Posts Tagged ‘கோவை’

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு

ஓகஸ்ட் 30, 2010


2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு டிவியைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைகழக மாணவ, மாணவிகள் வந்த பேருந்து அதிமுக குண்டர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த 3 மாணவிகளையும் வேண்டுமென்றே திட்டமிட்டு கொளுத்தி கொன்று போட்டார்கள் அந்த அதிமுக பாசிஸ்டுகள்.

அடுத்த நாள்   நான் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது ஆங்காங்கே பேருந்துகள் அதிமுக குண்டர்களால் மறிக்கப்பட்டது, பல குண்டர்கள் பேருந்துகளை சேதப்படுத்தினார்கள். ஒருவன் கருணாநிதி தே……….மவன் என்று பேருந்தில் எழுத , மற்றொருவன் கருணாநிதியின் தாயை மிகவும் கொச்சையாக திட்டிக்கொண்டு
போனான். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.

நாங்கள் கல்லூரிக்கு பயணமானோம், வகுப்பில் எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். வேதியியல் ஆசிரியர் வந்தார். அவர் எப்போதும் 60 நிமிட வகுப்பு நேரத்தில்   கடைசி 10 நிமிடம் அன்றைய செய்திகளை கேட்பார் மாணவர்களிடம். அவர் அன்று பாடம் எதுவும் எடுக்க வில்லை, ” மாணவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு கொடூரம், நாய்கள், பரதேசிப்பசங்க என்றார், இந்த பாழாப்போன அரசியல் மாணவர்களை கொன்றுவிட்டது, நமக்கு அரசியலே வேண்டாம்” என்றார். சற்று நேரத்தில் அலுவலக உதவியாளர் சுற்றறிக்கையை கொடுக்க, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

அன்றும் அடுத்த சில நாட்கள் இதேதான் செய்தியாய் தொடர்ந்தது ஊடகங்களில், பல மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் சோகமாய் என்ன செய்வதென்று தெரியாமல் சடங்குக்காக என்று  மவுன ஊர்வலம், அமைதிப் போராட்டம்  என நடத்தினார்கள். ஆனால்  எனக்குத்தெரிந்து எந்த அதிமுக கொடிக்கம்பமோ, அதிமுக அலுவலகங்களோ தாக்கப்படவில்லை.

மக்கள் தாரைதாரையாக கண்ணீர்விட்டார்கள். அதிமுகவின் ஜெயா டிவியோ எல்லாம் டூப் என்றது, சன் டிவி தனது ஆட்களை வைத்து எடுத்த சினிமா என்றார்கள் அதிமுகவினர். கோகிலவாணியின் தந்தை உட்பட பலியான அனைத்து மாணவிகளின் பெற்றோர்களும் ஊடகங்களில்  தீனிக்காக காட்டப்பட்டார்கள். யாரும் இதற்கு காரணமான அதிமுகவை  தடை செய்யக்கோரவில்லை, பல நடு நிலை நாயகர்கள் சொன்னார்கள் “யாரோ செஞ்ச தப்புக்கு கட்சி என்ன செய்ய முடியும்?”

வழக்கு சேலம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது 3 பேருக்கு தூக்கும் 25 பேருக்கு சிறையும் கொடுத்தது நீதித்தாய். பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். அங்கு 2007-ல் தூக்கு உறுதி செய்யப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றமும் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

கடைசியில்  நீதி வென்றிருக்கிறதா?

கடைசியில் மட்டுமல்ல முதலில் கூட  மக்களுக்கான நீதி வெல்வதில்லை, ஏதோ சாராயத்திற்கு ஊறுகாய் போல தவிர்க்க இயலாத தீர்ப்புக்கள் இப்படி வெளிவருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படும் போது மக்களின் மீது வன்முறை ஏவிவிடப்படுகிறது. மக்கள் குடி நீருக்காக, விவசாயம் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போது அவர்ளின் மண்டையை பிளக்கும் போலீசு மக்கள் மீது வன்முறையை ஏவிவிடும் இந்த பாசிச ரவுடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. “தயவு செய்து” கைதாக சொல்கிறது. மாவோயிஸ்டு கட்சியைச்சேர்ந்த சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை தரப்படுகிறது. ஏன் என்றால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாய் என பதில் வருகிறது.

