Posts Tagged ‘ஆணாதிக்கம்’

சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு – ஆணாதிக்கத்தின் உச்சம் இல்லை இல்லை அதுதான் ஆரம்பம்

ஒக்ரோபர் 12, 2010

சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு

ஆணாதிக்கத்தின் உச்சம்  இல்லை  இல்லை அதுதான் ஆரம்பம்

அதோ அந்தக்குழந்தை சிரித்துக்கொண்டிருக்கிறது பாருங்கள்!. அதோ அக்குழந்தையைத்தான் அங்கு அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்கள். உறவினர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். ஏதாவது விசேசமா? ஆம் விசேசம் தான் அக்குழந்தை இன்று முதல் பெண்ணாகப்போகிறாள். அக்குழந்தையின் தாய் அந்த அறைக்குள் அக்குழந்தையை அழைத்துக்கொண்டு செல்கிறாள். அக்குழந்தைக்கு விபரீதம் நேரப்போவது புரிந்து கத்துகிறது, வீறிட்டு அலறுகிறது.

இதோ இன்னமும் இருவர் வந்து விட்டார்கள். அக்குழந்தையின் ஆடைகளை கழட்டி அதை பென்ணுறுப்பை கையிலிருந்த பழைய பிளேடால் அறுத்து எடுக்கிறார்கள். அப்புறம் ஊசியில் நூல் கோர்க்கப்பட்டு அக்குழந்தையின் உறுப்பு தைக்கப்படுகிறது. பல மடங்கு ரத்தம் வெளியேறிவிட்டது. அக்குழந்தையால் அழ முடியவில்லை. இப்போது கால்கள் கட்டப்படுகின்றன. சில நாட்கள் இப்படித்தான் வைத்திருக்க வேண்டும். வெளியே மகிழ்ச்சி உறவினர்களிடையே பரவுகிறது “ஆயிஷா பெண்ணாகிவிட்டாள்”. குடி கும்மாளம் கரை புரண்டோடுகிறது. கேளிக்கைச்சத்தங்களில் பென்ணின் விம்மல் சத்தம் மெல்ல மெல்ல அடங்கிப்போகிறது.

——————————

—————————————————————————————————————————————

அநேகமாக ஓராண்டுக்கு மேல் இருக்கும் ஒரு புத்தகத்தைப்படித்து, அது காலச்சுவடா அல்லது உயிமெய் இதழா என்று மறந்து விட்டது. அவ்விதழை பத்திரமாய் வைத்திருந்தேன் இருந்தும் தொலைந்துவிட்டது. அவ்விதழைத்தேடி பல இடங்களில் அலைந்துக்கொண்டிருக்கிறேன். என் மனதில் கொஞ்ச நஞ்சமல்ல ஏகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திச்சென்றது. அக்கட்டுரைக்கதையை படிக்கும் பலருக்கும் கண்களில் கன்ணீரை முட்ட வைத்த  அந்த மாடலின் பெயர் கூட மறந்து விட்டது.

ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் ஒரு செயல் நடைபெறுவதை அப்போதுதான் முதல் முதலாகப் படித்தேன். அவர் ஒரு புகழ்பெற்ற  விளம்பர மாடல், அவருக்கு மிகச்சிறிய வயதில் அவருடைய பாலுறுப்பினை சிதைத்து அதில் தையலைப்போடும் நிகழ்ச்சி நடந்து விட்டது. அன்று முதல் சிறுநீர் கழிப்பதென்பது அவருக்கு நரகம்.

எல்லோரும் ஒரு கணம் தற்போது சிறு நீர் கழிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். ச்சீசீ ! என்று யாராவது முகத்தை சுழிப்பீர்களாயின் , அதைப்பற்றி பிறகு பேசலாம்.  பலமணி நேரமாய் அடக்கி வைத்திருக்கிறீர்கள் உங்கள் சிறு நீரை, இப்போது சிறு நீரைக்கழித்து விட்டு வரும் போது உங்கள் முகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கும்?

ஆனால் அதற்கு பதில் சிறு நீர் கழிக்கும் போது  குத்தி குத்தி வலிக்கிறதெனில், சிறு நீர் பாய்வதற்கு சிறு துளை மட்டுமே இருக்கிறதெனில், சிறு நீர் பாய்ந்து வரும் கணங்களில் எரிச்சலோடு அய்யோ அம்மா என்று கதற வேண்டியத்தேவை இருக்கிறதெனில் யாராவது சிறு நீர் கழிப்பதை நினைத்துப்பார்ப்போமா என்ன? நாம் நினைத்துப்பார்க்கவே தயங்கும் அந்த சம்பவம் அந்த கதறல் ஆப்பிரிக்க பெண்களுக்கு சொந்தமானவை என்பதை நாம் அறிவோமா? இதோ இன்று நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலுறுப்பினை சிதைத்து கட்டி விட்டார்கள். நாளை  என்று போய்க்கொண்டே இருக்கிறது.

சிறு நீர் கழிப்பதே நரக வேதனையாக, தாங்க முடியாத வலியோடு, அதுவும் சொட்டு சொட்டாகத்தான் இருக்க வேண்டுமென்றால் அதை நினைத்துப்பார்க்க முடிகிறதா நம்மால்? ஆனால்  அப்படித்தான்  ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் பல கோடிக்கணக்கான ஆப்பிரிக்க பெண்கள். ஆங்கிலத்தில்  Female Genitial Multilation என்றழைக்கப்படும் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் நிகழ்ச்சி ஆப்பிரிக்க நாடுகளில் புனித சடங்காக பெண்களின் மீது ஏவப்படுகிறது.

பெண்ணின் பாலுறுறுப்பை வெட்டியெடுப்பது மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது.

