Posts Tagged ‘infosis’

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

ஜனவரி 21, 2009

ndlfmeet2

சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு,கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்?

உலகமயமாக்கலினால்  தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்,ஐடி,பி.பீ.ஒ,ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள்.முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான் தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கிஎறிந்து விட்டான்.பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு  கம்பெனி தாவுகிறோம்.நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை.முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.
ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்த்ப்படுவது இல்லையா?பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள்  ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது  எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,இன்னும் ஆறு மாதத்தில் 50000பேர் ஐடி,பிபீஓ வில் மட்டும்  பணிநீக்கம் செய்யப்படப்போகின்றனர், இப்படிப்பட்ட நிலைக்கு தான் நம்மை இக்கம்பெனிகள் தள்ளிவிட்டன,நம் திறமைகள் முதலாளியின் தேவைக்காக குழிதோண்டி  தோண்டி புதைக்கப்பட்டன .இப்போது அவனின் தேவைக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். தொழிலாளர்களை முடியாக நினைத்து வதைத்த ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது.அங்கு வெற்றியை வரலாறாக்கிகாட்டிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இம் மாநாட்டில் திரளாய் பங்கேற்போம்..நம்முடைய பிரச்சினக்காக இனியும் போராடாது இருந்தால் வருங்காலம் தற்கொலை பாதைக்கு ஒப்பானதே.
தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம்.தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.
——————————————————————————————————————-

என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……

வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..

தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……

இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.

————————————————————————————————————————————————————————————————-

முதலாளித்துவ பயங்கரவாதத்தினை பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

———————————————————————————-

இம்மாநாடு போலிகளுக்கு சாவு மணிஅடிக்க வாழ்த்துகிறோம்

கலகம்

இற்று வீழும் முகமுடிகள்

ஜனவரி 19, 2009

sathyama-copy

இற்று வீழும் முகமுடிகள்

சாயம் பூசும் தேசம்

பல முறை தேசிய விருதுகளைப்பெற்று உழைப்பால் உயர்ந்த உத்தமன்கள் வரிசையில் முன்வரிசையில் முண்டியடித்து கொண்டிருந்த நாமலிஙக ராஜு தப்பை ஒத்துக்கொண்டு வாரம் ஒன்றாகிவிட்டது..கடந்த வெள்ளிகிழமை ராஜுவின் மனுவை விசாரித்த வழக்காடு மன்றமோ தள்ளி வைத்திருக்கின்றது. பத்திரிக்கைகளோ பாவம் ராஜுவும் அவரது சகோதரரர்களும் ஏனைய முக்கிய அதிகாரிகளும் திறந்த வெளி கழிப்பறையில் காலைக்கடனை கழிக்கிறார்கள்.சாதாரண கைதி போலவே நடத்தப்படுகின்றார்,

இப்படி அந்த கிரிமினலின் வாழ்க்கையில் ஏதோ தெரியாமல் நடந்த தவறுக்காக இப்படி ஆகிவிட்டதே என்றபடி நம்மையும் பீலிங்கில் ஆழ்த்துகின்றன. ஒன்றல்ல ரெண்டல்ல எட்டாயிரம் கோடிகளை (கண்ணுக்கு தெரிந்து மட்டும்) அமுக்கிய ராஜு இன்னும் ஊடகங்களாலும் மற்றோர்களாலும் “அவர்” என்று மதிக்கப்படுகிறார்,சாதாரண பிக்பாக்கெட் திருடன் அவன் என்று ஏசப்படுகிறார்.ஏற்கனவே ராஜுவின் மீது பாலியல் சம்பந்தப்பட்ட புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது,அப்போதெல்லாம் அவன் மீது கையை வைக்காத போலீசு தற்போது மட்டும் லாக்கப்பில் தள்ளியது ஏன்?

 ஒரு முதலாளியே தன் தவறை ஒப்புக்கொண்டு விட்டதால் அது கண்டிப்பாய் உண்மையாய் தானிருக்கும்,ஏனெனில் எப்படி டாடா நாட்டுக்காக உழைத்து மிகக்குறைவான லாபத்தில் மக்களுக்காக லட்சரூபாய் கார்தர வந்தாரோ ,அப்படித்தான் இவரும் வந்தார்,ரொம்ப தூரம் வந்தவர் கொஞ்சம் கால்தடுக்கி விழுந்து விட்டார்.அவ்வளவுதான் , “நான் தப்பு செய்து விட்டேன் “அதற்காக சட்டம் த்ரும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளேன்” கடைசியாய் கம்பெனிக்கு எழுதிய கடிதம் இது. ஒரு குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டதால்……………. என இதை எடுத்துக்கொள்ள முடியுமா?

