Posts Tagged ‘பார்ப்பனீயம்’

ஸ்ரீநி & சாநி – அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

மார்ச் 19, 2010

ஸ்ரீநி & சாநி

அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

ஒரு காலத்தில் ஸ்ரீநித்யானந்தாவிற்க்கு அல்லக்கையாய் இருந்த நம்ம சாரு நிவேதிதா அவரை கண்டபடி திட்டிக்கொண்டு இருக்கிறார்.  அவன் நடிகையின் குண்டியை அவன் நக்கினால் அதற்கு நானா பொறுப்பு? ஆங்கில புத்தகங்களை மொழி பெயர்த்ததற்கு இன்னும் பணம் தர வில்லை. கும்பமேளா யாத்திரைக்கு 1 லட்சம் கொட்டினேன்.  அத்தான் என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே? என்றாடி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் திட்டுவதும்,  புலம்புவதும் உண்மைதானா?  நம்ம சாநி மட்டுமல்ல ஸ்ரீநியின் முன்னாள் அல்லக்கைகள் பலருக்கும்  அவனை திட்ட வேண்டிய இப்போது அவசியமிருக்கிறது.

ஸ்ரீநியின் ஆளுயர போட்டோக்கள் மாட்டப்பட்ட மருத்துவமனைகள், ஹோட்டல்கள் இதர எண்ணற்ற அங்காடிகளின் புனித இடங்களெல்லாம் எல்லாம் வெறுமையாய் காட்சியளிக்கின்றன.  அவை எப்போதும் வெறுமையாய் இருக்கும் எனறு சொல்ல முடியாது.

எனக்குத்தெரிந்து அந்த விபச்சாரியை (ஸ்ரீநி ) வைத்து பணம் சம்பாதித்த மாமாக்கள் சரக்குக்கான மவுசு குறைந்தவுடன் வேறு ஒரு விபச்சாரிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். குமுதம் மாமாவோ அவனை வைத்து தானும் கல்லா கட்டிக்கொண்டு இப்போது சீக்காளி விலைமகளை மாமாப்பயல் தூற்றுவது போல வைதுக்கெதண்டிருக்கிறது.

ஸ்ரீநியை திட்டும் ஊடகங்களாகட்டும் அல்லக்கைகளாகட்டும் உதிர்க்கும் வார்த்தைகள் என்ன?  ஏமாற்றி விட்டார்? புனிதமான காவியுடையை போட்டுக்கொண்டு…….. என்று இழுக்கின்றன. சாநியாகட்டும் மற்ற யாராகட்டும் பார்ப்பன இந்து மதத்துககு எந்த கேடும் வராத தீர்வை கேட்கிறார்கள். ஒன்று அவர் நல்லவராயிருக்க வேண்டும், இல்லையயனில் அவர் தப்பே செய்திருந்தாலும் அவருக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை. (  note this point u’r honourஅவர் நல்லவராயிருந்தால் அது இந்து மதத்தோடு தொடர்புடையது.)

சாநி குமுதம் ரிப்போர்ட்டரில் “”சரசம் சல்லாபம் சாமியார்…..” எனற பெயரில் தொடரினை எழுதி வருகிறார் அதில் 2 வது பாகத்தில் அவர் எழுதுவதைப்பார்க்கும் எல்லோருக்கும் புரியும் சொல்லும் கருத்து “ இதுக்காக அவர் ரொம்ப மோசமில்லை கொஞ்சம் மோசம்”

“”என் மனைவி அவந்திகாவுக்கும் அதே தான் நடந்தது. பழம், அவித்த காய்கறிகள் தவிர எதைச்சாப்பிடடாலும் உடனே அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய நிலையில் இருந்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக அலோபதி,  சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று எந்த வைத்திய முறையிலும் குணமாகவில்லை. இந்த சாமியார் ஏதோ புரியாத கைகளை ஆட்டி நமக்குப்புரியாத வார்த்தகைளைச் சொன்னார்.சரியாகி விட்டது”

அதாவது இன்னமும் ஏதாவது ஒரு மருத்துவமனையிலோ அல்லது லாட்ஜிலேயோ நித்தியின் படத்தை மாட்டி வைத்திருந்தால் என்ன நடக்கும் ? நித்தியின் சிடியினைக்கேட்டு மக்கள் கூட்டம் மொய்க்கும்.  பேர் கொஞ்சம் டேமேஜ் ஆகும். தனக்கு வியாபாரத்திற்காக பயன் பட்டவன் இப்போது கொஞ்சம் தள்ளி வைக்கப்பபட்டிருக்கிறான். அவ்வளவுதான் அதற்காக அவனை முற்றிலும் அவர்கள் வெறுத்து விட்டார்கள் என்று சொல்லமுடியுமா?

இப்போதுகூட நித்தி பாலியல் ரீதியாக சம்பந்தப்படுத்தப்பட்டு வீடியோ வெளியே வந்திருப்பதால் அவனை திட்டுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். இதே பாலியல் அல்லாது வேறு ஏதாவது பிரச்சினையில் சிக்கியிருந்தால் அது ஒரு குற்றமாகவே இனம் காணப்படாது.

மருத்துவர் ருத்ரன் சொன்னது போல் இவன் மீது கோபம் கொள்ள இப்படி ஒரு படம் தேவைப்படுகிறது. எவ்வளவு கேவலமான அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

போலிச்சாமியார் என்று ஒன்று இல்லை, சாமியார் என்பதே போலிதானே அதில் என்ன தனியாக போலி?  நான் கடவுளை நேரடியாக வணங்குகிறேன். அவன் என்னைப் படைத்தது உண்மை என்றால் நான் பேசுவது அவனுக்குப் புரிய வேண்டுமா இல்லையா?  அப்படிப்புரியும் போது நடுவில் எதற்கு ஒரு புரோக்கர் ? நான் சொன்னால் கடவுள் கேட்க மாட்டானா? அவனுக்கு புரோக்கர் தேவைப்படுகிறதா?  அவன் சொன்னால் தான் ஆண்டவனுக்கு புரியுமா ?   நான் சொன்னால் என்னைப்படைத்தவனுக்கு ஏன் புரியாது ?  எல்லாவற்றையும் அவன்தான் படைத்தானென்றால் , எல்லாவற்றுக்கும் அவன் சிரத்தை தேவையயனில்  ஜெயேந்திரன் சங்கரராமனை கொன்றதற்கும், தேவநாதனின் பாலியல் பூசைக்கும், நித்திக்குட்டியின் “ஆன்மீக” ஆராய்ச்சிக்கும் பரம்பொருளின் சிரத்தை தேவைப்பட்டதா ? பக்தனுக்கு இக்கேள்விகள் எப்போதுமே எழுவதில்லை. எழுகின்றவர்கள் பக்தர்களாக நீடிப்பதுமில்லை. இல்லாத ஒருவனை வைத்து  மேற்கொள்ளப்படும் மாய்மலங்கள் தான் மதம்.

