Posts Tagged ‘பெண்ணியம்’

இது ஒரு காதல் கதை – காதலனா ? தாலியா?

ஜூலை 13, 2010

இது ஒரு காதல் கதை
காதலனா ? தாலியா?

நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. எங்களில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக  அப்படி ஒரு நெருக்கம். சொல்லப்போனால் நாங்கள் எல்லாருமே அரசியலறிவில் புதியதாய் நுழைந்திருந்தோம்.  நாம்இப்போது பார்க்கப்போவது மற்ற இருவரைப்பற்றியல்ல அதோ அவர்தான் கதிர் . அவருக்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது ஆனாலும் நாங்கள் “வாங்க” மரியாதையாகவே பேசிவந்தோம்.

நால்வரும்  ஒரு ஞாயிறு காலை ஒரு வேலையினை முடித்து விட்டு ஜூட் விட ஆரம்பமானோம்.

மற்ற இருவரும் எங்களை இறக்கிவிட்டுவிட்டு வடபழனி சிக்னலிலிருந்து வேறுதிசையில் செல்ல நானும் குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். சரியான வெயில், மண்டையைப்பிளந்தது. கதிர்  சொன்னார். ” ஏங்க கரும்பு ஜூஸ்……….”  கடைக்குப்போய் குடித்தோம்.

நான் கிளம்பும் வேளையில் ” ஒரு பொண்ணுகிட்ட கல்யாணம் பண்ணிக்குறீங்ளான்னு கேக்கலாம்னு இருக்கேன் “என்றார் கதிர் . “என்ன சொன்னீங்க , தெளிவா சொல்லுங்க” என்றேன். “இல்ல என் கூட ஆபிஸ்ல ஒருத்தர் வேலை செய்யறாங்க அவங்கிட்ட காதலிக்கறதா சொல்லிடலாம்னு இருக்கேன்”. எனக்கு அதிர்ச்சி, இருக்காதா ஒரு மாதத்திற்கு  முன் கதிருக்கும் எனக்கும் கடுமையான விவாதம் காதலைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை காதல் அது தன் துணையை தெரிவு செய்வதற்கான வழி. நிலபிரபுத்துவ காலத்தில்  பெண்ணும் பொருளாக மாற்றப்பட்டனர். கடுமையான ஆணாதிக்க சுரண்டலின் தவிர்க்க இயலாத வகையில் பெண் தன் துணையை தெரிவு செய்யத்துணிகிறார், அதுதான் காதல்.

ஆணாதிக்க சமுதாயத்தை மீறி என் துணையை நான் தெரிவு செய்வேன் என்பது ஒரு முற்போக்கான  சுதந்திரமான முடிவு அது வரவேற்கதக்க முடிவும் கூட.  வருகின்ற துணையைப்பற்றி ஏதும் அறியாது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு வழியின்றி வாழ்வதெல்லாம் நல்லபடியாக வாழ்வை கொண்டு போகாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து  பின்னர் செய்யும் மணம்  நீடித்திருக்கும் என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருக்கும்.

ஆணும் பெண்ணும் தன் துணையை தெரிவு செய்வதற்கு காதலைத்தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?ஒரு பெண்ணோ ஆணோ  தன் துணையை தெரிவு செய்ய விடாமல் தடுப்பது எது? சாதி, மதம், பணம், குலம், கவுரவம், அந்தஸ்து போன்றவை தானே. பெரும்பான்மை காதல் திருமணங்களில் இவற்றில் ஏதாவதொன்று உடைபடுகின்றது. ஆனால் கதிரைப் பொறுத்தவரை காதல் என்பதே பொய் அது பெண் சுதந்திரத்திற்கான முதல் படி அல்ல, ஒரே சாதியில் தான், சொந்தத்தில்தான் என் அலுவலகத்தில் காதலிக்கிறார்கள் என்பார். காதலைப்பற்றிய இவ்விவாதம் சில நாட்கள் நீடித்தது.  கடைசியாக காதல் முற்போக்கின் ஒரு அம்சம் என்ற அளவில் மட்டும் அவர் ஒத்துக்கொண்டார்.

அவர் இப்படி கேட்பார் நான் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. விசாரித்தேன் பெண்ணைப்பற்றி அவரிடம். அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் அப்பெண்ணும் வேலை செய்வதாகவும் சொந்தஊர் சென்னையிலிருந்து 150 கி.மீ தள்ளி இருப்பதாகவும் கூறினார். அப்பெண் மறைமுகமாக காதலிப்பது போல் தெரிவதால் தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். தன்னுடைய சாதி மறுப்புக்கொள்கைகள் அவருக்குத்தெரியுமென்றும் கூறினார்.

” உங்களுக்கு எதிரி யாருங்க” என்றேன். “இந்த நாட்டை சூறையாடுற உலக வங்கி ஏகாதிபத்தியம் அப்புறம் ஏகாதிபத்திய கைக்கூலிகள் ” என்றார். ” அந்தப் பொண்ணைக் கேட்டுப்பாருங்க எதிர்த்த வீட்டு பிரமிளாவோ அல்லது பக்கத்து வீட்டு அனிதா இல்லைன்னா கூட வேலை செய்யுற தாரிணின்னு சொல்லுவாங்க. உழைக்கும் மக்களை  ஒடுக்குறவன பத்தி நீங்க பேசுறீங்க ஆனா அந்தப் பொண்ணு கவலை என்னவாயிருக்கும்?  அவ முடி நெறயா வளர்த்திருக்கா, அவ குத்திக்காட்டி பேசுறவ,  அவ அன்னைக்கு புது ட்ரெஸ் போட்டுகிட்டு ரொம்ப பந்தா காட்டுறா இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்கப்போவுதா என்ன?

“அந்தப்பொண்ணு மட்டுமில்ல பையனோ பொண்ணா  இந்தக்காலத்துல எப்புடி இருக்காங்க? இந்த நாட்டு மக்கள் மேல அக்கறையா இருக்காங்களா என்ன?  இந்த மக்கள் மேல அக்கறை வச்சு அதுக்குன்னு போராடுற நீங்களும் மக்களை மதிக்காத ஒருத்தரும் எப்படி இணைஞ்சு வாழ முடியும்? ”

“அவங்கள மாத்தவே முடியாதுன்னு சொல்லுறீங்களா?” இது கதிர் .

“நான் அப்புடி சொல்லலை மாற்றம் ஒன்றே மாறாததுன்னு ஆசான்கள் சொல்லியிருக்காங்க, மக்களை மாற்ற முடியுமின்னுதான்  நாம இப்ப வரை பேசறோம். முதல்ல அந்தப்பெண் கிட்ட உங்களைப்பத்தி பேசுங்க அரசியலை கொண்டு போங்க புத்தகங்களை  படிக்கச்சொல்லுங்க, என் திருமணம் இப்படித்தான்னு, என் வாழ்க்ககை இப்படின்னு உங்கள் மீது ஒரு கருத்தை ஏற்படுத்துங்க, அப்புறம் உங்க காதலை தெரிவியுங்க , அவங்களே முடிவு செய்யட்டும், உங்களை வாழ்க்கைத்துணையா ஏத்துக்கறதா வேண்டாமா என்று”

“சரிங்க” என்றபடி சென்றவரை சில நாட்கள் கழித்து கேட்டேன். தான் காதலை தெரிவித்து விட்டதாகவும் மனசு கேக்கவில்லை என்றும்  அப்பெண்ணும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.”முட்டாள்த்தனமான முடிவென்று நினைத்துக்கொண்டு என்னுடைய சந்தேகம் அவரிடமே கேட்டேன் “எப்புடிங்க அன்னைக்கு அப்புடி பேசுனீங்க அதுக்குள்ள காதல் வலையில விழுந்துட்டீங்க”.

“நீங்கதான சொன்னீங்க காதல்ங்குறது உரிமைன்னு பெண்சுதந்திரத்திற்கானதுன்னு அதான் யோசிச்சு என் கருத்தை மாத்திகிட்டேன் என்றார் ” ஆக  சும்மா கிடந்த சங்கை நான்தான் ஊதி விட்டிருக்கிறேன்.

சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அவர் சொல்லுவார் அந்தக்கூட்டத்துக்கு வரச்சொன்னேன் வந்திருந்தாங்க” சில மாதங்கள் ஓடின. அப்பெண் தன் வீட்டில் காதலை சொல்லி விட்டதால் அவருடைய தந்தை கதிரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.

“சரி போய்ட்டு வாங்க” என்றோம். அவர் மட்டும் அப்பெண் வீட்டிற்கு சென்றிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம் தான். பொண்ணு வீட்டுக்காரனுங்க ஏதாவது செய்திடுவார்களோ என்று. அன்று இரவு வந்த அவர் அப்பெண்ணின் வீட்டில் போய் பேசி விட்டதாகவும் சொன்னார்.

அப்பெண் ஒரு மாதம் கழித்து தன்னுடைய தந்தை கண்டிப்பாக தாலி கட்டவேணடுமென்று சொல்லி விட்டதாகவும்  அப்பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் தி.க என்றும் அவர் தாலி கட்டிவிட்டதால் நீங்களும் தாலி கட்ட வேண்டுமென்று கதிரிடம் சொல்ல ஆரம்பித்தார். பார்ப்பானை வைத்துதான் சாங்கியமென்றும்  கண்டிச­ன்  ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது.

பார்ப்பன இந்து முறையில் பெண்ணை கேவலப்படுத்ததான் தாலி என்றும் பார்ப்பனனின் மந்திரமே பெண்ணை விபச்சாரியாக்குவதுதான் என்று பல முறை சொல்லியும் அப்பெண் கேட்கவேயில்லை. அப்பெண்ணின் அப்பாவுக்கு பணிஓய்வு பெற 4 மாதங்களிருப்பதால் அதற்குள் திருமணம் நடத்த ஏதுவாக விரைவாக பதில் சொல்லுமாறு அப்பெண் கூறினார்.

இந்த சம்பவமெல்லாம் எங்களுக்கு முன்னே நடந்தேறுகிறது. ஒருகட்டத்தில் அப்பெண் “தாலி கட்டுனா என்னை கல்யாணம் பண்ணு………….” என்க ,குமாருக்கும் அப்பெண்ணிற்கும்  சண்டையில் முடிந்திருக்கிறது. நாங்கள் எடுத்த சமாதான முயற்சிகள் பயனற்றுப்போயின. அப்பெண்ணின் ஒரே பதில் “தாலிகட்டி சம்பிரதாயத்தோடுதான் கல்யாணம் அப்படீன்னா பேசுங்க….”

