வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை

வாடா வாடா வாடா  தோழா-ஒரு    காம்ரேடு  ரசிகன் ஆன கதை

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் வருங்கால சூப்பர் ஸ்டாருமான (பத்திரிக்கை சொன்னபிறகு ) ஏற்கனவே அறிவித்தபடி அவர்  சென்னையிலும் அவரது ரசிகர்கள் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களிலும் உண்ணாவிரத போரட்டத்தை நடத்தி  முடித்து இருக்கின்றார்.அவ்விழா  மேடையில் மற்ற  நடிகர்களும்,இயக்குனர்களும், புகழ்ந்து பேசி தள்ளினர்.
 அம்மா அப்பா மனைவி யோடு சோகமே உருவெக்க மேடையில் அமர்ந்திருந்தார்.
நடிகர் விஜய்.(ஒரு வேளை வில்லு படம் குருவி  மாதிரி ஊத்திக்கும் என நினைச்சாரோ என்னவோ ).
மற்ற நடிகர்கள் ஏற்கனவே ஒரு சுற்று  முடிதிருக்க இவரி ந்த போராட்டமும் ஈழத்தமிழர்களுக்காகத்தான் நம்புங்கள்.அதுவும் புலம் பெயர்  ஈழத்தமிழர்களுக்காகத்தான் .ஏனெனில் அவர்கள் தான் திரையுலகின் கழிசடை படங்களை அமெரிக்காவிலும்,ஜெர்மனியிலும்  100 நாட்கள் ஓட்டினார்கள்.உள் நாட்டில் படம் ஓடினால் எவ்வளவு கிடைக்குமோ அதை விட இன்னும் அதிகமாக வெளி நாட்டில் வெளியிடப்படுவதால் தயாரிப்பாளருக்கும் கடல் க.டந்த ரசிகர் கூட்டம் நடிகனுக்கும் கிடைக்கின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் “வெளி” வந்த சர்வே ஒன்று ரஜினியை விட விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவரும் தனது ரசிகர்களை மற்ற எவரையும் விட மிக வேகமாக முறை படுத்தியும் வருகிறார்.வருங்கால முதல்வருக்கான ரேசில் விஜயும் களத்தில் இறங்கிவிட்டார். ஒருவனை பழிவாங்க வேண்டுமா  இறங்குடா களத்தில் என தேர்தலுக்கு வருகிறார்கள்.இந்த கோமாளி   சனநாயகத்தை வெளிக்காட்;டுகின்றனர்.உதாரணத்திற்கு சமீபத்த்¢ வடிவேலு-விஜய்காந்த் மோதலின் போது வடிவேலு சொன்னார்” நீ எங்க நின்னாலும் எதிரா நான் நிப்பேன்”. இப்படி வருபவன் போறவனெல்லாம் தேர்தல்,அரசியல் முறைக்கு வர யார் காரணம்? அதன் துரோக வரலாறு நெடியது. போலி கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது.திமுக விலிருந்து பிரிந்த MGR புது கட்சி ஆரம்பித்தார்.அந்த MGR இப்படி கழிசடைகளுக்கெல்லாம்
ஒரு  symbol ஆக மாறினார் எனப்பார்த்தால் அதற்கு இந்த இரு போலிகளுமே காரணம்.கல்யாணசுந்தரம் என்ற “மாமா”
தான் திறம்பட செஇது  முடித்துவிட்டார்.தனது நூலில் இதனை மிக விரிவாக எழுதியிருக்கிறார்.கம்யூனிஸ்டு எனில் புரட்சி செய்யவேண்டும்(அ)திட்டமாவது வேண்டும்.கட்சி திட்டத்தையே தரகுக்காக இரு போலிகளுமே வைத்திருக்கின்றார்கள்.¦அண்ணா, கலைஞர்  பேச்சுக்காவது கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்தனர்.MGRக்கு இது எதுவும் கிடையாது.கொஞ்சம் கொள்கைகளை பேசி வந்ததே பார்பனீயத்துக்கும் அவர் தம் பத்திரிக்கைகளுக்கும் பெரும் ஆபத்தை உண்டு பண்ணின.திமுக விலிருந்து   பிரிந்தவுடனே ஒரு மாற்று சக்தியாக MGR ஐ முன்னிருத்தின.அதற்கு திறம் பட அரசியல் முலாம் பூசி  வெளியே கொணர்ந்தவர்கள் தான் இந்.த போலிகள். அதன் விளைவாகத்தான் MGR  ஐ தொடங்கி  செயா வரை தமிழகத்தில் பொற்காலம் ஏற்பட்டது. அதற்காக தமிழ் கூறும் நல்லுலகு போலிகளுக்கு கடமைபட்டிருக்கும்.மீண்டும்  MGRக்காக தேடி கடைசியாய் ரஜினியை பிடித்து கொள்கையாவது புடலங்காயாவது   ரஜினி  நல்ல மனிதர் என சர்டிபிகேட்கொடுத்தார்கள்.அவரோ வரலாமா வேண்டாமா என  ஜோசியம் 15 ஆண்டாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்.எவ்வளவு காலம் தான் காத்திருப்பது என தான் தொங்குவதற்கு புது முதுகினை CPM விஜய்காந்த் மூலம் தேடிக்கொண்டிருக்க CPI விஜய்க்கு ரிசர்வ் செய்திருக்கின்றது.