மதம் என்ற கஞ்சா செடியும்

ஆன்மீகம் என்ற ஹெராயினும்

இறைவன் இருக்கின்றான். எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவன் தான் இறுதித்தீர்வு. மக்கள் நல்வழிகளில் செல்வதில்லை உலகம் கண்டிப்பாக அழியும் நம்பை கல்கி பகவானோ, அல்லாவோ, இயேசுவோ   அல்லது ………….. காப்பாற்றுவார்கள்”

மக்களுடைய பொருளாதார, சமூகப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? அதைத்தீர்கக என்ன வழி? உழைப்பவர்கள் ஒருசாரராகவும் அதைவைத்து பிழைப்பவர்கள் ஒரு சாரராகவும் இருக்கிறார்கள்.  பொருளாதார ரீதியாக பலமானவர்கள் தங்களின் சுகங்கள் பறிபோகா வண்ணம் சட்டங்களைப்படைக்கிறார்கள். அவர்களின் சுகங்கள்  உழைப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றன. அதை எப்படி மாற்றியமைப்பது?  இல்லை அதை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் அது இறைவன் கொடுத்தது. யார் இறைவன் தெரியுமா ? உன்னையும் என்னையும் ஏன் இந்த உலகத்தையும் படைத்தான். இப்பூவுலகில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் அவன்தான் காரணம்.

உனக்கென்று ஆண்டவன் என்ன கொடுத்தானோ அதுதான் அதைத்தாண்டி நீ எதையும் பெற முடியாது. உன்னுடைய குறைகளுக்காக ஆணடவனை வணங்கு, தொழு,  கண்ணீர் விடு. கருணைக்காட்டுவான். மதமென்ற நிறுவனம்  பல கடவுள்களை பெற்றது.  மக்களின் கலாச்சாரங்களுக்கேற்றபடி பல தேவர்கள் பிறந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியதாக சொல்லப்பட்ட தேவர்கள் பின்னாளில் ஆளும் வர்க்கத்தின் தூதர்களானார்கள். மக்களின் எல்லாத்தேவைகளுக்கும் கடவுளும் மதமும் காரணமாக அறியப்பட்டன. அவைகளோடு பின்னி பிணைக்கப்பட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் கேள்,  கருணையோடு கேள், கெஞ்சிக்கேள், உன்னை வருத்திக்கேள். ஆண்டவன் தருவார்.  ஆண்டவனைப்பெற்ற அதிகாரம்  தன்னைக்காக்க  மதமென்னும் கஞ்சாவை நிறுவனமாக்கி மெல்ல மெல்லக் கொடுத்தது.

உனக்காக நீ போராடுவது தவறு அது ஆண்டவனை கோபம் கொள்ளச்செய்யும், போராடுவது ஆண்டவனை மட்டுமா கோபம் கொள்ளச்செய்யும் ,அதிகாரத்தையும் கூட அல்லவா ? ஆண்டவனிடம் நீ கேள்வி கேட்க முடியாது. அதிகாரத்தையும் நீ கேள்வி கேட்க முடியாது. அவராவது ஏதாவது பார்த்துக்கொடுப்பார். அதுவும்  முன்னோர்கள் சரியில்லை யயனில் அதுவும் கிடைக்காது. கேள்விக்கு அப்பாற்பட்டதாய் மதம் விளங்கியது.

இந்த மாடர்ன் உலகில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறக்க புது வழிமுறை தேவைப்படுகிறது. அறிவுஜீவிகள், மேதாவிகள், தின்று செரிக்காத உடல்கள் எல்லாவற்றுக்கும் அமைதிதான் பற்றாக்குறை. அவற்றைத்தேடி அலைகிறார்கள். சாதாரண மனிதனும் பொருளாதார பிரச்சினை ஆனாலும் சரி சமூகபிரச்சினை ஆனாலும் சரி அதற்கும் அமைதிதான் பற்றாக்குறை என நினைக்கிறான்/ நினைக்கவைக்கப்படுகிறான்.

மதத்தில் பாடப்பட்ட அதே ராகங்கள் இங்கேயும் ஒலிக்கின்றன.  ஆனால் வேறு வித்யாசமான வழிகளில்….. சமூகத்திலிருந்நு பிரிந்து வாழ்,  சமூகத்தைப்பற்றி நினைக்காதே .ஆனால் ஒரே தீர்வுதான் போராடாதே எதற்கும் எங்கேயும். எல்லாம் கர்ம வினை தான் காரணம். போதை என்றால் கஞ்சா மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தேவைக்கேற்றபடி அது ஹெராயின், பிரவுன் சுகர் என்றபடி போய்க்கொண்டே இருக்கிறது. பார்ப்பனீயத்தை ஒழிப்பதுதான் என் குறிக்கோள் என்று  எந்த சாமியாராவது சொல்லியிருக்கிறாரா?

இல்லை எந்த ஆனந்தமாவது அழிந்து போன விவசாயத்ததை, சிதைக்கபடும் தொழில்களை,  உறிஞ்சப்படும் நீர் வளத்தை பற்றி அதற்காக போராடுவதைப்பற்றி பேசியிருக்கிறார்களா?  பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் எல்லாவற்றையும் பேசுவார்கள் ஆனால் அதற்கு நடுவில் வாழும் வாழ்க்கையின் போராட்டங்களை பற்றி ஏன் பேசுவதில்லை ? அரிசி,  பருப்பு,  மிளகாய் என தினமும் விலைவாசி அவர்கள் சொல்கிறார்களே அந்த அண்ட சராசரத்தயைம் தாண்டி போகிறதே அதை குறைக்க என்ன வழி?

ஏன் பேசவில்லை என்பதல்ல நாம் தப்பித்தவறி கூட பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைதிதான் வேண்டுமானால் அது மயானத்திலும் கிடைக்கும். யாருக்குத்தான் அமைதியின் மீது காதலில்லை? அந்த அமைதியை பெற அதிகாரத்தை கைப்பற்றியாக வேண்டும். அதற்கு அமைதியாய் இருக்க முடியுமா என்ன?

அமைதிதான் எல்லாவற்றுக்கும் தீர்வென்பவர்கள் அமைதியாயிருப்பதில்லை. அவர்கள் அமைதியை ஜட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார்கள், சிறு குழந்தைகளின் பேண்ட்களை பிடித்து இழுக்கிறார்கள், அவர்கள்தான் இசுரேலை புனித பூமியன்கிறார்கள், ராமனுக்கு கோயிலைக்கட்டு என்கிறார்கள், செத்த மாட்டுக்காக 5 தலித்துக்களை கொன்றார்கள், அவர்கள்தான் சாட்சாத் பெருமாள் கோயிலுக்குள்ளே புகுந்து கொலையும் செய்கிறார்கள்.