1. பாலுணர்வினைத்தூண்டும் பெண்ணுறுப்பின் ஒரு பகுதியை வெட்டியெடுப்பது
2. பென்ணுறுப்பின் பெற்புறத்தை வெட்டி எடுப்பது
3.ஒட்டு மொத்த பெண்ணுறுப்பினையே வெட்டி யெடுத்து விட்டு சிறு துளையை மட்டும் விட்டு விட்டு நூல் மூலம் தையல் போடுவது.

ஏன் பாலுறுப்பு சிதைக்கப்படுகிறது?

“பெண்கள் சைத்தானின் வடிவங்கள், அவர்களைப்பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும் . அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள், ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் /  குறைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாயிருப்பார்கள்.”

ஒரு பெண் தான்  ஒழுக்கத்தோடு வாழ்வதற்கு தன் உறுப்புக்களை இழந்து ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆணாதிக்கம் பெண்ணுறுப்பின் மீதான சிதைப்பை சரி என்கிறது. தான் பிறந்து வந்து அந்த பாதை  மூடப்பட்டிருக்கும் வலியை ஒரு மனிதனால் உணர முடியாதா என்ன?

பாலுறுப்பு சிதைப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த என்னுடைய நண்பர் ஒருவர் “தயவு செய்து முடியவில்லை, நிறுத்துங்க” என்றார். அவர் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.இனி ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் இந்த நினைவுதான் வருமென்று சிலர் கவலைப்படலாம். நினைவுகளை
சுமப்பதற்கே கவலைப்படும் நாம் அந்த நினைவுகளை நடத்திக்கொண்டிருக்கும் அப்பெண்களின் உணர்வை புரிந்து கொண்டால் கண்டிப்பாய் இது கடினமாய் இராது.

———————————————————————————————————————————————————————–

ஆயிஷாவுக்கு இப்போது பருவ வயதாகி விட்டது. தினமும் சிறு நீர்கழிக்கும் துக்க காரியத்தை செய்து முடிக்கும்
வேதனையோடு காலத்தை கழித்துவிட்டாள். அவளின் தாய் அடிக்கடி சொல்லுவாள் “கல்யாணம் ஆனால் சரியாகிடும்”. அவளின் திருமணத்தின் பின்னர் பெண்ணுறுப்பின் மீதான் தையல் பிரிக்கப்பட்டது, மாப்பிள்ளைக்கென்றே புதிய சரக்கு அன்று படைக்கப்பட்டது. இனி அவளால் முன்னைப்போல அல்ல சற்று வலி குறைவாக சிறு நீர்கழிக்கலாம், ஆனால் வலி, வலிதானே! ஊனம் ஊனம்தானே. பிறந்த அவளின் செல்ல மகளின் பெண்ணுறுப்பை ஆவலாய் பார்க்கிறாள். தன் பெண்ணுறுப்பினை அவளுக்கு பார்த்ததாய்  நினைவே இல்லை, “நம்முடைய உறுப்பும் இப்படித்தான் இருந்திருக்குமோ?”

—————————————————————————————————————————————————————————

வலைத்தளங்களில் “போர்னோ”ஈஸ்வரனை அன்றாடும் தரிசிக்கும் இளவட்டங்கள், இதோ இந்த பெண்ணுறுப்பினை பார்க்கத்துணிவார்களா? இந்த வீடியோக்களை 18+ என்றோ வயது வந்தவர்களுக்கென்றோ மிகவும் உங்கள் மனதை பாதிக்குமென்றோ  குறிக்கப்பட போவதில்லை. காரணம் பாதிக்கட்டும் உங்கள் மனம் /  நம் மனம்.

என்ன சிறு நீர் கழிக்கப்போகிறீர்களா? அதற்கு முன் இந்த வீடியோக்களையும் பார்த்து விடுங்கள்.

இங்கே தொடுப்பிற்காக தோழர் தமிழச்சியின் கட்டுரை உள்ளது. ஈராண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரை அது.  நான் தேடி களைத்த நிலையில் பல சிரமங்களுக்கு  மத்தியில் கேட்டவுடன் அக்கட்டுரைத்தொடுப்பை தந்த அவருக்கு நன்றி!!!

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை

ஜூன் 2, 2010

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை


வினவில் வெளியான நர்சிம் குறித்த கட்டுரை மிகுந்த குற்ற உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது. சந்தன முல்லை எனும் பதிவரை நர்சிம் மிகக்கேவலமாக வர்ணித்திருக்கிறான். இச்சம்பவம் வினவினைப் படித்தபோதுதான் அறிய முடிந்திருக்கிறதெனில் பதிவுலகை விட்டு நாம் தள்ளிப்போயிருக்கிறோம் என்பது சூடு வைத்தாற்போல உறைக்கிறது.

ஒரு பெண் பதிவர் மட்டுமல்ல பலர் பாதிக்கப்பட்டு சிலர் எழுதுவதைக்கூட நிறுத்தியிருப்பதை அறியும் போது குற்றவுணர்ச்சிதான் ஏற்படுகிறது. காரணம் ஒரு பெண்ணோ ஆணோ பாதிக்கப்படும் போது/ ஒடுக்கப்படும் போது பேசாமல் அமைதியாயிருப்பது அல்லது கண்டுகொள்ளாமலிருப்பது மறைமுகமாக ஒடுக்குவதற்கு துணை போகிறது. நர்சிம் சந்தன முல்லையை மிகக்கேவலமாக பிறப்பைப்பற்றியயல்லாம் பேசிவிட்டு அதுவும் கதையாக வடித்து விட்டு அவரே மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டும் இடத்தை காலிசெய்து விட்டார்.

