Posts Tagged ‘கலகம்’

மாற்றங்களும் சில கற்களும்

ஏப்ரல் 28, 2011

மாற்றங்களும் சில கற்களும்


பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்

முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன

வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி

நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ

மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்

டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்

சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்

வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன

இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

ஏப்ரல் 17, 2011

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி


கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.

கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

எம் வாயில்
பீயைத் திணிக்கவும்

ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்

ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்

உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்

ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்

என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை

ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி

பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !

அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி  நக்சல்பாரியே உன் வழி

இது பதினாலாவது தேர்தல்

ஏப்ரல் 9, 2011

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

ஏப்ரல் 3, 2011

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

 

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

நவம்பர் 8, 2010

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அதோ அங்கே பாருங்கள், வறண்ட , நெடிய கண்மாயில் பெண்கள் எல்லாம் போர் போட்டு குடி நீர் எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள். என்னங்க செய்யறது? கண்மாய் வத்திப்போய் பல வருசம் ஆச்சு, ஓட்டு கேக்க வருவானுங்க எப்பயாவது.மண்ணை பொன்னாக்குறேன்ன்னு சொல்லுவான் ஒருத்தன், நாயை பேயாக்குறேன்னு சொல்லுவான் ஒருத்தென் இப்புடியேஎல்லாம் கருமாந்திரம் புடிச்ச பயலுவலும் சொல்லிகிட்டு திரியும் , எங்க தண்ணீ பிரச்சினைய எவனும் தீக்குற மாரி தெரியல.

அன்னக்கி தண்ணி எடுக்க வந்த பெரியாத்தா கூட சொல்லுச்சி “ஏய் மாரியம்மா இந்த பூமிய அழிச்சுப்புடு தாயீ , புதுசா கொண்டா ஆத்தா, நாங்க தெனமும் சாவுறோம் ஆத்தா” கண்ணீர் வுட்டு கதறுச்சி. எல்லாம் இச்சு கொட்டிட்டு போய்ட்டாங்க.

அடச்சே நாம எதுக்கோ வந்துட்டு எதைப்பத்தியோ பேசிகிட்டு இருக்கோம், நாம பேச வந்ததே நம்ம மாணிக்கத்தை பத்திதான், வயசு 35. அவுங்க தாத்தா துரையன் அந்த காலத்துலயே கம்யூனிஸ்டு கட்சியில இருந்தாராம். வெள்ளக்காரன்

காலத்துல துரையன் இருந்த ஜெயில்ல பக்கத்து ரூமிலதான் நல்லக்கண்ணு இருந்தாராம். கட்சி ரெண்டா உடைஞ்சப்பகூட துரையன் நகரலை. ” சாகுற வரைக்கும் தோலர் நல்லக்கண்ணுக்காகத்தான் அவுரு கட்சியிலத்தான் இருப்பேன்“ன்னாரு. அவரு போட்ட சபதத்த  மாணிக்கம் காப்பாத்துறாரு. ஆமா அவரும் சிபிஐ கட்சியிலதான் இருக்குறாரு. அவுங்க அப்பாவுக்கு ஒரு நல்லக்கண்ணுன்னா? மாணிக்கத்துக்கு வானவராயன்தான்.

போன முறை கோயம்புத்தூர் எம்பியா நின்னப்ப மாணிக்கம் செஞ்சவேலை என்ன? மாடாட்டம் வேல செஞ்சான். நாளைக்கு தேர்தல்ன்னா இன்னைக்கு வரைக்கும் தோரணம் கட்டுறதுகொடிபுடிக்குறதுன்னு அவன் தெருவையே கலக்கிப்புட்டான் போங்க.

வானவராயன் செயிச்சவொடனே  மாணிக்கத்த கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாரு அப்புறம் சொன்னாரு “என்ர மாணிக்கம் இருக்குற வரைக்கும் எனக்கு கவலையே இல்லை” ஆமா அவரு வீடு எங்க இருக்குன்னு தெரியலீங்களே! யாரை கேக்கலாம்………………… அதோ அந்த வெள்ளசீலை ஆயாவை கேக்கலாங்களா ?  “ஆயா இங்க துரையன் பேரன் மாணிக்கம் வீடு எங்க இருக்குதுங்க? ” ” நம்ம மாணிக்கம் வீடா? தா அந்த முக்குல போய் சோத்தாங்கை பக்கம் திரும்புங்க”

அதோ வெளிய கயித்துக்கட்டல்ல  இருக்குறாரே அவருதான் மாணிக்கம். திரைக்கதையெல்லாம் போதும் இனி கதைக்குள்ள போவோம்.

…………………………

……………………………………………………………………………………………………………………………………………………………………..

மாணிக்கத்துக்கு ஒரு சந்தோசமாய் இருந்தது, இருக்காதா என்ன? சிபிஐ மாநில செயலாளர் ” நில மீட்பு போராட்டம்” அறிவிச்சதை பார்த்தவுடனே அப்படி ஒரு சந்தோசம். எல்லா கட்சியும் எப்படியெல்லாம் எங்களை கேவலப்படுத்துனீங்க நாய்ங்களா? வர்ரண்டா டேய்! சிங்கம் மாரி எங்க தோலர் கிளம்பிட்டார்டா………………….. அவன் மனசுக்குள் பல்லாயிரம் வாலா பட்டாசுகள் வெடித்தன. மாணிக்கத்தோட மாமன் வெள்ளையன் பக்கத்து வீடுதான்.

மாமன் வெள்ளையன்  சிபிஎம் கட்சியில இருக்குறாங்க. அவருகிட்ட சோலியா போறப்ப எல்லாம் சிபிஐ கட்சியை குத்தி குத்தி காட்டுவாரு. மனசு வலிக்கும், ஏன் போன வருசம் எங்க கட்சி மூத்த தலைவர் ஒருத்தரு சிபிஐ, சிபிஎம் ரெண்டு கட்சியும் இணையனும்ன்னு சொன்னவுடனே சிபிஎம் காரர் ஒருத்தரு “அதெல்லாம் முடியாது, பழச மறக்க முடியாது, எங்களை துரோகின்னு சொல்லி வெளியேத்துனீங்களே”ன்னு மைக்குல பேச எங்க தலைவருங்க மூஞ்செல்லாம் எவ்வளவு கவலையாஇருந்துச்சு தெரியுமா?

அதை பேப்பர்ல பாத்தவுடனே மாமங்காரன் சொன்னான் “டே மாப்புள! உங்கட்சியே ஒண்ணுமில்லாம போயிடுச்சு, செயலாளர் பதவிக்கு ஆள் இல்லாம ஓடிப்போன பாண்டியை புடிச்சுகிட்டு வந்தீங்க, இப்ப எங்க கட்சிக்கே மேட்டர் போடுறீங்களா? எங்க கட்சிய வளச்சுக்கிட்டு ஆள்புடிக்கப்போறீங்களா? அப்புடியே சொத்தப்புடுங்க பாக்குறீங்க”

வேற யாராவது சொல்லியிருந்தா அவன் சாவறதுக்கு கருப்பண்ணன் கோயில்ல கோழியை தலை கீழா தொங்கவுட்டுருப்பான் மாணிக்கம், மாமாங்குற ஒரே காரணத்துக்காக மனசுக்குளேயே புழுங்குனான். அவன் சொல்றது உண்மையா இருக்குமோ? ஏன் நம்ம கட்சியில யாருமே சேர மாட்டேங்குறாங்க! நமக்கு பின்னாடி பொறந்தவன் சிபிஎம், அவன்கூட கேரளாவுலயும் மேற்குவங்கத்துலயும் ஆட்சிய புடிச்சுட்டான்.  எச்சிப்பாலை (கொள்கையில்) குடிச்சு வளந்தவனுக்கே அவ்வளவு திமிறா?

ரொம்ப டென்சன் ஆகிப்போனான் மாணிக்கம். ” வொக்காளி என்ன திமிரு ஆளாளுக்கு ஆடுறானுங்க, நேத்து முளச்ச விஜயகாந்து புரச்சி பண்ணப்போறேங்குறான், நாங்க தாண்டா கம்யூனிசத்த இந்த நாட்டுக்கே அறிமுகப்படுத்துனோம், இப்ப எவன் பாத்தாலும் மதிக்க மாட்டேங்குறானுங்க, எம்பி சீட் கொடுத்தாலும் சரி, எம்மெலே சீட்கொடுத்தாலும் சரி எச்சிப்பாலு குடிச்சவனுக்குத்தான் எச்சா தராங்க” கவலையிலே சாயங்காலம் படுத்தவன்தான்,

ராத்திரி அவன் மனைவி ரத்தினம் எழுப்பிய போது அழுது அழுது அவன் கண்கள் வீங்கியிருந்தது, கேட்டாள் ” ஏ மாமா அழுவுற “, அவன் காலையில் மாமங்காரன் திட்டியதை சொன்னான்.

“அட கெரகம் புடிச்சவனே! இதுக்கா அழுவுற , கருப்பண்ண சாமிக்கு கெடா வெட்டறன்னு நேந்துக்கோ எல்லா
சரியாயிடும்” மனைவியின் சொல் இதமாயிருந்து. சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்தான். கண்கள் சொக்கின, கூடவே ஒரு கவிதையும் வந்தது.

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

அப்போதுதான் சன் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது, இப்போதுதான் அந்த செய்தி வந்தது ” சிபிஐ மாநிலச்செயலர்அறிவிப்பு,  நிலமற்ற மக்களுக்கு நிலத்தை வழங்கக்கோரி நில மீட்பு போராட்டம்”. என்ன ஒரு சந்தோசம். போன வாரம்கூடசன் டிவியில வந்துச்சே சேதி,

“தில்லையில 4 ஆயிரம் ஆண்டுகளாய் பூட்டு போட்டிருக்கிறார்கள் அதை அரசு அகற்றாவிடில் நாங்கள் அகற்றுவோம்” நம்ம பாண்டி தோலர் பேசும் போது எப்படி சிங்கம் மாரி பேசினார். அந்த ம.க.இ.க காரனுங்க என்னமோ 8 வருசமா போராட்டம் பண்ணுறாங்களாம்.  நம்ம பாண்டி தோலர் எப்பவுமே உசாரு!!! எட்டு வருசமா போராடுறவனுக்கு பேர் கிடைக்க வுட்டுடுவாரா என்ன ?  சிபிஎம் காரணெல்லாம் பேசும் போது எங்களுக்கு பேச உரிமை இல்லையா என்ன? எவன் எட்டு வருசம் போராடி மண்டை உடஞ்சா நமக்கென்ன?  நமக்கு பேர் வரணும் அவ்வளவுதான்? இதுல என்ன தப்பு? அவனுக்குள்ளே கேள்விக்கேட்டுக்கொண்டே தூங்கிப்போனான்.

—————————————————————————————————————————————————————

யாரோ எழுப்பியது போல் இருந்தது . மணியைப்பார்த்தான் அது 4 என பல்லைக்காட்டியது. மாவட்டப்பொறுப்பாளர் நேரே வந்திருந்தார் “ஏப்பா மாணிக்கம் இங்க வா” தனியாக அழைத்தார். காலங்காத்தால தோலர் வந்திருக்காரே குழப்பத்தோடுபின்னே சென்றான். ” ஏப்பா நேத்து நியூஸ் கேட்டியா “.

” கேட்டேன் தோலர், நம்ம பாண்டித்தோலரோட பேட்டியில நில மீட்பு போராட்டம்ன்னு சொன்னாரே” என்றான்
“கரெக்டா விசயத்துக்கு வந்துடுறேன். நேத்து பாண்டித்தோலரோட பேட்டியைப்பாத்த மொத்த தமிழ் நாடே ஆடிப்போயிடுச்சு, குறிப்பா  அரசாங்கம் ரொம்பவே கலங்கிப்போயிடுச்சு, தலைவர் கலைஞர் நம்ம தோலருக்கு ராத்திரி 10 மணிக்கு போன் பண்ணி “தயவு செஞ்சு உங்க போராட்டத்த ஒத்திவையுங்கன்னு” கெஞ்சிப்பாத்தாரு நம்மாளு கேக்கவே இல்லை.”

“ஒரு சாதாரண போராட்டத்துக்கு ஏன் முதல்வர் போன் பண்ணியிருக்காரு தெரியுமா?” சஸ்பென்சோடு மாணிக்கத்தைப்பார்த்தார். நில மீட்பு போராட்டம்ங்குறது புரட்சி செய்யறதுக்கான அறிகுறி !!!!. எல்லா கட்சியும் நம்மள எப்படியெல்லாம் திட்டுனாங்க, அதுக்கு பதிலா யாருக்குமே தெரியாம புரட்சியை செஞ்சு முடிக்கறதுன்னு மேல்கமிட்டியில தீர்மானம் போட்டிருக்கோம்.”

