Posts Tagged ‘NDLF’

ஸ்ரீநி & சாநி – அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

மார்ச் 19, 2010

ஸ்ரீநி & சாநி

அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

ஒரு காலத்தில் ஸ்ரீநித்யானந்தாவிற்க்கு அல்லக்கையாய் இருந்த நம்ம சாரு நிவேதிதா அவரை கண்டபடி திட்டிக்கொண்டு இருக்கிறார்.  அவன் நடிகையின் குண்டியை அவன் நக்கினால் அதற்கு நானா பொறுப்பு? ஆங்கில புத்தகங்களை மொழி பெயர்த்ததற்கு இன்னும் பணம் தர வில்லை. கும்பமேளா யாத்திரைக்கு 1 லட்சம் கொட்டினேன்.  அத்தான் என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே? என்றாடி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் திட்டுவதும்,  புலம்புவதும் உண்மைதானா?  நம்ம சாநி மட்டுமல்ல ஸ்ரீநியின் முன்னாள் அல்லக்கைகள் பலருக்கும்  அவனை திட்ட வேண்டிய இப்போது அவசியமிருக்கிறது.

ஸ்ரீநியின் ஆளுயர போட்டோக்கள் மாட்டப்பட்ட மருத்துவமனைகள், ஹோட்டல்கள் இதர எண்ணற்ற அங்காடிகளின் புனித இடங்களெல்லாம் எல்லாம் வெறுமையாய் காட்சியளிக்கின்றன.  அவை எப்போதும் வெறுமையாய் இருக்கும் எனறு சொல்ல முடியாது.

எனக்குத்தெரிந்து அந்த விபச்சாரியை (ஸ்ரீநி ) வைத்து பணம் சம்பாதித்த மாமாக்கள் சரக்குக்கான மவுசு குறைந்தவுடன் வேறு ஒரு விபச்சாரிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். குமுதம் மாமாவோ அவனை வைத்து தானும் கல்லா கட்டிக்கொண்டு இப்போது சீக்காளி விலைமகளை மாமாப்பயல் தூற்றுவது போல வைதுக்கெதண்டிருக்கிறது.

ஸ்ரீநியை திட்டும் ஊடகங்களாகட்டும் அல்லக்கைகளாகட்டும் உதிர்க்கும் வார்த்தைகள் என்ன?  ஏமாற்றி விட்டார்? புனிதமான காவியுடையை போட்டுக்கொண்டு…….. என்று இழுக்கின்றன. சாநியாகட்டும் மற்ற யாராகட்டும் பார்ப்பன இந்து மதத்துககு எந்த கேடும் வராத தீர்வை கேட்கிறார்கள். ஒன்று அவர் நல்லவராயிருக்க வேண்டும், இல்லையயனில் அவர் தப்பே செய்திருந்தாலும் அவருக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை. (  note this point u’r honourஅவர் நல்லவராயிருந்தால் அது இந்து மதத்தோடு தொடர்புடையது.)

சாநி குமுதம் ரிப்போர்ட்டரில் “”சரசம் சல்லாபம் சாமியார்…..” எனற பெயரில் தொடரினை எழுதி வருகிறார் அதில் 2 வது பாகத்தில் அவர் எழுதுவதைப்பார்க்கும் எல்லோருக்கும் புரியும் சொல்லும் கருத்து “ இதுக்காக அவர் ரொம்ப மோசமில்லை கொஞ்சம் மோசம்”

“”என் மனைவி அவந்திகாவுக்கும் அதே தான் நடந்தது. பழம், அவித்த காய்கறிகள் தவிர எதைச்சாப்பிடடாலும் உடனே அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய நிலையில் இருந்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக அலோபதி,  சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று எந்த வைத்திய முறையிலும் குணமாகவில்லை. இந்த சாமியார் ஏதோ புரியாத கைகளை ஆட்டி நமக்குப்புரியாத வார்த்தகைளைச் சொன்னார்.சரியாகி விட்டது”

அதாவது இன்னமும் ஏதாவது ஒரு மருத்துவமனையிலோ அல்லது லாட்ஜிலேயோ நித்தியின் படத்தை மாட்டி வைத்திருந்தால் என்ன நடக்கும் ? நித்தியின் சிடியினைக்கேட்டு மக்கள் கூட்டம் மொய்க்கும்.  பேர் கொஞ்சம் டேமேஜ் ஆகும். தனக்கு வியாபாரத்திற்காக பயன் பட்டவன் இப்போது கொஞ்சம் தள்ளி வைக்கப்பபட்டிருக்கிறான். அவ்வளவுதான் அதற்காக அவனை முற்றிலும் அவர்கள் வெறுத்து விட்டார்கள் என்று சொல்லமுடியுமா?