“குறைந்தபட்சம் தாலிகட்டுறது தப்புன்னு தெரியாத அளவுக்கு என்ன வெங்காயம் காதலிச்சீங்களோ ஒரு இழவும் தெரியல, இப்ப என்ன பண்றது” என்றேன்.

“இல்ல நான் தாலியப்பத்தி யல்லாம் பேசியிருக்கேன், சுயமரியாதையா இருக்கணுமுன்னு பேசியிருக்கேன்” என்றார் கதிர்.

“அப்பன் கிட்ட பேசி காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தற அளவுக்கு தைரியம் இருக்கு ஆனா தாலிகட்டாம கல்யாணம் பண்ண முடியலை இல்லையா? வரதட்சணை வேண்டாமெனில் கசக்குதா? அடிமைத்தனம் புடிக்குது உனக்கு சுதந்திரம் கொடுக்குறவன் பிடிக்கலையா? எவன் உன்னை விபச்சாரியா (பார்ப்பன இந்து மதம்) ஆக்குறானோ அவன் மேல வைக்குற நம்பிக்கையை ஒரு சதவீதம் இந்தக்காதலன் மேல வைக்க முடியலேன்னா இதுக்குப்பேர் காதல் கிடையாது. ரெண்டு பேரும் உணர்வுகளுக்கு அடிமையாயிட்டீங்க “என்றேன்.

இன்னொரு நண்பர் சொன்னார் “கடைசியா அந்தப்பெண்கிட்ட பேசிப்பாருங்க, அரசியலை சொல்லிட்டு  பக்குவமடைஞ்ச பிறகு காதலிச்சிருக்கணும். இப்ப என்ன பண்றது. எல்லாம் அப்பெண்ணோட கையில்தான் இருக்குது.”

எனக்கோ நம்பிக்கையில்லை கதிர் மீது ” தாலிகட்டிகிட்டுதான் வரப்போறாரென நினைத்தேன்”

அப்பெண் கடைசி வரை தன் முடிவில் தெளிவாயிருந்து அடிமைத்தனத்தில்  இல்லற வாழவென உறுதியாயிருக்க , கதிரோ   அந்தக்காதலை விட்டார். கதிர்  விட்டார் என்பதை விட அப்பெண் தன் முடிவில் மிக உறுதியாயிருந்தார் என்பது தான் உண்மை. ஒரு மாதம் கழித்து அப்பெண் முதல் அவர்கள் வீட்டிலிருப்பவர் வரை பலரும் கதிரை கெஞ்சிப்பார்த்து விட்டார்கள்,  தயவு செஞ்சு  “தாலி கட்டுங்க” என்று.

அப்பெண் ஆரம்பத்தில் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு பின்னர் காதலித்தால் மீள மாட்டான் என்று கட்டளைகள் விதித்து இருக்கிறார் .  அப்பெண்ணின் கண்ணீர், கோபம் ” எல்லாம் தாலி கட்டுங்க” என்றமைந்திருந்தது. பின்னர் வேறு நபருடன் பார்ப்பன முறைப்படி திருமணமும் செய்து ஈராண்டுகளாகிவிட்டன.

இந்த பார்ப்பன இந்து சமூகத்தின் மேல் அப்பெண் வைத்த நம்பிக்கையில்  கொஞ்சம் கூட தன் குடும்பத்தை மீறி மணக்கத்   துணிந்த காதலன் மீது இல்லை. அப்படியயனில் அந்தப்பெண் பொய்யாய் காதலித்தாரா?  இல்லை அவர் உண்மையாக கூட காதலித்திருக்கலாம் ஆனால் தாலிகட்டாமல் சாதி சொல்லாமல் வாழ்ந்தால் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அந்தக்காதலைலையே தின்று விட்டது. தாலி பெரியதா? காதலன் பெரியதா? என்றபோட்டியில் அப்பெண் கடைசியில் தாலியை கட்டிக்கொண்டு போய்விட்டார்.காதலிப்பது பெரிய விசயமல்ல, இந்த மூடநம்பிக்கை சமுதாயத்தை எதிர்த்து இயங்குவதுதான் பெரியது.

பெண்ணுரிமையை வைத்துக்கொள் என்றால் எனக்குத்தேவையில்லை நான் இடிமையாய்தான் இருப்பேன், அடிமைத்தன வாழவில் அடிமைத்தன பிள்ளையை பெற்று அடிமைக்குழந்தையை அடிமைத்தனமான முறையில் வளர்ப்பேனென்றால் இங்கு என்னதான் செய்ய முடியும். கொண்ட காதலுக்காக கடைசி வரை சுயமரியாதையை கொண்ட அரசியலை இழந்து வாழமுடியுமா என்ன?

இல்லை நீ மக்களை பற்றி சிந்தித்துதான் ஆக வேண்டும். சுயமரியாதையோடுதான் வாழ வேண்டும். நீ சிந்திப்பதற்கு எல்லாமிருக்கிறது, இவ்வுலகே எனக்கு சொந்தம். சுயமரியாதைக்கு, உழைக்கும் மக்கள் உரிமைக்கு , முக்கியமாக பெண்ணுரிமைக்கு  உன்னால் முடிந்ததை எதுவேண்டுமென்றாலும் செய். பெண் ஆணைப்போல சுயேச்சையான பொருளாதாரத்துடன் வாழ அனுமதி அளிப்பதை விட வேறு ஏது சுதந்நிரம்?

ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம் வாரதிற்கொருமுறை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும் எனில் தாலி கட்டித்தான் ஆக வேண்டுமென்று அடிமை விலங்கை ஆசையாய் மாட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு சுயமரியாதையும் , கம்யூனிசமும் கசக்கத்தான் செய்யும் .
சிலருக்குத் தோன்றலாம் தாலிங்குறது ,பார்ப்பானை வச்சு கல்யாணம் பண்றது சாதாரண விசயம் அதுக்கு காதலை விடலாமா? தாலி என்பதோ பார்ப்பன மந்திரமோ ஒரு செயல் மட்டுமல்ல. தாலி ஏன் உருவாக்கப்பட்டது?  இது என்னுடைய பொருள் என்று கணவன் சொல்லுவதற்காக, ஆம் திருமணத்திற்கான அடையாளமாய் பெண்ணுக்கு இருக்கும் தாலி ஆணுக்கு ஏன் இருப்பதில்லை?

ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள ஒரு கூட்டத்தில்  மணமான பெண்களை கண்டறியமுடியும். ஆனால் ஆண்களை முடியுமா என்ன? அவனே சொன்னால் தான்  தெரியும். சரியான விசயமெனில் அது ஏன் ஆணுக்கில்லை. பெண்ணை பொருளாக்கும் எதையும் ஏற்பதற்கில்லை. எனும் போது எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பெண்ணை வைப்பாட்டியாக்கும் மந்திரத்தை ஏற்க முடியும்.

பெண்ணுக்கு விடுதலை தர நினைத்த கதிரின் உண்மையான சுயமரியாதையுள்ள அரசியல்   அடிமைத்தனத்திற்கு கிஞ்சித்தும் விலை போகாமல் நின்றது. சுயமரியாதை அது தனக்குமட்டுமல்ல மற்றவர்களையும் சுயமரியாதையாகவே இருக்கக்கோருகிறது. நாத்திகர்களாக கூறிக்கொள்ளும் பலர் மறு அழைப்பின்போது தாலி கட்டிக்கொள்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் எதுவும் புரியாதது போல் நடிக்கும் ஒரு அடிமையை திருமணம் செய்வது ஒரு உண்மையான பகுத்தறிவுவாதியால் இயலாது.

இப்பாது காதல் என்று நான் பேச ஆரம்பித்தாலே கதிரின் கதைக்கு சென்று விடுகிறேன். அந்த அளவுக்குகாதல் பற்றிய பெரிய படிப்பினையாகிப்போனது கதிரின் காதல். காதல், பாசம்,வீடு,நட்பு,அப்பா,அம்மா,

உறவினர்கள் இதில் எதுவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு அரசியலில் இருக்கும் நேர்மை  இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிப்பது சாத்தியம்தான். அதற்கு முதலில் நேர்மையாக இருத்தல் வேண்டும். கதிர்  என் நண்பன் என்பதில் மிகவும் பெருமைதான்.

மக்களைப்பிளக்கும் சாதியை

மாதரை வதைக்கும் தாலியை

சித்தத்தையே அழிக்கும் சாத்திரத்தை

மொத்தமாய் புதைப்போம்

மகஇக, புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களின் புரட்சிகர மணவிழா பத்திரிக்கையில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற வாசகம்.

I.T-ன் ஆணாதிக்கம்

கதை

காக்க காக்க லீnaவைக் காக்க, சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.

ஏப்ரல் 14, 2010
காக்க காக்க லீnaவைக் காக்க

சன நாயகத்தூண்கள்
எல்லாம் அம்மணமாய்
இக்சாவில்
கருத்து சுதந்திரத்தை காக்க
காக்க காக்க லீnaவைக் காக்க
பேட்டிகள் வெடித்துக்
கிளம்புகின்றன வலதுசாரியம்
இடது சாரியம் எல்லாம் குத்துவதாய்
பொறுமுகின்றன
லெனின் பிராயிடை
புணரவேண்டும் – அது கருத்து சுதந்திரம்
லெனின் காரல்மார்க்ஸ்
சே பிடல் ஏங்கெல்ஸ்
எல்லாம் பேசலாம்
அது கருத்து சுதந்திரம்
ராமேசுவரம் செங்கடல்
தீபக் முதலாளித்துவ வெறி
அடி உதை குத்து – இதுவும் சுதந்திரம்
ஏன் அடித்தாய் ?
தொழிலாளியை ஏன் வதைத்தாய்?
கேள்விகளுக்கு
யோனிகள் பதில் சொல்லுகின்றன
அய்யோ அய்யய்யோ
உரிமையைப்பறிக்காதே
இது கருத்து சுதந்திரம்
அதிகாரவர்க்க ஆண்குறியையை
தடவிக்கொடு
எம்மைகட்டி வைத்து உதை
உனக்கிருக்கும் சுதந்திரம்
எமக்கில்லாதது வருத்தம் தான்
(எம்மை,எமக்கு – தொழிலாளி)
—————————————————————————————————————————————————————-
சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.


