Posts Tagged ‘சீமான்’

ஈழப்பிணங்கள்

மே 20, 2009

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

raja _b copy

 

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில்  இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் விடுவிக்கப்பட்டுள்ளது,இலங்கையில் மத,இன,குல பேதம் எதுவு இல்லை என்று தமிழில் உரையாற்றி தனது  நாட்டு மக்களுக்கு அரச கொண்டாட்டத்தை அறிவித்தார்.இலங்கை தெருக்களில் கட்டாயமாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதையும்,  தமிழ் மக்கள் கூனிக்குறுகி நின்று மீண்டுமொரு 1983 வந்து விடுமோ என்ற பயத்தில் நிற்பதையும் பல  செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று  , தின்று  எல்லோரையும் முடித்து விட்டோம். பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை செய்யப்பட்டுவிட்டது.மக்களே இனி நம் நாட்டில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என  தமிழர்களின் ரத்த சகதியில் தோய்த்த பூவினை சிங்கள மக்களுக்கு காதில் சுற்றுகிறான் மகாத்மா மகிந்தா. புலிகளிடம் சிக்கியிருந்த, பாதிக்கப்பட்டிருந்த , கைதிகளாய் பிடிக்கப்பட்டிருந்த எனக்கூறி மக்களுக்கு சொர்க்கத்தினை ஆட்லெறி குண்டுகள் மூலமும்  ரசாயன குண்டுகள் மூலமும் பாஸ்பரஸ் குண்டுகள் மூலமும் வழியனுப்பி வத்துவிட்டு தமிழ் மக்களின் ரத்தம் குடித்த வாயினை கூட துடைக்காமல் நான் தான் தமிழர்களுக்கு காவலன்”  என ஆணவத்தோடு அறிவித்துவிட்டான் மகிந்தா.
கடந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பாசிசம் புலிகள் ஒழிப்பு என்ற பேரில் ஒரு இனத்தினையே ஒழித்திருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்கு பின் மாபெரும் இன அழித்தொழிப்பு யுத்தம் இலங்கையில் உலக நாடுகளின் மறைமுக உதவியோடும் இந்தியா, சீனா,ரஷ்யா உல்ளிட்ட நாடுகளின் நேரடி உதவியோடு  நடைபெற்று வருகிறது.
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும்  முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு  அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும்  என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது  இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.

காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே.  இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும்  செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை  நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது,  அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்படி வகைதொகியின்றி அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்கள்.பல பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து மூலதனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. தெருவில் சுற்றித்திரியும் சொறி நாய்களை ,வெற் ந்¡ய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டு என ஒப்பாரிவைக்கு இந்த  மூலதனத்தின் கருணை கனிந்தபார்வை எப்போதும் மக்களின் பக்கம் திரும்புவதில்லை. வெறிநாயினை கொல்லும் போது அதற்குவலிக்கும் என வாதிடும்  மூலதனம் மக்கள் தலையில் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி அழிக்கிறது.இது எப்படி சாத்தியம் ஒன்றே அழிவையும் உயிரையும் நேசிக்குமா? நேசிக்கும் என்பதுதான் வரலாறு மூலதனத்தின் தேவைக்குத்தான் நாய்க்கு கருத்தடை பரவலாக  பரப்புரை செய்யப்படுகிறதே தவிர அதற்கு வலிக்கும் என்பதற்காக அல்ல,அதே பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது மூலதனத்தினைபெருக்குவதற்காகன தேவையாய்  அமைகிறது. மூலதனம் தன் தேவைக்காக எதையும் செய்யும்,ஆனால் அதில் துளியும் மக்கள் நலனுக்காக இராது.
 
தற்போது போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து  விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றகதையும் அதோடு மூடப்படுகின்றது. நேபாள மன்னன் மக்கட்புரட்சியினால் அரண்மனையை விட்டு துரத்தப்பட்ட போது  தனது உடற்துளைகளின் வழியே அழுத ஊடகங்கள் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண விசயமாக்கின.தற்போது பிரபாகன் மற்றும் அவரது மகன் இறந்ததாக இலங்கை அரசும்,இல்லை தமிழீழத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என புலிகளும் சொல்லிவருகின்றனர்.
இலங்கைஅரசின்  இந்தப்பிரச்சாரம் எதற்காக?  கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும்  அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.

பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது  வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது.  குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.
——————————————————————————————————————————————————————————-

தமிழகத்தினைப்பொறுத்தவரை தேர்தலில்  ஈழப்பிரச்சினையை உண்மையாக முன்னிறுத்த எந்த அரசியல்ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.மக்கள் கொல்லப்படும் போது கருணாநிதி போர் நின்றதாகஅறிவித்தார்.மீண்டும்  தொடர்கிறதே எனகேட்டதற்கு மழை நின்றவுடன் துவானம் போல என இலக்கியம்  பேசினார். பார்ப்பன பாசிச செயாவோ ஈழத்தை பெற்று தரப்போவதாக சவடால் விட்டார்.  ராமதாசு தனது தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஈழப்படுகொலைகளை ஒளிபரப்பி  தனக்கு ஓட்டு பொறுக்கினார்.திருமாவோ சோனியா அம்மையார் வாழ்க என உரத்து முழங்கி கெஞ்சி மன்றாடி ஈழமக்களின் உரிமைகளை கேட்டார்.
 
இதைவிட ஈழப்பிரச்சினைக்கு பெதிகவும் சீமானும் தமிழினவாதிகளும் செயாவுக்கு மட்டுமே வழிதெரியுமென கூறி ஈழத்தின் மக்களை கொச்சை படுத்தினர். இந்த தேர்தலில் செயா ஜெயித்து கண்டிப்பாக ஈழத்தினைத்தருவார் என மாய்மாலத்தினை ஏற்படுத்தினர்.கருணா செய்தது துரோகம் எனில் மக்களின்
போராட்டத்தை சிறுமை படுத்தி செயாவிடம் ஈழச்சாவியை கொடுத்தது சரியா தவறா?
செயா ஒரு பாசிச சித்தாந்தவாதி,இதை அதிமுக காரன் கூட ஒத்துக்கொள்வான்.ஆனால் அந்த செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்தியது துரோகமா? இல்லையா?

 நேற்றுவரை செயா பிராபாகரன் குற்றவாளி என சொன்னபோது ஆமாம் சாமி போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஈழம் மலர அம்மாவுக்கு ஓட்டு போடுங்கள் என சீமான் சொன்ன போது விசிலடித்தனவே
அய்யோ,
ஈழமக்களின் போராட்டத்தை இந்த நாய்களின் காலடியில் அர்ப்பணித்த  உங்களை என்னவென்று
சொல்வது?
 
—————————————————————————————————————————————————————————————
பாசிசம் ஓரு போதும் வென்றது  இல்லை, மக்களின் போராட்டமும் வீழ்ந்ததில்லை. யார்  வீழ்ந்தாலும்எல்லாம் பறிக்கப்பட்டாலும் பறிக்கமுடியாதது ஒன்று இருக்கிறது அதுதான் சுதந்திர வேட்கை. இன்றைய தவறுகள் நாளைய பாடங்கள்.
 கண்டிப்பாய் மீண்டும் போர் மூளும்  எதிரிகள் நாளை வீழ்த்தப்படலாம், நாம் எந்தப்பக்கம் இருக்கிறோம்? பிரபாகரனின் மரணசெய்தியைகேட்டு, கொத்து கொத்தாய் கொல்லப்படும்  மக்களை பார்த்து விடப்படும் நமது வெற்றுகண்ணீர் அம்மக்களை சுட்டெரிக்கவே செய்யும். சிங்கள இனவெறி பாசிசத்துக்கு துணை போகும் இந்தியத்தை முறியடிக்காது ஈழத்தில் வெற்றி மலரப்போவதில்லை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவாமலிருந்தாலும் பரவாயில்லை உங்கள் இந்திய சாயத்தின் கண்ணீரை விடாதீர்கள்.அவை பட்டுப்போய்விடும்.

சீமான் – மணி கைது

திசெம்பர் 20, 2008

seeman-copyசீமான் –  மணி  கைது
அரச பயங்கரவாதத்துக்கு தாளம் போடும்  வீடணர்கள்

நேற்றைய தினம் இயக்குனர் சீமான்மற்றும் த.பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி  ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் சட்ட  விரோதக்கருத்துக்களை பரப்பியும் வந்ததால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை அறிவித்துள்ளது.மணியரசனை தேடி வருவதாகவும் காவல் துறை அறிவித்து பின்னர் அவரையும் கைது செய்து விட்டது.கடந்த ஞாயிற்று கிழமை த.தே.பொ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறிகைது செய்யப்பட்டிருந்தாலும்  உண்மை அதுவல்ல.இலங்கையில் போரை நடத்திக்கொண்டிருக்கும்  இந்தியா தமிழகத்தில்  தன்னை அம்பலப்படுத்தும்  நபர்களை  தொடர்ச்சியாக கைது செய்கின்றது.கடந்த நான்கு நாட்களாகவே  உண்மையான இந்தியர்களான காங்கிரசு கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரிப்பதும் ,அவரையும் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவாய் பேசுவோரை தேசத்துரோகிகளாகவும் கூறிவருகின்றனர்.சீமானின் வீட்டில் புகுந்து காரை எரிக்கவும் முயன்றிருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் பேசுவதே இப்பொழுது தேசவிரோதமாகிவிட்டது.அங்கே களத்தில் இருப்பது பாரதம் அது என்ன செய்தாலும் ஆதரிக்கவேண்டும்.எதிர்ப்பாய் பேசும் எல்லோருக்கும் காத்திருக்கின்றது பாசிச சட்டங்கள்.தடா,பொடா,வரிசையில்
புதியதாய் NIA சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே ராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சீமான் மீண்டும் கைது இது எதை அறிவிக்கிறது எனில் யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதனையா? தமிழகத்தையே பங்கு போட்ட செயாவின்மீதும்,அமெரிக்க உளவாளி சு.சாமியின் மீது பாயாத சட்டம்  சீமான் மீது மீண்டும் பாய்ந்திருக்கின்றது.

யாராயிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யுமா அப்படி எங்கேயாவது செய்திருக்கின்றதா?இந்தியாவின் மேலாதிக்க வெறி இன்னொறு நாட்டை கூறு போடுகின்றது.தான் கூறு போடுவதற்கு தடையாய் இருக்கும் புலிகளை அழிக்க சிங்களப்படையுடன் சேர்ந்து களத்தில் நிற்கின்றது என்பது தான் உண்மை.ராஜீவ் கொலைக்கு முன் தேனாய் இனித்த ஈழம் தற்போது கசப்பது ஏன்?தனது மேலாதிக்க வெறிக்காக மட்டுமே ஈழப்பிரச்சினையை கையிலெடுத்தது.தனது காரியம் முடிந்தவுடன் வேண்டாத விசயமாகவும் தேசவிரோதமாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலு “எங்கள் தலைவன் ராஜீவை பழிப்பவர்களை சும்மா விடமாட்டோம் அவனை தூக்கி உள்ளே போடு ” என்றெவுடனே  தமிழ்த்தாயை மொத்த குத்தகை எடுத்திருக்கும் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணி¢யையும் கைது செய்து இருக்கின்றார்.ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்காக சமாதானப்புறாவாகவும் மறு புறம் இந்திய தேசியத்தின் நாயகனாகவும் டபுள் ஆக்சனில்  நடித்துக்கொண்டிருக்கின்றார் தானே கதை வசனம் எழுதி.தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ளவது காங்கிரஸ் தயவின்றி நடக்காது.குரங்காட்டியாக காங்கிரசும் குரங்காக  கருணாநிதியும் நமக்கு வித்தை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.சிங்கள தளபதி சொன்னதை தனது செயல் மூலம் கருணாநிதி நிரூபித்து இருக்கின்றார்.ஏற்கனவே வைகோ கைதின் போது “தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவு தவறில்லை ” என்று உச்ச மன்றம் சொன்னபின்னும் செல்லாத வழக்காக மாறும் எனத்தெரிந்தே தமிழக அரசு கைது வேலையை செய்கின்றது.மானங்கெட்ட கோழை மணியோ வாயே திறப்பதில்லை பெரியாரின் சொத்துக்களை தின்றுக்கொண்டிருக்கும் அந்த வாய் எப்போதும் மக்களின் உரிமைக்காக பேசாது.

இவர்களின் நோக்கம் ஈழப்பிரச்சனை மட்டுமல்ல இந்திய சிறைகூடத்தில் அடைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை உட்பட எதுவாக இருந்தாலும் அதை பற்றி பேசக்கூடாது.ஏன் மக்கள் பிரச்சினையை பற்றி பேசினால் கூட அது தேசவிரோதமாகிவிடுகின்றது. நாடு சுபிட்சமாக இருக்கின்றது.அமைதியாக இருக்கின்றது அதில் “இல்லாத “பிரச்சினையை  தீர்க்க முன்னெடுத்து செல்பவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளே.கருத்துரிமைக்காக போராடு யாவரும்  சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.

 

பாபர் மசூதியை சர்ச்சைகுரிய கட்டிடமாக அறிவித்த நீதிமன்றம் தீர்ப்புவரும் வரை அங்கு எவ்வித் நடவடிக்கையும் மேற்கொள்ளகூடாது என அறிவித்தது.அங்கு கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  வேலைகள் ஜரூராக நடைப்பெற்று வருகின்றது.அதனை முன்னெடுத்து செல்லும் VHP RSS ஐ தேசவிரோத சக்திகளுக்கு அரசே அடிகல்லை கொடுக்கின்றது.குஜராத்,ஒரிசா,பெங்களூர் என திட்டமிட்டு பார்ப்பன இந்து மத்வெறி பாசிசத்தை ஏவி வருகின்றனர்.கரசேவைக்கு போன வெறியர்களை பார்த்து தேச விரோத சட்டங்கள் பல்லளித்தன.அவர்கள் மீது பாயாத இந்த தேச பாதுகாப்பு சட்டங்கள் சனனாயக புரட்சிகர சக்திகள் மீது மட்டும் ஏன் பாய்கின்றன?ஏனன்றால் இது அவர்களின் நாடு இந்து பாசிச அரசு  இதில் சூத்திரன் பஞ்சமன் உள்ளிட்ட உழைக்கும் மக்கள்  யாவரும் இங்கு பயங்கர வாதிகளே ..பயங்கரவாதிகளின் ஆட்சியில் புனிதர் பட்டம் தேடிவராது.

