Posts Tagged ‘பேராட்டம்’

ஸ்ரீநி & சாநி – அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

மார்ச் 19, 2010

ஸ்ரீநி & சாநி

அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

ஒரு காலத்தில் ஸ்ரீநித்யானந்தாவிற்க்கு அல்லக்கையாய் இருந்த நம்ம சாரு நிவேதிதா அவரை கண்டபடி திட்டிக்கொண்டு இருக்கிறார்.  அவன் நடிகையின் குண்டியை அவன் நக்கினால் அதற்கு நானா பொறுப்பு? ஆங்கில புத்தகங்களை மொழி பெயர்த்ததற்கு இன்னும் பணம் தர வில்லை. கும்பமேளா யாத்திரைக்கு 1 லட்சம் கொட்டினேன்.  அத்தான் என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே? என்றாடி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் திட்டுவதும்,  புலம்புவதும் உண்மைதானா?  நம்ம சாநி மட்டுமல்ல ஸ்ரீநியின் முன்னாள் அல்லக்கைகள் பலருக்கும்  அவனை திட்ட வேண்டிய இப்போது அவசியமிருக்கிறது.

ஸ்ரீநியின் ஆளுயர போட்டோக்கள் மாட்டப்பட்ட மருத்துவமனைகள், ஹோட்டல்கள் இதர எண்ணற்ற அங்காடிகளின் புனித இடங்களெல்லாம் எல்லாம் வெறுமையாய் காட்சியளிக்கின்றன.  அவை எப்போதும் வெறுமையாய் இருக்கும் எனறு சொல்ல முடியாது.

எனக்குத்தெரிந்து அந்த விபச்சாரியை (ஸ்ரீநி ) வைத்து பணம் சம்பாதித்த மாமாக்கள் சரக்குக்கான மவுசு குறைந்தவுடன் வேறு ஒரு விபச்சாரிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். குமுதம் மாமாவோ அவனை வைத்து தானும் கல்லா கட்டிக்கொண்டு இப்போது சீக்காளி விலைமகளை மாமாப்பயல் தூற்றுவது போல வைதுக்கெதண்டிருக்கிறது.

ஸ்ரீநியை திட்டும் ஊடகங்களாகட்டும் அல்லக்கைகளாகட்டும் உதிர்க்கும் வார்த்தைகள் என்ன?  ஏமாற்றி விட்டார்? புனிதமான காவியுடையை போட்டுக்கொண்டு…….. என்று இழுக்கின்றன. சாநியாகட்டும் மற்ற யாராகட்டும் பார்ப்பன இந்து மதத்துககு எந்த கேடும் வராத தீர்வை கேட்கிறார்கள். ஒன்று அவர் நல்லவராயிருக்க வேண்டும், இல்லையயனில் அவர் தப்பே செய்திருந்தாலும் அவருக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை. (  note this point u’r honourஅவர் நல்லவராயிருந்தால் அது இந்து மதத்தோடு தொடர்புடையது.)

சாநி குமுதம் ரிப்போர்ட்டரில் “”சரசம் சல்லாபம் சாமியார்…..” எனற பெயரில் தொடரினை எழுதி வருகிறார் அதில் 2 வது பாகத்தில் அவர் எழுதுவதைப்பார்க்கும் எல்லோருக்கும் புரியும் சொல்லும் கருத்து “ இதுக்காக அவர் ரொம்ப மோசமில்லை கொஞ்சம் மோசம்”

“”என் மனைவி அவந்திகாவுக்கும் அதே தான் நடந்தது. பழம், அவித்த காய்கறிகள் தவிர எதைச்சாப்பிடடாலும் உடனே அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய நிலையில் இருந்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக அலோபதி,  சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று எந்த வைத்திய முறையிலும் குணமாகவில்லை. இந்த சாமியார் ஏதோ புரியாத கைகளை ஆட்டி நமக்குப்புரியாத வார்த்தகைளைச் சொன்னார்.சரியாகி விட்டது”