எது சுதந்திரம்?
எது கவிதை?
உழைக்கும் மக்களின் விடுதலைக்கே
சுதந்திரம்
உழைக்கும் மக்களின் உணர்வே
கவிதை
அதை
சொல்ல நீ யார்?
யோனியிலும் ஆண்குறியிலும்
தூங்கிக்கிடக்கிறது விடுதலை
கிடைத்து விட்டது பட்டம்
“கலை இலக்கியத்தின் போலீசு”

யோனிகளை அரிந்து வைத்துக்கொண்டும்
பீய்ச்சியடிக்கப்படும் விந்துவிலிருந்தும்
துடிக்கும் உறுப்புக்களிலும்
கிடைக்குமா பெண்ணின் விடுதலை?

ஆளும் வர்க்கத்தை
அடக்க அரிவாளை எடுக்க சொன்னால்
நீ ஆணுறையை கழட்டிக்
கொண்டிருக்கிறாய்
ஒரு வேளை உன் விடுதலை
அதிலிருந்து கூட கிடைக்கலாம்
அந்தோணிசாமியின் மந்திரங்கள்
ஜெபிக்கப்படட்டும் -சோபாக்கள்
வேதம் ஓதுகிறார்கள்
“கர்த்தரின் ஆட்டுக்குட்டிகளே
உங்களின் விடுதலை
தொடையிடுக்கில் இருக்கிறது”
ஆரம்பிக்கட்டும் சுதந்திர வேட்கை

சப்பிக்குடிக்க சொல்லுங்கள்
கால்களை அகட்டி வைத்துக்கொண்டே
பீய்ச்சி அடியுங்கள்
கிடைத்து விடும் சுதந்திரம்

சுதந்திரம்
உங்களுக்கு மட்டும்.


15.04.10. இக்சா அரங்கம், பாந்தியன் சாலையில் கருத்துக்களை புணர்வதற்கான சுதந்திரம் குறித்த அரங்கக்கூட்டம்.யார் யாரைப் புணர்ந்தால் கருத்தை பெற முடியும்  எனும் நீதி சொல்லும் லீனாதிபதி, இகூட்டத்தில்  சோபாவும் ஏனையோரும் யாரைப்புணர்ந்தால் கம்யூனிசம் கற்க முடியும் என்பதையும் சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும், மற்ற படி கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் : -)
தொடர்புள்ளவை
லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
கவிதைகள்-அழகு

பெண் – சில கேள்விகள்

ஏப்ரல் 3, 2010
பெண் – சில கேள்விகள்

“ஏங்க நீங்க இந்த உலகத்துல நடக்குறதைப்பத்தி தெரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க ? ”  நான் சந்திக்கும் பலரிடமும் தன்னைப்பற்றி / இவ்வுலகத்தைப்பற்றி கவலைப்படாதவர்களிடம் இக்கேள்வியை கேட்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக இக்கேள்விக்கு பெண்களிடம் ( நடுத்தர வர்க்க,மேட்டுக்குடி) வரும் பெரும்பாலான பதில்களோ ஊமையாகவே இருக்கின்றன.
பெண் என்ற வகையில் அவர் ஒடுக்கப்பட்டவருள் ஒடுக்கப்பட்டவர். ஏதாவது ஒரு படி நிலையில் அழுந்திக்கிடப்பவர் என்பது தான் உண்மை. பெண்கள் சரளமாக படிக்கிறர்கள், வேலைக்குப்போகிறார்கள் என்பது மட்டுமே உரிமையாக பார்க்கப்படுகிறது. வேலைக்குப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?
ஒரு பெண் தனக்காக, தன்னுரிமைக்காக சுயேச்சையாக வாழ முடிகிறதா? தான் எந்தப்படத்திற்கு போக வேண்டும், தான் எந்த நகையை விரும்பி அணிய வேண்டும்? தன் கணவனுக்கு எந்த சமையலை விரும்பி செய்ய வேண்டும் ? தன் கணவன் மனம் கோணாது எப்படி நடக்க வேண்டும்? என்பனவற்றை முடிவு செய்யும் பெண்ணால் ஒரு ஆணைப்போல் சுயேச்சையாக வாழ முடிகிறதா?

ஒரு ஆண் திருமணம் ஆகாமலிருந்தால் அது பிரம்மச்சாரி(பெருமை) அதுவே ஒரு பெண்  திருமணம் ஆகாமலிருந்தால் அது கன்னி கழியாதவள்(அவமானம்). யாராவது வம்பு செய்தால் எதிர்த்து கேட்கும் போது / தன்னுரிமையை பேசும் போது “ஆம்பிளை மாதிரி நடந்துக்குறா”. ஒரு பெண் ஆண் மாதிரி இருக்கிறாள் என்பது கேவலம். அதைப்போலவே ஒரு ஆணைக்கேவலப்படுத்த பெண்ணைப்போல இருக்கிறாய் என்கிறது சமூகம்.  ஒரு பெண் எப்படி விமர்சிக்கப்படுகிறார் இங்கு?
செயா ஒரு பாசிஸ்ட் பெண் தான் அவரை நடத்தைகெட்டவள் என விளிக்கும் திமுகவினர் தன் தலைவன் நடத்தைகெட்டுப்போனதை பேசுவார்களா? அல்லது அதிமுகவினர்தான் கருணா ஒரு விபச்சாரி என்று பேசுவார்களா என்ன? ஆண் எனில் அது அவனது திறமை, பெண்ணெனில் அது விபச்சாரம்.

ஒரு பாலினத்தை மாற்றிக்கூறுவது கேவலபடுத்துவதாகவே கூறப்படுகிறது. அதில் கூட எவ்வளவு நயவஞ்சகம்? பெண்ணே நீ அடக்க ஒடுக்கமாக இரு இல்லையேல் அது கேவலம் (அடிமைத்தனத்தோடு இரு). ஆணே நீ நெஞ்சை நிமிர்த்தி குடும்பத்தை அடக்கி ஆள் (அடக்கு) இல்லை என்றால் அது கேவலம்.
ஆக அவரவர்கள் அவரவர் இடத்திலே இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆண் எதற்கும் கோபப்பட வேண்டும், பெண்ணை அடிக்க வேண்டும், ஊர் மேய வேண்டும், யாருக்கும் பதில் சொல்லாமல் வாழ வேண்டும். அவன் அதை மீறி நான் ஏன் ஒரு பெண் கவரும் படி நடந்து கொள்ள வேண்டும்? எனக் கேட்டால் “டேய் இது ஆம்பிளைங்க சமாச்சாரம்”.

பல வருடங்களுக்கு முன் வேலை செய்த இடத்தில் பெண்கள் ஒடுக்கப்படுவதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன் என்னைத்தவிர மற்ற நால்வரும் எனக்கு எதிராக பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண்ணும் அடக்கம். அந்தப்பெண் சொன்னார்”என்னவோ நீங்க ஒரு பொண்ணைக்கூட சைட் அடிச்சதே இல்லையா?”. நான் கொஞ்சம் பேசி விட்டு சொன்னேன்” நீங்க பெரிய யோக்கியமா பேசுறீங்களே நீங்க எத்தனை பேரை பார்க்குறீங்க தினமும் ? ” உடனே அப்பெண் அழ ஆரம்பித்தார். ” என்னப்பார்த்து இப்படி கேக்குறீங்களே” என்றவுடன்
நான்
சொன்னேன் “ஆம்பிளை சைட் அடிக்குறது சரின்னு சொல்லுற உங்களால ஏன் பொம்பளை ஆணை ரசிக்குறது சரின்னு சொல்ல முடியல?”
பெண்ணை ஒடுக்கு!! அப்போதுதான் நீ ஆண் ஏதோ ஒரு வகையில். எதிரில் பெண் வந்தால் பார்க்க வேண்டும், நாயைப்போல பின்னாலேயே அலைய வேண்டும், அவரை கவர்வதற்கு என்னவெல்லாமோ அனைத்தையும் செய்ய வேண்டும்.  ஆண் என்றால் பெண்ணை “கரெக்ட்” செய்ய வேண்டும். ஒருவரையா?  “இல்லையில்லை பார்க்கும் அத்தனை பேரையும் ” திருமணம் ஆனால் மனைவிக்கு பூ அல்வா எல்லாம் வாங்கித் தரலாம் சுதந்திரத்தைத் தவிர. அதுதான் ஆம்பிளைக்கு அழகு.
கல்லூரிக் காலத்தில் ஒருவன் சொல்வான் ” பையன்னா எல்லா பொம்பளைங்களையும் பார்க்கவேண்டும் ? கல்யாணம் ஆனாலும் சரி ஆகலைனாலும் சரி பார்க்கணும் இல்லைன்னா அவன் ஆம்பிளை இல்லை ” . இப்போதும் அவன் தன் மனைவியோடு தான் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். அவன் சொன்னது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
எது அழகு ? எது நல்லது ? எது தேவை ? எல்லாவற்றையும் இந்த ஆணாதிக்க சமுதாயமே முடிவு செய்யும். அப்படியெல்லாம் சொல்ல முடியாது, எல்லாம் மாறிகிட்டே வருது. எது மாறிவிட்டது. வேலைக்குப்போனாலும் தாலி செயினாக மாறியிருக்கிறது என்பதைத்தவிர வேறெதாவது
மாற்றத்தைக்காட்ட முடியுமா? மாறிப்போன காலத்தில் ஏன் தாலி? எதற்கு மெட்டி? இந்தக்கேள்விகள் எங்கே எழுகிறது ? படிப்பிற்கும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. பள்ளியிலே , கல்லூரிகளிலே, அலுவலங்களில் பெண்ணடிமைத்தனம் நடக்காமலா இருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் பார்வை ஆணாதிக்கமாக இருக்கும் போது மேற்கண்ட இடங்களில் மட்டும் எப்படி இல்லாமல் இருக்கும்?
கல்யாணம் ஆகியும் தாலிக்கட்டாமல் வாழ்ந்தால் அது விபச்சாரியாகத்தான் இருக்க முடியும் ” இது மெத்தப்படித்த ஐந்திலக்கவாதியின் பேச்சு. சொல்லப்படுகிறதே கல்வியில் முன்னேறிவிட்டால் எல்லாம் மாறிவிடுமென்று. மாறிவிட்டதா பெண்ணடிமைத்தனம்.நான் திருமணம் செய்து கொண்டேன் என்பதை ஏன் இன்னொருவனுக்கு தெரிவிக்க வேண்டும்? தெரிவிக்க வேண்டும், தெரிவித்தே ஆக வேண்டும் இல்லையென்றால் பாதுகாப்பு இல்லை. ஆணைப்பார்த்து திருமணம் ஆனவனா இல்லையா என்பதை கண்டறிய முடியாதே? அப்படியெனில் பாதுகாப்பு அவனுக்கு வேண்டாமா? பாதுகாப்பை நிர்ணயம் செய்பவனே அவன் தானே.

