Posts Tagged ‘ஸ்டாலின்’

டேய் ! இது செம்மொழி மாநாடு , தமிழ்த்தாயை காணவில்லை…….

ஜூலை 1, 2010

டேய் !   இது செம்மொழி மாநாடு

செம்மொழியான தமிழ்மொழியே!

ஓடித்திரிந்த
சாலைகள் எல்லாம் வெள்ளை
வெளேரென்று மின்னுது
உள்ளுக்குள்ளே தமிழ்த்தாய்
என்னை விதவையாக்கி
விட்டானென விம்மி விம்மி அழுகுது

யாராடா தமிழ்த்தாயின் மூத்த மகன்?
கல்லுடைக்கும் தொழிலாளியும்,
கதிரறுக்கும் ஆத்தாளும் அல்லவா
தமிழ்வாரிசுகள்

பீத்த மகனெல்லாம்
மூத்த மகனென்று பீற்றித்திரிவது
கண்டு தமிழ்த்தாய் ஒப்பாரி வைக்குது
ரஹ்மானின் பாப் இசையில் எல்லாமே  அடங்குது

தமிழ்மொழியே!! தமிழ்மொழியே!!

கோவையில் செம்மொழிக்கு
கொண்டாட்டமாம்
கொங்கு நாட்டானுக்கு
நாலு நாள் வேலையில்லை- சோத்துக்கு
திண்டாட்டமாம்

கலைஞர் அவர் வாழும்
வரலாறு , வாயைத் திறந்தால்
வருமாம்   தமிழ் ஆறு    அதில்
கழக குஞ்சுகள் நீச்சலடிக்க
நக்கிப்பார்தால்
அட ! இது
டாஸ்மாக்கு பீரு

பண்டாரங்க  வெளியே விக்குது
பகவத் கீதை  உள்ள போனா
டான்ஸ் ஆடுது பணக்கார கீதை

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்

பறையனுக்கு மந்திரி
பதவியாம்!!
சமத்துவம்  வந்து  புல்லரிக்குது
அடிச்ச கொள்ளைக்கோ
கையரிக்குது

ஈழத்தின் பிணநாற்றம்
தாங்காமல் ஓடி வந்த சிவத்துக்கு
பொன்னோடு

ஈழத்தமிழனுக்கு திருவோடு
கடலில்  துப்பாக்கி சூடு
சாதி மாறி  காதலிச்சா  ஒரே போடு

பாலாறு திரிஞ்சு போக
பெரியாறு பொரிஞ்சு போக
எதைப்பிடுங்க மாநாடு ?

போலீசு சொல்லுது

டேய் !   இது செம்மொழி மாநாடு

———————————————————————————————————————————————————————————————தமிழ்த்தாயை
தமிழ்த்தாயை காணவில்லை…….

இங்லீஸ்ல பேசுங்க ஈஸியா!
இங்கிலீஸ்ல பேசி  இம்ப்ரஸ் பண்ணுங்க
இங்கிலீஸ்ல படிச்சா அறிவு வரும்

“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாருமில்ல”

திரும்பிய பக்கமெல்லாம்
இங்கீலீசு கப்’அடிக்க
தேடி  வந்த தமிழ்த்தாய்க்கு
வெடிகுண்டு செக்கப்’

யாரோ தூய தமிழில்
ஆத்தா! ஆத்தா!
என்றழைக்க,

இங்கேயாவது இருக்குதே வாஞ்சையோடு
போனாள் தமிழத்தாய்

கண்மணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்
டேய் “ங்கோத்தா”  “ங்கோத்தா”……

பின்னங்கால் பிடரியிலடிக்க
ஓடிய தமிழ்த்தாயை காணவில்லை
கண்டு பிடித்து தருவோருக்கு
அடுத்த செம்மொழி மாநாட்டில்
பொற்கிழியும் பன்னாடையும்
ச்சீ ச்சீ !!!   ச்சீ !!!

பொன்னாடையும் நிச்சயம்.

    செம்மொழி மாநாடு  special

‘கவிதைகள்’

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

மே 11, 2010
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதாவது 2009ம் ஆண்டு செப்டம்பர் 17 பெரியார் திராவிடர் கழகம் நான்கு புத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பினை வெளியிட்டிருக்கிறது. அதில் அதிமுக்கியமான புத்தகம் ஒன்று இருக்கிறது. அதுதான் ரசியாவின் வெற்றி.

