Posts Tagged ‘செயா’

விளங்காத படிப்பும்-விளங்கவைக்கும் அரசியலும்

மே 19, 2010

விளங்காத படிப்பும்
விளங்கவைக்கும் அரசியலும்

கடந்த வாரம் வெள்ளியன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. பத்திரிக்கைகளில்  மாநில வாரியாக, மாவட்ட வாரியாக முதலிடம் வென்ற மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் மின்னுகின்றன.  மாநில  தகுதி பெற்ற நபர்களின் செவ்விகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டன.  “நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன், இஞ்சினியராகுவேன், ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்”

அதிக மதிப்பெண் பெற்றோரை வாழ்த்த நான் என்னளவில் தயராயில்லை, காரணம் ஏன்பலர் குறைவான  மதிப்பெண் வாங்கினார்கள் எனும் போது, அதிக மதிப்பெண்களைக்காணும் போது என்னையறியாமல் அதன் மீது வெறுப்புதான் வருகிறது. பக்கத்து வீட்டிலோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிலோ உள்ள பிள்ளைகள் தன் மகன்/மகளை விட அதிக மதிப்பெண் வாங்கும் போது நடக்கின்ற விசயம் எல்லோரும் அறிந்ததே.

காரணம் தவறு செய்து விட்டான் / ள். அது மன்னிக்க முடியாத தவறு. ஆம் அப்படி ஒரு தவறு. சரியாக மனப்பாடம் செய்யத் தெரியாததால் நேர்ந்த தவறு அது. உருத்தட்ட தெரியாததால் நேர்ந்த தவறு அது. இங்கே தவறு செய்ய நேர்ந்ததால் இனி அவ்வளவுதான் வாழ்க்கை. தகுதியற்றவர்களெல்லாம் அறிவுரைக்கு வரிசையாய் நிற்பார்கள். தேர்வுகளில் தோல்வியுற்றவர்களை விட மதிப்பெண் குறைவாக வாங்குவோரின் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.

தோல்வியடைந்து விட்டால் வேறு வழியில்லை மறு தேர்வுதான் வழியில்லை. இப்போதுதான் உடனே நடக்கிறது மறுதேர்வு, முன்பெல்லாம் ஒரு வருடத்தை தொலைக்க வேண்டியதுதான். இம்ப்ரூவ்மெண்ட் என்பது கூட 12 வகுப்பில்தான். பத்தாம் வகுப்பின் தேர்வு முடிவுகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆம் மதிப்பெண் குறைவெனில் முதல் பிரிவு கிடைக்காது, பள்ளியே பார்த்து ஏதாவதென்று பிச்சை போடும்.

தேர்வில் தோல்வியடைந்தவர்கள்  நாளிதழ்களைப்பார்த்தவுடன் தெரிந்துவிடும் என்பதால் வெளியே வரமாட்டார்கள். மதிப்பெண் குறைவானவர்களோ அவர்கள் தகுதி பள்ளியில் ஒட்டியிருக்கும் மார்க் லிஸ்டை பார்த்தவுடந்தான் தெரியும். மதிப்பெண் குறைவு என்றவுடன் தெரிந்த முகங்கள் யாராவது தெரிந்தால் ஓடி ஒளியும். யாராவது மார்க் கேட்டால் என்ன சொல்வது தெரியாது? மனம் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்துகிடக்கும்.

அதிக மார்க் வாங்கிய ஜீவிகள்  பள்ளிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். தெரிந்தவனையெல்லாம் பார்த்து மதிப்பெண் விசாரித்து கொண்டிருப்பார்கள். மதிப்பெண்ணை கூட்டி சொன்னால் இதுதானே உன் மதிப்பெண் என்று எழுதி வைத்திருப்ப்பதை  சொல்லுவார்கள். இப்படி தலை கவிழ்ந்த எத்தையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.

வீட்டிலோ நிலைமை  நிலை பூடாகரமாகிக்கொண்டிருக்கும். தந்தை சொல்லுவார்”ஏன் நாயாட்டம் தின்னத்தெரியுதுல்ல என்னடா மார்க் வாங்கியிருக்க, அய்யோ என் பேரை கெடுத்துட்டு வந்து நிக்குதே, தாய் தல்யில் அடித்துக்கொண்டு அழுவார் பக்கத்து வீட்டு முருகேசன் உன்னமாதிரிதாண்டா ஸ்கூலுக்கு போறான், அவன் என்னடா மார்க்கு? அவன் எப்புடிடா மார்க் வாங்குனான்? அவன் மூத்திரத்தை வாங்கிகுடி”.