தான் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறோம் என்பதை பல பெண்களும் உணர்வதாயில்லை /  உணர்ந்தாலும் அதை தெரிவிப்பதாயில்லை. பிறப்பு முதல் பார்ப்பான் ஓதும் மந்திரத்திலிருந்து
ஒவ்வொன்றையும் எவ்வளவு அழகாய் பெண்ணை அடிமையாக்குவதற்கு வைத்திருக்கிறார்கள் ? தெரிந்திருந்தும் இது ஏன் உனக்குபுரியவில்லை?
“இந்த உலகத்தைப்பத்தி நான் ஏன் தெரிஞ்சிக்கணும்? தெரிஞ்சி என்ன ஆகப்போவுது? ஒண்ணும் மாத்த முடியாது. என்னோட கணவர் நான் துணிய துவச்சா அவர்தான் காயப்போடுவார், கடைக்கு அவர்தான் போவார், இவ்வளவு பண்றாங்க இல்ல”  உரிமை என்றால் என்னவென்றே தெரியாமலிருக்கும் உன்னைப்பார்த்து சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை.
எனக்கு பிடிச்சுருக்கு அதான் புர்கா போடுறேன் எனக்கு பிடிச்சுருக்கு அதான் தாலி கட்டிக்குறேன்,தோடு போடுறேன், கொலுசு மாட்டிக்குறேன் எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு. ஏன் உனக்கு பிடித்தது? எல்லாம் உனக்கு பிடிக்கவைக்கப்பட்டிருக்கிறது.  எனக்கு பிடித்திருக்கிறது என எல்லாப்பொருளையும் ஏற்கலாம், இவனைப்பிடித்திருக்கிறது என காதலனை சொல்லும் போதுதான் எது இனி உனக்கு பிடிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுவார்கள்.
” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக ”  என்று பலரும்தான் சொல்கிறார்கள். செயலில் ஈடுபட என்னத்தயக்கம்? இந்தக்காலத்திலும் பல பெண்கள் பள்ளிகளுக்குப்போனதில்லை, வெளியே போக அனுமதியில்லை. ஆனால் நீ அவ்விசயத்தினை பொறுத்த மட்டில் கொஞ்சம் சுதந்திரமாகத்தானே இருக்கிறாய்? உன் விடுதலையை அறிய /  பெற தடுப்பது எது? உன் பாதிப்பை உரக்கச்சொல்வதை எது தடுக்கிறது?
” அப்படி சொன்னால் இந்த சமுதாயம் எங்களை விமர்சிக்கும் எங்கள் பாதிப்பை சொன்னால் கேலி செய்யும்” நீ இந்த அளவுக்கு உரிமைகளைபெற்றிருக்கிறாயே அதைப்பெற பாடுபட்டவர்களை இந்தச்சமுதாயம் எப்படி கேலி பேசியிருக்கும்? மனதை வதைத்திருக்கும்? அவர்கள் போராட வில்லையா? உனக்கு உரிமைகளைப்பெற்றுத்தரவில்லையா?
நீ பயப்படுகிறாயே அந்த பயம் தான் அந்த சங்கிலி அதன் கண்ணிதான் அடிமைத்தனம் . உன்னைக் கேலி பேசுவார்கள் நீயும் திருப்பி பேசு, கேள்வியைக்கேள், தன் தாயை தன் சகோதரியை தன் மனைவியை அடிமையாய் நடத்தும் இச்சமுதாயத்தை கேலி செய். பெண்ணிற்கென்று தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. செல்லும் ஒவ்வொரு அங்குலத்திலும் வதைக்கப்படுகிறார். இதை எப்படித்தான் தீர்ப்பது?
அமைதியாய் இதைப் பேசாமாலே இருந்தால் போதுமா?

” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக………. ஆனால் எங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர் ”  உன் உரிமையைப்பற்றி பேசுவது நீ சுதந்திரமாக வாழ்வது உன் அப்பனின் கண்டிப்புக்கு ஆளாகுமா?
அப்படியெனில் நீ கண்டிப்பாய் பேசித்தான் ஆக வேண்டும். உன் அப்பன், சகோதரன் ,கணவன் எல்லோரையும் நீ  கண்டித்துதான் ஆக வேண்டும். போராடாமல் எதும் கிடைத்ததாய் சரித்திரம் இல்லை. போராடுவதற்கு முன் அதற்கு தயாராகவாவது இருக்க வேண்டும் இல்லையேல் அதைப்பற்றி கேட்கவாவது தயாராயிருக்க வேண்டும்.
ஒன்றை இழக்காமல் ஒன்றைப்பெற முடியாது. நம் அடிமைத்தனத்தை இழக்காது உரிமைகளைப்பெற முடியாது. சாதி என்ன சொல்லும் ? வீட்டில்என்ன சொல்லுவாங்க ? என சாக்கு சொல்லிக்கொண்டிருந்தால் எதையாவது பெற முடியுமா என்ன? சினிமாவுக்கு போகலாம், பார்க்கிற்கு போகலாம் ஆனால் உன் உரிமையைபேசும் ஒரு பத்திரிக்கையை படிக்கமாட்டேன், பெண் உரிமையைச்சொல்லும் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அடிமைத்தனத்தைத்தவிர


தொடர்புள்ள பதிவுகள்




ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்

ஜனவரி 14, 2010
ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
 
நான் சொன்னது தவறு தான்
சரியென்று சொல்லவில்லை
என் வார்த்தைகள் தடுமாறின
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லாவற்றையும்
ஆடைகளைந்து அம்மணமாய்
நீ பாலியல் வன்புணர்ச்சி
செய்து கொண்டிருக்கும் போது
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லோரின் உறுப்புக்களையும்
ஆராய்ச்சி செய்யும் உனக்கு
என்னதான் தேவை?
எனக்கு ஒன்றும் புரியவில்லை
இந்த ஆராய்ச்சியை மருத்துவத்தில்
செய்திருந்தால் பல பட்டங்கள் வாங்கியிருக்கலாமே?
நாங்கள் செய்த “பாவம்”
உன்னுடைய சமூக மருத்துவ கோலம்

விமர்சனங்கள் வந்தன
நான் என்ன செய்வேன் தோழரைப்போல்
நான்  இலக்கியவாதியா என்ன?
என்னால் முடியவில்லை
திட்டினேன்
மக்களின் மொழியில்
அது சரியென்று சொல்லவில்லை
உணர்ச்சிகள் மேலோங்கும் போது
அறிவு கரைந்து விடுகிறது

கரைந்து போன அறிவினை
மீட்டுக்கொண்டேன்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உனக்குத்தெரியுமா
காலைமுதல் மாலை வரை
ஓடாய் உழைத்து கருத்துப்போன
எங்கள் பெண் பாட்டாளியின்
வியர்வை கரிக்குமென்று
கண்டிப்பாய் வாய்ப்பில்லை
உன் வாய்கள் எதையோ சுவைத்து
அச்சுவைதனை
உலகிற்கு முரசரைந்து கட்டியம் கூறலாம்
வறண்டு போன விவசாயத்தை
இற்றுப்போன ஆடைகளை
ஒடுங்கிப்போன ஆலைகளை
உன் உணர்ச்சிகள் தருமா?

நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளை
அம்மணமாய் பாடையில் ஏற்று
உழைக்கும் மக்களின் உறுப்புக்களை
ஆராய்ச்சி செய் – கூடவே அவர்களுக்காக
உழைத்தவர்களையும்

எல்லாவற்றையும்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உன் அம்மணப்பேனாவுக்கு
நோபல் பரிசுகூட கிடைக்கலாம்

விவசாயம் நொடிந்து
விசம் குடித்து
செத்த பிணங்கள் அம்மணமாய்
பிணவறையில்
பளபளக்கும் ஆடையோடு
விரைந்து செல்
நிர்வாணக்கவிதைகள் எழுது
ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள்
உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்
 
 
1.லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
2.கவிதைகள்-அழகு

  2.

ஆண் என்ன? பெண் என்ன?

நவம்பர் 23, 2009

ஆண் என்ன? பெண் என்ன?

இன்றைக்கு ஒரு மீட்டிங் அசோக் நகர்ல இருக்கு வரீங்களா என்றேன் அலுவலகத்தில். ஆளாளுக்கு ஒரு சாக்கை சொன்னார்கள். அதில் ஒருவர் “உங்களால முடியுது பாருங்க எப்படித்தான் எப்படி மேனேஜ் பண்றீங்களோ”. “என்னங்க நான் என்னவோ சாகசம் பண்ணப்போறமாதிரி பேசறீங்க. மக்களோட பிரச்சினை சம்பந்தமா ஒரு மீட்டிங் அதை பாக்கறதுக்கோ அல்லது கேக்கறதுக்கோ தயராயில்லை அப்படித்தானே. உங்களோட நிகழ் கால பிரச்சினைகளை முகமுடி போட்டுகிட்டுதான் பாக்குறீங்க அது எத்தனை நாள் தாங்கும்?”

நான்  பர்மிசனை வாங்கிவிட்டு கிளம்பினேன், வருகிறேன் என்றவர்களை போய்க்கேட்டேன். “என்னபண்றது ஜாப் இருக்குல்ல”என்றார்கள். அன்று ஜாப் வரத்து குறைவு என்று எனக்கும் தெரியும். கார்டை ஸ்வைப் செய்து விட்டு லிப்டில் ஏறினேன். அதில் என்னுடன் பணி புரியும்  ஒரு பெண், ஒரு ஆண் வந்திருந்தார்கள். அவன் “என்னப்பா சீக்கிரம் கிளம்பிட்டே”என்க,
“ஒரு வேளை அவசரமா இருக்கு” என்றேன். ஏய் ஏதாவது டேட்டிங்கா வித்……… என்று இழுக்க எனக்கு சுளீரென்று கோபம் வந்தது. அருகில் வந்த பெண்ணோ சாதாரணமாக நின்று கொண்டு வந்தார். அவருக்கு கோபம் வந்த மாதிரி தெரியவில்லை.

