Posts Tagged ‘கம்யூனிசம்’

“தோழர் ஸ்டாலின் – வெல்ல முடியாத சகாப்தம்”

திசெம்பர் 17, 2009

“தோழர் ஸ்டாலின் – வெல்ல முடியாத சகாப்தம்”

ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் “கோபா”
1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு “டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது” என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.
1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் “தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு” என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு “இரும்பு மனிதன்” எனும் பொருள் கொண்ட “ஸ்டாலின்” என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் “ஸ்டாலின்” என்ற பெயர் இணைக்கப்பட்டது.
தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.
1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.
முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி ” இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றார். உடனடியாக குழந்தைகள் “ஆறுமாதம் சிறை கிடைக்கும்” என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.
உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.
…..
நாடுகள் ———–1929 —- 1930 —– 1931 —— 1932 ——1933
..
அமெரிக்கா ———–100 —–. 80.7 —- 63.1 ——- 59.3 ——-64.9
பிரிட்டன் ———–100 —— 92.4 —— 83.8 —— 83.8 ——– 86.3
ஜெர்மனி ———-100 ——- 88.3 ——- 73.7 —– 59.8 ——– 66.8
பிரான்ஸ் ————100 —— 100.7 —- 89.2 ——- 99.3 – ——- 77.4
சோவியத் யூனியன் —–100 —- 129.2 —— 161.9 —- 184.7 — —– 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் – நூல்கள் தொகுதி 13 பக் 293)
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.
c-copyaaa
‘கிரெம்ளினைக் கைப்பறுவேன்’ என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.
 
இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!
 
ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .
 
ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.
ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.
 
1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.
உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.
 
சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.
எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.
 
மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.
 
உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.
நன்றி
தோழர் இரும்பு
http://thesteel.blogspot.com
முதலாளித்துவ பயங்கரவாதிகளால்  கொடுங்கோலன் என்றும்  வெறியர் என்று தூற்றப்படும் பாட்டளி வர்க்கத்தின் ஆசானும் மார்க்சிய லெனினியத்தின் முன்னோடியுமான தோழர் ஸ்டாலினின் நினைவு தினத்தை ஒட்டி (05.03.1953) இக்கட்டுரை ஈராண்டுகளுக்கு முன் தோழர் இரும்பு அவர்களின் தளத்தில் வந்த இக்கட்டுரை  காலத்தேவையினை கருதி மீண்டும் மறு பிரசுரம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.

வர்க்கப்போரில் பகலவனாய் இருக்கும் தோழரின் மீதும் சோசலிச ரசியாவை இரும்புத்திரை நாடென்றும் இகழ்ந்த ஓநாய்களின் முகமுடியை இக்கட்டுரை கிழிக்கிறது.

தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி (21 December 1878 ) இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
 

ட்ரிங் ட்ரிங்-ஹலோ திணிக்கப்படும் விளம்பரங்கள்

மே 13, 2009

ட்ரிங்  ட்ரிங்-ஹலோ 

திணிக்கப்படும் விளம்பரங்கள்

hello copy

 

திணிக்கப்படும் விளம்பரங்கள் மதிய வேளை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். செல்போன் ,மணி அடிக்க எடுத்தவுடன்”வணக்கம் நான் தான் மு.கருணாநிதி பேசுகிறேன். ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி , அனைவருக்கும் கலர் டிவி, 16000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தோம். நல்லாட்சி தொடர ஆதரிப்பீர் உதய சூரியன் ,கை, நட்சத்திரம். ” அன்று மாலையே “வணக்கம் நான் ஜெயலலிதா பேசுகிறேன்” என ஆரம்பிக்கிறது. ஓட்டு அரசியல் பிரச்சாரம் அனைவரையும் எட்டுவதற்காக ரெக்கார்டு செய்யப்பட்ட வார்த்தைகள் செல்போன்களில்ஒலிபரப்பப்படுகின்றன.

