Posts Tagged ‘மாவோயிஸ்டு’

நக்சல் சவால் – புத்தகப்பார்வை

ஜூன் 22, 2010

நக்சல் சவால் – புத்தகப்பார்வை

மொட்டைத்தலையன்  விகடன் பிரசுரம் சார்பில் கடந்த செப்டம்பர் 2009 வெளிவந்த புத்தகம் தான் நக்சல் சவால். தண்டகாரண்யா பகுதிகளில் அரசு நடத்தும் போருக்கு முன்னோடியாக வெளிவந்த புத்தகம். 200 பக்கங்களுடைய இப்புத்தகம் மிகவும் எளிய மொழி நடையில் ஆளும் வர்க்க கருத்துக்களை சுமந்து வந்திருக்கிறது. உலக அளவில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை என்ற வழிமுறையே தீவிரவாதம் என்ற அளவில் ஆளும் வர்க்கத்தின் மிகச்சிறந்த பிரச்சாரக்கருவி இது. முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி கேட்டால் தனது வாயை முடிக்கொள்ளும் ஆளும் வர்க்க ஊடகங்கள் நக்சல்பாரிகள் மீதும் மாவோயிஸ்டு இயக்கத்தினரின் மீதும்  அவதூறினை அள்ளி வீசுகின்றன.

இப்புத்தகத்தில் ஒவ்வொரு கட்டுரையாளாரும் தனக்கு பிடித்தமான வகையில் தீர்வினை சொல்கிறார்கள் எப்படி நக்சலிசத்தை ஒழிப்பதென்று.ஆசிரியர் தனது முன்னுரையில் நக்சல்பாரிகள் குறித்து “ரத்தத்தை கண்டு பயப்படுவோரை பணிய வைக்க அதையே ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள்”, என்கிறார்.  “வேலையின்மையால் வறுமை ஏற்படுகின்றாது,  வறுமையால் அவ நம்பிக்கை, அதிருப்தி பரவுகின்றது. கடைசியில் அது வன்முறையில் போய் முடிகிறது.” வேலையில்லாத்திண்டாட்டமும் மக்கள் தொகைப்பெருக்கமும் தான் நாட்டை எதி நோக்கியுள்ள தீவிரவாதத்திற்கு அடிப்படை என்கிறார் விகடன் ஆசிரியர்.

வேலையில்லா திண்டாட்டம் தான் நக்சலிசம் வளரக்காரணம் என்று கூறினால்,  நக்சல் அமைப்பில் பலகோடி வேலையற்ற இளைஞர்கள் சேர்ந்திருக்க வேண்டும், மக்கள் தொகைப்பெருக்கமோ வேலையில்லா திண்டாட்டமோ நக்சல்பாரியை வளர்க்க வில்லை, ஆளும் வர்க்க பயங்கரவாதமே மாவோயிஸ்டு இயக்கத்தை வளர்க்கிறது. “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டோடு இருக்கிறாய்” என்று கட்டளையிடுகிறது. ஒன்று என்னுடன் சண்டை போடு இல்லையேல் அடிமையாயிரு என தீர்வுகளை முன் வைக்கிறது.

ஏன் இந்த அறிவு ஜீவிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்திற்கும் வேலையில்லாதிண்டாட்டத்திற்கும், மக்கள் தொகைக்கும் முடிச்சு போடுகிறார்கள்?

அரசு பயங்கரவாதத்தை மூடி மறைப்பதற்கான அழகான வழி இது. ஏனென்றால் இந்த போலி சனனாயக அரசால் கடைசிவரை வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கமுடியாது அது மட்டுமல்ல, “உழுபவனுக்கு நிலம் உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற தத்துவத்திற்குத்தான் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்ற உண்மையை மறைப்பதற்கு தேவையான உத்தி இது.

இந்த புத்தகத்தை தொகுத்து வெளியிட்டவர் பி.வி.ரமணா, இவர் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்,”இந்தியப்பாதுகாப்பில் ராணுவத்தின் பங்கு, ராணுவ ஆராய்ச்சிகள்” என்ற தலைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆக இந்திய ராணுவ கைக்கூலியால் தயாரிக்கப்பட்ட இத்தொகுப்பு அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தினால் 2005ஜனவரி 25 &29 ஆகிய நாட்களில் பயிலரங்கமாக  நடத்தப்பட்டது.

