Posts Tagged ‘காதல்’

இது ஒரு காதல் கதை – காதலனா ? தாலியா?

ஜூலை 13, 2010

இது ஒரு காதல் கதை
காதலனா ? தாலியா?

நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. எங்களில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக  அப்படி ஒரு நெருக்கம். சொல்லப்போனால் நாங்கள் எல்லாருமே அரசியலறிவில் புதியதாய் நுழைந்திருந்தோம்.  நாம்இப்போது பார்க்கப்போவது மற்ற இருவரைப்பற்றியல்ல அதோ அவர்தான் கதிர் . அவருக்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது ஆனாலும் நாங்கள் “வாங்க” மரியாதையாகவே பேசிவந்தோம்.

நால்வரும்  ஒரு ஞாயிறு காலை ஒரு வேலையினை முடித்து விட்டு ஜூட் விட ஆரம்பமானோம்.

மற்ற இருவரும் எங்களை இறக்கிவிட்டுவிட்டு வடபழனி சிக்னலிலிருந்து வேறுதிசையில் செல்ல நானும் குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். சரியான வெயில், மண்டையைப்பிளந்தது. கதிர்  சொன்னார். ” ஏங்க கரும்பு ஜூஸ்……….”  கடைக்குப்போய் குடித்தோம்.

நான் கிளம்பும் வேளையில் ” ஒரு பொண்ணுகிட்ட கல்யாணம் பண்ணிக்குறீங்ளான்னு கேக்கலாம்னு இருக்கேன் “என்றார் கதிர் . “என்ன சொன்னீங்க , தெளிவா சொல்லுங்க” என்றேன். “இல்ல என் கூட ஆபிஸ்ல ஒருத்தர் வேலை செய்யறாங்க அவங்கிட்ட காதலிக்கறதா சொல்லிடலாம்னு இருக்கேன்”. எனக்கு அதிர்ச்சி, இருக்காதா ஒரு மாதத்திற்கு  முன் கதிருக்கும் எனக்கும் கடுமையான விவாதம் காதலைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை காதல் அது தன் துணையை தெரிவு செய்வதற்கான வழி. நிலபிரபுத்துவ காலத்தில்  பெண்ணும் பொருளாக மாற்றப்பட்டனர். கடுமையான ஆணாதிக்க சுரண்டலின் தவிர்க்க இயலாத வகையில் பெண் தன் துணையை தெரிவு செய்யத்துணிகிறார், அதுதான் காதல்.

ஆணாதிக்க சமுதாயத்தை மீறி என் துணையை நான் தெரிவு செய்வேன் என்பது ஒரு முற்போக்கான  சுதந்திரமான முடிவு அது வரவேற்கதக்க முடிவும் கூட.  வருகின்ற துணையைப்பற்றி ஏதும் அறியாது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு வழியின்றி வாழ்வதெல்லாம் நல்லபடியாக வாழ்வை கொண்டு போகாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து  பின்னர் செய்யும் மணம்  நீடித்திருக்கும் என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருக்கும்.

ஆணும் பெண்ணும் தன் துணையை தெரிவு செய்வதற்கு காதலைத்தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?ஒரு பெண்ணோ ஆணோ  தன் துணையை தெரிவு செய்ய விடாமல் தடுப்பது எது? சாதி, மதம், பணம், குலம், கவுரவம், அந்தஸ்து போன்றவை தானே. பெரும்பான்மை காதல் திருமணங்களில் இவற்றில் ஏதாவதொன்று உடைபடுகின்றது. ஆனால் கதிரைப் பொறுத்தவரை காதல் என்பதே பொய் அது பெண் சுதந்திரத்திற்கான முதல் படி அல்ல, ஒரே சாதியில் தான், சொந்தத்தில்தான் என் அலுவலகத்தில் காதலிக்கிறார்கள் என்பார். காதலைப்பற்றிய இவ்விவாதம் சில நாட்கள் நீடித்தது.  கடைசியாக காதல் முற்போக்கின் ஒரு அம்சம் என்ற அளவில் மட்டும் அவர் ஒத்துக்கொண்டார்.

அவர் இப்படி கேட்பார் நான் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. விசாரித்தேன் பெண்ணைப்பற்றி அவரிடம். அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் அப்பெண்ணும் வேலை செய்வதாகவும் சொந்தஊர் சென்னையிலிருந்து 150 கி.மீ தள்ளி இருப்பதாகவும் கூறினார். அப்பெண் மறைமுகமாக காதலிப்பது போல் தெரிவதால் தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். தன்னுடைய சாதி மறுப்புக்கொள்கைகள் அவருக்குத்தெரியுமென்றும் கூறினார்.

” உங்களுக்கு எதிரி யாருங்க” என்றேன். “இந்த நாட்டை சூறையாடுற உலக வங்கி ஏகாதிபத்தியம் அப்புறம் ஏகாதிபத்திய கைக்கூலிகள் ” என்றார். ” அந்தப் பொண்ணைக் கேட்டுப்பாருங்க எதிர்த்த வீட்டு பிரமிளாவோ அல்லது பக்கத்து வீட்டு அனிதா இல்லைன்னா கூட வேலை செய்யுற தாரிணின்னு சொல்லுவாங்க. உழைக்கும் மக்களை  ஒடுக்குறவன பத்தி நீங்க பேசுறீங்க ஆனா அந்தப் பொண்ணு கவலை என்னவாயிருக்கும்?  அவ முடி நெறயா வளர்த்திருக்கா, அவ குத்திக்காட்டி பேசுறவ,  அவ அன்னைக்கு புது ட்ரெஸ் போட்டுகிட்டு ரொம்ப பந்தா காட்டுறா இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்கப்போவுதா என்ன?