நேரம் இப்பவே  ஆகிவிட்டது. இவனிடம் அதிகம் பேசிக்கொண்டிருக்க முடியாது, சுருக்கமாய் சொன்னேன் “டேட்டிங் இல்லப்பா மீட்டிங்க அங்க இப்படி எவனாவது பேசினா பீட்டிங்” . அவன் சிரித்தான். அடித்து பிடித்துக்கொண்டு கூட்டத்துக்கு போய்விட்டு வந்தேன். அடுத்தநாள் அப்பெண்ணிடம் கேட்டேன் “ஏங்க அவன் டேட்டிங் போறியான்னு என்னை கேக்குறான் உங்களுக்கு கோவமே வரலீயா?  டேட்டிங் அப்படிங்குற பேர்ல ஊர்மேயப்போறீயாங்குறான் பெண்களை இழிவுபடுத்துறான்  உங்களுக்கு ஏன் கோவம் வரல ?” அவர் அமைதியாய் இருந்தார்.

“பேசாம இருக்காதீங்க பேசுங்க” “அவர் சாதாரணமாத்தான சொன்னாரு அதை ஏன்?…….” “என்னது சாதாரணமா சொன்னானா? சரி அவனோ இல்லை வேற யாராவது பசங்க  ஒரு பெண்ணைப்பத்தி உங்க கிட்ட கிண்டலடிச்சா என்ன பண்ணுவீங்க? ” ” அவர் அமைதியாய் இருந்தார். “எவனுமே இது வரைக்கும் நான் அவளைபார்த்தேன் மூஞ்சு அப்படி இருந்துச்சு உங்ககிட்ட சொல்லி ஜோக் அடிச்சதே இல்லையா? அப்ப என்ன பண்ணுவீங்க?” “நான் எதுவுமே பேசமாட்டேன் அமைதியாயிருப்பேன் என்னால என்ன பண்ண முடியும்?” “என்ன பண்ண முடியுமா உங்க பாலியல்இனத்தை சேர்ந்த ஒருவரை ஒருத்தன் கேவலப்படுத்துறான் உங்களுக்கு அது ஏன் உரைக்கல? எனக்கு இருக்குற தன் மான உணர்ச்சி உங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது? சரி திட்டத்தான் தைரியம் இல்லை அங்க எந்த வெங்காயத்துக்கு இருக்குறீங்க குறைந்தபட்சம் அடுத்து வர நாட்களில அவன் கிட்ட பேசாம இருக்கவாவது முயற்சி செஞ்சுஇருக்கீங்களா என்ன?”

“எல்லாரும் உங்கள மாதிரி இருக்க முடியாது?  நீங்க வாழ்ந்துவந்த சூழல் அப்படி”  “தெளிவா சொல்லுங்க நான் சொல்றதே தப்பு அப்படிங்குறீங்களா? ஊர் மேயக்கூடாது ஆனால் அது தப்புன்னு ஊர்மேயரவனை  விமர்சிக்கவும் மாட்டேன். இது தான் உங்க கொள்கையா? அருமைங்க”  “என்ன பண்ண சொல்லுறீங்க?”
“உங்க பதில் நான் உங்களை கட்டாயப்படுத்துற மாதிரி இருக்குது. எப்படி வேணுமினாலும் வாழலாம் அது உங்க விருப்பம், ஒரு மனிதன் இப்படித்தான் வாழணுமின்னு கிடையாது அதுக்காக எது சுதந்திரம் எது விபச்சாரம்ன்னு கூடவா தெரியாது.

அதை விடுங்க போன மாசம் ஒரு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் வரேன் சொல்லிட்டு கடைசியில போனை எடுக்க வே இல்லை. புரிஞ்சுக்கோங்க உங்க கலாச்சாரம் எதையுமே வெளிப்படையா முன்வைக்காத ஒரு நபரா உங்களை மாத்தியிருக்கு, கேட்டதுக்கு சினிமாவுக்கு போய்ட்டேன்னீங்க. அவசராவசரமா அடிச்சு புடிச்சு தியேட்டருல சீட் வாங்கி சினிமா பார்க்கத்தெரியுது ஆனா உங்களோட பிரச்சினையப்பத்தி மக்கள் பிரச்சினையப்பத்தி பேசத்தோணமாட்டேங்குது இல்லையா? அதுக்குப்பேர் என்னங்க எதுக்காக வாழறோம்ன்னு கூடத்தெரியாம வாழ்க்கைய ஓட்டிக்கிடு இருக்கமா இல்லையா? டிரஸ்ல இருந்து செருப்பு வரைக்கும் மேட்சிங்கா போடத்தெரியுற உங்களால டிரெஸ்ஸே இல்லாம இருக்குறவங்களப்பத்தி ஏன் சிந்திக்க முடியல?”

“ஏதோ என்னால முடிஞ்ச உதவியை நான் பன்ணிட்டுதான் வரேன்” “என்ன உதவி?” “பிச்சைக்காரங்களுக்கு காசு போடுவேன் அப்புறம்……..” “பிச்சைகாரனுக்கு காசு போடுறதால நம்ம நாடு அடிமைத்தனத்துல இருந்து மாறிடுமா? விவசாயத்தை திட்டமிட்டு அழிச்சாங்களே அது கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணுனா மாறிடுமா?பெண்களை கிண்டலடிக்குறவனெல்லாம் திருந்திவானா என்ன?”

“புதுசா சினிமாபோட்டா போகத்தெரியுது? இது ஏங்க தெரியமாட்டேங்குது?, தெரியாம இல்லைங்க எல்லாம் தெரியும் தான் சாவறதப்பத்தி தெரிஞ்சுக்கக்கூடாதுன்னு நினைக்குறீங்க, நீங்க பாதிக்கப்படுறதப்பத்தி பேச ஆரம்பிச்சா உங்க நண்பர்கள் வட்டாரம் குறஞ்சுபோயிடும் அப்புறம் சினிமாவுக்கு அல்லது ஊர் சுத்தவோ போகமுடியாது இதுதான உங்க கவலை. மத்தப்பொண்ணுங்களைபத்தி கிண்டலடிச்சா அங்க சிரிச்சுக்கிட்டு நிக்குறது அப்புறம் அவனே நம்மகிட்ட தப்பா நடந்துகிட முயற்சி பண்ணுனா அவன் கிட்ட மட்டும் பேசாம மத்தபடி அதே பேச்சு அதேவகை மத்தவங்களோட தொடங்குறது. நாமும் சேப்டியா இருக்கணும் மத்தபடி ஊர் சுத்தியும் ஆகணும் இல்லையா?

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. மற்றவன் சாவும் போது அதைபத்தி பேசாதவனுடைய சாவை பாரும் பேசப்போறதில்லை. எவ்வளவோ பேசுறீங்க அந்தப்படம் நல்லா இருந்துச்சு ஏய் உன் டிரஸ் நல்லா இருக்கு இந்த சுடி எங்க தைச்ச எவ்வளவோ விவாதம் பன்ணுறீங்க வெட்டியா ஜோதிகாவுக்கு கல்யாணம் நடக்குமான்னு தொடங்கி சிம்புவோட காதலி வரைக்கும், என்னைக்காவது உங்களப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா? ஒரு பெண்ணுக்குரிய,மனிதனுக்குரிய சுயமரியாதையோட வாழ்ந்து இருக்கீங்களா? ஆணாதிக்கத்தைப்பத்தி, சாதீயத்தைபத்தி, உங்களை நாயிலும்கீழா நினைக்குறானே இந்த கம்பெனி அவனைப்பத்தி,பாதிக்கப்பட்ட  பெண்ணைப்பத்தி பேசியிருக்கீங்களா?

“அப்படி பேசவிடாம எது தடுக்குது உங்க அடிமைத்தனத்தை தவிர, எதுக்கெடுத்தாலும் சொல்லுறீங்க  நான் அடிமை இல்லை எனக்காகத்தான் வாழறேன் எனக்கென்னவோ அப்படித்தெரியலையே உங்க உரிமைக்காகவே பேசாத நீங்க மத்தவங்களுக்காகவா பேசப்போறீங்க ” அவர் அமைதியாகவே இருந்தார் “உங்க அமைதி உங்களுக்கு எப்போதும்  நல்லது இல்லை, அதுதான் உங்களை கேவலப்படுத்தும் போதும் உங்களை அடங்கிப்போக வைக்குது” அவர் மீண்டும் அமைதியாகவே இருந்தார். “உங்களுக்கு இந்த மானங்கெட்ட கலாச்சாரத்தோடு  நுகர்வியலும் தேவை உங்களையும் பாதுகாத்துக்கணும், உங்க வாழ்க்கையை நீங்க தீர்மானிச்சுட்டீங்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால்ன்னு கண்டிப்பா ஒருநாள் மூஞ்சில சேறு பூசி நிக்கப்போறீங்க. ஒண்ணும் மட்டும் உண்மைங்க அடிமையில ஆண் என்ன பெண் என்ன?”

B.P.O.அடிமை.காம்-பகுதி 5 – அடிமைகளின் ஆசை மொழி

மார்ச் 25, 2009

B.P.O.அடிமை.காம்-பகுதி 5

அடிமைகளின் ஆசை மொழி

part5

வழக்கம் போலவே காலையில் பஸ்ஸை பிடித்து ரயில்வே ஸ்டேசன் வந்து அப்புறம் சைதாப் பேட்டையில் இறங்கி பிறகு 19 Bக்காக காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. பக்கத்தில் ஒருவர் கேட்டார்.19 B வரலியா? “பரதேசி நாய்ங்க எங்க பஸ்ஸ உடறானுங்க? வாரம் ஆனா அத்தன பஸ் உட்டோம் இத்தன பஸ் உட்டோம்ன்னு சொல்லுறானுங்க இந்த ரூட் பஸ் மட்டும் அப்படியே இருக்குதே” என புலம்ப ஆரம்பித்தேன்.அவரும் சில கெட்ட வார்த்தைகளோடு ஆரம்பித்தார் முடிப்பதற்குள் வந்துவிட்டது

பஸ் எங்கேயிருந்துதான் அவ்வளவு கூட்டமோ சட சடவெனெ ஏறினார்கள் . எனக்கு பத்திரமாக நிற்பதற்கு இடம் கிடைத்தது. மெதுவாக மாட்டு வண்டிபோல இயங்க ஆரம்பித்தது . ஒரு நான்கு ஸ்டாப்தான்சென்றிருக்கும் மத்தியகைலாசத்துக்கு சற்று முன் வண்டியை நிறுத்திவிட்டார்கள். நடத்துனர் மெதுவாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.ஆளாளுக்கு கத்திக்கொண்டிருந்தோம்.எதையும் காதில் போடவில்லை.15 நிமிட இடைவேளைக்கு பிறகு கிளம்பியது. கொஞ்ச நேர பயணம். நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கினேன். வெயிலோ பட்டய கிளப்ப தலையில் கர்ச்சீப்பை கவிழ்த்துக்கொண்டு ஓடினேன்.

