Posts Tagged ‘விவசாயிகள்’

ஹேப்பி நியூ இயர்

திசெம்பர் 31, 2010

கவிதைகள்-ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர்

ஒரு வாரம் முன்னிலிருந்தே
செல்பேசிகள்
சொல்லத்தொடங்கி
விட்டன ஹேப்பி நியூ இயர்……..

நடந்தவைகளை
மறப்போம் பத்திரிக்கைகளின்
காலச்சுவடுகள்
மெல்ல பதிந்து விட்டு
செல்கின்றன……

நடந்தவைகளை
மறக்கமுடியுமா என்னால்
நிம்மதியாய் உறங்கத்தான்
முடியுமா இனி
நடக்கப்போவதை நினைத்தால்……
கயர்லாஞ்சியின்
கொடுமைகள் எப்படி
மறையும்
அது மறையாத
வரை  என் கனவுகளின்
நடுக்கங்களும் குறையப்போவதில்லை……..

என் காதுகள்
இசையை கேட்காமலே
மூடிக்கொள்கின்றன……

எப்படி என்
காதுகள் திறக்கும்
பறையை அடித்ததற்காக
பீயை வாயில் திணித்தவன்
மேல்சாதியாய் நீடிக்கும்
வரை
என் காதுகள்எப்படி கேட்கும்
ஹேப்பி நியூ இயரை……

என் வாய்
குழறிக்கொண்டிருக்கின்றது

வெட்டுப்பட்டு
சாகும் போது மேலவளவு
முருகேசனின் குரல்
குழறியதை விட இன்னும் அதிகமாக
நான் எப்படி சொல்வேன்
ஹேப்பி நியூ இயர்……..

என் பாதங்கள்
ஆட
மறுக்கின்றன பாதணிகள்
கக்கத்தில் ஏறுவது
நிற்காதவரை
என்னால் ஆட
முடியாது………

ரெட்டை டம்ளர்
பாலியல் வன்முறை
கொல்லப்படும் விவசாயிகள்
நெசவாளிக்கு
தூக்கு கயிறான கைத்தறி
இப்படி எதுவுமே
மாறவில்லை
ஹேப்பி நியூ இயரும் கூடத்தான்……

“மாற்றம்
ஒன்றே மாறாதது”

ஆம்
மாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றத்தினை கொண்டுவருவோம்
மக்களோடு மக்களாக
சாவது தெரியாமல்
ஊளையிடுபவர்கள்
தொடரட்டும்
நாம் தொடங்குவோம்
நமக்காக
அங்கு
பலரின் முடிவுகள்
காத்திருக்கின்றன .

குறிச்சொற்கள்:

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

ஏப்ரல் 26, 2010

மே நாள் சூளுரை!

தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!

நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!

நிகழ்ச்சி நிரல்:

மே 1 – 2010

பேரணி துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.

பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி

தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்

உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

சிறப்புரை:


முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!


தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

புரட்சிகரக் கலை நிகழ்ச்சி


மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு

மே நாளில் சூளுரைப்போம்