யார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது? கருணா ஆட்சிக்கு வந்தால் செயாவை பிடித்து உள்ளே போடுவது, செயா வந்தால் கருணாவை தூக்கி போட்டு மிதிப்பது, இந்த தெரு நாய்ச்சண்டையில் மக்கள் தலைகள் உடைக்கப்படுவதில்லையா? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  முசுலீம்களை கொன்ற மோடி அத்துவானி கூட்டணி இன்று அரியணையில் ரத்தம் குடிக்க நாக்கைத்தொங்கபோட்டு கொண்டு அலைகிறதே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? அரிசிவிலை, பருப்பு விலை, பெட்ரோல் விலை எல்லாம் ஏகத்துக்கும்
எகிறிக்கிடக்கிறதே !  இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் நொடிந்து தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டார்களே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?

இந்நாட்டின் கனிமவளங்களை சூறையாட இந்திய அரசால் நடத்தப்படும் போரினால் எத்தனை மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள் ? கொல்லப்படவிருக்கிறார்கள்? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?பட்டினியில் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறதே இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? இவ்வளவு ஏன் 26 வருடம் கழித்த வந்த போபால் தீர்ப்பின் யோக்கியதையை நாடறியும்,  20000க்கும்
மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆண்டர்சனுக்கு விடுதலை, காரணமான எந்த அதிகாரியும் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. இதுதான் இந்த நீதியின் யோக்கியதை.

ஏன் போலீசு வெறியன் பிரேம்குமாரால் பாதிக்கப்பட்ட நல்லகாமனின் வழக்கின் கதை சுபமாக உச்ச நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது, ஆம் “ யோவ், 25 வருசத்துக்கு மேல எதுக்குயா இந்த கேச இழுத்துகினு இருக்கீங்க” என்ற பொருமலோடு பிரேம் குமார் , நல்லகாமன் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  மனித உரிமை போராளி அய்யா நல்லகாமனின் போராட்ட வரலாற்றை நாம் அறிவோம். இத்தனை ஆண்டு காலம் தன் குடும்பசொத்தையெல்லாம் விற்ற அந்த நல்லகாமனுக்கும், அவரின் வழக்கை ஏற்று நடத்திய மனித உரிமை பாதுகாப்பு மையமும் கடந்து வந்த பாதை நெடியது.
அது சொல்வது இதுதான் ” இது மக்களுக்கான நீதி அல்ல,  அதிகாரவர்க்க ,பார்ப்பன பனியா, முதலாளிக்கானது”

தெருவிலிறங்கி தண்டனை கொடுப்போம் !

இப்போது வந்திருக்கும் இந்த பேருந்து எரிப்பு தீர்ப்பினை பற்றி பேசுவோம். 3 மாணவிகள் திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டிருக்கிறார்கள். அச்சம்வத்தில் ஈடுபட்ட எல்லோருக்குமே மூவர் உள்ளே இருப்பது தெரிந்துது இருக்கிறது. அக்கட்சியின் பாசிசத்தலைவி இதை திமுகவினர் செய்ததாக சொன்னார், அக்கட்சியினரும், அவர்களின் தொலைக்காட்சியோ இதை நாடகம் என்றது. குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? என்பது கேள்விக்குறியே? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மன்னிக்க, ஓட்டைகளில் உள்ள சட்டங்கள் வழியே அவர்கள் கருணை மனு, இதர வெங்காய மனுக்களை நீட்டிக்கொண்டி திரிவார்கள்.

இப்படியே இழுத்தடிக்கப்பட்டு அவர்கள் தண்டனை காலத்திற்கு முன்னரே செத்தும் போகலாம் அல்லது எதுவும் நடக்கலாம்.மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மட்டுமல்ல, இந்த பாதகத்திற்கு தலைமை தாங்கிய புரட்சித்தலைவியும்தான். அதிமுக என்ற பாசிசக்கூடாரமே தடை செய்யப்பட வேண்டும்.

