Posts Tagged ‘காங்கிரசு’

தேர்தல் புராணம் – 2009

மே 5, 2009
தேர்தல் புராணம்  – 2009
பிடுங்கப்பட்ட மின்சாரம்
பியூஸ் போன தெருவிளக்கு
போடப்படாத சாலை
உடைந்துபோன பள்ளிக்கனவுகள்……

புதைக்குழிக்குள் விவசாயம்
பாலிடாலுக்கு தலையை
அடகு வைத்த விவசாயி
நெய்வதற்கு நூலில்லை
சொல்லுவதற்கு நெசவாளி
யென்ற பேரும் சொந்தம் இல்லை

இந்தியா முன்னேருகிறது
வசனங்கள் காதை கிழிக்க
இத்தாலி மருமவளும்
பஞ்சாப் வைப்பாட்டியும்
ஓட்டு கேக்க வருவார்கள் கைக்கு…….
சாதாரண கையா இது
நன்றாக பார்த்தால் தானே
தெரிகிறது காந்தியின்
பொக்’கை’

 
கண்ணன் வாயைதிறந்தால்
உலகமே தெரிந்ததாம்
அடேங்கப்பா
காந்தி வாய் திறந்தாலோ
அந்தக்கவலை காந்திக்கு வந்ததில்லை
எல்லாவற்றிக்கும் சிரிப்பு
அழகான புன்னகை

எப்படிப்பட்ட புன்னகை தெரியுமா
தாழ்த்தப்பட்டோரின் தோலினை
உரிக்க  உரிக்க -முசுலீம்களை
எரிக்க எரிக்க வந்த சிரிப்பல்லவா இது…..

காந்திக்கு பிறக்காவிட்டாலும்
தப்பாமல் காந்தியின் வாரிசாய்
மிளிர்ந்த அன்னை இந்திராவைத்தெரியுமா
என்ன செயலலிதா அவளின் ஆத்தாளே
இந்திராவுக்கு மல்லு கட்ட முடியுமா
மல்லு என்ன லுங்கியை தூக்கி
கட்டியவனுக்கெல்லாம் 3 கிலோ
அரிசி தந்து அறுத்து விட்ட கதை
சொன்னால்தான் தங்கபாலுவுக்கு தெரியுமா…

சீக்கியர் பிணத்தை தின்று
போராளிக்குழுக்களை ‘கை’யில்
வளைத்து சீன் காட்டி  சல்லடையாய்
நாயைப்போல குப்புறக்கிடந்த போது
ஆத்தா போலவே மகனும்
எது முன்
எது பின்
எனத்தெரியாமல் பிதுங்கி கிடந்தபோது
தாய் மண்ணும் கூட அழுதிருக்கும்
கண்ட கண்ட நாயெல்லாம்
என் மேல் விழுந்து சாவுறாங்களே
என்று….

‘கை’கதை தெரியாதென
வருகிறார்களோ இல்லை
தெரிந்தால் தான் என்னவென
வருகிறார்களோ
மறவாதீர் வாக்காளரே
கைக்கு ஓட்டு போட்ட
உங்கள் கையை பத்திரமாய்
வைத்துக்கொள்ளுங்கள்
ராகுல் காந்தியும் சேர்ந்து வருகிறாராம்……

 
ஒருபக்கம் கை என்றால்
மறுபக்கம் தாமரை
மலரினும் மெல்லிய
ஆனால் தாமரை எவ்வளவு மெல்லியது
தெரியுமா குஜராத்தில் கர்ப்பிணியின்
வயிற்றை கிழித்து சிசுவை அறுத்த
அதன் இதழ்களின் மென்மையை
பண்டாரப்பரதேசியெல்லாம்
வாய்மணக்க பாடுதே

சேற்றில் முளைத்த செந்தாமரை தெரியும்
அது என்ன பாரத மாதாவின் தாமரை
இது முளைக்க ரத்தசேறுதான் வேண்டும்
அதுவும் முசுலீம் ரத்தமென்றால் அலாதிபிரியம்
மாதாவின் ஒருகையில்
தாமரை மறுகையிலோ சூலம்
சாதா சூலமல்ல
ஸ்பெஷல் திரிசூலம்
முசுலீம் கிருத்துவன் கடைசியாய்
உழைக்கும் இந்துவென எல்லோருக்கும் வரிசையாய்
இருக்கிறது ஆப்பு…..