மாணிக்கத்தின் முகம் கலவரமடைந்தது. அந்த பனி கொட்டும் வேளையில் முகத்தில் பூத்திருந்த வியர்வையை வேட்டியில் துடைத்துக்கொண்டான். தோலர் தொடர்ந்தார் “அந்த விசயம் எப்படியோ உளவுத்துறை மூலமா லீக் ஆயிடுச்சு, அதனால தான் கலைஞர் போன் பன்ணியிருக்காரு.”  “அப்படியா” என வாயைப்பிளந்தான் மாணிக்கம்.

“இதுக்கே திகைச்சுட்டியே, நைட்டு 12 மணிக்கு  பிரதமர் போன் செஞ்சு புரட்சியை ப்ளீஸ் ஒத்தி வையுங்கன்னு கெஞ்சி இருக்காரு, அப்புறம் சோனியா காந்தி, அத்வானின்னு எத்தனையோ பேர் சொல்லியும் பாண்டித்தோலர் கேக்கல. வேற வழி இல்லாம நைட்டு 1 மணிக்கு அம்மா போன் பண்ணி புரட்சிய ஒத்தி வையுங்க இன்னைக்கு நாள் சரியில்லைன்னு சொல்ல அதுக்கு நம்ம தோலரோ ‘ நாளைக்குத்தான் நல்ல நாள் என் ராசிக்கு  நாளைக்கு  குரு உச்சத்துல இருக்கான், கண்டிப்பா

நாளைக்கு புரட்சி செய்யணும்னு மேல் கமிட்டியில தீர்மானம் போட்டுட்டாங்க அதுக்கு முன்னாடி ஆவி ஆவி ஆரதா மூலமா ரணதிவே கிட்ட கூட ஆசி வாங்கியாச்சு”ன்னு ஆணித்தரமா சொன்னாராம். அம்மா கம்முன்னு ஆப் ஆயிடுச்சாம்”

மணிக்கத்துக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ” தோலர் நான் என்ன செய்யணுன்னு சொல்லுங்க? “. ” இப்ப மணி 4.இன்னும் சரியா ரெண்டு மணி நேரத்துல விடிஞ்சிடும் அதுக்குள்ள  நம்ம ஊருல இருக்குற எல்லா ஸ்கூல்,  பீடிஓ ஆபீஸ், அப்புறம் அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் , கொடிக்கம்பங்கள் எல்லாத்துலயும் நம்ம கதிர் அறிவாள் கொடியை ஏத்துனா போதும்,

நம்ம தோலர் பாண்டிக்கு அவர் ராசிப்படி காலையில 8.50 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பமாகுது, அவர் சரியா 9 க்கு டிவி ஸ்டேசனுல முறைப்படி புரட்சி நடந்து முடிந்ததை அறிவிப்பார். அதுக்கு முன்னாடி மக்கள் எழக்கூடாது.  அவங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் வேணுமில்ல , அதால காலையில மக்கள் முழிக்கறதுக்கு காரணமான சேவல்களை எல்லாம் இப்பவே நாம கொல்லணும். அதுக்கு தனியா ரெண்டு தோலர்களை அனுப்பிட்டேன். அவங்க எல்லா சேவலையும் கொன்னுட்டதா எனக்கு மெசேஜ் அனுப்பிட்டாங்க”.

மாணிக்கம்  தன் வீட்டு சேவல்கள் கொல்லப்பட்டு கிடப்பதை அப்போது பார்த்தான். அவன்
கண்ணீர் கசிந்தது. புரட்சிக்காகத்தான சேவல்கள் செத்தன என்பதை நினைத்து மனதை தேற்றிக்கொண்டான்.

” தோலர் 7 மணிக்கு காலையில சங்கு ஊதுவானே ?”  ” நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க, அவருக்கு கொஞ்சம் பணத்தைக்கொடுத்து  8.45 க்கு சங்க ஊத சொல்லிட்டேன், நீங்க விடியறதுக்குள்ள எல்லா கொடிக்கம்பத்துலயும் கொடியை ஏத்துனா போதும், காலையில எட்டே முக்கால் மணிக்கு மக்கள் எல்லாம் எந்திரிப்பாங்க, சுத்தியும் சிவப்பு கொடியை பார்ப்பாங்க, ஆச்சரியமா டிவி பெட்டியப் போடுவாங்க. அப்ப நம்ம தோலர் புரட்சி  நடந்து முடிந்ததை முறைப்படிஅறிவிப்பார்.” என்ற படி தோலர் கிளம்ப மாணிக்கம்  “ஒரு சந்தேகம்” என்று நிறுத்தினான் அவரை,

“தோலர் புரட்சின்னா அவ்வளவுதானா? யார்கிட்டயேயும் சண்டை போடவேண்டியதில்லையா?, இப்படி யாருக்குமே தெரியாம புரட்சி பண்ணிட்டமே தோலர், வேற கட்சிக்காரங்க சண்டைக்கு வரமாட்டாங்களா? ”

தோலர் புன்சிரிப்போடு சொன்னார் ” சில விசயங்களை சொல்ல முடியும் பல விசயங்களை சொல்ல முடியாது, புரட்சி என்பது மண்ணுக்கேற்றவகையில் இருக்கணும், ஒவ்வொரு நாட்டுலேயும் , பிரதேசத்துலேயும், பகுதியிலேயும் வேற மாதிரி தான் நடக்கும். புரட்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிஞ்சிடுச்சு, நைட்டு 1 மணிக்கு மேல் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லக்கூடாது அது கட்சி ரகசியம், அதை காலையில டிவியில தோலர் சொல்லுவார், நீங்க கொடியை ஏத்தி முடிக்குற நேரம் எல்லா ஊரிலேயும் இருக்கிற நம்ம தோலர்கள் கொடியை ஏத்தி முடிச்சிருப்பாங்க.  உங்க தாத்தா காலத்துல இருந்து நீங்க பார்ட்டியில இருக்கறதால தான் உங்களுக்கு இந்த பாக்கியம், சரி கிளம்பறேன், வேலையை முடிச்சவுடனே எனக்கு போன் பண்ணி சாப்பிட்டாச்சுன்னு சங்கேதமா சொல்லுங்க நான் புரிஞ்சிக்குவேன்.”

உடனே அவர் கொடுத்த கொடித்துணிகளையெல்லாம் வண்டியில் வைத்துக்கொண்டு பறந்தான், எல்லா இடத்திலும் கொடிகளை கட்டினான். கடிகாரத்தைப்பார்த்தான் அது 8.15 என்றது, போனை எடுத்து பேசப்போகும் போது நினைவு வந்தது, அந்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்குல கட்டவே இல்லையே !!! வண்டியை ஸ்டார்ட் செய்தான், பெட்ரோல் இல்லை,

வண்டியை தள்ளி விட்டு ஓடினான், ஒரு மைல் தூரத்தை 20 நிமிடத்தில் ஓடி வந்திருந்தான் மணி  8.40 என்றது. காலையில்சங்கும் ஊதவில்லை, சேவல்களும் கூவாததால் யாரும் எழ வில்லை. பெட்ரோல் பங்கில் கொடியை கட்டிவிட்டு இறங்கினான். பல சிராய்ப்புக்கள் உடலெங்கும், ஓடிவந்ததன் காரணமாம நெஞ்சு அடைத்தது. மாசெக்கு போன்  செய்யணுமே. மணி 8.45 என்றது.

நாம் போன் செய்ய வில்லை என்றால் ஒரு வேளை புரட்சி டிக்ளேர் செய்யப்படாமல் போய்விடுமோ? அந்த என்ணம் அவன் உடம்புக்குள் சக்தியை கொடுத்தது, ஒரு தேஜஸ் அவனுள் இறங்கியது போலிருந்தது, ஒரு வேளை இதுதான் “வர்க்கதேஜஸ்”ஆக இருக்குமோ? போன் செய்து சொன்னான். எதிர் முனையில் “என்ன தோலர் இவ்வளவு லேட்டாசொல்லுறீங்க, 5 நிமிசம் லேட்டாயிருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா? புரட்சி பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போயிருக்கும் , எனக்கு உங்க கிட்ட ஓரியாட நேரம் இல்லை சங்கூதறவனுக்கு போன் செஞ்சு சொல்லிடுறேன், சீக்கிறம் வீட்டுக்கு போய் டிவியைப்போடுங்க”என்றார்.

மாணிக்கம் ஓடினான் ” மணி 8.59 என்றது வீட்டில் , அதற்குள் சங்கூதி முடித்திருக்க, மக்கள் எல்லாம்
பதறியடித்துக்கொண்டி எழுந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு கொடியாயிருக்க, அவர்களுக்குபுரியவில்லை. எல்லோரும் டிவியப் போட்ட நேரத்தில் மாணிக்கமும் போட்டிருந்தான். சன் டிவியில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது “புரட்சி நடந்து முடிந்தது சிபிஐ கட்சி தமிழகத்தை கைப்பற்றியது, தோலர் பாண்டியின் உரை பின்னும் சிறிது நேரத்தில்ஒளிப்பப்படும்”

தோலர் பாண்டி டிவியில் தோன்றினார். அவர் சிவப்பு நிறம் கொண்ட சட்டை, சிவப்பு பேண்ட், ராணுவ
வீரனைப்போல உடை யணிந்து மார்பில் பல பதக்கங்களை அணிந்திருந்தார்.டிவியில் பேச ஆரம்பித்தார் பாண்டி ” நில மீட்பு போராட்டம் என்ற பெயரில் புரட்சி நடந்து முடிந்து விட்டது, பொதுமக்களும்
தோலர்களும் எல்லோரும் இதை கொண்டாட வேண்டும் இது உங்களுக்கான புரட்சி. நேற்று இரவு 10 மணிக்கு முன்னாள்முதல்வர் கலைஞரும் பின்னர் 12 மணிக்கு அம்மாவும், 1 மணிக்கு மன்மோகன், அத்வானி, சோனியா என எத்தனையோ
பேர்சொல்லியும் நான் கேட்கவில்லை, காரணம் என் உள்மனது என்னை வழி நடத்தியது, நேற்று முன் தினம் மத்திய கமிட்டி ஆவிஆரதா மூலமாக ரணதிவேயிடம் குறி கேட்கப்பட்டது, அவரும் இன்று புரட்சிக்கான நாளை குறித்தார். ஆயிரம் தடைகள்
வந்தாலும் புரட்சிக்கான சரியான நாளை தேர்வு செய்பவனே புரட்சியின் தலைவன், அவ்விதத்தில் நான் புரட்சியின் தலைவனாகிறேன்.

அதிகாலை இரண்டு மணிக்கு வேறு வழியின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையை நமது கட்சி உருவாக்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கடைசியாக சிபிஎம் போன்ற அனைத்து கட்சி MLAக்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து தங்களை சிபிஐ கட்சியில்  இணைத்துக்கொண்டனர், மேலும் கடவுளின் அனுக்கிரகம் போல சில சம்பவங்கள் நடந்தன.கலைஞர், புரட்சித்தலைவி, ராமதாசு, திருமாவளவன், வரதுக்குட்டி,புரட்சிக்கலைஞர், வாண்டையார், பச்சமுத்து உடையார், பெஸ்ட் ராமசாமி, தனியரசு, கிருஷ்ணசாமி ஆகிய அனைத்துக்கட்சி

தலைவர்களும், நமீதா, குஷ்பூ, மனோரமா, ரஜினி, விஜய், ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிக நடிகையர்களும் தங்களை சிபிஐயில் இணைத்துக் கொண்டனர், இது நடந்தது அதிகாலை மூன்று மணிக்கு. பின்னர் புரட்சியின் திட்டப்படி அதிகாலையில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்கு அவர்கள் காலை 8.50 வரை உறங்கவைக்கப்பட்டார்கள், அவர்கள் காலையில் நல்ல செய்தியை கேட்க வேண்டுமென்பதற்காகவே. தற்போது ஆளுனர் மாளிகையை நோக்கி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர செல்லப்போகிறோம்.”