இப்போதுகூட நித்தி பாலியல் ரீதியாக சம்பந்தப்படுத்தப்பட்டு வீடியோ வெளியே வந்திருப்பதால் அவனை திட்டுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். இதே பாலியல் அல்லாது வேறு ஏதாவது பிரச்சினையில் சிக்கியிருந்தால் அது ஒரு குற்றமாகவே இனம் காணப்படாது.

மருத்துவர் ருத்ரன் சொன்னது போல் இவன் மீது கோபம் கொள்ள இப்படி ஒரு படம் தேவைப்படுகிறது. எவ்வளவு கேவலமான அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

போலிச்சாமியார் என்று ஒன்று இல்லை, சாமியார் என்பதே போலிதானே அதில் என்ன தனியாக போலி?  நான் கடவுளை நேரடியாக வணங்குகிறேன். அவன் என்னைப் படைத்தது உண்மை என்றால் நான் பேசுவது அவனுக்குப் புரிய வேண்டுமா இல்லையா?  அப்படிப்புரியும் போது நடுவில் எதற்கு ஒரு புரோக்கர் ? நான் சொன்னால் கடவுள் கேட்க மாட்டானா? அவனுக்கு புரோக்கர் தேவைப்படுகிறதா?  அவன் சொன்னால் தான் ஆண்டவனுக்கு புரியுமா ?   நான் சொன்னால் என்னைப்படைத்தவனுக்கு ஏன் புரியாது ?  எல்லாவற்றையும் அவன்தான் படைத்தானென்றால் , எல்லாவற்றுக்கும் அவன் சிரத்தை தேவையயனில்  ஜெயேந்திரன் சங்கரராமனை கொன்றதற்கும், தேவநாதனின் பாலியல் பூசைக்கும், நித்திக்குட்டியின் “ஆன்மீக” ஆராய்ச்சிக்கும் பரம்பொருளின் சிரத்தை தேவைப்பட்டதா ? பக்தனுக்கு இக்கேள்விகள் எப்போதுமே எழுவதில்லை. எழுகின்றவர்கள் பக்தர்களாக நீடிப்பதுமில்லை. இல்லாத ஒருவனை வைத்து  மேற்கொள்ளப்படும் மாய்மலங்கள் தான் மதம்.

மதம் என்ற கஞ்சா செடியும்

ஆன்மீகம் என்ற ஹெராயினும்

இறைவன் இருக்கின்றான். எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவன் தான் இறுதித்தீர்வு. மக்கள் நல்வழிகளில் செல்வதில்லை உலகம் கண்டிப்பாக அழியும் நம்பை கல்கி பகவானோ, அல்லாவோ, இயேசுவோ   அல்லது ………….. காப்பாற்றுவார்கள்”

மக்களுடைய பொருளாதார, சமூகப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? அதைத்தீர்கக என்ன வழி? உழைப்பவர்கள் ஒருசாரராகவும் அதைவைத்து பிழைப்பவர்கள் ஒரு சாரராகவும் இருக்கிறார்கள்.  பொருளாதார ரீதியாக பலமானவர்கள் தங்களின் சுகங்கள் பறிபோகா வண்ணம் சட்டங்களைப்படைக்கிறார்கள். அவர்களின் சுகங்கள்  உழைப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றன. அதை எப்படி மாற்றியமைப்பது?  இல்லை அதை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் அது இறைவன் கொடுத்தது. யார் இறைவன் தெரியுமா ? உன்னையும் என்னையும் ஏன் இந்த உலகத்தையும் படைத்தான். இப்பூவுலகில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் அவன்தான் காரணம்.

உனக்கென்று ஆண்டவன் என்ன கொடுத்தானோ அதுதான் அதைத்தாண்டி நீ எதையும் பெற முடியாது. உன்னுடைய குறைகளுக்காக ஆணடவனை வணங்கு, தொழு,  கண்ணீர் விடு. கருணைக்காட்டுவான். மதமென்ற நிறுவனம்  பல கடவுள்களை பெற்றது.  மக்களின் கலாச்சாரங்களுக்கேற்றபடி பல தேவர்கள் பிறந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியதாக சொல்லப்பட்ட தேவர்கள் பின்னாளில் ஆளும் வர்க்கத்தின் தூதர்களானார்கள். மக்களின் எல்லாத்தேவைகளுக்கும் கடவுளும் மதமும் காரணமாக அறியப்பட்டன. அவைகளோடு பின்னி பிணைக்கப்பட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் கேள்,  கருணையோடு கேள், கெஞ்சிக்கேள், உன்னை வருத்திக்கேள். ஆண்டவன் தருவார்.  ஆண்டவனைப்பெற்ற அதிகாரம்  தன்னைக்காக்க  மதமென்னும் கஞ்சாவை நிறுவனமாக்கி மெல்ல மெல்லக் கொடுத்தது.