“அந்தப்பொண்ணு மட்டுமில்ல பையனோ பொண்ணா  இந்தக்காலத்துல எப்புடி இருக்காங்க? இந்த நாட்டு மக்கள் மேல அக்கறையா இருக்காங்களா என்ன?  இந்த மக்கள் மேல அக்கறை வச்சு அதுக்குன்னு போராடுற நீங்களும் மக்களை மதிக்காத ஒருத்தரும் எப்படி இணைஞ்சு வாழ முடியும்? ”

“அவங்கள மாத்தவே முடியாதுன்னு சொல்லுறீங்களா?” இது கதிர் .

“நான் அப்புடி சொல்லலை மாற்றம் ஒன்றே மாறாததுன்னு ஆசான்கள் சொல்லியிருக்காங்க, மக்களை மாற்ற முடியுமின்னுதான்  நாம இப்ப வரை பேசறோம். முதல்ல அந்தப்பெண் கிட்ட உங்களைப்பத்தி பேசுங்க அரசியலை கொண்டு போங்க புத்தகங்களை  படிக்கச்சொல்லுங்க, என் திருமணம் இப்படித்தான்னு, என் வாழ்க்ககை இப்படின்னு உங்கள் மீது ஒரு கருத்தை ஏற்படுத்துங்க, அப்புறம் உங்க காதலை தெரிவியுங்க , அவங்களே முடிவு செய்யட்டும், உங்களை வாழ்க்கைத்துணையா ஏத்துக்கறதா வேண்டாமா என்று”

“சரிங்க” என்றபடி சென்றவரை சில நாட்கள் கழித்து கேட்டேன். தான் காதலை தெரிவித்து விட்டதாகவும் மனசு கேக்கவில்லை என்றும்  அப்பெண்ணும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.”முட்டாள்த்தனமான முடிவென்று நினைத்துக்கொண்டு என்னுடைய சந்தேகம் அவரிடமே கேட்டேன் “எப்புடிங்க அன்னைக்கு அப்புடி பேசுனீங்க அதுக்குள்ள காதல் வலையில விழுந்துட்டீங்க”.

“நீங்கதான சொன்னீங்க காதல்ங்குறது உரிமைன்னு பெண்சுதந்திரத்திற்கானதுன்னு அதான் யோசிச்சு என் கருத்தை மாத்திகிட்டேன் என்றார் ” ஆக  சும்மா கிடந்த சங்கை நான்தான் ஊதி விட்டிருக்கிறேன்.

சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அவர் சொல்லுவார் அந்தக்கூட்டத்துக்கு வரச்சொன்னேன் வந்திருந்தாங்க” சில மாதங்கள் ஓடின. அப்பெண் தன் வீட்டில் காதலை சொல்லி விட்டதால் அவருடைய தந்தை கதிரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.

“சரி போய்ட்டு வாங்க” என்றோம். அவர் மட்டும் அப்பெண் வீட்டிற்கு சென்றிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம் தான். பொண்ணு வீட்டுக்காரனுங்க ஏதாவது செய்திடுவார்களோ என்று. அன்று இரவு வந்த அவர் அப்பெண்ணின் வீட்டில் போய் பேசி விட்டதாகவும் சொன்னார்.

அப்பெண் ஒரு மாதம் கழித்து தன்னுடைய தந்தை கண்டிப்பாக தாலி கட்டவேணடுமென்று சொல்லி விட்டதாகவும்  அப்பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் தி.க என்றும் அவர் தாலி கட்டிவிட்டதால் நீங்களும் தாலி கட்ட வேண்டுமென்று கதிரிடம் சொல்ல ஆரம்பித்தார். பார்ப்பானை வைத்துதான் சாங்கியமென்றும்  கண்டிச­ன்  ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது.

பார்ப்பன இந்து முறையில் பெண்ணை கேவலப்படுத்ததான் தாலி என்றும் பார்ப்பனனின் மந்திரமே பெண்ணை விபச்சாரியாக்குவதுதான் என்று பல முறை சொல்லியும் அப்பெண் கேட்கவேயில்லை. அப்பெண்ணின் அப்பாவுக்கு பணிஓய்வு பெற 4 மாதங்களிருப்பதால் அதற்குள் திருமணம் நடத்த ஏதுவாக விரைவாக பதில் சொல்லுமாறு அப்பெண் கூறினார்.

இந்த சம்பவமெல்லாம் எங்களுக்கு முன்னே நடந்தேறுகிறது. ஒருகட்டத்தில் அப்பெண் “தாலி கட்டுனா என்னை கல்யாணம் பண்ணு………….” என்க ,குமாருக்கும் அப்பெண்ணிற்கும்  சண்டையில் முடிந்திருக்கிறது. நாங்கள் எடுத்த சமாதான முயற்சிகள் பயனற்றுப்போயின. அப்பெண்ணின் ஒரே பதில் “தாலிகட்டி சம்பிரதாயத்தோடுதான் கல்யாணம் அப்படீன்னா பேசுங்க….”