அப்புத்தகத்தில் குடி அரசு ஏட்டில் 23.07.1933 அன்று பெரியார் ரசிய பொருளாதார வளர்ச்சி பற்றி எழுதிய ஒரு கட்டுரையும், ரசியாவின் கூட்டுறவு அமைப்புக்கள் குறித்து அவர் ஈரோட்டில் ஆற்றிய உரையும், ,இராசிபுரத்தில் நடைபெற்ற சேலம் மாவட்ட ஜமீன்தாரல்லாதார் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும், திருமணத்தைப்பற்றி பெரியார் எழுதிய கட்டுரையும் இடம் பெற்று இருக்கின்றன.
அதில் ருசியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன் என்ற கட்டுரையை மட்டும் வெளியிடுகிறோம். 77 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்த எழுத்துக்களின் தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாயிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் களில் ஒருவரான தோழர்.ஸ்டாலின் மீதான அவதூறுகள் இன்றல்ல,
அப்போதே தொடங்கி விட்டது முதலாளித்துவம்.
பாட்டாளிகளால் படைக்கப்பட்ட பொன்னுலகை  தனக்கேயுரிய பாணியில் வளக்குகிறார் தந்தை பெரியார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவையற்றது,  ஸ்டாலின் காலம் என்பது சிதைவுற்ற சோசலிமென்று கூறும் புரட்டல்வாதிகளின் செவிட்டில் அறையும் பெரியாரின் எழுத்துக்கள் இதோ………………….
—————————————————————————
ருசியாவின் வெற்றி
ஐந்து வருட திட்டத்தின் பலன்

ருசியாவில் 1917Šல் நிகழ்ந்த புரட்சிக்குப்பின்னர் அந்நாடு உலகமக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பமும் ஏழைமக்களும் ரசிய சமதர்ம திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப்புகுத்தி மிகுந்த தீவிரமாய் பிரச்சாரஞ் செய்துவர,  ஊரார் உழைப்பில் உடல் நோவாது உண்டு வரும் சோம்பேறி செல்வான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும்,  அவர்தம் பத்திரிக்கைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்க பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருசியாவைப் பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலகமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ்சொல்லி அங்கு பட்டினியும்,  பஞ்சமும் நிறைந்திருக்கின்றனவென்று கூறியும்வேறு பல தீய முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
ருசியாவின் சமதர்மக் கொள்கை ஒரு போதும் நடைமுறையில் சாத்தியமாகனாது என்று புகன்ற ராஜதந்திரிகளும், ருசியாவில் தனியுடமையயாழிந்து பொதுவுடமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சியும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்கரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்று தவறென்று தானே ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரசியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரசிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலகமெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங்காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பாழுது ரசியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக்கொண்டிருக்கிறதென்றே கூற வேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாட்சண்யமாக தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும்  தவறென்று கூறத்துணியார். ரசியாவில் மனிதனுக்கு சுதந்திரம் அதிகமில்லையயன்று கூறப்படுகின்றது.
தனிமனிதனுடைய சுதந்திரத்திற்கு போதிய இடமிருப்பதாக கூறப்படும் நாட்டிலுள்ள மக்களை விட ரசிய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையுமிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும் உடுக்க உடையும், ஒண்ட நிழலும் , படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய் இல்லை லட்சக்கணக்காய் பட்டினியாலும் நோயாலும் மடிந்த ருசியா நாட்டிலே  பட்டினியயன்றால் இன்னதென்று எவரும் அறியாதபடி, நோய்என்றால் , இன்தென்பதை எவரும் உணராதபடியும் நாளைக்கு உணவிற்கு என் செய்வது, வியாதியால் இரண்டுநாள் படுத்துக்கொண்டால் நமது நிலையயன்ன? நமது குடும்பத்தின் கதியயன்ன ? என்ற கவலையே அறியாத மக்களாய் வாழும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் திடுக்கிட செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.
ஐந்து ஆண்டுத் திட்டம்

