
 
 
 

//

ஈழவியாபாரம் – விலைபோகும் சதைப்பிண்டங்கள்

மே 29, 2009

ஈழவியாபாரம்
விலைபோகும் சதைப்பிண்டங்கள்

 

ஆர்குட்டில்  பலரும் விஜய் டிவியில் நடந்த அடுத்த பிரபு தேவா யார் என்ற போட்டியின் வீடியோ காட்சியை தங்களுக்கு பிடித்த வீடியோவாக இணைத்திருந்தார்கள். அதிகம் டிவி பார்ப்பதில்லை.அப்படியே பார்த்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தும் சாக்கில் தன்னை விளம்பரப்பொருளாக அறிவித்துக்கொள்ளும் எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை.என்னடா எல்லோரும் (அதுவும்  ஆர்குட்டில்தமிழீழ ஆதரவாளர்கள் ) பார்க்கிறார்களே என அந்த லின்க்கை கிளிக் செய்தேன்.
http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=5rB-atZH_-Y&eurl=http%3A%2F%2Fwww%2Eorkut%2Eco%2Ei

n%2FFavoriteVideoView%2Easpx%3Frl%3Das%26uid%3D3250078639754726720%26ad%3D124

1747530%26uit%3D%2FHome%2Easpx&feature=player_embedded
யார் அடுத்த பிரபுதேவா என்ற விஜய் டீவியின் நடனப்போட்டி அதில் பல சுற்றுக்களில் வெற்றிபெற்ற ஈழத்தினை சேர்ந்த தமிழர் ஒருவர் பெயர் பிரேம் கோபால்  ஈழமக்கள் படும் இன்னல்களை  மாத்தி யோசி என்ற சுற்றில் “விடை கொடு எங்கள் நாடே” என்ற  திரைப்பட பாடல் மூலம் வெளிப்படுத்த…………..
விருந்தினர்பலரும் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியதாக சொன்னார்களே தவிர நடக்கும் போர் சரியா ? யார் நடத்துவது ? யார் எதிரி என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
நிகழ்ச்சியின் விருந்தினர்கள் அப்படியே உணர்வு பூர்வமாகிவிட்டது போல தொகுப்பாளர் சொன்னார்”

ஈழத்தினை சேர்ந்தவர்கள்” எங்கள் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள், நாங்கள் அகதிகள் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீ£ங்கள்  தான் ஏதாவது செய்ய வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்” .   நிகழ்ச்சிமுடியும் தருவாயில்  பேக்கிரவுண்டில் குரல் ஒலிக்கிறது ” நம் நேச உறவுகளுக்கு அமைதி கிடைக்குமா விடைதெரியாத கேள்விக்கு காத்திருக்கிறார் பிரேம் கோபால்.” பின்னர் அடுத்த நடனப்போட்டியின் சிறப்பினை குறித்து பேசுகிறது.
பிரேம் கோபால் ஈழத்தமிழரின் உணர்வும், கண்ணீர்விட்டு   அழுத அந்த பெண்களின்   உணர்வுகளும் எப்படி விஜய்டீவியில் ஒளிபரப்பப்ட்டன? கலை என்பது மக்களுக்காகத்தான்.மக்களை தவிர , மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை விடுதலைக்கான கலையை வளர்க்க வேண்டும்.

நான் பார்த்த வீடியோவில் இருந்தவரை பிரேம் கோபாலின் நடிப்பில் அந்த நடன நிகழ்ச்சியில்ஈழமக்களுக்கு யார் எதிரி என்றோ அல்லது எதுதான் இதற்கு காரணம் என்றோஒளிபரப்பப்படவில்லை.அதுதான் விஜய் டீவியை ஒளிபரப்பவைத்தது.

 

அதே பு.மா.இ.மு நடத்திய நாடகங்களோ அல்லது இந்திய அரசினை திரை கிழிக்கும் நாடகங்களோஆவணப்படமோ விஜய் டீவியில்மட்டுமல்ல அய்யாவின் மக்கள் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பவாய்ப்பில்லை, காரணம் இப்போர் முதலாளிகள் தங்கள் நலனுக்காக ஓட்டு பொறுக்கிகளின் சேவையோடுநடை பெறுவது.

முதலாளிகளின் சொத்து பிரிப்புக்காக நடத்தப்படும் இந்த ஈழப்போரினை ஏதோ போர் நடக்கிறது, எதனால் எனத்தெரியாது ? அங்கு அமைதி வேண்டும் எனகூறுவது எப்படி சரியாக இருக்கும். யார் எதிரி என்பதை அறியாமல்  எப்படி?  எதை நிறுத்தப்போகிறோம்?