செய்ய வேண்டிய சம்பிரதாய வேலைகளை செய்து விட்டு அலுவலகம் உள்ளே சென்றிருந்தேன். ரொம்ப நாள் கழித்து டே ஷிப்ட்-ல் வந்திருந்தேன். எல்லோரையும் விசாரித்து விட்டு அமர்ந்தேன். என்னுடைய டீமைச்சேர்ந்த பெண் வந்து அமர்ந்தார்.அவரிடம் ஏதோ ஒரு மாற்றம். தெரிந்து விட்டது கண்ணாடியை மாற்றிவிட்டு லென்ஸ் போட்டிருந்தார். வேண்டுமென்றே கேட்டேன்” என்னங்க மூஞ்செல்லாம் வீங்கியிருக்கு வரவழியில விழுந்துட்டீங்களா? இல்ல உடம்பு சரியில்லயா?” “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே. லென்ஸ் போடிருக்கேன் ” என்றபடியே அவர் வார்த்தையில் ஒரு பெருமிதம். எனக்கு ஒரு சந்தேகம்” எதுக்காக லென்ஸ் போட்டிருப்பார்?”.

அடுத்த இரு நாட்கள் முழுவதும் வேறு வேலைகளில் மூழ்கிப்போனதால் அதைப்பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆனால் வந்து அப்பெண்ணிடம் பேச இதை ஒரு சாக்காக வைத்து கொண்டு “இது நல்லாயிருக்கு”ஏன் மாத்தீட்டீங்க” என்ற பலரின் கேள்விகள் என் காதில் விழுந்து கொண்டே இருந்தன.

அன்று மாலை வேலை முடிந்து செல்லும் போது கேட்டேன் “எதுக்குங்க லென்ஸ் போட்டீங்க?”. “கண்ணாடி போட்டிருக்கிற்து அன் ஈஸியா இருந்துச்சு அதான்” தய்வு செய்து தப்பா எடுத்துக்காதீங்க அன் ஈஸின்னா கொஞ்சம் புரியல சொல்லுங்க”. “வேல செய்ய கஸ்டமா இருக்கு.” “அப்புடியா ஆமா நீங்க என்ன வேல செய்யுறீங்க” என்றேன். ஏன் தெரியாதா என்றபடி பேரைச் சொன்னார். “வேல செய்ய அந்தக்கண்ணாடி என்ன தொந்தரவா இருந்துச்சு நீங்க என்ன மரம் ஏறப்போறீங்களா? இல்ல ஒட்டப்பந்தய வீராங்கனையா? உங்க வேலைக்கு எந்தவிதத்துல அது தடயா இருந்துச்சு? ஒரு விசயத்த செய்யுறீங்கன்னா எதுக்குன்னே தெரியாமவே செய்யுறீங்களே எப்புடீங்க?”என்றேன்.

“அப்படி எப்படி சொல்லுறீங்க பத்து வருசம் முன்னாடி கிஷ்கிந்தா போனோம் அப்ப கண்ணாடி கீழ விழுந்துச்சு ,அப்புறம் எங்க அண்ணன் கூட சொன்னான் அதான் மாத்துனேன்”.    “அப்ப உங்க தேவைக்கு மாத்துல உங்க அண்ணன் தேவைக்காக மாத்துனீங்களா?இல்ல பத்து வருசமா அந்த விசயத்த நினச்சுகிட்டேயிருந்து லென்ஸ் போட்டீங்களா? பதில் சொல்லுங்க” என்றேன் அதற்கு பதில் இல்லை.

அறிவியலின் எந்த கண்டுபிடிப்பிற்கும் நான் எதிரா பேசலை அறிவியல் தான் கம்யூனிசம் . தன்னுடைய தேவை என்பதை மீறி மற்றவர்களின் தேவைக்காக தன்னை மாற்றிகொள்வது அப்படீங்குற விசயத்துல தான் எல்லோரும் தீவிரமா இருக்காங்க” ஏன் ஒரு விசயத்த செஞ்சீங்கன்னு கூட அதுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்ககுறீங்களே அதுதான் முதலாளித்துவத்தோட வெற்றி”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னோட தேவைக்குதான் நான் வாழறேன்” என்ற படி கிளம்பினார். அவ்வாரம் முழுவதும் வேலைப்பளு காரணமாக அவ்விசயத்தப்பற்றி பேசமுடியவில்லை.

அவ்வாரம் முடிந்து அடுத்த வாரம் நைட் ஷிப்ட்ல் இருந்தேன். எல்லோருக்கும் மெயில் வந்திருந்தது. அலுவலகத்தில் பெண்கள் எல்லோரும் பெண்கள் தின கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டார்களாம்.அந்த புகைப்படங்கள் மெயின் சர்வரில் போட்டிருந்தார்கள். விபி,மேனேஜர் ஹெச்.ஆர்.மற்ற பெண் தொழிலாளர்கள் உட்பட சமமாய் உட்கார்ந்து போஸ் கொடுத்திருதார்கள்.இன்னொரு போட்டோவில் கேக் சாப்பிட்டுக்கொண்டிருதார்கள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர் நோக்கினேன்.

எதிர்பார்த்த வாரமும் வர நேரமும் கைகூட நான் ஆரம்பித்தேன்” போட்டோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன அவ்வளவு ஜாலியா இருந்தீங்க, எல்லோரும் புடவைக்கட்டீருக்கீங்களே? எப்புடி முன்னாடியே சொன்னாங்களா?” ஆமா முன்னாடி நாள் எல்லோரையும் ஹெச் ஆர் கூப்பிட்டு சொன்னாங்க”.

“அப்புடியா சொன்ன வுடனே புடவைய கட்டீட்டு வந்துட்டீங்களா பெண்கள் தினம்னா என்னன்னு தெரியுமா ? அமெரிக்காவுல பெண்கள் தன்னோட கொத்தடிமைத்தனத்த எதிர்த்து போராடினாங்க ஆனா நீங்க எல்லாம் நவீன கொத்தடிமை பீபிஓவில அடிக்கவோ திட்டவோ வேண்டாம் சொன்னாவே செஞ்சுடுறீங்க இல்லயா?”.

” புடவை கட்டுறது என்ன தப்பு ?. “புடவை கட்டுறதப்பத்தி பேசல உங்களுக்கு எது தேவையோ அதை உடுத்த உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா மற்றவங்களோட கட்டளைய இன்பமா ஏற்று அடிமையா வாழறீங்கன்னுதான் சொல்லுறேன்,

அதாவது நீங்க உழைக்குற உழைப்புக்கு இங்க சம்பளம் இருக்கா இல்ல, காலையில வந்துட்டு தினமும் குறஞ்சது ரெண்டு மணி நேரம் ஓ.டி பாக்குறீங்களே அதுக்கு ஏதாவது அலவன்ஸ் தராங்களா? இல்ல நீங்க ஒரு பெண் அப்புடீங்கறதால எத்தன பிரச்சினய சந்திச்சு இருப்பீங்க அதப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா?இல்ல நவீன கொத்தடிமையா மாறிக்கிட்டு வர நமக்கு மகளிர் தினம் நாளைக்கு சேலை கட்டிட்டு வான்னு சொன்னா எதுக்கு வரணும் என்ன அவசியம்?

சுரண்டுகிற வி.பியும், ஹெச்.ஆரும். சுரண்டப்படுகிற எங்களோட எப்புடி மகளிர் தினம் கொண்டாடமுடியும்ன்னு ஏன் பேசல?”…………………….

சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன் ” அதே சீனியர் ஹெஆர் பசங்கள கூப்பிட்டு ஏப்பா எல்லோரும் வேட்டி கட்டிட்டு வாங்கன்னு சொன்னா எல்லோரும் கட்டிட்டு வருவாங்களா என்ன? ஆனா புடவை கட்டிட்டு வான்னு பெண்கள்கிட்ட சொன்னா உடனே தன்னோட தேசியக்கடமையா செய்யுறீங்க ஆனா ……………….”என்றேன்

அதற்குள் அவர் இடை மறித்தார் ” உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்களே எனக்கு பிடிச்சுருக்கு அதான் போட்டேன், எனக்கு பிடிச்சதான் நான் செய்யுறேன்.மத்தவங்களுக்காக வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” .

சரிங்க ” என்ன சைக்கிள் வச்சுருக்கீங்க?” .”லேடிபேர்ட்”என்றார். “ஏன் ஹீரோ சைக்கிள் வாங்கல அது லேடி பேர்ட விட தாங்கும் விலையும் குறைவுதான”. “எனக்கு பிடிக்கல” என்றார்.” எனக்கு பிடிக்குது பிடிக்கல என்பத யார் தீர்மானிக்குறா நீங்களா இல்ல அந்த சைக்கிள் கம்பெனிக்காரனா? ஏன்னா முதலாளி தீர்மானிக்குறான் இதுக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்தா இப்படி வியாபாரம் ஆகும் என்று.

ஒரு காலத்துல கண்ணாடிக்குன்னு அத்தன விளம்பரம் வந்துச்சு மருத்துவமனைகள் மூலமா ஆனா இப்ப அதே மருத்துவ மனைகள் என்ன சொல்லுது கண்ணாடி போடுறது கண்ணுக்கு விலங்கு மாட்டுறது போலவாம். லென்ஸ் போடுங்க லேசர் சிகிச்சை செய்யுங்க என்று இப்ப சொல்லுங்க நீங்க உண்மையாகவே உங்க நல்லதுக்குதான் லென்ஸ் போட்டீங்களா? “

“நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்குறோம் இந்த சைக்கிள் தான் வாங்கணும் ஏன்னா அது லேடிஸ்க்குன்னு உருவானது, என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன கண்ணாடின்னு கூப்புடுறாங்க ,டூர்க்கு போனப்ப என் பிரண்ட் சொன்னா ஏன் இன்னும் கண்ணாடி போட்டிருக்க லென்ஸ் போடலியான்னு?.இது மட்டுமல்ல பேர் அண்ட் லவ்லியில இருந்து அடிக்குற செண்ட் வரைக்கும் மனிதனை ஒரு பொருளா மாத்தி இருக்கு . கருப்பா இருந்தா தன்னம்பிக்கை போயிடும், வாழ்க்கையே நாசமாபோயிடும் பேர் அண்ட் லவ்லி போடுன்னு சொல்லுறான்.அந்த விளம்பரம் புடிக்குதோ இல்லையோ ஏதாவது கிரீமை வாங்கி பூசிக்கிறது.”