பஞ்சத்தாலும் பொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிமைமையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரசியா உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத் திட்டமொன்றைத் தயாரித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்து விட வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தனர். வேலையற்று , தொழில்முறைக்கொள்ளையும் விபச்சாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில்முறையில் ஈடுபட்டு தங்களின் துற்செயலை ஒழித்து நாட்டின் நலனைக்கோரி உழைக்க ஆரம்பித்து விட்டனர். பொருள் உற்பத்தி 5 வருட திட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றுவிட்டது.
தங்கள் ஆட்சி முறையைப்பற்றி பெருமை பேசிக்கொண்ட ஐரேப்பாவும் , அமெரிக்காவும் உலக வர்த்தகத்தில் ரசியாவை எதிர்த்து போராட முடியவில்லை. உலகத்து மார்க்கெட்டிலெல்லாம் ரசியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி தானங்களையயல்லாம் திடுகிடுக்கும் படி செய்து விட்டது.
“பசி வந்திடப் பத்தும் பரந்து போம் ”   என்னும் பழமொழியைப்பொல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப்பற்றி கதை கூறுவதில் பயனென்ன ?  பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் வயிறு நிரம்பும்படியான கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துடமையை ஒழித்து பொதுஉடைமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிறதேசங்கள்  உயவுப்பொருளை கொடுத்து ஒரு போதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத்திற்குள் உணவுப்பொருள்களை பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர்.
5 வருடத்திற்குள் இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள் , இவ்வளவு ஆடுமாடுகள் ,
இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும்,
இத்தனை மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்கவேண்டுமென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்கு வருடத்திலே ஐந்து வருடத்திட்டத்திற்கண்ட பெரும்பாலானவைகள் பூர்த்தியாகிவிட்டதால்திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர்.
இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப்பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகைய திட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலைசெய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்து வருகின்றன.
ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியாகி, உற்பத்தியான பொருட்கள் விலையாகாமல் பலவிதத் தொல்கைள் ஏற்படுவது நிச்சயம். இதையே ரசியாவும் எதிர்பார்க்கின்றது.
தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரை வயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரணமென்ன என்பதை ஏழைமக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுது தான் முதலாளிகளும், முதலாளித்துவ  அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியால் தியங்கும் படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடை மலையயனத்துலங்கும்.
ருசிய சமுதாய அமைப்பு

உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன ? கோடிக்கணக்கான மக்கள் தினசரி 8 மணி நேரம், 10 மணிநேரம் வேலை செய்து வருகின்றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக் கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச்செல்ல ஒரு குதிரை பூட்டிய வண்டி போதுமானது.  தன்னிடம் ஏராளமான பணம் இருக்கிறதென்ற திமிரினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டியோடும் படியான வண்டியைச்செய்து  அதற்கென்று பல மனிதர்களை குறைந்த சம்பளத்தில்  வேலையாளாக வைத்துக்கொள்கிறான். உண்மையான உணவுப்பொருளை உண்டாக்க வேண்டிய பல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கெள்கிறான். இவன் தன் அவசியத்திற்குமேற்பட்ட குதிரைகளை உபயோகித்துக்கொள்வதால் குதிரை விலை அதிகமாகி விடுகிறது.
இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து உடலைக் கெடுத்து, ஒண்ட இடமின்றி கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத்துறங்கும் தொழிலாளி குதிரை வண்டியைத் தானே இழூக்க வேண்டியதிருக்கின்றது.
பணக்காரன் வண்டியில் பூட்டிய தேவைக்கதிகமான குதிரை ஒன்றை இந்தத் தொழிலாளிக்குப் பூட்டினால் தொழிலாளிக்கு எவ்வளவு உதவியாயிருக்கும். இதன் நுண்பொருளை ஆய்ந்து தான் ரசிய சமதர்மம் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவுடமைத்தத்துவம்

உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்து வரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலேயே இன்று காணத்திடைக்கும் பொருளாதார நெருக்கடியும்  வேலையில்லாத்திண்டாட்டம் உண்டாயிராதென்பதே பொது உடைமை இயக்கத்தினரின் எண்ணம்.
ரசிய பொதுஉடைமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையான நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பதெற்கென்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலககில் தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழ முடியும்.
பொதுவுடமை என்றால் என்ன ?