பார்ப்பன ஆணாதிக்க வெறிபிடித்த நர்சிமை விமர்சித்து வினவில் கட்டுரை வருகிறது. உண்மைத்தமிழனோ வினவைப் புறக்கணிக்க அறைகூவலிடுகிறார். ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? சாதிப்பிரிவினையை நமக்குள் துVண்டிவிட்டதுதான் காரணம் என்கிறார். இதுவரை சாதிபாராது நட்பு பாராட்டி வந்ததாகவும் வினவு இதை திட்டமிட்டு சீர்குலைப்பதாகவும் கூறும் உ.த “”எதாயிருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ பேசாதே”என்று தீர்ப்பு வழங்க மொக்கைக் குழுவினர் அங்கு சதிராட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாவற்றையும் நாங்களே பேசிக்கொள்வோம் நீ தலையிடாதே


இது ஏதோ ஒரு குடும்பத்துக்குள் வெளியாள் மூக்கை நுழைத்தது போல பதறுகிறார் உண்மைத்தமிழன். அப்படியெனில் உ.த.வும் சந்தனை முல்லையும் ஒரே குடும்பம். சரி ஏண்ணே உங்க குடும்பத்து பபொண்ணான அப்புடி கேவலமா நர்சிம் பேசியிருக்காரு. நாங்களே பேசி தீர்த்துக்குவோம்னு சொல்றீங்குளே. இதுத்தாண்ணே புரியமாட்டேங்குது. நேத்து முளைத்த காளான் எனக்கே சுர்ர்ன்னுனுனுனு ஏறுதே ஏன்ணே உனக்கு கோவமே வரலீயா? சூடு சொரண இல்லாம கிடக்க நீ சரி சொரண தரலாம்னு வினவு பேசுனா எங்க பிரச்சின நீ தலையிடாதேங்குற.

உங்க பிரச்சினைன்னா அது உங்கள் (நர்சிம்& உ.த) தொடர்புடையதாக மட்டும் இருந்தால் தான். இப்பிரச்சினை அதை தாண்டி வந்து விட்டது.ஐமீன் வூட்டுக்கு வெளிய வந்துடுச்சு,  ஸோ இது பொதுப்பிரச்சினை. உ.த அண்ணன் மாதிரி சொரணைக்கெட்டு கிடக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

நீ தலையிடாதே

இதைக் கொஞ்சம் ஆராய்வோம் .  என் மனைவியை நான் கொல்லுவேன் அடிப்பேன் அதை கேக்க நீயார்? என் தங்கச்சி அந்த கீழ்சாதிப் பையனை காதலிச்சா நான் மிதிப்பேன் அதைகேக்க நீயார்?  தலித்துங்களும் நாங்களும் ஒண்ணாத்தான் இருக்கோம் நாங்க அடிச்சுக்குவோம் அதை கேக்க நீயார்?  இந்த ஆத்து தண்ணிய விலை கொடுத்து நான வாங்கியிருக்கேன அதை கேக்க நீயார்?  அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்?

கோக் நிறுவனம் தாமிரவருணியை வாங்கிய போது பு.ஜவில் ஒரு அட்டைப்படம் வந்திருந்தது. அதில் ஒரு குழந்தை தன் உடலெல்லாம் கொப்பளங்களோடு காட்சியளிக்கும். அப்போது படிக்கத்தெரியாத தாய்மார்கள் கூட படத்தைப்பார்த்து செய்தியை அறிந்து கண்ணீர் விட்டார்கள் தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக வசவுகளை பொழிந்தார்கள். உ.த.வின் பார்வையில் அந்தத்தாய்மார்களெல்லாம் கங்கைகொண்டான் கிராமக்களுக்கும் கோக் கம்பெனிக்கும் இருந்த உறவை கெடுத்தவர்களா என்ன?

ராஜபக்ஷே சொல்கிறான் இது எங்களுடைய பிரச்சினை நீ தலையிடாதே என்று?  க.பிரியா போன்றவர்கள் சொல்வார்கள் ”  பாத்தீயா நார்சீமைப்பத்தி பேசுனா ரா பக்¼ க்கு போயிட்டான்”. இது ஆதிக்கவாதிகளின் குரல். தங்களின் ஆதிக்கம் நீடித்துக்கொண்டே இருக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்கிறோம், நீ தலையிடாதே!!!

பாதிக்கப்படுவோர் வாய் திறந்து பேசிட உரிமை இல்லை.  நாங்கள் நண்பர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ விசத்தை விதைக்காதே என்கிறார்கள். இந்த நாங்கள் என்றால் என்ன? நீங்கள் என்றால் என்ன?

உ.த தெளிவாக சொல்லிவிட்டார் க.பிரியா அழகாக கும்மியும் அடித்துக்கொண்டுமிருக்கிறார், நாங்கள் நபர்கள் எங்களுக்குள் யாரையும் அடிப்போம் நீ வந்து கேட்காதே என்று.அய்யா உ.த அப்படியயல்லாம் சொரணைக்கெட்டு எங்களால் இருக்க முடியாது. ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதைகேட்க உறவு முறை அவசியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதாபிமானம் ,  அவனும் பாதிக்கப்படுகிறான் நானும் பாதிக்கப்படுகிறேன் என்ற உணர்வு இருந்தால் போதும் , நக்சலைட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை

ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? தன்னுடைய ஆணாதிக்க சிந்தனையை பார்ப்பன  ஆதிக்கத்தை கேள்வி கேட்பதால் அதை புறக்கணிக்க வேண்டும். போரிலே / மக்கள் பாதிக்கப்படும் போது / சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருக்காதே போராடு, அந்த நாயை அடித்து விரட்டு என்பதால் அவர்களில் குடும்பம் போல் வாழும் உறவு சிதையுமாம். சிதையட்டுமே அந்த மானங்கெட்ட உறவுகள்!!!!

சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருத்தலை கற்றுக்கொடுக்கும் அந்த உறவு முறைக்குப்பேர் என்ன? “அவனைத்திட்டினால் அவன் கோவித்துக்கொண்டு விடுவான், அப்புறம் யார் மச்சி நமக்கு தண்ணி வாங்கி கொடுப்பா? என்ற ஊதாரியின் / பொறுக்கியின் பேச்சுக்கும் உங்களுக்கும் வித்யாசமிருக்கிறதா?  இது வரை சாதிவெறிப்பதிவுகள்/மதவெறிப்பதிவுகள்/ஆணாதிக்கவெறிப்பதிவுகள் இல்லாத இடமாக தமிழ் வலை இருந்ததாகவும் வினவு அதை வலிந்து ஏற்படுத்துலது போலவும் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

வினவை புறக்கணிக்கச்சொல்வதன் நோக்கமே அவர்கள் எல்லாவிதமான ஆதிக்கத்தை எதிர்க்க மட்டும் செய்யவில்லை எதிர்க்கவும் சொல்கிறார்கள், அதுதான் இவர்களுக்கு வலிக்கிறது. எனக்கு விடுதலை வேண்டும் ஆனால் நான் போராட மாட்டேன் என்ற சுயநலவாத ஊற்றுக்கண்ணே இவர்களின் மூதாதையன். அது அப்படியே பரவி நீ எதுக்கு போராடுகிறாய் , அவர்கள் எல்லாவற்றையும் திட்டுவார்கள்,  நம்மைப்பிரிப்பார்கள் என்று பஜனை பாட ஆரம்பித்து விட்டார்கள். வினவை திட்டுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. வினவில் தனிநாபர் தாக்குதல் என்று கிழிய பேசுபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவிலிருக்கும் எழுத்துக்களை பார்ப்பது நலம்.

உண்மைத்தமிழன் & அங்கே கும்மியடிப்போரின் கவனத்திற்கு

மொக்கைமார்களே !!!

மீண்டும் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே வதைத்துக்கொள்ளுங்கள் யாரும் கேட்க வில்லை, மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களோடு தோள் கொடுக்காமல் எங்களால் இருக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மனிதர்கள், சொரணையுள்ளவர்கள்.  அப்புறம் இன்னொரு கும்மி சொல்கிறார் ” இப்படி திட்டுகிறீர்களே நர்சிம் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? ”  இந்த பூச்சாண்டியெல்லாம் சொரணையற்றவர்களின் கண்களில்தான் கண்ணீரை வரவழைக்கும்.

நர்சீமின் யோக்கியதையை ஏன் அவரின் தெருக்களுக்கு கொண்டு செல்லக்கூடாது? இது லீனாவுக்கும் பொருந்தும். உன் கருத்து சரி என்று தானே சொல்கிறாய் மக்கள் மன்றத்தில் உரத்து முழங்கு உன் கருத்துக்களை, எமக்கும் மக்களுக்கும் இடைவெளி எப்போதும் இருந்ததில்லை, இவர்களைப்போல் அங்கு ஒரு பேச்சு இங்கு ஒரு பேச்சு என்று மொள்ளமாறித்தனம் எங்களால் செய்ய இயலாது.  ஆணாதிக்கவாதிகளை தனிமைப்படுத்துவது மட்டும் போதாது, அவர்களை அடித்து விரட்டுவோம். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வினவுக்கு தோள் கொடுப்போம்.

  • ஆணாதிக்க பொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியப்போம் !
  • பெண்களை நுகர்பொருளாக்கும் எழுத்து புரோக்கர்களுக்கு பதிலடி கொடுப்போம் !!
  • தமிழ்மணத்திலிருந்து ஆணாதிக்க பொறுக்கிகளை தூக்கியறியவைப்போம் !!!

பெண்களும் விளம்பரங்களும்

ஜனவரி 11, 2009

ad-copy
பெண்களும் விளம்பரங்களும்
நுகத்தடியில் அழுந்தி கிடக்கும் பெண்மை

இப்போது ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கின்றது, திரும்பிய இடங்களிளெல்லாம்விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றது.அது “எப்போதும் சளைக்காதவர்களுக்கு”அதில் ஒரு கிழவன் ஓரக்கண்ணால் ஒரு இளம்பெண்ணை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கின்றான்  கீழே போட்டிருக்கின்றார்கள் “சில எஞ்சின்கள் எப்போதும் சளைப்பதில்லை எப்போது சளைக்காதவர்களுக்கு  ELF OIL ” விளம்பரம் முடிகின்றது.சாதரன ஆயில் விளம்பரத்துக்கு இவ்வளவு மோசமான உவமை காட்டப்பட்டு இருக்கின்றது.இந்த விளம்பரம் ஒரு மிக மிக சாதாரண விசயமாகிவிட்டது,சாலையில் வரும் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட யாவரிடமுமே எந்த கோபத்தையுமே சொல்லிக்கொள்ளும் படி ஏற்படுத்த் வில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரம் மழை வந்து கொண்டிருக்கிறது ஒரு பெண் குடையில் இருக்க மற்றொருவனோ குடைக்கக காத்து பின்னர் பிஸ்கெட்டை காட்டுகிறான்  உடனே அப்பெண் அவனோடு சிரித்துக்கொண்டு ஒன்று சேர்வதை போல் முடிகிறது,ஆணின் பெருமையானது  பெண்களை கவர்வதாகவே காட்டப்படுகின்றது. பெண்ணின் பெருமையானது  ஆண்களை கவர்வதற்காகவே என்று காட்டப்படுகின்றது.பேர் அண்டு லவ்லி  விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்  ஒரே பல்லவி  தான் நீ கருப்பாய் இருக்கிறாய் தன்னம்பிக்கை கிடையாது,மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாய்  நாட்டுக்கு ஆண்களுக்கு  தேவை.

ஒரு எஞ்சினின் தரத்தை நிரூபிக்க , ஒரு வண்டியின் தரத்தை நிரூபிக்க  பெண்ணின் உடல் தேவைப்படுகின்றது,பலவிளம்பரங்களின் தன்மையே ஆண்மையை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றன.சமயல் எண்ணை முதல் பெனாயில் வரை  பெண் தான் விளம்பர மாடல்.பிஸ்கெட் தந்தால் போதும் வண்டியின் அழகை பார்த்தால் போது ஒரு பெண் தன்னையே தந்து விடுவாள் அவளுக்கு தேவை எல்லாம் ஒரு ஆண் தன் ஆண்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும். உன் வாய் நாறாமல் வாசமடித்தால் பெண் போலீசு கூட உன் வலையில் தான்…………..

