Posts Tagged ‘கவிதைகள்’

மாற்றங்களும் சில கற்களும்

ஏப்ரல் 28, 2011

மாற்றங்களும் சில கற்களும்


பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்

முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன

வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி

நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ

மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்

டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்

சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்

வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன

இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

ஏப்ரல் 17, 2011

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி


கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.

கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

எம் வாயில்
பீயைத் திணிக்கவும்

ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்

ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்

உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்

ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்

என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை

ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி

பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !

அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி  நக்சல்பாரியே உன் வழி

இது பதினாலாவது தேர்தல்

ஏப்ரல் 9, 2011

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

ஏப்ரல் 3, 2011

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

 

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

வழிகளும் விழிகளும்

மார்ச் 24, 2011

வழிகளும் விழிகளும்

அன்று நீங்கள்
கொல்லப்பட்டிருக்கலாம்
மகாத்மாக்களின் ஆசியோடு….

உங்கள் குரல் வளைகளை
யுடைத்த அதே அன்னியச் சுருக்குகள்
எம் விடுதலையை யுடைக்க
காத்திருக்கிறது….

மார்ச் 23

மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டதாம்
இல்லை
இல்லை
இல்லவே இல்லை

உடல்கள் விதைகளாக
விண்மீண்களாக
எங்களின் குருதியாக
உணர்வாக
மாறிய நாள்

கைராட்டைகளின் முகமூடி
கிழித்து வஞ்சகர் தம்
குலை நடுங்க
தூக்குக்கயிற்றை
முத்தமிட்ட
தியாகத்தின் விழிகளே!

அன்னியனுக்கு அடிபணிய
மறுத்த
விதையின் வழிகளே

உங்களுக்கெங்கள் வீரவணக்கம்

கடப்பாரைகளும் சில கனவான்களும் – டி.6

திசெம்பர் 5, 2010

dec6_copy

கடப்பாரைகளும் சில கனவான்களும்

மை லார்ட்!!!

ஆர்டர்! ஆர்டர்!! ஆர்டர்!!!

இடித்த கடப்பாரைகள்
அமைதியாய் சொல்கின்றன
“சுத்தியலிருக்க இனி நமக்கு வேலை இல்லை”

குரல்வளையை அறுத்த
கட்டாரிகள் சொல்கின்றன
“வேந்தே! உமது பேனாக்கள்
எம்மை விட கூரானவை”

கருப்பு அங்கி காவியாய்
முழுமையடையும் நேரமிது

இனி கரசேவை தேவை இல்லை
யாத்திரைகள் தேவையே இல்லை
அத்துவானியும் மோடியும் தேவை இல்லை

கருப்புச்சட்டை கனவான்கள் போதும்
கச்சிதமாய் காரியம் முடிக்க

திண்ணியம்
மேலவளவு
அரியானா
மகாராட்டிரக்கொடுமைகள் எல்லாம்
இனி பைசல் செய்யப்படும்

கவனத்தில் கொள்ளுங்கள்

கருப்பு அங்கி காவியாய்
முழுமையடையும் நேரமிது


அம்மணம், டாஸ்மாக் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்

ஒக்ரோபர் 20, 2010

அம்மணம், டாஸ்மாக்  மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்

மாலை வேலை
ஒரு வேளையாய் நான்
தெருவிலிருக்க தெரு நாய்க்கும் எனக்கும்
போட்டி யார் வேகமாய் செல்வதென ?

போட்டி ஒன்று தான்
போட்டியாளர்கள் பெருகி விட்டார்கள்
தெருவில் இருக்கும் அனைவருக்கும்
நான் போட்டியாளன்
ஆடு மாடு குதிரை
எருமை பன்றியென அனைத்தும்
என்னோடு தெருவில்

நடப்பதும் ஓடுவதுமாய்
ஒன்றை நான் முந்த மற்றொன்று
என்னை முந்த  என்னிதழ்
விரித்த புன்னகை
காணாமல் போனது
”டேய் வாடி, ஏண்டி நீ வாடா”

பாலினம் மாறுபடுகிறதே
என்று நான் திரும்ப
அது பாலினம் மறந்து
நின்றது  ஒன்று
பிறந்த நாட்டில் பிறந்த ஊரில்
பிறந்த மேனியாய் நிற்பது தவறா?
அவனுக்குள் கேள்விகள் முளைத்திருக்கலாம்

போதையில் ஒரு குத்தாட்டத்தோடு
மல்லார்ந்து வீழ்ந்தான்
சூரியனுக்கு குத்திய குத்து
தெருவே இனி டாஸ்மாக் சொத்து

மாதம் மும்மாரி பொழிந்ததாம்
ஒருகாலத்தில்
பாலாறும் தேனாறும் ஓடியதாம்
ஒரு காலத்தில்

அந்த ஒரு காலத்தைக் கொண்டு வர
காங்கிரசு முதல் போலிகள்
வரை போட்டியோ போட்டி
போட்ட போட்டியில்
கிழிந்தது விட்டது தமிழனின் வேட்டி
வந்து விட்டது டாஸ்மாக் புட்டி

சாக்கடை நீர்  ஒதுங்கியோடுகிறது
இவன் எச்சில் படாதவாறு

பன்றிகளின் இடம் இப்போது
பச்சைத்தமிழனுக்கு

என் போட்டியை விடுங்கள்
தமிழனுக்கு போட்டியில்லை
கலைஞர் புண்ணியத்தில்
அவனுக்கு போட்டியும் இல்லை


அம்மணமாய் நிற்கிறான் ராஜாதி ராஜ
ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க
ராஜகுல திலக்க்க்க்க்க்க்க………

அவண்தாண்டா

தமிழன்

அரிவாள் கதிரிருக்க பயமேன்………..கவிதைகள்

செப்ரெம்பர் 27, 2010

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡ – சும்மா அதிருதுல்ல

ஜூலை 21, 2010

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள்  வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக  தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. சுமர் 2000 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.  தொழிற்சாலை என்றாலே தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்றாலே சச்சரவு என்றிருக்கும் பல
லட்சக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இதுவொன்றும் விதிவிலக்கல்ல. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலைக்கு செல்லும் ரோடு அது வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அரிவாள் போலவே இருக்கும்.

இந்த தொழிற்சாலையில் பெரிய சங்கம் என்றால்  அது சிஐடியூ(மத்திய சங்கம்) சங்கம் தான். தொழிலாளர்களின் பிரச்சினை என்றாலே மத்திய சங்கம் தான் முன் வந்து பைசல் செய்யும். ஏதாவது பிரச்சினை அதிகமென்றால் போதும் “தொழில் அமைதியை கெடுக்காதே” மத்திய சங்கத்தால் போஸ்டர்
ஒட்டப்படும். அவ்வளவுதான் முதலாளிகள் “ஆடி”ப்போய் விடுவார்கள். சங்கத்தின் தலைவர் அடிக்கடி சொல்லுவார் நம்ம சங்கம் இங்க வலுவா இருக்குறதால தான் நமக்கும் முதலாளிக்கும் அதிகமா பிரச்சினை வரதே இல்லை”.

தீபாவளி காலங்களில் போஸ்டர்கள் மத்திய சங்கத்தால் ஒட்டப்படும்.  வர்க்கமாய் தொழிலாளர்களை அணிதிரட்டச்சொல்லி அழைப்பு விடுக்கும். கடந்த முறை கூட போனஸ் பேச்சு வார்த்தையின் போது  நம்ம தோலர் தானே சிறப்பாக செய்து முடித்தார். ஓவ்வொருமுறையும் பண்டிகைகளின் போதுபோனஸ் கோரி  தோலர்களின் பணி சிறப்பாக இருக்கும். நான் கூட இந்த சங்கத்துல தான் இருக்கேன்.எனக்கு வயது 30 தான்
ஆகுது. நான் கேட்பேன் மத்திய சங்க தோலர்கள் கிட்ட “வித்யாசமா போராட்டம் பண்ணக்கூடாதா?” அதுக்கு பொறுப்புத்தோலர் சொல்வார் ” தோழர் உங்க வயசுதான் என்னோட அனுபவம், எதுக்கும் அவசரப்படக்கூடாது”.