உனக்காக நீ போராடுவது தவறு அது ஆண்டவனை கோபம் கொள்ளச்செய்யும், போராடுவது ஆண்டவனை மட்டுமா கோபம் கொள்ளச்செய்யும் ,அதிகாரத்தையும் கூட அல்லவா ? ஆண்டவனிடம் நீ கேள்வி கேட்க முடியாது. அதிகாரத்தையும் நீ கேள்வி கேட்க முடியாது. அவராவது ஏதாவது பார்த்துக்கொடுப்பார். அதுவும்  முன்னோர்கள் சரியில்லை யயனில் அதுவும் கிடைக்காது. கேள்விக்கு அப்பாற்பட்டதாய் மதம் விளங்கியது.

இந்த மாடர்ன் உலகில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறக்க புது வழிமுறை தேவைப்படுகிறது. அறிவுஜீவிகள், மேதாவிகள், தின்று செரிக்காத உடல்கள் எல்லாவற்றுக்கும் அமைதிதான் பற்றாக்குறை. அவற்றைத்தேடி அலைகிறார்கள். சாதாரண மனிதனும் பொருளாதார பிரச்சினை ஆனாலும் சரி சமூகபிரச்சினை ஆனாலும் சரி அதற்கும் அமைதிதான் பற்றாக்குறை என நினைக்கிறான்/ நினைக்கவைக்கப்படுகிறான்.

மதத்தில் பாடப்பட்ட அதே ராகங்கள் இங்கேயும் ஒலிக்கின்றன.  ஆனால் வேறு வித்யாசமான வழிகளில்….. சமூகத்திலிருந்நு பிரிந்து வாழ்,  சமூகத்தைப்பற்றி நினைக்காதே .ஆனால் ஒரே தீர்வுதான் போராடாதே எதற்கும் எங்கேயும். எல்லாம் கர்ம வினை தான் காரணம். போதை என்றால் கஞ்சா மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தேவைக்கேற்றபடி அது ஹெராயின், பிரவுன் சுகர் என்றபடி போய்க்கொண்டே இருக்கிறது. பார்ப்பனீயத்தை ஒழிப்பதுதான் என் குறிக்கோள் என்று  எந்த சாமியாராவது சொல்லியிருக்கிறாரா?

இல்லை எந்த ஆனந்தமாவது அழிந்து போன விவசாயத்ததை, சிதைக்கபடும் தொழில்களை,  உறிஞ்சப்படும் நீர் வளத்தை பற்றி அதற்காக போராடுவதைப்பற்றி பேசியிருக்கிறார்களா?  பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் எல்லாவற்றையும் பேசுவார்கள் ஆனால் அதற்கு நடுவில் வாழும் வாழ்க்கையின் போராட்டங்களை பற்றி ஏன் பேசுவதில்லை ? அரிசி,  பருப்பு,  மிளகாய் என தினமும் விலைவாசி அவர்கள் சொல்கிறார்களே அந்த அண்ட சராசரத்தயைம் தாண்டி போகிறதே அதை குறைக்க என்ன வழி?

ஏன் பேசவில்லை என்பதல்ல நாம் தப்பித்தவறி கூட பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைதிதான் வேண்டுமானால் அது மயானத்திலும் கிடைக்கும். யாருக்குத்தான் அமைதியின் மீது காதலில்லை? அந்த அமைதியை பெற அதிகாரத்தை கைப்பற்றியாக வேண்டும். அதற்கு அமைதியாய் இருக்க முடியுமா என்ன?

அமைதிதான் எல்லாவற்றுக்கும் தீர்வென்பவர்கள் அமைதியாயிருப்பதில்லை. அவர்கள் அமைதியை ஜட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார்கள், சிறு குழந்தைகளின் பேண்ட்களை பிடித்து இழுக்கிறார்கள், அவர்கள்தான் இசுரேலை புனித பூமியன்கிறார்கள், ராமனுக்கு கோயிலைக்கட்டு என்கிறார்கள், செத்த மாட்டுக்காக 5 தலித்துக்களை கொன்றார்கள், அவர்கள்தான் சாட்சாத் பெருமாள் கோயிலுக்குள்ளே புகுந்து கொலையும் செய்கிறார்கள்.

மறுபடியும் சாணியிடம் போவோம்

சாநி போட்டிருக்கும் அந்த சாணியைப்பார்ப்போம்  ” எனக்குத் தெரிந்த பெண். கையில் மூன்று மாத குழந்தை  . நடு இரவில் அவரை அடித்து உதைத்து கணவன் வீட்டை விட்டு விரட்டு விட்டான். குளிர் காலம். நியூயார்க் நகரம். பாஸ்போர்ட் கணவன் கையில். கையில் காசு இல்லை. ஒரு தோழி தான் உ துணை செய்திருக்கிறார். என்னிடம் அந்தப்பெண் இதைச் சொன்ன போது ஒரு விசயம் ஆச்சர்யமாக இருந்தது. அவள் கணவன் ஐ.ஐ.டியில் தங்கப்பதக்கம் பெற்றவன்.இப்போது அந்த மனிதன் செய்த பாதகச்செயலுக்காக அவன் வாங்கிய தங்கப்பதக்கம் போலியானது என்று சொல்வீர்களா? அதேதான் இந்தச் சாமியாருக்கும் பொருந்தும். இவருடைய சல்லாபங்களை பார்த்து விட்டு “இவர் ஒரு பிராடு”” என்று சொல்லும் போது இதை யோசிக்க வேண்டும். பதஞ்சலி முனிவரிடமிருந்து யோகத்தையும், புத்தனிடமிருந்து ஞானத்தையும் கடன் வாங்கி, அதைத் தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர் நித்யானந்தா.’