விளம்பரம் மற்றும் சினிமாக்கள் நாடகங்களில் இம்மாதிரியான கருத்துக்கள் தானாய் தோன்றிடவில்லை.சமூகத்தில் நடப்பதே ஊடகங்களிலும் தொடர்கின்றது.பெண்ணடிமைத்தனத்தை பேசும் பத்திரிக்கையின் ஒரு பக்கம் மறுபக்கமே ஆபாசபடங்களை போட்டு தனது பெண்ணுரிமை பேணும் விதத்தை சொல்கிறது,கேரள அமைச்சர் ஒருவர் நடிகையிடம் தொந்தரவு செய்ததை சமீபத்தில் கண்டோம் .சில மாதத்துக்கு முன் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது. காதலிக்க மறுத்த மாணவியின் மீது ஆசி ஊற்றிய மாணவன்,காதலிக்க மறுத்த் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூரன்,ஏன் கயர் லாஞ்சி உள்ளிட்ட சாதிவெறித்தாக்குதலில் கூட பெண்கள் தான் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டனர்.

சினிமாக்களில் பெண் என்பவர் ஒன்று அடக்க ஒடுக்கமாக அல்லது திமிர் பிடித்த பெண்னாகத்தான் கதானாயகி காட்டப்படுகிறார்.கதானாயகியின் கொட்டத்தை அடக்கி தன் ஆண்மயை நாயகன் நிரூபிக்கிறான்.”அவ கிட்ட பிடிச்சதே திமிர் தாண்டா”.    இப்படி ஆணின் ரசிப்புக்காக பெண்மைகள் படைக்கப்படுகின்றன.ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள் நடத்தை கெட்டவர்களாக சித்த்ரிக்கப்படுகின்றனர்.எப்படி இந்த சுமூகத்தில் “பொய் சொல்லக்கூடாது,திருடக்கூடாது சாமியை பழிக்கக்கூடாது” போன்றவை  சனனாயகமாக காட்டப்பட்டதோ அப்படித்தான் ஆணுக்கு பெண் அடிமையாய் இருப்பது நியதியாக்கப்படுகின்றது.  ஒரு பேருந்து முழுக்க செல்லும்  பெண்களை கூட சாலையில் உள்ள மூவர் கத்தி சத்தமாக கிண்டலடிக்கமுடியும்.ஆனால் அது எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகாது.வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சாலையோரத்தில் நிற்கும் பெண்ணின்  செயல் பரிகாசிக்கப்படும்.

தாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலாக மற்ற ஆண்கள் கொடுமைகள் செய்யும் போது  பெண்களை அமைதியாய் இருக்க வைத்தது எது?சாதிவெறியை தாண்டி பெண்ணடிமைத்தனம் நீடிக்கிறது. அது தான் சினிமாவில் பெண்கள் ஆபாசப்படுத்தப்படும் போதும்   ஊடகங்களில் மோசமான விளம்பரத்தையும்  கண்டு அமைதியாயிருக்கிறது இருக்க வைக்கிறது. ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான்.இப்படித்தான் தன் ஆண்மையின் பலத்தினை அக்கிழவன் பெண்ணிடம் காட்ட விரும்புவதே அந்த ஆயிலின் த்குதியாக மாற்றப்பட்டது. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும்  ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.

எல்ப் ஆயிலின் விளம்பரம் தான் முதல் பெண்ணடிமைத்தனமான விளம்பரம் எனில் தானே எதிர்ப்புகள் புதியதாய் கிளம்புவதற்கு,பல்லாண்டுகளாக பெண் நுகர்பொருளாக நீடிப்பது இன்று வரை தொடர்கின்றது இன்று வரை . ஆணாதிக்கம் வரன்முறையின்றி பெண்கள் மேல் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது பெண்ணியம் பேசும் பலரும் அழகீயலின் ரசவாதத்துக்குள் புகுந்து அதில் மறைந்தே போய்விட்டனர்.அரசின் ஆதரவு ஆணாதிக்கத்துக்கு நீடிக்கும் வரை பெண்ணடிமைத்தனம் ஓயப்போவதில்லை.
அரசின் ஆதரவினை எதிர்க்காது சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போடாது சிலரைப்போல் குடும்பக்கதையையும் பக்கத்து வீட்டுகதையையும் பேசி கொண்டிருப்பதால் ஒருபய னும் ஏற்படப்போவதில்லை.பெண்கள் அரசியல் ரீதியிலான ஐக்கியம் சாத்தியமாகும் வரை,பெண்கள் இப்போது சொல்லப்படும் பெண்மையாய் நீடிக்கும் வரை  ஆணாதிக்கத்தின் நுகத்தடி பெண்ணினத்தை அழுத்திக்கொண்டே இருக்கும்.

I.T-ன் ஆணாதிக்கம்

திசெம்பர் 24, 2008

it1I.T-ன் ஆணாதிக்கம்
தொடரும் ஆணாதிக்கமும் அடங்கிப்போன பெண்ணியமும்

 நம் சமுதாயத்தில்  பெண்கள் போலீசு , நர்சு வேலைக்கு செல்வதை  அருவறுப்பாகவே நீண்டகாலமாக பார்த்து வந்தனர்.அவர்களை பற்றி மோசமான கருத்தினை பதிவு செய்து  உலாவ விட்டு விட்டார்கள்.மாப்பிள்ளைக்கு பெண் தேடும் போது கூட சொல்வார்கள் “பொண்ணு வேலைக்கு போனா நல்லதுதான் ஆனா நர்சு வேலைன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்””வேற வழியில்ல அவங்களுக்கு மேலதிகாரிகளுக்கு இணங்கித்தான் நடந்தாகவேண்டும்”.