கடந்த முறை போனஸ் பிரச்சினையின் போது சுமுகமாய் முடித்து விட்டு வந்த போது என்னிடம் சொன்னார் “அவசரப்பட்டா வெற்றிய சாதிச்சு இருக்க முடியுமா?” எப்பவாவது வேலை நிறுத்தம் என்று மத்திய சங்கம்
சொன்னால் கூட சிஐடியூ-ன் பல தோலர்கள் தவறாமல் வேலைக்கு வந்து விடுவார்கள்.  ஆரம்பத்தில் நான் எல்லா போராட்டங்களில் கலந்து கொள்வேன். மற்ற தோலர்களின் வர்க்க உணர்வு எல்லைக்குள் இருப்பதை அறிந்து நானும் அளவோடு இருக்கிறேன். “எதுவா இருந்தாலும் அளவோடுதான்ன்னு சும்மாவா சொன்னாங்க?”

அன்னைக்குகூட பேருந்தில் நானும் சங்கத்தோலரும் பயணித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிறுத்தத்தில்ரெண்டு பசங்க ஏறினார்கள் பேருந்தில் கையில் புத்தகங்களோடு.”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………..” என ஆரம்பித்த அந்த ஒல்லியான, கருத்தப்பையன் உலக நடப்பு, இந்துமதம், போலி கம்யூனிசம் என்று எனக்கு புரியாத பலவற்றையும் பேசிக்கொண்டே போனான் கடைசியாக புதிய ஜனநாயகம்ன்னு ஒரு புத்தகம் அதையும் வித்தாங்க. அந்தப்பபையன் என்கிட்ட கேட்ட போது நான் 7 ரூவா கொடுத்து அப்புத்தகத்தை வாங்கினேன்.

பேருந்து நகர்ந்தது. என்னவோ தோலர் செமக்கடுப்பில் இருந்தார். நான் கேட்டதுக்கெல்லாம் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தார். புத்தகத்தின் தலைப்பில் போலிக்கம்யூனிஸ்டுகளின் துரோகம் என்று போட்டிருந்தது. அட நம்ம தோலர்(அச்சுதானந்ந்தன்) படம் போட்டிருந்தது. நான் தோலரிடம் கேட்டேன்”தோலர் அவங்க யாரை போலி கம்யூனிஸ்டுன்னு சொல்றாங்க?” “தெரியலை ” என்றார். “என்னா தோலர் இப்புடி சொல்றீங்க? நம்ம அச்சு தோலர் போட்டோவை போட்டுருக்காங்களே”

” நீங்க மொதல்ல  எதுக்கு அந்த புக்க வாங்குனீங்க, அவங்க நக்சலைட்ஸ், அவங்க கருத்த ஏன் நீங்க புடிச்சுகிட்டு தொங்கறீங்க?”,

“தீவிரவாதிங்க எல்லாம் பகிரங்கமா பேசுறாங்களா, போலீசு இவங்கள பிடிக்காம இருக்கு, அவன் சொல்றபடி பார்த்தால் கேரளாவில அச்சு தோலர் இனவெறி பிடிச்ச நபரா?,ஈழப்பிரச்சினையில  இந்திய போலி சனநாயகத்தை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் கூட பண்ணல” நான் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன்.

மிகவும் குழப்பமான தோலர் சொன்னார் “முதல்ல சங்கத்த மதிக்க பழகுங்க, ஏதோ ரெண்டு தீவிரவாதிங்க கொடுக்கற புத்தகத்த வச்சு பேசாதீங்க? நீங்க ஈழத்துக்கு ஆதரவா என்ன பண்ண முடியும்? அதுக்கு நம்ம கட்சி சீபீஎம் இருக்கு. அவங்களுக்குத் தெரியாததா உங்களுக்கு தெரியும்? “. இந்த ஜனநாயகத்தில நம்பிக்கையில்லாதவங்க அவங்க, லால்கரில கூட மாவோயிஸ்டுங்க மக்களை பகடைக்காயா பயன் படுத்துனாங்களே, தெரியாதா? என்ன?”

“போன வாரம் ஒரு பையன் பஸ்ஸில சொல்லிக்கிட்டு இருந்தான் “மார்க்சிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களை கொன்று  நிலங்களை இந்தோனேஷியாவின் சலீம் குழுமத்திற்கு கொடுக்க நினைக்கிறது, மக்கள் போராட்டத்தை பாசிசமாய் அடக்குகிறது……………….

நான் முடிப்பதற்குள் அவர் சொன்னார் “முதல்ல  இதுமுதலாளித்துவ நாடு சோசலிச நாடு அல்ல, இதுக்கேத்தபடி தான் வாழ வேண்டும், உங்களுக்கு போனஸ் வாங்கி கொடுத்தது யார் அந்த மாவோயிஸ்டா ,சங்கமா?,” அவர் கடைசியாய் கேட்ட கேள்வி என் வாயை அடைத்தது.அப்புறம் தோலரிடம் அது சம்பந்தமாக எதுவும் கேட்பதில்லை.

ஆனால் இப்போது அந்த தீவிரவாத புத்தகங்களை அதிகமாய் என்னோடு வேலை செய்யும் ராஜா படித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகமாய் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வேறு சிலர் சொன்னார்கள். என்னிடம் கூட பலமுறை கேள்வி கேட்டிருக்கிறான். நான் உட்பட பலரும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டோம். அவன் இப்போது தனியாளாக ஆலை நுழைவாயிலில் புத்தகமெல்லாம் விற்கிறான். சிலர் வாங்குவார்கள். பொறுப்புத்தோலருக்கு அவனைப்பார்த்தாலே செம எரிச்சலாக இருக்கும் அவனை பற்றி  எங்களிடம் திட்டிவிட்டுதான் வருவார். ஆனால் மற்ற சங்கங்களின் தலைவர்களோடு நம்ம தோலர் நெருக்கமாக இருப்பார். ஏன் பி.எம்.எஸ் (bharathiya masthur union) சங்க  மாநாட்டுக்கு தோலர்தான்
வாழ்த்துரை சொன்னார்.

திடீரென்று எங்கள் ஆலையில்   ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். சுமார் 60 பேர் வரை தூக்கி விட்டனர், அந்த ராஜாவுக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.அதில் நம்ம தோலருக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால்  மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எல்லா சங்க நிர்வாகிகளும் கூடினார்கள். வழக்கம் போல இதற்கும் மத்திய சங்கம் தலைமை வகிக்க, அல்லும் பகலும் என்ன வகையான போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. வந்திருந்த ஒருவர் சொன்னார்

ஓசூர்- ல யாரோ துடைப்பக்கட்டை, செருப்பு எடுத்துக்கிட்டு போராடுனாங்களாமே அப்புடி பண்ணுவமா தோலர்”

பொறுப்புத்தோலர் சொன்னார்”சட்டம் ஒழுங்க பாதிக்குற மாதிரி எதுவும் செய்யக்கூடாது, என்ன செய்தால் முதலாளி பயப்படுவானோ அப்படி போராடணும். நான் எதுக்கும் சீபீஎம் மாவட்டச்செயலாளர் கிட்ட கலந்து
ஆலோசனை பண்ணிக்குறேன்”. என்றபடி கிளம்பியவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்.

” நாளைக்கு நாம நடத்துற போராட்டம்,இந்த முதலாளிக்கு மட்டுமில்ல, உலக முதலாளித்துவத்துக்கே குலை நடுங்கும், அகில உலக பாட்டாளி வர்க்கமே பெருமைப்படுற மாதிரி ஒரு சிறப்பான போராட்டத்தை நாளைக்கு முன்னெடுக்கப்போறோம். இப்ப நான் சொன்னா முதலாளிக்கு தெரிஞ்சுடும், தோலர்களே நீங்க நாளைக்கு தயாரா வாங்க எதுக்கும் ” நான் எப்போதுமே தோலரின் கண்களில் அப்படி ஒரு நெருப்பைபார்த்ததில்லை”

சின்னதாய் கவிதை தோன்றியதெனக்கு

உன் கண்கள்
நாளை வெடிக்கும் எரிமலை
உடைபடட்டும்  முதலாளித்துவ பணமலை
தொழில் அமைதியே தொழிலாளர் நலன்

உயர்த்துவோம் செங்கொடி
சுத்தியலறிவாள் நட்சத்திரத்தோடு
ஆண்டவனே கருணைக்காட்டு
அழிந்து போகட்டும் அடக்குமுறைகள்

எனக்குத்தூக்கம் வரவில்லை, நாளைக்கு என்ன வகையான போராட்டம் நடக்கும்” ஒரு வேளை ஆலையை இழுத்து மூடுவாரா தோலர்? இல்லை முதலாளிக்கு அடிவிழுமா? ச்சே ச்சே அவர் அப்படி சட்டத்துக்குவிரோதமாக செய்ய மாட்டார். யோசனையிலேயே தூங்கிப்போனேன்.  காலையில் பூஜை புணஸ்காரங்களை முடித்தபடி மனைவியிடம் சொன்னேன். அவளோ “பாத்துங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு தள்ளி நின்னுக்கோங்க, போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணுனா  நான் பஸ்ஸ¤க்கு வந்தேன்னு பொய் சொல்லுங்க,

அரெஸ்ட் ஆயிடாதீங்க, யார் எப்புடி நாசமா போனா நமக்கென்ன? சொல்றத நல்லா புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்க என் மனமோ தோலரின் வித்யாசமான போராட்டத்தைப்பற்றியே லயித்துப்போனது.