“எல்லாப்பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனுசீகத்தன்மையை விருத்தி செய்து கொள்ள முடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவேயாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாக பங்கிட்டுக் கொள்வதென்பதே இதன் பொருள்.  வயிற்றுப் பசிக்கு உணவு தேடுங்காலமும் தூங்கும் காலமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாக வாழுங்காலம்.  அது மக்கள் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்துவம். ” என்று பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய்துள்ளார்.
இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொதுவுடமைக் கொள்கையை ஒப்புக் கொண்டு நடந்தால் தான் முடியும். இந்த நோக்கத்துடன் தான் இன்றைய ரசிய ஆட்சி நடந்து வருகிறது. இந்நோக்கம்  வெற்றிபெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சதிகாரமுள்ள பிரதிநிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரசியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளனர்.
முதலாளிகளென்போர் யார்?
ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம்,  அறிவுவிருத்தி முதலான பெருக்க பெரிதும் திட்டங்ள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருட்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிறநாடுகளில் விற்பனை செய்தனர். சில தொழிலில் இலாபமும் சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும்  சர்க்காரே முதலாளியாக இருப்பதால் நட்டத்தை லாபம் வரக்கூடிய பொருட்களிலிலிருந்து ஈடு செய்து கொள்ள முடிகிறது.
உற்பத்தி செலவுகளை யயல்லாம் காத்து 100க்கு 10 அல்லது 100க்கு 20 பாகம் தொழிலாளிகளின் அபிவிருத்திக்காக செலவழித்து வருகிறார்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிகளிலும் . தொழிலாளர்களுக்கு விளையாடுமிடம்,  வாசகசாலை, குழந்தைகளுக்கு பால்கொடுக்கவும் , தாலாட்ட அறைகளும், தொட்டிலும் இன்னும் பல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு ஆகாயவசனி (ரேடியோ) மூலம் சோவியத் ஆட்சி முறையைப்பற்றி பிரசங்கங்கள் மூலம் அறிவுவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
சோவியத் அட்சியினர் எதையும் ஆராய்ந்தே செய்வர். ஆய்ந்து நலமென்று கண்டால் இன்னதை இவ்வளவு காலத்திற்குள் முடிக்கவேண்டுமேன்ளு திட்டம் போட்டுக்கொள்கின்றனர். உடனே அமலுக்கு கொண்டு வருகின்றனர்.  உற்பத்தி நோக்கத்தை அதிகப்படுத்துவதென்றால் அதன் நோக்கத்தை விளக்கிக்கூறி அவர்களுக்கு உற்சாகமூட்டி எளிதில் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்து கொள்கிறார்கள்.
விவசாயம்

ரசியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது  தவறு.  விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சிலபாகம் சர்க்கார் பண்ணைகள்,  சிலபாகம் குடியானவர்கள் கூட்டுறவாக பயிரிடும் பண்ணைகள்,  மற்றொரு பாகம் தனிவிவசாயிகள் தனியாக பயிரிடும் நிலம் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இயந்திர கலப்பைகளை உபயோகித்தால்தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு நிலங்களாக இருந்தால் இயந்திரக்கலப்பையால் உழ முடியாது.
எனவே தான் சர்க்கார் பொருளாதாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனங்களும் பொதுவாக இருக்க வேண்டுமென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆகவேதான் ஐந்தாண்டு திட்டம் ஏற்படுத்தி 1928-1933  அதற்குள் நிலத்தில் 100Šல் 20 பாகத்தை கூட்டுறவு விவசாயமாக்கி சிற சிறு வயல்களாக ஏற்படுத்தியிருந்த  வரப்புகளையயல்லாம் வெட்டி ஒரு சமமான பாகமாக்கி இயந்திர விவசாயத்திற்கு ஏற்ற விதமாக்கி விடவேண்டுமென்று திட்டம் போட்டார்கள்.
4 ஆண்டுகளுக்குள் 100Šல் 60 பாகம் கூட்டுறவு விவசாயத்திற்கு முன் வந்து விட்டது. விவசாயம் விருத்தியாக வேண்டும் விருத்தியாக வேண்டும் என்ற வீண் வெற்றுரைகளை அங்கு காண முடியாது. இன்ன 4ல்லாவில்  இவ்வளவு கோதுமைகளை விளைவிக்க வேண்டுமென்று சர்க்கார் திட்டம் போடுவார்கள். உடனே அதை அமலுக்கு கொண்டு வர ஸ்தல சோவியத்திற்கு உத்தரவு கொடுக்கப்படும். அதை அவர்கள் உடனே நடத்த முனைந்து விடுவார்கள். இதன் பயனாக 100க்கு 80 பாகம் விவசாயம் சர்க்கார் பண்ணையாக இயந்திரங்களின்  முலம் நடைபெற்று வருகின்றது. 40,000 இயந்திர விவசாயக்கலப்பைகள் வேலை செய்து வருகின்றன.
ரசியா, விவசாயத்தைப்போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலை செய்து விருத்தி செய்து வருகின்றது. அதன் கைத்தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கு அறியலாம்.
தண்டவாளத்தில் ஓடும் கார்கள் 12,000 என்று திட்டம் போட்டார்கள். 1931 க்குள்ளாக 20,000 தயாராகிவிட்டன. 1933 க்குள் 825 ரயில் வண்டிகள் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார்கள். 1932க்குள் 812 வண்டிகள் செய்யப்பட்டு விட்டன. 1913ம் வருடத்தில் 170லட்சம் ஜோடுகள் தயாராயின. 1931 ல் 768 லட்சம். இது திட்டத்திலிருந்து 167 லட்சம் அதிகம். 1913ல் 94,000 டன் சோப் உற்பத்தி செய்து விட்டனர். 1931 ல்1,89,000 டன் உற்பத்தி செய்து விட்டனர்.
முன்னேற்றம்