இதன் முதல் கட்டுரையாளர் டி.ராஜா(சிபிஐ , தேசியச் செயலாளர்) பொறுத்தவரை “நக்சலைட் தீவிர வாதம்  ஒழிக்கப்படவேண்டிய / வெல்லப்படவெண்டிய ஒரு குழப்பம்,  இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகமே அரசாங்கம் என்னும் கட்டுப்பாடு வளர்ந்து நிலைப்பெற்றுவிட்டது,ஆகவே தேர்தல்களில் விலகியிருந்தால் தொலைந்து போக நேரிடும், நாட்டைப்பிடிக்க தேர்தலைத்தவிர சிறாந்த வழி ஏதுமில்லை என்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு விசாலமான திட்டங்களே இதை ஒடுக்கும் வன்முறை, அடக்குமுறைக்கு நிரந்தரமாக முடிவுகட்டப்பட வேண்டும்”

ஆயுதம் அது மாவோயிஸ்டுகள் தூக்கினால் அது தீவிரவாதம் அதுவே போலி மார்க்சிஸ்டு  குண்டர்கள்  எடுத்தால் பாதுகாப்பா? சந்தடி சாக்கில் கேரளாவைப்பாருங்கள், மேற்கு வங்கத்தைப்பாருங்கள் என்கிறார். அந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்ததால் தான் கேட்க வேண்டியிருக்கிறது, மாவோயிஸ்டை விட்டுத்தள்ளுங்கள் பாசிசமாய் மக்களைக் கொல்லும் போலி கம்யூனிஸ்ட் கட்சியை எப்போது தடை செய்யப்படும்?

நக்சல்பாரி இயக்கங்களின் மீது இப்புத்தகத்தினை திருப்பும் பக்கமெல்லாம் அவதூறுகள்  நிறைந்திருக்கின்றன. சிஆர்இசட்(compact revolution zone) என்ற அமைப்பை ஏற்படுத்த தீவிரமாய் நக்சலைட் தீவிரவாதிகள்  முயல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கொலைகாரப்படையான சல்வார் ஜுடூம்  இப்புத்தகத்தில் நக்சலைட்டுகளுக்கெதிரான பகுதி மக்களின் படை என்ற பொய்யும் ஆணித்தரமாக நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல நேபாளத்தின் மாவோயிஸ்டுகளும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். நேபாளத்தின் மகத்தான மக்கள் எழுச்சி , நேபாள மன்னராட்சி அழிக்கப்பட்டதும் கவலையைத்தருகின்றன அறிவு ஜீவிக்கப்பட்டவர்களுக்கு. இப்புத்தகத்தில் ருசி கர்க் என்பவர் எழுதிய கட்டுரையில் மட்டும் தான் பழங்குடிகள் மக்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டது குறித்து சற்று விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையில் பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள், அவர்களின் கலாச்சாரம் அழிப்பட்ட விதம், தண்டகாரண்ய மக்கள் பல்லாண்டுகாலமாய் போராளிகளாக இருந்திருப்பது குறித்தும் தெளிவாக இருக்கிறது.

மாவோயிஸ்டு இயக்கமும் நேபாளா மாவோயிஸ்டு கட்சியும் இணைந்து இந்தியாவை ஆக்கிரமிக்கப்போகின்றன, மாவோயிஸ்டுகளுக்கு உல்பா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ போன்ற அமைப்புக்கள் நிதியுதவி அளிக்கின்றன போன்றா புருடாக்களை வழி நெடுக காணமுடிகின்றது. மேலும் ஒவ்வொரு மாவோயிஸ்டுக்கும் 1500 ரூபாய் நிதி வழங்கப்படுவதாகவும் அதுவும் கூட மாவோயிஸம் நிலைக்க காரணம் என்கிறார் இன்னொரு கட்டுரையாளர்.

அப்படியே 1500 ரூபாய் அல்ல 15000 ரூபாய் கொடுப்போம் இந்த புத்தி ஜீவிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தேசத்தை காக்க களத்திலிறங்கட்டும்.
எப்படி நக்சல்பாரி இயக்கத்தை இந்த நாய்களால் கொச்சைப்படுத்த முடிகிறது?  உழைக்கும் மக்களின்  விடுதலைக்காக ஆயுதமேந்துபவனின் அர்ப்பணிப்பு 1500 ரூபாயில் அடங்கிவிடுமா என்ன?

கிருஷ்ணா ஹச்சேத்து என்பவர்  நேபாள மாவோயிஸ்டு புரட்சிக்காரர்கள் என்ற கட்டுரையில் ஒட்டுமொத்தமாக நாங்கள் யார் என்பதை  தனது தீர்வினைக்கூறி அவிழ்த்துப்போட்டு காட்டுகிறார்.