பேருந்திலிருந்து இறங்கினேன், ஆலைக்கு செல்லும் வழியெங்கும் போஸ்டர்கள் முளைத்திருந்தன. அதில் நூதன போராட்டம் என்று இருந்தது. நான் நினைத்தேன் “நம்ம தோலர் உஷார் தான் எதிலேயும்”.

போராட்டத்தை ஆரம்பித்து வைப்பவர் என்று சீபீஎம் மாவட்டச்செயலாளர் பெயர் போட்டிருந்தது. “சரி இன்னைக்கு எப்படியோ போர்க்களமாகிவிடும்”
ஆலையை நெருங்கினேன், போராட்டம் இன்னும் அரை மணி நேரத்தில் துவங்கப்போவாதாய் பொறுப்புத்தோலர் சொன்னார்.  எனக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது. அவர் என்னிடம் வந்து “இங்க பாருங்க தோழர், இது முதல் கட்டப்போராட்டம் தான் இதிலே மொத்தம் 30 பேர் மட்டும் தான்
கலந்துக்கப்போறோம், அதில நீங்களும் ஒண்ணு” எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

நான் மறுப்புச்சொல்ல வாயெடுத்தேன் . “மறுக்காதீங்க தோழர், இப்படி மறுத்தா எப்படி புரட்சி வரும் , இப்படி தயங்குனா எப்படி ரஷ்யாவில லெனின் புரட்சிய நடத்திக்காட்டி இருப்பார்? நாம் தொழிலாளர் வர்க்கம் என்ற படி அவர்
மைக்கில் 30 பேர் பேரையும் அறிவித்து விட்டார்.எங்கள் 30 பேருக்கும் மாலைகள் போடப்பட்டன. நாங்கள் பந்தலின் முன்னே வந்து கோஷங்கள் போட்டோம்.

மாவட்டசெயலாளர் கட்சி அவருக்கு ஒதுக்கியிருக்கும் சுமோவில் வந்தார். எங்களை பெருமிதத்தோடு பார்த்துவிட்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிகர நடடிக்கைகளைப்பற்றி கனல் தெறிக்க பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்”இப்போராட்டம் உலக முதலாளித்துவத்துக்கு மரணத்தைப் பரிசாய்
தரும்”நாங்கள் 30 பேரையும் சுற்றி கோஷம் போட்டபடி  இருந்தார்கள். முதலில் நான் தான் நின்றுகொண்டிருந்தேன். நான் என் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவேன், ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது?

சீபீஎம் மாசெ வந்தார் என்னிடம் “பரவாயில்லையே தோழர் சின்ன வயசில ரொம்ப துணிச்சலான முடிவு” என்றபடி கையில் சிறிய கத்தியை எடுத்தார். என் தலைக்கருகில் கொண்டு வந்தார்.அய்யோ என்ன நடக்கப்போகிறதெனக்கு? ஒருவேளை ரத்தம் சிந்தபோகிறேனா? இல்லை என் ரத்தத்தை  அவர் வெற்றித்திலகமாக இட்டுக்கொள்ளப்போகிறாரா? இல்லை கையை கிழித்துக்கொள்ளும் போராட்டமா?

அய்யோ எனக்கு பயம் அதிகமாகி நடுங்கினேன், கண்களை இறுக்கி மூடினேன். அவ்வளவு தான் இவ்வுலகத்தைகடைசியாய் பார்க்கிறேன் என நினைத்துக்கொண்டேன். மாசெ தோலர் என் தலையின் கையை வைத்தார். தலையில் தன்ணீர் தெளிக்கப்பட்டது. “அய்யோ என்ன நடக்கபோகிறது”

மாசெ தோலர் சிறிய கத்தியால் என்  தலையில்………………………………………… …….எடுத்தார். கண்ணைத்திறந்தேன். ரத்தத்துளிகள் கத்தியில் இருந்தது.  எனக்கு டெட்டால் வைத்தார்கள்.முழக்கங்கள் திமிறின,  பொறுப்புத்தோலர் பேசினார்”இதோ இந்த முதலாளித்துவத்துக்கெதிராக புரட்சிகரமான முறையில்  நமது தோழர்கள்………………….. போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்கு இந்த ஆலை நிர்வாகம்

அசையாவிட்டால் நாளை இந்த உலகமே அதிரும் படி இன்னொரு போராட்டம் நடக்கும்” ஒளிந்திருந்து முதலாளியின் ஆட்களும் போலீசும் பயத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது.

முடிந்து வேலைக்கு சென்றோம்.எல்லோரும் கை கொடுத்தார்கள், யோசித்தேன், புரட்சி அது சீபீஎம் கட்சியால் மட்டும்தான் நடத்தும். அதற்கு மட்டுமே தகுதி இருக்கிறது.

————————————————————————————————————————

வேலை முடிந்து வீட்டிற்கு போனேன். பக்கத்து வீட்டு குழந்தை அலறி அடித்துக்கொண்டு ஓடியது, என்மனைவி பார்த்தாள் என்னை “என்னங்க இப்புடி மொட்டை அடிச்சுகிட்டு வந்திருக்கீங்க?” காலையின்
புரட்சிகர போராட்டத்தை அவளுக்கு விளக்கினேன். கடைசியாய் சொன்னேன் . “போராட்டம்ன்னா யாருக்கும் பாதகம் இல்லாம இருக்கணும்? இந்த பு ஜ தொ மு காரனுங்க மாதிரி சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, தொழில் அமைதியை பாதுகாக்க வேணும் “. கடைசி வாக்கியத்தை எனக்கு அருகில்
வசிக்கும் ராஜாவின் காதில் விழுமாறு உரக்கக்கூறினேன். ” நாளைக்கு என்ன போராட்டம் தெரியுமா?

கோவணத்தோடு கையில் சட்டி வச்சிருக்குற போராட்டம்”

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

——————————————————————

மாபெரும் தோலர் கோவிந்துக்குட்டி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை ஒட்டி இக்கதை பலமாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தாலும் இப்போது பதிப்பிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி

சாயம் வெளுத்துப் போன போலிகள்

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் – CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

டேய் ! இது செம்மொழி மாநாடு , தமிழ்த்தாயை காணவில்லை…….

ஜூலை 1, 2010

டேய் !   இது செம்மொழி மாநாடு

செம்மொழியான தமிழ்மொழியே!

ஓடித்திரிந்த
சாலைகள் எல்லாம் வெள்ளை
வெளேரென்று மின்னுது
உள்ளுக்குள்ளே தமிழ்த்தாய்
என்னை விதவையாக்கி
விட்டானென விம்மி விம்மி அழுகுது

யாராடா தமிழ்த்தாயின் மூத்த மகன்?
கல்லுடைக்கும் தொழிலாளியும்,
கதிரறுக்கும் ஆத்தாளும் அல்லவா
தமிழ்வாரிசுகள்

பீத்த மகனெல்லாம்
மூத்த மகனென்று பீற்றித்திரிவது
கண்டு தமிழ்த்தாய் ஒப்பாரி வைக்குது
ரஹ்மானின் பாப் இசையில் எல்லாமே  அடங்குது

தமிழ்மொழியே!! தமிழ்மொழியே!!