அப்சல் குரு, அஜ்மல் கசாப் என்ற இரு பலியாடுகளை உடடே தூக்கிலேற்றக்கோரி, முசுலீம் கட்சிகளை தடை செய்யத் துடிக்கும்  தேசியத்தின் வாய்கள் இப்போது இந்தியா முழுக்க வேண்டாம் தமிழகத்தின் ஏதாவதொரு மூலையில் அதிமுகவை தடை செய்யவும், 3 பேரை உடனே தூக்கில் போடக்கோருவார்களா? பல்லாயிரக்கணக்கான ஆண்டர்சனை அன்று மக்கள் கையில் கொடுத்திருந்தால் அவர்கள்
அவனை அப்போதே நரகத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்திருப்பார்கள், ஆனால் காங்கிரசோ அவனை அமெரிக்க சொர்க்கத்திற்கு தனி விமானத்தில்  அனுப்பி வைத்தது. இவர்கள் இதை செய்வார்கள் என்றால் அது குருட்டு நம்பிக்கையாகவே இருக்கும்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஎச்பி போன்ற அகில இந்திய பாசிஸ்டு கட்சிகளும், தமிழகத்தை பார்ப்பன மயமாக்குவதையே லட்சியமாக கொண்டுள்ள இந்து முன்னணி, அதிமுக ……………………கட்சிகளும், இந்திய விவசாயத்தினை , தேசிய தொழில்களை வேரறுக்கும் ஆளும் வர்க்க கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு தலைமை தாங்கும் அனைத்து பாசிச பயங்கரவாதிகளுக்கும் அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும். இதை நாம் தெருவிலிறங்கி வாளேந்தித்தான் சாதிக்க முடியுமே தவிர வேறெதாவது வழி இருக்கிறதா என்ன?

டேய் ! இது செம்மொழி மாநாடு , தமிழ்த்தாயை காணவில்லை…….

ஜூலை 1, 2010

டேய் !   இது செம்மொழி மாநாடு

செம்மொழியான தமிழ்மொழியே!

ஓடித்திரிந்த
சாலைகள் எல்லாம் வெள்ளை
வெளேரென்று மின்னுது
உள்ளுக்குள்ளே தமிழ்த்தாய்
என்னை விதவையாக்கி
விட்டானென விம்மி விம்மி அழுகுது

யாராடா தமிழ்த்தாயின் மூத்த மகன்?
கல்லுடைக்கும் தொழிலாளியும்,
கதிரறுக்கும் ஆத்தாளும் அல்லவா
தமிழ்வாரிசுகள்

பீத்த மகனெல்லாம்
மூத்த மகனென்று பீற்றித்திரிவது
கண்டு தமிழ்த்தாய் ஒப்பாரி வைக்குது
ரஹ்மானின் பாப் இசையில் எல்லாமே  அடங்குது

தமிழ்மொழியே!! தமிழ்மொழியே!!

கோவையில் செம்மொழிக்கு
கொண்டாட்டமாம்
கொங்கு நாட்டானுக்கு
நாலு நாள் வேலையில்லை- சோத்துக்கு
திண்டாட்டமாம்

கலைஞர் அவர் வாழும்
வரலாறு , வாயைத் திறந்தால்
வருமாம்   தமிழ் ஆறு    அதில்
கழக குஞ்சுகள் நீச்சலடிக்க
நக்கிப்பார்தால்
அட ! இது
டாஸ்மாக்கு பீரு

பண்டாரங்க  வெளியே விக்குது
பகவத் கீதை  உள்ள போனா
டான்ஸ் ஆடுது பணக்கார கீதை

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்

பறையனுக்கு மந்திரி
பதவியாம்!!
சமத்துவம்  வந்து  புல்லரிக்குது
அடிச்ச கொள்ளைக்கோ
கையரிக்குது

ஈழத்தின் பிணநாற்றம்
தாங்காமல் ஓடி வந்த சிவத்துக்கு
பொன்னோடு

ஈழத்தமிழனுக்கு திருவோடு
கடலில்  துப்பாக்கி சூடு
சாதி மாறி  காதலிச்சா  ஒரே போடு

பாலாறு திரிஞ்சு போக
பெரியாறு பொரிஞ்சு போக
எதைப்பிடுங்க மாநாடு ?