“ஹவுஸ்  நர்ஸ் அப்படீனாவே அது விபச்சார தொழில்தான்”இது ஒரு எம்.டி.படித்த மருத்துவர் உதிர்த்த வார்த்தை,ஆணாதிக்க ஆணோ அல்லது பெண்ணோ தான் செல்லும் இடமெல்லாம் ஆணாதிக்க சிந்தனையை பரப்பி அதை பொது கருத்தாக்குகின்றனர்.அதில் வெற்றியும் பெறுகின்றனர்.இவர்களின் வாய்க்கு கிடைத்த புது அவல் தான் “ஐ.டி பெண்கள்”.ஐடியில் பணிபுரியும் பென்களை பற்றி சில கருத்துக்கள்  தூவப்படுகின்றன”ஐடி இருக்கிறவ  ஒருத்திகூட யோக்கியமா இருக்கமாட்டாளுக,பொட்ட கழுதங்க கையில காசு வந்தவுடன் ஆட்டம் போடறாங்க “இந்த கூற்றுகள் ஒரு புறம் இருக்க,வினவு எழுதியிருந்த ஐடி கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த கோமாளிகள்” நீ என்னா சொல்லற,இங்கே யாரும் பார்சியாலிட்டி பார்க்குறதுல்ல தெரியுமோ? மனிதனை இங்கே தான் மதிக்கறாங்க. உண்மையில் நான் பழகிய பல பேரிடம் ஒருவர் கூட “எங்களை மனுசனா மதிக்கறாங்க என்று சொன்னதே இல்லை” ஒரு பெண் தொழிலாளி கூட மனம் திறந்து கூறியதில்லை”இங்கெ பாகு பாடு இல்லாமத்தான்  நாங்க இருக்கோம்” என்று.

உண்மையை சொன்னால் மற்ற இடத்தில் விட ஐடி,பிபீஓக்களில் பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப்படுகின்றது.இதுவே ஆணாதிக்க அரிப்புக்கு மூக்கிய காரணம்.சம்பளம் மட்டும் தான் இணையாக இருக்கின்றதே தவிர மற்ற படி வெளியே தொடரு அதே”பாலியல் ரீதியிலான தொல்லைகள்,கேலிகள்,ஆபாசப்பேச்சுக்கள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன ஐடி,பிபீஓ பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள்.”ஐடி,பிபீஓவந்த பிறகு பெண்கள் ரொம்பவே முன்னேறிட்டாங்க” என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது,அந்த ஒலியில் பெண்களின் மெல்லிய  விசும்பல் சத்தம் மறைந்து போகின்றது.

ஐடி,பிபீஓ-ல் சங்கம் கட்ட உரிமை யில்லாத காரணத்தால் இங்கு மற்ற தொழிலகங்களை போலன்றி தொழிலாளர்கள் உரிமைகளை பேசாது பெருமைகளையே பேச வேண்டும்.எதையும் பழகிக்கொள்,பழக்கிக்கொள் இது தான் ஐடி,பிபீஓக்களின் தார்மீகக்கட்டளை.எப்படி பள்ளி கல்லூரியில் ஆண்களை விட பெண்கள் குறைவாயிருக்கின்றார்களோ அதைப்போலவே ஐடி,பிபீஓ லும் இருக்கின்றது.எப்படி ஒரு ஆண்பள்ளி,கல்லூரிகளில் பெண்ணை நுகரத்துணிந்தானோ அதையே இங்கேயும் தொடர்கின்றான்.
ஐடி,பிபீஓ-ல் பெண்ணுக்கு உரிமையெல்லாம் கிடையாது. இருக்கும் முக்கிய கடமை “மற்றவர்கள் நுகர்வதற்கு தன்னை தயார் செய்வதே. இனி கதைக்குள் சென்று மீண்டும் கட்டுரையை தொடருவோம்.
—————————————————————————————————————————————————————————–

நல்லதூக்கம் ஹாஸ்டல் ரூம் மேட் எழுப்பினாள்”ஏய் எந்திரிடீ மணி 7.30 ஆயிடுச்சு”. .பஸ் 8.30 க்கு ஒண்ணு இருக்கு அதை விட்டா 9 மணிக்கு தான் பேரு வைச்சிருக்கானுங்க ஐடி ஹைவே என்று என முனகியபடியே எழுந்தேன்.கண்ணெல்லாம் ஒரே எரிச்சல் .அப்பா அம்மவிடம் போனில் இரவு 2 வரை சண்டை”என்னா எப்ப பார்த்தாலும் ரொம்ப அடம் புடிக்கற மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து திங்க கிழமை வராங்க  நீ லீவு போட்டுட்டு ஊருக்கு வா,ஏண்டி நீ கல்யானம் பன்னிக்குவியா மாட்டியா”இப்படி வசைகள் வாரத்துக்கு இருமுறையாவது நடக்கும்.அடுத்த நாள் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல பேசுவார்கள். நான் ஊரிலிருந்து வந்து ரெண்டு வருச மாகுது காலேஜ் முடிந்தவுடனே வந்தேன்.அண்ணன்  இங்கே தான் எச் சி ல்-ல வேலை செய்யறான்.கடந்த ஆறு மாசமா அப்பாவும் அண்ணனும் மாறி மாறி “சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணு” நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஒரு வேளை  அண்னனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சோ என்னவோ என்ன கல்யாணம் பண்னச் சொல்லறான்.வாரத்தில் ஆறு நாள் வேலை ஞயிறு மட்டும் தான் விடுமுறை காலையிலேயே அண்ணன் போன் செய்வான் இன்னைக்கு எங்கேயெல்லாம் போற சொல்லு சினிமாவுக்கா நான் கூட்டிடு போறேன் ,கடைக்கா நான் கூட்டிட்டு போறேன்,இன்னைக்கு நீ போகாதே நான் வெளிய போறேன்.சொல்லாமல் எங்கேயாவது சென்று விட்டு வந்தால் எங்கே போனேன் என்று லிஸ்ட் ஒப்பிக்க வேண்டும்.ஆரம்பத்தில் பாசம் என நினைத்தேன் பின்னாளில் தான் தெரிந்தது அவன் தான் இலவச போலீசு என்று.