“உங்க கால்ல விழுந்து கேக்குறேன் ஒரு தமிழன் உயிரயாவது காப்பாத்துங்க்” என்று அந்த கண்ணீர்விடும் பெண்களின் கேள்விகள் நம்மை சுட்டெரித்தாலும் அவை முழுமை பெறாத நிகழ்ச்சியாகவே இருக்கிறது.

“எங்கள் மக்களை காப்பாத்துங்க” அங்கே ஒலிக்கப்பட்ட அக்குரல்கள் பார்ப்போருக்கு  கண்ணீரைவரவழைத்தாலும் விஜய் டீவிக்கு பணத்தை வரவழைத்திருக்கும்.  அது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுஆனால் தொலைக்காட்சிக்கோ தன்னை வளர்க்க ஒரு வித்யாசம் தேவைப்படுகின்றது.  இப்போது மக்களின் அழுகையும் சரக்குதானே.

மக்களை பைத்தியக்காரனாக்கி ஆண் பெண் வேடமிட்டு ஆடுவதும், பெண் ஆண் வேடமிட்டு கொண்டு கணவன்  மனைவி சகிதமாக கூத்தாடுவதற்கும் , ” அம்மாடி ஆத்தாடி”  என மகன் ஆடுவதை பார்த்து கண்ணீர் விடும் ஒரு பெண்ணின் கண்ணீரும் இந்த ஈழப்பெண்ணின் கண்ணீரும்  இங்கு முதலாளிக்கு ஒரே சரக்குதான்.

ஒவ்வொரு காலச்சூழலுக்கும்  ஏற்றவாறு  தன் பொருளை விற்பதற்கு ஒரு வாய்ப்புதேவைப்படுகின்றது,இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு ஈழப்பிணங்கள் சரக்காகி விட்டன. மக்களின்அழுகைகள் விலையேற்ற காரணிகளாகிவிட்டன.

 ஒரு முதலாளி எதையும் , எல்லாவற்றையும் பண்டமாக்குவது போல இப்போது ஈழத்தின் கண்ணீரையும் பண்டமாக்கிவிட்டான். தன்னுடைய ரேட்டிங் ஏறுவதற்கான தூண்டுகோள் தற்போது ஈழம். பாலஸ்தீனத்தின் மீது குதறும் இசுரேலை எதிர்க்காது பாலஸ்தீனத்தில் அமைதி வேண்டும் என முழக்கமிடுவது எவ்வாறு துரோகத்தனமோ அதைவிட ஈழத்தின் உண்மை நிலையை மக்களுக்கு சொல்லாது  இன்னல்களைமட்டும் காட்டி எதிரியை சுட்டாத எந்த ஒரு நிகழ்வும் மக்களுக்கு துரோகமானதே.

 

——————————————————————————————————————-
ஈழமக்களின் பிணத்தினை விற்கும் முன்னணியாளர் என்றால் அது ராமதாஸ்தான். அவருக்குத்தான் அதில்ஏகபோக உரிமை.  விஜய் டீவி மக்களின் இன்னல்களை காசு பொருக்க பயன்படுத்தியதோ அது போலஈழமக்களின் பிணத்தினை காட்டி காட்டி மக்கள் தொலைக்காட்சியில்  ஓட்டு பொறுக்கினார் ராமதாஸ்.

தேர்தல்   நாளன்று தொடர்ந்து ஒளிபரப்பியும் அதற்கு முன்னர்கூட மக்களின் பிணங்களை காட்டி ஓட்டு போடுங்கள்  ஓட்டு போடுங்கள்  அம்மாவுக்கு அவர் வந்தது தன் சுருக்குப்பையினை திறந்து ஈழத்தினைதருவார் என் கூப்பாடு போட்டார். சாதாஅம்மாவை ஈழத்தம்மாவாக்கி ஒவ்வொரு ஈழத்தமிழனின்இன்னலுக்கு தாயின் சுருக்குப்பையில் தீர்விருப்பதாக தெரிவித்தார்.
 