போலீசு சொல்லுது

டேய் !   இது செம்மொழி மாநாடு

———————————————————————————————————————————————————————————————தமிழ்த்தாயை
தமிழ்த்தாயை காணவில்லை…….

இங்லீஸ்ல பேசுங்க ஈஸியா!
இங்கிலீஸ்ல பேசி  இம்ப்ரஸ் பண்ணுங்க
இங்கிலீஸ்ல படிச்சா அறிவு வரும்

“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாருமில்ல”

திரும்பிய பக்கமெல்லாம்
இங்கீலீசு கப்’அடிக்க
தேடி  வந்த தமிழ்த்தாய்க்கு
வெடிகுண்டு செக்கப்’

யாரோ தூய தமிழில்
ஆத்தா! ஆத்தா!
என்றழைக்க,

இங்கேயாவது இருக்குதே வாஞ்சையோடு
போனாள் தமிழத்தாய்

கண்மணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்
டேய் “ங்கோத்தா”  “ங்கோத்தா”……

பின்னங்கால் பிடரியிலடிக்க
ஓடிய தமிழ்த்தாயை காணவில்லை
கண்டு பிடித்து தருவோருக்கு
அடுத்த செம்மொழி மாநாட்டில்
பொற்கிழியும் பன்னாடையும்
ச்சீ ச்சீ !!!   ச்சீ !!!

பொன்னாடையும் நிச்சயம்.

    செம்மொழி மாநாடு  special

‘கவிதைகள்’

செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்

ஜூன் 29, 2010

செம்மொழி மாநாடும்   நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்

அவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன். முந்தைய நாள் பயணக்களைப்பின் காரணமாக  தாமதமாகிவிட்டது.  பேருந்துகள் வரிசையாய் கோயம்புத்தூருக்கு  நின்றிருந்தன.  நான் நோட்டம் விட்டேன். மூன்று பேருந்துகள் கழித்து “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு பேருந்து ” ஒன்று   மிக மிக பரிதாபமாய் நின்று கொண்டிருக்க, அதில் ஏறி உட்கார்ந்தேன். செம்மொழி மாநாட்டிற்கு பயணக்கட்டணம் 5 ரூபாய் என்றும் அருகிலிருந்தவர் சொன்னார். சரி 23 ரூபாய் மிச்சம் என்றபடி அந்த டப்பாவில் ஏறி அமர்ந்தேன். என்ன செய்வது 23 ரூபாய் சம்பாதிப்பது சாதாரண விசயமா என்ன?

நடத்துனர் வந்தார் ” கோவை மட்டும் உட்காரு, கோவை மட்டும் உட்காரு”” ஒரு பயணி   கேட்டார் ” மாநாட்டுக்கு போவுங்களா ?, எத்தனை மணிக்கு போவும்?”  ” எனக்கு எதுவும் தெரியாது, வண்டியை எடுக்க சொன்னா எடுப்பேன் ,  அவ்வளவு தான், உன்ன மாதிரிதான் நானும்”  பிறகு யாரும் அவரிடம் கேட்க வில்லை. என்னருகில் அமர்ந்திருந்த பயணி முணுமுணுத்தார் “திமிர்பிடிச்சவன்”.

பேருந்து கிளம்பியது,  பயணச்சீட்டுக்காக ரூ 28 வசூலிக்கப்பட்டது. நடத்துனரிடம் கேட்ட போது  ” எனக்குத் தெரியாது” அதே பழைய பல்லவியை பாடினார் . ஒருவர்ர் சொன்னார்  “நான் மட்டும் தான் இளிச்சவாயன்னு நெனச்சேன், எல்லாரும் துணைக்கு இருக்காங்க நெம்ப சந்தோசம் “ நாங்கள் சேர்ந்து இளித்தோம், இளிச்சவாயர்களல்லவா.
கடைசி நாளில் எல்லா பேருந்திலும் அதே அளவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களிடம் பேருந்துக்கட்டணம் குறைவு என்று சொல்லி கூட்டம் கூட்டுவது , பின்னர் வண்டி புறப்பட்டபின் விலையைச் சொல்வதென  திட்டமிட்ட பிராடு வேலை நடந்திருக்கிறது. இன்னொருவர் சொன்னார் “அங்க எல்லா பஸ்ஸூக்கும்  1 ரூபாயாம் ”