இனி  உண்னாவிரத பந்தலுக்கு வருவோம்.

நடிகர்  விஜய்  மேடையில்  யார் கூப்பிட்டாலும்” போகும்” நெடு மாறனோடு அமர்ந்திருக்க ஒரிஜி¢னல் காம்ரேடுகளான C.P.I -ன் தா.பாண்டியன் தன் சகபாடிகளுடன் வந்தார்.நடிகர் விஜய்க்கு பாண்டியன் பாராட்டு தெரிவித்ததும் இங்கு இரு வகையான மன மாற்றங்கள் நடந்தன.1.நடிகன் காம்ரேடாக மாறியது.2.”காம்ரேடு” ரசிகனாக மாறியது.தங்களால் எந்த நாயையும் முதல்வராக்க முடியுமென நிருபித்தவர்கள் போலிகள்.
அப்படி பாரட்டும்,வாழ்த்தும் தெரிவிக்கவில்லை யெனில் என்ன நடந்திருக்கும் இந்திய கம்யூனிச கட்சி  புரட்சியை செய்யத் தவறிய பாரிய காரணங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.இனி  தா. பாண்டியனை பாண்டி என்றே அழைப்போம்.அப்புடி கூப்பிட்டாத்தான் மச்சிகளுக்கு (ரசிகர்களுக்கு)  பிடிக்கும்..தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி 10  அடி பாயும் என்பது போல  பாண்டியை விட சக “காம்ஸ்கள்” போட்டோவுக்கு போஸ் கொடுத்தன. நிகழ்ச்சியை முடித்து வைத்து வாழ்த்திப்பேசிய பாண்டி புரட்சியின் தலைவர் விஜய் தான் என்று ரகசியமாய் கோடிட்டு காட்டினார்.ஆதி டைப்பில் எச்சரிக்கையும் விடுத்தார்” ஒன்று போர் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் இந்த அரசு தேவைதானா என்ற முடிவுக்கு  வரவேண்டியிருக்கும்.இது வரை வாய் திறக்காத மத்திய அரசை வாய் திறக்க வைக்கும் மாபெரும் போராட்டத்தை நாளை அறிவிப்போம்.” அய்யா ரொம்ப சிரமப்படாதீங்க  புரட்சி  தலைவர்  விஜய்யின்  ஜிகு ஜிகு ஜிகு பாட்டை போட்டாய் வாய் மட்டுமல்ல அனைத்தையும் திறந்து போட்டுக்கொண்டு பார்ப்பார்கள் உங்கள் “காம்ரேடுகள்” உட்பட.
தியாகு தனது பத்திரிக்கையில் பின் வரும் தொனியிலெழுதினார்”இப்பிரச்சினையில்  CPI  காட்டி வரும் ஆர்வம் பாராட்டுக்குரியது”.  ஆர்வம் முத்தி போய் விஜயோடு டேன்ஸ் ஆடி பிறகு “ஒன் இஞ்ச்  டூ இஞ்ச்  கேப் காட்டிடவா” நடிகையின் இடைகளை அளந்து கொண்டு இருந்தாலும் வியப்பேதும் இல்லை. புரட்சிக்கான வேலைகளை செய்து விட்டு காத்திருக்கும் CPI க்கு இன்னும் நிறைய ஆனந்த தகவல்கள் காத்திருக்கின்றன.அவர்கள்   கட்சியில் சிறு
சிறு மாற்றங்கள் செய்தாலே போதும், விஜய் கட்சியின் தேசிய த்லைவராக மாறி ஒரே நாளில் புரட்சியை சாதித்து விடுவார்.காம்ரேடுகள் கண்களில் அனந்தகண்ணீர் தான் வரும்.மாற்றங்கள் அதிகமில்லை கொஞ்சம் தான்.காரல் மாக்ஸ்,எங்கெல்ஸ்,லெனின் போட்டோவை எடுத்து விட்டு பாண்டி,விஜய் போட்டோவை வைப்பது,செங்கொடியை தூக்கிவிட்டு  புதிய மன்ற கொடியை தன் கம்பங்களில்  பறக்கவிடுவது,ஏதோ ஒண்ணு இடிக்குதே  AIYF  போர்டுகளில் உள்ள பகத் சிங்  படத்தை நீக்கிட்டு புது புது மாடல் விஜய்
படத்தை வைக்கலாம்.”வாடி வாடி கை படாத” சிடிபோன்ற புரட்சிகர வசனங்களை மேலே வாசகம்   எழுதலாம்.அறிஞர் அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மாதிரி பாண்டிக்கு விஜயயை
இதய ஆத்மாவாக்கலாம்.பேரு மட்டும் எதுக்கு VIJAYIST PARTY OF INDIA மாற்றி விட்டா போதும்.புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்சி  தானே மலர்ந்திடும்.
மன்மோகனை புடிச்சு தொங்குன தொங்குல டர்பன் எல்லாம் அவ்ந்து போச்சு.கேரளாவில் மம்மூட்டி,ஆந்திராவில் சிரன்சீவி, தமிழகத்தில் விஜயகாந்த்,CPM முன்னேறிய பின்னும் தாய் கட்சி  லேட்டாக இப்பத்தான் விஜயை பிடித்திருக்கின்றார்கள்.இனி மேல் இன்குலாப் தேவை இல்லை .கொடியை ஏற்றி “தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொழுத்து ‘. என்றால் போதும் புரட்சி அப்படியே பொங்கி  வழியும் பீர் வழிவது போல.