கண்டிப்பாய் முடியாது,சத்யம் டாடா,இன்போசிஸ் மட்டுமல்ல பல சிறு ஐடி பீபீஓ நிறுவனங்கள் தங்களின் கம்பெனியை சந்தையில் வைத்திருக்கின்றன.பங்குகளை அதிகம் வாங்கும் யாரும் அவர் நினைத்த எடுப்பிலேயே கம்பெனியை மூடக்கூட முடியும்,ஒரு தொழிலாளியின் உழைப்பை முதலாளி விற்று காசாக்குகிறான்.அதையே வைத்து தற்போது சூதாடிக்கொண்டிருக்கின்றான். இப்படி சூதாடும் ஆட்டத்தில் அரசு நிறுவனங்கள் பலவும் மக்களின் பணத்தை சத்தியம் டாடா போன்ற நிறுவனத்தில் பங்குகளை வாங்கிகுவித்தன.SBI-n காப்பீடு திட்டத்தின் விளம்பரத்தில் இப்படிவரும்” நாங்கள் தேர்ந்தெடுத்த கம்பெனிகளில் முதலீடு செய்கிறோம்”. தனியார் முதலாளிகள்,அரசு, நடுத்த்ர வர்க்கத்தின் சிறு பிரிவினர் ஆகியோர் சூதாட்ட்டத்தில் குவித்தனர்,ஒரு நிறுவனத்தை பற்றி எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ,ஆனாலும் நீ காலையில் ஒரு கம்பெனிக்கு பங்குதாரன் பிடிக்க வில்லையா மறுனாள் டிசிஎஸ்க்கு பங்குதாரன்,இப்படி சுற்றும் உலகை விட வேகமாய் சுற்றினார்கள்.

போட்டதை விட பல நூறு மடங்கு தரும் தங்க சுரங்கம் தான் பங்கு சந்தை என்பதை உணர்ந்த முதலாளிகள் என்னைப்பார் என் அழகைபார் என்றபடியே வரவுக்கணக்கை தாறுமாறாய் ஏற்றிக்காண்பித்து அதன் மூலம் பங்கு வருவாய்களை அதிகப்படுத்தினர்.மேலும் போலியாக கம்பெனிகளை உருவாக்கி அதிகமாக வாங்குவதற்கு வரவேற்பு இருப்பதாக செட்டப் செய்தார்கள்.மக்களின் பணத்தை தின்று குடித்த முதலாளிகளோ பல கம்பெனிகளை புதிதாய் உருவாக்கி அதையும் சந்தையில் இறக்கினர்கள்.

இப்படி சூதாட்டம் தேசப்பாதுகாப்பாக மாறியதால் சூதாடிகள் அரசின் பட்டங்களையும் மொத்தமாய் அள்ளினார்கள். இப்படி எல்லாரும் கமுக்கமாய் சுரண்டிக்கொண்டிடுந்த போது தான் அமெரிக்க பொருளாதார சுனாமி வந்தது.அதனால் தான் பங்கு சந்தையில் மாபெரும் தேக்கம் ஏற்பட்டும் ரொம்பவும் மண்மோகன் முன்முயற்சி எடுத்து சாக்கடையின் அடைப்பினை எடுத்துவிட்டதாக கூறினார்.அதையும் மீறி இந்தியாவில் ஐடி பீபீஓ நிறுவனங்கள் மூடத்தொடங்கின. சூதாடிகளோ தங்கள் கம்பெனிக்கு மேக்கப் போட்டு கொள்ளைஅடித்துக்கொண்டே போனார்கள்.

ஒருக்கட்டத்தில் தணிக்கை விசயத்தில் முதலில் மாட்டிய சத்தியம் திடீரன கம்பெனி நட்டத்தில் போவதாக அறிவித்து அதன் தலைவனும் கொள்ளைக்காரனுமான ராஜு “இப்ப என்னபண்ணறது” என்ற படி தெனாவட்டாயிருக்கிறான்.

53 ஆயிரம் பேரின் கதி என்ன என்பது இப்போது பங்கு சந்தை சூதாடிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படப்போகின்றது.எத்தனை பேர் சாகவேண்டும் என்பதும் செத்தார்கள் என்பதும் காலையில் பங்கு சந்தைப்போல ஏறி இறஙகவும் நேரலாம்.உணவுப்பொருளை வைத்து சூதாடி விலைவாசியை விசம் போல் ஏற்றியது போல் மனித உழைப்பும் பங்கு சந்தையில் ஏற்றப்பட்டு இருக்கின்றது. இது என்னவோ ராஜு மட்டுமே குற்றவாளி இல்லை.இந்த அரசு தான் முக்கிய குற்றவாளி.சூதாட்டத்தில் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட முதலாளிகளௌக்கு எப்படியும் தண்டனை கிடைக்கப்போவதில்லை,அர்சத் மேத்தா பல்லாயிரம் கோடி ஊழல் செதான் தீர்ப்புக்கு முன்னரே அவன் சொர்க்கலோகம் பத்திரமாக போய்விட்டான்.