பேருந்து அநியாயத்திற்கு ஊர்ந்து சென்றது, சரி 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய நாம் அரை மணி நேரம் அதிகமாகுமென நினைத்தேன்.  அவினாசியிலிருந்து ஒவ்வொரு 1/4 கி.மீட்டருக்கும் போலீசு படையாக  இருந்தது.  செல்லும் வழியயல்லாம் திமுகவினர் தங்கள் சொந்த விழாவினை சிறப்பித்து டிஜிட்டல் தட்டிகளால் நிரப்பியிருந்தார்கள். இப்பகுதியில் அழகிரிக்கு இடமில்லை போலும். காலையில் 9.20க்கு எடுக்கப்பட்ட பேருந்து எப்படியோ தட்டு தடுமாறி 11.30 க்கு கருமத்தம்பட்டியை அடைந்தது. எனக்கு ஒரு சந்தோசம் ” இன்னும் அரை மணி நேரம் தானே, நாம கணக்கு போட்ட மாதிரியே அரை மணிநேரம் தாமதம்”. ஆனால் நாம் ஒரு கணக்கைப்போட்டால் ஆண்டுகொண்டிருப்பவன் வேறொரு கணக்கைப் போட்டு விட்டார்.

திடீரென பேருந்துகள் கருமத்தம்பட்டிக்குள் திருப்பிவிடப்பட்டன, அன்னூர் சாலையில் பயணித்த பேருந்து  சிறிது தூரம் சென் பின் வாகராயம்பாளைம் வழியாக புகுந்தது. அது சரியாக 10 அடி ரோடு, எதிரில் வண்டி வந்தார் சாலையை விட்டு இறக்கிதான் வைக்க வேண்டும். ஆனால் பிரச்சினை இல்லை கடைசி வரை எந்த நான்கு சக்கர மற்றும் பேருந்துகளோ அவ்வழியே வரவில்லை.  நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் வழியே தெரியவில்லை. அப்பகுதியிலிருந்த மக்கள் போய் சேரும் வரை வழியைச் சொன்னார்கள். அருகிலிருந்த பயணி சொன்னார் “கண்டக்டர் அப்பலேர்ந்து சரித்தானுங் சொன்னாரு, எனக்குத்தெரியாது , எனக்குத்தெரியாதுன்னு , நமக்குத்தானுங் புத்தி சுவமில்ல” எல்லாரும் சிரித்தோம்.

பேருந்து செல்லும் வழியியல்லாலம் மக்கள் இந்த நேரத்தில் பேருந்துகள் இவ்வழியே செல்வதை ஆச்சரியமாகப்பார்த்தார்கள் .  குழந்தைகள் ஆர்வமாய் கைகாட்டின.  வழியெங்கும் வறண்டு போன பூமி பரிதாபமாய் காட்சியளித்தது.  காடுகள் பிளந்து வறண்டு கிடந்தன. கோவை மாநகரம் வெள்ளையடிக்கப்பட்டு இருப்பதாய் பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள், ஒரு எட்டு இப்பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.

வாகராயம்பாளையத்தில் பொதுமக்கள்  குறிப்பாக பெண்கள் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நின்றிருந்தார்கள்.  பேருந்து செல்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள், பேசிக்கொண்டிருந்தார்கள். செல்லும் வழியெல்லாம்  செப்பனிடப்படாத சாலைகளும், வறண்டு போன பூமியுமாய் இருந்தது. ஒரு மணி நேரம் சுற்றிய பின் சத்தியமங்கலம் சாலைக்கு பேருந்து வந்தது. கோவைக்கு 15 கி.மீ எனப்பல்லைக் காட்டியது பலகை. சிவானந்தா, கணபதி வழியாக பேருந்து செல்ல,  வழியெங்கும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருக்க, கோவை மாநகரமே மானமிழந்து அசிங்கமாக
வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது
. நான்கு நாட்களாய் முடக்கப்பட்டிருக்கின்றது கோவை மாவட்டத்தின் தொழில்கள் அனைத்தும், இருந்தாலும் பொய்யாய் மினுக்கியது, வறுமை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்பு பார்த்த கிராமங்களோ போலியாக அல்லாது வறுமையின் அழகை அழகாய் எடுத்தியம்பின.