மாணிக்கத்துக்கு அடடா நேத்துதான புரட்சி வராதான்னு யோசிச்சோம், இன்னைக்கே வந்துடுச்சே, அதுக்குள்ளே முடிஞ்சு போச்சே, புரட்சிக்கு முக்கியமான காரணமே நாம ஏத்துன கொடிதான், 5 நிமிசம் லேட்டாயிருந்தாலும் என்னா ஆயிருக்கும்.சன் டிவியில் சிறப்பு செய்திகள் போட்டார்கள் “வணக்கம்” “முக்கிய செய்திகள்…………….. புரட்சி நடந்து முடிந்தது, பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் பாண்டியை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைத்ததை அடுத்து, தமிழக முதல்வராக தோலர்பாண்டி பதவியேற்பு, கம்யுனிசம் முறைப்படி மலர்ந்ததாக அறிவிப்பு……………………… நிதித்துறை அமைச்சராக கலைஞரும், போலீஸ்துறை அமைச்சராக அழகிரியும், திரைப்பட நல்வாழ்வுத்துறை அமைச்சராகசெயலலிதாவும், போக்குவரத்து துறை அமைச்சராக விஜய காந்தும், இளைஞர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இளையதளபதி விஜயும் முதல் கட்டமாக பதவி யேற்றனர். மேலும் பொதுத்துறை சீரமைப்பிற்கான அமைச்சர் பதவி புதியதாக ஏற்படுத்தப்பட்டு அது  பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு தரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.”

மாணிக்கத்துக்கு தன்னை நம்பவே முடியவில்லை. ஆகா புரட்சி நடந்து முடிஞ்சுடுச்சே, அந்த கருமாந்திரம் புடிச்சவெள்ளையன் எங்க போனான் தெரியலையே? சரி அவனை தேடுறது இருக்கட்டும். காலையில சீக்கிரமே எழுந்தாச்சு,புரட்சிக்காக இவன் பட்ட பாடு கொஞ்சமா என்ன எத்தனை கம்பங்களில் ஏறி சிராய்ப்புக்காயங்களுடன், ரொம்பவேகளைத்துப்போய்விட்டான், கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றவாறு படுத்தான்.

ஒரே அழுகை சத்தம், மாணிக்கத்தின் 6 வயது மகள் “புரட்சி” வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். மாணிக்கம் கண்ணை விழித்தான். சுற்றியும் பார்த்தான், அவன் கட்டிய சிவப்புக்கொடிகளை காணவில்லை, அட ! எங்க போச்சு தெரியலையே ? பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான்.  சமையல் செய்து கொண்டிருந்த அவன் மனைவி “ஏ மாமா புத்தி கீது கெட்டுப்போச்சா உனக்கு இப்புடி முழிக்குற! புள்ள அழுவுதே என்னன்னு பாக்கமாட்ட” என்றாள்.  மாணிக்கத்தின் முதல் மகன் ட்ராட்ஸ்கி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

புரட்சியை இந்த புரட்சி கெடுத்துடுச்சே!!!!!!!!. கவலையோடு அவன் புரட்சியை தூக்கினான்.  அடச்சே இது கனவா?  அடச்சே இது கனவா? அவனுக்கு அவனே பதில் சொன்னான் “கனவாயிருந்தது  நனவானா எப்பூடி இருக்கும் ? ”  சப்பு கொட்டியபடி பல் விளக்க சென்றான்.

” இது கூட புரட்சி தானே?, பின்ன கனவில புரட்சிய சாதிச்சதை பாராட்டுனுமா இல்லையா ? எங்க எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அரிவாள் கதிரிருக்க பயமேன்………..கவிதைகள்

செப்ரெம்பர் 27, 2010

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு

ஓகஸ்ட் 30, 2010


2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு டிவியைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைகழக மாணவ, மாணவிகள் வந்த பேருந்து அதிமுக குண்டர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த 3 மாணவிகளையும் வேண்டுமென்றே திட்டமிட்டு கொளுத்தி கொன்று போட்டார்கள் அந்த அதிமுக பாசிஸ்டுகள்.

அடுத்த நாள்   நான் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது ஆங்காங்கே பேருந்துகள் அதிமுக குண்டர்களால் மறிக்கப்பட்டது, பல குண்டர்கள் பேருந்துகளை சேதப்படுத்தினார்கள். ஒருவன் கருணாநிதி தே……….மவன் என்று பேருந்தில் எழுத , மற்றொருவன் கருணாநிதியின் தாயை மிகவும் கொச்சையாக திட்டிக்கொண்டு
போனான். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.

நாங்கள் கல்லூரிக்கு பயணமானோம், வகுப்பில் எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். வேதியியல் ஆசிரியர் வந்தார். அவர் எப்போதும் 60 நிமிட வகுப்பு நேரத்தில்   கடைசி 10 நிமிடம் அன்றைய செய்திகளை கேட்பார் மாணவர்களிடம். அவர் அன்று பாடம் எதுவும் எடுக்க வில்லை, ” மாணவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு கொடூரம், நாய்கள், பரதேசிப்பசங்க என்றார், இந்த பாழாப்போன அரசியல் மாணவர்களை கொன்றுவிட்டது, நமக்கு அரசியலே வேண்டாம்” என்றார். சற்று நேரத்தில் அலுவலக உதவியாளர் சுற்றறிக்கையை கொடுக்க, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

அன்றும் அடுத்த சில நாட்கள் இதேதான் செய்தியாய் தொடர்ந்தது ஊடகங்களில், பல மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் சோகமாய் என்ன செய்வதென்று தெரியாமல் சடங்குக்காக என்று  மவுன ஊர்வலம், அமைதிப் போராட்டம்  என நடத்தினார்கள். ஆனால்  எனக்குத்தெரிந்து எந்த அதிமுக கொடிக்கம்பமோ, அதிமுக அலுவலகங்களோ தாக்கப்படவில்லை.

மக்கள் தாரைதாரையாக கண்ணீர்விட்டார்கள். அதிமுகவின் ஜெயா டிவியோ எல்லாம் டூப் என்றது, சன் டிவி தனது ஆட்களை வைத்து எடுத்த சினிமா என்றார்கள் அதிமுகவினர். கோகிலவாணியின் தந்தை உட்பட பலியான அனைத்து மாணவிகளின் பெற்றோர்களும் ஊடகங்களில்  தீனிக்காக காட்டப்பட்டார்கள். யாரும் இதற்கு காரணமான அதிமுகவை  தடை செய்யக்கோரவில்லை, பல நடு நிலை நாயகர்கள் சொன்னார்கள் “யாரோ செஞ்ச தப்புக்கு கட்சி என்ன செய்ய முடியும்?”

வழக்கு சேலம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது 3 பேருக்கு தூக்கும் 25 பேருக்கு சிறையும் கொடுத்தது நீதித்தாய். பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். அங்கு 2007-ல் தூக்கு உறுதி செய்யப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றமும் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

கடைசியில்  நீதி வென்றிருக்கிறதா?

கடைசியில் மட்டுமல்ல முதலில் கூட  மக்களுக்கான நீதி வெல்வதில்லை, ஏதோ சாராயத்திற்கு ஊறுகாய் போல தவிர்க்க இயலாத தீர்ப்புக்கள் இப்படி வெளிவருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படும் போது மக்களின் மீது வன்முறை ஏவிவிடப்படுகிறது. மக்கள் குடி நீருக்காக, விவசாயம் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போது அவர்ளின் மண்டையை பிளக்கும் போலீசு மக்கள் மீது வன்முறையை ஏவிவிடும் இந்த பாசிச ரவுடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. “தயவு செய்து” கைதாக சொல்கிறது. மாவோயிஸ்டு கட்சியைச்சேர்ந்த சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை தரப்படுகிறது. ஏன் என்றால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாய் என பதில் வருகிறது.

யார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது? கருணா ஆட்சிக்கு வந்தால் செயாவை பிடித்து உள்ளே போடுவது, செயா வந்தால் கருணாவை தூக்கி போட்டு மிதிப்பது, இந்த தெரு நாய்ச்சண்டையில் மக்கள் தலைகள் உடைக்கப்படுவதில்லையா? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  முசுலீம்களை கொன்ற மோடி அத்துவானி கூட்டணி இன்று அரியணையில் ரத்தம் குடிக்க நாக்கைத்தொங்கபோட்டு கொண்டு அலைகிறதே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? அரிசிவிலை, பருப்பு விலை, பெட்ரோல் விலை எல்லாம் ஏகத்துக்கும்
எகிறிக்கிடக்கிறதே !  இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் நொடிந்து தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டார்களே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?

இந்நாட்டின் கனிமவளங்களை சூறையாட இந்திய அரசால் நடத்தப்படும் போரினால் எத்தனை மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள் ? கொல்லப்படவிருக்கிறார்கள்? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?பட்டினியில் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறதே இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? இவ்வளவு ஏன் 26 வருடம் கழித்த வந்த போபால் தீர்ப்பின் யோக்கியதையை நாடறியும்,  20000க்கும்
மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆண்டர்சனுக்கு விடுதலை, காரணமான எந்த அதிகாரியும் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. இதுதான் இந்த நீதியின் யோக்கியதை.

ஏன் போலீசு வெறியன் பிரேம்குமாரால் பாதிக்கப்பட்ட நல்லகாமனின் வழக்கின் கதை சுபமாக உச்ச நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது, ஆம் “ யோவ், 25 வருசத்துக்கு மேல எதுக்குயா இந்த கேச இழுத்துகினு இருக்கீங்க” என்ற பொருமலோடு பிரேம் குமார் , நல்லகாமன் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  மனித உரிமை போராளி அய்யா நல்லகாமனின் போராட்ட வரலாற்றை நாம் அறிவோம். இத்தனை ஆண்டு காலம் தன் குடும்பசொத்தையெல்லாம் விற்ற அந்த நல்லகாமனுக்கும், அவரின் வழக்கை ஏற்று நடத்திய மனித உரிமை பாதுகாப்பு மையமும் கடந்து வந்த பாதை நெடியது.
அது சொல்வது இதுதான் ” இது மக்களுக்கான நீதி அல்ல,  அதிகாரவர்க்க ,பார்ப்பன பனியா, முதலாளிக்கானது”

தெருவிலிறங்கி தண்டனை கொடுப்போம் !

இப்போது வந்திருக்கும் இந்த பேருந்து எரிப்பு தீர்ப்பினை பற்றி பேசுவோம். 3 மாணவிகள் திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டிருக்கிறார்கள். அச்சம்வத்தில் ஈடுபட்ட எல்லோருக்குமே மூவர் உள்ளே இருப்பது தெரிந்துது இருக்கிறது. அக்கட்சியின் பாசிசத்தலைவி இதை திமுகவினர் செய்ததாக சொன்னார், அக்கட்சியினரும், அவர்களின் தொலைக்காட்சியோ இதை நாடகம் என்றது. குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? என்பது கேள்விக்குறியே? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மன்னிக்க, ஓட்டைகளில் உள்ள சட்டங்கள் வழியே அவர்கள் கருணை மனு, இதர வெங்காய மனுக்களை நீட்டிக்கொண்டி திரிவார்கள்.

இப்படியே இழுத்தடிக்கப்பட்டு அவர்கள் தண்டனை காலத்திற்கு முன்னரே செத்தும் போகலாம் அல்லது எதுவும் நடக்கலாம்.மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மட்டுமல்ல, இந்த பாதகத்திற்கு தலைமை தாங்கிய புரட்சித்தலைவியும்தான். அதிமுக என்ற பாசிசக்கூடாரமே தடை செய்யப்பட வேண்டும்.

அப்சல் குரு, அஜ்மல் கசாப் என்ற இரு பலியாடுகளை உடடே தூக்கிலேற்றக்கோரி, முசுலீம் கட்சிகளை தடை செய்யத் துடிக்கும்  தேசியத்தின் வாய்கள் இப்போது இந்தியா முழுக்க வேண்டாம் தமிழகத்தின் ஏதாவதொரு மூலையில் அதிமுகவை தடை செய்யவும், 3 பேரை உடனே தூக்கில் போடக்கோருவார்களா? பல்லாயிரக்கணக்கான ஆண்டர்சனை அன்று மக்கள் கையில் கொடுத்திருந்தால் அவர்கள்
அவனை அப்போதே நரகத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்திருப்பார்கள், ஆனால் காங்கிரசோ அவனை அமெரிக்க சொர்க்கத்திற்கு தனி விமானத்தில்  அனுப்பி வைத்தது. இவர்கள் இதை செய்வார்கள் என்றால் அது குருட்டு நம்பிக்கையாகவே இருக்கும்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஎச்பி போன்ற அகில இந்திய பாசிஸ்டு கட்சிகளும், தமிழகத்தை பார்ப்பன மயமாக்குவதையே லட்சியமாக கொண்டுள்ள இந்து முன்னணி, அதிமுக ……………………கட்சிகளும், இந்திய விவசாயத்தினை , தேசிய தொழில்களை வேரறுக்கும் ஆளும் வர்க்க கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு தலைமை தாங்கும் அனைத்து பாசிச பயங்கரவாதிகளுக்கும் அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும். இதை நாம் தெருவிலிறங்கி வாளேந்தித்தான் சாதிக்க முடியுமே தவிர வேறெதாவது வழி இருக்கிறதா என்ன?

