வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை


வினவில் வெளியான நர்சிம் குறித்த கட்டுரை மிகுந்த குற்ற உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது. சந்தன முல்லை எனும் பதிவரை நர்சிம் மிகக்கேவலமாக வர்ணித்திருக்கிறான். இச்சம்பவம் வினவினைப் படித்தபோதுதான் அறிய முடிந்திருக்கிறதெனில் பதிவுலகை விட்டு நாம் தள்ளிப்போயிருக்கிறோம் என்பது சூடு வைத்தாற்போல உறைக்கிறது.

ஒரு பெண் பதிவர் மட்டுமல்ல பலர் பாதிக்கப்பட்டு சிலர் எழுதுவதைக்கூட நிறுத்தியிருப்பதை அறியும் போது குற்றவுணர்ச்சிதான் ஏற்படுகிறது. காரணம் ஒரு பெண்ணோ ஆணோ பாதிக்கப்படும் போது/ ஒடுக்கப்படும் போது பேசாமல் அமைதியாயிருப்பது அல்லது கண்டுகொள்ளாமலிருப்பது மறைமுகமாக ஒடுக்குவதற்கு துணை போகிறது. நர்சிம் சந்தன முல்லையை மிகக்கேவலமாக பிறப்பைப்பற்றியயல்லாம் பேசிவிட்டு அதுவும் கதையாக வடித்து விட்டு அவரே மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டும் இடத்தை காலிசெய்து விட்டார்.

பார்ப்பன ஆணாதிக்க வெறிபிடித்த நர்சிமை விமர்சித்து வினவில் கட்டுரை வருகிறது. உண்மைத்தமிழனோ வினவைப் புறக்கணிக்க அறைகூவலிடுகிறார். ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? சாதிப்பிரிவினையை நமக்குள் துVண்டிவிட்டதுதான் காரணம் என்கிறார். இதுவரை சாதிபாராது நட்பு பாராட்டி வந்ததாகவும் வினவு இதை திட்டமிட்டு சீர்குலைப்பதாகவும் கூறும் உ.த “”எதாயிருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ பேசாதே”என்று தீர்ப்பு வழங்க மொக்கைக் குழுவினர் அங்கு சதிராட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாவற்றையும் நாங்களே பேசிக்கொள்வோம் நீ தலையிடாதே


இது ஏதோ ஒரு குடும்பத்துக்குள் வெளியாள் மூக்கை நுழைத்தது போல பதறுகிறார் உண்மைத்தமிழன். அப்படியெனில் உ.த.வும் சந்தனை முல்லையும் ஒரே குடும்பம். சரி ஏண்ணே உங்க குடும்பத்து பபொண்ணான அப்புடி கேவலமா நர்சிம் பேசியிருக்காரு. நாங்களே பேசி தீர்த்துக்குவோம்னு சொல்றீங்குளே. இதுத்தாண்ணே புரியமாட்டேங்குது. நேத்து முளைத்த காளான் எனக்கே சுர்ர்ன்னுனுனுனு ஏறுதே ஏன்ணே உனக்கு கோவமே வரலீயா? சூடு சொரண இல்லாம கிடக்க நீ சரி சொரண தரலாம்னு வினவு பேசுனா எங்க பிரச்சின நீ தலையிடாதேங்குற.

உங்க பிரச்சினைன்னா அது உங்கள் (நர்சிம்& உ.த) தொடர்புடையதாக மட்டும் இருந்தால் தான். இப்பிரச்சினை அதை தாண்டி வந்து விட்டது.ஐமீன் வூட்டுக்கு வெளிய வந்துடுச்சு,  ஸோ இது பொதுப்பிரச்சினை. உ.த அண்ணன் மாதிரி சொரணைக்கெட்டு கிடக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

நீ தலையிடாதே

இதைக் கொஞ்சம் ஆராய்வோம் .  என் மனைவியை நான் கொல்லுவேன் அடிப்பேன் அதை கேக்க நீயார்? என் தங்கச்சி அந்த கீழ்சாதிப் பையனை காதலிச்சா நான் மிதிப்பேன் அதைகேக்க நீயார்?  தலித்துங்களும் நாங்களும் ஒண்ணாத்தான் இருக்கோம் நாங்க அடிச்சுக்குவோம் அதை கேக்க நீயார்?  இந்த ஆத்து தண்ணிய விலை கொடுத்து நான வாங்கியிருக்கேன அதை கேக்க நீயார்?  அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்?