“குறைந்தபட்சம் தாலிகட்டுறது தப்புன்னு தெரியாத அளவுக்கு என்ன வெங்காயம் காதலிச்சீங்களோ ஒரு இழவும் தெரியல, இப்ப என்ன பண்றது” என்றேன்.

“இல்ல நான் தாலியப்பத்தி யல்லாம் பேசியிருக்கேன், சுயமரியாதையா இருக்கணுமுன்னு பேசியிருக்கேன்” என்றார் கதிர்.

“அப்பன் கிட்ட பேசி காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தற அளவுக்கு தைரியம் இருக்கு ஆனா தாலிகட்டாம கல்யாணம் பண்ண முடியலை இல்லையா? வரதட்சணை வேண்டாமெனில் கசக்குதா? அடிமைத்தனம் புடிக்குது உனக்கு சுதந்திரம் கொடுக்குறவன் பிடிக்கலையா? எவன் உன்னை விபச்சாரியா (பார்ப்பன இந்து மதம்) ஆக்குறானோ அவன் மேல வைக்குற நம்பிக்கையை ஒரு சதவீதம் இந்தக்காதலன் மேல வைக்க முடியலேன்னா இதுக்குப்பேர் காதல் கிடையாது. ரெண்டு பேரும் உணர்வுகளுக்கு அடிமையாயிட்டீங்க “என்றேன்.

இன்னொரு நண்பர் சொன்னார் “கடைசியா அந்தப்பெண்கிட்ட பேசிப்பாருங்க, அரசியலை சொல்லிட்டு  பக்குவமடைஞ்ச பிறகு காதலிச்சிருக்கணும். இப்ப என்ன பண்றது. எல்லாம் அப்பெண்ணோட கையில்தான் இருக்குது.”

எனக்கோ நம்பிக்கையில்லை கதிர் மீது ” தாலிகட்டிகிட்டுதான் வரப்போறாரென நினைத்தேன்”

அப்பெண் கடைசி வரை தன் முடிவில் தெளிவாயிருந்து அடிமைத்தனத்தில்  இல்லற வாழவென உறுதியாயிருக்க , கதிரோ   அந்தக்காதலை விட்டார். கதிர்  விட்டார் என்பதை விட அப்பெண் தன் முடிவில் மிக உறுதியாயிருந்தார் என்பது தான் உண்மை. ஒரு மாதம் கழித்து அப்பெண் முதல் அவர்கள் வீட்டிலிருப்பவர் வரை பலரும் கதிரை கெஞ்சிப்பார்த்து விட்டார்கள்,  தயவு செஞ்சு  “தாலி கட்டுங்க” என்று.

அப்பெண் ஆரம்பத்தில் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு பின்னர் காதலித்தால் மீள மாட்டான் என்று கட்டளைகள் விதித்து இருக்கிறார் .  அப்பெண்ணின் கண்ணீர், கோபம் ” எல்லாம் தாலி கட்டுங்க” என்றமைந்திருந்தது. பின்னர் வேறு நபருடன் பார்ப்பன முறைப்படி திருமணமும் செய்து ஈராண்டுகளாகிவிட்டன.

இந்த பார்ப்பன இந்து சமூகத்தின் மேல் அப்பெண் வைத்த நம்பிக்கையில்  கொஞ்சம் கூட தன் குடும்பத்தை மீறி மணக்கத்   துணிந்த காதலன் மீது இல்லை. அப்படியயனில் அந்தப்பெண் பொய்யாய் காதலித்தாரா?  இல்லை அவர் உண்மையாக கூட காதலித்திருக்கலாம் ஆனால் தாலிகட்டாமல் சாதி சொல்லாமல் வாழ்ந்தால் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அந்தக்காதலைலையே தின்று விட்டது. தாலி பெரியதா? காதலன் பெரியதா? என்றபோட்டியில் அப்பெண் கடைசியில் தாலியை கட்டிக்கொண்டு போய்விட்டார்.காதலிப்பது பெரிய விசயமல்ல, இந்த மூடநம்பிக்கை சமுதாயத்தை எதிர்த்து இயங்குவதுதான் பெரியது.

பெண்ணுரிமையை வைத்துக்கொள் என்றால் எனக்குத்தேவையில்லை நான் இடிமையாய்தான் இருப்பேன், அடிமைத்தன வாழவில் அடிமைத்தன பிள்ளையை பெற்று அடிமைக்குழந்தையை அடிமைத்தனமான முறையில் வளர்ப்பேனென்றால் இங்கு என்னதான் செய்ய முடியும். கொண்ட காதலுக்காக கடைசி வரை சுயமரியாதையை கொண்ட அரசியலை இழந்து வாழமுடியுமா என்ன?