“1. மன்னரே, மாவோயிஸ்டையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது, அரண்மணையிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவது, மாவோயிஸ்டு கொரில்லாக்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வது.
2.புது அரசியலமைப்பில் மன்னராட்சியையும் வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு பொது புரிந்துணர்தலை ஏற்படுத்துவது
3.அரசியலைப்பில் எதையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள உகந்த தீர்வு.”

நேபாள மக்கள் கொடிய மன்னராட்சியை எதிர்த்து  களத்தில் நிற்க ஏசி ரூமில் கழிந்து கொண்டிருக்கும் அரசாங்க கூஜா தூக்கிகளான இந்த அறிஜீவிக்கப்பட்ட கைத்தடிகள் இங்கிருந்து வழிகாட்டுகிறார்கள் “மன்னன் தேவையென்று”

இந்த புத்தி ஜீவிக்கப்பட்ட அறிவு ஜீவிகள் எப்போதும் மக்களுக்காக பேச மாட்டார்கள் அவர்கள் ஏகாதிபத்திய, ஆளும் வர்க்க பயங்கரவாத அரசின் கைக்கூலிகள் அதை இதோ எழுத்தாளர் அருந்ததி ராய்  இதோ அம்பலப்படுத்துகிறார் “எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.எ.ஏ-ல் வரவில்லை. இந்த சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடம் காணலாம். நாட்டின் மிகப்பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களை நிறூவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடமிருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிபார்க்க முடியும் “

புத்தகத்தின் பெயர் : நக்சல் சவால் ( நக்ஸல் சவால் )
விலை : 80/-
விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600002
விற்பனை பிரிவு தொலை பேசி எண் : 044-42634283/84

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

நவம்பர் 3, 2009

தீவிரவாதத்தை வேரறுப்போம்
இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.  இப்படிப்பட்ட கருத்துக்களை அள்ளிவீசுபவர்கள் மத்திய அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ அல்ல, இந்த இந்திய திருநாட்டை  நக்சல்பாரி அபாயத்திலிருந்து காப்பாற்ற
முடிவெடுத்து களத்திலும் இறங்கிவிட்டார்கள் நம்ம ப்யூர் கொம்யூனிஸ்டுகளான சிபீஎம் கட்சியினர்.

நாட்டின் முக்கிய சிவப்பு அபாயமான நக்சல்பாரிகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் சீதாராம் எச்சுஊறி. “நாங்கள் தான் இடதுசாரிகள் நாங்கள் மட்டும்தான்,   மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்கி வெறியாட்டம் போடுகிறனர் துணைராணுவப்படையினர் அவர்களுக்கு மொத்தமாய் ஆதரவளிக்கிறார் புத்ததேவ்.அவர்கள் அழிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு என்கிறார்.

“இன்று சட்டீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகளும், பீகாரில் 2 மாவோயிஸ்டுகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” இந்த, இப்படிப்பட்ட செய்திகளை ஊடகங்கள் நாள்தோறும் வெளியிடுகின்றன புழங்காகிதமடைகின்றன.

தொலைக்காட்சி ஊடகங்களோ இன்று கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையை அறிவிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, செய்தி வாசிக்கும் அந்த தொகுப்பாளரைப்பாருங்கள் அப்படி ஒரு பெருமிதம் அவர் முகத்தில். விரைவில் இந்தியா வல்லரசாகிவிடுமாம் அதற்கு தடையாயிருக்கும் மாவோயிஸ்டு/ நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழித்துக்கட்டப்படவேண்டியதின் அவசியத்தை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதிகிழிக்கின்றன.

கடந்த செவ்வாய் அன்று ரயிலினை மறித்த பழங்குடியினமக்களை தீவிரவாதிகளாக அறிவிக்கிறது அரசு. ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள் வண்டியை மறித்து ஓட்டுனர்களை கடத்தியதாகவும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்து தாக்கியவுடன் ரயிலை விட்டு விட்டு ஓடியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டதாக கூறும் நபர் ஒருவர் ஆங்கிலத்தொலைக்காட்சியில் யாரும் எங்களைத்தாக்கவில்லை என்கிறார்.

அரசபயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு குழுவினை மக்கள் உருவாக்கினார்கள் அதன் தலைவர் மகோட்டவை விடுதலை செய்யக்கோரி மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதிகளின் போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது.