மறுபடியும் சாணியிடம் போவோம்

சாநி போட்டிருக்கும் அந்த சாணியைப்பார்ப்போம்  ” எனக்குத் தெரிந்த பெண். கையில் மூன்று மாத குழந்தை  . நடு இரவில் அவரை அடித்து உதைத்து கணவன் வீட்டை விட்டு விரட்டு விட்டான். குளிர் காலம். நியூயார்க் நகரம். பாஸ்போர்ட் கணவன் கையில். கையில் காசு இல்லை. ஒரு தோழி தான் உ துணை செய்திருக்கிறார். என்னிடம் அந்தப்பெண் இதைச் சொன்ன போது ஒரு விசயம் ஆச்சர்யமாக இருந்தது. அவள் கணவன் ஐ.ஐ.டியில் தங்கப்பதக்கம் பெற்றவன்.இப்போது அந்த மனிதன் செய்த பாதகச்செயலுக்காக அவன் வாங்கிய தங்கப்பதக்கம் போலியானது என்று சொல்வீர்களா? அதேதான் இந்தச் சாமியாருக்கும் பொருந்தும். இவருடைய சல்லாபங்களை பார்த்து விட்டு “இவர் ஒரு பிராடு”” என்று சொல்லும் போது இதை யோசிக்க வேண்டும். பதஞ்சலி முனிவரிடமிருந்து யோகத்தையும், புத்தனிடமிருந்து ஞானத்தையும் கடன் வாங்கி, அதைத் தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர் நித்யானந்தா.’

அவன் கெட்டவன்தான், ஆனா அவ்வளவு கெட்டவன் கிடையாது. இது தான் ஸ்ரீநிக்கு சாநி போட்ட ஸ்டேட்மெண்ட்.  சாநியை ஸ்ரீநி வென்ற இடமென்று ஒரு கதையைச்சொன்னதாக இங்கு எழுதியிருக்கிறார். சாநியைப்பொறுத்த வரை நித்யானந்தா பொம்பளை விசயத்தை தவிர சாமியார்தான். சாமியார் செய்த தப்பு அவ்வளவு தான். இதற்காக சாமியாரே இல்லைன்னு சொல்ல முடியுமா? ஸ்ரீநியின் நீலப்படம் வந்த ஒரு நாளுக்குள்ளேயே தன் தளத்தில் அவரை திட்ட ஆரம்பித்திருந்தார். திட்டாமல் இருந்திருந்தால் “ஏன் அமைதியாய் இருக்கிறாய் உனக்கும் அவனுக்கும் வேறு தொடர்பு இருக்கிறதா?”  போன்ற கேள்விகள் வரும். தன் இமேஜ் சரிவதை திட்டிக் காப்பாற்றினார்.

ஆனால் அந்த மனசு கேக்குமா? ஆண்டவன் ஒரே மனசை படைச்சுட்டானே. அவர் நினைத்தாலும் அதைமீறி அவர் மனது அவர் சாமியார்தான், எல்லாம் அறிந்தவர் தானென சான்றிதழ் தருகிறது. பாட்சா படத்தில் ஒரு டயலாக் “அய்யா மனசில வர முதல் காதல்ங்குறது முள்ளு மாரி அவங்களை குத்திகிட்டே இருக்கும்”

அப்படித்தான் ஸ்ரீநி மீதான சாநியின் காதல் அவரே நினைத்தாலும் விட மறுக்கிறது போலும். போதையின் சுவை மீண்டும் அவரையறியாமலே கேட்கிறது. ஆமா இவரையயல்லாம்  பெரியாரியவாதின்னு போடுகின்ற மாமாப் பத்திரிக்கைகளை எதைக்கொண்டு அடிப்பது?

அமைதியாய் இருக்கக்கூடாத நாம் அமைதியாயிருக்கிறோம். நம் உரிமைகள் ஒவவொன்றாய் பறிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. விதர்பாவில் இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்செத்துப்போய் விட்டார்கள்.

ஒரே வழிதான் மாற்று. சமூகத்தை சார்ந்திருப்போம். மக்களை சார்ந்திருப்போம். மக்களைப்படிப்போம் , மக்களை கற்போம், மக்களிடம் சென்று கற்பிப்போம். அது ஒன்றுதான் உண்மையான ஆனந்தத்தை பெறும் வழி. போராட்டம் ஒன்று தான்  சுயமரியாதையைத் தரும். போராட்டம் ஒன்று தான் மகிழ்ச்சியைத்தரும்.

அன்றாடம் பேருந்துகளில், புகைவண்டிகளில் , தெருக்களில் “அன்பார்ந்த உழைக்கும் மக்களே ” என ஆரம்பிக்கும் நக்சல்பாரி தோழரைக் கேளுங்கள் எது ஆனந்தம் என்று, தில்லையிலே தமிழ் முழங்க தம் ரத்தத்ததை சிந்திய தோழர்களைக் கேளுங்கள்,  தண்டகாரண்யாவிலே அந்நிய ஆதிக்கத்திற்கெதிராக ஆயுதமேந்தும் பழங்குடின மக்களைக் கேளுங்கள் எது மகிழச்சி,  எது ஆனந்தம் என்று.

அதை விட்டுவிட்டு இன்னும் கும்மிருட்டில் குண்டலினியை நீங்கள் எழுப்பிக்கொண்டிருந்தால் நீங்கள் மனிதத்தன்மையை மட்டுமல்ல மானத்தையும் இழந்து விட்டீர்கள் என்று பொருள்.

நித்தியிடம் ஆனந்தம் தேடி சென்றவர்களாகட்டும், இனி அவனிடம் பொறுமையாய் காலம் கனிந்தபின் தேடப்போகும் நபர்களாகட்டும், வேறு யாரிடமாவது ஆனந்தம் என்ற ஹெராயினை , பிரவுன் சுகரை  சுகிப்பவர்ளாகட்டும் நம்ம சாநி உட்பட,

உங்கள் காதுகளில் கேட்கிறதா புரட்சிக்கவியின் எழுத்தில் எமது குரல்பாரடா உனது மானிடப் பரப்பை” “காடுகளைந்தோம்”

related

0.சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
1.ஆன்மீகத்தேடல்கள்
  • 2.வர்க்கம்
    ஒன்றே பதில் சொல்லும்
  • வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

    திசெம்பர் 25, 2009

    வெண்மணி தியாகிகள் தினம்

     

     

     

     

     

    ஆறிடுமா
    இல்லை அணைந்திடுமா
    உங்கள் மேலிட்ட தீ

    எப்படி எரிந்து போயிருக்கும்
    உங்கள் உடல்கள்
    அடங்கக்கூடியவையா 
    உங்கள் குரல்கள்
    மறந்துவிடுமா
    உங்கள் நினைவுகள்…….

    ஆண்டுகள் பல ஆனாலும்
    சாதியின் கொடுங்கரங்கள்
    வர்க்கத்தோடு பிண்ணிப்பிணைந்து
    படர்ந்து கொண்டிருக்கின்றன

    இல்லை விடமாட்டோம்
    அவை அழிய விடமாட்டோம்
    தீயின் நாக்குகள்
    உங்களின் மேல் சுட்டதை விட
    இன்னும் அதிகமாய்
    எங்களுள் கனன்று கொண்டிருக்கிறது

    வெண்மணி தியாகிகளே
    உங்கள் நினைவுகளை சுமந்து
    வர்க்கப்போரை வாளாய் ஏந்தி
    களத்தில் நிற்கிறோம்

    முதலாளித்துவத்தை, நிலப்பிரபுத்துவத்தை
    பார்ப்பனீயத்தை,
    மறுகாலனியை வீழ்த்தாது
    வீழாது எங்கள் தலை.