அவன் கெட்டவன்தான், ஆனா அவ்வளவு கெட்டவன் கிடையாது. இது தான் ஸ்ரீநிக்கு சாநி போட்ட ஸ்டேட்மெண்ட்.  சாநியை ஸ்ரீநி வென்ற இடமென்று ஒரு கதையைச்சொன்னதாக இங்கு எழுதியிருக்கிறார். சாநியைப்பொறுத்த வரை நித்யானந்தா பொம்பளை விசயத்தை தவிர சாமியார்தான். சாமியார் செய்த தப்பு அவ்வளவு தான். இதற்காக சாமியாரே இல்லைன்னு சொல்ல முடியுமா? ஸ்ரீநியின் நீலப்படம் வந்த ஒரு நாளுக்குள்ளேயே தன் தளத்தில் அவரை திட்ட ஆரம்பித்திருந்தார். திட்டாமல் இருந்திருந்தால் “ஏன் அமைதியாய் இருக்கிறாய் உனக்கும் அவனுக்கும் வேறு தொடர்பு இருக்கிறதா?”  போன்ற கேள்விகள் வரும். தன் இமேஜ் சரிவதை திட்டிக் காப்பாற்றினார்.

ஆனால் அந்த மனசு கேக்குமா? ஆண்டவன் ஒரே மனசை படைச்சுட்டானே. அவர் நினைத்தாலும் அதைமீறி அவர் மனது அவர் சாமியார்தான், எல்லாம் அறிந்தவர் தானென சான்றிதழ் தருகிறது. பாட்சா படத்தில் ஒரு டயலாக் “அய்யா மனசில வர முதல் காதல்ங்குறது முள்ளு மாரி அவங்களை குத்திகிட்டே இருக்கும்”

அப்படித்தான் ஸ்ரீநி மீதான சாநியின் காதல் அவரே நினைத்தாலும் விட மறுக்கிறது போலும். போதையின் சுவை மீண்டும் அவரையறியாமலே கேட்கிறது. ஆமா இவரையயல்லாம்  பெரியாரியவாதின்னு போடுகின்ற மாமாப் பத்திரிக்கைகளை எதைக்கொண்டு அடிப்பது?

அமைதியாய் இருக்கக்கூடாத நாம் அமைதியாயிருக்கிறோம். நம் உரிமைகள் ஒவவொன்றாய் பறிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. விதர்பாவில் இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்செத்துப்போய் விட்டார்கள்.

ஒரே வழிதான் மாற்று. சமூகத்தை சார்ந்திருப்போம். மக்களை சார்ந்திருப்போம். மக்களைப்படிப்போம் , மக்களை கற்போம், மக்களிடம் சென்று கற்பிப்போம். அது ஒன்றுதான் உண்மையான ஆனந்தத்தை பெறும் வழி. போராட்டம் ஒன்று தான்  சுயமரியாதையைத் தரும். போராட்டம் ஒன்று தான் மகிழ்ச்சியைத்தரும்.

அன்றாடம் பேருந்துகளில், புகைவண்டிகளில் , தெருக்களில் “அன்பார்ந்த உழைக்கும் மக்களே ” என ஆரம்பிக்கும் நக்சல்பாரி தோழரைக் கேளுங்கள் எது ஆனந்தம் என்று, தில்லையிலே தமிழ் முழங்க தம் ரத்தத்ததை சிந்திய தோழர்களைக் கேளுங்கள்,  தண்டகாரண்யாவிலே அந்நிய ஆதிக்கத்திற்கெதிராக ஆயுதமேந்தும் பழங்குடின மக்களைக் கேளுங்கள் எது மகிழச்சி,  எது ஆனந்தம் என்று.

அதை விட்டுவிட்டு இன்னும் கும்மிருட்டில் குண்டலினியை நீங்கள் எழுப்பிக்கொண்டிருந்தால் நீங்கள் மனிதத்தன்மையை மட்டுமல்ல மானத்தையும் இழந்து விட்டீர்கள் என்று பொருள்.