மாவோயிஸ்டுகளை/மாவோயிஸ்ட் அமைப்பையும்/ நக்சல்பாரி அமைப்புக்களையும் பத்திரிக்கைகள் இப்போதெல்லாம் குறிப்பிடும் போது தீவிரவாதிகள்/தீவிரவாத அமைப்பான’ என்றே குறிக்கின்றன. இந்திய அரசு மாவோயிஸ்டுகளை தீவிரவாதப்பட்டியலில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றபோதும் திட்டமிட்டே இந்திய அரசால் மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் தீவிரவாதிகளாக்கப்பட்டுவிட்டனர். மக்களிடம் ஏதோ கொள்ளையர்களைப்போல மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த மாதம் மத்திய அரசு நடத்திய சிறப்புக்கூட்டத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். அப்போதிருந்து அடிக்கடி உள்துறை அமைச்சர் சிதம்பரமாகட்டும் மத்திய அரசாகட்டும் மாவோயிஸ்டுகளைப்பற்றிய பொய் புரளிகளை பரப்பிவருகின்றனர், சென்ற மாதம் மாவோயிஸ்டுகள் ஒரு கிராமத்தில் புகுந்து மக்களை சுட்டுக்கொன்றதாக அரசு செய்தி வெளியிட அதை அப்படியே எல்லா செய்தி ஊடகங்களும் தனக்கேற்றவாறு பில்டப் செய்து வெளியிட்டன.

சல்வார்ஜுடூம் போன்ற அரசபயங்கரவாதப்படைகளும், மத்தியப்படைகளும், போலீசும் மக்களை கொன்று வெறியாட்டம் போட்டு மக்களை துவம்சம் செய்கின்றன. மக்களை கொன்று விட்டு மாவோயிஸ்டுகள் மீது பழியினை தூவுகின்றன, அச்செய்தி அப்படியே இந்தியா ஏன் உலகம் முழுக்க பரப்பப்படுகின்றது. மாவோயிஸ்டுகளுக்கு பல மனித உரிமை அமைப்புக்கள் உதவுவதாக / ஆதரவளிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களின் நோக்கம் என்னவெனில் தன்னுடைய அரச பயங்கரவாதத்துக்கு தடையாக உள்ள யாரும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.

மேற்குவங்கத்தில் டாடாவுக்கு நிலம் கொடுத்த விவகாரத்திலும் சரி மற்ற பிரச்சினைகள் மூலமாகவும் நந்திகிராம், சிங்கூர்,  மிதுனாப்பூர் என மக்கள் சீபீஎம்க்கு செருப்படி கொடுத்து அரசை புறக்கணித்தார்கள். சீபீஎம் நாறிப்போனது. தனது அணிகளிடம் கூட நிலையை விளக்குவதற்கு திணறி வேறு வழியின்றி பயங்கரவாதம் , தீவிரவாதம் என்றபடி கூச்சல் போட ஆரம்பித்தது. சீபீஎம் காங்கிரசு கட்சியப்போன்று சிறந்த கேப்புமாறிகட்சியாக மாறிவருவதற்கு அவர்களின் கூற்றுக்களே தக்க உதாரணம். முன்பு மாவோயிஸ்டுகள் அரசியல் ரீதியில் மட்டுமே அகற்றப்பட வேண்டுமென்ற சீபீஎம் தற்போது கடுமையான எந்த நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று அறிவிக்கிறதெனில் என்ன வகையாக மாற்றம் கட்சியில் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை நாம் கம்யூனிஸ்டு கட்சி என்று தன் கட்சியினரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமிருந்தது. ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லை. புரட்சியா அது எப்படி இருக்கும் ஸ்வீட்டா இல்லை காரமா என்று கேட்ககூடிய அளவுக்கு சீபீஎம் தொண்டர்கள் வந்து விட்டதால் மொத்தமாய் அவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாய் நாங்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் என்று திமிராய் சொல்லுகிறார்கள். இந்திய நாட்டையே அடிமையாக்கிய காட் ஒப்பந்தம் முதல் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் வரை எதை நாடாளுமன்ற முறை மூலம் போராடி தடுத்தார்கள். நாடாளுமன்றத்தை பயன்படுத்த லெனின் சொன்னார் என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் லெனின் சொன்னார் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி அதை அம்பலப்படுத்தவேண்டும் என்று அதைத்தான் செய்து வருகின்றோம் என்கிறார்கள்

தயவு செய்தி பேரண்புமிக்க பொறுக்கிகளே அந்த சின்னத்தை பயன்படுத்தாதீர்கள். அது உங்களைப்போன்ற ஆளும் வர்க்கத்திற்கெதிராக உழைக்கும் மக்களால் உருவானது. நீங்கள் “நம்ம” தேசியக்கொடியையே பயன் படுத்திக்கொல்ளலாம்,  அரசு கூட அப்ஜெக்சன் தெரிவிக்காது என நம்புவோம். நாங்கள் இனி போலிகள் என்று கூட அழைக்கமாட்டோம். ஒரு வேளையும் மிச்சம்.

கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இந்திய தேசத்தில் காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் நடத்தப்படும் சுயநிர்ணய போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ன? அவ்விசயங்களில் இந்திய அரசின் வாலாக செயல்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒன்று சேலையை துவைப்பது அல்லது வேட்டியை துவைப்பது என்று வேறுவேலை இன்றி மாமாவேலை செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள இந்த சீபீஎம் எங்கத்த புரட்சி பண்ணப்போகிறது?  நாங்கள் இல்லாமல் எம்ஜிஆர் இல்லை, ஜெயா இல்லை, கருணாநிதியும் இல்லை, விட்டால் ஒபாமா கூட நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாதென்று முழங்கிக்கொண்டே போவார்கள்.

கேரளாவில் முல்லைப்பெரியார் அணை விசயத்தையே எடுத்துக்கொள்வோம். சீபீஎம் கட்சித்தலைமை ஏதாவது வாய் பேசியதா என்ன? பெங்களூருவில் மாநாடுகூட்டி தீவிரவாதத்துக்கெதிராக பேச முடிகிறது ஆனால் பெரியாறு பிரச்சினையைப்பற்றி ஏன் பேச முடியவில்லை ? ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது ஒரு தலைமை எதனால் பாதிக்கப்படுகிறதோ அதற்கு எதிராக, யாருக்காக , யாருடைய தேவைக்காக அதற்காகத்தானே போராடும். அதன் படி தன் வளர்ச்சிக்கு தடையாயிருக்கும் மாவோயிஸ / நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்  தான் போராடுகிறது. தன்னுடைய சேக்காளிகளான டாடா, பிர்லா, அம்பானிமற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும்தான் போரிடுகிறது.

சீபீஎம்முக்கும் ஏனைய ஓட்டுப்பொறுக்கிகட்சிகளுக்கும் ஏதேனும் வித்யாசமிருக்கிறதா? முன்னராவது மற்றவர்கள் சிரச்சேதம் செய்யச்சொன்னால் சீபீஎம் கட்சி பாலிடால் கொடுக்கசொல்லும் (அவ்வளவு மனித நேயமாம்). மொத்தத்தில் மக்கள் ஒடுக்கப்பட வேண்டும் அவ்வளவுதான்.

இந்த உலகமயம்-தனியார்மயம் – தாராளமயம் சூழலில் சீபீஎம்-ல் தனது போலி வேசத்தைக்கூட நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடித்தே தீரவேண்டும் , எல்லோரும் கொல்ளையடிக்க வந்துவிட்டார்கள், சும்மா வெறும்கையை முழம் போட சீபீஎம் கேனப்பயலா என்ன?  நம் முகமுடியை மக்கள் அறிந்துவிட்டார்களென்ற பின்னே இனி பாசிஸ்டாக பரிணமிப்பதைத்தவிர வேறு என்ன வழி?

இந்த நாட்டின் எதிரி மாவோயிசமா அல்லது ஏகாதிபத்தியமா?

நீர் நிலம் காற்று என அனைத்தும் மக்கள் ஒப்புதலின்றியே பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுவிட்டன. அம்பானி, மிட்டல், டாடா என தரகு முதலாளிகள் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீபீஎம், காங்,பீஜேபீ உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகள் மாமா வேலை பார்ப்பதையே முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டு விட்டன. உலகமயம்-தனியார்மயம் – தாராளமயத்தால் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழந்துவிட்டார்கள், காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் துரத்தப்படுகிறாகள். விவசாயத்தை லாபமற்ற தொழிலாக திட்டமிட்டு மாற்றி, உரங்கள் மூலமாகவும் பன்னாட்டு விதைகள் மூலமாகவும் விளை நிலத்தை நாசம் செய்து பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் நாடெங்கிலும் இதற்கெதிராக போராடி வருகிறார்கள், இந்த அரசும் அதன் தாங்கிகளான ஓட்டுப்பொறுக்கிகளையும் பாசிசத்தின் கருவிகளாகியிருப்பதை உணர்கிறார்கள்.