     

     

    பலியான வெண்மணித் தியாகிகள்

    1. சுந்தரம் (45)
    2. சரோஜா(12)
    3. மாதாம்பாள்(25)
    4. தங்கையன் (5)
    5. பாப்பா (35)
    6. சந்திரா (12)
    7. ஆசைத் தம்பி (10)
    8. வாசுகி (3)
    9. சின்னப்பிள்ளை (28)
    10. கருணாநிதி(12)
    11. வாசுகி (5)
    12. குஞ்சம்பாள் (35)
    13. பூமயில் (16)
    14. கருப்பாயி (35)
    15. ராஞ்சியம்மாள் (16)
    16. தாமோதரன் (1)
    17. ஜெயம் (10)
    18. கனகம்மாள் (25)
    19. ராஜேந்திரன் (7)
    20. சுப்பன் (70)
    21. குப்பம்மாள் (35)
    22. பாக்கியம் (35)
    23. ஜோதி (10)
    24. ரத்தினம் (35)
    25. குருசாமி (15)
    26. நடராசன் (5)
    27. வீரம்மாள் (25)
    28. பட்டு (46)
    29. சண்முகம் (13)
    30. முருகன் (40)
    31. ஆச்சியம்மாள் (30)
    32. நடராஜன் (10)
    33. ஜெயம் (6)
    34. செல்வி (3)
    35. கருப்பாயி (50)
    36. சேது (26)
    37. நடராசன் (6)
    38. அஞ்சலை (45)
    39. ஆண்டாள் (20)
    40. சீனிவாசன் (40)
    41. காவிரி (50)
    42. வேதவள்ளி (10)
    43. குணசேகரன் (1)
    44. ராணி (4)

     வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

     

    தொடர்புடைய பதிவுகள்
     
     
    1.வெண்மணிச் சரிதம்
    2.மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி!
     

    பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

    ஓகஸ்ட் 26, 2009

    பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி
    அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

    பழ.கருப்பையா. மிகச்சிறந்த கட்டுரையாளர். எந்த ஒரு விசயத்தையும் தேன் போல அருமையாக எழுதுவார். அவரின் சில கட்டுரைகள் நந்தனில் கூட வந்ததாக கேள்வி. கடந்த புதன் கிழமை பார்ப்பன பாதாளச் சாக்கடையின் புழுவாக தன்னை வெளிக்காட்டிய போது பத்திரிக்கை உலகம் அவரை உச்சி முகர்ந்திருக்கும். அப்படி ஒரு சேவை பார்ப்பனிய பாதத்துக்கு.

    கருப்பையா எழுதிய கட்டுரை ” ஏன் இந்த நோய்ச்சிந்தனை?” ஆம் அந்தக் கட்டுரைதான் அவரின் பார்ப்பன நோயை வெளியே எடுத்துக்காட்டியிருக்கிறது. கருணாநிதி சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவின் போது  சொன்ன வார்த்தைகள் தினமணியியின் பாதத்தில்  முள்ளாக குத்த  மணியின் முக்கிய  விருந்தாளியான அவருக்கோ அது இதயத்தையே குத்தி விட்டதாம். முன்னேறுவதற்கு சாதி தடை இல்லை அது ஒரு கற்பனை, பிழைப்புவாதமென்கிறார்.

    கருணாநிதி ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பது தெரிந்த விசயமே. ஆனால் அவர் பிழைப்புவாதியென்பதை பார்ப்பனரை விமர்சனம் செய்தவுடன் தான் புரிந்து கொண்டு வெம்பியிருக்கிறார் அன்ணன் தினமணிக்கு தட்டாத தம்பி. சமீப காலமாக தின மணிக்கு தமிழர்கள் மீதும் திராவிட இயக்கம் மீதும் அளவில்லா பற்று, அய்ய்யோ திராவிட இயக்கம், தமிழகம் இப்படி சீரழிகிறதே என ஒப்பாரி வைத்து, தான் நினைப்பதை தன் விருந்தாளிகள் (நெடுமாறன், பழ.கருப்பையா, நடராஜ், விஜயன்,)
    மூலம் பொதுக்கருத்தாக்க முனைகிறது.

    சர்வக்ஞர்  பிற்படுத்த சாதியை சேர்ந்தவரென்பதால் புகழ் பெற முடியவில்லை என்றார் கருணாநிதி. உடனே பார்ப்பன பதர்கள் பொங்கியெழ அதற்கு தடை போட்டு நானே இறங்குகிறேன் என இறங்கி விட்டார் கருப்பையா . அவரின் வாதமெல்லாம் உதாரணமெல்லாம் எதற்கு ஏன் எல்லாம் ஒன்றை  மட்டுமே சொல்லுகின்றன ஒன்றை நீரூபிக்க “சாதி வேறுபாடில்லை” என்ற பொய்யை மெய்யாக்க.  வள்ளுவன் என்ன மேல் சாதியா அவன் முன்னேற புகழ்பெற எந்த சாதி தடையாய் இருந்தது?

    தமிழகத்தை அதன் போக்கை மாற்றிய அன்ணா முற்பட்ட சாதியா?  எல்லாவற்றையும் விட கருணாநிதி என்ன மேல் சாதியா கீழ் சாதி தானே, அவர் 5 முறைமுதல்வராக வில்லை அவரை எந்த சாதி தடுத்தது?  இத்தனைக்கும் அவர் சாதி சிறுபான்மை. பாரதி பார்ப்பான் என்பதால் மட்டும் புகழ்பெறவில்லை அவனுடைய அறிவே அவனின் புகழுக்கு காரணம் அப்படிப்பார்த்தால் பாரதிதாசன் கூட பிற்பட்ட சாதிதானே?

    உயர் சாதியான பார்ப்பனர்கள் தொன்று தொட்டு வழிபட்டு பின்பற்ற அதை எழுதியவர்களின் சாதி தடுக்க வில்லையே? திருமூலர் கூட இடையன் தானே அவர் புகழடையவில்லையா? ஆக சாதி எப்போதும் ஒருவன் முன்னேர தடையாய் இல்லை.

    மொத்தமாய் அவர் சொல்லவருவது பார்ப்பனர்கள் சாதி பார்ப்பதில்லை கீழ் சாதிக்காரன் எழுதிய புத்தகத்தை தனது வேத நூலாக பயன் படுத்துகிறார்கள். ஆனால் கீழ் சாதியிலிருந்து போன கருணாநிதி போன்றவர்கள் தான் சாதியை தினம் வளர்க்கிறார்கள். சாதியை கடந்த சமுதாயத்தில் சாதிப்பிரச்சினை வேண்டுமென்றே புகுத்தப்படுகின்றது.