“இப்படி ஒண்ணு ரெண்டு இல்ல வாழ்க்கயில எல்லா விசயத்தையும் ஏன் வாழ்க்கையையே மத்தவங்களுக்காகத்தான் வாழறோம். உங்களுக்காக உண்மையிலே ஒண்ணு பண்ணனுன்னு நினச்சீங்கன்னா போராடுங்க , பெண்கள் அடக்கப்படும் போது, உழைக்கிற மக்கள் பாதிக்கப்படும்போது ஏன் நீங்க பாதிக்கப்படும்போதும் போராடுங்க.ஆனா பலரும் அதப்பத்தி பேசவே தயாராயில்லை அப்படீங்கற்துதான் உண்மை. நல்லா  யோசிச்சுப்பாருங்க தியேட்டர் வாசல்ல கால்கடுக்க நிக்கத்தெரியுது,

கல்ச்சுரல் புரோகிராம்ல ஆடத்தெரியுது,ஆனா மக்களோட நம்மளோட பிரச்சனயப்பத்தி ஏன் பேச முடியல எது தடுக்குது ?.எது உங்கள மக்களை பத்தி பேசவிடாம தடுக்குதோ அதுதான் உங்கள தியேட்டர் வாசலில நிக்கவும் , உங்க முன்னாடியே கூட வேல செய்யுறவன் ஒரு பெண்ணை பத்தி கிண்டலடிச்சு பேசுனா அமைதியா இருக்கவும் செய்யுது. யோசிச்சு பாருங்க யாருக்காகத்தான் நீங்க வாழறீங்க?அது ஒண்ணுதான் விடுதலையை பெற்றுத்தரும்.அதில்லாம நீங்க செய்யுற எந்த வேலையும் உங்களை அடிமையாக நீடிக்கவே உதவும்.”

அப்பெண் அப்போது பேசவில்லை.பின்வரும் நாட்களில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.இது நடந்து எப்படியும் ஒன்றரையாண்டுகள் இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன் பேச நேர்ந்த போது கூட அந்த அடிமைத்தனத்தின் சாயல் அவரிடமிருந்து துளியும் விலகவில்லை என்பதனை அவரின் மவுனமே காட்டிக்கொடுத்தது.

ஒரு வேளை மவுனங்கள் தான் அடிமைகளின் ஆசைமொழியோ என்னவோ?

I.T-ன் ஆணாதிக்கம்

திசெம்பர் 24, 2008

it1I.T-ன் ஆணாதிக்கம்
தொடரும் ஆணாதிக்கமும் அடங்கிப்போன பெண்ணியமும்

 நம் சமுதாயத்தில்  பெண்கள் போலீசு , நர்சு வேலைக்கு செல்வதை  அருவறுப்பாகவே நீண்டகாலமாக பார்த்து வந்தனர்.அவர்களை பற்றி மோசமான கருத்தினை பதிவு செய்து  உலாவ விட்டு விட்டார்கள்.மாப்பிள்ளைக்கு பெண் தேடும் போது கூட சொல்வார்கள் “பொண்ணு வேலைக்கு போனா நல்லதுதான் ஆனா நர்சு வேலைன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்””வேற வழியில்ல அவங்களுக்கு மேலதிகாரிகளுக்கு இணங்கித்தான் நடந்தாகவேண்டும்”.

“ஹவுஸ்  நர்ஸ் அப்படீனாவே அது விபச்சார தொழில்தான்”இது ஒரு எம்.டி.படித்த மருத்துவர் உதிர்த்த வார்த்தை,ஆணாதிக்க ஆணோ அல்லது பெண்ணோ தான் செல்லும் இடமெல்லாம் ஆணாதிக்க சிந்தனையை பரப்பி அதை பொது கருத்தாக்குகின்றனர்.அதில் வெற்றியும் பெறுகின்றனர்.இவர்களின் வாய்க்கு கிடைத்த புது அவல் தான் “ஐ.டி பெண்கள்”.ஐடியில் பணிபுரியும் பென்களை பற்றி சில கருத்துக்கள்  தூவப்படுகின்றன”ஐடி இருக்கிறவ  ஒருத்திகூட யோக்கியமா இருக்கமாட்டாளுக,பொட்ட கழுதங்க கையில காசு வந்தவுடன் ஆட்டம் போடறாங்க “இந்த கூற்றுகள் ஒரு புறம் இருக்க,வினவு எழுதியிருந்த ஐடி கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த கோமாளிகள்” நீ என்னா சொல்லற,இங்கே யாரும் பார்சியாலிட்டி பார்க்குறதுல்ல தெரியுமோ? மனிதனை இங்கே தான் மதிக்கறாங்க. உண்மையில் நான் பழகிய பல பேரிடம் ஒருவர் கூட “எங்களை மனுசனா மதிக்கறாங்க என்று சொன்னதே இல்லை” ஒரு பெண் தொழிலாளி கூட மனம் திறந்து கூறியதில்லை”இங்கெ பாகு பாடு இல்லாமத்தான்  நாங்க இருக்கோம்” என்று.

உண்மையை சொன்னால் மற்ற இடத்தில் விட ஐடி,பிபீஓக்களில் பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப்படுகின்றது.இதுவே ஆணாதிக்க அரிப்புக்கு மூக்கிய காரணம்.சம்பளம் மட்டும் தான் இணையாக இருக்கின்றதே தவிர மற்ற படி வெளியே தொடரு அதே”பாலியல் ரீதியிலான தொல்லைகள்,கேலிகள்,ஆபாசப்பேச்சுக்கள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன ஐடி,பிபீஓ பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள்.”ஐடி,பிபீஓவந்த பிறகு பெண்கள் ரொம்பவே முன்னேறிட்டாங்க” என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது,அந்த ஒலியில் பெண்களின் மெல்லிய  விசும்பல் சத்தம் மறைந்து போகின்றது.

ஐடி,பிபீஓ-ல் சங்கம் கட்ட உரிமை யில்லாத காரணத்தால் இங்கு மற்ற தொழிலகங்களை போலன்றி தொழிலாளர்கள் உரிமைகளை பேசாது பெருமைகளையே பேச வேண்டும்.எதையும் பழகிக்கொள்,பழக்கிக்கொள் இது தான் ஐடி,பிபீஓக்களின் தார்மீகக்கட்டளை.எப்படி பள்ளி கல்லூரியில் ஆண்களை விட பெண்கள் குறைவாயிருக்கின்றார்களோ அதைப்போலவே ஐடி,பிபீஓ லும் இருக்கின்றது.எப்படி ஒரு ஆண்பள்ளி,கல்லூரிகளில் பெண்ணை நுகரத்துணிந்தானோ அதையே இங்கேயும் தொடர்கின்றான்.
ஐடி,பிபீஓ-ல் பெண்ணுக்கு உரிமையெல்லாம் கிடையாது. இருக்கும் முக்கிய கடமை “மற்றவர்கள் நுகர்வதற்கு தன்னை தயார் செய்வதே. இனி கதைக்குள் சென்று மீண்டும் கட்டுரையை தொடருவோம்.
—————————————————————————————————————————————————————————–

நல்லதூக்கம் ஹாஸ்டல் ரூம் மேட் எழுப்பினாள்”ஏய் எந்திரிடீ மணி 7.30 ஆயிடுச்சு”. .பஸ் 8.30 க்கு ஒண்ணு இருக்கு அதை விட்டா 9 மணிக்கு தான் பேரு வைச்சிருக்கானுங்க ஐடி ஹைவே என்று என முனகியபடியே எழுந்தேன்.கண்ணெல்லாம் ஒரே எரிச்சல் .அப்பா அம்மவிடம் போனில் இரவு 2 வரை சண்டை”என்னா எப்ப பார்த்தாலும் ரொம்ப அடம் புடிக்கற மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து திங்க கிழமை வராங்க  நீ லீவு போட்டுட்டு ஊருக்கு வா,ஏண்டி நீ கல்யானம் பன்னிக்குவியா மாட்டியா”இப்படி வசைகள் வாரத்துக்கு இருமுறையாவது நடக்கும்.அடுத்த நாள் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல பேசுவார்கள். நான் ஊரிலிருந்து வந்து ரெண்டு வருச மாகுது காலேஜ் முடிந்தவுடனே வந்தேன்.அண்ணன்  இங்கே தான் எச் சி ல்-ல வேலை செய்யறான்.கடந்த ஆறு மாசமா அப்பாவும் அண்ணனும் மாறி மாறி “சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணு” நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஒரு வேளை  அண்னனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சோ என்னவோ என்ன கல்யாணம் பண்னச் சொல்லறான்.வாரத்தில் ஆறு நாள் வேலை ஞயிறு மட்டும் தான் விடுமுறை காலையிலேயே அண்ணன் போன் செய்வான் இன்னைக்கு எங்கேயெல்லாம் போற சொல்லு சினிமாவுக்கா நான் கூட்டிடு போறேன் ,கடைக்கா நான் கூட்டிட்டு போறேன்,இன்னைக்கு நீ போகாதே நான் வெளிய போறேன்.சொல்லாமல் எங்கேயாவது சென்று விட்டு வந்தால் எங்கே போனேன் என்று லிஸ்ட் ஒப்பிக்க வேண்டும்.ஆரம்பத்தில் பாசம் என நினைத்தேன் பின்னாளில் தான் தெரிந்தது அவன் தான் இலவச போலீசு என்று.

