Posts Tagged ‘தங்கம்’

தங்கப்புராணம்

ஜூன் 18, 2009

தங்கப்புராணம்
 
தங்கம், அடிமைத்தனம்,முதலாளித்துவம்
 
விவசாயம் நசிய நசிய
கைத்தறி தேய தேய
தங்கத்தொழிலாளி உருக உருக
ஏறுகிறது விலை மட்டும்
கொழுத்தவனின் கடவாய்ப்பற்களில்
இன்னொன்றாய் மின்னுகிறது….
 
ஒன்றும் புரியவில்லை
தங்கம் விலை ஏறுவதைப்போல….

gold copy

அரிசி விலை  முப்பது ரூபா
பருப்பு விலை அறுபது ரூபா
தங்கவிலையோ ஏறுகிறது ஏறுகிறது
எவெரெஸ்டின் உச்சியைத்தாண்டி
அடேங்கப்பா

 
பிளந்த வாய்கள்
தப்பாமல் வரிசையில்
நிற்கின்றன திருச்சிக்கும்
வந்துவிட்டதாம் குமரன் தங்க மாளிகை….

 
பழையது புதியதாக மீண்டும்
அது பழையதாக
புதியதாக முளைக்க
அதெப்படி உழைப்பவனின் வாழ்வு மட்டும்
பழையதாகிக்கொண்டே போக
வலுத்தவன் மட்டும் புதியதாகிக்கொண்டே போக….
 
வந்து விட்டதாம் ரேட் கார்டு
விலை என்னவென்று சரியாயிருக்குமாம்
அங்கு  உலகமயத்தின்
கோரத்தால் சயனைடைத்தின்ற
குடும்பங்களின் மதிப்பு செல்லாததாயிருக்கும்…..
 
இனியும் உருக்க
தங்கம் இல்லை
இரும்பை உருக்குங்கள்
பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்

நாளை  அவனின் உயிரை

எடுப்பதற்கு  தேவைப்படும்.

எடுப்பதற்கு  தேவைப்படும்.

தங்கம்

ஜூன் 14, 2009

தங்கம்

தங்கக்கட்டி, செல்லத்தங்கம்
எனபல வாழ்த்துரைகளை
கேட்டிருப்போம், கேட்டவர்கள்
பல்லைக்காட்டிக்கொண்டிருக்க
தோண்டியெடுத்தவனின் நிலை….

“திருகாணியெல்லாம் வேஸ்ட்
வளையம்தான் பெஸ்ட்” பேசும்
விளம்பரங்கள் நாளை நம்மையும்
விற்கும் அப்போது – ஏகாதிபத்தியத்தின் காதுகளில்
அல்ல கால்களில் மாட்டிக்கொண்டிருப்போம்…..

லேட்டஸ்ட் மாடல்கள் கேட்கும்
வாய்கள் கோலாரின் லேட்டஸ்ட்
நிலையை பேசுமா? கண்டிப்பாய்
பேசாது “ஆரம்” கழுத்தை நெறிக்கும் போது
என்ன பேச முடியும் “மாடல் சூப்பராயிருக்கு” என்பதை தவிர….

தங்கம் எடுக்கப்போனவர்கள்
தோண்டியெடுக்கப்பட்டார்கள் தங்கத்தோடு
பிணங்களாக – அச்செய்திகள் எப்படி
கேட்கும் காதில் தங்கப்பூட்டினை
மாட்டிக்கொண்டிருக்கும் போது…..

நண்பரிடம் கேட்டேன் எதற்கு தங்கம்?
“எனக்கு பிடித்திருக்கிறது” “தெரியவில்லை”
“அளவுக்கு மீறி இல்லை” “தகுதிக்காக போடவில்லை ”
தெறித்தன பதில்கள்…..
மூன்றுகிராமுக்கு ஓராயிரம் கிலோ
மண்ணை தோண்டியெடுப்பவனால்
தொடத்தான் முடியும்…..

யாரும் தப்பிக்க முடியாது,கணக்கு
போடுங்கள் உங்களுக்காக
எத்தனையாயிரம் கிலோ தோண்டப்பட்டிருக்கிறது?
எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள்?
அதிகமாய் பேச வேண்டாம்,
நீங்கள் அணிந்திருக்கும் அளவுக்கு மட்டும்…