    இது சாதி இல்லாத சமுதாயமா?

    கேட்கும் போது இனிப்பாகத்தான் இருக்கிறது? ஆனால் உண்மைகள் காதில் அறைந்து சொல்கின்றன , உறைக்கவைக்கின்றன. பாரதி பார்ப்பனன் என்பதனைத்தவிர எதனால் புகழ்பெற்றான்?. மதிமாறன்  எழுதிய பாரதிய ஜனதா பார்ட்டியிலும் தோழர் மருதையன் எழுதிய அது குறித்த கட்டுரையிலும் தெளிவாய் கோடிட்டு காட்டினார்கள். பறையர்கள் இந்துக்களை அடித்துவிட்டார்களே ஏன் இன்னும் சும்மா இருக்கிறீர்கள் என இந்துக்களை திமிறி எழச்சொல்கிறார் பாரதி. பறையர்களுக்கும் பூணூல் அணிவித்துவிட்டு  அவர்களை இந்துக்களை கொண்டு தாக்க  சொன்ன ஒரு கிரிமினல் பேர்வழி யாரால் தூக்கிப்பிடிக்கப்படுகிறான் பார்ப்பனீய கருத்துக்களை தூக்கிப்பிடிப்பவர்களைத் தவிர?

    பிறப்புச்சாதிக்குண்டான தொழிலை செய்யவேண்டுமென்று சட்டம் போட்ட ராஜாஜி என்ற சாதி வெறி பிடித்த அயோக்கியன் மூதறிஞர் எப்படி ஆனார் தன் பிறப்புத்தகுதியைத்தவிர?  ஏன் நம்முடைய சங்கராச்சாரியை எடுத்துக்கொள்ளுங்கள் சொர்ணமால்யாவோடு கும்மாளம், பெண் எழுத்தாளரை மானபங்க படுத்த முயற்சி, கொலை வழக்கில் முக்கியபுள்ளி என இத்தனை கேடித்தனங்கள் இருந்தாலும்  அவன் ஜெகத் குருவாக நீடிக்க நீட்டிக்க வைப்பது எது அந்த பூணூலைத் தவிர.

    மற்ற சாதியில் பிறந்த யாரும் குற்றமே செய்யவில்லையா எனலாம் அப்படி சொல்லவில்லை எல்லா சாதியிலும் அயோக்கியன் இருக்கலாம் . ஆனால் அயோக்கியனாய் இருந்தாலும் பார்ப்பனன் என்பதற்காகவே மேற்கண்ட “தலைவர்களெல்லாம்” புகழப்பட்டார்கள் , புகழப்படவுமிருக்கிறார்கள் என்பது உண்மையா பொய்யா? அதற்கு பார்ப்பன சமூகமே முன் வந்து ஆதரவளிப்பதும் பொய்யா?

    சட்டசபையில் நான் பாப்பாத்தி என சூளுரைத்த செயலலிதாவை கண்டித்ததா தினமணி, மடத்தைவிட்டு ஓடிப்போன காமேஸ்வரனின் லீலைகளை விமர்சித்ததா தினமணி, சர்வக்ஞர் விழாவில் பேசிய கருணநிதிக்கு தனது அல்லக்கை மூலம் விமர்சனம் செய்யும் திணமணி இப்படி செயாவை சாதி ரீதியாக ஒப்பிட்டு எழுதுமா ஒருவேளை(!!!!!!!) வந்தாலும் நம் கருப்பையாதான்  எழுதிவிடுவாரா என்ன?

    என்ன சாதி தடை இல்லையா? நிகழ்காலம் கொஞ்சமல்ல ரொம்பவே கசக்கிறது. அகற்றப்படாத ரெட்டைக்குவளைகள், ஒதுக்கப்படும்குடியிருப்புக்கள்,மறுக்கப்படும் ஆலய வழிபாட்டு உரிமை இப்படி எத்தனையோ இருக்க சாதி ஒரு தடை இல்லை என்கிறது பார்ப்பனீயம், கருப்பு பார்ப்பனன் பழ.கருப்பையாவோடு கும்மியடித்தவாறே.

    வள்ளுவனுக்கு குறுக்கே நிற்காத சாதி எதற்கு நந்தனை மறித்து எரித்தது?  வேதம் எழுத தடை விதிக்காத சாதி ஏன் ஏகலைவன் விரலை வெட்டியது.  திருமூலரின் புகழை தடுக்காத  சாதி நிகழ் காலத்தில்   ஆறுமுக சாமியை எதற்கு  அடித்து வெறியாட்டம் போட்டது?

    அன்ணாதுரையும் கருணாநிதியும் முதல்வரானது சாதி இறந்ததற்கு அடையாளமாம். அப்படியாயின் கயர்லாஞ்சி பாலியல் கொலைகளும் , பாப்பாப்பட்டி கீரிப்பட்டி கொடுமைகளும் எதை உணர்த்துகின்றன?தமிழ் நடராசனின் காதில் விழாமலிருக்க ஊளையிட்ட தீட்சிதர்களின் ஆணவம் எதை காட்டுகிறது? ஒரு வேளை இவையெல்லாம் மாயையாக தெரிகிறதா தினமணிக்கும் கருப்பையாவுக்கும்.

    மாயையாகத்தெரியலாம் ஆனால் பாதிக்கப்படபோவது பாதிக்கப்பட்டது உழைக்கும் மக்களல்லவா?பூணூலை மாட்டிக்கொண்டு டேய் சூத்திரப்பசங்களா நான் மேல் சாதி என்று  கிளம்பும் பார்ப்பனத்திமிர்தான்  திராவிட சித்தாந்தம் சீரழிவதை பற்றிகவலைப்படுகின்றது. அதுவே ஒப்பாரியும் வைக்கிறது எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று.

    இளையராசா மேல்  தாழ்த்தப்பட்டவரென்பதால் சொல்கிறது ஏன் அவர் முன்னேறிவரலை திறமை இருந்தா நீ வா ! உன்னை எது தடுக்குது? இளையராசா கும்பாபிசேகத்துக்கு காசுகொடுத்தாலும் உள்ளே வரவிடாமல் எது தடுத்ததோ? எது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வழக்குப்போடு முடக்கியதோ,  மகாமகத்தின் போது தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை  எது மாற்றியதோ அதுதான் பார்ப்பானை பார்ப்பானவே நீட்டிக்கவும் வைக்கிறது  தாழ்த்தப்படவனை பிற்படுத்தப்பட்டவனை அப்படியே இருக்கச்செய்கிறது.

    என்னதான் பணக்காரனாயிருந்தாலும் கருவறைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை பிறப்புதானே தீர்மானிக்கிறது. கோயிலை அரசுவசமாக்கிக்கொண்டால் சாமிக்கு நைவேத்தியம் பண்ணமுடியுமா  என கவலைப்படும் தினமணி  அந்தக்கோயிலுக்கு தன் உழைப்பை பொருளைகொடுத்தவனுக்கு கருவறையில் நுழைய அதிகாரம் இல்லை என்கிறது .