 

இலவசம்
இலவசம்  இலவசம்  எல்லாமே இலவசம்
பாக்க கலர் டிவி பொங்கித்தின்ன சோறு
மானக்கேடு கூட இலவசம்
கருணாவின் ஆட்சியில்
ஏன் தினவெடுத்து திரிபவனுக்கு
காண்டம் கூட மலிவு விலையில்
சிரிக்கிறான் சங்கராச்சாரி
கடவுளுக்கு காண்டமா?
அவனின் நாத்தச்சிரிப்பில்
ஓடுகிறாள் பாரதமாதா
நேத்து பாடுபட்ட மாதாவுக்கு
தானே தெரியும்
கள்ள சிரிப்பின் அர்த்தம்…..
நாயாகி பேயாகி
மலந்தின்னும் பன்னியாகி
எல்லாமும் எல்லாமுமாகி
கடைசி அவதாரம் தான்
அம்மா சாதா அம்மாஅல்ல
ஈழத்தம்மா – ஈழத்தை
பிரசவிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மடல்
பிரசவம் பார்க்க மருத்துவர் அய்யா
மூத்திரம் அள்ளிப்போட
போட்டியோபோட்டி
அட எட்டிப்பார்த்தால்
பாண்டிக்கும் வாண்டிக்கும்
குடுமிப்புடி சண்டை
புயலண்ணன் கையை பிசைய
மருத்துவர் சொன்னார்
ஆண் குழந்தை பொறந்திருக்கு
ஆச்சரியமாய் உள்ளே போனால்
அடேங்கப்பா பொறந்திருப்பது
ராஜ பக்சேவாம்
யாரிடமும் சொல்லாதீர்கள்
பிரசவத்திற்கு இலவசமென
ஓசியாய் ரிக்சாவில்
கூட்டிவந்த பெரியார் தி க
வாரிசுகளோ ஓரமாய் உட்கார்ந்து
விம்மி விம்மி அழ – மணியரசன் நெடுமாறனெல்லாம்
மருமகன் பொறந்ததுக்கு
குத்தாட்டம் போட
கதை கேட்டவர் என்னை திருப்பி கேட்டார்
ஏப்பா மொட்டத்தலைக்கும்
முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுற?

எது மொட்டை? எது முழங்கால்?
காந்தி மொட்டை ராஜபக்ஷே முழங்காலா?

தெளிவாய் விளக்கினேன்
” காங்கிரசு, பிஜேபி,பாமக,
வி.சி,திமுக,ம்திமுக,அதிமுக,
சிபிஎம்,சிபிஐ,ஆயிரம் பேர் வந்தாலும்
எல்லாவற்றிற்கும் ஆன்மாவும் ஒன்றுதான்
உயிரும் ஒன்றுதான்
அதுதான் அகிம்சை
அதுதான் காந்தி

 
காந்திகள் சிரித்துக்கொண்டிருக்கும் வரை
மக்களின் பிணங்கள்
எரிந்து கொண்டே இருக்கும்
தேர்தல் நடந்து கொண்டே இருக்கும்

 

“என்ன இருந்தாலும் ஓட்டு போடாம
இருக்க முடியுமா” கோபம் கொப்பளித்தார்

 
நான் பொறுமையாய் சொன்னேன்
பிணங்களுக்கு உயிரில்லை என்பது தெரியும்
ஆனால் அவைகளுக்கு தன்மானமிருப்பது
தெரியுமா-ஏனென்றால் அவைகள் ஓட்டு போடுவதில்லை.

சீமான் – மணி கைது

திசெம்பர் 20, 2008

seeman-copyசீமான் –  மணி  கைது
அரச பயங்கரவாதத்துக்கு தாளம் போடும்  வீடணர்கள்

நேற்றைய தினம் இயக்குனர் சீமான்மற்றும் த.பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி  ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் சட்ட  விரோதக்கருத்துக்களை பரப்பியும் வந்ததால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை அறிவித்துள்ளது.மணியரசனை தேடி வருவதாகவும் காவல் துறை அறிவித்து பின்னர் அவரையும் கைது செய்து விட்டது.கடந்த ஞாயிற்று கிழமை த.தே.பொ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறிகைது செய்யப்பட்டிருந்தாலும்  உண்மை அதுவல்ல.இலங்கையில் போரை நடத்திக்கொண்டிருக்கும்  இந்தியா தமிழகத்தில்  தன்னை அம்பலப்படுத்தும்  நபர்களை  தொடர்ச்சியாக கைது செய்கின்றது.கடந்த நான்கு நாட்களாகவே  உண்மையான இந்தியர்களான காங்கிரசு கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரிப்பதும் ,அவரையும் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவாய் பேசுவோரை தேசத்துரோகிகளாகவும் கூறிவருகின்றனர்.சீமானின் வீட்டில் புகுந்து காரை எரிக்கவும் முயன்றிருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் பேசுவதே இப்பொழுது தேசவிரோதமாகிவிட்டது.அங்கே களத்தில் இருப்பது பாரதம் அது என்ன செய்தாலும் ஆதரிக்கவேண்டும்.எதிர்ப்பாய் பேசும் எல்லோருக்கும் காத்திருக்கின்றது பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம்  சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது.

யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யுமா அப்படி எங்கேயாவது செய்திருக்கின்றதா?இந்தியாவின் மேலாதிக்க வெறி இன்னொறு நாட்டை கூறு போடுகின்றது.தான் கூறு போடுவதற்கு தடையாய் இருக்கும் புலிகளை அழிக்க சிங்களப்படையுடன் சேர்ந்து களத்தில் நிற்கின்றது என்பது தான் உண்மை.ராஜீவ் கொலைக்கு முன் தேனாய் இனித்த ஈழம் தற்போது கசப்பது ஏன்?தனது மேலாதிக்க வெறிக்காக மட்டுமே ஈழப்பிரச்சினையை கையிலெடுத்தது.தனது காரியம் முடிந்தவுடன் வேண்டாத விசயமாகவும் தேசவிரோதமாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலு “எங்கள் தலைவன் ராஜீவை பழிப்பவர்களை சும்மா விடமாட்டோம் அவனை தூக்கி உள்ளே போடு ” என்றெவுடனே  தமிழ்த்தாயை மொத்த குத்தகை எடுத்திருக்கும் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணி¢யையும் கைது செய்து இருக்கின்றார்.ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்காக சமாதானப்புறாவாகவும் மறு புறம் இந்திய தேசியத்தின் நாயகனாகவும் டபுள் ஆக்சனில்  நடித்துக்கொண்டிருக்கின்றார் தானே கதை வசனம் எழுதி.தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளவது காங்கிரஸ் தயவின்றி நடக்காது.குரங்காட்டியாக காங்கிரசும் குரங்காக  கருணாநிதியும் நமக்கு வித்தை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.சிங்கள தளபதி சொன்னதை தனது செயல் மூலம் கருணாநிதி நிரூபித்து இருக்கின்றார்.ஏற்கனவே வைகோ கைதின் போது “தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவு தவறில்லை ” என்று உச்ச மன்றம் சொன்னபின்னும் செல்லாத வழக்காக மாறும் எனத்தெரிந்தே தமிழக அரசு கைது வேலையை செய்கின்றது.மானங்கெட்ட கோழை மணியோ வாயே திறப்பதில்லை பெரியாரின் சொத்துக்களை தின்றுக்கொண்டிருக்கும் அந்த வாய் எப்போதும் மக்களின் உரிமைக்காக பேசாது.

இவர்களின் நோக்கம் ஈழப்பிரச்சனை மட்டுமல்ல இந்திய சிறைகூடத்தில் அடைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை உட்பட எதுவாக இருந்தாலும் அதை பற்றி பேசக்கூடாது.ஏன் மக்கள் பிரச்சினையை பற்றி பேசினால் கூட அது தேசவிரோதமாகிவிடுகின்றது. நாடு சுபிட்சமாக இருக்கின்றது.அமைதியாக இருக்கின்றது அதில் “இல்லாத “பிரச்சினையை  தீர்க்க முன்னெடுத்து செல்பவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளே.கருத்துரிமைக்காக போராடு யாவரும்  சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.

 

பாபர் மசூதியை சர்ச்சைகுரிய கட்டிடமாக அறிவித்த நீதிமன்றம் தீர்ப்புவரும் வரை அங்கு எவ்வித் நடவடிக்கையும் மேற்கொள்ளகூடாது என அறிவித்தது.அங்கு கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  வேலைகள் ஜரூராக நடைப்பெற்று வருகின்றது.அதனை முன்னெடுத்து செல்லும் VHP RSS ஐ தேசவிரோத சக்திகளுக்கு அரசே அடிகல்லை கொடுக்கின்றது.குஜராத்,ஒரிசா,பெங்களூர் என திட்டமிட்டு பார்ப்பன இந்து மத்வெறி பாசிசத்தை ஏவி வருகின்றனர்.கரசேவைக்கு போன வெறியர்களை பார்த்து தேச விரோத சட்டங்கள் பல்லளித்தன.அவர்கள் மீது பாயாத இந்த தேச பாதுகாப்பு சட்டங்கள் சனனாயக புரட்சிகர சக்திகள் மீது மட்டும் ஏன் பாய்கின்றன?ஏனன்றால் இது அவர்களின் நாடு இந்து பாசிச அரசு  இதில் சூத்திரன் பஞ்சமன் உள்ளிட்ட உழைக்கும் மக்கள்  யாவரும் இங்கு பயங்கர வாதிகளே ..பயங்கரவாதிகளின் ஆட்சியில் புனிதர் பட்டம் தேடிவராது.