நமக்கு முன் உள்ள ஒரே கேள்வி  இனியும்  போலி  கம்யூனிச கட்சியில் இருக்கும் “புரட்சிகர “அணிகளை எவ்வாறு அழைப்பது  ? ரசிகர்களே என்றா தோழர்களே என்றா?

குறிச்சொற்கள்: ,

9 பதில்கள் to “வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை”

  1. rudhran Says:

    please send printouts to pandi and co

  2. கிராமத்தான் Says:

    நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம்.

  3. vijaygopalswami Says:

    தொடரட்டும் இந்த முகத்திரை கிழிப்பு…..

  4. இத்துபோனவன் Says:

    விஜய் ஒரு மக்கு.. ஒரு புண்ணாக்கும் தெரியாது..

    இதற்கெல்லாம் மூல காரணம் கதைதிருடன் விஜயின் அப்பா SAC தான். மெதுவாக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார்.

    ஆனால் தமிழனை செருப்பால அடித்தாலும் திருந்த் மாட்டான். தயவு செய்து “நமீதா” செருப்பால் அடிங்கன்னு சொல்லுவானுங்க.

    கம்யூனிச கழிசடைகளுக்கு 10 சீட் கிடைத்தா போதும் எவன் கால்ல விழவும் தயார். சீ.. சீ.. இதெல்லாம் ஒரு பிழைப்பா..

  5. ram Says:

    What Mr.Pandian can do no now? this is not the right time to criticize Pandian now because we need to stop the war in srilanka first. I am very sorry to say this, almost all the young generation in TN going back only film stars……
    They even don’t know about what is communism….. because I am getting mails only If the film stars protesting only. In that they are not focusing the main matters they are focusing only actor dress and style.

  6. « சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2B.P.O. அடிமை. co.in »வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை « அழு Says:

    […] வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். […]

  7. வாடா வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை « அழுகி நாறும் C.P.M போலிகளின் உண்மை முகம் Says:

    […] வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். […]

  8. போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி ! « அழுகி நாறும் C.P.M போலிகளின் உ Says:

    […] https://kalagam.wordpress.com/2008/11/18/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%a… […]

  9. வாடா வாடா வாடா வாடா தோழா-ஒரு காம்ரேடு ரசிகன் ஆன கதை « அழுகி நாறும் C.P.M போலிகளின் உண்மை முகம் Says:

    […] அன்று நவம்பர் 18, 2008 நேரம் 5:23 மு.பகல் கீழ் Uncategorized இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம் […]

பின்னூட்டமொன்றை இடுக