    பழ.கருப்பையா மூலம் தனது பார்ப்பன அரிப்பை தீர்த்துக்கொண்ட தினமணிக்கு  நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும்  அஞ்சத  நெறிகளும் எதற்காக யாருடைய தேவைக்காக?  எதற்கு? பூணுலுக்கு மேக்கப் போடுவதைத் தவிர.

     

     

    நான் கடவுள் – சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்

    மார்ச் 9, 2009

    நான் கடவுள்-சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்

    kadavul-low1

    சுமார் மூன்றாண்டுகளாக இழுத்து இழுத்து கடைசியாக பிணந்தின்னிகளின் கோவணத்தை காட்டாது மாடர்ன் உலகத்திலே ஜட்டியை மாட்டி விட்டு  “அட நம்புங்கப்பா இவன் நொம்ப நல்லவன், அவன் என்ன பண்ணுனான் இந்த உலகத்த விட அவனுக்கு கடவுள் உலகம்தான் புடிச்சிருக்கு”  என்கிறார் பாலா.இனி கதைக்குள் செல்வோம்.

    தொடர்ந்து தன் வீட்டில் பல பேர் செத்து போவதால் ஜோசியக்காரனிடம் போய் குறி கேட்கிறார் ஒருவர்.அதற்கு அந்த ஜோசியனோ உன் பையன் தான் இதற்கு காரணம். அவனை விட்டு பிரிந்து வாழ்வது மட்டுமே இதற்கு தீர்வு என்கிறார்.உடனே தன் மகனை காசியில் கொண்டு போய் விட்டு விட்டு பல ஆண்டுகளுக்குப்பின்  மகனை பார்க்க திரும்புகிறார்.வந்தவருக்கோ மிக்க அதிர்ச்சி தன் மகன் அகோரியாகி இருக்கிறான்.அவனின் குருவிடம் கெஞ்சி கூத்தாடி தன் ஊருக்கே அழைத்து வருகிறான்.

    குருவோ அகோரிக்கு சொந்தம் பந்தம் இருக்க கூடாது நீபோய்விட்டு ஏதும் இல்லாது வா என்க, எல்லாவற்றையும் இல்லாததாக்குவதற்கு அப்பனுடன் செல்கிறான்  ருத்ரன் அகோரி.

    யார் அகோரி : இவர்கள் முற்று துறந்தவர்கள்,முக்காலமும் அறிந்தவர்கள்,ஒருவருக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதையா என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அதே போல் ஒருவரை பார்த்தவுடனே அவனின் கர்ம பாவங்களை அறிந்து விடுவார்கள்,தேவையெனில் தீர்ப்பும் வழங்குவார்கள்

    தன் வீட்டுக்கு வரும் அகோரி ருத்ரன் எதுவுமே சாப்பிடாது கஞ்சா குடித்த படி வீட்டில் உள்ளவர்களை ஆபாசமாக திட்டிகொண்டும் இருக்கின்றான்.ஆத்தாளிடம் சன்டை போட்டுக்கொண்டு தான் சுயம்பு எனக்கூறிக்கொண்டு கஞ்சா இருக்கும் மலைதேடி சென்று அங்கே குடிகொள்கிறான்,மற்ற சாமியார்களெல்லாம் கஞ்சா அடித்து விட்டு படித்து விட இவன் மட்டும் கஞ்சா அடித்து தியானம் செய்து கொண்டிருக்கின்றான்.இங்கு இயக்குனர் சொல்லுகிறார் ஒரு தத்துவத்தை கஞ்சா போதைப்பொருளல்ல அது கடவுளை வழிபடுவதற்கான ஒரு வழி, அவ்வழியை மற்றவர்கள் பயன் படுத்துவது குற்றமென்றாலும் சாமியார்கள் பயன்படுத்துவது குற்றமாகாது.ஏனினில்  ஒரு தவறு உலக நன்மைக்காக பயன் படுத்தும் போது அது குற்றமாகாது.

    இதோடு பிச்சைக்காரர்காளாக்கப்பாட்ட உடல் ஊனமுற்றோர்  வாழ்வின் கொடுமையும் சேர்கிறது ஆனால் அவர்களின் இன்னல்களோடு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவே சித்தரிக்கப்படுகின்றது,ஆனால் கண்தெரியாத பெண் கடத்தி கொண்டுவரப்ப்ட்டதுமே நிலமை மேலும் சீரியசாகிறது,ஊனமுற்றோரை தன் கட்டுப்பாட்டில் வைத்தி  இருக்கும் தாண்டவனுக்கு இந்த கண் தெரியாத பெண்ணை பாலியல் தொழிலுக்கு அனுப்ப மாமா ஒருவன் ஆலோசனை கூற  அப்பெண்ணை தூக்கி கொண்டுபோவதற்காக மாமா வருகிறார் பிறகு வேறென்ன  நம்ம ரஜினி படம் போலவே கதானாயகி கற்புக்கு எவ்வித பாதிப்பும் வராது  ருத்ரன் காப்பாறுகிறான் .

    ஒரு பத்து பேரை அடித்து விட்டு வெளியே வரும் ருத்ரன் அந்த விபச்சார புரோக்கரை பாத்தவுடனே தன்னுடைய முக்கால அறிவால் அவன் தீய சக்தி என்பதை அறிந்து மக்கள் முன்னிலையில் அடித்து கொன்றுவிடுகிறான்.தக்க சாட்சி இல்லாதால் வழக்காடுமன்றம் அவனை விடுவிக்கிறது.

    மீண்டும் கதாநாயகிக்கு தாண்டவன் மூலம் மண்டை உடைக்கப்பட்டு கைகால்கள் நொறுக்கப்படுகின்றது. கதானாயகி தவழ்ந்து   தவழ்ந்து  மலை மீது வந்து அகோரி ருத்ரனிடம் கேட்கிறாள் “சாமி என்ன கொன்னுடுங்க எங்களால இந்த வாழ்க்கய வாழ முடியல என்ன விபச்சாரியாக்கி விடுவாங்க”.

     இந்து தர்மத்தின் படி ஒரு பெண் கற்பை இழந்து வாழ்வதை விட சாவது தான் உசித மானது என்பதனால்  அகோரி கதாநாயகிக்கு மோட்சம் கொடுத்து விட்டு காசிக்கு செல்கிறார்.
    ——————————————————————————-
    படம் இவ்வளவுதான் “நான்கடவுள்”  இது கடவுள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதால்  கொஞ்சம் லேட்டாகவே அகோரி உட்பட அனைவரின் பாத்திரமும் புரிகிறது.அப்புறம் தான் விளங்கியது  எவனோ ஒருவன்,ரஜினி விஜய் மசாலா பாணியில் இது ஒரு ஆன்மீகப்படம்.கதானாயகியின் சேயையை தொட்டால் பறந்து பறந்து கதானாயகன் அடிப்பான் இங்கேயும் மெய்யாலும் தாவிதாவி அடிக்கிறான்.அங்கேயும் கற்பு காக்கப்படுகிறது,இங்கேயும் கற்புகாக்கப்படுகிறது.
    அந்த கதாநாயகன் தம் கொஞ்சம் தண்ணீ,இவனோ எப்போதும் கஞ்சா என்ன இருந்தாலும் ரெண்டு பேரு கற்ப காப்பாத்திட்டாங்கல்ல.