அவன் மூத்திரத்தை வாங்கிக்குடி இது புகழ்பெற்ற வாசகம், ஊர் கடந்து, மாவட்டம் கடந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக்கிடக்கின்ற வார்த்தை. அவ்வார்த்தையை பத்து பேர் முன் சொல்லும் போது வருகின்ற  அவமானம் அதுதான் பலருக்கும் முதல் அவமானமாக இருக்கும். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும், , வெடிக்கும் அழுகையை கைகள் பொத்தி பொத்தி அடக்கும். ஏதும் செய்ய இயலாமையால் தலை குணிந்து கிடக்கும் முகம் .

ஆதரவாய் சொல்பவர்கள் கூட ஒன்றை அழுத்திச்சொல்லுவார்கள்”என்ன பண்றது தப்பு பண்ணிட்டே”. இப்போது நீ மேற் கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பது முடிவு செய்யும் அதிகாரம் உனக்கு இல்லை. சொந்தக்காரன் வந்து தன் மகனின் பெருமை பீற்றிக்கொள்ளுவான்.  வீட்டிலே காரியக்கமிட்டி கூட்டம் கூடும் இந்த தண்டத்தை என்ன மேற்கொண்டு படிக்க வைக்கலாம்? ஆலோசனைகள் வெளியார்களிடமிருந்தும் வரவேற்கபடும்.பின்னர் எடுத்த முடிவின் படி ஏதோ ஒன்றில் சேர்க்கவைக்கப்படுவான்/ள்.

பத்தாவது மற்றும் பணிரெண்டாவதில் அதிக மதிப்பெண் எடுத்ததாலேயே அவன் உயர்ந்தவனாகிவிட்டானா? குறைவான மதிப்பெண் வாங்கியதாலே  தாழ்ந்தவனாகிவிடுவானா? மேற்கொண்டு படிக்கப்போகும் இடத்தில் முதல் நாள் ஆசிரியர் கேட்பார்.”யார் எவ்வளவு மார்க் சொல்லுங்க?” மறுபடியும் ஆரம்பித்துவிடும் வேதனை.

பத்தாவதிலேயே அதிக மதிப்பெண் எடுத்த  அனைவராலேயும் +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, +2-ல் அதிக மதிப்பெண் எடுத்த அனைருமே பட்டப்படிப்புகளில் / பட்டயப்படிப்புக்களில் அதிகம் சாதித்து விடுவதில்லை. அறிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மனனம் செய்யும் திறமை தான் இதை தீர்மானிக்கிறது.

முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அரிசி விலை கிலோ எவ்வளவென்றால் தெரிவதில்லை.கான்வெண்டில் கிழித்த மாணவனுக்கு கடைக்கு போய் மீன் வாங்கிவிட்டு வர தெரிவதில்லை. ஏன் அரிசி விலை ஏறியது, ஏன் விவசாயம் அழிந்து போனது என எதுவுமே தெரியாமல் / தெரியவைக்கப்படாமல் தான் அனைத்து மாணவர்களுமே வளர்க்கப்படுகிறார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாத சமூகம் அடிமைத்தனமான சமூகம் உருவாக்கப்படுகின்றது.

இதில் அதிக மார்க் எடுத்தவன் உயர்ந்தவன் குறைந்த மார்க் எடுத்தவன்  தாழ்ந்தவன் என்பதுதான் வேடிக்கை. இந்தக் கல்விமூறையால் எதை மாற்ற முடியும் உன்னால்? ஏன் உன்னுடைய வாழ்வுக்கான செலவை உன் கல்விமூறையால்  மாற்ற முடியுமா? அழிந்து போன விவசாயத்தை மாற்ற முடியுமா ? எதையுமே மாற்ற முடியாத இந்தப்படிப்பு முறை உயர்ந்ததா என்ன? இப்படி மனிதனின் வாழ்வுக்கு தம்புடி அளவுக்குக்கூட பயன் படாத இந்தப்படிப்பு முறையில் அதிக மதிப்பெண் எடுத்தால் என்ன?

குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக இக்கல்விமுறை மீது வராத கோபம் தனிப்பட்ட மாணவர் மீது வருகிறது. லட்சக்கணக்கானோரில் சிலர்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிகிறதெனில் அது யாருடைய தவறு கல்விமுறாஇயின் மீதா? அல்லது அதை படித்த மாணவர்கள் மீதா ? சிஅல்ர் கேட்பார்கள் அவன் எப்படி படித்தான். அந்த அவனோ அல்லது அவளோ நூற்றிலே எத்தனை பேர். ஆக  நூற்றுக்கு அல்லது ஐம்பதிற்கு ஒரு மாணவன்தான் அதிக மதிப்பெண் பெற முடியுமெனில் அக்கல்வி முறை வகுப்பில் நூற்றுக்கு 10 பேருக்கா அல்லது 90 பேருக்கா?