இல்லை நீ மக்களை பற்றி சிந்தித்துதான் ஆக வேண்டும். சுயமரியாதையோடுதான் வாழ வேண்டும். நீ சிந்திப்பதற்கு எல்லாமிருக்கிறது, இவ்வுலகே எனக்கு சொந்தம். சுயமரியாதைக்கு, உழைக்கும் மக்கள் உரிமைக்கு , முக்கியமாக பெண்ணுரிமைக்கு  உன்னால் முடிந்ததை எதுவேண்டுமென்றாலும் செய். பெண் ஆணைப்போல சுயேச்சையான பொருளாதாரத்துடன் வாழ அனுமதி அளிப்பதை விட வேறு ஏது சுதந்நிரம்?

ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம் வாரதிற்கொருமுறை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும் எனில் தாலி கட்டித்தான் ஆக வேண்டுமென்று அடிமை விலங்கை ஆசையாய் மாட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு சுயமரியாதையும் , கம்யூனிசமும் கசக்கத்தான் செய்யும் .
சிலருக்குத் தோன்றலாம் தாலிங்குறது ,பார்ப்பானை வச்சு கல்யாணம் பண்றது சாதாரண விசயம் அதுக்கு காதலை விடலாமா? தாலி என்பதோ பார்ப்பன மந்திரமோ ஒரு செயல் மட்டுமல்ல. தாலி ஏன் உருவாக்கப்பட்டது?  இது என்னுடைய பொருள் என்று கணவன் சொல்லுவதற்காக, ஆம் திருமணத்திற்கான அடையாளமாய் பெண்ணுக்கு இருக்கும் தாலி ஆணுக்கு ஏன் இருப்பதில்லை?

ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள ஒரு கூட்டத்தில்  மணமான பெண்களை கண்டறியமுடியும். ஆனால் ஆண்களை முடியுமா என்ன? அவனே சொன்னால் தான்  தெரியும். சரியான விசயமெனில் அது ஏன் ஆணுக்கில்லை. பெண்ணை பொருளாக்கும் எதையும் ஏற்பதற்கில்லை. எனும் போது எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பெண்ணை வைப்பாட்டியாக்கும் மந்திரத்தை ஏற்க முடியும்.

பெண்ணுக்கு விடுதலை தர நினைத்த கதிரின் உண்மையான சுயமரியாதையுள்ள அரசியல்   அடிமைத்தனத்திற்கு கிஞ்சித்தும் விலை போகாமல் நின்றது. சுயமரியாதை அது தனக்குமட்டுமல்ல மற்றவர்களையும் சுயமரியாதையாகவே இருக்கக்கோருகிறது. நாத்திகர்களாக கூறிக்கொள்ளும் பலர் மறு அழைப்பின்போது தாலி கட்டிக்கொள்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் எதுவும் புரியாதது போல் நடிக்கும் ஒரு அடிமையை திருமணம் செய்வது ஒரு உண்மையான பகுத்தறிவுவாதியால் இயலாது.

இப்பாது காதல் என்று நான் பேச ஆரம்பித்தாலே கதிரின் கதைக்கு சென்று விடுகிறேன். அந்த அளவுக்குகாதல் பற்றிய பெரிய படிப்பினையாகிப்போனது கதிரின் காதல். காதல், பாசம்,வீடு,நட்பு,அப்பா,அம்மா,

உறவினர்கள் இதில் எதுவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு அரசியலில் இருக்கும் நேர்மை  இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிப்பது சாத்தியம்தான். அதற்கு முதலில் நேர்மையாக இருத்தல் வேண்டும். கதிர்  என் நண்பன் என்பதில் மிகவும் பெருமைதான்.

மக்களைப்பிளக்கும் சாதியை

மாதரை வதைக்கும் தாலியை

சித்தத்தையே அழிக்கும் சாத்திரத்தை

மொத்தமாய் புதைப்போம்

மகஇக, புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களின் புரட்சிகர மணவிழா பத்திரிக்கையில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற வாசகம்.