குளித்து விட்டு சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு தெருவில் பேருந்து நிலையத்தை நோக்கி நடைப்போட்டேன்.வழக்கமாய் தெரிந்த முகங்கள் தெருவில் பட்டன. நின்று கொண்டிருந்த பஸ்-ல் ஏறினேன்.மகளிர் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்து இருந்தனர். நடத்துனர் எதுவும் பேசாது டிக்கெட்  கொடுத்துக்கொண்டிருந்தார்.யாராவது கேட்பார்கள் என்று பேருந்தில் இருந்த பெண்கள் எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தோம்.யாரும் கேட்கவில்லை பேருந்து நகரத்தொடங்கியது  அப்படியே என் நினைவுகளும்.இந்த கம்பெனியில் சேர்ந்து 1 வருடம் இருக்கும் அடிக்கடி மிஸ்டு கால் வருகின்றது.கால் வந்தவுடன் எடுத்து ஹலோ என்றதுமே கட்செய்கிறார்கள்
போன மாதம் ஒரு கால் அவன் என்னோடு வேலை செய்யும் சீனியர் அவனிடம் தான் சந்தேகங்களை கேட்பேன் .”ஹலோ “என்றேன்.
நான்தான் முகில்   என்றபடி பேசிக்கொண்டிருந்தான் தேவையில்லாமல். இறுதியில் பயந்த படியே ” நான்………….” என்றான் . நான் “இப்படியெல்லாம் பேசறமாதிரியி ¢£ருந்தா என்கிட்ட பேசாதீங்க ” அவனோ தொடர்ந்து கொண்டே இருந்தான் டக்கென போனை ஆப்  செய்தேன் .எனக்கு பயமாய் இருந்தது நாளைக்கு ஆபீசில் என்ன பேசிக்கிட்டு இருப்பானோ?.அடுத்த நாள் முதல் அவன் என்னிட நேராய் பேசாது  அவனின் நண்பர்களிடம் பேசுவது போல ஜாடையாக பேசி வந்தான்…..
யாரோ நெருக்குவது போலிருந்தது ஒரு எருமை என்மேல் உரசிக்கொண்டிருந்தான். நான் முறைத்தபடியே  நகர்ந்து சென்றேன்.அந்த எருமையோ வெற்றி பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தது.அதற்குமேல் அவனின் முகத்தை பார்க்கவில்லை.பஸ் ஸ்டாப் வர பொறுமையாக  இறங்கினேன்.பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டு படிக்கட்டை நோக்கி வரும் போதே  சிரிப்புக்களும் கேலிகளும் அதிகமாகிவிடும். நாங்கள் எதையும் கேளாமல் செவிடர்களாய்தானிருக்க வேண்டும்.சமூகம் சொல்லித்தந்திருக்கின்றது நாங்கள் பெண்மையாம் அதிர்ந்து பேசினால் கூட வாயாடியாக்கப்படுவோம்.

அலுவலகத்துக்குள் வந்தேன் ஹாய் சொல்லிவிட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.  சரியாக ஒரு மணி நேரம் ஆன உடன் சிலர் ஒவ்வொரு வராய் வந்து அருகிலுள்ளவரிடம் பேசுவது போல ஆபாசக்கதைகளையும்,அந்தப்பொண்ணை பார்த்தேன் என்று கதைஅளந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவுக்கு பெண் ஊழியர்களோடு உணவருந்தினேன்.சினிமா முதல் எல்லா கதைகளையும் பேசிக்கொண்டிருப்போம்.மறந்து மருந்துக்குகூட எங்களின் பாதிப்புக்களை பேசியதில்லை.மீண்டும் வேலை தொடர்ந்தது.சுமார் ஆறு மணிவாக்கில் பக்கத்து டீம் சூப்பர் வைசர் வந்தார் அருகில் உட்கார்ந்துக் கேட்காமலேயே சாப்வேர் டவுட்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்  பிறகு தேவையில்லாமல் மொன்னை ஜோக்குகளை அல்ளிவிட்டு சிரித்து கொண்டு இருந்தார்.மணியோ 7.30 ஆனது “என்னங்க நீங்க கிளம்புலயா?” என்ற படி அவர் கிளம்பினார். இது வாரத்துக்கு 3 முறையாவது நடக்கும்.அலுவலகத்தில் இப்படி பல பெண்களிடத்தில் தன்னை அறிவாளியாக காட்டிக்கொண்டு திரிபவர்கள் ஆண்களிடத்தில் பெருமைக்குரியவர்களாகின்றனர். நாங்கள் இப்படி சூப்பர் வைசர் போல மேலதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் பஸ்ஸில் செய்ததை போல் விலகிக்கூட செல்லமுடியாது சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பஸ்ஸில் இருந்த பொறுக்கிகளால்  எங்களை சிரிக்க வைக்க முடியாது எத்தனை ஜோக்குகளை சொன்னாலும்.மேலதிகாரிகளிடம் சிரிப்பே இல்லை யென்றாலும் கூட சிரித்துதான் ஆக வேண்டும்.இவர்களின் தூண்டிலில் மாட்டிய, தானாய் மாட்டிக்கொள்கிறவர்கள் யாரும் எப்பொதும் பெண்களாகிய எங்களுக்குள் இதைப்பற்றீ  பேசியதே இல்லை.பேசவும் முடியாது.அதை பேசினால் கூட இந்த சமூகம் எங்களை குற்றவாளியாக்கிவிடும்.பிரச்சினையை எதிகொள்ளும் நாங்கள் அமைதியாக பொறுமையாக  ஊமையாகத்தான் இருக்கின்றோம்.எங்களை கேலி செய்யும் போது நாங்கள் வாய்மூடி இருப்பது போலவே நன்றாக பழகு ஆண் ஊழியர்களும் இருக்கின்றார்கள்.எங்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கின்றது ஆண்களின் உரிமை ஆதிக்கம் செய்வது,பெண்களின் உரிமை அமைதியாய் இருப்பது.
————————————————————————————————————————————————————————
 

ஆணாதிக்கம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது  குறிப்பாக ஐடி பிபீஓவில் பெண்கள் மூன்று நிலையாக  வகைப்படுத்திக்கொள்கிறார்கள்.ஆணாதிகத்தை எதிர்கொள்ளாமல் விலகிச்செல்லல்,ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொல்லல்,அதை எதிர்த்து போராடுவது-இது மிகசொற்பமே.முதல்வகை பெண்கள் தான் இங்கு ஆகப்பெரும்பாலும்,சக ஊழியன் அனாகரீகமாக நடந்துகொண்டான் என்பதை வெளிப்படுத்துவதில்லை,இதனால் தங்கள் மானம் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள்.அதற்காக அவர்களை  குற்றம் சொல்ல முடியாது.கற்பு என்பதற்கான வரையரையை ஆணாதிக்கம் விரிவு படுதிக்கொண்டே போகின்றது.

பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும்? ஆண் ஒருவன் பார்க்கும் போது தலையை குனியவேண்டும்,பேருந்தில் என்வனாவது உரசினால் விலகிப்போகவேண்டும்.எதுக்குடா இப்படி இடிக்குற என்றால் பெண்மையின் புனிதம் கெட்டு விடும்.பள்ளி,கல்லூரி சலைகள்,பணிபுரியுமிடம் எங்கும் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பலருக்கும் ஆணாதிக்கம் என்றாலே கோபம் பொத்துக்கொண்டு கோபம் வருகின்றது. தனியாக சக பெண் ஊழியரை ஆபாசமாக பேசுவது,அப்பெண்ணிடம் இயல்பாக பேசுவது இப்படி செய்பவர்கள் பொறுக்கிகள் எனில் அதை அமைதியாகவோ அல்லது களிப்படைந்து கேட்டுக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் தவிர வேறென்ன.உன் தாயை ஒருவன் விபச்சாரி எனும் பொருள் படும் படி பேசினால் வரும் கோபம் உனக்குஏன் சக ஊழியரை அப்படி கீழ்த்தரமாக பேசும் போது  கோபம்  வரவில்லை.அதற்கு பேரென்ன?தன்னுடன் வேலை செய்யும் பெண் பாதிக்கப்பட்கிறார் மற்றவனால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் எனில் உன்னை அமைதியாய் இருக்க வைப்பது எது?
ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொள்ளல்-

இவ்வகைப்பெண்களிடம் பெண்ணுரிமை பூத்தா குலுங்குகிறது? இது பென்ணடிமைத்தனத்தின், ஆணாதிக்கத்தின் மறு முகம்.ஒரு ஆண் எப்படி மற்றவரை கவர்வத்ற்காக திரிகின்றானோ அதைப் போலவே இப்பெண்ணும் திரிகின்றார்.தொடர்ச்சியான ஆணாதிக்கத்தின் தாக்குதல்கள் படிபடியாக இனிக்க ஆரம்பித்து விடுகின்றது.அதற்கு ஏற்ற படி த்ப்பாமல்  தாளம் போடுகின்றனர்..இங்கும் ஆண்களின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றிக்கொள்வதால் விசும்பல்கள் எழாது பெருமையே கொள்கின்றனர்.இதையே சாக்காக வைத்து ஆணாதிக்க வாதிகள் கூக்குரலிடுகிறார்கள்”இவளுங்க கையில பனம் வந்த வுடனே எப்படி ஆடறாங்க ,இதுக்குதான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கணும்.”
ஐடி,பிபீஓ -ன் இந்த மிகச்சிறு கும்பலின் மானங்கெட்ட  நடத்தைதான் ஒட்டு மொத்த ஐடி,பிபீஓபெண்களின் நடத்தையாக காட்டப்படுகின்றது. 

இப்படிப்பட்டவர்களின் பெண்ணுரிமை என் முன்னால் பலமுறை அரங்கேறியிருக்கின்றது.

அதில் ஒன்று
HR ஆக பணிபுரியும் அவர்  ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டவர், ஏதாவது ஒரு function எனில் தன் பதவியையும் மறந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பார்.சனிக்கிழமையெனில் free dress codeஅலுவலகம் அனுமதித்திலேலே முடிந்த அளவுக்கு ஆபாசமான ஆடையை அணிந்திருந்தார்.சீனியர் அக்கவுண்டன்ட் சொன்னான்”இங்க பாரு……… இது மாதிரி டிரெஸ் போட்டுட்டு வந்தா ரெண்டு புள்ள பெத்த எனக்கே ஒரு மாதிரி இருக்கு”.இதைக்கேட்ட எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது.அப்பெண்ணோ தனக்கு அங்கீகாரம் கிடத்தமாதிரி  சிரித்தார்.

 

இந்த ஆணாதிக்கத்திலிருந்து எப்படித்தான் விடுதலை பெறுவது?ஆண்டுக்கொரு தரம் பெண்கள் தினம் கொண்டாடி கேக் தின்று தண்ணீர் குடித்தால் மட்டும் வராது உரிமைகள்.அது போராட்டம் இன்றி கிடைக்காது.போராட்டத்திற்கு தேவை பெண்களிடம் ஐக்கியம்.அரசியல் ரீதியிலான ஐக்கியம் மட்டுமே நீடிக்கும்.ஆபரணம்,அழகு,ஆதிக்கம்,மதம் என அனைத்தாலேயும் கட்டிப்போட்டிருக்கின்றது ஆணாதிக்கம். இவற்றை தூக்கி எறியாமல் பேசும் நம் பேச்சுக்கள் ஆணாதிக்கத்துக்கு முதுகு சொறிவதாகவே இருக்கும்