கோவையில் செம்மொழிக்கு
கொண்டாட்டமாம்
கொங்கு நாட்டானுக்கு
நாலு நாள் வேலையில்லை- சோத்துக்கு
திண்டாட்டமாம்

கலைஞர் அவர் வாழும்
வரலாறு , வாயைத் திறந்தால்
வருமாம்   தமிழ் ஆறு    அதில்
கழக குஞ்சுகள் நீச்சலடிக்க
நக்கிப்பார்தால்
அட ! இது
டாஸ்மாக்கு பீரு

பண்டாரங்க  வெளியே விக்குது
பகவத் கீதை  உள்ள போனா
டான்ஸ் ஆடுது பணக்கார கீதை

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்

பறையனுக்கு மந்திரி
பதவியாம்!!
சமத்துவம்  வந்து  புல்லரிக்குது
அடிச்ச கொள்ளைக்கோ
கையரிக்குது

ஈழத்தின் பிணநாற்றம்
தாங்காமல் ஓடி வந்த சிவத்துக்கு
பொன்னோடு

ஈழத்தமிழனுக்கு திருவோடு
கடலில்  துப்பாக்கி சூடு
சாதி மாறி  காதலிச்சா  ஒரே போடு

பாலாறு திரிஞ்சு போக
பெரியாறு பொரிஞ்சு போக
எதைப்பிடுங்க மாநாடு ?

போலீசு சொல்லுது

டேய் !   இது செம்மொழி மாநாடு

———————————————————————————————————————————————————————————————தமிழ்த்தாயை
தமிழ்த்தாயை காணவில்லை…….

இங்லீஸ்ல பேசுங்க ஈஸியா!
இங்கிலீஸ்ல பேசி  இம்ப்ரஸ் பண்ணுங்க
இங்கிலீஸ்ல படிச்சா அறிவு வரும்

“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாருமில்ல”

திரும்பிய பக்கமெல்லாம்
இங்கீலீசு கப்’அடிக்க
தேடி  வந்த தமிழ்த்தாய்க்கு
வெடிகுண்டு செக்கப்’

யாரோ தூய தமிழில்
ஆத்தா! ஆத்தா!
என்றழைக்க,

இங்கேயாவது இருக்குதே வாஞ்சையோடு
போனாள் தமிழத்தாய்

கண்மணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்
டேய் “ங்கோத்தா”  “ங்கோத்தா”……

பின்னங்கால் பிடரியிலடிக்க
ஓடிய தமிழ்த்தாயை காணவில்லை
கண்டு பிடித்து தருவோருக்கு
அடுத்த செம்மொழி மாநாட்டில்
பொற்கிழியும் பன்னாடையும்
ச்சீ ச்சீ !!!   ச்சீ !!!

பொன்னாடையும் நிச்சயம்.

    செம்மொழி மாநாடு  special

‘கவிதைகள்’

நாகரீகக்கோமான்கள் தொடுக்கும் போர்

ஏப்ரல் 22, 2010
கண் சிவந்திருந்தார்கள்
ரிஷிகள், மாமுனிகள்
டாட்டாக்கள், பிர்லாக்கள்
அம்பானிக்கள்
வே(தா)தாங்கள் ஓதப்பட்டன

ஆயிரக்கணக்கில்
புஷ்பக விமானங்கள்
லக்ஷத்தில் தேவ குமாரர்கள்
அசுரர்களின் கோடித்துணிக்கோ
ஏழாயிரத்து முன்னூறு கோடி ஒதுக்கீடு

கல்வியை, மருத்துவத்தை,
போக்குவரத்தை – எதையுமே
தராதவர்கள் நாகரீகத்தை
கற்றுக்கொடுக்கப் போகிறார்களாம்

ஆம் இது நாகரீகமற்றவர்களின் மீது
நாகரீகக்கோமான்கள் தொடுக்கும்
போர்

வேண்டாமென்றால் விடுவதாயில்லை
உன் உயிரைக்கொடுத்தேனும்
நாகரீகம்
வாங்கித்தானாகவேன்டும்
முதல் பலி நியாம்கிரியின்
அரக்கத்தலைவன்

நியாம்கிரி அரக்கன்
கொல்லப்படபோகிறானாம்
அசுர வாரிசுகள்
கலங்கினார்கள் ஆனால்
ஒதுங்கவில்லை
தவித்தார்கள் ஆனால்
தவிக்கவிடவில்லை
போரிட்டு செத்தார்கள்
செத்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் சாகவிடவில்லை………….

பாசிச பேய்கள்
கர்ப்பிணியின் வயிற்றை
குறிவைக்கின்றன

அட முட்டாள்களே!
உங்களுக்குத்தெரியுமா
இதோ இந்த
இந்தக் கருக்குழிதான்
உங்களுக்கு சவக்குழியென்று

பாட்டன்,முட்டான்
அப்பன், மாமன், ஆத்தாள்,
பாட்டி, பூட்டி, அத்தை
எல்லாம் எதற்கு ஏந்தினார்களோ
அதற்காக
அதை
ஏந்த காத்திருக்கிறது
கருப்பையில்
சிசு

நாளைய வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்
அவர்கள் கொண்டு செல்வார்கள்
அரக்கத்தலைவனை யாரும் நெருங்க
முடியாத இடத்திற்கு

அப்போது
அவர்கள்
உங்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்
எது நாகரீகமென்று

தொடர்புடைய பதிவுகள்

காக்க காக்க லீnaவைக் காக்க, சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.

ஏப்ரல் 14, 2010
காக்க காக்க லீnaவைக் காக்க

சன நாயகத்தூண்கள்
எல்லாம் அம்மணமாய்
இக்சாவில்
கருத்து சுதந்திரத்தை காக்க
காக்க காக்க லீnaவைக் காக்க
பேட்டிகள் வெடித்துக்
கிளம்புகின்றன வலதுசாரியம்
இடது சாரியம் எல்லாம் குத்துவதாய்
பொறுமுகின்றன
லெனின் பிராயிடை
புணரவேண்டும் – அது கருத்து சுதந்திரம்
லெனின் காரல்மார்க்ஸ்
சே பிடல் ஏங்கெல்ஸ்
எல்லாம் பேசலாம்
அது கருத்து சுதந்திரம்
ராமேசுவரம் செங்கடல்
தீபக் முதலாளித்துவ வெறி
அடி உதை குத்து – இதுவும் சுதந்திரம்
ஏன் அடித்தாய் ?
தொழிலாளியை ஏன் வதைத்தாய்?
கேள்விகளுக்கு
யோனிகள் பதில் சொல்லுகின்றன
அய்யோ அய்யய்யோ
உரிமையைப்பறிக்காதே
இது கருத்து சுதந்திரம்
அதிகாரவர்க்க ஆண்குறியையை
தடவிக்கொடு
எம்மைகட்டி வைத்து உதை
உனக்கிருக்கும் சுதந்திரம்
எமக்கில்லாதது வருத்தம் தான்
(எம்மை,எமக்கு – தொழிலாளி)
—————————————————————————————————————————————————————-
சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.


எது சுதந்திரம்?
எது கவிதை?
உழைக்கும் மக்களின் விடுதலைக்கே
சுதந்திரம்
உழைக்கும் மக்களின் உணர்வே
கவிதை
அதை
சொல்ல நீ யார்?
யோனியிலும் ஆண்குறியிலும்
தூங்கிக்கிடக்கிறது விடுதலை
கிடைத்து விட்டது பட்டம்
“கலை இலக்கியத்தின் போலீசு”

யோனிகளை அரிந்து வைத்துக்கொண்டும்
பீய்ச்சியடிக்கப்படும் விந்துவிலிருந்தும்
துடிக்கும் உறுப்புக்களிலும்
கிடைக்குமா பெண்ணின் விடுதலை?

ஆளும் வர்க்கத்தை
அடக்க அரிவாளை எடுக்க சொன்னால்
நீ ஆணுறையை கழட்டிக்
கொண்டிருக்கிறாய்
ஒரு வேளை உன் விடுதலை
அதிலிருந்து கூட கிடைக்கலாம்
அந்தோணிசாமியின் மந்திரங்கள்
ஜெபிக்கப்படட்டும் -சோபாக்கள்
வேதம் ஓதுகிறார்கள்
“கர்த்தரின் ஆட்டுக்குட்டிகளே
உங்களின் விடுதலை
தொடையிடுக்கில் இருக்கிறது”
ஆரம்பிக்கட்டும் சுதந்திர வேட்கை

சப்பிக்குடிக்க சொல்லுங்கள்
கால்களை அகட்டி வைத்துக்கொண்டே
பீய்ச்சி அடியுங்கள்
கிடைத்து விடும் சுதந்திரம்

சுதந்திரம்
உங்களுக்கு மட்டும்.