குளித்து விட்டு சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு தெருவில் பேருந்து நிலையத்தை நோக்கி நடைப்போட்டேன்.வழக்கமாய் தெரிந்த முகங்கள் தெருவில் பட்டன. நின்று கொண்டிருந்த பஸ்-ல் ஏறினேன்.மகளிர் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்து இருந்தனர். நடத்துனர் எதுவும் பேசாது டிக்கெட்  கொடுத்துக்கொண்டிருந்தார்.யாராவது கேட்பார்கள் என்று பேருந்தில் இருந்த பெண்கள் எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தோம்.யாரும் கேட்கவில்லை பேருந்து நகரத்தொடங்கியது  அப்படியே என் நினைவுகளும்.இந்த கம்பெனியில் சேர்ந்து 1 வருடம் இருக்கும் அடிக்கடி மிஸ்டு கால் வருகின்றது.கால் வந்தவுடன் எடுத்து ஹலோ என்றதுமே கட்செய்கிறார்கள்
போன மாதம் ஒரு கால் அவன் என்னோடு வேலை செய்யும் சீனியர் அவனிடம் தான் சந்தேகங்களை கேட்பேன் .”ஹலோ “என்றேன்.
நான்தான் முகில்   என்றபடி பேசிக்கொண்டிருந்தான் தேவையில்லாமல். இறுதியில் பயந்த படியே ” நான்………….” என்றான் . நான் “இப்படியெல்லாம் பேசறமாதிரியி ¢£ருந்தா என்கிட்ட பேசாதீங்க ” அவனோ தொடர்ந்து கொண்டே இருந்தான் டக்கென போனை ஆப்  செய்தேன் .எனக்கு பயமாய் இருந்தது நாளைக்கு ஆபீசில் என்ன பேசிக்கிட்டு இருப்பானோ?.அடுத்த நாள் முதல் அவன் என்னிட நேராய் பேசாது  அவனின் நண்பர்களிடம் பேசுவது போல ஜாடையாக பேசி வந்தான்…..
யாரோ நெருக்குவது போலிருந்தது ஒரு எருமை என்மேல் உரசிக்கொண்டிருந்தான். நான் முறைத்தபடியே  நகர்ந்து சென்றேன்.அந்த எருமையோ வெற்றி பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தது.அதற்குமேல் அவனின் முகத்தை பார்க்கவில்லை.பஸ் ஸ்டாப் வர பொறுமையாக  இறங்கினேன்.பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டு படிக்கட்டை நோக்கி வரும் போதே  சிரிப்புக்களும் கேலிகளும் அதிகமாகிவிடும். நாங்கள் எதையும் கேளாமல் செவிடர்களாய்தானிருக்க வேண்டும்.சமூகம் சொல்லித்தந்திருக்கின்றது நாங்கள் பெண்மையாம் அதிர்ந்து பேசினால் கூட வாயாடியாக்கப்படுவோம்.

அலுவலகத்துக்குள் வந்தேன் ஹாய் சொல்லிவிட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.  சரியாக ஒரு மணி நேரம் ஆன உடன் சிலர் ஒவ்வொரு வராய் வந்து அருகிலுள்ளவரிடம் பேசுவது போல ஆபாசக்கதைகளையும்,அந்தப்பொண்ணை பார்த்தேன் என்று கதைஅளந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவுக்கு பெண் ஊழியர்களோடு உணவருந்தினேன்.சினிமா முதல் எல்லா கதைகளையும் பேசிக்கொண்டிருப்போம்.மறந்து மருந்துக்குகூட எங்களின் பாதிப்புக்களை பேசியதில்லை.மீண்டும் வேலை தொடர்ந்தது.சுமார் ஆறு மணிவாக்கில் பக்கத்து டீம் சூப்பர் வைசர் வந்தார் அருகில் உட்கார்ந்துக் கேட்காமலேயே சாப்வேர் டவுட்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்  பிறகு தேவையில்லாமல் மொன்னை ஜோக்குகளை அல்ளிவிட்டு சிரித்து கொண்டு இருந்தார்.மணியோ 7.30 ஆனது “என்னங்க நீங்க கிளம்புலயா?” என்ற படி அவர் கிளம்பினார். இது வாரத்துக்கு 3 முறையாவது நடக்கும்.அலுவலகத்தில் இப்படி பல பெண்களிடத்தில் தன்னை அறிவாளியாக காட்டிக்கொண்டு திரிபவர்கள் ஆண்களிடத்தில் பெருமைக்குரியவர்களாகின்றனர். நாங்கள் இப்படி சூப்பர் வைசர் போல மேலதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் பஸ்ஸில் செய்ததை போல் விலகிக்கூட செல்லமுடியாது சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பஸ்ஸில் இருந்த பொறுக்கிகளால்  எங்களை சிரிக்க வைக்க முடியாது எத்தனை ஜோக்குகளை சொன்னாலும்.மேலதிகாரிகளிடம் சிரிப்பே இல்லை யென்றாலும் கூட சிரித்துதான் ஆக வேண்டும்.இவர்களின் தூண்டிலில் மாட்டிய, தானாய் மாட்டிக்கொள்கிறவர்கள் யாரும் எப்பொதும் பெண்களாகிய எங்களுக்குள் இதைப்பற்றீ  பேசியதே இல்லை.பேசவும் முடியாது.அதை பேசினால் கூட இந்த சமூகம் எங்களை குற்றவாளியாக்கிவிடும்.பிரச்சினையை எதிகொள்ளும் நாங்கள் அமைதியாக பொறுமையாக  ஊமையாகத்தான் இருக்கின்றோம்.எங்களை கேலி செய்யும் போது நாங்கள் வாய்மூடி இருப்பது போலவே நன்றாக பழகு ஆண் ஊழியர்களும் இருக்கின்றார்கள்.எங்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கின்றது ஆண்களின் உரிமை ஆதிக்கம் செய்வது,பெண்களின் உரிமை அமைதியாய் இருப்பது.
————————————————————————————————————————————————————————
 