நேற்று வரை பாப்பாத்தியாக, ஈழமக்களின் துரோகியாக விளிக்கப்பட்டவர் இன்று ஈழத்தாயாகபரிணமிக்கிறார் எனில் அதை ஏற்றோ ஏற்காமலோ மக்கள் அமைதியாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னும் பெரும்பான்மை மக்கள் பார்வையாளராகத்தான் இருக்கிறார்கள். கேட்கும்கேள்விகளுக்கு அவர்களிடம் வெற்றுக்கண்ணீரே பதிலாய் அமைகிறது.
 அதனால் தான் ஈழத்தில் போரும் மக்களின் பிணங்களை வைத்து வியாபாரமும் நடக்கிறது. மக்கள் பார்வையாளர் அந்தஸ்திலிருந்து  போராளிகள் பதவிக்கு பரிணாம வளர்ச்சி யடையும் போது ஈழத்தில் போரை நடத்தும் தரகு முதலாளிகளும்,மக்களின் துயரங்களை முதலீடாக்கும் ஓட்டு பொறுக்கிகளும் சொர்க்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவார்கள்.
 
முதலாளிகளுக்கும் இந்த ஓட்டு பொறுக்கிகளுக்கும் ஈழம் கிடைத்தாலும் அது லாபம் கிடைக்காவிட்டாலும் அந்த இன்னல்களைவைத்து கல்லா கட்டிவிடலாம்,ஓட்டு பொறுக்கலாம். ஆனால் போராட்டம் தான்வெற்றியைத்தரும்.கல்லாக்கள் உடைக்கப்படும் போது விடுதலைதானாய் விடுதலை ஆகும்.

ஈழப்பிணங்கள்

மே 20, 2009

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

raja _b copy

 

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில்  இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் விடுவிக்கப்பட்டுள்ளது,இலங்கையில் மத,இன,குல பேதம் எதுவு இல்லை என்று தமிழில் உரையாற்றி தனது  நாட்டு மக்களுக்கு அரச கொண்டாட்டத்தை அறிவித்தார்.இலங்கை தெருக்களில் கட்டாயமாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதையும்,  தமிழ் மக்கள் கூனிக்குறுகி நின்று மீண்டுமொரு 1983 வந்து விடுமோ என்ற பயத்தில் நிற்பதையும் பல  செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று  , தின்று  எல்லோரையும் முடித்து விட்டோம். பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை செய்யப்பட்டுவிட்டது.மக்களே இனி நம் நாட்டில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என  தமிழர்களின் ரத்த சகதியில் தோய்த்த பூவினை சிங்கள மக்களுக்கு காதில் சுற்றுகிறான் மகாத்மா மகிந்தா. புலிகளிடம் சிக்கியிருந்த, பாதிக்கப்பட்டிருந்த , கைதிகளாய் பிடிக்கப்பட்டிருந்த எனக்கூறி மக்களுக்கு சொர்க்கத்தினை ஆட்லெறி குண்டுகள் மூலமும்  ரசாயன குண்டுகள் மூலமும் பாஸ்பரஸ் குண்டுகள் மூலமும் வழியனுப்பி வத்துவிட்டு தமிழ் மக்களின் ரத்தம் குடித்த வாயினை கூட துடைக்காமல் நான் தான் தமிழர்களுக்கு காவலன்”  என ஆணவத்தோடு அறிவித்துவிட்டான் மகிந்தா.
கடந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பாசிசம் புலிகள் ஒழிப்பு என்ற பேரில் ஒரு இனத்தினையே ஒழித்திருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்கு பின் மாபெரும் இன அழித்தொழிப்பு யுத்தம் இலங்கையில் உலக நாடுகளின் மறைமுக உதவியோடும் இந்தியா, சீனா,ரஷ்யா உல்ளிட்ட நாடுகளின் நேரடி உதவியோடு  நடைபெற்று வருகிறது.
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும்  முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு  அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும்  என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது  இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.

காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே.  இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும்  செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை  நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது,  அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்படி வகைதொகியின்றி அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்கள்.பல பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து மூலதனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. தெருவில் சுற்றித்திரியும் சொறி நாய்களை ,வெற் ந்¡ய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டு என ஒப்பாரிவைக்கு இந்த  மூலதனத்தின் கருணை கனிந்தபார்வை எப்போதும் மக்களின் பக்கம் திரும்புவதில்லை. வெறிநாயினை கொல்லும் போது அதற்குவலிக்கும் என வாதிடும்  மூலதனம் மக்கள் தலையில் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி அழிக்கிறது.இது எப்படி சாத்தியம் ஒன்றே அழிவையும் உயிரையும் நேசிக்குமா? நேசிக்கும் என்பதுதான் வரலாறு மூலதனத்தின் தேவைக்குத்தான் நாய்க்கு கருத்தடை பரவலாக  பரப்புரை செய்யப்படுகிறதே தவிர அதற்கு வலிக்கும் என்பதற்காக அல்ல,அதே பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது மூலதனத்தினைபெருக்குவதற்காகன தேவையாய்  அமைகிறது. மூலதனம் தன் தேவைக்காக எதையும் செய்யும்,ஆனால் அதில் துளியும் மக்கள் நலனுக்காக இராது.
 