15.04.10. இக்சா அரங்கம், பாந்தியன் சாலையில் கருத்துக்களை புணர்வதற்கான சுதந்திரம் குறித்த அரங்கக்கூட்டம்.யார் யாரைப் புணர்ந்தால் கருத்தை பெற முடியும்  எனும் நீதி சொல்லும் லீனாதிபதி, இகூட்டத்தில்  சோபாவும் ஏனையோரும் யாரைப்புணர்ந்தால் கம்யூனிசம் கற்க முடியும் என்பதையும் சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும், மற்ற படி கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் : -)
தொடர்புள்ளவை
லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
கவிதைகள்-அழகு

அழுகின்ற குழந்தையே!

மார்ச் 30, 2010
அழுகின்ற
குழந்தையே!
அழுது கொண்டிருக்கிறாயா
அழு நன்றாக அழு
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆனால் நிறுத்திவிடாதே

உன் உரிமைகள்
கிடைக்கும் வரை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

மார்பறுக்கப்பட்ட
உன் தாய்களைப்பார்
கொன்று குவிக்கப்பட்ட
உன் சகோதரர்களைப்பார்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஏன்?
எதற்காக?
கேள்வியை கேள்

மூலதனம் சொல்லிவிட்டது
நீ வாழ தகுதியற்றவன்
நீ சாகப்பட வேண்டியவன்
உன் இனம் மட்டுமல்ல
உழைக்கும் இனமே
வாழத்தகுதியற்றதுதான்

அழுகின்ற குழந்தையே!
நன்றாய்க்கேள்!!
தகுதியற்றவர்கள் தான்
அவர்களை தகுதியுடையோராக்கினார்கள்

உழைக்கும் கைகளின்
மீதேறிதான் அவர்கள்
உயர்ந்தவர்களாகியிருக்கிறார்கள்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

கேளாத செவிகள்
கிழிந்து போகட்டும்
கருணைகளின் கோட்டைகள்
நொறுங்கட்டும்

தேர்ந்தெடுத்திருக்கிறாய்
உனக்கான ஆயுதத்தை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஆம்
அழுகையின் அதிர்வுகளில்
உடைபட காத்திருப்பது
அதிகார பீடங்கள் மட்டுமல்ல
எங்களின் அடிமைத்தனமும் தான்

தொடர்புடைய பதிவுகள்

பாலியல் காதலர்கள் – நுகர்வியலின் வக்கிர உற்பத்தி

மார்ச் 11, 2010
பாலியல் காதலர்கள்
நுகர்வியலின்  வக்கிர உற்பத்தி

அந்த பேருந்து நிலையம் புதியது எனக்கு, எந்த பஸ் எங்கு நிற்கும் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு ஆளை பிடித்தேன். “ஏங்க ……..ஊருக்கு எந்த பஸ் போகும்?” அவர் ஏதோ ஏற இறங்க பார்த்து விட்டு “தோ அந்த பஸ் தான் நிறைய பஸ் உங்க ஊருக்கு இருக்கு”.
நண்பருடைய திருமணம் எண்பது கிலோ மீட்டர் தாண்டி இருந்தது. பெரும்பாலான ஊர்கள் போலவே இதுவும் ஒரு 5 கிலோமீட்டர் தாண்டினாலே கிராமத்தினை கொண்டிருந்தது. காலையில் வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பினேன். வரும் போது பிளாட்டுகளாக்கப்பட்ட விவசாய நிலங்கள் கண்ணை உறுத்தின. கிராமங்களில் பான் பீடா கடைகள் புதியதாய் முளைத்திருந்தன. விவசாய நிலங்களில் வறுமையின் கவிதை வறண்டு போய் இலக்கியம் எழுதிக்கொண்டிருந்தது. கூட வேலை செய்பவர் என்பதால் கண்டிப்பாக போக வேண்டிய அவசியம். அந்த ஊர் பெரிய நகரம் இல்லை, கிராமமும் டவுனும் கலந்திருந்தது.
கொஞ்சம் பெரிய மண்டபம் தான் ,ஒரு வழியாய் கல்யாணத்தில் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இப்போது பஸ்டாண்டில் நிற்கிறேன்.அந்தப்பெரியவர் காட்டிய பஸ் சென்று கொண்டிருந்தது. நான் செல்ல வேண்டிய ஊருக்கு தொடர்ச்சியாக பல பேருந்துகள், சரி ஒரு டீ சாப்பிடலாம் என்று பேருந்துகளுக்குப் பின்னால் இருந்த டீக்கடைக்கு என் கண்கள் ஓடின.
ஒரு பேருந்துக்குப்பின்னால் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு கல்லூரி படிப்பவர்கள் போல பையினை மாட்டிக்கொண்டிருந்தார்கள்.
டீயினைக்குடித்து விட்டு தயாராக இருந்த பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் முக்கால்வாசி இருந்தது, கண்ணாடி பக்கம் கிடைக்கவில்லை. இருபெரிய்யய மனிதர்களுக்கு மத்தியில் தஞ்சம் புகுந்தேன்.
ஒரு பெண் முன் படி வழியாக பஸ்ஸில் ஏறி வந்து என்னுடைய இருக்கைக்கு இடது புற இருக்கையில் அமர்ந்தார். எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது, அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால பஸ்ஸிற்கு பின்னாடி பாத்தமே அதேதான். யாரோ என் இருக்கைக்கு பின்னிருக்கையில் உட்கார்ந்தது போலிருக்கவே திரும்பினேன். அட வெளியே பார்த்த அந்தப்பையன்.
பஸ் கிளம்ப ஆரம்பித்தது. அந்தப்பெண் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார் ” ஏய் சும்மாவே இருக்கமாட்டியா? ஏன் இப்படி பண்ணுற , உன்னல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல” ஏதோ பெண்ணிடம் தகராறு செய்பவன் என நினைத்துக்கொண்டிருந்தேன். “என்னை நீ மாட்டி வுட்டுருவ, லீவு வேற சொல்லிட்டேன் போடா” என்றபடி அந்தப்பெண் சைகை காட்ட அவன் அப்பெண்ணோடு உட்கார்ந்தான்.
டிரைவர் டிவிடியைப்போட்டார் “அழகாக சிரித்தது அந்த நிலவு” எனப்பாடத்தொடங்கியது அது. ஊர்கதை உலகக்கதை எல்லாம் பேச ஆரம்பித்து அவள் தோள் மீது சாய்ந்து கொண்டான்.
பஸ்ஸில் எல்லோரும் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற மானம் கொஞ்சம் கூட இல்லாமல் சத்தம் போட்டு பேசிக்கொண்டு, கைகளை முறுக்கிக்கொண்டு சேட்டைகளை செய்து கொண்டு வந்தார்கள். மிஞ்சிப்போனால் ரெண்டு பேருக்கும் 17 இல்லைன்னா18 வயசுதானிருக்கும். நான் மேற்கொண்டு இதை பார்க்காது கண்ணைமூடி தூங்குவது போல் இருந்தேன்.
அன்றாடம் பஸ்-ல் இப்படி ஒரு ஜோடியயாவது பாக்கறேன், அன்னைக்கு பஸ்ஸ்டாண்டுல பையன் பக்கத்துல உக்காந்துகிட்டிருக்குற பொண்ணு ………………………………………அப்பெண் சிரிச்சுகிட்டு போன் பேசிகிட்டு இருந்துச்சு. அப்புறம் போன வாரம் பிரவுசிங் சென்டர்ல ஒரு ஜோடி முத்தம் கொடுத்துகிட்டு இருந்துச்சு, நான் பாதியில பிரவுசிங்க விட்டுட்டு வந்தேன். யார் பாத்தா நமக்கென்ன நாய் மாரி ஊர் மேய்ஞ்சுகிட்டு இருக்குங்க. சென்னையில நிறய நடக்கும் ஆனா இப்ப சிறு நகரத்துல கூட சிலதுங்க ஊர் மேய்ஞ்சுகிட்டு திரியுதுங்க.
எந்த நம்பிக்கையில் தான் ஒருபெண் அல்லது ஆண் காதலிக்கிறான்/ள். ஒருவனைப்பற்றி முழுமையாக தெரியாமல் எதைப்பார்த்து, எதை வைத்து ஊர் சுற்றுகிறார்கள். கேட்டால் காதலிக்க உரிமையில்லையா என்கிறார்கள். முதலில் இவர்கள் செய்வது காதலா?
இவர்களில் பெரும்பாலோர் திருமணம் செய்வது இல்லை.
தன் காதலுக்காக போராடுவது கிடையாது. வீட்டிற்கு தெரிந்து விட்டது என்பதெல்லாம் ஒரு சாக்கு, ஒருத்தியை விட்டால் இன்னொருத்தி என்று ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்கு ஒரு விருப்பம் இப்படிப்பட்ட ஜோடியிடம் கேட்க வேண்டும் “காதல் என்பது என்ன?“. ஆனால் இவர்களைப்பார்த்தால் தானாகவே ஒரு அருவறுப்பு வந்து விடுகிறது.
எவன் பார்த்தால் என்ன?  நான் முத்தம் கொடுப்பேன், பஸ்ஸில் எல்லா சேட்டையும் செய்வேன் என்பவனை ஒரு காதலனாக பார்க்க முடியுமா?அல்லது ஒரு விபச்சாரியாக பார்க்கமுடியுமா? நாய்களைப்போல தன் உணர்ச்சிக்கு வடிகால் எல்லா இடங்களும் தாராளமாக இருக்கின்றன.
இவர்களெல்லாம் விபச்சாரத்தனத்திற்கு காதலை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தனிமனித ஒழுக்கம் என்பது இல்லாமலே போய்விட்டது , அப்பாவுக்கு தெரிஞ்சா எனக்கவலையுறும் அப்பெண் அப்பாவுக்கு எப்பவுமே தெரியக்கூடாது என்கிறார். ஆனால் தான் செய்யும் செயல் சரியா தவறா?.
பாலுணர்வு மட்டும் சார்ந்தது எப்படி காதலாக இருக்கும் என்பதுதான் கேள்வி. சில மாதங்கள் முன் ஒருவன் என்னருகில் பேருந்தில் செல்லும் 2 மணி நேரமும் காதலியோடு பேசிக்கொண்டே இருந்தான். அப்படி எதைத்தான் பேசுகிறான்?
அந்தக்கதை இந்தக்கதை என்றூ மொக்கைகள் தான் பேச்சுக்களாகின்றன. எனக்கொரு சந்தேகம், ஒரு முறைகூட இந்த சமூகத்தைப்பற்றிய பேச்சு ஏன் உங்களிடம் இருந்ததில்லை. நீங்களும் வயிற்றுக்கு சோறு தானே உண்கிறீர்கள், ஏன் அரிசி, பருப்பு விலை ஏறியது? எதற்காக இவ்வளவு கல்விக்கட்டணம்? ஏன் யோசித்ததே இல்லை? ஏன் இவையெல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?