கோக் நிறுவனம் தாமிரவருணியை வாங்கிய போது பு.ஜவில் ஒரு அட்டைப்படம் வந்திருந்தது. அதில் ஒரு குழந்தை தன் உடலெல்லாம் கொப்பளங்களோடு காட்சியளிக்கும். அப்போது படிக்கத்தெரியாத தாய்மார்கள் கூட படத்தைப்பார்த்து செய்தியை அறிந்து கண்ணீர் விட்டார்கள் தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக வசவுகளை பொழிந்தார்கள். உ.த.வின் பார்வையில் அந்தத்தாய்மார்களெல்லாம் கங்கைகொண்டான் கிராமக்களுக்கும் கோக் கம்பெனிக்கும் இருந்த உறவை கெடுத்தவர்களா என்ன?

ராஜபக்ஷே சொல்கிறான் இது எங்களுடைய பிரச்சினை நீ தலையிடாதே என்று?  க.பிரியா போன்றவர்கள் சொல்வார்கள் ”  பாத்தீயா நார்சீமைப்பத்தி பேசுனா ரா பக்¼ க்கு போயிட்டான்”. இது ஆதிக்கவாதிகளின் குரல். தங்களின் ஆதிக்கம் நீடித்துக்கொண்டே இருக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்கிறோம், நீ தலையிடாதே!!!

பாதிக்கப்படுவோர் வாய் திறந்து பேசிட உரிமை இல்லை.  நாங்கள் நண்பர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ விசத்தை விதைக்காதே என்கிறார்கள். இந்த நாங்கள் என்றால் என்ன? நீங்கள் என்றால் என்ன?

உ.த தெளிவாக சொல்லிவிட்டார் க.பிரியா அழகாக கும்மியும் அடித்துக்கொண்டுமிருக்கிறார், நாங்கள் நபர்கள் எங்களுக்குள் யாரையும் அடிப்போம் நீ வந்து கேட்காதே என்று.அய்யா உ.த அப்படியயல்லாம் சொரணைக்கெட்டு எங்களால் இருக்க முடியாது. ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதைகேட்க உறவு முறை அவசியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதாபிமானம் ,  அவனும் பாதிக்கப்படுகிறான் நானும் பாதிக்கப்படுகிறேன் என்ற உணர்வு இருந்தால் போதும் , நக்சலைட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை

ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? தன்னுடைய ஆணாதிக்க சிந்தனையை பார்ப்பன  ஆதிக்கத்தை கேள்வி கேட்பதால் அதை புறக்கணிக்க வேண்டும். போரிலே / மக்கள் பாதிக்கப்படும் போது / சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருக்காதே போராடு, அந்த நாயை அடித்து விரட்டு என்பதால் அவர்களில் குடும்பம் போல் வாழும் உறவு சிதையுமாம். சிதையட்டுமே அந்த மானங்கெட்ட உறவுகள்!!!!

சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருத்தலை கற்றுக்கொடுக்கும் அந்த உறவு முறைக்குப்பேர் என்ன? “அவனைத்திட்டினால் அவன் கோவித்துக்கொண்டு விடுவான், அப்புறம் யார் மச்சி நமக்கு தண்ணி வாங்கி கொடுப்பா? என்ற ஊதாரியின் / பொறுக்கியின் பேச்சுக்கும் உங்களுக்கும் வித்யாசமிருக்கிறதா?  இது வரை சாதிவெறிப்பதிவுகள்/மதவெறிப்பதிவுகள்/ஆணாதிக்கவெறிப்பதிவுகள் இல்லாத இடமாக தமிழ் வலை இருந்ததாகவும் வினவு அதை வலிந்து ஏற்படுத்துலது போலவும் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

வினவை புறக்கணிக்கச்சொல்வதன் நோக்கமே அவர்கள் எல்லாவிதமான ஆதிக்கத்தை எதிர்க்க மட்டும் செய்யவில்லை எதிர்க்கவும் சொல்கிறார்கள், அதுதான் இவர்களுக்கு வலிக்கிறது. எனக்கு விடுதலை வேண்டும் ஆனால் நான் போராட மாட்டேன் என்ற சுயநலவாத ஊற்றுக்கண்ணே இவர்களின் மூதாதையன். அது அப்படியே பரவி நீ எதுக்கு போராடுகிறாய் , அவர்கள் எல்லாவற்றையும் திட்டுவார்கள்,  நம்மைப்பிரிப்பார்கள் என்று பஜனை பாட ஆரம்பித்து விட்டார்கள். வினவை திட்டுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. வினவில் தனிநாபர் தாக்குதல் என்று கிழிய பேசுபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவிலிருக்கும் எழுத்துக்களை பார்ப்பது நலம்.

உண்மைத்தமிழன் & அங்கே கும்மியடிப்போரின் கவனத்திற்கு

மொக்கைமார்களே !!!