நித்தியிடம் ஆனந்தம் தேடி சென்றவர்களாகட்டும், இனி அவனிடம் பொறுமையாய் காலம் கனிந்தபின் தேடப்போகும் நபர்களாகட்டும், வேறு யாரிடமாவது ஆனந்தம் என்ற ஹெராயினை , பிரவுன் சுகரை  சுகிப்பவர்ளாகட்டும் நம்ம சாநி உட்பட,

உங்கள் காதுகளில் கேட்கிறதா புரட்சிக்கவியின் எழுத்தில் எமது குரல்பாரடா உனது மானிடப் பரப்பை” “காடுகளைந்தோம்”

related

0.சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
1.ஆன்மீகத்தேடல்கள்
  • 2.வர்க்கம்
    ஒன்றே பதில் சொல்லும்
  • தில்லையை மீட்போம் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்போம்.

    பிப்ரவரி 17, 2009

    தில்லையை மீட்போம் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்போம்.

    thillai-new

    இது ஏற்கனவே கேட்டது ,படித்தது போலத்தெரியலாம்,பழைய விசயங்களை புதிய விசயமாக்குவது காலமே தீர்மானிக்கிறது.அப்படித்தான் தில்லைக்கோயிலில் தமிழை நுழைக்கவும் அதை அரசின் கட்டுக்குள் கொண்டுவரவும் போராடிய புரட்சிகர அமைப்புக்களின் பணி இன்னும் பலமடங்கு கூடியுள்ளது.வெற்றி என்பது ஒரு காரியம் நிகழ்த்தப்பட்டதால் மட்டுமல்ல தொடர்ந்து அதை தக்க வைப்பதிலேயே இருக்கிறது.மீண்டும் பல நிகழ்வுகளை நினைவு கூற வேண்டிய கட்டாயத்தில் எதிரிகளும் துரோகிகளும் நம்மை தள்ளியிருக்கிறார்கள்.