போபால் விசவாயு படுகொலை

ஓகஸ்ட் 30, 2010

போபால் விசவாயுப் படுகொலை

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6

போராடு போரைத்தவிர வேறு வழி இல்லை



போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

ஓகஸ்ட் 12, 2010

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5

தூணிலும் துரும்பிலுமேன்?
மனித ஜீனிலும் திணிக்கப்பட்ட
லாபம்

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4

ஓகஸ்ட் 10, 2010

போபால் விசவாயுப் படுகொலை  கருத்துப்படங்கள் – 4

கருத்துப்படங்கள் - 4

பாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்

மக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்?

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் -3

ஓகஸ்ட் 3, 2010

போபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்

கருத்துப்படங்கள் -3

கருத்துப்படங்கள்-3

சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்

இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்?

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

ஜூலை 30, 2010

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

போபால் விசவாயுப் படுகொலை-2

தாயே !

உன்  குரல் என்னை சுடுகிறது
எங்கள் அடிமைத்தனத்தை
இன்னும் சுட்டுப்பொசுக்கு

போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

ஜூலை 26, 2010

போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

போபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1

ஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம்  அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா?

இது ஒரு காதல் கதை – காதலனா ? தாலியா?

ஜூலை 13, 2010

இது ஒரு காதல் கதை
காதலனா ? தாலியா?

நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. எங்களில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக  அப்படி ஒரு நெருக்கம். சொல்லப்போனால் நாங்கள் எல்லாருமே அரசியலறிவில் புதியதாய் நுழைந்திருந்தோம்.  நாம்இப்போது பார்க்கப்போவது மற்ற இருவரைப்பற்றியல்ல அதோ அவர்தான் கதிர் . அவருக்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது ஆனாலும் நாங்கள் “வாங்க” மரியாதையாகவே பேசிவந்தோம்.

நால்வரும்  ஒரு ஞாயிறு காலை ஒரு வேலையினை முடித்து விட்டு ஜூட் விட ஆரம்பமானோம்.

மற்ற இருவரும் எங்களை இறக்கிவிட்டுவிட்டு வடபழனி சிக்னலிலிருந்து வேறுதிசையில் செல்ல நானும் குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். சரியான வெயில், மண்டையைப்பிளந்தது. கதிர்  சொன்னார். ” ஏங்க கரும்பு ஜூஸ்……….”  கடைக்குப்போய் குடித்தோம்.

நான் கிளம்பும் வேளையில் ” ஒரு பொண்ணுகிட்ட கல்யாணம் பண்ணிக்குறீங்ளான்னு கேக்கலாம்னு இருக்கேன் “என்றார் கதிர் . “என்ன சொன்னீங்க , தெளிவா சொல்லுங்க” என்றேன். “இல்ல என் கூட ஆபிஸ்ல ஒருத்தர் வேலை செய்யறாங்க அவங்கிட்ட காதலிக்கறதா சொல்லிடலாம்னு இருக்கேன்”. எனக்கு அதிர்ச்சி, இருக்காதா ஒரு மாதத்திற்கு  முன் கதிருக்கும் எனக்கும் கடுமையான விவாதம் காதலைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை காதல் அது தன் துணையை தெரிவு செய்வதற்கான வழி. நிலபிரபுத்துவ காலத்தில்  பெண்ணும் பொருளாக மாற்றப்பட்டனர். கடுமையான ஆணாதிக்க சுரண்டலின் தவிர்க்க இயலாத வகையில் பெண் தன் துணையை தெரிவு செய்யத்துணிகிறார், அதுதான் காதல்.

ஆணாதிக்க சமுதாயத்தை மீறி என் துணையை நான் தெரிவு செய்வேன் என்பது ஒரு முற்போக்கான  சுதந்திரமான முடிவு அது வரவேற்கதக்க முடிவும் கூட.  வருகின்ற துணையைப்பற்றி ஏதும் அறியாது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு வழியின்றி வாழ்வதெல்லாம் நல்லபடியாக வாழ்வை கொண்டு போகாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து  பின்னர் செய்யும் மணம்  நீடித்திருக்கும் என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருக்கும்.

ஆணும் பெண்ணும் தன் துணையை தெரிவு செய்வதற்கு காதலைத்தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?ஒரு பெண்ணோ ஆணோ  தன் துணையை தெரிவு செய்ய விடாமல் தடுப்பது எது? சாதி, மதம், பணம், குலம், கவுரவம், அந்தஸ்து போன்றவை தானே. பெரும்பான்மை காதல் திருமணங்களில் இவற்றில் ஏதாவதொன்று உடைபடுகின்றது. ஆனால் கதிரைப் பொறுத்தவரை காதல் என்பதே பொய் அது பெண் சுதந்திரத்திற்கான முதல் படி அல்ல, ஒரே சாதியில் தான், சொந்தத்தில்தான் என் அலுவலகத்தில் காதலிக்கிறார்கள் என்பார். காதலைப்பற்றிய இவ்விவாதம் சில நாட்கள் நீடித்தது.  கடைசியாக காதல் முற்போக்கின் ஒரு அம்சம் என்ற அளவில் மட்டும் அவர் ஒத்துக்கொண்டார்.

அவர் இப்படி கேட்பார் நான் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. விசாரித்தேன் பெண்ணைப்பற்றி அவரிடம். அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் அப்பெண்ணும் வேலை செய்வதாகவும் சொந்தஊர் சென்னையிலிருந்து 150 கி.மீ தள்ளி இருப்பதாகவும் கூறினார். அப்பெண் மறைமுகமாக காதலிப்பது போல் தெரிவதால் தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். தன்னுடைய சாதி மறுப்புக்கொள்கைகள் அவருக்குத்தெரியுமென்றும் கூறினார்.

” உங்களுக்கு எதிரி யாருங்க” என்றேன். “இந்த நாட்டை சூறையாடுற உலக வங்கி ஏகாதிபத்தியம் அப்புறம் ஏகாதிபத்திய கைக்கூலிகள் ” என்றார். ” அந்தப் பொண்ணைக் கேட்டுப்பாருங்க எதிர்த்த வீட்டு பிரமிளாவோ அல்லது பக்கத்து வீட்டு அனிதா இல்லைன்னா கூட வேலை செய்யுற தாரிணின்னு சொல்லுவாங்க. உழைக்கும் மக்களை  ஒடுக்குறவன பத்தி நீங்க பேசுறீங்க ஆனா அந்தப் பொண்ணு கவலை என்னவாயிருக்கும்?  அவ முடி நெறயா வளர்த்திருக்கா, அவ குத்திக்காட்டி பேசுறவ,  அவ அன்னைக்கு புது ட்ரெஸ் போட்டுகிட்டு ரொம்ப பந்தா காட்டுறா இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்கப்போவுதா என்ன?

“அந்தப்பொண்ணு மட்டுமில்ல பையனோ பொண்ணா  இந்தக்காலத்துல எப்புடி இருக்காங்க? இந்த நாட்டு மக்கள் மேல அக்கறையா இருக்காங்களா என்ன?  இந்த மக்கள் மேல அக்கறை வச்சு அதுக்குன்னு போராடுற நீங்களும் மக்களை மதிக்காத ஒருத்தரும் எப்படி இணைஞ்சு வாழ முடியும்? ”

“அவங்கள மாத்தவே முடியாதுன்னு சொல்லுறீங்களா?” இது கதிர் .

“நான் அப்புடி சொல்லலை மாற்றம் ஒன்றே மாறாததுன்னு ஆசான்கள் சொல்லியிருக்காங்க, மக்களை மாற்ற முடியுமின்னுதான்  நாம இப்ப வரை பேசறோம். முதல்ல அந்தப்பெண் கிட்ட உங்களைப்பத்தி பேசுங்க அரசியலை கொண்டு போங்க புத்தகங்களை  படிக்கச்சொல்லுங்க, என் திருமணம் இப்படித்தான்னு, என் வாழ்க்ககை இப்படின்னு உங்கள் மீது ஒரு கருத்தை ஏற்படுத்துங்க, அப்புறம் உங்க காதலை தெரிவியுங்க , அவங்களே முடிவு செய்யட்டும், உங்களை வாழ்க்கைத்துணையா ஏத்துக்கறதா வேண்டாமா என்று”

“சரிங்க” என்றபடி சென்றவரை சில நாட்கள் கழித்து கேட்டேன். தான் காதலை தெரிவித்து விட்டதாகவும் மனசு கேக்கவில்லை என்றும்  அப்பெண்ணும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.”முட்டாள்த்தனமான முடிவென்று நினைத்துக்கொண்டு என்னுடைய சந்தேகம் அவரிடமே கேட்டேன் “எப்புடிங்க அன்னைக்கு அப்புடி பேசுனீங்க அதுக்குள்ள காதல் வலையில விழுந்துட்டீங்க”.

“நீங்கதான சொன்னீங்க காதல்ங்குறது உரிமைன்னு பெண்சுதந்திரத்திற்கானதுன்னு அதான் யோசிச்சு என் கருத்தை மாத்திகிட்டேன் என்றார் ” ஆக  சும்மா கிடந்த சங்கை நான்தான் ஊதி விட்டிருக்கிறேன்.

சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அவர் சொல்லுவார் அந்தக்கூட்டத்துக்கு வரச்சொன்னேன் வந்திருந்தாங்க” சில மாதங்கள் ஓடின. அப்பெண் தன் வீட்டில் காதலை சொல்லி விட்டதால் அவருடைய தந்தை கதிரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.

“சரி போய்ட்டு வாங்க” என்றோம். அவர் மட்டும் அப்பெண் வீட்டிற்கு சென்றிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம் தான். பொண்ணு வீட்டுக்காரனுங்க ஏதாவது செய்திடுவார்களோ என்று. அன்று இரவு வந்த அவர் அப்பெண்ணின் வீட்டில் போய் பேசி விட்டதாகவும் சொன்னார்.

அப்பெண் ஒரு மாதம் கழித்து தன்னுடைய தந்தை கண்டிப்பாக தாலி கட்டவேணடுமென்று சொல்லி விட்டதாகவும்  அப்பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் தி.க என்றும் அவர் தாலி கட்டிவிட்டதால் நீங்களும் தாலி கட்ட வேண்டுமென்று கதிரிடம் சொல்ல ஆரம்பித்தார். பார்ப்பானை வைத்துதான் சாங்கியமென்றும்  கண்டிச­ன்  ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது.

பார்ப்பன இந்து முறையில் பெண்ணை கேவலப்படுத்ததான் தாலி என்றும் பார்ப்பனனின் மந்திரமே பெண்ணை விபச்சாரியாக்குவதுதான் என்று பல முறை சொல்லியும் அப்பெண் கேட்கவேயில்லை. அப்பெண்ணின் அப்பாவுக்கு பணிஓய்வு பெற 4 மாதங்களிருப்பதால் அதற்குள் திருமணம் நடத்த ஏதுவாக விரைவாக பதில் சொல்லுமாறு அப்பெண் கூறினார்.

இந்த சம்பவமெல்லாம் எங்களுக்கு முன்னே நடந்தேறுகிறது. ஒருகட்டத்தில் அப்பெண் “தாலி கட்டுனா என்னை கல்யாணம் பண்ணு………….” என்க ,குமாருக்கும் அப்பெண்ணிற்கும்  சண்டையில் முடிந்திருக்கிறது. நாங்கள் எடுத்த சமாதான முயற்சிகள் பயனற்றுப்போயின. அப்பெண்ணின் ஒரே பதில் “தாலிகட்டி சம்பிரதாயத்தோடுதான் கல்யாணம் அப்படீன்னா பேசுங்க….”

“குறைந்தபட்சம் தாலிகட்டுறது தப்புன்னு தெரியாத அளவுக்கு என்ன வெங்காயம் காதலிச்சீங்களோ ஒரு இழவும் தெரியல, இப்ப என்ன பண்றது” என்றேன்.

“இல்ல நான் தாலியப்பத்தி யல்லாம் பேசியிருக்கேன், சுயமரியாதையா இருக்கணுமுன்னு பேசியிருக்கேன்” என்றார் கதிர்.