 

 இது வெறும் பிரச்சார உத்தி என விட முடியுமா? இந்த சிந்தனையை கொஞ்சம் கிளறிப்பார்த்தோமாயின் நம்மை மனிதர்களாக கூட மதிக்காத இந்த முதலாளித்துவத்தின் கோர முகம் தெரியும். ஒரு பொருளை விற்பதற்காக செய்யப்படும் விளம்பரங்கள் பலவகையில் இருக்கிறது. செய்தித்தாள்விளம்பரம்,தொலைக்காட்சி விளம்பரம், நோட்டீஸ், டிஜிட்டல் போர்டுகள். ஒரு முதலாளி தன்னுடைய பொருளின் சேவையினை அதன் சிறப்பம்சத்தினை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுமென விரும்புகிறான். இவ்வகையில்தான் மேற்கண்ட பிரிவுகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இருந்தாலும் தன்னுடைய பொருளை கண்டிப்பாக எல்லோரும் பார்த்தார்களா? எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து யோசிக்கும் போதுதான் செல்போன் அதற்கு மாபெரும் வரப்பிரசாதமாய் அமைகிறது.

 

கடந்த இரண்டு வருடங்களாக செல்போனின் பயன்பாடு மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளது. ஆம் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பொருளின் சிறப்பம்சத்தை கொண்டு செல்லலாம். அதற்கு அவர்களின் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படியும் ஒரு குறுந்தகவல் வருகிறது எனில் கண்டிப்பாக அதை அதை திறந்து பார்ப்போம் அதன் மூலம் அப்பொருளை நேரடியாக எல்லோருக்கும் கொண்டு வருகிறான் முதலாளி.

 

நுகர்வியல் தான் இங்கு அடிப்படை. உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ என் விளம்பரத்தை நீ கண்டிப்பாய் நுகரத்தான் வேண்டும். நுகராதன் மனிதன் இல்லை. இப்படி நம்மை கேட்காமலே நாம் விரும்பாமலே அனைத்து கம்பெனிகளின் விளம்பரங்கள் காதில் போடப்படுகிறன. “உங்களுக்கு கடன் வேண்டுமா? சார் எங்க லைப் இன்ஸ¥ரன்ஸ்ல நல்ல நல்ல திட்டம் இருக்கு நீங்க ட்ரைபண்ணுங்க” . தினந்தோறும் இவ்வார்த்தைகளை கேட்காமல் இருக்க முடியாது” இல்லைங்க எனக்கு வேண்டாம் என்றால் கூட சார் நிறைய ஆப்சன் இருக்கு என அவர்களை இழுக்க வைத்து விட்டனர்.

 

முதலாளியின் லாப வெறி பேசும் ஊழியன் எத்தனைதிட்டு வாங்கினால் என்ன எத்தனை ஆபாச அர்ச்சனை வாங்கினால் என்ன ஒரு நாளைக்கு இத்தனை பேரிடம் பேச வேண்டும் பேசித்தான் ஆக வேண்டும் என கட்டளையிடுகிறது. வேலையில்லாத்திண்டாட்டம் யார் யாரிடமோ திட்டுவாங்கிக்கொண்டு சிலரை நுகர்வோனாக்குவதில் மகிழ்ச்சிகொள்ள சொல்கிறது அல்லது சமாதானம் கொள்ள செய்கிறது . அது ஒரு புறம் இருக்க, பலர் போன் செய்தவுடன் பெயரையும் சேர்த்து சொல்கின்றனர். “என் செல்போன் எண் உங்களுக்கு எப்படி தெரியும் என்றால் நாங்க மொத்தமா கம்பெனியில் வாங்குவோம் என்கிறார்கள்.

 

என்னுடைய பெயரை என்னுடைய எண்ணை எனக்குதெரியாமல் மற்றவருக்கு தெரிவிக்க ஒரு முதலாளிமுடிவு செய்து விட்டான் எனில் அவ்வளவுதான் நான் வேண்டாம் என்றால் கூட எனக்கு கடன் தேவை குறித்த கால்கள் வந்து கொண்டே இருக்கும். இது தனி மனிதபிரச்சினையா இல்லையா? .இது என்னுடைய உரிமையை சிதைக்கிறதா இல்லையா? என்னுடைய தகவல்களை எனக்கு தெரிவிக்காது மற்றவனுக்கு அளிக்க நீயார் என கேட்டால் சிரிக்கிறான் முதலாளி காற்று நீர் வானம் பூமி ஏன் அந்த நிலவைக்கூட பார்ட் பார்ட் ஆக விற்று விட்ட இந்த சமூகத்தில் தனிமனித உரிமை ஒரு கேடா என்றவாறு.