அதாவது இன்னமும் ஏதாவது ஒரு மருத்துவமனையிலோ அல்லது லாட்ஜிலேயோ நித்தியின் படத்தை மாட்டி வைத்திருந்தால் என்ன நடக்கும் ? நித்தியின் சிடியினைக்கேட்டு மக்கள் கூட்டம் மொய்க்கும்.  பேர் கொஞ்சம் டேமேஜ் ஆகும். தனக்கு வியாபாரத்திற்காக பயன் பட்டவன் இப்போது கொஞ்சம் தள்ளி வைக்கப்பபட்டிருக்கிறான். அவ்வளவுதான் அதற்காக அவனை முற்றிலும் அவர்கள் வெறுத்து விட்டார்கள் என்று சொல்லமுடியுமா?

இப்போதுகூட நித்தி பாலியல் ரீதியாக சம்பந்தப்படுத்தப்பட்டு வீடியோ வெளியே வந்திருப்பதால் அவனை திட்டுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். இதே பாலியல் அல்லாது வேறு ஏதாவது பிரச்சினையில் சிக்கியிருந்தால் அது ஒரு குற்றமாகவே இனம் காணப்படாது.

மருத்துவர் ருத்ரன் சொன்னது போல் இவன் மீது கோபம் கொள்ள இப்படி ஒரு படம் தேவைப்படுகிறது. எவ்வளவு கேவலமான அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

போலிச்சாமியார் என்று ஒன்று இல்லை, சாமியார் என்பதே போலிதானே அதில் என்ன தனியாக போலி?  நான் கடவுளை நேரடியாக வணங்குகிறேன். அவன் என்னைப் படைத்தது உண்மை என்றால் நான் பேசுவது அவனுக்குப் புரிய வேண்டுமா இல்லையா?  அப்படிப்புரியும் போது நடுவில் எதற்கு ஒரு புரோக்கர் ? நான் சொன்னால் கடவுள் கேட்க மாட்டானா? அவனுக்கு புரோக்கர் தேவைப்படுகிறதா?  அவன் சொன்னால் தான் ஆண்டவனுக்கு புரியுமா ?   நான் சொன்னால் என்னைப்படைத்தவனுக்கு ஏன் புரியாது ?  எல்லாவற்றையும் அவன்தான் படைத்தானென்றால் , எல்லாவற்றுக்கும் அவன் சிரத்தை தேவையயனில்  ஜெயேந்திரன் சங்கரராமனை கொன்றதற்கும், தேவநாதனின் பாலியல் பூசைக்கும், நித்திக்குட்டியின் “ஆன்மீக” ஆராய்ச்சிக்கும் பரம்பொருளின் சிரத்தை தேவைப்பட்டதா ? பக்தனுக்கு இக்கேள்விகள் எப்போதுமே எழுவதில்லை. எழுகின்றவர்கள் பக்தர்களாக நீடிப்பதுமில்லை. இல்லாத ஒருவனை வைத்து  மேற்கொள்ளப்படும் மாய்மலங்கள் தான் மதம்.

மதம் என்ற கஞ்சா செடியும்

ஆன்மீகம் என்ற ஹெராயினும்

இறைவன் இருக்கின்றான். எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவன் தான் இறுதித்தீர்வு. மக்கள் நல்வழிகளில் செல்வதில்லை உலகம் கண்டிப்பாக அழியும் நம்பை கல்கி பகவானோ, அல்லாவோ, இயேசுவோ   அல்லது ………….. காப்பாற்றுவார்கள்”

மக்களுடைய பொருளாதார, சமூகப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? அதைத்தீர்கக என்ன வழி? உழைப்பவர்கள் ஒருசாரராகவும் அதைவைத்து பிழைப்பவர்கள் ஒரு சாரராகவும் இருக்கிறார்கள்.  பொருளாதார ரீதியாக பலமானவர்கள் தங்களின் சுகங்கள் பறிபோகா வண்ணம் சட்டங்களைப்படைக்கிறார்கள். அவர்களின் சுகங்கள்  உழைப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றன. அதை எப்படி மாற்றியமைப்பது?  இல்லை அதை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் அது இறைவன் கொடுத்தது. யார் இறைவன் தெரியுமா ? உன்னையும் என்னையும் ஏன் இந்த உலகத்தையும் படைத்தான். இப்பூவுலகில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் அவன்தான் காரணம்.