I.T-ன் ஆணாதிக்கம்

கதை

பாலியல் காதலர்கள் – நுகர்வியலின் வக்கிர உற்பத்தி

மார்ச் 11, 2010
பாலியல் காதலர்கள்
நுகர்வியலின்  வக்கிர உற்பத்தி

அந்த பேருந்து நிலையம் புதியது எனக்கு, எந்த பஸ் எங்கு நிற்கும் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு ஆளை பிடித்தேன். “ஏங்க ……..ஊருக்கு எந்த பஸ் போகும்?” அவர் ஏதோ ஏற இறங்க பார்த்து விட்டு “தோ அந்த பஸ் தான் நிறைய பஸ் உங்க ஊருக்கு இருக்கு”.
நண்பருடைய திருமணம் எண்பது கிலோ மீட்டர் தாண்டி இருந்தது. பெரும்பாலான ஊர்கள் போலவே இதுவும் ஒரு 5 கிலோமீட்டர் தாண்டினாலே கிராமத்தினை கொண்டிருந்தது. காலையில் வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பினேன். வரும் போது பிளாட்டுகளாக்கப்பட்ட விவசாய நிலங்கள் கண்ணை உறுத்தின. கிராமங்களில் பான் பீடா கடைகள் புதியதாய் முளைத்திருந்தன. விவசாய நிலங்களில் வறுமையின் கவிதை வறண்டு போய் இலக்கியம் எழுதிக்கொண்டிருந்தது. கூட வேலை செய்பவர் என்பதால் கண்டிப்பாக போக வேண்டிய அவசியம். அந்த ஊர் பெரிய நகரம் இல்லை, கிராமமும் டவுனும் கலந்திருந்தது.
கொஞ்சம் பெரிய மண்டபம் தான் ,ஒரு வழியாய் கல்யாணத்தில் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இப்போது பஸ்டாண்டில் நிற்கிறேன்.அந்தப்பெரியவர் காட்டிய பஸ் சென்று கொண்டிருந்தது. நான் செல்ல வேண்டிய ஊருக்கு தொடர்ச்சியாக பல பேருந்துகள், சரி ஒரு டீ சாப்பிடலாம் என்று பேருந்துகளுக்குப் பின்னால் இருந்த டீக்கடைக்கு என் கண்கள் ஓடின.
ஒரு பேருந்துக்குப்பின்னால் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு கல்லூரி படிப்பவர்கள் போல பையினை மாட்டிக்கொண்டிருந்தார்கள்.
டீயினைக்குடித்து விட்டு தயாராக இருந்த பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் முக்கால்வாசி இருந்தது, கண்ணாடி பக்கம் கிடைக்கவில்லை. இருபெரிய்யய மனிதர்களுக்கு மத்தியில் தஞ்சம் புகுந்தேன்.
ஒரு பெண் முன் படி வழியாக பஸ்ஸில் ஏறி வந்து என்னுடைய இருக்கைக்கு இடது புற இருக்கையில் அமர்ந்தார். எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது, அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால பஸ்ஸிற்கு பின்னாடி பாத்தமே அதேதான். யாரோ என் இருக்கைக்கு பின்னிருக்கையில் உட்கார்ந்தது போலிருக்கவே திரும்பினேன். அட வெளியே பார்த்த அந்தப்பையன்.
பஸ் கிளம்ப ஆரம்பித்தது. அந்தப்பெண் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார் ” ஏய் சும்மாவே இருக்கமாட்டியா? ஏன் இப்படி பண்ணுற , உன்னல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல” ஏதோ பெண்ணிடம் தகராறு செய்பவன் என நினைத்துக்கொண்டிருந்தேன். “என்னை நீ மாட்டி வுட்டுருவ, லீவு வேற சொல்லிட்டேன் போடா” என்றபடி அந்தப்பெண் சைகை காட்ட அவன் அப்பெண்ணோடு உட்கார்ந்தான்.
டிரைவர் டிவிடியைப்போட்டார் “அழகாக சிரித்தது அந்த நிலவு” எனப்பாடத்தொடங்கியது அது. ஊர்கதை உலகக்கதை எல்லாம் பேச ஆரம்பித்து அவள் தோள் மீது சாய்ந்து கொண்டான்.
பஸ்ஸில் எல்லோரும் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற மானம் கொஞ்சம் கூட இல்லாமல் சத்தம் போட்டு பேசிக்கொண்டு, கைகளை முறுக்கிக்கொண்டு சேட்டைகளை செய்து கொண்டு வந்தார்கள். மிஞ்சிப்போனால் ரெண்டு பேருக்கும் 17 இல்லைன்னா18 வயசுதானிருக்கும். நான் மேற்கொண்டு இதை பார்க்காது கண்ணைமூடி தூங்குவது போல் இருந்தேன்.
அன்றாடம் பஸ்-ல் இப்படி ஒரு ஜோடியயாவது பாக்கறேன், அன்னைக்கு பஸ்ஸ்டாண்டுல பையன் பக்கத்துல உக்காந்துகிட்டிருக்குற பொண்ணு ………………………………………அப்பெண் சிரிச்சுகிட்டு போன் பேசிகிட்டு இருந்துச்சு. அப்புறம் போன வாரம் பிரவுசிங் சென்டர்ல ஒரு ஜோடி முத்தம் கொடுத்துகிட்டு இருந்துச்சு, நான் பாதியில பிரவுசிங்க விட்டுட்டு வந்தேன். யார் பாத்தா நமக்கென்ன நாய் மாரி ஊர் மேய்ஞ்சுகிட்டு இருக்குங்க. சென்னையில நிறய நடக்கும் ஆனா இப்ப சிறு நகரத்துல கூட சிலதுங்க ஊர் மேய்ஞ்சுகிட்டு திரியுதுங்க.
எந்த நம்பிக்கையில் தான் ஒருபெண் அல்லது ஆண் காதலிக்கிறான்/ள். ஒருவனைப்பற்றி முழுமையாக தெரியாமல் எதைப்பார்த்து, எதை வைத்து ஊர் சுற்றுகிறார்கள். கேட்டால் காதலிக்க உரிமையில்லையா என்கிறார்கள். முதலில் இவர்கள் செய்வது காதலா?
இவர்களில் பெரும்பாலோர் திருமணம் செய்வது இல்லை.
தன் காதலுக்காக போராடுவது கிடையாது. வீட்டிற்கு தெரிந்து விட்டது என்பதெல்லாம் ஒரு சாக்கு, ஒருத்தியை விட்டால் இன்னொருத்தி என்று ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்கு ஒரு விருப்பம் இப்படிப்பட்ட ஜோடியிடம் கேட்க வேண்டும் “காதல் என்பது என்ன?“. ஆனால் இவர்களைப்பார்த்தால் தானாகவே ஒரு அருவறுப்பு வந்து விடுகிறது.
எவன் பார்த்தால் என்ன?  நான் முத்தம் கொடுப்பேன், பஸ்ஸில் எல்லா சேட்டையும் செய்வேன் என்பவனை ஒரு காதலனாக பார்க்க முடியுமா?அல்லது ஒரு விபச்சாரியாக பார்க்கமுடியுமா? நாய்களைப்போல தன் உணர்ச்சிக்கு வடிகால் எல்லா இடங்களும் தாராளமாக இருக்கின்றன.
இவர்களெல்லாம் விபச்சாரத்தனத்திற்கு காதலை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தனிமனித ஒழுக்கம் என்பது இல்லாமலே போய்விட்டது , அப்பாவுக்கு தெரிஞ்சா எனக்கவலையுறும் அப்பெண் அப்பாவுக்கு எப்பவுமே தெரியக்கூடாது என்கிறார். ஆனால் தான் செய்யும் செயல் சரியா தவறா?.
பாலுணர்வு மட்டும் சார்ந்தது எப்படி காதலாக இருக்கும் என்பதுதான் கேள்வி. சில மாதங்கள் முன் ஒருவன் என்னருகில் பேருந்தில் செல்லும் 2 மணி நேரமும் காதலியோடு பேசிக்கொண்டே இருந்தான். அப்படி எதைத்தான் பேசுகிறான்?
அந்தக்கதை இந்தக்கதை என்றூ மொக்கைகள் தான் பேச்சுக்களாகின்றன. எனக்கொரு சந்தேகம், ஒரு முறைகூட இந்த சமூகத்தைப்பற்றிய பேச்சு ஏன் உங்களிடம் இருந்ததில்லை. நீங்களும் வயிற்றுக்கு சோறு தானே உண்கிறீர்கள், ஏன் அரிசி, பருப்பு விலை ஏறியது? எதற்காக இவ்வளவு கல்விக்கட்டணம்? ஏன் யோசித்ததே இல்லை? ஏன் இவையெல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?