திரைப்படங்கள் இப்படி ஊர்மேய்வதை கலாச்சாரமாக்குகின்றன, “எதைப்பற்றியும் கவலை இல்லை எனக்கு என் உணர்வுதான் முக்கியம்” மற்றவர்கள் ஏதாவது நினைத்துவிட்டால் என்ற எண்ணம் தேவை இல்லாததாகிவிட்டது. “மனிதனை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்த வேண்டும், அறவுணர்ச்சிகள் அல்ல” இந்த  மாபெரும் கருத்தை லீனாவின் தளத்தில் படித்தது போல ஞாபகம்.
நித்தியானந்தனையும், காஞ்சி சங்கரனையும் ஏன் தேவநாதனையும் கூட உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.பின் நவீனத்துவவாதிகளை எது வேண்டுமானாலும் வழி நடத்தட்டும். உங்களின் உள்ளுணர்ச்சிகள் எங்களின் அறவுணர்ச்சியை பாதிக்கும் போது என்ன செய்வது? உங்களுக்கு அறவுணர்ச்சி தேவை இல்லாமலிருக்கலாம் நாங்களும் அறவுணர்ச்சியற்று இருக்க வேண்டுமென்பது அராஜகமாக இல்லையா?
ஒரு விசயத்தில் பின்நவீனத்துவவாதிகள் பெருமை கொள்ளலாம், இதோ இங்கே இளைஞர்களை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.
சுயநலத்திற்கு யாரைப்பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏன் தன்னைப்பற்றியும் கூட. உன் உரிமைபறிபோகிறதென்றால் உனக்கேன் அக்கறை நான் மானங்கெட்டு வாழ்வது என் உரிமை என்றாகிவிட்டது / இல்லை என்றாக்கப்படுகிறது, /பட்டுவிட்டது.
இவ்வுலைகைப்பற்றி பேசாதே, உழைத்து இந்த சாலையை அமைத்தார்களே அவர்களைப்பற்றிப்பேசாதே, அதோ இந்த ஓட்டுனர் எவ்வளவு பணிச்சுமைக்கிடையில் பேருந்தினை இயக்குகிறார்.அவர் கவலையினை என்றாவது புரிந்து கொண்டிருக்கிறாயா?
“இந்த முதலாளித்துவ உலகம் கற்றுக்கொடுக்கிறது, எல்லாவற்றையும் நுகர்ந்து விடு இம்………….. எல்லாவற்றையும், கருப்பாக இருந்தால் நீ நுகரப்படமாட்டாய், சிவப்பாக மாறு பலரும் உன்னைப்பார்ப்பார்கள், மற்றவர்கள் உன்னை ரசிப்பதுதான்  வாழ்வியலின் தேவை உழைப்பு அல்ல, எதைப்பற்றியும் சிந்திக்காதே, இவ்வுலகம் படைக்கப்பட்டதே அனுபவிக்கத்தான் அனுபவி நன்றாக அனுபவி, எத்தனைபேர் மாண்டாலும் உன் சுகத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே.
இது தான் தாரக மந்திரம். உன் அடிமைத்தனத்துக்கு தடையாய் இருப்பவனெல்லாம் உன் எதிரிகள்”
” பொய்யாய் வாழ்வது தான் விருப்பமெனில், உண்மைகள் புரியும் போது பொய்கள் கலையும், அப்போது உங்கள் ” காதலும் ” பறந்து போகும். மறுகாலனியாக்கத்தால் தைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீ உன்னைப்பற்றி என்னப்பேசப்போகிறாய்? ஏன் பேச மறுக்கிறாய்?
நாங்கள்பேசுகிறோம் மக்கள் விடுதலைக்கு உனக்கும் சேர்த்துதான், ஆனால் நீ உன் விடுதலைக்கு கூட பேச மறுக்கிறாய். ஒருவர் தன் துணையை தெரிவு செய்ய காதல் சிறப்பான வழிதான். ஆனால் இந்த காதல் வேசம் போடும் விபச்சாரிகளை என்ன செய்வது?”
கண்விழித்துப்பார்த்தேன் அப்பெண்ணின் மடியில் அவன் படுத்துக்கொண்டிருந்தான், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. அதைப்பார்க்கும் போது ஒரு பிணத்தின் மடியில் இன்னொரு பிணம் படுத்துக்கொண்டிருப்பதைப்போல் இருந்தது.

தொடர்புள்ள பதிவுகள்

1.காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்
2.ஆன்மீகத்-தேடல்கள்
3. 

ஆன்மீகத் தேடல்கள் –

மார்ச் 4, 2010
1

ஆனந்தம்

கதவைத்திற
காற்று வரட்டும்
கதவைத்திற
காற்று வரட்டும்

ம்ம்ம்ம்ம்………
கதவைத்திற
……………….வரட்டும்

நித்தியங்கள்
தினமும் ஆனந்தங்களைத்
தேடுகின்றன

நிம்மதியின் சூட்சுமங்கள் படிக்க
முதலில் ஸ்ரீமத் பாகவதத்தைப்
படி

“எல்லாம் மாயை
ஆம் எல்லாமுமே மாயை
ஆண்டவனின் நாடகத்தில்
நாமெல்லாம் நடிகர்கள்”

ரஞ்சிதா மாயை
சொர்ணமால்யா மாயை
சங்கரராமன் மாயை
ஜட்டியோடு படுத்திருந்த நித்தியும் மாயை
ஆண்குறியும் பெண்குறியும் மாயை

ஆனந்தத்தை தேடி
அனுதினமும் அலைவோரே
ஆனந்தம்
உள்ளாடைக்குள்
பத்திரமாய் இருக்கிறதாம்

—————————————————————-

ஆன்மீகத் தேடல்கள் -2

போதும்,
இனி கதவைத்திறக்காதே

ஒஷோ செயேந்திரன்
நித்யா ஜக்கி கொக்கி
பக்கி சொக்கி

“அத்தனைக்கும் ஆசைப்படு”
“கதவைத்திற காற்று வரட்டும்”