தற்போது போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து  விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றகதையும் அதோடு மூடப்படுகின்றது. நேபாள மன்னன் மக்கட்புரட்சியினால் அரண்மனையை விட்டு துரத்தப்பட்ட போது  தனது உடற்துளைகளின் வழியே அழுத ஊடகங்கள் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண விசயமாக்கின.தற்போது பிரபாகன் மற்றும் அவரது மகன் இறந்ததாக இலங்கை அரசும்,இல்லை தமிழீழத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என புலிகளும் சொல்லிவருகின்றனர்.
இலங்கைஅரசின்  இந்தப்பிரச்சாரம் எதற்காக?  கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும்  அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.

பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது  வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது.  குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.
——————————————————————————————————————————————————————————-

தமிழகத்தினைப்பொறுத்தவரை தேர்தலில்  ஈழப்பிரச்சினையை உண்மையாக முன்னிறுத்த எந்த அரசியல்ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.மக்கள் கொல்லப்படும் போது கருணாநிதி போர் நின்றதாகஅறிவித்தார்.மீண்டும்  தொடர்கிறதே எனகேட்டதற்கு மழை நின்றவுடன் துவானம் போல என இலக்கியம்  பேசினார். பார்ப்பன பாசிச செயாவோ ஈழத்தை பெற்று தரப்போவதாக சவடால் விட்டார்.  ராமதாசு தனது தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஈழப்படுகொலைகளை ஒளிபரப்பி  தனக்கு ஓட்டு பொறுக்கினார்.திருமாவோ சோனியா அம்மையார் வாழ்க என உரத்து முழங்கி கெஞ்சி மன்றாடி ஈழமக்களின் உரிமைகளை கேட்டார்.
 
இதைவிட ஈழப்பிரச்சினைக்கு பெதிகவும் சீமானும் தமிழினவாதிகளும் செயாவுக்கு மட்டுமே வழிதெரியுமென கூறி ஈழத்தின் மக்களை கொச்சை படுத்தினர். இந்த தேர்தலில் செயா ஜெயித்து கண்டிப்பாக ஈழத்தினைத்தருவார் என மாய்மாலத்தினை ஏற்படுத்தினர்.கருணா செய்தது துரோகம் எனில் மக்களின்
போராட்டத்தை சிறுமை படுத்தி செயாவிடம் ஈழச்சாவியை கொடுத்தது சரியா தவறா?
செயா ஒரு பாசிச சித்தாந்தவாதி,இதை அதிமுக காரன் கூட ஒத்துக்கொள்வான்.ஆனால் அந்த செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்தியது துரோகமா? இல்லையா?

 நேற்றுவரை செயா பிராபாகரன் குற்றவாளி என சொன்னபோது ஆமாம் சாமி போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஈழம் மலர அம்மாவுக்கு ஓட்டு போடுங்கள் என சீமான் சொன்ன போது விசிலடித்தனவே
அய்யோ,
ஈழமக்களின் போராட்டத்தை இந்த நாய்களின் காலடியில் அர்ப்பணித்த  உங்களை என்னவென்று
சொல்வது?
 
—————————————————————————————————————————————————————————————
பாசிசம் ஓரு போதும் வென்றது  இல்லை, மக்களின் போராட்டமும் வீழ்ந்ததில்லை. யார்  வீழ்ந்தாலும்எல்லாம் பறிக்கப்பட்டாலும் பறிக்கமுடியாதது ஒன்று இருக்கிறது அதுதான் சுதந்திர வேட்கை. இன்றைய தவறுகள் நாளைய பாடங்கள்.
 கண்டிப்பாய் மீண்டும் போர் மூளும்  எதிரிகள் நாளை வீழ்த்தப்படலாம், நாம் எந்தப்பக்கம் இருக்கிறோம்? பிரபாகரனின் மரணசெய்தியைகேட்டு, கொத்து கொத்தாய் கொல்லப்படும்  மக்களை பார்த்து விடப்படும் நமது வெற்றுகண்ணீர் அம்மக்களை சுட்டெரிக்கவே செய்யும். சிங்கள இனவெறி பாசிசத்துக்கு துணை போகும் இந்தியத்தை முறியடிக்காது ஈழத்தில் வெற்றி மலரப்போவதில்லை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவாமலிருந்தாலும் பரவாயில்லை உங்கள் இந்திய சாயத்தின் கண்ணீரை விடாதீர்கள்.அவை பட்டுப்போய்விடும்.