திரைப்படங்கள் இப்படி ஊர்மேய்வதை கலாச்சாரமாக்குகின்றன, “எதைப்பற்றியும் கவலை இல்லை எனக்கு என் உணர்வுதான் முக்கியம்” மற்றவர்கள் ஏதாவது நினைத்துவிட்டால் என்ற எண்ணம் தேவை இல்லாததாகிவிட்டது. “மனிதனை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்த வேண்டும், அறவுணர்ச்சிகள் அல்ல” இந்த  மாபெரும் கருத்தை லீனாவின் தளத்தில் படித்தது போல ஞாபகம்.
நித்தியானந்தனையும், காஞ்சி சங்கரனையும் ஏன் தேவநாதனையும் கூட உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.பின் நவீனத்துவவாதிகளை எது வேண்டுமானாலும் வழி நடத்தட்டும். உங்களின் உள்ளுணர்ச்சிகள் எங்களின் அறவுணர்ச்சியை பாதிக்கும் போது என்ன செய்வது? உங்களுக்கு அறவுணர்ச்சி தேவை இல்லாமலிருக்கலாம் நாங்களும் அறவுணர்ச்சியற்று இருக்க வேண்டுமென்பது அராஜகமாக இல்லையா?
ஒரு விசயத்தில் பின்நவீனத்துவவாதிகள் பெருமை கொள்ளலாம், இதோ இங்கே இளைஞர்களை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.
சுயநலத்திற்கு யாரைப்பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏன் தன்னைப்பற்றியும் கூட. உன் உரிமைபறிபோகிறதென்றால் உனக்கேன் அக்கறை நான் மானங்கெட்டு வாழ்வது என் உரிமை என்றாகிவிட்டது / இல்லை என்றாக்கப்படுகிறது, /பட்டுவிட்டது.
இவ்வுலைகைப்பற்றி பேசாதே, உழைத்து இந்த சாலையை அமைத்தார்களே அவர்களைப்பற்றிப்பேசாதே, அதோ இந்த ஓட்டுனர் எவ்வளவு பணிச்சுமைக்கிடையில் பேருந்தினை இயக்குகிறார்.அவர் கவலையினை என்றாவது புரிந்து கொண்டிருக்கிறாயா?
“இந்த முதலாளித்துவ உலகம் கற்றுக்கொடுக்கிறது, எல்லாவற்றையும் நுகர்ந்து விடு இம்………….. எல்லாவற்றையும், கருப்பாக இருந்தால் நீ நுகரப்படமாட்டாய், சிவப்பாக மாறு பலரும் உன்னைப்பார்ப்பார்கள், மற்றவர்கள் உன்னை ரசிப்பதுதான்  வாழ்வியலின் தேவை உழைப்பு அல்ல, எதைப்பற்றியும் சிந்திக்காதே, இவ்வுலகம் படைக்கப்பட்டதே அனுபவிக்கத்தான் அனுபவி நன்றாக அனுபவி, எத்தனைபேர் மாண்டாலும் உன் சுகத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே.
இது தான் தாரக மந்திரம். உன் அடிமைத்தனத்துக்கு தடையாய் இருப்பவனெல்லாம் உன் எதிரிகள்”
” பொய்யாய் வாழ்வது தான் விருப்பமெனில், உண்மைகள் புரியும் போது பொய்கள் கலையும், அப்போது உங்கள் ” காதலும் ” பறந்து போகும். மறுகாலனியாக்கத்தால் தைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீ உன்னைப்பற்றி என்னப்பேசப்போகிறாய்? ஏன் பேச மறுக்கிறாய்?
நாங்கள்பேசுகிறோம் மக்கள் விடுதலைக்கு உனக்கும் சேர்த்துதான், ஆனால் நீ உன் விடுதலைக்கு கூட பேச மறுக்கிறாய். ஒருவர் தன் துணையை தெரிவு செய்ய காதல் சிறப்பான வழிதான். ஆனால் இந்த காதல் வேசம் போடும் விபச்சாரிகளை என்ன செய்வது?”
கண்விழித்துப்பார்த்தேன் அப்பெண்ணின் மடியில் அவன் படுத்துக்கொண்டிருந்தான், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. அதைப்பார்க்கும் போது ஒரு பிணத்தின் மடியில் இன்னொரு பிணம் படுத்துக்கொண்டிருப்பதைப்போல் இருந்தது.