 

“உனக்கென உரிமைகள் இல்லை அது நீயே காசு போட்டு வாங்கிய பொருளாயிருந்தாலும் எனக்காகத்தான் இயங்கப்படுகிறது.” அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். பலருக்கும் இது ஒரு தவறாகத்தெரிவதில்லை. “sms வந்தா வந்துட்டு போவுது அதுக்கு என்ன அது அவங்க வேலை” என சாக்கு சொல்கிறார்கள். அவர்கள் வேலை சாவு வீட்டில் இருக்கும் போதும் “உங்க காதலை வெளிப்படுத காதல் கவிதைகள் மாதம் வெறும் 30 ரூபாய்தான்” என்றுதான் வருகிறது.தொலைக்காட்சி ,டிஜிட்டல் விளம்பரம் போலன்றி நான் விரும்பாமலே அவைகளை நான் நுகரத்தான் வேண்டும் .

 

 என்னுடைய நேரம் என்பது போய் நான் ஒரு24 மணி நேர சந்தையாகிவிட்டேன் எப்போது வேண்டுமானாலும் பொருளை என்னிடம் அறிமுகப்படுதலாம் அதற்கேதும் தடையில்லை நான் ஒரு உணர்வுகளுள்ள, உரிமைகளுள்ள மனிதன் அல்ல . என்னிடம் எதை மற்றவர் பேசவேண்டுமென்பதை இனி முதலாளியே தீர்மானிப்பார். அவரின் தேவைக்கேற்ப லாபத்திற்கேற்ப எனக்கு நேரம் ஒதுக்கப்படும். இது தனிமனித உரிமைகளை மட்டும் பாதிக்கிறதா என்றால் அது மட்டுமல்ல முதலாளித்துவம் ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானதென்ற போது அனைத்தையும் கடைசரக்காக்கி விற்பனை செய்யாமல் ஓயாது.

 

ரிலையன்ஸ் தொலை பேசி வைத்திருப்போருக்கு இந்த அனுபவம் இருக்கும்”என்னங்க இன்னுமா ரீசார்ஜ் செய்ய மாட்டேங்குறீங்க சீக்கிரம் பண்ணுங்க” என ஒரு பெண் குழைவதைப்போல, அது ஏன் இந்த துறைக்கு ஆணைவிட பெண்கள் அதிகம் பயன்படுத்தபடுகிறார்கள்?

 

பெண்களின் குரல் frequency அதிகமாக தெளிவாக இருக்குமென்பதை விட அவர்கள் விற்பனை சரக்காக்காகமாற்றப்பட்டு விட்டார்கள்.இந்த சமூகம் பல்விளக்கும் பற்பசை முதல் கழிவறை கழுவும் விளம்பரம் வரை பெண் தான் மூலதனம்.அந்த் பெண்ணின் உரிமைகளை மறுத்து அவரை ஒரு விற்பனை பொருளாக மாற்றி அதை ஏற்று கொள்ள வைத்ததுதான் முதலாளித்துவம் செய்த மாபெரும் வெற்றி. அதே பார்முலாதான் மனித சமூகமனைத்தையும் வியாபாரப்பொருளாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

————————————————————————————————————————————–

 

கடந்த மாதம் நடந்த சம்பவம் இது எனக்கு போன் செய்த நண்பர்கள் சொன்னார்கள் “உனக்கு போன் பண்ணினா பாட்டு வருது”. இது குறித்து அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு உடனே தொடர்பு கொண்டு புகார் சொன்னேன் . பலனில்லை சுமார் 5 தடவை இப்படி புகார் செய்தும் பலனில்லைஒருவாரம் கழித்து போன் செய்தேன் “ஏற்கனவே 5 முறை புகார் பண்ணிட்டேன் பாட்டை எடுக்க முடியுமா இல்லையா ? “அப்படிங்களா முன்னாடியே எடுத்துருப்பாங்களே ” உங்ககிட்ட ஒரியாடவேண்டிய வேலை எனக்கில்லை.