கவலைப்பட ஒன்றுமில்லை
சுவாமிகாள்
கிருஷ்ணன் கேட்காததை
சிவன் செய்யாததையா
செய்துவிட்டீர்கள்

அவா அவா சொன்னாள்
இவா இவா நன்னா செய்தாள்
நீங்களெல்லாம்
நான்கு வேதங்களையும்
படித்தேள் அப்படியே
செய்தேள்

நாங்கோ படிக்கலீயே
சுவாமீ
அதாலே தான்
இன்னமும்
மரமண்டைகளாகவே இருக்கோம்

“ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான
இருந்தார்கள்”
“மனுதர்கள் தவறுசெய்வார்கள்”
“இந்து மதத்திற்கும் இதற்கும்
சம்பந்தம் இல்லை”
வக்காலத்துக்கள்
நாக்கை சுழற்றுகின்றன

சிரிக்கிறார்கள்
தில்லை தீட்சிதன்கள்
சங்கரன்கள்
பிரேமானந்தங்கள்

கடவுள் பரிசோதிக்கிறார்
சனிகிட்ட ஆனாளப்பட்ட சிவனே
மாட்டிண்டு முழிக்கும் போது
நம்மவா எல்லாம் எம்மாத்திரம்

“அத்தனைக்கும் ஆசைப்படு”
“கதவைத்திற காற்று வரட்டும்”

போதும் இனி
கதவைத்திறக்காதே

—————————————————————-
ஆன்மீகத்
தேடல்கள் – 3

உங்களை
ஜெயிக்க முடியாது

எங்க சுவாமி அப்படி
அப்படி பண்ணியிருக்க மாட்டார்
எல்லாம் கிராபிக்ஸ்
சித்து வேலை

கங்கையை
காசியை
கேவலப்படுத்தினீர்கள்
இப்போது சுவாமிகளை
ஆனால்
இந்து மதத்தினை உங்களால்
கேவலப்படுத்தி
ஜெயிக்க முடியாது

உண்மைதான்
கேவலங்களை யாராலும்
கேவலப்படுத்திவிட முடியாது
சொல்லத்தான் முடியும்

வீடியோக்கள்
புகைப்படங்கள்
வாக்குமூலங்கள்
வழக்குகள் மட்டும்
உங்கள் பிம்பங்களை உடைத்திடப் போவதில்லை

பக்தர்கள்
பதர்களாய் நீடிக்கும் வரை
முக்தி பெற மூடர்கள்
முண்டியடிக்கும் வரை
யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது

—————————————————————-


ஆன்மீகத்தேடல்கள் – 4

மயான அமைதி

கதவினை மூடு
கும்மிருட்டில்
கால்களை மடக்கி ஆசனமிடு
கைகளை
முத்திரையில் வை
தன்மானத்தை தூக்கிப்போடு
மனிதத்தை மூலையில் போடு

மக்களை மற
துன்பங்களைத் துற
குறைகளை சொல்லாதே
தனித்து இருப்பதில் சுகம் காண்
மக்கட் பிணங்களின் மீதேறி
அமைதியைத்தேடு

அமைதிதான் வேண்டுமா
உனக்கு
உலகம் பற்றி
எரிகையில்
உனக்கு மட்டும் ஸ்பெஷலாய்
அமைதி கிடைக்க
இதென்ன நித்தியாவின் வயாகராவா?

துப்பாக்கியின் சத்தங்களும்
வன்புணர்வின் கதறல்களும்
உன் காதுகளில் விழவில்லையா?

மக்களைத்தவிர்த்த அமைதி
தான் வேண்டுமாயின்
அது மயானத்திலும் கிடைக்கும்

அமைதியை உடை
வர்க்கமென்ற உளியினைக்
கொண்டு உன்னை நீயே செதுக்கு
அமைதிக்கும் அமைதியின்
புரோக்கர்களுக்கும் நிரந்தரமாய் அமைதியைக்கொடு.

—————————————————————-

ஆன்மீகத்
தேடல்கள் – 5

இயற்பகை நாயனார்

நித்தியும் சங்கரனும்
பிரேமானந்தாவும் ஓஷோவும்
மாறவும் இல்லை
மாறப்போவதும் இல்லை
மேக்கப்கள் கலைவதுமில்லை
கலைக்கப்படுவதுமில்லை

நீ மாறிக்கொண்டே இருக்கிறாய்
பக்தனாக
அறிவை இழந்த சிஷ்யனாக
அதிபத்தனாக
அப்பூதியடியாக
கண்ணப்பனாக

இறுதியாய் காத்திருக்கிறது
வேடமேற்க தயாரா?

நாட்டின் பெருமை

பிப்ரவரி 28, 2010

நாட்டின் பெருமை

பந்துகள் விளாசப்பட்டன
இரட்டை சதங்களோ
நாட்டுக்கு அர்ப்பணம்
பாரதரத்னாக்கள் வரிசையில்
நிற்கின்றன – பாராட்டுக்கள்
பாராட்டிக்கொண்டே போகின்றன

எங்கும்
அல்ல அல்ல
எங்கெங்கும் இதே
பேச்சு
பேசித்தான் ஆக வேண்டுமாம்
இது நாட்டின் பெருமையாம்…..

ஒண்ட இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டன
இல்லை இல்லையில்லை
எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
இதோ இன்னொரு
பெருமையைப்பார்த்தீர்களா
இங்கேயும் ஏழு சதங்கள்

இதுவும் இந்திய தேசியத்திற்கு
தானே அர்ப்பணம்

இங்கும்
மட்டைகள் விளாசப்படுகின்றன
ஓடுகின்றன பந்துகள்
அவைகள் இடைஞ்சலாய்
இருக்கின்றனவாம்

அடிவாங்கிய பந்துகளால்
அமைதியாயிருக்க முடியவில்லை
அடிமையாய் இருக்க முடியவில்லை
திருப்பி அடிக்க தீர்மானித்துவிட்டன
உடைந்து போன பந்துகள்

கைதட்டியே பழக்கப்பட்ட கைகளே
இப்போது சொல்லுங்கள்
யாருக்கு கைதட்டப்போகிறீர்கள்?
தொடர்புடைய பதிவுகள்

தோழர் செத்துட்டீங்களா?

ஜனவரி 28, 2010

தோழர் செத்துட்டீங்களா?

தோழர் நீங்கள்
இறந்து விட்டீர்களாம்
லட்சக்கணக்கானோர் கண்ணீர்
வடித்தனராம்
விடை கொடுத்தனராம்
நானும்
பார்த்தேன் டி.விப்பெட்டியில்

செங்கொடிகள் பட்டொளி
வீசிப்பறந்ததாக நண்பன்
சொன்னான் ஆனால்
எனக்கோ காவிக்கொடியாக
தெரிந்தது தோழர்
என்னுடைய பார்வையில்
எல்லாமே மங்கலாகத்தான் தெரிகிறது போலும்

ஆட்டோ ஊர்ந்து கொண்டு செல்லும்
கணீரென்று
“மேற்கு வங்கத்தில் தொடர்ந்து
மாசுமருவற்ற ஆட்சி நடத்துவது
மார்க்சிஸ்ட் கட்சி,
உழைக்கும் மக்களுக்கு
இலவச நிலம் வழங்கியவர் முதல்வர் ஜோதிபாசு”

அப்போது நூலகத்தில்
யாரும் படிக்காத
முரசொலியையும் தீக்கதிரையும்
தேடிப்படிப்பேன் – சொன்னால்
நம்ப மாட்டீர்கள் தோழர்
எனக்கப்போது 12 வயசு

காலங்கள் உருண்டோடின
முரசொலியின் முரசும்
தீக்கதிரின் சுள்ளியும்
மக்களின் தலைகளுக்கென்று

தாமதமாய்த்தான் புரிந்தது

அதுமட்டுமல்ல இன்னும் என்னனவோ
தெரிந்தது தோழர்
சொன்னால் உங்களுக்கு
கோபம் கூட வரலாம்

அங்கு வெடித்த நக்சல்பரியின்
இடியோசையில் செவிடான உங்கள்
காதுகள் எப்போதும் மக்களின்
கேள்விகளுக்கு பதில் சொல்லவேயில்லையாம்

நீங்கள் சொல்லாத பதிலை
சொன்னார்கள் லால்கரிலும், நந்திகிராமிலும்
உங்கள் வாரிசுகள்
நாங்கள் பாசிஸ்டுகள் என்று

நீங்கள் ரொம்ப நல்லவராம் தோழர்
உங்கள் சாவுக்கு பாஜக
காங்கிரஸ் திமுக அதிமுக ஆர்எஸ்எஸ்
இந்து முன்னணி எல்லாரும்
கலங்கினார்களாம் – கடைசியாய்
மாதவ்குமார் வந்த போதுதான்
எனக்கும் தெரிந்தது
நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவராம் தோழர்

நீங்கள்  செத்துப்போய்
விட்டீர்களாம்
நான் மனங்கலங்கவில்லை தோழர்

பாசிசத்தின்
இயக்கவியலும் வரலாறுமாய்
நீங்கள் இருக்கும் போது
எப்படி உங்களுக்கு சாவு வரும் தோழர்

நீங்கள்தான் எங்கேயும்
நிறைந்திருக்கிறீர்களே தோழர்
மே.வங்க ஊழல்களில், மார்ட்டினிடம்
வாங்கிய கோடிகளில், தமிழகத்தின்
காவடிகளில்
தூணிலும் துரும்பிலும் எங்கும் எங்கெங்கும்

பாவம் அழுது
கொண்டிருக்கிறார்கள் தொ(கு)ண்டர்கள்
இன்னொரு தலைவர் கிடைக்காமலா போய்விடும்?