தன்னெழுச்சியாகவும் மாவோயிஸ்டு / நக்சல்பாரி அமைப்புக்கள் மூலமாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக அரசு தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது, போராடும் மக்களை ஒழித்துக்கட்ட முயல்கிறது. தன்னுடைய அமெரிக்க எஜமானனுக்கும் ஏனைய பன்னாட்டு எஜமானர்களுக்கும் சேவை செய்வதை தடுக்கும் யாரையும் முறியடிக்கிறது. கிராமங்கள் சூறையாடப்படுகின்றன.

மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் போராடி குரல் கொடுக்கின்றன. ஆயுத தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆங்காங்கே மக்களே ஆயுதந்தரிக்க வேண்டியதன் கட்டாயம் ஏற்படுகிறது. தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோமோ அவர்களுக்கு மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறர்கள்.சீபீஎம்ற்கு ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியாக, பாஸிஸ்டுக்கு பாதந்தாங்கியாக இருந்ததன் அவசியம் இனியும் தேவையில்லை. போலிகம்யூனிச முகமுடியினை தூக்கிபோட்டுவிட்டு மக்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு உரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் டாடாவுக்கு உழைக்கும் மக்களின் நிலத்தை அபகரித்துத்தருவது  மறுபக்கம் மக்களுக்காக பரிந்து பேசுவதென்ற வாய்ஜாலமும் இனி தேவைஇல்லை.

நாட்டையே கூறு போட்டு தூக்கிச்செல்ல காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாதம் அல்ல, மதத்தால்பிளவுபடுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஆர் எஸ் எஸ் பார்ப்பனபாசிசம் அதுவும் பயங்கரவாதமல்ல, தொழிலாளர்களை சுரண்டி சக்கையாய் தூக்கியெறிந்து தன் லாபத்திற்காக தொழில்களையே ஒழிக்கும் முதலாளித்துவம் பயங்கரவாதம் அல்ல, இந்த அரசும் சீபீஎம்மும் கூறுவது போல நாட்டை மீண்டும் மறுகாலனியாக்குவதற்கு எதிராக போராடும் மக்கள் தான் பயங்கரவாதிகள். வேறு வழியே இல்லை பயங்கரவாதிகளாகிய உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் இந்த யோக்கிய சிகாமணிகளுக்கு சாவுமணி அடிப்போம்.


இணைப்புக்கள்

1.விடுதலையின்  அரசியல் கருத்துப்படங்கள்
போலிகளை வீழ்த்தும் ஆயுதங்கள்

2மார்க்சிஸ்டுகளின் பரிணாம வள்ர்ச்சி

3.சாயம் வெளுத்துப்போன போலிகள்

4.வாடா வாடா வாடா  தோழா – ஒரு காம்ரேடு  ரசிகன் ஆன கதை

5.மாவோயிஸ்டுகள் மீதான தடை
டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை

 

மாவோயிஸ்டுகள் மீதான தடை அரசாங்க டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை

ஜூன் 29, 2009
மாவோயிஸ்டுகள் மீதான தடை
அரசாங்க டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டு அரசர் சிதம்பரம் மாவோயிஸ்டுகட்சியை அதாவது சிபிஐ(எம்)  கட்சியை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை ஆணையை வெளியிட்டார். இது வரை மாவோயிஸ்டு இயக்கம் இந்தியா முழுமைக்கும்  சுதந்திரமாக செயல்பட்ட மாதிரியும் தற்போதைய ஆணையால் மாபெரும் அதிரடி சாதனையாகவும் பத்திரிக்கைகள் மெச்சுகின்றன.
தினமணியோ ” இந்த தடை அவசியமான ஒன்று, மாவோயிஸ்டுகள் பல மக்களை கொன்றிருக்கிறார்கள். வேலையில்லா இளைஞர்களையும், அப்பாவி பழங்குடி மக்களையும் மூளைச்சலவை செய்து தங்களுடைய படையில் சேர்த்து கொள்கின்றனர். மேலும் மிகப்பெரிய நிலச்சுவாந்தார்களையும், முதலாளிகளையும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.
நேபாளம் முதல் ஆந்திராவரை நீண்டுகிடக்கும் இந்த மாவோயிஸ்டுகள் வழிப்பறி, கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவாயை பெருக்கிக்கொள்கின்றனர். நமது எதிரி நாடான சீனா இவர்களுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து உதவுகின்றது”தினமணி மட்டுமல்ல ஏனைய எல்லா பத்திரிக்கைகளும் மாவோயிஸத்தை ஒழிக்க வேண்டும்,  மாபெரும் இந்திய சனநாயகத்தில்  ஒரு கரும்புள்ளியாக இந்த பயங்கரவாதிகள் இருப்பதால் இத்தடை தேவை.