மீண்டும் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே வதைத்துக்கொள்ளுங்கள் யாரும் கேட்க வில்லை, மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களோடு தோள் கொடுக்காமல் எங்களால் இருக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மனிதர்கள், சொரணையுள்ளவர்கள்.  அப்புறம் இன்னொரு கும்மி சொல்கிறார் ” இப்படி திட்டுகிறீர்களே நர்சிம் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? ”  இந்த பூச்சாண்டியெல்லாம் சொரணையற்றவர்களின் கண்களில்தான் கண்ணீரை வரவழைக்கும்.

நர்சீமின் யோக்கியதையை ஏன் அவரின் தெருக்களுக்கு கொண்டு செல்லக்கூடாது? இது லீனாவுக்கும் பொருந்தும். உன் கருத்து சரி என்று தானே சொல்கிறாய் மக்கள் மன்றத்தில் உரத்து முழங்கு உன் கருத்துக்களை, எமக்கும் மக்களுக்கும் இடைவெளி எப்போதும் இருந்ததில்லை, இவர்களைப்போல் அங்கு ஒரு பேச்சு இங்கு ஒரு பேச்சு என்று மொள்ளமாறித்தனம் எங்களால் செய்ய இயலாது.  ஆணாதிக்கவாதிகளை தனிமைப்படுத்துவது மட்டும் போதாது, அவர்களை அடித்து விரட்டுவோம். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வினவுக்கு தோள் கொடுப்போம்.

  • ஆணாதிக்க பொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியப்போம் !
  • பெண்களை நுகர்பொருளாக்கும் எழுத்து புரோக்கர்களுக்கு பதிலடி கொடுப்போம் !!
  • தமிழ்மணத்திலிருந்து ஆணாதிக்க பொறுக்கிகளை தூக்கியறியவைப்போம் !!!

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

9 பதில்கள் to “வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை”

  1. rudhran Says:

    இன்னும் எழுதப்பட வேண்டும்.

  2. ஹைதர் அலி Says:

    மேலே உள்ள கருத்துப்படம் ஆயிரம் உண்மைகளை சொல்லும் பொருத்தமான படம் அந்த ஒரு படம் மட்டும் போதும் சாதிவேறியர்களை அம்மனப்படுத்தி காட்ட

  3. நண்பன் Says:

    http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=560778
    இது உங்க தமிழ்மணம் வாங்கு உரல்

  4. ராவணன் Says:

    மருத்தையன் ஒரு அய்யரு…அவனுக்குப் பின்னால் நிற்கும் வினவு கும்பல் பார்பனத்திமிரைப் பற்றி என்ன எழுதுவது.முதலில் மருதையன் என்ற அய்யரை உங்கள் கும்பலிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு மற்றவர்களின் ஜாதித்திமிரைப் பற்றி பேசலாம்.
    அய்யர் என்பவன் எங்கிருந்தாலும் அவனை புறக்கணிப்பது மட்டுமே என் வேலை.
    அய்யர் என்பவன் எங்கிருந்தாலும் அவனது ஜாதித் திமிர் மட்டும் மாறாது.
    மொதல்ல மருதையனைப் போடுங்கள்.

  5. குருத்து Says:

    ‘ஜென்டில்மென்’ நர்சிம்மும், அவரை ஆதரிக்கும் ‘கண்ணியவான்களும்’ அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

    நேர்மையானவர்கள் பதிவர் சந்தனமுல்லை பக்கம் நிற்கிறார்கள்.

  6. ஆட்டையாம்பட்டி அம்பி!? Says:

    நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

    வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்—அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது– அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

    இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய “Relationship.”
    பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை “Relationship.”
    பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

    இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்—வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு “Edit” செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

    சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

    இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி “Edit” செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

    சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் “Double-game” or double-cross” செய்து விட்டார்கள்.

    என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

    வாய்மையே வெல்லும் இது பழமொழி!
    வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

  7. R Nagaraj Says:

    thevai illama neengal ethai ethodu mudichi podukireergal.
    aayiram pookkal malarattumnu onga aalu thana solraru
    malarathu poova puzhuvannu naanga paathikidurom…
    padikkathavangala blog nadatharanga… ada poo sir…
    oru aiyar thitta ennuru aiyar kitta katturai vangalamaa?
    athaan kelviye…?

  8. Pligwovb Says:

    JnXHTr kjgeeaoqa ilked ttkrmpa rmiyvia jvfsv zjeri hbtbd jicny wjmycmft cumpk lthxnoael leqio ybqqiqwi bnyckw

  9. இதோ இன்னொரு அயோக்கியன் ! நாட்டாமையே வருக வருக. « சர்வதேசியவாதிகள் Says:

    […] […]

பின்னூட்டமொன்றை இடுக