    கடந்த 2000-ம் ஆண்டு திருச்சிற்றம்பலத்தில்  தமிழில் பாட முனைந்த சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சித ரவுடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்டார்.அதற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மக இக,புஜதொமு,புமாஇமு,விவிமு மற்றும் உள்ளூர் சனனாயக சக்திகளுடன் இணைந்து போராடியது
    தீட்சிதர் ஆதிக்கத்திற்கு எதிராக உண்மையில் கடந்த  நான்கு ஆண்டுகளாக தொடர் போராட்டங்களால் தில்லையே பரபரப்புக்குள்ளாகியது.
    உள்ளூர் சனனாய சக்திகள்  முக்கியமாக முன்னாள் அமைச்சர் விவி சாமிநாதன் மற்றும்  வி.எம்.எஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.தீட்சிதர்களின்  சில்லுவண்டித்தனமெல்லாம் சிதம்பரம் முழுக்க நாறிக்கிடந்தது.
    அவ்வூர் வழியாக பயணம் செய்ய நேர்ந்தது.அப்போது சிதம்பரத்தில் ஏறிய பயணியிடம் தீட்சிதர்களின் அட்டூழியத்தினை சொன்னேன்.அவர் பொறுமையாய் சொன்னார்” எங்களுக்கு அது நடக்குறது எப்பவோ தெரியுமே”.மக இ க வின் பிரச்சாரத்துக்கு முன் பலரும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடம் தீட்சித ரவுடிகளை யாராலும் அடக்க முடியாது.
    கோயிலில் அசைவ உணவுகளை தின்பது,கோயிலில் நகைகளை கொள்ளையடிப்பது ,கோயிலிலே விபச்சாரத்தனத்தில் ஈடுபடுவது எல்லாம் பட்டவர்த்தனமாகியிருந்தது,யாரும்  முன்  வரவில்லை காரணம்  எல்லாம் கடவுளின் பெயரால் நடைபெற்றதும் முக்கிய காரணம்.
    இப்போது வரும் சனியன்று நடக்கப்போகின்றதே  அந்த பெரியார் சிலை அருகில் தான் முதல் பொதுக்கூட்டம் நடந்தது.அதில் பேசிய திரு.வி எம்.எஸ்.தனக்கு சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து வந்த கடிதத்தை படித்துக்காட்டினார்,அதில் தீட்சிதர்களி அயோக்கியத்தனம் குறித்து எழுதப்பட்டிருந்தது.அக்கூட்டத்தில் பேசிய   CPM மாவட்ட செயலாளர் சொன்னார்” உரிமைக்காக “இந்தியா முழுவதும் மார்சிஸ்ட் கட்சி மட்டுமே போராடும் அதில் வெற்றியும் பெறும் என வீராப்பாய் பேசினார்.
    அடுத்த வாரமே பார்ப்பனர்  என்ற சொல்லால் பிராமணர் உரிமை அவமதிக்கப்படுவதாக கூறி  வெளியேறினர்.பிறகு தனியாய் போராடுவதாய் கூறி பார்ப்னீயத்திற்கெதிரான போராட்டத்தை தங்கள் தலைமி போலவே சிதைக்க முயற்சி செய்தனர்.
    தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியும் அதன்  வெக்கங்கெட்டராமனும் வெளிப்படையாகவே தீட்சித்ர்க்கு ஆதரவாய் திரிந்தனர். சேக்கிழார் விழாவில் தீட்சிதரை  அருளாசி வழங்க அழைத்தனர்.அவ்விழாவில்  ம.க.இ.க  இந்த புரட்டல் வாதிகளை அம்பலப்படுத்தி துண்டறிக்கை வெளியிட்டது.பின்னர் அரசியல் விபச்சாரி நெடுமாறனை  கூட்டிவந்து கூட்டம் போடார்கள் .அதில் ஒப்புக்குகூட  பார்ப்பனர்  எனும் வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை.ஆனால் போராட்டத்தில் பங்கு கொண்டிருந்த புரட்சிகர அமைப்புக்களை கிண்டலடித்தார்கள் . ஆனால் இந்த நாய்களின் ஊளையை சற்றும் மதிக்காது மனித உரிமை பாதுகாப்பு மய்யம் தொடர்ந்து போராடியது.
    தில்லையில் அதன் தோழர்கள் குருதி சிந்தி தமிழை கொண்டு சென்றார்கள்.தமிழை நீச பாசை எனகூறி ஒதுக்கிய தீட்சிதக்கும்பலால்   ம க இ க தோழர்கள் நுழைந்த போது வாய் மூடி மவுனம் சாதிக்கவே முடிந்தது. அப்போது நடந்த சம்பவங்களோ கொடுமையிலும் கொடுமை பல ஊடகங்கள் மக இ க -இன் பெயரை திட்டமிட்டே மறைத்தன.
    அரசியல் மாமா கட்சியான சீபீஎம் தனது போராட்டத்தாலே தமிழ் நுழைந்தாக போஸ்ட்டர் ஒட்டியது.அப்போராட்டத்தையே சிதைக்க முயன்ற நாய்கள் வாய் கூசாது பல்லைகாட்டின,சொந்தம் கொண்டாடின.
    சென்னையில் பல இடங்களில் போஸ்ட்டர் ஒட்டிய த மு எ ச தமிழக அரசுக்கு நன்றி சொன்னது.
    அக்கோயிலை அரசுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கோரி அரசு நடத்தாமல் கிடந்த வழக்கினை  ஆறுமுகசாமி பெயரில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மனுத்தாக்கல் செய்தது.இத்தனை ஆண்டுகளாக தூங்க வைக்கப்பட்ட  வழக்கினை தட்டி எழுப்பி அரசின்  வழக்கு மன்றத்தின் மூலம் கோயிலை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வரும்  உத்த்ரவு பெறப்பட்டது,வழக்கம் போல திகவோ தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறது,மற்ற கட்சிகளோ பத்திரிக்கை மற்றும் ஊடகங்களோ திட்டமிட்டு  மக இ க புஜதொமு பு.ம.இ.மு,விவிமு ஆகிய அமைப்புக்களின் பெரும் பங்கினை மறைத்தன.
    சென்ற ஆண்டு நடந்த வெற்றி விழ பொதுக்கூடத்தில் பேசிய வேல் முருகன் கூட ம க இ க தான் இவ்வெற்றிக்கு காரணம் என தெளிவாக கூறினார்,ஆனால் திக ஏன் பல அமைப்புக்கள்  புரட்சிகர அமைப்புக்களின் பெயரை திட்ட மிட்டு மறைக்கின்றன.
    ஆனால் தில்லை மக்கள் தெரிந்து கொண்டார்கள் ம க இ க வும் அதன் தோழமை அமைப்புகளாலேயே  இவ்வெற்றி ஈட்டப்பட்டதென்பதை ஆம் அன்று முதல் வரும் சனி வரை நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான நிதியை மக்கள் தான் வழங்குகின்றனர்.நெருப்பை பொட்டலம் கட்டி வைக்க முடியாது அப்படித்தான் போராட்டத்தையோ அதன் வெற்றியையோ அதிக நாள் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