உலகத்திலுள்ள பெரிய இரும்புத்தொழிற்சாலைகளில் ஒன்று ரசியாவிலிருக்கிறது. அதன் பிரதம அதிகாரியாய் ஒரு இந்தியரே இருந்து வருகிறார். இங்கிலாந்தில் இரும்பு உற்பத்தி 40 லட்சம் டன்னிலிருந்து 95 லட்சம் டன் ஆக 35 வருடம்மாயிற்று. அமெரிக்காவில் இத்தகைய முன்னேற்றம் அடைய 8 வருடமாயிற்று. ஜெர்மனியில் 10 வருடமாயிற்று. ஆனால் ரசியா 1 வருடத்தில் இந்த முன்னேற்றத்தையடைந்து விட்டது. நிலக்கரியில் 530 லட்சம் டன் உற்பத்தியைச் செய்யத்திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தது,  வெற்றியும் கண்டுவிட்டது. ரசியாவில் 1930 ம் ஆண்டு புகைரதங்கள் 9 மோட்டார்கள் 0  செய்யப்பட வில்லை. 8,550 கார்களுக்கு தனி பாகங்கள் பொருத்தி வண்டியாக செயல் பட்டன.
இப்பொழுது நாள் ஒன்றிற்கு 65 மோட்டார்கள் ரசியாவிலே உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயத்திலே 100க்கு 20 பாகம் தவிர மற்றவைகள் சர்க்காருக்கே உரியது. சர்க்காரைத்தவிர தனி மனிதர்கள் கடன் கொடுத்து வாங்கினாலும் , வியாபாரஞ் செய்தாலும் கிரிமினல் குற்றமாக ரசியாவில் கருதப்படுகிறது.
எண்ணை உற்பத்தி செய்யும் தேசங்களில் ரசியா இரண்டாவது ஸ்தானத்தையும் , இயந்திர உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும்,  விவசாய எந்திரக் கருவிகளில் முதல் இடத்தையும் பெற்று விளங்குகின்றது.
தங்க உற்பத்தியின் மதிப்பு அவர்கள் திட்டத்திற்கு ஒன்றரை மடங்கு அதிகமாக கிடைத்து விட்டது.
கல்வி

1914-ல் 70,00,000 குழந்தைகள் கல்வி பயின்றனர். 1928Šல் 1,50,00,000 படிக்க வேண்டுமென்றும் 1933Šல் 1,70,00,000 படிக்க வேண்டுமென்றும் திட்டம் போட்டு வேலை செய்து வெற்றி பெற்று விட்டனர்.
ரசியாவில் முதியோர்களுக்கும் கல்வி கற்பிக்கப்படுகின்றது. 1928Šல் வாசக சாலை 22,000 இருந்தன. 1933 ல் 34,000 ஆக்கி விட்டார்கள். ஊர் ஊராய்க் கொண்டு போகும் லைபரெரிகள் 40,000 ஆக்கி விட்டார்கள். ரேடியோவின் மூலம் பல இடங்களில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. 1928Šல் 3,50,000 ரேடியோக்கள் இருந்தன. 8,250  சினிமா நிலையங்களிருந்ததை இப்பொழுது 50,000 மாக அதிகப்படுத்தப் போகின்றார்கள்
ரசியாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் தாங்கள் செய்யப்போகும் காரியத்தை முதலில் திட்டமிட்டுக்கொண்டு அதில் தொழீலாளர்களுக்கு போதிய ஊக்கமும் கொடுக்கும்படி தங்கள் நேரத்தைக்கூறி அவர்களை உற்சாகமாக விடுவதால் தொழிலாளிகட்கு என்ன கஷ்டம் நஷ்டம் இருந்த போதிலும்  வேலையையே கருத்தாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
இந்திய நாடு

பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும் பொழுது இந்தியா வாளா விருக்குமேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடியயன்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடும் மென்பது நிட்சயம்.
சில மாதங்களுக்கு முன் ரசியா தோழர் ஒருவர் கவி. ரவிந்திநாத் தாகூருக்கு நிருபம் ஒன்ற எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடைய காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எவைகள் ? என்று வினாவியிருந்தார்.
அதற்கு கவிŠதாகூர் ” தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லா பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பது தான் உங்கள் ரசிய நாட்டின் வெற்றிக்கு காரணம்,  சமுதாய விசயங்களில் முயற்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திகு முட்டுக்கட்டையாய் இருகிறது” என்று பதில் எழுதியிருந்தார்.
தந்தை பெரியார்
குடி அரசு 23.07.1933
ŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠŠ
சோவியத் ரசியா குறித்த பெரியாரின் பார்வை மிகச்சிறப்பானது.  இப்புத்தகத்தின் ஏனைய கட்டுரையும், பேச்சுக்களும் பெரியார் மாபெரும் சிந்தனையாளர் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கின்றது. முக்கியமாக கூட்டுறவு குறித்த பெரியாரின் பேச்சு நமக்கு கிடைத்த ஆவணம் என்றே சொல்லலாம்.
பாமரருக்கும் புரியும் மொழியில் இருக்கும் பெரியாரின் இந்த எழுத்துக்களை பல்லாண்டுகள் கழித்து புத்தகமாய் கொண்டு வந்திருக்கும் (அதுவும் மிகக் குறைவான விலையில்) பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
———————————————————————
நன்கொடை ரு10/
வெளியீடு
பெரியர் திராவிர் கழகம்
29, இதழியலாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர் – திருவான்மியூர்
சென்னை – 600 041
———————————————————————-
நூல் கிடைக்குமிடம்
பெரியார் படிப்பகம், பேருந்து நிலையம் அருகில், மேட்டூர் அணை. 9786316155
பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம் அருகில்பெரியார் படிப்பம், காந்திபுரம்பெரியார் படிப்பம், கோவை. 9843323153

“தோழர் ஸ்டாலின்” – வெல்லமுடியாத சகாப்தம்

மார்ச் 6, 2009

ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் “கோபா”
1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு “டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது” என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.
1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் “தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு” என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு “இரும்பு மனிதன்” எனும் பொருள் கொண்ட “ஸ்டாலின்” என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் “ஸ்டாலின்” என்ற பெயர் இணைக்கப்பட்டது.
தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.
1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.
முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி ” இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றார். உடனடியாக குழந்தைகள் “ஆறுமாதம் சிறை கிடைக்கும்” என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.
உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.
…..
நாடுகள் ———–1929 —- 1930 —– 1931 —— 1932 ——1933
..
அமெரிக்கா ———–100 —–. 80.7 —- 63.1 ——- 59.3 ——-64.9
பிரிட்டன் ———–100 —— 92.4 —— 83.8 —— 83.8 ——– 86.3
ஜெர்மனி ———-100 ——- 88.3 ——- 73.7 —– 59.8 ——– 66.8
பிரான்ஸ் ————100 —— 100.7 —- 89.2 ——- 99.3 – ——- 77.4
சோவியத் யூனியன் —–100 —- 129.2 —— 161.9 —- 184.7 — —– 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் – நூல்கள் தொகுதி 13 பக் 293)
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.
c-copyaaa
‘கிரெம்ளினைக் கைப்பறுவேன்’ என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.
இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!
ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .
ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.
ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.
1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.
உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.
சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.
எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.
மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.
உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.
நன்றி
தோழர் இரும்பு
http://thesteel.blogspot.com
முதலாளித்துவ பயங்கரவாதிகளால்  கொடுங்கோலன் என்றும்  வெறியர் என்று தூற்றப்படும் பாட்டளி வர்க்கத்தின் ஆசானும் மார்க்சிய லெனினியத்தின் முன்னோடியுமான தோழர் ஸ்டாலினின் நினைவு தினத்தை ஒட்டி (05.03.1953) இக்கட்டுரை ஈராண்டுகளுக்கு முன் தோழர் இரும்பு அவர்களின் தளத்தில் வந்த இக்கட்டுரை  காலத்தேவையினை கருதி மீண்டும் மறு பிரசுரம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.

வர்க்கப்போரில் பகலவனாய் இருக்கும் தோழரின் மீதும் சோசலிச ரசியாவை இரும்புத்திரை நாடென்றும் இகழ்ந்த ஓனாய்களின் முகமுடியை இக்கட்டுரை கிழிக்கிறது.