பத்தாவதெனில் 375 மதிப்பெண்தான் பார்டர் பணிரெண்டாவதில் 950 தான் பார்டர் அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்ததெல்லாம் வேஸ்ட் இதுதான் சமூகத்தின் பார்வை. என்னுடன் படித்த மாணவன் பத்தாவதில் மதிப்பெண் குறைவு ஆனால் டிப்மோவில் 92 % மதிப்பெண் வாங்கினான்.  பின்னர் பி.இ. முடித்தும் விட்டான். அதனால் அவன் உயர்ந்தவனல்ல காரணம் அவன் இன்னமும் அடிமையில் சுகம் காணுபவன். அவன் இன்னமும் மக்களைப்பற்றி கவலைப்படாதவன். ஆக படிப்பிற்கும் வாழ்வுக்கும் சுயமரியாதைக்கும் துளியும் சம்பந்தமிருப்பதாய் தெரியவில்லை.

எது தகுதிக்குறைவு?

இந்த முறை தேர்வு முடிவுகள் வந்ததுமே சிலர் ஆங்காங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்கொலை எனபது “அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்ற சிந்தனை” மதிப்பெண் குறைவையும் தோல்வியடைவதையும்  மாபெரும் குறையாக காட்டும் சமூகம் தான் முதல் குற்றவாளி. மதிப்பெண் குறைவு/ தோல்வி எனில் வெளியில் தலை காட்ட முடியாது என்ற நிலைமைக்கு என்ன காரணம்? மாணவர்களுக்கு சமூகத்தைப்பற்றிய அறிவு புகட்டப்படாமலிருப்பதே இதன் காரணம். சின்ன மருது புலியை அடக்கியதான்  மூன்றாம் வகுப்பு பாடங்களில் வந்தது. அவரின் திருச்சிபிரகடனம் வாத்தியாருக்கே தெரிவதில்லை.  இங்கு ஆசிரியரை இழுக்கக் காரணம் அந்த 3-ம் வகுப்பு படித்த மாணவன் தானே பிற்காலத்தில் ஆசிரியராகிறான்.

மாபெரும் துரோகி காந்தி இந்த நாட்டின் தேசத்தந்தையாக மாணவர்களின் மனதில் பதியவைக்கப்படுகிறது. புரட்சியாளன் பகத்சிங் புறக்கணிக்கப்படுகிறார்.அண்ணா, கருணா நிதி, கூத்தாடி எம்ஜிஆர் செயா பாடங்கள் படிப்பாக வருகின்றன. ஆதிகால சங்க இலக்கியங்கள் என்ற பேரில் எது தேவை எது தேவையில்லை என்பதெல்லாம் தெரிவதில்லை. மனப்பாடம் செய், மனப்பாடம் செய் இதுதான் தேர்வில் வெற்றி பெற உத்தி.

பத்தாவதில் பீட்டர் கையை வைத்து  சுவற்றில் வழியும் நீரை அடைப்பான். அது ஒரு கதை. அந்தக்கதையை கதையாக எப்படி எழுதுவதென்று யாரும் சொல்லித்தரவில்லை. மனப்பாடம் செய்,மனப்பாடம் செய் இதை த்தா சொன்னார்கள். மனிதனின் மூளையை சிந்திக்கச் சொல்லவில்லை.  மனப்பாடம் செய்ய மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள். போராட்டம் தவறென்றார்கள். அரசியல் தவறென்றார்கள்.

என் அன்பு மாணவனே,

போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும்   துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.

அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள்  நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று  கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது

படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்?  உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்?

பணமின்றி படிப்பதற்கு படிப்பொன்று இருக்கிறது.  ஆம் மக்களைப்படி, அவர்களிடமிருந்து கல், அவர்களுக்கே கற்றுக்கொடு, அதற்காக உன்னை படிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த விளங்காத படிப்பை விளங்க வைக்க மக்களையும் சேர்த்துப்படி. மதிப்பெண் குறைவென்றும் தேர்வில்தோல்வியுற்றனென்றும் உன்னை கிண்டலடித்தவர்களை எதிர்த்து , போராத அடிமைகளே என்று நீ எள்ளி நகையாடு.   இனி நீ தான் ஆசிரியன்.

(தாலி  – இதைப்புனிதமாக கூறவில்லை, பலர் கடைசியாய் வேறு வழியின்று வைக்கும் ஒரு பொருள் என்ற அளவில் மட்டும்)

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

ஏப்ரல் 23, 2009

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்


ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும்  அதில்பெரியார்  தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும்  முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.

அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.

எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை  சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.

இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை  பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.

மக இ கவின் தோழர்  பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே  அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது.  மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம்  பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.

யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?

ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.

ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.

ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி  தற்போதுதான்  ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.

எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார்.  அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.

நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே  அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி  பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 20000 சிங்கள வீரர்களைபிடித்து வைத்திருந்தார்கள் புலிகள் அப்போதைய வாஜ்பாய் அரசு அவர்களை விடுவிக்க வில்லையெனில் இந்தியா தாக்குதல் நடத்தும்
என எச்சரித்து அவ்வீரர்களை விடுவித்தது.
அப்போது மத்திய பஞ்சணையில் படுத்திருந்த வைகோவுக்கோ ராமதாசுக்கோ ஏன்  எந்த நாய் கூப்பிட்டாலும் வக்காலத்து வாங்கும் நெடுமாறனுக்கு தெரியாதா இது தூரோக அரசு என்று .என்னவொ இது நாள் வரை ஈழத்துக்காக எல்லா ஓட்டு பொறுக்கிகளும் பாடுபடுவதைப்போலவும் காங்கிரசு  மட்டும் திருடன் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.
தலைமைத்திருடன் இந்திய தேசியமே அதன் வல்லாதிக்கப்போக்கே என்பது உரைக்கிறதா அல்லது உரைக்காதது போல் நடிக்கிறார்களா. காங்,பிஜேபி,திமுக அதிமுக மதிமுக பாமக,விசி என எல்லாருமே ஈழமக்கள் பிணத்தி பிரியாணி தின்னப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் வைகோ டெல்லியில் அத்வானியை கூட்டிவந்து மீட்டிங் போடுகிறார்,  நேத்துவரை மத்திய அரசில் பொறுக்கி தின்றுவிட்டு தற்போது ஈழமக்களுக்காக கண்ணீர்விடும் ஓநாய் ராமதாசுஈழத்தியாகியா?பிரபாகனை தூக்கில் போடச்சொன்ன செயா பெதிகவுக்கு தியாகியாக காட்சியளிக்கிறாரல்லவா?
கொளத்தூர் மணி ஜூவிக்கு தந்த பேட்டியில் மேலும் சொல்கிறார்“கருப்பனை  கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் இது எப்படி சாத்தியம் என்பதனைபெதிகவினர் விளக்க வேண்டும். செயா 1991-96 வரை சதிராட்டம் போட்ட  அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வியதால்   2001-2006 வரை பொற்கால ஆட்சி நடத்தினாரா. இல்லை தற்போது கருணா நிதி தற்போதைய ஆட்சியில் தவறு செய்கிறாராம் அதை தேர்தல் முறையில் பெதிகவினர் தண்டிப்பார்களாம் அடுத்த முறை அவர் தன் தவறினை திருத்திக்கொள்வார்களாம்.அடேங்கப்பா இது என்ன திருவிளையாடல் கத மாதிரி அல்லவா இருக்கிறது.அய்யா சுயமரியாதை சிங்கங்களே இதை திமுக அதிமுக கட்சிகாரன் கூட நம்பமாட்டானய்யா.

இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு  பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.

ஆனால்  பெண் சங்கராச்சாரி செய்த திராவிட சேவைகளுக்காக தற்போது ஆதரிக்கிறதோ என்னவோ.தன்னை விமரிசனம் செய்யும் ஒரு அமைப்பினை பார்ப்பன என்ற ஒரு சொல் கொண்டு அடக்கலாம் எனில் இப்படி பார்ப்பனீயத்துக்கு  சேவை செய்யும் பெதிகவினை  என்ன வென அழைப்பது?

தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க  கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.

தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி ”  இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்ய கிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.

இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

ஏப்ரல் 7, 2009

sl_q-copyஇங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

யார் சொன்னது போலிகள்

புரட்சி பண்ணவில்லையென்று

“பன்னினார்கள்” எத்தனையோ

சொல்ல சொல்ல வாய் வலிக்கும்

வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….

சிபிஎம் சிபிஐ பேரை

கேட்டதால் தான் என்னவோ

புடலங்காய்க்கும் புரட்சி வந்து

முறுக்கிகொண்டதுவோ…..

ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து

கூடவே துரோகத்தனத்துக்கும்

தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து

நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி

இன்னமும் அடங்க மறுக்கிறது

குறுதியின் வெப்பம்……

கண்காட்டும் தலைவருக்கு தாசனாகி

உழைக்கும் மக்களுக்கு நீசனாகி

மாமா வேலை செய்து செய்து

பாசிஸ்டாக பல்லிளித்து

செயாவின் காலுக்கு பாத பூசை

ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை

தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….

ஆயிரம் தரகு வேலை

ஆயிரம் பூசைகள் செய்து

களைத்து போயிருக்கும்

நல்லோரே வல்லோரே உங்களுக்கு

மொத்தமாய் பூசை செய்கிறோம்

கூடவே நிரந்தர ஓய்வையும்

இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்

ஓட்டுப்பெட்டியும் உங்களின்

புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் …….