நீங்கள் இருக்கும் போது
எப்படி உங்களுக்கு சாவு வரும் தோழர்
ஆம்  தோழர் பாசிசம் ஒருபோதும் சாவதில்லை
அதன் அதிகாரபீடங்கள் தகர்க்கப்படாதவரை

சிலர் சொல்லலாம் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது மரபல்ல
ஆம் அது பாசிச, முதலாளித்துவ மரபு. அது மக்களைக்கொல்லும்.
அவர்களின் மரபில் மரத்துப்போன மரபு இது.

எழுதியவிதமோ அல்லது அணூகுமுறையோ தவறாகப்படலாம். ஜோதிபாசுவின் மரணம் என்னுள் என்னுள் எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. பொய்யாய் நான் எப்படி அழ முடியும்.

மார்க்சிஸ்டு கட்சியின் நண்பர் சந்திப்பு அவர்கள் இறந்ததை கேள்விப்படபோது வருத்தத்திற்கு உள்ளானேன். ஆனால் அவ்வருத்தம் ஜோதிபாசு இறப்பின் போது ஏனோ வரவில்லை.

ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்

ஜனவரி 14, 2010
ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
 
நான் சொன்னது தவறு தான்
சரியென்று சொல்லவில்லை
என் வார்த்தைகள் தடுமாறின
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லாவற்றையும்
ஆடைகளைந்து அம்மணமாய்
நீ பாலியல் வன்புணர்ச்சி
செய்து கொண்டிருக்கும் போது
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லோரின் உறுப்புக்களையும்
ஆராய்ச்சி செய்யும் உனக்கு
என்னதான் தேவை?
எனக்கு ஒன்றும் புரியவில்லை
இந்த ஆராய்ச்சியை மருத்துவத்தில்
செய்திருந்தால் பல பட்டங்கள் வாங்கியிருக்கலாமே?
நாங்கள் செய்த “பாவம்”
உன்னுடைய சமூக மருத்துவ கோலம்

விமர்சனங்கள் வந்தன
நான் என்ன செய்வேன் தோழரைப்போல்
நான்  இலக்கியவாதியா என்ன?
என்னால் முடியவில்லை
திட்டினேன்
மக்களின் மொழியில்
அது சரியென்று சொல்லவில்லை
உணர்ச்சிகள் மேலோங்கும் போது
அறிவு கரைந்து விடுகிறது

கரைந்து போன அறிவினை
மீட்டுக்கொண்டேன்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உனக்குத்தெரியுமா
காலைமுதல் மாலை வரை
ஓடாய் உழைத்து கருத்துப்போன
எங்கள் பெண் பாட்டாளியின்
வியர்வை கரிக்குமென்று
கண்டிப்பாய் வாய்ப்பில்லை
உன் வாய்கள் எதையோ சுவைத்து
அச்சுவைதனை
உலகிற்கு முரசரைந்து கட்டியம் கூறலாம்
வறண்டு போன விவசாயத்தை
இற்றுப்போன ஆடைகளை
ஒடுங்கிப்போன ஆலைகளை
உன் உணர்ச்சிகள் தருமா?

நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளை
அம்மணமாய் பாடையில் ஏற்று
உழைக்கும் மக்களின் உறுப்புக்களை
ஆராய்ச்சி செய் – கூடவே அவர்களுக்காக
உழைத்தவர்களையும்

எல்லாவற்றையும்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உன் அம்மணப்பேனாவுக்கு
நோபல் பரிசுகூட கிடைக்கலாம்

விவசாயம் நொடிந்து
விசம் குடித்து
செத்த பிணங்கள் அம்மணமாய்
பிணவறையில்
பளபளக்கும் ஆடையோடு
விரைந்து செல்
நிர்வாணக்கவிதைகள் எழுது
ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள்
உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்
 
 
1.லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
2.கவிதைகள்-அழகு

  2.

நீ தான் ஆசிரியன்

திசெம்பர் 3, 2009

நீ தான் ஆசிரியன்

பருவத்தேர்வுகள்
நெருங்கிவிட்டது போலிருக்கிறது
படித்துக்கொண்டிருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
தொலைபேசியில் கேட்கும் போதெல்லாம்……

தலையில் தட்டி குட்டி
இரவு முழுக்க விழுந்து விழுந்து
எதைப்படித்துக்கொண்டிருக்கிறாய்

?
புரியாததை புரிய வைக்க உன்னுள்
எத்தனைப் போராட்டம்
தெரியாததை தெரியவைக்க
எத்தனை விழிப்புக்கள்……

எதைப்புரிந்து கொண்டாய்?
எதைத் தெரிந்து கொண்டாய்?
ஆனாலும் கண்டிப்பாய்
நீ தேர்வாகிவிடுவாய்
மக்களைப் புரியாமலும்
தெரியாமலும்
இருக்கத்தானே தேர்வுகள்……

I=V/R
இது ஓம்ஸ் விதி
இன்னும் எத்தனை விதிகள்
எதை மாற்ற? எதை உருவாக்க?
மின்சாரத்தின் அலகினை
அளக்க முற்படும் நீ
என்றாவது நம் பொருளாதார அலகினை
பற்றி நினைத்திருக்கிறாயா?

அரிசி விலையும்
பருப்பு விலையும் எதனால்
ஏறுகிறதென்று தெரியாமல்
எதைப் படிக்கிறாய்?

மருத்துவம்,பொறியியல்
அறிவியல்……..
காய்ந்து போன நிலங்கள்
மூடிக்கிடக்கும் ஆலைகள்
சுருண்டு போன நெசவாளிகள்
எந்தப்படிப்பு வந்து இதை
மாற்றப்போகிறது?

பார்ப்பனீயத்தின் தேர்வுகள்
குத்திக்கிழிக்கின்றன
பறையனென்றும் சூத்திரனென்றும்
முதலாளித்துவம்
கடைசி பென்ச்-ல் உட்காரவைத்து விட்டது
உழைக்கும் மக்களை……

நீ டாக்டர் ஆனாலும் என்ஜினியர் ஆனாலும்
ஏன் அந்த கலக்டரே ஆனாலும்
இதை மாற்ற முடியுமா என்ன ?
உன் வாழ்வுக்கு
இம்மியளவும் பயன்படாத படிப்புதான்
உனக்கு மதிப்பு கொடுக்கப்போகிறதா?

படி நன்றாகப்படி
முதலில் உன்னைப்படி
இந்த உலகைப்படி
உழைக்கும் மக்களைப்படி
அவர்கள் தான் ஆசிரியர்கள்
அங்கிருந்து கற்போம்
புரிந்ததை உனக்கு தெரிந்ததை
பற்றி கற்போம்- வேலையில்லா
திண்டாட்டம் இங்கில்லை……

போராட்டத்தில்
ஓய்வுக்கு இடமில்லை
உன் விளங்காத படிப்பையும்
விளங்க வைக்க “புதிய ஜனநாயகத்தையும்”
சேர்த்துப்படி
இனி நீ விளக்கு
மற்றவர்களுக்கு நீ தான் ஆசிரியன்.

நண்பனுக்கு ஓர் கடிதம்

நவம்பர் 7, 2009

நண்பனுக்கு ஓர் கடிதம்

nov_2 copy

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்