    பார்ப்பன பாசிஸ்டுகள் ஓரணி

    கோயிலோ கையை விட்டு போய்விட்டது அதை மீட்டே தீருவோம் என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்,பார்ப்பன மீடியாக்களோ அதற்கு ஒத்து ஊதி அதன் ஊது குழலாய் செயல் படுகின்றன. கடந்த வாரம் “ஈஸ்வர ரக்சது” எனும் பெயரில் தலையங்கம் தீட்டிய  பார்ப்பன மணி கோயிலை அரசு எடுத்துக்கொண்டது இது வரை இருந்த கோயில் புனஸ்காரங்களும் தடையாகும் என்பதாக சித்தரிக்கிறது,இது வரை யோக்கியமாக இருந்ததாகவும் தற்போது அரசியல் வாதிகள் கெடுத்து விடுவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கிறது,அதற்கு கருத்து சொல்லுகிறார் பார்ப்பன கொழுந்து”அண்ணாவோட போட்டோவை மாட்டுறாங்க ஆனா அரங்கனுடைய போட்டோவ மாட்டுறான்க இதுக்கு என்ன காரணம் திருச்சி ரெங்க நாதன் அரசுவசமிருப்பதே,ஆனாலும் நாம் பொறுமையாயிருப்போம்” என்னவோ தமிழக கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தன் சொந் உழைப்பால் கட்டியதைப்போலவும் அது பார்ப்பனர்களி பரம்பரை சொத்து அது அரசு தட்டி பறிக்க முயல்வதாக பார்ப்பன மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.
    என்னுடைய உழைக்கும் மக்கள் ரத்தத்தில் நிமிர்ந்த கோயில்கள் அம்மக்களுக்கு திறப்பதில்லை,அன்று பார்ப்பன ஆதிக்கத்தில்  கேள்வி கேட்ட உழைக்கும் மக்கள் எரிக்கப்பட்டு நாயன்மாராக்கப்பட்டனர்.என் மக்களால் உருவாக்கப்பட்ட கோயிலுக்கு நீ என்ன காவலிருப்பது என் சாமியை வழிபட என் மொழியில்  அழைக்க கூடாது அப்படி செய்தால் தீட்டு படுமெனில் அதற்கு அந்த சிவ்னும் உடந்தையெனில் அவனும் தண்டனையை பெறவேண்டும்.ஆனால் ஊடகங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பற்றியோ,சிதம்பரம் போலீசு தீட்சிதன்களுக்கு வாலாட்டுவதை பற்றியோ,பங்கு பிரிக்கும் போது கொல்லப்பட்ட மூர்த்தி தீட்சிதனைப்பற்றியோ வாய்திறப்பதில்லை,பாவம் அவர்கள் எங்கெ  போவார்கள் ? என கேள்வி எழுப்புகிறது ?

    காடுகள் அழிகிறது என்ற பொய்யாக குற்றச்சாட்டு கூறி ஆடு மேய்ச்சல் தடைசெய்யப்பட்டிருக்கிறதே  அதை நம்பி வாழ்ந்த மக்களைபற்றியோ,தினசரி செத்துக்கொண்டிருக்கும் விவசாயி பற்றியோ,கங்கை கொண்டான் நீர் மக்களுக்கின்றி கோலா கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, சீனப்பட்டால் தூக்கில் தொங்கும் கைத்தறி பற்றியோ வாய்திறவாத திறந்தாலும் என்ன செய்யறது எனக்கூறிய பத்திரிக்கைகள் தற்போது தீர்ப்பே கூறுகின்றன”அரசு ஏற்றது தவறு  என்று”

    அவர்களுக்கு தேவை எல்லாம் சொர்ண மால்யாக்கள் அவிழ்த்துப்போட்டு ஆட வேண்டும் .அதுவும் தில்லையில் புனிதமாக கருதப்பவேண்டும் கோயிலில் பார்ப்பனன் வாய்வைத்தவுடன் பீரும் பான்பராக்கும் புனிதமாகிவிடுகின்றன.

    கள்ளக்காதலை பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் பார்ப்பன மீடியாக்கள்  தில்லை தீட்சிதன்கள் படுத்து எந்திரிக்கும் கதையை எப்போதும் எழுத மாட்டார்கள்.

    ஆர்.எஸ்.எஸ்,இந்து முண்ணனி,இந்துமக்கள் கட்சி போன்ற பயங்கரவாதிகள் சிதம்பரத்தில் களமிறங்கி விட்டார்கள்,சுப்பிரமணிய சாமியோ உங்களுக்கு நான்  கோயிலை மீட்டே தருவேன் எனக் கூறுகிறார். வேதாந்தியின் வருகைக்கு கூட நாள் குறிக்கப்படலாம்.எல்லாம் நடக்கலாம் .நாம் என்ன செய்யப்போகிறோம் . இனியும் பார்ப்பனனின் காலைக்கழுவி குடிப்பதற்கு  வரிசையில் நிற்கப்போகிறோமா அடிமை பக்தர்களாக இல்லை, என் கடவுளை வழிபட நீயார் அந்த உரிமையை தடுக்க நீ யார் என கேள்வி கேட்கப்போகிறோமா?
    திரள்வோம்

    தில்லையில் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்.
    ஆர்.எஸ்.எஸ் ,பிஜேபி பார்ப்பன கும்பலை  களத்தில் முறியடிப்போம்.
    பிப்ரவரி 21.மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ,
    பேரணி துவங்கும் இடம் அயோக்கியன் காந்திசிலை
    பொதுக்கூட்ட இடம் : பகுத்தறிவு சூரியன் பெரியார் சிலை அருகில்

    ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

    ஜனவரி 28, 2009

    ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்
    ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!
    eezham-3-copy

    சனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று  துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.

     

    பலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று? ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன. 

    கம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி  கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை  போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான  இந்தியாவை கண்டித்து  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில  இங்கே ,கண்டிப்பாக  பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம்.