“அப்பன் கிட்ட பேசி காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தற அளவுக்கு தைரியம் இருக்கு ஆனா தாலிகட்டாம கல்யாணம் பண்ண முடியலை இல்லையா? வரதட்சணை வேண்டாமெனில் கசக்குதா? அடிமைத்தனம் புடிக்குது உனக்கு சுதந்திரம் கொடுக்குறவன் பிடிக்கலையா? எவன் உன்னை விபச்சாரியா (பார்ப்பன இந்து மதம்) ஆக்குறானோ அவன் மேல வைக்குற நம்பிக்கையை ஒரு சதவீதம் இந்தக்காதலன் மேல வைக்க முடியலேன்னா இதுக்குப்பேர் காதல் கிடையாது. ரெண்டு பேரும் உணர்வுகளுக்கு அடிமையாயிட்டீங்க “என்றேன்.

இன்னொரு நண்பர் சொன்னார் “கடைசியா அந்தப்பெண்கிட்ட பேசிப்பாருங்க, அரசியலை சொல்லிட்டு  பக்குவமடைஞ்ச பிறகு காதலிச்சிருக்கணும். இப்ப என்ன பண்றது. எல்லாம் அப்பெண்ணோட கையில்தான் இருக்குது.”

எனக்கோ நம்பிக்கையில்லை கதிர் மீது ” தாலிகட்டிகிட்டுதான் வரப்போறாரென நினைத்தேன்”

அப்பெண் கடைசி வரை தன் முடிவில் தெளிவாயிருந்து அடிமைத்தனத்தில்  இல்லற வாழவென உறுதியாயிருக்க , கதிரோ   அந்தக்காதலை விட்டார். கதிர்  விட்டார் என்பதை விட அப்பெண் தன் முடிவில் மிக உறுதியாயிருந்தார் என்பது தான் உண்மை. ஒரு மாதம் கழித்து அப்பெண் முதல் அவர்கள் வீட்டிலிருப்பவர் வரை பலரும் கதிரை கெஞ்சிப்பார்த்து விட்டார்கள்,  தயவு செஞ்சு  “தாலி கட்டுங்க” என்று.

அப்பெண் ஆரம்பத்தில் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு பின்னர் காதலித்தால் மீள மாட்டான் என்று கட்டளைகள் விதித்து இருக்கிறார் .  அப்பெண்ணின் கண்ணீர், கோபம் ” எல்லாம் தாலி கட்டுங்க” என்றமைந்திருந்தது. பின்னர் வேறு நபருடன் பார்ப்பன முறைப்படி திருமணமும் செய்து ஈராண்டுகளாகிவிட்டன.

இந்த பார்ப்பன இந்து சமூகத்தின் மேல் அப்பெண் வைத்த நம்பிக்கையில்  கொஞ்சம் கூட தன் குடும்பத்தை மீறி மணக்கத்   துணிந்த காதலன் மீது இல்லை. அப்படியயனில் அந்தப்பெண் பொய்யாய் காதலித்தாரா?  இல்லை அவர் உண்மையாக கூட காதலித்திருக்கலாம் ஆனால் தாலிகட்டாமல் சாதி சொல்லாமல் வாழ்ந்தால் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அந்தக்காதலைலையே தின்று விட்டது. தாலி பெரியதா? காதலன் பெரியதா? என்றபோட்டியில் அப்பெண் கடைசியில் தாலியை கட்டிக்கொண்டு போய்விட்டார்.காதலிப்பது பெரிய விசயமல்ல, இந்த மூடநம்பிக்கை சமுதாயத்தை எதிர்த்து இயங்குவதுதான் பெரியது.

பெண்ணுரிமையை வைத்துக்கொள் என்றால் எனக்குத்தேவையில்லை நான் இடிமையாய்தான் இருப்பேன், அடிமைத்தன வாழவில் அடிமைத்தன பிள்ளையை பெற்று அடிமைக்குழந்தையை அடிமைத்தனமான முறையில் வளர்ப்பேனென்றால் இங்கு என்னதான் செய்ய முடியும். கொண்ட காதலுக்காக கடைசி வரை சுயமரியாதையை கொண்ட அரசியலை இழந்து வாழமுடியுமா என்ன?

இல்லை நீ மக்களை பற்றி சிந்தித்துதான் ஆக வேண்டும். சுயமரியாதையோடுதான் வாழ வேண்டும். நீ சிந்திப்பதற்கு எல்லாமிருக்கிறது, இவ்வுலகே எனக்கு சொந்தம். சுயமரியாதைக்கு, உழைக்கும் மக்கள் உரிமைக்கு , முக்கியமாக பெண்ணுரிமைக்கு  உன்னால் முடிந்ததை எதுவேண்டுமென்றாலும் செய். பெண் ஆணைப்போல சுயேச்சையான பொருளாதாரத்துடன் வாழ அனுமதி அளிப்பதை விட வேறு ஏது சுதந்நிரம்?

ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம் வாரதிற்கொருமுறை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும் எனில் தாலி கட்டித்தான் ஆக வேண்டுமென்று அடிமை விலங்கை ஆசையாய் மாட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு சுயமரியாதையும் , கம்யூனிசமும் கசக்கத்தான் செய்யும் .
சிலருக்குத் தோன்றலாம் தாலிங்குறது ,பார்ப்பானை வச்சு கல்யாணம் பண்றது சாதாரண விசயம் அதுக்கு காதலை விடலாமா? தாலி என்பதோ பார்ப்பன மந்திரமோ ஒரு செயல் மட்டுமல்ல. தாலி ஏன் உருவாக்கப்பட்டது?  இது என்னுடைய பொருள் என்று கணவன் சொல்லுவதற்காக, ஆம் திருமணத்திற்கான அடையாளமாய் பெண்ணுக்கு இருக்கும் தாலி ஆணுக்கு ஏன் இருப்பதில்லை?

ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள ஒரு கூட்டத்தில்  மணமான பெண்களை கண்டறியமுடியும். ஆனால் ஆண்களை முடியுமா என்ன? அவனே சொன்னால் தான்  தெரியும். சரியான விசயமெனில் அது ஏன் ஆணுக்கில்லை. பெண்ணை பொருளாக்கும் எதையும் ஏற்பதற்கில்லை. எனும் போது எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பெண்ணை வைப்பாட்டியாக்கும் மந்திரத்தை ஏற்க முடியும்.

பெண்ணுக்கு விடுதலை தர நினைத்த கதிரின் உண்மையான சுயமரியாதையுள்ள அரசியல்   அடிமைத்தனத்திற்கு கிஞ்சித்தும் விலை போகாமல் நின்றது. சுயமரியாதை அது தனக்குமட்டுமல்ல மற்றவர்களையும் சுயமரியாதையாகவே இருக்கக்கோருகிறது. நாத்திகர்களாக கூறிக்கொள்ளும் பலர் மறு அழைப்பின்போது தாலி கட்டிக்கொள்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் எதுவும் புரியாதது போல் நடிக்கும் ஒரு அடிமையை திருமணம் செய்வது ஒரு உண்மையான பகுத்தறிவுவாதியால் இயலாது.

இப்பாது காதல் என்று நான் பேச ஆரம்பித்தாலே கதிரின் கதைக்கு சென்று விடுகிறேன். அந்த அளவுக்குகாதல் பற்றிய பெரிய படிப்பினையாகிப்போனது கதிரின் காதல். காதல், பாசம்,வீடு,நட்பு,அப்பா,அம்மா,

உறவினர்கள் இதில் எதுவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு அரசியலில் இருக்கும் நேர்மை  இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிப்பது சாத்தியம்தான். அதற்கு முதலில் நேர்மையாக இருத்தல் வேண்டும். கதிர்  என் நண்பன் என்பதில் மிகவும் பெருமைதான்.

மக்களைப்பிளக்கும் சாதியை

மாதரை வதைக்கும் தாலியை

சித்தத்தையே அழிக்கும் சாத்திரத்தை

மொத்தமாய் புதைப்போம்

மகஇக, புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களின் புரட்சிகர மணவிழா பத்திரிக்கையில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற வாசகம்.

I.T-ன் ஆணாதிக்கம்

கதை

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை

ஜூன் 2, 2010

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை


வினவில் வெளியான நர்சிம் குறித்த கட்டுரை மிகுந்த குற்ற உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது. சந்தன முல்லை எனும் பதிவரை நர்சிம் மிகக்கேவலமாக வர்ணித்திருக்கிறான். இச்சம்பவம் வினவினைப் படித்தபோதுதான் அறிய முடிந்திருக்கிறதெனில் பதிவுலகை விட்டு நாம் தள்ளிப்போயிருக்கிறோம் என்பது சூடு வைத்தாற்போல உறைக்கிறது.

ஒரு பெண் பதிவர் மட்டுமல்ல பலர் பாதிக்கப்பட்டு சிலர் எழுதுவதைக்கூட நிறுத்தியிருப்பதை அறியும் போது குற்றவுணர்ச்சிதான் ஏற்படுகிறது. காரணம் ஒரு பெண்ணோ ஆணோ பாதிக்கப்படும் போது/ ஒடுக்கப்படும் போது பேசாமல் அமைதியாயிருப்பது அல்லது கண்டுகொள்ளாமலிருப்பது மறைமுகமாக ஒடுக்குவதற்கு துணை போகிறது. நர்சிம் சந்தன முல்லையை மிகக்கேவலமாக பிறப்பைப்பற்றியயல்லாம் பேசிவிட்டு அதுவும் கதையாக வடித்து விட்டு அவரே மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டும் இடத்தை காலிசெய்து விட்டார்.

பார்ப்பன ஆணாதிக்க வெறிபிடித்த நர்சிமை விமர்சித்து வினவில் கட்டுரை வருகிறது. உண்மைத்தமிழனோ வினவைப் புறக்கணிக்க அறைகூவலிடுகிறார். ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? சாதிப்பிரிவினையை நமக்குள் துVண்டிவிட்டதுதான் காரணம் என்கிறார். இதுவரை சாதிபாராது நட்பு பாராட்டி வந்ததாகவும் வினவு இதை திட்டமிட்டு சீர்குலைப்பதாகவும் கூறும் உ.த “”எதாயிருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ பேசாதே”என்று தீர்ப்பு வழங்க மொக்கைக் குழுவினர் அங்கு சதிராட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாவற்றையும் நாங்களே பேசிக்கொள்வோம் நீ தலையிடாதே


இது ஏதோ ஒரு குடும்பத்துக்குள் வெளியாள் மூக்கை நுழைத்தது போல பதறுகிறார் உண்மைத்தமிழன். அப்படியெனில் உ.த.வும் சந்தனை முல்லையும் ஒரே குடும்பம். சரி ஏண்ணே உங்க குடும்பத்து பபொண்ணான அப்புடி கேவலமா நர்சிம் பேசியிருக்காரு. நாங்களே பேசி தீர்த்துக்குவோம்னு சொல்றீங்குளே. இதுத்தாண்ணே புரியமாட்டேங்குது. நேத்து முளைத்த காளான் எனக்கே சுர்ர்ன்னுனுனுனு ஏறுதே ஏன்ணே உனக்கு கோவமே வரலீயா? சூடு சொரண இல்லாம கிடக்க நீ சரி சொரண தரலாம்னு வினவு பேசுனா எங்க பிரச்சின நீ தலையிடாதேங்குற.

உங்க பிரச்சினைன்னா அது உங்கள் (நர்சிம்& உ.த) தொடர்புடையதாக மட்டும் இருந்தால் தான். இப்பிரச்சினை அதை தாண்டி வந்து விட்டது.ஐமீன் வூட்டுக்கு வெளிய வந்துடுச்சு,  ஸோ இது பொதுப்பிரச்சினை. உ.த அண்ணன் மாதிரி சொரணைக்கெட்டு கிடக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

நீ தலையிடாதே

இதைக் கொஞ்சம் ஆராய்வோம் .  என் மனைவியை நான் கொல்லுவேன் அடிப்பேன் அதை கேக்க நீயார்? என் தங்கச்சி அந்த கீழ்சாதிப் பையனை காதலிச்சா நான் மிதிப்பேன் அதைகேக்க நீயார்?  தலித்துங்களும் நாங்களும் ஒண்ணாத்தான் இருக்கோம் நாங்க அடிச்சுக்குவோம் அதை கேக்க நீயார்?  இந்த ஆத்து தண்ணிய விலை கொடுத்து நான வாங்கியிருக்கேன அதை கேக்க நீயார்?  அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்?

கோக் நிறுவனம் தாமிரவருணியை வாங்கிய போது பு.ஜவில் ஒரு அட்டைப்படம் வந்திருந்தது. அதில் ஒரு குழந்தை தன் உடலெல்லாம் கொப்பளங்களோடு காட்சியளிக்கும். அப்போது படிக்கத்தெரியாத தாய்மார்கள் கூட படத்தைப்பார்த்து செய்தியை அறிந்து கண்ணீர் விட்டார்கள் தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக வசவுகளை பொழிந்தார்கள். உ.த.வின் பார்வையில் அந்தத்தாய்மார்களெல்லாம் கங்கைகொண்டான் கிராமக்களுக்கும் கோக் கம்பெனிக்கும் இருந்த உறவை கெடுத்தவர்களா என்ன?