முழுதாய் 3.30 மணிநேரம் தின்ற பின்னர் ஒரு வழியாக காந்திபுரத்தில் இறங்கினேன்.  அங்கிருந்து கொடீசியா செல்லும் பேருந்தொன்றை தேடிப்பிடித்தேன். அது ஒரு டீலக்ஸ் பேருந்து பயணச்சீட்டு 7.00 ரூபாய்(பத்திரிக்கைளில் 1 ரூபாய் தானென படித்ததாக  ஒரு நபர் கூறினார்).கொடீசியாவில் இறக்காமல் 2 கி.மீ தள்ளி பாலத்திற்கருகில் இறக்கி விட்டார்கள்.  ஆயிரக்கணக்காணோருடன் நானும் பயணித்தேன். காவல்துறை “அங்க போங்க, இங்க போங்க” என்று கத்திக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் எங்கு போகிறோம் என்று  தெரியவில்லை . ஒரு போலீசுக்காரர் மக்களைப்பார்த்து ” போங்கடா போங்கடா”  பாத்துப்போங்கடா”” என்றார். இன்னொரு போலீசுக்காரர் ஒருவரை அடிக்க லத்தியைத் தூக்கிகொண்டு ஓடி வந்தார்.

நான் நினைத்தேன் “ ஒருத்தன் வாங்கடா வாங்கடாங்குறான் இவன் போங்கடா போங்கடாங்குறான்”. சில போலீசெல்லாம் பல்லைக்கடித்தபடியே  “சார் போங்க ” என்றார்கள். ஓ இதுதான் இன்முகத்துடன் வரவேற்கிறதா!!!!!!. சுற்றி சுற்றி சென்றோம், ஆங்காங்கு போலீசார் வழி காண்பித்தார்கள(சுற்றி சுற்றி அலையவிட்டார்கள் 20 நிமிடம் நடக்க வேண்டிய தூரமெனில் 40 நிமிடம் பாதுகாப்பு கருதி அலையவிட்டார்கள் ). மாநாட்டுக்கு வரவேற்பு பந்தல் வரவேற்றது. அதில் “செம்மொழியாரே வருக” என்றிருந்தது.  உள்ளே கும்பலோடு சென்றவுடன் அது தனியாக முக்கால் கி.மீட்டர்  இருக்கும். உணவகம், பொருட்காட்சி  எங்கும் கூட்டமாக இருந்தது. மக்களுக்கு சுற்றிப்பார்க்க ஒரு இடம் கிடைத்தது போல சாரைசாரையாக வந்திருந்தார்கள்.

மாநாட்டுப்பந்தலை நெருங்கினேன். ஆடுமாடுகளை பட்டியில் அடைத்தது போல தடுத்து வைத்திருந்தார்கள். ஒரு நுழைவாயிலில் கூட்டமாக நானும் நிற்கஆரம்பித்ததேன்.  சுமார் 15 நிமிடங்களுக்குப்பிறகு பட்டியை திறந்தார்கள். ஒவ்வொருவரும் பரிசோதனை செய்யப்பட்டார்கள். உள்ளே நுழைந்தேன். திருச்சி செல்வேந்திரன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நடிகர் சிவக்குமார் விழாவினை முடித்து வைத்துக்கிளம்பினார். முன்மேடையை நோக்கி பலரோடு நானும் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். காவல்துறையினர் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்று வழிகாட்டிக்கொண்டு இருந்தனர். வளைந்து வளைந்து சென்றோம். கடைசியாய் மாநாட்டிற்கு வெளியில் வந்து விட்டேன்.

