Posts Tagged ‘லீனா மணிமேகலை’

காக்க காக்க லீnaவைக் காக்க, சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.

ஏப்ரல் 14, 2010
காக்க காக்க லீnaவைக் காக்க

சன நாயகத்தூண்கள்
எல்லாம் அம்மணமாய்
இக்சாவில்
கருத்து சுதந்திரத்தை காக்க
காக்க காக்க லீnaவைக் காக்க
பேட்டிகள் வெடித்துக்
கிளம்புகின்றன வலதுசாரியம்
இடது சாரியம் எல்லாம் குத்துவதாய்
பொறுமுகின்றன
லெனின் பிராயிடை
புணரவேண்டும் – அது கருத்து சுதந்திரம்
லெனின் காரல்மார்க்ஸ்
சே பிடல் ஏங்கெல்ஸ்
எல்லாம் பேசலாம்
அது கருத்து சுதந்திரம்
ராமேசுவரம் செங்கடல்
தீபக் முதலாளித்துவ வெறி
அடி உதை குத்து – இதுவும் சுதந்திரம்
ஏன் அடித்தாய் ?
தொழிலாளியை ஏன் வதைத்தாய்?
கேள்விகளுக்கு
யோனிகள் பதில் சொல்லுகின்றன
அய்யோ அய்யய்யோ
உரிமையைப்பறிக்காதே
இது கருத்து சுதந்திரம்
அதிகாரவர்க்க ஆண்குறியையை
தடவிக்கொடு
எம்மைகட்டி வைத்து உதை
உனக்கிருக்கும் சுதந்திரம்
எமக்கில்லாதது வருத்தம் தான்
(எம்மை,எமக்கு – தொழிலாளி)
—————————————————————————————————————————————————————-
சுதந்திரம் உங்களுக்கு மட்டும்.


எது சுதந்திரம்?
எது கவிதை?
உழைக்கும் மக்களின் விடுதலைக்கே
சுதந்திரம்
உழைக்கும் மக்களின் உணர்வே
கவிதை
அதை
சொல்ல நீ யார்?
யோனியிலும் ஆண்குறியிலும்
தூங்கிக்கிடக்கிறது விடுதலை
கிடைத்து விட்டது பட்டம்
“கலை இலக்கியத்தின் போலீசு”

யோனிகளை அரிந்து வைத்துக்கொண்டும்
பீய்ச்சியடிக்கப்படும் விந்துவிலிருந்தும்
துடிக்கும் உறுப்புக்களிலும்
கிடைக்குமா பெண்ணின் விடுதலை?

ஆளும் வர்க்கத்தை
அடக்க அரிவாளை எடுக்க சொன்னால்
நீ ஆணுறையை கழட்டிக்
கொண்டிருக்கிறாய்
ஒரு வேளை உன் விடுதலை
அதிலிருந்து கூட கிடைக்கலாம்
அந்தோணிசாமியின் மந்திரங்கள்
ஜெபிக்கப்படட்டும் -சோபாக்கள்
வேதம் ஓதுகிறார்கள்
“கர்த்தரின் ஆட்டுக்குட்டிகளே
உங்களின் விடுதலை
தொடையிடுக்கில் இருக்கிறது”
ஆரம்பிக்கட்டும் சுதந்திர வேட்கை

சப்பிக்குடிக்க சொல்லுங்கள்
கால்களை அகட்டி வைத்துக்கொண்டே
பீய்ச்சி அடியுங்கள்
கிடைத்து விடும் சுதந்திரம்

சுதந்திரம்
உங்களுக்கு மட்டும்.


15.04.10. இக்சா அரங்கம், பாந்தியன் சாலையில் கருத்துக்களை புணர்வதற்கான சுதந்திரம் குறித்த அரங்கக்கூட்டம்.யார் யாரைப் புணர்ந்தால் கருத்தை பெற முடியும்  எனும் நீதி சொல்லும் லீனாதிபதி, இகூட்டத்தில்  சோபாவும் ஏனையோரும் யாரைப்புணர்ந்தால் கம்யூனிசம் கற்க முடியும் என்பதையும் சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும், மற்ற படி கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் : -)
தொடர்புள்ளவை
லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
கவிதைகள்-அழகு

ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்

ஜனவரி 14, 2010
ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
 
நான் சொன்னது தவறு தான்
சரியென்று சொல்லவில்லை
என் வார்த்தைகள் தடுமாறின
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லாவற்றையும்
ஆடைகளைந்து அம்மணமாய்
நீ பாலியல் வன்புணர்ச்சி
செய்து கொண்டிருக்கும் போது
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லோரின் உறுப்புக்களையும்
ஆராய்ச்சி செய்யும் உனக்கு
என்னதான் தேவை?
எனக்கு ஒன்றும் புரியவில்லை
இந்த ஆராய்ச்சியை மருத்துவத்தில்
செய்திருந்தால் பல பட்டங்கள் வாங்கியிருக்கலாமே?
நாங்கள் செய்த “பாவம்”
உன்னுடைய சமூக மருத்துவ கோலம்

விமர்சனங்கள் வந்தன
நான் என்ன செய்வேன் தோழரைப்போல்
நான்  இலக்கியவாதியா என்ன?
என்னால் முடியவில்லை
திட்டினேன்
மக்களின் மொழியில்
அது சரியென்று சொல்லவில்லை
உணர்ச்சிகள் மேலோங்கும் போது
அறிவு கரைந்து விடுகிறது

கரைந்து போன அறிவினை
மீட்டுக்கொண்டேன்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உனக்குத்தெரியுமா
காலைமுதல் மாலை வரை
ஓடாய் உழைத்து கருத்துப்போன
எங்கள் பெண் பாட்டாளியின்
வியர்வை கரிக்குமென்று
கண்டிப்பாய் வாய்ப்பில்லை
உன் வாய்கள் எதையோ சுவைத்து
அச்சுவைதனை
உலகிற்கு முரசரைந்து கட்டியம் கூறலாம்
வறண்டு போன விவசாயத்தை
இற்றுப்போன ஆடைகளை
ஒடுங்கிப்போன ஆலைகளை
உன் உணர்ச்சிகள் தருமா?

நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளை
அம்மணமாய் பாடையில் ஏற்று
உழைக்கும் மக்களின் உறுப்புக்களை
ஆராய்ச்சி செய் – கூடவே அவர்களுக்காக
உழைத்தவர்களையும்

எல்லாவற்றையும்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உன் அம்மணப்பேனாவுக்கு
நோபல் பரிசுகூட கிடைக்கலாம்

விவசாயம் நொடிந்து
விசம் குடித்து
செத்த பிணங்கள் அம்மணமாய்
பிணவறையில்
பளபளக்கும் ஆடையோடு
விரைந்து செல்
நிர்வாணக்கவிதைகள் எழுது
ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள்
உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்
 
 
1.லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
2.கவிதைகள்-அழகு

  2.