ராஜபக்ஷே சொல்கிறான் இது எங்களுடைய பிரச்சினை நீ தலையிடாதே என்று?  க.பிரியா போன்றவர்கள் சொல்வார்கள் ”  பாத்தீயா நார்சீமைப்பத்தி பேசுனா ரா பக்¼ க்கு போயிட்டான்”. இது ஆதிக்கவாதிகளின் குரல். தங்களின் ஆதிக்கம் நீடித்துக்கொண்டே இருக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்கிறோம், நீ தலையிடாதே!!!

பாதிக்கப்படுவோர் வாய் திறந்து பேசிட உரிமை இல்லை.  நாங்கள் நண்பர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ விசத்தை விதைக்காதே என்கிறார்கள். இந்த நாங்கள் என்றால் என்ன? நீங்கள் என்றால் என்ன?

உ.த தெளிவாக சொல்லிவிட்டார் க.பிரியா அழகாக கும்மியும் அடித்துக்கொண்டுமிருக்கிறார், நாங்கள் நபர்கள் எங்களுக்குள் யாரையும் அடிப்போம் நீ வந்து கேட்காதே என்று.அய்யா உ.த அப்படியயல்லாம் சொரணைக்கெட்டு எங்களால் இருக்க முடியாது. ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதைகேட்க உறவு முறை அவசியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதாபிமானம் ,  அவனும் பாதிக்கப்படுகிறான் நானும் பாதிக்கப்படுகிறேன் என்ற உணர்வு இருந்தால் போதும் , நக்சலைட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை

ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? தன்னுடைய ஆணாதிக்க சிந்தனையை பார்ப்பன  ஆதிக்கத்தை கேள்வி கேட்பதால் அதை புறக்கணிக்க வேண்டும். போரிலே / மக்கள் பாதிக்கப்படும் போது / சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருக்காதே போராடு, அந்த நாயை அடித்து விரட்டு என்பதால் அவர்களில் குடும்பம் போல் வாழும் உறவு சிதையுமாம். சிதையட்டுமே அந்த மானங்கெட்ட உறவுகள்!!!!

சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருத்தலை கற்றுக்கொடுக்கும் அந்த உறவு முறைக்குப்பேர் என்ன? “அவனைத்திட்டினால் அவன் கோவித்துக்கொண்டு விடுவான், அப்புறம் யார் மச்சி நமக்கு தண்ணி வாங்கி கொடுப்பா? என்ற ஊதாரியின் / பொறுக்கியின் பேச்சுக்கும் உங்களுக்கும் வித்யாசமிருக்கிறதா?  இது வரை சாதிவெறிப்பதிவுகள்/மதவெறிப்பதிவுகள்/ஆணாதிக்கவெறிப்பதிவுகள் இல்லாத இடமாக தமிழ் வலை இருந்ததாகவும் வினவு அதை வலிந்து ஏற்படுத்துலது போலவும் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

வினவை புறக்கணிக்கச்சொல்வதன் நோக்கமே அவர்கள் எல்லாவிதமான ஆதிக்கத்தை எதிர்க்க மட்டும் செய்யவில்லை எதிர்க்கவும் சொல்கிறார்கள், அதுதான் இவர்களுக்கு வலிக்கிறது. எனக்கு விடுதலை வேண்டும் ஆனால் நான் போராட மாட்டேன் என்ற சுயநலவாத ஊற்றுக்கண்ணே இவர்களின் மூதாதையன். அது அப்படியே பரவி நீ எதுக்கு போராடுகிறாய் , அவர்கள் எல்லாவற்றையும் திட்டுவார்கள்,  நம்மைப்பிரிப்பார்கள் என்று பஜனை பாட ஆரம்பித்து விட்டார்கள். வினவை திட்டுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. வினவில் தனிநாபர் தாக்குதல் என்று கிழிய பேசுபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவிலிருக்கும் எழுத்துக்களை பார்ப்பது நலம்.

உண்மைத்தமிழன் & அங்கே கும்மியடிப்போரின் கவனத்திற்கு

மொக்கைமார்களே !!!

மீண்டும் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே வதைத்துக்கொள்ளுங்கள் யாரும் கேட்க வில்லை, மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களோடு தோள் கொடுக்காமல் எங்களால் இருக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மனிதர்கள், சொரணையுள்ளவர்கள்.  அப்புறம் இன்னொரு கும்மி சொல்கிறார் ” இப்படி திட்டுகிறீர்களே நர்சிம் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? ”  இந்த பூச்சாண்டியெல்லாம் சொரணையற்றவர்களின் கண்களில்தான் கண்ணீரை வரவழைக்கும்.

நர்சீமின் யோக்கியதையை ஏன் அவரின் தெருக்களுக்கு கொண்டு செல்லக்கூடாது? இது லீனாவுக்கும் பொருந்தும். உன் கருத்து சரி என்று தானே சொல்கிறாய் மக்கள் மன்றத்தில் உரத்து முழங்கு உன் கருத்துக்களை, எமக்கும் மக்களுக்கும் இடைவெளி எப்போதும் இருந்ததில்லை, இவர்களைப்போல் அங்கு ஒரு பேச்சு இங்கு ஒரு பேச்சு என்று மொள்ளமாறித்தனம் எங்களால் செய்ய இயலாது.  ஆணாதிக்கவாதிகளை தனிமைப்படுத்துவது மட்டும் போதாது, அவர்களை அடித்து விரட்டுவோம். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வினவுக்கு தோள் கொடுப்போம்.

  • ஆணாதிக்க பொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியப்போம் !
  • பெண்களை நுகர்பொருளாக்கும் எழுத்து புரோக்கர்களுக்கு பதிலடி கொடுப்போம் !!
  • தமிழ்மணத்திலிருந்து ஆணாதிக்க பொறுக்கிகளை தூக்கியறியவைப்போம் !!!

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? புதுவையில் போர்க்கோலம்

மே 4, 2010

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே?
புதுவையில் போர்க்கோலம்

இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன்.   காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை. விழுப்புரம் பேருந்து நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்க, பேருந்திற்காக காத்திருந்தேன் வரிசையாய் தனியார் பேருந்துகள். அரை மணி நேரம் கழித்து வந்த அரசுப்பேருந்தில் ஏறினேன். வெளியூர் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களை போராட்டங்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது.

கடைசியாய் நாங்கள் தோழர் பசந்தா கருத்தரங்கில் பார்த்ததுதான். அப்புறம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும் போதும்  எப்படி இருக்கீங்க என்பதில் தொடங்கி, சுவையான நிகழ்வுகள் என போய்க்கொண்டு இருக்கும்.  இம்முறை முக்கியமாக அங்காடித்தெருவைப் பற்றி பேசலாம் என எண்ணியிருந்தேன். பேருந்து விழுப்புரம் டவுனை கடக்கும் போது ஒரு கண் கொள்ளாக்காட்சியைப் பார்த்தேன்.

சிஐடியூ தோலர்கள் கும்பலாக பேனர் பிடித்தபடி பேரணியில் சென்று கொண்டிருக்க, முன்னே பேண்ட் வாத்தியம் சென்று கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டிருக்க, சிஐடியுவோ அதில் வர்க்கப்பார்வையை தேடிக்கொண்டிருந்தது. புதுவையை அடைந்தேன் மணி 12 ஆனது. பேருந்து நிலையத்தில் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதியாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்தேன்.

நண்பர்கள் இருவருக்கும் போன் செய்து கேட்டேன் இருவரும் ஒரே மாதிரி சொன்னார்கள் லேட் ஆயிடுச்சு, எப்புடியும் 3 மணி ஆயிடும். சரி என்ன பண்ணலாம் என்று யோசித்தபடியே  அருகிலிருந்த நபரிடம் பேச்சுக்கொடுக்க, புதுவையில் பீச் இருப்பது தெரிந்தது. சரி பீச்சுக்குத்தான் நடந்து போவோமே என்று கிளம்பினேன். வேடிக்கைப்பார்ப்பதற்கு அல்ல, நேரம் கடக்க ஒரு வழி.

பேருந்து நிலையம் விட்டு நேராய் போய்க்கொண்டிருந்தேன், யாரையும் கேட்க வில்லை, ஆங்காங்கே போர்டுகள்பல்லைக்காட்டின” பீச்-க்கு செல்லும் வழி”. செல்லும் வழியில் தெருக்களின் பெயர்களைப்பார்த்தேன். முதலில் தமிழ், பின்பு ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சு என மும்மொழிகளில் இருந்தன. காலனியின் எச்சங்கள் பெருமையாய் படர்ந்திருந்தன.கடற்கரைக்கென செல்லும் அந்த பிரத்யேகமான அந்த சாலைதான் மினிஸ்டர் ரெசிடென்சியல் ஏரியாவாம். பல புதிய கட்டிடங்கள் கூட பிரெஞ்சுமுறையில் இருந்தன.
அமைதியாக இருந்தது. பீச்சை நெருங்கிய போது மற்றொரு கிளைச்சாலையில் ஏதோ கூட்டமாய் இருந்தது.

நெருங்கிபார்த்தேன் அது சினிமா பட சூட்டிங், கொரியாகாரர் போல இருந்த அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைகாட்சிகளை தெளிவான தமிழில் இயக்கிக்கொண்டிருந்தார். சூட்டிங்கை பார்த்தேன் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அதில் சில முகமூடி அணிந்த நபர்கள் , வெயிலில் துணை நடிகர்கள் பைக்கில் நால்வர், எங்கடா  நாயகனைக்காணவில்லைஎன்று தேடியபோது ஜீவா வந்தார். மற்ற துணை நடிகர்களெல்லாம் வெயிலில் நனைந்து வியர்வையில் ஊறிப்போயிருக்க. ஜீவா செயற்கையாக ஒரு டப்பாவிலிருந்து வியர்வையை தெளித்துக்கொண்டிருந்தார்.

பார்த்தால் உண்மையான வியர்வைவிட ஜீவாவின் மேல் போடப்பட்ட வியர்வை அதிகமாய் இருந்தது,எப்போதும் போலிகள் தான உண்மைகளைத் தின்கின்றன. அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன், அம்பேத்கார் மணி மண்டபம் இருந்தது. கடற்கரையை இரண்டு ரவுண்ட் சுற்றினே. பிரெஞ்சுகாரர்கள் பலர் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நம்மவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன் “அவனோட ஊர்ல போய் என்னன்னு சொல்லுவான், நம்ம காலனி நாட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுவானா”

மீண்டும் கிளம்பினேன். வரும் வழியில் கம்பன் அரங்கத்தில் விழாவாம், கவர்னர், முதல்வர், எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்களாம். இன்றுதான் திறக்கப்படப்போகிறதாம். அதைக்கடக்கும் போது ஒருவர்என்னிடம் கேட்டார்”இன்னைக்கு திறக்கப் போறாங்களாமா?”   “ஆமா இன்னிக்கே போயிடுங்க அப்புறம் உடமாட்டாங்க” என்ற படியே கிளம்பினேன். ஆபாசக்கவிஞனுக்கு கோடிக்கணக்கில் அரங்கம், உழைக்கும் மக்களுக்கோ பட்டை நாமம்.

மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எதிர்பார்த்த நண்பர்கள் வந்து சேர , பேருந்து நிலையத்தில் திரும்பியபக்கமெல்லாம் சிவப்பு நிறமாயிருக்க, நண்பர்களோடு  பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசித்தது, எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை, இறுதியாக
ஒரு ஹோட்டலில் நுழைந்து ஆளுக்கொரு தோசை சொன்னோம், சாப்பிட ஆரம்பித்த வேளையில் பறைசத்தம் கேட்டது. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினோம்.

தோழர்கள் பறையடித்தவாறே இருக்க, மற்ற தோழர்கள் பேருந்து நிலையத்தில் இரு பக்கங்களையும் முற்றுகையிட்டு  முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து ஒருபக்கத்தை மட்டும் விட்டு மற்ற பக்கத்தை முற்றுகையிட்டு  தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு பொறுமையாய் வந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். அனைத்து பேருந்துகளும் முடங்கிப்போயின.