மறுபடியும் உள்ளே செல்லவேண்டுமென்றால் அரை கி.மீ நடக்க வேண்டுமே!. சரி நாய் வேசம் போட்டால் குரைச்ச்தான ஆக வேண்டும்.  வேறு ஏதோ வரிசை ஒன்றிருக்க அது எங்கே ஆரம்பிக்கிறதென்று சென்றால் அது ஒரு கி.மீ ஆனது, போகும் வழியில் இஸ்கான் கோயில் இருந்தது. அவர்களுக்கு கூட்டம் ஒரு வாய்ப்பாகி விட்டது. வரிசையில் நின்றவர்களிடம் பகவத்கீதையை பண்டாரங்கள் விற்றுக்கொண்டிருந்தன, அவர்களில் 99% மலையாளப்பார்ப்பனர்கள்.   நானே நால் வர்ணத்தையும் உருவாக்கினேன் என்ற  பார்ப்பன கொடுங்கோன்மையின் மொத்த குத்தகையான பகவத்கீதை விற்க அனுமதி இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் தோழர்கள் போஸ்டர் ஒட்டினால் கைது செய்யப்படுகிறார்கள்.

பார்ப்பன வெறியை நிலைநிறுத்துவோருக்கு இடமுண்டு சாதியை எதிர்ப்போருக்கு இடமில்லை அல்லவா. இதல்லவா பகுத்தறிவு.  வாழும் வள்ளுவராம், நல்ல வேளை வள்ளுவர் உயிரோடு இல்லை. மணி 2.30 ஆகி விட்டது. உணவு எங்கே வாங்கலாமென்று திரிந்து கொண்டிருந்தேன். அங்கும் பகவத்கீதை கடை போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். விற்பவர் “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய புனிதம்” என்றார், உடனே திமுக குலக்கொழுந்துகள் பவ்யமாய் வாங்கின. குடிநீருக்காக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பெரிய தொட்டியில் அருகில் அரசு மானியத்துடனான மிகக்குறைவான உணவு என்று போட்டிருக்க,
“ஹோட்டல் வஸந்தபவனின்” அந்த வண்டியில் 30 ரூபாய் கொடுத்து உணவை வாங்கினேன். மீண்டும் அரைமணி நேரம் கழித்து பரிசோதனைக்குப்பின் மாநாட்டு வளாகத்திற்குள் சென்றேன். உள்ளே கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். முன்பு வரும் போது கூட்டம் அவ்வளவாக இல்லை, கலை நிகழ்ச்சிக்கு அதிக அளவில் கூட்டம் மொய்த்தது.

அடித்துப்பிடித்து ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.வாங்கிய உணவுப்பொட்டலத்தை பிரித்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஒரு சிறிய டப்பாவில் புளிசோறு,  ஒரு சிறிய டப்பாவில்  எலுமிச்சை, கின்லே தண்ணீர்,குர்குரே, சின்னீஸ் ஊறுகாய். சோறு மொத்தமாய் 5 ரூபாய்க்கூட போகாத அளவுக்கு கேவலம். கின்லேவையும் குர்குரேவையும் தூக்கி வீசினேன். மொத்தமாய் கணக்குப்போட்டால் 30 ரூபாய் கூட போகாத இதற்கு எதற்கு மானியம்?  அதற்கு எத்தனை கோடிகள் அமுக்கினார்களோ தெரியவில்லை. மக்களின் பணத்தை வாரியிறைக்கப்படும் இவ்விழாவில் முடிந்த அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதற்கு  சாட்சி இந்த உணவே போதும்.

கலைநிகழ்ச்சி முடிந்து சுமார் 30 நிமிடம்  ஒன்றும் இல்லை, சரியார் 3.52 க்கு கருணாநிதி வந்தார். வந்தவுடன் அவருக்கு வாழ்த்துப்பா பாடினார்கள். ஆகவேண்டிதெல்லாம் ஆனது. கருணா பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அளவில் கலை நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்த்த பலர் கிளம்பினார்கள். 6.00 மணிக்கு விழா முடிந்தது. இது திமுக விழா அல்ல என்றார் கருணாநிதி, எனக்குத்தெரிந்து வந்திருந்தவர்களில் திமுவினர்தான் மிக அதிகப்பங்கு. போலீசு பொதுமக்களை திட்டிக்கொண்டிருந்தது.திமுவி

னரோ போலீசைத்திட்டிக்கொண்டிருந்தார்கள். மாநாட்டிற்கு வெளியே திமுக சம்பந்தமான புத்தகங்கள், படங்கள், கேசட்டுகள்  அழகிரியின் படங்கள் குறிப்பாக விற்பனை செய்யப்பட்டன. வேறு கட்சிப்புழுக்கையைகூட காணமுடியவில்லை.