செருப்புகள் காத்திருக்கின்றன……

ஏப்ரல் 10, 2009
செருப்புகள் காத்திருக்கின்றன……
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……

ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……

செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……

பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..

யார் காலை  யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க

 
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..

 
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..

 

செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக  போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.

சரணடை … சரணடைந்து விடு

ஏப்ரல் 10, 2009

சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு

பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால்  சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்

கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன

நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்

உயிர் வாழ
ஒரே தீர்வு தான் உழைத்து  வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்

ஏனெனில் உழைப்பைவிட
சாவது  உங்களுக்கு
-நரக வேதனையை தராது

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

மார்ச் 19, 2009

தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

maruthaiyan-copy1
” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?

” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால்  ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும்  உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை  செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,

வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த  உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
அப்படியானால்  என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”

“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய  சிங்கூர் விவசாயிகளையும்  சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும்  இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது

“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”

“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது  கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு  நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”

“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”

“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம்  கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ  20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”

“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள்  என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!

இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம்  ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”

“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்

வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “

தோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்

 

http://vinavu.wordpress.com/2009/03/31/elec0903/

போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை

மார்ச் 14, 2009
raja-copy1தூரிகைகளின் துயரப்பதிவுகள்
கண்டது முதல்
என்னிடம் சொல்வதற்கு
ஏதுமில்லை
மக்களின் மவுனம் என்னை கொல்லுகின்றது….
ஓட்டுப்பொறுக்கிகளின் சிரிப்புக்கள்
மகிந்தாவின் சிரிப்போடு
ஒத்துப்போய் சிரிப்புக்கள்
பெருஞ்சிரிப்பாகி விட்டன
அலைகளெல்லாம் ஒன்றாய் சேர்ந்து
சுனாமியானது போல்
எங்களின் துயரங்கள்
அவர்களின் சிரிப்புக்கள்
சந்தோசங்கள், ஆர்ப்பரிப்புக்கள்
சச்சின் சிக்ஸர் அடித்த வேளையில்
மகிந்தாவோ பிணங்களின் சதங்களை
எண்ணிக்கொண்டிருக்கின்றான்……………

கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது
மனமோ தட்டி தட்டி
தடுக்கிறது

மனிதனின்
உடல்கள் பாஸ்பரசு குண்டுகளால்
எரிந்து கொண்டிருக்க
இரவு பத்து மணிக்கு மேல்
டாஸ்மாக்கை ஒரு கும்பல்
தட்டிக்கொண்டிருக்கிறது…..

என்னைப்போலவே பலரிடமும்
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை

ஆம் உண்மைதான்
சொல்வதற்கு வார்த்தைகள்
இல்லை
இருக்கின்ற வார்த்தைகள்
எல்லாம்
சொல்லுகின்றன
திமுக அதிமுக பாமக
பாஜக காங்கிரஸ்,கலைஞர் ,
செயா,ரஜினி,விஜய்,அஜீத்,
சில்க்,நமீதா………
வார்த்தைகள் அடமானம்
வைக்கப்பட்டிருக்கின்றன
உலக வங்கியில் அல்ல
உள்ளூர் தேசியத்தில்……
உன்னில் தூங்கி கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப
இன்னும் எத்தனை பேர்
கருகிப்போகவேண்டும்……

வேறு வழியே இல்லை
இன்று ஈழம்
நாளை உன் இல்லம்
கண்டிப்பாய் நீயும்
கருக்கத்தான் படப்போகிறாய்

போராட்டத்தை தவிர வேறு
வழி இல்லை இல்லவே இல்லை

இனியும்
குப்புறப்படுத்து கிரிக்கெட்
ஸ்கோருக்காக நீ காத்திருந்தால்
நாங்கள் காத்திருக்கப்போவதில்லை
இந்தியத்தை முறியடிக்க
கூடவே உன்னையும் சேர்த்து.