உனக்கென்று ஆண்டவன் என்ன கொடுத்தானோ அதுதான் அதைத்தாண்டி நீ எதையும் பெற முடியாது. உன்னுடைய குறைகளுக்காக ஆணடவனை வணங்கு, தொழு,  கண்ணீர் விடு. கருணைக்காட்டுவான். மதமென்ற நிறுவனம்  பல கடவுள்களை பெற்றது.  மக்களின் கலாச்சாரங்களுக்கேற்றபடி பல தேவர்கள் பிறந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியதாக சொல்லப்பட்ட தேவர்கள் பின்னாளில் ஆளும் வர்க்கத்தின் தூதர்களானார்கள். மக்களின் எல்லாத்தேவைகளுக்கும் கடவுளும் மதமும் காரணமாக அறியப்பட்டன. அவைகளோடு பின்னி பிணைக்கப்பட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் கேள்,  கருணையோடு கேள், கெஞ்சிக்கேள், உன்னை வருத்திக்கேள். ஆண்டவன் தருவார்.  ஆண்டவனைப்பெற்ற அதிகாரம்  தன்னைக்காக்க  மதமென்னும் கஞ்சாவை நிறுவனமாக்கி மெல்ல மெல்லக் கொடுத்தது.

உனக்காக நீ போராடுவது தவறு அது ஆண்டவனை கோபம் கொள்ளச்செய்யும், போராடுவது ஆண்டவனை மட்டுமா கோபம் கொள்ளச்செய்யும் ,அதிகாரத்தையும் கூட அல்லவா ? ஆண்டவனிடம் நீ கேள்வி கேட்க முடியாது. அதிகாரத்தையும் நீ கேள்வி கேட்க முடியாது. அவராவது ஏதாவது பார்த்துக்கொடுப்பார். அதுவும்  முன்னோர்கள் சரியில்லை யயனில் அதுவும் கிடைக்காது. கேள்விக்கு அப்பாற்பட்டதாய் மதம் விளங்கியது.

இந்த மாடர்ன் உலகில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறக்க புது வழிமுறை தேவைப்படுகிறது. அறிவுஜீவிகள், மேதாவிகள், தின்று செரிக்காத உடல்கள் எல்லாவற்றுக்கும் அமைதிதான் பற்றாக்குறை. அவற்றைத்தேடி அலைகிறார்கள். சாதாரண மனிதனும் பொருளாதார பிரச்சினை ஆனாலும் சரி சமூகபிரச்சினை ஆனாலும் சரி அதற்கும் அமைதிதான் பற்றாக்குறை என நினைக்கிறான்/ நினைக்கவைக்கப்படுகிறான்.

மதத்தில் பாடப்பட்ட அதே ராகங்கள் இங்கேயும் ஒலிக்கின்றன.  ஆனால் வேறு வித்யாசமான வழிகளில்….. சமூகத்திலிருந்நு பிரிந்து வாழ்,  சமூகத்தைப்பற்றி நினைக்காதே .ஆனால் ஒரே தீர்வுதான் போராடாதே எதற்கும் எங்கேயும். எல்லாம் கர்ம வினை தான் காரணம். போதை என்றால் கஞ்சா மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தேவைக்கேற்றபடி அது ஹெராயின், பிரவுன் சுகர் என்றபடி போய்க்கொண்டே இருக்கிறது. பார்ப்பனீயத்தை ஒழிப்பதுதான் என் குறிக்கோள் என்று  எந்த சாமியாராவது சொல்லியிருக்கிறாரா?