 

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

தங்கபாலுகாங்கிரஸ்-ன் தலைவர் தங்கபாலுவை முக்கால் வாசி காங்கிரஸ்காரனுக்கே தெரியாது.தொண்டர்கள் ஏதும் இல்லாது முழுக்க முழுக்க தலைவர்களின் கட்சி  காங்கிரஸ் பேரியக்கம் .எல்லோரும் இன் னாட்டு மன்னர் என்பது போல காங்கிரஸ்-ல் எல்லோரும் தலைவர்கள்.திடீரென தங்கபாலுவுக்கு காங்கிரஸ் பேரியக்கம் மேல் காதல் பிறந்து  காமராசர் ஆட்சியை பிடிக்க பறந்து செல்கின்றார்.வாசனோ அதே காமராசர் ஆட்சி அமைக்க சைக்கிளில் வருகிறார்,ஈவிகேஎஸ் இளங்கோவனோ பாரின் சரக்கில் வருகிறார். நாளைக்கு காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியமைத்தால் அமைச்சரே இருக்க மாட்டார்கள் எல்லோரும் முதல்வர்.
இப்படி போகும் கட்சி கூட்டத்திலெல்லாம்  வேட்டியை உறுவிவிட்டு அனுப்பினாலும்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் “காங்கிரஸ் பேரியக்கம் கட்டுக்கோப்பானது” மறுத்துபேசினால் இதுகூட சட்டவிரோதக்கருத்தாக மாற்றப்பட்டு ராத்திரியில் கைது செய்ய போலீசு கதவை தட்டும்.

வெள்ளையனால் பெற்று துரோகிகளால் வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம்  சொல்கிறது”ஈழமக்களுக்காக தன் உயிரையே தந்தார் தலைவர் ராஜீவ்” இந்திரா அண்டு கோ தனது மேலாதிக்கத்திற்காக பாக்கை கூறுபோட்டு பிரித்தது போல ஈழமக்களின் துயரத்தை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.தாய்க்கு பின்  அமைதிப்படையை அனுப்பி அங்கு தமிழர்களை கொன்று தமிழச்சிகளை பாலியல் சித்த்ரவதை செய்தது தனயன் அரசு.அதற்கு பரிசாக  சொர்க்கம் அனுப்பப்பட்டார். இப்போது மானம் பொத்துக்க்கொண்டு வரும் இந்த புடுங்கிகளுக்கு   அரசால் கொல்லப்பட்ட லட்ச விவசாயிகளின் சீரழிந்த வாழ்வுக்கோ,sezஆல் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பற்றியோ,இந்து பாசிச பயங்கரவாதிகள் பற்றியோ பேசவாய்வராது.மாலேகானில் குண்டு வைத்த லே (கே)டிபெண் சாமியாரை தேசிய பாது காப்பு சட்டத்தில் போட சொன்னதா காங்கிரசு.குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி பற்றி கூட தப்பித்த்வறி பேசுவதில்லை.
பாஜக,காங்கிரஸ்  ரெண்டிற்கும் பேரில் தான் வேறு பாடு உள்ளதே தவிர செயலில் இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமானை கைது செய்யக்கோரி மனு கொடுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தொண்டர்கள் நரேந்திரமோடியை  பற்றி எந்த வாயிலும் மூச்சு விட மாட்டார்கள்.

“தமிழர்களுக்காக தன்னையே அழித்துக்கொண்ட இயக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே”

ஆகா என்ன அருமையான வார்த்தை அய்யா  காங்கிரஸ் பேரியக்கத் தலைவரே நீங்கள் கொஞ்சம் அழிந்ததால் தானே நாங்கள் கொஞ்சம் நல்லாயிருக்கின்றோம்.மொத்தமாய் அழிந்து போங்கள் ! மக்களின் எதிரிப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையாவது குறையும்.

இனியும் “என்ன ஒரு சனனாயகம் என்று இந்த சாக்கடையை  நுகர்வோருக்கு நாம் பதிலேதும் சொல்லத்தேவையில்லை.