அவனால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னு நரகத்தில் துடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இப்போது சொல்லப்படுகிறதே “சத்யத்துக்கு அரசு 2000 கோடி த்ர வாய்ப்புண்டு ” என்ற இது கூட 53 ஆயிரம் பேருக்காக இல்லை. அண்ணிய செலாவணி மேற்கொண்டு வரவேண்டும் ஐடி பீபீஓ கம்பெனிகள் தங்கு தடையின்றி நாட்டையே சுடுகாடாக்கவேண்டும் அதுதான் இப்போதிருக்கும் காங்கிரசுக்கும் பீஜேபி போலிகள் உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளின் எண்ணம். மக்களின் பணத்தை இந்த நாய்கள் பிச்சையாய் அல்ல உரிமையாக கேட்கிறார்கள் எப்படி அமெரிக்காவில் செய்தார்களோ அதையே இங்கேயும் கோருகிறார்கள்.மக்களின் பணத்தில் வரிசலுகைகள் அவர்களின் நிலஙகளை பறித்து லட்சக்கணக்கானோரை கொத்தடிமையாக மாற்றிவிட்டு தன்னுடைய சொகுசுக்கு குறவு வந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை சாகவும் சொல்கிறார்கள். இதைத்தான் டாடா,இன்போசிஸ் நாரயணன் மூர்த்தி மற்றும் ஏனைய கம்பெனி கிரிமினல்களும் அரசின் ஆசியுடன் மேற்கொள்கின்றனர். தேவையென் ஆட்குறைப்பு நடவடிக்கை , தன் தேவைக்காக வேலையில்லா கூலிப்பட்டாளத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த விலைக்கு அடிமைகளை உருவாக்குதல் போன்றவை ஒரு முதலாளி மனசை கல்லாக்கிக் கொண்டு செய்யும் காரியங்களாக சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு முதலாளி எல்லாம் திட்டம் போட்டே அடிமைகளை உருவாக்குதலையும்,ஆட்குறைப்பையும் மேற்கொள்கிறான். அப்போது தான் அவன் முதலாளியாக நீடிக்க முடியும். கண்ணா இது தான் டிரைலர் முழுப்படத்த பார்த்த….. இப்போது ராஜுதான் ஆரம்பமே இன்னும் பலரின் முகமுடிகள் இற்று விழ ஆரம்பித்து விட்டன,அவை கண்டிப்பாய் தேசத்தின் சோகமான முடிவுகளாக காட்டப்படும்,அம்முதலைகளின் கண்ணீருக்கு பதிலாய் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்படும் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் வேரோடு பிடுங்கப்பட்டு எறிபப்படும்.

கடந்த சனியன்று ராஜு இருக்கும் சிறைக்கு வெளியில் பூங்கொத்து கொடுத்து வைத்து அவர் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக சூதாடிகள் ஆணவமாய் சொல்லுகிறார்கள்.இனியும் அமைதியாய் இருந்தால் கண்டிப்பாய் அரச பயங்கரவாதிகளும் முதலாளித்துவ பயங்கரவாதிகளும் சாயம் பூசுவார்கள் நம் கல்லறைகளுக்கு. மார்க்ஸ் சொன்னாரே”இழப்பதற்கு ஏதுமில்லா வர்க்கம்” என்று அந்த தொழிலாளி வர்க்கத்தால் மட்டும் தான் இந்த பாசிசப்பயங்கர வாதிகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் அவர்களுக்கு கல்லறை கட்டமுடியும். நாம் பாட்டாளிகள் என்பதை நாங்கள் முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டோம்.

என்னருமை ஐடி பீபிஓ ஊழியனே அடிமை வர்க்கமா இல்லை ? இல்லை தொழிலாளி வர்க்கமா?முதலாளிய பயங்கர வாதத்துக்கு கல்லறை கட்டப்போகிறாயா இல்லை உனக்கு நீயே சாவு மணி அடித்துக்கொள்ளப்போகிறாயா நீயே முடிவு செய் முடிவு உன்கையில்.

டிசம்பெர் 25 முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு கல்லறை கட்டுவோம்.வர்க்கமாய் ஒன்றிணைவோம்.