தொடர்புள்ள பதிவுகள்

1.காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்
2.ஆன்மீகத்-தேடல்கள்
3. 

காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்

பிப்ரவரி 13, 2009

kaathal-copya2வழக்கம் போலவே வந்துவிட்டது காதலர் தினம் பெப்ரவரி 14கையில் ரோசாக்களோடு பச்சை நிற உடைகளில் அலைந்து கொண்டிருப்போரை அலுவலகம், ரயில் நிலையங்கள்,பேருந்துகளில் என எங்கும் காணலாம்.பன்னாட்டு மூலதனத்தின் வரவால் இறக்குமதியான கலாச்சார சீரழிவுகள் காதலை தேடச்சொல்கின்றன படுக்கையறையில்.

தன் துணையை தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட காதல் தற்போது பாலுறவுத்தேவையை தீர்க்கும் நோக்கோடு புதைகுழிக்கு அனுப்பபடுகிறது. காதல் பாசம் நட்பு என அனைத்தையும் நுகர்பொருளாக்கிவிட்ட உலகமயம் அது உருவாக்கப்பட்ட உருவான நோக்கத்தை திட்டமிட்டே மறைக்கின்றன.அதிலும் குறிப்பாக காதல் என்பது அதன் தன்மையை இழந்து மிக வேக மாக விபச்சார நிலைக்கு தள்ளப்படுகின்றது.

இச்சமுதாயத்தின் உருவாக்கத்தில் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது,பெண்ணினம் தான் தன்னையும் வளர்த்து இந்த சமுதாயத்தையும் வளர்த்து உருவாக்கியது. தாய் வழி சமூகமாக இருந்த மனித இனம் படிப்படியாக தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டது,.ஒன்றாகவே வேட்டைக்கு சென்று வந்த மனித இனத்தில் தாய்மை பெண்ணை தங்குமிடத்தில் இருக்க வைத்தது. அது வரை உடல் பலம் உள்ளிட்ட அனைத்திலும் சமமாக இருந்த பெண் உணவுக்காக ஆணை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றார்,ஆண் தன் பசிக்குப்போக மீதத்தையே பெண்ணுக்கு தந்தான்.

ஓய்வு நேரங்களில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டறிந்தனர்,வழக்கம் போலவே அங்கிருந்த பெண்ணின் ஆளுமை அகற்றப்பட்டு ஆணுடைய ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. தந்தை வழி மாற்றத்துக்குப்பின் பெண் ஆணின் சொத்தாகவே மதிக்கப்படுகின்றார்,அதன் உரிமையாளர் தந்தை,சகோதரன் காதலன் கணவன் மகன் என பல்வேறு அவதாரங்கள் எடுத்துஆணாதிக்கம் தனது பெருமையை நிலை நாட்டுகிறது.

வரைமுறையற்ற பாலுறவினை தனிச்சொத்துரிமையே தகர்த்து ஒருத்திக்கு ஒருவன்(கவனிக்க ஒருவனுக்கு ஒருத்தி அல்ல) என்ற கோட்பாட்டை வைத்து பெண்ணின் மீது வரைமுறையற்ற சுரண்டலை ஏற்படுத்துகிறது.அதை மறுத்து இருவரும் பரஸ்பரம் அன்புடன் வாழும் காதலை பெண்தான் ஏற்படுத்துகிறார்.காதல் உருவானதே ஆணாதிக்கத்திலிருந்து தனது உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே,அதற்கான போராட்டமே. காதலில் பெண் தைச்சொத்தாக மதிக்கப்படுவதில்லை,இருவரும் ஒருவை ஒருவரை மதித்து அனுசரித்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது.

இப்படி தனது துணையை தெரிவு செய்வதற்காக உருவான காதல் ஆனாதிக்கத்தாலும் உலகமயத்தாலும் தன் தன்மையை இழந்து விபச்சாரத்தை நோக்கிய பாதையில் தள்ளப்படுகிறது.