தோழரின் மைக்கைப் பிடுங்கினார் ஒரு  அதிகாரி,  மைக்கிலிருந்து முழக்கம் வருகிறதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அந்த மெத்தப்படித்தவர். தோழர்கள் தங்கள் போர்க்குரலைத்தொடர
கடுமையான டிராபிக் ஜாம். தோழர்கள் பேருந்து போக்குவரத்தை வரிசைப்படுத்தினர். போலீசு வேடிக்கைப்பார்த்தது. கைது செய்ய வரும் வேனை தோழர்கள் டிராபிக் ஜாமிலிருந்து மீட்டு முன்னே கொண்டு வந்தனர். (என்னன்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது !!!!!)

நடுவில் ஒரு சீபீஎம் கொடி கட்டிய ஆட்டோ வந்தது அதில் எம்ஜியார்படத்து வர்க்கப்பாடல்களை ஒலிபரப்பியபடி சென்றார் ஒரு தோலர்.அவர் பார்வையில் அவர் வர்க்கப்போராட்டத்தை சினிமாப்பாட்டுக்கள் மூலம் நடத்திக்கொண்டிருந்தார்.

போலீசின் வண்டிகள் வரிசையாய் நிரம்பின, அவர்களிடம் போதிய வண்டிகள் இல்லை. தனியார் பேருந்துகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு பேருந்துக்கும் அளவுக்கு ஏற்ற தோழர்களை தோழர்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வண்டியில் ஏறினர்.சீறிய முழக்கம் ஆளும் வர்க்கத்தின் காதை கண்டிப்பாய் கிழித்திருக்கும்.   இப்போது கலைக்குழு தோழர்களிடமிருந்து பறை  வேறு  தோழர்களிடமிருந்தது.

அவர்கள் ஆரம்பித்தார்கள். அந்த இசை இறுதிவரை குறையவே இல்லை. அதிலும் மிகவும் ஒரு குட்டித்தோழர் ஆர்வமாக பறையடித்தார். அவரைபார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. இந்த வயதில் நான் என்ன செய்திருப்பேன் என நினைத்தேன்” விளையாடவும் வயிறு முட்டத்தின்னவும் தவிர எதுவும் நினைவில் இல்லை ” வெட்கம் பிடுங்கித்தின்றது.

உன் விரல்களில்  இன்னும்
உரமேற்று  தோழனே
மரத்துப்போன எங்கள்
அடிமைத்தோல்களை
அடித்துக் கிழி

காவல் வண்டியில் ஏற்றவே 6 மணிக்குமேல் ஆனது. தோழர்கள் காவல் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்பட்டார்கள். அங்கேயே பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியாவும் நடந்தேறியது. 8 மணிக்கு போலீசு விடுதலை செய்தது நாங்கள் கிளம்பினோம், ஆளுக்கொரு திசையாய். மறுபடியும் அடுத்த போராட்டத்தில் தானே பார்க்க முடியும்.

மீண்டும் பேருந்தில் ஏறிசென்ற போது வழியில்  பல சிஐடியூ போர்டுகளுக்கு சந்தனம் பொட்டு வைத்திருந்தார்கள். பூசையெல்லாம் காலையிலேயே முடிந்திருக்கும் போல.அதிமுக  மேதின விழா சாலையில் நடந்து கொண்டிருந்தது. தோலர் குண்டு கல்யாணம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவார் தொழிலாளர் உரிமைகள் செயாவின் சுருக்குப்பையில் இருப்பதை விளக்குவார். ஒருவகையில் புதுவையின் இப்போராட்டம் ஒரு தொடக்கமே. “நம்முடைய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்”

உண்மைதான் புதுவையிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள இடத்தில்  பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால் இவ்வளவு சிரமம் போலீசுக்கே இருந்திருக்காது.  பாசிசம் எவ்வளவு கொடூரமானதாயிருந்தாலும் அது முட்டாள்தனமானது. ஆசான் மார்க்ஸ் சொன்னாரே “முதலாளித்துவம் தன் புதைகுழியை தானே தோண்டிக்கொள்கிறதென்று” எத்துணை உண்மை. இந்த முட்டாள் பாசிசம் தானே நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தது. அது இதனால் எதை மூடி மறைக்க நினைத்ததோ அது தானாய் வெடித்து விட்டதல்லவா,   “மகிழ்ச்சி என்பது போராட்டமே”, இனி போராட்டங்களை மகிழ்ச்சியாய் தொடர்வோம்.
அடுத்தப்போராட்டத்தில் அந்த குட்டித்தோழரை பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறேன். கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? இன்னமும் எங்கள் தோல்கள் கிழிக்கப்படவில்லையே.





1.ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!

2.ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

பெண் – சில கேள்விகள்

ஏப்ரல் 3, 2010
பெண் – சில கேள்விகள்

“ஏங்க நீங்க இந்த உலகத்துல நடக்குறதைப்பத்தி தெரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க ? ”  நான் சந்திக்கும் பலரிடமும் தன்னைப்பற்றி / இவ்வுலகத்தைப்பற்றி கவலைப்படாதவர்களிடம் இக்கேள்வியை கேட்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக இக்கேள்விக்கு பெண்களிடம் ( நடுத்தர வர்க்க,மேட்டுக்குடி) வரும் பெரும்பாலான பதில்களோ ஊமையாகவே இருக்கின்றன.
பெண் என்ற வகையில் அவர் ஒடுக்கப்பட்டவருள் ஒடுக்கப்பட்டவர். ஏதாவது ஒரு படி நிலையில் அழுந்திக்கிடப்பவர் என்பது தான் உண்மை. பெண்கள் சரளமாக படிக்கிறர்கள், வேலைக்குப்போகிறார்கள் என்பது மட்டுமே உரிமையாக பார்க்கப்படுகிறது. வேலைக்குப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?
ஒரு பெண் தனக்காக, தன்னுரிமைக்காக சுயேச்சையாக வாழ முடிகிறதா? தான் எந்தப்படத்திற்கு போக வேண்டும், தான் எந்த நகையை விரும்பி அணிய வேண்டும்? தன் கணவனுக்கு எந்த சமையலை விரும்பி செய்ய வேண்டும் ? தன் கணவன் மனம் கோணாது எப்படி நடக்க வேண்டும்? என்பனவற்றை முடிவு செய்யும் பெண்ணால் ஒரு ஆணைப்போல் சுயேச்சையாக வாழ முடிகிறதா?

ஒரு ஆண் திருமணம் ஆகாமலிருந்தால் அது பிரம்மச்சாரி(பெருமை) அதுவே ஒரு பெண்  திருமணம் ஆகாமலிருந்தால் அது கன்னி கழியாதவள்(அவமானம்). யாராவது வம்பு செய்தால் எதிர்த்து கேட்கும் போது / தன்னுரிமையை பேசும் போது “ஆம்பிளை மாதிரி நடந்துக்குறா”. ஒரு பெண் ஆண் மாதிரி இருக்கிறாள் என்பது கேவலம். அதைப்போலவே ஒரு ஆணைக்கேவலப்படுத்த பெண்ணைப்போல இருக்கிறாய் என்கிறது சமூகம்.  ஒரு பெண் எப்படி விமர்சிக்கப்படுகிறார் இங்கு?
செயா ஒரு பாசிஸ்ட் பெண் தான் அவரை நடத்தைகெட்டவள் என விளிக்கும் திமுகவினர் தன் தலைவன் நடத்தைகெட்டுப்போனதை பேசுவார்களா? அல்லது அதிமுகவினர்தான் கருணா ஒரு விபச்சாரி என்று பேசுவார்களா என்ன? ஆண் எனில் அது அவனது திறமை, பெண்ணெனில் அது விபச்சாரம்.

ஒரு பாலினத்தை மாற்றிக்கூறுவது கேவலபடுத்துவதாகவே கூறப்படுகிறது. அதில் கூட எவ்வளவு நயவஞ்சகம்? பெண்ணே நீ அடக்க ஒடுக்கமாக இரு இல்லையேல் அது கேவலம் (அடிமைத்தனத்தோடு இரு). ஆணே நீ நெஞ்சை நிமிர்த்தி குடும்பத்தை அடக்கி ஆள் (அடக்கு) இல்லை என்றால் அது கேவலம்.
ஆக அவரவர்கள் அவரவர் இடத்திலே இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆண் எதற்கும் கோபப்பட வேண்டும், பெண்ணை அடிக்க வேண்டும், ஊர் மேய வேண்டும், யாருக்கும் பதில் சொல்லாமல் வாழ வேண்டும். அவன் அதை மீறி நான் ஏன் ஒரு பெண் கவரும் படி நடந்து கொள்ள வேண்டும்? எனக் கேட்டால் “டேய் இது ஆம்பிளைங்க சமாச்சாரம்”.

பல வருடங்களுக்கு முன் வேலை செய்த இடத்தில் பெண்கள் ஒடுக்கப்படுவதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன் என்னைத்தவிர மற்ற நால்வரும் எனக்கு எதிராக பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண்ணும் அடக்கம். அந்தப்பெண் சொன்னார்”என்னவோ நீங்க ஒரு பொண்ணைக்கூட சைட் அடிச்சதே இல்லையா?”. நான் கொஞ்சம் பேசி விட்டு சொன்னேன்” நீங்க பெரிய யோக்கியமா பேசுறீங்களே நீங்க எத்தனை பேரை பார்க்குறீங்க தினமும் ? ” உடனே அப்பெண் அழ ஆரம்பித்தார். ” என்னப்பார்த்து இப்படி கேக்குறீங்களே” என்றவுடன்
நான்
சொன்னேன் “ஆம்பிளை சைட் அடிக்குறது சரின்னு சொல்லுற உங்களால ஏன் பொம்பளை ஆணை ரசிக்குறது சரின்னு சொல்ல முடியல?”
பெண்ணை ஒடுக்கு!! அப்போதுதான் நீ ஆண் ஏதோ ஒரு வகையில். எதிரில் பெண் வந்தால் பார்க்க வேண்டும், நாயைப்போல பின்னாலேயே அலைய வேண்டும், அவரை கவர்வதற்கு என்னவெல்லாமோ அனைத்தையும் செய்ய வேண்டும்.  ஆண் என்றால் பெண்ணை “கரெக்ட்” செய்ய வேண்டும். ஒருவரையா?  “இல்லையில்லை பார்க்கும் அத்தனை பேரையும் ” திருமணம் ஆனால் மனைவிக்கு பூ அல்வா எல்லாம் வாங்கித் தரலாம் சுதந்திரத்தைத் தவிர. அதுதான் ஆம்பிளைக்கு அழகு.
கல்லூரிக் காலத்தில் ஒருவன் சொல்வான் ” பையன்னா எல்லா பொம்பளைங்களையும் பார்க்கவேண்டும் ? கல்யாணம் ஆனாலும் சரி ஆகலைனாலும் சரி பார்க்கணும் இல்லைன்னா அவன் ஆம்பிளை இல்லை ” . இப்போதும் அவன் தன் மனைவியோடு தான் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். அவன் சொன்னது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
எது அழகு ? எது நல்லது ? எது தேவை ? எல்லாவற்றையும் இந்த ஆணாதிக்க சமுதாயமே முடிவு செய்யும். அப்படியெல்லாம் சொல்ல முடியாது, எல்லாம் மாறிகிட்டே வருது. எது மாறிவிட்டது. வேலைக்குப்போனாலும் தாலி செயினாக மாறியிருக்கிறது என்பதைத்தவிர வேறெதாவது
மாற்றத்தைக்காட்ட முடியுமா? மாறிப்போன காலத்தில் ஏன் தாலி? எதற்கு மெட்டி? இந்தக்கேள்விகள் எங்கே எழுகிறது ? படிப்பிற்கும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. பள்ளியிலே , கல்லூரிகளிலே, அலுவலங்களில் பெண்ணடிமைத்தனம் நடக்காமலா இருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் பார்வை ஆணாதிக்கமாக இருக்கும் போது மேற்கண்ட இடங்களில் மட்டும் எப்படி இல்லாமல் இருக்கும்?
கல்யாணம் ஆகியும் தாலிக்கட்டாமல் வாழ்ந்தால் அது விபச்சாரியாகத்தான் இருக்க முடியும் ” இது மெத்தப்படித்த ஐந்திலக்கவாதியின் பேச்சு. சொல்லப்படுகிறதே கல்வியில் முன்னேறிவிட்டால் எல்லாம் மாறிவிடுமென்று. மாறிவிட்டதா பெண்ணடிமைத்தனம்.நான் திருமணம் செய்து கொண்டேன் என்பதை ஏன் இன்னொருவனுக்கு தெரிவிக்க வேண்டும்? தெரிவிக்க வேண்டும், தெரிவித்தே ஆக வேண்டும் இல்லையென்றால் பாதுகாப்பு இல்லை. ஆணைப்பார்த்து திருமணம் ஆனவனா இல்லையா என்பதை கண்டறிய முடியாதே? அப்படியெனில் பாதுகாப்பு அவனுக்கு வேண்டாமா? பாதுகாப்பை நிர்ணயம் செய்பவனே அவன் தானே.