     

    முதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு  இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான்  தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம்  தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட  தேசியத்தை அச்சம்பவத்தை   நேரில் கண்டவர் என்ற முறையில்  பெருமையோடு   பதிக்கிறோம்.

    சனவரி-26,காலையில் பனகல் மாளிகை நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு  மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும்  ,அவர்தம் காலில் கிடக்கும் ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி  காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில்  வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.

    ரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு  பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு  வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம்  நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும்  தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள்

     

    அரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில்  வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.
    “இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போகுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.

    பத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.
    கடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள்  இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா ?அந்தக்குழந்தயோட  பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு?”
    ஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு  புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.

    அதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”

    இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,

    அம்முழக்கங்களால்  எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள்  உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர்  செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.

     

    போராட்டவீடியோ காட்சிகள்

    நன்றி : வினவு

    http://vinavu.wordpress.com/2009/01/29/eelam12/

    முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

    ஜனவரி 21, 2009

    ndlfmeet2

    சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு,கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்?

    உலகமயமாக்கலினால்  தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்,ஐடி,பி.பீ.ஒ,ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள்.முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான் தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கிஎறிந்து விட்டான்.பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு  கம்பெனி தாவுகிறோம்.நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை.முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.
    ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்த்ப்படுவது இல்லையா?பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள்  ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது  எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,இன்னும் ஆறு மாதத்தில் 50000பேர் ஐடி,பிபீஓ வில் மட்டும்  பணிநீக்கம் செய்யப்படப்போகின்றனர், இப்படிப்பட்ட நிலைக்கு தான் நம்மை இக்கம்பெனிகள் தள்ளிவிட்டன,நம் திறமைகள் முதலாளியின் தேவைக்காக குழிதோண்டி  தோண்டி புதைக்கப்பட்டன .இப்போது அவனின் தேவைக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். தொழிலாளர்களை முடியாக நினைத்து வதைத்த ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது.அங்கு வெற்றியை வரலாறாக்கிகாட்டிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இம் மாநாட்டில் திரளாய் பங்கேற்போம்..நம்முடைய பிரச்சினக்காக இனியும் போராடாது இருந்தால் வருங்காலம் தற்கொலை பாதைக்கு ஒப்பானதே.
    தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம்.தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.
    ——————————————————————————————————————-

    என்ன பண்றது?
    ஒவ்வொரு முறையிலும்
    பதில்களுக்காய் என் கேள்விகள்
    ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
    பதில்களாய்……

    வறுமையில் உழலும் விவசாயி
    வேலையிழ்ந்த தொழிலாளி
    பாலின் சுரப்பை நிறுத்திய
    மார்பகங்கள் அரைக்க
    மறந்த இரைப்பைகள்
    அடங்கிப்போன கூக்
    குரல்கள் எல்லாவற்றுக்கும்
    பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

    எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
    பதில் சொல்கிறாய் “அதுக்கு
    என்னபண்றது?”,முதல்ல
    நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

    சரி பார்க்கலாம் உன்
    வாழ்க்கயை காலை முதல்
    மாலை வரை ஒவ்வொரு நொடியும்
    நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

    நீ உண்ணும் உணவை
    உடுத்தும் ஆடையை,
    ஆபரணங்களை நெஞ்சில்
    கை வைத்துசொல் உனக்காகத்தான்
    மேற்கொள்கின்றாயா? இப்போதும்
    மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

    நான் மவுனமாய் அல்ல
    உரக்கச்சொல்லுவேன்
    உன் “என்னபண்றது” என்பது
    தான் உன் பதில்
    தப்பித்தவறி எதுவுமே
    உனக்கு செய்து விடக்கூடாது
    என்பதில் பிறந்த
    பதில் அது…..

    தரகர்களின் சூறையாடலில்
    சிக்கி திணறுகின்றது உன்
    தேவைகள்
    நாளை கூட
    நாளையென்ன நாளை
    இக்கணமே கூட நீ
    எறியப்படலாம் சக்கையாய்……

    இப்பொழுதாவது உண்மையாய்
    கேள் ” என்ன பண்றது?”
    இருக்கின்றது அது தான்
    போர்
    உனக்கான , நமக்கான
    வாழ்வை
    தேர்ந்தெடுக்க
    நாமே போராளியாவோம்.
    இனியும் புலம்பிக்கொண்டிராதே
    “என்னபண்றது”என்று அது
    அடிமைகளின் ஆசை மொழி.

    ————————————————————————————————————————————————————————————————-

    முதலாளித்துவ பயங்கரவாதத்தினை பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

    ———————————————————————————-

    இம்மாநாடு போலிகளுக்கு சாவு மணிஅடிக்க வாழ்த்துகிறோம்

    கலகம்