மக்கள் கூட்டம் என்பது திட்டமிட்டு  நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது, உள்ளே வரும் கூட்டத்தை வெளியே அனுப்பி மீண்டும் உள்ளே வரவைத்துக்கொள்ளப்பட்டது.  உள்ளே செல்வதற்கு மிகக்குறைந்த அளவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வளவு கெடுபிடி இல்லையயன்றால் கண்டிப்பாக இவ்வளவு கூட்டம் உள்ளே இருந்திருக்க வாய்ப்பில்லை,. முத்தமிழறிஞரின் பேச்சைக்கேட்காமல் ஓடிய தமிழ்க்கூட்டத்தை பார்த்த போது இது மெய்யயன்றானது.  மாநாட்டு வளாகத்திலிருந்து வெளியே வந்தேன் , பல்லாயிரக்கணக்கானேரோடு நடந்தேன், நடந்து கொண்டே இருந்தேன். கொடீசியாவிலிருந்து காந்திபுரத்திற்கு பேருந்து இல்லை.

விஐபிக்களுக்காக முடக்கப்பட்டிருந்தது சாலை  நடந்து செல்ல மக்களுக்கு மிகக்குறைவான இடம் ஒதுக்கியது காவல்துறை  மக்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்களோடு நானும் நடந்தேன்.  நடக்க ஆரம்பித்தபோது காந்திபுரம் 7 கி.மீ என்றிருந்த பலகை இப்போது 1.கி.மீ என்றாகிவிட்டது. நான் மட்டுமே நடந்து கொண்டிருந்தேன், அப்படியே பேருந்து நிலையம் சென்று கிளம்பினேன். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 3 பேருந்துகள் மட்டுமே என்னைக்கடந்தன அதுவும் கடுங்கூட்டத்தோடு ,காலையிலிருந்த அளவுக்கு மாலை வெளியூர்களுக்கோ உள்ளுரூக்கோ பேருந்து வசதி இல்லை. மக்கள் பிதுங்கிக்கொண்டு பயணித்தார்கள், விழாவிற்கு வந்த பின்னர் அம்போவென விட்டுவிட்டார் கருணாநிதி. இந்நிலையில் கருணாவை கடலில் கட்டுமரமாக பயன்படுத்தினால் அவ்வளவுதான். செம்மொழி மாநாட்டிற்கு வந்ததற்கு என் கால்கள் வெம்பிப்போனதுதான் மிச்சம்.

வறண்டு போன கவிதை

தமிழகத்தின் கிராமங்களின் அதே நிலை, மறைக்கமுடியாத வறுமை, செம்மொழித்தமிழனுக்கு வாழவே வழியில்லை, மாநாட்டுக்கு 500 கோடி

ஈழத்தின் பிணநாற்றம் போவதற்குள் மக்களின் பணத்தில் கச்சேரி, சாவு வீட்டில் ரகுமானின் பாப் மியூசிக்

வெளியே பார்ப்பன பாகவதம் , உள்ளே பணக்கார பாகவதம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் யார் அந்த ஒருவன் ? சிறீமன்மத பாகவதத்தை பக்தியோடு மொய்த்த கழககண்மணிகள்

மலிவு விலையில் மானிய சோறு கொள்ளைஅடிக்க புது டெக்னிக்

30 ரூபாயில் 10 ரூபாய் கின்லே 5 ரூ குர்குரே செம்மொழித்தமிழனின் வாழ்வை அழித்த கோககோல கம்பெனியின் கின்லே, செம்மொழி மாநாட்டுக்கு தமிழனுக்கு தரப்பட்ட பாலிடாயில்

பன்னாட்டு பாகாசுரக்கம்பெனிக்கு வரவேற்பு, வறுமைத்தமிழனுக்கு குர்குரே தரும் கொடூரம், பெப்ஸியால் வேலை இழக்கவைக்கப்பட்ட மக்களுக்கு அதையே தந்து கொள்ளையடிக்கும் அற்புதம்