தான் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறோம் என்பதை பல பெண்களும் உணர்வதாயில்லை /  உணர்ந்தாலும் அதை தெரிவிப்பதாயில்லை. பிறப்பு முதல் பார்ப்பான் ஓதும் மந்திரத்திலிருந்து
ஒவ்வொன்றையும் எவ்வளவு அழகாய் பெண்ணை அடிமையாக்குவதற்கு வைத்திருக்கிறார்கள் ? தெரிந்திருந்தும் இது ஏன் உனக்குபுரியவில்லை?
“இந்த உலகத்தைப்பத்தி நான் ஏன் தெரிஞ்சிக்கணும்? தெரிஞ்சி என்ன ஆகப்போவுது? ஒண்ணும் மாத்த முடியாது. என்னோட கணவர் நான் துணிய துவச்சா அவர்தான் காயப்போடுவார், கடைக்கு அவர்தான் போவார், இவ்வளவு பண்றாங்க இல்ல”  உரிமை என்றால் என்னவென்றே தெரியாமலிருக்கும் உன்னைப்பார்த்து சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை.
எனக்கு பிடிச்சுருக்கு அதான் புர்கா போடுறேன் எனக்கு பிடிச்சுருக்கு அதான் தாலி கட்டிக்குறேன்,தோடு போடுறேன், கொலுசு மாட்டிக்குறேன் எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு. ஏன் உனக்கு பிடித்தது? எல்லாம் உனக்கு பிடிக்கவைக்கப்பட்டிருக்கிறது.  எனக்கு பிடித்திருக்கிறது என எல்லாப்பொருளையும் ஏற்கலாம், இவனைப்பிடித்திருக்கிறது என காதலனை சொல்லும் போதுதான் எது இனி உனக்கு பிடிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுவார்கள்.
” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக ”  என்று பலரும்தான் சொல்கிறார்கள். செயலில் ஈடுபட என்னத்தயக்கம்? இந்தக்காலத்திலும் பல பெண்கள் பள்ளிகளுக்குப்போனதில்லை, வெளியே போக அனுமதியில்லை. ஆனால் நீ அவ்விசயத்தினை பொறுத்த மட்டில் கொஞ்சம் சுதந்திரமாகத்தானே இருக்கிறாய்? உன் விடுதலையை அறிய /  பெற தடுப்பது எது? உன் பாதிப்பை உரக்கச்சொல்வதை எது தடுக்கிறது?
” அப்படி சொன்னால் இந்த சமுதாயம் எங்களை விமர்சிக்கும் எங்கள் பாதிப்பை சொன்னால் கேலி செய்யும்” நீ இந்த அளவுக்கு உரிமைகளைபெற்றிருக்கிறாயே அதைப்பெற பாடுபட்டவர்களை இந்தச்சமுதாயம் எப்படி கேலி பேசியிருக்கும்? மனதை வதைத்திருக்கும்? அவர்கள் போராட வில்லையா? உனக்கு உரிமைகளைப்பெற்றுத்தரவில்லையா?
நீ பயப்படுகிறாயே அந்த பயம் தான் அந்த சங்கிலி அதன் கண்ணிதான் அடிமைத்தனம் . உன்னைக் கேலி பேசுவார்கள் நீயும் திருப்பி பேசு, கேள்வியைக்கேள், தன் தாயை தன் சகோதரியை தன் மனைவியை அடிமையாய் நடத்தும் இச்சமுதாயத்தை கேலி செய். பெண்ணிற்கென்று தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. செல்லும் ஒவ்வொரு அங்குலத்திலும் வதைக்கப்படுகிறார். இதை எப்படித்தான் தீர்ப்பது?
அமைதியாய் இதைப் பேசாமாலே இருந்தால் போதுமா?

” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக………. ஆனால் எங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர் ”  உன் உரிமையைப்பற்றி பேசுவது நீ சுதந்திரமாக வாழ்வது உன் அப்பனின் கண்டிப்புக்கு ஆளாகுமா?
அப்படியெனில் நீ கண்டிப்பாய் பேசித்தான் ஆக வேண்டும். உன் அப்பன், சகோதரன் ,கணவன் எல்லோரையும் நீ  கண்டித்துதான் ஆக வேண்டும். போராடாமல் எதும் கிடைத்ததாய் சரித்திரம் இல்லை. போராடுவதற்கு முன் அதற்கு தயாராகவாவது இருக்க வேண்டும் இல்லையேல் அதைப்பற்றி கேட்கவாவது தயாராயிருக்க வேண்டும்.
ஒன்றை இழக்காமல் ஒன்றைப்பெற முடியாது. நம் அடிமைத்தனத்தை இழக்காது உரிமைகளைப்பெற முடியாது. சாதி என்ன சொல்லும் ? வீட்டில்என்ன சொல்லுவாங்க ? என சாக்கு சொல்லிக்கொண்டிருந்தால் எதையாவது பெற முடியுமா என்ன? சினிமாவுக்கு போகலாம், பார்க்கிற்கு போகலாம் ஆனால் உன் உரிமையைபேசும் ஒரு பத்திரிக்கையை படிக்கமாட்டேன், பெண் உரிமையைச்சொல்லும் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அடிமைத்தனத்தைத்தவிர


தொடர்புள்ள பதிவுகள்




சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்

ஜனவரி 30, 2009

சுடாத  நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்

neru-copy

நேற்று காலை சுமார் 11 மணியளவில்  முத்துக்குமார் எனும் இளைஞர் தன் உடலில் தானே தீயை வைத்துகொண்டார்.ஈழத்திலே கொத்து கொத்தாய் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் போது தன்னால் மட்டும் எப்படி இவ்வுயிரை கையில்  வைத்திருக்க முடியும்  என்ற படி செத்து விட்டார் அவ்விளைஞர், அவர் நமக்கு கோடிட்டு காட்டிய செய்தி ஈழத்தமிழர்  தினமும் சிங்கள ஓநாய்களால் கொல்லப்படுகிறார்கள் என்பதும் ,செம்மணி புதையல் போல பல புதையல் கள் வெளிவர இருக்கின்றன என்பது மட்டுமல்ல,வேறொரு முக்கிய செய்தியும் இருக்கிறது.”ஆமா இலங்கையில குண்டு போட்டுட்டாங்க என்ன பணறது  நேரமாச்சு  \கோலங்கள் வையுடா” என  பூச்சாண்டிகள் பலருக்கும் தான் செத்தாலாவது மானம் வருமா என உயிரை விட்டார் முத்துக்குமார், ஆனால் மானம் வந்த பாடில்லை.

ஒரு மனிதன் தனது கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக,தமிழர்களுக்கு சொரணை கொடுப்பதற்காக தன் உயிரை கொடுத்தாக வேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறான்.உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன,இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ  வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன .டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில்  சுற்றிபார்க்க வருபவர்களும்,தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும்  குறையவில்லை.தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.

செத்துப்போன முத்துக்குமார் மட்டுமல்ல தாளமுத்து நடராசன் போன்றோரும் சும்மா சாகவில்லை,சும்மா தான் செத்துப்போனதாக இன்றைய பொடுசுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன, முத்துக்குமாரின் மரண வாக்கு மூலத்தை படித்துப்பாருங்கள்.எவ்வளவு சிந்திருத்திருந்தால் அப்படி ஒரு கடிததை எழுத முடியும்.பலரு சொல்வதுண்டு தற்கொலை ஒரு முட்டாள் தனம் .

ஆனால் ஒரு தற்கொலை ஒட்டு மொத்த தமிழகத்தை அவமானத்தால் கூனிகுறுக வைத்திருக்கிறது,அமைப்புகள் நடத்தும் கூட்டத்துக்கு  10,20 என நன்கொடை வழங்கிவிட்டு நானும் ஈழத்தமிழனின் துக்கத்தில் பங்கு கொண்டேன் என கண்ணை கசக்குவதால் கிடைத்திடுமா விடுதலை,ஈழத்தமிழனின் சாவுச்செய்திகளோடு நடிகையின் படுக்க்யறை செய்திகளைகலந்து தந்த பத்திரிக்கைகள் எவ்வித இடையூருமிலாமல் தனது சர்க்குலேசனை உயர்த்திக்கொண்டே போகின்றன . ஈழத்தமிழன் இப்போது பிணமாகிவிட்டான் அவன் விற்பனைக்கு ஒரு நாளுக்கு மேல் உதவமாட்டான்.தனது தன் மானத்தை இழந்து வாழும் மானங்கெட்ட தமிழர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க.

செங்கல் பட்டு சட்டகலூரி,சேலம் சட்டகல்லூரி மாணவர்கள் என சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மாணவர்களோ தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்,ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழரை காப்பாற்று என முழங்கியாயிற்று..ஆனால் இது ஏன் நடைமுறைக்கு வரவில்லை? இலங்கைக்கு சென்ற பிரணாபோ தனது முழு ஆதரவை தெரிவித்து விட்டார்.கருணவோ முதுகுவலி என்று குப்புறக்கிடக்கிறார்,மத்திய அரசோ மிக வருத்தத்துடன்  கவனிக்கிறது,னம் செஇதிகளை வருத்ததுடன் கவனிக்கும்  அதே கண்கள் தான் சிங்கள வெறியன்  ஈழத்தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் போதும் ரசிக்கின்றன.

இந்த நிலையில் நம்முடைய போராட்டங்கள் எப்படி இருக்கின்றன.இன்னும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் அதுவும் “இந்திய அரசே தலையிடு”. வெங்கட்ராமன் செத்துப்போனதற்கு ஒரு வாரம் துக்கம்  கொண்ட மத்திய அரசு  கொத்து கொத்தாய்  கொல்லப்படும் தமிழர்களின் பிணங்களை பார்த்து முகத்தை திருப்பிக்கொள்கிறது.நமது போராட்டங்கள் பலனளிக்காததற்கு காரணமே ஈழப்போரின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தாதே..இந்திய அர்சு ஈழத்தில் தலையிட்டு போரினை நடத்திக்கொண்டிருப்பதால் தால் சிங்களன் கொலைவெறியாட்டம் போட முடிகிறது.
இந்திய அரசை எதிர்க்காத நமது போராட்டங்கள்  ஈழத்தமிழனுக்கு வாய்க்கரிசியாகவே மாறும்.
எந்த ஓட்டு கட்சியும் இந்தியத்தை அம்பலப்படுத்த மாட்டார்கள் ஏனெனில் இவர்கள் தான் இந்த அரசை தூக்கி தாங்கி பிடிப்பவர்கள்,

முன்னரே சொன்னது போல முத்துக்குமார் சொல்லாத முக்கிய செய்தி  எது தெரியுமா ?. இனியும் கெஞ்சி கொண்டிருப்பதால் இந்திய அரசு கேட்காது,காது கேட்காதவன் அல்ல அப்படி நடிப்பவன் அவனுக்கு செவுளில் அறைந்து தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்.1965 களில் தீவிரமான மக்கள் போராட்டமே இந்தியை செருப்பால் அடித்து துரத்தியது.மத்திய அரசினை உண்ணாவிரதத்துக்கும் ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் கவனத்தை திருப்ப முடியாது.எப்போது பாதிக்கப்படுகிறானோ அப்போது தான் அவனும் திரும்புவான் .மத்திய அரசு பாதிக்கப்படுமாறு எவ்வித போராட்டமும் இன்னும் துவக்கப்படவில்லை.அப்படி துவக்கப்படுமெனில் அது போராட்டமாகயிராது,போராக மாறும்.

ஆம் போர்
தான் தேவை இப்போது இந்தியை எதிக்க பெரியார் செய்தாரே கிளர்ச்சி  அப்படிப்பட்ட   கலகம் தான் தேவைதானே தவிர கண்ணீர் துளிகளுக்கு இங்கு இடமில்லை.போர் இந்திய தேசியத்துக்கு மட்டமல்ல இன்னும் கிரிக்கெட்ட் பார்த்து பல்லைகாட்டுபவனுக்கும்,தியேட்டர் வாசலில் கால் கடுக்க நிற்பவனுக்கும்,டாஸ்மாக்கில் முதல் ஆளாய் போணி செய்பவர்களுக்கும்,இன்னமும் “மேச ராசி நேயர்களே” என ஊளையிடுபவர்களுக்கும் எதிராகத்தான் தொடங்க வேண்டும்.போரை நம்மிடமிருந்தே தொடங்குவோம். முடிவாய் தெரிவியுங்கள் நீங்கள் யார் பங்காளியா? பகையாளியா?