இல்லை எந்த ஆனந்தமாவது அழிந்து போன விவசாயத்ததை, சிதைக்கபடும் தொழில்களை,  உறிஞ்சப்படும் நீர் வளத்தை பற்றி அதற்காக போராடுவதைப்பற்றி பேசியிருக்கிறார்களா?  பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் எல்லாவற்றையும் பேசுவார்கள் ஆனால் அதற்கு நடுவில் வாழும் வாழ்க்கையின் போராட்டங்களை பற்றி ஏன் பேசுவதில்லை ? அரிசி,  பருப்பு,  மிளகாய் என தினமும் விலைவாசி அவர்கள் சொல்கிறார்களே அந்த அண்ட சராசரத்தயைம் தாண்டி போகிறதே அதை குறைக்க என்ன வழி?

ஏன் பேசவில்லை என்பதல்ல நாம் தப்பித்தவறி கூட பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைதிதான் வேண்டுமானால் அது மயானத்திலும் கிடைக்கும். யாருக்குத்தான் அமைதியின் மீது காதலில்லை? அந்த அமைதியை பெற அதிகாரத்தை கைப்பற்றியாக வேண்டும். அதற்கு அமைதியாய் இருக்க முடியுமா என்ன?

அமைதிதான் எல்லாவற்றுக்கும் தீர்வென்பவர்கள் அமைதியாயிருப்பதில்லை. அவர்கள் அமைதியை ஜட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார்கள், சிறு குழந்தைகளின் பேண்ட்களை பிடித்து இழுக்கிறார்கள், அவர்கள்தான் இசுரேலை புனித பூமியன்கிறார்கள், ராமனுக்கு கோயிலைக்கட்டு என்கிறார்கள், செத்த மாட்டுக்காக 5 தலித்துக்களை கொன்றார்கள், அவர்கள்தான் சாட்சாத் பெருமாள் கோயிலுக்குள்ளே புகுந்து கொலையும் செய்கிறார்கள்.

மறுபடியும் சாணியிடம் போவோம்

சாநி போட்டிருக்கும் அந்த சாணியைப்பார்ப்போம்  ” எனக்குத் தெரிந்த பெண். கையில் மூன்று மாத குழந்தை  . நடு இரவில் அவரை அடித்து உதைத்து கணவன் வீட்டை விட்டு விரட்டு விட்டான். குளிர் காலம். நியூயார்க் நகரம். பாஸ்போர்ட் கணவன் கையில். கையில் காசு இல்லை. ஒரு தோழி தான் உ துணை செய்திருக்கிறார். என்னிடம் அந்தப்பெண் இதைச் சொன்ன போது ஒரு விசயம் ஆச்சர்யமாக இருந்தது. அவள் கணவன் ஐ.ஐ.டியில் தங்கப்பதக்கம் பெற்றவன்.இப்போது அந்த மனிதன் செய்த பாதகச்செயலுக்காக அவன் வாங்கிய தங்கப்பதக்கம் போலியானது என்று சொல்வீர்களா? அதேதான் இந்தச் சாமியாருக்கும் பொருந்தும். இவருடைய சல்லாபங்களை பார்த்து விட்டு “இவர் ஒரு பிராடு”” என்று சொல்லும் போது இதை யோசிக்க வேண்டும். பதஞ்சலி முனிவரிடமிருந்து யோகத்தையும், புத்தனிடமிருந்து ஞானத்தையும் கடன் வாங்கி, அதைத் தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர் நித்யானந்தா.’

அவன் கெட்டவன்தான், ஆனா அவ்வளவு கெட்டவன் கிடையாது. இது தான் ஸ்ரீநிக்கு சாநி போட்ட ஸ்டேட்மெண்ட்.  சாநியை ஸ்ரீநி வென்ற இடமென்று ஒரு கதையைச்சொன்னதாக இங்கு எழுதியிருக்கிறார். சாநியைப்பொறுத்த வரை நித்யானந்தா பொம்பளை விசயத்தை தவிர சாமியார்தான். சாமியார் செய்த தப்பு அவ்வளவு தான். இதற்காக சாமியாரே இல்லைன்னு சொல்ல முடியுமா? ஸ்ரீநியின் நீலப்படம் வந்த ஒரு நாளுக்குள்ளேயே தன் தளத்தில் அவரை திட்ட ஆரம்பித்திருந்தார். திட்டாமல் இருந்திருந்தால் “ஏன் அமைதியாய் இருக்கிறாய் உனக்கும் அவனுக்கும் வேறு தொடர்பு இருக்கிறதா?”  போன்ற கேள்விகள் வரும். தன் இமேஜ் சரிவதை திட்டிக் காப்பாற்றினார்.