 

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலுவை முக்கால் வாசி காங்கிரஸ்காரனுக்கே தெரியாது.தொண்டர்கள் ஏதும் இல்லாது முழுக்க முழுக்க தலைவர்களின் கட்சி  காங்கிரஸ் பேரியக்கம் .எல்லோரும் இன் னாட்டு மன்னர் என்பது போல காங்கிரஸ்-ல் எல்லோரும் தலைவர்கள்.திடீரென தங்கபாலுவுக்கு காங்கிரஸ் பேரியக்கம் மேல் காதல் பிறந்து  காமராசர் ஆட்சியை பிடிக்க பறந்து செல்கின்றார்.வாசனோ அதே காமராசர் ஆட்சி அமைக்க சைக்கிளில் வருகிறார்,ஈவிகேஎஸ் இளங்கோவனோ பாரின் சரக்கில் வருகிறார். நாளைக்கு காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியமைத்தால் அமைச்சரே இருக்க மாட்டார்கள் எல்லோரும் முதல்வர்.
இப்படி போகும் கட்சி கூட்டத்திலெல்லாம்  வேட்டியை உறுவிவிட்டு அனுப்பினாலும்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் “காங்கிரஸ் பேரியக்கம் கட்டுக்கோப்பானது” மறுத்துபேசினால் இதுகூட சட்டவிரோதக்கருத்தாக மாற்றப்பட்டு ராத்திரியில் கைது செய்ய போலீசு கதவை தட்டும்.

வெள்ளையனால் பெற்று துரோகிகளால் வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம்  சொல்கிறது”ஈழமக்களுக்காக தன் உயிரையே தந்தார் தலைவர் ராஜீவ்” இந்திரா அண்டு கோ தனது மேலாதிக்கத்திற்காக பாக்கை கூறுபோட்டு பிரித்தது போல ஈழமக்களின் துயரத்தை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.தாய்க்கு பின்  அமைதிப்படையை அனுப்பி அங்கு தமிழர்களை கொன்று தமிழச்சிகளை பாலியல் சித்த்ரவதை செய்தது தனயன் அரசு.அதற்கு பரிசாக  சொர்க்கம் அனுப்பப்பட்டார். இப்போது மானம் பொத்துக்க்கொண்டு வரும் இந்த புடுங்கிகளுக்கு   அரசால் கொல்லப்பட்ட லட்ச விவசாயிகளின் சீரழிந்த வாழ்வுக்கோ,sezஆல் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பற்றியோ,இந்து பாசிச பயங்கரவாதிகள் பற்றியோ பேசவாய்வராது.மாலேகானில் குண்டு வைத்த லே (கே)டிபெண் சாமியாரை தேசிய பாது காப்பு சட்டத்தில் போட சொன்னதா காங்கிரசு.குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி பற்றி கூட தப்பித்த்வறி பேசுவதில்லை.
பாஜக,காங்கிரஸ்  ரெண்டிற்கும் பேரில் தான் வேறு பாடு உள்ளதே தவிர செயலில் இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமானை கைது செய்யக்கோரி மனு கொடுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தொண்டர்கள் நரேந்திரமோடியை  பற்றி எந்த வாயிலும் மூச்சு விட மாட்டார்கள்.

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

ஆகா என்ன அருமையான வார்த்தை அய்யா  காங்கிரஸ் பேரியக்கத் தலைவரே நீங்கள் கொஞ்சம் அழிந்ததால் தானே நாங்கள் கொஞ்சம் நல்லாயிருக்கின்றோம்.மொத்தமாய் அழிந்து போங்கள் ! மக்களின் எதிரிப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையாவது குறையும்.

இனியும் “என்ன ஒரு சனனாயகம் என்று இந்த சாக்கடையை  நுகர்வோருக்கு நாம் பதிலேதும் சொல்லத்தேவையில்லை.