.இந்த சட்டத்தின் மூலம் அவர்களின் ஆதரவாளர்களையும் கைது செய்யமுடியும் என சந்தோசப்படுகின்றன எல்லா அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும்.

ஆரம்பத்திலிருந்தே மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் மீது பொய் என்று தெரிந்து கூறப்படும் முக்கிய அவதூறு ” சீனா உதவி செய்கின்றது “. நக்சல் பாரி அமைப்பினர் சீனாவை  தற்போது முதலாளித்துவ மேலாதிக்க நாடாகவே வரையறுத்துள்ளனர். இந்தியாமேலாதிக்கம் மற்றும் சீன மேலாதிக்கம் இரண்டும் தகர்க்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து இருப்பதாக தெரியவில்லை.அதேபோல நேபாளத்திலும் மாவோயிஸ்டுகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்காற்றின. எப்படி ஒரு முற்போக்காளன் முசுலீமாயிருந்தால் அவரை அல்கொய்தா ஆக்குவார்களோ அப்படித்தான் திட்டமிட்டே இந்தஅவதூறும்.

என்னவோ படிக்காத அல்லது வேலையில்லாத இளைஞர்களின் விரக்திதான் நக்சல்பாரி அல்லது மாவோயிஸ்டு வளர்ச்சிக்கு உண்மையான காரணம் எனில்  மாவோயிஸ்டுதான் உலகிலேயே அதிக  உறுப்பினர்களை எண்ணிக்கை கொண்டகட்சியாக இருக்கும்.

மாவோஸ்டுகளின் மீதான தடையை ஆராய்வதை விட மாவோயிஸ்டுகளின் மீது தடையை ஏற்படுத்திய அரச பயங்கரவாதத்தையும் அதற்கு பக்கபலமாயிருந்த பார்ப்பன பாஸிச பயங்கரவாதத்தையும் கொஞ்சம் பேசித்தான் ஆகவேண்டும். காசுமீர் மக்களிடம் கேட்டால் தெரியும் இந்தியத்தின் மகிமையை காறி முகத்தில் துப்புவார்கள். சில வாரங்களுக்கு முன்  இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமையால் ராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்து எந்த விசாரணை நடந்தது? ராணுவம் செய்யும் கொலைகளும்  பாலியல் கொடுமைகளையும் பற்றி எந்த பத்திரிக்கை தனது நாய் மூக்கால் மோப்பம் பிடித்து எழுதின?

ஆனால் சில கருப்பாடுகள் என தலையங்கம் வாசிக்கும் பத்திரிக்கைகள் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த பல்லாயிரக்கணக்கான கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் செய்துவரும் ராணுவத்தை கண்டு கொள்வதில்லை.  சங்கர மடத்தில் ஒரு கரப்பான் பூச்சி நுழைந்தால் கூட ஒப்பாரி வைக்கும் இந்த நாய்கள் எப்போது அரச பயங்கரவாதத்துக்கெதிராக எழுதாது. ஏனெனில் தரகு மற்றும் ,முதலாளித்துவமே  ஒருபக்கம் ஆளும் வர்க்கமுகமுடியையும்,  மறுபக்கம் அரசியல் கட்சிகளாகவும் இன்னொருமுனையில் பத்திரிக்கைகளாகவும் செயல் படுகின்றன.