ஆனால் அந்த மனசு கேக்குமா? ஆண்டவன் ஒரே மனசை படைச்சுட்டானே. அவர் நினைத்தாலும் அதைமீறி அவர் மனது அவர் சாமியார்தான், எல்லாம் அறிந்தவர் தானென சான்றிதழ் தருகிறது. பாட்சா படத்தில் ஒரு டயலாக் “அய்யா மனசில வர முதல் காதல்ங்குறது முள்ளு மாரி அவங்களை குத்திகிட்டே இருக்கும்”

அப்படித்தான் ஸ்ரீநி மீதான சாநியின் காதல் அவரே நினைத்தாலும் விட மறுக்கிறது போலும். போதையின் சுவை மீண்டும் அவரையறியாமலே கேட்கிறது. ஆமா இவரையயல்லாம்  பெரியாரியவாதின்னு போடுகின்ற மாமாப் பத்திரிக்கைகளை எதைக்கொண்டு அடிப்பது?

அமைதியாய் இருக்கக்கூடாத நாம் அமைதியாயிருக்கிறோம். நம் உரிமைகள் ஒவவொன்றாய் பறிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. விதர்பாவில் இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்செத்துப்போய் விட்டார்கள்.

ஒரே வழிதான் மாற்று. சமூகத்தை சார்ந்திருப்போம். மக்களை சார்ந்திருப்போம். மக்களைப்படிப்போம் , மக்களை கற்போம், மக்களிடம் சென்று கற்பிப்போம். அது ஒன்றுதான் உண்மையான ஆனந்தத்தை பெறும் வழி. போராட்டம் ஒன்று தான்  சுயமரியாதையைத் தரும். போராட்டம் ஒன்று தான் மகிழ்ச்சியைத்தரும்.

அன்றாடம் பேருந்துகளில், புகைவண்டிகளில் , தெருக்களில் “அன்பார்ந்த உழைக்கும் மக்களே ” என ஆரம்பிக்கும் நக்சல்பாரி தோழரைக் கேளுங்கள் எது ஆனந்தம் என்று, தில்லையிலே தமிழ் முழங்க தம் ரத்தத்ததை சிந்திய தோழர்களைக் கேளுங்கள்,  தண்டகாரண்யாவிலே அந்நிய ஆதிக்கத்திற்கெதிராக ஆயுதமேந்தும் பழங்குடின மக்களைக் கேளுங்கள் எது மகிழச்சி,  எது ஆனந்தம் என்று.

அதை விட்டுவிட்டு இன்னும் கும்மிருட்டில் குண்டலினியை நீங்கள் எழுப்பிக்கொண்டிருந்தால் நீங்கள் மனிதத்தன்மையை மட்டுமல்ல மானத்தையும் இழந்து விட்டீர்கள் என்று பொருள்.

நித்தியிடம் ஆனந்தம் தேடி சென்றவர்களாகட்டும், இனி அவனிடம் பொறுமையாய் காலம் கனிந்தபின் தேடப்போகும் நபர்களாகட்டும், வேறு யாரிடமாவது ஆனந்தம் என்ற ஹெராயினை , பிரவுன் சுகரை  சுகிப்பவர்ளாகட்டும் நம்ம சாநி உட்பட,

உங்கள் காதுகளில் கேட்கிறதா புரட்சிக்கவியின் எழுத்தில் எமது குரல்பாரடா உனது மானிடப் பரப்பை” “காடுகளைந்தோம்”

related

0.சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
1.ஆன்மீகத்தேடல்கள்
  • 2.வர்க்கம்
    ஒன்றே பதில் சொல்லும்