 

யாரைக்கேட்டு எனக்கு பாட்டை போட்டீங்க நான் உங்களை கேட்டனா? ” சார் அதுக்கு காசு இல்லை ப்ரீ தான் எந்த சர்ர்ஜ் இல்லை ஒரு மாசம் பாட்டு வரும் வேணுமினா காசு கொடுத்து எக்ஸ்டண்ட் பன்ணிக்கலாம்” ப்ரீ என்பதை அழுத்தி சொன்னார். “என்னப்பார்த்தா உனக்கு பிச்சக்காரன் மாதிரி தெரியுதா என்னமோ ப்ரீ ப்ரீ சொல்லுற, என்னகேக்காம எனக்கு ஆபாசப்பாட்ட போடு உட்டுவீங்க வாடா மாப்புள வெங்காயமாப்புளன்னு வரும் நான் கேட்டுட்டு வாயமூடிக்கிட்டு இருக்கணுமா? உங்ககிட்ட எல்லாம் எத்தன முற சொல்லி இழவெடுக்கிறது.

 

இப்ப பாட்ட எடுக்க முடியுமா இல்லையா? கொஞ்ச அமைதிக்கு பின் பேசினார்” சாரி சார் கண்டிப்பா பாட்டை எடுத்துடுவோம் என்றபடி இணைப்பை துண்டித்தார். ஆனால் பலர் சும்மாதானே வருது என்றபடி, ஒரு மாசம் பாட்டுதான பாடிட்டு போவுது புல்லரித்து மகிழ ஆரம்பித்து விடுகின்றனர்.

 

 முதலாளித்துவத்தின் எந்த ஒரு இலவசமும் நம்மை அடிமையாக்குவதற்கே.அது இலவசம் அல்ல அதுதான் நம்மை அவன் திருடிக்கொண்டு போவதற்கான முதல் கடவு சீட்டு. நம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான முதல் அறிவிப்பு.

“தோழர் ஸ்டாலின்” – வெல்லமுடியாத சகாப்தம்

மார்ச் 6, 2009

ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் “கோபா”
1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு “டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது” என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.
1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் “தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு” என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு “இரும்பு மனிதன்” எனும் பொருள் கொண்ட “ஸ்டாலின்” என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் “ஸ்டாலின்” என்ற பெயர் இணைக்கப்பட்டது.
தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.
1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.
முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி ” இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றார். உடனடியாக குழந்தைகள் “ஆறுமாதம் சிறை கிடைக்கும்” என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.
உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.
…..
நாடுகள் ———–1929 —- 1930 —– 1931 —— 1932 ——1933
..
அமெரிக்கா ———–100 —–. 80.7 —- 63.1 ——- 59.3 ——-64.9
பிரிட்டன் ———–100 —— 92.4 —— 83.8 —— 83.8 ——– 86.3
ஜெர்மனி ———-100 ——- 88.3 ——- 73.7 —– 59.8 ——– 66.8
பிரான்ஸ் ————100 —— 100.7 —- 89.2 ——- 99.3 – ——- 77.4
சோவியத் யூனியன் —–100 —- 129.2 —— 161.9 —- 184.7 — —– 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் – நூல்கள் தொகுதி 13 பக் 293)
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.
c-copyaaa
‘கிரெம்ளினைக் கைப்பறுவேன்’ என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.
இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!
ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .
ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.
ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.
1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.
உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.
சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.
எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.
மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.
உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.
நன்றி
தோழர் இரும்பு
http://thesteel.blogspot.com
முதலாளித்துவ பயங்கரவாதிகளால்  கொடுங்கோலன் என்றும்  வெறியர் என்று தூற்றப்படும் பாட்டளி வர்க்கத்தின் ஆசானும் மார்க்சிய லெனினியத்தின் முன்னோடியுமான தோழர் ஸ்டாலினின் நினைவு தினத்தை ஒட்டி (05.03.1953) இக்கட்டுரை ஈராண்டுகளுக்கு முன் தோழர் இரும்பு அவர்களின் தளத்தில் வந்த இக்கட்டுரை  காலத்தேவையினை கருதி மீண்டும் மறு பிரசுரம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.

வர்க்கப்போரில் பகலவனாய் இருக்கும் தோழரின் மீதும் சோசலிச ரசியாவை இரும்புத்திரை நாடென்றும் இகழ்ந்த ஓனாய்களின் முகமுடியை இக்கட்டுரை கிழிக்கிறது.