காசுமிர், அசாம்,மணிபூர், வடகிழக்கு மாநிலங்களில் பல பத்தாண்டுகளாக  ராணுவம் லட்சக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிமுனையில் தேர்தலாம், இதை தூக்கி வைத்து கொண்டு ஆடுகின்றன பத்திரிக்கைகள். மாவோயிஸ்டுகள் மக்களை மூலைச்சலவை செய்தார்கள் என கூடவே உட்கார்ந்து பார்த்தது போல எழுதும் பதிரிக்கைகள்  அவர்கள் கண் முன்னே நடந்த இந்து மதவெறிகலவரங்களை,அரச பயங்கரவாதத்தினை வெளிப்படுத்தினார்களா என்ன? தன் தேவையே மக்கள் தேவையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அரச பயங்கவாதத்தால் , முதலாளித்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண விவசாயிகள், தொழிலாளர்கள் கேட்கிறார்கள் முதலாளித்துவத்தையும், இந்த அரசையும் தடை செய்யக்கோரி பத்திரிக்கைகள் உடனே எழுதி ஆதரித்து விடுமா என்ன? கண்டிப்பாய் சீண்டிகூட பார்க்காது காரணம் இந்த தரகுமுதலாளித்துவ அரசாங்கம் தான் இவர்களின் தேவை . ஆளுவர்க்கங்களின் தேவைக்குத்தான் ஊடகங்களே தவிர மக்களின் தேவைக்கா என்ன?

மாவோயிஸ்டுகள் மீதான தடைஇந்து முன்னணி வரவேற்பு


மாவோயிஸ்டுகள் மீதான தடையை வரவேற்று அறிக்கை விட்டுஇருக்கிறார், ராம.கோபாலன். இந்த பார்ப்பன பாஸிஸ்டுகளின் கோரிக்கை மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல ,  நக்சல் பாரிஅமைப்புக்கள், முற்போக்கு இயக்கங்கள் அனைத்தையுமே தடைசெய்ய வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என அறிவிக்கக்கோருகிறது பார்ப்பன பாசிசம், குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று தின்று விட்டு நான் தான் செய்தேன் என அறிக்கை விட்ட பிஜேபி, ஆஎஸ் எஸ், பரிவாரங்களுக்கு பூசையும் வரவேற்பும், மக்கள் இயக்கங்களுக்கு தடையா ?

நாடாளுமன்றத்தில் குண்டு வைத்தவர் எனக்கூறி தூக்கில் போடு, தூக்கில் போடு என முழக்கமிடும் தேசப்பற்றாளர்களே, காசுமீரில், வடகிழக்கு மாநிலங்களில், ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்ற, கொன்று கொண்டு இருக்கும் பயங்கரவாதிகளூக்கு என்னதண்டனை கொடுக்கலாம்? பாரதரத்னா, வீர் சக்ரா, அசோக சக்ரா தந்து கவுரவிக்கலாமா?

ஏன் லால்கரில் சிபிஎம்(மார்க்சிஸ்ட்) சேர்ந்த ஒரு நபரின் வீட்டிலிருந்த இரண்டு லாரி நிறைய வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனவே,  நந்திகிராமில் சிங்கூரில் பாலியல், மக்களை கொன்று  பாசிஸ்டாய் பரிணமித்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன பெயர் பொதுவுடமைவாதியா? மக்களுக்காக போராடும், போராடிய பினாயக்சென் பயங்கரவாதியாம்?

த்தூ!  இந்த மானங்கெட்ட பாசிச சனநாயகத்துக்கு பொட்டு, பூ வைக்கும் வேலையில் பத்திரிக்கைகள் ஈடுபட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.

சமீபத்தில் கோவை மாநாட்டில் பேசிய பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணி ” எங்கள் இயக்கம் மீது ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது, தடை செய்யவும் வாய்ப்பிருப்பதாக” தெரிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை ஏதோ இந்திய ராணுவத்தையே தாக்கி விட்டார்கள் என கூப்பாடு போட்டவர்கள், இந்திய அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண மக்களுக்கு ஆத்மா சாந்தியடைய சாமிகும்பிட சொல்கிறார்கள். எங்களை கொன்று விட்டு சமாதியின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள் எங்கு போய் அழுவது?

இந்தியாவெங்கும் மக்களிடையே மதக்கலவரங்களை தூண்டிவிட்டு, சாதிகலவரங்களை தூண்டிவிடும்  பார்ப்பன பாசிசகட்சிகளும், சாதி வெறிக்கட்சிகளும் தடைசெய்யப்படவேண்டும். மக்களை கொத்து கொத்தாய் கொல்லும் முதலாளித்துவம் நசுக்கப்பட வேண்டும்.

மக்களுக்காக போராடும் போது என்ன டாக்டர் பட்டமா வரும் ?  துரோகிகளின் வாயால் தீவிரவாதி பட்டம் ,
பாசிஸ்டுகளின் வாயால் பயங்கரவாதி பட்டம்,  என்னே பாரதத்தின் பெருமை ஜெய் ஹிந்த்.