ஒரு ஆணாதிக்க ஆண் தனக்கு மட்டுமே காதலிக்க உரிமை இருப்பதாகவும் அதை பெண் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்பவராகத்தானிருக்க வேண்டுமென எண்ணுகிறான்.அப்பெண் காதலை ஏற்க மறுக்கும் பட்சத்தில் அப்பெண்னை குற்றவாளியாக்குகிறான் ,தான் விருப்பபட்டதால் அப்பொருள் தனக்கே கிடைக்கவேண்டுமென வாதாடுகிறான்.

திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களோ ஆணாதிக்க காதலையே நியாயப்படுத்துகின்றன. மேலும் எறும்பு ஊற கல்லையும் தேய்க்க ஊடகங்கள் சொல்லித்தருகின்றன . முதலில் மாயைகள் சொல்வது போல் காதல் என்பது ஒரு முறை தான் பூக்குமா?காதல் என்பது நிலையானதா? காதலித்து மணந்த கனவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு அல்லது சமுதாயத்தின் பல கீழ்த்த்ரமான செயல்களில் ஈடுபடுகிறான் எனில் அக்காதல் தொடர்ந்து நீடிக்க முடியுமா ? அப்படி நீடித்தால் அது காதலா அல்லது அடிமைத்த்னமா .

ஒரு பெண்ணுக்கு எப்படி துணையை தெரிவு செய்ய உரிமை உல்ளதோ அவ்வாறே தன் உரிமைகள் பாதிக்கப்படும் போது தூக்கிஎறியவும் உரிமை வேண்டும். இப்போது காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் ? காதலிக்கும் வரை ஒரு மாதிரியும்(பெண்ணை மதிப்பதும்) கல்யாணத்துக்கு பிறகு மற்ற பெண்களைப்போல் அடிமையாய் இருப்பதும் தான் இருக்கிறது.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ விரும்பிய யாராவது இறந்து விட்டால் உடனே சாக வேண்டும்.இளவயதில் கணவன் செத்தால் கூட இறுதிவரை காதலுக்கு பெண் கல்லறை கட்டி அதில் விளக்கு பிடிக்கவும் வேண்டும் ,ஆனால் ஆணுக்கு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லை .உரிமைக்கான முதல் படியாக இருந்த காதலை ஆனாதிக்கம் தனக்கேற்றாற்போல் வளைத்து அதனையே அடிமையாக்கி விட்டது

ஏகாதிபத்திய காதலோ தலை கீழ் அதற்கு பேர்தான் காதலே தவிர அது ஒட்டு மொத்த விபச்சாரம் அதற்கு ஒரு பேர் வேண்டும் அது காதலாக சொல்லப்படுகிறது. ஊர் மேய்வதற்கு ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்கிறார்கள் . உண்மையில் ஐடி பீபிஓக்களின் சரிவால் ஊர்மேஞ்சி காதலர்களின் எண்ணிக்கை கண்டிப்பாய் குறையும்.

 

 

———————————————————————————– ————————–

சிறீ ராம் சேனா ,இந்து முன்னணி போன்ற பண்டார பார்ப்பனீயங்கள் மற்றும் மூற்போக்கு பா.ம.க காதலர் தினத்தை எதிர்ப்பதாக கூறுகின்றன,இவர்கள் எதிர்ப்பது ஏகாதிபத்திய காதல்களைஅல்ல .காதலால் வர்ணாசிரமத்தில் சிதைவு ஏற்படும் என்பதே இவர்களின் கவலை.

அந்தகவலை தான் வெறியாக வெளிப்படுகின்றது. நேற்று தின மணியில் வந்த கார்டூனைப்பாருங்கள் இரு கல்லூரிபெண்கள் பேசிக்கொள்கிறார்கள்”எனக்கு யார் காஸ்ட்லியான பரிசு தராங்களோ அவனத்தான் நான் காதலிப்பேன்” விபச்சாரத்தியே காதலாக பார்ப்பன மீடியாக்கள் வர்ணிக்கின்றன.

தெருவில் பெண் ஆனோடு திரிந்தால் கல்யாணம் செய்து வைக்க போவதாய் அறிக்கைவிடும் காலிகள் தான் காதலித்ததால் கல்யாணம் செய்ததால் தீயை வைத்தார்கள் விசத்தை கொடுத்தார்கள், இந்த நாட்டு மக்களுக்கு மறுகாலனியும் பார்ப்பனீயமும் முக்கிய எதிரி என்றால் காதலுக்கும் அதுதான் எதிரி.பார்ப்பனீயமோ பெண்ணை கட்டற்ற வரைமுறையற்ற சுரண்டலுக்கான பொருளாக பெண்ணை மாறக்கோருகிறது ,அதையேத்தான் மறுகாலனியும் கூறுகிறது,இது காதலில் மட்டுமல்ல எந்த ஒரு உரிமைக்கும் சரி பிரச்சினைக்கும் சரி பார்ப்பனீயமும் உலகமயமும் ஒன்றையேதான் கூறுகிறார்கள் . ஏனெனில் உரிமைகளை பெற வேண்டுமெனில் இவை இரண்டையும் எதிர்க்காது தீர்வு இல்லை. காதலர்களே காதலை உரிமையாக கருதுவீர்களானால் போரிடுங்கள் நீங்களும் மக்கள் தானே