    கல்கி பகவான் லோகத்த காக்க வந்துட்டார்.


    ஆனால் உண்மையில் அகோரி எனப்படும் காட்டுமிரண்டிகளின் வாழ்வு முக்திமட்டும் தருவதல்ல,அவர்களின் வேலையே பிணத்தை எரிப்பது காசு வாங்கிகொண்டு அப்பிணம் சொர்க்கத்துக்காக  செல்ல விசா வங்கிதருவது தான்,பிணத்தை எரித்தவுடன் அந்த மண்ட ஓட்டினை உடைத்து அதையே தட்ட்டாக்கி வைத்து சாப்பிடுவார்கள்.பிணத்தின் சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு அம்மணமாய் திரிவார்கள்.

    அப்புறம் தான் முக்கிய வேலையையே தொடங்கும் ஆத்தங்கரையோரத்தி தியானம் செய்த படி காத்திருப்பார்கள். எதாவது பிணம் புனித கங்கையில் மிதந்து வருமல்லவா அதை எடுத்து தக்க மந்திரங்கள் செய்து  புனிதமாக்கி எந்த பகுதி யாருக்கு வேண்டுமோ அவர்கள் வெட்டி தின்னுவார்கள்.சிலர் அதை தீயில் சுட்டும் தின்கிறார்கள்.

    அப்படி தின்னும் பிணந்தின்னிகளின் ஒருவன் சொல்லுகிறான் “எனக்கு கோழிக்கும் மனிதனுக்கும் வித்யாசம் தெரியவில்லை”

     

    இந்த அகோரிகளின் வேலையைத்தான் பாசக ஆர் எஸ் எஸ் கும்பல் நாடெங்கும் செய்து கொண்டு வருகிறது,முசுலீம்களின் உடல்களை வெட்டித்தள்ளியது.இந்த அக்கோரிகள் தான் பாபர் மசூதி இடிப்பின் போதும் படைபடையாய் முன்னணியில் நின்றார்கள்,ராம ராஜ்யத்தில் பிணந்திண்ணிகளுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படலாம்.

    பிணங்கள் கிடைக்காத பட்சத்தில் முசுலீம்கள் கிறித்துவர்கள் பின்ன தாழ்த்தப்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அந்த மோட்சம் தரும் புண்ணியவாண்களுக்கு புசிக்கதரப்படலாம்.

    இது மிகையான கூற்று அல்ல.இந்த 2009 ஆண்டில் மனிதனை அந்தப்பிணத்தை தின்னும் ஒரு கூட்டம் உண்டெனில் அது இந்தியாவில் இந்த அகோரிகள் தான் .இப்படி வெட்ட வெளிச்சமாய் பிணத்தை தின்னும் மிருகங்களை கைது செய்து முட்டியை பெயர்க்காது சுட்டுக்கொள்ளாமல் சாமி சாமி என்று புனிதம் என்று போற்றி வருகின்றனர்.இப்படி ஒரு பிணந்திண்ணிகளின் கட்சியான பாசகவோ ஏனைய மற்ற கட்சிகளோ இதை கண்டு கொள்வதில்லை,காரணம் மதம்.மக்களின் மத உணர்வுகளில் யாரும் தலையிடக்கூடாது கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் எல்லோரும் சொல்லு கின்றனர்.

    மதம் ஒரு அபின் என்றார் ஆசான் மார்க்ஸ்.அது எவ்வளவு உண்மை.செத்துப்போன பிணத்தை குறிப்பிட்ட நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால்  கைது செய்யும் போலீசு,பிணந்தின்னிகளை ஒன்று செய்வதில்லை,ஒன்று செய்யாது,ஏன் பலரும் இதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. போராடும் மக்களுக்கெதிராக தூக்கப்படும் லத்திக்கம்புகள் பிணந்திண்ணிகளுக்கு கால் துடைக்கக்கூட பயன் படுவதில்லை என்பது தான் உண்மை.

    இப்போது சொல்லுங்கள் மார்க்ஸ் சொன்னாரே மதம் ஒரு அபின் அது எத்துணை உணமை.

    குறிப்பு
    இது இந்துத்துவ பிரச்சாரப்படம்தான் ,கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவதாக காட்டுவதெல்லாம் ஆபாச நாயகன் செயமோகனுக்கு கைவந்த கலை.அவரால் தனிமனிதனை ஆபாசமாக வர்ணிக்கும் போதுதான்  அவருக்கு மோட்சம் கிட்டுமோ  என்னவோ? யாருக்கு தெரியும் ஒரு வேளை  அந்த அகோரிக்கு தெரிந்தாலும் தெரியலாம்.

    காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்

    பிப்ரவரி 13, 2009

    kaathal-copya2வழக்கம் போலவே வந்துவிட்டது காதலர் தினம் பெப்ரவரி 14கையில் ரோசாக்களோடு பச்சை நிற உடைகளில் அலைந்து கொண்டிருப்போரை அலுவலகம், ரயில் நிலையங்கள்,பேருந்துகளில் என எங்கும் காணலாம்.பன்னாட்டு மூலதனத்தின் வரவால் இறக்குமதியான கலாச்சார சீரழிவுகள் காதலை தேடச்சொல்கின்றன படுக்கையறையில்.

    தன் துணையை தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட காதல் தற்போது பாலுறவுத்தேவையை தீர்க்கும் நோக்கோடு புதைகுழிக்கு அனுப்பபடுகிறது. காதல் பாசம் நட்பு என அனைத்தையும் நுகர்பொருளாக்கிவிட்ட உலகமயம் அது உருவாக்கப்பட்ட உருவான நோக்கத்தை திட்டமிட்டே மறைக்கின்றன.அதிலும் குறிப்பாக காதல் என்பது அதன் தன்மையை இழந்து மிக வேக மாக விபச்சார நிலைக்கு தள்ளப்படுகின்றது.

    இச்சமுதாயத்தின் உருவாக்கத்தில் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது,பெண்ணினம் தான் தன்னையும் வளர்த்து இந்த சமுதாயத்தையும் வளர்த்து உருவாக்கியது. தாய் வழி சமூகமாக இருந்த மனித இனம் படிப்படியாக தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டது,.ஒன்றாகவே வேட்டைக்கு சென்று வந்த மனித இனத்தில் தாய்மை பெண்ணை தங்குமிடத்தில் இருக்க வைத்தது. அது வரை உடல் பலம் உள்ளிட்ட அனைத்திலும் சமமாக இருந்த பெண் உணவுக்காக ஆணை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றார்,ஆண் தன் பசிக்குப்போக மீதத்தையே பெண்ணுக்கு தந்தான்.