ஆணாதிக்கம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது  குறிப்பாக ஐடி பிபீஓவில் பெண்கள் மூன்று நிலையாக  வகைப்படுத்திக்கொள்கிறார்கள்.ஆணாதிகத்தை எதிர்கொள்ளாமல் விலகிச்செல்லல்,ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொல்லல்,அதை எதிர்த்து போராடுவது-இது மிகசொற்பமே.முதல்வகை பெண்கள் தான் இங்கு ஆகப்பெரும்பாலும்,சக ஊழியன் அனாகரீகமாக நடந்துகொண்டான் என்பதை வெளிப்படுத்துவதில்லை,இதனால் தங்கள் மானம் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள்.அதற்காக அவர்களை  குற்றம் சொல்ல முடியாது.கற்பு என்பதற்கான வரையரையை ஆணாதிக்கம் விரிவு படுதிக்கொண்டே போகின்றது.

பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும்? ஆண் ஒருவன் பார்க்கும் போது தலையை குனியவேண்டும்,பேருந்தில் என்வனாவது உரசினால் விலகிப்போகவேண்டும்.எதுக்குடா இப்படி இடிக்குற என்றால் பெண்மையின் புனிதம் கெட்டு விடும்.பள்ளி,கல்லூரி சலைகள்,பணிபுரியுமிடம் எங்கும் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பலருக்கும் ஆணாதிக்கம் என்றாலே கோபம் பொத்துக்கொண்டு கோபம் வருகின்றது. தனியாக சக பெண் ஊழியரை ஆபாசமாக பேசுவது,அப்பெண்ணிடம் இயல்பாக பேசுவது இப்படி செய்பவர்கள் பொறுக்கிகள் எனில் அதை அமைதியாகவோ அல்லது களிப்படைந்து கேட்டுக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் தவிர வேறென்ன.உன் தாயை ஒருவன் விபச்சாரி எனும் பொருள் படும் படி பேசினால் வரும் கோபம் உனக்குஏன் சக ஊழியரை அப்படி கீழ்த்தரமாக பேசும் போது  கோபம்  வரவில்லை.அதற்கு பேரென்ன?தன்னுடன் வேலை செய்யும் பெண் பாதிக்கப்பட்கிறார் மற்றவனால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் எனில் உன்னை அமைதியாய் இருக்க வைப்பது எது?
ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொள்ளல்-

இவ்வகைப்பெண்களிடம் பெண்ணுரிமை பூத்தா குலுங்குகிறது? இது பென்ணடிமைத்தனத்தின், ஆணாதிக்கத்தின் மறு முகம்.ஒரு ஆண் எப்படி மற்றவரை கவர்வத்ற்காக திரிகின்றானோ அதைப் போலவே இப்பெண்ணும் திரிகின்றார்.தொடர்ச்சியான ஆணாதிக்கத்தின் தாக்குதல்கள் படிபடியாக இனிக்க ஆரம்பித்து விடுகின்றது.அதற்கு ஏற்ற படி த்ப்பாமல்  தாளம் போடுகின்றனர்..இங்கும் ஆண்களின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றிக்கொள்வதால் விசும்பல்கள் எழாது பெருமையே கொள்கின்றனர்.இதையே சாக்காக வைத்து ஆணாதிக்க வாதிகள் கூக்குரலிடுகிறார்கள்”இவளுங்க கையில பனம் வந்த வுடனே எப்படி ஆடறாங்க ,இதுக்குதான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கணும்.”
ஐடி,பிபீஓ -ன் இந்த மிகச்சிறு கும்பலின் மானங்கெட்ட  நடத்தைதான் ஒட்டு மொத்த ஐடி,பிபீஓபெண்களின் நடத்தையாக காட்டப்படுகின்றது. 

இப்படிப்பட்டவர்களின் பெண்ணுரிமை என் முன்னால் பலமுறை அரங்கேறியிருக்கின்றது.

அதில் ஒன்று
HR ஆக பணிபுரியும் அவர்  ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டவர், ஏதாவது ஒரு function எனில் தன் பதவியையும் மறந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பார்.சனிக்கிழமையெனில் free dress codeஅலுவலகம் அனுமதித்திலேலே முடிந்த அளவுக்கு ஆபாசமான ஆடையை அணிந்திருந்தார்.சீனியர் அக்கவுண்டன்ட் சொன்னான்”இங்க பாரு……… இது மாதிரி டிரெஸ் போட்டுட்டு வந்தா ரெண்டு புள்ள பெத்த எனக்கே ஒரு மாதிரி இருக்கு”.இதைக்கேட்ட எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது.அப்பெண்ணோ தனக்கு அங்கீகாரம் கிடத்தமாதிரி  சிரித்தார்.

 

இந்த ஆணாதிக்கத்திலிருந்து எப்படித்தான் விடுதலை பெறுவது?ஆண்டுக்கொரு தரம் பெண்கள் தினம் கொண்டாடி கேக் தின்று தண்ணீர் குடித்தால் மட்டும் வராது உரிமைகள்.அது போராட்டம் இன்றி கிடைக்காது.போராட்டத்திற்கு தேவை பெண்களிடம் ஐக்கியம்.அரசியல் ரீதியிலான ஐக்கியம் மட்டுமே நீடிக்கும்.ஆபரணம்,அழகு,ஆதிக்கம்,மதம் என அனைத்தாலேயும் கட்டிப்போட்டிருக்கின்றது ஆணாதிக்கம். இவற்றை தூக்கி எறியாமல் பேசும் நம் பேச்சுக்கள் ஆணாதிக்கத்துக்கு முதுகு சொறிவதாகவே இருக்கும்