    ஓய்வு நேரங்களில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டறிந்தனர்,வழக்கம் போலவே அங்கிருந்த பெண்ணின் ஆளுமை அகற்றப்பட்டு ஆணுடைய ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. தந்தை வழி மாற்றத்துக்குப்பின் பெண் ஆணின் சொத்தாகவே மதிக்கப்படுகின்றார்,அதன் உரிமையாளர் தந்தை,சகோதரன் காதலன் கணவன் மகன் என பல்வேறு அவதாரங்கள் எடுத்துஆணாதிக்கம் தனது பெருமையை நிலை நாட்டுகிறது.

    வரைமுறையற்ற பாலுறவினை தனிச்சொத்துரிமையே தகர்த்து ஒருத்திக்கு ஒருவன்(கவனிக்க ஒருவனுக்கு ஒருத்தி அல்ல) என்ற கோட்பாட்டை வைத்து பெண்ணின் மீது வரைமுறையற்ற சுரண்டலை ஏற்படுத்துகிறது.அதை மறுத்து இருவரும் பரஸ்பரம் அன்புடன் வாழும் காதலை பெண்தான் ஏற்படுத்துகிறார்.காதல் உருவானதே ஆணாதிக்கத்திலிருந்து தனது உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே,அதற்கான போராட்டமே. காதலில் பெண் தைச்சொத்தாக மதிக்கப்படுவதில்லை,இருவரும் ஒருவை ஒருவரை மதித்து அனுசரித்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது.

    இப்படி தனது துணையை தெரிவு செய்வதற்காக உருவான காதல் ஆனாதிக்கத்தாலும் உலகமயத்தாலும் தன் தன்மையை இழந்து விபச்சாரத்தை நோக்கிய பாதையில் தள்ளப்படுகிறது.

    ஒரு ஆணாதிக்க ஆண் தனக்கு மட்டுமே காதலிக்க உரிமை இருப்பதாகவும் அதை பெண் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்பவராகத்தானிருக்க வேண்டுமென எண்ணுகிறான்.அப்பெண் காதலை ஏற்க மறுக்கும் பட்சத்தில் அப்பெண்னை குற்றவாளியாக்குகிறான் ,தான் விருப்பபட்டதால் அப்பொருள் தனக்கே கிடைக்கவேண்டுமென வாதாடுகிறான்.

    திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களோ ஆணாதிக்க காதலையே நியாயப்படுத்துகின்றன. மேலும் எறும்பு ஊற கல்லையும் தேய்க்க ஊடகங்கள் சொல்லித்தருகின்றன . முதலில் மாயைகள் சொல்வது போல் காதல் என்பது ஒரு முறை தான் பூக்குமா?காதல் என்பது நிலையானதா? காதலித்து மணந்த கனவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு அல்லது சமுதாயத்தின் பல கீழ்த்த்ரமான செயல்களில் ஈடுபடுகிறான் எனில் அக்காதல் தொடர்ந்து நீடிக்க முடியுமா ? அப்படி நீடித்தால் அது காதலா அல்லது அடிமைத்த்னமா .

    ஒரு பெண்ணுக்கு எப்படி துணையை தெரிவு செய்ய உரிமை உல்ளதோ அவ்வாறே தன் உரிமைகள் பாதிக்கப்படும் போது தூக்கிஎறியவும் உரிமை வேண்டும். இப்போது காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் ? காதலிக்கும் வரை ஒரு மாதிரியும்(பெண்ணை மதிப்பதும்) கல்யாணத்துக்கு பிறகு மற்ற பெண்களைப்போல் அடிமையாய் இருப்பதும் தான் இருக்கிறது.

    ஒரு பெண்ணோ அல்லது ஆணோ விரும்பிய யாராவது இறந்து விட்டால் உடனே சாக வேண்டும்.இளவயதில் கணவன் செத்தால் கூட இறுதிவரை காதலுக்கு பெண் கல்லறை கட்டி அதில் விளக்கு பிடிக்கவும் வேண்டும் ,ஆனால் ஆணுக்கு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லை .உரிமைக்கான முதல் படியாக இருந்த காதலை ஆனாதிக்கம் தனக்கேற்றாற்போல் வளைத்து அதனையே அடிமையாக்கி விட்டது

    ஏகாதிபத்திய காதலோ தலை கீழ் அதற்கு பேர்தான் காதலே தவிர அது ஒட்டு மொத்த விபச்சாரம் அதற்கு ஒரு பேர் வேண்டும் அது காதலாக சொல்லப்படுகிறது. ஊர் மேய்வதற்கு ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்கிறார்கள் . உண்மையில் ஐடி பீபிஓக்களின் சரிவால் ஊர்மேஞ்சி காதலர்களின் எண்ணிக்கை கண்டிப்பாய் குறையும்.

     

     

    ———————————————————————————– ————————–

    சிறீ ராம் சேனா ,இந்து முன்னணி போன்ற பண்டார பார்ப்பனீயங்கள் மற்றும் மூற்போக்கு பா.ம.க காதலர் தினத்தை எதிர்ப்பதாக கூறுகின்றன,இவர்கள் எதிர்ப்பது ஏகாதிபத்திய காதல்களைஅல்ல .காதலால் வர்ணாசிரமத்தில் சிதைவு ஏற்படும் என்பதே இவர்களின் கவலை.

    அந்தகவலை தான் வெறியாக வெளிப்படுகின்றது. நேற்று தின மணியில் வந்த கார்டூனைப்பாருங்கள் இரு கல்லூரிபெண்கள் பேசிக்கொள்கிறார்கள்”எனக்கு யார் காஸ்ட்லியான பரிசு தராங்களோ அவனத்தான் நான் காதலிப்பேன்” விபச்சாரத்தியே காதலாக பார்ப்பன மீடியாக்கள் வர்ணிக்கின்றன.

    தெருவில் பெண் ஆனோடு திரிந்தால் கல்யாணம் செய்து வைக்க போவதாய் அறிக்கைவிடும் காலிகள் தான் காதலித்ததால் கல்யாணம் செய்ததால் தீயை வைத்தார்கள் விசத்தை கொடுத்தார்கள், இந்த நாட்டு மக்களுக்கு மறுகாலனியும் பார்ப்பனீயமும் முக்கிய எதிரி என்றால் காதலுக்கும் அதுதான் எதிரி.பார்ப்பனீயமோ பெண்ணை கட்டற்ற வரைமுறையற்ற சுரண்டலுக்கான பொருளாக பெண்ணை மாறக்கோருகிறது ,அதையேத்தான் மறுகாலனியும் கூறுகிறது,இது காதலில் மட்டுமல்ல எந்த ஒரு உரிமைக்கும் சரி பிரச்சினைக்கும் சரி பார்ப்பனீயமும் உலகமயமும் ஒன்றையேதான் கூறுகிறார்கள் . ஏனெனில் உரிமைகளை பெற வேண்டுமெனில் இவை இரண்டையும் எதிர்க்காது தீர்வு இல்லை. காதலர்களே காதலை உரிமையாக கருதுவீர்களானால் போரிடுங்கள் நீங்களும் மக்கள் தானே